- Advertisement -
Home Blog Page 10

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது !!

0

“கான் சிட்டி” திரைப்படத்தின் டீசர், முதல் மற்றும் இரண்டாம் சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ரிலீஸ் தேதி அறிவிப்பு ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள “கான் சிட்டி” திரைப்படம் வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை ஒரு அதிரடி போஸ்டருடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பட அறிவிப்பின் ஆரம்பத்திலிருந்தே இப்படத்தின் வித்தியாசமான கதைக்களம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், வெளியான டீசரும் அதற்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

குறிப்பாக “ரா ரா ரங்கையா” முதல் சிங்கிள் பாடல் வெளியானவுடனே சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து வெளியாகிய “நான் தான் கிங்கு” பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஷான் ரோல்டன் இசையில் உருவான இந்தப் பாடல்கள், அதன் தனித்துவமான மேக்கிங் , ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

“கான் சிட்டி” படம் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை மையமாக வைத்து பரபரப்பான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ளது. புதுமையான கதைக்களத்தில் உருவாகும் “கான் சிட்டி” படம், நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகிய அனைத்தும் கலந்த ஒரு முழுமையான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது.

மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டீசர், முதல் மற்றும் இரண்டாம் சிங்கிள் பாடல்கள் என தொடர்ந்து வெளியாகிய ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியான ஜூன் 26 ரிலீஸ் தேதி அறிவிப்பு “கான் சிட்டி” படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.

தொழில்நுட்ப குழு

எழுத்து, இயக்கம்: ஹரிஷ் துரைராஜ்
தயாரிப்பு: பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்
ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்
எடிட்டிங்: அருள் மோசஸ்
இசை: ஷான் ரோல்டன்
கலை இயக்கம்: ராஜ் கமல்
உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்
ஸ்டண்ட்: ஆக்ஷன் சந்தோஷ்
மக்கள் தொடர்பு: யுவராஜ்

உத்தரா உன்னிகிருஷ்ணன் குரலில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்

0

உத்தரா உன்னிகிருஷ்ணன் பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் முக்கிய தளங்களில் வெளியானது

இந்திய பக்தி மரபில் மிகவும் போற்றப்படும் படைப்புகளில் ஒன்றான ‘ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்’, புகழ்பெற்ற இளம் பாடகி உத்தரா உன்னிகிருஷ்ணனின் குரலில், ஒரு புதிய நவீன வடிவில் வெளியாகி உள்ளது. ஜியோ சாவன், கானா, ஆப்பிள் மியூசிக், ஸ்பாட்டிஃபை, யூடியூப் மியூசிக், இன்ஸ்டா ரீல்ஸ், டிக் டாக் போன்ற தளங்களில் மே 20 அன்று இது வெளியிடப்பட்டது. இதன் லிரிக்கல் வீடியோ மே 23 அன்று ராஜ்ஷ்ரி சோல் யூடியூப் சேனலில் வெளியிடப்படும்.

பழம்பெரும் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களால் பிரபலப்படுத்தப்பட்ட இப்பாடல், பக்தர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் காலத்தால் அழியாத இடத்தைப் பிடித்துள்ளது. இதன் புதிய வடிவம் அப்பாடலின் புனிதத்தன்மையை மதித்துப் போற்றுவதோடு, புதுமையான இசை அணுகுமுறையின் மூலம் இன்றைய தலைமுறை ரசிகர்களையும் ஈர்க்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது.

15-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியாரால் இயற்றப்பட்ட சுப்ரபாதத்தின் புதிய பதிப்பிற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்க, ராஜஸ்ரீ சோல் (Rajshri Soul) யுடியூப் சேனலுக்காக சீ ரெக்கார்ட்ஸ் (Sea Records) நிறுவனத்தின் சந்தீப் ரெட்டி தயாரித்துள்ளார். மே 23, 2026 அன்று வெளியாகவுள்ள இந்த பாடல், மூலப் பாடலின் பக்தி ஆழத்தைப் போற்றுவதோடு, நவீன ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற சமகால இசை வடிவத்தில் அதை வழங்கவும் முயல்கிறது.

இப்புதிய வடிவத்தின் முக்கிய அம்சாகத் திகழும் உத்தரா உன்னிகிருஷ்ணன், கர்நாடக இசையிலும், திரைப்படப் பின்னணிப் பாடல்களிலும், ‘ஃபியூஷன்’ (Fusion) இசை வடிவங்களிலும் தனது பன்முகத்தன்மைக்காக அறியப்படும் பாடகி ஆவார். ஆறு வயதிலிருந்தே டாக்டர் சுதா ராஜாவிடம் முறையாகப் பயிற்சி பெற்ற இவர், பின்னர் தனது தந்தையும் புகழ்பெற்ற பாடகருமான பி. உன்னிகிருஷ்ணனின் வழிகாட்டுதலோடு இத்துறையில் வளர்ந்தார். பண்டிட் நாகராஜ் ராவ் ஹவால்தர் மற்றும் கௌஷிக் ஐதல் போன்ற தலைசிறந்த கலைஞர்களின் வழிகாட்டுதலோடு, கர்நாடக மற்றும் இந்துஸ்தானி ஆகிய இரு இசை மரபுகளிலும் திறமை கொண்டவராக உத்தரா திகழ்கிறார்.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்த ‘சைவம்’ (2014) திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அழகே அழகே’ பாடல் மூலம், திரைப்பட பின்னணிப் பாடகியாக உத்தரா மிகச் சிறப்பான அறிமுகத்தைப் பெற்றார். இப்பாடலுக்காக அவருக்கு ‘சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய திரைப்பட விருது’ கிடைத்தது; இதன் மூலம், தனது முதல் திரைப்படப் பாடலுக்கே இவ்விருதைப் பெறும் மிக இளைய பாடகி என்ற பெருமையையும் அவர் பெற்றார். தொடர்ந்து அரோல் கோரல்லி இசையமைத்த ‘பிசாசு’ திரைப்படத்தின் ‘நதி போகும் கூழாங்கற்கள்’ பாடல் மூலமும் அவர் பரவலான பாராட்டைப் பெற்றார். தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது, ஃபிலிம்பேர் விருது (தெற்கு), SIIMA விருது, விஜய் விருது மற்றும் மிர்ச்சி இசை விருது ஆகியவை இவரது விருது பட்டியலில் அடங்கும். மேலும், சண்முகானந்தா சபா மற்றும் பாரத் கலாச்சார் போன்ற பல்வேறு கலாச்சார அமைப்புகளும் இவரைச் கெளரவித்துள்ளன. குறிப்பாக, பாரத் கலாச்சார் இவருக்கு “யுவ கலா பாரதி” என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது. 2025ம் ஆண்டிற்கான ரிலையன்ஸ் அறக்கட்டளையின் “Unstoppable 21” இளம் சாதனையாளர்களில் ஒருவராகவும் இவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

“ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதத்தின்” இந்தப் புதிய வடிவத்தின் மூலம், மரபு இசைக்கும் சமகால இசைக்கும் இடையே ஒரு பாலமாகத் திகழும் தனது கலைப் பயணத்தை உத்தரா உன்னிகிருஷ்ணன் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறார். காலத்தால் அழியாத இப்பாடலின் சாரத்தை இம்முயற்சி அப்படியே பாதுகாப்பதோடு, நிகழ்கால மற்றும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் இது பொருத்தமானதாகவும் நெஞ்சில் ஆழப் பதியக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்யும் ஒரு பக்திப் படைப்பாக விளங்குகிறது.

Uthara Unnikrishnan reimagines Shri Venkatesa Suprabhatham with contemporary devotional rendition

Shri Venkatesa Suprabhatham by Uthara Unnikrishnan unveiled on major platforms

The sacred dawn hymn Shri Venkatesa Suprabhatham, one of the most revered compositions in Indian devotional tradition, was unveiled in a new contemporary rendition featuring acclaimed young vocalist Uthara Unnikrishnan. It was released on May 20 on platforms like Jio Saavn, Gaana, Apple Music, Spotify, YouTube Music, Insta Reels, Tik Tok etc. The lyric video will be released on May 23 on Rajshri Soul YouTube Channel.

Widely popularised by the legendary M. S. Subbulakshmi, the hymn continues to hold a timeless place in spiritual practice, and this new interpretation seeks to honour its sanctity while engaging today’s listeners through a refreshed musical approach.

Originally composed in the early 15th century by Shri Prathivadhi Bhayankaram Annangaracharya, the Suprabhatham has been reimagined in this version with music composed by Prithvi Chandrashekar and produced by Sandeep Reddy of Sea Records for Rajshri Soul YouTube channel. The project aims to preserve the devotional depth of the original while presenting it through a contemporary soundscape that resonates with modern audiences.

At the heart of this rendition is Uthara Unnikrishnan, a Carnatic vocalist and playback singer known for her versatility across classical, film, and fusion genres. Trained from the age of six under Dr. Sudha Raja, and further guided by her father, renowned vocalist P. Unnikrishnan, Uthara brings a strong foundation in both Carnatic and Hindustani traditions, shaped under the mentorship of eminent gurus including Pandit Nagaraj Rao Havaldar and Kaushik Aithal.

Uthara made a remarkable entry into playback singing with the song ‘Azhage Azhage’ in the film ‘Saivam’ (2014), composed by G. V. Prakash Kumar. The song earned her the National Film Award for Best Female Playback Singer, making her the youngest recipient of the honour for a debut film song. She further gained acclaim for ‘Nadhi Pogum Koozhangal’ from Pisasu, composed by Arrol Corelli, reinforcing her reputation as a soulful and expressive vocalist.

Over the years, Uthara has received numerous accolades, including the Tamil Nadu State Film Award, Filmfare Award South, SIIMA Award, Vijay Award, Mirchi Music Award, and recognition from various cultural institutions such as the Shanmukhananda Sabha and Bharath Kalachar, which honoured her as “Yuva Kala Bharathi.” She has also been recognised as one of Reliance Foundation’s “Unstoppable 21” young achievers for 2025.

Through this new rendition of Shri Venkatesa Suprabhatham, Uthara Unnikrishnan continues her artistic journey of bridging tradition and contemporary expression. The project stands as a devotional offering that seeks to preserve the essence of the timeless hymn while ensuring its relevance and resonance for present and future generations.

UtharaUnnikrishnan reimagines Shri Venkatesa Suprabhatham with contemporary devotional rendition

Shri Venkatesa Suprabhatham by Uthara Unnikrishnan unveiled on major platforms;

It was released on May 20 on platforms like Jio Saavn, Gaana, Apple Music, Spotify, YouTube Music, Insta Reels, Tik Tok etc. The lyric video will be released on May 23 on Rajshri Soul YouTube Channel.

Apple Music: https://itunes.apple.com/album/id/6769021506

Spotify: https://open.spotify.com/album/1jHpLAutBDCkBrykwTqhmD

YouTube Music: https://music.youtube.com/watch?v=UM4x4Se8Ah4&si=NofPooN_Yslci3UF

Jio Saavn: https://www.jiosaavn.com/album/sri-venkateswara-suprabatham/uhOdNmVQ1es_

ShriVenkatesaSuprabhatham

UtharaUnnikrishnan #Unnikrishnan

Court orders notice Issued to makers of ‘Drishyam 3’

0

Rajkumar Theatres Pvt. Ltd. moves Madras High Court over ‘Drishyam 3’ Telugu rights

Court orders notice Issued to makers of ‘Drishyam 3’

Rajkumar Theatres Pvt. Ltd., led by Sripriya Sethupathy and Rajkumar Sethupathy, the absolute owner of the exclusive Telugu rights of the film ‘Drishyam 3’, has initiated legal proceedings to protect its intellectual property.

It has instituted a suit before the Madras High Court, asserting its exclusive ownership of the Telugu remake rights of the forthcoming Malayalam feature film ‘Drishyam 3’, starring Mohanlal, Meena and others, and directed by Jeethu Joseph.

The suit seeks a permanent injunction restraining the defendants—M.J. Antony of Aashirvad Cinemas, Director Jeethu Joseph, Panorama Studios, and Pen Studios—along with their agents, employees, assignees, and licensees, from infringing upon Rajkumar Theatres’ exclusive copyright by remaking, producing, or exploiting ‘Drishyam 3’ in the Telugu language anywhere in the world.

The matter came up for hearing on May 20, 2026. Representing the plaintiff, Senior Counsel K. Ravi presented the arguments before the bench. Upon hearing the submissions, the Madras High Court issued formal notices to all the respondents, returnable within three weeks.

According to Rajkumar Theatres Pvt. Ltd., in view of the pendency of the above proceedings, any person, entity, producer, distributor, exhibitor, OTT platform, financier, or third party entering into any arrangement, agreement, assignment, licensing, or commercial understanding concerning the Telugu remake and/or Telugu exploitation rights of ‘Drishyam 3’ shall be doing so entirely at their own risk and subject to the final outcome of the aforesaid suit pending before the High Court of Madras.

‘திரிஷ்யம் 3’ தெலுங்கு உரிமை: சென்னை உயர் நீதிமன்றத்தை நாடிய ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்

‘திரிஷ்யம் 3’ படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு

மோகன்லால், மீனா உள்ளிட்டோர் நடித்து, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘திரிஷ்யம் 3’ மலையாளத் திரைப்படத்தின் பிரத்யேக தெலுங்கு உரிமைகளின் முழு மற்றும் ஒரே உரிமையாளரான, ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனது அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் தெலுங்கு உரிமைகளின் மீதான தனது பிரத்யேக உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது.

இந்த மனுவில், ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்தின் எம்.ஜே. ஆண்டனி, இயக்குநர் ஜீத்து ஜோசப், பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் ஆகியோரோ அல்லது அவர்களின் முகவர்கள், ஊழியர்கள், உரிமை பெற்றவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களோ, ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தை தெலுங்கு மொழியில் உலகெங்கிலும் எந்த முறையிலும் மறுஆக்கம் செய்யவோ, தயாரிக்கவோ அல்லது வெளியிடவோ கூடாது என்றும், ராஜ்குமார் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக பதிப்புரிமையை (Copyright) மீறுவதைத் தடுக்கும் வகையிலும் நிரந்தரத் தடை உத்தரவு (Permanent Injunction) கோரப்பட்டுள்ளது.

இவ்வழக்கு மே 20, 2026 அன்று விசாரணைக்கு வந்தது. ராஜ்குமார் தியேட்டர்ஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே. ரவி ஆஜராகி நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தார். வாதங்களைக் கேட்டறிந்த சென்னை உயர் நீதிமன்றம், எதிர்மனுதாரர்கள் அனைவருக்கும் 3 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

“இந்த சட்ட நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு, எந்தவொரு நபரோ, நிறுவனமோ, தயாரிப்பாளரோ, விநியோகஸ்தரோ, திரையரங்க உரிமையாளரோ, ஓடிடி (OTT) தளங்களோ, அல்லது வேறு தரப்பினரோ ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் தெலுங்கு படைப்பாக்க உரிமைகள் அல்லது தெலுங்கு மொழி வெளியீட்டு உரிமைகள் தொடர்பாக ஏதேனும் ஒப்பந்தம், உடன்படிக்கை அல்லது வணிக ரீதியான புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொண்டால், அது முற்றிலும் அவர்களின் சொந்தப் பொறுப்பிலேயே (At their own risk) அமையும். மேலும், அத்தகைய ஒப்பந்தங்கள் அனைத்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டதாகவே இருக்கும்,” என்று ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது.

Actor Rahman as ‘Content-Driven Protagonist’ in new untitled film!

0

Actor Rahman essays a never-before character in his career!
Bharathi Balakumaran’s emotional nativity based film!

Films rooted in faith, divine beliefs, and folk traditions have increasingly captured the imagination of audiences across the world. Several films have explored the Nativity based lives and realities rooted in the soil and culture of the land. However, behind such lived experiences lie numerous supernatural stories deeply embedded in our native folk traditions. This film will explore those domain with the genre of ‘Folklore Mystery’

In this new film, set against the backdrop of a native mystery backdrop, actor Rahman will be seen in a role unlike anything he has portrayed before. Set in the 1980s, the story revolves around a Zamindar character who struggles to protect his family from a series of supernatural occurrences that begin to haunt their lives.

The film is being produced on a grand scale by Komala and Hari Bhaskaran under the banner of Komala Hari Pictures, the production house behind Gentlewoman, marking their fourth production venture. Tentatively titled as Production No. 4, the film’s title will be confirmed and announced soon.

Based on a true story connected to supernatural incidents that unfolded in the southern districts during the mid-1980s, involving bloodshed and deeply unsettling events, the film has evolved into an expansive and compelling narrative. Acclaimed filmmaker Bharathi Balakumaran, who earned appreciation for his rooted rural drama Vizha, has written the story and screenplay and will direct the film.

Actor Vishva plays the lead role, alongside an ensemble cast including Mime Gopi, Aadukalam Naren, Risha Jacobs, Munishkanth, Anupama Kumar, Baba Bhaskar, Remya Suresh, and several others, with casting currently underway.

The shooting of the film is scheduled to commence from the 22nd of this month and will continue extensively, with portions also planned to be filmed in Chennai.

Banner: Komala Hari Pictures
Producer: Komala Hari Bhaskaran
Writer & Director: Bharathi Balakumaran (Vizha fame)
Cinematographer: Banu Murugan (Muthina Kathirika fame)
Editor: Kalaivanan (Amaran fame)
Art Director: Pragatheeswaran (Pookie, Diesel fame)
Lyricist: Mohan Rajan (Lover, Lubber Pandhu fame)
Stunt Master: Dinesh (Kaasi, Kara fame)
Story & Dialogues: Writer Kani
PRO: Johnson
Promotions: Movie Bond
Production Executive: G.Thiruneelagandan
Production Manager: P.Sivakumar

கதை நாயகனாக ரஹ்மான் நடிக்கும் புதிய படம்!
இதுவரை நடிக்காத கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்!
மண் சார்ந்த உணர்ச்சிகரமான படத்தை இயக்கும்
பாரதி பாலகுமாரன்!

தெய்வ நம்பிக்கைகள் மற்றும் நாட்டுப்புற மரபுகளின் பின்னணியில் உருவாகும் திரைப்படங்கள் உலக ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
மண் சார்ந்த கதை களத்தில் இருக்குற வாழ்வியலை பல படங்கள் பேசியுள்ளது.
ஆனால் அந்த வாழ்வியலுக்கு பின்னால் மறைந்திருக்குற பல ‘அமானுஷ்ய’ கதைகள் நம்ம ‘நாட்டார்’ மரபில் உண்டு.
அப்படி ஒரு ‘நாட்டார் மர்மக்கதை’ தான் இக்கதை.

நாட்டார் மர்மக்கதையை களமாகக் கொண்டு உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிகர் ரகுமான் இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
1980களின் பின்னணியில் நடக்கும் கதையில் ‘அமானுஷ்ய’ சம்பவங்களால் பாதிக்கப்பட்ட தனது குடும்பத்தை காக்க முயற்சிக்கும் ஜமீன் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார்.
250-க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வந்த ரகுமானின் திரை பயணத்தில் இந்த படம் மிக முக்கியமானதாக இருக்கும்” என்கிறார்கள் படக்குழுவினர்.

“GENTLEWOMAN” படத்தை தயாரித்த
“கோமளா ஹரி பிக்சர்ஸ்” பட நிறுவனம் சார்பில் கோமளா, ஹரி பாஸ்கரன் தனது நான்காவது படைப்பாக
இக் கதையை மிரட்டலாக தயாரிக்கிறார்கள்.
‘புரொடக்‌ஷன்-4’ படமான இதற்கு இன்னும் பெயர் சூட்ட படவில்லை.

1980-களின் மத்தியில், தென் மாவட்டங்களில் ரத்தமும் சதையுமாய் அரங்கேறிய ‘அமானுஷ்யம்’ சார்ந்த உண்மைக் கதை என்பது, இப்படத்தை பிரமாண்ட கதையாக மாற்றியுள்ளது.

மண் சார்ந்த படைப்பான “விழா” படத்தை
இயக்கி, அனைவர் பாராட்டையும் பெற்ற பாரதி பாலகுமாரன், கதை திரைக்கதை அமைத்து டைரக்ட் செய்கிறார்.

இதில், நாயகனாக விஷ்வா நடிக்கிறார்.
மேலும், மைம் கோபி, ஆடுகளம் நரேன், ரிஷா ஜாக்கோப்ஸ், முனிஷ்காந்த், அனுபமா குமார், பாபா பாஸ்கர், ரெம்யா சுரேஷ் மற்றும் பல நடிகர், நடிகை தேர்வு நடை பெற்று வருகிறது.

இதன் படபிடிப்பு இம்மாதம் 22ம் தேதி முதல் தொடர்ந்து நடை பெறுகிறது. சென்னையிலும் சில காட்சிகள் நடைபெறும்.

PRODUCED BY KOMALA HARI PICTURES

PRODUCERS: KOMALA & HARI BHASKARAN

WRITER & DIRECTOR:

BHARATHI BALAKUMARAN
( ‘VIZHA’ Fame )

CINEMATOGRAPHER:

BANU MURUGAN ( ‘MUTHINA KATHIRIKA’ Fame )

EDITOR:

KALAIVANAN ( ‘AMARAN’ Fame )

ART DIRECTOR: PRAGATHEESWARAN ( ‘POOKIE’ , ‘DIESEL’ Fame )

LYRICIST:

MOHAN RAJAN ( ‘LOVER’, ‘LUBBER PANDHU’ Fame.

STUNT MASTER:

DINESH KAASI (‘KARA’ Fame)

STORY LINE & DIALOGUE WRITER:

KANI RAJA

Pro: Johnson
Promotions: Movie Bond

PRODUCTION Executive: G.Thiruneelagandan

PRODUCTION Mananger: P.Sivakumar

India, Get Ready to Experience Dhurandhar Like Never Before — RAW and Undekha on JioHotstar from May 22nd

0

https://www.instagram.com/reel/DYkgfmsM3oU/?igsh=NGF5eTlhcjJ2N3h3

Mumbai, May 21st, 2026: After setting theatres ablaze and emerging as the biggest blockbuster ever, Dhurandhar is now set to make its way into homes across the country.

From bustling cities to small towns, audiences across India will be able to experience the world of Dhurandhar on JioHotstar from May 22 in its RAW and Undekha version.
Streaming in its raw and unfiltered form, the film offers viewers a deeper and more immersive look into the world of Dhurandhar, with undekha moments crafted specially for audiences on JioHotstar. Whether discovering the film for the first time or revisiting the blockbuster, viewers can expect an intense cinematic experience packed with action, drama, emotion, and larger-than-life storytelling in its truest form.

With JioHotstar taking Dhurandhar beyond theatres and into every corner of India, the film for the first time is now set to reach audiences far and wide, making one of the country’s biggest cinematic spectacles more accessible than ever before.

Presented by Jio Studios, a B62 Studios production, Dhurandhar, written, directed, and produced by Aditya Dhar, produced by Jyoti Deshpande and Lokesh Dhar, uncovers the untold saga of the origins of the unknown men.

About JioHotstar
JioHotstar is one of India’s leading streaming platforms, formed through the coming together of JioCinema and Disney+ Hotstar. With an unparalleled content catalogue, innovative technology, and a commitment to accessibility, JioHotstar aims to redefine entertainment for everyone across India.

https://www.instagram.com/reels/DYkgfmsM3oU

சோனி மியூசிக் வழங்கும் ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

0

சோனி மியூசிக் வழங்கும் ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

மலேசிய தமிழ் ஹிப்-ஹாப் ராப்பர், பாடலாசிரியர் மற்றும் இசை தயாரிப்பாளர் கிட் சாந்தே (Kidd Santhe) வின் புதிய பாடலான “நா வேற லெவல்” பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது . இப்பாடலை முன்னணி இசை நிறுவனமான சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மலேசியாவில் உருவாகி வரும் புதிய தலைமுறை தமிழ் ஹிப்-ஹாப் இசையில் முக்கியமான குரலாக கொண்டாடப்படுபவர் கிட் சாந்தே (Kidd Santhe ). தமிழ், ஆங்கிலம், மலாய், பஞ்சாபி போன்ற பல மொழிகளை கலந்த ராப் ஸ்டைலே இவரின் தனிச்சிறப்பு.

சிறு வயதிலிருந்தே beatboxing மற்றும் இசையில் ஆர்வம் கொண்ட கிட் சாந்தே (Kidd Santhe), தனது 16-வது வயதில் பாடல்கள் தயாரித்து SoundCloud மூலம் பிரபலமானார். பின்னர் மலேசிய ஹிப்-ஹாப் குழுக்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை வெளியிட்டார். தற்போது உலகளாவிய “Desi Hip-Hop” இயக்கத்தில் முக்கியமான இளம் கலைஞர்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார்.

“API”, “SAMPAH”, “Ambani Money”, “Penjenayah” போன்ற பாடல்கள் மற்றும் ஆல்பங்கள் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்றார். குறிப்பாக “Ambani Money” பாடல் மூலம் இந்திய கலாச்சாரம், செல்வாக்கு மற்றும் இளைஞர்களின் ஆற்றலை ஹிப்-ஹாப் ஸ்டைலில் வெளிப்படுத்தியிருந்தார்.

தற்போது இந்திய கலாச்சார பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள அவரது அடுத்த பாடலான “நா வேற லெவல் ஆல்பம்” இன்று சென்னையில் வெளியிடப்பட்டது.

இன்றைய நிகழ்வில்…

இயக்குநர் பார்த்திபன் ரவி பேசியதாவது…

முதலில் கடவுளுக்கும், Sony Music Malaysia மற்றும் Sony Music South ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த வாய்ப்பை வழங்கியதற்கு மிக்க நன்றி. இது என்னுடைய முதல் International Album. ஏற்கனவே Sony Music உடன் இரண்டு மியூசிக் வீடியோக்கள் செய்திருந்தாலும், இந்த புராஜக்ட் எனக்கு மிகவும் ஸ்பெஷல் மற்றும் மனதுக்கு நெருக்கமான ஒன்று.

கிட் சாந்தே உங்கள் அற்புதமான ஐடியாவை உயிர்ப்பிக்க இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. திலீபன் இல்லாமல் இந்த ஆல்பம் உருவாகியிருக்கவே முடியாது. குணா மற்றும் ரே — “Mother of Dragons” போல இந்த ஆல்பம் பாடலுக்கு அனைத்து பக்கங்களிலும் ஆதரவை திரட்டிக் கொண்டு வந்தவர்கள் நீங்கள் தான். ஒவ்வொரு டிராக்குக்கும் நீங்கள் கொடுத்த உழைப்பு மிகப்பெரியது. இந்த ஆல்பம் பாடலில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இப்பாடலை ரசித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

சோனி மியூசிக் நிறுவனம் சார்பில் ரேவதி மாரியப்பன் பேசியதாவது..,

கிட் சாந்தே அவர்களின் முதல் சர்வதேச தமிழ் இசை வெளியீட்டிற்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்த இணைப்பிற்கு ஆதரவு அளித்த சோனி மியூசிக் சவுத் மற்றும் இந்த ஆல்பத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.இந்த பாடலை மலேசியாவில் எடுப்பதாக இருந்தது ஆனால் இதை சென்னையில் எடுக்கலாம் என கிட் சாந்தே சொன்னார். சோனி நிறுவனமும் பெரிய ஆதரவு தந்தது.

இந்த ஆல்பத்திற்கு தமிழ்நாட்டில் கிடைத்த அன்பும் ஆதரவும் எங்களை மிகவும் நெகிழச்செய்தது. மலேசியாவிலிருந்து வந்த ஒரு தமிழ் கலைஞரை இவ்வளவு அன்பாக வரவேற்ற அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.இந்த பாடல் உருவாக பல மாதங்களாக ஒரு பெரிய குழு கடினமாக உழைத்துள்ளது. தொழில்நுட்பத்தை மட்டும் நம்பாமல், நூற்றுக்கணக்கான கலைஞர்களின் உழைப்பையும் ஒன்றிணைத்து இந்த பாடலை உருவாக்கியுள்ளோம். கிட் சாந்தேவின் இந்த வெற்றி அவருடையது மட்டும் அல்ல; மலேசியாவில் இருக்கும் பல தமிழ் கலைஞர்களின் கனவுகளுக்கான தொடக்கமாகவும் இது அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்.

தமிழ்நாடு எப்போதும் திறமையை அங்கீகரிக்கும் மண். அந்த நம்பிக்கையோடு இந்த பாடலை உங்கள் கைகளில் ஒப்படைக்கிறோம் நன்றி.

ராப்பர் கிட் சாந்தே பேசியதாவது..,

அனைவருக்கும் வணக்கம். இன்று இங்கே “நா வேற லெவல்” பாடலை ஆதரிக்க வந்திருக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இந்த பயணத்தில் என்னை நம்பி முழுமையாக ஆதரவு அளித்த Sony Music South மற்றும் Sony Music Malaysia-க்கு என் நன்றிகள்.

இந்த ஆல்பம் உருவாக காரணமான மிக முக்கியமான நபர் இயக்குநர். ஒரு storyboard-ஐ உயிரோட்டமுள்ள காட்சியாக மாற்றியது இயக்குநர் ரவி தான். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். அதேபோல் மூன்று நாட்களிலேயே எனக்கு நடனம் கற்றுக்கொடுத்த நடன இயக்குநர் ஆகாஷ் அவர்களுக்கும் நன்றி.

ராவண ராம் என் சகோதரன் போன்றவர். Instagram-ல் ஒரு மெசேஜ் மூலம் தொடங்கிய நட்பு, ஒரே studio session-ல் “நா வேற லெவல்” பாடலை உருவாக்கியது. அவருடைய திறமை அசாதாரணமானது.

இந்த பாடல் மூலம் நான் என்னை ஒரு நடிகராகவோ அல்லது இசையமைப்பாளராகவோ காட்ட விரும்பவில்லை. தமிழ்நாட்டின் உண்மையான ஹீரோக்களை காட்டவே இந்த பாடலை உருவாக்கினேன் — ஆட்டோ ஓட்டுநர்களை. தினமும் மக்களை பாதுகாப்பாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்லும் அவர்கள் தான் நம்முடைய அன்றாட வாழ்க்கையின் மறைக்கப்பட்ட ஹீரோக்கள். சென்னைக்கு முதன்முதலாக வந்தபோது, என் கார் பஞ்சர் ஆகி நின்றது. ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கு டயர் மாற்ற உதவிய அந்த தருணமே இந்த பாடலின் முழு கருத்தாக மாறியது. “நா வேற லெவல்” என்பது நான் அல்ல, ஆட்டோ ஓட்டுநர்கள் தான்.

அவர்கள் இன்று எரிபொருள் விலை உயர்வு, பராமரிப்பு செலவு, பைக் டாக்ஸி போட்டி போன்ற பல சவால்களை எதிர்கொள்கிறார்கள். இந்த பாடல் மூலம் அவர்களுக்கான மரியாதையும் அன்பும் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்பதே என் நோக்கம்.

நான் ஒரு மலேசிய இளைஞன். இசையை கொண்டு உங்கள் முன் வந்திருக்கிறேன். தமிழ்நாடு எனக்கு கொடுத்த அன்புக்கும் வரவேற்புக்கும் மனமார்ந்த நன்றி. “நா வேற லெவல்” பாடலை YouTube-ல் பார்த்து ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

“நா வேற லெவல்” பாடலை சோனி மியூசிக் YouTube தளத்தில் அதிகாரப்பூர்வமாக கண்டுகளிக்கலாம்.

Exam Web Series Review

0

Exam is a socially relevant thriller that begins with a strong premise and keeps you interested through its core idea and performances. The series works best when it focuses on the tension around exam fraud and the pressure it creates for students and families.

The biggest strength of the show is its timely subject matter, which feels close to real life and instantly gives the story importance. The opening stretch builds curiosity well, and the premise of uncovering a larger scam gives the series a solid base to hold attention.

Dushara Vijayan and Aditi Balan bring weight and sincerity to their roles, helping the series feel grounded and emotional. Their performances add conviction to the drama and make the central conflict easier to connect with.

The show keeps a decent pace across its episodes, and the tension is maintained well enough in the better portions of the narrative. Even though some reviews mention uneven execution overall, the core idea still gives the series enough momentum to stay watchable and engaging.

Exam is a thoughtful and relevant web series that earns attention for its subject, performances, and gripping setup. It may not be perfect in every stretch, but it has the kind of serious, issue-based storytelling that leaves an impression.

CAST

Dushara Vijayan – Jhansi
Aditi Balan – Maramalli
Abbas – Jayachandran
Vasundhara. C – Saranya
Naren Mani – Kumaresan

CREW

Written & directed by : A. Sarkunam
Creative Producer: Pushkar & Gayatri
Produced and Presented by Wallwatcher Films
Producer: Gowtham Selvaraj ,S Guhapriya , S Nandakumar
Director of Photography: Arun Amarenthiran
Music Director: Sam C S
Editor: Richard Kevin. A
Executive Producer: Kanish Prabhu. C
Production Design : Viju Vijayan V V
Stunt: Dinesh Subbarayan
Post & VFX Supervisor: O.K. Vijay
Costume Designer: Gayathri Srinivasan
Sound Design: Prabhakaran K , Dinesh Kumar P
Pro: Yuvraaj

Energetic Star Ram Pothineni surprises the industry & cinema lovers by turning Director with #RAPO23, Introducing Veera through a Strikingly Stylish Poster- Produced by Krishna Pothineni on Rapo Cinematics.

0

Energetic Star Ram Pothineni, a multi-faceted performer who has consistently showcased his versatility on screen, takes a Bold new step.After turning lyricist with his previous film Andhra King Taluka- a feat that earned him wide appreciation, he also surprised audiences by lending his vocals for the first time. Now, the talented star is ready to take a giant leap. With his 23rd film, #RAPO23, Ram steps into the director’s chair, marking his debut as a filmmaker. The project, formally announced on the occasion of his birthday, is set to be a stylish Psychological Action Thriller. A genre that is barely explored in Telugu cinema.

RAPO23 will be produced by Krishna Pothineni under the newly formed Rapo Cinematics banner. Interestingly with this move, Ram joins the elite league of Stars-turned-Directors such as Sr. NTR, Krishna, and Pawan Kalyan.

The makers have also unveiled a striking birthday special poster that introduces Ram Pothineni’s character, Veera. The poster radiates a dark, intense, and gritty tone featuring Ram from behind, clad in a leather jacket. His sharp, V-cut hairstyle amplifies the raw attitude of the character. Dominating the backdrop is a bold red “V”, symbolizing both Veera and a sense of rebellion, danger, and dominance. The faint outlines of towering skyscrapers on either side evoke a cold, crime-infested cityscape. Adding to the mystery, the tagline “The Story of a Lone Wolf” hints at a protagonist driven by solitude, instinct, and a complex psychological landscape.

RAPO23 promises a powerful and groundbreaking narrative conceived by Ram Pothineni himself for his directorial debut. He is set to portray Veera in a completely new, never-before-seen avatar, and the transformation is already evident in the announcement poster’s styling and mood.

The film’s regular shoot is set to begin in June, with the makers eyeing a December release this year. Further details about the cast and technical crew will be revealed in the coming days, building anticipation around what is poised to be one of Ram Pothineni’s most ambitious ventures yet.

Cast: Ram Pothineni

Technical Crew:
Writer, Director: Ram Pothineni
Producer: Krishna Pothineni
Banner: Rapo Cinematics
PRO: Yuvraaj

இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் ராம் போதினேனி !!

எனர்ஜிடிக் ஸ்டார் ராம் போதினேனி திரையுலகையும், சினிமா ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், தனது #RAPO23 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கிருஷ்ணா போதினேனி தயாரிப்பில், Rapo Cinematics பேனரில் உருவாகும் இப்படத்தில் ‘வீரா’ கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் ஸ்டைலிஷ் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பல்வேறு விதமான கதாபாத்திரங்களின் மூலம் தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வரும் ராம் போதினேனி, தற்போது தனது கலைப்பயணத்தில் இன்னொரு துணிச்சலான அடியை எடுத்து வைத்துள்ளார். அவரது முந்தைய படமான ஆந்திரா கிங் தாலுகா படத்தில் பாடல் வரிகளை எழுதி பாராட்டைப் பெற்றதுடன், முதன்முறையாக பின்னணிப் பாடகராகவும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இப்போது தனது 23வது படமான #RAPO23 மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ராமின் பிறந்தநாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள #RAPO23, திரைப்படம், ஸ்டைலிஷ் சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாக உள்ளது. தெலுங்கு சினிமாவில் அரிதாக முயற்சிக்கப்படும் இந்த ஜானர், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தை, புதியதாக தொடங்கப்பட்டுள்ள Rapo Cinematics நிறுவனத்தின் சார்பில் கிருஷ்ணா போதினேனி தயாரிக்கிறார். மேலும் இந்த முயற்சியின் மூலம், நடிகர்-இயக்குநர்களான N. T. ராமா ராவ், கிருஷ்ணா மற்றும் பவன் கல்யாண் ஆகியோரின் வரிசையில் ராம் போதினேனியும் இணைகிறார்.

படக்குழு வெளியிட்டுள்ள பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர், ராம் போதினேனியின் ‘வீரா’ கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறது. லெதர் ஜாக்கெட்டுடன் பின்னால் இருந்து நிற்கும் ராமின் தோற்றம், படத்தின் டார்க், இன்டென்ஸ் மற்றும் தனித்துவமான மனநிலையை வெளிப்படுத்துகிறது. அவரது V-cut ஹேர் ஸ்டைல், கதாபாத்திரத்தின் அட்டகாசமான அணுகுமுறையை மேலும் வலுப்படுத்துகிறது.

போஸ்டரின் பின்னணியில் இடம் பெற்றுள்ள பிரம்மாண்டமான சிவப்பு நிற “V”, ‘வீரா’ என்பதையும், போராட்டம், ஆபத்து மற்றும் ஆதிக்கத்தையும் குறிக்கிறது. இருபுறமும் மங்கலாக தெரியும் உயரமான கட்டிடங்கள், குற்றச்செயல்கள் நிறைந்த குளிர்ச்சியான நகரத்தை நினைவூட்டுகின்றன. “The Story of a Lone Wolf” என்ற டேக் லைன், தனிமை, மனதின் அடி அழ உணர்வுகள் மற்றும் சிக்கலான உளவியல் பின்னணியுடன் நகரும் கதாநாயகனை சுட்டிக்காட்டுகிறது.

ராம் போதினேனி இயக்குநராக அறிமுகமாகும் #RAPO23, அவர் தானே உருவாக்கிய சக்திவாய்ந்த மற்றும் புதுமையான கதைக்களத்தை மையமாகக் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், ‘வீரா’வாக இதுவரை இல்லாத புதிய அவதாரத்தில் ராம் நடிக்க உள்ளார். அந்த மாற்றம் ஏற்கனவே போஸ்டரின் ஸ்டைல் மற்றும் மூடில் தெளிவாக தெரிகிறது.

படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிப்பு: ராம் போதினேனி

தொழில்நுட்பக் குழு:
எழுத்து & இயக்கம் : ராம் போதினேனி
தயாரிப்பு: கிருஷ்ணா போதினேனி
பேனர்: Rapo Cinematics
மக்கள் தொடர்பு – யுவராஜ்

குட்டீஸ்களுக்கு மரியாதை செலுத்திய முதல்வர் விஜயின் நண்பர்கள் MLA ஸ்ரீநாத் மற்றும் மனோஜ்!

0

சிலம்பத்தில் கலக்கிய குட்டீஸ்களை கௌரவித்த MLA ஸ்ரீநாத் – முதல்வர் விஜய் நண்பர் மனோஜ் பாராட்டு!

குழந்தைகள் சாதனைக்கு தவெக மரியாதை – வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை!

தமிழர் பாரம்பரிய கலைகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வரும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிக்கும் நிகழ்வு ஒன்று சென்னையில் நடைபெற்றது.

குரோம்பேட்டை பச்சைமலை விளையாட்டுத் திடலில், தமிழ்க்குடிமகன் தலைமையில் “புதிய விதைகள் இயக்கம்” மூலம் குழந்தைகளுக்கு இலவசமாக சிலம்பாட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சியின் மூலம் உருவான மாணவர்கள் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் கலந்துகொண்டு தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மொத்தம் 32 மாணவர்கள் பங்கேற்ற இந்த போட்டியில், 20 மாணவர்கள் தங்கப் பதக்கமும், 10 மாணவர்கள் வெள்ளிப் பதக்கமும், ஒரு மாணவர் வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர். இந்த வெற்றி, தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளின் திறமையையும், குழந்தைகளின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.

இந்த வெற்றி பெற்ற மாணவர்களை, தூத்துக்குடி MLA ஶ்ரீநாத் நேரில் சந்தித்து பாராட்டினார். மேலும், முதலமைச்சர் விஜய் அவர்களின் நண்பரான மனோஜ் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் திரைப்பட தயாரிப்பாளர் புவனேஷ் மற்றும் A.R. பிரபு உள்ளிட்டோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதுகுறித்து பேசிய தூத்துக்குடி தவெக MLA ஶ்ரீநாத்,
“குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்வார்கள். தேர்தல் நேரத்தில் வீடு வீடாக சென்று எங்களுக்கு ஆதரவு திரட்டியதும் குழந்தைகள்தான். அவர்களுக்கு நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். குழந்தைகளின் வளர்ச்சிக்கும், அவர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்கும் தவெக எப்போதும் கூடுதல் கவனம் செலுத்தும். தமிழர் பாரம்பரியமான சிலம்பாட்டத்தை குழந்தைகளிடம் கொண்டு சென்று, தேசிய அளவிலான வெற்றியை பெறச் செய்த தமிழ்க்குடிமகன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். தவெக சார்பிலும், தலைவர் முதலமைச்சர் விஜய் அவர்களின் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்,” என்று தெரிவித்தார்.

தமிழர் கலாச்சாரத்தையும், இளம் தலைமுறையின் திறமைகளையும் முன்னிறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, தவெக மற்றும் தமிழக அரசின் குழந்தைகள் நலன் மற்றும் பாரம்பரிய கலைகளின் மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்பை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.

KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது !!

0

KRG கண்ணன் ரவியின் பிரமாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகி வரும் “பேங் பேங்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள இந்த திரைப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வித்தியாசமான ஜோம்பி வகை ஜானரில் உருவாகி வரும் இப்படம், ஆக்ஷன், காமெடி மற்றும் ஹாரர் அம்சங்கள் கலந்த முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வருகிறது. பிரபு தேவாவின் ஸ்டைலும் , வடிவேலுவின் தனித்துவமான நகைச்சுவையும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கவுள்ளது.

மலேசியாவில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. பிரமாண்ட காட்சிகள் படத்தின் முக்கிய ஹைலைட்டாக அமையும் என படக்குழு தெரிவித்துள்ளது.

முன்னதாக வெளியான டைட்டில் டீஸர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருந்தது. அந்த டீஸரில் ஜோம்பிகளால் சூழப்பட்ட சூழலில் பிரபு தேவா மற்றும் வடிவேலு துப்பாக்கியுடன் மாஸாக தோன்றிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. “ பிரபு வேலு”, “வடி தேவா” போன்ற நகைச்சுவை கலந்த பெயர்கள் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியது.

இப்படத்தினை இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues) எழுதி இயக்குகிறார். ஹாரர் அட்வென்ச்சர் பாணியில் உருவாகும் இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். H.C. வேணு ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை இயக்கத்தை டான் பாலா செய்துள்ளார். ‘அனிமல்’ திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற Sync Cinema நிறுவனம் சவுண்ட் டிசைனை மேற்கொண்டுள்ளது. மேலும், தெலுங்கானா மாநில விருது பெற்ற அரவிந்த் மேனன் சவுண்ட் மிக்சிங் பணிகளை செய்துள்ளார்.

நடிகர் பப்லு பிரித்திவிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், KRG நிறுவனத்தின் நான்காவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வருகிறது. இந்தோனேசியாவின் Mount Bromo எரிமலை பகுதியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்த நிலையில், விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

“பேங் பேங்” திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

- Advertisement -

Recent Posts