Saturday, June 27, 2026
- Advertisement -
Home Blog Page 109

NETFLIX UNVEILS TRAILER FOR THE GAME: YOU NEVER PLAY ALONE – ATHRILLER THAT STARTS ON SCREEN BUT DOESN’T END THERE

0

~ Netflix and Applause Entertainment reunite for a gripping new Tamil thriller from Rajesh M. Selva,
featuring Shraddha Srinath and Santhosh Prathap! ~

Trailer on YouTube
25th September 2025: Games are supposed to be played for fun. But what happens when every
choice you make suddenly has real-life consequences and nothing is no longer what it seems? The
newly unveiled trailer for Tamil series The Game: You Never Play Alone teases just how high the
stakes can get when the virtual world collides with real life. Premiering on October 2 on Netflix, the
series promises a chilling descent into masks, secrets, and an unsettling reality.

Produced by Applause Entertainment, this Tamil thriller is directed by Rajesh M. Selva, written by
Deepthi Govindarajan, and co-written by Selva and Karthik Bala. As technology spirals out of control, the series blends the intrigue of a thriller with the intensity of family conflict, the fragility of
relationships, and the unsettling question of who (or what) can be trusted when the line between the real and virtual worlds begins to collapse.
The series stars Shraddha Srinath, making her streaming debut, in the lead, alongside Santhosh
Prathap, Chandini, Syama Harini, Bala Hasan, Subash Selvam, Viviya Santh, Dheeraj, and Hema.

Director Rajesh M. Selva says of the series, “With The Game, I wanted to explore the fragile line
between the worlds we build and the lives we live. It’s a mix of genres, a high-stakes thriller layered
with family drama and the complexities of relationships. In today’s hyper-connected age, nothing remains just virtual. What happens on a screen can bleed into reality, with consequences we cannot
control. Beneath every mask lies a truth, and in confronting those truths, the story finds its power.
Bringing this vision to life as my first Tamil original with Netflix has been an immensely rewarding
experience.”

Shraddha Srinath added, “Stepping into the role of an independent woman who is also a gaming
developer was both thrilling and daunting. Entering a thriller zone where the very world my
character created turns against her and becomes a haunting reality she cannot escape, felt challenging. Working with Rajesh, who brings so much intensity and depth to every frame, made
the journey unforgettable. And with Netflix, we wanted to reach a worldwide audience who would connect to this story — its urgency, its fear, and its humanity. The trailer captures that constant
tension: what’s real, and is there ever a way out?”
In the game, every click is a choice, every mask hides a truth, and every truth can change the game.
The question isn’t whether you can win — it’s whether you can survive the world you created. The
Game: You Never Play Alone premieres October 2, only on Netflix.
THE GAME: YOU NEVER PLAY ALONE TRAILER OUT NOW!

ABOUT NETFLIX:
Netflix is one of the world’s leading entertainment services, with over 300 million paid memberships
in over 190 countries enjoying TV series, films and games across a wide variety of genres and
languages. Members can play, pause and resume watching as much as they want, anytime,
anywhere, and can change their plans at any time.

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் த்ரில்லர் சீரிஸ் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்- திரையில் நீங்கள் கேமை தொடங்கலாம் ஆனால் ஒருபோதும் அது முடிவதில்லை’ டிரெய்லர் வெளியாகியுள்ளது!

ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் நடிகர்கள் ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் த்ரில்லர் கதை ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’. இந்தக் கதைக்காக நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் மீண்டும் ஒன்றிணைந்துள்ளது.

விளையாட்டு என்பது பொழுதுபோக்கிற்காக மட்டுமே! ஆனால், அந்த விளையாட்டே உங்களுக்கு வினையாக மாறினால்? அக்டோபர் 2 அன்று நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ப்ரீமியர் ஆகும் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ தொடரின் தமிழ் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. உங்கள் விர்ச்சுவல் உலகம் நிஜ வாழ்க்கையை சந்தித்தால் என்ன நடக்கும் என்பதை ரகசியங்கள் மற்றும் உண்மைக்கு நெருக்கமாக பேசவுள்ளது.

‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ தமிழ் த்ரில்லர் சீரிஸூக்காக நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் மீண்டும் இணைந்துள்ளது. ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில், தீப்தி கோவிந்தராஜன் திரைக்கதை எழுதியிருக்கிறார். அவருடன் இணைந்து செல்வா மற்றும் கார்த்திக் பாலாவும் திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். நடிகர்கள் ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் சந்தோஷ் பிரதாப் முன்னணி கதாபாத்திரங்களிலும் சாந்தினி, ஷ்யாமா ஹரிணி, பாலா ஹசன், சுபாஷ் செல்வம், விவியா சந்த், தீரஜ் மற்றும் ஹேமா ஆகியோர் துணை கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். விர்ச்சுவல் உலகம் உண்மையான உலகத்தை சந்திக்கும்போது குடும்பம், உறவுகளில் எப்படி நம்பிக்கை இழக்க நேரிடுகிறது என்பதை இந்த தமிழ் த்ரில்லர் பேசுகிறது.

இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா பகிர்ந்து கொண்டதாவது, “இந்தக் கதை வெறும் த்ரில்லர் மட்டுமல்ல! இது நாம் வாழும் உலகின் பிரதிபலிப்பாகும். த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இதில் குடும்பம் மற்றும் உறவுகள் பற்றியும் பேசியுள்ளோம். தற்போது விர்ச்சுவல் உலகம் வெறும் விர்ச்சுவல் உலகமாக மட்டும் இருப்பதில்லை. அது நம் வாழ்க்கையை சந்திக்கும்போது நிகழும் விளைவுகளை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. என்னுடைய முதல் தமிழ் ஒரிஜினல்ஸ் நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்டுடன் இணைந்து பணியாற்றுவது எங்கள் படைப்புக்கு எல்லையற்ற சுதந்திரம் கொடுத்தது. பார்வையாளர்கள் இந்தத் தொடரைப் பார்த்து அவர்கள் கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்” என்றார்.

தொடர் குறித்து நடிகை ஷ்ரதா ஸ்ரீநாத் பகிர்ந்து கொண்டதாவது, “சுதந்திரமான கேமிங் டெவலப்பர் பெண் கதாபாத்திரத்தில் நடித்துப்பது எனக்கு புது அனுபவம். த்ரில்லர் ஜானரில் அமைக்கப்பட்ட என் கதாபாத்திரம் எனக்கே எதிராக திரும்பும்போது அவளால் தப்ப முடியவில்லை. ரியாலிட்டி அவளுக்கு சவாலானதாக உள்ளது. ஒவ்வொரு ஃபிரேமிலும் தீவிரம், ஆழத்தைக் கொண்டு வந்த இயக்குநர் ராஜேஷூடன் இணைந்து பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். நெட்ஃபிலிக்ஸ் உடன் இணைந்ததன் மூலம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை சென்றடைய முடியும்” என்றார்.

அவசரம், பயம், மனிதத்தன்மை, பதட்டம் என அனைத்து உணர்வுகளும் டிரெய்லரில் உள்ளது. கேமில் ஒவ்வொரு க்ளிக்கும் உங்கள் சாய்ஸ். ஒவ்வொரு மாஸ்க்கும் உண்மையை மறைத்துள்ளது. ஒவ்வொரு உண்மையும் கேமை மாற்றும். இந்த கேம் நீங்கள் வெற்றி பெறுகிறீர்களா என்பதில்லை, நீங்கள் உருவாக்கிய உலகில் உங்களால் வாழ முடிகிறதா என்பதைப் பற்றியது!

நெட்ஃபிலிக்ஸில் அக்டோபர் 2 அன்று ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ பாருங்கள்!

நெட்ஃபிலிக்ஸ் பற்றி:

நெட்ஃபிலிக்ஸ் உலகின் முன்னணி பொழுதுபோக்கு சேவைகளில் ஒன்றாகும். 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் 300 மில்லியனுக்கும் அதிகமான கட்டண சந்தாதாரர்களைக் கொண்டு பல்வேறு ஜானர்கள் மற்றும் மொழிகளில் தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு போன்றவற்றைக் கொடுத்து வருகிறது. சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம், இடைநிறுத்தலாம் மற்றும் மீண்டும் பார்க்கலாம். மேலும் எந்த நேரத்திலும் தங்கள் திட்டங்களை மாற்றலாம்.

“TOSS” starring “Yashika Anand”, was launched auspiciously with a pooja ceremony…

0

On behalf of Black Diamond Studio, produced by Syed Jaffer and directed by Sagu Pandian, the film “TOSS” stars Rathan Mouli, Yashika Anand, Vijay TV fame Yogi, Teja Sri, Sanjay Shankar, and many others. The film’s pooja and launch ceremony took place grandly at Kovilpatti, with the full team in attendance. Former Minister and Kovilpatti MLA Mr. Kadambur C. Raju participated in the ceremony and conveyed his best wishes to the team.

Speaking about the film, director Sagu Pandian said:
“Three mysterious murders take place. What is the reason behind these killings? What is Yashika Anand’s connection to them? This forms the core of the story, which will be presented as a crime thriller. Yashika Anand plays the lead role, while Teja Sri, from the Telugu film industry, plays the other heroine. We plan to complete the shoot in one stretch within 25 days across Kovilpatti, Virudhunagar, and Sattur. The love and support of the local people has been very motivating for us.”

He further added that Kadambur C. Raju MLA, who attended the pooja, not only blessed the team but also assured full support for the smooth progress of the shoot. He also praised the title “TOSS”, calling it an instantly appealing one that would connect well with the audience.

Cast:
• Rathan Mouli
• Yashika Anand
• Vijay TV fame Yogi, Shanna
• Teja Sri
• Sanjay Shankar & many others

Technical Crew:
• Director – Sagu Pandian
• Producer – Syed Jaffer
• Music – Santhan Anibajagane
• Cinematography – Dharmathurai
• Editing – Valarpandi
• Lyrics – Nalangilli
• Stunts – Jesudass
• Associate Directors – A. Varatharaj, Nithyanandam
• Executive Producer – A. Sundaramurthy
• Production Executive – K.R. Venkatasalam
• PRO – Shiek 

The team aims to wrap up filming soon and release the movie either by late 2025 or early 2026.

“யாஷிகா ஆனந்த்” நடிக்கும் “டாஸ்” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது…

பிளாக் டைமண்ட் ஸ்டுடியோ சார்பில் சையத் ஜாஃபர் தயாரிப்பில், சகு பாண்டியன் இயக்கத்தில் ரத்தன் மௌலி, யாஷிகா ஆனந்த், விஜய் டிவி புகழ் யோகி, தேஜா ஸ்ரீ, சஞ்சய் ஷங்கர் மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் ‘டாஸ்’ (TOSS). இந்த படத்தின் பூஜை மற்றும் துவக்க விழா படக்குழுவினர் கலந்து கொள்ள கோவில்பட்டியில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த பூஜை மற்றும் துவக்க விழாவில் முன்னாள் அமைச்சர் திரு. கடம்பூர் C ராஜூ MLA அவர்கள் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினார்.

படத்தை பற்றி இயக்குனர் சகு பாண்டியன் கூறியதாவது: மர்மமான முறையில் மூன்று கொலைகள் நிகழ்கின்றன. அந்த கொலைகளின் பின்னணி என்ன? யாஷிகா ஆனந்துக்கும் கொலைகளுக்கும் என்ன தொடர்பு என்பதை சொல்லும் ஒரு கிரைம் திரில்லர் படமாக உருவாக இருக்கிறது. யாஷிகா ஆனந்த் நாயகியாக நடிக்கிறார். தெலுங்கு திரையுலகில் இருந்து வந்திருக்கும் தேஜா ஸ்ரீ இன்னொரு நாயகியாக நடிக்கிறார். கோவில்பட்டி, விருதுநகர், சாத்தூர் பகுதிகளில் ஒரே கட்டமாக 25 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். இந்த ஊர் மக்களின் ஆதரவும், அன்பும் எங்களை மேலும் ஊக்கப்படுத்துகிறது.

முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி MLA-வுமான திரு.கடம்பூர் C ராஜூ அவர்கள் பூஜைக்கு வந்திருந்து எங்கள் குழுவை வாழ்த்தியதோடு, படப்பிடிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்திருக்கிறார். TOSS என்ற தலைப்பே எளிதில் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது எனவும் எங்களை பாராட்டினார்.

படக்குழுவினர் விபரம்:
நடிகர்கள்:

ரத்தன் மௌலி,
யாஷிகா ஆனந்த்,
விஜய் டிவி புகழ் யோகி, ஷன்னா
தேஜா ஸ்ரீ,
சஞ்சய் ஷங்கர் & மற்றும் பலர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:

இயக்குனர் – சகு பாண்டியன்,
தயாரிப்பு – சையத் ஜாஃபர்,
இசை – சாந்தன் அனிபஜகனே,
ஒளிப்பதிவு – தர்மதுரை,
படத்தொகுப்பு – வளர்பாண்டி,
பாடல்கள் – நலங்கிள்ளி,
ஸ்டண்ட்ஸ் – ஜேசுதாஸ்,
துணை இயக்குனர் -A. வரதராஜ். நித்யானந்தம்,
நிர்வாக தயாரிப்பு – A. சுந்தரமூர்த்தி,
புரொடக்‌ஷன் எக்சிகியூட்டிவ் – KR வெங்கடாசலம்,
மக்கள் தொடர்பு – ஷேக்.

விரைவில் படப்பிடிப்பை முடித்து விட்டு 2025 இறுதியில் அல்லது 2026 துவக்கத்தில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷ் அவரின் இசையில் “மலையப்பன்”

0

திரைப்படத்திற்கான பாடலை பின்னணி பாடகர் பிரசன்னா பாடியுள்ளார். #swamithanrajesh
இசையில்
” ம லை ய ப் ப ன் “
புதிய படம் துவங்கியது!


“லோக்கல் சரக்கு. “
“கடைசி தோட்டா “
ஆகிய படங்களுக்கு
இசையமைத்து பாடல்களை ஹிட் பண்ணியவர் இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷ். இதனை அடுத்து
” கண்ணோரமே”
என்ற
இசை ஆல்பம் வெளியிட்டார். அதுவும் டிரெண்டிங்கில் உள்ளது.

இவரின் பாடல்கள் வெற்றி பெற்றதை பார்த்த இயக்குனர் குரு சந்திரன் கதையின் நாயகனாக நடித்து இயக்கும் ” மலையப்பன் ” படத்திற்கு இவரை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார்.

மலைமேல் இருக்கும் கடவுளான ” மலையப்பன் ” கதையை சுவாமிநாதன் ராஜேஷிடம் கூறினார். கதையை கேட்ட சுவாமிநாதன் ராஜேஷ் உடனடியாக ஐந்து பாடல்களுக்கு ட்யூன் ரெடி செய்தார். ஐந்தும் வெவ்வேறு ஸ்டைலில் இருப்பதாக கூறிய இயக்குனர், இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷை கட்டிப் பிடித்து பாராட்டினார்.

இந்த படத்திற்காக காதல்மதி எழுதிய
” வேஷங்கட்டிக்கிட்டு” என்ற பாடலை பிரசன்னா பாட தனது இசையில் வீரமிக்க பாடலாக பதிவு செய்தார்.

பாடலை கேட்ட பட குழுவினர் இசையமைப்பாளரை
கைகுலுக்கி கைதட்டி பாராட்டினர்.

மலையப்பன் படத்தில்
பிரபல முன்னணி இசையமைப்பாளரை பாட வைக்க சுவாமிநாதன் ராஜேஷ் முயற்சித்து
வருவதாக கூறினார்

Kinetic Green Unveils E Luna Prime: Revolutionary Electric 2W Engineered for India’s Commuter Motorcycle Segment

0

New E Luna Prime features 16-inch alloys wheels, digital cluster, and premium aesthetics, targeting India’s commuter segment at a total ownership cost of just Rs. 2,500 per month.
Chennai, 25th September 2025: Kinetic Green Energy and Power Solutions Limited, India’s leading manufacturer of electric two- and three-wheelers, today announced the launch of the E Luna Prime, a purpose-built electric mobility solution specifically engineered for India’s vast commuter segment. E Luna Prime represents a breakthrough solution that leverages cutting-edge electric vehicle technology that directly addresses the unmet needs of millions seeking affordable yet aspirational, practical yet power packed, utilitarian and reliable personal transportation in both urban and rural environments.
Building on the exceptional success of the legacy of the iconic brand E-Luna that has sold over 25,000 units since its launch just a few months ago, Kinetic Green makes a foray into India’s vast entry-level commuter motorcycle segment with the launch of E-Luna Prime which has been customised to provide an appropriate solution to this customer segment.
Positioned as a true catalyst for Bharat’s growth story, E-Luna Prime aims to democratize personal mobility for the nearly 75 crore Indians – around 50% of the population – who do not yet own a two-wheeler. Engineered to handle all terrains, the E-Luna Prime features rugged 16-inch alloy wheels that provide exceptional stability and durability on uneven and challenging roads. Beyond performance, E Luna Prime addresses everyday practical needs with a spacious front-loading area for carrying goods, a feature largely absent in conventional motorcycles, making it the ideal choice for India’s vast commuter segment.
The E Luna Prime represents a significant leap forward in design and functionality, featuring Bright LED Headlamp, sporty comfortable single seat, stylized digital colored instrumental cluster, an effective front visor, trendy rim tape, contemporary body decals, silver finish side cladding, and reliable tubeless tyres – all integrated seamlessly with the proven E-Luna platform that has already established strong market acceptance. E Luna Prime is offered in 2 variants with 110 km and 140 km range and is priced at Rs. 82,490 (ex-showroom). E Luna Prime will be available in 6 distinct colors and will be available for sale at your nearest Kinetic Green dealership.
E-Luna Prime is designed to cater to the evolving mobility needs of both urban and rural India, offering a sustainable, durable, and cost-effective daily commuting solution, aligning with the growing demand for green mobility. The all-new Prime is engineered to deliver enhanced riding experience with advanced features and superior comfort.
With over 75 crore aspirants of personal mobility and almost 50% penetration of 2W, the E-Luna Prime targets the growing demand for affordable and sustainable personal mobility. This motorcycle is a cost-effective electric two-wheeler strategically positioned against the 100cc and 110cc ICE motorcycles and offers significant financial advantages. While the ownership cost of a conventional ICE petrol-based two-wheeler is estimated at Rs. 7,500 per month, which includes Rs. 2200(EMI) and Rs. 5300 (fuel expenses and maintenance), E Luna Prime offers unmatched affordability with an ultra-low running cost of just 10 paise per kilometer and a total cost of ownership of approximately ₹2,500 per month (EMI and running expense)-a fraction of traditional ICE motorcycle costs. enabling consumers to save up to Rs. 60,000 annually on long-term mobility costs. Additionally, E Luna Prime doubles up as a multi-utility vehicle capable of serving diverse needs beyond commuting, including cargo, business operations, and utility services—versatility that conventional ICE motorcycles simply cannot match.
The grand launch event in Chennai was graced by Hon’ble Thiru Tiruchi Siva, MP and Chairman of the Parliamentary Standing Committee on Industry, whose esteemed presence greatly elevated the occasion.
On the occasion, Dr. Sulajja Firodia Motwani, Founder and CEO, Kinetic Green, said ” We are delighted to unveil the E-Luna Prime, that embodies our commitment to transforming the future of personal mobility in India. Building on the resounding success of our E-Luna series, which has garnered widespread acclaim from thousands of satisfied customers, the E-Luna Prime represents a significant leap forward in our pursuit of innovation and customer-centricity
Our extensive consumer research and mind mapping in personal mobility needs revealed a critical opportunity to harness advanced EV technology and attributes for creating India’s most affordable yet aspirational mobility solution for the fastest growing commuter motorcycle segment. The E-Luna Prime, with its industry-leading features along with the winning proposition of ₹2,500 monthly ownership cost, exemplifies our commitment to address the evolving and unmet customer needs by leveraging cutting-edge electric vehicle innovations. This represents our vision for the future of Indian mobility—where advanced technology meets practical affordability, ensuring that sustainable transportation becomes accessible to every Indian family seeking reliable, cost-effective personal mobility.”
In addition to strengthening Kinetic Green’s last mile mobility segment portfolio, the launch of the E-Luna Prime comes at a time when Kinetic Green is well equipped with an established network of over 300 plus dealerships across the country. Since the launch of the E-Luna last year, which has had a proven track record of success in its target sectors, the E-Luna Prime will build on this success and carve a niche of its own across the urban and rural markets.
About Kinetic Green:
Kinetic Green is one of the leading players in India’s electric vehicle sector, offering a wide range of electric 2-wheelers, electric 3-wheelers. Recently, the company has forged a JV with Tonino Lamborgini of Italy for Electric Golf Carts and Lifestyle Carts, that are manufactured in a state-of-the-art production facility near Pune, Maharashtra.

Helmed by Dr. Sulajja Firodia Motwani(Founder & CEO), a third-generation scion of the Firodia family, Kinetic Green is committed to build a robust pan-India EV ecosystem and developing sustainable solutions to reduce carbon emissions, with a vision to democratise electric mobility, and to bring EVs to the mainstream- accessible to not just the classes, but to the masses. To fuel its aggressive growth plans, the company recently secured $25 million in its Series A funding round from UK based PE fund, Greater Pacific Capital.

கைனடிக் கிரீன் அறிமுகம்செய்யும் E Luna Prime: இந்தியாவின் பயணிகள் மோட்டார் சைக்கிள் பிரிவுக்காக வடிவமைக்கப்பட்ட புரட்சிகரமான மின்சார 2W
புதிய E Luna Prime 16-இன்ச் அலாய் வீல்கள், டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் பிரீமியம் அழகியல் அம்சங்களைக் கொண்டுள்ளது, இது இந்தியாவின் பயணிகள் பிரிவை இலக்காகக் கொண்டது, மற்றும் மொத்த உரிமைச் செலவாக இதற்கு மாதம் வெறும் ரூ.2,500 மட்டுமே ஆகும்

Chennai 25 செப்டம்பர் 2025: இந்தியாவின் முன்னணி மின்சார இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியாளரான கைனடிக் கிரீன் எனர்ஜி அண்ட் பவர் சொல்யூஷன்ஸ் லிமிடெட், இன்று இந்தியாவின் பரந்த பயணிகள் பிரிவுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, ஒரு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட மின்சார இயக்க தீர்வான E Luna Prime ஐ அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. E Luna Prime, நகர்ப்புற மற்றும் கிராமப்புற சூழல்களில் மலிவு விலையில் ஆனால் ஆர்வமுள்ள, நடைமுறைக்குரிய ஆனால் சக்தி நிறைந்த, பயனுள்ள மற்றும் நம்பகமான தனிப்பட்ட போக்குவரத்தைத் தேடும் மில்லியன் கணக்கான மக்களின் பூர்த்தி செய்யப்படாத தேவைகளை நேரடியாக நிவர்த்தி செய்யும் அதிநவீன மின்சார வாகன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஒரு திருப்புமுனைத் தீர்வைக் குறிக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 25,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகியுள்ள புகழ்பெற்ற பிராண்டான E-Lunaவின் பாரம்பரியத்தின் அற்புதமான வெற்றியைக் கட்டியெழுப்ப, கைனடிக் கிரீன், இந்த வாடிக்கையாளர் பிரிவுக்கு பொருத்தமான தீர்வை வழங்குவதற்காக தனிப்பயனாக்கப்பட்ட E-Luna Prime ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்தியாவின் பரந்த தொடக்க நிலை பயணிகள் மோட்டார் சைக்கிள் பிரிவில் கால்பதிக்கிறது.
பாரதத்தின் வளர்ச்சிக் கதைக்கு ஒரு உண்மையான ஊக்கியாக நிலைநிறுத்தப்பட்டுள்ள E-Luna Prime, இரு சக்கர வாகனம் சொந்தமாக வைத்திருக்காத கிட்டத்தட்ட 75 கோடி இந்தியர்களுக்கு – சுமார் 50% மக்கள்தொகைக்கு – தனிப்பட்ட இயக்கத்தை ஜனநாயகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அனைத்து நிலப்பரப்புகளையும் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்ட E-Luna Prime, சீரற்ற மற்றும் சவாலான சாலைகளில் விதிவிலக்கான நிலைத்தன்மை மற்றும் நீடித்துழைப்பை வழங்கும் கரடுமுரடான 16-இன்ச் அலாய் வீல்களைக் கொண்டுள்ளது. செயல்திறனுக்கு அப்பால், E Luna Prime பொருட்களை எடுத்துச் செல்வதற்கான விசாலமான முன்-ஏற்றுதல் பகுதியுடன் அன்றாட நடைமுறைத் தேவைகளை நிவர்த்தி செய்கிறது, இது வழக்கமான மோட்டார் சைக்கிள்களில் பெரும்பாலும் இல்லாத அம்சமாகும், இது இந்தியாவின் பரந்த பயணிகள் பிரிவுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.
E Luna Prime, வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது, பிரகாசமான LED ஹெட்லேம்ப், ஸ்போர்ட்டி வசதியான ஒற்றை இருக்கை, ஸ்டைலைஸ் செய்யப்பட்ட டிஜிட்டல் வண்ண கருவி கிளஸ்டர், ஒரு பயனுள்ள முன் வைசர், நவநாகரீக ரிம் டேப், சமகால பாடி டெக்கல்கள், சில்வர் ஃபினிஷ் சைடு கிளாடிங் மற்றும் நம்பகமான டியூப்லெஸ் டயர்கள் – இவை அனைத்தும் ஏற்கனவே வலுவான சந்தை ஏற்றுக்கொள்ளலை நிறுவியுள்ள நிரூபிக்கப்பட்ட E-Luna தளத்துடன் தடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. E Luna Prime 110 கிமீ மற்றும் 140 கிமீ வரம்புடன் 2 வகைகளில் வழங்கப்படுகிறது மற்றும் இதன் விலை ரூ. 82,490 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். 6 தனித்துவமான வண்ணங்களில் கிடைக்கும் மற்றும் உங்கள் அருகிலுள்ள Kinetic Green டீலர்ஷிப்பில் E Luna Prime விற்பனைக்குக் கிடைக்கும்.
நகர்ப்புற மற்றும் கிராமப்புற இந்தியாவின் வளர்ந்து வரும் இயக்கத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் E-Luna Prime வடிவமைக்கப்பட்டுள்ளது, இது பசுமை இயக்கத்திற்கான வளர்ந்து வரும் தேவைக்கு ஏற்ப நிலையான, நீடித்த மற்றும் செலவு குறைந்த தினசரி பயண தீர்வை வழங்குகிறது. புதிய பிரைம் மேம்பட்ட அம்சங்கள் மற்றும் சிறந்த வசதியுடன் மேம்பட்ட சவாரி அனுபவத்தை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
75 கோடிக்கும் அதிகமான தனிநபர் இயக்கம் மற்றும் 2W இன் கிட்டத்தட்ட 50% ஊடுருவலை விரும்பும் E-Luna Prime, மலிவு மற்றும் நிலையான தனிநபர் இயக்கம் ஆகியவற்றிற்கான வளர்ந்து வரும் தேவையை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் 100cc மற்றும் 110cc ICE மோட்டார் சைக்கிள்களுக்கு எதிராக மூலோபாய ரீதியாக நிலைநிறுத்தப்பட்ட ஒரு செலவு குறைந்த மின்சார இரு சக்கர வாகனமாகும், மேலும் குறிப்பிடத்தக்க நிதி நன்மைகளை வழங்குகிறது. வழக்கமான ICE பெட்ரோல் அடிப்படையிலான இரு சக்கர வாகனத்தின் உரிமைச் செலவு மாதத்திற்கு ரூ. 7,500 என மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் ரூ. 2200 (EMI) மற்றும் ரூ. 5300 (எரிபொருள் செலவுகள் மற்றும் பராமரிப்பு) அடங்கும், E Luna Prime ஒரு கிலோமீட்டருக்கு வெறும் 10 பைசா என்ற மிகக் குறைந்த ஓட்டச் செலவு மற்றும் மாதத்திற்கு தோராயமாக ₹2,500 (EMI மற்றும் ஓட்டச் செலவு) மொத்த உரிமைச் செலவுடன் ஒப்பிடமுடியாத மலிவு விலையை வழங்குகிறது – இது பாரம்பரிய ICE மோட்டார் சைக்கிள் செலவுகளின் ஒரு பகுதி. நீண்ட கால இயக்கச் செலவுகளில் நுகர்வோர் ஆண்டுதோறும் ரூ. 60,000 வரை சேமிக்க உதவுகிறது. கூடுதலாக, E Luna Prime, சரக்கு, வணிக செயல்பாடுகள் மற்றும் பயன்பாட்டு சேவைகள் உள்ளிட்ட பயணத்திற்கு அப்பால் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன் கொண்ட பல்துறை பயன்பாட்டு வாகனமாக இரட்டிப்பாகிறது – வழக்கமான ICE மோட்டார் சைக்கிள்களால் ஒப்பிட முடியாத பல்துறை திறனை அளிக்கிறது.
சென்னையில் நடைபெற்ற பிரமாண்டமான வெளியீட்டு நிகழ்வில், நாடாளுமன்றத் தொழில்துறை நிலைக்குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு திருச்சி சிவா கலந்து கொண்டார். அவரது மதிப்புமிக்க வருகை இந்த நிகழ்வை பெரிதும் மேம்படுத்தியது.
இந்நிகழ்ச்சியில், கைனடிக் கிரீனின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சுலஜ்ஜா ஃபிரோடியா மோட்வானி அவர்கள், “இந்தியாவில் தனிப்பட்ட இயக்கத்தின் எதிர்காலத்தை மாற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் E-Luna பிரைமை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆயிரக்கணக்கான திருப்திகரமான வாடிக்கையாளர்களிடமிருந்து பரவலான பாராட்டைப் பெற்ற எங்கள் E-Luna தொடரின் மகத்தான வெற்றியைக் கட்டியெழுப்ப, E-Luna பிரைம், புதுமை மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்தலை நாங்கள் பின்பற்றுவதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது”
“எங்கள் விரிவான நுகர்வோர் ஆராய்ச்சி மற்றும் தனிப்பட்ட இயக்கத் தேவைகளில் மன வரைபடமாக்கல், வேகமாக வளர்ந்து வரும் பயணிகள் மோட்டார் சைக்கிள் பிரிவுக்கு இந்தியாவின் மிகவும் மலிவு விலையில் ஆனால் ஆர்வமுள்ள இயக்கம் தீர்வை உருவாக்குவதற்கான மேம்பட்ட EV தொழில்நுட்பம் மற்றும் பண்புகளைப் பயன்படுத்துவதற்கான ஒரு முக்கியமான வாய்ப்பை வெளிப்படுத்தியது. ₹2,500 மாதாந்திர உரிமைச் செலவின் வெற்றிகரமான முன்மொழிவுடன், அதன் தொழில்துறையில் முன்னணி அம்சங்களுடன் கூடிய E-Luna Prime, அதிநவீன மின்சார வாகன கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதன் மூலம் வளர்ந்து வரும் மற்றும் பூர்த்தி செய்யப்படாத வாடிக்கையாளர் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. இது இந்திய இயக்கத்தின் எதிர்காலத்திற்கான எங்கள் பார்வையை பிரதிபலிக்கிறது – அங்கு மேம்பட்ட தொழில்நுட்பம் நடைமுறை மலிவுத்தன்மையை பூர்த்தி செய்கிறது, நம்பகமான, செலவு குறைந்த தனிப்பட்ட இயக்கம் தேடும் ஒவ்வொரு இந்திய குடும்பத்திற்கும் நிலையான போக்குவரத்து அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்கிறது” என்று கூறினார்.
கைனடிக் கிரீனின் கடைசி மைல் மொபிலிட்டி பிரிவு போர்ட்ஃபோலியோவை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கைனடிக் கிரீன் நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட டீலர்ஷிப்களின் நிறுவப்பட்ட நெட்வொர்க்குடன் நன்கு பொருத்தப்பட்டிருக்கும் நேரத்தில், E-Luna Prime இன் அறிமுகம் வருகிறது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட E-Luna, அதன் இலக்குத் துறைகளில் நிரூபிக்கப்பட்ட வெற்றிப் பதிவைக் கொண்டிருந்ததிலிருந்து, E-Luna Prime இந்த வெற்றியை உருவாக்கி நகர்ப்புற மற்றும் கிராமப்புற சந்தைகளில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கும்.

மனதை திருடி விட்டாய் இயக்குனர் நாராயணமூர்த்தி மரணம் அடைந்தார்

0

பிரபுதேவா -வடிவேலு நடித்த மனதை திருடி விட்டாய், மற்றும் ஒரு பொண்ணு ஒரு பையன் படங்களை இயக்கியவர் நாராயணமூர்த்தி (59)

தவிர சன் தொலைக்காட்சியில் வெளிவந்த நந்தினி, ராசாத்தி ,ஜிமிக்கி கம்மல், அன்பே வா ,மருமகளே வா போன்ற தொடர்களை இயக்கியிருந்தார்.

உடல்நிலை குறைவால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாளை மறுநாள் 26.09.25. காலை 9.00 மணிக்கு அடக்கம் செய்யப்படுகிறது.

இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளார்

முகவரி
பம்மல் மெயின் ரோடு,
ரேடியன்ட் அப்பார்ட்மெண்ட்ஸ்,
C.பிளாக், பிளாட் எண் – 318
Cell -9841445644

‘குறள் இசையோன்’ பரத்வாஜ்!

0

இசையமைப்பாளர் பரத்வாஜ்க்கு கனடா நாட்டில் நடைபெற்ற ‘உலக திருக்குறள் மாநாட்டில்’, டொராண்டோ தமிழ் சங்கம் “குறள் இசையோன்” பட்டம் வழங்கியது.

காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி, ரோஜாக்கூட்டம், பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் போன்ற பல படங்களுக்கு இசையமைத்து, இசையமைத்த அத்தனை பாடல்களையும் ‘மெகா ஹிட்’ செய்த இசையமைப்பாளர் பரத்வாஜ். இவர் 1330 திருக்குறளை, 1330 பாடகர்களை பாட வைத்து, திருக்குறள் முழுவதையும் இசை வடிவில்10 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கினார்.

கனடா நாட்டில் டொராண்டோ தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற ‘உலக திருக்குறள் மாநாட்டில்’ பரத்வாஜ் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து, 1330 திருக்குறளையும் இசை வடிவில் கொடுத்த அவருக்கு பாராட்டு விழா நடத்தி, ‘குறள் இசையோன்’ பட்டத்தையும் வழங்கியது. கனடா அரசும் அந்த விழாவில் பரத்வாஜ் அவர்களின் திருக்குறள் தமிழ் சேவையை பாராட்டி சர்டிபிகேட் கொடுத்து, கௌரவித்தது.

விழாவில் அந்த நாட்டில் உள்ள தமிழ் பாடகர்கள் பங்கேற்று பரத்வாஜ் இசையமைத்த திருக்குறள் பாடல்களை பாடி, தமிழ் ரசிகர்களை பரவசமடைய வைத்தனர். பரத்வாஜின் மகள் ஜனனி பரத்வாஜ் மேடையில் திருக்குறள் பாடினார். பரத்வாஜ்ம் பாடினார்.

12 வருட கடுமையான உழைப்பில் தான் உருவாக்கிய திருக்குறள் இசை ஆல்பத்திற்கு கனடா நாட்டில் டொராண்டோ தமிழ் சங்கம் விழா எடுத்து, உலக ‘திருக்குறள் மாநாட்டில்’ கௌரவித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார் பரத்வாஜ்.

1330 குறளுக்கும் குரல் கொடுத்து, இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் பரத்வாஜ்!

மர்மமும் அதீத சக்தியும் சங்கமிக்கும் “சுமதி வளவு” – ZEE5-இல் செப்டம்பர் 26 முதல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது !

0

~ இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ள இந்த மலையாள ஹாரர்–திரில்லர் படத்தில் அர்ஜுன் அசோகன், கோகுல் சுரேஷ், சைஜு குரூப், பாலு வர்கீஸ், மாளவிகா மனோஜ், ஷிவதா ஆகியோர் நடித்துள்ளனர். ZEE5-இல் வரும் செப்டம்பர் 26 முதல் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் ஸ்ட்றீமிங் செய்யப்படவுள்ளது ~

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் மலையாள ஹாரர்–காமெடித் திரைப்படமான சுமதி வளவு திரைப்படத்தை வரும் செப்டம்பர் 26 அன்று உலக டிஜிட்டல் பிரீமியராக வெளியிடுகிறது. இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் அசோகன், கோகுல் சுரேஷ், சைஜு குரூப், பாலு வர்கீஸ், மாளவிகா மனோஜ் மற்றும் ஷிவதா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், நாடு முழுவதும் பார்வையாளர்கள் ரசிக்கும்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

இப்படம் கேரளாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற வளைவை மையமாகக் கொண்டது. சுமதி வளவு எனப்படும் அந்த வளைவில், சுமதி என்ற இளம் பெண் துயரமான முறையில் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகு, அது பீதியூட்டும் இடமாகப் பேசப்பட்டு வருகிறது. அந்த வளைவைக் கடக்கும் ஒவ்வொருவரும் விசித்திரமான அதீத அனுபவங்களில் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த வளைவில் நேரிடும் அமானுஷ்ய சம்பவங்கள் பலரின் வாழ்க்கையை மாற்றி விடும் விதத்தில், புராணமும் நிஜமும், துயரமும் பயமும், கடந்தகாலமும் நிகழ்காலமும் ஒன்றோடொன்று கலந்த கதையாக இது நகர்கிறது.

இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் கூறியதாவது..,
“சுமதி வளவு கேரளா மக்களின் வாழ்க்கை கதைகளிலிருந்து வந்தாலும், இது நவீன பார்வையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பயத்தைத் தாண்டி, துயர சம்பவங்கள் நினைவில் விட்டுச்செல்லும் மனித உணர்ச்சிகளையும் இப்படம் வெளிப்படுத்துகிறது. நினைவு, புராணம் மற்றும் மர்மம் ஆகியவற்றுக்கிடையிலான முரண்பாட்டை இந்தப் படம் காட்டுகிறது. ZEE5 மூலமாக உலகெங்கும் பார்வையாளர்களிடம் இப்படம் செல்லும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.”

நடிகர் அர்ஜுன் அசோகன் கூறியதாவது..,
“இந்த படம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அமானுஷ்ய சம்பவங்களையும் உணர்ச்சிகளையும் இணைத்துக் காட்டுகிறது. பீதியூட்டும் அந்த வளைவில் சிக்கிக் கொள்கிற கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. பயம், பலவீனம், தைரியம் ஆகியவற்றை ஒரு வித்தியாசமான முறையில் ஆராய முடிந்தது. சுமதி வளைவு பல மொழிகளில் ZEE5-இல் வெளிவருவது எனக்குப் பெருமை தருகிறது.”

நடிகை மாளவிகா மனோஜ் கூறியதாவது..,
“சுமதி வளவு கேரளாவின் கலாச்சார வேர் கொண்டதோடு, அதில் நிறைய மர்மமும் சஸ்பென்ஸும் நிரம்பியுள்ளது. இப்படத்தில் ஒரு திறமையான நட்சத்திரக் குழுவுடன் பணிபுரிந்தது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. மர்மம், உணர்ச்சி, திகில் ஆகியவற்றை ஒருங்கே இணைக்கும் இந்தப் படம் பார்வையாளர்களை நிச்சயம் கவரும். ZEE5-இல் படம் வெளியாகும் தருணத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

ரசிகர்களே அற்புதமான ஹாரர் அனுபவத்தை, தவற விடாதீர்கள். சுமதி வளவு – உலக டிஜிட்டல் பிரீமியர், செப்டம்பர் 26 முதல், ZEE5-இல் மட்டும் – மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் ஸ்ட்ரீமிங்காகிறது.

சூப்பர் சிங்கர் சீசன் 11 & குக் வித் கோமாளி மெகா சங்கமம் !!

0

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மக்களை வெகுவாக கவர்ந்திழுத்த இரண்டு நிகழ்ச்சிகள், சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி. இந்த வாரம் இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ஒன்றாக இணையும் ஒரு மெகா சங்கமம், தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக நிகழவுள்ளது.

தமிழக மக்களின் நெஞ்சங்களில் தனித்த இடம் பிடித்த, விஜய் டிவியின், சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வருகிறது அதே போல ஒரு சமையல் போட்டி நிகழ்ச்சியை புதுவிதமான நையாண்டியுடன் அணுகிய, குக் வித் கோமாளி நிகழ்ச்சி, 6 வது சீசனை கடந்து, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று நடந்து வருகிறது.

பட்டி தொட்டியெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்த இரண்டு நிழச்சிகளின் பங்கேற்பாளர்களும் ஒன்றாக பங்கேற்க, “சூப்பர் சிங்கர் சீசன் 11 & குக் வித் கோமாளி மெகா சங்கமம்” எனும் நிகழ்ச்சி இந்த வார இறுதியில் ஒளிப்பரப்பாகவுள்ளது.

சூப்பர் சிங்கரின் பிரபல பாடகர்களும், குக் வித் கோமாளியின் கோமாளி நகைச்சுவை வித்தகர்களும், ஒன்றாக வந்து கலக்கும் புரமோ வீடியோக்கள், இப்போது இணையமெங்கும் வைரலாக பரவி, பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

குக்வித் கோமாளியில் செய்ய வேண்டிய டிஷ்சை, பாட்டுப்பாடி அதிலிருந்து போட்டியாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதும், போட்டியாளர்களோடு சூப்பர் சிங்கர் போட்டியாளர்களின் அடாவடியும் அடங்கிய புரமோ மற்றும் சூப்ப சிங்கர் போட்டியின் ஜட்ஜான இயக்குநர் மிஷ்கினின் பிறந்த நாளை, அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடி அவரை நெகிழ வைக்கும் புரமோ என, இந்த வீடியோக்கள் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.

பல பல புதுமைகளை படைத்து வரும் விஜய் தொலைக்காட்சி இப்போது ரசிகர்களை மகிழ்விக்கும் இந்த சங்கமத்தை முன்னெடுத்து, அசத்தியுள்ளது.

இனிமையான இசையும், நகைச்சுசை சரவெடியும் ஒன்றாக கலக்கும் சங்கமத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

“சூப்பர் சிங்கர் சீசன் 11 & குக் வித் கோமாளி மெகா சங்கமம்”, வரும் செப்டம்பர் 21 மற்றும் 22 தேதிகளில் சனி, ஞாயிறு கிழமைகளில், மாலை 6.30 மணிக்கு, விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் கண்டுகளியுங்கள் !!

Promo Link 🔗 https://youtu.be/hwX4EWZVvyw?si=pE7TcK68O-EAj-rCv

Promo Link 🔗 https://youtu.be/CsbJWJDnAIQ?si=IxlaU9Sq5cHorcOr

“ரைட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

0

RTS Film Factory சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் “ரைட்”.
 
வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி  திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில் பத்திரிக்கை நண்பர்களுக்காக படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் பிரத்தியேகமாக திரையிடப்பட்டது.

இவ்விழாவினில்..,

தயாரிப்பாளர் திருமால் லட்சுமணன் பேசியதாவது..
எங்கள் படத்தில் பணிபுரிந்த நட்டி சார், அருண் பாண்டியன் சார் மற்றும் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இவ்விழாவிற்கு வருகை தந்த உறவுகளுக்கு நட்புகளுக்கும் நன்றி. இயக்குநர் எனது நண்பர், இன்னொரு நண்பர் ஜெயபாண்டி சார். அவர் மூலம் தான் இந்தப்படம் நடந்தது.  சுப்பிரமணியன் படம் செய்ய வேண்டும் என்று சொன்ன போது மூவரும் இணைந்து செய்யலாம் என்று தான் படம் ஆரம்பித்தோம். அருண்பாண்டியன் சார் பல வழிகாட்டுதல்களை தந்தார். நட்டி சார் முழுக்க முழுக்க கூட இருந்து ஆதரவு தந்தார். இயக்குநர் ஜெயித்தால் எங்கள் ஊரே சந்தோசப்படும். அனைவரும் திரையரங்கு வந்து படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

எடிட்டர் நாகூரான் பேசியதாவது..,
திரையரங்கு வந்து படம் பார்த்து ஆதரவு தாருங்கள் இயக்குநருக்கும், நட்டி சாருக்கும் நன்றி. வாய்ப்பு தந்ததற்கு தயாரிப்பாளர்களுக்கு நன்றி. படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் ஆதித்யா ஷிவக் பேசியதாவது..,
இது என் முதல் படம் என் மனதுக்கு நெருக்கமான படம், எனக்கு முதல் படமாக இப்படம் அமைந்தது மகிழ்ச்சி. நட்டி சார்,  அருண்பாண்டியன் சாரிடம் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. நிறைவான அனுபவமாக இருந்தது, அனைவருக்கும் நன்றி.

வீரம் பட நடிகை யுவினா பேசியதாவது..,
மீடியா நண்பர்களுக்கு வணக்கம், சின்ன குழந்தையாக என்னை படத்தில் பார்த்திருப்பீர்கள். இப்போ காலேஜ் பெண்ணாக இப்படத்தில் நடித்துள்ளேன். இந்த வயது பாத்திரம் நடிக்கலாம் என ஆரம்பித்த போது இப்படம் நல்ல வாய்ப்பாக அமைந்தது. எனக்கு இந்த வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. நட்டி சாருக்கு நன்றி. எங்கள் படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி.

இசையமைப்பாளர் குணா பாலசுப்பிரமணியன்
நான் இதுவரை 9 படம் செய்து விட்டேன் ஆனால் இதுதான் என் முதல் மேடை. ரமேஷ் சாருடன் வேலை பார்த்தது இனிமையான அனுபவம். ஒரு குடும்பமாக அனைவரும் இணைந்து செய்துள்ளோம். இப்படத்தில் ஆர்ட் ஒர்க், கேமரா,  என எல்லாமே சூப்பராக இருக்கும். நடிகர்கள் சிறப்பான நடிப்பைத் தந்திருக்கிறார்கள், எங்கள் படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்.

நடிகர் ரோஷன் பேசியதாவது..,
இந்த வாய்ப்பைத் தந்த ரமேஷ் சாருக்கு நன்றி. இந்த படக்குழு இப்படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளனர். நட்டி சாருடன் தான் எனக்கு காட்சிகள் அதிகம் அவர் நடிப்பதை பார்த்து நிறைய கற்றுக்கொண்டேன். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும். நன்றி.

நிர்வாகத் தயாரிப்பாளர் ப்ரான்சிஸ் மார்க்கஸ் பேசியதாவது :..,
இந்தப்படம் பற்றி சொல்ல ஒரு புக்கே எழுதலாம். 24 நாளில் எடுக்கப்பட்ட படம், சின்ன பட்ஜெட்டில் எடுத்த படம், ஆர்டிஸ்ட் எல்லாம் அவ்வளவு கடுமையாக உழைத்தனர். இயக்குநரும் கேமராமேனும் இல்லாவிட்டால் இந்தப்படம் இவ்வளவு சீக்கிரம் எடுத்திருக்க முடியாது. படத்தில் உழைத்த உதவி இயக்குநர்கள் உட்பட அனைவரும் முழு அர்ப்பணிப்போடு உழைத்தனர். அனைவருக்கும் நன்றி. மியூசிக் இப்படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. குட்லக் என்ஞ்சினியர்ஸ் சவுண்ட் சிறப்பாக செய்துள்ளனர். சமூக அக்கறையுடன் கூடிய  படமாக இப்படம் இருக்கும். பத்திரிக்கையாளர்கள் இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அனைவருக்கும் நன்றி.

நடிகை அக்‌ஷரா ரெட்டி பேசியதாவது..,  
சினிமாவுக்கு நான் புதுசு ஆனால் தமிழ் மக்களுக்கு என்னைத் தெரியும். பிக்பாஸ் மூலம் என்னை அவர்கள் வீட்டு பெண்ணாக நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அம்மா தான் என்னை முழுதாக பார்த்துக்கொண்டார்கள், அவர்கள் எதிர்பாராமல் மறைந்த பிறகு எப்படி மீடியாவில் சினிமாவில் இருப்பது எனத் தயங்கினேன்.  ஆனால் இந்த டீம் என்னை மிக ஆதரவாக பார்த்துக் கொண்டார்கள், இப்படி ஒரு டீம் கிடைத்தால் யார் வேண்டுமானாலும் பயப்படாமல் வேலை செய்யலாம். க்ளாம் டாலாக இருக்க கூடாது என நினைத்தேன் படத்தில் மிக அழகான ரோல் தந்தார்கள். நட்டி சாருடன் வேலை பார்த்தது மிக இனிமையான அனுபவம், அருண் பாண்டியன் சாரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். நீங்கள் எல்லோரும் படம் பார்த்து ரசிப்பீர்கள் என நம்புகிறேன் நன்றி.

நடிகர் ரவிமரியா பேசியதாவது..,
அன்பார்ந்த அனைவருக்கும் வணக்கம், ரைட் டீசர் வெளியீட்டு விழா. இந்தப்படத்தில் நான் நடிக்கவில்லை, ஆனால் இந்தப்படம் நன்றாக வரவேண்டுமென வேண்டிக்கொண்டிருந்தேன். எனக்கு நெருக்கமான மூன்று பேர்  பணியாற்றியுள்ளனர். எனக்கு மிளகாய் படத்தில் வாய்ப்பு தந்து, இப்போது வரை நண்பராக இருக்கும் நட்டி அவருக்கு நன்றி, மிளகாய் படத்தில் அஸிஸ்டெண்ட் டைரக்டர் ரமேஷ், மிக திறமையானவர். இத்தனை காலம் அவருக்கு தயாரிபபாளர் கிடைக்கவில்லை அவர் படத்தை தயாரித்துள்ள திருமால் லட்சுமணன், ஷியாமளா இருவருக்கும் நன்றி. இப்படத்தை 24 நாட்களில் முடித்துள்ளார்கள், படத்தை முடிக்கும் நாட்கள் முக்கியமில்லை குறைந்த நாட்களில் எடுத்த நூறாவது நாள் பிளாக்பஸ்டர். நட்டி சார் இந்தப்படத்திற்காக எவ்வளவு குறைவாக சம்பளம் வாங்கி நடித்தார் எனத் தெரியும், ரமேஷ் மீது பெரும் அக்கறை கொண்டவர் அவர், இப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும், இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகை வினோதினி பேசியதாவது…,
ஊடக நண்பர்களுக்கு முதல் நன்றி, இந்த விழாவிற்கு வருகை தந்த ரவி மரியா சாருக்கு நன்றி. நட்பு பற்றி நிறைய பேசுகிறோம் நான் இந்தப்படத்திற்கு வந்ததற்கும் காரணம் நட்பு தான். மார்க்கஸ் தான் என்னை தொடர்பு கொண்டு இப்படத்தில் கொண்டு வந்தார். அவரை பல காலமாக எனக்குத் தெரியும். ரமேஷ் அவர்களை ஜில்லா படத்தில் பார்த்துள்ளேன், அவர் இப்படி இயக்குநராக, அதுவும் நண்பர்கள் தயாரிப்பில் வருவார் என நினைக்கவில்லை, அவர் முதல், பலருக்கு இது முதல் படமாக அமைவது மிகுந்த மகிழ்ச்சி. 24 நாளில் எடுத்தது எனக்கே தெரியாது, நான் ஏழு நாள் தான் நடித்தேன் பக்காவாக திட்டமிட்டு எடுத்தார்கள். இது எவ்வளவு பெரிய உழைப்பு, என பிரமிப்பாக இருக்கிறது. அருண் பாண்டியன் சார், நட்டி சாரின் நடிப்பு மிகச்சிறப்பாக வந்துள்ளது. இப்படம் கண்டிப்பாக ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படமாக இருக்கும், அனைவருக்கும் நன்றி.

நட்டி (எ) நட்ராஜ் பேசியதாவது..,
ரைட் ஒரு சுவாரஸ்யமான படம். ரமேஷ் என்னிடம் அஸிஸ்டெண்டாக இருந்தவர், அவர் கதை சொன்ன போதே யார்யாரெல்லாம் நடிக்க  வேண்டும் என எழுதியே வைத்திருந்தார். அருண் பாண்டியன் சார் படத்தில் ஒரு கோ டைரக்டர் போல வேலை செய்தார். அவர் அர்ப்பணிப்பிற்கு நன்றி. அக்‌ஷரா ரெட்டி பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து வந்தவர், மிக கடுமையாக உழைத்துள்ளார், வாழ்த்துக்கள். யுவினா சிறப்பான நடிப்பை தந்துள்ளார். ஆதித்யாவும் சிறப்பாக செய்துள்ளார். ரோஷனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. ரவிமரியா என் சிறந்த நண்பர் அவர் செய்த உதவிகள் ஏராளம் வந்து வாழ்த்தியதற்கு நன்றி. படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களும் சிறப்பான உழைப்பைத் தந்துள்ளனர். குணா இசையில் வாழ்ந்துள்ளார். ஆர்ட் டைரக்டர் வேலை பெரியளவில் கண்டிப்பாக பேசப்படும். படத்தின் தயாரிப்பாளர்களுக்கு என் நன்றிகள். அனைவரும் இப்படத்தை தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும். சமூக அக்கறை மிக்க ஒரு விசயத்தை ரமேஷ் சொல்லியுள்ளார். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் பாலசுப்பிரமணியம் ரமேஷ் பேசியதாவது..,
என் இயக்குநர்கள் குழுவிற்கு முதல் நன்றி. என் அம்மா அப்பா, எனக்கு தொழில் கற்றுத்தந்த குருக்களுக்கு நன்றி. எப்போதும் ஊரில் என் நண்பர்கள் எப்போது படம் செய்வாய் எனக் கேட்பார்கள், அதற்கு தயங்கியே நான் எங்கும் போகாமல் இருந்தேன். என் நண்பர் ஜெயபாண்டி தான் திருமால் சாரை அறிமுகப்படுத்தினார், இப்படத்தை தயாரித்ததற்கு திருமால் சாருக்கு நன்றி. நட்டி சார் ஆபிஸில் தான் நான் வாழ்ந்தேன். அவர் தான் நான் இப்படம் செய்யக் காரணம். இப்படம் ஒரே இடத்தில் நடக்கும் கதை நடிகர்களை ஸ்டேஜிங் செய்வது மிகுந்த சவாலாக இருந்தது. குணா மிக அற்புதமான இசையை தந்துள்ளார். தாமு சார் கலை இயக்கத்தில் அசத்தியுள்ளார். மார்க்கஸ் சார் இப்படத்திற்கு முழு சப்போர்ட்டாக இருந்தார். அக்‌ஷரா மிக கடுமையாக உழைத்தார். நன்றாக நடித்துள்ளார். வினோதினி மேடமுக்கு சொல்லித்தர அவசியமே இல்லை. யுவினா நன்றாக நடித்துள்ளார். ஆதித்யா நிறைய சப்போர்ட் செய்தார். அருண் பாண்டியன் சாரிடம் அன்பிற்கினியாள் படத்தில் நான் வேலை செய்தேன். அவரைப்பார்க்கவே ஆறு மாதம் ஆனது. அவர் என்னை வேண்டாம் என சொல்லத்தான் கதை கேட்கவே ஒப்புக்கொண்டார் ஆனால் அவர் கதை பிடித்து நடிக்க ஒப்புக்கொண்டார்.  அவருக்கு நன்றி. படம் சிறப்பாக வந்துள்ளது. அனைவருக்கும் பிடிக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

எளிய மக்களுக்கு பிரச்சனை என்றால் காவல்நிலையத்தில் உதவி கேட்பார்கள். அந்த காவல் நிலையத்திற்கே ஒரு பிரச்சனை என்றால் என்னவாகும்? என்பது தான்  இப்படத்தின் மையம்.

ஜில்லா புலி படங்களில் அசோஷியேட் இயக்குநராக பணிபுரிந்துள்ள சுப்ரமணியன் ரமேஷ்குமார் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பரபரப்பான சம்பவங்களை கோர்த்து, விறுவிறுப்பான திரைக்கதையில், அசத்தலான கமர்ஷியல் திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

தமிழ் திரையுலகில் கால் பதித்திருக்கும் RTS Film Factory நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இப்படத்தை, தயாரிப்பாளர்கள்  திருமால் லட்சுமணன், ஷியாமளா பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் நட்டி, அருண் பாண்டியன் இணைந்து,  முதன்முறையாக முதன்மைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன்   பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டி, வினோதினி, மூணாறு ரமேஷ், டைகர் தங்கதுரை, உதய் மகேஷ், முத்துராமன், வில்லனாக ரோஷன் உதயகுமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். வீரம் படப்புகழ் குழந்தை நட்சத்திரம் யுவினா பார்கவி இப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார், அனுபமா குமாரின் மகன் ஆதித்யா ஷிவக் புதுமுகமாக  அறிமுகாகிறார்.

இப்படம் வரும் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி  உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்
தயாரிப்பு நிறுவனம் – RTS Film Factory
தயாரிப்பாளர்கள் – திருமால் லட்சுமணன், T ஷியாமளா
எழுத்து, இயக்கம் – சுப்ரமணியன் ரமேஷ்குமார்
இசை – குணா பாலசுப்ரமணியன்
ஒளிப்பதிவு – M பத்மேஷ்
எடிட்டிங் – நாகூரான் ராமசந்திரன்
கலை – தாமு
ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கில்
நடனம் – ராதிகா
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

ஹொம்பாலே பிலிம்ஸ் வழங்கும், ரிஷப் ஷெட்டி நடிப்பில் ‘காந்தாரா: சேப்டர் 1’ டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார் ! !

0

இந்த வருடத்தின் மிகப்பெரிய அறிவிப்பு இதோ வந்துவிட்டது! ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கும், காந்தாரா: சேப்டர் 1 திரைப்படத்தின் டிரெய்லர், தற்போது வெளிவந்துள்ளது!.

இப்படத்தின் தமிழ் டிரெய்லரை முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2022-ல் வெளியான காந்தாரா திரைப்படம் பெரும் வெற்றியடைந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக உருவாகும் காந்தாரா: சேப்டர் 1 படத்தின் மீது பொதுவாகவே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், தயாரிப்பாளர்கள் மக்களை மகிழ்விக்கும் வகையில், படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர், இது 2025-இல் திரைத்துறையின் முக்கிய தருணங்களில் ஒன்றாகும்.

ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கும் காந்தாரா: சேப்டர் 1, இந்த வருடத்தின் மிக எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும். இது ஒரு பான்-இந்தியா திரைப்படமாக பரவலாக பேசப்படுகின்றது, இப்படம் அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்கள் படத்திற்காக பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். அவர்களை மகிழ்விக்கும் விதமாக டிரெய்லர் தற்போது வெளிவந்துவிட்டது.

இப்படத்தின் தமிழ் பதிப்பின் டிரெய்லரை முன்னனி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன்
தனது டிவிட்டர் பக்கத்தில் டிரெய்லரை பகிர்ந்து…

ஒரு நாட்டுப்புறக் கதையும், நம்பிக்கையின் பேரொளியும் – தீவும் வேகமும் சங்கமிக்கும் அற்புதம்.

KantaraChapter1 தமிழ் டிரைலரை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன்

சினிமா ரசிகர்களுக்கு இயற்கையோடு இணைந்த தனித்துவமான அனுபவம்.

@shetty_rishab, @rukminitweets மற்றும் @hombalefilms குழுவிற்கு மிகப்பெரிய வெற்றிக்காக வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.

டிரெய்லரில் திரைப்படம் பற்றிய பல விஷயங்களை தெரியப்படுத்தவில்லை, ஆனால் அதில் ஒரு விதமான மர்மம் மற்றும் சுவாரஸ்யமும் கலந்துள்ளது. முந்தைய படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் கதை ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

காந்தாரா: சேப்டர் 1 ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய முயற்சிகளில் ஒன்றாகும். இசையமைப்பாளர் B. அஜனீஷ் லோக்நாத், ஒளிப்பதிவாளர் அரவிந்த் காஷ்யப், தயாரிப்பு வடிவமைப்பாளர் வினேஷ் பங்க்லன் ஆகியோரின் கலைநயமான திறமையில் திரைப்படத்தின் காட்சி மற்றும் உணர்ச்சி அனுபவம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

ஹொம்பாலே பிலிம்ஸ் முன்னெடுப்பில் 2022 படத்தின் பாரம்பரியத்தை தொடரும் வகையில் காந்தாரா: சேப்டர் 1-ல் ஒரு மிகப்பெரிய போர் காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள், 500க்கும் மேற்பட்ட திறமையான போர் கலைஞர்கள் மற்றும் 3,000 துணை நடிகர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த காட்சி 25 ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு நகரில் 45–50 நாட்களுக்கு படமாக்கப்பட்டது. இது இந்திய சினிமாவின் வரலாற்றில் மிகப்பெரிய காட்சிகளில் ஒன்றாகும்.

இப்படம் அக்டோபர் 2 அன்று உலகளாவிய வெளியீடாக, கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ், பெங்காலி மற்றும் ஆங்கிலத்தில் என, அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை கவரும் முயற்சியுடன் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

காந்தாரா: சேப்டர் 1 மூலம் ஹொம்பாலே பிலிம்ஸ் இந்திய சினிமாவின் எல்லைகளை மேலும் விரிவுபடுத்துகிறது, பாரம்பரியக் கதை, நம்பிக்கை மற்றும் கலைப்பூர்வமான அனுபவங்களை கொண்டுவரும் ஒரு ஆழமான காட்சி அனுபவத்தை இப்படத்தில் வழங்கவுள்ளது.

link : https://www.youtube.com/watch?v=gKJMgeEvSyE

- Advertisement -

Recent Posts