- Advertisement -
Home Blog Page 12

Prime Video Unveils the Captivating Trailer of System, a Prime Original Movie that Navigates the Battle Between Power and Justice

0

Prime Original Movie, System, a gripping courtroom thriller, is directed by Ashwiny Iyer Tiwari and produced under the banner of Baweja Studios by Pammi Baweja, Harman Baweja, and Smitha Baliga. The movie is written by Harman Baweja, Arun Sukumar, Ashwiny Iyer Tiwari, Tasneem Lokhandwala, and Akshat Ghildial

Featuring Sonakshi Sinha, Jyotika, and Ashutosh Gowariker in lead roles, System, it also features Preeti Agarwal, Adinath Kothare, Aashriya Mishra, Gaurav Pandey, and Sayandeep Gupta in pivotal roles

System will premiere exclusively on Prime Video in Hindi across India and over 240 countries and territories worldwide on May 22

MUMBAI, India—May 12, 2026—Prime Video, India’s most loved entertainment destination, today unveiled the gripping trailer of its upcoming Prime Original movie System, offering a powerful glimpse into hard-hitting social realities and questions a system where power defines truth. Directed by Ashwiny Iyer Tiwari and produced by Pammi Baweja, Harman Baweja, and Smitha Baliga, System captures the universal themes of ambition, revenge, fight for justice, and moral ethics. Written by Harman Baweja, Arun Sukumar, Ashwiny Iyer Tiwari, Tasneem Lokhandwala, and Akshat Ghildial, System features Sonakshi Sinha, Jyotika, and Ashutosh Gowariker in lead roles, supported by Preeti Agarwal, Adinath Kothare, Aashriya Mishra, Gaurav Pandey, and Sayandeep Gupta in pivotal roles. The movie will premiere exclusively on Prime Video in Hindi, across India and over 240 countries and territories worldwide on May 22.

The trailer for System opens with Neha, a determined young lawyer played by Sonakshi Sinha, taking on a tough challenge from her father (Ashutosh Gowariker) to be worthy of a partnership in his firm. To pull it off, she recruits Sarika (Jyotika) – a street-smart courtroom stenographer, who secretly harbors motives of her own. What follows is a fast-moving glimpse into intense courtroom battles, messy relationships, and some powerful moments. Hard-hitting dialogues like “Ameeri ke shor mein gareeb ki awaaz kho jaati hai” cut straight to the core conflict, and viewers are left to wonder, in a System where influence can outweigh truth, has Power killed Justice or does it still stand a chance? Find out when System premieres exclusively on Prime Video on May 22!

Ashwiny Iyer Tiwari, the director and co-writer of System shared, “As a filmmaker every story I have told is an act of bravery. Stories that inspire me creatively, break barriers and sometimes they are deeply personal. System like all my movies shares similar values that challenges me to evolve with my craft with authenticity. Movies that I hope will live beyond my lifetime. She further added, “I am immensely grateful that Prime Video along with Baweja Studios believed in my vision. With Sonakshi Sinha and Jyotika, two powerful actors at the heart of the narrative, I hope that System will not only entertain but also spark a conversation among viewers in India and around the world, when it premieres on Prime Video on May 22.”

Sonakshi Sinha, who plays Neha, an ambitious public prosecutor, shared, “Playing this character has been deeply rewarding. I’m always drawn to stories that challenge me as an actor, and Prime Video has given me the opportunity to explore diverse genres and themes—from Dahaad to now System. This original movie is more than just a legal drama; it reflects the society we live in, where justice can sometimes be as divided as the social structures around us. Ashwiny’s clear vision helped me bring out my best and I’m excited to see how audiences respond when System premieres on Prime Video on May 22.”

Known for her versatility, Jyotika, who plays the role of Sarika, a courtroom stenographer, said, “Portraying such a layered character in System was both exciting and challenging. The film explores the contrasts of modern India, where privilege and inequality coexist. Ashwiny brings a clear and engaging vision to the story, from well-developed characters to realistic settings. Being part of a Prime Original movie has been a great experience. Prime Video is known for sharing meaningful stories with audiences across India and globally, and I am glad System will reach so many people when it premieres on May 22.”

அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான போராட்டத்தை வெளிப்படுத்தும் ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” படத்தின் அதிரடியான டிரெய்லரை வெளியிட்டது ப்ரைம் வீடியோ !!

ப்ரைம் வீடியோ வழங்கும் “சிஸ்டம்” படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியானது !!

தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது.

ப்ரைம் வீடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான நீதிமன்ற த்ரில்லர் திரைப்படமான சிஸ்டம், அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ளது. பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஸ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.

சோனாக்‌ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

“சிஸ்டம்” திரைப்படம் வரும் மே 22ஆம் தேதி இந்தியாவிலும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், பிரத்யேகமாக ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது.

மும்பை, இந்தியா – மே 12, 2026 – இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான ப்ரைம் வீடியோ, தனது அடுத்த ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” படத்தின் அதிரடியான டிரெய்லரை இன்று வெளியிட்டுள்ளது. சமூகத்தின் கடுமையான உண்மைகளையும், அதிகாரம் உண்மையை நிர்ணயிக்கும் ஒரு அமைப்பில் நீதிக்கு என்ன மதிப்பு உள்ளது என்ற கேள்வியையும் இப்படம் முன்வைக்கிறது.

இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் தயாரித்துள்ளனர். பேராசை, பழிவாங்குதல், நீதி தேடும் போராட்டம் மற்றும் ஒழுக்கநெறி போன்ற உலகளாவிய கருக்களை மையமாகக் கொண்டு “சிஸ்டம்” உருவாகியுள்ளது.

டிரெய்லரில், நேகா என்ற இளம் வழக்கறிஞராக சோனாக்‌ஷி சின்ஹா அறிமுகமாகிறார். தனது தந்தையான மூத்த வழக்கறிஞர் (அஸ்தோஷ் கோவாரிகர் ) முன்னிலையில் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய சவாலில் அவர் ஈடுபடுகிறார். அதற்காக சரிகா என்ற கூர்மையான நீதிமன்ற ஸ்டெனோகிராஃபரை (ஜோதிகா) அவர் தனது அணியில் இணைத்துக்கொள்கிறார். ஆனால் சரிகாவுக்கும் தனிப்பட்ட நோக்கங்கள் இருப்பது பின்னர் தெரிய வருகிறது. அதன் பிறகு நீதிமன்றத்தில் நடக்கும் கடுமையான மோதல்கள், சிக்கலான உறவுகள் மற்றும் உணர்ச்சி மிகுந்த தருணங்கள் டிரெய்லரில் வேகமாக நகர்கின்றன.

“பணக்காரர்களின் சத்தத்தில் ஏழைகளின் குரல் காணாமல் போய்விடுகிறது.” போன்ற தாக்கம் மிக்க வசனங்கள் படத்தின் மைய கருத்தை வெளிப்படுத்துகின்றன. “அதிகாரம் உண்மையை விட வலிமையானதாக இருக்கும் ஒரு அமைப்பில், நீதி இன்னும் உயிருடன் இருக்கிறதா?” என்ற கேள்வியை படம் எழுப்புகிறது. இதற்கான பதில் மே 22ஆம் தேதி ப்ரைம் வீடியோவில் வெளியாகும் “சிஸ்டம்” திரைப்படத்தில் கிடைக்கும்.

இப்படம் குறித்து இயக்குநரும் இணை எழுத்தாளருமான அஸ்வினி ஐயர் திவாரி கூறுகையில்..,

“நான் சொல்லும் ஒவ்வொரு கதையும் ஒரு தைரியமான முயற்சிதான். என்னை சவாலுக்கு உள்ளாக்கும் கதைகளே என்னை ஒரு படைப்பாளியாக வளர்த்திருக்கின்றன. “சிஸ்டம்” திரைப்படமும் அதேபோல உண்மைத்தன்மையுடன் உருவான ஒரு படைப்பு. ப்ரைம் வீடியோ மற்றும் Baweja Studios ஆகியோர் என் கற்பனையில் நம்பிக்கை வைத்ததற்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன். சோனாக்‌ஷி சின்ஹா மற்றும் ஜோதிகா போன்ற வலிமையான நடிகைகள் இப்படத்தின் மையமாக இருப்பதால், இந்த படம் மக்களை வெறும் பொழுதுபோக்கைத் தாண்டி சிந்திக்க வைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

நேகா என்ற அரசு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சோனாக்‌ஷி சின்ஹா கூறுகையில்..,

“இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. ஒரு நடிகையாக என்னை சவாலுக்கு உட்படுத்தும் கதைகளை நான் எப்போதும் விரும்புவேன். Dahaad படத்திற்குப் பிறகு சிஸ்டம் போன்ற வித்தியாசமான கதையில் நடிக்கும் வாய்ப்பை ப்ரைம் வீடியோ எனக்கு வழங்கியுள்ளது. இது ஒரு சாதாரண நீதிமன்ற நாடகம் மட்டுமல்ல; சமூகத்தில் நீதியும் சமூக அமைப்புகளும் எவ்வாறு பிரிக்கப்பட்டிருக்கின்றன என்பதை பிரதிபலிக்கும் ஒரு படம்” என்றார்.

சரிகா கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜோதிகா கூறுகையில்…,

“பல அடுக்குகள் கொண்ட இந்த கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்வது சவாலானது, அதே நேரத்தில் உற்சாகமாக இருந்தது. சமத்துவமின்மை மற்றும் அதிகாரம் ஒன்றாக வாழும் நவீன இந்தியாவை இந்த படம் பேசுகிறது. அஸ்வினி மிகவும் தெளிவான மற்றும் உண்மைத்தன்மை கொண்ட கண்ணோட்டத்துடன் இந்தக் கதையை உருவாக்கியுள்ளார். ப்ரைம் ஒரிஜினல் திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பது மிகச் சிறந்த அனுபவம். இந்த படம் இந்தியாவையும் தாண்டி உலகம் முழுவதும் வரும் மே 22 மக்களை சென்றடையும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

Hombale Films Announces Its First-Ever Overseas Distribution Venture with PEDDI

0

One of India’s most celebrated production house, Recently, Hombale Films had announced their expansion into the overseas distribution space, and PEDDI becomes the prestigious banner’s first international distribution venture, starring Mega Powerstar Ram Charan.

After redefining the scale of Indian cinema with blockbusters like KGF, Kantara, and Salaar, Hombale Films has now taken a significant step forward by venturing into international distribution beginning with one of the most anticipated pan-Indian films of 2026, PEDDI.

Over the years, Hombale Films has built a strong reputation for delivering cinematic spectacles that combine rooted storytelling with massive theatrical appeal. Their films have consistently crossed language and regional barriers, creating a loyal audience base not just in India, but across global markets.

With PEDDI, Hombale Films is set to directly strengthen its international footprint, marking this as the banner’s first official overseas distribution acquisition. The move is already being seen as a major boost for the film’s worldwide release prospects.

Directed by acclaimed filmmaker Buchi Babu Sana, PEDDI has generated tremendous buzz for its raw action-packed backdrop, powerful visuals, and Ram Charan’s intense transformation. Adding further weight to the project is music by Oscar-winning composer A. R. Rahman.

The association of Hombale Films with PEDDI has significantly amplified excitement in trade and fan circles, with expectations of a massive overseas rollout across key international territories.

PEDDI is slated for a grand worldwide theatrical release on June 4th

மெகா ஸ்டார் ராம்சரணின் “பெத்தி” படம் மூலம் வெளிநாட்டு விநியோகத்தில் களமிறங்கும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ்!

இந்தியாவின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹொம்பாலே ஃபிலிம்ஸ் (Hombale Films) தனது முதல் வெளிநாட்டு விநியோக முயற்சியாக “பெத்தி” திரைப்படத்தை அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளிநாட்டு விநியோகத் துறையில் விரிவாக்கம் செய்வதாக அறிவித்திருந்த ஹொம்பாலே ஃபிலிம்ஸ், மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்கும் “பெத்தி” திரைப்படத்தின் மூலம் தனது சர்வதேச விநியோக பயணத்தை தொடங்குகிறது.

கேஜிஎஃப், காந்தாரா, சலார் போன்ற மாபெரும் வெற்றி திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமாவின் அளவுகோலை மாற்றிய ஹொம்பாலே ஃபிலிம்ஸ், தற்போது 2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்திய திரைப்படங்களில் ஒன்றான “பெத்தி” மூலம் சர்வதேச விநியோகத்தில் முக்கியமான முன்னேற்றத்தை எடுத்துள்ளது.

பல ஆண்டுகளாக, மண் மணம் சார்ந்த கதையையும் பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தையும் இணைத்து சினிமா ரசிகர்களுக்கு விருந்தளித்து வரும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ், இந்தியாவைத் தாண்டியும் உலகளாவிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது.

“பெத்தி” திரைப்படத்தின் மூலம், ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தனது சர்வதேச தடத்தை நேரடியாக வலுப்படுத்துகிறது. இது அந்த நிறுவனத்தின் முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு விநியோக முயற்சியாக கருதப்படுகிறது. இந்த அறிவிப்பு திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டிற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

புகழ்பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கும் “பெத்தி” திரைப்படம், அதன் அதிரடியான ஆக்ஷன் பின்னணி, சக்திவாய்ந்த கதைக்களம் மற்றும் ராம் சரணின் தீவிரமான உருமாற்றத்தால் ஏற்கனவே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் A. R. ரஹ்மான் இசையமைப்பது இந்த படத்துக்கு கூடுதல் பலத்தை வழங்குகியுள்ளது.

ஹொம்பாலே ஃபிலிம்ஸ் “பெத்தி” படத்தை விநியோகம் செய்வது, ரசிகர்கள் மற்றும் திரை வர்த்தக வட்டாரங்களில் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய சர்வதேச பகுதிகளில் மிகப்பெரிய அளவில் வெளிநாட்டு வெளியீடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“பெத்தி” திரைப்படம் ஜூன் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Sivakarthikeyan Productions Unveils Its First Indie Single “Velum Mayilum” – A soul-stirring musical ode drenched in devotion to Lord Murugan

0

Lyrics by Sivakarthikeyan, Directed by “Thaai Kizhavi” fame Sivakumar Murugesan & Composed and Soulfully Rendered by Nivas K Prasanna

Sivakarthikeyan Productions, known for consistently encouraging and promoting promising new talents, has been playing a significant role in presenting refreshing narratives and unique voices to Tamil cinema. With a vision to back innovative storytelling and aspiring creators, the production house has introduced several noteworthy filmmakers and artistes who have contributed to the evolving landscape of contemporary Tamil cinema.
The banner’s recent release Thaai Kizhavi has been garnering tremendous response from audiences across theatrical and OTT platforms alike, further reaffirming the production house’s commitment towards meaningful and quality entertainment.

Expanding its creative horizon further, Sivakarthikeyan Productions has now stepped into the independent musical space with its first indie single, “Velum Mayilum.” The spiritually uplifting devotional track dedicated to Lord Murugan is composed and soulfully rendered by Nivas K Prasanna, with Sivakarthikeyan penning the lyrics. The beautiful song is composed by Sivakumar Murugesan, who shot to fame for his Blockbuster hit movie “Thaai Kizhavi” and Director of Sivakarthikeyan’s upcoming film Seyon.

Rich in devotional fervour and rooted deeply in Tamil spiritual tradition, “Velum Mayilum” unfolds as a transcendent musical offering that beautifully captures the grace, valour and divine aura associated with Lord Murugan. Blending evocative lyricism with earthy folk textures and contemporary soundscapes, the song evokes a sense of spiritual serenity and emotional reflections that is expected to strike a chord with devotees and music lovers alike.

Interestingly, the spiritual essence surrounding “Velum Mayilum” extends beyond the song itself. Producer-lyricist Sivakarthikeyan and filmmaker Shivakumar Murugesan, whose names themselves (Both names involve Karthikeyan & Murugesan) symbolises with the divine identity of Lord Murugan, and their deep-rooted emotional and spiritual admiration towards Divine Being..

This soulful association lends an added layer of authenticity and devotion to the musical offering.

Marking a new creative chapter, Sivakarthikeyan Productions aims to continue presenting more original and heartfelt independent musical works in the future, creating a vibrant platform for unique voices and enriching musical expressions.

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸின் முதல் சுயாதீன ஆன்மீக இசைப் பாடல் ‘வேலும் மயிலும்’!

சிவகார்த்திகேயன் இந்தப் பாடல் எழுதியிருக்க, சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து பாடியிருக்கிறார்.

புதிய திறமைகளை தொடர்ந்து ஊக்குவித்து வரும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், தமிழ் திரையுலகிற்கு புதிய கதைகளையும், திறமையான இயக்குநர்கள் மற்றும் கலைஞர்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான ‘தாய் கிழவி’ திரைப்படம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன்மூலம் தரமான பொழுதுபோக்கு படங்களை தருவதில் இந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

தனது பயணத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தற்போது தனது முதல் சுயாதீன இசைப் படைப்பான, ‘வேலும் மயிலும்’ வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் சுயாதீன இசை உலகிலும் அடியெடுத்து வைத்துள்ளது. முருகப் பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆன்மீக பாடலை நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்து, பாடியுள்ளார். பாடல் வரிகளை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். ‘தாய் கிழவி’ மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்து வரவிருக்கும் ‘சேயோன்’ படங்களின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இந்தப் பாடலை இயக்கியுள்ளார்.

தமிழர்களின் ஆன்மீக பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ‘வேலும் மயிலும்’ பாடல், முருகப் பெருமானின் அருள் மற்றும் தெய்வீக மகத்துவத்தை இசையின் வழியாக வெளிப்படுத்துகிறது. ஆழமான வரிகளும், நாட்டுப்புற இசை நுணுக்கங்களும், நவீன இசை வடிவங்களும் கலந்த இந்தப் பாடல், பக்தர்களுக்கும் இசை ரசிகர்களுக்கும் மன அமைதியை ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது.

இந்தப் பாடலின் ஆன்மீக சாரம் பாடலில் மட்டுமல்லாமல், அதை உருவாக்கியவர்களின் பெயர்களிலும் இருக்கிறது. தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன், இயக்குநர் சிவகுமார் முருகேசன் ஆகியோரின் பெயர்கள் முருகப் பெருமானோடு தொடர்புடையவை. அவர்களின் ஆழமான பக்தியும் உணர்வுப்பூர்வமான ஈடுபாடும் இந்த இசைப் படைப்பிற்கு கூடுதல் சிறப்பு சேர்த்துள்ளது.

இந்தப் பாடலோடு சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மேலும் பல தனித்துவமான மற்றும் மனதை வருடும் சுயாதீன இசைப் படைப்புகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது. புதிய குரல்கள் மற்றும் திறமையாளர்களுக்கு சிறந்த தளமாக இது இருக்கும் எனவும் உறுதியளிக்கிறது.

A Heartwarming Celebration Awaits Families In Theatres
Meera Kathiravan’s ‘Habeebi’ Earns A Clean ‘U’ Certificate

0

Family audiences have always embraced feel-good entertainers with immense affection, turning theatres into spaces filled with joy, warmth and celebration. Films rooted in heartfelt emotions and human relationships continue to create a special bond across generations, and ‘Habeebi’ promises to be one such wholesome cinematic experience.

Directed by acclaimed filmmaker Meera Kathiravan, Habeebii has been garnering strong expectations for its emotionally enriching narrative, culturally rooted backdrop and sincere storytelling. The film has now successfully completed its censor formalities and has been awarded a clean ‘U’ certificate by the Censor Board officials, who appreciated the team for presenting a wholesome family entertainer enriched with meaningful emotions and positive values.

The film’s journey has gained further prominence with Romeo Pictures Raahul coming forward to release Habeebi across Worldwide. Known for identifying promising films and presenting them successfully to audiences, Raahul’s association has significantly created a strong buzz across the trade circles and audience expectations surrounding the project. His consistent ability to back compelling theatrical entertainers has often been regarded within the industry as a remarkable ‘Golden Touch’.

Featuring fresh talents alongside Kasturi Raja in a pivotal role, Habeebi is further elevated by Sam C.S.’ emotionally resonant musical score. The film had already captured widespread attention for recreating the iconic voice of legendary singer Nagore E.M. Hanifa through artificial intelligence for the song “Vallone,” blending technology with a heartfelt cultural tribute.

With strong positive expectations building steadily, the makers are expected to officially announce the theatrical release date soon.

திரையரங்குகளில் குடும்பங்கள் பார்த்து ரசிக்க இருக்கும் மீரா கதிரவனின் ‘ஹபீபி’ திரைப்படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது!

நல்ல கதையம்சத்துடன் கூடிய எண்டர்டெயின்மெண்ட் படங்களை மகிழ்வோடும் கொண்டாட்டத்துடனும் குடும்ப பார்வையாளர்கள் வரவேற்பார்கள். மனித உறவுகளை அடிப்படையாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதைகள் தலைமுறைகள் தாண்டியும் ஸ்பெஷலான பிணைப்பை உருவாக்கும். அப்படியான நல்ல சினிமா அனுபவத்தை தர இருக்கும் படம்தான் ‘ஹபீபி’.

மண் சார்ந்த நல்ல கதையம்சம் கொண்ட உணர்வுப்பூர்வமான இந்தப் படத்தை மீரா கதிரவன் இயக்கியுள்ளார். இப்படம் தற்போது சென்சார் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, சென்சார் வாரியத்தினரிடமிருந்து ‘யூ’ சான்றிதழைப் பெற்றுள்ளது. மேலும், நல்லுணர்வுகளும் நேர்மறை மதிப்புகளும் நிறைந்த குடும்பத்துடன் பார்க்கக்கூடிய தரமான படைப்பாக இப்படத்தை உருவாக்கியதற்காக படக்குழுவினரை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

தரமான படங்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், உலகம் முழுவதும் ‘ஹபீபி’ திரைப்படத்தை வெளியிட முன்வந்துள்ளது வணிக வட்டாரங்களிலும் ரசிகர்களிடையிலும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

புதிய திறமையாளர்களுடன் நடிகர் கஸ்தூரி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு, இசையமைப்பாளர் சாம் சி.எஸ். உணர்வுகளை ஆழமாகத் தொட்டுச் செல்லும் இசையை கொடுத்துள்ளார். குறிப்பாக, ‘வல்லோனே…’ பாடலுக்காக மறைந்த புகழ்பெற்ற பாடகர் நாகூர் இ.எம். ஹனிபாவின் குரலை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் உருவாக்கியிருப்பது கவனம் ஈர்த்தது.

இப்படத்திற்கான நேர்மறையான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தயாரிப்பாளர்கள் விரைவில் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சைலண்ட் இன்ஃபுளூயன்சர் ஆல்பம் வெளியீட்டின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

0

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ராஜா இயக்கத்தில், பலராம் ஜெ. பாலாஜி நடிப்பில், ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி குரல்களில் ‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ இசை ஆல்பம் உருவாகியுள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

ஒளிப்பதிவாளர் இளையராஜா, “தயாரிப்பாளர் பாரதி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி” என்றார்.

எடிட்டர் ராம் கோபி, ” வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ராஜா மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்தாலே அந்தப் பாடல் ஹிட். இதில் அவர் நடித்தும் இருக்கிறார். நிச்சயம் இந்தப் பாடல் ஹிட் தான்”.

பாடலாசிரியர் ஜெயந்தி, ” இயக்குநர், தயாரிப்பாளர் என எல்லோருக்கும் பிடித்த பின்பு தான் பாடல் இறுதியானது. அதேபோல, உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்”.

கலை இயக்குநர் சம்பத் திலக், “வாய்ப்பளித்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி”.

வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் கிரியேட்டிவ் ஹெட், அசோக் அண்ணாமலை, “இயக்குநர் ராஜாவின் ஐடியா இது. சிறப்பாக எடுத்துள்ளார். எல்லோருக்கும் நிச்சயம் பிடிக்கும். வாழ்த்துக்கள்”.

நடன இயக்குநர் தினேஷ், “பாடல் சிறப்பாக வந்துள்ளது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

இசையமைப்பாளர் அஸ்வமித்ரா, “வீடியோ, இசை எல்லாமே நன்றாக வந்திருக்கிறது. நன்றி”

இயக்குநர் ராஜா பத்மநாபன், ” வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி. தினேஷ் மாஸ்டர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என குழுவினர் அனைவருக்கும் நன்றி. இது கடந்த வருடம் டிசம்பர் மாதத்திலேயே ஷூட் செய்து விட்டோம். இன்றைய சூழலுக்கும் அது சரியாக பொருந்தி போகிறது. என்னுடைய முதல் பாடலை மக்களிடம் கொண்டு போய் ஊடகங்கள் சேர்க்க வேண்டும்” என்றார்.

இயக்குநர் சரண், “சமீபத்தில் ரீரிலீஸ் ஆன என்னுடைய ‘அமர்க்களம்’ படத்தின் தயாரிப்பாளர் வெங்கடேஸ்வரா தான். அந்த நியாபகம் எனக்கு வந்துவிட்டது. இந்த பாடல் பார்த்ததும் எனக்கு இயக்குநரிடம் ஒரே ஒரு கேள்வி தான் கேட்க வேண்டும். இரண்டரை மணி நேர படத்தில் ஒரு பாடல் தான் காட்டி இருக்கிறீர்கள். முழு படம் எங்கே? அது எப்போது எடுக்க போகிறீர்கள்? ஒட்டுமொத்த குழுவினரிடமும் ஒரு பாசிடிவ் வைப் இருக்கிறது. இந்த ஒரு பாடலை வைத்து மட்டுமே நீங்கள் அதை ஒரு படமாக எடுக்கலாம். சரிகம சாதாரணமாக ஒரு பாடலை தேர்வு செய்து தங்கள் தளத்தில் வெளியிடாது. பல செக் லிஸ்ட் அதற்கு உண்டு. அதை எல்லாம் நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்கள் என்றால் அங்கேயே வெற்றி பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம். கமர்ஷியலாக ஒரு பாடலை வெகுஜன மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு தினேஷ் மாஸ்டர் மெனக்கெடுவார். என்னுடைய சீனா தானா, தெற்கு சீமையிலே போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுவதற்கு காரணம் தினேஷ் மாஸ்டர் உடைய நடன அமைப்புதான். இந்த பாடலையும் அவர் சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார். ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி குரலும், இசையும் நன்றாக உள்ளது. இரண்டு நாட்களில் இந்த பாடலை எடுத்திருக்கிறார்கள். ஆனால், ஏழு நாட்கள் செலவு செய்து நேர்த்தியாக எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இந்த பாடல் வந்திருக்கிறது. குழுவினருக்கு வாழ்த்துகள்! சினிமாத்துறையில் இருந்து இன்று முதல்வர் ஆகியிருக்கும் விஜய் அவர்களுக்கும் வாழ்த்துகள் “.

இயக்குநர் பேரரசு, “பாடலில் நடித்துள்ள பாலாஜிக்கு கதாநாயகன் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் உண்டு. எல்லா ஹீரோவுக்கும் பிடிக்கும் ஒரே டான்ஸ் மாஸ்டர் தினேஷ் மாஸ்டர்தான். நடிகர் விஜய் அவர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்றாலும் ஓகே சொல்லி விடுவார். ஆனால், முதல்முறையாக ‘சிவகாசி’ படத்தில் அவர் பரிந்துரை செய்த ஒரே நபர் தினேஷ் மாஸ்டர் தான். ‘கோடம்பாக்கம் ஏரியா…’ பாடலுக்கு விஜய்யுடன் ஆட வைக்க சிம்ரன், ஜோதிகா முயற்சி செய்து பிறகு நயன்தாராவை ஆட வைத்தோம். நடனத்திற்கு நயன்தாராவுக்கு இரண்டு நாட்கள் ரிகர்சல் பார்த்தோம். அன்று தினேஷ் மாஸ்டர் கோரியோகிராஃபிக்கு விஜயும் நயன்தாராவும் மட்டும்தான் நடனம் ஆடினார்கள். ஆனால், இன்று ரீல்ஸில் நிறைய பேர் அந்தப் பாடலுக்கு நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பாடலின் நாயகன் பாலாஜி, விஜயின் தீவிர ரசிகர். நம் தமிழக திரைத்துறையில் இருந்து விஜய் சார் முதலமைச்சர் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் திரைத்துறையில் இருந்து முதலமைச்சராக விஜய் வந்திருக்கிறார். அது நமக்கு பெருமையான விஷயம். இன்று சினிமாவில் நாம் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம். அதற்கெல்லாம் விடிவு காலமாக விஜய் சார் ஆட்சி அமையும். தமிழ்நாடு மாநில அரசு விருதுகள் காலம் தாழ்த்திக் கொடுக்காமல் படம் வெளியான அடுத்த வருடமே கொடுத்தால் அது விருது பெறுபவர்களுக்கும் புத்துணர்ச்சியாக அமையும். அரசியல் பணிகளில் இருந்தாலும் எம்ஜிஆர், கருணாநிதி இவர்களுக்கு சினிமா துறை மீது தனி பாசமும் அக்கறையும் உண்டு. எந்த பிரச்சனை என்றாலும் அதைக் கேட்டறிந்து அதற்கு ஒரு தீர்வு எட்டினார்கள். அதன் பிறகு வந்தவர்கள் சினிமாவை கைவிட்டு விட்டார்கள். அதனால் தான் இந்த விருதுகள் எல்லாம் தாமதமாக கிடைத்தது. அது போல் இல்லாமல் எம்ஜிஆர், கலைஞர் போல மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களும் சினிமா துறை மீது அக்கறை கொண்டு எங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்ட வேண்டும்” என்றார்.

இயக்குநர் எழில், “படம் எடுத்து மக்களிடம் சென்றடைவதற்கு முன்பாக இப்படி ஒரு ஆல்பம் மூலம் ஹீரோ, இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் என அனைவரும் மக்களிடம் சென்றடைவது நல்ல விஷயம். இது புத்திசாலித்தனமான நகர்வும் கூட! பாடல் தானே என்று ஏனோ தானோ என செய்யாமல் சிறந்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரையும் இதில் பணியாற்ற வைத்து நேர்தியாக எடுத்து இருக்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்”.

இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், “முழு படத்திலிருந்து ஒரு பாடலை பார்க்கும் திருப்தி இதில் கிடைத்தது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துகள். இயக்குநர் பேரரசு குறிப்பிட்டது போல தமிழ் திரையுலகம் பல சவால்களை சந்தித்து கொண்டிருக்கிறது. இன்று சட்டப்பேரவையில் பெரும்பான்மையின் நிரூபித்த முதல்வர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நிறைய ஹீரோக்கள் முயற்சி செய்து முடியாததை முதல் முயற்சியிலேயே சாதித்த விஜய்க்கு வாழ்த்துக்கள். எம்ஜிஆருக்கு அடுத்து விஜய்தான். ஒருவர் தான் எடுத்த முயற்சியில் எந்த அளவுக்கு வலுவாக இருக்கிறாரோ அந்த அளவுக்கு தான் சினிமாவிலோ அரசியலிலோ ஜெயிப்பார். வயது, வேகம், விவேகம் என அனைத்தும் விஜய்யிடம் இருக்கிறது. அதனால் இன்னும் இரண்டு தலைமுறைக்கு அவர்தான் முதல்வராக இருப்பார். திரைத்துறைக்கு விருதுகள் கொடுப்பதை காட்டிலும் மக்கள் நலனை முன்னிறுத்தி தான் அவர் செயல்படுவார். நல்ல படங்கள் கொடுக்கும் இயக்குநர்கள் குறைந்து விட்டார்கள். அவர்களை சரியாக பயன்படுத்த தயாரிப்பாளர்களும் நடிகர்களும் தவறி விட்டார்கள். தமிழ் திரையுலகை காப்பதில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். மற்றபடி, இந்தப் பாடல் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

நடிகர் பலராம் ஜெ பாலாஜி, “கல்லூரி படிக்கும் போது இருந்தே சினிமா துறை மீது எனக்கு ஆர்வம் இருந்தது. அப்பாவும் எனக்கு ஆதரவு கொடுப்பதாக சொன்னார். ஆனால் 2014 இல் அவரது எதிர்பாராத மறைவு காரணமாக குடும்ப தொழிலான ஜுவல்லரி கடை பிசினஸை எடுத்து செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். சில வருடங்கள் கழித்து நமக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. குடும்பத்தினர் சம்மதத்தோடு திரைத்துறையில் வாய்ப்புகள் தேட ஆரம்பித்தேன். சின்ன சின்ன வீடியோக்கள் செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது நண்பர்கள்தான் உனக்கு என ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என உத்வேகம் கொடுத்தார்கள். என்னுடைய முதல் பாடல் 2025 இல் வெளியானது. பிறகு நண்பர் ஒருவர் மூலமாக ராஜா சார் அறிமுகம் கிடைத்தது. எடுத்ததுமே ஹீரோவாக படம் செய்யாமல், நமக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டு பின்பு படம் செய்யலாம் என ராஜா சாரிடம் சொன்னேன். அவரும் சம்மதம் சொன்னார். அப்படி உருவானதுதான் சைலன்ட் இன்ஃப்ளூயன்சர். சிறுவயதிலிருந்தே என் தந்தைக்கு அடுத்து நான் ரசித்து பார்த்து, ரோல் மாடலாக வைத்திருப்பது தளபதி, இன்றைய முதல்வர் விஜய் சாரை தான். தினேஷ் மாஸ்டர், ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி மற்றும் குழுவினர் அனைவருக்கும் நன்றி. பாடல் வெளியாகிவிட்டது. உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை” என்றார்.

வழக்கறிஞராக தீர்க்கமான பார்வையுடன் மிரட்டும் கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் “சத்தியவான் சாவித்திரி” ஃபர்ஸ்ட் லுக் !!

0

Zee studios & Drumsticks Productions தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிக்கும் “சத்தியவான் சாவித்திரி” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

Zee studios & Drumsticks Productions சார்பில், வெடிக்காரன்பட்டி S சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ள “சத்தியவான் சாவித்திரி” படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக், அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

வக்கீல் கூட்டத்திற்கு நடுவே சிவப்பு உடையில், தீர்க்கமான பார்வையுடன் திரும்பி பார்க்கும் கீர்த்தி சுரேஷ் கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஒரு சந்தோசமான சராசரி பெண்ணாக வாழும் கீர்த்தி, அவரது சீனீயர் ஒரு வழக்கில் தவறான பக்கம் வாதாடும் போது, அதை அவருக்கு உணர்த்த முற்படுகிறாள். ஆனால் அப்போது தான் சீனியரின் அசல் முகம் வெளிப்படுகிறது. அந்த வழக்கு கீர்த்தியின் வாழ்வை புரட்டி போடும் விதமாக இருக்கிறது. அதிலிருந்து அவர் மீண்டாரா என்பது தான் இப்படத்தின் கதை.

ஒரு வழக்கை மையமாக வைத்து, திரில்லர் பாணியில் அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன், அனைவரும் ரசிக்கும் வண்ணம், ஒரு ஜனரஞ்சக படைப்பாக இப்படத்தை உருவாக்குகி வருகிறார் அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய்.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் எதிர் சீனியர் வழக்கறிஞராக மிஷ்கின் இணைந்து நடிக்கிறார். இவர்களுடன் ஹார்ட்பீட் சாருகேஷ், பாலசரவணன், மதுசூதனன், R சுந்தர்ராஜன், ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா, மாலா பார்வதி, தீபா, A.வெங்கடேஷ், ராஜா ராணி பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தொழில்நுட்பக் குழு விபரம்
தயாரிப்பு – Zee studios & Drumsticks Productions
தயாரிப்பாளர்கள் – வெடிக்காரன்பட்டி S சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால்
இணை தயாரிப்பாளர்கள் – S வைஷ்ணவி விவேக்சந்தர் மற்றும் வினோத் CJ
எழுத்தாளர் – இயக்குனர்:
பிரவீன் S விஜய்
ஓளிப்பதிவு : அருள் வின்சென்ட்
இசை: சாம் C S
எடிட்டர்: பிரசன்னா G.K
கலை இயக்குனர்: பிரேம் கருந்தமலை, AM ஆனந்த்ராஜ்
ஆடை வடிவமைப்பாளர்: க்வாசய்
கீர்த்தி ஆடை வடிவமைப்பு : ஸ்ருதி மஞ்சரி
பாடல்கள் – மோகன்ராஜன், கார்த்திக் நேத்தா, உமா தேவி
விளம்பர வடிவமைப்புகள் : தினேஷ் அசோக்
நிர்வாக மேலாளர் : மணி தாமோதரன்
மக்கள் தொடர்பு : சதீஷ் AIM

Director Pandiraaj’s Thriller Comedy Drama “Parimala and Co” First Look Released!!

0

The first look of “Parimala and Co”, a thriller comedy drama directed by Pandiraaj, has been officially released and has received a positive response from fans.

Known for consistently delivering family-friendly entertainers in Tamil cinema, Pandiraaj presents his 12th film after the success of Thalaivan Thalaivi. With his signature style of experimenting in every project, he has now crafted a fresh narrative by blending thriller and comedy elements, making it an engaging family entertainer.

The story revolves around a unique family and the unusual incidents they encounter. Beginning in Chennai and traveling through Coimbatore to Palakkad, the film is designed to attract audiences with its mix of suspense and humor.

The first look has created curiosity among fans, highlighting the distinctive appearances and emotional tones of the characters.

Jayaram and Urvasi play the lead roles, with Santosh Sobhan appearing in a key role, paired opposite Sanjana Krishnamoorthy. Another romantic pair includes Sandy and Ananthika Sanilkumar.

Popular comedian Yogi Babu, who impressed audiences in Thalaivan Thalaivi, returns in a full-length role in this film. Filmmaker-actor Mysskin appears in a completely different role as a police officer. Actors Singampuli and Bucks aka Bagavathi Perumal, along with several other notable performers, also play important roles.

With shooting completed, the film is currently in the final stages of post-production and is gearing up for a theatrical release soon.

“Parimala and Co” is produced by Lyca Productions (Subaskaran), in association with Tamilkumaran Productions Pvt Ltd and Pasanga Productions. Cinematography is handled by George C. Williams ISC, while Foxn makes his debut as the music composer.

Blending thriller and comedy elements, “Parimala and Co” is expected to offer a fresh and entertaining cinematic experience for audiences.

Movie Credits :

Written & Directed by Pandiraaj
Produced by
Subaskaran (Lyca Productions)
Tamilkumaran Productions Pvt Ltd
Pasanga Productions
Director of Photography : George C. Williams ISC
Music : Foxn
Editor : Pradeep E Ragav
Art Director :T. Ramalingam
Stunt Master : Kalai Kingson
Choreography : Sandy, Baba Bhaskar
Music Supervisor : Santhosh Kumar
Costume Designer : Poornima Ramaswamy
Costume : K. Nataraj
Audiography : M.R. Rajakrishnan
VFX Producer : B.R. Venkatesh
DI : Knack Studios
Colourist : Prasath Somasekar
Publicity Designer : ADFX Studio
PRO : Sathish (AIM)
Sound Effects : Shreyas Bhat, Arunprasad
Production Controller : Ramadoss & Vijay. C
Subtitles : Rekhs
Audio Label : Think Music

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

தமிழ் திரையுலகில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

“தலைவன் தலைவி” படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 12வது படைப்பாக, முற்றிலும் புதுமையான களத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ். ஒவ்வொரு படத்திலும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் அவரது ஸ்டைலில், இந்த முறை திரில்லர் மற்றும் நகைச்சுவையை இணைத்து குடும்பங்கள் ரசிக்கும் வகையில் “பரிமளா & கோ” உருவாகியுள்ளது.

இந்த படத்தின் கதை, ஒரு வித்தியாசமான குடும்பத்தைச் சுற்றி நகர்கிறது. அந்த குடும்பத்தில் உள்ள மனிதர்களின் தனித்துவமான குணாதிசயங்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் அபூர்வமான சம்பவங்கள் கதையின் மையமாக அமைந்துள்ளன. சென்னை நகரத்தைத் தொடக்கமாகக் கொண்டு கோயம்புத்தூர் மற்றும் பாலக்காடு வரை பயணிக்கும் இந்த கதை, திரில்லர் பாணியிலும் நகைச்சுவை கலந்த காட்சிகளாலும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானவுடன், அதில் இடம்பெற்றுள்ள கதாப்பாத்திரங்களின் தனித்துவமான தோற்றம் மற்றும் மனநிலையை வெளிப்படுத்தும் விதம் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயராம் மற்றும் ஊர்வசி முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடிக்க, இவர்களுடன், இளம் நடிகர் சந்தோஷ் சோபன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இணைந்துள்ளார். மற்றொரு காதல் ஜோடியாக சாண்டி, அனந்திகா சனில்குமார் இணைந்து நடித்துள்ளனர்.

மேலும், தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த யோகிபாபு தலைவன் தலைவி பட வெற்றிக்குப் பிறகு, இப்படத்தில் முக்கியமான முழுநீள கதாப்பாத்திரத்தில் மீண்டும் இணைந்துள்ளார். இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், முற்றிலும் மாறுபட்ட காவல் அதிகாரி வேடத்தில் இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் தோன்றுகிறார். மேலும்
வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் சிங்கம்புலி மற்றும் பக்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

“பரிமளா & கோ” திரைப்படம் Lyca Productions நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில், Tamilkumaran Productions Pvt Ltd மற்றும் Pasanga Productions இணைந்து தயாரிக்கின்றன. ஒளிப்பதிவை ஜார்ஜ் C. வில்லியம்ஸ் மேற்கொண்டுள்ள நிலையில், இசையமைப்பாளராக Foxn அறிமுகமாகியுள்ளார்.

திரில்லர் மற்றும் நகைச்சுவை கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள “பரிமளா & கோ”, ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தொழில் நுட்ப குழு விபரம்

தயாரிப்பு : Lyca Productions, Tamilkumaran Productions Pvt Ltd, Pasanga Productions
கதை, திரைக்கதை, இயக்கம் : பாண்டிராஜ்
ஒளிப்பதிவு : ஜார்ஜ் C. வில்லியம்ஸ் ISC
இசை : Foxn
எடிட்டர் : பிரதீப் E. ராகவ்
கலை இயக்குனர் : T. ராமலிங்கம்
ஸ்டண்ட் : கலாய் கிங்ஸன்
நடன அமைப்பு : சாண்டி, பாபா பாஸ்கர்
மியூசிக் சூப்பர்வைசர் : சந்தோஷ் குமார்
ஆடை வடிவமைப்பாளர் : பூர்ணிமா ராமசாமி
ஆடை : K. நடராஜ்
ஒலிப்பதிவு : M.R. ராஜாகிருஷ்ணன்
சவுண்ட் எஃபெக்ட்ஸ் : ஷ்ரேயாஸ் பத், அருண் பிரசாத்
VFX தயாரிப்பு : B.R. வெங்கடேஷ்
DI : Knack Studios
கலரிஸ்ட் : பிரசாத் சோமசேகர்
விளம்பர வடிவமைப்பு : ADFX Studio
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)
தயாரிப்பு மேற்பார்வை : ராமதாஸ் & விஜய் C
சப்டைட்டில்ஸ் : ரேக்ஸ்

Tamil Zee5 Announces Gritty Rural Crime Series ‘WARRANT’ on May 22 Featuring Director Prashant Pandiyaraj as lead actor in His Acting Debut –

0

India, 6th May 2026: Tamil Zee5 continues to strengthen its slate of bold, rooted, and uncompromising storytelling with the upcoming original series ‘Warrant’, set to premiere from May 22, 2026. The series stars Prashant Pandiyaraj in the lead role, marking a significant milestone as the acclaimed director of the cult-hit series Vilangu and film Maaman makes his debut as a lead actor. Actor and Musician GV Kumar launches the first look of the series.

Link – https://youtu.be/z58t_iTcAz0?si=ObdXXelrafjs82G-

Produced by Sivan Pictures and S Studios, directed by debutant Vignesh Natarajan, with music composed by Sam C.S. The series is showrun and cast by Prasanth Pandiyaraj. Alongside, the series features a powerful ensemble cast including Balaji Sakthivel, Kousalya, Kaali Venkat, Namritha MV, Arul Jothi, Arul Dass, and Chaya Devi, among others, bringing depth and credibility to its layered narrative.

Warrant delves into the overlooked world of routine police cases that slowly spiral into danger. It follows Koattai Karuppusamy, a second-grade constable whose quiet humiliation and fear begin to shape how he enforces the law, raising unsettling questions about power, authority, and when justice starts to blur.

Speaking about his decision to debut as an actor through Warrant, Prashant Pandiyaraj shared, “Koattai Karuppusamy is not a hero written to be admired. He is uncomfortable, fragile, and deeply human. That honesty scared me, and that’s exactly why I chose to play him. As a creator, I’ve always been drawn to truth over spectacle. Acting in Warrant pushed me to confront emotions I usually explore only behind the camera. Tamil Zee5 gave this story the space to breathe, to be raw and unapologetic. I hope audiences don’t just watch Koattai Karuppusamy’s journey, but feel challenged, and moved by it.”

Stay tuned to watch ‘Warrant’ on Tamil Zee5 from May 22.

About ZEE5:
ZEE5 is Bharat’s largest homegrown video streaming platform and the multilingual storyteller for millions of entertainment seekers. ZEE5 stems from the stable of ZEE Entertainment Enterprises Limited (ZEEL), a Global Content Powerhouse. An undisputed choice of video on demand platform for consumers, it offers an expansive and diverse library comprising 4,071+ films, 1,800+ TV shows, 422+ web originals, 4,492+ music videos, and over 1.35 lakh hours of on-demand content. The content is now offered to our varied audience through 7 personalized and hyper-local subscription packs spread across 12 languages – Hindi, Tamil, Telugu, Bengali, Malayalam, Kannada, Marathi, English, Oriya, Bhojpuri, Gujarati, and Punjabi. This encompasses our large repertoire of Originals, Indian and International Movies, TV Shows, Kids shows, News and Live TV. A strong deep-tech stack, stemming from partnerships with global tech disruptors, enables ZEE5 to deliver a seamless experience across multiple devices, ecosystems, and operating systems. Follow ZEE5 on Facebook, Instagram, LinkedIn and X.

“‘வாரண்ட்’ – மே 22ல் வெளியாகும் ZEE5 தமிழின் அதிரடி கிராமப்புற குற்றக் கதை”

முதன்மை கதாபாத்திரத்தில் விலங்கு, மாமன் பட இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் நடிகராக அறிமுகம்

இந்தியா, XX மே 2026: தமிழ் ZEE5 தனது தைரியமான, வேரூன்றிய, சமரசமற்ற கதை சொல்லல் வரிசையை மேலும் வலுப்படுத்திக் கொண்டு, மே 22, 2026 முதல் ஒளிபரப்பாக உள்ள புதிய ஒரிஜினல் தொடர் ‘வாரண்ட்’-ஐ அறிவிக்கிறது. இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமாக பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கிறார். ‘விலங்கு’ என்ற கல்ட் ஹிட் தொடரையும் ‘மாமன்’ திரைப்படத்தையும் இயக்கிய இவர், இந்த தொடரில் நடிப்பதின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

சிவன் பிக்சர்ஸ் மற்றும் எஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குனர் விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் உருவாகும் இந்த தொடருக்கு சாம் C.S. இசையமைத்துள்ளார். இந்த தொடரின் ஷோ ரன்னராகவும் நடிகர் தேர்வையும் பிரசாந்த் பாண்டியராஜ் மேற்கொண்டுள்ளார். மேலும், பாலாஜி சக்திவேல், கௌசல்யா, காளி வெங்கட், நம்ரிதா MV, அருள் ஜோதி, அருள் தாஸ், சாயா தேவி உள்ளிட்ட பலர் இணைந்து, கதைக்கு ஆழத்தையும் நம்பகத்தன்மையையும் வழங்குகின்றனர்.

‘வாரண்ட்’ தொடர், அன்றாட போலீஸ் வழக்குகளின் கவனிக்கப்படாத உலகை ஆராய்கிறது, அவை மெதுவாக ஆபத்தான நிலைக்கு மாறும் விதத்தையும் காட்டுகிறது. இந்தக் கதை, கோட்டை கருப்புசாமி என்ற இரண்டாம் நிலை காவலரை மையமாகக் கொண்டு நகர்கிறது. அவரின் அமைதியான அவமானங்களும் பயமும், அவர் சட்டத்தை எவ்வாறு அமல்படுத்துகிறார் என்பதைக் கட்டமைக்கின்றன. இதன் மூலம் அதிகாரம், ஆட்சித்தன்மை மற்றும் நீதி எப்போது மங்குகிறது என்பதைக் குறித்து கேள்விகளை எழுப்புகிறது.

இந்த தொடரின் மூலம் நடிகராக அறிமுகமாகும் பிரசாந்த் பாண்டியராஜ் கூறியதாவது:
“கோட்டை கருப்புசாமி என்பது பாராட்டப்பட வேண்டிய ஹீரோ அல்ல. அவர் சிரமமானவர், நெகிழ்வானவர், மிகுந்த மனிதத் தன்மை கொண்டவர். அந்த நேர்மை என்னை பயமுறுத்தியது, அதனால்தான் நான் அந்தக் கதாபாத்திரத்தை தேர்வு செய்தேன். ஒரு படைப்பாளியாக, வெளிப்படையான காட்சிகளுக்கு பதிலாக உண்மையை நான் எப்போதும் விரும்புகிறேன். ‘வாரண்ட்’ தொடரில் நடித்தது, நான் பொதுவாக கேமராவின் பின்னால் மட்டும் ஆராயும் உணர்வுகளை நேரடியாக எதிர்கொள்ள வைத்தது. தமிழ் ZEE5 இந்தக் கதைக்கு அதன் இயல்பான, நேர்மையான வடிவத்தில் வெளிப்பட இடமளித்தது. பார்வையாளர்கள் கோட்டை கருப்புசாமியின் பயணத்தை வெறும் பார்ப்பதற்காக அல்ல, அதை உணரவும், சிந்திக்கவும் செய்வார்கள் என்று நம்புகிறேன்.”

மே 22 முதல் தமிழ் ZEE5-ல் ‘வாரண்ட்’ தொடரைப் பார்க்க தயாராக இருங்கள்.

ZEE5 பற்றி:

ZEE5 என்பது இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் கோடிக்கணக்கான பொழுதுபோக்கு ரசிகர்களுக்கான பன்மொழிக் கதை சொல்லியாகும். இது ZEE என்டர்டெயின்மெண்ட் என்டர்பிரைசஸ் லிமிடெட் (ZEEL) நிறுவனத்தின் ஒரு பகுதி ஆகும். இது 4,071+ திரைப்படங்கள், 1,800+ தொலைக்காட்சி தொடர்கள், 422+ வலை ஒரிஜினல்கள், 4,492+ இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரத்திற்கும் மேற்பட்ட ஆன்-டிமாண்ட் உள்ளடக்கங்களை கொண்ட விரிவான தொகுப்பை வழங்குகிறது.

இந்த உள்ளடக்கம் 12 மொழிகளில் 7 தனிப்பயன் மற்றும் ஹைபர்-லோகல் சந்தா திட்டங்களின் மூலம் வழங்கப்படுகிறது – இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம், ஓடியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி. இதில் ஒரிஜினல்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், குழந்தைகள் நிகழ்ச்சிகள், செய்திகள் மற்றும் நேரலை டிவி ஆகியவை அடங்கும்.

உலகளாவிய தொழில்நுட்ப கூட்டாண்மைகளின் மூலம் உருவான வலுவான டீப்-டெக் அமைப்பு, பல சாதனங்கள், எகோசிஸ்டம்கள் மற்றும் இயங்குதளங்களில் ZEE5-ஐ சீரான அனுபவத்துடன் வழங்க உதவுகிறது. Facebook, Instagram, LinkedIn மற்றும் X-ல் ZEE5-ஐ பின்தொடருங்கள்.

Mega Power Star Ram Charan, Buchi Babu Sana, Venkata Satish Kilaru, Vriddhi Cinemas, Mythri Movie Makers, Sukumar Writings’ Peddi Shoot Wrapped Up, Releasing Worldwide On June 4

0

Mega Power Star Ram Charan’s upcoming rural action drama Peddi, directed by Buchi Babu Sana, wrapped up its entire shooting part. Backed by producer Venkata Satish Kilaru under Vriddhi Cinemas, and presented by Mythri Movie Makers and Sukumar Writings, Peddi is being mounted on a massive scale. The makers have now surprised fans with a significant update. The movie will arrive in cinemas worldwide on June 4th.

The release date poster erupts with raw fury as Ram Charan stands drenched in blood, sweat, and dust, his face lifted in a primal roar. His tangled hair, wounded visage, and tattered shirt paint a vivid portrait of a man forged in chaos. The entire design radiates unfiltered aggression, making it clear that Peddi is gearing up for an explosive big-screen arrival.

The early-June slot places Peddi perfectly within the tail end of summer holidays, ensuring solid footfalls before the academic season begins. Trade circles are already viewing this date as a smart strategic move that gives the film a strong nationwide runway.

The team has completed filming a lavish special number composed by AR Rahman on an extravagant set in Hyderabad, officially wrapping up the production. This vibrant song is expected to be one of Peddi’s standout highlights. Meanwhile, post-production work has already been progressing swiftly in parallel.

Ram Charan went all out for the film, which was evident in the first two glimpses that showcased him in two completely different makeovers. He has also pushed himself further in the songs, delivering standout dance performances that elevate the film’s appeal even more.

The film boasts an impressive ensemble cast, with Janhvi Kapoor playing the female lead. Seasoned actors Shiva Rajkumar, Jagapathi Babu, Divyenndu, and Boman Irani are set to deliver powerful performances in pivotal roles. Technically, the film is fortified by top-tier talent. R. Rathnavelu handles cinematography, Navin Nooli oversees editing, and Avinash Kolla manages production design.

Positioned as a rural sports drama infused with intense action and strong emotions, Peddi is gearing up for a grand pan-India release in all South Indian languages along with Hindi.

Producer Venkata Satish Kilaru and his team are planning an aggressive promotional campaign across the country to set the bar even higher.

Cast: Mega Power Star Ram Charan, Janhvi Kapoor, Shiva Rajkumar, Jagapathi Babu, Divyendu Sharma, Boman Irani

Technical Crew:
Writer, Director: Buchi Babu Sana
Presents: Mythri Movie Makers, Sukumar Writings
Banner: Vriddhi Cinemas
Producer: Venkata Satish Kilaru
Co producer: Ishan Saksena
Music Director: AR Rahman
DOP: R Rathnavelu
Production Design: Avinash Kolla
Editor: Navin Nooli
Executive Producer: V. Y. Praveen Kumar
Marketing: First Show
PRO: Yuvraaj

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சுகுமார் ரைட்டிங்ஸ் இணையும் “பெத்தி” படப்பிடிப்பு நிறைவு; ஜூன் 4 உலகமெங்கும் வெளியாகிறது !

மெகா பவர் ஸ்டார்  ராம் சரண் நடிக்கும் “பெத்தி” ஜூன் 4 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது !

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சனா இயக்கத்தில், உருவாகி வரும் கிராமத்து ஆக்ஷன் டிராமா “பெத்தி” (Peddi), படத்தின் முழு படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளது.

வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில், விருத்தி சினிமாஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகும் இப்படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ்  நிறுவனங்கள் வழங்குகிறது. மிகப்பெரிய அளவில் உருவாகி வரும் இப்படம் குறித்து தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட்டை வழங்கியுள்ளனர். இப்படம் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ரத்தம், வியர்வை மற்றும் தூசியில் நனைந்த நிலையில் ராம் சரண், முகத்தை மேலே தூக்கி ஒரு இயல்பான கோபக் குரலில் கத்தும் தோற்றத்தில் தோன்றும், அசத்தலான ரிலீஸ் தேதி போஸ்டர் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.  சீரற்ற முடி, காயமடைந்த முகம், கிழிந்த சட்டை ஆகியவை குழப்பத்தில் உருவான மனிதனின் வலிமையான உருவத்தை வெளிப்படுத்துகின்றன. போஸ்டர் டிசைன் எந்தத் தணிக்கையும் இல்லாத தாக்கத்தைக் வெளிப்படுத்துகிறது. “பெத்தி” ஒரு வெடிக்கும் திரையரங்கு அனுபவமாக உருவாகி வருவது இதில் தெளிவாகிறது.

ஜூன் தொடக்கத்தில் வெளியாகும் இந்தப் படம், கோடை விடுமுறையின் இறுதிக் கட்டத்தில் சரியாக அமைய இருப்பதால், கல்வி ஆண்டு தொடங்கும் முன் நல்ல திரையரங்கு வெளியீட்டை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக வட்டாரங்களும் இந்த தேதியை புத்திசாலித்தனமான ஒரு திட்டமிடலாக பார்க்கின்றன.

ஹைதராபாத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான செட்டில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான ஒரு சிறப்பு பாடல் படமாக்கப்பட்டு, அதனுடன் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. இந்த உற்சாகமான பாடல் “பெத்தி” படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.

இந்த படத்திற்காக ராம் சரண் தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளார். முதல் இரண்டு க்ளிம்ப்ஸ்களில் அவர் முற்றிலும் வேறுபட்ட இரண்டு கெட்டப்புகளில் தோன்றியது இதற்கு சான்றாகும். மேலும், பாடல்களிலும் தனது நடனத்தால் படத்தின் மீதான ஈர்ப்பை மேலும் உயர்த்தியுள்ளார்.

இந்த படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா மற்றும் பொமன் இராணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் வலுவான நடிப்பை வழங்கவுள்ளனர். தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த படம் உயர்தரக் கலைஞர்களால் வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஒளிப்பதிவை ஆர். ரத்னவேலு மேற்கொள்கிறார்; எடிட்டிங்கை நவீன் நூலி கவனிக்கிறார்; தயாரிப்பு வடிவமைப்பை அவினாஷ் கொல்லா மேற்கொள்கிறார்.

கிராமத்து விளையாட்டு பின்னணியுடன், தீவிரமான ஆக்ஷன் மற்றும் வலுவான உணர்ச்சிகளை இணைக்கும் “பெத்தி”, தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மற்றும் இந்தியிலும் பான்-இந்தியா அளவில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு மற்றும் அவரது குழு, இந்தியா முழுவதும் தீவிரமான புரமோஷன் திட்டங்களை மேற்கொண்டு, படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.

நடிகர்கள் :
மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா,பொமன் இராணி

தொழில்நுட்பக் குழு :
இயக்கம், திரைக்கதை: புச்சி பாபு சனா
வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ்
தயாரிப்பு நிறுவனம்: விருத்தி சினிமாஸ்
தயாரிப்பாளர்: வெங்கட சதீஷ் கிலாரு
இணை தயாரிப்பாளர்: ஈஷான் சக்சேனா
இசை: A.R. ரஹ்மான்
ஒளிப்பதிவு: R. ரத்னவேலு
தயாரிப்பு வடிவமைப்பு  : அவினாஷ் கொல்லா
படத்தொகுப்பு: நவீன் நூலி
நிர்வாக தயாரிப்பாளர்: V.Y. பிரவீன் குமார்
மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ
மக்கள் தொடர்பு : யுவராஜ்.

Nani, SJ Suryah, Aishwarya Rajesh, Sunainaa, Samyuktha Vishwanathan, and Others Amp Up Excitement for Prime Video’s Tamil Original Series Exam

0

Ahead of its May 15 premiere, Prime Video’s Exam has sparked strong industry chatter, with celebrated names sharing their excitement and looking forward to watching the Tamil suspense drama. The trailer has set off a wave of excitement that continues to build, with Nani leading the cheer, praising the series’ ‘excellent ensemble of talented cast’ and spotlighting the powerhouse team behind the show. Vadhandhi: The Fable of Velonie fame SJ Suryah extended his warmest wishes to the entire team, rooting for a ‘roaring success’. Suzhal: The Vortex Season 2 fame Samyuktha Vishwanathan called it ‘another banger’ from Wallwatcher Films, adding she ‘cannottt wait to binge watch’. Inspector Rishi fame Sunainaa shared her excitement saying she ‘can’t wait to catch the show’ while her Inspector Rishi co-star Gabriella Sellus extended her heartfelt wishes to the Prime Video team. Vadhandhi: The Fable of Velonie fame Anagha and Suzhal – The Vortex fame Aishwarya Rajesh have also shared their support for the series, further fueling the growing industry buzz around Exam.

Created by Pushkar and Gayatri, under the banner of Wallwatcher Films, and written and directed by A. Sarkunam, the suspense drama features Dushara Vijayan and Aditi Balan in the lead, with Abbas playing a pivotal role. Exam will stream exclusively on Prime Video in India and over 240 countries and territories worldwide in Tamil, with dubs in Telugu, Hindi, Malayalam, and Kannada, and subtitles in 15 languages, including English.

நானி, எஸ்.ஜே.சூர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ், சுனைனா, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் ப்ரைம் வீடியோவின் தமிழ் ஒரிஜினல் தொடர் “எக்ஸாம்” சீரிஸை பாராட்டி குழுவிற்கு உற்சாகத்தை அதிகரித்துள்ளனர் !!

மே 15 ஆம் தேதி வெளியாகவுள்ள ப்ரைம் வீடியோவின் எக்ஸாம் சீரிஸ், திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பல முன்னணி பிரபலங்கள் இந்த தமிழ் சஸ்பென்ஸ் டிராமாவைப் பற்றி தங்களது உற்சாகத்தையும் பாராட்டுகளையும் பகிர்ந்து வருகின்றனர். இந்த சீரிஸின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகர் நானி இந்த சீரிஸின் திறமையான நடிகர் பட்டாளம் குறித்து பாராட்டி, இதன் பின்னணி குழுவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

“வதந்தி : தி ஃபேபிள் ஆஃப் வெலோனி” மூலம் கவனம் பெற்ற S. J. சூர்யா, முழு குழுவிற்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து, இந்த சீரிஸ் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தியுள்ளார். சுழல் : தி வோர்டெக்ஸ் சீசன் 2 மூலம் பிரபலமான சம்யுக்தா விஸ்வநாதன் ‘Wallwatcher Filmsஇன் மற்றொரு தரமான படைப்பு’ எனக் கூறி, ‘இந்த சீரிஸை binge-watch செய்ய ஆவலாக காத்திருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இன்ஸ்பெக்டர் ரிஷி புகழ் சுனைனா, ‘இந்த சீரிஸை பார்க்க ஆவலாக இருக்கிறேன்’ என்று பகிர்ந்துள்ளார். அதே சீரிஸில் நடித்த கேப்ரியல்லா செல்லஸ், ப்ரைம் வீடியோ குழுவிற்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் “வதந்தி : தி ஃபேபிள் ஆஃப் வெலோனி” மூலம் பிரபலமான அனகா மற்றும் சுழல் : தி வோர்டெக்ஸ் புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் சீரிஸிற்கு தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர். இதனால் எக்ஸாம் சீரிஸ் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோரால் உருவாக்கப்பட்டு, Wallwatcher Films தயாரிப்பில், A. சற்குணம் எழுதி இயக்கியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமாவில் துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அப்பாஸ் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார்.

எக்ஸாம் சீரிஸ் , தமிழ் மொழியில் உருவாகி, தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழி டப்பிங்குகளுடன், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன், இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில், வரும் மே 15 முதல் ப்ரைம் வீடியோ தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.

- Advertisement -

Recent Posts