Tuesday, June 30, 2026
- Advertisement -
Home Blog Page 121

நடிகர் குமரன் தங்கராஜன் நடிக்கும் ‘குமார சம்பவம்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

0

நடிகர் குமரன் தங்கராஜன் நடிக்கும் ‘குமார சம்பவம்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Trailer ▶️ https://youtu.be/cTTlzYh246I

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குமார சம்பவம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இதற்காக நடைபெற்ற நிகழ்வில் தயாரிப்பாளர் கணேஷ் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர்.

நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குமார சம்பவம்’ திரைப்படத்தில் குமரன் தங்கராஜன், பாயல் ராதாகிருஷ்ணா, ஜி.எம். குமார், குமரவேல், பால சரவணன், வினோத் சாகர், லிவிங்ஸ்டன், சிவா அரவிந்த், வினோத் முன்னா, தாரிணி, கவிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படத்தை வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஜி. கணேஷ் தயாரித்திருக்கிறார்.

வரும் 12ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் ஒலி வடிவமைப்பாளர் சரவணன், ‘சரிகம’ ஆனந்த், படத்தொகுப்பாளர் மதன், கலை இயக்குநர் வாசு, ஒளிப்பதிவாளர் ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி, இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி, நடிகர்கள் வினோத் முன்னா, குமரவேல், சிவா அரவிந்த், நடிகைகள் தாரிணி, கவிதா, நாயகன் குமரன் தங்கராஜன், நாயகி பாயல் ராதாகிருஷ்ணா, இயக்குநர் பாலாஜி வேணுகோபால், தயாரிப்பாளர் கே. ஜி. கணேஷ், தயாரிப்பு நிர்வாகிகள் சீனிவாசன், ரவிக்குமார் ஆனந்த் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படத்தொகுப்பாளர் மதன் பேசுகையில், ”இயக்குநர் பாலாஜி வேணுகோபாலுடன் நான் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இது. அவருடைய முதல் படமான ‘லக்கி மேன்’ படத்திலும் பணியாற்றிருந்தேன். அதன் பிறகு என்னை சந்தித்து இப்படத்தின் கதையை சொன்னார். சுவராசியமாக இருந்தது. அவரிடம் இதனை எப்படி திரையில் சொல்ல போகிறீர்கள் எனக் கேட்டேன். அதற்காகத்தான் உன்னிடம் வந்திருக்கிறேன் என்றார். அதற்கு ஏற்ற வகையில் இப்படத்தின் கதையை நேரடியாக விவரிக்காமல், நான்-லீனியர் பாணியில் சொல்லி இருக்கிறோம். இயக்குநர் பாலாஜி தனக்கு என்ன தேவை என்பதில் மிகத் தெளிவாக இருப்பார். அவரை ஒரு விஷயத்தில் சமரசம் செய்வது கடினம், அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். குறிப்பாக ஒலி அமைப்பு தொடர்பான விசயத்தில் அவர் வானொலியில் பணியாற்றிய அனுபவம் காரணமாக துல்லியமாக இருந்தார்.

இந்தப் படத்தில் அனைத்து அம்சங்களும் உள்ளன. நீங்கள் செலவிடும் நேரத்திற்கு தகுதியான பொழுதுபோக்கை வழங்கி இருக்கிறோம். திரையரங்குகளில் படத்தைப் பார்த்து மகிழலாம்.

இந்தப் படத்தில் குமரனின் நடிப்பை பார்த்து அனைவரும் பாராட்டுவார்கள் என உறுதியாக சொல்கிறேன். இயக்குநர் பாலாஜி வேணுகோபாலின் டயலாக்குகள் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளன.

செப்டம்பர் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்திற்கு அனைவரும் வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்,” என்றார்.

நடிகர் சிவா அரவிந்த் பேசுகையில், ”இயக்குநர் பாலாஜி வேணுகோபால் என்னை போன் மூலம் தொடர்பு கொண்டு இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கினார். இதற்காக முதலில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

குமரன் சின்னத்திரை தொடர்களில் நடிப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் பெரிய திரையில் நடிக்கும் போது அவரிடம் இருந்து நுட்பமான நடிப்புத் திறன் வெளிப்படும் போது அவரை வியந்து பார்த்திருக்கிறேன். இவரிடம் இந்தத் திறமைகள் எல்லாம் இருக்கிறதா என ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். நாயகனுக்கு பாடல்கள் மிக முக்கியம். இந்த படத்தில் இடம் பிடித்திருக்கும் இரண்டு பாடல்களிலும் அவர் நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கு நிச்சயமாக பெரிய எதிர்காலம் இருக்கிறது. அவரிடம் ஒரு நடிகருக்கான அனைத்து விஷயங்களை விட அவருக்குள் ஒரு இயக்குநருக்கான அறிவும் இருக்கிறது.

இயக்குநர் பாலாஜியிடம் மறைந்த கிரேசி மோகனின் ‘ டச் ‘இருக்கிறது. இதனை பல தருணங்களில் அவருடைய உரையாடல்கள் மூலம் தெரிந்து கொண்டேன். இந்த படம் பார்த்த பிறகு நீங்களும் அதை உணர்வீர்கள். இந்த திரைப்படத்தை வெற்றி பெறச் செய்யுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

‘சரிகம’ ஆனந்த் பேசுகையில், ”வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனத் தயாரிப்பாளரான கணேஷிற்கு வாழ்த்துக்கள். அவருடைய தயாரிப்பில் வெளியான ‘யாத்திசை’ திரைப்படத்தின் இசையை சரிகமவில் தான் வெளியிட்டோம். அதைத்தொடர்ந்து தற்போது ‘குமார சம்பவம்’ படத்திற்கும் சரிகம உடன் கை கோர்த்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படத்தின் பாடல்களும் பெரிய அளவில் வெற்றி பெறும்.

நீண்ட கால நண்பரான இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவான ‘குமார சம்பவம்’ படத்தினை காணும் வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படம் ஃபன் ஃபில்டு ஃபேமிலி எண்டர்டெய்னர். ஃபேமிலி ஓரியண்டட் திரைப்படங்களுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் வெளியாகும் இந்த ‘குமார சம்பவம்’ படத்திற்கும் பேராதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இசையமைப்பாளர் அச்சு ராஜாமணியின் இசையில் தமிழிலும், தெலுங்கிலும் ஏராளமான பாடல்கள் வெற்றி வெற்றி இருக்கின்றன. இந்தப் படத்திற்கும் அற்புதமாக இசையமைத்திருக்கிறார். அவருக்கும் என் வாழ்த்துக்கள்.” என்றார்.

நடிகர் குமரவேல் பேசுகையில், ”இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் நான் நடிக்கும் இரண்டாவது படம். இப்படத்தின் கதையை அவர் என்னிடம் சொன்னபோது இந்த படத்தை யார் தயாரிக்கிறார்கள் என அவரிடம் கேட்டேன் அவர் ‘யாத்திசை’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் என்று சொன்னவுடன் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஏனெனில் அந்தத் திரைப்படத்தை நேர்த்தியாக உருவாக்கி அனைத்து தரப்பினரிடமும் கொண்டு சேர்த்து படத்தை பெரிய அளவில் வெற்றி பெறச் செய்தவர்கள் அவர்கள்.

இயக்குநர் பாலாஜி என்னிடம் என்ன சொன்னாரோ, அதை அப்படியே மாற்றாமல் எடுத்திருக்கிறார். கதை என்ன என்று சொல்ல வேண்டும் என்றால் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவருக்கும், அந்த வீட்டின் உரிமையாளருக்கும் இடையேயான பிரச்சனை. இதுதான் கதையின் மையப்புள்ளி. எனக்கான காட்சிகள் அனைத்தும் ஒரே வீட்டில் அமைந்திருந்தாலும், அதனை காட்சி மொழியாக துல்லியமாக விவரித்து இருந்தனர்.

குமரன் நாயகனாக அறிமுகமானாலும் அவருடைய அனைத்து நடிப்பு திறன்களையும் வெளிப்படுத்தினார். அதற்கேற்ற வகையில் இயக்குநர் பாலாஜி வேணுகோபால் வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தார். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து மகிழ்ச்சியுடன் பணியாற்றினோம்.

எளிமையான கதை. அதனை பொழுதுபோக்காகவும், வித்தியாசமான கோணத்திலும் சொல்லி இருக்கிறார்கள். இது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்,” என்றார்.

இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி பேசுகையில், ”இப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி. நான் நடிகர் குமரவேலின் ரசிகன். இந்தப் படத்தில் அவர் நன்றாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

படத்தின் நாயகனான குமரன் ஒரு இன்ட்ரோவர்ட் பெர்சன். அதிகம் பேச மாட்டார். ஆனால் அற்புதமான திறமைசாலி. இந்த படத்திற்குப் பிறகு குமரன் நிச்சயமாக ஸ்டாராக உயர்வார்.

இயக்குநர் பாலாஜி வேணுகோபாலும் நானும் 15 ஆண்டு கால நண்பர்கள். ‘மாலை பொழுதின் மயக்கத்திலே’ படத்திற்கு நான் இசையமைக்கும் போது அந்தப் படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அப்போதிலிருந்து நான் இப்போது வரை இசையமைப்பாளராகவே பணியாற்றி வருகிறேன். ஆனால் பாலாஜி வேணுகோபால் நடிகராக உயர்ந்து, அதன் பிறகு இயக்குநராகி, பாடலாசிரியராகவும் உயர்ந்திருக்கிறார். என் நண்பனின் படத்திற்கு நான் இசை அமைத்திருக்கிறேன் என்ற பெருமிதமே எனக்கு போதும்.

உணவகத்தில் காப்பி சாப்பிட்டுக் கொண்டே இந்த படத்தை பற்றி பேசத் தொடங்கினோம். தற்போது முன்னோட்ட வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறோம். விரைவில் படத்தின் வெற்றி விழாவிலும் சந்திப்போம்.

இந்த படத்தில் இடம்பெறும் அனைத்து பாடல்களையும் இயக்குநர் பாலாஜி வேணுகோபால் தான் எழுதி இருக்கிறார். ஒவ்வொரு பாடலை எழுதும் போதும் மூத்த பாடலாசிரியர்களுக்கு சமர்ப்பணம் என்பது போல் தான் எழுதி இருக்கிறார். இதற்கு அவருக்குள் ஒரு ‘குரு’த்துவம் இருக்க வேண்டும். அது அவரிடம் இருக்கிறது. இந்தப் படத்திற்காக பத்து நாட்களில் பாடல்களை உருவாக்கினோம். பத்து நாட்களில் படத்திற்கான பின்னணி இசையை அமைத்தோம். அந்த அளவிற்கு இயக்குநர் எங்களுக்கு நிறைய சுதந்திரத்தை வழங்கினார்.

இந்தத் திரைப்படம் அனைவருக்கும் பிடிக்கும். திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகை பாயல் ராதாகிருஷ்ணா பேசுகையில், ”இந்த படத்தில் பணியாற்ற தொடங்கும் போது எனக்கு தமிழ் மொழி தெரியாது. ஆனால் இப்போது என்னால் தமிழில் பேச முடியும். இதற்கு முழு ஆதரவளித்த படக் குழுவினருக்கு நன்றி.

வழக்கமான காதல் கதையில் இடம்பெறும் நாயகி போல் அல்லாமல் அழுத்தமான வேடத்தை இயக்குநர் எனக்கு வழங்கியிருக்கிறார். இது நான் தமிழில் அறிமுகமாகும் முதல் திரைப்படம். என்னுடைய அறிமுகம் சரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இந்தப் படத்திற்காக என்னால் பின்னணி பேச முடியவில்லை. ஆனால் எதிர்காலத்தில் நிச்சயமாக தமிழில் பின்னணி பேசுவேன் என்று நம்புகிறேன்.

குமரன் மற்ற தருணங்களில் தான் இன்ட்ரோவர்ட் பெர்சன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் நடிக்கும் போது நேர்த்தியான கலைஞர். அவருடன் இணைந்து பணியாற்றும்போது சௌகரியமாக இருப்பதை உணர்ந்தேன்.

படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் எளிமையாகவும், இனிமையாகவும் பழகுவார். அவருக்கு ஒரு ஷாட்டில் என்ன தேவை என்பதில் தெளிவாக இருக்கிறார். இது என்னை ஆச்சரியப்படுத்தியது. அவரிடமிருந்து சில விசயங்களை கற்றுக் கொண்டேன்,” என்றார்.

நாயகன் குமரன் தங்கராஜன் பேசுகையில், ”இந்த மேடையில் வீற்றிருந்து பார்க்கும் போது மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கிறது. இந்தப் படத்தில் ‘சினிமா என் லட்சியம்’ என்றொரு டயலாக் வரும். உண்மையில் எனக்கு அது மிகப் பெரிய லட்சியம். கிட்டத்தட்ட 17 ஆண்டு கால இலட்சியம். சினிமாவில் ஹீரோ ஆகிவிட வேண்டும் என்று கனவு கண்டேன். அந்தக் கனவை நனவாக்கியது வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளரான கணேஷ் சார்.

என்னுடைய குடும்பத்தினருக்கு திரை உலக பின்னணி கிடையாது. அப்பா டீ கடையில் வேலை பார்த்தவர். அவர் நீ சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று சொன்னார். அவருக்கும் அந்த ஆசை இருந்தது. எனக்கும் அந்த ஆசை இருந்தது. அவருடைய கனவை நான் நனவாக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். எங்கெங்கோ தேடி அலைந்து கடைசியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்க தொடங்கினேன். அதன் பிறகு தான் எனக்கான அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது. தற்போது குமார சம்பவம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறேன். இதற்கும் உங்களின் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

குமார சம்பவம் என் வாழ்க்கையில் மிக முக்கியமான சம்பவம். இது எனக்கு எமோஷனலாகவும் இருக்கிறது. திருப்தியாகவும் இருக்கிறது. இதற்காக தயாரிப்பாளர் கணேஷ் சாருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் பாலாஜி வேணுகோபாலும் நானும் யூட்யூப் தொடங்கிய காலத்தில் இருந்து நாங்கள் இருவரும் நண்பர்கள். இன்று இருவரும் இணைந்து ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறோம். இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த திரைப்படம் ஃபன் ஃபில்டு ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும். குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்க்கும் அளவிற்கு ஒரு தரமான படைப்பை வழங்கி இருக்கிறோம். நீங்களும் இதனை பார்த்து ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் பாலாஜி வேணுகோபால் பேசுகையில், ”இயக்குநராக அங்கீகாரம் பெற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. என்னுடைய இயக்கத்தில் உருவான முதல் படம் ‘லக்கி மேன்’. 2023ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி அன்று வெளியானது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘குமார சம்பவம் ‘ என்ற படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்கிறேன்.

என்றைக்காவது நான் சோர்வடைந்திருக்கும் தருணத்தில் இணையத்தில் வெளியான ‘பானி பூரி’ மற்றும் திரையரங்குகளில் வெளியான ‘லக்கி மேன்’ படத்திற்காக ஊடகங்கள் முன்வைத்த விமர்சனங்களை ஒரு முறை பார்வையிடுவேன். அது எனக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும். இதற்காக இந்தத் தருணத்திலும் ஊடகத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

குமார சம்பவம் படத்தைப் பற்றி நிறைய கேள்விகள் இருக்கிறது. குமரனுடைய வாழ்க்கை நடைபெற்ற சம்பவங்கள் தான் இந்த குமார சம்பவம். இது படம் பார்க்கும்போது பார்வையாளர்கள் அனைவருக்கும் புரியும்.

முதலில் தயாரிப்பாளர் கணேசுக்கு நன்றி. குமரன் மூலமாக தான் தயாரிப்பாளர் கணேஷ் அறிமுகமானார். கதையைக் கேட்ட பிறகு, உடனடியாக முடிவெடுத்து படத்தின் பணிகளை தொடங்கினார். இந்தத் தருணத்தில் என்னுடைய கிரிக்கெட் பயிற்சியாளர் சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. கணேஷ் சார் இடதுகை பழக்கம் உள்ளவர். இந்த இடதுகை பழக்கம் உள்ளவர் முடிவுகளை வேகமாக எடுப்பவர்கள். அதேபோல் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பார்கள். அதனால் தான் இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.
தயாரிப்பாளர் கணேஷ் படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் அவர்களுடைய திறமைக்கேற்ற ஊதியத்தை பேரம் பேசாமல் சரியான தருணத்தில் வழங்கி அனைவரையும் உற்சாகப்படுத்தினார். இதன் காரணமாகவே இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

இசையமைப்பாளர் அச்சு ராஜாமணியுடன் பணியாற்றிய அனுபவம் அலாதியானது. ‘விடியாத இரவு ஒன்று..’ பாடலை உருவாக்கியதற்கும் ஒரு பின்னணி உண்டு. என்னுடைய தாத்தா பாட்டி காலத்தில் ‘மயக்கமா.. கலக்கமா..’ என்ற பாடல் பிரபலமானது. என்னுடைய தந்தை – தாய் காலகட்டத்தில் யாராவது சோர்வாக இருந்தால் ‘ஒவ்வொரு பூக்களுமே..’ என்ற பாடலை கேட்பார்கள். இப்போது இருக்கும் 2கே கிட்ஸ்கள் எப்போதாவது சோர்வை உணர்ந்தால் அந்த நேரத்தில் கேட்க வேண்டும் என்பதற்காகவே ‘விடியாத இரவு ஒன்று..’ என்ற பாடலை உருவாக்கினோம். இந்தப் பாடலைக் கேட்டு அவர்கள் உத்வேகம் பெற வேண்டும் என்பதற்காகவும் இதை உருவாக்கினோம். மேலும் இந்தப் பாடலை என்னுடைய ஞான தகப்பன் – ஞானகுரு கண்ணதாசனுக்கு சமர்ப்பணம் செய்வதற்காக எழுதியவை.

இந்தப் படத்தில் இடம்பெறும் ஆறு பாடல்களையும் பாரதியார், கண்ணதாசன், வாலி, வைரமுத்து, நா. முத்துக்குமார், அசல் கோளாறு, பால் டப்பா ஆகியோர்களுக்கு சமர்ப்பணம் செய்வதற்காக எழுதினேன். இந்தப் படத்தில் பாடல் எழுதுவதற்கான வாய்ப்பை எனக்கு நானே வழங்கிக் கொண்டேன். என்னுடைய கதைக்கான பாடல்களை நான் எழுத முடியும் என்று உறுதியாக நம்பினேன்.

இந்தப் படத்தில் இடம்பெறும் பாடல் மட்டுமல்ல அனைத்து எழுத்து வடிவங்களையும் நான் மட்டுமே உருவாக்கினேன். இது பேராசை தான். ஆனால் இதன் பின்னணியில் ரசிகர்களுக்கு தரமான பொழுதுபோக்கை வழங்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இருந்தது. இந்தப் படத்தை பார்ப்பதற்கு குடும்பத்தினர் அனைவரும் தங்களுடைய குழந்தை குட்டிகளுடன் திரையரங்கத்திற்கு வரலாம். குடும்பத்துடன் பொழுதுபோக்கு அம்சம் உள்ள படமாக குமார சம்பவம் உருவாகி இருக்கிறது.

கே .பாக்யராஜின் இயக்கத்தில் வெளியான பல வெற்றி படங்களுக்கு நடிகர்கள் லிவிங்ஸ்டனும், ஜி.எம். குமாரும் அவரிடம் உதவியாளர்களாக இருக்கும்போது தங்களுடைய பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் இணைந்து இதுவரை எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. அதனை இந்த படத்தில் சாத்தியப்படுத்தி இருக்கிறேன். இதை நான் பெருமிதமாக கருதுகிறேன்.

இது ஒரு போராளி பற்றிய கதை. ஆனால் அவனது போராட்டத்தை பற்றிய கதை அல்ல. இது ஒரு ஃபிலிம் மேக்கரின் கதை. ஆனால் அவர் படம் எடுத்த கதை அல்ல.

குமரன் மிகப்பெரிய திறமைசாலி, அவனுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. குமரன் திரையுலகில் நன்றாக வளர வேண்டும் என்று எண்ணம் கொண்ட பலர் அவரை சூழ்ந்து இருக்கிறார்கள். இதன் காரணமாகவே அவர் திரையுலகில் சிறப்பான இடத்திற்கு உயர்வார். நான் குமரனின் நடனத்திற்கு ரசிகன். ஆனால் இந்தத் திரைப்படத்தில் அதற்கான வாய்ப்பு இல்லை. இதை அறிந்ததும் பெரிய மனதுடன் ஒப்புக்கொண்டு கதைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் குமரன். அவருடைய இந்த முயற்சி எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

இந்த திரைப்படத்திற்கு கடவுளின் அனுகிரகம் இருக்கிறது என்பதனை நான் உணர்ந்தேன். நான் லக்கி மேன் படத்திற்காக முதலில் வைத்த பெயர் கந்தன் கருணை. ஆனால் அந்த டைட்டில் எனக்கு கிடைக்கவில்லை. நான் அடிப்படையில் ஒரு முருக பக்தன். ஒரு முறை பாம்பன் சுவாமிகள் ஆசிரமத்திற்கு சென்று முருகரை வணங்கிக் கொண்டிருந்தபோது உமது பெயரை என்னுடைய திரைப்படத்திற்கு வைக்க முடியவில்லை என வருந்தினேன். அதன் பிறகு முருகன் எனக்கு எப்படி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறார் என்றால்.. நாயகன் பெயர் குமரன், படத்திற்கு டைட்டில் குமாரசம்பவம், குமரவேல், ஜி எம் குமார், பால சரவணன், நிகில் முருகன் என முருகரின் பெயரைக் கொண்டவர்கள் இப்படத்தில் இணைந்திருக்கிறார்கள். நான் இதற்கு மேல் முருகரி டம் கேட்க இயலாத நிலை உருவாகி இருக்கிறது. இதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

மேலும் இந்த திரைப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், படத்தொகுப்பாளர், தயாரிப்பு நிர்வாகிகள், நடிகர்கள், நடிகைகள், ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் கணேஷ் பேசுகையில், “எங்கள் வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனத்தின் நேரடியான இரண்டாவது படம் தான் ‘குமார சம்பவம்’. முதல் படைப்பு ‘யாத்திசை’. யாத்திசை திரைப்படம் வெற்றி பெற்றதற்கு முழுமுதற் காரணம் ஊடகங்கள் தான். இதற்காக மீண்டும் ஒருமுறை ஊடகத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

‘யாத்திசை ‘படத்தை போலவே இந்த ‘குமார சம்பவம்’ படத்திற்கும் மக்களின் பேராதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன். ஏனெனில் குமார சம்பவம் தரமான ஃபேமிலி என்டர்டெய்னர். இயக்குநர் பாலாஜி வேணுகோபால் அழகாக இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை குடும்பத்தினர் அனைவரும் கண்டு ரசிக்கலாம்.

நாயகன் குமரன் எங்களுடைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்து வருகிறார். அவருடனான சந்திப்பின்போது ஒரு முறை உங்களை வைத்து நிச்சயமாக திரைப்படத்தை தயாரிப்பேன் என வாக்குறுதி அளித்தேன். அந்த வாக்குறுதியை ‘குமார சம்பவம்’ படத்தின் மூலம் நிறைவேற்றி விட்டேன்.

இந்த திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

“திரள்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, நடிகர் யோகி பாபு வெளியிட்டார்!

0

S.M.தமிழினி புரொடக்சன்ஸ் கே.சசிகுமார், C.P.பிலிம்ஸ் ஆர்.சின்னசாமி இணைந்து தயாரிக்கும் ‘திரள்’ படத்தை மனோஜ் கார்த்தி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு அபி ஆத்விக், இசை ஏ.இ.பிரஷாந்த், எடிட்டிங் மனோஜ் கார்த்தி, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

ரவி பிரகாஷ், யுவன் மயில்சாமி, கிரி மூவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். அல்பியா மீராராஜ் இருவரும் கதாநாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சேரன்ராஜ், சாப்ளின் பாலு, நித்தின், தமிழினி, வெங்கடேஷ் ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் ஜெனீஷ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்!

க்ரைம், த்ரில்லர், ஆக்‌ஷனோடு, விறுவிறுப்பாக செப்டம்பர் 19 ஆம் தேதி திரைக்கு வருகிறது “திரள்”!

மலைப்பிரதேசங்களில் நடைபெறும் கருவறை காதல் கதை மலையப்பன்

0

[அதிபயங்கர காட்டு விலங்குகள் நடமாடும் காட்டுப் பகுதியில் படமாகும்
மலையப்பன்
சன்லைட் மீடியா
எழுமலை ஏ.எஸ். சந்திரசேகர் தயாரிப்பில், பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.ஜே. சூரியாவின் உதவி இயக்குநர் குருச்சந்திரன் நடித்து இயக்கும் மலையப்பன் திரைப்படத்தின் கதை என்ன என்று இணை இயக்குநர் மூதுரை பொய்யாமொழியிடம் கேட்டபோது,

சென்னை போன்ற பெருநகரத்தில் தொடங்கும் திரைப்படத்தின் கதை, ஒட்டுமொத்தமாக மலையும் மலை சார்ந்த இடமான மதுரை மாவட்டத்தின் உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை சுற்றியுள்ள கிராமங்களிலும், வாசிமலையான் கோயில் மலை, சதுரகிரி மலை, பருவதமலை, வெள்ளியங்கிரி மலை போன்ற தமிழகத்தின் தலைசிறந்த ஆன்மீக சுற்றுலா தளங்களில் இந்த கதையின் நிகழ்வுகள் நடப்பது போன்று ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுக் கதை அமைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக திரைப்படங்கள் கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி காட்சி அமைப்புகள் இருக்கும்.
இந்த படத்தின் கதை சென்னை போன்ற பெரு நகரங்களில் தொடங்கி கதாநாயகனின் வாழ்க்கை எப்படி கிராமங்களில் ஒரு உன்னதமான காதலோடு கதை எப்படி நகர்கிறது என்பதை மிகவும் எதார்த்தமாகவும் தத்ருபமாகவும் காட்சி ஆக்கப்பட்டு வருகிறது என்று கூறினர்.

லோக்கல் சரக்கு, கடைசி தோட்டா போன்ற படங்களுக்கு இசையமைத்த சுவாமிநாதன் இராஜேஷ் இசைக்கு , கவிஞர் காதல்மதி பாடல் எழுத, பிரபல பின்னணி பாடகர் பிரசன்னா பாட, இராம்தாஸ் – விஜயா முகன் நடனம் அமைக்க, பி.எல். தேவா அரங்கம் அமைக்க, இலட்சுமணன் படத்தொகுப்பு செய்ய, இணைத் தயாரிப்பு திருப்பூர் செ. செல்வம் செய்ய,

படத்தின் மிகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் திருப்பாச்சி பட இயக்குர் பேரரசு, திருடா திருடி பட இயக்குநர் சுப்ரமணிய சிவா, சிட்டிசன் பட இயக்குநர் ஷரவணா சுப்பையா மற்றும் இன்னும் சில முன்னணி திரைப்பட நட்சத்திரங்களுடன், முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள்
பணிபுரிய இந்த திரைப்படம் வரும் வேகமாக வளர்ந்து வருகிறான் மலையப்பன்.

SIIMA சிறந்த அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!

0

பாக்யஸ்ரீ போஸ், இந்தாண்டு துபாயில் நடைபெற்ற SIIMA விருதுகளில் சிறந்த அறிமுக நடிகை விருதை கைப்பற்றி, வெள்ளித்திரையில் தன் வருகையை அழுத்தமாக பதித்துள்ளார் !!

தென்னிந்திய திரைப்பட உலகில் மிஸ்டர் பச்சன் மற்றும் கிங்டம் படங்கள் மூலம் அறிமுகமான நடிகை பாக்யஸ்ரீ போஸ், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து, முழு திரைத்துறையின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதன் மூலம், ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக உருவெடுத்துள்ளார்.

தற்போது, துல்கர் சல்மானுடன் இணைந்து நடிக்கும் காந்தா, மேலும் ராம் பொத்தினேனி ஜோடியாக நடிக்கும் “ஆந்திரா கிங் தாலுகா” உள்ளிட்ட பல்வேறு படங்கள் அவரது நடிப்பில் விரைவில் வெளியாக காத்திருக்கின்றன. இந்த வரிசையோடு, தென்னிந்தியாவின் முன்னணி நாயகிகளில் ஒருவராக உருவெடுத்துள்ள அவர் தன்னம்பிக்கையுடன் வலம்வருகிறார்.

ஔரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பாக்யஸ்ரீ, மிகச்சிறந்த நடிகையாக வேண்டுமென்கிற தன் கனவை அடைய, விடாமுயற்சியுடன் உழைத்து வருகிறார். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான நடிப்பை வழங்க வேண்டும் என்ற ஆவலுடன் உழைத்து வருகிறார்.

SIIMAவில் சிறந்த அறிமுக நடிகை விருது வென்றிருப்பது, இந்த பன்முகத் திறமை கொண்ட நடிகை பாக்யஸ்ரீ போஸுக்கு ஒரு தொடக்கமே. அவரை பெரும் திரையில் கண்டு ரசிக்க, ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

​Sony Pictures Entertainment India releases Tamil trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on 21st November, 2025 in English, Hindi, Tamil and Telugu

0

Sony Pictures Entertainment India has unveiled the Tamil trailer of their upcoming action-thriller, titled Sisu: Road to Revenge. The film is a wall-to-wall cinematic action event, a sequel to the original sleeper hit SISU. The film is set to hit the Indian theatres on 21st November 2025 in English, Hindi, Tamil and Telugu.

Returning to the house where his family was brutally murdered during the war, “the man who refuses to die” (Jorma Tommila) dismantles it, loads it on a truck, and is determined to rebuild it somewhere safe in their honor. When the Red Army commander who killed his family (Stephen Lang from Don’t Breathe) comes back hellbent on finishing the job, a relentless, eye-popping cross-country chase ensues – a fight to the death, full of clever, unbelievable action set pieces.

Written and directed by Jalmari Helander, and produced by Mike Goodridge and Petri Jokiranta, the film stars Jorma Tommila, Richard Brake, and Stephen Lang among others.

Sony Pictures Entertainment India will exclusively release the film in Indian theatres on 21st November, 2025​

“சிசு: ரோட் டு ரிவெஞ்ச்” படத்தின் டிரைலரை வெளியிட்ட சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்;

நவம்பர் 21 ஆம் தேதியன்று வெளியாகும் “சிசு: ரோட் டு ரிவெஞ்ச்”;

🎬 டிரைலர் இணைப்பு: https://youtu.be/fZuk0oru-ik

சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் இந்தியா, மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆக்ஷன்-த்ரில்லர் படமான “சிசு: ரோட் டு ரிவெஞ்ச்” திரைப்படத்தின் தமிழ் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கலக்கிய SISU படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்த படம், தத்ரூபமான சினிமா ஆக்ஷன் அனுபவத்தை வழங்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படம் இந்திய திரையரங்குகளில் நவம்பர் 21, 2025 அன்று ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

கதை சுருக்கம் : போரின்போது தனது குடும்பம் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பின் வீடு திரும்பும் “மரணத்தை ஏற்க மறுக்கும் மனிதன்” (ஜோர்மா டோமிலா), அந்த வீட்டை இடித்து ஒரு லாரியில் ஏற்றி, தனது குடும்பத்தின் நினைவாக பாதுகாப்பான இடத்தில் அதை மீண்டும் அமைக்கத் தீர்மானிக்கிறார். ஆனால், அவரது குடும்பத்தை கொன்ற சிவப்பு படை தளபதி (ஸ்டீபன் லாங் – Don’t Breathe புகழ்) மீண்டும் வந்து பழிவாங்க முயல்கிறார். இப்போது தொடங்குகிறது, உயிர்க்கும் மரணத்துக்கும் இடையிலான பரபரப்பான, அதிரடி நிறைந்த, நம்பமுடியாத சண்டைக் காட்சிகளால் நிரம்பிய சாகசப் பயணம்.

இந்த படத்தை எழுதி இயக்கியவர் ஜல்மாரி ஹீலாண்டர். தயாரிப்பாளர்கள் மைக் குட்ரிட்ஜ் மற்றும் பெட்ரி ஜோகிரண்டா. இப்படத்தில் ஜோர்மா டோமிலா, ரிச்சர்ட் பிரேக், ஸ்டீபன் லாங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் இந்தியா இந்த படத்தை இந்திய திரையரங்குகளில் 21 நவம்பர் 2025 அன்று பிரத்யேகமாக வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Kauvery Hospital Alwarpet Launches Dedicated Women Wellness Center

0

Chennai, September 4th 2025: Kauvery Hospital Alwarpet, one of South India’s leading multispecialty hospitals, announced the launch of the Kauvery Women Wellness Center—an exclusive space dedicated to women’s health across every stage of life, from adolescence, motherhood to menopause and beyond. The center was inaugurated by acclaimed actor Shalini Ajith, in the presence of leading doctors and dignitaries.
The Kauvery Women Wellness Center has been designed as a safe, supportive, and holistic healthcare destination where women feel heard, respected, and empowered. The center brings together a multidisciplinary team of women specialists in obstetrics& gynecology, breast health, urology, and pelvic anorectal surgeries such as piles, fissures, and fistulas. Dedicated programs for adolescents, and specialized clinics for conditions such as PCOS, Fibroids, Abnormal Uterine Bleeding , Perimenopausal Care and Post Menopausal Care, Incontinence Clinic and essential services like vaccinations ensure that women receive comprehensive and personalized care—all under one roof.
By ensuring that consultations are provided exclusively by women doctors, the center offers a comfortable environment where women can openly discuss their health concerns without hesitation.
Highlighting the importance of addressing women’s health needs across different life stages, Dr. Sabeeha T S , Senior Consultant, Obstetrics & , Gynecology , Kauvery Hospital, said:
“Every stage of a woman’s life brings distinct challenges, from menstrual concerns in adolescence to fertility, pregnancy, and menopausal health. At the Kauvery Women Wellness Center, we bring together expertise and empathy to provide personalized care. Our focus is not just on treatment, but on guiding women toward long-term health, confidence, and quality of life.”
Emphasizing the importance of early detection and preventive care, Dr. Kavitha Sundaravadanam, Senior Family Physician Kauvery Hospital Alwarpet, added: “Women’s health requires specialized attention that goes beyond routine check-ups. Many conditions such as fibroids, urinary issues, and breast health concerns are often under-recognized or not addressed on time. Early detection and preventive screenings can make a significant difference in improving outcomes, and this center ensures that women receive timely, focused care across all these areas.”
Speaking about the vision behind the initiative, Dr. Aravindan Selvaraj, Co-Founder & Executive Director, Kauvery Hospitals, said: “Women’s health is often seen through the lens of illness or treatment, but true wellness is about prevention, awareness, and empowering women to take charge of their health at every stage of life. With this Women Wellness Center, we bring expert care together in one place, creating a space where women feel comfortable, respected, and supported. We believe this center will encourage women to prioritize their health without hesitation and reassure them that compassionate, specialized care is always within reach.”
The team of Women Wellness Centre comprises Dr Meena Umachander, Senior Consultant Obstetrics and Gynaecology, Dr Sabeeha T S Senior Consultant Obstetrics& Gynaecology, Dr Vaishnavy Laxman Senior Consultant OBGYN and Urogynaecology, Dr Anitha S, Senior Consultant Gynaecology and Obstetrics, Dr Shruthi Sreedhar, Senior Consultant Gynaecology and Obstetrics, Dr Anu Ramesh Senior Consultant Urology, Dr Shanthi General Surgeon and Dr Arulmozhi Mangai , Consultant Plastic Surgery and Dr Keerthi , Associate Consultant Breast Surgery.
With the launch of the Women Wellness Center, Kauvery Hospital reaffirms its commitment to placing women’s health at the forefront. The center is designed to empower women to seek timely interventions, embrace preventive care, and access comprehensive healthcare in a space created exclusively for them.

F1 Champion Narain Karthikeyan Lights Up RUC Sports Film Festival in Chennai!

0

Chennai witnessed a unique celebration of cinema and sport as the RUC Sports Film Festival premiered at AGS Cinemas, T Nagar, on September 3rd and 4th, 2025. From 9 AM to 6:30 PM on both days, audiences experienced the thrill of sports on the big screen through a handpicked selection of blockbuster and critically acclaimed films in English and Tamil.

The festival also marked the official launch of the Rise Up Championship (RUC) Foundation, a first-of-its-kind sports platform designed to blend competitive sport with culture, entertainment, and lifestyle. The event was launched in the presence of F1 Champion Narain Karthikeyan, who released the official RUC jersey to mark the occasion. Founded by a team with backgrounds spanning sports, cinema, and business, RUC was born from a shared vision: to create something Chennai truly deserves—a vibrant, youth-driven movement that connects emerging sports with media, fashion, and storytelling.

The festival brought something for everyone—from timeless classics that defined an era to recent hits capturing the new face of sport. Each screening spotlighted the power of sport to inspire, unite, and tell compelling stories beyond the playing field. Athletes, fans, filmmakers, and collaborators gathered under one roof to celebrate their passion for the game. A red-carpet evening brought together leading figures from entertainment, business, and sport, setting the perfect backdrop for the launch.

“An event like the RUC Sports Film Festival is rare because it does more than entertain—it creates a shared cultural space where sport and cinema meet as equals,” said sports curator, actor, and producer Veerabahu Velayutham, part of the RUC leadership. “We curated films that capture everything from the grit of competition to the personal journeys behind the victories, giving audiences a reason to see sport as both an art form and a unifying force. For athletes and creators, it was a chance to be part of a dialogue that goes beyond the field or the screen. And for Chennai, it became an opportunity to celebrate the city’s love for both sport and storytelling in a completely new way.”

The Foundation’s mission is to promote emerging and professional sports, discover and nurture athlete talent, and build a dynamic ecosystem where sport is celebrated as a way of life. RUC’s approach is to integrate sport into every aspect of cultural life—through compelling storytelling, high-impact events, educational initiatives, and collaborations with brands. The goal is not just to host tournaments but to create opportunities, open doors for new talent, and connect athletes with the support systems they need to rise.

Speaking about the launch of the Foundation, RUC board member and serial entrepreneur Selvakumar Baalu said, “The Rise Up Championship Foundation was created to push the boundaries of how we experience sport in India. Chennai has always been a city that produces champions, but we wanted to build something that not only supports professional athletes but also shines a light on developing sports and the incredible untapped talent around us. By combining the worlds of sport, entertainment, and culture, we are giving athletes, creators, and brands a space to connect, collaborate, and grow together. This is about creating a lasting ecosystem in which sport is not just played, but lived and celebrated every day.”

The launch of the Foundation will be followed by another landmark event—RUC Pickleball By The Bay, to be held at VGP in Chennai on September 26, 27, and 28, 2025. In partnership with the Indian Pickleball Association, this beachside spectacle will introduce Chennai to pickleball on a scale it has never seen before. More than just a tournament, the event will blend high-energy sport with the atmosphere of a music festival, bringing over 25,000 spectators to the city’s coastline.

The tournament will feature five categories: men’s singles, women’s singles, men’s doubles, women’s doubles, and mixed doubles, each with 32 entries. Matches will be streamed live and supported by strong digital coverage and influencer partnerships, ensuring that Chennai’s first international-scale pickleball event reaches audiences far beyond the beach.

With these two flagship events, the RUC Foundation has set the tone for redefining how sport is experienced, celebrated, and supported in Chennai and beyond. By positioning itself at the intersection of sport, entertainment, and culture—and by providing platforms that double as networking hubs—RUC has opened a fresh chapter for a city that has always been passionate about both its games and its stories

சென்னையில் RUC ஸ்போர்ட்ஸ் ஃபிலில் பெஸ்டிவலை F1 சாம்பியன் நரேன் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்!

சினிமா மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டின் கொண்டாட்டமாக செப்டம்பர் 3 மற்றும் 4, 2025 ஆகிய தேதிகளில் சென்னை, டி.நகரில் உள்ள ஏஜிஎஸ் சினிமாஸில் RUC ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்டிவல் தொடங்கியது. இந்த இரண்டு நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை, ஆங்கிலம் மற்றும் தமிழில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிளாக்பஸ்டர் மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களின் மூலம் பார்வையாளர்கள் பெரிய திரையில் விளையாட்டின் சிலிர்ப்பை அனுபவித்தனர்.

இந்த நிகழ்வு ரைஸ் அப் சாம்பியன்ஷிப் ஃபவுண்டேஷனின் (RUC) அதிகாரப்பூர்வ தொடக்கமாகவும் அமைந்தது. விளையாட்டு- கலாச்சாரம், பொழுதுபோக்கு மற்றும் லைஃப்ஸ்டைல் என பன்முகத்தன்மை கொண்ட நிகழ்வாகவும் இது அமைந்தது. F1 சாம்பியன் நரேன் கார்த்திகேயன் இந்த நிகழ்வை தொடங்கி வைத்தார். RUC-ன் அதிகாரப்பூர்வ ஜெர்சியையும் அவர் வெளியிட்டார். விளையாட்டு, சினிமா மற்றும் வணிகம் என பல்வேறு பின்னணிகளைக் கொண்ட குழுவால் நிறுவப்பட்டது RUC என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டின் புது முகத்தில் இருந்து காலத்தால் அழியாத கிளாசிக்ஸ் வரை இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஒவ்வொரு மறக்க முடியாத அனுபவத்தை இந்த நிகழ்வு கொடுத்தது. விளையாட்டு மைதானத்திற்கு அப்பாறட்ட விளையாட்டின் ஒற்றுமை, இன்ஸ்பிரேஷன் ஆகியவற்றையும் நிகழ்வு எடுத்துரைத்தது. அத்லெட்ஸ், ரசிகர்கள், ஃபிலிம்மேக்கர்ஸ், பிசினஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் என அனைத்து துறைகளை சேர்ந்தவர்களும் இந்த நிகழ்வில் ஒன்றிணைந்தனர்.

நிகழ்வு குறித்து ஸ்போர்ட்ஸ் கியூரேட்டர், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் RCU லீடர்ஷிப்பிம் அங்கமாக இருக்கும் வீரபாபு வேலாயுதம், “விளையாட்டும் பொழுதுபோக்கும் சரிசமமாக சந்திக்கும் RCU ஸ்போர்ட்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் போன்றதொரு நிகழ்வு அரிதானது. போட்டியின் தீவிரம், அதற்கு தயாராவது மற்றும் வெற்றிகளுக்குப் பின்னால் உள்ள தனிப்பட்ட பயணங்கள் என காட்டும் படங்களை பார்வையாளர்களுக்கு திரையிட தேர்ந்தெடுத்தோம். விளையாட்டு வீரர்கள் மற்றும் படைப்பாளர்களுக்கு திரைக்கு அப்பால் உரையாடலை உருவாக்கும் விதமாகவும் சென்னை மீதான அன்பை அதிகரிக்கும் விதமாகவும் இந்த நிகழ்வு இருக்கும்” என்றார்.

வளர்ந்து வரும் மற்றும் தொழில்முறை விளையாட்டுகளை ஊக்குவிக்கவும், விளையாட்டு வீரர்களின் திறமையைக் கண்டறிந்து வளர்க்கவும், நம் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் விளையாட்டை ஒருங்கிணைப்பது இதன் நோக்கமாகும். போட்டிகளை நடத்துவது மட்டுமல்லாமல், வாய்ப்புகளை உருவாக்குவது, புதிய திறமைகளுக்கான கதவுகளைத் திறப்பது மற்றும் விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான அமைப்புகளுடன் இணைப்பது இதன் குறிக்கோள்.

அறக்கட்டளையின் தொடக்கத்தைப் பற்றி RUC நிறுவனர் மற்றும் சீரியல் தொழில்முனைவோர் செல்வகுமார் பாலு பேசியதாவது, “காலங்காலமாக விளையாட்டிற்கு என நாம் வகுத்து வைத்திருக்கும் எல்லைகளை மறுவரையறை செய்வதற்காக ரைஸ் அப் சாம்பியன்ஷிப் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. தொழில்முறை விளையாட்டு வீரர்களை ஆதரிப்பது மட்டுமல்லாமல், விளையாட்டு மற்றும் நம்மைச் சுற்றியுள்ள திறமையாளர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரவும் விரும்புகிறோம். விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார உலகங்களை இணைப்பதன் மூலம் விளையாட்டு வீரர்கள், படைப்பாளிகள் மற்றும் பிராண்டுகள் என அனைத்தும் ஒன்றாக வளரும் இடமாகவும் இது இருக்கும்” என்றார்.

அறக்கட்டளையின் தொடக்கத்தை அடுத்து செப்டம்பர் 26, 27 மற்றும் 28, 2025 ஆகிய தேதிகளில் மற்றொரு முக்கிய நிகழ்வான RUC பிக்கிள்பால் பை தி பே சென்னையில் நடைபெறுகிறது. இந்திய பிக்கிள்பால் சங்கத்துடன் இணைந்து இந்தியா இதற்கு முன் பார்த்திராத அளவில் பிக்கிள்பாலை அறிமுகப்படுத்துகிறது. இந்த போட்டியில் 25,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இசை நிகழ்வும் நடத்தப்படுகிறது.

ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் என ஐந்து பிரிவுகளில் இந்தப் போட்டி இடம்பெறும். ஒவ்வொன்றிலும் 32 எண்ட்ரி இருக்கும். போட்டிகள் நேரடியாக ஸ்ட்ரீம் செய்யப்படும். வலுவான டிஜிட்டல் கவரேஜ் மற்றும் இன்ஃபுளூயன்சர் பார்னர்ஷிப்போடு இந்தியாவின் முதல் சர்வதேச அளவிலான பிக்கிள்பால் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு நிகழ்வுகளின் மூலம், சென்னையிலும் அதற்கு அப்பாலும் விளையாட்டு எப்படி இருக்கிறது, எப்படி கொண்டாடப்படுகிறது மற்றும் ஆதரிக்கப்படுகிறது என்பதை RUC அறக்கட்டளை மறுவரையறை செய்துள்ளது. விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரத்தின் சந்திப்பில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதன் மூலம் விளையாட்டு மற்றும் அதன் கதைகள் இரண்டிலும் RUC ஒரு புது அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.

துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனத்தின் “லோகா” சாப்டர் 1 திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

0

துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் 1 – சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, 10 நாட்களில் 100 கோடி வசூலைக் குவித்து, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது.

இப்படம் ஒரு புதிய சூப்பர் ஹீரோ உலகை அறிமுகப்படுத்தி, மலையாள சினிமாவை உலகளவில் கொண்டு சென்றுள்ளது.

Wayfarer Films பேனரில் ஏழாவது படைப்பாக உலகத் தரத்துக்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மலையாளப் படம், கேரளாவின் எல்லைகளைத் தாண்டி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் அனைத்து மாநிலங்களிலும் ஊடக நண்பர்களையும், ரசிகர்களையும் சந்தித்து, நன்றி தெரிவித்து வருகின்றனர்.இன்று சென்னையில் பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்து அவர்களோடு கலந்துரையாடி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில்

நடிகர் சந்து சலீம் குமார் பேசியதாவது…

என்ன பேசுவது என்றே தெரியவில்லை. முதலில் நண்பர் துல்கர் சல்மானுக்கு நன்றி. நண்பர் இயக்குநர் டோமினிக் அருணுக்கு நன்றி. கல்யாணி , நெஸ்லென் என உடன் நடித்த நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி. மம்மூட்டி சார் ஃபாரெவர் பெஸ்ட் ஃபிரண்ட் அவருக்கும் நன்றி. இந்தப்படத்தை இந்த அளவு எடுத்துச் சென்ற உங்கள் அனைவருக்கும் நன்றி.

டப்பிங் பார்வையாளர் RB பாலா பேசியதாவது..,

இயக்குநர் டோமினிக் சாருக்கு நன்றி. வழக்கமாக மற்ற மொழி படங்களை வாய்ஸ் டப்பிங் செய்யும் போது சவாலாக இருக்கும். நான் 30 வருடங்களாக இந்த துறையில் இருக்கிறேன். இயக்குநர் டோமினிக் வித்தியாசமானவர், முதலில் செய்து தந்த டப்பிங்கை வேண்டாம் என்று சொல்லி விட்டார். அவர் இன்னும் கொஞ்சம் பேஸ் வேணும் மணிரத்னம் ஸ்டைல் வேணும் என்றார். முழுமையாக ரீ டப்பிங் செய்து தந்தேன் அவருக்கு பிடித்திருந்தது. துல்கருடன் முன்னரே வேலை செய்துள்ளேன், ஒரு முறை தான் டயாலாக் கேட்பார், ஒரு டேக்கில் முடித்து விடுவார். என்னை அசரவைத்த நடிகர். இந்தப்படத்தில் ஆச்சரியப்பட வைத்தது, கேமராமேன் தான், ஹாலிவுட் தரத்துக்கு செய்துள்ளார். கல்யாணியுடன் மரைக்காயர் படத்தில் வேலை பார்த்துள்ளேன், இந்தப்படத்தில் மிரட்டியுள்ளார். நஸ்லென் சின்ன சின்ன டயாலாக்குகளிலும் கச்சிதமாக செய்வார். அவர் கண்ணைக்காட்டினாலே அத்தனை உணர்வுகள் இருக்கும். எனக்கு சமீபத்தில் அதிக திருப்தி தந்த படம் இது. எல்லோருக்கும் நன்றி. முக்கியமாக இயக்குநருக்கு நன்றி.

எழுத்தாளர் சாந்தி பாலச்சந்திரன் பேசியதாவது…

சென்னைக்கு மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி. நாங்கள் நாங்களே பார்த்து சந்தோசப்படும் படத்தை செய்ய விரும்பினோம், இப்போது எல்லோரும் அந்தப்படத்தைக் கொண்டாடுவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குநர் டோமினிக் உடன் பல காலமாக வேலை செய்து வருகிறேன். அவருடன் இணைந்து எழுதுவது மிக சந்தோசமான அனுபவம். இந்த ஐடியா டோமினிக் தான் சொன்னார். நம் மண்ணில் சூப்பர்ஹீரோ செட் செய்வதை பற்றி மிக உற்சாகமாக பேசுவார். அவர் பார்வையை புரிந்து கொண்டு, எல்லோரும் உழைத்தார்கள். அவருக்கு ஆதரவு தந்த தயாரிப்பு தரப்புக்கு நன்றி. இப்போது நாங்கள் அடுத்த பாகத்திற்கு இன்னும் சிறப்பாக எழுத ஆரம்பித்துள்ளோம். அந்தப்படமும் உங்களுக்குப் பிடிக்கும் நன்றி.

நடிகர் அருண் குரியன் பேசியதாவது…

மீடியா நண்பர்களுக்கு நன்றி. லோகா படத்தை கொண்டாடுவதற்கு நன்றி. இது என் மனதுக்கு நெருக்கமான படம். எங்களுக்கு இப்படம் மிகப்பெரிய பயணம். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. எல்லோரிடமும் பாராட்டுக்களை பெறுவதை பார்க்க மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி பேசியதாவது…,

சென்னை என் இரண்டாம் வீடு. இங்கு தான் விசுவல் கம்மியூனிகேசன் படித்தேன். இப்போது மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி. டோமினிக் ஒரு சின்ன ஐடியாவாக, ஒரு இண்டிபெண்டண்ட் படமாக தான் சொன்னார். அது வளர்ந்து வளர்ந்து இப்போது பிரம்மாண்டமாக வந்துள்ளது. அதை எல்லோரும் சேர்ந்து டெவலப் செய்து உங்களிடம் கொண்டு வந்துள்ளோம். உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி. இன்னும் இந்தப்படத்தை அதிகமான பேருக்கு எடுத்துச்செல்லுங்கள் நன்றி.

Wayfarer Films சார்பில் அனூப் குமார் பேசியதாவது…,

இது AGS உடன் எங்களின் இரண்டாம் படம், இப்படத்தை பெரிய அளவில் எடுத்துச் சென்றதற்கு நன்றி. எல்லோரும் படத்தைக் கொண்டாடுவது மகிழ்ச்சி. இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படம் பார்க்காதவர்கள் எல்லோரும் படத்தை திரையரங்கில் பாருங்கள் நன்றி.

ஏஜிஎஸ் சார்பில் ஐஸ்வர்யா பேசியதாவது…,

லோகா என்னுடைய பெஸ்ட் தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் படம். டிரெய்லர் பார்த்தவுடன் இப்படத்தை வெளியீடு செய்வது என முடிவு செய்து விட்டோம். துல்கர் சல்மான் எங்களுடன் இணைந்ததற்கு நன்றி. இரண்டாம் பாகமும் ரெடியாகி வருகிறது. கல்யாணி படத்தில் கலக்கி விட்டார். எங்கள் நிறுவனம் மூலம் இன்னும் நல்ல படைப்புகள் தருவோம் நன்றி. இப்படத்தின் அடுத்த பாகங்களும் வரும் உங்கள் அனைவரின் ஆதரவுக்கு நன்றி.

இயக்குநர் டோமினிக் அருண் (Dominic Arun) பேசியதாவது…,

இந்தப் பயணம் மிக நீண்ட, இனிமையான பயணம். உங்களுடன் எங்கள் படத்தை பகிர்ந்து கொள்வது மிகுந்த பெருமையாக இருக்கிறது. எங்கள் படத்தைப் பார்த்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி. இப்படத்தை கொண்டாடி வரும் அனைவருக்கும் நன்றி.

நாயகன் நஸ்லென் பேசியதாவது…,

நன்றி, எனக்கு என்ன சொல்ல வேண்டும் என்றே தெரியவில்லை, அந்தளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் லைஃபில் என்னென்னவோ நடக்கிறது, நான் நினைத்து பார்க்காததெல்லாம் நடக்கிறது. காலையில் சூர்யா சார், ஜோதிகா மேடம் போன் செய்து பாராட்டினார்கள். பலரும் பாராட்டி வருகிறார்கள் எல்லோருக்கும் நன்றி. எங்கள் படத்தை பார்த்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி.

கல்யாணி பிரியதர்ஷன் பேசியதாவது..,

லோகாவிற்கு இந்தளவு பாராட்டு, வரவேற்பு கிடைக்கும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. நீங்கள் ஆதரவு தந்தததால் தான், இந்த அளவு வெற்றி கிடைத்துள்ளது. இப்படத்திற்காக நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். அப்பாவிடம் ஆக்சன் பண்ணபோகிறேன், என்றவுடன் நீயா ஆக்சன் பண்ணபோறே? கால் கையெல்லாம் ஒழுங்காக பார்த்துக் கொள் என்றார். படம் 100 கோடி வசூலித்துள்ளது அதற்கு, நான் மட்டுமே காரணமில்லை. மொத்த குழுவின் உழைப்பு தான் காரணம். நான் மட்டும் கிரடிட் எடுத்துக்கொள்ள முடியாது. இப்படத்திற்கு இவ்வளவு பாராட்டுக்களை தந்த அனைவருக்கும் நன்றி.

நடிகர் தயாரிப்பாளர் துல்கர் சல்மான் பேசியதாவது…

நான் இந்தப்படத்தில் நடிக்கவில்லை, ஒரு டீச்சராக பசங்களை கூட்டி வந்துள்ளேன். நான் எந்த மொழியில் படம் செய்தாலும், இங்கு படம் பிரஸ்க்கு போட்டால், படம் நன்றாக இருந்தால், பிரஸ் உடனே பாராட்டுவார்கள், கொண்டாடுவார்கள் அவர்களுக்கு நன்றி. நாங்கள் இதை கேரளா அளவில் சின்னதாகத் தான் ஆரம்பித்தோம் இப்போது எல்லா இடத்திலும் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. இதில் உழைத்த எல்லோரும் அவர்கள் படம் போல உழைத்தார்கள் இந்த வெற்றி அவர்களுக்கானது தான். கல்யாணியைத்தவிர இந்தப்படத்திற்கு வேறு யாருமே செட் ஆகமாட்டார்கள் என்ற அளவிற்கு அவர் பொருத்தமாக இருந்தார். கதை சொன்ன மறுநாளே அவர் டிரெய்னிங் எடுக்க ஆரம்பித்துவிட்டார். நாங்கள் நினைத்ததை விட சிறப்பாக செய்துள்ளார். நேரடித்தமிழ்படம் போல இப்படத்தை டப்பிங் செய்து தந்த பாலா சாருக்கு நன்றி. இந்த அளவு வரவேற்பு நாங்களே எதிர்பார்க்கவில்லை. இப்படத்தை ஐந்து பாகமாக எடுக்க திட்டமிட்டுள்ளோம். நான் எத்தனையோ படங்கள் நடித்துள்ளேன் இந்த அளவு கிரேஸ் பார்க்கவில்லை. அதற்கான மரியாதை உடன் அடுத்தடுத்த பாகங்களை எடுப்போம். லோகா மாதிரி இன்னும் அடுத்தடுத்து படங்கள் தருவோம். என் பேனரில் நான் மட்டுமே நடிக்க வேண்டும் என எப்போதும் நினைத்ததில்லை, எனக்கு சினிமா அவ்வளவு பிடிக்கும், என் பேனரில் மற்றவர்கள் நடிக்கும் படங்களும் தயாரித்து வருகிறோம். உங்கள் ஆதரவைத் தாருங்கள். இப்படத்தை வெளியிட்ட ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.

இப்படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். அவருடன் நஸ்லென், சாண்டி, சந்து சலீம் குமார், அருண் குரியன், விஜயராகவன், சரத் சபா மற்றும் பல சிறப்பு தோற்றங்கள் வழங்கிய நடிகர்களும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகமெங்கும் வெளியான இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தொழில் நுட்பக் குழு

எழுத்து இயக்கம் – டோமினிக் அருண்
தயாரிப்பு – Wayfarer Films
ஒளிப்பதிவு – நிமிஷ் ரவி
எடிட்டிங் – சாமன் சாக்கோ
எக்சிக்யூட்டிவ் தயாரிப்பாளர்கள் – ஜோம் வர்கீஸ், பிபின் பெரும்பள்ளி
கூடுதல் திரைக்கதை – சாந்தி பாலச்சந்திரன்
மேக்கப் – ரோனக்ஸ் சேவியர்
உடை அலங்காரம் – மெல்வி ஜே, அர்ச்சனா ராவ்
ஸ்டில்ஸ் – ரோஹித் கே சுரேஷ், அமல் கே சதார்
புரடக்சன் கண்ட்ரோலர்கள் – ரினி திவாகர், விநோஷ் கைமோல்
சீஃப் அசோசியேட் – சுஜித் சுரேஷ்

இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது.

கவிஞர் பூவை செங்குட்டுவன் இயற்கை எய்தினார்!

0

கவிஞர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவரான பூவை செங்குட்டுவன் இன்று மாலை 5.45 மணியளவில் வயது மூப்பு காரணமாக சென்னையில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 90.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களையும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட சுயாதீனப் பாடல்களையும், ஐந்தாயிரத்திற்கும் மேலான பக்திப் பாடல்களையும் இவர் எழுதியுள்ளார். 1980 ஆம் ஆண்டு இவருக்கு கலைமாமணி விருது கொடுத்து கெளரவிக்கப்பட்டது. திரையிசைப் பாடல்களில் இவர் எழுதிய ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா…’ பாடலும் ‘நான் உங்கள் வீட்டுப்பிள்ளை…’ பாடலும் காலத்தால் அழியா புகழ் பெற்றவை. குறிப்பாக இவர் எழுதிய ‘நாலும் தெரிந்தவன் நிலவுக்கே போகலாம்…’ என்ற பாடல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்த போது, இலங்கை வானொலியில் அன்றைய தினம் முழுவதும் ஒலிபரப்பப்பட்ட பாடலாகும்.

பாடல்கள் எழுதுவது மட்டுமல்லாது நாட்டிய நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் பலவும் எழுதியிருக்கிறார். தமிழகத்தின் ஐந்து முதல்வர்களுக்கு பாடல் எழுதிய பெருமையும் இவருக்கு உண்டு. அறிஞர் அண்ணா ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் ‘அறிஞர் அண்ணா ஆட்சிதானிது’ என்று இவர் எழுதிய தனியிசை பாடல் பொதுக்கூட்டம் துவங்குவதற்கு முன்னதாகவும், கூட்டம் நிறைவுபெறும் போதும் ஒலிபரப்பப்பட்டது.

கலைஞர் கருணாநிதிக்காக ‘கருணையும் நிதியும் ஒன்றாய் சேர்ந்தால் கருணாநிதியாகும் ‘ என்ற பாடலும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்காக ‘நான் உங்கள் வீட்டுப்பிள்ளை’ என்ற பாடலும், புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள் முதன் முதலாக பாடிய இரண்டு அம்மன் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் பூவையார். மேலும், இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பல நாடகங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார் பூவை செங்குட்டுவன்.

Prime Video Announces the Global Streaming Premiere of Superstar Rajinikanth’s Action Thriller Coolie, Starting September 11

0

Written and directed by Lokesh Kanagaraj, the film features a star-studded cast led by the legendary icon Superstar Rajinikanth, alongside Nagarjuna, Soubin, Upendra, Shruti Haasan, Sathyaraj, Aamir Khan, Rachitha Ram, and Pooja Hegde, and music by Anirudh

Prime members in India and over 240 countries and territories worldwide can stream Coolie starting September 11 in Tamil, with dubs in Telugu, Malayalam, and Kannada, exclusively on Prime VideoPrime Video, India’s most-loved entertainment destination, today announced the exclusive global streaming premiere of Coolie, the high-octane action thriller headlined by Superstar Rajinikanth. Written and directed by Lokesh Kanagaraj, with a thunderous score by Anirudh, the film also boasts a powerhouse cast featuring Nagarjuna, Soubin, Upendra, Shruti Haasan, Sathyaraj, Aamir Khan, Rachitha Ram, and Pooja Hegde. Coolie will begin streaming from September 11 in Tamil, with dubs available in Telugu, Malayalam, and Kannada, exclusively on Prime Video in India and across more than 240 countries and territories worldwide.

Set against the gritty backdrop of the Visakhapatnam docks, Coolie follows Deva, a former coolie turned rebel who uncovers a deadly smuggling syndicate while investigating his best friend’s suspicious death. The discovery of a secret electric chair, buried truths, and a hidden mole pulls him into a dangerous game of betrayal and unfinished business. As the fight for justice collides with the ghosts of his past, Deva’s journey becomes a relentless battle of justice, loyalty, survival, and rebellion. Blending explosive action, gripping suspense, emotional depth, and Superstar Rajinikanth’s vintage screen presence, Coolie is both a nostalgic celebration of his 50-year cinematic legacy and a gripping spectacle for a new generation of fans.

பிரைம் வீடியோ அறிவிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அதிரடி திரில்லர் கூலி, செப்டம்பர் 11 முதல் உலகளவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது

லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய இந்த படத்தில்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நாகார்ஜுனா, சோபின், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அமீர் கான், ரசிதா ராம், பூஜா ஹெக்டே ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தியாவைச் சேர்த்து உலகம் முழுவதும் உள்ள 240-க்கும் மேற்பட்ட நாடுகளில் பிரைம் உறுப்பினர்கள் செப்டம்பர் 11 முதல் கூலி படத்தை தமிழ் மொழியில், மேலும் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி பதிப்புகளிலும், பிரைம் வீடியோவில் மட்டுமே ஸ்ட்ரீம் செய்யலாம்

மும்பை, இந்தியா — செப்டம்பர் 4, 2025 – இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி திரில்லர் கூலியின் உலகளாவிய ஸ்ட்ரீமிங் வெளியீட்டை இன்று அறிவித்துள்ளது. பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் நாகார்ஜுனா, சோபின், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அமீர் கான், ரசிதா ராம், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

செப்டம்பர் 11 முதல் உலகம் முழுவதும், இந்த படம் தமிழில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. மேலும் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு, இந்தியா மற்றும் உலகளவில் 240-க்கும் மேற்பட்ட நாடுகளில் பிரைம் வீடியோவில் மட்டுமே கிடைக்கும்.

விசாகப்பட்டினம் துறைமுகத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், முன்னாள் கூலியாக இருந்த தேவா (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) தனது நண்பனின் சந்தேகத்திற்கிடமான மரணத்தை ஆராயும் போது கொடிய கடத்தல் கும்பலை கண்டுபிடிக்கிறார். அந்த விசாரணை அவரை ஒரு ரகசிய மின்சார நாற்காலி, புதைந்த உண்மைகள், உள்ளார்ந்த துரோகங்களை வெளிப்படுத்தும் ஆபத்தான விளையாட்டுக்குள் இழுத்துச் செல்கிறது. நீதிக்கான போராட்டம், விசுவாசம், வாழ்வாதாரம், கிளர்ச்சி ஆகியவற்றின் கலவையுடன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அசைக்க முடியாத கவர்ச்சி சேர்ந்துள்ளதால், கூலி அவரது 50 ஆண்டு திரை உலகப் பயணத்தை கொண்டாடும் நினைவுச் சின்னமாகவும், புதிய தலைமுறை ரசிகர்களுக்கான சுவாரஸ்யமான திரில்லராகவும் திகழ்கிறது

- Advertisement -

Recent Posts