Wednesday, July 1, 2026
- Advertisement -
Home Blog Page 125

“தாவுத்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

0

கண்டண்ட் நன்றாக இருந்தால் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் படம் ஜெயிக்கும் இயக்குனர் சுசீந்திரன் பேச்சு.

TURM புரொடக்ஷன் ஹவுஸ் என்ற பட நிறுவனம் சார்பில் S. உமா மகேஸ்வரி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரசாந்த் ராமன் இயக்கத்தில், லிங்கா, சாரா ஆச்சர் நடிப்பில், அடிதடி வெட்டு குத்துச் சண்டைக் காட்சிகளே இல்லாத ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள படம் “தாவுத்”.

இம்மாதம் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின், இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள நேற்று கோலாகலமாக
நடைபெற்றது.

இந்நிகழ்வினில்

நடிகர் ராதாரவி பேசியதாவது…
சமீபமாக எனக்கு உடல் நிலை சரியில்லை. மன்னித்துக்கொள்ளுங்கள். சினிமாக்காரன் எப்போதும் தூங்கும் போது கூட காலை ஆட்டிக்கொண்டு தூங்க வேண்டும், இல்லையெனில் வேறு ஆளை போட்டு விடுவார்கள். இந்தப்படத்தில் இரண்டு நாள்கள் தான் வேலை பார்த்தேன். தம்பிதுரை தான் தயாரிப்பாளர் ஆனால் அவர் பெயர் வரவில்லையே எனப் பார்த்தேன், ஆனால் படத்தில் கதாப்பாத்திரத்திற்கு அந்தப்பெயர் வைத்து விட்டார். வாழ்த்துக்கள். படத்தில் பேய் இருக்கிறதா? இரத்தம் இருக்கிறதா? எனக்கேட்டேன் ஆனால் எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். இன்றைய காலத்தில் இதெல்லாம் வெற்றிக்குத் தேவைப்படுகிறது. ரஜினியே அத்தனை வெட்டு குத்து, இரத்தம் தெறிக்க நடிக்கிறார். அவரே இரத்தத்தை நம்பும்போது நம்மைச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. படத்தில் நாம் கொஞ்சம் சுயநலமாகத் தான் இருக்க வேண்டும். கதாப்பாத்திரத்திற்கு தயாரிப்பாளர் தன் பெயர் வைத்தது போல இருக்க வேண்டும். படம் மிக அருமையாக வந்துள்ளது. எல்லோரும் மிக நன்றாக நடித்துள்ளனர். படம் மிகப்பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள். தமிழ் வாழ வேண்டும் என்றால் அனைவரும் தமிழ்ப்படங்கள் பார்க்க வேண்டும். எல்லோரும் திரையரங்கில் இப்படத்தைப் பாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் ராக்கேஷ் அம்பிகாபதி பேசியதாவது…,

எங்களை வாழ்த்த வந்துள்ள ஆளுமைகளுக்கு நன்றி. தயாரிப்பாளர் தம்பிதுரை சார், நாங்கள் ஆணாதிக்கம் எனக் குறும்படம் எடுத்த போது, அதில் நடித்தார். அவர் இந்த படத்தை இந்த மேடைக்கு எடுத்து வர எவ்வளவு கஷ்டப்பட்டார் எனப் பார்த்துள்ளேன். பல தடைகளைக் கடந்து இப்படம் வந்துள்ளது. தாவுத் இப்ராஹிம் பற்றி உங்களுக்குத் தெரியும் அதற்கும் இந்த கதைக்கும் கண்டிப்பாகச் சம்பந்தம் இல்லை. தாவுத் ஆரம்பித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. மிகப்பெரிய பயணம். அருண்பாரதி அண்ணன் 100வது பாடலை இசையமைத்துள்ளேன் என்பது மகிழ்ச்சி. படத்தில் எல்லோரும் மிக நன்றாக நடித்துள்ளனர். படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. நான்

நாயகி சாரா ஆச்சர் பேசியதாவது…,

பிரசாந்த் சார் கால் செய்து ஒரு கதை வைத்திருக்கிறேன் என ஆபிஸ் வரச்சொன்னார். அவர் சொன்ன கதை எனக்குத் தானா? என ஆச்சரியமாக இருந்தது. மிகச் சவாலான கேரக்டர். படத்தில் கொஞ்சமே வந்தாலும், நல்ல கேரக்டர். என்னை நம்பி தந்ததற்கு இயக்குநருக்கு, தயாரிப்பாளருக்கு நன்றி. இசை சூப்பராக வந்துள்ளது. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நாயகன் லிங்கா பேசியதாவது…,

சென்னை உங்களை அன்புடன் நான் நடித்த முதல் படம், அது வெளியாகி 10 வருடம் ஆகிறது. இப்போது ஹீரோவாக முதல் படம். அஜய் பிரதர் இப்படம் மூலம் தான் பழக்கம் அவர் நான் தான் லீடாக நடிக்கிறேன் என்றார். சாரா நான் தான் லீட் என்றார், கிட்டதட்ட படத்தில் நடிக்கும் அனைவருமே லீட் தான் என்றார்கள். இயக்குநர் எல்லோரிடமும் நீங்கள் தான் நாயகன் என சொல்லியிருக்கிறார். அதன் பிறகு நான் லீட் என சொல்வதையே நிறுத்திவிட்டேன். ஆனால் படம் பார்த்த பிறகு தான் புரிந்தது. படத்தில் எல்லோருக்குமே லீட் மாதிரியான கேரக்டர் தான். ஏதோ கொஞ்சம் அதிகமாக இருப்பதால் நான் லீட் எனச் சொல்கிறேன். நாயகி கூட எனக்குத் தான் காட்சிகள் அதிகம், ஆனால் போட்டுருக்க சட்டை என்னுடையதில்லை என்பது போல, அவர் எனக்கு ஜோடி இல்லை. பரவாயில்லை. தம்பிதுரை சார் படம் ஆரம்பிக்கும் போது பார்த்தேன் சம்பளம் எல்லாம் பேசினார், அதன்பிறகு ஒரு நாள் கூட ஷூட் வந்ததே இல்லை. இயக்குநர் பிரசாந்த் மீது முழு நம்பிக்கை வைத்தார். அவர் இந்தப்பணத்தை அவர் நலனுக்குச் செலவழித்திருக்கலாம். ஆனால் இந்தப்படம் எங்களை நம்பி எடுத்துள்ளார். உங்களால் பல குடும்பங்கள் சாப்பிட்டுள்ளது சார் நன்றி. படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது அனைவரும் திரையரங்கில் வந்து பாருங்கள் நன்றி.

இயக்குநர் பிரசாந்த் ராமன் பேசியதாவது…

சின்ன படங்கள் ஜெயித்தால் தான் இன்ட்ஸ்ட்ரி நல்லா இருக்குமெனச் சொல்வார்கள், அதை மனதில் வைத்து ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி. பாபி சிம்ஹா சார் இந்தப்படத்திற்குக் கடைசி நிமிடத்தில் உதவி செய்தார். அதே போல் இந்தப்படத்திற்கு உதவி செய்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு நன்றி. பீட்சா டெலிவரி பாயாக இருந்து இயக்குநர் ஆகியுள்ளேன். அதற்குக் காரணம் தயாரிப்பாளர் தம்பி துரை சார். அவர் வெத்தலையில் இருந்து பித்தலை எடுப்பவர். நல்ல பெயர் அவர் எடுத்துக்கொள்வார் ஏதாவது பிரச்சனை என்றால் என்னை மாட்டிவிடுவார். ரதாரவி சார் நடித்தால் நன்றாக இருக்கும் என்றேன், உடனே பேசி வரச்சொல்கிறார் என அவரிடம் அனுப்பிவிட்டார். நான் பயந்து கொண்டே போனேன் ஆனால் அவர் என்னை அவ்வளவு மரியாதையாக நடத்தினார். சார் சம்பளம் என கேட்டேன், நான் வந்தால் நீ நல்லா இருப்பேல்ல.. போ பார்த்துக்கொள்ளலாம் என்றார். அவர் மாதிரி ஆட்கள் இருப்பதால் தான், சின்ன பட்ஜெட் படங்கள் உயிர் வாழ்கிறது. தயாரிப்பாளர் எல்லாவற்றிலும் கணக்கு பார்ப்பார் ஆனால் சாப்பாட்டில் என்றுமே கணக்கு பார்த்ததில்லை. எல்லாமே என்னை நம்பி தந்துவிட்டார். அவர் நம்பிக்கையைக் காப்பாற்றி விட்டேன் என நம்புகிறேன். லிங்கா முதல் நாள் ஷீட்டில் 7 விதமாக நடித்துக் காட்டினார். எனக்கு என்ன தேவை என்பதைக் காட்டத்தான் அவ்வாறு நடித்தார். இந்த கதாப்பாத்திரத்திற்காக அவ்வளவு உழைத்துள்ளார். சாரா சிறப்பாக நடித்துள்ளார். சரத் ரவியை வில்லனாக யாரும் ஒத்துக்கொள்ளவில்லை, ஆனால் படம் பார்க்கும் போது அனைவரும் பாராட்டுவார்கள். நாயகி சாரா உலக சினிமா பார்ப்பவர்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும். இசையமைப்பாளர் ராக்கேஷ் என் நண்பன், என் அடுத்த படத்திற்கும் அவர் தான் இசையமைப்பாளராக இருப்பார். மிக அட்டகாசமாக இசையமைத்துள்ளார். படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. இம்மாதம் 12ஆம் தேதி 12 படம் வருகிறது அனைவரும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது…,

மிக மகிழ்ச்சியாக உள்ளது. சுஷாந்த் கேமராமேன் 6 மாதம் முன் அவருடன் வேலை பார்த்தேன் மிகுந்த திறமைசாலி. அவர் தான் ஆடியோ லாஞ்ச் கூப்பிட்டார். போஸ்டர் பார்த்தாலே படத்தைப்பற்றிப் புரிந்து விடும். போஸ்டர் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் எல்லாமே தங்களுக்கு ஏதாவது முக்கியத்துவம் இருந்தால் தான் நடிப்பார்கள். இத்தனை நல்ல நடிகர்களை நடிக்க வைத்திருப்பதிலேயே படத்தின் வெற்றி உறுதியாகிவிட்டது. இயக்குநர் டார்க் ஹீயுமரில் அழகாகப் படத்தை இயக்கியுள்ளார். லிங்கா பல வருடங்களாக அவரைப்பார்த்து வருகிறேன் ஒரு நடிகரிடம் இன்னொஸன்ஸ் இருந்தால் மக்களுக்குப் பிடிக்கும், ரஜினி சாரிடம் இருக்கும் இன்னொஸன்ஸ் லிங்காவிடம் இருக்கிறது. அவர் ஜெயிக்க வாழ்த்துகள். 100 வது பாடல் எழுதியுள்ள அருண் பாரதிக்கு வாழ்த்துக்கள். தயாரிப்பாளருக்கு தம்பிதுரைக்கு வாழ்த்துக்கள். கண்டண்ட் நன்றாக இருந்தால் எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் படம் ஜெயிக்கும் வாழ்த்துக்கள்.

பரோல், உடன்பால், பெண்குயின், சேதுபதி போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த லிங்கா காதநாயகனாக நடித்துள்ளார். சாரா ஆச்சர் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

மற்றும் வத்திகுச்சி, காலா போன்ற படங்களில் முக்கி கதாபாத்திரத்தில் நடித்த திலீபன், ராதாரவி, சாய் தீனா, ஸாரா, வையாபுரி, சரத்ரவி, அர்ஜெய், அபிஷேக், ஆனந்த் நாக், ஜெயகுமார், சேரன்ராஜ், சரவணன் சீலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சரத் வளையாபதி மற்றும் பிரேண்டன் சுஷாந்த் இருவரும் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். அருண் பாரதி பாடல்களுக்கு ராக்கேஷ் அம்பிகாபதி இசையமைத்துள்ளார். R. K. ஸ்ரீநாத் எடிட்டிங் செய்ய,கலை இயக்கத்தை ஜெய் முருகன் மேற்கொள்ள, ஸ்ரீக்ரிஷ் நடனம் அமைத்துள்ளார்.

மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
தயாரிப்பு – S. உமா மகேஸ்வரி
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் பிரசாந்த் ராமன்.

இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

மிராய் படத்தில் அதிவேக சண்டைக் காட்சிகள் உள்ளன – தேஜா சஜ்ஜா

0

தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஷ்ரியா சரண், ஜெயராம் நடிப்பில், கார்த்திக் கட்டம்னேனி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ஃபேண்டசி படம் “மிராய்”. பீபிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில், தேஜா சஜ்ஜா பேசியபோது,

“அனைவருக்கும் வணக்கம், இங்கு நான் வருகை தந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிராய் திரைப்படம் இம்மாதம் 12ம் தேதி வெளியாகிறது. நீங்கள் அனைவரும் இதுவரை இப்படத்திற்காக கொடுத்த ஒத்துழைப்பை மேலும் தருவீர்கள் என்று நம்புகிறேன். ஆக்ஷன், அட்வெஞ்சர், ஃபேண்டசி, எமோஷன் மற்றும் டிவோஷன் நிறைந்த படம் தான் மிராய்.

ஒரு வருடத்தில் சில படங்களே திரையரங்கில் பார்க்கும் படியாக வெளியாகின்றன; அந்த வரிசையில் மிராய் படமும் இருக்கும். 3 வயது முதல் 80 வயது வரை உள்ள அனைவரும் இப்படத்தை ரசிப்பார்கள். பீபிள் மீடியா பேக்டரி நிறுவனத்துடன் இரண்டாவது முறையாக இணைகிறேன்; இன்னும் பல முறை இணைய ஆசைப்படுகிறேன். எங்களை நம்பியதற்காக விஷ்வா சாருக்கு நன்றி. இயக்குனர் கார்த்திக் கட்டம்னேனி அவர்களால் தான் இது சாத்தியமானது. அவருடைய திரைக்கதை தான் இப்படத்தை சிறப்பித்துள்ளது. AGS நிறுவனத்துடன் முதல் முறையாக இணைந்திருப்பதில் மகிழ்ச்சி. அர்ச்சனாவுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் நன்றி.

மிராய், என்றால் “எதிர்காலத்தின் நம்பிக்கை” என்று அர்த்தம். படத்தில் இன்னொரு அர்த்தம் உள்ளது; அது ஒரு ட்விஸ்ட் மூலம் தெரியவரும்.

மேலும், இப்படத்தை நாங்கள் சீன மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் தயாரித்துள்ளோம். காரணம், சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் இந்திய படங்களுக்கு மார்க்கெட் அதிகம் உள்ளது. இதற்கு முன் வெளியான ஹனுமான் திரைப்படமும் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

நான் தொடர்ந்து ஃபேண்டசி படங்களை நடிப்பதன் காரணம், எனக்குள் இருக்கும் குழந்தைத்தனம் இன்னும் போகவில்லை. எனக்கும் ஃபேண்டசி படங்கள் பார்க்க பிடிக்கும். அதுமட்டுமின்றி, இந்தப் படத்தில் நடப்பவைகள் நிஜத்தில் நடக்க வேண்டும் என்று ஆசை உள்ளது. அது நிஜத்தில் சாத்தியமில்லாததால், சினிமாவில் அதைச் செய்ய விரும்புகிறேன்.

இப்படத்தில் VFX பெரும் சவாலாக இருந்தது. இந்தியத் திரைப்படங்களின் தரம் சர்வதேச தரத்திற்கு உயர வேண்டும் என்பதற்காக அனைத்து வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திரைக்கதை மற்றும் VFX-ல் அதிக திறன் கொண்ட இயக்குனர்கள் பிரசாந்த் மற்றும் கார்த்திக் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி.

ஹனுமான் படம் உலக அளவில் பெரும் வெற்றியை பெற்றது; மக்களின் ஆதரவும் கிடைத்தது. அதனால் மிராய் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க மிகப் பெரிய அளவில் முயற்சி செய்துள்ளோம்.

இப்படத்தில் நாங்கள் வழக்கமான சண்டைக் காட்சிகள் இல்லாமல், அதிவேக சண்டைக் காட்சிகளை அமைக்க முயற்சித்துள்ளோம். அதற்காக, கட்சா மாஸ்டர் மற்றும் நங் மாஸ்டரை தாய்லாந்திலிருந்து வரவைத்தோம். அதுமட்டுமின்றி, நான் தாய்லாந்து மற்றும் பாங்காக் நகரங்களுக்கு சென்று 20 நாட்கள் பயிற்சி மேற்கொண்டேன். இப்படத்தில் நீங்கள் காணும் அனைத்து சண்டைக் காட்சிகளிலும் டூப் இல்லாமல் நான் நேரடியாக நடித்துள்ளேன்.

இப்படம் சர்வதேச அளவிற்கு உயர வேண்டும் என்பதற்காக, ஹிமாலயா, இலங்கை போன்ற பல இடங்களுக்கு சென்று சண்டைக் காட்சிகளை படமாக்கியுள்ளோம்.

அனைவரும் வரும் செப்டம்பர் 12ம் தேதி குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து மிராய் படத்தை கண்டுகளிக்க வேண்டும். இப்படம் நிச்சயம் உங்களை மகிழ்விக்கும்.”

A film in the combination of Shivanna – Venkat Konanki-Pavan Wadeyar … Shooting begins from September 3

0

A new Shivanna film under the banner of KVN Productions and Pavan Wadeyar

Hattrick Hero Shivarajkumar is currently busy with a string of back-to-back films. Now, another new movie of Shivanna is set to take off from September. This film will be helmed by acclaimed director Pavan Wadeyar. Known for delivering several super hit films in Sandalwood, Pavan Wadeyar has previously directed two films for Puneeth Rajkumar. This marks the first time he will be directing Shivarajkumar. The shooting for this film is scheduled to begin on September 3.

Filming Locations: The shooting of the film will take place across various parts of the country. The first phase of the shoot is set to begin in Bengaluru on September 3. Following that, the team has planned schedules in Mandya, Himachal Pradesh, Mumbai, and Hyderabad.Produced by KVN and Wadeyar Movies

Renowned production house KVN Productions is producing the film. The movie is being jointly produced by Wadeyar Movies, owned by Pavan Wadeyar, and KVN, led by Venkat Konanki.

Star Cast – Who’s on Board The film, starring Shivarajkumar in the lead role, is being mounted on a grand scale. The ensemble cast includes veterans like Jayaram, Sai Kumar, Gopalakrishna Deshpande, and Prakash Belawadi, along with talented young actors Sanjana Anand and Dheekshith Shetty.

A High-Octane Commercial Entertainer Backed by a gripping commercial storyline, the film promises to be a complete entertainer. Music will be composed by Ajaneesh Loknath, while Shashank Narayan will handle the editing. This marks the first collaboration between Shivarajkumar, Pavan Wadeyar, and KVN Productions, naturally raising expectations for the film.

KVN Productions மற்றும் Wadeyar Movies தயாரிப்பில், சிவண்ணா – வெங்கட் கோனங்கி (Venkat Konanki) – பவன் வடேயார் (Pavan Wadeyar) இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு, செப்டம்பர் 3 முதல் துவங்குகிறது !!

ஹாட்ரிக் வெற்றியைத் தந்துள்ள சிவராஜ்குமார் (Shivarajkumar) தற்போது பல படங்களில் வெகு பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சிவண்ணாவின் மற்றொரு புதிய படம் செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது. இந்தப் படத்தை சாண்டல்வுட்டில் ( Sandalwood) பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய, புகழ்பெற்ற இயக்குநர் பவன் வடேயார் ( Pavan Wadeyar) இயக்குகிறார். முன்னதாக இவர் புனித் ராஜ்குமாருக்காக ( Puneeth Rajkumar.) இரண்டு படங்களை இயக்கியுள்ளார். ஆனால் சிவராஜ்குமாரை இயக்குவது இதுவே முதல்முறை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 3 ஆம் தேதி துவங்குகிறது.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற உள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 3 அன்று பெங்களூருவில் துவங்குகிறது. அதன் பின் மண்டியா (Mandya) இமாச்சலப் பிரதேசம் ( Himachal Pradesh), மும்பை மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

பிரபல தயாரிப்பு நிறுவனம் KVN Productions இந்தப் படத்தை தயாரிக்கிறது. பவன் வடேயாருக்கு சொந்தமான Wadeyar Movies மற்றும் வெங்கட் கோனங்கி (Venkat Konanki) தலைமையிலான KVN Productions இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன.

சிவராஜ்குமார் நாயகனாக நடிக்கும் இந்தப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிறது. இதில் ஜெயராம், சாய் குமார், கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே (Deshpande), பிரகாஷ் பெலவாடி (Prakash Belawadi) போன்ற மூத்த நடிகர்களும், சஞ்சனா ஆனந்த் மற்றும் தீக்ஷித் ஷெட்டி (Dheekshith Shetty) போன்ற இளம் திறமையாளர்களும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

படம் முழுக்க வணிக அம்சங்களுடன் கூடிய கதைக்களத்தில் அதிரடி ஆக்சன் எண்டர்டெயினராக உருவாகிறது. இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் ( Ajaneesh Loknath) இசையமைக்கிறார். ஷஷாங்க் நாராயண் (Shashank Narayan) எடிட்டிங்கை கவனிக்கிறார். சிவராஜ்குமார் – பவன் வடேயார் (Pavan Wadeyar) – KVN Productions ஆகியோரின் முதல் கூட்டணி என்பதால், இயல்பாகவே இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Pavan Wadeyar joins hands with Hattrick Hero Shivanna for the first time: Produced by KVN and Wadeyar Movies

From the Makers of Goli Soda – Director Vijay Milton Unveils His Next Bilingual Film Title: Gods and Soldiers

0

Rough Note Production is delighted to officially unveil the title of acclaimed filmmaker and cinematographer Vijay Milton’s much-anticipated Tamil-Telugu bilingual project. From the creative force behind the cult favorite Goli Soda series comes a brand-new chapter—Gods and Soldiers.

The title teaser, launched earlier today across social media, has already captured the imagination of audiences and raised expectations with its engaging visuals and powerful tone.

We extend our heartfelt gratitude to the celebrated celebrities and film industry icons who launched and shared the teaser on their social media platforms. Their encouragement has amplified the film’s reach and set the stage for a memorable journey ahead.

Carrying forward the intense, raw spirit of the Goli Soda legacy, Gods and Soldiers features a remarkable ensemble cast including Raj Tarun, Sunil, Vedan, Bharath, Aari, Ammu Abhirami, Kishore, Jeffery, Bharath Sreeni, Paal Dabba, and Actress Vijetha. Together, they promise to bring depth, grit, and authenticity to this powerful narrative.

In a special highlight, Vedan will not only act but also sing in this film, showcasing his dual talent on screen and in the soundtrack.

Marking a major milestone, Paal Dabba is set to feature in a film for the first time, stepping into acting with this Vijay Milton bilingual.

Adding to its strength, the film’s music is composed by Sam CS, known for his evocative and hard-hitting soundscapes, ensuring the soundtrack reaches audiences everywhere with the punch it deserves.

With its compelling title, Gods and Soldiers promises to carry forward the Goli Soda tradition of portraying struggles, resilience, and human spirit with raw realism and emotional power—delivered through Vijay Milton’s unique storytelling.

Rough Note Production sincerely thanks media, well-wishers, and the film fraternity for their continued support as we march forward with Gods and Soldiers, a bold and gripping new addition to the Goli Soda series.

Stay tuned for more exciting updates!

இசையமைப்பாளர் போபோ சசியின் ‘பிஃபோர் ஐ ஃபேட் அவே’ (Before I Fade Away) இசை ஆல்பம் வெளியீடு

0

Music Video▶️ https://youtu.be/gtiwb1PGOhQ?si=7B7uZBGxBH8sIRLK

இசையமைப்பாளர் போபோ சசி, இயக்குநர் யூகி பிரவீன், பாடகி அக்ஷிதா சுரேஷ், இனாரா புரொடக்ஷன்ஸ் கூட்டணியில் உருவான ‘பிஃபோர் ஐ ஃபேட் அவே’ (Before I Fade Away) சுயாதீன இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இசையமைப்பாளர் முரளி இசை ஆல்பத்தை வெளியிட, இசையமைப்பாளர் சி. சத்யா மற்றும் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இணைந்து பெற்றுக் கொண்டனர்.

திரையிசை பாடல்களுக்கு நிகரான வரவேற்பை தற்போது சுயாதீன இசைக்கலைஞர்கள் உருவாக்கும் இசை ஆல்பங்களுக்கும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் திரைப்பட இசையமைப்பாளரும், பிரபல இசைக்கலைஞருமான போபோ சசியின் இசையில் ‘Before I Fade Away’ இசை ஆல்பம் தயாராகி இருக்கிறது. இந்த இசை ஆல்பத்தை யூகி பிரவீண் இயக்க, அரவிந்த் பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இனாரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் பத்மநாபன் இந்த இசை ஆல்பத்தை தயாரித்திருக்கிறார்.

இதன் புரோமோ காணொலி இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வரும் நிலையில் இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இசையமைப்பாளர்கள் முரளி, சி. சத்யா, ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் ஹரி கிருஷ்ணன், பாடகர் ஹைடு கார்த்திக், ராப் பாடகி ஐ.கே.பெர்ரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் சுரேஷ் பத்மநாபன் பேசுகையில், ”யூகி பிரவீனை கடந்த ஓராண்டாக தெரியும். அவருடைய திறமைகளை பார்த்துக் கொண்டே இருந்தேன். ‘விடா முயற்சி விஸ்வரூப வெற்றி’ என்பதற்கு சாட்சியாக பிஃபோர் ஐ ஃபேட் அவே இசை ஆல்பத்தை உருவாகி இருக்கிறார். அவர் ஏற்கனவே திரைப்படங்களுக்கு பாடல் எழுதி இருக்கிறார். இப்படி அற்புதமான ஒரு பாடலை வழங்கியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எங்களுடைய நிறுவனத்தில் இரவு நேரத்தில் பணியாற்றிக் கொண்டே, பகல் பொழுதில் இந்த இசை ஆல்பத்தை உருவாக்கினார். படப்பிடிப்பின் போது கடினமான சூழலிலும் அவர் இயல்பாக அனைவரிடமும் பழகினார். இதற்காகவே நான் அவரை மனதார பாராட்டுகிறேன். இந்த ஆல்பத்தில் இடம்பெறும் பாடலை மட்டும் பாடாமல் ஆல்பத்தில் தோன்றி நடித்ததற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் இளம் திறமைசாலிகளை வாழ்த்த வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

பாடகர்-பாடலாசிரியர்-நடிகர் ஹைடு கார்த்திக் பேசுகையில், ”தற்போது இசை உலகில் புதிய ராப்பர்கள் உருவாகி வருகிறார்கள். திரைப்படங்களுக்கு ராப்பர்கள் முழு பாடலையும் எழுதி, பாடும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த பாணியை 2007ம் ஆண்டிலேயே இசையமைப்பாளர் போபோ சசி தொடங்கி வைத்தார். இங்கு வாழ்த்த வருகை தந்த அனைவருக்கும் நன்றி,” என்றார்.

இசையமைப்பாளர் போபோ சசி பேசுகையில், ”எங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த இசை ஆல்பத்தை தயாரித்த சுரேஷ் பத்மநாபனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பாடலை பாடகி அக்ஷிதா சுரேஷ் மென்மையான குரலில் பாடிவிட்டு சென்றுவிட்டார். பிஃபோர் ஐ ஃபேட் அவே என்பதால் குரலில் அழுத்தமும் வேண்டும் என்று விரும்பினோம். அதற்காக அவரை மீண்டும் தொடர்பு கொண்டு வேற வெர்ஷனில் பாட இயலுமா? எனக் கேட்டோம். அவரும் எந்தவித தயக்கமும் இல்லாமல் பாடினார். அதற்காக தற்போது அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இசை ஆல்பம் மிகச் சிறப்பாக உருவாகியுள்ளது. அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

ராப் பாடகி ஐ.கே. பெர்ரி பேசுகையில், ”பிஃபோர் ஐ ஃபேட் அவே குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இசை ஆல்பம் அழகாக இருக்கிறது.‌ பாடல், வி எஃப் எக்ஸ், இசை என இந்த ஆல்பத்தின் அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருக்கின்றன. திரைப்பட பாடல்களுக்கு வழங்கி வரும் ஆதரவை போல் இதுபோன்ற சுயாதீன இசைக் கலைஞர்களின் பாடல்களுக்கும் தர வேண்டும். எங்களைப் போன்ற சுயாதீன இசைக் கலைஞர்களை வாழ்த்த வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

பாடகி அக்ஷிதா சுரேஷ் பேசுகையில், ”நான் மெலோடி சிங்கர். யூகி பிரவீண் என்னை தொடர்பு கொண்டு ராப் பாடலை பாட இயலுமா எனக் கேட்டார், நானும் முயற்சித்தேன். பாடல் பதிவின்போது ‘இப்படி அல்ல, இப்படி பாட வேண்டும்’ என்று யூகி பிரவீண் சொல்லிக் கொடுத்தார். அதன் பிறகு போபோ சசியும், யூகி பிரவினும் மீண்டும் அழைப்பு விடுத்து இந்த ராப் பாடலை இப்படி பாட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தனர். அவர்களின் வழிகாட்டல் இல்லை என்றால் என்னால் இப்படி பாடியிருக்க இயலாது. என்னுடைய குரல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதற்காக இந்த தருணத்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பாடலுக்கானக் கதை யூகி பிரவீனுடையது, அவருடைய சிந்தனை, அவருடைய கற்பனை தான் இந்தப் பாடல். இந்த பாடலுக்காக அவருடன் செலவிட்ட தருணங்களில் தான் இதன் ஜீவனை புரிந்து கொள்ள முடிந்தது. அதை வெளிப்படுத்துவதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சியும் என்னைக் கவர்ந்தது. இந்தப் பாடலின் இடம்பெறும் அனைத்து நுட்பமான விஷயங்களுக்காக அவர் கடினமாக உழைத்தார். எங்களைப் போன்ற சுயாதீன இசைக்கலைஞர்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆல்பத்திற்கும் உங்களது ஆதரவினை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

பாடலாசிரியர்-ராப் பாடகர் -இயக்குநர் யூகி பிரவீன் பேசுகையில், ”இந்த இசை ஆல்பத்தில் ‘நான் நேத்திக்கு பேஞ்ச மழையில தான் இன்னைக்கு முளைச்ச காளான் இல்ல.. என் கதய படிச்சாக்கா கொழம்பி போய்டுவார் நோலன் கூட…’ என்று ஒரு வரி இடம் பிடித்திருக்கும்.

மெடிக்கல் பில்லிங் டிசைனர் ஆகவும் கிராஃபிக் டிசைனராகவும் பணிபுரிந்திருக்கிறேன். ஆனால் சிறு வயதில் இருந்து இசைத்துறையில் மட்டும் தொடர்ந்து ஆர்வத்துடன் இயங்கி வருகிறேன். இதில் என்றைக்காவது வெற்றி பெற்றிட வேண்டும் என்ற இலக்கினையும் வைத்துக் கொண்டிருந்தேன். அதன் முதல் படி தான் இந்த இசை ஆல்பம். இந்த ஆல்பத்திற்காக 200 சதவீத உழைப்பை வழங்கியிருக்கிறேன். இதற்கு கடவுளின் ஆசி கிடைக்க வேண்டும்.

200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்ட கார்ப்பரேட் கலை நிகழ்ச்சியில் எங்கள் நிறுவனம் சார்பில் கலந்து கொண்டு ராப் பாடலை பாடி முதல் பரிசினை வென்றேன். இதற்காக தயாரிப்பாளர் சுரேஷ் பத்மநாபனை சந்தித்தபோதுதான் அவர் அக்ஷிதா சுரேஷும் நன்றாக பாடுவார் என சொன்னார். அப்படித்தான் எங்களுடைய அறிமுகம் நடைபெற்றது. கடந்த ஒரு வருடமாக நாங்கள் அனைவரும் குடும்பம் போல் இருந்து பணியாற்றி இந்த இசை ஆல்பத்தை உருவாக்கி இருக்கிறோம். இவை அனைத்தும் கடவுளின் கிருபை தான்.

இதற்காக இசையமைத்த போபோ சசிக்கு நான் எவ்வளவு முறை நன்றிகள் சொன்னாலும் போதாது. என்னை முதன் முதலில் திரைத்துறையில் அறிமுகப்படுத்தியவர் அவர்தான். அப்போதெல்லாம் அதிகமாக கானா பாடல்களை தான் பாடிக் கொண்டிருப்பேன். அதற்குப் பிறகுதான் ராப் பாடல் மீது கவனம் திரும்பியது.

‘குளிர் 100’ படத்தில் ஹிப் ஹாப் பாடல்களை அறிமுகப்படுத்தியவர் போபோ சசி தான். அப்போதெல்லாம் திரைப்படங்களில் ராப் கிடையாது.‌ அதன் பிறகு நான் ராப் இசையை பற்றி ஆராய்ச்சி செய்து பாடல்களை எழுதத் தொடங்கினேன். இதுவரை 8 ராப் பாடல்களை எழுதி இருக்கிறேன். இதில் 5 பாடல்களுக்கு போபோ சசி தான் இசையமைத்திருக்கிறார்.

இந்த ஆல்பத்தில் இடம் பிடித்திருக்கும் பாடல் இயல்பான, சாதாரணமான பாடல் கிடையாது. இது ஒரு கதையை சொல்கிறது. வாழ்க்கையில் ஒருவன் தோல்வி அடைகிறான். அதன் பிறகு எப்படி கற்றுக்கொண்டு வெற்றி பெறுகிறான் என்ற ஒரு முழு வாழ்வியலும் இந்தப் பாடலில் இடம் பிடித்திருக்கிறது. இது போன்ற இசை ஆல்பத்தில் கதை சொல்வதை தமிழில் நாங்கள் தான் முதன்முதலாக முயற்சி செய்திருக்கிறோம் என்று நினைக்கிறேன்.

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும் என்ற திருக்குறளின் பொருள் என்னது நூறு சதவீத முயற்சி செய்தால் ஒருவனுடைய வெற்றிக்காக வெற்றி தேவதையே இறங்கி வரும். இதைத்தான் இந்தப் பாடலில் காட்சி மொழியாக விவரித்து இருக்கிறோம். இதற்காக உழைத்த தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

இசையமைப்பாளர் சி. சத்யா பேசுகையில், ”இந்த இளம் திறமைசாலிகளுக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், சரிகம நிறுவனத்திற்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌ சாதாரண இசை ஆல்பங்களை போல் இல்லாமல் சர்வதேச தரத்தில் இந்த இசை ஆல்பம் உருவாகி இருக்கிறது. இந்த இசை ஆல்பத்திற்கான வி எஃப் எக்ஸ், எடிட்டிங், ஒளிப்பதிவு ஆகியவை சிறப்பாக இருந்தன. இதற்காக இந்த குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இசை ஆல்பம் வெளியானப் பிறகும் இதனை விளம்பரப்படுத்துவது முக்கியம். அப்போதுதான் ரசிகர்களை சென்றடையும். இதற்காக தயாரிப்பாளரும், சரிகம நிறுவனமும் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

போபோ சசியின் பாடல்களில் உள்ள ஹிப் ஹாப் இசையை பற்றி சொல்ல வேண்டும் என்றால், அந்த கலாச்சாரத்தை முழுமையாக தெரிந்து கொண்டு இசை அமைத்திருப்பார். இவரைப் போன்ற திறமையான இசையமைப்பாளருக்கு அனைத்து தரப்பினரின் ஆதரவு தேவை.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா என்னுடைய இனிய நண்பர். தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் புதிய விஷயங்களை மேற்கொண்டு வருகிறார், இத்தகைய முயற்சிகள் அவசியமாக தேவைப்படும் காலம் இது.‌

பாடகி அக்ஷிதா சுரேஷ் தற்போது நான் இசையமைத்து வரும் ஒரு பாடலை பாடியிருக்கிறார். அந்தப் பாடல் இன்னும் முழுமை அடையவில்லை.‌ அந்த பாடலில் அவருடைய திறமை தெரிந்தது. அவர் இன்னும் பல உயரங்களை தொடுவார். அவருடைய குரல் தனித்துவமானது, நிறைய பாடல்களை பாடுவதற்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்,” என்றார்.

இசையமைப்பாளர் முரளி பேசுகையில், ”நான் இளையராஜாவிடமும், அண்ணன் தேவாவிடமும் கீபோர்ட் பிளேயராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் வீட்டுக்குச் சென்று, அதிகாலையில் வீட்டிலிருந்து புறப்பட்டு விடுவேன். என் மகன் சசி அப்போது ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் காலையில் என் அறையை திறந்தவுடன் என் கண்ணில் படும்படி ஒரு கடிதம் இருந்தது. அதில் ‘அன்புள்ள அப்பாவிற்கு, உங்கள் மகன் சசி எழுதிக் கொள்வது. எனக்கு இசை மீது ஆர்வம் உள்ளது. நீங்கள் இசை மீது வைத்திருக்கும் பக்தியும் ,அன்பும் என்னிடமும் இருக்கிறது. நீங்கள் என்னுடைய படிப்பிற்காக செலவழிப்பதில் பாதியை இசை கற்பதற்காக செலவழிக்க வேண்டும். அதற்காக இசைக்கருவியை வாங்கித் தாருங்கள். நாளைக்கு நானும் பெரிய இசையமைப்பாளராக வருவேன்,” என எழுதி இருந்தார், அதை இன்று நிரூபித்து விட்டார்.

அனைவரும் இசையமைப்பாளராக முடியும். ஆனால் இவனுடைய ஒலி அமைப்பு வித்தியாசமாக இருக்கும். ஓசைகளை எல்லாம் புதிதாக உருவாக்குவான். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த ஆல்பத்தின் பாடல்களை கேட்டேன். மிகவும் நன்றாக இருக்கின்றன. இதற்காக உழைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசுகையில், ”ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு போல் இந்த இசை ஆல்பத்தின் வெளியீட்டை சாத்தியமாக்கி இருக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் பத்மநாபனுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இசை ஆல்பத்தின் இயக்குநர் யூகி பிரவீனுக்கும், வி எஃப் எக்ஸ் குழுவினருக்கும் வாழ்த்துகளும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் கீபோர்ட் பிளேயராக மாறியதற்கு சித்தப்பா முரளி தான் காரணம். நான் இசையை முழுமையாக கற்கவில்லை. தேவா, சபேஷ்-முரளி அவர்களின் இசையமைக்கும் பாணியை பார்த்து தான் கற்றுக் கொண்டேன்.

பாடகி அக்ஷிதா சுரேசிற்கு ஆதரவு அளித்த அவரது குடும்பத்தினருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

போபோ சசி ஒரு பாடலுக்கு பயன்படுத்தும் சவுண்டிங் புதிதாகவும், வித்தியாசமானதாகவும் இருக்கும், கேட்பதற்கு இனிமையாகவும் இருக்கும். என்னுடைய வெற்றிக்கு அவருடைய பங்களிப்பும் ஒரு காரணம் என்று சொல்வேன். அவரும் மிகப்பெரிய இசையமைப்பாளராக உயரத்திற்கு செல்ல வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இந்த இசை ஆல்பத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

“யோலோ” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா !!

0

MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S. சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “யோலோ”.

வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

நிகழ்வில் பேசியவர்கள்

தயாரிப்பாளர் மகேஷ்:
எங்கள் படத்தை வாழ்த்த வந்த திரை ஆளுமைகளுக்கு நன்றி. படம் இப்போது தான் ஆரம்பித்தது போல உள்ளது, முடிந்து இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. அமீர், சமுத்திரக்கனி சார் நிறைய ஆதரவு தந்தார்கள். ஒளிப்பதிவாளர் சூரஜ் பற்றி ஏன் அதிகம் பேசுகிறோம் என்று படம் பார்க்கும் போது உங்களுக்குத் தெரியும். ஆகாஷ் மற்றும் தேவ் நடிகர்களாக இல்லாமல் எனக்கு மிகவும் பக்கபலமாக இருக்கிறார்கள். எனக்குப் பலமாக இருந்து உதவிய அனைவருக்கும் நன்றி. சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் சார் நிறைய அறிவுரைகள் தந்தார். Generous Entertainment நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. செப்டம்பர் 12 அனைவரும் திரையரங்குகளில் படம் பார்த்து ஆதரவு தாருங்கள். நன்றி.

ஒளிப்பதிவாளர் சூரஜ்:
நன்றி சொல்வதைத் தவிர ஏதும் தோன்றவில்லை. நானும் இயக்குநர் சாமும் கல்லூரி முதலே நண்பர்கள், இப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி, நன்றாகச் செய்துள்ளேன் என நம்புகிறேன். படம் பாருங்கள், அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.

இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியர்:
கடவுளுக்கு நன்றி. நல்ல மனிதர்களோடு சேர்ந்து வேலை செய்யும் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. வளர்ந்து வரும் ஒரு இசையமைப்பாளருக்கு ஒரு படத்தில் ஆறு பாடல்கள் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய விஷயம். என் சவுண்ட் இன்ஜினியர் கிபிக்கு நன்றி. என்னோடு வேலை செய்த அனைவருக்கும் நன்றி. படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். நன்றி.

மாஸ்டர் ரகு:
நான் மாஸ்டராக கார்டு வாங்கிய பிறகு செய்த முதல் படம் இது. எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இசையமைப்பாளர் மிக அற்புதமான இசையை தந்துள்ளார். சூரஜ் சார் இந்தப்படத்தில் மிகப்பெரிய உறுதுணையாக இருந்தார். தேவ் மிகப்பெரிய உழைப்பாளி. என்னோடு உழைத்த டான்சர்களுக்கும் நன்றி.

ஸ்டண்ட் மாஸ்டர் டேஞ்சர் மணி:
இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர் சாம் சார் மற்றும் மகேஷ் சாருக்கு நன்றி. படம் மிக அற்புதமாக வந்துள்ளது. கண்டிப்பாக நீங்கள் திரையில் ரசிப்பீர்கள். சமுத்திரக்கனி அண்ணாவின் நிமிர்ந்து நில் படத்தில் நானும் சாமும் வேலை பார்த்துள்ளோம். இப்போது நாங்கள் நிமிர்ந்து நிற்கிறோம் என்று சொல்வதில் பெருமை. இப்படத்தில் அத்தனை நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். படம் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.

எழுத்தாளர் ராம்ஸ் முருகன்:
இது என் நண்பனின் படம் என்பதில் பெருமை. சமுத்திரக்கனி சார், அமீர் சார் வந்திருப்பது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் மகேஷ் அவரைப் பார்த்தால் அவர் தயாரிப்பாளர் போலவே தெரியவில்லை, நண்பராகவே இருந்து வருகிறார். இப்படத்தை மிகுந்த உழைப்பில் உருவாக்கியுள்ளோம். அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.

TrendLoud சார்பில் ஜிதேஷ்:
தயாரிப்பாளர் மகேஷ் அவர்களுக்கு நன்றி. அவர் மிக பாசிடிவானவர். சகிஷ்னா சேவியர் ஒரு படத்தில் 6 பாடல்கள் கிடைப்பது அரிது என்றார், அந்த ஆறு பாடல்களும் TrendLoud க்கு கிடைத்தது சந்தோஷம். எல்லா பாடல்களும் மிகச்சிறப்பாக வந்துள்ளது. படம் அருமையாக வந்துள்ளது. தேவ் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தாருங்கள்.

VJ நிக்கி:
நான் நிறைய மேடைகளில் தொகுப்பாளராக இருந்துள்ளேன். பத்திரிக்கையாளனாக இருந்துள்ளேன். அங்கிருந்து இன்று இங்கு வந்திருப்பது மிகப்பெரிய ஆசீர்வாதம். மிகப்பெரிய வாய்ப்பு தந்ததற்கு நன்றி. ஒரு நாள் கால் வந்து, “நீதான் ஹீரோ, ஆபீஸ் வா” என்றார்கள். நான் பிராங்க் செய்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் செகண்ட் லீட் என்று சொல்லி ஷூட்டிங் கூப்பிட்டுப் போய் விட்டார்கள். அங்கு ஆகாஷ் பிரேம், திவாகர், யுவராஜ் எல்லோரிடமும் நீ தான் செகண்ட் லீட் என்று சொல்லி இருந்தார்கள். நான் படம் நடிக்கிறேன் என்பதை என் அப்பாவே நம்பவில்லை. இது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு. படம் சூப்பராக வந்துள்ளது. அனைவருக்கும் பிடிக்கும்.

நடிகர் ஹார்ட் பீட் கிரி:
இந்த மேடையில் இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. “You Only Live Once” என்பதுதான் யோலோ. தலைப்பே சிறப்பாக உள்ளது. நண்பர்களாகப் பெரிய ஆளுமைகள் வாழ்த்த வந்துள்ளதில் மகிழ்ச்சி. சாம் சார் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

Generous Entertainment சார்பில் கோகுல்:
இப்படத்தை வெளியிடும் உரிமையை Generous Entertainment நிறுவனத்திற்குத் தந்ததற்கு நன்றி. மகேஷ் சார் இப்படத்தை தயாரித்து உழைத்ததைப் பற்றிப் பேசினார். புது முகங்களை நம்பி வாய்ப்பு தந்த இந்த குழுவிற்கு பத்திரிக்கையாளர்கள் முழு ஆதரவு தர வேண்டும். தேவ் சினிமாவில் பல வருடங்களாக இருக்கிறார். இப்போது தான் ஹீரோவாக மாறியுள்ளார். மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். அனைவரும் படத்திற்கு ஆதரவு தாருங்கள். நன்றி.

நடிகர் ஆகாஷ் பிரேம்:
படத்தில் மதன் கேரக்டருக்கு நான் சரியாக இருப்பேன் என்று நம்பி என்னை அழைத்த உதவி இயக்குநர் ஸ்டீபன் சாருக்கு நன்றி. அவர் வார்த்தையை நம்பி எனக்கு வாய்ப்பு தந்த சாம் சார், மகேஷ் சாருக்கு நன்றி. மகேஷ் சார் மிகச்சிறந்த தயாரிப்பாளராக வருவார். ஒரு வருடத்திற்கு முன் இப்படத்திற்குப் பூஜை போட்டோம். இப்போது படம் முடிந்து வந்துவிட்டது. இந்த திட்டமிடல் சினிமாவில் மிகப்பெரிய விஷயம். இந்தப்படத்தில் நடித்த அனைவருக்கும் என் நன்றிகள். எங்களை அழகாக காட்டிய சூரஜ் சாருக்கு நன்றி. இப்படத்தில் நான் ஒரு பாடலும் பாடியுள்ளேன். அந்த வாய்ப்பு தந்த இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியர் சாருக்கு நன்றி. வயலண்ட் படங்களுக்கு மத்தியில் உங்களை ஆச்சரியப்படுத்தும் படமாக இது இருக்கும். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள். நன்றி.

நடிகர் படவா கோபி:
2009 லேயே என்னை நடிகனாகச் செதுக்கி இப்போது ஸ்கூல் பஸ் படத்திலும் வாய்ப்பு தந்த சமுத்திரக்கனி சாருக்கு நன்றி. இந்தப்படத்தில் நான் முதலில் காமெடி தான் செய்வதாக இருந்தேன், ஆனால் சாம் தான் என்னை ஹீரோயின் அப்பாவாக நடிக்க வைத்தார். என்னுடைய மகள் 5 வயதில் இருந்தபோது தவறிவிட்டார். ஆனால் டீனேஜில் மகள் என்ன செய்வார் என்பதை இப்படம் மூலம் அனுபவித்தேன். இப்படத்தின் ஷூட் அவ்வளவு ஜாலியாக இருந்தது. சாம், ராம் இருவரும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்தார்கள். செப்டம்பர் 12 படம் வருகிறது – ஒரு இளமை கொண்டாட்டம். அனைவரும் பார்த்து ரசிக்கவும். நன்றி.

நடிகை தேவிகா:
நான் தமிழில் செய்யும் முதல் படம் யோலோ. இதற்கு முன் ஒரு சீரிஸ் செய்திருந்தேன். இப்பட வாய்ப்பு தந்த சாம் சாருக்கு நன்றி. சமுத்திரக்கனி சாரின் தெலுங்கு படத்தில் நடித்த போது, சாம் சார் பார்த்து இந்த வாய்ப்பை தந்தார். இப்படத்தில் என்னுடன் நடித்த அனைவருக்கும் நன்றி. படம் மிக அருமையாக வந்துள்ளது. செப்டம்பர் 12 எல்லோரும் தியேட்டரில் படம் பாருங்கள். நன்றி.

தயாரிப்பாளர் K.V. துரை:
நாங்கள் Access Film Factory-யில் நிறைய புது திறமையாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். எங்கள் குழுவிலிருந்து ஒரு திறமையாளரான தேவ்வை இப்படத்தில் நடிகராக அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. டிரெய்லர் அற்புதமாக உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள்.

இயக்குநர் சதீஷ்:
படக்குழு அனைவருமே இளமைத் துள்ளலுடன் இருக்கிறார்கள். படம் பார்க்க மிக நன்றாக உள்ளது. சாம் மிகச்சிறப்பாக உழைத்துள்ளார். தேவ் எனக்குத் தம்பி மாதிரி. அவன் ஹீரோவாகியிருப்பது மகிழ்ச்சி. சிறப்பாக வர வேண்டும். வாழ்த்துகள்.

இயக்குநர் ARK சரவணன்:
டிரெய்லர் நன்றாக உள்ளது. அதில் ஒன்றை மறைத்து வைத்துள்ளனர், அது படத்தில் சர்ப்ரைஸ் ஆக இருக்கும். தேவுக்காக தான் வந்துள்ளேன். அவரிடம் தான் முதலில் மரகதநாணயம் கதை சொன்னேன். Access Film Factory-யில் அவர் நிறைய உழைத்துள்ளார். இப்போது ஹீரோவாகியிருப்பது மகிழ்ச்சி. இந்த நேரத்தில் டெல்லி சார் இருந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார். தேவ் பெரிய ஹீரோவாக வர வாழ்த்துக்கள்.

நடிகர் தேவ்:
இந்த வாய்ப்பு வரக் காரணமாயிருந்த அரவிந்த் பிரதருக்கு நன்றி. அவர் தான் இப்படத்திற்கு ஆள் தேடுகிறார்கள் என என்னை அனுப்பினார். கதை கேட்டேன், ரொம்ப பிடித்தது. என்னைத் தேர்ந்தெடுப்பார்களா என சந்தேகம் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் போன் செய்து, “புதுமுகம் தான் வேண்டும், நீங்கள் பொருத்தம்” என்று சொன்னார். மகிழ்ச்சி. தயாரிப்பாளர் மொத்த டீமுக்கும் சுதந்திரம் தந்தார். சாம் சார் பக்காவாக திட்டமிட்டு உழைத்தார். என்னுடன் நடித்த அனைவருக்கும் நன்றி. என்னை இப்படிப் பார்க்க ஆசைப்பட்ட என் அப்பா, அம்மா, மாமா மூவரும் இல்லை. அவர்களின் ஆசிர்வாதத்தில்தான் இது நடந்துள்ளது. செப்டம்பர் 12 யோலோ திரைக்கு வருகிறது. அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள். நன்றி.
இயக்குநர் ஆர். கே. செல்வமணி
இந்த விழாவிற்கு எதுவும் தெரியாமல் தான் வந்தேன். வந்த பிறகுதான் தெரிகிறது இது என் குடும்ப விழா என்று. ஹீரோ தேவ் எனக்குச் சின்ன வயதிலிருந்து தெரியும். அவரை எனக்கு பூர்ணேஷ் எனத்தான் தெரியும், படத்திற்காக தேவ் என மாறியுள்ளார்.அவரது மாமா டெல்லி பாபு, உலகத்தின் மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவராக இருந்தார். அவருக்குத் தீமையே தெரியாது, நன்மை தான் செய்வார். மிகச் சிறந்த இயக்குநர்களை, மிகச் சிறந்த படைப்புகளை உருவாக்கிய தயாரிப்பாளர். காலம் அவரை நம்மிடமிருந்து பிரித்து விட்டது. அவர் தன் மகனை ஹீரோவாக்க வேண்டுமென்று பல முறை சொல்லியுள்ளார். இன்று அந்த ஆசை நிறைவேறியுள்ளது மகிழ்ச்சி. அவருடைய ஆசி உனக்கு எப்போதும் உண்டு.

“YOLO” என்றால் என்னவென்று தெரியவில்லை. இங்கு வந்த பிறகுதான் கேட்டேன் — You Only Live Once என்றார்கள். உண்மை தான், நாம் ஒரு முறை தான் வாழ்கிறோம், அதை அழகாக வாழ்வோம்.

இந்த படத்தில் எல்லோரும் இளமையாக இருக்கிறார்கள். எல்லோரும் தங்கள் முழு உழைப்பைத் தந்துள்ளார்கள். சகிஷ்னா வரும்போதே 6 பாடலுடன் வந்துள்ளார். சாம், சமுத்திரகனி, அமீர் மாதிரி இயக்குநர்களுடன் வேலை செய்திருக்கிறார், அதுவே அவர் திறமையைச் சொல்லும்.

எனக்கு முதல் படத்துக்குச் சம்பளம் ₹14,000 தான். ஆனால் அடுத்த படத்துக்குச் சம்பளம் ஒரு கோடி ரூபாய். அதனால் முதல் படத்துக்குச் சம்பளத்துக்கு அலையாதீர்கள். முதல் படத்தோட பட்ஜெட் என்னவோ அது தான் உங்கள் சம்பளம். ஏனெனில் என்னை நம்பி ஒரு தயாரிப்பாளர் 1 கோடி போடுகிறார் என்றால் அது தான் என் சம்பளம். அப்படி இயக்குநர்கள் நீங்கள் நினைத்தால்தான் அடுத்து ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்க முடியும். இப்படத்திற்கு உழைத்திருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள். நன்றி, வணக்கம்.

இயக்குநர் அமீர்
இந்த விழாவில் கலந்து கொண்ட எங்களுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்கிறது. ஆனால் பெருந்தன்மையோடு காரணமில்லாமல் கலந்து கொண்ட அண்ணன் ஆர். கே. செல்வமணி அவர்களுக்கு நன்றி.

புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கு “கேப்டன்” எனும் பெயர் நிரந்தரமாக அமையக் காரணமானவர். அவருடைய மறைவுக்கு பின்னாடியும் ஓடிய கேப்டன் பிரபாகரன் படத்தை தந்தவர். இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்றைக்கும் திரையிடப்பட்டு ஒரு மாபெரும் வெற்றி அடைகிறது என்றால் அதற்குக் காரணம் அந்த படத்தின் தரம்.

என்னுடைய முதல் படம் மௌனம் பேசியது முதல் இப்போ வரைக்கும் நிறைய அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ் என்கிட்ட இருந்து வெளியில் போயிருக்கிறார்கள். அதில் பாதி பேரின் பெயரே எனக்கு தெரியாது. “சார், உங்களோடு தான் ஒர்க் பண்ணேன்” என சொன்னால் “அப்படியா, சரி ஓகே” அப்படின்னு சொல்வேன். ஏன்னா ஒரே ஒரு ஷெட்யூலில் மட்டும் தான் ஒர்க் பண்ணியிருப்பான். அடுத்த ஷெட்யூலில் இருக்க மாட்டான். அப்படிப்பட்டவர்கள் ஒரு 30–40 பேர் இருக்கிறார்கள். ஆனால் வெற்றி பெற்றவர்கள் மிகக் குறைவு தான். அதில் சாம் ஒருவர்.

எல்லாரும் கனி பற்றி தான் சொன்னார்கள். அவன் இளகிய மனசுக்காரன். பருத்திவீரன் படப்பிடிப்பில் யாரையும் திட்டக்கூட மாட்டான். இப்போது அவனை நடிகனாகப் பார்க்கப் பிரமிப்பாக இருக்கிறது. அவனுடைய வளர்ச்சிக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

இந்தப் படத்தின் ஹீரோ பற்றி எனக்கு பெருசா ஒன்றும் தெரியாது. பொதுவாக ஒரு பழமொழி சொல்வார்கள்: “ஊராம் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானா வளரும்?” என்று. அவருடைய மாமா நிறைய புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்திருக்கிறார். மரகத நாணயம் எடுத்த சரவணன், பேச்சலர் எடுத்த சதீஷ் — இவர்களை எல்லாம் அறிமுகப்படுத்தியதால் தான் இன்று மகேஷ் என்ற தயாரிப்பாளர் மூலமாக தேவ் ஹீரோவாகி இருக்கிறார்.

தேவ் தன் அப்பா அம்மா இந்த மேடையில் இல்லை, அவர்கள் இருக்கனும்னு ஆசைப்பட்டேன்னு சொன்னார். வாழ்க்கை அப்படி நம்ம நினைப்பது போல நடக்காது. அப்படி நினைத்த மாதிரி நடந்ததுன்னா அது வாழ்க்கையே இல்லை. பொதுவாக சொல்வார்கள் — நீ போகும் பாதையில் இடையூறு இல்லையென்றால் அது உனக்கான பாதை இல்லை. நீ போட்ட பாதையில் இடையூறு இருந்தால் அதைச் சரி பண்ணினால்தான் அது உன் பாதையாக இருக்கும்.

நிச்சயமாக இந்த படம் உங்களுக்கு ஒரு புது அனுபவத்தை தரும் என நம்புகிறேன். சாம் என்கிட்டயும் ஒர்க் பண்ணியிருக்கான், கனிகிட்டயும் ஒர்க் பண்ணியிருக்கான். ஆனா இருவரின் பாணியையும் பின்பற்றாமல் புதுசாக படம் எடுத்திருக்கான். ஒவ்வொன்றையும் கவனமாகச் செய்துள்ளான். டிரெய்லரில் அது தெரிகிறது.
படத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவரும் நம்பிக்கையோடு பேசினார்கள். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற பிரார்த்திக்கிறேன். நன்றி.

இயக்குநர் சாம்
முதலில் என் அப்பா அம்மாவுக்கு நன்றி. அவர்களால்தான் இன்று நான் இங்கு நிற்கிறேன்.அமீர் சார் ஒரு சிங்கம் மாதிரி. அவருடன் வேலை செய்வது சவாலானதாக இருந்தது. அவர் கடின உழைப்பாளி. தயாரிப்பாளரின் பணத்தை வீணாக்கக் கூடாது என்பதை அவரிடம்தான் கற்றுக்கொண்டேன். அவரால்தான் புதுமுகங்களை வைத்து படம் எடுக்க தைரியம் வந்தது.

நான் சோர்வாக இருக்கும் போதெல்லாம் அமீர் சாரும், கனி சாரும் என்னை ஊக்கப்படுத்தினார்கள். அவர்கள் எனக்கு இப்போதுவரை நிறைய உதவி செய்திருக்கிறார்கள்.
கனி சார் எந்த ஒரு நொடியையும் வீணாக்க மாட்டார். அவரிடமிருந்து அதைக் கற்றுக்கொண்டேன். “எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும்” என்பார். அவர் இந்தப் படத்திற்குப் பெரிய ஆதரவாக இருந்தார்.

எங்கள் அழைப்பை மதித்து வந்த ஆர். கே. செல்வமணி சாருக்கு நன்றி. எனக்கு இப்பட வாய்ப்பை தந்த மகேஷ் சாருக்கு நன்றி. அவர் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்த உறுதுணையாக இருந்தார். அதுபோலவே தேவை லீடாக அறிமுகப்படுத்தினார்.

ஆகாஷ் ஒரு அப்பாவி பையனாக நன்றாக நடித்துள்ளார். பலரைத் தேடி கடைசியாக தேவிகாவை ஒப்பந்தம் செய்தோம். அவர் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.
என் நண்பன் ராம் — கல்லூரியிலிருந்தே ஒன்றாக வேலை செய்திருக்கிறோம். இன்ஸ்டிடியூட்டில் சூரஜ் உடன் பணிபுரிந்திருக்கிறேன். நான் கேட்டதைச் சிறப்பாகச் செய்து தந்துள்ளார்.சகிஷ்னா இந்தப் படத்தில் 6 வெவ்வேறு பாடல்களை மிகச் சிறப்பாக உருவாக்கியுள்ளார்.எடிட்டர் ரமேஷ் நேரடியாக வந்து எனக்கு உதவினார். தயாரிப்பில் நாகராஜ் புரொடக்ஷன் மேனேஜர் பெரிய ஆதரவாக இருந்தார்.என் உதவி இயக்குநர்கள் குழு என்னைவிட வேகமாக இருப்பார்கள். ரகு மாஸ்டர், டேஞ்சர் மணி மாஸ்டர் இருவருக்கும் நன்றி.பாடலாசிரியர்கள் சூப்பர் சுப்பு, முத்தமிழ், சதீஸ்காந்த், சகிஷ்னா சேவியர், மகேஷ் செல்வராஜ் — இவர்களின் வரிகள் படத்துக்கு வலு சேர்த்துள்ளன.
படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. படவா கோபி பெரிய ஆதரவாக இருந்தார். நன்றி.

இது இளமையான எண்டர்டெயின்மென்ட் படம். நிச்சயம் படம் பார்ப்பவர்களை திருப்திப்படுத்தும்.
“YOLO” செப்டம்பர் 12 அன்று திரைக்கு வருகிறது.மீடியா நண்பர்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். நன்றி.

இயக்குநர், நடிகர் சமுத்திரகனி
இறைவனுக்கு நன்றி. மிக மகிழ்ச்சியான தருணம். என் படத்தை விட அதிக சந்தோசமாக உள்ளது.அமீர் அண்ணனுக்கு நன்றி சொல்ல வேண்டும். பருத்திவீரன் படத்தில் தான் நானும் சாமும் சந்தித்தோம். அமீர் அண்ணன் எங்களிடம் நிறைய தாக்கத்தை ஏற்படுத்தினார்.

சாமுக்கும் எனக்கும் இனிமையான பயணம். அண்ணனிடமிருந்து வந்த பிறகு “இவனை விட்டு விடக்கூடாது” என நினைத்து என்னுடன் இணைத்துக் கொண்டேன். அவன் எனக்காக நிறையச் செய்துள்ளான். இந்த மேடை அவனுக்கு ரொம்ப லேட்டாக கிடைத்துள்ளது. அதனால் இந்தப் படத்திற்காக அவனுடன் நிற்க வேண்டும் என நினைத்தேன்.

இந்தப் படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும். ஏனெனில் அவ்வளவு உழைப்பைச் செய்திருக்கிறார்கள். படத்தில் உண்மையும், உணர்வும் இருக்கிறது.
தேவ் கவலைப்படாதீர்கள், உங்கள் அப்பா அம்மா மாமா ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு. அவர்கள் இங்கு தான் இருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.நண்பன் மகேஷ் இந்தக் குழுவின் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.

படத்தின் குறிப்பு

நாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நிகழ்வு வாழ்க்கையில் நடந்தால் — அதுவே இந்தப் படத்தின் ஃபேண்டஸி மையம்.
மனதை இலகுவாக்கி, முகத்தில் புன்னகை மலரச் செய்யும் அழகான காதல் திரைப்படமாகவும், இன்றைய தலைமுறை வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாகவும், ரொம்-காம் ஜானரில் கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்மென்ட்டாகவும் இப்படம் உருவாகியுள்ளது.

இயக்குநர் அமீர் மற்றும் சமுத்திரகனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய S. சாம் இப்படத்தை இயக்கியுள்ளார்.

நடிகர்கள்

தேவ்

தேவிகா

படவா கோபி

ஆகாஷ் பிரேம்குமார்

பிரவீன்

நித்தி பிரதீப்

திவாகர்

யுவராஜ்

விஜே நிக்கி

தீபிகா

தீப்சன்

சுப்ரு

சுவாதி நாயர்

பூஜா ஃபியா

சுபா கண்ணன்

கலைக்குமார்

தொழில்நுட்பக் குழு

தயாரிப்பு நிறுவனம் – MR Motion Pictures

தயாரிப்பாளர் – மகேஷ் செல்வராஜ்

இயக்கம் – S. சாம்

ஒளிப்பதிவு – சூரஜ் நல்லுசாமி

இசை – சகிஷ்னா சேவியர்

எடிட்டிங் – A. L. ரமேஷ்

கலை இயக்கம் – M. தேவேந்திரன்

கதை – ராம்ஸ் முருகன்

ஸ்டண்ட் – டேஞ்சர் மணி

நடனம் – கலைக்குமார், ரகு தாபா

திரைக்கதை – S. சாம், ராம்ஸ் முருகன், பண்பு செல்வன், மகேஷ் செல்வராஜ்

பாடல்கள் – முத்தமிழ், சூப்பர் சுப்பு, சதீஸ்காந்த், சகிஷ்னா சேவியர், மகேஷ் செல்வராஜ்

உடைகள் – நட்ராஜ்

உடை வடிவமைப்பு – மீனாட்சி ஸ்ரீதரன்

ஸ்டில்ஸ் – மணியன்

தயாரிப்பு நிர்வாகி – புதுக்கோட்டை M. நாகு

விளம்பர வடிவமைப்பு – யாதவ் JBS

மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Dulquer Salmaan’s Wayfarer Films’ Daring Step – Lokah Writes a New Chapter in Indian Cinema

0

Dulquer Salmaan’s Wayfarer Films production “Lokah: Chapter One – Chandra” has been wholeheartedly embraced by audiences worldwide. This is the seventh film produced under the Wayfarer banner. Crafted to meet global standards, this Malayalam film has crossed the borders of Kerala to earn widespread acclaim, with applause directed not only at the film but also at Dulquer Salmaan and Wayfarer Films for their vision.

By producing a film with such technical perfection, and by placing a female character at its very center to narrate a story on such a massive canvas—something never before seen in Malayalam cinema—Dulquer has taken an extraordinary step forward. It can be described as one of the boldest and far-sighted decisions ever made by a Malayalam producer. With this, a new Superhero Cinematic Universe has begun, positioning Wayfarer Films as a catalyst for Malayalam cinema to break barriers and expand beyond boundaries. Known for gifting Malayalam audiences with remarkable films earlier, the banner has now set a milestone in the industry with Lokah. Dulquer Salmaan’s daring step through this film is now being etched into the history of Indian cinema itself. Not just as an actor, but also as a producer, Dulquer’s contribution to Malayalam cinema will forever be read alongside the history being written through Lokah.

Equally noteworthy is the name Dominic Arun. As a director and writer, he has brilliantly visualized and executed the film, astonishing audiences with his craft. Cinematographer Nimish Ravi has delivered visuals of such stunning quality that one might even question if this could truly be a Malayalam film. Production Designer Banglan and Art Director Jithu Sebastian have magnificently built the fascinating, vibrant, and mysterious world in which the story unfolds. Composer Jakes Bejoy has been praised for the rhythm, thrill, and emotional depth he infused through his background score. Chaman Chacko’s precise editing and Yannick Ben’s adrenaline-pumping action choreography stand out as highlights of the film.

The movie is receiving an overwhelming response both within Kerala and internationally, while also performing impressively at the box office. Kalyani Priyadarshan, who plays the title role, has earned high acclaim for her stellar performance. Alongside her, Naslen, Sandy, Chandu Salim Kumar, Arun Kurian, Vijayaraghavan, Sarath Sabha, and several guest stars have also captured the attention of the audience. As the first installment of a multi-part cinematic universe, Lokah has successfully laid a strong foundation in the hearts of viewers.

Executive Producers – Jom Varghese, Bibin Perumbally, Additional Screenplay – Shanthi Balachandran, Makeup – Ronax Xavier, Costume Designers – Melvy J, Archana Rao, Stills – Rohith K Suresh, Amal K Sadar, Production Controllers – Rini Divakar, Vinosh Kaimol, Chief Associate – Sujith Suresh

துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனத்தின், துணிச்சலான முயற்சியாக “லோகா” திரைப்படம் – இந்திய சினிமாவில் புதிய சரித்திரம் படைத்து வருகிறது

துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் ஒன் – சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது. Wayfarer Films பேனரில் உருவான ஏழாவது படமிது. உலகத் தரத்துக்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மலையாள படம், கேரளாவின் எல்லைகளைத் தாண்டி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. படம் மட்டுமல்லாமல், துல்கர் சல்மானுக்கும் Wayfarer Films க்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

உயர்தர தொழில்நுட்பத்துடன் இப்படத்தை உருவாக்கி, ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து, இவ்வளவு பெரிய கேன்வாஸில் கதை சொல்லியிருப்பது—மலையாள சினிமாவில் இதுவரை நடந்திராத ஒன்று. இதன் மூலம் துல்கர் மிகத் துணிச்சலான, தொலைநோக்குடன் கூடிய முடிவை எடுத்துள்ளார். இது மலையாள சினிமா தயாரிப்பாளர்களின் வரலாற்றில் வித்தியாசமான ஒரு முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் புதிய சூப்பர் ஹீரோ சினிமாடிக் யூனிவர்ஸ் தொடங்கப்பட்டுள்ளது. எல்லைகளை உடைத்து மலையாள சினிமாவை உலகளவில் கொண்டு செல்லும் சக்தியாகவே Wayfarer Films மாறியுள்ளது. இதற்கு முன் பல சிறந்த படங்களை மலையாள ரசிகர்களுக்குக் கொடுத்திருந்தாலும், “லோகா” மூலம் இந்த பேனர் ஒரு புதிய மைல்கல்லை அடைந்துள்ளது. துல்கர் சல்மான் எடுத்த துணிச்சலான இந்த முயற்சி, இந்திய சினிமாவின் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்துள்ளது. நடிகராக மட்டுமல்ல, தயாரிப்பாளராகவும் துல்கரின் பங்களிப்பு லோகா மூலம் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.

இப்படத்தின் முக்கிய சிறப்பாகத் திகழ்வது இயக்குநர் டொமினிக் அருண். இயக்குநராகவும், எழுத்தாளராகவும் அவர் வெளிப்படுத்திய கற்பனை மற்றும் கலைத்திறன் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி கொடுத்த காட்சிகள், இது உண்மையிலேயே ஒரு மலையாளப் படமா என்ற கேள்வியை எழுப்பும் அளவிற்கு உலகத் தரத்தில் இருக்கின்றன. புரடக்சன் டிசைனர் பங்களன் ( Banglan) மற்றும் ஆர்ட் டைரக்டர் ஜீது செபாஸ்டியன் (Jithu Sebastian) சேர்ந்து இந்த படத்தின் அதிசயமிக்க, வண்ணமயமான, மர்மமிகு உலகை உருவாக்கியுள்ளனர். இசையமைப்பாளர் ஜேக்ஸ் பெஜாய் (Jakes Bejoy) , தனது பின்னணி இசையின் மூலம் ரிதம், திரில் மற்றும் உணர்ச்சி ஆழத்தை வழங்கியுள்ளார். சாமன் சகோவின் கூர்மையான எடிட்டிங் மற்றும் யானிக் பென் வழங்கிய அதிரடி சண்டைக் காட்சிகள் இப்படத்தின் முக்கிய அம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன.

கேரளாவிலும், சர்வதேச அளவிலும் இப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. வசூல் தரப்பிலும் வலுவாகச் செல்கிறது. முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள கல்யாணி பிரியதர்ஷன் தனது சிறப்பான நடிப்புக்காக பெரும் பாராட்டைப் பெற்று வருகிறார். அவருடன் நஸ்லென், சாண்டி, சந்து சலீம் குமார், அருண் குரியன், விஜயராகவன், சரத் சபா மற்றும் பல சிறப்பு தோற்றங்கள் வழங்கிய நடிகர்களும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். பன்முகப்படுத்தப்பட்ட சினிமாடிக் யூனிவர்ஸின் முதல் பாகமாக வெளிவந்துள்ள லோகா, ரசிகர்களின் இதயத்தில் வலுவான அடித்தளத்தை அமைத்துவிட்டது.

எக்சிக்யூட்டிவ் தயாரிப்பாளர்கள் – ஜோம் வர்கீஸ், பிபின் பெரும்பள்ளி
கூடுதல் திரைக்கதை – சாந்தி பாலச்சந்திரன்
மேக்கப் – ரோனக்ஸ் சேவியர்
உடை அலங்காரம் – மெல்வி ஜே, அர்ச்சனா ராவ்
ஸ்டில்ஸ் – ரோஹித் கே சுரேஷ், அமல் கே சதார்
புரடக்சன் கண்ட்ரோலர்கள் – ரினி திவாகர், விநோஷ் கைமோல்
சீஃப் அசோசியேட் – சுஜித் சுரேஷ்

பாலாவிற்கு சிறந்த நடிகர் என்ற பெயர் கிடைக்கும்; ஷெரிஃப் தயாரிப்பாளரின் இயக்குனராக இருக்கிறார்! – இயக்குனர் பாலாஜி சக்திவேல்

0

ஜெய் கிரண் தயாரிக்க, இயக்குனர் ஷெரிஃப் இயக்க, பாலா கதாநாயகனாக அறிமுகமாகும் படம் காந்தி கண்ணாடி. இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிகை அர்ச்சனாவும், இயக்குனர் பாலாஜி சக்திவேல் நடிக்கிறார்கள். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது :

தயாரிப்பாளர் ஜெய் கிரண் பேசும் போது,

அனைவருக்கும் வணக்கம். என்னுடைய அப்பா ஸ்தபதி. 50 வருடங்களாக கோவில் கட்டும் பணியில் இருக்கிறார். அவருடைய 13 வயதிலிருந்து இந்த பணியை செய்து கொண்டிருக்கிறார். அவர் தேசிய விருது வாங்கும் போது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

நான் அவருடன் இணைந்து பல வேலைகள் செய்து இருக்கிறேன். இப்போது இப்படத்தை தயாரித்திருக்கிறேன். பலர் என்னிடம், ஆம்புலன்ஸ்-ஐத் தொடர்ந்து காந்தி கண்ணாடி என்று கேட்கிறார்கள். அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த இரண்டு படங்களுமே வெவ்வேறு கதை அம்சம் கொண்ட படங்கள். பாலாவை பொறுத்தவரை கேப் டிரைவராக இருந்தாலும் சரி, சிறிய கடை வைத்திருந்தாலும் சரி அவர் செய்ய வேண்டிய உதவிகளை செய்து கொண்டு தான் இருப்பார் என்றார்.

 சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேசும்போது,

 அனைவருக்கும் வணக்கம் அன்பு தான் எல்லாமே அன்பில்லாமல் யாரும் இந்த உலகத்தில் வாழ முடியாது இப்படிப்பட்ட அற்புதமான ஒரு கருத்தை மையப்படுத்தி இந்த படம் வந்திருக்கிறது.

பொதுவாக நான் ஒரு படத்தைப் பற்றி பேசும் போது அது படம் அல்ல, சிற்பம் என்று தான் கூறுவேன். ஒரு சிற்பத்தில் கண்கள், மூக்கு ஏதோ ஒன்று சரியில்லை என்றால் அது சிற்பம் அல்ல கல் தான் என்று கூறுவேன். அப்படி ஸ்தபதியாக இருந்து பல கோவில் கட்டியவர் இன்று தயாரிப்பாளராகி இருக்கிறார் என்றால், நிச்சயம் இப்படம் நல்ல சிற்பமாக தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த படம் நிச்சயம் வெற்றி அடையும் என்றார்.

இசையமைப்பாளர் விவேக் பேசும்போது,

இப்படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கு நன்றி அவர் கதை கூறும் போது மாடல் மாடர்ன் ஆன காதல் அன்பு அதைப் பற்றி கூறும் ஒரு படம். நிச்சயம் அனைவரும் இப்படத்தை அனைவரும் என்ஜாய் பண்ணுவார்கள் என்று நம்புகிறேன். புல்லட் வண்டி என்று தொடங்கும் ஒரு பாடல் ஏற்கனவே வெளியாகியுள்ளது அந்தோணி தாஸ் அப்பாடலை பாடியிருக்கிறார். மேலும் 3 பாடல்கள் இன்னும் உள்ளது. அது மட்டும் இல்லாமல் இவன் சங்கர் ராஜா சார் மற்றும் தேவா சார் ஆகியோரும் இப்படத்தில் வரும் பாடல்களை பாடி இருக்கிறார்கள் என்றார்.

இசையமைப்பாளர் மெர்வின் பேசும்போது,

அனைவருக்கும் வணக்கம் பாலாஜி சக்திவேல் சாரின் காதல் திரைப்படம் திரைப்படத்தால் பாதிப்படைந்த பலரில் நாங்கள் இருவரும் உண்டு. அவர் நடிக்கும் இப்படத்தில் எங்களுடைய பங்களிப்பும் இருப்பதில் என்பதில் மிகவும் மகிழ்ச்சி என்றார்.

 நடிகர் மதன் பேசும்போது,

 இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குனர் தயாரிப்பாளர் அனைவருக்கும் நன்றி . இப்படத்தில் நான் பாலா அண்ணனின் கவுண்டரை எடுத்து பயன்படுத்தி இருக்கிறேன் பாலா அண்ணன் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார் நிறைய கற்றுக் கொடுத்தார் அவர் மட்டுமல்ல இப்பாடக் குழுவினர் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள் அவர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.

 நடிகை ஆராத்யா பேசும் போது

 எல்லோருக்கும் வணக்கம் நீங்கள் அனைவரும் மதிமாறன் குற்றம் தவிர் அனைத்தையும் பார்த்திருப்பீர்கள். ஆனால் காந்தி கண்ணாடி விழா மேடை எனக்கு மிகவும் சிறப்பானது. இந்த படத்தில் எனக்கு உணர்வுபூர்வமான கதாபாத்திரம் என்னை நானே திரையில் பார்க்கும்போது கண்ணை எடுக்கத் தோன்றவே இல்லை. பார்க்கும் அனைவரின் இதயத்திலும் நான் ஒட்டிக் கொண்டது போல ஒரு உணர்வு. அதிலும் சக்திவேல் சார் மற்றும் அர்ச்சனா மேடம் உடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்ததை என்னுடைய பாக்கியமாக கருதுகிறேன். இதற்கு ஷெரிஃப் சாருக்கு மிகவும் நன்றி.

தயாரிப்பாளருக்கும் நன்றி. சக்தி ஃபிலிம் ஃபேக்டரியில் நானும் ஒரு சிறிய பங்காக இருப்பதற்கு நன்றி. எனக்கு சினிமா தான் எல்லாமே. சினிமா என்னை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி கொண்டு வருகிறது. நான் இன்னும் நிறைய கற்றுக் கொண்டு மேலும் வளர உங்களுடன் எல்லாருடைய ஆசீர்வாதமும் எனக்கு தேவை. பாலா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் நான் ஒரு சிறிய உறுப்பாக இருப்பதற்கு மகிழ்ச்சி என்றார்.

நடிகர் அமுதவாணன் பேசும்போது,

அனைவருக்கும் வணக்கம். இப்படத்தில் பாலாவும் கதாநாயகியும் காதலராக நடிப்பது போல தோன்றவில்லை, இயல்பாக இருக்கிறது. எனக்கு முதன் முதலாக ரசிகர் மன்றம் வைத்தது பாலா தான். பாலா கதாநாயகனாக வருவான் என்று அவனே எதிர்பார்க்கவில்லை. அவனுடைய குணமும் செயல்களும் தான் பிரபஞ்சம் இந்த இடத்திற்கு கொண்டு வந்து கொண்டு வந்திருக்கிறது. மேலும், இன்னொரு முக்கிய காரணம் ஊடக நண்பர்கள் தான். ஏனென்றால், அவர்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், பாலாவின் செயலை நேரிலும் சரி, பத்திரிகையிலும் சரி அவர்களுடைய பாராட்டுதல் தான் இந்த உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது என்றார்.

நடிகர் மனோஜ் பேசும்போது,

அனைவருக்கும் வணக்கம். இவ்வளோ பெரிய லெஜென்ஸ் எல்லோரும் நடிக்கும் படத்தில் நானும் நடிக்கிறேன் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த வாய்ப்பு கொடுத்து செரிப் அண்ணாவிற்கு நன்றி எல்லாருடைய ஆதரவும் எனக்கு வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தி பேசும் போது,

அனைவருக்கும் வணக்கம் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் இயக்குனர் ஷெரிஃப், இந்த படத்திற்காக கதாநாயகி தீர்வுக்காக நாங்கள் 50 கதாநாயகி அழைத்தோம். 51 வது நபராக உங்களை இந்த படத்திற்காக நாயகியாக தேர்வு செய்து இருக்கிறோம் என்று கூறினார். அந்த 50 பேரும் 50 ஆசீர்வாதமாக நான் நினைக்கிறேன். அது தவிர இங்கும் நிறைய ஆசிர்வாதங்கள் இருக்கிறது பாலாஜி சக்திவேல் சாரும் அர்ச்சனா மேடம் சொல்லிக் கொடுத்த பல விஷயங்கள் தான் இந்த படத்தில் நான் செய்திருக்கிறேன் ஆகையால் அவங்களுடைய ஆசிர்வாதமும் எனக்கு இருக்கிறது.

எல்லாருடைய இதயத்திற்கும் பிடிக்கும் விதமாக இப்படத்தை ஷெரிஃப் சார் எடுத்து இருக்கிறார். பாலாவுடன் நடித்ததில் அவர் மனிதநேயமிக்க மனிதன் என்பது தெரிந்தது அவருடன் நான் திரையை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேல் சார் அவர்களுக்கும் தயாரிப்பாளர்கள் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

 நடிகை அர்ச்சனா பேசும்போது,

அனைவருக்கும் வணக்கம். காந்தி கண்ணாடி மிகவும் அற்புதமாக வந்திருக்கிறது. திடீரென்று ஒருவர் உயரத்திற்கு வந்தால் அதற்கு மதிப்பும் இருக்காது பாலா கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறார் அதற்கு அவர்களுடைய பெற்றோர்கள் முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். காமன் மேனாக இருந்த பாலாவை முதல் படத்திலேயே கம்ப்ளீட் மேனாக இயக்குனர் ஷெரிஃப் மாற்றி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

படம் தொடங்கியதும் முதல் 10 நிமிடத்தில் பாலா சாதாரண மனிதனாக இருப்பார். அடுத்த பத்து நிமிடத்தில் அதற்கு மேலே இருப்பார் படம் முடியும் போது முழுமையான கதாநாயகனாக மாறி இருப்பார்.

நமீதா ஒவ்வொரு காட்சியையும் புரிந்து கொண்டு அழகாக நடித்தார். வயதுக்கு மீறிய பக்குவம் இருக்கும்போது அந்த செயல் எப்போதுமே சிறப்பாக இருக்கும், அதை நமிதாவிடம் பார்க்கலாம். ஆராதயா மற்றும் மனோஜ் பற்றி நான் பேசப்போவதில்லை. ஏனென்றால், படம் வந்த பிறகு நீங்கள் எல்லோரும் பேசுவீர்கள். அமுதவாணன் மற்றும் மதன் ஆகியோரும் சிறப்பாக தங்கள் பணியை செய்து இருக்கிறார்கள்.

ஷெரிஃப்க்கு என்ன தேவையோ அதை உணர்ந்து அழகாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் பாலாஜி. கண் கூட்டாமல் பார்க்கும் அளவிற்கு மிகவும் சிறப்பாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் பாலாஜி.

ஷெரிஃப் சிறு வயதிலேயே மயிலாட்டம் ஒயிலாட்டம் போன்றவற்றை கற்று வைத்திருக்கிறார் இப்போது நிறைய பேருக்கு நிறைய விஷயங்களை இலவசமாக கற்றுக் கொடுக்கிறார் அவர் நன்றாக நடனம் ஆடுவார் இந்த படத்தை மிகவும் சிறப்பாக இயக்கி இருக்கிறார்.

லவ்வர் பாய் பாலாஜி சக்திவேலை பற்றி மக்களே பேசட்டும் என்றார்.

 இயக்குனர் பாலாஜி சக்திவேல் பேசும்போது

அனைவருக்கும் வணக்கம். எனக்கு மேடைப்பேச்சு அவ்வளவாக வராது. ஆனால், நான் நிறைய பேச வேண்டும். முக்கியமாக இந்த படத்தைப் பற்றியும் இந்த குழுவினர்கள் பற்றியும் நிறைய பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பாலாவிற்கு சுயம்பு என்று சொல்கிற மாதிரி இயல்பாகவே உதவும் குணம் இருக்கிறது. அதேபோல், இந்த படத்தில் அவருடைய கதாபாத்திரம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். எல்லோரும் செல்வதைப் போல இல்ல வாய்ப்புகளும் இந்த கதாபாத்திரத்தில் இருக்கிறது. பாலா உதவி செய்கிறவர் என்ற பெயர் மட்டும் இல்லாமல் சிறந்த நடிகர் என்ற பெயர் இந்த படத்தின் மூலமாக அவருக்கு நிச்சயம் கிடைக்கும்.

 ஷெரிப் இந்த படத்தை அருமையாக இயக்கியிருக்கிறார் முக்கியமாக மழை வந்தாலும் படபிடிப்பு நிறுத்தாமல் எடுத்து விடுவார். தயாரிப்பாளர் விரும்பும் இயக்குனராக ஷெரிஃப்பை நான் பார்த்தேன்.

எனக்கு பெரிய போஸ்டர் வைத்திருக்கிறார்கள், பார்க்கவே கூச்சமாக இருக்கிறது.

இந்த படத்தை பத்திரிக்கையாளராக நீங்கள் எல்லோரும் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்து வெற்றி படமாக ஆக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

 இயக்குனர் ஷெரிஃப் பேசும்போது,

 நான் வடசென்னையில் பிறந்து வளர்ந்தவன். சிறுவயதில் வறுமையின் காரணமாக குழந்தை தொழிலாளியாக இருந்திருக்கிறேன். நிறைய கலைகளை கற்றுக்கொண்டு அதன் மூலம் வருமானம் ஈட்டி இருக்கிறேன். அதிகமாக கோவிலுக்கு பறை வாசிக்க செல்வேன். நாங்கள் எப்போதும் குழுவுடன் சேர்ந்து தான் செய்வோம். ரூ.2,000/-, ரூ.3,000/-இப்படித்தான் வருமானம் வரும். அந்த பணத்தை வைத்து தான் படிப்பு, மற்ற விஷயங்களை கற்றுக் கொள்வேன்.

எனக்கு எப்போதும் பிரபஞ்சத்தின் மீது மிகவும் நம்பிக்கை உண்டு. நான் பல கோயில்களில் பறை வாசித்திருக்கிறேன். 200 கோயில்களை கட்டிய ஸ்தபதி இந்த படத்தின் தயாரிப்பாளராக வந்துள்ளதே அதற்கு சாட்சி. இந்த படத்தின் முதல் பாதியை தயாரிப்பாளரிடம் சொன்னவுடன் இந்த படத்தை நான் கண்டிப்பாக எடுக்கிறோம் என்று கூறினார். உடனே டெல்லியில் இருந்த பாலாவை தொடர்பு கொண்டு இந்த படத்தை பற்றி பேசினேன். வெறும் 5 மணி நேரங்களிலேயே இந்த கதை படமாவது உறுதியாக விட்டது.

 சுமார் 16 வருடங்களுக்கு முன்பு அப்பு அண்ணா மற்றும் அவருடைய அண்ணா இருவரும் பத்திரிக்கை ஒன்றை தொடங்கினார்கள். அதற்கான விளம்பரத்திற்காக ரூ. 400/- க்கு நான் வரை வாசிக்க சென்றேன். இப்போது என்னுடைய படத்திலேயே அண்ணா கலையை கிணறாக பணியாற்றியது மிகவும் சந்தோஷமாக உள்ளது.

உதய் அண்ணா தான் என்னுடைய சக்தியை. அவர் எல்லா வேலைகளையும் பார்ப்பார். மதன் என்னுடைய நண்பன் அவன் அங்கீகரிக்கப்பட வேண்டிய கலைஞன் அவனுக்காக இந்த படத்தில் நான் ஒன்று செய்திருக்கிறேன்.

 நான் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கிறேன் ஏனென்றால், நான் சிறு வயதில் சந்தித்த நபர்களுடைய கதை.

பாலாவை பற்றி பலரும் நிறைய பேசியிருக்கிறார்கள். யாரும் பேசாத, யாருக்கும் தெரியாத சில விஷயங்களை நான் இங்கு சொல்கிறேன். பாலா உதவி செய்யும் போது மற்றவர்கள் கொடுக்கிறார்கள், பாலா உதவி செய்கிறான் என்று சொல்வார்கள். ஆனால், அப்படி அல்ல. பாலாவிற்கு வரும் வருமானத்திலிருந்து 90% உதவி செய்கிறான். அவனுக்கென்று எதுவும் செய்து கொள்வதில்லை. அவனுக்கென்று தனியாக வீடு கூட இல்லை. அண்ணனுடன் தான் தங்கி இருக்கிறான். இப்பொழுது தான் சிறிய கார், அதிலும் செகண்ட் ஹேண்ட் கார் தான் வாங்கி இருக்கிறேன். பாலா, உனக்கென்று சில விஷயங்களை நீ செய்து கொள்ள வேண்டும்.

 மேலும் முதன்முதலாக ஒரு குழந்தைக்கு உதவ தான் பாலாவிற்கு நான் போன் செய்தேன் அப்படித்தான் பாலா எனக்கு அறிமுகம் அதன் பிறகு இந்த கதையை நான் கூறினேன் என்னை வைத்து எல்லாம் படம் எடுப்பீர்களா என்று கேட்டான். நான் கண்டிப்பாக எடுப்பேன் என்று சொன்னேன். அதன்படி இன்று எடுத்து விட்டேன். பாலாவின் முதல் படத்தை இயக்கியவர் ஷெரிஃப் என்று சொல்லும் படியாக அவன் எனக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறான், அதற்கு அவனுக்கு நன்றி. அதற்கு பதிலாக நானும் அவனுக்கு ஒரு நல்ல படம் கொடுத்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இந்த படத்திற்காக அவன் கடுமையாக உழைத்திருக்கிறான். பாலாவை தேர்வு செய்தவுடன் என்னிடம் பலரும் இவன் இவ்வளவு ஒல்லியாக இருக்கிறான் கேமராவிற்கு பொருந்துவானா என்று நேரடியாகவே கேட்டார்கள். அதற்காக மிகவும் கஷ்டப்பட்டு 25 கிலோ எடை கூடியிருக்கிறான்.

50 நாயகிகள் இந்த படத்தை தவிர்த்து இருக்கிறார்கள். 51வதாக நமீதா இந்த கதையை புரிந்து கொண்டு ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கு வாழ்த்துகள். 50 பேரும் இந்த படத்தை ஒதுக்கியதற்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம் அது பற்றி நாம் விமர்சிக்க வேண்டாம்.

அர்ச்சனா அம்மா நடிப்பிற்கென்றே பிறந்தவர். அவரை இயக்கியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

 பாலாஜி சக்திவேல் அண்ணாவின் வழக்கு எண் படத்தை அகஸ்தியா திரையரங்கில் பார்த்தேன். எப்புட்றா!! என்பது போல இருந்தது. அந்தப் படத்தைப் பற்றி நிறைய பாராட்டி பத்திரிகைகளில் எழுதினார்கள். அந்த படங்களை பார்த்து தான் வளர்ந்தோம்.

தேசிய விருது பெற்ற இருவரை இயக்கியிருக்கிறேன், இதைவிட வேறென்ன வேண்டும் எனக்கு?

தீரன் அதிகாரம் ஒன்று நந்தீஸ்வரன் என்று பெயர் எடுத்தது போல காந்தி கண்ணாடி என்றும் இவருக்கு நிச்சயம் பெயர் வரும் என்பதில் சந்தேகம் இல்லை. அவருக்கு படத்தின் வேலைகள் இருப்பதால் இன்று அவரால் வர இயலவில்லை.

 இசையமைப்பாளர்கள் விவேக் மற்றும் மெர்வின் இருவரின் பின்னணி இசையைப் பற்றி படம் வந்த பிறகு அனைவரும் பேசுவார்கள்.

இந்த படத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்த குழுவினரும் என்னுடைய கனவை அவர்களுடைய கனவாக நினைத்து இரவும் பகலும் பாராமல் உழைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

 என்னுடைய முதல் படத்தை போலவே இந்த படத்தையும் வெற்றிபடமாக ஆக்குவீர்கள் என்று நம்புகிறேன் என்றார்.

நடிகர் பாலா பேசும்போது,

அனைவருக்கும் வணக்கம், நான் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறேன். இன்று இங்கு வரும்போது போஸ்டரை பார்த்ததும் எனக்கு அடிவயிற்றில் அயன் பாக்ஸ் வைத்து தேய்த்தது போல இருந்தது. நான் நடித்த படத்தின் போஸ்டர் என்று வியப்பாக இருந்தது. இன்று நான் இங்கு நிற்கிறேன் என்றால் பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தான் காரணம் என்று நம்புகிறேன்.

எனக்கு இந்த பட வாய்ப்பு கிடைத்தது எப்படி இருக்கிறது என்றால் வேடிக்கை பார்க்க வந்தவனுக்கு வேர்ல்ட் கப் கொடுத்தது போல இருக்கிறது.

கனவில் கூட நினைத்து பார்க்காத ஒன்று எனக்கு நடந்திருக்கிறது போல் தோன்றுகிறது. காரைக்காலில் பிறந்த நான் ஒருவரின் உறுதுணையால் இங்கு நிற்கிறேன். காரைக்கால் பாலாவாக இருந்த நான் காந்தி கண்ணாடி பாலாவாக மாறியதற்கு காரணம் அமுதவாணன் அண்ணன்தான்.

நான் எதற்கு முன்பு சிறு சிறு கதாபாத்திரங்களை சுமார் 19 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனா 11 படங்களில் நான் வரவில்லை பட தொகுப்பில் என்னுடைய காட்சி தேவை இல்லை என்று நீக்கி விட்டதாக கூறுவார்கள் அதனால், அவர்களை நான் குறை சொல்லவில்லை.

ஷெரிஃப்-ம் நானும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். அப்போதே எனக்கு ஒரு கதாபாத்திரம் கொடுங்கள். ஐந்து அல்லது ஆறு காட்சிகள் கதாநாயகனுடன் நண்பனாக காதலி சேர்த்து வைக்கும் படியான இப்படி ஏதாவது வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டேன். அவரும் சரி என்று கூறினார்.

அதன் பிறகு ஒரு நிகழ்ச்சியின் போது ராகவா லாரன்ஸ் நீ என்ன ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறாய் என்று கேட்டார். நான் கதாநாயகன் என்று கூறினேன். அதற்கு அவர் வாழ்த்தினார். மேலும், நான் ஏன் உன்னை கதாநாயகனாக வேண்டும் என்று கூறுகிறேன் என்றால், நீ கதாநாயகனாக வளர்ந்தால் இன்னும் பலருக்கு உன்னால் உதவி செய்ய முடியும் என்று கூறினார். அந்த வார்த்தையை நான் பிடித்துக் கொண்டு கதாநாயகன் ஆவதற்கான எல்லாம் முயற்சிகளையும் செய்தேன்.

அதுமட்டுமல்லாமல் மேடையிலேயே எல்லோரை பார்த்தும் இவனுக்கு யாராவது கதாநாயகன் வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டார்.

அதன் பிறகு சில வருடங்கள் கழித்து மீண்டும் ஷெரிஃபை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டார். நிகழ்ச்சிகள் தான் என்று கூறினேன். படம் நடிக்கிறாயா? என்று கேட்டார். நான் உடனே சம்மதித்தேன். தயாரிப்பாளர் உன்னை வைத்து படம் எடுக்க சம்மதித்து விட்டார். நீ தான் கதாநாயகன் என்று கூறினார்.

அதேபோல் என்னை கதாநாயகனாக ஆக்குவதில் விருப்பம் தெரிவித்த முதல் தயாரிப்பாளர் ஜெய் கிரண் சார் தான். நம்முடைய குடும்பத்தாரும் உறவினர்களும் 5 லட்சங்கள் நம்மை நம்பி கொடுத்தாலே பெரிய விஷயம். ஆனால், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சிலர் உதவுவார்கள், இல்லையா! அப்படித்தான் பல கோடிகளை என்னை நம்பி செலவழித்திருக்கிறார். அவருக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

பாலாஜி சக்திவேல் சாரிடம் கதை கூறிய போது நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டார். நான் கதாநாயகன் என்றது மறுத்துவிடுவார் என்று தயங்கினேன். ஆனால், இந்த சாதாரண ஒரு ஆளுக்காக அவர் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு நன்றி.

அதேபோல் தான் அர்ச்சனா அம்மாவும் நடிக்கிறார் என்று கேள்விப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

அடுத்ததாக, கதாநாயகி தேர்வு நடைபெற்றது. அப்போது எல்லோரும் கதை கேட்பார்கள். நன்றாக இருக்கிறது என்பார்கள். கதாநாயகன் நான்தான் என்றதும் யோசித்து சொல்கிறேன் என்று சென்று விடுவார்கள். இப்படி 50 பேருக்கு பிறகு நமீதா கிருஷ்ணமூர்த்தி இந்த படத்தில் என்னுடன் நாயகியாக நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார், அவருக்கு மிக்க நன்றி.

மேலும், இப்படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர் நடிகைகளுக்கும், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.  

துர்காவின் உயிரை காப்பாற்றிய கனகா – உண்மையை தெரிந்துகொள்ளும் ஆவுடையப்பன் – பரபரப்பான திருப்பங்களுடன் “கௌரி”

0

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தெய்வீக மெகாத்தொடர் “கெளரி”. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த தொடரில் தற்போது, துர்கா உயிரோடு வந்தது எப்படி? துர்காவுக்கு வைத்தியம் பார்த்தது யார்? என்பது குறித்து ஆவுடையப்பனின் குடும்பத்துக்கு தெரிய வருவதால் தொடர் விறுவிறுப்பாக நகர்கிறது.

வீணாவின் திட்டத்தின் பேரில், துர்காவை காப்பாற்ற உதவிய வைத்தியரை சந்திக்கும் ஆவுடையப்பன் குடும்பத்தினரிடம், துர்கா உயிரோடு வந்தது எப்படி மற்றும் துர்காவுக்கு வைத்தியம் கொடுத்தது கனகா தான் போன்ற உண்மைகளை வைத்தியர் போட்டுடைக்கிறார்.

இவ்வாறாக, ஒரே தோற்றத்தில் இருக்கும் துர்கா – கனகா பற்றிய மர்மங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதால் அடுத்து என்ன நடக்கும்? அடுத்ததாக ஆவுடையப்பன் என்ன திட்டம் தீட்டுவார்? போன்ற மர்மங்களுடனும், துர்கா மற்றும் கனகாவின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்? என்கிற எதிர்பார்ப்போடும் தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

The King of Off-Roading – Tata Harrier EV Makes Its Mark in Chennai

0

Tata Motors’ newly launched electric SUV, Harrier EV, has quickly gained massive popularity among customers. As many eagerly await the chance to own this full-sized electric SUV, the vehicle was officially launched today at the Lakshmi Tata dealership in Chennai.

As part of its performance testing, the brand-new Harrier EV was put through its paces at the Madras Off-Road Academy located in Kelambakkam, Chennai. The event saw participation from experts representing Lakshmi Tata, potential buyers, and enthusiasts. Spectators were left stunned as the Harrier EV tackled rugged terrain with remarkable ease, showcasing its off-road prowess.

The all-new Harrier EV is equipped with dual electric motors that collectively produce peak torque of 504 Nm. This electric SUV can accelerate from 0 to 100 km/h in just 6.3 seconds. For optimal control and smooth handling on rough terrain, the vehicle comes with a dedicated ‘off-road assist’ system.

The Tata Harrier EV offers four different driving modes: Boost, Sport, City, and Eco. Depending on the variant, it is available with 65 kWh and 75 kWh battery pack options, each offering different driving ranges. The model also supports a 7.2 kW AC fast-charging unit, ensuring convenient and quicker charging times.

Lakshmi Tata operates across six locations in Chennai: Avadi, Ambattur, Kummidipoondi, Ekkattuthangal, Velachery, and OMR, along with four dedicated service centers.

This event has firmly established the Harrier EV as a top contender in the electric SUV segment, especially for those seeking power, performance, and off-road capabilities in one package.

சென்னை ஆஃப் ரோடிங் டிராக்கில் மாஸ் காட்டிய டாடா ஹரியர் EV

டாடா நிறுவனத்தின் புதுவரவு எலெக்ட்ரிக் கார் ஹரியர் EV. சமீபத்தில் வெளியான இந்த ஃபுல் சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கார் வாங்க பலரும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், சென்னையில் உள்ள லக்ஷ்மி டாடா டீலர்ஷிப்பில் இதன் வெளியீடு இன்று நடைபெற்றது.

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள மெட்ராஸ் ஆஃப்-ரோடு அகாடமியில் முற்றிலும் புதிய ஹரியர் EV-இன் செயல்திறன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதற்கான நிகழ்வில் லக்ஷ்மி டாடா சார்பில் வல்லுநர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வந்தவர்கள் டாடா ஹரியர் EV கரடு முரடான பாதையில் செய்த சம்பவங்களை பார்த்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தனர்.

முற்றிலும் புதிய ஹரியர் EV இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் வருகிறது. இவை இரண்டும் இணைந்து அதிகபட்சமாக 504 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர்கள் வேகத்தை வெறும் 6.3 நொடிகளில் எட்டிவிடும். கரடு முரடான பாதையில் சீரான பயணத்தை உறுதி செய்ய ஏதுவாக இந்த காரில் ஆஃப்-ரோடு அசிஸ்ட் வழங்கப்பட்டுள்ளது.

டாடா ஹரியர் EV மாடல் Boost, Sport, City மற்றும் ECO என நான்குவித டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது. இந்த காரில் வேரியண்டிற்கு ஏற்ப 65 கிலோவாட் ஹவர் மற்றும் 75 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் ஆப்ஷன்களாக வழங்கப்படுகிறது. இவ்விரண்டிற்கும் வெவ்வேறு மைலேஜ்கள் அமைந்துள்ளது. இவற்றுடன் 7.2 கிலோவாட் AC ஃபாஸ்ட் சார்ஜிங் யூனிட் வழங்கப்படுகிறது.

லக்ஷ்மி டாடா நிறுவனம் ஆவடி, அம்பத்தூர், கும்மிடிப்பூண்டி, ஈகாட்டுத்தாங்கள், வேளச்சேரி, ஓஎம்ஆர் ஆகிய ஆறு கிளைகளைகளையும், நான்கு சர்வீஸ் கிளைகளையும் கொண்டுள்ளது.

- Advertisement -

Recent Posts