Thursday, July 2, 2026
- Advertisement -
Home Blog Page 133

லெட்சுமி ராமகிருஷ்ணனின் “உண்மை வெல்லும்” – புத்தம் புதிய நிகழ்ச்சி

0

“நேர்கொண்ட பார்வை” நிகழ்ச்சியைத் தொடர்ந்து லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் “உண்மை வெல்லும்” நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

சமூகத்தின் அவலங்கள், எளிய மக்களின் குமுறல்கள், அவர்கள் அனுபவிக்கின்ற கொடுமைகள் என அனைவராலும் பேச முடியாத அல்லது பேச தயங்குகின்ற பல்வேறு விஷயங்களை தெளிவான கண்ணோட்டத்துடன் அலசி அதன் உண்மைத் தன்மையை வெளிக் கொண்டு வரும் வகையில் இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.

Poster and designing legend Kumar, who worked in over 1000 films, passes away

0

Poster and designing legend Kumar R, who worked in over 1000 films in South Indian cinema, passed away on August 10 in Chennai due to ill health. He was 67.

Kumar left an indelible mark in the industry by working with many generations of renowned artistes including K. Balachander, Bharathiraja, Rajinikanth, Kamal Haasan, Mani Ratnam, K.S. Ravikumar, Suresh Krishna, Vikram, S.J. Suryah, Dharani and others. It is noteworthy that he continued to work for Kamal Haasan’s films from ‘Vikram’ to ‘Sabash Naidu’.

Many people from the film industry have expressed their condolences on his demise. The above information was shared by Kumar’s son and music composer K.S. Sundaramurthy. Contact number: 90033 13856.

1000 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றிய போஸ்டர் மற்றும் டிசைனிங் ஜாம்பவான் குமார் காலமானார்

தென்னிந்திய சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் பணியாற்றிய போஸ்டர் மற்றும் டிசைனிங் ஜாம்பவான் குமார் உடல்நலக் குறைவு காரணமாக ஆகஸ்ட் 10 அன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 67.

கே. பாலசந்தர், பாரதிராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், மணிரத்னம், கே.எஸ். ரவிக்குமார், சுரேஷ் கிருஷ்ணா, விக்ரம், எஸ் ஜே சூர்யா, தரணி உள்ளிட்ட பல தலைமுறைகளை சேர்ந்த புகழ்பெற்ற கலைஞர்களின் படங்களுக்கு அவர்களுடன் இணைந்து குமார் பணியாற்றியுள்ளார். ‘விக்ரம்’ முதல் ‘சபாஷ் நாயுடு’ வரை கமல்ஹாசனின் படங்களுக்கு அவர் தொடர்ந்து பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் மறைவுக்கு திரை உலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேற்கண்ட தகவல்களை குமாரின் மகனும் இசையமைப்பாளருமான கே எஸ் சுந்தரமூர்த்தி கூறியுள்ளார். தொடர்பு எண்: 90033 13856.

‘Others’ First Look Ignites Buzz in Tamil Cinema’s Medical Crime Thriller Realm!

0

Tamil cinema is flourishing, thanks to a wave of young talent revolutionizing storytelling, visual aesthetics, and performances. The recently unveiled first look of Others, a gripping medical crime thriller, has captivated audiences, with debutant actor Aditya Madhavan commanding attention as a resolute police officer in the lead role.

This enthralling film features Gouri G. Kishan, known for her roles in 96 and Master, as a dedicated doctor.

Complementing the leads, Others boasts a stellar ensemble cast, including Anju Kurian, Munishkanth, Harish Perady, Mala Parvathy, Jagan, and R. Sundarrajan, promising a dynamic blend of performances.

The film’s arresting visuals are crafted by acclaimed cinematographer Aravinnd Singh, renowned for his work on Demonte Colony. Adding depth to the narrative, celebrated music composer Ghibran, whose credits include Theeran Adhigaaram Ondru, Uttama Villain, and Thunivu, is scoring the film’s songs and background music.

The lyrics, penned by Mohan Rajan—known for chart-topping albums like Tourist Family, Lover, and Lubber Pandhu—further elevate the project. Editor Ramar, who has shaped cinematic gems like Vetrimaaran’s Asuran and Viduthalai, brings his expertise to the editing table, while Uma Shanker’s meticulously designed sets perfectly capture the film’s mood and genre.

The Tamil film industry has warmly embraced this talented team of newcomers, with luminaries such as Venkat Prabhu, Arya, Andrea, Aishwarya Rajesh, Vani Bhojan, Era Saravanan, and lyricist Vivek unveiling the film’s first look on their social media platforms, amplifying its buzz.

Produced by Murali of Grand Pictures and Co-Produced by Kartik G, Others is an ambitious medical thriller filmed entirely in Chennai and its outskirts. The makers are gearing up for a grand theatrical release in September, poised to captivate audiences with its compelling narrative and technical brilliance.

கவனம் ஈர்க்கும் மெடிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படம் “அதர்ஸ்“ !!

இளைய தலைமுறையின் கதை சொல்லல், காட்சியமைப்பு மற்றும் நடிப்புத் திறமைகள் மூலம் புதிய பரிமாணங்களை நோக்கி பாய்ந்து வரும் தமிழ் சினிமாவில், புதிய படைப்பான ‘அதர்ஸ்’ மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

புதிய அறிமுகம் ஆதித்யா மாதவன், கடமை உணர்வுமிக்க காவல் அதிகாரியாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 96, மாஸ்டர் போன்ற படங்களில் தன் நடிப்புத் திறமையால் பாராட்டைப் பெற்ற கவுரி G. கிஷன், இப்படத்தில் மருத்துவராக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அதர்ஸ் படத்தில் அஞ்சு குரியன், முனீஷ்காந்த், ஹரீஷ் பேரடி, மாளா பார்வதி, ஜகன், R.சுந்தர்ராஜன் உள்ளிட்ட வலுவான நடிகர் பட்டாளம் இணைந்து நடித்துள்ளனர்.

டிமாண்டி காலனி புகழ் அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, தீரன் அதிகாரம் ஒன்று, உத்தம வில்லன், துணிவு போன்ற புகழ்பெற்ற படங்களுக்கு இசையமைத்த ஜிப்ரான், பாடல்களும், பின்னணி இசையும் அமைத்துள்ளார். டூரிஸ்ட் ஃபேமிலி, லவ்வர், லப்பர் பந்து போன்ற ஹிட் ஆல்பங்களைத் தந்த மோகன் ராஜன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். அசுரன், விடுதலை போன்ற படங்களுக்கு எடிட்டராக பணியாற்றிய எடிட்டர் ராமர், இந்தப் படத்தை எடிட் செய்துள்ளார். உமா சங்கர் வடிவமைத்த செட் டிசைன்கள், படத்தின் கதைக்கு உயிர் ஊட்டியுள்ளது.

தமிழ் திரையுலகிற்கு வருகை தரும் புதிய திறமைகளை வரவேற்று முன்னணி நட்சத்திரங்கள் வெங்கட் பிரபு, ஆர்யா, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், வாணி போஜன், இரா சரவணன், பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட பலர், சமூக ஊடகங்களில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு வாழ்த்தியுள்ளனர்.

கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) முரளி தயாரிப்பிலும், கார்த்திக் G இணைத் தயாரிப்பிலும், முழுவதும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள “அதர்ஸ்” திரைப்படம், வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது.

நடிப்பு, கதை, தொழில்நுட்பம் என எல்லா தளங்களிலும் வித்தியாசமான வகையில் உருவாகியிருக்கும் “அதர்ஸ்“ திரைப்படம் பார்வையாளர்களை கவரத் தயாராகவுள்ளது.

Iconic Producer Boney Kapoor Recognised for Professional Integrity in the Film Industry

0

Renowned film producer Boney Kapoor has been commended for his consistent professionalism and commitment to honouring agreements in the Indian film industry.

Industry veteran Rajesh Vrajlal Vasani (Paras Publicity Service) recently acknowledged Kapoor’s track record of making complete payments to vendors, crew members, and collaborators, regardless of a film’s commercial performance. This approach has been evident across multiple projects, from Koi Mere Dil Se Poochhe and Shakti to more recent productions like Mili (2022) and Maidaan (2024).

An example cited includes Kapoor returning a ₹1.5 lakh personal loan to the family of the late actor Sanjeev Kumar, ensuring all outstanding amounts were cleared promptly and respectfully.

“Boney Kapoor has always honoured his commitments in full. No legacy is richer than honesty,” said Vasani.

Such practices have reinforced Boney Kapoor’s reputation as a producer who values ethical business conduct, professional relationships, and trust as core pillars of his work.

திரைத் துறையில் தனது நேர்மைக்காக பாராட்டப்பட்ட புகழ்பெற்ற தயாரிப்பாளர் போனி கபூர்;

இந்திய திரைப்படத் துறையில் தன்னுடைய இடைவிடாத தொழில்முறை அணுகுமுறை மற்றும் ஒப்பந்தங்களை முழுமையாகக் காப்பதற்கான அர்ப்பணிப்பிற்காக புகழ்பெற்ற தயாரிப்பாளர் போனி கபூர் பாராட்டப்பட்டுள்ளார்.

திரைத்துறையின் மூத்த நிபுணரும், Paras Publicity Service நிறுவனத்தின் உரிமையாளருமான ராஜேஷ் வ்ரஜ்லால் வசானி, சமீபத்தில் போனி கபூர் தனது நிறுவனத்தின் விற்பனையாளர், தொழில்நுட்பக் குழுவினர், மற்றும் இணைபணியாளர்களுக்கு படத்தின் வணிக வெற்றியோ, தோல்வியோ பொருட்படுத்தாமல், முழு தொகையையும் செலுத்தி வந்த வரலாற்றைப் பாராட்டினார். இந்த நடைமுறை, Koi Mere Dil Se Poochhe, Shakti போன்ற பழைய படங்களில் இருந்து Mili (2022), Maidaan (2024) போன்ற சமீபத்திய தயாரிப்புகளிலும் தொடர்ந்துள்ளதை கவனித்து அங்கீகரித்தார் ராஜேஷ் வ்ரஜ்லால் வசானி.

இதன் உதாரணமாக, மறைந்த நடிகர் சஞ்சீவ் குமாரின் குடும்பத்தாருக்கு ₹1.5 லட்சம் தனிப்பட்ட கடனை உடனடியாகத் திரும்ப செலுத்தி, நிலுவையில் இருந்த அனைத்து தொகைகளையும் மரியாதையுடன் தீர்த்து வைத்த சம்பவமும் குறிப்பிடப்பட்டது.

“போனி கபூர் எப்போதும் தனது வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியவர். நேர்மையை விட பெரியது எதுவும் இல்லை,” என்று வசானி கூறினார்.

இவ்வாறு, நெறிமுறையுள்ள வணிக நடைமுறைகள், தொழில்முறை உறவுகள் மற்றும் நம்பிக்கையை தனது பணியின் மூலக்கூறுகளாகக் கொண்டிருக்கும் தயாரிப்பாளராக போனி கபூரின் கண்ணியமும், புகழும் மேலும் சிறந்துள்ளது.

“கமாண்டோவின் லவ் ஸ்டோரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் ‘படு வைரலாக’ பேசிய கங்கை அமரன் வீடியோ லிங்க்…👆🏻

0

கமல்ஹாசன் குறித்து மிகவும் சர்ச்சையாக பேசி உள்ளார் .

ரஜினி, கமல் ஒப்பிட்டும் பேசி உள்ளார்.

ஊமை விழிகள் படத்தின் பின்னணி இசை பார்த்து தான், இளையராஜா தனது பின்னணி இசையின் ஸ்டைலை மாற்றிக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

ஹேராம் படத்தில் புதுவகையான பாடல் உருவானதற்கு நானே காரணம். ஆனால், இதை எந்த மேடையிலும் இளையராஜாவும் சொல்லவில்லை, கமலஹாசனும் சொல்லவில்லை என்று வருத்தப்பட்டார் கங்கை அமரன்!

மேலும் பல சுவா’ரகசியங்கள்’ அடங்கிய வீடியோ லிங்க் …

இளையராஜா, வைரமுத்து பிரிவிற்கு இது தான் காரணம்!

0

ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில் அனுராதா அன்பரசு தயாரிப்பில், வீர அன்பரசு இயக்கி, நடித்துள்ள படம் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி”. படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு சிறப்பாக நடைபெற்றது. இசையமைப்பாளர் கங்கை அமரன் கலந்து கொண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். இயக்குனர் அரவிந்தராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த படத்தில் நடித்திருந்த பப்லு பிரித்திவிராஜ், புதுப்பட்டு சக்திவேல், வாழை ஜானகி, கதாநாயகி ஏஞ்சல், ஸ்ரீதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்தப் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

கங்கை அமரன் பேசுகையில் கமல் இயல்பாக இருக்க மாட்டார். ரஜினிகாந்த் மிகவும் இயல்பாக இருப்பார். அனைவரும் இயல்பாக தான் இருக்க வேண்டும். அதுதான் நல்லது. கமலைப் பற்றி இன்னும் சொல்லலாம், ஆனால் அவர் இப்போது எம்பி ஆகிவிட்டதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் என்றார்.

ஊமை விழிகள் படத்தின் பின்னணி இசை பார்த்த பிறகு தான் இளையராஜா தனது பின்னணி இசையில் புது ஸ்டைலை உருவாக்கினார் என்று விழா மேடையிலேயே அரவிந்தராஜிடம் கூறினார்.

ஹேராம் படத்தில் புதுவிதமான பாட்டு உருவாகுவதற்கு நான் தான் காரணம். ஆனால் இதை இளையராஜாவோ கமலஹாசனோ எந்த மேடையிலும் சொல்லவில்லை. எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன் என்று சொன்னார்.

இந்த வயதிலும் ரஜினிகாந்த் நடிக்கும் போது அவர் வயதை ஒட்டிய நானும் ஏன் இசையமைக்க கூடாது. நான் இசையமைக்க தயாராக இருக்கிறேன் என்றார்.

10 வருடங்கள் என்னை ஒதுக்கி வைத்திருந்தார் இளையராஜா. அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு, வைரமுத்து அவரிடம் பாட்டு எழுதி வளர்ந்தார். அந்த காலகட்டத்தில் கல்லூரி விழாக்களில் பேசும்போதெல்லாம் பல இடங்களில் இளையராஜா வளர்ந்து வருவதற்கு நானே காரணம், என் பாடலே காரணம் என்று வைரமுத்து கூறி வந்தார். இதைக் கேள்விப்பட்டு நான் அண்ணன் இளையராஜாவிடம் சொன்ன போதும், அவர் நம்பவில்லை. ஆதாரப்பூர்வமாக அதை அறிந்து கொண்ட பின்பு இளையராஜாவுக்கும் வைரமுத்துக்கும் விரிசல் ஏற்பட்டது. இளையராஜாவுக்கும் வைரமுத்திற்கும் விரிசல் ஏற்பட காரணமே, ‘இளையராஜா என்னால் தான் வளர்கிறார் என்று வைரமுத்து வெளி மேடைகளில் பேசியது தான்’ என்றார் கங்கை அமரன்.

கமாண்டோவின் லவ் ஸ்டோரி படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸ், சண்டை பயிற்சியாளர் கோல்டன் கோபால், இணை இயக்குனர் ஜெயக்குமார், எடிட்டர் புவனேஷ், டான்ஸ் மாஸ்டர் டயானா, யிஆர்ஓ கோவிந்தராஜ், மற்றும் நடிகர் நடிகைகள் அனைவருக்கும் கங்கை அமரன் பொன்னாடை போர்த்தி, மரியாதை செய்தார்.

கார்த்திக் ராஜா இசை அமைந்திருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது என்றார் இயக்குனர் வீர அன்பரசு!

சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்து

0

அன்புள்ள சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு,
அபூர்வ ராகத்தில் அறிமுகமான அதிசய ராகம்! அறிமுகத்திலிருந்து இன்று வரை ஏறுமுகமே உங்களது பயணம்! ஆரம்ப காலகட்டத்தில் உங்களுக்கு குழந்தைகள் ரசிகர்களாக இருந்தது அதிசயம் அல்ல, உங்களது கலைப்பயணத்தில் ஐம்பதாவது வருடத்தில் தொட்டும் இன்றும் உங்களுக்கு குழந்தைகள் ரசிகர்களாக இருப்பது அதிசயத்திலும் அதிசயம்!
திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்பது உங்களுக்கு வழங்கிய பட்டம் அல்ல அது உங்களுக்கு வழங்கப்பட்ட ‘பட்டா’. தமிழ்த் திரை உலகில் பல விமர்சனங்களை தாங்கி, பல தடைகளைத் தாண்டி உயர்ந்து நின்று மிளிரும் உச்ச நட்சத்திரம் நீங்கள் மட்டுமே!
வயது எழுபதைத் தாண்டியும் உச்சத்தில் இருந்து பெரும் ரசிகர் படையை கொண்டிருக்கும் உலகின் புதிய அதிசயம் நீங்கள்தான்.
இயக்குனர்கள் எவ்வளவு இளையவர்களாக இருந்தாலும் இயக்குனருக்கான மரியாதை அவர்களுக்கு இன்றளவும் கொடுத்து வரும் ஒரு உன்னத நாயகன் நீங்கள் தானே..
கலைத்தாய் ஈன்றெடுத்து இன்று 50 ஆண்டுகளை தொட்டு விட்டீர்கள்! திரைத்துறையில் உங்களுக்கு இது பொன்விழா ஆண்டு, ஆனால் திரைத்துறைக்கு இது பொற்கால ஆண்டு!
தங்களின் கூலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து திரைத்துறையில் தாங்கள் ஐம்பதை மட்டுமல்ல நூறையும் தாண்டி உங்களின் பேரும் புகழும் மேலும் மேலும் நிலைத்திருக்க எங்களது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

6 மாதங்களில் தமிழ் நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகள் – நடிகர் சௌந்தரராஜா சொன்ன அசத்தல் திட்டம்

0

தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் சௌந்தரராஜா, நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகளில் தன்னை ஆர்வமுடன் ஈடுபடுத்தி வருகிறார்.

சமூகம் சார்ந்து செயல்பட ஏதுவாக மண்ணுக்கும் மக்களுக்கும் என்ற சமூகநல அறக்கட்டளையை தொடங்கி, நடத்தி வருகிறார். அதன்படி நடிகர் சௌந்தரராஜா தனது மண்ணுக்கும் மக்களுக்கும் சமூகநல அறக்கட்டளை மூலம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகளை நட்டு, வளர்க்க திட்டமிட்டுள்ளார்.
சென்னை ஆவடியில் உள்ள காவல் துறை கன்வென்ஷன் சென்டரில் நடந்த மண்ணுக்கும் மக்களுக்கும் சமூகநல அறக்கட்டளையின் ஒன்பதாவது ஆண்டு விழாவில் இதற்கான அறிவிப்பை நடிகர் சௌந்தரராஜா வெளியிட்டார். கடந்த 9 ஆண்டுகளில் 45,000 மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகின்றனர்.

நேற்று நடந்த விழாவில் அடுத்த ஆறு மாதங்களில் தமிழ் நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்க திட்டமிட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 11-ம் தேதி தொடங்கி ஆறு மாதங்களுக்கு மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையை சேர்ந்த உறுப்பினர்கள் மரக்கன்றுகளை நட்டு, பாதுகாத்து வளர்த்தும் வருகின்றனர்.

தமிழ்நாடு முழுக்க கண்மாய்கள், நீர்நிலைகளை சுற்றி பனை மரங்களை நடுவது, நாட்டு மரங்களை நடுவதும் அதை பாதுகாத்து வளர்த்தும் வருகின்றனர். மேலும், இயற்கை மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு முன்னெடுப்புகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர். இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் மிக முக்கிய சேவைகளை செய்து வரும் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும், இயற்கை விவசாயத்தை போற்றும் வகையிலும், ஒவ்வொரு வருடமும் இயற்கை விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதும், ரூ. 5000 ஊக்கத்தொகையும் வழங்கி வருகிறது.

இதுபோக தனி நபர்களுக்கு மரக்கன்று நடவும், விசேஷ நாட்களில் மரக்கன்று நட விரும்புபவர்கள் மரக்கன்றுகளை வாங்கிக் கொடுக்கும் பட்சத்தில் அவற்றை சரியான இடத்தில் நட்டு, அதனை பராமரிக்கும் பணிகளை மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை செய்து வருகிறார்கள். இதற்கான பணிகளில் 250 தன்னார்வலர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

தமிழ் நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகளை நடும் திட்டத்தின் தொடக்கமாக சென்னை ஆவடியில் உள்ள போலீஸ் கன்வெஷன் சென்டரில் நடிகர் சௌந்தரராஜா தலைமையில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்றுகள் நட்டு முடித்த ஒரு மணி நேரத்தில் அங்கு திடீரென கனமழை பெய்தது. 100 மரக்கன்றுகள் நட்டதும் மழை பெய்தது அங்கு இருப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இது நல்ல தொடக்கத்தின் முன்னெடுப்பு என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Kauvery Hospital Alwarpet Helps a child aged 5, Overcome Rare Craniofacial Condition, Restoring Hope and Happiness

0

In a remarkable feat of medical expertise, specialists at Kauvery Hospital Alwarpet have performed a rare, life-altering craniosynostosis surgery on a five-year-old child suffering from a severe facial deformity. The intricate, multi-hour procedure not only transformed the child’s appearance but also improved vital functions, offering a renewed chance at a healthy, confident future. Led by Dr. Manikandhan and Dr. G. Balamurali, the multidisciplinary team’s success underscores the hospital’s advanced capabilities in complex reconstructive surgeries.

Craniosynostosis is a rare condition, seen in about 1 in every 2,000–2,500 live births. It occurs when one or more of the skull bones fuse too early after birth, restricting normal skull growth. This can cause abnormal head and facial shapes, increased pressure on the brain, and, in severe cases, developmental delays. For many children, especially those from underserved communities, the condition also brings significant emotional and social challenges, often affecting confidence and participation in school or play. Without timely intervention, the impact can last a lifetime, both physically and psychologically.

Dr. Manikandhan, Senior Consultant Maxillofacial Surgeon, Kauvery Hospital Alwarpet, said, “The Maxillofacial surgeon’s role is to correct deformities of the face, nose, and eye sockets that can cause severe disfigurement secondary to early fusion of skull sutures. Unfortunately, many children from underprivileged backgrounds do not receive timely treatment due to lack of awareness by parents, fear of risks, or inability to access advanced care. Early surgical intervention can completely change the course of a child’s life.”

Dr. Balamurali, Senior Consultant Neurosurgeon, Kauvery Hospital Alwarpet, said, “These surgeries require detailed evaluation to check for related health concerns. The procedure itself takes six to eight hours and involves opening the skull, segmenting the bones, and reshaping them to create a balanced facial and head contour. Such outcomes are possible only with the combined expertise of multiple specialists.”

At Kauvery Hospital, surgical planning is supported by advanced facilities including robotics, high-end anesthesia systems, a dedicated pediatric ICU, and an experienced multidisciplinary team. The hospital treats both syndromic and non-syndromic craniofacial abnormalities, giving families access to advanced care that was once out of reach.

Dr. Aravindan Selvaraj, Co-Founder and Executive Director of Kauvery Group Hospitals , said, “Kauvery Hospital, yet again, demonstrates the power of collaborative medicine. Surgeons, pediatricians, anesthetists, and intensive care specialists worked together with a shared focus to give the child a corrected appearance and a better start in life.”

The successful procedure represents far more than a surgical achievement. For the child, it opens the door to healthier growth, improved brain development, and the ability to engage more fully in everyday life without the limitations of a visible deformity. For the family, it brings relief, renewed optimism, and the knowledge that their child can now face the world with confidence. For the medical team, it reaffirms the value of specialized expertise and coordinated care in transforming lives. Cases like these set an example about the importance of early diagnosis, accessible healthcare, and spreading awareness that such advanced treatments are possible right here in Chennai.

அரிய வகை கபாலமுக குறைபாட்டிலிருந்து மீண்டு குணமடைய
5 வயது குழந்தைக்கு உதவியிருக்கும் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை

• நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் மீட்டெடுத்த நெகிழ்வான தருணம்

சென்னை, ஆகஸ்ட் 13, 2025 — மருத்துவ நிபுணத்துவத்தின் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின் நிபுணர்கள், கடுமையான முக சிதைவால் பாதிக்கப்பட்டிருந்த ஐந்து வயது குழந்தைக்கு, வாழ்க்கையையே மாற்றக்கூடிய அரிய வகை கிரானியோசினாஸ்டோசிஸ் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளனர். பல மணி நேரம் நீடித்த இந்த சிக்கலான அறுவை சிகிச்சை, அச்சிறுவனின் தோற்றத்தை நேர்த்தியாக மாற்றியிருக்கிறது; அதுமட்டுமன்றி, குழந்தையின் உடலின் மிக முக்கிய செயல்பாடுகளையும் மேம்படுத்தி, ஆரோக்கியமான மற்றும் நம்பிக்கையான எதிர்காலத்திற்கான ஒரு புதிய வாய்ப்பை அக்குழந்தைக்கு வழங்கியுள்ளது. டாக்டர் மணிகண்டன் மற்றும் டாக்டர் ஜி. பாலமுரளி தலைமையிலான பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களது குழுவின் இந்த வெற்றி, சிக்கலான மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைகளில் காவேரி மருத்துவமனையின் மிகச்சிறப்பான திறன்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

கிரானியோசினாஸ்டோசிஸ் (கபாலமுக குறைபாடு) என்பது ஒரு அரிய வகை குறைபாடாகும். இது, பிறக்கும் 2,000–2,500 குழந்தைகளில் ஒருவருக்கு ஏற்படுகிறது. பிறந்த பிறகு மண்டை ஓட்டின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலும்புகள் மிக விரைவாக இணைந்து ஒட்டிக் கொள்வதால் இக்குறைபாடு ஏற்படுகிறது; மண்டை ஓட்டின் இயல்பான வளர்ச்சியைத் தடுக்கும் இப்பாதிப்பு இயல்பற்ற தலை மற்றும் முக வடிவமைப்பு, மூளையில் அழுத்தம் அதிகரித்தல் மற்றும் கடுமையான பாதிப்பு நேர்வுகளில் வளர்ச்சி தாமதங்கள் போன்றவற்றை ஏற்படுத்தும். குறிப்பாக பொருளாதார ரீதியில் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, இந்த பாதிப்பு நிலை உணர்வு ரீதியான மற்றும் சமூக ரீதியிலான கடும் சங்கடங்களையும், சிரமங்களையும் பெரும் சுமையாக சுமத்துகிறது; இது பெரும்பாலும் அவர்களின் தன்னம்பிக்கையையும், பள்ளி கல்வியில் ஈடுபாட்டுடன் பங்கேற்பு அல்லது விளையாட்டுகளில் கலந்து கொள்வதை பாதிக்கிறது. சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இதன் தாக்கம் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அவர்களின் வாழ்நாள் காலம் முழுவதும் நீடிக்கக்கூடும்.

ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின், முதுநிலை மருத்துவரும் மற்றும் முக மற்றும் தாடை சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் மணிகண்டன் கூறுகையில், “மண்டை ஓட்டு தையல்கள் முன்கூட்டியே இணைவதால் ஏற்படும் கடுமையான முக சிதைவு, மூக்கு மற்றும் கண் குழிகளில் உள்ள குறைபாடுகளை சரிசெய்வதே மேக்ஸில்லோஃபேஷியல் எனப்படும் மேல்தாடை-முகச்சீரமைப்பு சிகிச்சை நிபுணரின் பங்காக இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, பெற்றோரின் விழிப்புணர்வு இல்லாமை, சிகிச்சையின் இடர்வாய்ப்புகள் குறித்த பயம், அல்லது மேம்பட்ட சிகிச்சையை பெற இயலாமை போன்ற காரணங்களால் ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்த பல குழந்தைகள் சரியான நேரத்தில் இப்பாதிப்புக்கான சிகிச்சையை பெறுவதில்லை. பாதிப்பு அறிகுறிகள் தென்படும் ஆரம்ப நிலையிலேயே செய்யப்படும் சீரமைப்பு அறுவை சிகிச்சை ஒரு குழந்தையின் வாழ்க்கைப் போக்கையே முற்றிலும் மாற்றி மேம்பட்டதாக ஆக்கிவிடும்,” என்றார்.

ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனையின், முதுநிலை மருத்துவர் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலமுரளி கூறுகையில், “இந்த அறுவை சிகிச்சைகளுக்கு தொடர்புடைய உடல்நலப் பிரச்சனைகளை பரிசோதித்து உறுதி செய்ய விரிவான மதிப்பாய்வு தேவைப்படுகிறது. இந்த சீரமைப்பு சிகிச்சை செயல்முறை ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை நீடிக்கக்கூடும். இது மண்டை ஓட்டைத் திறந்து, எலும்புகளைப் பிரித்து, சீரான முகம் மற்றும் தலை வடிவத்தை உருவாக்க அவற்றை மறுவடிவமைப்பு செய்வதும் இந்த சிகிச்சையில் இடம் பெறும் முக்கிய அம்சங்களாகும். பல மருத்துவ வல்லுநர்களின் ஒருங்கிணைந்த நிபுணத்துவத்துடன் மட்டுமே இந்த சீரமைப்பு சிகிச்சையில் சிறப்பான முடிவுகள் சாத்தியமாகும்,” என்றார்.

காவேரி மருத்துவமனையில், ரோபோட்டிக்ஸ் (robotics), உயர்நிலை மயக்க மருந்து வழங்கல் சாதனங்கள், பிரத்யேகமான குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு (pediatric ICU), மற்றும் அனுபவம் வாய்ந்த பல்துறை மருத்துவக் குழு உள்ளிட்ட மேம்பட்ட வசதிகளின் ஆதரவோடு இத்தகைய மேல்தாடை-முக சீரமைப்பு அறுவை சிகிச்சை திட்டமிடப்படுகிறது. இம்மருத்துவமனையானது நோய்க்குறி மற்றும் நோய்க்குறி அல்லாத வகையிலான மண்டை ஓடு மற்றும் முகக் குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்கிறது. இதன் மூலம் ஒரு காலத்தில் சாத்தியமற்றதாக இருந்த மேம்பட்ட நவீன சிகிச்சையை பாதிக்கப்பட்ட இக்குழந்தையின் குடும்பங்கள் பெறுவதற்கு இம்மருத்துவமனை வழிவகை செய்திருக்கிறது.

காவேரி குழும மருத்துவமனைகளின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், “காவேரி மருத்துவமனை, ஒத்துழைப்புமிக்க கூட்டு மருத்துவத்தின் சக்தியை இந்த சிகிச்சையின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. அறுவை சிகிச்சை நிபுணர்கள், குழந்தைநல மருத்துவர்கள், மயக்க மருந்தியல் நிபுணர்கள் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர்கள் என அனைவரும் இக்குழந்தைக்குச் சீரான தோற்றத்தையும், வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கத்தையும் வழங்குவதற்காக ஒரே நோக்குடன் இணைந்து பணியாற்றினர்,” என்றார்.

இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சை, ஒரு மருத்துவ சாதனையை விட மிக மேலானது. அந்தச் சிறுவனுக்கு, இது ஆரோக்கியமான வளர்ச்சி, மேம்பட்ட மூளை வளர்ச்சி மற்றும் முக சிதைவு ஏற்படுத்துகிற சிரமங்களும், கட்டுப்பாடுகளும் இன்றி அன்றாட வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடும் திறனுக்கான கதவை அகலத் திறந்து வைத்திருக்கிறது. அவனது குடும்பத்திற்கு, நிம்மதியையும், புத்துயிர் பெற்ற நம்பிக்கையையும், தங்கள் குழந்தை இப்போது உலகை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும் என்ற உற்சாகத்தையும் இச்சிகிச்சை தந்திருக்கிறது. சிகிச்சையளித்த மருத்துவக் குழுவைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கையை மாற்றியமைப்பதில் சிறப்பு நிபுணத்துவத்தின் மதிப்பையும், ஒருங்கிணைந்த சிகிச்சையின் முக்கியத்துவத்தையும் இந்த சிகிச்சை நேர்வு மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இது போன்ற சாதனை நிகழ்வுகள், ஆரம்பகால நோயறிதல், எளிதில் அணுகக்கூடிய சுகாதார சேவை, மற்றும் இதுபோன்ற மேம்பட்ட சிகிச்சைகளுக்காக வெளிநாட்டிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாமலேயே சென்னையிலும் சாத்தியம் என்ற விழிப்புணர்வைப் பரப்புவதன் முக்கியத்துவத்திற்கு ஒரு எடுத்துக்காட்டை நிறுவியிருக்கிறது.

God Of Masses Nandamuri Balakrishna Completes Dubbing For, Blockbuster Maker Boyapati Sreenu, Raam Achanta, Gopi Achanta, 14 Reels Plus, M Tejaswini Nandamuri Presents #BB4 Akhanda 2: Thandavam, Theatrical Release On September 25th

0

The dynamic duo of ‘God of the Masses’ Nandamuri Balakrishna and blockbuster director Boyapati Sreenu are back for their fourth collaboration with the much-anticipated high-octane sequel, Akhanda 2: Thaandavam. The film, currently in the post-production phase, is being mounted on a grand scale with a massive budget and top-tier technical standards. Produced by Raam Achanta and Gopichand Achanta under the 14 Reels Plus banner, the project is proudly presented by M Tejaswini Nandamuri. With the theatrical release fast approaching, the team is working tirelessly to wrap up all remaining post-production work well ahead of schedule.

Meanwhile, it’s confirmed that Balakrishna has completed his dubbing for the film, marking a key milestone. Other post-production activities are progressing at a brisk pace to ensure a polished final product. The CG work, re-recording and other works are happening simultaneously. All the pending works will be finished by the end of this month, and first copy will be ready within 3 weeks time. The makers have once again reiterated that Akhanda 2: Thaandavam will hit the big screens this Dussehra, on September 25th, with no delays anticipated.

The film’s teaser has already set the internet ablaze, showcasing Nandamuri Balakrishna in a ferocious new avatar like never before, fueling fan frenzy and setting a towering benchmark for what’s to come.

Joining the ensemble is Samyuktha, hailed as Tollywood’s lucky charm, stepping into a pivotal lead role. Sharing the screen is the ever-versatile Aadhi Pinisetty, who brings intensity and depth to a character that promises to be a standout in the narrative. Harshali Malhotra will be seen in a pivotal role on her Tollywood debut.

Backed by a powerhouse technical crew, Akhanda 2: Thaandavam features a thundering soundtrack by S Thaman, while C. Ramprasad handles cinematography. The editing is in the capable hands of Tammiraju, and the world of Akhanda is brought to life with stunning set pieces by art director AS Prakash.

With momentum building, the makers are gearing up to intensify promotions by rolling out back-to-back updates that are sure to keep the hype alive.

Cast: God Of Masses Nandamuri Balakrishna, Samyuktha, Aadhi Pinisetty, Harshali Malhotra

Technical Crew:

Writer, Director: Boyapati Sreenu
Producers: Raam Achanta, Gopi Achanta
Banner: 14 Reels Plus
Presents: M Tejaswini Nandamuri
Music: Thaman S
DOP: C Ramprasad, Santoshh D Detakae
Ex-Producer: Koti Paruchuri
Art: AS Prakash
Editor: Tammiraju
Fights: Ram-Lakshman
PRO: Yuvraaj

அகண்டா 2 தாண்டவம் படத்தின் டப்பிங்கை முடித்துள்ளார் காட் ஆஃப் மாஸ் நந்தமுரி பாலகிருஷ்ணா !!

காட் ஆஃப் மாஸ் நந்தமுரி பாலகிருஷ்ணா, பிளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு (Boyapati Sreenu), ராம் அச்சந்தா (Raam Achanta), கோபி அச்சந்தா (Gopi Achanta), 14 ரீல்ஸ் பிளஸ் (14 Reels Plus), M தேஜஸ்வினி நந்தமூரி (M Tejaswini Nandamuri) வழங்கும் #BB4 அகண்டா 2: தாண்டவம் பட டப்பிங்கை முடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 25 ஆம் தேதி திரையரங்கு வெளியாகிறது.

‘காட் ஆஃப் தி மாஸஸ்’ நந்தமூரி பாலகிருஷ்ணா, பிளாக்பஸ்டர் இயக்குநர் போயபதி ஸ்ரீனு (Boyapati Sreenu) கூட்டணி, நான்காவது முறையாக இணைந்து, மிகவும் எதிர்பார்க்கப்படும், அதிக வரவேற்பைப் பெற்ற ‘அகண்டா 2 : தாண்டவம்’ படத்தில் பணியாற்றி வருகின்றனர். தற்போது போஸ்ட்-புரொடக்‌ஷன் கட்டத்தில் இருக்கும் இந்தப் படம், மிகப்பெரிய பட்ஜெட்டில், மிகச்சிறந்த தொழில்நுட்பத் தரத்தில், பிரமாண்டமாகத் தயாராகி வருகிறது. 14 ரீல்ஸ் பிளஸ் பேனரின் கீழ் ராம் அச்சந்தா (Raam Achanta) மற்றும் கோபிசந்த் அச்சந்தா (Gopi Achanta) இணைந்து தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தை, M தேஜஸ்வினி நந்தமூரி (M Tejaswini Nandamuri) பெருமையுடன் வழங்குகிறார். திரையரங்க வெளியீடு வேகமாக நெருங்கி வருவதால், மீதமுள்ள அனைத்து போஸ்ட்-புரொடக்‌ஷன் பணிகளையும் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே முடிக்க படக்குழு அயராது உழைத்து வருகிறது.

இப்படத்தின் டீசர் ஏற்கனவே இணையத்தையே பரபரப்பாக்கியுள்ளது. நந்தமுரி பாலகிருஷ்ணா இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு புதிய அவதாரத்தில் மிரட்டலான தோற்றத்தில் தோன்றி, ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளார். படத்தைக் காண ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

டோலிவுட்டின் அதிர்ஷ்ட தேவதை எனக் கொண்டாடப்படும் நடிகை சம்யுக்தா (Samyuktha) மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பன்முகத் திறமை கொண்ட ஆதி பினிசெட்டி ( Aadhi Pinisetty) இப்படத்தில் தீவிரத்தையும் ஆழத்தையும் கொண்டு வரும், கதையில் தனித்து நிற்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார், ஹர்ஷாலி மல்ஹோத்ரா (Harshali Malhotra) ஒரு முக்கிய வேடத்தில் டோலிவுட் அறிமுகமாகிறார்.

மிகச்சிறந்த தொழில்நுட்பக் குழுவினர் பணியாற்றும், அகண்டா 2: தாண்டவம் படத்தில் இசையமைப்பாளர் S. தமன் அற்புதமான இசையை வழங்குகிறார், C. ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார். தம்மிராஜு எடிட்டிங் செய்கிறார், மேலும் அகண்டாவின் உலகத்தை கலை இயக்குநர் A.S. பிரகாஷின் அற்புதமான அரங்க அமைப்புகளால் உயிர்ப்பித்துள்ளார்.

படத்தின் வெளியீடு நெருங்கி வருவதால், படத்தின் விளம்பர பணிகளைத் தீவிரப்படுத்தத் தயாரிப்பாளர்கள் தயாராகி வருகின்றனர், தொடர்ந்து புதுப்புது அறிவிப்புகளை வெளியிடுவதன் மூலம், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறார்கள்.

நடிகர்கள்: காட் ஆஃப் மாஸ் நந்தமுரி பாலகிருஷ்ணா, சம்யுக்தா, ஆதி பினிசெட்டி, ஹர்ஷாலி மல்ஹோற்றா

தொழில்நுட்பக் குழு:

எழுத்து, இயக்கம் : போயபதி ஸ்ரீனு தயாரிப்பாளர்கள் : ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா
பேனர் : 14 ரீல்ஸ் பிளஸ்
வழங்குபவர் : M தேஜஸ்வினி நந்தமூரி
இசை: தமன் எஸ்
ஒளிப்பதிவு : C ராம்பிரசாத், சந்தோஷ் D டெடகே
நிர்வாக தயாரிப்பாளர்: கோடி பருச்சுரி
கலை: A.S.பிரகாஷ்
எடிட்டர்: தம்மிராஜு
ஸ்டண்ட் : ராம்-லக்ஷ்மன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

- Advertisement -

Recent Posts