- Advertisement -
Home Blog Page 135

3rd Tamil Nadu State Ranking Tenpin Bowling Tournament – 2025

0

Mahipal Singh wins title

Mahipal Singh defeated Deepak Kothari (2-1) in the finals of the 3rd Tamil Nadu State Ranking Tenpin Bowling Tournament 2025 which concluded at LetsBowl, Thoraipakkam, Chennai, today 06th August 2025.

In the finals played based on the best of three games, in Game 1 Mahipal outscored Deepak Kothari (212-192). In Game 2 Deepak Kothari made a fine comeback and defeated Mahipal (214-172). In Game 3 Mahipal Singh outplayed Deepak Kothari by a margin of 83 Pins (244-161) and went on to win the title.

Earlier in the day, in the first Semi-Final played based on the best of three games format Deepak defeated Abhishek D 2-0 (221-201, 208-177. In the second Semi-Final, Mahipal defeated Soban D 2-0 (207-178 & 248-236)

Ganesh NT finished on top of the table after Round 2 with a pinfall 2478 at an impressive average of 206.50 followed by Soban D (Pinfall – 2425, Average – 202.08).

Special Prizes:
Highest Average in 6 Game Block: Ganesh NT (Pinfall – 1299, Average – 216.50)
Highest Score in a Single Game: Soban D (258)

Thanking You

Best Regards
Ragini Muralidharan
President
TNTBA

3வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி 2025 – மஹிபால் சிங் சாம்பியன் பட்டம் வென்றார்

சென்னையில் நடைபெற்று வந்த 3 வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி 2025-ன் இறுதிப் போட்டியில் தீபக் கோத்தாரியை வீழ்த்தி மஹிபால் சிங் சாம்பியன் பட்டம் வென்றார்.

3 வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி 2025, சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள லெட்ஸ் பவுல் டென்பின் பவுலிங் விளையாட்டு மையத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டி நேற்று (ஆக்ஸ்ட் 6) நடைபெற்றது. இதில், மஹிபால் சிங் – தீபக் கோத்தாரி மோதினார்கள்.

மூன்று ஆட்டங்களில் சிறந்ததை அடிப்படையாகக் கொண்டு விளையாடிய இறுதிப் போட்டியின், முதல் சுற்றை மஹிபால் சிங் (212-192) என்ற பின்கள் அடிப்படையில் கைப்பற்றினார். இரண்டாவது சுற்றில் சுதாரித்துக் கொண்ட தீபக் கோத்தாரி, சிறப்பாக விளையாடி மஹிபால் சிங்கை (214-172) என்ற பின்கள் கணக்கில் வீழ்த்தினார். வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது சுற்றில், மஹிபால் சிங் 83 பின்கள் (244-161) வித்தியாசத்தில் தீபக் கோத்தாரியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

முன்னதாக, மூன்று ஆட்டங்களில் சிறந்த ஆட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட முதல் அரையிறுதியில், தீபக் அபிஷேக் டி-யை 2-0 (221-201, 208-177) என்ற கணக்கில் வீழ்த்தினார். இரண்டாவது அரையிறுதியில், மஹிபால் சோபன் டி-யை 2-0 (207-178 & 248-236) என்ற கணக்கில் வீழ்த்தினார்.

2வது சுற்றுக்குப் பிறகு கணேஷ் என்.டி. 206.50 என்ற சராசரியுடன் 2478 பின்ஃபாலுடன் அட்டவணையில் முதலிடத்தைப் பிடித்தார், அதைத் தொடர்ந்து சோபன் டி (பின்ஃபால் – 2425, சராசரி – 202.08) இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

சிறப்பு பரிசுகள்:

6 ஆட்டங்களில் அதிகபட்ச சராசரி தொகுதி : கணேஷ் என்.டி. (பின்ஃபால் – 1299, சராசரி – 216.50)

ஒரு ஆட்டத்தில் அதிகபட்ச ஸ்கோர் : சோபன் டி (258)

நாகேஷின் பேரனும் ஆனந்தபாபுவின் மூத்த மகனுமான பிஜேஷ் நாகேஷ் கதாநாயகனாக (அறிமுகம்) நடித்த”வானரன்”

0

பகல் வேஷம் என்னும் கலையை பின் தொடரும் ஆஞ்சநேயர் வேடம் அணிபவர்களின் வாழ்வியலையும் தந்தை மகள் உறவை சொல்லும் கதைகளத்தையும் கொண்டு உருவாகி உள்ள படம்தான் வானரன் என்கிறார் ஸ்ரீராம் பத்மநாபன்.

ஸ்ரீராம் பத்மநாபன் கதை திரைக்கதை வசனம் எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார் .

ஆரஞ்ச் பிக்சர்ஸ் சார்பில் ராஜேஷ் பத்மநாபன்
சுஜாதா ராஜேஷ்
தயாரித்திருக்கிறார்கள்

நாகேஷ் பேரன் பிஜேஷ் நாகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

அக்ஷயா கதாநாயகியாக நடிக்க லொள்ளு சபா ஜீவா, தீபா சங்கர்,
ஆதேஷ் பாலா, நாஞ்சில் விஜயன், எஸ்.எல் பாலாஜி, பேபி வர்ஷா, வெங்கட்ராஜ் , சிவகுரு, ராம்ராஜ், வெடிக்கண்ணன், மேடை கலைஞர்களான நாமக்கல் விஜயகாந்த், ஜூனியர் டி.ஆர் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு-
நிரன் சந்தர்

இசை- ஷாஜகான்
பாடல்கள்- செந்தமிழ்

படத்தொகுப்பு-
வித்து ஜீவா
மக்கள் தொடர்பு – வெங்கட் – உதயா

தயாரிப்பு –
ராஜேஷ் பத்மநாபன்
சுஜாதா ராஜேஷ்

கதை திரைக்கதை வசனம் இயக்கம்-
ஸ்ரீராம் பத்மநாபன்

குணச்சித்திர வேடத்தில் ஆதேஷ் பாலாவும், super singer குழந்தை நட்சத்திரம் பேபி வர்ஷாவும் நடிப்பில் முத்திரை பதித்துள்ளனர்.

Celebrate Independence Day With A Powerful Legal Drama: “J.S.K – Janaki V v/s State of Kerala” Streams August 15 Only On ZEE5

0

India’s largest homegrown OTT platform, ZEE5, continues its successful run in 2025 with yet another superhit premiere. After delivering back-to-back Telugu superhits like Sankranthiki Vasthunnam, Robinhood, and Bhairavam, ZEE5 Telugu is now bringing the critically acclaimed Malayalam legal drama “J.S.K – Janaki V v/s State of Kerala” to its viewers.

Set for its digital premiere on August 15, just ahead of Independence Day, J.S.K will be available for streaming in Malayalam, Telugu, Tamil, Kannada, and Hindi, making it accessible to audiences across the country.

Starring Suresh Gopi and Anupama Parameswaran in lead roles, J.S.K is directed by Pravin Narayanan and produced by J Phanindra Kumar under the Cosmos Entertainments banner.

The gripping courtroom drama tells the story of Janaki Vidhyadharan (Anupama Parameswaran), a sexual assault survivor fighting for justice with the help of renowned lawyer David Abel Donovan (Suresh Gopi). The film explores the blurry lines between truth and justice, posing the haunting question: “What really happened to Janaki, and what does justice truly mean?”

With powerful performances and a thrilling screenplay, J.S.K is all set to strike a chord with viewers. The film features songs composed by Gireesh Narayanan and a stunning background score by Ghibran. Renadive handled the cinematography for the movie.

Catch the exclusive digital premiere of “J.S.K – Janaki V v/s State of Kerala” this August 15, only on ZEE5, and experience a gripping courtroom battle this Independence Day weekend.

A Big Thanks To Telugu Audiences For Making “Sattamum Needhiyum” A Roaring Success – Producer Sasikala Prabhakaran

0

India’s premier home-grown digital entertainment platform, ZEE5, continues to carry its legacy as the top destination for quality original content. With a strong line-up of blockbuster films and web series across languages, ZEE5 has added yet another jewel to its crown with the blockbuster success of its latest Tamil original series, Sattamum Needhiyum.

Premiered on ZEE5 on July 18, Sattamum Needhiyum struck a powerful chord with viewers, thanks to its engaging courtroom drama, intense emotional arcs, and socially relevant themes. The show received an overwhelming response from audiences and quickly topped streaming charts on ZEE5, becoming a favourite among viewers.

Riding on the acclaim and success of the Tamil version, ZEE5 made the series available in Telugu and Hindi from August 1, allowing more viewers across the country to experience this impactful story. Upon release, the series received an equally enthusiastic response from Telugu and Hindi audiences.

To celebrate the pan-India success, the team hosted a success meet in Hyderabad today, in the presence of the show’s cast and crew. Prominent businessman AGR attended the event as the chief guest.

Directed by debutant Balaji Selvaraj and produced by Prabhakaran and Sasikala Prabhakaran under the 18 Creators banner, Sattamum Needhiyum marks the return of popular Tamil actor Saravanan to a lead role after 15 years. The series also features Namritha, Aroul D Shankar, Shanmugham, Thiruselvam, Vijayashree, and Iniya Ram in pivotal roles.

Speaking at the event, producer Sasikala Prabhakaran said, “I am new as a producer and I thank my husband Prabhakaran for making this possible. I am grateful to everyone who supported the launch of Sattamum Needhiyum in Telugu. Without my team’s support, making this project wouldn’t have been possible. We shot this project in just 13 days, and that wouldn’t have been possible without our director. Saravanan sir is the backbone of the project who carried it on his shoulders. We want to work with him again and again. Prabhakaran’s passion and dedication for this project is amazing. More than anyone else, I know how much this project meant to him.”

Director Balaji Selvaraj said, “I thank everyone who was a part of this project. I enjoyed working with the entire cast and crew. Hope you enjoy the show.”

Tamil and Malayalam ZEE5’s Business Head and Senior Vice President – Marketing South, Lloyd Xavier, shared, “Sattamum Needhiyum was our first project this financial year in Tamil. In less than 10 days, we achieved 100 million streaming minutes. This is what happens when producers get into the skin of the game. The producers were great in both production and marketing. After its success in Tamil, we launched it in Telugu and Hindi. We want everyone here to support our project.”

The show’s lead actor Saravanan said, “I know a bit of Telugu, thanks to my classmates from the Telugu states when I was studying at the Madras Film Institute. Just like how it became a big hit in Tamil, it became a big hit in Telugu as well. Thanks to everyone who loved it.”

Producer Prabhakaran said, “Thanks to ZEE for supporting this project. Thanks to everyone who liked the project and encouraged it.”

Tune into ZEE5 right away and enjoy the intriguing courtroom drama Sattamum Needhiyum, streaming exclusively in Tamil, Hindi, and Telugu.

சமகால அரசியலை பேச வரும் “நாளை நமதே”

0

ஸ்ரீ துர்கா கிரியேஷன்ஸ் V.ரவிச்சந்திரன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெண்பா கதிரேசன் இயக்கத்தில் உருவாகும் நாளை நமதே திரைப்படம்
சம கால அரசியலை வெளிப்படையாக பேசும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குனர் வெண்பா கதிரேசன் இந்தபடத்தை இயக்கியிருக்கிறார்.

தமிழ் திரையுலகில் அரசியல் படங்களுக்கென்று வரவேற்பு உண்டு, ஜனரஞ்சகமாக எல்லோரும் ரசிக்கும் விதத்தில் அரசியல்படங்கள் பெரு வெற்றியையும் பெற்றிருக்கின்றன.

நாளை நமதே படம் முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

தமிழக கிராமங்களில் மக்கள் அரசியல்படுத்தப்படவேண்டிய அவசியத்தையும், அதிலும் பெண்கள் அரசியல்படுத்தப்படுவதும் , அரசியல்படுவதும் காலத்தின் கட்டாயம் . அந்த கருத்தை இந்தப்படம் வலியுருத்துகிறது.

அரசியல் படம் என்றால் எப்போதும் ஆர்ப்பாட்டம், அழுகை என்றில்லாமல் நகைச்சுவையும், நையாண்டியும் எளிய மனிதர்களின் வாழ்வியலும் மிக அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

கிராமத்து மனிதர்களின் குரூரமான பக்கங்களும் இன்னும் ஆழமாக பதிந்திருக்கும் பிற்போக்குத்தனங்களையும் இந்தப்படம் கேள்விக்குள்ளாக்குகிறது.

நடிகர்களோடு நிஜ கிராமத்து மனிதர்கள் பலரும் இதில் நடித்திருக்கிறார்கள்.

இத்திரைப்படம் பல உலக சினிமா விழாக்களில் பங்கு பெற்று தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, சிவகங்கை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் நடித்தவர்களில் பெரும்பாலோர் புதுமுகங்களாக இருப்பது படத்திற்கு பெரும் பலம்.

நிஜமான ஒரு கிராமத்து வாழ்வியலை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் படக்குழுவினர். விரைவில் திரையில் வெளிவரவிருக்கிறது நாளை நமதே திரைப்படம்.

அறிமுக நடிகர் வினோத் நடிக்கும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

0

இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளி வெளியிட்ட நடிகர் வினோத்தின் ‘பேய் கதை’ படத்தின் இசை & முன்னோட்டம்

PeikathaiTrailer ▶️ https://youtu.be/1UJY3w8rGgI

ஜெர்ரி’ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர்.

‘பேய் கதை’ திரைப்படத்தில் வினோத், ஆர்யலட்சுமி, கானா பல்லவ், சுகன்யா, ஆஷ் மெலோ, செல்வா, எலிசபெத் சுராஜ், ஜீ.வி. மகா, மைக்கேல், ஸ்ரீசுமந்த், ஆஷிக் பீட்டர், ரோடஸ், ஜீவிதா, ருச்சி பிங்க்லே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் பிரவீண் எஸ். ஜி. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு போபோ சசி இசையமைத்திருக்கிறார். கலகலப்பும் திகிலும் நிறைந்த குதூகல திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஜெர்ரி’ஸ் ஜர்னி இன்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனம் சார்பில் ஜெர்ரி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சுரேஷ் வழங்குகிறார்.

ஆகஸ்ட் 29ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநர் ஜுன் மோசஸ் பேசுகையில், ”இப்படத்திற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு முதலில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறேன் என நம்புகிறேன்.

படத்தின் இசையமைப்பாளரான போபோ சசி என்னுடைய பால்ய கால நண்பர். அவரும் நானும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். இந்த விழாவிற்கு இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளி அவர்களை சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தோம். அவர்களும் இங்கு வருகை தந்திருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தில் இணைந்து பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தை பார்த்து உற்சாகமடைந்து தமிழகம் முழுவதும் வெளியிடும் ஸ்ரீ தேனாண்டாள் சுரேஷூக்கும் நன்றி.

‘பேய் கதை’ கம்ப்ளீட் ஃபேமிலி என்டர்டெய்னர். திரில்லர்-காமெடி -சஸ்பென்ஸ் என ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த படங்களில் ரத்தம், வன்முறை, பயங்கரம் ஆகியவை இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அவை எதுவும் இருக்காது. குழந்தைகள் கூட இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம். அவர்களுக்கும் இது ஒரு திரில்லிங்கான தருணமாக இருக்கும். இப்படத்தின் திரைக்கதையில் புதிய முயற்சிகளை செய்திருக்கிறோம். கதை சொல்லும் பாணியிலிருந்தும், அதனை விவரிக்கும் வகையிலும், அதில் உள்ள தொழில்நுட்ப விஷயங்கள் வரை புதிதாக முயற்சித்து இருக்கிறோம். திரையரங்க அனுபவத்திற்காக பல விஷயங்களை புதிதாக செய்திருக்கிறோம். படத்தில் எட்டு நிமிட அளவிற்கு வி ஆர் மோஷன் (V. R. Motion) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறோம். தற்போதுள்ள குழந்தைகள் வி ஆர் மோஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். அவர்களை கவர்வதற்காக தொடர்ந்து எட்டு நிமிட அளவிற்கு இந்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி இருக்கிறோம். படம் முழுவதும் எதிர்பாராத சுவாரசியமான திருப்பங்கள் இருக்கின்றன. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.

இந்தப் படத்தில் பார்வையாளர்கள் முகம் சுழிக்கும் வகையில் எந்த காட்சியும் இடம்பெறவில்லை. சிறிய முதலீட்டில் உருவாக்கப்பட்ட நல்லதொரு முயற்சி. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

வசனகர்த்தா நவீன் பேசுகையில், ”இந்தப் படத்திற்காக வசனம் எழுதிய அனுபவமும், அதற்கான பயணமும் வித்தியாசமாக இருந்தது.‌ இயக்குநர் என்னிடம் ரசிகர்களின் கோணத்திலிருந்து உரையாடலை எழுது என்றார். முதல் 15 நிமிடங்களை மட்டும் தான் என்னிடம் எழுதுவதற்காக வழங்கினார்கள். பத்து நாட்கள் எடுத்துக்கொண்டு எழுதிக் கொடுத்தேன். அதன் பிறகு படத்தின் முதல் பாதி வரை எழுதிக் கொடுங்கள் என கேட்டனர்.‌ அப்போதும் நான் குழம்பினேன். அதன் பிறகு இரண்டாம் பாதி கதையை முழுவதுமாக என்னிடம் விவரித்தார். அதைக் கேட்டவுடன் எனக்கு ஆச்சரியம் அதிகமாகி விட்டது. ஏனெனில் இந்த படத்தில் திரில்லர், சஸ்பென்ஸ் என நிறைய விஷயங்கள் இருக்கின்றன.‌ அனைவரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.

இதுவரை தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மட்டுமே உரையாடல்களை எழுதி வந்த எனக்கு முதன் முதலாக பெரிய திரையில் உரையாடல் எழுத வாய்ப்பு அளித்துள்ளனர். இதற்காக இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

பாடலாசிரியர் யூகி பிரவீண் பேசுகையில், ”2017ம் ஆண்டில் வெளியான ‘அட்டு’ படத்திற்கு அனைத்து பாடல்களையும் எழுதி இருந்தேன். போபோ சசி எனக்கு எல்லா பாடல்களையும் எழுதுவதற்கு வாய்ப்பளித்தார். நான் இதுவரை 30 பாடல்களை எழுதி இருக்கிறேன். இதில் 20 பாடலை போபோ சசிக்காக எழுதியிருக்கிறேன். எங்கள் கூட்டணியில் இன்னும் ஏராளமான ஹிட் பாடல்கள் வரவேண்டும் என பிரார்த்திக்கிறேன். இந்த படத்திலும் எல்லா பாடல்களையும் எழுதும் வாய்ப்பை போபோ சசி அளித்திருக்கிறார். இதற்கு ஒப்புதல் அளித்த இயக்குநருக்கும் , தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

நடிகை ஆஷ் மெலோ பேசுகையில், ”கன்னடத்தில் நடிகர் துனியா விஜய் உடன் நடித்திருக்கிறேன். தமிழில் நான் நடித்திருக்கும் முதல் படம் இது. இதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் எனக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். 29ம் தேதி அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகை எலிசபெத் பேசுகையில், ”இந்தப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இளம் திறமைசாலிகள் இணைந்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இப்போது இளம் திறமைசாலிகள் பலரும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்கள். எங்களைப் போன்ற மூத்த நடிகைகளை மறந்து விடுகிறார்கள். இந்தப் படத்திற்கு இசை மிக சிறப்பாக அமைந்திருக்கிறது, படமும் நன்றாக வந்திருக்கிறது, நாயகனுக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். அனைவரும் பார்த்துவிட்டு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகை ஜீ.வி.மகா பேசுகையில், ”இந்தப் படத்தின் மூலமாகத்தான் நான் நடிகையாக அறிமுகமாகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநருக்கும் , படக்குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் என்னுடைய நண்பராக இருந்தாலும் ஆடிஷன் வைத்து தான் குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு என்னை தேர்வு செய்தார். அத்துடன் எனக்கு அவர் அளித்த ஊக்கம் காரணமாகவே இப்படத்தில் நடித்திருக்கிறேன்.‌

இந்த திரைப்படம் ஏனைய பேய் படங்களை போல் இல்லை, புதுமையான நாகரீகமான நல்லதொரு ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கிறது. ஆகஸ்ட் 29 திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இசையமைப்பாளர் போபோ சசி பேசுகையில், ”வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநரும், நானும் 25 ஆண்டு கால நண்பர்கள். நாங்கள் இருவரும் ஏற்கனவே இணைந்து பணியாற்றி இருக்க வேண்டும். ஆனால் அதற்கான தருணம் தற்போது தான் அமைந்திருக்கிறது. ‘பேய் கதை’ படத்தை தனித்துவமாக உருவாக்கியிருக்கிறார். தற்போது தான் இப்படத்திற்கான பின்னணி இசை சேர்ப்பு பணிகளை நிறைவு செய்தேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது, பாடல்களும் சிறப்பாக இருக்கின்றன,” என்றார்.

இசையமைப்பாளர் சபேஷ் பேசுகையில், ”படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது இயக்குநர் எதையோ புதுமையாக செய்திருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது. படம் சிறப்பாக இருக்கிறது. இந்த விழாவிற்கு அழைப்பு விடுப்பதற்காக இயக்குநர் எங்களை சந்தித்தார். அப்போது நான் உங்களை பார்த்திருக்கிறேன் என அவர் கூறினார் அப்போது அவரிடம் நாங்கள் வருடத்திற்கு 25 திரைப்படங்களில் பணியாற்றினோம். அப்போது கழுத்தை திருப்பி பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்று பார்ப்பதற்கு கூட நேரம் இருக்காது. எங்கள் பார்வை முழுவதும் திரையிலும், கீ போர்டிலும் தான் இருக்கும் என்று விளக்கம் அளித்தேன்.

எங்கள் குடும்பத்தை சேர்ந்த இசையமைப்பாளர் போபோ சசி இதில் பணியாற்றி இருக்கிறார். தற்போதெல்லாம் ஒரு பாடல் நிலைத்து நிற்கிறது என்றால் அது வெஸ்டர்ன் பாணியிலான பாடலாக இருந்தாலும் அதில் சிறிதளவு மெலோடி இடம்பெற்றிருக்க வேண்டும். மெலோடி இருந்தால்தான் அந்தப் பாடல் ஹிட் ஆகும். இது நூறு சதவீதம் போபோ சசி பாடல்களில் இருக்கிறது. அதனால் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும்,” என்றார்.

இசையமைப்பாளர் முரளி பேசுகையில், ”இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது இசையும், ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது. இந்த திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது. அதற்கு ஏற்றாற் போல் பின்னணி இசையும், பாடல்களும் அமைந்திருக்கின்றன.

இயக்குநர் ஜுன் மோசஸை சிறிய வயதில் இருந்தே பார்த்திருக்கிறேன். அவர் எப்போதும் எங்களுடைய வீட்டில் போபோ சசியுடன் தான் இருப்பார். இந்த இருவரும் சின்ன வயதிலிருந்து எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். அதனால் தான் தற்போது இருவரும் திரையில் ஜொலிக்கிறார்கள். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்,” என்றார்.

நாயகன் வினோத் பேசுகையில், ”இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளியின் ரசிகன். ஏனெனில் ‘வாலி’ படத்திற்கு பின்னணி இசையமைத்தது இவர்கள்தான். அவர்கள் இங்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி.

இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் ஸ்ரீ தேனாண்டாள் சுரேஷுக்கும் நன்றி. அவருடன் தொடர்ந்து பயணிக்க விரும்புகிறேன்.

இயக்குநர் ஜுன் மோசஸ் என்னுடைய நண்பர் தான். நானும் அவரும் பிசினஸ் பார்ட்னர்ஸ். ஒரு நாள் சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கும்போது திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற என் விருப்பத்தை சொன்னவுடன் அவர் ஒரு வரியில் கதையை சொன்னார்.‌ அதன் பிறகு அதனை விரிவுபடுத்தி பணியாற்றத் தொடங்கி அந்தப் பணி தற்போது இங்கு வரை வந்திருக்கிறது. அவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

நான் கார்ப்பரேட் நிறுவனத்தில் 22 ஆண்டு காலம் பணியாற்றி இருக்கிறேன். அங்கு கற்றுக் கொள்ளாத பல விஷயங்களை சினிமாவில் ஒரே வருடத்தில் கற்றுக் கொண்டேன்.

‘பேய் கதை’ திரைப்படம் 29ம் தேதி அன்று வெளியாகிறது. ஊடகங்களும், ரசிகர்களும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

Real Star Upendra’s Pan-India Film “Next Level” Set for a Grand Launch

0

Multilingual superstar Upendra is all set to return to the silver screen with his much-awaited pan-India film, “Next Level” — a project that promises to offer a unique cinematic experience, blending gripping storytelling with cutting-edge visual effects.

Stepping into the female lead role is Aradhana, daughter of renowned multilingual actress Malashree. Aradhana made a striking debut in the Kannada blockbuster Kaatera opposite Challenging Star Darshan, and now gears up to share screen space with yet another Kannada icon in her second film.

Produced by Tarun Shivappa under the Tarun Studios banner, “Next Level” is helmed by acclaimed director Aravind Kaushik. The film is being touted as one of the most ambitious Kannada productions to date, with a strong pan-India vision.

The grand muhurtha (formal launch) of the film will be held in Hyderabad, with several Tollywood stars expected to grace the occasion. Shooting will take place across multiple cities, including Bengaluru, Mumbai, and Hyderabad.

A major highlight of the film is its heavy reliance on high-end VFX, with collaboration from top graphics studios both in India and Canada. The team aims to deliver a technically sophisticated product within a tight schedule, setting a new benchmark for Kannada cinema on the national stage.

The film is said to carry the essence and narrative style of Upendra’s cult classics such as A, Upendra, and Raktha Kanneeru, adding to the anticipation among fans.

Producer Tarun Shivappa, known for his earlier projects like Rose, Mass Leader (with Shivarajkumar), Victory 2, Khaki, and Choo Mantar, is gearing up for one of his biggest productions yet. The cinematography for Next Level will be handled by Anoop Katukaran, who also worked on Choo Mantar.

With a strong team and a promising cast, Next Level is shaping up to be one of the most ambitious Kannada films in recent times.

“ரியல் ஸ்டார்” உபேந்திராவின் (Real Star Upendra’s) பான்-இந்தியா திரைப்படம் “நெக்ஸ்ட் லெவல்” (Next Level) – பிரம்மாண்டமாக துவங்கவுள்ளது!!

பல மொழிகளில் ரசிகர்களின் இதயங்களை வென்றிருக்கும், ரியல் ஸ்டார் உபேந்திரா, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பான்-இந்தியா திரைப்படமான “நெக்ஸ்ட் லெவல்” மூலம், வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்.

சுவாரஸ்யமான கதை சொல்லல் மற்றும் அதிநவீன விஷுவல் (VFX) ஆகியவற்றுடன், தனித்துவமான திரை அனுபவமாக இப்படம் உருவாகவுள்ளது.

இப்படத்தின் நாயகியாக, பல மொழிகளில் சிறப்பாக நடித்துப் புகழ்பெற்ற நடிகை மலாஶ்ரீயின் (Malashree) மகள் ஆராதனா (Aradhana) நடிக்கிறார். பன்முக திறமையாளர் தர்ஷன் (Darshan) உடன் கடேரா ( Kaatera ) படத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் இதயங்களை வென்ற ஆராதனா, தற்போது தன் இரண்டாவது படத்தில், இன்னொரு கன்னட சூப்பர் ஸ்டாரான உபேந்திராவுடன் திரையை பகிர இருக்கிறார்.

தருண் ஸ்டுடியோஸ் (Tarun Studios ) நிறுவனத்தின் சார்பில் தருண் சிவப்பா (Tarun Shivappa) தயாரிக்கும் இப்படத்தை, பிரபல இயக்குநர் அரவிந்த் கௌஷிக் (Aravind Kaushik) இயக்குகிறார்.கன்னடத் திரையுலகில் இதுவரை எடுக்கப்பட்ட தனித்துவமான வித்தியாசமான படங்களில் ஒன்றாகவும், பான்-இந்திய படமாகவும் இப்படம் உருவாகவுள்ளது.

இப்படத்தின் துவக்க விழா, ஹைதராபாத்தில் பிரம்மாண்ட முகூர்த்த விழாவுடன் நடைபெற உள்ளது. இவ்விழாவில் பல டாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பல நகரங்களில் நடைபெறவுள்ளது.

இப்படத்தின் மிக முக்கிய VFX காட்சிகள், மிக உயர்ந்த தரத்தில், இந்தியாவிலும் கனடாவிலும் உள்ள முன்னணி கிராபிக்ஸ் ஸ்டுடியோக்களுடன் (graphics studios) இணைந்து உருவாக்கப்படவுள்ளது. குறுகிய காலத்திற்குள் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட படைப்பை வழங்கி, தேசிய அளவில் கன்னட சினிமாவுக்கு புதிய அளவுகோலை அமைப்பதே படக்குழுவின் இலக்காகும்.

‘ஏ’, ‘உபேந்திரா’ (A, Upendra) , ‘ரக்த கண்ணீரு’ (Raktha Kanneeru) போன்ற உபேந்திராவின் கல்ட் கிளாசிக் படங்களின் சாரமும் கதை சொல்லும் பாணியும்,நெக்ஸ்ட் லெவல் (Next Level) படத்தில் இருப்பதாக கூறப்படுவதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

ரோஸ், மாஸ் லீடர் (சிவராஜ்குமார் உடன்) Rose, Mass Leader (with Shivarajkumar) , விக்டரி 2( Victory 2), காகி( Khaki), சூ மந்தர் (Choo Mantar) போன்ற படங்களை தயாரித்த தருண் சிவப்பா ( Tarun Shivappa), தனது மிகப்பெரிய தயாரிப்புகளில் ஒன்றாக நெக்ஸ்ட் லெவல் படத்தை உருவாக்குகிறார். சூ மந்தர் படத்தில் பணியாற்றிய அனூப் கட்டுகரன், இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

வலுவான தொழில் நுட்ப குழுவும், வாகை சூடிய நட்சத்திர பட்டியலும் கொண்ட நெக்ஸ்ட் லெவல், திரைப்படம் சமீப காலத்தில் உருவாகும் மிக தனித்துவமான கன்னட படங்களில் ஒன்றாக இருக்கும்.

Vishal, S J Suryah, Prithviraj, G V Prakash unveil power-packed teaser of Raghava Lawrence and his brother Elviin-starrer super-natural action thriller ‘Bullet’ produced by Five Star Creations’ Kathiresan and directed by Innasi Pandiyan

0

Naga Chaitanya releases ‘Bullet’ Telugu teaser

Bullet (Tamil) Teaser – https://youtu.be/zeGb3MBZY6Y

BullettuBandi (Telugu) Teaser – https://youtu.be/t554tWPq10U

Disco Shanthi Srihari marks her reentry in cinema after 28 years with ‘Bullet’

Five Star Creations’ Kathiresan, who produced the successful ‘Diary’ directed by Innasi Pandiyan starring Arulnithi, has reunited with the director for ‘Bullet’, a super-natural action thriller starring Raghava Lawrence.

Raghava Lawrence and his brother are Elviin playing the lead roles in this film, which is set to be a fast-paced movie. The film is made simultaneously in Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi.

Actors Vishal, S J Suryah, Prithviraj and G V Prakash Kumar released the teaser of ‘Bullet’ Tamil version today, while Naga Chaitanya released the Telugu teaser. They praised the team for creating the teaser in a way that increases the expectations for the film.

Actress Disco Shanthi Srihari, who was a dream girl of the fans in the 80s and 90s, is making a comeback in the film industry after 28 years with this movie. It is noteworthy that she has not acted in films since 1997. Disco Shanthi Srihari has played a important role in the film ‘Bullet’.

The shoot was held in Chennai, Tenkasi, and Kerala among other places. Vaishali Raj, Sunil, Aravind Akash, Kaali Venkat, Rangaraj Pandey, R. Sundararajan, Chaams, Shiva Shara, KPY Vinoth, VJ Thanikai ana Sendraayan are playing important roles in this movie.

Speaking about the film, Director Innasi Pandiyan said, “It is a full-length super-natural action thriller. The teaser has shaped up well to convey this to the audience. I was about to direct this story as my first film, but due to some reasons it was not possible. So, I have made this as my second film. Thanks to producer Kathiresan for his continuous support.”

Sam CS scores music for the film, while Aravinnd Singh, the cinematographer of films including ‘Demonte Colony’ and ‘Diary’, handled the cinematography. Vadivel Vimalraj handles the editing and Phantom Pradeep is responsible for the stunts.

Raghava Lawrence and his brother Elviin-starrer ‘Bullet’ directed by Innasi Pandiyan and produced by Five Star Creations’ Kathiresan will storm the theatres soon.

ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் நடிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ‘புல்லட்’ அமானுஷ்ய ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தின் விறுவிறு டீசரை விஷால், எஸ் ஜே சூர்யா, பிருத்விராஜ், ஜி வி பிரகாஷ் வெளியிட்டனர்

‘புல்லட்’ திரைப்படத்தின் தெலுங்கு டீசரை நாக சைதன்யா வெளியிட்டார்

Bullet (Tamil) Teaser – https://youtu.be/zeGb3MBZY6Y

BullettuBandi (Telugu) Teaser – https://youtu.be/t554tWPq10U

28 ஆண்டுகளுக்குப் பிறகு டிஸ்கோ சாந்தி ஶ்ரீஹரி ‘புல்லட்’ படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் ரீ-எண்ட்ரி

ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன், அருள்நிதி நடித்த ‘டைரி’ வெற்றிப் படத்திற்குப் பிறகு இயக்குநர் இன்னாசி பாண்டியன் உடன் மீண்டும் இணைந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘புல்லட்’ படத்தை தயாரித்துள்ளார்.

விறுவிறுப்பான அமானுஷ்ய ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் இத்திரைப்படம் தயாராகி உள்ளது.

‘புல்லட்’ படத்தின் தமிழ் டீசரை நடிகர் விஷால், எஸ் ஜே சூர்யா, பிருத்விராஜ் மற்றும் ஜி வி பிரகாஷ் குமார் இன்று வெளியிட்டனர், தெலுங்கு டீசரை நாக சைதன்யா வெளியிட்டார். படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் வகையில் டீசர் உருவாகியுள்ளதாக படக்குழுவினரை அவர்கள் பாராட்டினர்.

எண்பதுகள் மற்றும் 90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக விளங்கிய டிஸ்கோ சாந்தி ஸ்ரீஹரி இப்படத்தின் மூலம் 28 ஆண்டுகளுக்குப் பிறகு திரையுலகில் மீண்டும் தடம் பதிக்கிறார். கடந்த 1997ம் ஆண்டு முதல் திரைப்படங்களில் இவர் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டிஸ்கோ சாந்தி ஸ்ரீஹரி ‘புல்லட்’ படத்தில் மிக முக்கியமான ஒரு வேடத்தில் நடித்துள்ளார்.

வைஷாலி ராஜ், சுனில், அரவிந்த் ஆகாஷ், காளி வெங்கட், ரங்கராஜ் பாண்டே, ஆர். சுந்தர்ராஜன், சாம்ஸ், ஷிவா ஷாரா, கே பி ஒய் வினோத், விஜே தணிகை, சென்ராயன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘புல்லட்’ படப்பிடிப்பு சென்னை, தென்காசி, கேரளா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது

படத்தைப் பற்றி பேசிய இயக்குநர் இன்னாசி பாண்டியன், “இது ஒரு முழு நீள அமானுஷ்ய ஆக்ஷன் திரில்லர் திரைப்படம். இதை ரசிகர்களுக்கு உணர்த்தும் வகையில் டீசர் அமைந்துள்ளது. இந்த கதையை தான் நான் எனது முதல் திரைப்படமாக இயக்க இருந்தேன், ஆனால் ஒரு சில காரணங்களால் அது இயலவில்லை. எனவே இதை எனது இரண்டாவது படமாக தற்போது இயக்குகிறேன். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தயாரிப்பாளர் கதிரேசன் அவர்களுக்கு நன்றி,” என்று கூறினார்.

இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, ‘டிமான்டி காலனி’,
‘டைரி’ உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். படத்தொகுப்பை வடிவேலு விமல்ராஜ் மேற்கொள்ள, சண்டை காட்சிகளை பேண்ட்டம் பிரதீப் வடிவமைத்துள்ளார்.

ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடிக்கும் ‘புல்லட்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மலைக் கிராம மக்களின் வலி மிகுந்த வாழ்க்கையை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது ‘கெவி’ ; -இயக்குநர் தமிழ் தயாளன் மகிழ்ச்சி

0

தமிழ் சினிமாவில் பல இயக்குநர்கள் தங்கள் படத்தை கமர்சியல் அம்சங்களுடன், வெற்றி இலக்கை எளிதாக தொட்டுவிடும் முயற்சியாக தான் இயக்கி வருகிறார்கள். வணிக வெற்றி என்பது இன்றைய நாளில் இயக்குநர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் மிகப்பெரிய அவசியமாகிறது.

அதே சமயம் வெகு சில இயக்குநர்கள் தான், இந்த மண் பற்றியும் மண்ணின் மைந்தர்கள், அவர்களது வலி நிறைந்த வாழ்க்கைகள் இவற்றைப் பற்றியும் திரைப்படங்களாக எடுக்க வேண்டும்,, அதை வெகுஜன மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும், தன்னுடைய படங்கள் மூலமாக அவர்களுக்கு ஏதாவது நல்லது நடக்க வேண்டும் என்கிற நோக்கில் படங்களை உருவாக்கி வருகின்றனர்,.

அப்படி சமூக நோக்கில், பல வருடங்களாக கஷ்டங்களை மட்டுமே சந்தித்து வருகின்ற, தமிழகத்தில் இருக்கும் வெள்ளக்கெவி என்கிற ஒரு மலைவாழ் கிராம மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான ‘கெவி’ என்கிற படத்தை இயக்கியவர் தான் இயக்குநர் தமிழ் தயாளன்.

ARTUPTRIANGLES FILM KAMPANY சார்பில் தயாராகி வெளியான இந்த படத்தில் ஆதவன், ’மண்டேலா’ புகழ் நாயகி ஷீலா, விஜய் டிவி ஜாக்குலின், சார்லஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.. இந்த படம் தற்போது மூன்றாவது வாரத்தில் தமிழகத்தின் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

‘கெவி; படத்திற்கான மக்கள் வரவேற்பு குறித்து இயக்குநர் தமிழ் தயாளன் பேசும்போது, “கெவி படம் வெளியான சமயத்தில் கிட்டத்தட்ட 10 படங்கள் கூடவே வெளியாகின. ஆனால் எங்கள் படம் தற்போது மூன்றாவது வாரத்தில் நுழைந்துள்ளது பெருமையான விஷயம். படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன. குறிப்பாக படம் பார்த்த பெண்கள் பலரும் அழுது கொண்டே வெளிவருவதை பார்க்க முடிந்தது. அந்த அளவுக்கு அவர்கள் கதையுடன், கதை மாந்தர்களுடன் ஒன்றி விட்டார்கள்.

குறிப்பாக கர்ப்பிணி பெண் கதாபாத்திரமும், அவள் ஒரு குழந்தையை பெற்றெடுக்க நடத்தும் போரட்டமும் கிளைமாக்ஸும் அவர்களை ரொம்பவே கண் கலங்க வைத்துவிட்டது. அதை இந்த படத்துக்கு கிடைத்த வெற்றியாக தான் பார்க்கிறேன்.

இந்த கதையை நேர்மையாக கொடுத்துள்ளோம். அதற்கு கிடைத்த வரவேற்பு தான் இது. இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த அந்த மலை கிராமத்து மக்கள், எங்களது வலி நிறைந்த வாழ்க்கையையும் நாங்கள் சந்திக்கும் அவலங்களையும் இவ்வளவு தெளிவாக வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளீர்கள் என கண் கலங்கியபடியே கூறினார்கள். இந்த படம் வெளியான பிறகு சம்பந்தப்பட்ட கெமி கிராமத்தை பார்ப்பதற்காக பலரும் கிளம்பி செல்ல துவங்கி உள்ளனர். ஓரளவு தற்போது அந்த கிராமம் கவனம் பெற ஆரம்பித்துள்ளது.

இந்த படத்தில் காட்டப்படும் மலை கிராமத்திற்கு உரிய, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த படத்தை பார்க்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்தப்படத்தை அவர்கள் பார்த்தால் அங்குள்ள மக்களின் இயல்பான வாழ்க்கை முறைக்கு என்ன விதமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உணர்ந்து அதை செயல்படுத்த ஆரம்பித்தார்கள் என்றாலே, அது இந்த படம் எடுத்ததற்கான குறிக்கோளை நிறைவு செய்யும்” என்று கூறினார்.

மக்கள் தொடர்பு ; A.ஜான்

கலைஞர் டிவியின் சுதந்திர தின சிறப்புநிகழ்ச்சிகள்

0

கலைஞர் தொலைக்காட்சியில் சுதந்திர தினத்தைமுன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் புத்தம் புதியதிரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன்படி, வரும்வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு திண்டுக்கல்ஐ.லியோனி தலைமையில் நிறைவான மகிழ்வுடன்வாழ்பவர்கள் கிராமத்து பெண்களா? நகரத்து பெண்களா?என்கிற தலைப்பில் சிரிக்க வைக்கும் சிறப்புபட்டிமன்றமும், காலை 10 மணிக்கு விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், முனிஸ்காந்த் நடிப்பில்”கட்டா குஸ்தி” சிறப்பு திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு அஜித்குமார், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், சமுத்திரக்கனி நடிப்பில் “துணிவு” சிறப்பு திரைப்படமும்ஒளிப்பரப்பாக இருக்கிறது.

- Advertisement -

Recent Posts