- Advertisement -
Home Blog Page 136

Skyesports Launches Gaming Thiruvizha: A Pan-India Pop Culture IP, Tickets To Go Live On KYN Exclusively. Booking Open block your Tickets Now

0

Chennai, India – August 6, 2025: Skyesports, the premier global IP and community builder, is debuting its new pan-India festival series in Tamil Nadu with Gaming Thiruvizha, set for August 30-31 at the Chennai Trade Centre. The two-day event launches the wider Gaming Mahotsav initiative, with tickets exclusively on the KYN app.

Gaming Thiruvizha is where:

Open LAN tournaments blend gaming and cosplay
Anime meets Indian comics in vibrant merch alleys
Creators host live performances and fan meet-ups
An under-16 Chess Championship crowns regional prodigies before the national finals in Pune

“Skyesports was born in Chennai, and having our headquarters here keeps us closely connected to the local community. Gaming Thiruvizha is our way of giving back by showcasing the city’s creativity while delivering a world-class pop-culture experience right on home soil. We want every fan who walks through the gates to feel that this festival was built especially for Chennai,” said Shiva Nandy, Founder & CEO, Skyesports.

“At KYN, our vision is to offer differentiated experiences and foster hyperlocal communities. This aligns perfectly with what Skyesports is creating through Gaming Thiruvizha,” added Gayathri Thyagarajan, CEO, Kynhood Technologies and Founder of KYN.

Skyesports chose Chennai for its surging cross-fandom audience. Currently, India boasts over 450 million gamers, and interest in comics, anime, and creator-led entertainment continues to rise.

*

About Skyesports: Skyesports, headquartered in Chennai, India, is a leading global IP builder in the esports and gaming industry. Driven by a team of dedicated gamers and ex-professional players, the company excels in community building, IP creation, and providing tech solutions for gamers, esports players, and brands. By hosting world-class tournaments and nurturing a vibrant gaming community, Skyesports is revolutionizing the global esports scene. Skyesports is a part of the digital entertainment and technology company, JetSynthesys. For more information, visit https://skyesports.in/

கேமிங் திருவிழாவை அறிமுகப்படுத்தும் ஸ்கைஸ்போர்ட்ஸ்!

பான்-இந்தியா பாப் கலாச்சார நிகழ்வான இதன் டிக்கெட்டுகள் KYN -இல் பிரத்தியேகமாக வெளியாகியுள்ளது…இப்போதே உங்கள் டிக்கெட்டிற்கான முன்பதிவை தொடங்குங்கள்!

சென்னை, இந்தியா- ஆகஸ்ட் 04, 2025: தி ப்ரீமியர் குளோபல் ஐபி மற்றும் கம்யூனிட்டி பில்டரான ஸ்கைஸ்போர்ட்ஸ், ஆகஸ்ட் 30-31 தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில், பான்-இந்தியா ஃபெஸ்டிவல் சீரிஸான புத்தம் புதிய கேமிங் திருவிழாவை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருகிறது. இந்த இரண்டு நாள் கொண்டாட்டம் ஸ்கைஸ்போர்ட்ஸ் கேமிங் முயற்சியின் முதல் அத்தியாயத்தைக் குறிக்கிறது. இது சென்னையின் துடிப்பான ரசிகர்களைக் கவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. டிக்கெட்டுகள் KYN செயலியில் மட்டுமே பிரத்தியேகமாகக் கிடைக்கும்.

பல கலாச்சாரங்களின் அனுபவமான இந்த கேமிங் திருவிழாவின் சிறப்பம்சங்கள்:

  • திறந்த லேன் ( LAN ) போட்டிகளில் கேமிங் மற்றும் காஸ்ப்ளே.
  • இந்திய காமிக்ஸுடன் அனிமேஷன் ஒன்றிணைகிறது.
  • நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் ரசிகர்களுடன் கிரியேட்டர்ஸ் கலந்துரையாடுகிறார்கள்
  • புனேவில் நடைபெறும் தேசிய அளவிலான இறுதிப்போட்டிக்கு முன்பாக 16 வயதுக்குட்பட்ட செஸ் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டு அவர்களில் சிறந்தவர்களுக்கு மகுடம் சூட்டப்படும்.

ஸ்கைஸ்போர்ட்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சிவா நந்தி, “சென்னையில்தான் ஸ்கைஸ்போர்ட்ஸ் உருவானது. மேலும் எங்கள் தலைமையகம் இங்கு இருப்பதால் உள்ளூர் கலாச்சாரத்துடன் எங்களை நெருக்கமாக இணைக்கிறது. கேமிங் திருவிழாவில் நகரத்தின் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதன் மூலம் எங்கள் சொந்த மண்ணில் உலகத்தரம் வாய்ந்த பாப் கலாச்சார அனுபவத்தை கொடுக்கிறோம். இந்தத் திருவிழாவுக்கு வரும் ஒவ்வொரு ரசிகரும் இந்த விழா சென்னைக்காக மட்டுமே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது என்று உணர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.

“வலுவான சமூகங்களை வளர்க்கும் அதே வேளையில், வேறுபட்ட அனுபவங்களையும் புதிய பொழுதுபோக்கையும் வழங்கும் ஒரே இடமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் தொலைநோக்குப் பார்வை. இந்த தொலைநோக்குப் பார்வை, கேமிங் திருவிழா மூலம் ஸ்கைஸ்போர்ட்ஸ் உருவாக்கும் விஷயங்களுடன் சரியாக ஒத்துப்போகிறது ” என்று Kynhood Technologies இன் தலைமை செயல் அதிகாரி மற்றும் KYN இன் நிறுவனர் காயத்ரி தியாகராஜன் கூறினார்.

விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்கள் அதிகமுள்ள இடம் என்பதால் ஸ்கைஸ்போர்ட்ஸ் சென்னையை தேர்வு செய்தது. தற்பொழுது, இந்தியாவில் 450 மில்லியன் கேமர்கள் உள்ளனர். இதுமட்டுமல்லாது காமிக்ஸ், அனிமே மற்றும் பொழுதுபோக்கு துறையில் ஆர்வம் உள்ளவர்கள் உள்ளனர்.

ஸ்கைஸ்போர்ட்ஸ் பற்றி:

இ- ஸ்போர்ட்ஸ் மற்றும் கேமிங் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் இந்தியாவில் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட குளோபல் ஐபி பில்டர். அர்ப்பணிப்புள்ள கேமர்கள் மற்றும் முன்னாள் தொழில்முறை வீரர்களால் இயங்கும் இந்த நிறுவனம் கம்யூனிட்டி பில்டிங், ஐபி கிரியேஷன் மற்றும் டெக் தீர்வு போன்ற சேவைகளை கேமர்ஸ், இ-ஸ்போர்ட்ஸ் பிளேயர்ஸ் மற்றும் பிராண்டுகளுக்குக் கொடுத்து வருகிறது. ஸ்கைஸ்போர்ட்ஸ் உலகத்தரம் வாய்ந்த போட்டிகளை நடத்துவதன் மூலமும், துடிப்பான கேமிங் சமூகத்தை வளர்க்கிறது மற்றும் உலகளாவிய இ-ஸ்போர்ஸில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.

ஸ்கைஸ்போர்ட்ஸ், டிஜிட்டல் பொழுதுபோக்கு மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான ஜெட்சின்தசிஸின் ஒரு பகுதியாகும். மேலும் தகவலுக்கு: https://skyesports.in/

செய்திக்குறிப்பு வெளியிடுபவர்:வேலம்மாள்‌ செஸ் அகாடமி (வேலம்மாள்‌ நெக்ஸசின் ஓர் அங்கம்)

0

வெற்றிக்கு அருகில் வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
பிஃடே( Fide -பன்னாட்டு‌ சதுரங்கக் கூட்டமைப்பு) உலக பள்ளிகள் அணி சாம்பியன்ஷிப் 2025
எபிஸ்கோபல் உயர்நிலைப்பள்ளி, வாஷிங்டன் டி.சி.
ஆறுசுற்றிலும் வென்று தரவரிசையில் முதலிடத்தை எட்டியது

பிஃடே உலக பள்ளிகள் அணி சாம்பியன்ஷிப் 2025 போட்டி அமெரிக்காவின்‌ வாஷிங்டன் நகரில் ஆகஸ்ட் 02 முதல்‌ 07வரை நடைபெறும்.

இந்தப் போட்டியில் பங்கு பெறுவதற்காக இந்தியாவிலிருந்து முதன் முறையாக தமிழ்நாட்டின் வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி‌ வீரர்கள் அமெரிக்கா சென்றுள்ளார்கள்.

இப்பள்ளியின்‌ சார்பாக பள்ளியின் பயிற்சியாளர்‌ எஸ்.வேலவன்‌ தலைமையில் வீரர்கள் கீர்த்தி‌ரெட்டி(WFM), அஸ்வத்.எஸ்(IM), தக்ஷின்அருண்(FM), இளம்பரிதி(IM) எ.ஆர், பிரனவ் கே.பி(FM) பங்கேற்கயிருக்கிறார்கள்.

மொத்தம் எட்டு சுற்று. தொடர்ச்சியாக நான்கு சுற்றில் முறையே மங்கோலியா, ஹங்கேரி,ஆஸ்திரியா, அமெரிக்க, கஜகிஸ்தான், இலங்கை நாட்டு‌ப் பள்ளியை‌ எதிர்கொண்டு வெற்றி பெற்றனர். நாளை நடைபெறும் எழாவது சுற்றில் தரவரிசையில் முதலிடமான கஜகிஸ்தான் நாட்டின் சீட் (seed educational Complex) எஜிகேசனல் காம்ப்ளக்ஸ் பள்ளியை சந்திக்கின்றனர்.

பலம் வாய்ந்த கஜகிஸ்தான், இலங்கையை பள்ளியை வென்று முதலிடம் நோக்கி முன்னேறி வெற்றிக்கு அருகில் இருப்பதாக சதுரங்க ஆர்வலர்கள் கணிக்கின்றார்கள்.

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள எபிஸ்கோபல் உயர்நிலைப் பள்ளியில் நடைபெறும் இந்த நிகழ்வில் 250க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து 55 நாட்டின்‌ சிறந்த பள்ளிகள் அணி கலந்து கொள்கிறது.

அறிமுக நடிகர் வினோத் நடிக்கும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

0

இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளி வெளியிட்ட நடிகர் வினோத்தின் ‘பேய் கதை’ படத்தின் இசை & முன்னோட்டம்

PeikathaiTrailer ▶️ https://youtu.be/1UJY3w8rGgI

ஜெர்ரி’ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர்.

‘பேய் கதை’ திரைப்படத்தில் வினோத், ஆர்யலட்சுமி, கானா பல்லவ், சுகன்யா, ஆஷ் மெலோ, செல்வா, எலிசபெத் சுராஜ், ஜீ.வி. மகா, மைக்கேல், ஸ்ரீசுமந்த், ஆஷிக் பீட்டர், ரோடஸ், ஜீவிதா, ருச்சி பிங்க்லே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் பிரவீண் எஸ். ஜி. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு போபோ சசி இசையமைத்திருக்கிறார். கலகலப்பும் திகிலும் நிறைந்த குதூகல திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஜெர்ரி’ஸ் ஜர்னி இன்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனம் சார்பில் ஜெர்ரி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சுரேஷ் வழங்குகிறார்.

ஆகஸ்ட் 29ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநர் ஜுன் மோசஸ் பேசுகையில், ”இப்படத்திற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு முதலில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறேன் என நம்புகிறேன்.

படத்தின் இசையமைப்பாளரான போபோ சசி என்னுடைய பால்ய கால நண்பர். அவரும் நானும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். இந்த விழாவிற்கு இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளி அவர்களை சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தோம். அவர்களும் இங்கு வருகை தந்திருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தில் இணைந்து பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தை பார்த்து உற்சாகமடைந்து தமிழகம் முழுவதும் வெளியிடும் ஸ்ரீ தேனாண்டாள் சுரேஷூக்கும் நன்றி.

‘பேய் கதை’ கம்ப்ளீட் ஃபேமிலி என்டர்டெய்னர். திரில்லர்-காமெடி -சஸ்பென்ஸ் என ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த படங்களில் ரத்தம், வன்முறை, பயங்கரம் ஆகியவை இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அவை எதுவும் இருக்காது. குழந்தைகள் கூட இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம். அவர்களுக்கும் இது ஒரு திரில்லிங்கான தருணமாக இருக்கும். இப்படத்தின் திரைக்கதையில் புதிய முயற்சிகளை செய்திருக்கிறோம். கதை சொல்லும் பாணியிலிருந்தும், அதனை விவரிக்கும் வகையிலும், அதில் உள்ள தொழில்நுட்ப விஷயங்கள் வரை புதிதாக முயற்சித்து இருக்கிறோம். திரையரங்க அனுபவத்திற்காக பல விஷயங்களை புதிதாக செய்திருக்கிறோம். படத்தில் எட்டு நிமிட அளவிற்கு வி ஆர் மோஷன் (V. R. Motion) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறோம். தற்போதுள்ள குழந்தைகள் வி ஆர் மோஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். அவர்களை கவர்வதற்காக தொடர்ந்து எட்டு நிமிட அளவிற்கு இந்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி இருக்கிறோம். படம் முழுவதும் எதிர்பாராத சுவாரசியமான திருப்பங்கள் இருக்கின்றன. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.

இந்தப் படத்தில் பார்வையாளர்கள் முகம் சுழிக்கும் வகையில் எந்த காட்சியும் இடம்பெறவில்லை. சிறிய முதலீட்டில் உருவாக்கப்பட்ட நல்லதொரு முயற்சி. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

வசனகர்த்தா நவீன் பேசுகையில், ”இந்தப் படத்திற்காக வசனம் எழுதிய அனுபவமும், அதற்கான பயணமும் வித்தியாசமாக இருந்தது.‌ இயக்குநர் என்னிடம் ரசிகர்களின் கோணத்திலிருந்து உரையாடலை எழுது என்றார். முதல் 15 நிமிடங்களை மட்டும் தான் என்னிடம் எழுதுவதற்காக வழங்கினார்கள். பத்து நாட்கள் எடுத்துக்கொண்டு எழுதிக் கொடுத்தேன். அதன் பிறகு படத்தின் முதல் பாதி வரை எழுதிக் கொடுங்கள் என கேட்டனர்.‌ அப்போதும் நான் குழம்பினேன். அதன் பிறகு இரண்டாம் பாதி கதையை முழுவதுமாக என்னிடம் விவரித்தார். அதைக் கேட்டவுடன் எனக்கு ஆச்சரியம் அதிகமாகி விட்டது. ஏனெனில் இந்த படத்தில் திரில்லர், சஸ்பென்ஸ் என நிறைய விஷயங்கள் இருக்கின்றன.‌ அனைவரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.

இதுவரை தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மட்டுமே உரையாடல்களை எழுதி வந்த எனக்கு முதன் முதலாக பெரிய திரையில் உரையாடல் எழுத வாய்ப்பு அளித்துள்ளனர். இதற்காக இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

பாடலாசிரியர் யூகி பிரவீண் பேசுகையில், ”2017ம் ஆண்டில் வெளியான ‘அட்டு’ படத்திற்கு அனைத்து பாடல்களையும் எழுதி இருந்தேன். போபோ சசி எனக்கு எல்லா பாடல்களையும் எழுதுவதற்கு வாய்ப்பளித்தார். நான் இதுவரை 30 பாடல்களை எழுதி இருக்கிறேன். இதில் 20 பாடலை போபோ சசிக்காக எழுதியிருக்கிறேன். எங்கள் கூட்டணியில் இன்னும் ஏராளமான ஹிட் பாடல்கள் வரவேண்டும் என பிரார்த்திக்கிறேன். இந்த படத்திலும் எல்லா பாடல்களையும் எழுதும் வாய்ப்பை போபோ சசி அளித்திருக்கிறார். இதற்கு ஒப்புதல் அளித்த இயக்குநருக்கும் , தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

நடிகை ஆஷ் மெலோ பேசுகையில், ”கன்னடத்தில் நடிகர் துனியா விஜய் உடன் நடித்திருக்கிறேன். தமிழில் நான் நடித்திருக்கும் முதல் படம் இது. இதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் எனக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். 29ம் தேதி அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகை எலிசபெத் பேசுகையில், ”இந்தப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இளம் திறமைசாலிகள் இணைந்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இப்போது இளம் திறமைசாலிகள் பலரும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்கள். எங்களைப் போன்ற மூத்த நடிகைகளை மறந்து விடுகிறார்கள். இந்தப் படத்திற்கு இசை மிக சிறப்பாக அமைந்திருக்கிறது, படமும் நன்றாக வந்திருக்கிறது, நாயகனுக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். அனைவரும் பார்த்துவிட்டு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகை ஜீ.வி.மகா பேசுகையில், ”இந்தப் படத்தின் மூலமாகத்தான் நான் நடிகையாக அறிமுகமாகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநருக்கும் , படக்குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் என்னுடைய நண்பராக இருந்தாலும் ஆடிஷன் வைத்து தான் குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு என்னை தேர்வு செய்தார். அத்துடன் எனக்கு அவர் அளித்த ஊக்கம் காரணமாகவே இப்படத்தில் நடித்திருக்கிறேன்.‌

இந்த திரைப்படம் ஏனைய பேய் படங்களை போல் இல்லை, புதுமையான நாகரீகமான நல்லதொரு ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கிறது. ஆகஸ்ட் 29 திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இசையமைப்பாளர் போபோ சசி பேசுகையில், ”வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநரும், நானும் 25 ஆண்டு கால நண்பர்கள். நாங்கள் இருவரும் ஏற்கனவே இணைந்து பணியாற்றி இருக்க வேண்டும். ஆனால் அதற்கான தருணம் தற்போது தான் அமைந்திருக்கிறது. ‘பேய் கதை’ படத்தை தனித்துவமாக உருவாக்கியிருக்கிறார். தற்போது தான் இப்படத்திற்கான பின்னணி இசை சேர்ப்பு பணிகளை நிறைவு செய்தேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது, பாடல்களும் சிறப்பாக இருக்கின்றன,” என்றார்.

இசையமைப்பாளர் சபேஷ் பேசுகையில், ”படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது இயக்குநர் எதையோ புதுமையாக செய்திருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது. படம் சிறப்பாக இருக்கிறது. இந்த விழாவிற்கு அழைப்பு விடுப்பதற்காக இயக்குநர் எங்களை சந்தித்தார். அப்போது நான் உங்களை பார்த்திருக்கிறேன் என அவர் கூறினார் அப்போது அவரிடம் நாங்கள் வருடத்திற்கு 25 திரைப்படங்களில் பணியாற்றினோம். அப்போது கழுத்தை திருப்பி பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்று பார்ப்பதற்கு கூட நேரம் இருக்காது. எங்கள் பார்வை முழுவதும் திரையிலும், கீ போர்டிலும் தான் இருக்கும் என்று விளக்கம் அளித்தேன்.

எங்கள் குடும்பத்தை சேர்ந்த இசையமைப்பாளர் போபோ சசி இதில் பணியாற்றி இருக்கிறார். தற்போதெல்லாம் ஒரு பாடல் நிலைத்து நிற்கிறது என்றால் அது வெஸ்டர்ன் பாணியிலான பாடலாக இருந்தாலும் அதில் சிறிதளவு மெலோடி இடம்பெற்றிருக்க வேண்டும். மெலோடி இருந்தால்தான் அந்தப் பாடல் ஹிட் ஆகும். இது நூறு சதவீதம் போபோ சசி பாடல்களில் இருக்கிறது. அதனால் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும்,” என்றார்.

இசையமைப்பாளர் முரளி பேசுகையில், ”இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது இசையும், ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது. இந்த திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது. அதற்கு ஏற்றாற் போல் பின்னணி இசையும், பாடல்களும் அமைந்திருக்கின்றன.

இயக்குநர் ஜுன் மோசஸை சிறிய வயதில் இருந்தே பார்த்திருக்கிறேன். அவர் எப்போதும் எங்களுடைய வீட்டில் போபோ சசியுடன் தான் இருப்பார். இந்த இருவரும் சின்ன வயதிலிருந்து எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். அதனால் தான் தற்போது இருவரும் திரையில் ஜொலிக்கிறார்கள். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்,” என்றார்.

நாயகன் வினோத் பேசுகையில், ”இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளியின் ரசிகன். ஏனெனில் ‘வாலி’ படத்திற்கு பின்னணி இசையமைத்தது இவர்கள்தான். அவர்கள் இங்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி.

இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் ஸ்ரீ தேனாண்டாள் சுரேஷுக்கும் நன்றி. அவருடன் தொடர்ந்து பயணிக்க விரும்புகிறேன்.

இயக்குநர் ஜுன் மோசஸ் என்னுடைய நண்பர் தான். நானும் அவரும் பிசினஸ் பார்ட்னர்ஸ். ஒரு நாள் சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கும்போது திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற என் விருப்பத்தை சொன்னவுடன் அவர் ஒரு வரியில் கதையை சொன்னார்.‌ அதன் பிறகு அதனை விரிவுபடுத்தி பணியாற்றத் தொடங்கி அந்தப் பணி தற்போது இங்கு வரை வந்திருக்கிறது. அவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

நான் கார்ப்பரேட் நிறுவனத்தில் 22 ஆண்டு காலம் பணியாற்றி இருக்கிறேன். அங்கு கற்றுக் கொள்ளாத பல விஷயங்களை சினிமாவில் ஒரே வருடத்தில் கற்றுக் கொண்டேன்.

‘பேய் கதை’ திரைப்படம் 29ம் தேதி அன்று வெளியாகிறது. ஊடகங்களும், ரசிகர்களும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

Working with Rajinikanth sir was very memorable. I wish Coolie a big success: King Nagarjuna at the pre-release event in Hyderabad

0

Coolie is my diamond jubilee film. I wish this film becomes a huge hit: Superstar Rajinikanth in a special video byte

Superstar Rajinikanth and Lokesh Kanagaraj are teaming up for the crazy pan India action movie ‘Coolie’ produced by Kalanidhi Maran under the prestigious Sun Pictures banner. King Nagarjuna is playing a key role. Aamir Khan, Sathyaraj, Soubin Shahir, Upendra, Shruti Haasan are seen in important roles. The movie has created huge buzz with its promotional content. The movie will be grandly released in Telugu states on August 14th through Asian Multiplex Private Limited owned by D. Suresh Babu, Dil Raju, Sunil Narang, Bharat Narang. On this occasion, the makers organized a grand pre-release event & press meet.

Superstar Rajinikanth’s Special Video Byte:
“To the Telugu film audience. Greetings, I am 50 years old in the industry. I am happy that my film ‘Coolie’ directed by Lokesh Kanagaraj is coming out on August 14 this year. Coolie is my diamond jubilee picture. If Telugu has SS Rajamouli then Tamil has Lokesh Kanagaraj. All his films are super hits. Another great thing is that many stars have acted in it. I am doing a film with Sathyaraj after many years along with Shruti Haasan, Upendra, Soubin and Aamir Khan in a special appearance. He is acting for the first time in South films. Especially Nagarjuna is playing the villain in it.

After hearing the subject of ‘Coolie’, I got interested in playing the role of Simon. I was waiting for who would play that role. Because it will be very stylish. We searched for months. We sat with an actor for this role six times. Lokesh told me that he would convince him somehow. I asked, ‘Who is he?’ I was shocked when he mentioned Nagarjuna’s name. Later, I felt happy to know that he had accepted. Nagarjuna is not a person who does films for money. He doesn’t need that. Should he always be a good guy? He must have accepted the role of Simon thinking that. We both did a film 33 years ago. He is the same as he was then. He still looks young. I have lost my hair. While working with Nagarjuna, I asked him, ‘What is your health secret?’, he replied ‘Nothing sir.. Exercise, swimming, a little diet. Dinner is done at 6 pm. The genes that my father got are also a reason. Apart from that, my father gave me advice. He told me not to let outside things get into my head’. We both went to Thailand for a 17-day schedule. I will never forget that in my life. Watching his performance as Simon, I was amazed. It’s like Basha- Anthony. Coolie- Simon. My Nagarjuna was amazing as Simon. Anirudh gave wonderful music. I want you all to support the film and hope it does well,” he said.

King Nagarjuna:
“After doing ‘Ninnepelladatha’, if you are doing ‘Annamayya’… some people tried to discourage you by saying, ‘Why such a story now’. But I like novelty. If you don’t get bored after going to the set, you have to do different roles. I have worked with that effort for so long. Even though I took some beatings. I have also received good and good successes. One day Lokesh met me and said, ‘If you want me to make you a villain, I will tell you a story. Otherwise, I will talk about some movies and drink tea and leave.’ Lokesh said, Kaithi and Vikram are my favourite films. After watching those films, I strongly wanted to work with this director forever. After telling the story of ‘Coolie’, I liked it a lot. He asked, ‘Did Rajini sir accept this story?’ Because in this story, the character of ‘Simon’ is like the hero in the story. Lokesh portrays the hero and villain as equals. For the first time in my career, I recorded Lokesh telling the story. I listened to it again and again after going home. I suggested some changes that I felt were necessary. Others would take it easy. But, I liked the way Lokesh portrayed the character of ‘Simon’ by considering the things I said. As Rajini sir said, it’s not good to always act as good guys in films (laughs).

Our first shoot took place in Vizag. A video recorded during the second day of shooting was leaked on social media and went viral. After watching the scene, I asked Lokesh, ‘Can people be this evil?’ He said they are more evil than this. He said there is an evil inside you too. I took it as a compliment to the character’s performance. Sun Pictures, which produced this film, does not hesitate to spend money. But, Lokesh completed the film with Rs. 5 crore left over from the budget they gave. He works with six cameras during the shoot. Most of the scenes were okay in a single take. When I saw the cut version of the film and was told about the dubbing, I thought, did I act so well? I felt. Even though I was given a negative role in the movie, the experience of doing this role was positive. Sathyaraj, Shruti Haasan, Soubin, Upendra all acted wonderfully.

During this shoot, Rajini sir himself came and spoke to me. That was his great thing. When he met me, he just stared at me for a while. He said, ‘If I had known you were like this, I would have told Lokesh not to have Nagarjuna in our film.’ (Laughs) It was amazing to sit and talk to him. There is nothing special to say about his acting and style. Even after all these years and after doing so many films, Rajini sir goes to the side and practices dialogues. They will try to do something new. We shot the action sequence at night for 17 days in Thailand. More than 350 people worked very hard. On the last day, Rajini sir called everyone and gave each of them a packet and said to take something for the children when they go home. He is such a kind-hearted person. Working with him is a wonderful experience.

I have no words to say about Anirudh’s music. He keeps giving hits in a row. The background score in this is amazing. Thank you to everyone who worked on this film. This film gave me a very positive experience. It gave me a lot of new experience. I felt like a better actor doing this film. I wish this film a big success,” he said.

Director Lokesh Kanagaraj:
Thanks to our producers for giving me such a big project. Thank you Rajini sir for believing in me in this project. Thank you Aamir Khan sir, Sathyaraj sir, Soubin sir, Upendra sir. Convincing Nagarjuna sir for this film was a big challenge for me. I gave almost 7 narrations. It was a great joy when he finally agreed. You are going to see how wonderfully he acted in this film. Thank you so much everyone.”

Actor Shruti Haasan:
“This film is very special for me. Thank you to director Lokesh garu for giving me this character. My character is very special. I never imagined that I would work with Rajinikanth sir. I feel lucky to get the opportunity in this film. Nagarjuna sir is fantastic. All the audience will love his character. I definitely want everyone to watch this film on August 14th.”

Producer Suresh Babu: “Greetings to everyone. I really like Lokesh’s film Kaithi and Vikram. It is very interesting to see Nagarjuna in the bad boy character. His character is very amazing. The audience will also be very mesmerized and accepted. I wish this film a great success. I wish this film team great success to everyone.”

Actor Sathyaraj:
“This is a very big film. I am very happy to be a part of this film. It is a great feeling to act with Superstar Rajinikanth, King Nagarjuna, Shruti Haasan, Aamir Khan, Soubin Shahir, Upendra and all of them. This film is definitely going to be a big success.”

Producer Dil Raju: “Nagarjuna has done many different roles in Telugu cinema. For the first time, he is doing a negative role under the direction of Lokesh Kanagaraj. He designs every character in his film wonderfully. Just like Nagarjuna set a new trend with Annamaiya, he is going to set a new trend in a negative role with this film. His appearance in a negative role is going to be a big asset for this film. The audience also doesn’t like to see heroes as heroes now. They only watch heroes when they do something new. We have seen Pushpa in many films like KGF. Welcome to Nagarjuna garu who is coming to the new world. Rajinikanth sir reminded us of his language. This film is going to be a sensation hit worldwide. Thank you Sun Pictures for giving us the opportunity to release this film in Telugu.”

‘கூலி’ எனது வைர விழாப் படம். இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற விரும்புகிறேன்: சிறப்பு வீடியோ பதிவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி உள்ள மாபெரும் பான் இந்தியா ஆக்சன் திரைப்படம் ‘கூலி’. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் பேனரின் கீழ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். கிங் நாகார்ஜுனா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அமீர் கான், சத்யராஜ், சௌபின் ஷாஹிர், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லர் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. இந்த திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் ஆகஸ்ட் 14 அன்று டி. சுரேஷ் பாபு, தில் ராஜு, சுனில் நரங், பாரத் நரங் ஆகியோருக்கு சொந்தமான ஏசியன் மல்டிபிளெக்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் பிரம்மாண்டமாக வெளியிடப்பட உள்ளது. இதையொட்டி, படக்குழுவினர் பிரம்மாண்டமான ப்ரீ-ரிலீஸ் விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர்.

கிங் நாகார்ஜுனா:
“‘நின்னேபெல்லாடத்தா’ படத்திற்குப் பிறகு, ‘அன்னமய்யா’ செய்யும்போது… ‘இப்போது ஏன் இப்படி ஒரு கதை’ என்று சிலர் என்னை கேலி செய்ய முயன்றனர். ஆனால் எனக்கு புதுமை பிடிக்கும். செட்டிற்கு சென்ற பிறகு சலிப்பு ஏற்பட கூடாது என்றால், வித்தியாசமான பாத்திரங்களை செய்ய வேண்டும். இவ்வளவு காலம் அந்த முயற்சியுடன் தான் உழைத்திருக்கிறேன். சில அடிகள் வாங்கியிருந்தாலும், நல்ல வெற்றிகளையும் பெற்றுள்ளேன். ஒரு நாள் லோகேஷ் என்னை சந்தித்து, ‘உங்களை வில்லனாக நடிக்க வைக்க விரும்புகிறேன், ஒரு கதை சொல்கிறேன். இல்லையென்றால், சில படங்களை பற்றிப் பேசிவிட்டு டீ குடித்துவிட்டு போகிறேன்’ என்றார். ‘கைதி’, ‘விக்ரம்’ எனக்கு மிகவும் பிடித்த படங்கள் என்று லோகேஷிடம் சொன்னேன். அந்த படங்களை பார்த்த பிறகு, இந்த இயக்குநருடன் நிச்சயம் பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ‘கூலி’ கதையைச் சொன்னதும், எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. ‘ரஜினி சார் இந்த கதையை ஏற்றுக்கொண்டாரா?’ என்று கேட்டேன். ஏனென்றால், இந்த கதையில் ‘சைமன்’ கதாபாத்திரம் தான் ஹீரோவை போல இருக்கும். லோகேஷ் ஹீரோவையும் வில்லனையும் சமமாக சித்தரிக்கிறார். என் திரை வாழ்க்கையில் முதல்முறையாக, லோகேஷ் கதை சொல்வதை ரெக்கார்ட் செய்தேன். வீட்டிற்கு சென்ற பிறகு அதை திரும்பத் திரும்பக் கேட்டேன். எனக்கு தேவையான சில மாற்றங்களை பரிந்துரைத்தேன். மற்றவர்கள் அதை எளிதாக எடுத்துக்கொள்வார்கள். ஆனால், நான் சொன்ன விஷயங்களை கருத்தில் கொண்டு லோகேஷ் ‘சைமன்’ பாத்திரத்தை வடிவமைத்த விதம் எனக்கு பிடித்திருந்தது. ரஜினி சார் சொன்னது போல், படங்களில் எப்போதும் நல்லவர்களாக நடிப்பது நல்லதல்ல (சிரிக்கிறார்). எங்கள் முதல் ஷூட்டிங் வைசாக்கில் நடந்தது. இரண்டாம் நாள் படப்பிடிப்பின் போது பதிவு செய்யப்பட்ட ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் கசிந்து வைரலானது. அந்த காட்சியை பார்த்த பிறகு, ‘மனிதர்கள் இவ்வளவு கொடூரமாக இருக்க முடியுமா?’ என்று லோகேஷிடம் கேட்டேன். ‘இதைவிட கொடூரமாக இருப்பார்கள். உங்களுக்குள்ளும் ஒரு கெட்ட குணம் இருக்கிறது’ என்றார். அதை என் கதாபாத்திரத்தின் நடிப்புக்கான பாராட்டாக எடுத்துக்கொண்டேன். இந்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ், பணம் செலவழிக்க தயங்கவில்லை. ஆனால், அவர்கள் கொடுத்த பட்ஜெட்டில் 5 கோடி ரூபாயை மிச்சப்படுத்தி லோகேஷ் படத்தை முடித்தார். படப்பிடிப்பின் போது ஆறு கேமராக்களுடன் வேலை செய்கிறார். பெரும்பாலான காட்சிகள் ஒரே டேக்கில் ஓகே ஆகிவிடும். படத்தின் கட் வெர்ஷனை பார்த்துவிட்டு டப்பிங் பற்றி சொன்னபோது, ‘நான் இவ்வளவு நன்றாக நடித்தேனா?’ என்று தோன்றியது. படத்தில் எனக்கு நெகட்டிவ் ரோல் கொடுத்திருந்தாலும், இந்த பாத்திரத்தில் நடித்த அனுபவம் பாசிட்டிவாக இருந்தது. சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சௌபின், உபேந்திரா அனைவரும் அற்புதமாக நடித்துள்ளனர்.

இந்த படப்பிடிப்பின் போது, ரஜினி சார் அவரே வந்து என்னிடம் பேசினார். அது அவருடைய பெருந்தன்மை. அவர் என்னை சந்தித்தபோது, சிறிது நேரம் என்னையே உற்றுப் பார்த்தார். ‘நீங்கள் இப்படி இருப்பீர்கள் என்று தெரிந்திருந்தால், நாகார்ஜுனாவை நம் படத்தில் வைக்க வேண்டாம் என்று லோகேஷிடம் சொல்லியிருப்பேன்’ என்றார் (சிரிக்கிறார்). அவருடன் அமர்ந்து பேசுவது அற்புதமாக இருந்தது. அவருடைய நடிப்பு மற்றும் ஸ்டைலைப் பற்றிச் சொல்ல தேவையில்லை. இத்தனை வருடங்கள் மற்றும் இத்தனை படங்கள் நடித்த பிறகும், ரஜினி சார் ஓரமாகச் சென்று வசனங்களை பயிற்சி செய்வார். புதிதாக ஏதாவது செய்ய முயற்சிப்பார்கள். தாய்லாந்தில் 17 நாட்கள் இரவு நேரத்தில் ஆக்சன் காட்சிகளைப் படமாக்கினோம். 350-க்கும் மேற்பட்டோர் மிகவும் கடினமாக உழைத்தனர். கடைசி நாளில், ரஜினி சார் எல்லோரையும் அழைத்து, ஒவ்வொருவருக்கும் ஒரு கவர் கொடுத்து, வீட்டிற்கு செல்லும்போது குழந்தைகளுக்காக ஏதாவது வாங்கிச் செல்லுங்கள் என்றார். அவர் அவ்வளவு நல்ல மனம் கொண்டவர். அவருடன் பணியாற்றுவது ஒரு அற்புதமான அனுபவம்.

அனிருத்தின் இசையைப் பற்றிச் சொல்ல வார்த்தைகளே இல்லை. அவர் தொடர்ந்து ஹிட்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதில் பின்னணி இசை அற்புதமாக இருக்கிறது. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் எனக்கு மிகவும் பாசிட்டிவான அனுபவத்தைக் கொடுத்தது. இது எனக்கு நிறைய புதிய அனுபவங்களைத் தந்தது. இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் நான் ஒரு சிறந்த நடிகனாக உணர்ந்தேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிறப்பு வீடியோ பதிவு:
“தெலுங்குத் திரையுலக ரசிகர்களுக்கு வணக்கம். நான் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. இந்த ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எனது ‘கூலி’ திரைப்படம் வெளிவருவதில் மகிழ்ச்சி. கூலி எனது வைர விழாப் படம். தெலுங்கிற்கு எஸ்.எஸ். ராஜமௌலி என்றால், தமிழுக்கு லோகேஷ் கனகராஜ். அவருடைய படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட். இன்னொரு சிறப்பு என்னவென்றால், இதில் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, சௌபின் மற்றும் சிறப்புத் தோற்றத்தில் அமீர் கானுடன், பல வருடங்களுக்குப் பிறகு சத்யராஜுடன் ஒரு படம் நடிக்கிறேன். அவர் தென்னிந்தியப் படங்களில் முதல் முறையாக நடிக்கிறார். குறிப்பாக, நாகார்ஜுனா இதில் வில்லனாக நடிக்கிறார்.

‘கூலி’ கதையைக் கேட்ட பிறகு, எனக்கு சைமன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டது. அந்தப் பாத்திரத்தில் யார் நடிப்பார் என்று காத்திருந்தேன். ஏனென்றால் அது மிகவும் ஸ்டைலாக இருக்கும். பல மாதங்கள் தேடினோம். ஒரு நடிகருடன் இந்தப் பாத்திரத்திற்காக ஆறு முறை அமர்ந்து பேசினோம். எப்படியாவது அவரை சம்மதிக்க வைத்துவிடுவதாக லோகேஷ் என்னிடம் கூறினார். ‘யார் அவர்?’ என்று கேட்டேன். அவர் நாகார்ஜுனாவின் பெயரைக் குறிப்பிட்டதும் அதிர்ச்சியடைந்தேன். பின்னர், அவர் ஒப்புக்கொண்டதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். நாகார்ஜுனா பணத்திற்காகப் படம் செய்பவர் அல்ல. அவருக்கு அது தேவையில்லை. அவர் எப்போதும் நல்ல பையனாகவே இருக்க வேண்டுமா? சைமன் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டது அந்த எண்ணத்தில் தான் இருக்க வேண்டும். நாங்கள் இருவரும் 33 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படம் நடித்தோம். அப்போதிருந்ததைப் போலவே இப்போதும் இருக்கிறார். இன்னும் இளமையாகத் தெரிகிறார். எனக்கு முடி கொட்டிவிட்டது. நாகார்ஜுனாவுடன் வேலை செய்யும்போது, ‘உங்கள் உடல்நல ரகசியம் என்ன?’ என்று கேட்டேன், அதற்கு அவர் ‘ஒன்றுமில்லை சார்.. உடற்பயிற்சி, நீச்சல், கொஞ்சம் டயட். இரவு 6 மணிக்கு இரவு உணவு முடிந்துவிடும். என் தந்தையிடமிருந்து வந்த மரபணுக்களும் ஒரு காரணம். அது தவிர, என் தந்தை எனக்கு ஒரு அறிவுரை கூறினார். வெளி விஷயங்களை என் தலைக்குள் வர விடக்கூடாது என்று சொன்னார்’. நாங்கள் இருவரும் 17 நாள் ஷெட்யூலுக்காக தாய்லாந்து சென்றோம். அதை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். சைமனாக அவரது நடிப்பைப் பார்த்து நான் வியந்து போனேன். இது பாட்ஷா – ஆண்டனி போல. கூலி – சைமன். சைமனாக என் நாகார்ஜுனா அற்புதமாக நடித்திருந்தார். அனிருத் அற்புதமான இசையை வழங்கியுள்ளார். நீங்கள் அனைவரும் படத்திற்கு ஆதரவளித்து, அது நல்ல வெற்றி பெறும் என்று நம்புகிறேன்,” என்றார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்:
“எனக்கு இவ்வளவு பெரிய ப்ராஜெக்ட்டைக் கொடுத்த எங்கள் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்த ப்ராஜெக்ட்டில் என் மீது நம்பிக்கை வைத்த ரஜினி சாருக்கு நன்றி. அமீர் கான் சார், சத்யராஜ் சார், சௌபின் சார், உபேந்திரா சார் ஆகியோருக்கு நன்றி. இந்தப் படத்திற்காக நாகார்ஜுனா சாரை சம்மதிக்க வைப்பது எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது. நான் கிட்டத்தட்ட 7 முறை கதை சொன்னேன். அவர் இறுதியாக ஒப்புக்கொண்டபோது அது ஒரு பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. அவர் இந்தப் படத்தில் எவ்வளவு அற்புதமாக நடித்திருக்கிறார் என்பதை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். அனைவருக்கும் மிக்க நன்றி.”

நடிகை ஸ்ருதி ஹாசன்:
“இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. இந்தக் கதாபாத்திரத்தை எனக்குக் கொடுத்த இயக்குநர் லோகேஷ் ஐயாவுக்கு நன்றி. என் கதாபாத்திரம் மிகவும் சிறப்பானது. நான் ரஜினிகாந்த் சாருடன் பணியாற்றுவேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்ததை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். நாகார்ஜுனா சார் அருமையானவர். அவரது கதாபாத்திரத்தை ரசிகர்கள் அனைவரும் விரும்புவார்கள். ஆகஸ்ட் 14 அன்று அனைவரும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”

தயாரிப்பாளர் சுரேஷ் பாபு:
“அனைவருக்கும் வணக்கம். லோகேஷின் ‘கைதி’, ‘விக்ரம்’ படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நாகார்ஜுனாவை ஒரு பேட் பாய் கதாபாத்திரத்தில் பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. அவரது கதாபாத்திரம் மிகவும் அருமையாக உள்ளது. பார்வையாளர்களும் மிகவும் மயங்கி ஏற்றுக்கொள்வார்கள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன். இந்தப் படக்குழுவினர் அனைவருக்கும் பெரும் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்.”

நடிகர் சத்யராஜ்:
“இது ஒரு மிகப்பெரிய படம். இந்தப் படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கிங் நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன், அமீர் கான், சௌபின் ஷாஹிர், உபேந்திரா மற்றும் அனைவருடனும் நடிப்பது ஒரு நல்ல உணர்வு. இந்தப் படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.”

தயாரிப்பாளர் தில் ராஜு:
“நாகார்ஜுனா தெலுங்கு சினிமாவில் பல வித்தியாசமான பாத்திரங்களில் நடித்துள்ளார். முதல் முறையாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார். அவர் தனது படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அற்புதமாக வடிவமைக்கிறார். ‘அன்னமய்யா’ மூலம் நாகார்ஜுனா ஒரு புதிய டிரெண்டை உருவாக்கியது போல, இந்தப் படத்தின் மூலம் நெகட்டிவ் ரோலில் ஒரு புதிய டிரெண்டை உருவாக்கப் போகிறார். அவர் நெகட்டிவ் ரோலில் தோன்றுவது இந்தப் படத்திற்கு ஒரு பெரிய பலமாக இருக்கப் போகிறது. இப்போது ஹீரோக்களை ஹீரோக்களாகப் பார்க்க ரசிகர்கள் விரும்புவதில்லை. அவர்கள் புதிதாக ஏதாவது செய்தால் மட்டுமே ஹீரோக்களைப் பார்க்கிறார்கள். ‘கேஜிஎஃப்’ போன்ற பல படங்களில் ‘புஷ்பா’வைப் பார்த்திருக்கிறோம். புதிய உலகிற்கு வரும் நாகார்ஜுனா ஐயாவை வரவேற்கிறோம். ரஜினிகாந்த் சார் அவருடைய பாஷையை நமக்கு நினைவூட்டினார். இந்தப் படம் உலகளவில் ஒரு பரபரப்பான வெற்றியைப் பெறப் போகிறது. இந்தப் படத்தை தெலுங்கில் வெளியிட எங்களுக்கு வாய்ப்பளித்த சன் பிக்சர்ஸுக்கு நன்றி.”

நடிகை மீரா மிதுனை கைது செய்ய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்ய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு பட்டியலின மக்களை இழிவுபடுத்திப் பேசிய நடிகை மீரா மிதுனைக் கைது செய்யக்கோரி, புகார் எழுந்தது. 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில் அவரை கைது செய்ய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி மீரா மிதுனை ஆஜர்படுத்தவும் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழர்களும், மலையாளிகளும் ஒரு தாய் மக்கள்தான் என்று பேசும் வீரவணக்கம் திரைப்படம்.

0

விரைவில் வெளியாகயுள்ள வீரவணக்கம் திரைப்படம் இப்பொழுதே மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் திரையரங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வீரவணக்கம் திரைப்படம் வெளியீட்டிற்கு முன்னதாக படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் இடம்பெறும் ஒரு போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. விசாரத் கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் பிரபல மலையாள இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கியுள்ள முதல் தமிழ் படம் இது. சமுத்திரக்கனியும் பரத்தும் முதன்முறையாக இணைந்து நடிக்கும் இந்த படத்தில் பிரபலங்கள் மற்றும் புதுமுகங்கள் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழர்களும் மலையாளிகளும் ஒருதாய் மக்கள் என்ற மிக முக்கியமான செய்தி இந்த படத்தை தனித்துவமாக்குகிறது.

ஒடுக்கப்பட்ட மற்றும் பட்டினியால் வாடும் தொழிலாளர்களையும் ஒடுக்கி சுரண்டும் சமூக அமைப்புக்கு எதிரான போராட்டங்களும், மனதை தொடும் காதல் கதைகளும் அடங்கிய வீரவணக்கம் திரைப்படம் தமிழ் திரை வரலாற்றில் ஒரு வித்தியாசமான அத்தியாயத்தை எழுதப்போகிறது.

சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற வீர வணக்கம் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் தலைவர்களும் திரைப்பட ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

கலாச்சார மற்றும் ஊடக துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஒருமனதாக இந்த படத்தை பாராட்டியது வீரவணக்கத்தின் வெற்றியை குறிக்கிறது.

சமுத்திரக்கனி, பரத் தவிர ரித்தேஷ், தேசிய விருது பெற்ற சுரபிலட்சுமி, பிரபல புரட்சி பாடகியும் சுதந்திரப் போராட்ட வீராங்கனையுமான பி. கே. மேதினி, பரணி, ஐஸ்விகா, சித்திக், ஆதர்ஷ் தேவன், சித்தாங்கனா, பிரேம்குமார், சாரி என்கிற சாதனா, ரமேஷ் பிஷாரடி, அரிஸ்டோ சுரேஷ், பீமன் ரகு, உல்லாஸ் பந்தளம், பிரமோத் வெளியநாடு, கோப்ரா ராஜேஷ் ரியாஸ் நெடுமங்காடு, சுதீஷ், வி. கே. பைஜு, கோபிகா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். தேசிய விருது பெற்ற பி. அஜித் குமார் இப்படத்தை எடிட் செய்துள்ளார்.

பல விருதுகளை வென்ற ஒளிப்பதிவாளர் கவியரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான விசாரத் கிரியேஷன்ஸ் ( Visarad creations) யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட மூன்று பாடல்களையும் ஒரு சில நாட்களில் மில்லியன் கணக்கான மக்கள் பார்த்துள்ளனர். வரும் நாட்களில் படத்தின் ட்ரெய்லர், டீசர் மற்றும் மேலும் இரண்டு பாடல்களும் வெளியிடப்பட உள்ளது. இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை புரொடக்க்ஷன்ஸ் எழில் இனியன் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ” காத்து வாக்குல ஒரு காதல் “.

0

கதையின் நாயகனாகவும் மாஸ் ரவி நடித்து இயக்கி உள்ளார். கதா நாயகிகளாக லட்சுமி பிரியா, மஞ்சுளா, மற்றும்
சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், தங்கதுரை, சத்யா,பவர் ஸ்டார், கபாலி விஸ்வந்த்,
மேனக்சன் மிப்பு மொசக்குட்டி, சஞ்சனா சிங், பிரியதர்ஷினி, பிரியங்கா, ரோபோ சங்கர், மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ” சிங்கிளா இருந்தா சிங்கம் மச்சான் ” எனும் பாடலை சிறப்பாக தேனிசை தென்றல் தேவா பாடியுள்ளார் மேலும் சைந்தவி, ரஞ்சித், ரம்யா பேகேரா உள்ளிட்டோரும் பாடல்களை பாடியுள்ளனர்.

U/A சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படம் வருகிற 08-08-2025 அன்று தமிழகமெங்கும் அங்காளம்மன் பிக்சர்ஸ் வெளியீடு மூலம் திரைக்கு வரவுள்ளது.

தொழில் நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு நிறுவனம் – சென்னை புரொடக்க்ஷன்ஸ்
தயாரிப்பாளர் – எழில் இனியன் P
இணை தயாரிப்பு – ராஜாத்தி எழில் இனியன்
Audio – 5 ஸ்டார் ஆடியோஸ்
பாடல்கள் , இயக்கம் – மாஸ் ரவி
ஒளிப்பதிவாளர் ராஜதுரை MA.& சுபாஷ் மணியன்
இசை – ஜி.கே.வி & மிக்கின் அருள்தேவ்
எடிட்டர் – ராஜ்குமார் & மூர்த்தி
ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன்,
நடனம் – ஹேப்பிசன் ஜெயராஜ்
மக்கள் தொடர்பு – இரா. குமரேசன்
பப்ளிசிட்டி டிசைன்ஸ்- விஷால் வீரகுமார் & ஜேசம் ஆட்ஸ்

‘Thanga Magan Joy’: Tamil Edition of Dr. Joy Alukkas’ Autobiography Launched in Chennai

0

Chennai, 01 August 2025: Global business icon and Chairman of the Joyalukkas Group, Dr. Joy Alukkas, launched the Tamil edition of his autobiography Spreading Joy, titled “Thanga Magan Joy”. The book, launched at ITC Grand Chola (Chennai), is a heartfelt tribute to the people and place that have played a vital role in his journey.

‘Thanga Magan Joy’ chronicles the awe-inspiring journey of Dr. Joy Alukkas from his modest beginnings in Kerala to leading one of the world’s largest and most trusted jewellery retail empires. It is a story of vision, resilience, and relentless pursuit, now retold in Tamil to honour and connect with the people of Tamil Nadu whose unwavering support and shared values have played a pivotal role in the Joyalukkas success story. The launch marked a significant moment in bringing this inspiring narrative closer to the hearts of Tamil-speaking readers across generations.

Speaking at the launch, Dr. Joy Alukkas shared his thoughts with characteristic sincerity and purpose, “The response to Spreading Joy has been humbling and deeply meaningful. I am grateful to every well-wisher, customer, and partner who believed in our dream and walked this path with us. The faith people placed in Joyalukkas over the years built more than a business, it built a bond. With the Tamil edition, Thanga Magan Joy, I hope to give back a part of that joy and reach the hearts and homes of Tamil Nadu, a land that has always embraced us with open arms. If this story can spark hope in even one dreamer, it will have served its purpose.”

The launch event was a grand and glamorous celebration of ambition, resilience, and cultural connection. Eminent personalities from the realms of business, cinema, and literature graced the occasion, making it an evening filled with insight, inspiration, and meaningful conversations. The event not only commemorated the release of the Tamil edition but also highlighted the shared journey between brand Joyalukkas and the people of Tamil Nadu.

Thanga Magan Joy is now available at leading bookstores across the state and on major online platforms from 2nd August 2025. Readers can explore a story that will motivate them and inspire them to be ambitious and keep persevering.

‘தங்க மகன் ஜோய்’: டாக்டர். ஜோய் ஆலுக்காஸ் அவர்களின் சுயசரிதை தமிழ் பதிப்பு சென்னையில் அறிமுகம்

சென்னை, 2025: சர்வதேச வியாபாரத்தின் அடையாளம், ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் டாக்டர். ஜோய் ஆலுக்காஸ், தனது சுயசரிதையான ஸ்ப்ரெடிங் ஜோய்-ன் தமிழ் பதிப்பை “தங்க மகன் ஜோய்” என்ற தலைப்பில் வெளியிட்டார். ஐ. டி. சி கிராண்ட் சோலா-வில் (சென்னை) வெளியிடப்பட்ட இந்த புத்தகம், அவரது பயணத்தில் மிக முக்கிய பங்கு வகித்த மக்களுக்கும், இடத்திற்கும் செலுத்தும் புகழ் வணக்கமாக அமைந்துள்ளது

டாக்டர். ஜோய் ஆலுக்காஸ் கேரளாவில் தனது எளிமையான தொடக்கத்திலிருந்து உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் நம்பகமான ஜுவல்லரி ரீடெய்ல் பேரரசுகளில் ஒன்றை வழிநடத்தியது வரை பிரமிக்க வைக்கும் பயணத்தை ‘தங்க மகன் ஜோய்’ விவரிக்கிறது. இது தொலைநோக்கு பார்வை, பின்னடைவு மற்றும் இடைவிடாத முயற்சியின் கதை, இப்போது தமிழ் மக்களை கவுரவிப்பதற்கும், இணைப்பதற்கும் தமிழில் மீண்டும் சொல்லப்படுகிறது, அவர்களின் அசைக்க முடியாத ஆதரவும் பகிரப்பட்ட மதிப்புகளும் ஜோய்ஆலுக்காஸின் வெற்றிக் கதையில் முக்கிய பங்கு வகித்துள்ளன. இந்த உத்வேகம் அளிக்கும் கதையை தலைமுறை தலைமுறையாக தமிழ் பேசும் வாசகர்களின் இதயங்களுக்கு நெருக்கமாக கொண்டு வருவதில் இந்த வெளியீடு ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தை அடைந்துள்ளது.

கதாபாத்திரத்தின் உண்மைத்தன்மை மற்றும் நோக்கம் இவற்றுடன் திரு ஜோய் ஆலுக்காஸ் அவர்கள் தனது கருத்தை பகிர்ந்து கொண்டார். துவக்க விழாவில் பேசிய டாக்டர் ஜோய் ஆலுக்காஸ், தனது எண்ணங்களை தனித்துவத்துடனும், நோக்கத்துடனும் பகிர்ந்து கொண்டார், “ஸ்ப்ரெடிங் ஜோய் -க்கு கிடைத்த வரவேற்பு நெகிழவைப்பதாக மிகவும் அர்த்தமுள்ளதாக அமைந்துள்ளது. எங்கள் கனவில் நம்பிக்கை வைத்து, எங்களுடன் இந்த பாதையில் பயணித்த எங்களின் ஒவ்வொரு நலம் விரும்பிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும், கூட்டாளிகளுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். பல ஆண்டுகளாக ஜோய்ஆலுக்காஸ் மீது மக்கள் வைத்த நம்பிக்கை ஒரு வணிகத்தை தாண்டி மிக உயர்வாக கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அது ஒரு தனித்துவமான ஒரு பந்தத்தை உருவாக்கியுள்ளது. ‘தங்க மகன் ஜோய்’ என்ற தமிழ் பதிப்பின் மூலம் நாம் அடைந்த மகிழ்ச்சியின் ஒரு பகுதியை திருப்பிக்கொடுப்பதன் மூலம் எப்போதும் நம்மை திறந்த கரங்களுடன் தழுவியிருக்கும் தமிழ்நாட்டின் இதயங்களையும், இல்லங்களையும் சென்றடையும் என்று நம்புகிறேன். இந்தக் கதை ஒரு கனவு காண்பவரிடம் நம்பிக்கையைத் தூண்ட முடிந்தால், அது அதன் நோக்கத்தை நிறைவேற்றியிருக்கும்.

இந்த வெளியீட்டு நிகழ்வு லட்சியம், சாதிக்கும் திறன் மற்றும் கலாச்சார இணைப்பின் பிரமாண்டமான மற்றும் கவர்ச்சியான ஒரு கொண்டாட்டமாக இருந்தது. வணிகம், சினிமா மற்றும் இலக்கிய துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். திறன் ஆய்வு , உத்வேகம் மற்றும் அர்த்தமுள்ள உரையாடல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு மாலை நேரமாக அமைந்தது. இந்த நிகழ்வு தமிழ் பதிப்பின் வெளியீட்டை நினைவுகூருவது மட்டுமல்லாமல், ஜோய்ஆலுக்காஸ் பிராண்டுக்கும் தமிழக மக்களுக்கும் இடையிலான பயணத்தையும் எடுத்துரைத்தது.

தங்க மகன் ஜோய் இப்போது மாநிலம் முழுவதும் உள்ள முன்னணி புத்தகக் கடைகளிலும், முக்கிய ஆன்லைன் தளங்களிலும் ஆகஸ்ட் 2,2025 முதல் கிடைக்கிறது. வாசகர்களை ஊக்குவிக்க, லட்சியத்தோடு இருக்க, விடாமுயற்சியுடன் வைத்துக்கொள்ள இந்த புத்தகம் அமைவதுஉறுதி.

துல்கர் சல்மான் நடிக்கும் #DQ 41 – #SLV 10 படம் – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்

0

Dulquer Salmaan, Ravi Nelakuditi, Sudhakar Cherukuri, SLV Cinemas Pan India Film #DQ41, #SLV10 Launched Grandly With Puja Ceremony With Nani Sounding The Clapboard, Regular Shoot Begins Today

Versatile Star Dulquer Salmaan is known for his impeccable script selection, always gravitating toward stories that offer freshness, uniqueness, and roles that challenge him as an actor. For his 41st film, #DQ41, Dulquer is teaming up with debutant director Ravi Nelakuditi for a contemporary love story intertwined with rich human drama. The film will be produced by the successful Sudhakar Cherukuri under the SLV Cinemas banner, marking the production house’s milestone 10th venture, #SLV10.

The project was officially announced today, with a grand launch event held in Hyderabad graced by several special guests. Natural Star Nani sounded the clapboard for the auspicious muhurtham shot. Director Buchi Babu Sana switched on the camera, while Gunnam Sandeep, Nani, and Ramya Gunnam ceremoniously handed over the script to the team. The first shot of the film was directed by Ravi Nelakuditi himself.

Dasara and The Paradise director Srikanth Odela also graced the occasion. As revealed during the launch, the regular shoot of the movie commences today.

Convincing an actor of Dulquer Salmaan’s caliber, who enjoys a strong success rate in Malayalam , Telugu and Tamil cinema, is no easy feat. However, director Ravi Nelakuditi has come up with a gripping and fresh concept that piqued Dulquer’s interest.

The film promises high production and technical values and will feature a stellar lineup of seasoned actors and technicians. Anay Om Goswamy will handle the cinematography, GV Prakash Kumar will compose the music, and Avinash Kolla is on board as the production designer.

The movie will have a Pan India release in Tamil ,Telugu, Malayalam, Hindi, and Kannada
languages.

More details regarding the remaining cast and crew will be revealed soon.

Cast: Dulquer Salmaan

Technical Crew:

Writer, Director: Ravi Nelakuditi
Producer: Sudhakar Cherukuri
Banner: SLV Cinemas
Co-Producer: Gopichand Innamuri
CEO: Vijay Kumar Chaganti
Music: GV Prakash Kumar
DoP: Anay Om Goswamy
Production Designer: Avinash Kolla
PRO: Yuvraaj

துல்கர் சல்மான் – ரவி நெலகுடிடி (Ravi Nelakuditi)- சுதாகர் செருகுரி (Sudhakar Cherukuri) – SLV சினிமாஸ்- கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான #DQ 41 – #SLV 10 பூஜையுடன் படப்பிடிப்பும் தொடங்கியது. ‘நேச்சுரல் ஸ்டார் ‘ நானி கிளாப் அடித்து தொடங்கி வைக்க, வழக்கமான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.

பன்முக திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான் தனது அற்புதமான திரைக்கதை தேர்வுக்கு பெயர் பெற்றவர். புத்துணர்ச்சி- தனித்துவம் மற்றும் ஒரு நடிகராக சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பதை எப்போதும் விரும்புபவர். அவரது 41 வது திரைப்படத்தில் #DQ 41 அறிமுக இயக்குநர் ரவி நெலக்குடிடியுடன் இணைகிறார். சமகால காதல் கதையாக வளமான நாடகத்தன்மையுடன் தயாராகும் இந்த திரைப்படத்தை எஸ் எல் வி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெற்றிகரமான தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கிறார். இந்தத் திரைப்படம் இந்த நிறுவனத்தின் சார்பில் தயாராகும் பத்தாவது திரைப்படம் #SLV 10 என்பது- இந்நிறுவனத்தின் புதிய மைல் கல்லை குறிக்கிறது.

இந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான தொடக்க நிகழ்வில் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். சுப முகூர்த்த படப்பிடிப்பிற்கு ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி கலந்துகொண்டு கிளாப் போர்டு அடித்தார். இயக்குநர் புச்சிபாபு சனா (Buchi Babu Sana) கேமராவை இயக்கினார்.‌ குன்னம் சந்தீப் (Gunnam Sandeep), நானி மற்றும் ரம்யா குன்னம் ஆகியோர் இப்படத்தின் ஸ்கிரிப்ட்டை படக் குழுவினரிடம் ஒப்படைத்தனர். இப்படத்தின் முதல் காட்சியை ரவி நெலகுடிடி இயக்கினார்.

‘தசரா’ மற்றும் ‘தி பாரடைஸ்’ படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதெலாவும் (Srikanth Odela) இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .இதனைத் தொடர்ந்து இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.

மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் வலுவான வெற்றியை வழங்கி வரும் துல்கர் சல்மானை சமாதானப் படுத்துவது எளிதான சாதனை அல்ல .இருப்பினும் இயக்குநர் ரவி நெலகுடிடி துல்கர் சல்மானின் ஆர்வத்தை தூண்டும் வகையில் ஒரு தனித்துவமான மற்றும் புதிய கதையை கொண்டு வந்துள்ளார்.

இந்தப் படத்தின் தயாரிப்பு தரம் மற்றும் தொழில்நுட்பம் சர்வதேச தரம் என உறுதி அளிக்கிறது. மேலும் இந்தத் திரைப்படத்தில் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களும் இடம் பிடித்திருக்கிறார்கள் அனய் ஓம். கோஸ்வாமி (om Goswamy) ஒளிப்பதிவை கையாள தேசிய விருதை வென்ற ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் .அவினாஷ் கொல்லா (Avinash Kolla) தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.‌

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது.

இப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள்’ நடிகைகள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும்.‌

நடிகர்கள்: துல்கர் சல்மான்

தொழில்நுட்ப குழு :

எழுத்து & இயக்கம் : ரவி நெலகுடிடி
தயாரிப்பாளர் : சுதாகர் செருகுரி
தயாரிப்பு நிறுவனம் : எஸ் எல்‌ வி சினிமாஸ்
இணை தயாரிப்பாளர் : கோபிசந்த் இன்னா முரி
சி இ ஓ – ( CEO) விஜயகுமார் சாகந்தி
இசை :ஜீ. வி பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : அனய் ஓம் கோஸ்வாமி.
தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா
மக்கள் தொடர்பு: ‌யுவராஜ் .

White Paper and SkillClub Launch Kerala’s First Multilingual AI Influencer, Aswathy Achu

0

White Paper, in collaboration with SkillClub, steps forward as India’s first AI-driven branding and marketing agency, a move set to reshape the future of digital storytelling and brand engagement. Together, they aim to transform how brands communicate, engage, and scale, with artificial intelligence at the core.

At the heart of this collaboration is Aswathy Achu, Kerala’s first fully AI-generated virtual influencer. Created by SkillClub using advanced generative AI, Aswathy is more than just a digital creation. She’s a bold step into the future of storytelling, identity, and cultural influence. Designed to connect with the new-gen Malayali audience, she speaks fluent Malayalam, and can seamlessly switch to other languages, making her a powerful tool for local and global campaigns alike.

This collaboration marks a milestone in integrating culture with code. Aswathy isn’t just a face, she’s a fully realized digital personality, equipped to deliver content through Reels, video campaigns, and branded storytelling that feel real, relevant, and deeply rooted in Kerala’s cultural tone.

M.S. Kasinath, Founder and CEO of SkillClub, leads the innovation behind Aswathy and the growing suite of creative AI tools the company is developing.

Speaking about the partnership, Jishnu Laxman, CEO of White Paper, said:

“This is more than a collaboration. It’s a step toward building the future of branding, where AI helps brands stay locally relevant while scaling globally. Aswathy Achu is just the beginning.”

Together, White Paper and SkillClub are setting a new benchmark for the branding and marketing industry, one where AI accelerates creativity, enables hyper-personalized content, and brings brands closer to audiences across cultures and languages.

About Aswathy Achu
Aswathy Achu is Kerala’s first AI-generated virtual influencer, developed entirely by SkillClub using generative AI. She speaks Malayalam and multiple other languages, offering brands a culturally grounded yet globally scalable digital identity. She represents the new face of influence, one where technology, culture, and creativity intersect.

- Advertisement -

Recent Posts