- Advertisement -
Home Blog Page 14

RIVER ROUTE STUDIOS & RED ROCK STUDIOS UNVEIL THEIR FIRST COLLABORATIVE PROJECT : “BROWN MANI” TITLE & FIRST LOOK OUT NOW

0

River Route Studios, in association with Red Rock Studios, proudly unveils the title and first look of their maiden collaborative venture, “Brown Mani”, presented by actor Rio Raj. The striking first look sets the tone for a lively and entertaining film, offering audiences an exciting glimpse into its world.

“Brown Mani” features talented actors Ram Nishanth and JS Kavi in pivotal roles, both of whom have been part of notable projects and bring their experience to this engaging entertainer. The film is directed by Kathiravan Sampath, who brings a unique storytelling voice to the project.

The film boasts a strong technical team with music composed by Dev Prakash Regan, cinematography by Sakthi Subramanian, editing by Sundar S, and art direction by Abr,Notably, “Brown Mani” is conceived as a sing-sound, fully live-recorded film, with the Soundaholics team spearheading its sound design, ensuring a raw, realistic, and immersive audio experience.all coming together to shape a vibrant cinematic experience.

The project is co-produced by Kavinn GT and produced by Rio and Ramesh under their respective banners.

Shot entirely across the southern regions, the film captures authentic landscapes and cultural textures that add depth and relatability to its narrative. With the shoot now successfully wrapped, the team has moved into post-production, which is currently progressing in full swing.

Positioned as a fun-filled family drama, “Brown Mani” revolves around the emotional and entertaining journey between two friends. With a blend of humor, warmth, and engaging storytelling, the film promises to strike a chord with audiences across all age groups.

With the title and first look now officially unveiled, the makers are set to bring audiences into a lively and heartfelt cinematic world that celebrates friendship, family, and fun.

More updates on the film, including audio launch and release plans, will be revealed soon.

ரிவர் ரூட் ஸ்டுடியோஸ் & ரெட் ராக் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் முதல் படம் ‘பிரௌன் மணி’ – டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

River Route Studios மற்றும் Red Rock Studios இணைந்து தயாரிக்கும் முதல் கூட்டுத் திரைப்படமான Brown Mani படத்தின் டைட்டிலும் ஃபர்ஸ்ட் லுக்கும், நடிகர் ரியோ ராஜ் வெளியிட்டுள்ளார். இந்த First Look, ஒரு உற்சாகமான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த திரைப்படமாக இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

பிரவுன் மணி படத்தில் ராம் நிஷாந்த் மற்றும் JS கவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல முக்கிய படங்களில் நடித்த அனுபவம் கொண்ட இவர்களின் நடிப்பு, இந்தப் படத்திற்கு கூடுதல் வலுவைத் தருகிறது. இந்தப் படத்தை கதிரவன் சம்பத் இயக்கியுள்ளார்.

தொழில்நுட்ப ரீதியாகவும் வலுவாக உருவாகும் இந்தப் படத்திற்கு தேவ் பிரகாஷ் ரீகன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை சக்தி சுப்ரமணியன் மேற்கொண்டுள்ளார். எடிட்டிங்கை சுந்தர் S கவனித்துள்ள நிலையில், கலை இயக்கத்தை அபர் மேற்கொண்டுள்ளார்.
மேலும், “சிங்-சவுண்ட்” (Sync Sound) முறையில், முழுவதும் லைவ் சவுண்டுடன் உருவாகும் இந்தப் படம், Soundaholics குழுவின் ஒலித் தொழில்நுட்ப வடிவமைப்பில், இயல்பான மற்றும் ஆழமான ஒலி அனுபவத்தை வழங்கவுள்ளது.

இந்தத் திரைப்படத்தை கவின் GT இணை தயாரிப்பாளராகவும், ரியோ ராஜ் மற்றும் ரமேஷ் தயாரிப்பாளர்களாகவும் தங்கள் நிறுவனங்களின் கீழ் உருவாக்கியுள்ளனர்.

தென்னிந்தியாவின் பல பகுதிகளில் முழுமையாகப் படமாக்கப்பட்டுள்ள பிரவுன் மணி, இயற்கை அழகும், கலாச்சார பழக்கங்களும் நிறைந்த காட்சிகளால் கதைக்கு ஆழத்தை வழங்குகிறது. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணி பணிகள்(Post Production)முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

குடும்பம் மற்றும் நண்பர்கள் உறவை மையமாகக் கொண்ட இந்தப் படம், இரண்டு நண்பர்களின் உணர்ச்சி மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த பயணத்தை சுவாரஸ்யமாகச் சொல்லும் குடும்ப எண்டர்டெய்னராக உருவாகியுள்ளது. நகைச்சுவை, எமோஷன் மற்றும் ஈர்க்கக்கூடிய கதை சொல்லலின் கலவையுடன், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இந்தப்படம் உருவாகியுள்ளது.

டைட்டிலும் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியான நிலையில், பிரவுன் மணி ஒரு உற்சாகமான மற்றும் மனதைத் தொடும் சினிமா அனுபவமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆடியோ வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

2026-க்கான 16-வது தாதாசாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை வென்ற ‘தி வைல்ட் கால்’ (The Wild Call).

0

ஆட்லர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், நவீத் எஸ் ஃபரீத் மற்றும் அசாருதீன் சுலைமான் இயக்கத்தில் உருவான படம் ‘தி வைல்ட் கால்’ (The Wild Call).. 12 நிமிட, 180° கோணத்தில் அமைந்த அனிமேஷன் வனவிலங்கு சாகசப் படமான இதை ராஜ்கிர் ஜூ சஃபாரி வழங்கியுள்ளார்.

இந்தநிலையில் இந்திய சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் தாதாசாகேப் பால்கே பெயரில் நடைபெற்று வரும் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க சுயாதீன திரைப்பட விழாக்களில் ஒன்றான 2026-ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே திரைப்பட விழாவில், ‘தி வைல்ட் கால்’ (The Wild Call). திரைப்படம் “சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான” விருதை வென்றுள்ளது.
.
லைட்ஸ் ஆன் மீடியாவின் அனிமேஷன் பணி வெங்கி சந்திரசேகர் தலைமையில் உருவாக்கப்பட்டது , மற்றும் இந்த படத்திற்கான post production பணிகளையும் lightson media நிறுவனமே செய்துள்ளது , இவர்களோடு இணைந்து ஜிப்ரான் வைபோதாவின் இசையில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டு இருந்தது..

இத்திரைப்படம் சிங்கம் மற்றும் புலிக்குட்டிகள் இந்தியாவின் பல்லுயிர் பெருக்க மையங்களான இந்தியப் பெருங்கடல், மேற்குத் தொடர்ச்சி மலைகள், இமயமலை மற்றும் தார் பாலைவனம் வழியாகப் பயணிப்பதைப் பின்தொடர்கிறது.

மேலும் இந்திய யானை மற்றும் பெருங்குருவி உட்பட 23 குறிப்பிடத்தக்க உயிரினங்களை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதோடு, பாதுகாப்பு, காலநிலை நடவடிக்கை, வாழ்விடப் பாதுகாப்பு மற்றும் மனித-வனவிலங்கு சகவாழ்வு குறித்த முக்கிய செய்திகளையும் வழங்குகிறது.

பாட்னாவின் ஆர்.சி.சி.எஃப் கோபால் சிங், ஐ.எஃப்.எஸ் மற்றும் ராஜ்கிர் உயிரியல் பூங்கா சஃபாரியின் இயக்குநர் ராம் சுந்தர், ஐ.எஃப்.எஸ் ஆகியோரின் படைப்பு வழிகாட்டுதலுடன் இது உருவாகியுள்ளது.

“Billa” Returns May 1: Celebrating Ajith Kumar’s Birthday with Style and Swag

0

The iconic Tamil blockbuster Billa, starring Ajith Kumar, is all set to make a grand return to theatres across Tamil Nadu from May 1, marking a special celebration of the actor’s birthday. The re-release is presented by MD P. Antony Doss, with Sasikala Production overseeing the statewide release. Enhancing the experience for today’s audience, the film arrives with upgraded 7.1 Dolby Digital sound design and newly crafted poster designs, promising a richer and more immersive cinematic experience.

Originally released in 2007, Billa emerged as a groundbreaking success and remains one of the most defining milestones in Ajith Kumar’s illustrious career. Known for redefining style and screen presence, the film showcased Ajith Kumar in a sleek, ultra-stylish avatar that continues to influence pop culture and fan expectations even today.

Directed by Vishnuvardhan, Billa stood out for its sharp storytelling, international visual appeal, and technical finesse. The film also featured Nayanthara in a graceful yet powerful role, adding to its magnetic screen presence and widespread appeal.

A major pillar of the film’s enduring legacy is its music and background score by Yuvan Shankar Raja. The electrifying theme music, which continues to be a popular caller tune even years later, is widely regarded as one of the finest background scores in Tamil cinema history.

Blending style, substance, and star power, Billa redefined the action-thriller genre for a new generation. Its re-release not only offers longtime fans a chance to relive the cinematic experience on the big screen but also introduces the film’s iconic aura to a new audience.

As anticipation builds, Billa is poised to once again captivate ரசிகர்கள் and recreate its signature magic in theatres this May 1.

P. Antony Doss, Producer and Distributor, is an emerging force in the Tamil film industry, активно contributing to content-driven cinema. As the founder of Sasikala Production, he plays a key role in project development, funding, and release strategy, representing a new-age production approach that prioritizes strong storytelling, fresh directorial voices, and unique cinematic narratives. Saleem G. Siva, CEO of Sasikala Production, is a seasoned filmmaker and Director of Photography with over 15 years of experience in the media and film industry, having built a strong foundation through his extensive work with Sun Network. He brings deep expertise in visual storytelling, lighting design, and high-quality production workflows, continuing to drive the company with a focus on cinematic excellence, efficiency, and industry-standard quality.

நடிகர் அஜித் குமார் பிறந்தநாளை ஸ்டைலா, ஸ்வாக்காக கொண்டாட மே 1 அன்று மீண்டும் வெளியாகிறது ‘பில்லா’ திரைப்படம்!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான தமிழ் திரையுலகின் ஐகானிக் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான ‘பில்லா’, அவரது பிறந்தநாளை முன்னிட்டு மே 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மீண்டும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது. இந்த மறுவெளியீட்டை எம்.டி. பி. ஆண்டனி தாஸ் வழங்குகிறார். மாநிலம் முழுவதும் பட வெளியீட்டை சசிகலா புரொடக்ஷன் மேற்பார்வை செய்கிறது. இன்றைய பார்வையாளர்களுக்கான அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், இந்த படம் 7.1 டால்பி டிஜிட்டல் ஒலி அமைப்புடனும் புதிய போஸ்டர் வடிவமைப்புகளுடன் வெளியாகிறது.

2007ஆம் ஆண்டு வெளியான ’பில்லா’ திரைப்படம் அப்போதே மிகப்பெரிய வெற்றி பெற்று, நடிகர் அஜித் குமாரின் திரை வாழ்க்கையில் முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. அஜித் குமாரின் ஸ்டைல் மற்றும் ஸ்கிரீன் பிரசென்ஸை மறுவரையறை செய்த இந்த படம், அவரை மிகவும் ஸ்டைலிஷான புதிய தோற்றத்தில் ரசிக்க வைத்தது. இன்றும் அதன் தாக்கம் பாப் கலாச்சாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் இருப்பதை மறுக்க முடியாது. விஷ்ணு வர்தன் இயக்கிய இந்தப் படத்தின் கதை சொல்லல், சர்வதேச தரத்திலான காட்சிகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப தரத்தால் இந்தப் படம் இன்றும் பேசப்படுகிறது. படத்தில் கதாநாயாகியாக நடித்த நயன்தாராவின் வலுவான கதாபாத்திரமும் அவரது ஈர்க்கும் திரையிருப்பும் படத்திற்கு மேலும் பலம் சேர்த்தது.

படத்தின் மற்றுமொரு பலம் யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும். குறிப்பாக, இன்றும் பலரின் காலர் டியூனாக இருக்கும் படத்தின் தீம் மியூசிக், தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த பின்னணி இசைகளில் ஒன்று. ஸ்டைல், கதை சொல்லல், திறமையான நடிகர்கள் என ஆக்‌ஷன் திரில்லர் ஜானரை ‘பில்லா’ திரைப்படம் இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு மறுவரையறை செய்தது. ’பில்லா’ திரைப்படத்தை ரசிகர்கள் பெரிய திரையில் மீண்டும் பார்த்து கொண்டாட இது ஒரு வாய்ப்பாக அமைவதோடு, புதிய தலைமுறைக்கும் இந்த படத்தை அறிமுகப்படுத்துகிறது.

’பில்லா’ திரைப்படத்தின் மறுவெளியீடு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் வரும் மே 1 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகி ரசிகர்களைக் கவர இருக்கிறது.

தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான பி. ஆண்டனி தாஸ் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியா ஆளுமையாக உருவெடுத்து வருகிறார். சசிகலா புரொடக்ஷனின் நிறுவனரான இவர் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள், புதிய இயக்குநர்கள் மற்றும் தனித்துவமான சினிமா முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து திட்டமிடல், முதலீடு மற்றும் வெளியீட்டு திட்டங்களில் முக்கிய பங்காற்றுகிறார்.

சசிகலா புரொடக்ஷனின் தலைமை நிர்வாக அதிகாரி சலீம் ஜி. சிவா, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவம் கொண்ட திறமையான திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் ஆவார். சன் நெட்வொர்க்கில் அவர் செய்த விரிவான பணியின் மூலம் வலுவான அடித்தளத்தை உருவாக்கியுள்ளார். காட்சிப் பதிவு, லைட்டிங் டிசைன் மற்றும் உயர் தரமான தயாரிப்பு முறைகளில் நிபுணத்துவம் பெற்ற அவர், நிறுவனத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறார்.

“Vellichudare” – The Poetic Melody That Heralds Irandu Vaanam’s Emotional Journey

0

Few songs soothe the spirit as deeply as they caress the earlobes with truly dulcet music. Here comes the latest addition to the Tamil Music Industry’s melodious chartbusters: Vellichudare from Vishnu Vishal–Mamitha Baiju’s Irandu Vaanam has become an instant hit, thanks to the beautiful music by Dhibu Ninan Thomas and the resplendent lyrics of Madrashe. Kapil Kapilan’s honeyed vocalism adds more soulfulness to the track. Each line is wrapped in warmth and emotional nuance, drawing the listener deeper into the song’s world.

The beauty about the song is the way music, lyrics and vocal complement each other so seamlessly. To bring listeners into the song, it starts with mid‑tempo instrumentals driven by guitars, thereby letting the lyrics and vocals find their full prominence. Gradually, the musical components rise to peak elevation, with folk‑infused textures enriching the interludes and deepening the track’s emotional landscape.

Dhibu Ninan Thomas has always proved his expertise in musical nuances, where the slightest “master touch” can lend a song a distinctive, memorable character. He has already demonstrated this colossal caliber in many of his erstwhile chartbuster numbers like Kangal Yedho, Poove and several others. And now Vellichudare has quickly emerged as a favourite track among melophiles and is turning into a “loop mode” favourite on playlists across platforms.

Irandu Vaanam marks the third collaboration of Vishnu Vishal and director Ram Kumar. The duo earlier struck blockbuster chords with Mundasuppatti and Ratchasan, setting a strong legacy for bold, engaging storytelling. With this third collaboration, the expectations have skyrocketed, and audiences are eagerly awaiting the next chapter in their successful partnership. The prestigious Sathya Jyothi Films has been meticulously shaping this project to ensure that the film becomes a delightful entertainer for audiences from all walks of life.

Dinesh K Babu is handling cinematography and San Lokesh is overseeing editing for Irandu Vaanam. The film is presented by Sathya Jyothi Films’ TG Thyagarajan and produced by Sendhil Thyagarajan and Arjun Thyagarajan, signalling a project that balances creative ambition with mainstream appeal.

With the song receiving heart-warming response, the expectations have gradually heightened. The official announcement on the film’s audio, trailer and worldwide theatrical release will be made soon.

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

சில பாடல்கள் ஆன்மாவை இதமாக வருடி, மனதிற்கும் காதுகளுக்கும் இனிய இசையை கொடுக்கும். அப்படியான ஒரு இதமான பாடலாக வெளியாகியுள்ளது ‘வெள்ளிச்சுடரே’. விஷ்ணு விஷால், மமிதா பைஜு நடிப்பில், திபு நினன் தாமஸ் இசையில், மத்ராரேஷியின் வரிகளில் ‘இரண்டு வானம்’ திரைப்படத்திலிருந்து வெளியாகியுள்ள இந்தப் பாடல், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. கபில் கபிலனின் இனிமையான குரலும் பாடலுக்கும் இதம் சேர்க்கிறது. ஒவ்வொரு வரியும் நெஞ்சை தொடும் உணர்வுகளால் நிரம்பி, கேட்பவரை அதன் உலகிற்குள் இழுத்துச் செல்கிறது.

இந்தப் பாடலின் சிறப்பே இசை, வரிகள் மற்றும் குரல் என அனைத்தும் ஒன்றோடொன்று அற்புதமாக கலந்திருப்பதுதான். பாடலின் ஆரம்பத்தில் மிதமான வேகத்தில் கிதார் இசை ஒலிக்க, பாடல் வரிகளும் குரலும் காதுகளுக்கு இனிமை சேர்க்கின்றன. பின்னர், இசை மெதுவாக அதிகமாகி உச்சத்துக்குச் செல்லும் போது, நாட்டுப்புற இசைக் கூறுகளும் இதனோடு இணைந்து பாடலின் உணர்ச்சியை மேலும் செழுமைப்படுத்துகின்றன.

திபு நினன் தாமஸின் இசை நுணுக்கம் பாடலுக்கு தனித்துவமான அனுபவத்தை தருவதோடு, பாடலை நினைவில் வைத்துக் கொள்ளும்படியும் சிறப்பு சேர்க்கும் திறமை அவருக்கு உண்டு. ‘கண்கள் ஏதோ’, ‘பூவே’ போன்ற பல ஹிட் பாடல்களில் இதை அவர் ஏற்கனவே நிரூபித்துள்ளார். தற்போது ‘வெள்ளிச்சுடரே’யும் இசை ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பிடித்து, இசை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் கேட்கும் பாடலாக மாறியுள்ளது.

’முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் ராம் குமார் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் இருவரும் மூன்றாவது முறையாக இணையும் படம் ‘இரண்டு வானம்’. இதனால், ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம், அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் கவனமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

’வெள்ளிச்சுடரே’ பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. படத்தின் ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகளாவிய திரையரங்க வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

தயாரிப்பு நிறுவனம்: சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்,
வழங்குபவர்: டிஜி தியாகராஜன்,
தயாரிப்பு: செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன்
ஒளிப்பதிவு: தினேஷ் கே பாபு,
படத்தொகுப்பு: சான் லோகேஷ்.

18 ஆவது ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு!

0

திரைக்கலைஞர்களின் உழைப்பிற்கு ரசிகர்களின் பாராட்டுகள் ஊக்கம் தருவது போல, அவர்களுக்கு அங்கீகாரம் தருவது விருதுகள் தான். அப்படியான திறமையான கலைஞர்களை தேடி கண்டறிந்து கெளரவப்படுத்தி வருகிறது எடிசன் விருதுகள். 18 ஆம் ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் நடிகர் ராதாரவி பேசியதாவது, “18 வருடங்களாக எடிசன் விருதுகள் விழா நடந்து வருவது பெருமையான விஷயம். செல்வகுமாரை எனக்கும் இத்தனை வருடங்களாக தெரியும். இன்னும் பல ஆண்டுகள் அவர் இந்த விருது விழாவினை நடத்த வேண்டும். சினிமாவில் இருப்பதே பெருமையான விஷயம். அத்தகைய சினிமாத்துறையினருக்கான அங்கீகாரமாக இந்த விழா நடப்பது மகிழ்ச்சி”

டாக்டர் சிஎம்கே ரெட்டி, “பல சாதனைகள் வேதனைகள் தாண்டி ஒரு அமைப்பு 18 வருடங்களாக நடப்பது சாதாரண விஷயம் கிடையாது. அதற்கே செல்வகுமாருக்கு வாழ்த்துக்கள். மருத்துவ துறையும், சினிமாத்துறையும் சந்திக்கும் ஒரு பொது பிரச்சினை நடைமுறை வாழ்க்கை சிக்கல்கள்தான். சமூகத்தை கெடுக்கும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுதல் போன்றவற்றை ஊக்குவிக்கும் விதமாக படங்கள் எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும்”.

இயக்குநர் விக்ரமன், “எடிசன் விருதுகள் விழாவில் கலந்து கொள்வது பெருமையான தருணம். என் மகன் சிறந்த அறிமுக நடிகருக்கான எடிசன் விருது வென்றான். அடுத்து அவன் நடிக்கும் படங்களுக்காக சிறந்த நடிகருக்கான எடிசன் விருது வெல்ல வேண்டும் என்பது என் விருப்பம். ஃபிலிம்ஃபேர் விருது, தேசிய விருது, தமிழ்நாடு மாநில அரசு விருதுகள் போல எடிசன் விருதும் பெருமைக்குரிய விருது. இந்த விருது விழா இன்னும் பல உயரங்கள் அடைய வேண்டும் என்பது என் விருப்பம்”.

நடிகர் ஜெகன், “எடிசன் விருது விழாவை மூன்று வருடங்கள் தொடர்ந்து தொகுத்து வழங்கியிருக்கிறேன். பலருக்கும் இந்த விருது உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது. ராதாரவி சாருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அதற்கு சிறந்த உதாரணம் அவர் நடித்த ‘சின்ன மாப்பிள்ளை’ என்ற திரைப்படம். அம்பிகா மேமுக்கு நான் பெரிய ரசிகன். அவரது எல்லா படங்களும் எனக்கு பிடிக்கும். விக்ரமன் சாரின் படங்களும் எனக்கு பிடிக்கும். 18 வருடங்கள் எட்டியிருக்கும் எடிசன் விருது விழாவுக்கு வாழ்த்துக்கள்”.

நடிகை அம்பிகா, “18 வருடங்களாக நடக்கும் இந்த விருது விழாவுக்கு வாழ்த்துக்கள். செல்வாவை எனக்கு பல வருடங்களாகத் தெரியும். படப்பிடிப்பை பொருத்து விருது விழாவுக்கு வருகிறேன் என சொல்லியிருந்தேன். சரியான தருணமும் அமைந்தது. ராதாரவி அண்ணன் எனக்கு குடும்பம் போல. விழாவில் கலந்து கொண்டு உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி”.

ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, “நாங்கள் இன்று இவ்வளவு தூரம் வளர்ந்து நின்றாலும் சினிமாத்துறைக்கு வந்த ஆரம்ப காலத்தில் இயக்குநர் தவிர வேறு யாரேனும் நமது பணியை பாராட்ட மாட்டார்களா, அங்கீகரிக்க மாட்டார்களா என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும். அப்படியான திறமையானவர்களை கண்டுபிடித்து எடிசன் விருதுகள் கொடுப்பது மகிழ்ச்சியான விஷயம். என்னுடைய ‘சித்திரை செவ்வானம்’ படத்திற்கும் எடிசன் விருது வாங்கியிருப்பது மறக்க முடியாத ஒன்று. ராதாரவி சார், விக்ரமன் சார், அம்பிகா மேம் போன்ற பல முன்னோடிகளால்தான் நாங்கள் இங்கிருக்கிறோம். விருது வென்றிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

பாடகர் அந்தோணிதாசன், “இந்த விருது விழாவிற்கு என்னை அழைத்ததற்கு நன்றி. ஆரம்ப காலத்தில் நான் பாடியபோது சுற்றி இருந்தவர்களின் கைத்தட்டல்தான் எனக்கு பெரிய உற்சாகம். திரைத்துறைக்கு வந்த பிறகு விருதுகள்தான் அந்த உற்சாகத்தை கொடுத்தது. என்னைப் போன்றவர்களை கெளரவிக்கும் எடிசன் விருது விழாவிற்கு எனது வணக்கங்கள்”.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், “18 வருடங்களாக நடக்கும் விருது விழாவிற்காக உலகம் முழுவதும் உள்ளவர்களை ஒருங்கிணைப்பது சாதாரண விஷயம் இல்லை. சித்தாந்த ரீதியாக ராதாரவி அண்ணனுடன் முரண்பட்டாலும் அவர் மிகவும் அன்பானவர். என்னை பல இடங்களில் முன்னிறுத்தி பேசியிருக்கிறார். திரைத்துறையில் பல நண்பர்கள் எனக்கு இருந்தாலும் என்னை அடையாளம் கண்டு பொதுவில் பாராட்டியவர் ராதாரவி அண்ணன் தான். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மழைநீர் சேகரிப்பு திட்டம், லாட்டரி தடை சட்டம் இதெல்லாம் என்னுடைய சாதனைகள். அதெல்லாம் பேசுபொருளாக மாறவில்லை. அதற்கான அங்கீகாரத்தை ஆட்சியாளர்கள் எடுத்துக் கொண்டார்கள். ஆனால், அதன் மையக்கரு நான் தான். இதை பொதுவில் சொல்லி பாராட்டியவர் ராதாரவி அண்ணன், தமிழ்நாட்டில் வாழுகிற மக்களுக்காகவும், உலகம் முழுவதும் வாழுகின்ற தமிழர்களுக்காகவும் தொடங்கப்பட்ட ஒரு அரசியல் பேரியக்கம் தான் தமிழக வாழ்வுரிமை கட்சி. விருது வென்றவர்களுக்கும் விருது விழாவிற்கு வருகை தந்திருக்கும் ராதாரவி, விக்ரமன், அம்பிகா உள்ளிட்ட அனைவருக்கும் என் வணக்கங்கள்” என்றார்.

யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றம் !!

0

KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ ( Toxic: A Fairy Tale for Grownups ) திரைப்படத்தின் வெளியீடு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு 2026 ஜூன் 4 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம், தற்போது புதிய தேதியில் உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு, CinemaCon நிகழ்வில் படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. உலகளாவிய விநியோகஸ்தர்கள் மற்றும் திரையுலக முக்கிய நபர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு, படத்தை மேலும் பெரிய அளவில் சர்வதேச சந்தைகளில் வெளியிட வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதனால், படக்குழு தனது வெளியீட்டு திட்டத்தை மறுபரிசீலனை செய்துள்ளது.

படம் தற்போது முழுமையாக தயாராகியுள்ள நிலையில், உலகளாவிய விநியோகம் மற்றும் முக்கிய சர்வதேச கூட்டாண்மைகளை உறுதிப்படுத்தும் பணிகளில் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படம் யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோரால் எழுதப்பட்டு, கீது மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ளது.

இது குறித்து நடிகர் யாஷ் கூறியதாவது:

“சில படங்களை நாம் உருவாக்குகிறோம்… சில படங்கள் நம்மை மீண்டும் சினிமாவை காதலிக்க வைத்துவிடுகிறது. டாக்ஸிக் அப்படிப்பட்ட ஒரு பயணம். CinemaCon-ல் எங்கள் படத்தை வெளியிட்ட பிறகு, உலகளாவிய அளவில் கிடைத்த வரவேற்பு இந்த படம் இன்னும் பெரிய அளவில் செல்ல வேண்டிய படைப்பு என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தியது.

டாக்ஸிக் படம் முழுமையாக தயாராகி விட்டது. தற்போது உலகளாவிய விநியோகம் மற்றும் கூட்டாண்மைகளை உறுதி செய்யும் பணியில் இருக்கிறோம். இதனால், ஜூன் 4 அன்று படத்தை வெளியிடவில்லை. ஆனால் விரைவில் புதிய தேதியில் உலகம் முழுவதும் வெளியாகும்.

இந்திய சினிமா உலகளவில் உயர்ந்து நிற்கும் இந்த நேரத்தில், தரத்தை மேலும் உயர்த்துவது நம்முடைய பொறுப்பு. அதற்காகவே இந்த முடிவு. உங்கள் ஆதரவை நான் எப்போதும் மனதில் வைத்திருக்கிறேன். சில கதைகள் பொறுமையை கேட்கும்… இந்தப் படம் அவற்றில் ஒன்று. நிச்சயமாக இது இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் படமாக இருக்கும்.”

இந்த திரைப்படத்தில் யாஷ் உடன் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் நடித்துள்ளனர்

கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.

KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிப்பில் உருவாகியுள்ள “டாக்ஸிக்” திரைப்படம், புதிய தேதியில் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும்.

After Strong CinemaCon Response, Rocking Star Yash’s Toxic Release Shifted for Larger Global Release

KVN Productions and Monster Mind Creations today announced that the release of Toxic: A Fairy Tale for Grown-Ups has been rescheduled. The film, which was earlier set to release on June 4, 2026, will now arrive in theatres worldwide on a new date to be announced soon.

The decision follows the film’s presentation at CinemaCon, where it received a strong and encouraging response from global distributors and industry stakeholders. The reception opened up opportunities for a significantly wider international release, prompting the team to revisit and realign their release strategy.

With the film now complete, the makers are currently focused on locking global distribution and forging key international partnerships to ensure Toxic reaches audiences across markets at the scale it demands. The film is written by Yash and Geetu Mohandas, and directed by Geetu Mohandas.

Statement from Yash

“There are films we make, and then there are films that remind us why we fell in love with cinema. Toxic has been one such journey. Presenting our film at CinemaCon and witnessing the overwhelming global response reaffirmed what we have always believed—that this film deserves to reach its fullest potential worldwide.

Toxic is complete, and we are currently aligning global distribution and partnerships. In light of this, we have decided to recalibrate our release timeline. While we will not be releasing on June 4 as announced earlier, we will be releasing at a later, globally aligned date. Toxic will come to theatres across the world soon.

At a time when Indian cinema is finding its voice and stepping onto the global stage with such promise, each of us has a responsibility to raise the bar. As an actor and producer, I see this moment as an opportunity to do my part—for the Indian film industry and for all of us—by taking the time to ensure our film reaches the world with the impact it is meant to have.

Through every step and every change, your support has stayed with me, and I carry it with deep gratitude. Some stories ask for patience. Some journeys demand it. We promise to give you a film to enjoy and celebrate—a film that will stand as a proud moment for Indian cinema.”

Toxic: A Fairy Tale for Grown-Ups stars Yash alongside Nayanthara, Kiara Advani, Huma Qureshi, Rukmini Vasanth, and Tara Sutaria.

Shot in Kannada and English, the film will also release in dubbed versions in Hindi, Tamil, Telugu, and Malayalam.

Produced by KVN Productions and Monster Mind Creations, the film will release in theatres worldwide on a new date to be announced soon.

“தலைவன் இருக்கின்றான்” – சிறப்பு பிரச்சாரப் பாடலை எழுதி, பாடி வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்

0

திரு.கமல்ஹாசன் அவர்கள் 2026 தேர்தலுக்கான, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாக “தலைவன் இருக்கின்றான்” என்ற தலைப்பில் ஒரு சிறப்பு பிரச்சாரப் பாடலை எழுதி, பாடி வெளியிட்டுள்ளார்.

இப்பாடலின் பின்னணியில் உள்ள உணர்வை விளக்கிய கமல்ஹாசன், அறிவார்ந்த தமிழ் மக்களின் மனதில் எழுந்திருக்கும் கோபமும் எழுச்சியும் என் மனதில் பாடலாய் எதிரொலித்தது.

தமிழ்நாடு தொடர்ந்து வெற்றிப் பாதையில் முன்னேறி, வலிமை, கண்ணியம், தைரியம் மற்றும் பெருமையுடன் முன்னேற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்ட “தலைவன் இருக்கின்றான்” என்ற பாடலாக அந்த உணர்வு இப்போது வடிவம் பெற்றுள்ளது.

இப்பாடல், பின்வரும் வரிகளுடன் கூடிய ஒரு வலிமையான மற்றும் வீரியமிக்க செய்தியைத் தாங்கி நிற்கிறது:
“இதுவே வெற்றிப் படை, ஒதுங்கிக்கொள், ஒதுங்கிக்கொள்.”

தமிழ்நாட்டின் வெற்றியை அறிவிக்கும் திராவிட சிங்கத்தின் கர்ஜனையாக வெளிப்படுத்தப்பட்ட இந்தப் பாடல், #TheLeaderIsHere என்ற செய்தியுடன் மக்களை ஒன்றிணைத்து, எதிர்காலத்தை பொதுமக்களின் கரங்களில் ஒப்படைக்கிறது.

இப்பாடலை வெளியிடுகையில், பின்வரும் குறிப்புடன் தனது செய்தியை திரு.கமல்ஹாசன் நிறைவு செய்தார்:
“இப்போது இது உங்கள் கைகளில் உள்ளது. நல்லுள்ளங்கள் இதைக் கேட்பீர்களாயின், தயவுசெய்து இதைப் பரவலாகப் பரப்புங்கள்.”

உங்களின்,
கமல்ஹாசன்

இப்பாடல் இப்போது பொதுமக்கள் பார்வைக்குக் கிடைக்கிறது.
இங்கே பார்க்கவும்:
https://youtu.be/L3LYzZHYmKo

நடிகர் விது நடிக்கும் ’29’ படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீட்டு விழா

0

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ – ஜீ ஸ்குவாட் தயாரிப்பில், இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் விது நடிக்கும் ’29’ திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் ‘Welcome To The World of 29’ என்ற பிரத்யேக நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

‘மேயாதமான்’, ‘ஆடை’, ‘குலுகுலு’ படங்களுக்குப் பிறகு ரத்னகுமார் இயக்கும் இந்த படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் ஃபாத்திமா, பிரேம் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கார்த்திகேயன் சந்தானம், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. படம் மே 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்த நிகழ்வில் இயக்குநர்கள் பி.எஸ். வினோத் ராஜ், கார்த்திக் யோகி, பிராங்க்ளின் ஜோசப், அருண் மாதேஸ்வரன், தயாரிப்பாளர்கள் அருண் விஷ்வா, சினிஷ், ராஜசேகர் பாண்டியன், மகேஷ் ராஜ் பஸ்லியான், நடிகர் ரியோ ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நடிகர் மகேந்திரன் பேசுகையில், 29 வயதில் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மூலம் ‘மாஸ்டர்’ பட வாய்ப்பு கிடைத்தது என்றும், அது தனது வாழ்க்கையில் திருப்புமுனை எனவும் கூறினார். தொடர்ந்து ரத்னகுமார் மீண்டும் வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார். விதுவின் நடிப்பு, அர்ப்பணிப்பு, கதாபாத்திரத்திற்காக உழைக்கும் மனப்பாங்கு ஆகியவற்றை பாராட்டிய அவர், மிகவும் பிடித்த சக நடிகர் என குறிப்பிட்டார்.

நடிகை ப்ரீத்தி அஸ்ராணி பேசுகையில், சத்யா – விஜி என்ற இரு கதாபாத்திரங்களை மையமாக கொண்ட காதல் கதை இது என்றும், 29 வயது இளைஞன் மற்றும் 21 வயது பெண்ணின் வாழ்க்கை பார்வை வித்தியாசங்களை படம் பேசும் என்றும் தெரிவித்தார். ரசிகர்கள் தங்களை எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய உணர்வுப்பூர்வமான காதல் பயணம் இது என்றார். இயல்பான, அடுத்த வீட்டு பெண் போன்ற கதாபாத்திரத்தில் நடித்தது மகிழ்ச்சி அளித்ததாகவும் கூறினார்.

நடிகர் விது பேசுகையில், இந்த மேடை தனது வாழ்க்கையில் மிகவும் சிறப்பானது என்றும், பல ஆண்டுகளுக்கு முன் கனவாக பேசிய விஷயங்கள் இன்று நனவாகியிருப்பதாகவும் கூறினார். படக்குழுவினர் அனைவரும் குடும்பமாக இணைந்து பணியாற்றியதால், படப்பிடிப்பு முடிவில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டதாக தெரிவித்தார். ரத்னகுமார் மீதுள்ள அன்பையும் நம்பிக்கையையும் பகிர்ந்த அவர், ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு ஜீவனாக அமைந்துள்ளதாக கூறினார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில், இந்த படத்தின் கதை காதலை புதிய கோணத்தில் சிந்திக்க வைத்ததாக தெரிவித்தார். நீண்ட காலமாக காதல் படங்களில் பணியாற்றியிருந்தாலும், இந்த கதை தன்னுள் மறைந்திருந்த காதல் உணர்வை மீட்டதாக கூறினார். இன்றைய வேகமான வாழ்க்கையில் நேர்மையான காதலை பேசும் படைப்பாக ’29’ இருக்கும் என்றும், தமிழ் காதல் படங்களின் தனித்துவமான வரிசையில் இப்படம் இடம் பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில், ” இந்த திரைப்படம் ஒருவரது சுய அடையாளத்தை பற்றி பேசுகிறது. அதற்கு பொருத்தமான ஆள் என்னைத் தவிர இந்த சூழலில் வேறு யாரும் இருக்க முடியாது.

என்னை இப்போது மற்றவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்றால்… லோகேஷ் கனகராஜ் அவருடைய நண்பர் ரத்ன குமாருக்காக இப்படத்தை தயாரிக்கிறார் என்றனர் . கார்த்திக் சுப்புராஜ் நடிகர் விதுவிற்காக இப்படத்தை தயாரிக்கிறார் என்றனர். அப்படி என்றால் நான் என்ன செய்கிறேன்? என்று யோசித்தால்.. இதற்கு கார்த்திக் சுப்புராஜூம் லோகேஷ் கனகராஜும் தான் பதில் சொல்ல முடியும். அப்போதுதான் நான் யார்? என்பதை இந்த உலகத்திற்கு சொல்ல முடியும்.

இந்தப் படத்திற்கு நான் தான் தயாரிப்பாளர் என்று வடிவேலு ஒரு படத்தில் சொல்வதைப் போல் சொல்ல வேண்டும் போலிருக்கிறது. இதனால் இது ஒருவரது சுய அடையாளத்தை பற்றிய விசயங்களுக்குள் எளிதாக சென்று விடுகிறது. இதனை நான் சந்தோஷமாகத்தான் சொல்கிறேனே தவிர வருத்தப்பட்டு சொல்லவில்லை.

நான் -கார்த்திக் சுப்புராஜ்- லோகேஷ் கனகராஜ் -ஆகியோர் 2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். மூன்று கோடி ரூபாய் பட்ஜெட்டில் இருந்து.. 154 கோடி ரூபாய் பட்ஜெட் வரை பல படங்களில் பணியாற்றிருக்கிறேன். ஆனால் இங்குள்ளவர்கள் என்னை தயாரிப்பாளராக பார்த்ததே இல்லை. பார்க்கப் போவதுமில்லை. இந்த நிலையில் நான் இருக்கும்போது.. இயக்குநர் ரத்னகுமார் சுய அடையாளத்தை பற்றி கேள்வியை எழுப்பி, ஒரு படத்தை எங்களிடம் சமர்ப்பிக்கிறார்.‌ இந்த கதையை கேட்ட பிறகு இதைவிட அழகாக சுய அடையாளத்தை பற்றியும் காதலைப் பற்றியும் யாராலும் சொல்லிவிட முடியாது. அதனால் இந்தப் படத்த்துடன் நான் உணர்வுபூர்வமாக தொடர்பு கொண்டேன்.

நேற்று கூட மதன் கௌரி உடனான ஒரு சந்திப்பின்போது கிரிக்கெட் வீரர் டோனிக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதை கேட்ட பிறகு டோனிக்கே அந்த நிலைமை என்றால்… நாம் எல்லாம் யார்..? என நினைத்துக் கொண்டேன்.

நாங்கள் இதுவரை 18 படங்களை தயாரித்திருக்கிறோம். இதில் எங்களுடைய பார்ட்னர்களுடன் இணைந்து என்ன மாதிரியான சினிமாவை தயாரிக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கிறோம். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் இருந்து எந்த மாதிரியான படங்கள் வெளியாகும் என்ற கேள்வி எழும்போது.. ஒரு பக்கம் கமர்சியலும் இருக்கும். மறுபக்கம் சொல்ல வேண்டிய கதைகளும் இருக்கும். நாங்கள் மற்றவர்கள் எளிதில் யூகிக்காத வகையிலான படங்களை தயாரிக்கிறோம். அத்துடன் புதுப்புது இளம் திறமைசாலிகளை கண்டறிந்து வாய்ப்புகளும் வழங்குகிறோம். அத்துடன் எங்களுடைய ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ என்ற பிராண்டு தான் முக்கியம் என்பதையும் உணர்ந்து இருக்கிறோம்.

லோகேஷ் கனகராஜுக்கு சத்தியமாக இதுவரை இப்படத்தின் கதை தெரியாது. அவர் இதுவரை நம்பிக்கையின் பேரில் மட்டுமே தொடர்ந்து முதலீடு செய்து வந்திருக்கிறார். எங்கள் மீது அத்தகைய நம்பிக்கையை வைத்ததற்காக லோகேஷ் கனகராஜிற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

லோகேஷ் கனகராஜ்- கார்த்திக் சுப்புராஜ் ஆகிய இரண்டு இயக்குநர்கள் இணைகிறார்கள் என்றால்… அந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு நிச்சயமாக இருக்கும். அதற்கு சரியான பதிலை அளிப்பது போல் இந்த 29 படம் இருக்கும். இந்தப் படத்தை இயக்கிய ரத்ன குமாருக்கு நன்றி.‌

விது என்னுடைய தம்பி. இந்த தம்பிக்காக அண்ணன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இதுதான் உண்மை. இதை நான் பெருமிதமாக சொல்கிறேன். திறமை இருந்தால் நாங்கள் நிச்சயம் வாய்ப்பை வழங்குவோம். விதுவிற்கு திறமை இருக்கிறது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கும் போது அந்தப் படத்தின் முக்கிய கேரக்டரான ஷட்டாணி கேரக்டருக்கு விது தான் பொருத்தமாக இருப்பார் என்று கார்த்திக் சுப்புராஜ் தீர்மானித்தார். அந்த வாய்ப்பை ஏற்று விது தன் திறமையை வெளிப்படுத்தினார். அதன் பிறகு ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக மைக்கேல் கேரக்டரில் தோன்றி தன் திறமையை மீண்டும் நிரூபித்தார் விது. இந்தப் படத்தில் சத்யாவாக அவர் நடித்திருக்கிறார் தொடர்ந்து எங்கள் நிறுவனம் தயாரிக்கும் மூன்று படங்களில் அவர் நடிக்க உள்ளார். இந்த வருடம் முடிவதற்குள் அவர் கைவசம் மூன்று படங்கள் இருக்கும். அவை எல்லாம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என நான் நம்புகிறேன்.

இந்தப் படத்திற்குப் பிறகு நடிகை ப்ரீத்தி அஸ்ராணியை தமிழக மக்கள் அனைவரும் தங்களுடைய விஜியாக பார்ப்பார்கள்.

இந்தப் படத்தில் சத்யாவுக்கும் விஜிக்கும் இடையேயான லவ் ஸோல்ஃபுல்லாக இருக்கும்.

செவன் ஜி ரெயின்போ காலனி… விண்ணைத்தாண்டி வருவாயா… அலைப்பாயுதே… போன்ற படங்களை ரசித்த ரசிகன் நான். என்னை போல் பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் 29 நிச்சயமாக இடம் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயமாக இருக்கிறது.

இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டனின் ஸோல் ஃபுல் மியூசிக் ரொம்ப பிளஸ்.

இந்த படத்திற்காக பணியாற்றிய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சோனி மியூசிக் நிறுவனத்திற்கும் வெளிநாட்டு உரிமையை பெற்ற ஏ பி இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும் தமிழக முழுவதும் வெளியிடும் ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி.

முப்பதாம் தேதி ஏப்ரல் 30 ஆம் தேதி தனுஷ் படம் வெளியாகிறது. மே 14-ஆம் தேதி சூர்யா சாரின் படம் வெளியாகிறது. இரண்டு படத்திற்கும் நடுவில் அழகான சூப்பரான காதல் கதையாக 29 எனும் படமும் வெளியாகிறது அனைத்து படங்களையும் திரையரங்குகளுக்குச் சென்று பார்க்க வேண்டும்.‌

நடிகர் ரியோ ராஜுடன் விரைவில் ஒரு படத்தில் இணைகிறோம். அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்றார்.

தயாரிப்பாளர் -இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், ” ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தை தொடங்கும் போது குறும்படங்களை எல்லாம் ஒன்றிணைத்து ஆந்தாலஜி பாணியில் ஒரு படத்தை உருவாக்கினோம்.‌ ரத்னகுமார் இயக்கிய ‘மது’ எனும் குறும்படமும் இடம் பிடித்தது. அந்த குறும்படத்தை பார்க்கும் போதே ரத்னகுமாரின் எழுத்தும் இயக்கமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போதே அவரிடம் ஏதாவது திரைப்படத்திற்கான கதை இருக்கிறதா? என்று கேட்டோம். அப்போதுதான் நாங்கள் ஒரு திரைப்படத்தை தயாரிக்கலாம் என்று தீர்மானித்திருந்தோம். அப்போது ரத்னாவிடம் கதையை கேட்போம் என்று சொன்னேன். அவரும் இரண்டு, மூன்று ஐடியாக்களை சொன்னார். ஆனால் நான் தான் ‘மது’ எனும் குறும் படத்தையே முழு நீள காதல் திரைப்படமாக மாற்றித் தர முடியுமா? என்று கேட்டேன். அதுதான் மேயாதமான். அதுதான் எங்களது முதல் திரைப்படம். மேயாத மான் எங்களது முதல் படம் என்பதில் எங்களுக்கு பெருமை.

என்னைப் பொறுத்தவரை ரத்னகுமார் நல்ல எழுத்தாளர். அவருக்குள் பயங்கரமான ஹியூமர் இருக்கிறது. அவரிடம் சாதாரணமாக பேசினாலே சிரித்துக் கொண்டே இருப்போம். ஜாலியாக இருக்கும். ஒரு விசயத்தை அவர் பார்க்கும் விதமே வேறு வகையாக இருக்கும். அதை அவர் சொல்லும் போது காமெடியாக இருக்கும்.

மேயாத மான் படத்தில் காமெடி இருந்தாலும் அதற்குள் ஒரு அழுத்தமான லவ்வும் இருக்கும். அந்த படத்தின் பணிகள் முடிந்ததும் இப்படத்தின் கதையைப் பற்றி விவாதிக்க தொடங்கினோம்.‌ அதன் பிறகு அவர் இது வேண்டாம் என்று வேறொரு கதையை எழுதத் தொடங்கினார்.

என்னை பொறுத்தவரை ஒரு லவ் ஸ்டோரி என்றால் அதில் யார் ஃபெர்பார்ம் செய்கிறார்கள் என்பதைதான் நான் பார்ப்பேன். ஏனெனில் ஸ்ட்ராங்கான ரைட்டிங் இருக்கும்போது.. ஆர்டிஸ்ட் நன்றாக இருந்தால் அது வெற்றி பெறும்.

இந்தப் படத்திற்கு முதலில் நட்சத்திர நடிகர்களை வைத்து தயாரிக்கலாம் என்று திட்டமிட்ட போது.. ரத்னகுமார் தான் புது முகம்தான் பொருத்தமாக இருக்கும் என்றார். அதன் பிறகு என்னுடைய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ரெட்ரோ ஆகிய படங்களில் நடித்த விதுவை அவர் ஆடிசன் செய்துதான் வாய்ப்பளித்தார்.

நாம் நிறைய காதல் படங்களை பார்க்கிறோம் ஆனால் ஒரு சில படங்கள் தான் எவர்கிரீனாக நினைவில் நிற்கும். எனக்கு செல்வராகவன் சாரின் படங்கள் மிகவும் பிடிக்கும். அதிலும் 7 ஜி ரெயின்போ காலனி என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் ஆன படம். அந்த லவ் எத்தனை வருஷம் ஆனாலும் நம்மால் மறக்க முடியாது.

அதேபோல் கௌதம் மேனன் காதல் கதைகளை அவருடைய ஸ்டைலிஷ் ஆன மேக்கிங்கில் சொல்வார்.

அதே போன்று வித்தியாசமான தனித்துவமான காதல் கதை தான் ரத்ன குமாரின் 29.

லோகேஷ் கனகராஜை போல் ரத்ன குமாரும் லவ்விற்காக ஒரு யுனிவர்ஸை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இப்படத்திற்காக லேட்டஸ்டாக வெளியான ‘பொல்லாத ஆசைகள்..’ என்ற பாடலை ஷான் ரோல்டன் பாடியிருக்கிறார். அவரது குரல் நன்றாக இருக்கும். அந்த பாடலை படத்தின் இறுதியிலாவது வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்த படத்திற்கு என்னமாதிரியான ட்ரெய்லரை வெளியிடலாம் என விவாதித்துக் கொண்டிருந்தபோது.. எங்களுக்கு பெரிய குழப்பம் இருந்தது ரசிகர்களை திரையரங்கத்திற்கு வர வைக்கும் வகையில் ட்ரெய்லர் இருக்க வேண்டுமா ?…படம் எதைப் பற்றி பேசுகிறது என்பதை சொல்லும் வகையில் ட்ரெய்லர் இருக்க வேண்டுமா?.. என்ற வகையில் எங்களுடைய விவாதம் சென்று கொண்டிருந்தது.‌

அப்போது இயக்குநர் ரத்னகுமார் இந்த 29 எனும் படம் சத்யா எனும் இளைஞனின் 29 வயது வாழ்க்கையில் நடைபெற்ற பத்து அத்தியாயங்கள் தான் கதை என்பதால்… அதிலிருந்து ஒரு அத்தியாயத்தை நாம் வெளியிடலாமா..! என கேட்டார். அவருடைய இந்த ஐடியா எனக்கு மிகவும் பிடித்திருந்தது.‌

இந்தப் படம் என்ன மாதிரியான படம்… இந்த படத்தின் கதாபாத்திரங்கள் யார் … படம் எதைப் பற்றி பேசுகிறது… காதல் என்றால் என்ன… ஆகிய எல்லாவற்றையும் இணைத்து சொல்வது போல் இந்த காட்சி இருந்தது. இந்த காட்சியில் ரத்னா குமாரின் ரைட்டிங்கும் ஃபிலிம் மேக்கிங்கும் நன்றாக இருந்தது. அதுவும் ஒரு சிங்கிள் ஷாட்டில் இருந்தது.‌

எங்களுடைய ஆந்தாலஜி படத்தில் எப்படி ரத்ன குமாரின் மது குறும்படம் இருந்ததோ.. அதேபோல் லோகேஷ் கனகராஜ் களம் எனும் குறும்படமும் இருந்தது. ரத்னகுமாரும் லோகேஷ் கனகராஜும் நண்பர்கள். லோகேசும் நானும் இணைந்து ஒரு படம் தயாரிப்பது மகிழ்ச்சி தான்.

நான் தயாரிப்பில் கிரியேட்டிவ் பகுதியைத் தான் கவனிக்கிறேன். மற்ற அனைத்து விசயங்களையும் கார்த்திகேயன் சந்தானம் தான் கவனித்துக் கொள்கிறார். எங்கள் நிறுவனத்தின் எல்லா படத்தையும் சாத்தியமாக்கியது கார்த்திகேயன் சந்தானம் தான். இந்த 29 திரைப்படத்தையும் பொறுப்பேற்றுக்கொண்டு நிறைவேற்றி காட்டியது கார்த்திகேயன் சந்தானம் தான். அவர்தான் லோகேஷ் கனகராஜ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.‌

இப்போது ஒரு திரைப்படத்தின் ரிலீஸ் என்பதும் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இரண்டு பெரிய திரைப்படங்களுக்கு நடுவில் நாங்கள் வெளியிடுகிறோம். இந்த 29 திரைப்படத்தை அனைவரும் பார்த்து ரசித்து கொண்டாடும் வகையில் தான் உருவாக்கி இருக்கிறோம்” என்றார்.

இயக்குநர் ரத்னகுமார் பேசுகையில், ” மேயாத மான் படத்தினை முடித்த பிறகு ஒரு நாள் வீட்டில் இருந்த போது இரவு நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்தது பேஸ்புக்கில் ‘வாட்ஸ் இன் மைண்ட்’ என்றுதான் ஒரு விசயத்தை போஸ்ட் செய்தேன். என் ரூமில் மழையின் சத்தம் மட்டும்தான் கேட்டுக் கொண்டிருந்தது. ஒரு குடையில் ஒரு பையனும் பெண்ணும் நின்று கொண்டிருக்கிறார்கள். மழை பெய்து கொண்டிருக்கிறது. அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.. என்ற ரீதியில் ஒரு உரையாடலை எழுதி, போஸ்ட் செய்தேன். மறுநாள் அதற்கு ஏகப்பட்ட லைக்ஸ்.. கமெண்ட்ஸ்.. வந்திருந்தது . அதில் ‘அந்த இரண்டு கேரக்டர் அதற்குப் பிறகு என்ன செய்தார்கள். என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்’ என்று சிலர் பதிவிட்டனர். அப்போது அந்த கேரக்டருக்கு நான் பெயர் கூட வைக்கவில்லை. ஏனென்றால் அதை வாசிக்கும் ஒவ்வொருவரும் தங்களை நினைத்து கொள்வார்கள் என்று விட்டுவிட்டேன்.
சரி என்று மற்றொரு நாள் அவர்கள் அடுத்ததாக எங்கே சந்தித்து இருப்பார்கள்? என்று ஒரு இடத்தை தேர்வு செய்தேன். அதுதான் இப்போது நீங்கள் இங்கு பார்த்த கிளிம்ப்ஸ்.

இதைத்தான் நான் இரண்டாவது முறையாக எழுதி பேஸ்புக்கில் போஸ்ட் செய்தேன். எனக்குள் தோன்றியதை பேஸ்புக்கில் போஸ்ட் செய்தேன்.

அப்போது ஒரு நண்பர் எனக்கு போன் செய்து எதுக்கு இப்போது நீ ஃபேஸ்புக்கில் இப்படி போஸ்ட் ஏன் போடுகிறாய்? இதற்குள் ஒரு நல்ல கதை இருக்கிறது. இரண்டு கேரக்டர்ஸ் ஒரு சிறிய குட்டி ஸ்பேஸ்க்குள் கனெக்ட் பண்ண முடிகிறது. இதனை ஒரு படமாக உருவாக்கலாம். நீ உருவாக்கவில்லை என்றால்… வேறு யாரேனும் இதனை படமாக உருவாக்கி விடுவார்கள். தயவு செய்து அதனை டெலீட் செய்து விடு ‘ என்றார்.

இதேதான் நான் என்னுடைய மது குறும்படத்தை யூடிபில் போஸ்ட் செய்த போதும் நடந்தது. அந்த மது மேயாத மான் படமாக ஆனதை போல்.. பேஸ்புக்கில் போஸ்ட் போட்ட விசயங்கள் தற்போது 29 எனும் படமாக உங்களிடம் வந்திருக்கிறது.

நான் கதை எழுத உட்கார்ந்த இப்போது என் மனதிற்குள் தோன்றிய இரண்டு கற்பனை கதாபாத்திரங்களின் பயணம் தான் இந்த படம்.

கார்த்திகேயன் சந்தானம் இல்லாமல் இந்த படம் இல்லை.‌ அவர்தான் இந்தக் கதையை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் தான் நீ உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

லோகேஷ் எனக்கு வேறு ஒரு வாய்ப்பை அமைத்துக் கொடுத்தார். அவரே ஒரு கதையை கொடுத்து அதை படமாக உருவாக்கு என்றார்.‌ கார்த்திக் சுப்புராஜ் நான் ஒரு ஆக்சன் ஓரியண்டட் கதையை கொடுக்கிறேன் அதை நீ டைரக்ட் செய் என்றார். ஆனால் இவர்களுக்கு மத்தியில் கார்த்திக் சந்தானம் தான் நீ 29 படத்தை இயக்கு. இதுதான் நீ என்று எனக்கு சுட்டிக்காட்டினார்.

அடையாளத்தை நாம் வாங்க முடியாது அதுவாக அமைவது தான். நான் யார்? என்ற கேள்வி எனக்குள் வரும்போது தான் நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பேஸ்புக்கில் போட்ட போஸ்ட் தான் ஒரு கதை கதையாக உருவாகி நான் யாரு என்று கேட்டால் தெரியவில்லை என்று சொல்லும் அளவிற்கு நோக்கமே இல்லாத ஒரு 29 வயது பையன். அவருடைய வாழ்க்கையில் 20 களில் இருக்கும் ஒரு பெண் வருகிறாள். அந்தப் பெண்ணும் அவனும் இணைந்து பயணிக்கும் போது தான் யார்? என்பதை உணர்ந்து கொள்கிறார்கள். இது ஒரு படமாக தயாரானது.

எனக்கு 29 வயதில் தான் நிறைய விசயங்கள் நடந்ததால் .. இப்படத்தின் டைட்டில் 29 என்பதாக இருக்க வேண்டும் என தீர்மானித்தேன்.

29 எனும் டைட்டிலை புரிய வைப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. இது டோர் நம்பரா… பஸ் நம்பரா… ஏதேனும் ஒரு நாளா… அதெல்லாம் இல்லை .இது வயது என குறிப்பிடுவதற்கு ஒரு போராட்டமே நடந்தது.‌

நீங்கள் பார்த்த கிளிம்ப்ஸ்.. சத்யாவின் வாழ்க்கையில் உள்ள பத்து அத்தியாயங்களில் இரண்டாவது அத்தியாயம். இது உங்களுக்குப் பிடித்திருக்கிறது …உங்களை உங்களுடன் எளிதில் தொடர்பு கொள்கிறது என்றால்…. தாராளமாக மீதி இருக்கும் அத்தியாயங்களும் உங்களுக்கு பிடிக்கும். நீங்கள் இந்தப் படத்தை ரசித்து பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

இந்த படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், ” இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. இவர்கள் அனைவருக்கும் மிக குறுகிய கால அவகாசத்தில் தான் அழைப்பு விடுத்தேன். அனைவரும் தங்களது பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு இங்கு இந்த படத்திற்கு ஆதரவு அளிக்க வருகை தந்திருக்கிறார்கள்.

29 எனும் இந்த படம் ஜீ ஸ்குவாட் நிறுவனமும், ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் திரைப்படம். என்னுடைய தயாரிப்பில் இது முதல் படம். இதற்கு முன் ‘ஃபைட் கிளப்’ எனும் ஒரு படமும், ‘மைக்கேல்’ எனும் ஒரு படத்தையும் வழங்கி இருக்கிறேன் அதுவும் நண்பர்களுக்காகத் தான் வழங்கினேன்.

இந்தப் படத்தை தயாரிப்பதற்கு முழு முதல் காரணம் என் நண்பர் ரத்னகுமார் தான். ரத்னகுமார் ஒரு எழுத்தாளரை கடந்து ஒரு நண்பரை கடந்து நீண்ட நாட்களாகவே சக போட்டியாளராக இருந்திருக்கிறார்.‌

2013 ஆம் ஆண்டில் முதல் படத்தை இயக்குவதற்காக அலைந்து கொண்டிருந்த போது.. இங்கு இப்போது இருக்கும் எல்லா இயக்குநர்களும் ஒன்றாக தான் சுற்றி கொண்டிருந்தோம். அப்போது நானும், ரத்ன குமாரும் குறும்படத்தை இயக்கி விட்டு தெருத்தெருவாக சுற்றிக் கொண்டிருந்தோம். 2012 ஆம் ஆண்டில் பீட்சா படம் வெளியானது. அந்தப் படம் எங்களுடைய கனவுகளுக்கெல்லாம் மிகப்பெரிய கதவை திறந்து வைத்தது. எனக்கு மட்டுமல்ல இன்றைக்கு இருக்கும் மிகப்பெரிய இயக்குநர்களுக்கு எல்லாம் அது மிகப் பெரிய கதவை திறந்து வைத்தது.

அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் பெஞ்ச் டாக்கீஸ் எனும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அப்போது குறும்படங்களை எல்லாம் ஒன்றிணைத்து ஒரு ஆந்தாலஜி படத்தை உருவாக்கினார். அந்த அவியல் எனும் ஆந்தாலாஜி படத்தில் என்னுடைய களம் எனும் குறும்படமும் இருந்தது. கார்த்திக் சுப்புராஜ் ரத்ன குமாரை மட்டும் அறிமுகப்படுத்தவில்லை. என்னையும் தொழில்நுட்ப ரீதியாக அவியல் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.

அப்போதிலிருந்து தற்போது வரை அனைவரும் நண்பர்களாகத் தான் இருக்கிறோம். ஆனால் தற்போது ரத்னா இயக்க ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்துடன் இணைந்து நானும் ஒரு தயாரிப்பாளராக பொறுப்பேற்று இருக்கிறேன். இந்த ஒரு இடத்தை வழங்கியதற்காக மக்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதற்கு காரணமே இதுதான். நாம் வளரும்போது நம்முடன் இருந்தவர்களையும் வளர்த்து விட வேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தான் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினேன். இதற்கும் இன்ஸ்பிரேஷன் கமல் சார் தான். சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் தான் முதலீடு செய்ய வேண்டும் என்பதை அவர்தான் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார். அவரிடமிருந்து தான் இந்தப் பாடத்தை நாங்களும் கற்றுக் கொண்டோம்.

இந்தப் படம் மட்டுமல்ல எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து உருவாகும் படங்களும் படங்கள் அனைத்தும் புது புது இளம் திறமைசாலிகளை அறிமுகப்படுத்துவதற்காகத்தான். இதற்கு 29 திரைப்படம் சிறந்த தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய படங்களுக்கு கொடுத்த ஆதரவை போல் என்னுடைய தயாரிப்பில் உருவாகும் படங்களுக்கும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

நான் இதுவரை இந்த படத்தை பார்க்கவும் இல்லை. கதையை கேட்கவும் இல்லை. எல்லாம் ரத்னகுமார் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான். அவர் மீது வைத்திருக்கும் குருட்டு நம்பிக்கையால் அவர் பொறுப்புணர்வுடன் படத்தை இயக்கியிருப்பார். இந்தப் படத்தை மே எட்டாம் தேதி ரசிகர்களுடன் திரையரங்கில் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்.

படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

மே எட்டாம் தேதி 29 வெளியாகிறது. அதற்கு முன் வெளியாகும் ‘கர’ திரைப்படத்திற்கும் , அதற்குப்பின் வெளியாகும் சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.‌” என்றார்.

“Super B Man ” First Look Unveiled – An Enthralling Fantasy on Lines of Minnal Murali and Lokah

0

A Fantasy Superhero Survival Thriller Set to Redefine Theatrical Experience

Ambitious production houses with a vision for innovation continue to push Tamil cinema to the next level with fresh and compelling storytelling. Emerging as one such promising banner, Bamboo Trees Productions is now set to offer a never-before theatrical experience with their second venture, “SUPER B MAN”.

Following their debut production 3.33, a unique supernatural thriller that blended horror with psychological elements, the banner now steps into an exciting new space with “SUPER B MAN”, a fantasy superhero survival thriller that promises scale, intensity, and a completely fresh cinematic experience.

The makers have officially unveiled the first look of SUPER B MAN today, offering a glimpse into a world that blends fantasy with high-stakes survival drama, instantly sparking curiosity among audiences.

Directed by T. JEEVITHA KISHORE, the film features Nambikkai Chandru (director of 3.33) in the lead role, marking a significant shift as he takes on the mantle of a superhero in this ambitious project. The rest of the cast, including the female lead and key characters, will be announced soon.

Backed by a highly accomplished technical team, SUPER B MAN brings together talents from across industries. Cinematography is handled by Sathish Manoharan, known for works including Pindam, 3.33, Mango Muni, and an upcoming Hindi project. Music is composed by Harshavardhan, associated with notable films like Kannum Kannum Kollaiyadithaal, Arjun Reddy, and a National Award for winner for Animal movie.

Editing is by Deepak S, known for 3.33, Sivakumarin Sabadham, and the upcoming Bloody Politics. Stunts are choreographed by Sugan, who has worked on projects including Annapoorani and several Malayalam films. Costume Design is by MELWY J, recognized for work in Lokah and Minnal Murali. Sound Design is handled by Sachin Sudhakaran, a National Award winner for Animal.

Sharing his thoughts, Director T. JEEVITHA KISHORE says, “SUPER B MAN’’ is a story that blends fantasy with survival in a very grounded and engaging way. We wanted to create a superhero film that feels rooted yet visually exciting. With a fresh cast and a strong technical team, we are building a world that audiences haven’t experienced before in Tamil cinema. The first look is just a small step into this universe, there’s much more to come.”

With a unique genre, fresh casting, and a strong creative team, SUPER B MAN stands as an ambitious attempt to bring a new-age superhero experience to Tamil audiences. The unveiling of the first look marks the beginning of an exciting journey, with more updates expected soon.

Technical Crew

Banner – Bamboo Trees Productions

Director – T.Jeevitha Kishore
Cinematographer – Sathish Manoharan
Music Director – Harshavardhan Rameshwar
Editor – Deepak S
Stunt Master – Sugan
Costume Designer – MELWY J
Sound Designer – Sachin Sudhakaran
PRO – Suresh Chandra-Abdul S Nassar

‘மின்னல் முரளி’, ‘லோகோ’ படங்கள் வரிசையில் பரபர ஃபேண்டஸி த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள ‘சூப்பர் பி மேன்’ படத்தின் முதல் பார்வை வெளியீடு!

இதுவரை கண்டிராத திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் வகையில் ஃபேண்டஸி சூப்பர் ஹீரோ சர்வைவல் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள ‘சூப்பர் பி மேன்’

புதிய சிந்தனைகளுடன் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் செயல்படும் ஆம்பிஷியஸ் புரொடக்‌ஷன் ஹவுஸ் தொடர்ந்து புதுமையான கதைகளை உருவாக்கி நம்பி்க்கைக்குரிய நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. அந்த வகையில், தனது இரண்டாவது படைப்பான ’சூப்பர் பி மேன்’ திரைப்படத்தின் மூலம் இதுவரை காணாத திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு தரவுள்ளது.

இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ’3.33’ கதைக்களம் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் மற்றும் சைக்கலாஜிக்கல் அம்சங்களுடன் இருந்தது. அதனைத் தொடர்ந்து, இப்போது ’சூப்பர் பி மேன்’ மூலம் ஃபேண்டஸி, சூப்பர் ஹீரோ மற்றும் சர்வைவல் திரில்லர் அம்சங்களுடன் பிரம்மாண்ட களத்திற்குள் நுழைந்துள்ளது. ‘சூப்பர் பி மேன்’ திரைப்படத்தின் முதல் பார்வை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஃபேண்டஸி உலகத்தையும் அதிரடி சர்வைவல் கதையையும் இணைக்கும் இதன் கிளிம்ப்ஸ் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

டி. ஜீவிதா கிஷோர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், ’3.33’ திரைப்படத்தின் இயக்குநரான நம்பிக்கை சந்துரு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் சூப்பர் ஹீரோவாக மாறுவது படத்தின் ஹைலைட் தருணங்களில் ஒன்று.படத்தின் மற்ற நடிகர்கள், குறிப்பாக நாயகி மற்றும் முக்கிய கதாபாத்திரங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

படத்தில் உயர்தர தொழில்நுட்பக் குழு பணியாற்றுகிறது. ’பிந்தம்’, ’3.33’, ’மாங்கோ முனி’ மற்றும் வரவிருக்கும் இந்தி படத்தில் பணியாற்றிய சதீஷ் மனோகரன் ஒளிப்பதிவை கையாண்டு்ள்ளார். ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ’அர்ஜுன் ரெட்டி’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஹர்ஷவர்தன் படத்திற்கு இசையமைக்கிறார். ‘அனிமல்’ படத்திற்காக அவர் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

’3.33’, ’சிவகுமாரின் சபதம்’ மற்றும் வரவிருக்கும் ’பிளெடி பாலிடிக்ஸ்’படங்களில் பணியாற்றிய தீபக் எஸ் எடிட்டிங்கை மேற்கொள்கிறார். ‘அன்னபூரணி’ மற்றும் பல மலையாள படங்களில் பணியாற்றிய சுகன் சண்டைப் பயிற்சியை கவனிக்கிறார். காஸ்ட்யூம் டிசைனை ’லோகா’, ’மின்னல் முரளி’ படங்களில் பணியாற்றிய மெல்வி ஜே மேற்கொள்கிறார். ஒலி வடிவமைப்பை ’அனிமல்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற சச்சின் சுதாகரன் கவனிக்கிறார்.

இயக்குநர் டி. ஜீவிதா கிஷோர் கூறுகையில், ”ஃபேண்டஸி மற்றும் சர்வைவல் கலந்த சுவாரஸ்ய கதைதான் ‘சூப்பர் பி மேன்’. நிஜத்தன்மை கொண்ட சூப்பர் ஹீரோ கதையாகவும் அதேசமயம் விஷூவலாக ரசிகர்களுக்கும் புது அனுபவம் தரவேண்டும் என்ற நோக்கத்துடனும் இந்தக் கதையை உருவாக்கியுள்ளோம். புதிய நடிகர்கள் மற்றும் வலுவான தொழில்நுட்பக் குழுவுடன், தமிழ் சினிமாவில் இதுவரை காணாத ஒரு உலகத்தை உருவாக்கி வருகிறோம். இந்தக் கதையின் உலகத்தை முதல் பார்வை மூலம் அறிமுகப்படுத்தியுள்ளோம். படத்தில் இருந்து இன்னும் பல சுவாரஸ்யமான அப்டேட் அடுத்தடுத்து வரவிருக்கிறது” என்றார்.

புதிய ஜானர், திறமையான நடிகர்கள் மற்றும் வலுவான தொழில்நுட்பக்குழுவுடன், ’சூப்பர் பி மேன்’ தமிழ் ரசிகர்களுக்கு நியூ ஏஜ் சூப்பர் ஹீரோ அனுபவத்தை தர இருக்கிறது. படத்தின் முதல் பார்வை வெளியீடு இந்த சுவாரஸ்யமான பயணத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது. படத்தில் இருந்து மேலும் பல அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்பக் குழு விவரம்:

பேனர்: பேம்பூ ட்ரீஸ் புரொடக்ஷன்ஸ்,
இயக்குநர்: டி. ஜீவிதா கிஷோர்,
ஒளிப்பதிவாளர்: சதீஷ் மனோகரன்,
இசையமைப்பாளர்:ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்,
எடிட்டர்: தீபக். எஸ்,
ஸ்டண்ட் மாஸ்டர்: சுகன்,
காஸ்ட்யூம் டிசைனர்: மெல்வி. ஜே,
ஒலி வடிவமைப்பு: சச்சின் சுதாகரன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா – அப்துல் எஸ் நாசர்.

பிரைம் வீடியோ – புஷ்கர் & காயத்ரி – வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films)   – A.சற்குணம் – கூட்டணியின் ‘எக்ஸாம் – EXAM’ தமிழ் ஒரிஜினல் இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு

0

இந்தியா முழுவதும் பெரிதும் விரும்பப்படும் பொழுது போக்கு தளங்களில் முதன்மையானதாக திகழும் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் மே மாதம் 15 ஆம் தேதி முதல் வெளியாகவுள்ள ‘எக்ஸாம் –  EXAM’ எனும் சஸ்பென்ஸ் திரில்லரான இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் & காயத்ரி ஆகியோரின் தயாரிப்பில் தேசிய விருதை வென்ற இயக்குநரான ஏ சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எக்ஸாம் –  EXAM’   இணைய தொடரில் துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஏழு அத்தியாயங்களாக தயாராகி இருக்கும் இந்த இணையத் தொடர் எதிர்வரும் மே 15 ஆம் தேதி முதல் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. சஸ்பென்ஸ் திரில்லரான EXAM இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி – இயக்குநர் ஏ. சற்குணம் – துஷாரா விஜயன் – அதிதி பாலன் – ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் புஷ்கர் பேசுகையில், ” நாங்கள் ‘வா குவாட்டர் கட்டிங் ‘எனும் திரைப்படத்தின் பணியை தொடங்குவதற்கு முன் ஏ சற்குணம் இயக்கத்தில் உருவான ‘களவாணி’ திரைப்படம் வெளியாகி வெற்றியை பெற்றிருந்தது. சிறிய பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் என்ற சாதனையை ஏ சற்குணம் படைத்திருந்தார்.‌ இதைத்தான் நாங்கள் தயாரிப்பாளர்களிடத்தில் குறிப்பிட்டு, ‘பெரிய ஸ்டார்ஸ் தேவையில்லை. சின்ன பட்ஜெட்டில் நடிகர்களை வைத்து பெரிய வெற்றியை பெற முடியும்’ என எடுத்துச் சொன்னோம்

சினிமாவில் ஒரு ஹீரோவின் கதையைத்தான் சொல்கிறோம்.‌ ஆனால் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் இணைய தொடர் நீண்ட வடிவம் கொண்டதால்.. அதைக் கடந்து சில விசயங்கள் அவசியமாக தேவைப்படும்.‌ ‘எக்ஸாம்’ தொடரின் முன்னோட்டத்தை பார்க்கும் போது ஜான்சி மற்றும் மரமல்லி எனும் இரு கதாபாத்திரங்களுக்கு இடையேயான ஒரு சம்பம்  … ஜான்சி சிக்குவாளா.. சிக்கமாட்டாளா ? என்ற ஒரு டென்ஷன் இருந்து கொண்டே இருக்கும்.. இதைக் கடந்து எக்ஸாம் என்ற போட்டி தேர்வு மோசடி குறித்த கதையும் உள்ளது.‌

சற்குணம் எங்களிடம் முதலில் கதையை சொல்லும்போது இந்த விசயங்கள் எல்லாம் அதில் இருந்தது.‌ கதையைக் கேட்டவுடன் இது நீண்ட வடிவத்திற்கானது என்பதை புரிந்து கொண்டோம். உண்மையைச் சொல்லப்போனால் நாங்கள் வெளியில் இருந்து வந்த ஒரு திரைக்கதையை படித்து ஓகே சொன்னது சற்குணத்தின் கதையை மட்டும் தான்.  ‘வதந்தி’ தொடரை எழுதிய ஆண்ட்ரூஸ்-ஐ, எங்களுக்கு முதலில் இருந்தே தெரியும்.

நாங்கள் கதையைக் கேட்டவுடன் ஆறு ஏழு அல்லது எட்டு அத்தியாயங்கள் வரை விறுவிறுப்பாக செல்லக்கூடிய அம்சங்கள் இருக்கிறதா? என்பதை தான் பார்ப்போம். அந்த விசயத்தில் இயக்குநர் சற்குணம் மிகவும் தெளிவாக இருந்தார்.

நிறைய வெப் சீரிஸ்களை பார்த்திருந்தால்.. அவை சினிமாவாக தயாராகி இருக்கலாம். இருந்தாலும் அதனை அங்கங்கே சற்று இழுத்து வெப்சீரிஸாக மாற்றி இருப்பார்கள். ஆனால் இயக்குநர் சற்குணம் முதலிலேயே தெளிவாக இது நீண்ட வடிவத்திற்கான கதையாகத்தான்  என்று  சொன்னார்.

இணைய தொடருக்கான படப்பிடிப்பு என்பது மிகவும் தெளிவான திட்டமிடலுடன் இருக்க வேண்டும்.‌ அந்த விசயத்திலும் இயக்குநர் சற்குணம் மிகத் தெளிவான திட்டமிடலுடன் பணியாற்றினார்.  அந்த விசயத்திலும் சற்குணம் கிரேட். ” என்றார்.

இயக்குநர் காயத்ரி பேசுகையில், ” அவர் எங்களிடம் சொன்ன கதை மிக நன்றாக இருந்தது. ஒரு திரைப்படத்தை தயாரிப்பதற்கும்… ஒரு இணையத் தொடரை தயாரிப்பதற்கும்… சில இலக்கணங்கள் உண்டு. அதற்காக பிரத்யேகமாக எழுத வேண்டும்.‌ நாங்கள் கதையைப் பற்றி விவாதிக்கும் போது அதை அவர்கள் திறந்த மனதுடன் நாங்கள் சொல்லும் விசயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது இயக்குநர் சற்குணத்திடம் இருந்தது. அவர் எப்போது படைப்பு குறித்து எந்த ஆலோசனைகள் சொன்னாலும்… குறிப்புகள் வழங்கினாலும்… மறுக்காமல் கேட்டுக் கொண்டு அதற்கான விளக்கத்தை அளிப்பார்.

ஒரு ப்ராஜெக்ட் என்றால் நிறைய விசயங்கள் ஒன்றாக கூடி வரவேண்டும். அதிலும் குறிப்பாக நடிகர்களுடைய விசயத்தில் நாங்கள் தெளிவாக இருந்தோம்.  திறமையான நடிகர்களாக-  கலைஞர்களாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். இந்த விசயத்தில் துஷாராவும், அதிதியும் எங்களது முதன்மையான தேர்வாக இருந்தது. குறிப்பாக அதிதியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம்.

இந்தத் தொடரில் முக்கியமான ஒரு கேரக்டர் இருக்கிறது. இதற்கு யார் பொருத்தமாக இருப்பார்? என்று யோசித்துக் கொண்டே இருந்தோம். ஒரு வருடத்திற்கு முன் நடிகர் அப்பாஸ் திடீரென்று வீடியோ காலில் வந்து மீண்டும் நடிக்கலாம் என்று நினைக்கிறேன் என்றார். அவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. அவரை அந்த கேரக்டருக்காக தேர்வு செய்தோம். அவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்.

திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். ஒளிப்பதிவாளருக்கு இதுதான் முதல் படைப்பு. கலை இயக்குனருக்கும் இதுதான் முதல் படைப்பு. அதனால் இயக்குநர் சொன்னதை போல் எக்ஸாம் தொடரின் தொடக்கத்தில் இருந்து இப்போது வரை அனைவரும் உற்சாகத்துடன் மகிழ்ச்சியாக உழைத்து வருகிறோம்.‌

பிரைம் வீடியோ நிறுவனத்தினை சார்ந்த அனைவரும் இதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள். நாங்கள் இணையத் தொடரை உருவாக்கினாலும் அதனை ரசிகர்களிடத்தில் சென்றடைய செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் பிரைம் வீடியோ நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். இதற்காக அவர்களுக்கும் இந்த தருணத்தில் எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் ஏ.சற்குணம் பேசுகையில், ” சங்கர் ஐ ஏ எஸ் அகாடமியின் நிறுவனரான சங்கர் என் நண்பர். போட்டி தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து வழக்கு தொடுப்பதற்காக சென்று இறுதியில் வக்கீலாக மாறியவரும் என் நண்பர். தமிழக அரசு தேர்வுகளுக்காக பயிற்சி பெறும் நிறைய நண்பர்கள் எனக்கு தெரியும். இவர்கள் அனைவரும் தான் இந்த இணைய தொடரை உருவாக்குவதற்கு முதல் காரணம்.

நடுத்தர வர்க்கத்து மக்களின் மிகப்பெரிய கனவு தான் அரசு பணிக்கான தேர்வு. அதில் நடைபெற்ற முறைகேடுகளை அப்படியே பதிவு செய்யாமல்… அதனை ஒரு திரில்லர் மோடில் அடுத்து என்ன ? அடுத்து என்ன ? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்ற வகையில் ஒரு திரைக்கதை உருவாக்கப்பட்டு… ஏழு அத்தியாயங்களாக இந்த எக்ஸாம் தொடர் உருவாகி இருக்கிறது.

நான் இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி அவர்களிடம் கதையை சொல்லும் போது.. அவர்கள் என்னிடம் சொன்ன ஒரே விசயம்.. அடுத்து என்ன? அடுத்து என்ன? என்ற பரபரப்பு ஒவ்வொரு காட்சியிலும் இருக்க வேண்டும். இதில் நாம் ஒரு நல்ல விசயத்தை சொல்கிறோம் என்ற எல்லையைக் கடந்து… பொழுது போக்கு அம்சங்களுடன் அடுத்து என்ன நடக்கும் என்ற திரில்லிங்கான தருணங்களாகவும் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நட்புணர்வுடன் பகிர்ந்து கொண்டே இருந்தனர்.  இந்த தொடருக்கு அவர்களின் இந்த ஆலோசனையும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.‌

அதன் பிறகு அவர்கள் எனக்கு கொடுத்த சுதந்திரம். கதையைக் கேட்டவுடன் ஓகே சொல்லாமல்… உடன் இருந்து அந்த திரைக்கதையை முழுவதுமாக படிக்கிறார்கள். மீண்டும் என்னை அழைத்து அது தொடர்பாக விவாதிக்கிறார்கள்.‌

அதே தருணத்தில் தயாரிப்பு விசயத்தில் எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளாமல் தரமான படைப்பாக உருவாக்கினார்கள்.

எனக்கு மிகவும் பிடித்த ஒரு விசயம் என்னவென்றால் …ஒரு படத்தை தொடங்கும் போது தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நல்ல புரிதல் இருக்கும். ஆனால் அந்தப் படம் நிறைவடையும் போது தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இடையே கருத்து முரண் எழுந்திருக்கும்.‌ இப்படி ஒரு அனுபவம் இல்லாமல் நான் மகிழ்ச்சியுடன் பணியாற்றிய முதல் படைப்பு வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான எக்ஸாம் தான். இதற்காக இவர்கள் இருவருக்கும் நான் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்கிறேன்” என்றார்.
 
நடிகை துஷாரா விஜயன் பேசுகையில், ‘ இந்த இணைய தொடர் மூலம் நான் முதன் முதலாக டிஜிட்டல் தளத்தில் அறிமுகமாகிறேன். எனது நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படமும் நேரடியாக பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில்தான் வெளியானது. இந்த வகையில் நான் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலி.

எக்ஸாம் இந்த தொடர்- நான் கண்ணை மூடிக்கொண்டு நம்பிக்கையுடன் ஒப்புக்கொண்ட ஒரு ப்ராஜெக்ட்.‌ புஷ்கர் காயத்ரி என்று சொன்னவுடன் ஓகே சொன்னேன். அதிலும் இயக்குநர் ஏ சற்குணம் என்று சொன்னவுடன் டபுள் ஓகே சொல்லிவிட்டேன்.‌

ஜான்சி கதாபாத்திரம் கடினமானது. அவள் ஒரு அப்பாவியான பெண். ஆனால்  கடினமான முடிவுகளை எடுக்கக் கூடியவள். அப்படித்தான் அந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போது எனக்கு சவாலானதாக இருந்தது என்னவென்றால் ..அவள் முடிவெடுக்கும் தருணம்….ஆனால் அதைப் பற்றி எல்லாம் அதிகம் கவலைப்படாமல் நான் இருந்ததற்கு இயக்குநர் சற்குணம் தான் முழு காரணம்.

நிச்சயமாக இந்த இணைய தொடர் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

நான் எப்போதும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை உள்ளவள்.‌ அதுபோன்ற கதை தான் எக்ஸாம்.

இதை நான் தேர்ந்தெடுத்ததை விட அந்த கதாபாத்திரம் தான் என்னை தேர்ந்தெடுத்தது என்று நம்புகிறேன் இதுபோன்ற கதைகளில் தான் நான் தொடர்ந்து நடித்து வருகிறேன் இனிமேலும் தொடர்ந்து நடிப்பேன்.

இந்த குழுவினருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. குறிப்பாக ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் உடன் பணியாற்றியது மறக்க முடியாது. இந்தப் படத்தில் நான் சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அந்த காட்சிகளில் நடிப்பது தான் சற்று கடினமானதாகவும் சவாலானதாகவும் இருந்தது. ஜான்சி கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகை அதிதி பாலன் பேசுகையில், ”  மரமல்லி  கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி மற்றும் சற்குணத்திற்கு நன்றி.  மரமல்லி  கதாபாத்திரத்திற்காக உடல் ரீதியாக சில முன் தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டியது இருந்தது. சண்டை காட்சிகளுக்காக நாங்கள் நிறைய ஒத்திகையும் பயிற்சியையும்  மேற்கொள்ள வேண்டியதிருந்தது.‌ நான் முதல் முறையாக சண்டை காட்சிகளில் நடிப்பதால் அதனை மகிழ்ச்சியோடும் சந்தோஷத்துடனும் பணியாற்றினேன். நிறைய அடிபட்டது. அடி வாங்கினேன். நாங்கள் இருவரும் தான் (துஷாராவும் அதிதியும்)  அடித்துக் கொண்டோம்.‌

இந்த கேரக்டர் தொடங்கும் போது சற்று வில்லத்தனமாகத் தான் தொடங்கும். அதற்கு மேல் எதையும் நான் தற்போது சொல்ல இயலாது. இயக்குநர் சற்குணம் சார் இந்த கேரக்டரை பற்றி என்னிடம் விவரித்த போது நான் இதற்கு முன் இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை என்பதால்.. ஒப்புக்கொண்டேன். அதற்கு முன் நான் இயக்குநர் சற்குணத்தின்‌ மிகப்பெரிய ரசிகை.அவருடைய படங்களை பார்த்திருக்கிறேன். எல்லோருடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது” என்றார்.

LINK : https://youtu.be/8MDZCOZzChM?si=_EmoKSOvaK91u_ND

- Advertisement -

Recent Posts