The Rotary Olympiad 2025, hosted by Rotary International District 3234, concluded with resounding success today at Jawaharlal Nehru Stadium, Chennai. The day-long sporting event brought together more than 1,500 students from over 70 schools, celebrating athleticism, discipline, and youth empowerment on a professional stage.
The event was inaugurated by Lt. Gen. Karanbir Singh Brar, PVSM, AVSM, General Officer Commanding, Dakshin Bharat Area, who addressed the young athletes with an inspiring message on leadership, fitness, and determination. His presence set a spirited tone for the day.
An impressive march past by NCC cadets, school bands, and students marked the beginning of the Olympiad, filling the stadium with energy and excitement. Throughout the day, students actively participated in various track and field events, team sports, and fitness challenges, showcasing their talent and sportsmanship.
The initiative by Rotary aimed to foster camaraderie, discipline, and physical well-being among school children while offering them a rare opportunity to compete in a professionally managed environment.
Rotary District 3234, under the leadership of AKS Rtn. Vinod Saraoji, continues to drive impactful community service. Speaking at the event, Governor Saraoji said, “The Rotary Olympiad is not just about winning medals; it’s about building confidence, character, and community. Through sports, we empower our youth and shape the future of society.”
With no spot registrations, the event was well-organized, ensuring safety, discipline, and a high-quality experience for all involved. The success of the Olympiad was made possible through the enthusiastic participation of students, dedicated volunteers, and the unwavering support of schools and parents.
The Rotary Olympiad 2025 marks a significant step forward in promoting a healthy lifestyle, leadership, and team spirit among the youth,perfectly aligning with Rotary’s core values and commitment to building a better tomorrow.
The winners of the Rotary Olympiad 2025 were announced at the culmination of the event, with Velammal Vidyalaya, Alapakkam emerging as the Overall Champion in the Boys’ category and Omega International School emerging as the Overall Champion in the Girls’ category, showcasing their exceptional talent and dedication to sports.
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது.
இயக்குநர், கிரியேட்டிவ் புரொடியூசர் சக்திவேல், “இதன் திரைக்கதை படிப்பதற்கே சுவாரஸ்யமாக இருந்தது. வெவ்வேறு இடங்களில் டிராவல் ஆகிக் கொண்டே இருந்தது. அதை சரியாக படமாக்கிவிட முடியுமா என்ற கேள்வியும் இருந்தது. சவாலான இந்த விஷயத்தை செய்ய ஆர்ட் டிரைக்ஷன், இசை, ஸ்டண்ட் என அனைத்திலும் சரியாக இருக்க வேண்டும். அந்த குழு சரியாக வேலையும் பார்த்தார்கள். படம் முடிந்ததும் அதை பிசினஸ் செய்ய வேண்டும் என்றபோது, சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து கால் வந்தது. அவர் படம் பார்த்துவிட்டு, ‘உங்கள் குழுவின் முயற்சிக்கு என்னால் ஆன சின்ன சப்போர்ட்’ என்று சொல்லிவிட்டு படத்தை வழங்குவதற்கு மிகவும் நன்றி. எனக்கு காளி வெங்கட்டை மிகவும் பிடிக்கும். அவருக்கும் தர்ஷன் பிரதருக்கும் மற்ற நடிகர்களுக்கும் நன்றி! பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் போல இந்த படத்திலும் எதிர்பாராததை எதிர்பாருங்கள். ஆகஸ்ட் 1 அன்று படம் வெளியாகிறது”.
எடிட்டர் நிஷார் ஷெரிஃப், “‘ஹவுஸ் மேட்ஸ்’ எனக்கு முதல் படம். முதல் படம் எப்போதுமே ஸ்பெஷல். இயக்குநர், நடிகர்கள் என எல்லோருமே எனக்கு நண்பர்கள் தான். தயாரிப்பாளர் விஜய பிரகாஷூக்கு நன்றி. எல்லாமே எங்களுக்கு செய்து கொடுத்தார். ஆகஸ்ட் 1 அன்று படம் வெளியாகிறது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.
ஒளிப்பதிவாளர் சதீஷ், “எனக்கும் இது முதல் படம். டிரெய்லரில் பார்த்ததை விட இன்னும் சிறப்பான பல விஷயங்கள் படத்தில் இருக்கிறது. ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வந்து படம் பாருங்கள். நன்றி”.
கலை இயக்குநர் ராகுல், ” ஒரு வெற்றி இன்னொரு வெற்றியை தேடி தரும் என்று சொல்வார்கள். அப்படித்தான் ‘பார்க்கிங்’ பட வெற்றி மூலம் இந்த பட வாய்ப்பு எனக்கு வந்தது. நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து இந்த படம் செய்து இருக்கிறோம். இதில் பணியாற்றியது மகிழ்ச்சி. படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்”.
நடிகர் அப்துல் லீ, “நான் இதற்கு முன்பு நடித்த ‘கேப்டன் மில்லர்’, ‘இரும்புத்திரை’ போன்ற படங்களில் என்னுடைய கேரக்டர் சின்னதாக இருந்தாலும் கதையின் போக்கை மாற்றும்படி முக்கியமானதாக இருக்கும். அது போன்ற ஒரு கதாபாத்திரம் தான் ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்திலும். பொதுவாக புதுமுக இயக்குநர்களுக்கும் எனக்கும் நல்ல ராசி இருக்கிறது. இந்த படம் நிறைய பேருக்கு முதல் படம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்! காளி வெங்கட் அண்ணா நான் நடிக்க நுழைந்த சமயத்தில் பெரிய இன்ஸ்பிரேஷன். தர்ஷனை எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும். எனக்கு நல்ல கேரக்டர் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.
நடிகை வினோதினி, ” இந்த நல்ல படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. இந்தப் படம் நல்ல படம் என்பதை மிகவும் நம்பிக்கையாக என்னால் சொல்ல முடியும். சக்திவேல் கிரியேட்டிவ் புரொடியூசர் ஆக இந்த படத்தில் வேலை பார்த்திருக்கிறார். நல்ல படங்களில் எப்போதும் அவருடைய பங்கு இருக்கும். இந்த சின்ன படத்தில் சிவகார்த்திகேயன் உள்ளே நுழைந்ததும் பெரிய படமாக மாறிவிட்டது. அவருக்கும் நன்றி. தர்ஷன், காளி வெங்கட் இருவரின் வளர்ச்சியும் பிரம்மிக்க வைக்கிறது. படம் வெளியானதும் நிச்சயம் அனைவரின் நடிப்பும் பாராட்டப்படும்”.
பாடலாசிரியர் மோகன் ராஜன், “‘குடும்பஸ்தன்’, ”டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்திற்குப் பிறகு இந்தப் படம் நன்றாக வந்திருக்கிறது. இந்த வருடத்தில் எனக்கு அமைந்த மற்றொரு நல்ல படம். சிவகார்த்திகேயன், தர்ஷன், காளி வெங்கட் இவர்கள் அனைவருடனும் பணிபுரிந்தது மகிழ்ச்சி. நிச்சயம் ‘ஹவுஸ்மேட்ஸ்’ உங்களால் மறக்க முடியாத படமாக இருக்கும்”.
இசையமைப்பாளர் ராஜேஷ் குமரேசன், “படத்தின் கதை கேட்டதும் உடனே ஒத்துக்கொண்டேன். நிச்சயம் படம் உங்களுக்கும் பிடிக்கும். திரையரங்குகளில் வந்து பாருங்கள்”.
புரொடியூசர் விஜய பிரகாஷ், “ராஜவேலும் நானும் கல்லூரி காலத்தில் இருந்தே நண்பர்கள். அப்போது சண்டை போட்டதில்லை. ஆனால், படம் எடுக்கும்போது நிறைய சண்டை போட்டோம். சக்திவேல் உள்ளே வந்ததும் டீம் செட் ஆகி படம் விறுவிறுப்பாக நடந்தது. அதன் பிறகு சாந்தி டாக்கீஸ் அருண் ப்ரோ பார்த்தார். பின்பு சிவகார்த்திகேயன் உள்ளே வந்தார். படத்திற்கு எல்லா விஷயங்களையும் பார்த்து செய்த சிவகார்த்திகேயன் & டீமுக்கு நன்றி. ஆகஸ்ட் 1 அன்று படம் வெளியாகிறது. உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை”.
இயக்குநர் ரவிக்குமார், “இந்தப் படத்தை பார்க்க SK நட்பு ரீதியில் அழைத்த போது சென்று பார்த்தேன். படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தபோது இயக்குநரிடம் வெற்றி படம் கொடுத்திருக்கிறீர்கள் என்று வாழ்த்தினேன். டிரெய்லரை விட படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கும். SK புரொடக்சன்ஸ் மூலமாக இந்தப் படத்தை வெளியிடுவது படக்குழுவினருக்கு எவ்வளவு சந்தோஷமான விஷயம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.
இயக்குநர் அஜய் ஞானமுத்து, “படம் பார்த்தது முடித்ததும் இயக்குநரை கட்டிப்பிடித்துக் கொண்டேன். வெற்றி படமாக இதைக் கொண்டு வந்திருக்கிறார்கள். படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்கள். நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். எஸ்கே புரொடக்க்ஷன் படத்தை வாங்கியுள்ளது என்பதே படத்தின் முதல் வெற்றி. படம் கண்டிப்பாக அடுத்த லெவல் சென்றிருக்கிறது”
SK புரொடக்சன்ஸ், இணைத் தயாரிப்பாளர் கலை அரசு, ” நல்ல கன்டென்ட் மற்றும் புது திறமையாளர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் இயங்கி வருகிறோம். அந்த வகையில் ‘கனா’ படத்தில் இருந்து ஆரம்பித்து இப்போது ‘ஹவுஸ் மேட்ஸ்’ எட்டாவது படமாக வெளியிட இருக்கிறோம். ஃபேமிலி என்டர்டர்டெயினராக படம் உருவாகி இருக்கிறது. படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.
நடிகை ஆர்ஷா பைஜூ, ” தமிழில் இது என்னுடைய முதல் படம். என்னை நம்பி இந்த கதாபாத்திரம் கொடுத்த ராஜவேல் அண்ணனுக்கு நன்றி. சிறப்பான குழுவோடு பணியாற்றி இருக்கிறேன். தர்ஷன் சிறந்த கோ- ஆக்டர். கடின உழைப்பாளி. காளி வெங்கட், வினோதினி போன்ற திறமை வாய்ந்த நடிகர்களுடன் நடித்தது மகிழ்ச்சி. உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை”.
இயக்குநர் ராஜவேல், ” இந்த படம் சாதாரணமாக தான் ஆரம்பித்தது. ஆனால், இவ்வளவு பெரிய மேடை இந்த படத்திற்கு அமைந்தது சிவகார்த்திகேயன் புரொடக்ஷன் தான். முதல் படம் எடுப்பது சவாலான விஷயம். எடுத்த படத்தை வெளியிடுவது இன்னும் சவாலானது. அதை SK புரொடக்க்ஷன் எளிமையாக செய்து கொடுத்தது. சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி. இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். நான் கஷ்டப்பட்ட சமயத்தில் கூட இருந்த விஜய்க்கு நன்றி. தர்ஷன், காளி வெங்கட், வினோதினி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தில் நிறைய சின்ன சின்ன சர்ப்ரைஸ் இருக்கிறது. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.
நடிகர் காளி வெங்கட், “எனக்கு மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும் இது முக்கியமான படமாக இருக்கும். என்னை நம்பி இந்தக் கதாபாத்திரம் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. படம் பார்த்துவிட்டு வாழ்த்திய சிவகார்த்திகேயன், கலை மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு. ஆகஸ்ட் 1 அன்று படம் பாருங்கள்”.
நடிகர் தர்ஷன், “இதுபோன்ற கதையில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தில் அமைந்திருக்கிறது. என்னை நம்பி இந்த கதாபாத்திரம் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. படக்குழுவினர் அனைவரும் கடினமாக உழைத்துள்ளனர். படத்தின் ஐடியா, திரைக்கதை இதெல்லாம் சிவகார்த்திகேயன் அண்ணாவுக்கு மிகவும் பிடித்தது. படத்தை பிரசண்ட் செய்ய ஒத்துக்கொண்டதற்கு அண்ணாவுக்கு நன்றி. டிரெய்லர் பார்த்துவிட்டு நிறைய பேர் ஹாரர் படமா என்று கேட்டார்கள். அதையும் தாண்டி என்கேஜிங்கான திரைக்கதையும் ஆச்சரியங்களும் கொண்ட ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படம் இது. காளி வெங்கட் அண்ணாவுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை கொடுங்கள்” என்றார்.
ராயல் சல்யூட். கதை சுருக்கம்…. நேர்மையானராணுவ வீரன் வீரன் சக்திவேல் எல்லைப் பகுதியில் மாட்டிக்கொள்கிறான். பாகிஸ்தான் ராணுவ வீரன் பக்ரு சக்திவேலை காப்பாற்றுகிறான். ஒரு சூழலில் இந்திய ராணுவ வீரர்கள் வசம் பக்ரு மாட்டிக்கொள்ள பாக்ருவை சுட்டுக்கொள்ள உயர் அதிகாரி சக்திவேலுக்கு உத்தரவிடுகிறார். சக்திவேல் தன்னை தானே சுட்டுக் கொள்கிறான். எழுத்து இயக்கம் ஜெய் சிவசேகர் விரைவில் சிறையில் ராயல் சல்யூட். மகிழ் மூவி மேக்கர் சார்பில் சிவ கணேஷ் தயாரிக்க இக்கதையை எழுதி இயக்குகிறார் ஜெய் சிவசேகர் இப்படத்தில் புதுமுகங்கள் பிரதீப் யுவராஜ் சுபாஷ் சிம்பு அவரது எம்ஜிஆர் இன்பா ஜனனி ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் போர் காட்சிகளை மிக நேர்த்தியாக கணேஷ் முத்தையா ஒளிப்பதி செய்துள்ளார் இசை ஜெய் கிஷன் எடிட்டிங் ஆர் கே விஜய் பாடல்கள் ஜெய் சிவசேகர்
“18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான சீரிஸாக ZEE5ல் 2025 ஜூலை 18 ல் வெளியான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது.
உணர்வுப்பூர்வமான கதையுடன், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இந்த சீரிஸ் மக்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்து, வெளியான வேகத்தில் ZEE5ல் 51 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வினில்
“18 கிரியேட்டர்ஸ்” சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் பேசியதாவது…
எல்லோருக்குமே மிகப்பெரிய நன்றி. உங்களால் தான் இந்த சீரிஸ் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. நீங்கள் தான் இந்த சீரிஸை மக்களிடம் கொண்டு சேர்த்தீர்கள். என் கணவர் பிரபாகரன் தான் இதன் தயாரிப்பாளர், ஆனால் என் பெயர் போட்டு என்னை தயாரிப்பாளர் ஆக்கிவிட்டார். இந்த சீரிஸ் நடந்த போது பல கஷ்டங்கள் வந்தது. ஆனால் அதையெல்லாம் சமாளித்து, இரவு பகல் தூங்காமல் அவர் கஷ்டப்பட்டதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். சினிமா மீது உள்ள ஆசையில் அதில் சாதிக்க வேண்டும் என்ற வெறியில் இருந்தார். பல அவமானங்களைச் சந்தித்துள்ளார். ஆனால் அவர் கடின உழைப்பு இப்போது வெற்றி பெற்றிருக்கிறது. அவருக்கான அங்கீகாரமாக இந்த வெற்றி கிடைத்துள்ளது. இது மாதிரி தொடர்ந்து பல படைப்புகளை தயாரிக்க வேண்டும். இந்த குழுவில் எல்லோருமே கடின உழைப்பை தந்துள்ளார்கள். சரவணன் சார் அசத்திவிட்டார். நம்ரிதா எங்கள் அழகி, க்யூட்டான ஹீரோயின், புராஜக்டுக்கான தேவை என்னவாக இருந்தாலும் தயங்காமல் செய்வார். ஆர்ட் டைரக்டர், மியூசிக் டைரக்டர், எடிட்டர் என எல்லோரும் சிறப்பாக செய்துள்ளீர்கள். கேப்டன் பாலாஜி செல்வராஜ் சிறப்பான படைப்பைத் தந்துள்ளார். அவர் புரடியூசருக்கான டைரக்டர். 14 நாட்களில் படப்பிடிப்பை முடித்தார். அவர் கடின உழைப்பாளி. இவர்களின் உழைப்புக்கான பலன் தான் இந்த வெற்றி. இந்த வெற்றியை மக்களிடம் சேர்த்த ZEE5க்கு நன்றி. பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி.
“18 கிரியேட்டர்ஸ்” சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் பேசியதாவது… எங்கள் டீம், சரவணன் அண்ணன், இந்த முழு வெப் சீரிஸை, எங்கேயோ எடுத்துச் சென்றுவிட்டார்கள். இப்போது தெலுங்கு இந்தியிலும் இது டப்பாகி கொண்டிருக்கிறது. சரவணன் அண்ணன் நாங்கள் கேட்டதை விடப் பல மடங்கு செய்து தந்துவிட்டார் நன்றி. நம்ரிதா அருமையாகச் செய்துவிட்டார். ஆர்ட் டைரக்டர் பாவனா இதில் ஒரு செட் கூட செட் எனச் சொல்ல முடியாத படி, அருமையாகச் செய்துள்ளார். இயக்குநர் பாலாஜியும் நானும் நிறையச் சண்டை போட்டிருக்கிறோம். ஆனால் 14 நாட்களில் மொத்த சீரிஸையும் முடித்துத் தந்தார். அந்தளவு கடினமான உழைப்பாளி. மியூசிக் டைரக்டர் நீங்கள் தந்த இசைக்கு நன்றி. இந்த சீரிஸுற்கு முழுக்காரணமாக இருந்த என் மனைவிக்கு நன்றி. நான் சினிமா ஆசையில் வந்தவன். இந்த வெற்றிக்கு ஆதரவாக இருந்த ZEE5க்கு நன்றி. சின்னதாக ஆரம்பித்ததை மிகப்பெரிய படைப்பாக மாற்றிய பத்திரிக்கை ஊடக நண்பர்க்கு நன்றி.
நடிகர் சரவணன் பேசியதாவது… எல்லோருக்கும் வணக்கம், சட்டமும் நீதியும் இவ்வளவு உயரம் சென்றதற்கு காரணமான பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. 90 களில் நான் ஹீரோவாக வந்த போது, அத்தனை பத்திரிக்கையாளர்களும் மிகப்பெரிய ஆதரவு தந்தார்கள். இந்த சீரிஸ் வெற்றிபெற்ற பிறகும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பிரபாகரனுக்கு அவர் மனைவிக்கும் என் நன்றி. என்னுடன் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இப்போது தெலுங்கிலும் இது டாப்பாகி கொண்டிருப்பது மகிழ்ச்சி. இந்த வெற்றிக்கு காரணமான பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு மீண்டும் நன்றி.
இயக்குநர் பாலாஜி செல்வராஜ் பேசியதாவது… பத்திரிக்கை சினிமா ஊடகங்களுக்கு நன்றி. சூரி அண்ணா தான் இந்தக் கதையை எடுத்துத் தந்து, இந்த வாய்ப்பை வாங்கித் தந்தார். தயாரிப்பாளர் பிரபாகரன், சசிகலா பிரபாகரன் இருவரும் இந்த சீரிஸிற்காக அவ்வளவு உழைத்துள்ளார்கள். சரவணன் சார் அவரை கம்படபிளாக வைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்தோம், ஆனால் அவர் தான் எங்களை பார்த்துக்கொண்டார் அவருக்கு நன்றி. நம்ரிதா அருமையாக நடித்துத் தந்தார். என் நண்பர் கேமராமேன் கோகுல், இசையமைப்பாளர், எடிட்டர் எல்லோருக்கும் நன்றி, இந்த படைப்பை வெற்றியாக்கித் தந்த அனைவருக்கும் நன்றி.
நடிகை நம்ரிதா பேசியதாவது.., மீடியா நண்பர்களுக்கு நன்றி. இதை நல்ல அனுபவமாக மாற்றியது நீங்கள் தான். எங்களுக்கு ஆதரவு தந்த கௌஷிக் சாருக்கு நன்றி. பாலாஜி சார் இதை அருமையாக எடுத்ததற்கு நன்றி. பிரபாகர் சார் இப்போது வரை உழைத்துக் கொண்டுள்ளார். சரவணன் சார் மிகச்சிறந்த மனிதர் அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. எங்களுடன் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. எல்லோருக்கும் நன்றி.
காஸ்ட்யூம் டிசைனர் மரியா பேசியதாவது.., அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவு இல்லையென்றால் இவ்வளவு தூரம் நாங்கள் வந்திருக்க முடியாது. என்னை நம்பி இந்த வாய்ப்பு தந்த சசிகலா மற்றும் பிரபாகரன், இயக்குநர் பாலாஜி ஆகியோருக்கு நன்றி
ஆர்ட் டைரக்டர் பாவனா பேசியதாவது.., என்னை நம்பி இந்த வாய்ப்பு தந்த இயக்குநர் பாலாஜிக்கு நன்றி. தயாரிப்பாளர் சசிகலா மற்றும் பிரபாகரன் ஆகியோருக்கு நன்றி. என் குருவுக்கு நன்றி. பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி
எடிட்டர் ராவணன் பேசியதாவது.., என்னை நம்பிய இயக்குநர் பாலாஜிக்கு நன்றி. தயாரிப்பாளர் சசிகலா மற்றும் பிரபாகரன் ஆகியோருக்கு நன்றி. நல்ல சீரிஸை பாராட்டிய பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி.
இசையமைப்பாளர் விபின் பாஸ்கர் பேசியதாவது.., என் குரு ஜேம்ஸ் வசந்தன் சாருக்கு நன்றி. இந்த சீரிஸ் வேலை பார்த்தது அற்புதமான அனுபவம், எங்களுக்கு முழு ஆதரவு தந்த கௌஷிக் சாருக்கு நன்றி. சரவணன் சார், நம்ரிதா கலக்கி விட்டார்கள். தயாரிப்பாளர் பிரபாகரன் சாருக்கு நன்றி. என் நண்பர் இயக்குநர் பாலாஜிக்கு நன்றி.
ஒளிப்பதிவாளர் கோகுலகிருஷ்ணன் பேசியதாவது.., இந்த புராஜக்ட் எங்கள் மனதுக்கு நெருக்கமானது. இதை இவ்வளவு பெரிய வெற்றியாக மாற்றித் தந்த பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி.
நடிகர் அரோல் D சங்கர் பேசியதாவது.., விடியும் முன் படத்திலிருந்து இயக்குநர் பாலாஜியைத் தெரியும். அங்கு ஆரம்பித்த பயணம், இங்கு வரை வந்தது மகிழ்ச்சி. பிரபாகரன் அவரை முதலில் அஸிஸ்டெண்ட் என நினைத்தேன். அண்ணா அண்ணா என அழைப்பா,ர் அவர் தான் தயாரிப்பாளர் என்றவுடன் நான் சார் என அழைக்க ஆரம்பித்துவிட்டேன். கடினமான உழைப்பாளி. நல்ல நடிகராக வரக்கூடியவர். நம்ரிதா ஹீரோயின் போலவே இருக்க மாட்டார். இயல்பாக இருப்பார். அழகாக நடித்துள்ளார். சரவணன் சார் இது பத்தாது, இன்னும் பெரிய அளவில் உங்களிடம் சண்டை போட வேண்டும், இன்னும் பல படங்கள் செய்ய வேண்டும். இந்த சீரிஸை பாராட்டி மக்களிடம் சேர்த்த பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி.
நடிகர் குப்புசாமி பேசியதாவது… எல்லோருக்கும் வணக்கம், நான் நிறைய படங்களில் நடித்துள்ளேன், நான் நடிச்ச படங்கள் ரிலீஸாகது, ரிலீஸானால் ஓடாது. நான் முதலில் நடித்த படம் சட்டம் என் கையில், 34 வருட உழைப்புக்குப் பலனாக இந்த வெற்றி வந்துள்ளது. சட்டமும் நீதியும் எனக்கான திருப்புமுனையாக அமைந்துள்ளது. சூரி அண்ணா இயக்குநர் பாலாஜி சார் சொல்லிக்கொடுத்து சொல்லிக்கொடுத்து என்னை இந்த கேரக்டரில் நடிக்க வைத்தார்கள். மக்கள் என்னை அடையாளம் கண்டுகொள்வது பெரும் மகிழ்ச்சி. இந்த வெற்றிக்குத் துணையிருந்த அனைவருக்கும் நன்றி.
நடிகர் சௌந்தர் பேசியதாவது… தயாரிப்பாளர் பிரபாகரன் என் மச்சான். நான் அவனை சினிமாவுக்கு வராதே என பலமுறை சொல்லி, சண்டை போட்டுள்ளேன். ஆனால் கேட்க மாட்டான். பிடிவாதமானவன், இந்த வெற்றி அவனது உழைப்பால் வந்தது. அவன் லட்சியம் மீது அவனுக்கு இருந்த வெறி தான் அவனை இங்கு கொண்டு வந்துள்ளது. இந்த சீரிஸை சின்ன பட்ஜெட்டில் எடுத்து, அதை அதற்கு அதிகமாக விளம்பரம் செய்து ஜெயித்திருக்கிறான். அவனுக்கு வாழ்த்துக்கள். இந்த சீரிஸை எடுத்துத் தந்த குழுவிற்கு வாழ்த்துக்கள். சரவணன் சித்தப்பு இந்த சீரிஸிற்கு முழு பலமாக இருந்துள்ளார். அவருக்கு நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
சட்டமும் நீதியும் சீரிஸில் நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்த சீரிஸ் மூலம் ஹீரோவாக திரும்பியிருக்கிறார் சரவணன்.
சட்டமும் நீதியும் சீரிஸ் “குரலற்றவர்களின் குரல்” எனும் கருத்திலிருந்து உருவாகியுள்ளது. நம்மைச் சுற்றியுள்ள பலர் தங்களது குரலை வெளிப்படுத்த முடியாமல் அமைதியாக இருக்கும்போது, அந்த அமைதியை உடைத்து, தனது உரிமைக்கும் மற்றொருவரின் நலனிற்காகவும் நிற்கும் ஒரு சாதாரண மனிதரின் கதைதான் இது.
சட்டமும் நீதியும் சீரிஸை ZEE5 தளத்தில் பிரத்தியேகமாகக் கண்டுகளியுங்கள்.
ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் ஆன்மீக திரைப்படம் “ ராகு கேது “ !!
தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை.பாலசுந்தரம் இயக்கத்தில், தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “ராகு கேது”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழின் புகழ்மிகு இயக்குநர் திரு.A.P.நாகராஜன் அவர்களுக்கு பிறகு, நம் புராணத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. தமிழில் சாமி படங்களும் புராண படங்களும் வரவில்ல எனும் ஏக்கத்தை போக்கும் வகையில் இப்படம் ஆன்மிக ரசிகர்களை மகிழ்விக்கு அருமைமிகு படைப்பாக உருவாகியுள்ளது.
ராகுகேது உருவான வரலாறு, அவர்கள் மனித வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை அற்புதமான கதையாக இப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் நடிகர் சமுத்திரகனி சிவனாகவும், கஸ்தூரி மேடம் துர்கையாகவும், விக்னேஷ் மகாவிஷ்ணுவாகவும் நடித்துள்ளனர். மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தினை அனைத்து வயதினரும் பார்த்து ரசிக்கும் வகையில் U சான்று வழங்கப்பட்டுள்ளது.
கதை, வசனம், பாடல்கள் எழுதியுள்ளார் கலைமாமணி K.P.அறிவானந்தம். இயக்குந்ர தமிழ்மாமணி துரை.பாலசுந்தரம் இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் சாந்தி பாலசுந்தரம் தமிழரசன் தியேட்டர் சார்பில் தயாரிக்க, S.ஆனந்த், v.உமாதேவி இணை தயாரிப்பு செய்துள்ளனர்.
தொழில் நுட்ப குழுவில் மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் பரணிதரன் பின்னணி இசையமைத்துள்ளார், கிட்டாரிஸ்ட் சதானந்தம் மூன்று பாட்டுகளுக்கு இசை அமைத்துள்ளார், எடிட்டிங் பணிகளை B.லெனின் மேற்கொண்டுள்ளனர்.
இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வரும் ஆகஸ்ட் மாதம் 8 தேதி வெளியாகிறது.
National Crush Rashmika Mandanna is all set to headline a power-packed, female-centric action entertainer titled Mysaa, which marks the directorial debut of Rawindra Pulle. The film has already generated significant buzz with its intriguing title and striking first-look poster. Produced by Unformula Films, Mysaa is being mounted on a grand Pan-India scale with a high budget.
The film was officially launched today in a grand manner with a traditional pooja ceremony, attended by the core team. While Suresh Babu sounded the clapboard, Ravi Kiran Kola switched on the camera. Hanu Raghavapudi who handed over the script to the makers has also done the honorary direction for the muhurtham shot. The regular shoot of the movie commences tomorrow in Hyderabad, with Rashmika joining the team in the first schedule.
Mysaa promises to be a high-octane emotional action thriller that ventures deep into the culturally rich and captivating world of the Gond tribes. Rashmika Mandanna will be seen in a completely transformative and never-seen-before avatar, portraying a Gond woman with fierce intensity and emotional depth.
Unformula FIlms has so far revealed that the magic behind the lens will be handled by Shreyaas P Krishna, who recently worked on Suriya’s Retro and the stunts will be choreographed by Andy Long, known for his work on Kalki 2898 AD. We are awaiting to see what’s in store on the other technicians as the production house plans big surprises – starting with the reveal of the music director next.
Cast: Rashmika Mandanna
Technical Crew: Writer, Director: Rawindra Pulle Producers: Unformula Films DoP: Shreyaas P Krishna Stunts: Andy Long PRO: Sathishkumar S2 Media
Unformula Films தயாரிப்பில், ராஷ்மிகா மந்தனா, ரவீந்திர புள்ளே, இணையும் பான் இந்தியா திரைப்படமான “மைசா” பிரமாண்டமாக துவங்கியது!! இப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது.
நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய ஹீரோயின் சென்ட்ரிக் திரைப்படமான “மைசா” அதிகாரப்பூர்வமாக துவங்கியது. ரவீந்திர புள்ளே இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படம், சுவாரஸ்யமான டைட்டில் மற்றும் கவர்ச்சிகரமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Unformula Films தயாரிப்பில், “மைசா” பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமான பான்-இந்தியப் படமாக தயாராகி வருகிறது.
இந்தப் படம் இன்று பாரம்பரிய பூஜையுடன் பிரமாண்டமாகத் தொடங்கப்பட்டது, இதில் படத்தின் முக்கியக் குழுவினர் கலந்து கொண்டனர். சுரேஷ் பாபு கிளாப் போர்டு அடிக்க, ரவி கிரண் கோலா கேமராவை இயக்கினார். ஸ்கிரிப்டை தயாரிப்பாளர்களிடம் ஒப்படைத்த ஹனு ராகவபுடி, முஹூர்த்த ஷாட்டுக்கு கௌரவ இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். படத்தின் வழக்கமான படப்பிடிப்பு நாளை ஹைதராபாத்தில் தொடங்குகிறது, முதல் கட்டமாக ராஷ்மிகா படக்குழுவுடன் படப்பிடிப்பில் இணைகிறார்.
கோண்ட் பழங்குடியினரின் கலாச்சார பின்னணியில் வளமான மற்றும் வசீகரிக்கும் உலகில், ஆழமான கதையுடன் ஆக்சன் நிரம்பிய உணர்ச்சிபூர்வமான அதிரடி திரில்லராக “மைசா” உருவாகிறது. ராஷ்மிகா மந்தனா முற்றிலும் மாறுபட்ட, இதுவரை தோன்றியிராத அவதாரத்தில், அழுத்தமான மற்றும் உணர்ச்சி ஆழம் கொண்ட பெண்ணாக நடிக்கிறார்.
இப்படத்தில், சூர்யாவின் ரெட்ரோ படத்தில் பணியாற்றிய ஷ்ரேயாஸ் P. கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார் என்றும், சண்டைக்காட்சிகளை கல்கி 2898 AD-யில் பணியாற்றி புகழ்பெற்ற ஆண்டி லாங் அமைக்கிறார் என்றும் Unformula FIlms நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இசையமைப்பாளர் முதல் அடுத்தடுத்த கலைஞர்கள் குறித்து பெரிய ஆச்சரியங்களை அளிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் மற்ற தொழில்நுட்ப வல்லுநர்களைப் பற்றி அறிய ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
நடிகை: ராஷ்மிகா மந்தனா
திரைப்படக்குழு:
இயக்குநர், எழுத்தாளர்: ரவீந்திர புள்ளே ஒளிப்பதிவு : ஷ்ரேயாஸ் P கிருஷ்ணா சண்டைக்காட்சிகள்: ஆண்டி லாங் தயாரிப்பாளர்கள்: அஜய் & அனில் சாய்யபுரெட்டி இணை தயாரிப்பாளர்: சாய் கோபா தயாரிப்பு நிறுவனம்: Unformula Films மக்கள் தொடர்பு: சதீஷ்குமார் S2 Media
Give her any role, and she transforms it with soulful intensity, Bindu Madhavi is undeniably a gifted performer who invests deeply in her craft. Known for her inclination toward unique and challenging roles, the actress is now garnering praise from the entire Blackmail team for her powerful performance. With the film set to hit screens worldwide on August 1, 2025, Bindu Madhavi opens up about her experience working on the project.
“Every artiste seeks that breakthrough moment in their career,” says Bindu Madhavi. “For female actors especially, roles often fall into repetitive patterns. So, when director Mu. Maaran narrated the script of Blackmail, I felt an instant connection. It was the kind of role I had been waiting for, one that offered depth and scope to truly perform. The way he envisioned my character gave me a great sense of responsibility. I play a pivotal role with scenes alongside almost every lead character. It was wonderful to share screen space with actors like GV Prakash Kumar, who brings such nuance and intensity to his performance. Teju Ashwini, Srikanth, and the rest of the cast have all done remarkable work. IYou won’t blink! Blackmail is that intense with perfect blend of thrill, emotion, and entertainment, thanks to Mu. Maaran’s gripping narration.”
The film is written and directed by Mu. Maran, known for his sharp and gripping storytelling. Blackmail is produced by Deivakani Amalraj and presented by Jayakkodi Amalraj of JDS Film Factory. The film features musical score by Sam CS, cinematography by Gokul Benoy and editing by San Lokesh. The others in the technical crew include SJ Ram (Art), Rajasekar (Stunts), Baba Bhaskar & Sai Bharathi (Choreography), Sam CS, Eknath & Karthik Netha (Lyrics), and Suresh Chandra-Abdul Nassar (PRO).
“கண்களை இமைக்கக்கூட நேரம் இருக்காது ! ‘பிளாக்மெயில்’ ஒரு பரபரப்பான, உணர்வுப்பூர்வமான, முழுமையான பொழுதுபோக்கு படைப்பு!” – நடிகை பிந்து மாதவி
எந்த கதாபாத்திரம் குடுத்தாலும் , அதை தனது ஆழமான உணர்வால் உயிரோட்டமுடன் பதிவு செய்யும் நடிகை பிந்து மாதவி, தனது திறமையை நிரூபித்துவிட்டவர். எப்போதுமே சவாலான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் பிந்து மாதவி, தற்போது பிளாக்மெயில் பட குழுவிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்துவருகிறது. ஆகஸ்ட் 1, 2025 அன்று உலகமெங்கும் திரையிடப்பட உள்ள இந்த படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி பிந்து மாதவி மனம் திறந்து பேசுகிறார்.
“ஒவ்வொரு கலைஞனும் தனது வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் தருணத்தை தேடிக்கொண்டே இருப்பார்,” என்கிறார் பிந்து மாதவி. “பெண்கள் தங்களுக்குரிய தனிப்பட்ட இடத்தை பெறுவதற்காக தொடர்ந்து சவால்களை எதிர்கொள்கிறார்கள். ஆனால் இயக்குநர் மு. மாரன் பிளாக்மெயில் கதையை விவரித்த நேரத்தில், அது என்னுடன் உடனடியாக ஒரு இணைப்பை ஏற்படுத்தியது. இது எனக்காகவே காத்திருந்த ஒரு கதாபாத்திரம் போல உணர்ந்தேன் , உணர்வும் ஆழமும் கலந்து அவர் உருவாக்கிய என் கதாபாத்திரம் எனக்கு ஒரு பெரிய பொறுப்பையும் தந்தது. முக்கியமான பல கதாபாத்திரங்களுடன் இணைந்து எனது காட்சிகள் வந்திருக்கின்றன. ஜி.வி. பிரகாஷ்குமார் போன்ற அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகருடன் பணியாற்றிய அனுபவம் அருமை. தேஜு அஸ்வினி, ஸ்ரிகாந்த் மற்றும் மற்ற நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். நீங்கள் கண்களை இமைக்கவே மாட்டீர்கள்! இது ஒரு அதிரடித் திரில்லர், உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம். இவை அனைத்துக்கும் காரணம் மு. மாரனின் பதற்றமூட்டும் கதைச்சொல்லல்!”
பிளாக்மெயில் படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கம் – மு. மாரனின் படைப்பு. இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார் தெய்வகனி அமல்ராஜ், மற்றும் ஜே.டி.எஸ் பிலிம் பேக்டரியின் சார்பாக ஜெயக்கொடி அமல்ராஜ் பெருமையுடன் வழங்குகிறார்கள். படத்துக்கு இசை அமைத்திருக்கிறார் சாம் சிஎஸ், ஒளிப்பதிவாளர் கோகுல் பெனாய், படத் தொகுப்பு சான் லோகேஷ். மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள்: எஸ்.ஜே. ராம் (அரங்க அமைப்பு), ராஜசேகர் (சண்டைப் பயிற்சி), பாபா பாஸ்கர் & சாய் பாரதி (நடனம்), சாம் சிஎஸ், ஏகநாத் மற்றும் கார்த்திக் நேதா (பாடல் வரிகள்), சுரேஷ் சந்திரா – அப்துல் நஸார் (PRO).
Hari Hara Veera Mallu – A Powerful Period Adventure with a Mass Touch
Hari Hara Veera Mallu is a grand and gripping period action film that brings a refreshing mix of history, heroism, and heart. Power Star Pawan Kalyan shines in a powerful avatar, portraying Veera Mallu, a legendary outlaw who takes on a mighty empire. His screen presence, intense dialogues, and powerful action scenes are a treat for fans.
The film beautifully blends fiction with historical references, keeping the audience engaged throughout. The visuals are stunning, the sets give a real feel of the Mughal era, and the background music adds energy to every moment. Director Krish deserves credit for presenting a unique story with such grandeur.
Nidhhi Agerwal plays her role gracefully, and her chemistry with Pawan Kalyan adds charm to the film. Arjun Rampal as Aurangzeb brings in intensity, making the conflict all the more gripping.
The action sequences, especially the ones involving swords and horseback chases, are thrilling and well-choreographed. The film also has emotional depth, highlighting themes of courage, justice, and rebellion.
Overall, Hari Hara Veera Mallu is a well-crafted film with mass appeal and a strong message. It’s a must-watch for those who love action, history, and powerful performances. Pawan Kalyan fans will definitely celebrate this one!
Mahavatar Narsimha – A Powerful Spiritual Journey on Screen
Mahavatar Narsimha is not just a movie – it’s an experience that deeply connects the viewer to India’s spiritual roots. The film beautifully blends mythology with devotion, bringing to life the essence of divine power and protection.
The portrayal of Lord Narsimha, known for saving Prahlad from the evil Hiranyakashipu, is both majestic and moving. The visuals, costumes, and background score all elevate the divine atmosphere. The makers have taken great care to ensure the story remains respectful to the ancient texts while still being engaging for modern viewers.
The performances are sincere, especially in emotional scenes where faith overcomes fear. The dialogues are written with reverence, and the narrative keeps you connected throughout.
What stands out the most is the message of faith, courage, and the victory of good over evil – something we all need to be reminded of today.
This movie is a must-watch for those who seek spiritual content, cultural pride, or simply a meaningful cinematic experience.
Few actors garner an extraordinary fan base beyond the screen, inspiring and instilling confidence in many. Pradeep Ranganathan has sparked such a revolutionary wave among youngsters, earning him unconditional love and support from the audience. He isn’t just a ‘Dude’ to fans but has become a bankable name within the trade and industry, quickly gaining recognition as a profitable star.
From reaching box office heights with two films, Love Today and Dragon, the director-turned-actor has touched the pinnacle of stardom. While a festival release by the third outing remains a far-fetched dream for many actors, Pradeep has secured that milestone effortlessly. Mythri Movie Makers have officially announced the release of Dude for the festive occasion of Diwali.
As the acclaimed star celebrates his birthday, Mythri Movie Makers unveiled a special look of Pradeep Ranganathan and extended their wishes. Producers Naveen Yerneni and Y. Ravi Shankar, key players in the Indian film production arena known for collaborations with top-tier stars like Ajith Kumar, are now backing Pradeep’s film. They affirm that his popularity has transcended regional boundaries, with business inquiries for Dude beginning right from the day of the pooja ceremony and launch.
Dude is a fun-filled rom-com slated for release during Diwali 2025. Directed by debutant Keerthiswaran, the film stars Mamitha Baiju as the female lead, with Sarath Kumar playing a pivotal role alongside several other prominent actors. Sai Abhyankkar, the latest musical sensation, is composing the music, while Niketh Bommi handles cinematography. National Award-winning Poornima Ramasamy is on costume design, Latha Naidu is the production designer, and Barath Vikraman is overseeing editing.