- Advertisement -
Home Blog Page 144

இன்றைய நவீன உலக கலையின் புது வடிவம் இந்த புதிய அம்பிகாபதி திரைப்படம் – ஈரோஸ் நிறுவனம் விளக்கம் !!

0

தனுஷ் நடிப்பில் வரும் 2025 ஆகஸ்ட் 1ம் தேதி, புதிய பதிப்பாக மீண்டும் திரைக்கு வரவுள்ளது அம்பிகாபதி திரைப்படம்.
இத்திரைப்படத்தின் புதிய கிளைமாக்ஸ் காட்சிகளுக்கு இயக்குநர் ஆனந்த் எல் ராய் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஈரோஸ் நிறுவனம் இந்த புதிய பதிப்பு முந்தைய படைப்பின் மாற்றமல்ல, கலையின் புது வடிவம் மட்டுமே என விளக்கமளித்துள்ளது.

இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் மற்றும் சோனம் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தினை UPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED நிறுவனம், புத்தம் புதிய நவீன தொழில் நுட்பத்துடன், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் சில பகுதிகளை மாற்றி வரும் 2025 ஆகஸ்ட் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியிடவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பத்திரிக்கை பேட்டியில் இயக்குநர் ஆனந்த் எல். ராய், அம்பிகாபதி திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “கடந்த கால படைப்புகளை மாற்றக் கூடாது. அவை அப்படியே இருக்க வேண்டும்” AI மூலமாக ஒரு கடந்த கால படைப்பின் முடிவை மாற்றுவது என்பது, அப்படைப்பின் உண்மையான ஆன்மாவைச் சிதைப்பதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள Eros Media World குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரதீப் திவேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“‘அம்பிகாபதி’ (Raanjhanaa) திரைப்படத்தின் முழுமையான பதிப்புரிமை மற்றும் தயாரிப்பு உரிமை எங்கள் நிறுவனத்திடம் உள்ளது. அதனால், நாங்கள் சட்டப்பூர்வமாகவும் ஒழுங்கு நெறிப்பூர்வமாகவும், இதைப் புதுப்பித்து வெளியிட அதிகாரம் பெற்றுள்ளோம்.

முன்னோடியான தொழில்நுட்பமான ஜெனரேட்டிவ் AI கருவிகள் மூலம், படத்தின் சில அம்சங்களைப் புதுப்பித்து, புதிய பார்வையாளர்களைச் சென்றடையும் வகையில், ஒரே நேரத்தில் அந்த படத்தின் கலையுணர்வையும் பாதுகாக்கும் நோக்கத்தில் மட்டுமே இந்த முயற்சி செய்யப்பட்டுள்ளது.

இது ‘புதிய பதிப்பாக’ தனியாகவும், தெளிவாகவும் குறியிடப்பட்டுள்ளது – இது அடிப்படை படைப்பின் மாற்றமல்ல, ஒட்டுமொத்தத்தை மாற்றுவதுமல்ல. இது ஒரு கலையின் புதிய வடிவம்.

உலக சினிமாவில் இது போன்ற மாற்றுப் பதிப்புகள், director’s cut, anniversary editions போன்றவை வழக்கமாகவே உள்ளன. அதேபோல், இது கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் முயற்சியாகவும், புதிய தொழில்நுட்பங்களைக் கலையுடன் இணைக்கும் முயற்சியாகவும் பார்க்க வேண்டும்.”

திரையரங்குகளுக்கு வந்த போதே மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படம் தற்போது பல புதுமைகளுடன் புதிய க்ளைமாக்ஸுடன் வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் வரும் தேதியை நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அம்பிகாபதி திரைப்படம் 2025 ஆகஸ்ட் 1 அன்று மீண்டும் திரையிடப்படுகிறது.

கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு ‘கேப்டன் பிரபாகரன்’ ரீ ரிலீஸ் தேதி அறிவிப்பு

0

ஆகஸ்ட் 22-ல் நவீன தொழில்நுட்பத்தில் ரீ ரிலீஸாகும் ‘கேப்டன் பிரபாகரன்’

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டில் வெளியான இந்த படம் கேப்டன் ரசிகர்களை மட்டுமல்ல அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. வாழ்நாள் முழுவதும் மக்கள் அவரை அன்புடன் அழைக்கும் ‘கேப்டன்’ என்கிற ஒரு அற்புதமான பெயரையும் அவருக்கு பெற்று தந்தது..

‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் வெளியாகி 34 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது நவீன 4K தொழில்நுட்பங்களுடன் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு புது வடிவம் பெற்று, வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

தமிழகமெங்கும் சுமார் 500 திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.. ஸ்பேரோ சினிமாஸ் (Sparrow Cinemas) சார்பாக கார்த்திக் வெங்கடேசன் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார்..

கேப்டன் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று (ஆகஸ்ட் 24) காலை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமைக்கழக அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ஆர்.கே செல்வமணி, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக பொருளாளர் எல்.கே சுதீஷ், இயக்குனர்கள் விக்ரமன், ஆர்.வி.உதயகுமார், அரவிந்த்ராஜ் மற்றும் பேரரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்படத்தை வெளியிடும் ஸ்பேரோ சினிமாஸ் நிறுவனம், கேப்டனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த நிகழ்வில் கலந்து கொண்ட 1500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிறப்பான மதிய உணவை ஏற்பாடு செய்திருந்தனர்.

கேப்டன் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருந்தார். சரத்குமார், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், காந்திமதி என பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Director NT. Nantha Amazes with a Fully AI-Created Music Video Album!

0

Director NT. Nantha, who garnered attention for his film Valla Desam, has once again surprised audiences—this time by creating a complete music video album using Artificial Intelligence. Every frame of the video, including the characters, has been brought to life using CG and AI, making it a one-of-a-kind artistic achievement in Tamil music.

A multifaceted talent, NT. Nantha has previously worked as a director, screenwriter, and cinematographer. Now, he adds music composer to his creative arsenal, proving once again that his artistry knows no boundaries.

From a young age, Nantha was deeply passionate about cinema and determined to succeed in the industry. To strengthen his creative foundation, he pursued studies in Film Production, Sound Engineering, and AI-driven Music Technology at Westminster College in London and trained with several notable production houses.

He made his Tamil film industry debut with the action-thriller Valla Desam in 2017, a film that earned widespread praise. Nantha wore multiple hats in that project, taking on the roles of director, screenwriter, dialogue writer, and cinematographer, showcasing his versatile skill set.

Now, in a bold and innovative move, he has written the lyrics, composed the music, and crafted the entire visual narrative using AI technology—without involving a single human performer.

The music video titled “En Uyirin Osai Neeye” (You Are the Echo of My Soul) is a deeply emotional track told from a woman’s perspective, exploring the longing, pain, and joy of love in a visually poetic way.

The Tamil lyrics were penned by acclaimed poet Seerkazhi Sirpi, adding rich emotional depth to the song. A slightly altered English version of the track is also available under the title “You Live Only Once.”

Released today, the song is already receiving widespread appreciation from both music lovers and cinema enthusiasts for its emotional depth and technical innovation.

Meanwhile, NT. Nantha is currently directing his next feature film titled “120 Hours”, which is scheduled for release in December 2025.

ஏஐ மூலம் ஒரு முழு இசை வீடியோ ஆல்பத்தை உருவாக்கி அசத்தியிருக்கிறார் இயக்குநர் என்.டி. நந்தா !!

ஏஐ மூலம் உருவான வீடியோ பாடல், ஆச்சரியப்படுத்திய இயக்குநர் என்.டி. நந்தா !!

வல்ல தேசம் படம் கவனம் ஈர்த்த இயக்குநர் என்.டி. நந்தா, புதுமையான முறையில் ஏஐ மூலம் ஒரு முழு இசை வீடியோ ஆல்பம் பாடலை, உருவாக்கி அசத்தியிருக்கிறார்.

இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் என பன்முக திறமை கொண்ட இவர் இப்போது, இசையமைப்பாளராகவும் களமிறங்கி அசத்தியிருக்கிறார்.

சிறு வயது முதலே சினிமா துறை மீது காதல் கொண்டு அதில் சாதிக்க வேண்டும் என இயங்கி வரும் நந்தா தனது படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் கல்லூரி மற்றும் பல முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் திரைப்படத் தயாரிப்பு, சவுண்ட் என்ஜினியரிங், மற்றும் மியூசிக் டெக்னாலஜி ஏஐ ஆகிய துறைகளில் கல்வி பயின்றுள்ளார்.

தமிழ் திரைப்படத்துறையில் இயக்குநராகத் திரையுலகுக்கு அறிமுகமான இவர், 2017-ல் வெளிவந்த “வல்ல தேசம்” எனும் அதிரடித் திரில்லர் திரைப்படத்தின் மூலம் பரவலான பாராட்டுகளைப் பெற்றார். இந்த படத்தில் அவர் இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் ஒளிப்பதிவாளர் (DoP) எனப் பல பொறுப்புகளை ஏற்று தனது பன்முகத் திறமையையும் நிரூபித்துள்ளார்.

தற்போது முழுக்க முழுக்க எந்த ஒரு பங்கேற்பாளரும் இல்லாமல், தானே இசையமைத்து, பாடல் எழுதி ஏஐ மூலம் விஷுவல்களை உருவாக்கி, இந்த புதிய வீடியோ ஆல்பம் பாடலை உருவாக்கி அசத்தியிருக்கிறார்.

“என் உயிரின் ஓசை நீயே” எனும் இப்பாடல் ஒரு பெண்ணின் பார்வையில் காதலின் ஏக்கத்தை, வலியை இன்பத்தை வெகு அழகாகச் சொல்கிறது. இப்பாடல் You Live Only Once எனும் பெயரில் சிற்சில மாற்றங்களுடன் ஆங்கில வடிவிலும் உருவாகியுள்ளது. தமிழ்ப்பாடலை, சீர்காழி சிற்பி எழுதியுள்ளார்.

இன்று வெளியாகியிருக்கும் இப்பாடல் இசை ரசிகர்களிடமும், திரை ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

தற்போது, நந்தா “120 ஹவர்ஸ்” எனும் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் 2025 டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படவிருக்கிறது.

Actor Vadivelu Meets Producer RB Choudhary to Express His Gratitude ahead of Maareesan

0

Produced by Mr. RB Chaudhary’s prestigious banner Super Good Films’ 98th film, Maareesan that stars renowned actors Vadivelu and Fahadh Faasil in lead roles is all set to release worldwide on July 25th, 2025.

Following a special preview screening of the film, veteran actor Vadivelu, impressed by how well the film has shaped up, personally visited producer Mr. RB Choudhary at his office. During the meeting, the actor expressed his heartfelt gratitude and happiness for being a part of the film and appreciated the producer for his vision and support.

The team is excited for audiences across the globe to witness Maareesan, a unique cinematic experience brought to life by an exceptional cast and crew.

வடிவேலுவை பரவசப்படுத்திய ‘மாரீசன்’ – RB செளத்ரியிடம் நேரில் நன்றி சொன்னார்!

திரு. RB செளத்ரி அவர்களின் தயாரிப்பில் சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 98 வது திரைப்படமாக வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் நடித்திருக்கும் “மாரீசன்” திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த வடிவேலு அவர்கள் திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருப்பதையொட்டி அவர் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு RB செளத்ரி அவர்களை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து திரு.வடிவேலு அவர்கள் தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டார்.

GRAND TEASER OF SURIYA’S ‘KARUPPU’ UNLEASHED – A MASS FESTIVAL ON SCREEN

0

The much-anticipated first look teaser of Suriya’s magnum opus Karuppu was unveiled today, coinciding with the star’s birthday—and it’s nothing short of a celebration.

Backed by Dream Warrior Pictures, Karuppu showcases Suriya in a commanding, larger-than-life avatar, brimming with intensity, grit, and unparalleled screen presence. The teaser, running for 1 minute and 38 seconds, is a whirlwind of fiery visuals, whistle-worthy moments, and an electrifying tone that screams mass appeal.

Directed by RJ Balaji, known for his rooted, socially aware storytelling, Karuppu marks a bold leap into high-octane commercial territory. With Suriya at the helm, the duo forms a dynamic creative force, shaping a film that promises to strike a chord with audiences across the spectrum.

The visual storytelling is elevated by cinematographer GK Vishnu, whose rich, stylized frames bring grandeur to every scene. Adding pulse to the narrative is rising music sensation Sai Abhyankkar, whose intense background score amplifies the emotional and dramatic beats. In a short time, Sai has carved a distinct identity, and Karuppu stands as a major milestone in his fast-rising career.

The film’s immersive and detailed production design, courtesy of Arun Venjaramoodu, contributes to its layered visual texture, making the viewing experience both spectacular and emotionally resonant.

While the teaser keeps the look of Trisha Krishnan, the female lead, under wraps—reserving it for the theatrical trailer—the ensemble cast features a powerful mix of talent, including Indrans, Swasika, Anagha Maya Ravi, Sshivadha, Natty, and Supreeth Reddy.

Editor Kalaivanan’s razor-sharp cuts and the dynamic action choreography by AnbAriv and Vikram Mor have already sent fan anticipation soaring.

With a grand festival release planned, the teaser sets the tone for what looks to be a full-blown cinematic celebration. And with this electrifying glimpse, the celebration has officially begun!

சூர்யாவின் மாஸ் திருவிழா ‘கருப்பு’ பட டீசர் வெளியானது !

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யாவின் மாஸ் அவதாரத்தில் உருவாகி வரும் ‘கருப்பு’ படத்தின் அப்டேட்டுக்காக, ரசிகர்கள் மிக நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில், அவரது பிறந்த நாளை முன்னிட்டு, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும், இந்த மெகா பட்ஜெட் படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே மாபெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 நிமிடம் 38 விநாடிகள் ஓடக்கூடிய இந்த டீசர், ஒவ்வொரு காட்சியிலும் சூர்யாவின் மாஸ் லுக், அனல் பறக்கும் ஃபிரேம்கள், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வசனங்கள் என சூர்யா ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், அவரின் வழக்கமான ஃபார்முலாவிலிருந்து விலகி, அதிரடியான மாஸ் கோணத்தில், துணிச்சலான புது முயற்சியாக அமைந்துள்ளது. சூர்யா, ஆர்ஜே பாலாஜி இணைந்திருக்கும் இந்த புதுக்கூட்டணி, அனைத்து ரசிகர்களையும் மகிழ்விக்கும் வகையிலான அட்டகாசமான படைப்பை வழங்கவுள்ளது.

ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதிவு, ஒவ்வொரு ஷாட்டையும் அட்டகாசமாக காட்சிப்படுத்தி, அழகும் சேர்த்துள்ளது. அதற்கு இணையாக, சாய் அபயங்கர் பின்னணி இசை, டீசரை உணர்வுமிக்கதாகவும் அதிரடி நிறைந்ததாகவும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. இப்படம் அவரது இசை பயணத்தில் முக்கியமான படியாக அமைந்துள்ளது.

அருண் வெஞ்சரமூடுவின் கலை இயக்கம், படத்தின் ஒவ்வொரு இடத்தையும் மிக நுணுக்கமான வடிவமைப்புடன், அழுத்தமான, உணர்வுப்பூர்வமான தருணங்களாக அழகாக்கியுள்ளது.

நாயகி த்ரிஷாவின் தோற்றம் டீசரில் இடம்பெறவில்லை. ட்ரெய்லருக்கான சர்பரைஸாக அது இருக்கும். ஆனால் இந்திரன்ஸ், ஸ்வாசிகா, அனகா மாயா ரவி, ஷிவதா, நட்டி, மற்றும் சுப்ரீத் ரெட்டி போன்ற திறமைமிக்க நடிகர்கள் இப்படத்தில் அழுத்தமான நடிப்பை வழங்கியுள்ளனர்.
கலைவாணனின் எடிட்டிங் மற்றும் அன்பறிவ் – விக்ரம் மோர் ஆகியோரின் ஆக்‌ஷன் காட்சியமைப்புகள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும் திருவிழா வெளியீடாக வெளியாகவுள்ள இப்படம், டீசரிலேயே கொண்டாட்டத்தை உறுதி செய்துள்ளது. இதோ ரசிகர்களுக்கான கொண்டாட்டம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகிவிட்டது.

இரவுப்பறவை படத்தின் சிறப்பு காட்சியை பார்த்தார்தொல்.திருமாவளவன்

0

வேதாஜி பாண்டியன் இயக்கத்தில் உருவான இரவுபறவை படத்தின் சிறப்புக் காட்சியை விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பார்த்து அதன் கருத்தை கூறினார்.

ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டில் கால் நூற்றாண்டுக்கு மேலாக முகாம்ங்களில் தங்கி வாழ்ந்து வருகிறார்கள். இன்று மறுவாழ்வு மையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
இலங்கையில் குடியுரிமை உண்டு என்றாலும் கூட இந்தியாவில் தமிழ்நாட்டில் பல ஆயிரக்கணக்காரர்கள் பிறந்து வளர்ந்தவர்கள் உள்ளனர்.அவர்களைப் பொறுத்தவரை இதுதான் தாயகம். இச்சூழலில் அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வேண்டும் என்று பரவலாக எழுந்துள்ளது .இக்கருத்தை மையமாக வைத்து இயக்குனர் வேதாஜி பாண்டியன் இயக்கி இருக்கிறார்.இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இலங்கையில் இருந்து தப்பித்து தமிழ்நாட்டுக்கு வந்த இளம் பெண் பல்வேறு காரணங்களால் இன்னல்களுக்கு ஆளாகிறார். இங்கேயே திருமணம் செய்து வாழ வேண்டும் என்று விரும்பினால் கூட பல்வேறு சக்திகளால் இன்னல்களுக்கு ஆளாகிறார். இச்சூழலில் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக முதலமைச்சரை சந்தித்து இம்மண்ணில் வாழ வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்.இந்திய அரசிற்கு எடுத்துச் சென்று குடியுரிமை வழங்குவதாக மசோதா இயற்றி நிறைவேற்றப்பட்டு அந்தப் பெண்மணிக்கும் இங்கு தங்கி இருக்கும் மக்களுக்கும் குடியுரிமை வழங்கப்படுவதாக சொல்லப்படுகிற கதை களமாக கொண்டு நண்பர் வேதாஜி பாண்டியன் படத்தை இயக்கி இருக்கிறார்.

இரட்டை குடியுரிமை பல நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் இஸ்லாமியர் மற்றும் ஈழத் தமிழர்களுக்கும் இல்லை என்று இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனாலும் கூட திரைப்படத்திற்காக இந்திய பாராளுமன்றத்தில் இரட்டை குடியுரிமை வழங்கியதாக கதையை முடித்து இருக்கிறார்.

நம் உறவுகள் தான்,நம் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டு இருக்கிறார்கள். அவர்களுடைய உணர்வை மதிப்பளித்து கட்டாயம் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன் என்று கூறினார் தொல். திருமாவளவன்.

சத்யா, நந்தினி ,நிழல்கள் ரவி ,சிவா, டாக்டர்.ஆர் பாண்டியன்,இயக்குனர் செல்வகுமாரன் ஆகியோர் கதையின் பாத்திரங்களாக நடித்துள்ளனர்.

ஆர்.பாண்டியன் வழங்க வேதாஜி பாண்டியன் எழுதி இயக்கியிருக்கிறார். பாடல்கள் எழுதி ஆல்வின் கலைபாரதி இசையமைத்திருக்கிறார். எஸ்.பி பகவதி பாலா ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

KALAIGNAR TV – GOWRI SERIAL

0

அம்மனின் அருள்வாக்கு பலிக்குமா – கும்பாபிஷேகத்துக்கு முன் அம்மன் சிலை கோவிலுக்கு கொண்டு வரப்படுமா?

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தெய்வீக மெகாத்தொடர் “கெளரி”. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த தொடரில் தற்போது, கும்பாபிஷேக நாள் நெருங்கி வரும் நிலையில், உண்மையான அம்மன் சிலை கோவிலுக்கு கொண்டு வரப்படுமா என்கிற பரபரப்பில் தொடர் விறுவிறுப்பாக நகர்கிறது.

முன்னதாக, கோயிலில் அம்மன் சிலை மாற்றப்பட்ட உண்மை வெளிச்சத்திற்கு வந்த நிலையில், நடக்கவிருக்கும் கும்பாபிஷேகத்திற்கு முன்பாக சிலை கோயிலுக்கு கொண்டு வரப்படும் என்று துர்கா ரூபத்தில் அம்மன் அருள்வாக்கு கொடுத்திருப்பார்.

அதன்படி, கும்பாபிஷேக நாளும் நெங்கி வரும் நிலையில், உண்மையான அம்மன் சிலை கோவிலுக்கு கொண்டு வரப்படுமா என்கிற பரபரப்போடும், துர்கா வருகை மற்றும் கனகாவின் வெளியேற்றம் என தொடர் முக்கிய கட்டத்தில் சூடுபிடித்திருக்கிறது.

“Blackmail gave me the scope to go beyond usual paradigms” – Actress Teju Ashwini

0

Actress Teju Ashwini, known for her lively and colorful performances, is stepping into bold new territory with her upcoming film Blackmail. Directed by acclaimed filmmaker Mu. Maran, the edge-of-the-seat thriller features Teju in a never-before-seen avatar, marking a major leap in her cinematic journey. The film is all set for a worldwide release on August 1, and also stars GV Prakash Kumar in a leading role.

After winning hearts in the viral song Patak Patak alongside GV Prakash Kumar, their pairing is now back on the big screen, this time in a far more intense and emotionally charged narrative. Teju Ashwini, who has carved a niche for herself through energetic and youthful characters, takes on a serious and layered role for the first time.

“Blackmail gave me the scope to go beyond usual paradigms,” says Teju. “It was truly a new experience for me. Mu. Maran sir’s previous films like Kannai Nambathey and Iravukku Aayiram Kangal have always given prominence to strong female characters. So when I was approached for the female lead in Blackmail, I was thrilled to finally get a substantial role that let me exhibit emotions and perform with depth.”

Reflecting on her collaboration with GV Prakash Kumar, Teju adds: “I had already worked with GV Prakash sir in a colourful music video, but Blackmail is a complete contrast. It places both of us in a more mature, intense space. The film itself is technically sound and narratively thrilling, with unpredictable twists that will keep audiences glued from start to end.”

The film is written and directed by Mu. Maran, known for his sharp and gripping storytelling. Blackmail is produced by Deivakani Amalraj and presented by Jayakkodi Amalraj of JDS Film Factory. The film features musical score by Sam CS, cinematography by Gokul Benoy and editing by San Lokesh. The others in the technical crew include SJ Ram (Art), Rajasekar (Stunts), Baba Bhaskar & Sai Bharathi (Choreography), Sam CS, Eknath & Karthik Netha (Lyrics), and Suresh Chandra-Abdul Nassar (PRO).

நடிப்பில் புதிய சவால்களை கொண்ட படமாக ‘பிளாக்மெயில்’ அமைந்தது”- நடிகை தேஜூ அஸ்வினி!

தன்னுடைய இளமை துள்ளலான நடிப்பிற்கு பெயர் பெற்ற நடிகை தேஜூ அஸ்வினி தற்போது வெளியாக இருக்கும் ‘பிளாக்மெயில்’ படத்தில் நடித்திருக்கிறார். மு. மாறன் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் ரசிகர்கள் இதற்கு முன்பு பார்த்திராத தேஜூ அஸ்வினியை பார்க்க இருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

‘படாக் படாக்’ பாடலில் ஜிவி பிரகாஷ்குமார்- தேஜூ அஸ்வினி இணைந்து நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இந்த வைரல் ஜோடி தற்போது பெரிய திரையிலும் இணைந்துள்ளது. இந்த முறை இன்னும் தீவிரமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் பார்வையாளர்களைக் கட்டிப்போடும் கதைக்களமாகவும் அமைந்திருக்கிறது. எனர்ஜிடிக் மற்றும் யூத்ஃபுல் கதாபாத்திரத்தில் மட்டுமே இதுவரை பார்த்திருந்த தேஜூ அஸ்வினி முதல் முறையாக சீரியஸான பல அடுக்குகள் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

“வழக்கமான நடிப்பைத் தாண்டி பல பரிசோதனை முயற்சிகளை செய்து பார்க்க ‘பிளாக்மெயில்’ திரைப்படம் இடம் கொடுத்தது. புதுவிதமான அனுபவமாக இது அமைந்தது. இயக்குநர் மு. மாறன் அவர்களின் முந்திய படங்களான ‘கண்ணை நம்பாதே’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் கதாநாயகிகளுக்கு வலுவான கதாபாத்திரம் இருக்கும். ‘பிளாக்மெயில்’ படத்தில் என்னை கதாநாயகியாக கேட்டபோதும் நிச்சயம் நடிப்பை வெளிக்கொண்டு வரும் கதாபாத்திரமாக அமையும் என்ற நம்பிக்கையில் சம்மதித்தேன்” என்றார்.

ஜிவி பிரகாஷ்குமாருடன் நடித்தது பற்றி அவர் பகிர்ந்து கொண்டதாவது, “ஜிவி பிரகாஷ் சாருடன் இதற்கு முன்பு கலர்ஃபுல்லான மியூசிக் வீடியோ ஒன்றில் பணிபுரிந்திருக்கிறேன். ஆனால், இந்தப் படம் முற்றிலும் அதற்கு நேரெதிரானது. தொழில்நுட்ப ரீதியாகவும் கதை சொல்லல் மற்றும் எதிர்பாராத திருப்புமுனை மூலம் படம் ஆரம்பித்ததில் இருந்து முடிவு வரை பார்வையாளர்களை நிச்சயம் கட்டிப்போடும்” என்றார்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

எழுத்து, இயக்கம்: மு. மாறன்,
தயாரிப்பு: தெய்வக்கனி அமல்ராஜ்,
வழங்குபவர்: ஜெயக்கொடி அமல்ராஜ்,
பேனர்: JDS ஃபிலிம் ஃபேக்டரி,
இசை: சாம் சி.எஸ்.,
ஒளிப்பதிவு: கோகுல் பெனாய்,
படத்தொகுப்பு: சான் லோகேஷ்,
கலை: SJ ராம்,
ஆக்‌ஷன்: ராஜசேகர்,
நடனம்: பாபா பாஸ்கர் & சாய் பாரதி,
பாடல் வரிகள்: சாம் சி.எஸ்., ஏக்நாத் & கார்த்திக் நேத்தா,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா – அப்துல் நாசர்.

எஸ்,ஜே.சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடிய ஜப்பானிய ரசிகைகள்!

0

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து ஜப்பானிய ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக மாறிய எஸ்.ஜே.சூர்யா

தமிழ் சினிமாவிலிருந்து முதன்முதலாக ஜப்பான் வரை சென்று தனது படங்களால், நடிப்பால், ஸ்டைலால் அங்குள்ள ரசிகர்களையும் வசியப்படுத்தியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரது ஒவ்வொரு பிறந்தநாளின் போதும், ஒவ்வொரு பட ரிலீஸின் போதும் ஜப்பான் ரசிகர்கள் அதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி வருவதையும் ரஜினிகாந்த் நடித்த படங்களை பார்ப்பதற்காகவே ஜப்பானிய ரசிகர்கள் சென்னை வந்து செல்வதையும் கூட பல வருடங்களாக நாம் பார்த்து வருகிறோம்.

அதற்கு அடுத்ததாக தற்போது அப்படி ஒரு அன்பை நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே சூர்யா பெற்றுள்ளார் என்பதுதான் பிரமிப்பூட்டும் தகவல். சமீப வருடங்களாக எஸ்.ஜே. சூர்யா தேர்ந்தெடுத்து நடிக்கும் வித்தியாசமான கதைகளாலும் கதாபாத்திரங்களாலும், அவரது தனி ஸ்டைலான நடிப்பினாலும்.. அவருக்கு பான் இந்தியா என்கிற எல்லையையும் தாண்டி தற்போது வெளிநாடுகளிலும் ரசிகர் வட்டம் உருவாகி உள்ளது.

அந்த வகையில் ஜப்பானில் உள்ள நகோயா என்கிற பகுதியில் வசிக்கும் எஸ்.ஜே சூர்யாவின் தீவிர ஜப்பானிய ரசிகர், ரசிகையர்கள் சமீபத்தில் எஸ்.ஜே சூர்யாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியதுடன் மதிய உணவும் பலருக்கு விருந்தாக வழங்கப்பட்டு வெகு விமரிசையாக கொண்டாடிய நிகழ்வு தான் தற்போது தமிழ் திரையுலகில் ‘ஹாட் ஆப் தி டாபிக்’ ஆக மாறி உள்ளது.

அவரது படங்களை பார்த்து ரசித்து விட்டுப் போவதுடன் நின்று விடாமல் எஸ்.ஜே சூர்யா இதுவரை நடித்த அவரது ஒவ்வொரு படங்களிலிருந்தும் அவரது புகைப்படங்கள், அவரது படங்களின் டிவிடிக்கள் அனைத்தையும் சேகரித்து, நவராத்திரி கொலு வைப்பது போல அடுக்கி வைத்து, இரண்டு புறமும் அவருடைய மினி கட் அவுட்டுகளையும் நிறுத்தி, அதற்கு மாலை போட்டு, நண்பர்கள் சகிதமாக வெகு விமர்சையாக எஸ்.ஜே சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்கள். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகின்றன.

அஜித் நடித்த வாலி திரைப்படம் மூலம் வெற்றிகரமான இயக்குநராக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்த எஸ்.ஜே சூர்யா, அதன் பிறகு குஷி, நியூ உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தார். ஆனாலும் அவர் சினிமாவில் நுழைந்ததன் லட்சியமே ஒரு நடிகராக ஆக வேண்டும் என்பதுதான். வெற்றிகரமான இயக்குநராக தன்னை நிரூபித்த எஸ்.ஜே சூர்யா, பின்னர் நடிப்பில் களமிறங்கி தன்னை ஒரு மிகச்சிறந்த நடிகராகவும் நிரூபித்து வருகிறார். வில்லனாக, கதாநாயகனாக என தற்போது ஒரு வெற்றிகரமான நடிகராகவும் தனது திரை பயணத்தை தொடர்ந்து வருகிறார். எஸ்.ஜே சூர்யா ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இயல்பாகவே அதிகரித்து விடுவது வாடிக்கையாகி விட்டது.

இந்த நிலையில் தற்போது கில்லர் என்கிற படத்தை இயக்கி நடிப்பதன் மூலம் 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்பி உள்ளார் எஸ்.ஜே சூர்யா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பான் இந்திய படமாக இந்த படம் வெளியாக இருக்கிறது. கதாநாயகியாக அயோத்தி புகழ் பிரீத்தி அஸ்ராணி நடிக்க இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஸ்ரீ கோகுலம் மூவீஸ் சார்பாக கோகுலம் கோபாலன் இப்படத்தை தயாரிக்கிறார்.

எஸ்.ஜே சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Ninja’s indie pop track Heer is out now — a soulful blend of music, emotion, and visual grandeur

0

Renowned Punjabi singer Ninja has released his much-anticipated indie pop single Heer, and it’s already creating waves for all the right reasons. The emotionally rich track features powerful vocals by Ninja and Shehnaz Akhtar, with evocative lyrics penned by Raja and soul-stirring music composed by Aden.

Adding to the project’s allure is the presence of Shushmiita Singh and Mahi Sandhu, whose performances bring an expressive depth to the narrative. The music video stands out for its visual storytelling, captured at one of Rajasthan’s most iconic locations, beautifully complementing the essence of the song. The project has been creatively helmed by Sandeep Virk, whose vision has elevated the overall experience.

Sharing his thoughts on the release, Ninja said, “I truly can’t wait to hear how the audience connects with Heer. This song isn’t just about melody — it’s a story of love, longing, and quiet sacrifice. Shehnaz Akhtar’s vibrant pop vocals brought a fresh contrast that beautifully balanced the emotion in the composition. Shooting amidst the timeless beauty of Rajasthan gave the visuals a soul of their own. Heer is very close to my heart because it reflects emotions we all feel but often leave unspoken. I’m grateful to everyone who helped shape it into something so meaningful.”

With its heartfelt melody and poignant visuals, Heer is not just a song but an experience — and one that’s sure to stay with listeners long after the music fades.

- Advertisement -

Recent Posts