- Advertisement -
Home Blog Page 15

Kara Movie Review

0

Kara is a gripping 2026 Tamil rural crime thriller directed by Vignesh Raja, starring Dhanush as Karasamy (Kara), a small-time thief navigating moral gray zones during the 1991 Gulf War fuel crisis in Ramanathapuram, pulling off daring heists against corrupt systems while protecting his loved ones in a tense 16-day survival saga.

In my warm written-style embrace, Kara simmers like a pressure-cooker rural showdown—Kara’s sly robberies and cat-and-mouse chases with relentless cops brew slow-burn suspense, turning Gulf War chaos into a bold celebration of street-smart grit and family loyalty that hooks with atmospheric tension and Dhanush’s magnetic everyman fire.

Dhanush single-handedly carries the film with powerhouse subtlety and raw intensity, owning every shadowy heist glance and heartfelt family beat; Mamitha Baiju sparks as the moral anchor Selli, Suraj Venjaramoodu menaces as the determined DSP, while KS Ravikumar and Jayaram add textured gravitas—their chemistry crackles with authentic rural edge that elevates the thriller core.

Gripping bank-robbery sequences and interval stretch deliver edge-of-seat thrills, GV Prakash Kumar’s energetic BGM amplifies every tense reveal beautifully, and the pre-climax payoff lands with emotional punch—crowds floor over the first-half family drama, complex plot, and morally ambiguous writing as standout rural heist gold.

Vignesh Raja’s direction masterfully builds gradual tension without clichés, Theni Eswar’s shadowy visuals paint moral shadows vividly, and smart three-way contests keep pacing engaging, transforming familiar tropes into a confident, character-driven triumph.

Verdict

A riveting 4/5 heist triumph—Kara‘s Dhanush dominance, slow-burn suspense, and rural heart make it essential for thriller fans craving smart, gripping crime drama with soul-stirring depth!

KARA Movies Cast & Crew Details

Star cast: Dhanush, Mamitha Baiju, K.S. Ravikumar, Karunas, Jayaram, Prithvi Pandiarajan, Suraj Venjaramoodu, M.S. Baskar, Sreeja Ravi & Others.

Directed by: Vignesh Raja

Produced by: Dr. Ishari K. Ganesh
Co Produced By: Kushmitha Ganesh

Writers: Alfred Prakash & Vignesh Raja
Music Director: GV Prakash Kumar
Director Of Photography: Theni Eswar ISC
Editing: Sreejith Sarang
Art Director: Mayapandi
Action Director: Dinesh Kasi
Costume Designer: Dinesh Manoharan, Kavya Sriram
Costumer: Nagu
Makeup: B Raja
Special Makeup: Ronex Xavier
Stills: D Narendran
Sound Design: Sachin Sudhakaran, Hariharan M (Sync Cinema)
Sound Mixing: MR Rajakrishnan
VFX: AJAX
VFX Supervisor: Praveen D
DI: Prasad, Knack Studios
Colorist: Prasad
Publicity Designer: Kabilan Chelliah
Lyrics: Yuga Bharathi, Uma Devi, Poetu Dhanush, Arunraja Kamaraj, Karthik Netha, Arivu
PRO: Riaz K Ahmed, Sathish (AIM)
Executive Producers: N. Vicky, B Senthil Kumar, APV Maran
Creative Producer: KR Prabhu
Business Head: Sushanth
Operations Head: Nithin
Title Animations: Rahul Srivathsan M
Subtitles: Vivek Ranjit
Creative Promotions: The Tabs
Music Label: Vels Music International

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கியுள்ள “29” திரைப்படத்தை White Carpet Films K விஜய் பாண்டி தமிழகமெங்கும் வெளியிடுகிறார் !!

0

White Carpet Films K விஜய் பாண்டி வெளியீட்டில் “29” திரைப்படம் தமிழகமெங்கும் வெளியாகிறது !!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் தரமான தயாரிப்புகளையும் வழங்கி முன்னேறி வரும் தயாரிப்பு நிறுவனமாக White Carpet Films திகழ்கிறது. குறுகிய காலத்திலேயே தனித்துவமான படைப்புகளால் கவனம் ஈர்த்துள்ள இந்த நிறுவனம், தற்போது தனது அடுத்த முக்கிய வெளியீடாக “29” திரைப்படத்தை ரசிகர்களுக்கு கொண்டு வரத் தயாராகியுள்ளது. இத்திரைப்படம் வரும் மே 8 2026 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடப்படவுள்ளது. இந்த வெளியீட்டை இந்நிறுவனம் சார்பில் K விஜய் பாண்டி முன்னின்று மேற்கொள்கிறார்.

White Carpet Films நிறுவனம் இதற்கு முன்பு திரில்லர் வகையைச் சேர்ந்த “தேஜாவு” திரைப்படத்தையும், முழுக்க கமர்ஷியல் அம்சங்களுடன் உருவான “வித்தைக்காரன்” படத்தையும் தயாரித்து கவனம் பெற்றது. அதேசமயம், விநியோகத் துறையிலும் தங்களது திறனை நிரூபித்துள்ள இந்த நிறுவனம், அஜித் நடித்த “துணிவு” மற்றும் “ஆர் யூ ஓகே பேபி” போன்ற படங்களை விநியோகம் செய்துள்ளது. தயாரிப்பிலும், விநியோகத்திலும் சமநிலையை பேணிக் கொண்டு வளர்ந்து வரும் சிறந்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக White Carpet Films இன்று திகழ்கிறது.

“29” திரைப்படம் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. “மேயாத மான்”, “ஆடை” போன்ற வித்தியாசமான படங்களை இயக்கியதன் மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிய இயக்குநர் ரத்னகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார். 2000களின் காதலை மையப்படுத்திய ஒரு உணர்ச்சிப்பூர்வமான படைப்பாக, அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த படத்தில் நாயகனாக விது நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான “ரெட்ரோ” படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அவர், இந்த படத்தில் முழுமையான நாயகனாக புதிய முகமாக ரசிகர்களை கவர இருக்கிறார். கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மேலும் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், பிரேம் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2000ம் ஆண்டுகளின் காதல் உணர்வுகளை, அந்த காலத்து நினைவுகளையும் மனநிலையையும் அழகாக பிரதிபலிக்கும் விதத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

மொத்தத்தில், புதிய முயற்சிகளுக்கும் தரமான கதை சொல்லலுக்கும் முக்கியத்துவம் அளித்து வரும் White Carpet Films நிறுவனம், “29” திரைப்படத்தின் மூலம் தனது வளர்ச்சிப் பாதையில் இன்னொரு முக்கியமான படியை எடுத்து வைக்கிறது. காதல், நினைவுகள் மற்றும் உணர்ச்சிகளை இணைக்கும் இந்த படம், மே 8 அன்று திரையரங்குகளில் ரசிகர்களுக்கு ஒரு இனிய அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டக்குடியில் திருவிழா கொண்டாட்டம் – “TN 2026” மூலம் மீண்டும் வெற்றி கண்ட கண்ணன் ரவி & தீபக் ரவி!

0

திட்டக்குடியில் “TN 2026” வெற்றி கொண்டாட்டம் – ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்த படக்குழு !!

KRG Kannan Ravi Group தயாரிப்பில் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வரும் தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி, தற்போது தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய பெயர்களாக உயர்ந்து வருகின்றனர். தரமான கதைகள், வித்தியாசமான கதாபாத்திரங்கள், மற்றும் சிறப்பான வணிக அம்சங்கள் கலந்த படங்களைத் தேர்வு செய்வதில் இவர்களின் தேர்ச்சி, அவர்களை மற்ற தயாரிப்பாளர்களிடமிருந்து தனித்துவப்படுத்துகிறது.

அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் உமாபதி ராமையா இயக்கத்தில், நடிகர் நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்துள்ள “TN 2026” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசியல் நகைச்சுவை கலந்த கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம், சமூக கருத்துகளையும், அரசியல் பகடியையும், சிரிப்பூட்டும் நிகழ்வுகளாக இணைத்து மக்களிடம் எளிதாக சேர்கிறது.

படம் வெளியாகிய பிறகு, தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் சொந்த ஊரான திட்டக்குடியில் நடைபெற்ற கொண்டாட்டம் வெகு சிறப்பாக அமைந்தது. படக்குழுவினர் இயக்குநர் உமாபதி ராமையா, நட்டி, சிருத்தா ராவ், தம்பி ராமையா, இளவரசு ஆகியோர் நேரில் திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்து மகிழ்ந்தனர். அப்போது பொதுமக்கள் காட்டிய அன்பு கண்கொள்ளா காட்சியாக இருந்தது — மேளதாளம், பேண்டு வாத்தியம், சரவெடி, ஊர்வலம் என படக்குழுவை உற்சாகத்தில் ஆழ்த்தினர். தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மீதான அந்த பாசம், அவரின் மக்கள் தொடர்பையும் நிலையான ஆதரவையும் வெளிப்படுத்தியது.

“TN 2026” திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. வெளியீட்டிற்கு முன்பே அதன் போஸ்டர் மற்றும் விளம்பரங்கள் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றன. அரசியல் பகடி, நகைச்சுவை, மற்றும் சமூக கருத்துக்களை இணைக்கும் இப்படம், மக்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.

“தலைவர் தம்பி தலைமையில்” எனும் ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படத்தைத் தொடர்ந்து, “TN 2026” மூலம் கண்ணன் ரவி – தீபக் ரவி கூட்டணி மீண்டும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மேலும், அடுத்ததாக நடிகர் ஜெய் நடிப்பில், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் “டெக்ஸ்லா” திரைப்படத்தையும் அவர்கள் தயாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில், கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய தயாரிப்பாளர்களாக மாறி வருகின்றனர்.

கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணி கொண்ட “கற்றது சமையல்”

0

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் – வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் “கற்றது சமையல்” நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மண் மனம் மாறாமல் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் காடு, மேடு என வித்தியாசமான இடங்களை தேர்வு செய்து கிராமத்து சமையலை மிக்ஸி, கிரைண்டர் போன்ற எந்த வித நவீன உபகரணங்களும் இன்றி, இயற்கையாகவே கிடைக்கும் பொருட்களை வைத்து முழுக்க முழுக்க கிராமத்து பாணியில், கைப்பக்குவத்திலேயே சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவை சமைப்பதே இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.

இதுவரை நாம் அறிந்திராத பல சுவையான பாரம்பரிய உணவு வகைகளை, அதன் இயற்கை மனம் மற்றும் ருசியுடன் சமைப்பதுடன், தினமும் ஒரு வித்தியாசமான சமையலை நம் கண் முன்னே விருந்தளிக்கும் விதமாக “கற்றது சமையல்” நிகழ்ச்சி உருவாகி வருகிறது.

நீண்ட நாள் வாழ.. சிரித்து மகிழ.. கலைஞர்டிவியில் ஒளிபரப்பாகும் நகைச்சுவை நிகழ்ச்சி“தில்லு முல்லு”

0

ஒருவரை கோபப்படுத்த சில நிமிடங்கள் போதும். ஆனால், ஒருவரை சிரிக்க வைப்பது என்பது எளிதான விஷயம் அல்ல. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது நம் சான்றோர் மொழி. அந்த வகையில், எந்திர வாழ்க்கையில் உலாவும் ஒவ்வொருவரையும் சிரிக்க வைக்க கலைஞர் தொலைக்காட்சியில் “தில்லு முல்லு” என்ற நகைச்சுசை நிகழ்ச்சி திங்கள் – வெள்ளி வரை மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பிரபல நகைச்சுவை நட்சத்திரங்களான சிங்கப்பூர் தீபன், முல்லை, கோதண்டம், கூல் சுரேஷ் மற்றும் அன்னலட்சுமி ஆகியோர் தங்களது நகைச்சுவை திறமையை வெளிப்படுத்துகின்றனர்.

சிரிக்காத நாட்கள் வாழ்க்கையின் வீணடிக்கப்பட்ட நாட்கள் என்றும், சிரிப்பின் நீளமே வாழ்நாளின் நீளம்என்றும் முன்னோர் கூற கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே,சிரியுங்கள், வாழ்க்கையை வளமானதாக மாற்றுங்கள்.

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

0

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A.சற்குணம் எழுதி இயக்கியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமாவில், துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், அப்பாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்

‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15 முதல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகும். இந்த சீரிஸ் தமிழில் வெளியாவதுடன், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப் டைட்டில்களுடன் வெளியாகும்

சென்னை, இந்தியா—ஏப்ரல் 27, 2026—இந்தியாவின் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, தனது அடுத்த தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15 அன்று உலகளவில் வெளியிடப்படும் என்று இன்று அறிவித்துள்ளது. வால்வாட்சர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஏழு எபிசோட்கள் கொண்ட சீரிஸை, தேசிய விருது பெற்ற இயக்குநர் A.சற்குணம் எழுதி இயக்கியுள்ளார். போட்டித் தேர்வுகளின் அழுத்தம் நிறைந்த சூழலை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமா, உணர்ச்சி மிகுந்த மற்றும் பதட்டம் நிறைந்த கதையாக உருவாகியுள்ளது. துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த சீரிஸில், அப்பாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். “எக்ஸாம்” தொடர் இந்தியாவைத் தாண்டி 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

பிரைம் வீடியோ இந்தியாவின் ஒரிஜினல்ஸ் பிரிவு தலைவர் நிகில் மாதோக் கூறியதாவது: ‘எக்ஸாம்’ என்பது இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமான ஒரு கதை. போட்டித் தேர்வுகளில் இருக்கும் உணர்ச்சி அழுத்தத்தை மிகச் சிறப்பாக ஒரு திகில் நிறைந்த கதையாக மாற்றுகிறது. இந்த கதை கோடிக்கணக்கான மக்களின் மனதைத் தொடும் என்று நாங்கள் நம்புகிறோம். ‘சுழல் — தி வோர்டெக்ஸ்’ (சீசன் 1 மற்றும் 2) மற்றும் ‘வதந்தி — தி ஃபேபிள் ஆஃப் வேலோனி’ ஆகிய தொடர்களின் வெற்றிக்குப் பிறகு, புஷ்கர் மற்றும் காயத்ரியுடன் மீண்டும் இணைவது எங்களுக்கு பெருமையாகும். இந்த கதையை மே 15 அன்று உலகம் முழுவதும் உள்ள எங்கள் பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல ஆவலாக இருக்கிறோம்.”

கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி கூறியதாவது: ‘எக்ஸாம்’ தொடரின் மூலம், மனிதர்களின் ஆசை, அநீதி, மற்றும் கடைசி கட்டத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் நெறிமுறை சிக்கல்கள் ஆகியவற்றை சொல்ல முயன்றோம். இந்தக் கதையின் மையத்தில், சிக்கலான சூழ்நிலையில் தன்னை பலவீனமாக்கி கொள்ளாமல், துணிந்து போராடும் ஒரு இளம் பெண் இருக்கிறார். ஒரு அநீதி நிறைந்த அமைப்புக்கு எதிராக நின்று அவள் போராடுவது தான் இந்த கதை. எங்கள் கதைகளை உலகளவில் கொண்டு செல்ல பிரைம் வீடியோ எங்களுக்கு சிறந்த கூட்டாளியாக இருந்து வருகிறது. அதுபோலவே எக்ஸாம் சீரிஸையும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல இது சரியான தளமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

‘எக்ஸாம்’ சீரிஸை மே 15 முதல் ப்ரைம் வீடியோவில் கண்டுகளியுங்கள்.

Prime Video Announces the Global Premiere Date of its Tamil Original Suspense Drama Exam, Launching on May 15

From creative producers Pushkar and Gayatri, under the banner of Wallwatcher Films, written and directed by A. Sarkunam, the suspense drama features Dushara Vijayan and Aditi Balan in the lead, with Abbas playing a pivotal role

Exam will stream exclusively on Prime Video on May 15 in India and over 240 countries and territories worldwide in Tamil, with dubs in Telugu, Hindi, Malayalam, and Kannada, and subtitles in 15 languages, including English

MUMBAI, India—April 27, 2026—Prime Video, India’s most-loved entertainment destination, today announced May 15 as the global premiere date for its upcoming Tamil Original series, Exam. From creative producers Pushkar and Gayatri, under the banner of Wallwatcher Films, the seven-episode series written and directed by National Award-winner A. Sarkunam promises a tense, emotionally charged suspense drama set against the pressure-filled environment of a competitive exam. Featuring Dushara Vijayan and Aditi Balan in the lead, and Abbas playing a pivotal role, Exam will stream exclusively on Prime Video in India and over 240 countries and territories worldwide in Tamil, with dubs in Telugu, Hindi, Malayalam, and Kannada, and subtitles in 15 languages including English.

“Exam is a very timely and relevant story that captures the emotional intensity of competitive exams and masterfully transforms it into a thrilling high-stakes drama. We believe it is a story that will resonate deeply with millions. It’s a privilege to once again collaborate with Pushkar and Gayatri after the success of Suzhal—The Vortex season 1 and 2, and Vadhandhi—The Fable of Velonie. We are excited to bring this story to our customers across the world on May 15,” said Nikhil Madhok, Director & Head of Originals, Prime Video, India.

“With Exam, we wanted to dig into ambition, injustice, and those moral crossroads that people face when pushed to the edge,” shared creative producers Pushkar and Gayatri. “At the heart of this story is a young woman who refuses to remain powerless. Her journey is not about glamorizing defiance, but about exploring the emotional and ethical cost of standing up to a system stacked against her. Prime Video has been an incredible collaborator in taking our stories global before, and we believe it’s the perfect home to bring Exam to audiences worldwide.”

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

0

Zee Studios வழங்க, MIG Production & Studios இணைந்து தயாரித்துள்ளது.

ஒரு தீவிரமான சமூக – தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை சேட்டன் DK இயக்க, சாகர் B ஷிண்டே எழுதி தயாரித்துள்ளார். இந்த படம் தேசிய அளவில் தாக்கம் ஏற்படுத்தும் முக்கியமான பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

‘தி இந்தியா ஸ்டோரி’ The India Story (அல்லது The India Story: Slow Poison) என்ற பெயரிலும் அறியப்படும் இப்படம், குறிப்பாக பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சர்ச்சைகளை வெளிச்சமிட்டு காட்டுகிறது. ஒரு குடும்பத்தின் கதையை மட்டுமே கூறாமல், பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக இந்த விவகாரத்தை இக்கதை விரிவாக எடுத்துரைக்கிறது. மேலும், இந்த நிலைமையைத் தடுப்பதற்கான கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்கள் தேவையென்பதையும் இப்படம் சுட்டிக்காட்டுகிறது.

இப்படம் உருவானதற்கான காரணத்தைப் பற்றி தயாரிப்பாளர் சாகர் B ஷிண்டே கூறியதாவது..,

“நாட்டின் பல பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியும் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு உண்மையை இந்தக் கதை வெளிப்படுத்துகிறது. பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல, மனித வாழ்வையே பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சினை. இந்த படத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொறுப்புணர்வை உருவாக்கவும் நாங்கள் விரும்புகிறோம்.”

உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கதை, சுவாரஸ்யமான கதையம்சத்தையும் சமூகப் பொறுப்பையும் சமநிலைப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்துறை அலட்சியத்தின் காரணமாக ஏற்படும், பொதுவாக கவனிக்கப்படாமல் போகும் விளைவுகளை இந்தப் படம் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதோடு, அதிகாரம் வாய்ந்த நிறுவனங்களின் பொறுப்புணர்வையும் கேள்விக்குறியாக்குகிறது.

இயக்குநர் சேட்டன் DK கூறியதாவது..,

“இந்தக் கதைக்கு உண்மைத்தன்மையை கொடுக்க குழுவில் உள்ள ஒவ்வொருவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். காஜல் மற்றும் ஷ்ரேயாஸ்இருவரும் மிகவும் நுணுக்கமான நடிப்பை வழங்கியுள்ளனர். அவர்கள் காட்டிய ஈடுபாடு படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.”

பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள காஜல் அகர்வால் மற்றும் பல்வேறு வகை கதாபாத்திரங்களில் பாராட்டுக்களைக் குவித்தஷ்ரேயாஸ் தல்படே முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர். இந்த புதிய ஜோடி, கதைக்கு உணர்ச்சி ஆழத்தையும் தீவிரத்தையும் கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய பார்வையாளர்கள் சிறந்த கருத்துக்களை மையப்படுத்திய திரைப்படங்களை அதிகம் விரும்பும் சூழலில், ‘தி இந்தியா ஸ்டோரி’ ஒரு பொருத்தமான மற்றும் சிறப்பான திரை வெளியீடாக திகழ்கிறது. சமூக பொறுப்புணர்வை தூண்டும் இந்த படம், சினிமாவைத் தாண்டி முக்கியமான விவாதங்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்தப்படத்தில் இணை தயாரிப்பாளர்களாக சுமித் பாகடே, அனிதா ஜாதவ், விநாயக் சைதானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். ஒளிப்பதிவாளர் நிஷாந்த் பக்வத், இசையமைப்பாளர் மங்கேஷ் தாக்டே, எடிட்டர் ஆஷிஷ் மாத்ரே, பாடலாசிரியர் ஷகீல் அஜாமி மற்றும் ஒலி வடிவமைப்பாளர் அன்மோல் பாவே ஆகியோரின் பங்களிப்பும் இப்படத்தை மேலும் உயர்த்தியுள்ளது.
இந்த திரைப்படம் தமிழ், இந்தி, மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.

ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் உலகளாவிய அளவில் வெளியிடுகிறது.

Kajal Aggarwal and Shreyas Talpade’s The India Story set for July 24 release

Presented by Zee Studios in association with MIG Production & Studios.

A gripping new socio-national drama, The India Story, starring Kajal Aggarwal and Shreyas Talpade, is all set to hit theatres on July 24. Directed by Chettan DK and produced and written by Sagar B Shinde, the film promises to delve into a hard-hitting and relevant issue that resonates on a national scale.

At its core, The India Story, also referred to as The India Story: Slow Poison in progress, explores the alarming consequences of chemical misuse, particularly in the context of pesticide farming and related scandals. Moving beyond the lens of a single family’s ordeal, the narrative expands to reflect a much larger crisis affecting public health and safety. The film attempts to shed light on systemic lapses and the urgent need for stricter regulatory frameworks to prevent such widespread harm.

Speaking about the motivation behind the film, producer Sagar B Shinde shared, “We chose to tell this story because it reflects a reality that often goes unnoticed but impacts countless lives across the country. The misuse of chemicals, especially in pesticide farming, is not just an environmental concern, it’s a human crisis. Through this film, we hope to raise awareness and initiate meaningful conversations around accountability and change.”

With a storyline rooted in real-world concerns, the makers aim to strike a balance between compelling storytelling and social commentary. The film is expected to highlight the often-overlooked repercussions of industrial negligence while also questioning the accountability of powerful corporations.

Director Chettan DK praised the collective effort behind the film, saying, “Every member of the team, from the crew to the cast, has put in immense dedication to bring authenticity to this story. Kajal and Shreyas have delivered incredibly nuanced performances, and their commitment has truly elevated the film. We’ve worked hard to ensure that the narrative remains both engaging and impactful.”

Kajal Aggarwal, who has consistently explored diverse roles and Shreyas Talpade, known for his versatility, come together for the first time, bringing a fresh on-screen pairing. Their collaboration is anticipated to add emotional depth and intensity to a narrative that is both thought-provoking and unsettling.

As audiences increasingly gravitate towards content-driven cinema, The India Story positions itself as a timely and impactful release. With its strong message and engaging premise, the film is poised to spark conversations while delivering a gripping cinematic experience, backed by co-producers Sumit Bagade, Anita Jadhav, Vinayak Saidani, Kalpesh Shah, Devyani Khorate, and Prem Joshi, and further elevated by the work of DOP Nishant Bhagwat, music composer Mangesh Dhakde, editor Ashish Mhatre, lyricist Shakeel Azami, and sound designer Anmol Bhave. The film is all set to release in Tamil ,Hindi, and Telugu language.

A Zee Studios Worldwide Release

KARUPPU IGNITES MADURAI: SURIYA’S LANDMARK AUDIO LAUNCH SETS THE STAGEFOR ONE OF TAMIL CINEMA’S MOST ANTICIPATED RELEASES

0

In a night that belonged to the masses, director RJ Balaji’s Karuppu — starring Suriya, Trisha Krishnan, and featuring music by breakout composer Sai Abhyankkar — held its grand audio launch at Solamalai College of Engineering, Madurai. Thousands of fans turned out for what felt less like a film promotion and more like a cultural festival — one that Suriya himself likened to Madurai’s legendary Chithirai Thiruvizhaa.

SURIYA
The evening’s most awaited moment arrived when Suriya took the stage — and his words were as much devotion as they were declaration.

“Madurai is always super special for me. Saapadu, arasiyal, and their respect to pen deivam. Madurai mannukku naa kadan patruken, ithana padam inga paniruken. 28 years of making me a hero — this love, this affection. I am overwhelmed.”
“Madurai’s Chithirai Thiruvizhaa draws five lakh people. In the same way, I see the Karuppu thiruvizhaa as another Chithirai Thiruvizhaa.”
“Actor Indrans — what a talent. He keeps doing films across genres again and again. He has studied only up to the 4th standard, and now he has gone and done his 7th standard exams. There is no limit to his dedication.”
“Sai, you are a very special talent. You have a massive future ahead of you. When I first met him, he said he makes 1,000 tunes a day. When the film comes on screen, it will be a massive experience in terms of music.”
“Dream Warrior thinks for me, more than me. They have a huge vision and were able to create the world of Karuppu. I’m also deeply thankful to Anbariv masters and Vikram masters for their extraordinary stunt direction.”
“I think Karuppusamy is the reason this film came this far. I am really seeing the effect that happens when God comes into a person. Where there is faith, miracles will certainly happen. RJ Balaji is multi-talented — I see myself as Suriya, but he sees himself as director, actor, commentator, and everything at once.”
“In this film, I am not the hero. Karuppusamy is the hero. I thank my director RJ Balaji for giving me this opportunity — to perform this way, to be seen this way. Those who have seen the film say the first half is deeply emotional, and the second half is packed with a high every 10 minutes. May 14 — it is in your hands. I am confident you will love it. We will see each other in the theatre.”
— Suriya

DIRECTOR RJ BALAJI
Director RJ Balaji, who co-wrote the film alongside four collaborators and has invested 32 months into Karuppu, spoke with characteristic candour, humour, and deep emotion throughout the evening.

“I had come to the Karuppusamy temple two years ago. That time itself, I told the producers that the audio launch of this film should happen in Madurai. Throughout this film, Karuppusamy has held my hand and walked with me. I believe that is my biggest strength.”
“Sai Abhyankkar 01 is when we signed him — and now he has already signed 73 films. I went to his home, and a helicopter is standing there. He is a gifted composer. People will be shaken when his song releases, but his song creates a massive impact in just 15 minutes. We now feel he is our master stroke.”
“Actor Indrans has done a superb job in the film. I was amazed by his performance. Trisha could not join us today, but I thank her deeply. It is not easy to be Trisha — it is not easy to stay at the top for 23 years. This will be one of her best roles in recent times.”
“I had no idea how to handle a big film and a big star. When I was thinking, one man held my hand and took me through — that’s GK Vishnu. He knows exactly how to make a hero look mass on screen.”
“After the Valimai update, the Karuppu update was the one asked for the most. The journey of two years was very tough. Yes, me and SR Prabhu fought, debated — everything. But we are in a good space now. I got a family through Karuppu.”
“This film was written by five of us together. This team has been with me for two years. It happened because of one man — Suriya sir. I only gave him a 45-minute narration, but he agreed immediately. Even my wife was surprised — she said, ‘Suriya sir Un padam panraara?’ He had the trust and confidence in me, and I wanted to give him the best. I wanted Suriya sir to enjoy himself on screen, have fun, and be seen in a massy way. Usually, big hero films have the hero in every single scene. But in Karuppu, there are many scenes without him — our stories exist in the film too. He agreed to that, and he delivered. On screen, just his eyes speak volumes. A commercial first half, and a second half with a high every 10 minutes. A king is coming for his throne.”
“Fans are asking why we didn’t announce the date on the posters — but if we did, the Censor Board would have come knocking. We will put it out soon. Get your crackers ready. A celebration is coming. May 14.”
— Director RJ Balaji

SAI ABHYANKKAR — COMPOSER
Sai Abhyankkar, whose live performance of God Mode opened the night to thunderous applause, reflected on a journey that began with one unexpected moment of destiny.

“The response to the songs of Karuppu has been overwhelming, and it makes me so emotional. Suriya sir has so many cult films, and when this film came to me — I immediately jumped on board. The very first meeting with Balaji Anna was superb, very special. I was doubtful at first, and I was on my way to meet RJB Anna. But on the way itself, I saw on Twitter that Sai Abhyankkar is doing Suriya 45. I got goosebumps. I cannot forget that moment ever.”
“Any other superhero would have thought twice before going with a debut music director for a film of this scale. But Suriya sir agreed and brought me on board without hesitation. I have seen the film. The re-recording will be talked about, and this film is going to be a blockbuster.”
— Sai Abhyankkar, Composer

ACTOR NATTY
“Karuppu has a fantastic screenplay. For this film, I did many rehearsals too — and RJB remembered every single scene we performed and carried it forward brilliantly. I love how Suriya sir’s handsomeness is still exactly the same. That is why Suriya sir has fans till date, and always will.”
— Actor Natty

ACTOR SWASIKA
“This is my second film with Suriya sir, after Retro. After Lubber Pandhu, I wanted to change my look — and immediately, it happened in this film. Thanks to RJB sir, who was the one who called me. Karuppu is a grand entertainer, and I have a very good role in it. I am so grateful.”
— Actor Swasika

ACTOR SSHIVADA
“Madurai la Karuppu shoot panna varumbodhe romba sandhosham — ippo indha medai innum mass ah irukum. I am standing on this stage because of RJB sir — thank you so much. I cannot forget the day that I acted with Suriya sir. It was my birthday too. It was so emotional and beautiful. RJB is such a fun person — even in his tense moments, he is very sweet. He enjoys his work on the sets a lot.”
— Actor Sshivada

ACTOR ANAGHA MAYA RAVI
“I have never been to such a big event in Madurai. It’s all because of RJB sir. Thank you sir for bringing me into this big film. I grew up being a fan of Suriya sir and Jyotika mam. I didn’t even think I would meet him in person — but now I have done a film with him. I am not great in Tamil, but next time nalla prepare pannitu varen.”
— Actor Anagha Maya Ravi

LYRICIST VIVEK
“Veyyon Silli in Soorarai Pottru was written in Madurai slang, and now I am working with Suriya sir again in back-to-back films — Retro and Karuppu. With Sai Abhyankkar, I keep working again and again — from indie songs to films, from Sithira Puthiri all the way to Karuppu now, and multiple songs in Raaka too. We always have a great energy together. All the songs have come out so well.”
— Lyricist Vivek

PRODUCTION DESIGNER ARUN VENJARAMOODU
“The visuals of Karuppu by GK Vishnu will be highly talked about. It was a great memory to be a part of this amazing biggie. My entire team has worked round the clock for this film. I am a big fan of Suriya sir, and I was waiting for the chance to work on his film. I feel very emotional standing here.”
“I have seen aruvas at 10 feet and 20 feet. But for one song in this film, we made one at 85 feet. I don’t know if I can do a film of this scale again. I am waiting to see the audience reactions in the theatre.”
— Production Designer Arun Venjaramoodu

PRODUCER SR PRABHU
“I am very confident about Karuppu. RJB has brought this film with fun, energy, and entertainment. Balaji reduced the work of a producer and made it very comfortable for all of us. It will have a lot of grandeur and will feel like a true festival. Thanks to GK Vishnu for his extraordinary work, and to Sai Abhyankkar — his first big Tamil film — we are doing it together.”
— Producer SR Prabhu, Dream Warrior Pictures

DISTRIBUTOR SAKTHIVELAN
“My journey with Karuppu started with RJB in LKG. He is an asuthanamanaa uzhaipaali — an extraordinarily hardworking person — and he has put in multiple times that effort for Karuppu. For the script, he interacted with so many people and brought in a wealth of research.”
“Karuppu will be a never-before-seen avadhaaram for Suriya sir. I recently got to watch the film. I am saying this with the permission of the director — it is going to be a semma virundhu for the fans.”
“This year, Suriya sir has three films. All three will become huge hits. We will call this Suriya’s year.”
— Distributor Sakthivelan

THINK MUSIC SANTHOSH
“Karuppu will be a never-before-seen avadhaaram for Suriya sir. I recently got to watch the film. I am saying this with the full permission of the director — it is going to be a semma virundhu for the fans.”
— Think Music Santhosh

Produced by Dream Warrior Pictures.

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

மதுரை சித்திரை திருவிழாவுடன் ‘கருப்பு ‘ இசை வெளியீட்டு விழாவை ஒப்பிட்டுப் பேசி அசத்திய நடிகர் சூர்யா

மதுரை மண்ணின் கலாச்சார திருவிழாவாக மாறிய சூர்யாவின் ‘கருப்பு ‘திரைப்பட இசை வெளியீட்டு விழா

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது.

நடிகர்- இயக்குனர் என பன்முக ஆளுமை திறன் படைத்த ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில் சூர்யா, திரிஷா, யோகி பாபு, ஆர் ஜே பாலாஜி, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், சுவாசிகா, ஷிவதா, அனகா மாயா ரவி, சுப்ரீத் ரெட்டி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ் ஆர் பிரபு மற்றும் எஸ் ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த திரைப்படம் மே 14 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நடிகர் சூர்யா பேசுகையில், ” மதுரை எனக்கு எப்போதும் மிகவும் சிறப்பான ஒரு இடமாக திகழ்கிறது. இங்குள்ள உணவு, அரசியல் மற்றும் பெண்களை தெய்வமாக மதிக்கும் பண்பு ஆகியவை என்னை எப்போதும் ஈர்க்கின்றன. மதுரை மண்ணிற்கு நான் கடன் பட்டிருக்கிறேன். நிறைய திரைப்படங்களை நான் இங்கு தான் படமாக்கி இருக்கிறேன். கடந்த 28 ஆண்டுகளாக என்னை ஒரு கதாநாயகனாக ஏற்றுக்கொண்டு, நீங்கள் என் மீது பொழியும் இந்த அன்பிற்கும், பாசத்திற்கும் நான் பெரிதும் நெகிழ்ந்து போயிருக்கிறேன்.
மதுரையில் நடைபெறும் சித்திரை விழாவிற்கு ஐந்து லட்சம் மக்கள் திரள்வார்கள். அதே போலவே இந்த ‘கருப்பு’ படத்தின் திருவிழாவையும் நான் மற்றொரு சித்திரை திருவிழாவாகவே பார்க்கிறேன்.

நடிகர் இந்திரன்ஸ் திறமையான கலைஞர். அவர் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்கிறார். அவர் நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். ஆனால் இப்போது தனது ஏழாம் வகுப்பு தேர்வுகளை எழுதி நிறைவு செய்து இருக்கிறார். அவரது இந்த அர்ப்பணிப்பிற்கு எல்லையே இல்லை.‌

இசையமைப்பாளர் சாய் மிகவும் திறமையான கலைஞர். அவருக்கு பிரம்மாண்டமான எதிர்காலம் காத்திருக்கிறது. நான் அவரை முதன் முதலாக சந்தித்தபோது அவர் ஒரு நாளைக்கு ஆயிரம் டியூன்ஸ்களை உருவாக்குவதாக சொன்னார். இப்படம் திரைக்கு வரும் போது இசையின் அடிப்படையில் அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அனுபவமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

ட்ரீம் வாரியர் நிறுவனம் எனக்காக சிந்திக்கிறது. சொல்லப்போனால் என்னை விட அதிகமாகவே சிந்திக்கிறது. அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய தொலைநோக்குப் பார்வை உள்ளது. அதன் மூலமே அவர்களால் ‘கருப்பு’ வின் உலகத்தை படைக்க முடிந்தது. அன்பறிவு மற்றும் விக்ரம் மாஸ்டர்களின் அசாதாரணமான சண்டைக் காட்சி இயக்கத்திற்காக நான் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

இந்தப் படம் இவ்வளவு தூரம் கடந்து வந்திருப்பதற்கு கருப்பசாமி தான் முக்கிய காரணம் என நான் கருதுகிறேன். ஒரு மனிதனுக்குள் தெய்வம் குடிகொள்ளும் போது ஏற்படும் தாக்கத்தை நான் இப்போது கண்கூடாக பார்க்கிறேன். எங்கு நம்பிக்கை இருக்கிறதோ…. அங்கு நிச்சயமாக அற்புதங்கள் நிகழும்.
இயக்குநர் ஆர் ஜே பாலாஜி பன்முகத் திறமை கொண்டவர். நான் என்னை ஒரு நடிகராக மட்டுமே பார்க்கிறேன். ஆனால் அவர் தன்னை ஒரு இயக்குநராகவும்… நடிகராகவும்… வர்ணனையாளராகவும்… இப்படி எல்லாமாக ஒரே நேரத்தில் பார்க்கிறார்.

இந்தப் படத்தில் நான் கதாநாயகன் அல்ல. கருப்பசாமி தான் கதாநாயகன். என்னை இந்த விதமாக நடிக்கவும்… இந்த விதமாக திரையில் தோன்றவும் வைக்கும் வாய்ப்பை அளித்த எனது இயக்குநர் ஆர் ஜே பாலாஜிக்கு நான் நன்றி கூறுகிறேன்.‌

படத்தைப் பார்த்தவர்கள் படத்தின் முதல் பாதி மிகுந்த உணர்வுபூர்வமாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை உச்சகட்ட விறுவிறுப்புடன் அமைந்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.‌ மே பதினான்காம் தேதி எல்லாம் உங்கள் கைகளில் தான் உள்ளது. இந்தப் படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது ” என்றார்.‌

இயக்குநர் ஆர் ஜே பாலாஜி பேசுகையில், ” இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் கருப்பசாமி கோவிலுக்கு சென்று இருந்தேன். அப்போதே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் தான் நடைபெற வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் நான் கூறியிருந்தேன். இந்த படம் உருவான முழு பயணத்திலும் கருப்பசாமி என் கையைப் பிடித்துக் கொண்டு என்னுடன் நடந்தே வந்தார். அதுவே எனது மிகப்பெரிய பலம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் பணியாற்றுவதற்காக ஒப்பந்தம் செய்த போது.. அவருக்கு இது முதல் படமாக இருந்தது. ஆனால் இப்போது அவர் 73 படங்களுக்கு ஒப்பந்தம் ஆகிவிட்டார். நான் ஒரு முறை அவரது வீட்டுக்கு சென்று இருந்தேன். அங்கே ஒரு ஹெலிகாப்டர் நின்று கொண்டிருந்தது. அவர் மிகவும் அபாரமான திறமை கொண்ட இசையமைப்பாளர். அவரது பாடல் வெளியாகும் போது மக்கள் நிச்சயம் வியந்து போவார்கள். 15 நிமிடங்களில் அவரது பாடல் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. இப்போது நாங்கள் அவரை எங்கள் படத்தின் மிக சிறந்த மாஸ்டர் ஸ்ட்ரோக் ஆகவே கருதுகிறோம்.

நடிகர் இந்திரன்ஸ் இந்த படத்தில் அருமையாக நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பை கண்டு நான் பிரமித்து போனேன்.

திரிஷா இன்று எங்களுடன் இணைய முடியவில்லை. ஆனாலும் அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். திரிஷாவாக இருப்பது எளிதல்ல. 23 ஆண்டுகளாக உச்சத்தில் இருப்பது எளிதல்ல. சமீப காலங்களில் இது அவருடைய சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும்.

ஒரு பெரிய பட்ஜெட்டில் ஆன படத்தையும் ஒரு பெரிய நட்சத்திரத்தையும் எப்படி கையாள்வது என்று எனக்கு தெரியவில்லை. நான் யோசித்துக் கொண்டிருந்தபோது ஒருவர் என் கையைப் பிடித்து வழி நடத்தினார். அவர்தான் ஒளிப்பதிவாளர் ஜி கே விஷ்ணு. ஒரு கதாநாயகனை திரையில் எப்படி மாஸ் ஹீரோவாக காட்டுவது என்பது அவருக்கு துல்லியமாக தெரிந்திருக்கிறது.

‘வலிமை’ படத்தின் அப்டேட்டிற்கு பிறகு ‘கருப்பு’ படத்தின் அப்டேட் தான் அதிகமாக கேட்கப்பட்டது. இரண்டு வருட பயணம் மிகவும் கடினமாக இருந்தது. நானும், எஸ் ஆர் பிரபுவும் சண்டையிட்டுக் கொண்டோம். விவாதித்தோம். எல்லாம் செய்தோம். ஆனால் இப்போது நாங்கள் ஒரு நல்ல நிலையில் இருக்கிறோம். கருப்பு படத்தின் மூலம் எனக்கு ஒரு குடும்பம் கிடைத்திருக்கிறது.‌

இந்தப் படத்தை நாங்கள் ஐந்து பேர் இணைந்து எழுதினோம். இந்தக் குழு இரண்டு வருடங்களாக என்னுடன் இருக்கிறது. இது ஒரே ஒருவரால் தான் சாத்தியமானது.. அவர் சூர்யா சார். அவரிடம் 45 நிமிட கதை சொல்லலை மட்டுமே கொடுத்தேன். அதை கேட்டு அவர் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார். என் மனைவி கூட ஆச்சரியப்பட்டார். சூர்யா சார் !உன் இயக்கத்தில் படத்தில் நடிக்கிறார்களா? என்று கேட்டார். அவர் என் மீது நம்பிக்கையும் உறுதியும் வைத்திருந்தார். நான் அவருக்கு சிறந்ததை கொடுக்க விரும்பினேன். சூர்யா சார் திரையில் தன்னைத்தானே ரசித்து, ஜாலியாக இருந்து, ஒரு மாஸ் ஹீரோவாக தெரிய வேண்டும் என்று நான் விரும்பினேன். வழக்கமாக பெரிய ஹீரோ படங்களில் ஒவ்வொரு காட்சியிலும் ஹீரோ இருப்பார். ஆனால் ‘கருப்பு’ படத்தில் அவர் இல்லாத பல காட்சிகள் உள்ளன. எங்கள் கதைகளும் படத்தில் இருக்கின்றன. அவர் அதற்கு ஒப்புக் கொண்டார். அதை சிறப்பாக செய்து காட்டினார். திரையில் அவருடைய கண்களே பல விசயங்களை சொல்கின்றன. முதல் பாதியில் கமர்சியலும், இரண்டாம் பாதியில் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு உச்சகட்டத்துடன் கூடிய பரபரப்பும் இருக்கும். ஒரு மன்னன் தன் சிம்மாசனத்தை திரும்ப பெற வருகிறான்.

படத்தின் போஸ்டர்களில் ரிலீஸ் தேதியை ஏன் குறிப்பிடவில்லை என ரசிகர்கள் கேட்கிறார்கள். அப்படி செய்திருந்தால் தணிக்கை வாரியம் எங்கள் கதவை தட்டி இருக்கும். நாங்கள் அதை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம். உங்கள் பட்டாசுகளை தயாராக வைத்துக் கொள்ளுங்கள் மே 14 ஒரு கொண்டாட்டம் வரவுள்ளது. ” என்றார்.

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பேசுகையில், ‘: கருப்பு படத்தின் பாடல்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மலைக்க வைப்பதாக உள்ளது. அது என்னை மிகவும் நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. சூர்யா சார் பல கல்ட்( Cult) திரைப்படங்களை வழங்கி இருக்கிறார். அப்படிப்பட்ட சூழலில் இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு வந்த போது, நான் உடனடியாக அதை ஏற்றுக் கொண்டேன். பாலாஜி அண்ணா உடன் நடந்த முதல் சந்திப்பு மிக சிறப்பாகவும் மிக விசேஷமானதாகவும் அமைந்தது. ஆரம்பத்தில் எனக்கு சற்று தயக்கம் இருந்தது. இயக்குநர் ஆர் ஜே பி அண்ணாவை சந்திப்பதற்காக நான் காரில் சென்று கொண்டிருந்தேன். ஆனால் செல்லும் வழியிலேயே ட்விட்டரில் ‘சூர்யா 45’ படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார் என்ற செய்தியை பார்த்தேன். என் உடல் சிலிர்த்து போனது. அந்த தருணத்தை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது.

இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஒரு திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் ஒருவரை தேர்வு செய்வதற்கு முன் வேறு எந்த ஒரு சூப்பர் ஹீரோவாக இருந்தாலும் நிச்சயம் இரண்டு முறை யோசித்து இருப்பார்கள். ஆனால் சூர்யா சார் எந்த தயக்கமும் இன்றி என்னை ஏற்றுக்கொண்டு, இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பளித்தார். நான் இந்தப் படத்தை முழுமையாக பார்த்து விட்டேன். இந்தப் படத்தின் பின்னணி இசை நிச்சயம் பெரிய அளவில் பேசப்படும். மேலும் இந்தப் படம் ஒரு மிகப்பெரிய பிளாக் பஸ்டர் வெற்றியை பெறும் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை” என்றார்.

நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில், ” கருப்பு திரைப்படம் மிக சிறப்பான திரை கதையை கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக நான் பலமுறை ஒத்திகை மேற்கொண்டேன். நாங்கள் நடித்துக் காட்டிய ஒவ்வொரு காட்சியையும் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி நினைவில் வைத்துக் கொண்டு அவற்றை மிக சிறப்பாக முன்னெடுத்துச் சென்றார். சூர்யா சாரின் அழகு இன்றும் அப்படியே சற்று மாறாமல் இருப்பதை கண்டு நான் மிகவும் ரசிக்கிறேன். அதனால் தான் சூர்யா சாருக்கு இன்று வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடன் ரசிகர்கள் என்றென்றும் இருப்பார்கள்” என்றார்.

பாடலாசிரியர் விவேக் பேசுகையில், ” ‘சூரரைப்போற்று’ படத்தில் இடம்பெற்ற ‘வெய்யோன் சில்லி’ பாடல் மதுரை வட்டார வழக்கில் எழுதப்பட்டது. அதனைத் தொடர்ந்து ‘ரெட்ரோ’ மற்றும் ‘கருப்பு’ என அடுத்தடுத்து இரண்டு படங்களில் சூர்யா சாருடன் மீண்டும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. சாய் அபயங்கருடன் நான் தொடர்ந்து பலமுறை பணியாற்றி வருகிறேன். சுயாதீன பாடல்கள் முதல் திரைப்பட பாடல்கள் வரை அவருடன் இணைந்து உருவாக்கி உள்ளேன். நாங்கள் இணையும் போதெல்லாம் எங்களுக்கு இடையே ஒரு சிறப்பான உற்சாகம் நிலவும். இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே மிக சிறப்பாக அமைந்துள்ளன” என்றார்.

தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசுகையில், ” கருப்பு திரைப்படம் குறித்து நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஆர் ஜே பாலாஜி இந்தப் படத்தை மிகுந்த கலகலப்பு, உற்சாகம் மற்றும் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக்கியுள்ளார். பாலாஜி ஒரு தயாரிப்பாளரின் பணிச்சுமையை வெகுவாக குறைத்து, எங்கள் அனைவருக்கும் மிகவும் சவுகரியமானதொரு சூழலை அமைத்துத் தந்திருக்கிறார். இந்தப்படம் பிரம்மாண்டத்துடன் உருவாகி உள்ளது. இது ஒரு உண்மையான திருவிழா போன்ற உணர்வை ஏற்படுத்தும். ஒளிப்பதிவாளர் ஜி கே விஷ்ணுவுக்கும் தனது முதல் பெரிய திரைப்படத்தை எங்களுடன் இணைந்து உருவாக்கும் சாய் அபயங்கருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடிகை ஷிவதா பேசுகையில், ” மதுரையில் ‘கருப்பு ‘படத்தின் படப்பிடிப்பிற்காக வந்த போதே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது இந்த மேடை இன்னும் பிரம்மாண்டமான மாஸாக இருக்கிறது. இயக்குநர் ஆர் ஜே பாலாஜி சார் மூலமாக நான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். சூர்யா சாருடன் நான் இணைந்து நடித்த அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. அது எனது பிறந்த நாளாகவும் அமைந்தது. அந்த அனுபவம் மிகவும் உணர்வுபூர்வமானதாகவும், அழகானதாகவும் இருந்தது. இயக்குநர் ஆர் ஜே பாலாஜி சார் மிகவும் கலகலப்பான ஒரு மனிதர். படப்பிடிப்பின் போது பதற்றமான சூழல்கள் நிலவினாலும் கூட… அவர் மிகவும் இனிமையாக நடந்து கொள்வார்‌ படப்பிடிப்பு தளத்தில் தனது வேலையை அவர் மிகவும் ரசித்து செய்வார்” என்றார்.

நடிகை அனகா மாயா ரவி பேசுகையில், ” மதுரையில் நடைபெறும் இவ்வளவு பிரமாண்டமான ஒரு நிகழ்வில் நான் இதற்கு முன் கலந்து கொண்டதே இல்லை. இவை அனைத்திற்கும் காரணம் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி சார் தான். இவ்வளவு பெரிய திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி சார், சூர்யா சார் மற்றும் ஜோதிகா மேடமின் தீவிர ரசிகையாகவே நான் வளர்ந்தேன். அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஆனால் இப்போது அவருடன் இணைந்து ஒரு திரைப்படத்திலேயே நடித்து விட்டேன். எனக்கு தமிழ் மொழி அவ்வளவு ஆக சரளமாக வராது. ஆனால் அடுத்த முறை வரும்போது நன்றாக தயாராகிக்கொண்டு வருவேன்” என்றார்.

கலை இயக்குநர் அருண் வெஞ்சரமூடு பேசுகையில், ” ஜிகே விஷ்ணுவின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள ‘கருப்பு’ படத்தின் காட்சிகள் பெரிய அளவில் பேசப்படும். இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு படைப்பின் அங்கமாக இருந்தது.. எனக்கு ஒரு சிறந்த நினைவாக அமைந்துள்ளது. இந்த படத்திற்காக எனது முழு குழுவும் இரவும் பகலும் பாராமல் கடுமையாக உழைத்திருக்கிறோம். நான் சூரியா சாரின் தீவிர ரசிகன். அவரது படத்தில் பணியாற்றும் வாய்ப்பிற்காக நான் ஆவலுடன் காத்திருந்தேன். இப்போது இங்கு நின்று பேசும்போது நான் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன்.

நான் 10 அடி, 20 அடி உயரமுள்ள அரிவாள்களை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் வரும் ஒரு பாடலுக்காக நாங்கள் 85 அடி உயரமுள்ள ஒரு அருவாளை உருவாக்கினோம். எவ்வளவு பெரிய பிரம்மாண்டத்தில் மீண்டும் ஒரு படம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமா..? என்று தெரியவில்லை. திரையரங்குகளில் பார்வையாளர்களின் வரவேற்பினை காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் ” என்றார்.

விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில், ” எல் கே ஜி படத்தில் ஆர் ஜே பாலாஜியுடன் தொடங்கிய எனது பயணம்.. இப்போது ‘கருப்பு ‘திரைப்படம் வரை தொடர்கிறது. அவர் ஒரு அசுரத்தனமான உழைப்பாளி- அதாவது மிக கடுமையாக உழைக்கக்கூடிய ஒரு நபர் -அந்த உழைப்பை ‘கருப்பு’ படத்திற்காக அவர் பன்மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறார். படத்தின் திரைக்கதைக்காக அவர் பலதரப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி மிக ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

சூர்யா சாருக்கு ‘கருப்பு: திரைப்படம் இதுவரை ரசிகர்கள் கண்டிராத ஒரு புதிய அவதாரமாக அமையும். நான் சமீபத்தில் தான் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பை பெற்றேன். இயக்குநரின் முழு அனுமதியுடன் நான் இதை சொல்கிறேன். இது ரசிகர்களுக்கு ஒரு செம விருந்தாக அமையப்போகிறது.

இந்த ஆண்டில் சூர்யா சாருக்கு மூன்று படங்கள் வெளியாக உள்ளன. அந்த மூன்று படங்களுமே மிகப்பெரிய வெற்றியைப் பெறும். இந்த ஆண்டை நாம் ‘சூர்யாவின் ஆண்டு ‘என்று கொண்டாடுவோம் ”என்றார்.

திங்க் மியூசிக் சந்தோஷ் பேசுகையில், ” சூர்யா சாருக்கு ‘கருப்பு’ திரைப்படம் இதுவரை ரசிகர்கள் கண்டிராத ஒரு புதிய அவதாரமாக அமையும் .நான் சமீபத்தில் தான் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றேன். இயக்குநரின் முழு அனுமதியுடன் நானும் இதை சொல்கிறேன். இது ரசிகர்களுக்கு ஒரு ‘செம விருந்தாக ‘ அமையப்போகிறது” என்றார்.

வருமான பகிர்வு மற்றும் வேலை நிறுத்தம்

0

வணக்கம்,

பார்வை- 27.04.2026 தேதியிட்ட தங்கள் கடிதம்

பொருள்- வருமான பகிர்வு மற்றும் வேலை நிறுத்தம்

பார்வையில் காணும் தங்கள் கடிதம் கிடைக்கப் பெற்றோம்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மீது ஆதாரமற்ற குற்றம் சுமத்தி அதையே காரணமாகவும் முன்னிறுத்தி மே 2, 2026 தேதியன்று வேலை நிறுத்தம் செய்ய தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்து உள்ளீர்கள். இது எங்களுக்கு பேரதிர்ச்சியையும் பெரும் வேதனையும் அளிக்கிறது.

தொடர்ந்து தயாரிப்பாளர்களின் பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு காண அமைப்பு ரீதியாக தாங்கள் வேண்டுகோள் விடுத்த போதெல்லாம் சந்திப்புகள் நிகழ்த்தியும், பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் உறுதுணையாக தென்னிந்திய நடிகர் சங்கம் இருந்து வரும் நிலையில், தன்னிச்சையாக இந்த வேலை நிறுத்த அறிவிப்பை தாங்கள் வெளியிட்டது வருத்தத்திற்குரியது.

திரைத்துறை சார்ந்த நடிகர்கள், கலைஞர்கள் அனைவரது வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் வேலை நிறுத்தம் என்னும் அணுகுமுறையை என்றுமே தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரித்தது இல்லை, இனியும் ஆதரிக்காது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், தாங்கள் கடிதத்தில் குறிப்பிட்டதற்கு எதிர்மாறாக, நடிகர்கள் வருமான பகிர்வு முறையில் பணியாற்றுவது தொடர்பாக தங்கள் தரப்பிலிருந்து இதுவரை எங்களுக்கு எந்தவித கடிதமோ, மின்னஞ்சலோ அனுப்பப்படவில்லை என்பதையும், அது தொடர்பாக எந்தவித பேச்சு வார்த்தையும் நிகழ்த்த அழைக்கவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அத்துடன் தென்னிந்திய நடிகர் சங்கம் ஒருபோதும் தனது உறுப்பினர்களை வேலை நிறுத்தம் செய்யுமாறு அறிவுறுத்த எங்கள் சட்ட விதிகளில் இடமில்லை என்பதையும் இதன் வாயிலாக பதிவு செய்கிறோம்.

கடந்த சுமார் ஓர் ஆண்டுக்கு முன்னரே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னெடுப்பினால், தமிழ் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் இரு தரப்பினருக்கும் இடையே இணக்கமான சூழலை உருவாக்கும் அமைப்புகள் ரீதியிலான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரைவோலையை நம் இருதரப்பின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் குழுவின் கலந்தாலோசனைக்குப் பிறகு இறுதி செய்து, அதை தங்களிடம் நாங்கள் ஒப்படைத்ததையும், அது தொடர்பாக தங்கள் தரப்பிலிருந்து இது நாள் வரை எந்த நகர்வும் இல்லை என்பதையும் நினைவுபடுத்துகிறோம்.

இதுவரை எங்கள் தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட நீண்ட புகார் பட்டியலில் உள்ள எந்த புகாருக்கும் தங்கள் தரப்பிலிருந்து எவ்வித தீர்வும் வழங்கப்படாமல் முடிவின்றி நீண்டு வருவதையும் தாங்கள் மறுக்க இயலாது.

ஆகவே தங்கள் உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தையும் முதலீட்டையும் கூட பிரதானமாக பாதிக்கக்கூடிய இந்த தன்னிச்சையான வேலை நிறுத்த அறிவிப்பை திரும்பப் பெறுமாரும், முன்னரே இரு அமைப்புகளும் ஒப்புக்கொண்டபடி 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள், மே 4-ஆம் தேதி வெளியான பிறகு, பரஸ்பரம் பொருத்தமான ஒரு தேதியில் இரு அமைப்பின் பிரதிநிதிகளும் சந்தித்து அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசனை செய்து தீர்மானிக்கலாம் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இதனிடையே, கடந்த இரு தினங்களாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெகு வேகமாக பரவி வரும் தங்கள் அமைப்பின் சமீபத்திய பொதுக்குழு தீர்மானங்களின் நகலும், பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பான செய்திகளும், தென்னிந்திய நடிகர் சங்கத்தையும், அதன் உறுப்பினர்களையும் மட்டுமே திரைத்துறையின் சிக்கல்கள் அனைத்திற்கும் முழுமையான காரணமாக வடிவமைத்து, சித்தரித்து வருவது பெரும் வேதனைக்குரியது.

அது தவறான தகவல் எனில் உடனடியாக அதை மறுத்து தங்கள் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடுமாறும், அந்தத் தகவல்கள் தங்கள் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டிருந்தால் உடனடியாக அத்தகு உண்மைக்கு புறம்பான அறிக்கையை, நமது சந்திப்பிற்கு முன்னர் திரும்பப் பெறுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இணைந்து செயல்பட்டு தமிழ் திரைத்துறையினர் அனைவரின் நல்ல நிகழ் காலத்திற்காகவும், வளமான வருங்காலத்திற்காகவும் எங்கள் ஒத்துழைப்பை நல்க என்றென்றும் ஆயத்தமாக உள்ளோம். அதையே துறை சார்ந்த பிறரிடமும் எதிர்பார்க்கிறோம்.

நன்றி வணக்கம்

Commandovin Love Story Movie Review

0

Commandovin Love Story is a tender 2026 Tamil romantic drama directed by Veera Anbarasu, starring Veera Anbarasu as the disciplined commando Vin who returns home as Republic Day chief guest, forging a quiet, profound bond with a brilliant Ph.D. student (Angel Sharma) during his brief journey, only for duty to pull him away—leaving behind an unsent letter that raises poignant questions of love, fate, and unfinished emotions.

In my warm written-style embrace, this gentle love tale unfolds like a whispered promise amid ceremonial parades—Vin’s stoic uniform meets intellectual curiosity in fleeting moments that brew authentic chemistry, turning a soldier’s disciplined world into a soft celebration of serendipitous connection and longing that hooks with emotional sincerity over grand gestures.

Veera Anbarasu commands with restrained heroism and subtle vulnerability as the duty-bound commando, owning every meaningful glance and internal conflict; Angel Sharma radiates thoughtful grace as the Ph.D. scholar, their understated chemistry weaving quiet magic, while supports like Cool Suresh and Robo Shankar add warm, lived-in texture to the journey’s emotional core.

Delicate screenplay captures the ache of interrupted romance beautifully, Pavalar V. Sivaraman’s melodic score elevates reflective highs with patriotic undertones, and the letter motif lands goosebump introspection on love’s fragile timing—public reviews praise its clean, heartfelt narrative as a refreshing change for feel-good crowds craving sincerity.

Veera Anbarasu’s direction balances military crispness with romantic warmth seamlessly, tight editing sustains gentle momentum without dragging, turning a simple premise into an intimate, memorable reflection on chance encounters and what-ifs.

A touching 3.25/5 tender triumph—Commandovin Love Story’s quiet sparks, emotional truth, and fateful vibes make it essential for romance fans craving sincere, uniform-clad heart swells!

Commandovin Love Story | Veera Anbarasu | Angel | (Pavalar) V.Sivaraman | Karthick Raja

Starring: Veera Anbarasu, angel
Story, Screenplay, Dialogues & Direction by: Veera Anbarasu
Banner: AAA Pictures
Produced by : Anuradha Anbarasu
Music: (Pavalar) V.Sivaraman
Background Music : Karthick Raja
Lyrics: Thenmozhi Das, Pazhani Bharathi
Cinematographer: Williams
Action: Golden N.Gopal
Editor: CR. Bhuvanesh
Dance Choreography: Dayana
Costume designers: AR. Nadhan
Make Up : Dhinesh
Dialogue Writer: Veera Anbarasu
Stills: Ramesh
Publicity Designer: Sathish.J
PRO: Govindharaj
Subtitles – Aravind Sound
Designer: Aswanth
Sound Mixer : K.Senthil Prasath
VFX: Dnote
DI: Infinity Media
Colourist : Dheepan
Associate Director: J.Jayakumar
Digital Marketing : Pradeep durai

- Advertisement -

Recent Posts