- Advertisement -
Home Blog Page 152

Kavin to Star in Director Ram Sangaiah’s Next Film – Project Launched Under Prince Pictures

0

Dynamic performer and leading star Kavin, known for his growing popularity and impactful performances in Tamil cinema, is set to headline an exciting new film directed by Ram Sangaiah, the acclaimed filmmaker behind Thandatti.

This marks Ram Sangaiah’s highly anticipated follow-up after his well-received debut, and the film will be produced by S. Lakshman Kumar under the Prince Pictures banner—(production No 18) with A. Venkatesh as co-producer. Shooting is scheduled to commence soon.

Details about the heroine, supporting cast, and technical crew will be officially announced in the coming days.

கதாநாயகன் கவின் நடிப்பில் “தண்டட்டி” திரைப்படத்தின் இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் புதிய படம் தொடக்கம்

தமிழ் சினிமாவில் வெற்றி கதாநாயகனாக   வலம் வருபவர் நடிகர் கவின். இவர் தற்போது பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S . லக்ஷ்மன் குமார்,  இப்படத்தை தயாரிக்க, இணை தயாரிப்பை  A வெங்கடேஷ் மேற் கொள்கிறார்.  

Prince Pictures Production no 18 ஆக வளர்ந்து வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது

இதில் பங்கு பெரும் மற்ற நடிகை நடிகையர் தொழில்நுட்ப கலைஞர் பற்றிய விபரங்கள் வெகு விரைவில் தெரிவிக்கப்படும்.

‘GANDHI – Mantras of Compassion’, a Global Musical Tribute to MAHATMA GANDHI

0

3-time Grammy®-Award Winner Ricky Kej collaborates with Nobel Peace Prize Laureate Kailash
Satyarthi for a global musical collaboration that pays tribute to Mahatma Gandhi’s enduring ideals.

Today, July 14th, marks the release of the album. This New Age music album is a heartfelt tribute to Mahatma Gandhi, India’s Father of the Nation, and his enduring message of non-violence, peace, and compassion.

Joining Ricky Kej on this remarkable album are world-renowned musicians Tina Guo, a Chinese- American cellist, and Masa Takumi, a Grammy Award-winning Japanese composer and shamisen player. Together, they have created a deeply immersive musical experience that blends ancient Indian mantras with contemporary global sounds, weaving a soundscape that resonates with Gandhi’s timeless values.

“Mahatma Gandhi inspired generations of changemakers, from Martin Luther King Jr. to Nelson Mandela. This album is our humble offering to keep that flame alive. Music has the power to transcend boundaries, just as Gandhi’s message did,” said Ricky Kej.

Nobel Laureate Kailash Satyarthi, whose life’s work has focused on children’s rights and peace, lends his voice and vision to the project. His collaboration underscores the album’s deeper mission: to awaken global consciousness through art.

“Mahatma Gandhi was assassinated on January 30th, 1948. But the assassin did not know that some people never die. Gandhi is indeed one of them. His life lessons are universal and timeless. Gandhi will continue to guide us beyond geography, and through the ages,” said Kailash Satyarthi.

Over 200 musicians from more than 40 countries came together for this epic musical album, resulting in a tapestry of cultural harmony and musical unity.

The album was produced by Lonnie Park, Jordan Buetow, and Kailash Satyarthi, and Vanil Veigas, with Sumathy Ram serving as co-producer.

The inspiration behind the album’s concept has personal roots for Sumathy Ram, an Indian American originally from Tamil Nadu. Sumathy was very creatively fulfilling to work with the team on this album, right from its conception to completion. Sumathy affirmed that the music of the ‘GANDHI – Mantras of Compassion’ album is a tribute to Gandhi’s ideals and motivates us to carry them forward, ideals such as Satyagraha, Sarvodaya, Swadharma, Swadesh, and Swaraj.

“This album highlights Ricky Kej’s signature musical style while reimagining Gandhi’s legacy for today’s world. The epic album is more than just a tribute, it is also a call for reflection, feeling, and living with greater compassion for values such as Ekam, Satya, Ahimsa, and Karuna,” said Sumathy Ram.

The album’s title, GANDHI – Mantras of Compassion, reflects the deep spiritual tone of the work. Each track carries the essence of Gandhi’s teachings, messages of love, tolerance, inner strength, and peaceful resistance. At a time when the world is facing profound challenges, this music serves as a reminder of the relevance and power of Gandhi’s message today.

The anticipation is escalating as the release date is today on July 14 for what promises to be a musical journey with a global resonance, one that doesn’t just celebrate Gandhi’s life, but seeks to bring his message alive in sound, soul, and spirit.

மும்முறை கிராம விருது வென்ற ரிக்கி கேஜ் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி ஆகியோர் இணைந்து மகாத்மா காந்திக்கு செலுத்தும் சர்வதேச இசை அஞ்சலி

உலகின் முன்னணி இசைக் கலைஞர்களான ரிக்கி கேஜ், டினா குவோ மற்றும் மசா டக்குமி ஆகியோர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி உடன் இணைந்து இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளனர்.

இவர்களில் ரிக்கி கேஜ் மூன்று முறை இசையின் உச்ச மரியாதையான கிராம விருதுகளை வென்றுள்ளதும், சீன-அமெரிக்க இசைக்கலைஞரான டினா குவோ பல்வேறு உயரிய விருதுகளை பெற்றுள்ளதும் ஜப்பானிய இசைக் கலைஞரான மசா டக்குமி கிராமி விருதை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

‘காந்தி – மந்த்ராஸ் ஆஃப் கம்ப்பேஷன்’ (GANDHI – Mantras of Compassion) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இசை ஆல்பம் ஜூலை 14 அன்று வெளியானது. இந்த தலைப்பின் பொருள் கருணையின் மந்திரம் காந்தி என்பதாகும்.

காந்தியடிகளின் தத்துவங்களான அகிம்சை, அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆகியவற்றை பறைசாற்றும் விதமாக 40 நாடுகளில் இருந்து 230 இசைக் கலைஞர்களின் பங்களிப்போடு இந்த இசை ஆல்பம் உருவாகி உள்ளது. உலக நாடுகள் பல்வேறு சவால்களை சந்தித்து வரும் இந்த காலகட்டத்தில் மகாத்மா காந்தி போதித்த விழுமியங்கள் இன்றைக்கும் எவ்வளவு சக்தி வாய்ந்தவை என்பதை எடுத்துரைக்கும் விதமாக இந்த ஆல்பம் அமைந்துள்ளது.

பண்டைகால சர்வதேச மற்றும் இந்திய இசை முதல் இன்றைய நவீன இசை வரை அனைத்தையும் ஒன்றாய் பிணைத்து ஒரு ஆத்மார்த்த இசை அனுபவத்தை வழங்கும் ‘காந்தி – மந்த்ராஸ் ஆஃப் கம்ப்பேஷன்’ இசை ஆல்பம் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து பேசிய ரிக்கி கேஜ், “மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் முதல் நெல்சன் மண்டேலா வரை பல தலைமுறைகளின் தலைவர்களுக்கு மகாத்மா காந்தி உந்து சக்தியாக திகழ்கிறார். அவரது தத்துவ ஜோதியை அணையாமல் காப்பதற்கான எங்களது சிறிய காணிக்கையே இந்த ஆல்பம். மகாத்மா காந்தியை போன்று எல்லைகளை கடந்து தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி இசைக்கும் உள்ளது,” என்று தெரிவித்தார்.

இசை ஆல்பம் குறித்து பேசிய அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி, “மகாத்மா காந்தியை கொன்றவருக்கு சில மனிதர்கள் என்றுமே மறைவதில்லை என்பது தெரிந்திருக்கவில்லை. காந்திக்கு என்றும் அழிவில்லை, அவரது வாழ்க்கைப் பாடங்கள் காலத்தை கடந்தவை மற்றும் ஒட்டுமொத்த உலகத்திற்குமானவை. தேசம், காலம் உள்ளிட்ட அனைத்தையும் கடந்து காந்தியடிகள் நம்மை தொடர்ந்து வழி நடத்துகிறார். அதற்கான சான்று தான் இந்த இசை அஞ்சலி,” என்று கூறினார்.

லோனி பார்க், ஜோர்டன் புட்டோவ், கைலாஷ் சத்யார்த்தி மற்றும் வானில் வெய்காஸ் ஆகியோர் தயாரித்துள்ள இந்த ஆல்பத்தின் இணை தயாரிப்பாளர் சுமதி ராம் ஆவார்.

இந்த இசை ஆல்பத்தின் பின்னணியில் உள்ள உத்வேகம் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய அமெரிக்கரான சுமதி ராமின் தாய்மண் சார்ந்த கலாச்சார வேர்களோடு பிணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இசை ஆல்பத்தின் உருவாக்கம் தொடங்கியது முதல் நிறைவு வரை, குழுவினருடன் இணைந்து ஆக்கபூர்வமாக பணியாற்றியது குறித்து சுமதி திருப்தி கலந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ‘காந்தி – மந்த்ராஸ் ஆஃப் கம்ப்பேஷன்’ ஆல்பத்தின் இசை காந்தியின் கொள்கைகளுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும், சத்தியாக்கிரகம், சர்வோதயம், ஸ்வதர்மா, சுதேசி மற்றும் சுயராஜ்யம் போன்ற கொள்கைகளை முன்னோக்கி கொண்டு செல்ல நம்மைத் தூண்டுவதாகவும் சுமதி கூறினார்.

“இந்த ஆல்பம் இன்றைய உலகிற்கு காந்தியின் லட்சியங்களை எடுத்துச் சொல்லும் அதே வேளையில் ரிக்கி கேஜின் பிரத்தியேக இசை பாணியை தாங்கி வருகிறது. இந்த ஆல்பம் வெறும் அஞ்சலி என்பதோடு மட்டுமில்லாமல், ஒற்றுமை, சத்தியம், அகிம்சை மற்றும் கருணை போன்ற விழுமியங்களை சிந்தித்து, உணர்ந்து, அன்புடனும் மகா கருணையுடனும் வாழ்வதற்கான அழைப்பாகவும் திகழ்கிறது,” என்று சுமதி ராம் கூறினார்.

இந்த இசை ஆல்பத்தின் தலைப்பு ‘காந்தி – மந்த்ராஸ் ஆஃப் கம்ப்பேஷன்’, இப்படைப்பின் ஆழமான ஆன்மாவை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு பாடலும் காந்தியின் போதனைகளான அன்பு, சகிப்புத்தன்மை, மன வலிமை மற்றும் அமைதியான எதிர்ப்பு ஆகியவற்றின் சாரத்தை தாங்கி வருகிறது. உலகம் ஆழமான சவால்களை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில், இந்த இசை ஆல்பம் காந்தியின் போதனைகளின் சக்தியையும் இன்றைய காலகட்டத்திற்கும் அவை பொருத்தமாக உள்ளதையும் நினைவூட்டுகிறது.

ஜூலை 14ம் தேதி வெளியாகி உள்ள இந்த இசை ஆல்பம் உலகளாவிய அளவில் எதிரொலிக்கும் இசைப் பயணமாக இருக்கும். இது காந்தியின் வாழ்க்கையை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், அவரது செய்தியை மக்களின் உணர்வில் உயிர்ப்பிக்க முயலும் ஒரு பயணமாக இருக்கும்.

On The Occasion Of Karunada Chakravarthy Shiva Rajkumar’s Birthday, His Powerful First Look From Global Star Ram Charan’s Peddi Unveiled

0

Global star Ram Charan is set to redefine action cinema with Peddi, a rural sports action drama that blends intense character arcs with never-before-seen cinematic spectacle. Helmed by director Buchi Babu Sana, the film is currently making waves with its ambitious scale, gripping character reveals, and gripping First Shot Glimpse. Produced by Venkata Satish Kilaru’s Vriddhi Cinemas, and presented by leading banners Mythri Movie Makers and Sukumar Writings, Peddi is being mounted on an unprecedented scale.

Meanwhile the makers wishing the actor on his birthday unveiled the first look of Kannada superstar Shiva Rajkumar who is playing a pivotal role in the movie. With a fierce stare, thick handlebar moustache, and rugged demeanor, Shiva Rajkumar brings a commanding presence to Peddi that elevates the film’s intensity. His character, Gournaidu, is portrayed as a figure of immense power and authority.

The film also stars Janhvi Kapoor as the female lead, with Jagapathi Babu and Divyendu Sharma in key supporting roles.

Behind the lens is renowned cinematographer R Rathnavelu, while the soundtrack is composed by Oscar-winning maestro A.R. Rahman. National Award-winning editor Navin Nooli handles the cut.

As the team races toward its targeted release date of March 27, 2026, coinciding with Ram Charan’s birthday, the anticipation around Peddi continues to soar.

Cast: Global Star Ram Charan, Janhvi Kapoor, Shiva Rajkumar, Jagapathi Babu, Divyendu Sharma

Technical Crew:
Writer, Director: Buchi Babu Sana
Presents: Mythri Movie Makers, Sukumar Writings
Banner: Vriddhi Cinemas
Producer: Venkata Satish Kilaru
Music Director: AR Rahman
DOP: R Rathnavelu
Production Design: Avinash Kolla
Editor: Navin Nooli
Executive Producer: V. Y. Praveen Kumar
Marketing: First Show
PRO: Yuvraaj

கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘பெத்தி’ படத்திலிருந்து அவரது அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது!!

குளோபல் ஸ்டார் ராம் சரண், நடிப்பில், கிராமிய பாணியில் உருவாகும் ஸ்போர்ட்ஸ் ஆக்சன் திரைப்படம் ‘பெத்தி’ . பர்ஸ்ட் லுக்கிலேயே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படத்தினை, இயக்குநர் புஜ்ஜி பாபு சனா இயக்கியுள்ளார். இந்தப் படத்தினை, வெங்கட சதீஷ் கிலாருவின் விருத்தி சினிமாஸ் தயாரிக்க, முன்னணி பேனர்களான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்குகிறார்கள்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று அவரது காதாப்பத்திரத்தை வெளிப்படுத்தும் ஃபர்ஸ்ட் லுக்கை, படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கம்பீரமான பார்வை, கன்னத்தில் திருத்தப்பட்ட மீசை மற்றும் உருக்கமான தோற்றத்துடன், ‘கௌர்நாயுடு’ எனும் வீரமிகுந்த கதாபாத்திரத்தில் அவர் மிரட்டும் வகையில், ஃபர்ஸ்ட் லுக் அசத்தலாக அமைந்துள்ளது.

இந்தப் படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாகவும், ஜகபதி பாபு மற்றும் திவ்யேந்து சர்மா ஆகியோர் முக்கிய துணை வேடங்களிலும் நடிக்கின்றனர்.

பிரபல ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார், ஆஸ்கார் விருது பெற்ற மேஸ்ட்ரோ ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். தேசிய விருது பெற்ற எடிட்டர் நவீன் நூலி எடிட்டிங் செய்கிறார்.

ராம் சரணின் பிறந்தநாள் கொண்டாட்டமாக , மார்ச் 27, 2026 அன்று “பெத்தி” படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக், வித்தியாசமான ராம்சரண் லுக், சிவராஜ்குமார் லுக் என, “பெத்தி” படம் பற்றிய எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நடிகர்கள்: குளோபல் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம் : புஜ்ஜி பாபு சனா
வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ்
தயாரிப்பு நிறுவனம் : விருத்தி சினிமாஸ்
தயாரிப்பாளர் : வெங்கட சதீஷ் கிலாரு
இசையமைப்பாளர் : AR ரஹ்மான்
ஒளிப்பதிவு : ஆர் ரத்னவேலு
தயாரிப்பு வடிவமைப்பு : அவினாஷ் கொல்லா
எடிட்டர் : நவின் நூலி
நிர்வாக தயாரிப்பாளர் : V. Y.பிரவீன் குமார்
மார்க்கெட்டிங்க் : ஃபர்ஸ்ட் ஷோ
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Vijay Surya Films Announces 4K Re-Release of Cult Classic Pudhupettai on July 26 to Celebrate Actor Dhanush’s Birthday

0

In celebration of the acclaimed actor Dhanush’s birthday, Pudhupettai – the cult classic gangster drama, is set to return to theatres with a brand-new 4K remastered version. The re-release will take place across Tamil Nadu from July 26, 2025, courtesy of Vijay Surya Films, spearheaded by Mrs.S.Vijaya Nirmala Saravana Bava.

Originally released in 2006, Pudhupettai directed by Selvaraghavan and starring Dhanush in a career defining role left an indelible mark on Tamil cinema. Known for breaking conventional boundaries of the gangster genre, the film delved deep into the psychological landscape of its characters and the socio political forces that shaped them. With powerful performances by Sonia Agarwal, Sneha, and a brief yet memorable appearance by Vijay Sethupathi, the film became a benchmark in storytelling and cinematic realism.

Scored by renowned composer Yuvan Shankar Raja, Pudhupettai continues to resonate with audiences, earning its place as a timeless classic.

The upcoming re-release offers a visually enhanced experience with upgraded sound and visuals, making it a must-watch for longtime fans and a new generation of moviegoers alike.

Actor Dhanush, celebrated for his versatility and global reach from South Indian cinema and Bollywood to Hollywood is more than just a performer. He’s also a producer, lyricist, singer, and director. This re-release stands as a tribute to his multifaceted contributions to Indian cinema.

Pudhupettai 4K – Releasing July 26 in theatres across Tamil Nadu. A cinematic milestone returns. Don’t miss this opportunity to relive a classic, reimagined for today’s audience.

ஜூலை 26ல் தனுஷின் புதுப்பேட்டை படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் விஜய் சூர்யா பிலிம்ஸ் நிறுவனம்!

தமிழ் சினிமாவின் நடிகர்களில் தனுஷ் மிகவும் தனித்துவமானவர் . தென்னிந்தியா, பாலிவுட் எல்லாம் தாண்டி ஹாலிவுட் வரை தனது நடிப்பு எல்லையை விரிவுபடுத்தியவர். இன்னொரு பக்கம் நடிப்பையும் கடந்து தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் மற்றும் இயக்குநர் என இன்னும் பல முகங்கள் அவருக்கு உண்டு.

நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த ‘புதுப்பேட்டை’ திரைப்படம் வரும் ஜூலை 26-ம் தேதி தமிழ்நாட்டில் மறுவெளியீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுப்பொலிவிவுடன் இப்படம் வெளியாகவுள்ளதால் தனுஷின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

கடந்த 2006-ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் ‘புதுப்பேட்டை’. தமிழ்சினிமாவில் கேங்ஸ்டர் படங்களை புதுப்பேட்டைக்கு முன் – பின் என வகைப்படுத்தும் அளவிற்கு இப்படத்தின் தாக்கம் ரசிகர்களிடையே உள்ளது. புதுப்பேட்டை தமிழ் சினிமாவில் கேங்ஸ்டர் படங்களுக்கு ஒரு புதிய வரையறையை கொண்டு வந்தது. இதற்கு முன் கேங்ஸ்டர் படங்கள் பெரும்பாலும் ஆக்ஷன் மற்றும் வன்முறையை மையப்படுத்தியிருந்தது.

ஆனால் இந்த படம் கதாபாத்திரங்களின் உளவியல் ஆழத்தையும், சமூக அமைப்பின் தாக்கத்தையும் எடுத்துக்காட்டியது. தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் என அழைக்கப்படும் இப்படத்தில் சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.நடிகர் விஜய்சேதுபதி இந்தப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தற்போது தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 26ம் தேதியன்று புதுப்பேட்டை படத்தை ரீ மாஸ்டரிங் செய்து டிஜிட்டல் பொழிவில் 4K தரத்தில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு இப்படத்தை திருமதி S .விஜய நிர்மலா சரவண பவா அவர்கள் விஜய் சூர்யா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ரீ -ரிலீஸ் செய்கிறார் . தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டமாக இந்த வருடம் அவரது ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்து கிடைக்க போகிறது என்பது மட்டும் உறுதி.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிக்கும் ‘தலைவன் தலைவி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

0

இந்நிலையில் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் டி. ஜி. தியாகராஜன், தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மேனன், இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் ரோஹன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன் பேசுகையில், ”மூன்றாவது தலைமுறையாக திரைப்படங்களை தயாரித்து தயாரிப்பாளராக பணியாற்றி வருகிறோம். தொடர்ந்து ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘தலைவன் தலைவி’ அற்புதமான குடும்பத் திரைப்படம். இயக்குநர் பாண்டிராஜ் ஒரு சுயம்பு. அவருடைய தனிப்பட்ட முயற்சியில் மிகப் பெரும் இயக்குநராக உருவாகி இருக்கிறார். அவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் தான். அவர் கதை சொன்னபோது அப்பாவுக்கு பிடித்திருந்தது. எங்களுக்கும் பிடித்திருந்தது.

விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. அவருடைய புகழ் இன்று சீனா வரை பரவி இருக்கிறது. அவர் நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் அங்கு இந்திய மதிப்பில் எண்பது கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. ஹாங்காங்கில் அவர் ஹாலிவுட் நடிகர் டென்செல் வாஷிங்டனுக்கு இணையாக புகழ் பெற்றிருக்கிறார்‌. அந்த அளவிற்கு அவர் ரசிகர்களிடம் சென்றடைந்திருக்கிறார். கொல்கத்தாவிலும் அவரைப் பற்றி பேசுகிறார்கள். அவர்கள் ‘தமிழ் சினிமா என்றால் விஜய் சேதுபதி தான்’ என சொல்கிறார்கள். அவருடைய புகழ் எங்களுக்கு மிகவும் பொக்கிஷமாக இருந்ததுடன், அவருடன் இணைந்து பணியாற்றுவதும் பெருமிதமாக இருக்கிறது.

நித்யா மேனனை பற்றி குறிப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. அவர் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும், அவருடன் மிகப்பெரிய நட்சத்திர நடிகர் நடித்தாலும், அவருடைய தனி திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடிப்பவர். அவருடன் இணைந்து பணியாற்றுவதும் எங்களுக்கு கிடைத்த பாக்கியமாகவே கருதுகிறோம்.

இந்தப் படத்தில் பாடல்களை அனைத்தும் அற்புதமாக வழங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். புதிய புதிய ஓசைகளையும் கொடுத்திருக்கிறார். ஆதி கால தமிழர்களின் இசையை உலகத் தரத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறார்.

‘தலைவன் தலைவி’ மிகப்பெரிய கேளிக்கை படமாக அமையும். ரசிகர்களும், ஊடகங்களும் இந்த படத்திற்கு பேராதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நாயகன் விஜய் சேதுபதி பேசுகையில், ”எங்கிருந்து தொடங்குவது என தெரியவில்லை. இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் போது ஏராளமான சண்டை, சச்சரவுகள் இருந்தன. அதற்கு இடையில் தான் இப்படத்தின் பணி தொடங்கியது. படத்தின் இயக்குநரும், நாயகனும் ஒன்று சேர்ந்த தருணம் இருக்கிறதே, அதை நாங்களே எதிர்பார்க்கவில்லை. இவருடன் இணைந்து பணியாற்றக்கூடாது என்று அவரும், இவரது இயக்கத்தில் பணியாற்றக் கூடாது என்று நானும் இருந்த காலகட்டம் அது. இரண்டு பேருக்கும் இடையில் தனிப்பட்ட முறையில் எந்த கோபமும் இல்லை. அதனால் அழகான தருணத்தில் ஒரு சிறிய பூ எப்படி இயல்பாக மலருமோ, அதேபோல் எங்களுக்கு இடையேயான கோபம் மறைந்து, அன்பு மலர்ந்தது. அதன் பிறகு எல்லா விஷயங்களும் படபடவென நடந்தன.

கிட்டத்தட்ட இயக்குநரை எனக்கு 2009ம் ஆண்டிலிருந்து தெரியும். ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்திற்காக தேசிய விருதினை வென்ற போது நாங்கள் இருவரும் சந்தித்து உரையாடி இருக்கின்றோம். இப்போது இணைந்திருப்பது எப்படி இருக்கிறது என்றால்.ஒரு மிகப்பெரிய வட்டம் நிறைவடைந்தது போல் இருந்தது.
இந்த படத்தின் பணிகள் தொடங்கியது ஒரு அற்புதமான அனுபவம்.

சத்யஜோதி நிறுவனத்தை பற்றி தெரியும். ‘மூன்றாம் பிறை’ படத்தின் மூலம் தான் இவர்கள் தங்களுடைய தயாரிப்பை தொடங்கி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டபோது ஆச்சரியமாக இருந்தது. இவர்களின் தயாரிப்பு நிறுவனத்தில் நான் நடித்ததும், இணைந்து பணியாற்றியதும் எனக்கு மிகவும் சந்தோஷம் . இந்த நிறுவனத்துடன் முதன் முதலாக நான் இணைந்து பணியாற்றியதை பெருமிதமாக கருதுகிறேன்.

நித்யா மேனனுடன் 2020ம் ஆண்டில் ’19 (1) (ஏ) ‘ என்ற மலையாள படத்தில் இணைந்து நடித்திருக்கிறேன். அது கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படம். இயக்குநர் இந்துவின் வேண்டுகோளை ஏற்று, அவர் சொன்ன கதை எனக்கு பிடித்திருந்ததால் அந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தேன். அப்போது நித்யா மேனன் தான் கதாநாயகி என எனக்கு தெரியாது. படப்பிடிப்பு தளத்தில் இணைந்து பணியாற்றிய போது.’வாய்ப்பு கிடைத்தால் நாம் இருவரும் இணைந்து பணியாற்றுவோம்’ என பேசிக்கொண்டோம். ஆனால் அந்த வாய்ப்பு ‘தலைவன் தலைவி’ படத்தில் இப்படி அமையும் என்று எதிர்பார்க்கவில்லை.

நித்யாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால் இப்படி ஒரு வேடத்தில் அவர்களுடன் இணைந்து நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. இது படம் பார்த்த பிறகு உங்கள் அனைவருக்கும் புரியும். அவருடனும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அந்த கதாபாத்திரத்தில் நித்யாவை தவிர வேறு யாரையும் நினைத்து கூட பார்க்க இயலாது. கிட்டத்தட்ட அவர் நடித்த எல்லா கதாபாத்திரமும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். நித்யா ஒரு படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கிறார் என்றால் அந்த கேரக்டரில் வேறு யாரையும் நினைத்து கூட பார்க்க முடியாது. அப்படியொரு அற்புதமான நடிப்பை வழங்குபவர்.

படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்தோம், இதுதான் காட்சி, இதுதான் வசனம், இதுதான் நடிப்பு, இதுதான் நடனம் என்று இயல்பாக கடந்து செல்ல மாட்டார். அதை முழுமையாக உணர்ந்து அந்த கதாபாத்திரத்திற்காக என்ன செய்யலாமோ அல்லது அதனை எப்படி எல்லாம் திரையில் காண்பிக்கலாமோ அல்லது இயக்குநர் என்ன எதிர்பார்க்கிறாரோ இவை அனைத்தையும் சரியாக புரிந்து கொண்டு அதை சரியாக வழங்கிட வேண்டும் என்று மெனக்கெடும் அற்புதமான நடிகை தான் நித்யா. அவருடன் இணைந்து பணியாற்றியதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பாண்டிராஜ் பற்றி சொன்னேன். நிறைய இயக்குநர்களுடன் பணியாற்றி இருக்கிறேன்.
இதை ஒரு பயணத்துடன் ஒப்பிடுகிறேன். பிரயாணம் செய்து கொண்டிருப்போம். தோராயமாக 500 கிலோமீட்டர் தூரத்திற்கு பயணம் செய்கிறோம் என்றால்.. அதில் ஒவ்வொரு கிலோ மீட்டரும் மனதில் தங்காது. ஏதோ ஐந்தாறு இடங்கள் நினைவில் பசுமையாய் தங்கிவிடும். எங்காவது இளைப்பாறியிருப்போம், எங்காவது உட்கார்ந்து இயற்கையை ரசித்திருப்போம், எங்காவது சாப்பிட்டிருப்போம், எதுவும் செய்யாமல் நின்று இருப்போம், மேகங்களை ரசித்திருப்போம், புகைப்படம் எடுத்திருப்போம். அந்த நினைவுகள் மட்டும் தான் அந்த பயணத்தில் கிடைத்திருக்கும். அந்த நினைவுகளை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்தி பார்க்கும்போது மீண்டும் மற்றொரு முறை பயணம் செய்யலாமா எனத் தோன்றும். அதைப் போன்று தான் அவருடன் நான் இணைந்து பணியாற்றியது. மிக அற்புதமான பயணத்தில் கிடைக்கக்கூடிய நினைவுகளை போன்றது தான் அது.

உண்மையை சொல்லப்போனால் சற்று கடினமாக இருந்தாலும், அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.

படப்பிடிப்பு தளத்தில் கடைசி நாளன்று படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்துவிட்டு ஓய்வாக 45 நிமிடங்களுக்கு மேலாக அனைவரும் ஒன்றாக பேசிக்கொண்டிருந்தோம். அப்போது படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதே, இன்னும் ஒரு வார காலம் நீடித்திருக்கலாமே என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த அளவிற்கு படப்பிடிப்பு முழுவதும் இனிமையான அனுபவங்கள். படப்பிடிப்பு தளத்தில் மிகப்பெரிய குடும்பமாக ஒன்றிணைந்து பணியாற்றினோம்.

இந்தத் திரைப்படத்தில் மகிழினி என்ற பெண் குழந்தை நடித்திருக்கிறார். திரைக்கதையில் ஆண் குழந்தை தான் இருந்தது. ஆனால் இயக்குநர் மகிழினியை பார்த்தவுடன் இவர் தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என தேர்வு செய்தார். இந்தப் படத்தில் எங்களை ஆசீர்வதிக்க வந்த தெய்வ குழந்தை தான் மகிழினி என்று நான் நினைக்கிறேன்.

திரைக்கதையில் இயக்குநர் எழுதியதை குழந்தையான மகிழினி நடிக்குமா என்ற எதிர்பார்ப்பும், ஆச்சரியமும் இருந்தது. இயக்குநரிடம் நீங்கள் எழுதியதெல்லாம் திரையில் வருமா என்று கேட்டேன். அவர் வரும், நடக்கும் என்றார். அவர் இயக்கத்தில் வெளியான ‘பசங்க ‘படத்தில் ஒரு காட்சியில் குழந்தை ஒன்று அங்கு எங்கும் ஓடி அந்த காட்சியை உயிர்ப்புள்ளதாக மாற்றி இருக்கும். அந்தக் காட்சியை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். அதேபோல் இந்தப் படத்திலும் மகிழினி மற்றும் முத்துமணி ஆகிய இரு குழந்தைகளும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்தக் கதையில் இயக்குநர் என்ன என்ன நினைத்தாரோ அதை எல்லாம் அந்த குழந்தை மகிழினி அற்புதமாக வழங்கினார். இந்தப் படத்தில் அவர் திரையில் தோன்றும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவரும். அந்தக் காட்சிகள் அனைத்தும் உயிரோட்டமாக இருக்கும் என நம்புகிறேன்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் தங்களுடைய பங்களிப்பை நன்றாக வழங்கி இருக்கிறார்கள். இந்த படம் ஜூலை 25ம் தேதி அன்று வெளியாகிறது. இது ஒரு ஃபுல் பேக்கேஜ் ஃபேமிலி என்டர்டெய்னர். படத்தை பார்க்கும் போது அனைவரும் ரசிப்பார்கள். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இப்படத்தை பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகை நித்யா மேனன் பேசுகையில், ”படத்தைப் பற்றி விஜய் சேதுபதி ஏராளமான விசயங்கள் பகிர்ந்து கொண்டார். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் கிட்டத்தட்ட ஒரே எண்ணம் தான் இருந்தது.

இந்தப் படத்தில் பணியாற்றியது என்னுடைய வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய சந்தோசமான அனுபவம். ஒரு படத்தில் நடிக்கும் போது நிறைய பேர் இருப்பார்கள். குறிப்பாக இந்த திரைப்படத்தில் ஏராளமான நடிகர்கள் நடிகைகள் இருந்தனர். தொழில்நுட்ப கலைஞர்களும் இருந்தனர். இந்தப் படத்தில் அனைவரும் எந்த ஈகோவும் இல்லாமல் ஒரே அலைவரிசையில் இணைந்து உற்சாகமாக பணியாற்றினோம். அனைவரும் எளிமையாகவும் இருந்தனர்.

யாராவது எங்கேனும் ஒரு சிறிய பிரச்சனையை எழுப்பி இருந்தாலும்.. அது பொருத்தமாக இருந்திருக்காது. அதாவது அந்த அனுபவம் நேர்த்தியாக இருந்திருக்காது. அந்த வகையில் இந்த படத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவம் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் மகிழ்ச்சியை அளித்தது.

அதே தருணத்தில் இந்த படத்தைப் பற்றி எனக்கு அதிக நம்பிக்கையும் இருக்கிறது. இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது,” என்றார்.

இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில், ”ஏறத்தாழ மூன்றரை வருடங்களுக்கு பிறகு பத்திரிகையாளர்களாகிய உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

‘தலைவன் தலைவி’ என்ற இந்தப் படத்தின் தலைப்பு தோன்றிய தருணங்களும் அற்புதமானது. இந்த படத்திற்கான கதை தோன்றிய சம்பவங்களும் அழகானது. ஒரு உண்மை சம்பவத்திலிருந்து இந்த கதையை எழுதி இருக்கிறேன். என் மகனுடைய பிறந்தநாள் விழாவிற்காக குலதெய்வ ஆலயத்திற்கு சென்ற போது நான் சந்தித்த இரண்டு கதாபாத்திரங்கள் தான் ஆகாச வீரன் – பேரரசி.

நேரில் பார்த்ததை படமாக எடுக்க முடியாது. ஆனால் இப்படி இருந்தால். எப்படி இருக்கும்? என்ற ஒரு கேள்விதான் இந்த கதாபாத்திரம். அதன் பிறகு இதை எழுதத் தொடங்கினேன். எழுத எழுத அது வேறு ஒன்றாக மாற்றம் பெற்றது. அதை எழுதும் போது தான் ஆகாச வீரன் எனும் கதாபாத்திரத்தின் மதிப்பு உயர்ந்தது. ஏனென்றால் ஆகாச வீரன் சிரிக்க வைப்பான்.. அழ வைப்பான்… டார்ச்சர் செய்வான்… இவன் எந்த மாதிரியான கேரக்டர் என்று வரையறுக்க முடியாது.

பொதுவாக ஹீரோ கேரக்டர் என்றால்.. அதற்கென்று ஒரு வரையறை இருக்கும். இதில் எந்த வரையறையும் இல்லாத ஒரு கதாபாத்திரம் தான் ஆகாச வீரன். இந்த கேரக்டரை எல்லா ஹீரோக்களாலும் செய்திட இயலாது. இந்த கேரக்டரை விஜய் சேதுபதியால் மட்டுமே செய்திட இயலும். இதை அவரை சந்தோசப்படுத்துவதற்காக குறிப்பிடவில்லை. நீங்கள் பார்க்கும் போது இதை உணர்வீர்கள். பாராட்டுவீர்கள். இந்த கதாபாத்திரத்தை இவர் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று நான் நம்பினேன்.

சீரியஸ் ஆகவும் மாஸாகவும் சென்று கொண்டிருக்கும் டக்கென்று அது காமெடியில் முடியும். காமெடியில் சென்று கொண்டிருக்கும் போது அது எமோஷனலாக மாறும். வண்டி ஓட்ட தெரியாமல் வண்டி ஓட்டுவார்களே..! அதைப் போன்றது தான் இந்த கதாபாத்திரம். ஆனால் ரசிக்கக்கூடிய கேரக்டராக இருக்கும். லவ் பண்ண கூடிய கேரக்டராகவும் இருக்கும். அந்த கேரக்டர் மீது வெறுப்பு வராது. இதனால் தான் இந்த கேரக்டரை விஜய் சேதுபதி ரசித்து ரசித்து செய்திருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் அவர் செய்த ஒவ்வொரு விசயத்தையும் அனைவரும் ரசித்தோம்.

பேரரசியின் கதாபாத்திரமும் ஆகாச வீரனை போன்றது தான். பேரரசியின் கதாபாத்திரத்திற்கும் எந்த வரையறையும் இருக்காது. அந்தக் கதாபாத்திரமும் அப்படித்தான் அழகானவள்.. அன்பானவள்… அன்பான அம்மா -அழகான மருமகள்- நல்ல மனைவி – என்று இருந்தாலும் எப்போது எப்படி மாறுவார் என்று தெரியாது. இதுபோன்ற கதாபாத்திரத்தை கையாள்வது கடினம். ஆனால் பேரரசி ஆகாச வீரனை அதிகமாக காதலிப்பார். இதுபோன்ற கதாபாத்திரத்தை நித்யா மேனனை தவிர வேறு யாராலும் ஏற்று நடித்திருக்க முடியாது.

நான் இதுவரை 11 படங்களை இயக்கி இருக்கிறேன். பத்து படங்களுக்கு நான் நினைத்த ஹீரோயின் கிடைத்ததில்லை. முதல் முறையாக நான் திரைக்கதையில் என்ன எழுதினேனோ..! நித்யா மேனன் தான் வேண்டுமென்று கேட்டேன். அவர் தான் இந்த படத்தில் நடித்திருக்கிறார். இதற்காக தயாரிப்பாளர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கணவன்- மனைவி சண்டையை டாம் அண்ட் ஜெர்ரி லவ் ஸ்டோரி என்று சொல்லலாம். கணவன் மனைவி சண்டை ..படம் பார்க்கும் ரசிகர்களுடன் எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் விஜய் சேதுபதியும், நித்யா மேனனும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் அவர்களுக்கு டார்ச்சர் கொடுத்தேன். உண்மை தான்.
படப்பிடிப்பு நடைபெற்ற 70 நாள்களும் இப்படித்தான் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தோம். அந்தத் தருணத்தில் யாரேனும் சிறிய இடையூறை ஏற்படுத்தினாலும் கோபப்படுவேன். அதற்காக இந்த தருணத்தில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை பொருத்தவரை சொன்ன தேதியில்.. சொன்ன பட்ஜெட்டில்.. படத்தை நிறைவு செய்து தர வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கம் தான் இருந்தது.

அந்த வகையில் இந்த படத்தின் படப்பிடிப்பை 75 நாட்களில் நிறைவு செய்து விட வேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்ற தொடங்கினோம். 72 நாட்களில் நிறைவு செய்தோம். படத்தில் பணியாற்றிய அனைவரும் படப்பிடிப்பு அதற்குள் நிறைவடைந்து விட்டதே.. ! இன்னும் சில நாட்கள் நீடிக்காதா..? என வருத்தமடைந்தனர். இதே போன்றதொரு அனுபவம் எனக்கு ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் போதும் ஏற்பட்டது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் போது அந்தப் படத்தை விட அதிகமாக அதே போன்றதொரு அனுபவம் கிடைத்தது.

படப்பிடிப்பின் போது விஜய் சேதுபதி பரோட்டாவை தயாரிப்பார். சாக்லேட் பரோட்டா… வாட்டர்மெலன் பரோட்டா.. என வகை வகையாக கண்டுபிடித்து தயாரிப்பார். அதுவும் சுவையாக தான் இருக்கும்.

படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் குடும்பமாக ஒன்றிணைந்து பணியாற்றினோம். முதல்முறையாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது. ‘பசங்க 2’ படத்தில் இணைந்து பணியாற்றுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அப்போது சாத்தியமாகவில்லை. இந்தப் படத்தில் அவர் ஐந்து பாடல்களை வழங்கியிருக்கிறார். சிறந்த ஆல்பமாக இந்தப் படத்தின் பாடல்கள் இருக்கும். அதிலும் குறிப்பாக பாடலாசிரியர் கார்த்திக் நேதா எழுதிய பாடல் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் பாடலாசிரியர் நா முத்துக்குமார் எழுதி இடம்பெற்ற ‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்..’ என்ற அப்பா பற்றிய பாடல் எப்படி பெரிய வெற்றியை பெற்று இன்றும் அனைவரது நினைவில் நீங்காமல் இருக்கிறதோ… அதே போன்று இந்தப் படத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரிவை பற்றிய பாடலும் ஹிட்டாகும். இந்தப் பாடலுக்காக சந்தோஷ் நாராயணன் மெட்டு அமைக்கும் போது எனக்கு பிடித்திருந்தது. அதனை கார்த்திக் நேதா பாடலாக எழுதும் போதும் எனக்கு பிடித்திருந்தது. அந்தப் பாடலை கேட்டபோது என் கண்களில் கண்ணீர் வந்தது. இந்தப் பாடலை தொகுப்பதற்காக எடிட்டருக்கு அனுப்பினேன். அவரும் இந்த பாடலை கேட்டு அழுதார். இந்தப் பாடலை காட்சி மொழியாக நீங்கள் பார்க்கும் போது.. உண்மையில் நீங்கள் பிரிவை பற்றி உணர்வீர்கள்.

இந்த திரைப்படத்தில் விவாகரத்தை பற்றி பேசி இருக்கிறோம். இன்றைய காலகட்டத்தில் விவாகரத்துகள் அதிகமாகி கொண்டே செல்கிறது. ஏன்? என்ற ஒரு கேள்விதான் இப்படத்தின் கதை. இந்தப் படம் வெளியான பிறகு விவாகரத்திற்காக நீதிமன்றத்தை நாடியிருக்கும் பலரும் யோசிப்பார்கள்.

‘கடைக்குட்டி சிங்கம்’, ‘நம்ம வீட்டு பிள்ளை’ ஆகிய படங்களை பார்த்த பிறகு நிறைய அண்ணன்- தங்கைகளும் தங்களிடமிருந்த விரோதத்தை மறந்து ஒன்றிணைந்தாக என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல் இந்தப் படம் வெளியான பிறகு கணவன் மனைவி விவாகரத்து குறித்து ஏதேனும் முடிவு செய்திருந்தால்.. அதற்கு செல்ல வேண்டுமா? என யோசிப்பார்கள். அந்த யோசனையை இந்த படம் வழங்கும் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.

A Story of Two Great Friends, Turned into Political Rivals, that became Story of the StateMayasabha streaming on Sony LIV from 7th August

0

Sony LIV has launched the trailer for its highly anticipated series Mayasabha: Rise of the Titans, directed by Deva Katta and Kiran Jay Kumar. The series is produced by Vijay Krishna Lingamaneni and Sree Harsha under the banner Hitmen & Proodos Productions LLP. Created by Deva Katta, this series stars Aadhi Pinisetty as Kakarla Krishnama Naidu, Chaitanya Rao as MS Rami Reddy, and Divya Dutta as Iravati Basu, among others.

Premieres 7th August, only on Sony LIV

Link: https://youtu.be/_1-bKKL8PLI?si=EOmfuDBylCbQnQAW

வீரவணக்கத்தின் புரட்சிப் பாடலை டாக்டர் திருமாவளவன் எம்.பி. வெளியிட்டார்…..

0

அனில் வி.நாகேந்திரன் இயக்கிய வீரவணக்கம் திரைப்படத்தின் இரண்டாவது பாடலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி.
சென்னையில் வெளியிட
படத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரித்தேஷ் பெற்றுக்கொண்டார்.
“நுகத்தடியை தோளில் சுமந்த உழைப்பாளிகளே…” என்று தொடங்கும் இந்தப் பாடலை யாசின் நிசார் பாடியுள்ளார். பாடல் வரிகளை நவீன் பாரதி எழுத ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார்.

சாதி அடிப்படையிலான அநீதிகளாலும் உரிமைகள் மறுக்கப்பட்டதாலும் பாதிக்கப்பட்ட கீழ் வகுப்பினரின் போராட்டத்தின் நேரடி பிரதிபலிப்பு இந்தப் பாடல் என்று டாக்டர். தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்தார்.

‘வீரவணக்கம்’ திரைப்படம் தமிழ்நாட்டில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும், மிகப்பெரும் வெற்றி திரைப்படமாக அமையும் என்றும் அவர் கூறினார்.
இந்தப் பாடலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான VISARAD CREATIONS யூடியூப் சேனலில் கண்டு களிக்கலாம்.

கடந்த வாரம் வெளியான “தென்றலே மலை தென்றலே..” பாடலை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். அடுத்தடுத்த பாடல்கள், டிரெய்லர்கள் போன்றவற்றை விஷாரத் கிரியேஷன்ஸ் யூடியூப் சேனலில் காணலாம்.
இந்த நிகழ்வில் இயக்குனர் அனில் வி. நாகேந்திரன், ஒளிப்பதிவாளர் டி. கவியரசு, இணை இயக்குநர் கே. ஜி. ராம்குமார், நடிகர் ரித்தேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் வன்னி அரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Jenma Natchathiram Team Reunites for a two-part high-octane investigative thriller

0

Riding high on the pre-release buzz of Jenma Natchathiram, director B. Mani Varman and producer Murali Kabirdas aren’t taking any breaks, but have instead, geared up for their next project. Both of them are collaborating for yet another riveting cinematic venture, this time, an edge-of-the-seat investigative thriller packed with mystery, emotion, and shocking twists.

The ambitious two-part crime thriller will be bankrolled by Murali Kabirdas under the banner of Best Cast Studios. What’s more, even before Jenma Natchathiram hits theatres, this powerful duo has hit the ground running with their next collaboration.

Actor Thaman Akshan not only plays the lead character, but has penned the story and screenplay, weaving an adrenaline-charged cinematic experience, that will unfold across the dynamic backdrops of Chennai and Delhi.

Backing the production alongside Kabirdas are Vijayan Rangarajan (Creative Director), T. Selvakumar (CEO), and Erode Magesh (Creative Head), forming a strong core team behind the scenes.

The rest of the cast and technical crew will be announced soon. With the film briskly progressing, this taut crime thriller promises a gripping ride, loaded with suspense, layered emotions, and jaw-dropping revelations.

விறுவிறுப்பான திரில்லர் படத்திற்காக மீண்டும் இணையும் ஜென்ம நட்சத்திரம் படக்குழு

புதிய படத்திற்காக மீண்டும் இணையும் ஜென்ம நட்சத்திரம் படக்குழு

ஜென்ம நட்சத்திரம் படத்தை முடித்ததும், இயக்குநர் பி மணி வர்மன் மற்றொரு புதிய கிரைம் திரில்லர் திரைப்படத்துடன் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த கதை இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. ஜென்ம நட்சத்திரம் திரைப்படத்தால் ஈர்க்கப்பட்ட தயாரிப்பாளர் முரளி கபிர்தாஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

ஜென்ம நட்சத்திரம் திரைப்படம் இதுவரை வெளியாகாத நிலையில், அதற்குள் இயக்குநர் மணி வர்மனின் அடுத்தப் படத்தையும் தயாரிக்க முடிவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர் முரளி கபிர்தாஸ். அந்த வகையில், இயக்குநர் மணி வர்மன் இயக்கும் புதிய படத்தையும் முரளி கபிர்தாஸ் சார்பில் பெஸ்ட்காஸ்ட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கதாநாயகனாக நடிக்கும் நடிகர் தமன் அக்ஷன் படத்தின் கதை மற்றும் திரைக்கதை எழுதியிருக்கிறார். சென்னை மற்றும் டெல்லியில் படமாக்கப்பட இருக்கும் இந்தப் படம் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கிறது.

முரளி கபிர்தாஸ் தயாரிக்க திட்ட இயக்குநராக விஜயன் ரங்கராஜன், சி.இ.ஒ. டி செல்வகுமார் மற்றும் கிரியேடிவ் ஹெட் பணியை ஈரோடு மகேஷ் ஆகியோர் கவனிக்கின்றனர். இந்தப் படம் தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விரைவில் இந்தப் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் அறிவிக்கப்பட இருக்கிறது. இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இந்த கிரைம் திரில்லர் படத்தில் எமோஷனல், சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாரா திருப்பங்கள் நிறைந்த கதையாக இந்தப் படம் உருவாகி வருகிறது.

The Grand Pooja ceremony for Actor Vishal’s “Vishal-35” launched as the 99th Production of RB Choudhary’s Super Good Films!

0

Actor Vishal, one of the leading stars of Tamil cinema, recently scored a massive blockbuster hit with the film Madha Gaja Raja, which was well-received by audiences and critics alike.

Following the success of that film, Vishal is now set to star in his 35th movie, which is being produced by veteran producer Mr. RB Choudhary under the prestigious banner Super Good Films.

Mr. RB Choudhary started Super Good Films in 1990 with the film Pudhu Vasantham. Since then, the banner has delivered numerous successful films and has played a significant role in introducing many new directors to Tamil cinema. This upcoming project marks the 99th film under the Super Good Films banner.

This new movie will be directed by Ravi Arasu, with acclaimed cinematographer Richard M. Nathan handling the camera. This marks the first collaboration between actor Vishal and director Ravi Arasu.

Notably, after the grand success of Madha Gaja Raja, Vishal is once again teaming up with cinematographer Richard M. Nathan. Editing will be handled by NB Srikanth, with Durairaj serving as the art director. Following the success of Mark Antony, music composer G.V. Prakash Kumar is once again collaborating with Vishal for this film.

Actress Dushara Vijayan will play the female lead opposite Vishal. The casting for other supporting roles is currently underway.

The film’s grand pooja (inaugural ceremony) was held this morning in Chennai with much fanfare. Eminent personalities from the industry like Director Vetrimaaran, Saravana Subbaiah (Citizen), Manimaran (NH4), Venkat Mohan (Ayogya), Saravanan (Engeyum Eppodhum), Actors Karthi & Jiiva, DOP Arthur A Wilson and Distributor Tiruppur Subramaniam graced the ocassion and conveyed their heartfelt wishes for a huge success. Filming will begin in Chennai and is scheduled to be completed in a single stretch over 45 days.

This new project has generated high expectations among fans and cinema lovers, thanks to the promising team and powerful collaborations behind it.

Cast
• Vishal
•Dushara Vijayan
•Thambi Ramaiah
•Arjai

Crew
• Production Company: Super Good Films
• Producer: RB Choudhary
• Director: Ravi Arasu
• Music Director: G.V. Prakash Kumar
• Cinematographer: Richard M. Nathan
• Editor: NB Srikanth
• Art Director: G. Durairaj
•Costume Designer: Vasuki Bhaskar
• PRO : Riaz K Ahmed, Paras Riyaz

RB சௌதரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் 99 வது தயாரிப்பாக நடிகர் விஷால் அவர்களின் “விஷால்-35” திரைப்படத்தின் பூஜை மிகபிரம்மாண்டமாக நடைபெற்றது!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர். விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் மாபெறும் வரவேற்பு பெற்று மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடதக்கது. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் நடிக்கும் 35 வது படமாக இத்திரைப்படம் தயாரகிரது.

மேலும் இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் திரு.RB சௌத்ரி அவர்கள் தயாரிப்பில் உறுவாக உள்ளது. திரு.RB சௌத்ரி அவர்கள் 1990 ஆம் வருடம் புது வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் சூப்பர்குட் பிலிம்ஸ் என்ற நிறுவனம் துவங்கி தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தது மட்டுமில்லாமல் பல புதுமுக இயக்குநர்களை அறிமுகம் செய்த பெருமை இந்த நிறுவனம் பெற்றுள்ளது.

இத்திரைப்படம் RB செளத்ரி அவர்களின் தயாரிப்பில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 99வது திரைப்படமாக உருவாக உள்ளது. இயக்குனர் ரவி அரசு இயக்கும் இந்தப் படத்திற்கு ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார். முதல்முறையாக நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் ரவி அரசு கூட்டணியில் இந்த திரைப்படம் உருவாக இருக்கிறது.

மதகஜராஜாவின் மாபெறும் வெற்றி கூட்டணிக்கு பிறகு மீண்டும் நடிகர் விஷால் மற்றும் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் M நாதன் இனைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தொகுப்பை NB ஶ்ரீகாந்த் கவனிக்க துரைராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். மார்க் ஆண்டனி வெற்றியை தொடர்ந்து மீண்டும் நடிகர் விஷால் உடன் இணைகிறார் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.

விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். இதில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பூஜை இன்று காலை மிகப் சிறப்பாக சூப்பர் குட் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் நடைப்பெற்றது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முதற்கட்டமாக
45 நாட்கள் நடைபெற உள்ளது. இவர்களது கூட்டணியில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஷால்35 சூப்பர்குட் பிலிம்ஸ்99 என்ற படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் கார்த்தி, தம்பி ராமையா, அர்ஜெய், இயக்குனர் வெற்றிமாறன், மணிமாறன், சரவண சுப்பையா, M சரவணன், மோகன், விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம், ஒளிப்பதிவாளர் ஆர்தர் A வில்சன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் .

நடிகர்கள்
விஷால்
துஷாரா விஜயன்
தம்பி ராமையா
அர்ஜெய்

படக்குழு
தயாரிப்பு நிறுவனம்: சூப்பர் குட் பிலிம்ஸ்
தயாரிப்பாளர்: RB சௌதரி
இயக்கம்: ரவி அரசு
இசை அமைப்பாளர்: GV பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவாளர்: ரிச்சர்ட் M நாதன்
திரைப்படத்தொகுப்பு: NB ஸ்ரீகாந்த்
கலை இயக்குனர்: G துரைராஜ்
உடைகள் வடிவமைப்பு: வாசுகி பாஸ்கர்
மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்

மலைவாழ் மக்களின் வலியைச் சொல்லும் ‘கெவி’ திரைப்படம் ஜூலை 18 இல் வெளியாகிறது

0

ARTUPTRIANGLES FILM KAMPANY ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாராகி வரும் படம் ‘கெவி’. இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அறிமுக நாயகன் ஆதவன் கதாநாயகனாக நடிக்க, ‘டூ லெட்’, ‘மண்டேலா’ புகழ் ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம், தர்மதுரை ஜீவா, விவேக் மோகன் மற்றும் உமர் ஃபரூக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள கெவி என்கிற கிராமத்தைச் சுற்றி, அந்தப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர்கள் ஜி.பாலசுப்பிரமணியன்
சா.ராஜாரவிவர்மா இசையமைத்துள்ளனர்.

படம் ஜூலை 18 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இயக்குநர் தமிழ் தயாளன் படம் குறித்து பேசும்போது, “நாமெல்லாம் மலைப்பகுதியில் உள்ள சுற்றுலாத் தளங்களுக்கு சென்றால் அங்குள்ள இயற்கையை ரசித்து விட்டு அங்கிருந்து கிளம்பி வந்து விடுகிறோம்.

ஆனால் அந்த இயற்கையோடு இணைந்து அங்கே வாழ்கின்ற கவனிக்கப்படாத, குரலற்ற தங்களது வலியைக் கூட சொல்ல முடியாத மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கை நம் கவனத்திற்கு வருவதில்லை.

அவர்களைக் கடந்து தான் நாம் சென்று வருவோம். ஆனால் அவர்கள் நம் கவனத்தில் வராமலேயே போய் விடுவார்கள்.

அப்படிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையை, வலியை வெகுஜன மக்களுக்கு கொண்டு செல்வது தான் இந்த கெவி படத்தின் நோக்கம் இதற்காக கொடைக்கானல் மலைப்பகுதியிலேயே கிட்டத்தட்ட 110 நாட்கள் தங்கி இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்.

கெவி படமானது வரும் ஜூலை 18 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் அமீர், இந்த படத்தை கட்டாயம் தமிழக முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஒரு விஷயத்தைக் கூறியிருந்தார். இந்த படத்தைப் பார்க்கும் போது தான், ரசிகர்கள் அமீர் எதற்காக அப்படி சொன்னார் என்பதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியும். இதில் சொல்லப்பட்டிருக்கும் மக்களின் வலியையும் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு உயிர் பிறப்பது இயற்கை. ஆனால் தானாகவே சாவது என்பது அந்த உயிர்கள் மீது, மக்கள் மீது தொடுக்கப்படும் ஒரு மிகப்பெரிய வன்முறை.

வருங்காலங்களில் இந்த வன்முறை நடக்கக் கூடாது. அந்த மக்களும் கவனிக்கப்பட வேண்டும். அவர்களது கதறல் சத்தமும் இந்த உலகிற்கு கேட்க வேண்டும். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகள் எல்லாமே கிடைக்க வேண்டும் என்கிற கோணத்தில் தான் இந்த படம் தயாராகி உள்ளது என்றார்.

ஹரி உத்ரா புரொடக்ஷன்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்

தயாரிப்பாளர் ; பெருமாள் G – ஜெகன் ஜெயசூர்யா

இணை தயாரிப்பாளர்கள் ; ஜெக சிற்பியன், வருண்குமார், ஆதவன், உமர் ஃபரூக், மணி கண்ணன்

எழுத்து – இயக்கம் ; தமிழ் தயாளன்

இசை ; பாலசுப்பிரமணியன் ஜி & சா.ராஜாரவிவர்மா

ஒளிப்பதிவு ; ஜெகன் ஜெயசூர்யா

படத்தொகுப்பு ; ஹரி குமரன்

சண்டை பயிற்சி ; டான் அசோக்

வசனம் ; ராசி தங்கதுரை, கிருபாகரன் ஏசய்யா

மக்கள் தொடர்பு ; A. ஜான்

- Advertisement -

Recent Posts