Saturday, July 4, 2026
- Advertisement -
Home Blog Page 154

Actor Karthi’s Marshal shooting takes off with ritual pooja ceremony

0

Dream Warrior Pictures, in collaboration with IVY Entertainment has announced a grand period action drama titled Marshal, set in 1960’s at Rameshwaram. The film marks another ambitious venture for actor Karthi and director Tamizh (Taanakkaran fame) following acclaimed projects like Theeran Adhigaaram Ondru and Kaithi.

At the auspicious puja event held today at ( Prasad Studios, Vadapalani ) the producers unveiled the title of the movie bringing together the film’s cast and crew in a celebratory atmosphere.

Marshal features a star-studded cast including Kalyani Priyadarshan, Sathyaraj, Prabhu, Lal, John Kokken, Easwari Rao, and others. The technical crew boasts top talents like music composer Sai Abhyankar (his first period film), cinematographer Sathyan Sooryan, editor Philomin Raj, and production designer Arun Venjaramoodu.

Produced by SR Prakash Babu and SR Prabu of Dream Warrior Pictures, and co-produced by IVY Entertainment led by its Chairman Ishan Saksena, the film will feature elaborate sets recreating 1960s Rameshwaram. Marshal is planned as a pan-Indian release in Tamil, Telugu, Malayalam, Kannada, and Hindi.

கார்த்தி நடிக்கும் மார்ஷல் படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், ஐ.வி.ஒய். என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை அறிவித்துள்ளது. இந்தப் படம் 1960 காலக்கட்டத்தில் ராமேஸ்வரத்தில் நடக்கும் ஒரு பிரமாண்டமான ஆக்ச‌ன் டிராமா கதைக்களத்தில் உருவாகிறது. இப்படத்துக்கு “மார்ஷல்” எனத் தலைப்பிட்டுள்ளனர்.

’தீரன் அதிகாரம் ஒன்று’ மற்றும் ’கைதி’ போன்ற பாராட்டப்பட்ட படங்களைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் தமிழ் ஆகியோரின் (டாணாக்காரன் இயக்குநர்) மற்றொரு லட்சிய முயற்சியாக இந்தப் படம் அமைய இருக்கிறது.இன்று (வடபழனி, பிரசாத் ஸ்டுடியோவில்) நடைபெற்ற மார்ஷல் பட பூஜை நிகழ்ச்சியில், படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் மத்தியில் தயாரிப்பாளர்கள் இந்தப் படத்தின் தலைப்பை வெளியிட்டனர்.

மார்ஷல் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், சத்யராஜ், பிரபு, லால், ஜான் கொக்கன், ஈஸ்வரி ராவ் மற்றும் பல நட்சத்திர நடிகர்கள் நடிக்கவுள்ளனர். தொழில்நுட்பக் குழுவில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், எடிட்டர் பிலோமின் ராஜ் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் அருண் வெஞ்சாரமூடு போன்ற சிறந்த திறமையாளர்கள் பணிபுரிய உள்ளனர்.

இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு மற்றும் இஷான் சக்சேனா தலைமையிலான ஐ.வி.ஒய். என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தில் 1960-களின் ராமேஸ்வரத்தை மீண்டும் உருவாக்கும் விரிவான செட்கள் இடம்பெற இருக்கிறது.

மார்ஷல் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் அகில இந்திய அளவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Vijay Antony’s Neo-Political Blockbuster “Shakthi Thirumagan” to Release Worldwide on September 5th

0

Following an electrifying teaser that sparked immense curiosity among fans and cinephiles, the much-anticipated Shakthi Thirumagan is all set for a grand worldwide theatrical release on September 5th, 2025.

Directed by Arun Prabu Purushothaman, the acclaimed filmmaker behind Aruvi and Vaazhl, Shakthi Thirumagan has already caught the attention of audiences with its compelling teaser. The 2-minute-15-second promo opens with characters debating the nature of the protagonist—Gangster, Hustler, or Trickster—while Vijay Antony’s silent yet striking presence deepens the intrigue.

Endorsed by the makers as a “Neo-Political Blockbuster”, the film promises to be a refreshing blend of sharp storytelling, layered characters, and high technical finesse. With richly varied backdrops, captivating visuals by Shelley Calist, and razor-sharp editing by Raymond Derrick Crasta, the teaser alone has set expectations sky-high.

Produced by Vijay Antony Film Corporation, the film features music scored by Vijay Antony himself and boasts an ensemble cast including Vaagai Chandrasekar, Sunil Kripalani, Cell Murugan, Trupthi Ravindra, Kiran, Rini Bot, Riya Jithu, and Master Keshav.

With audience anticipation at an all-time high, Shakthi Thirumagan is gearing up to be a powerful cinematic experience this September 5th.

ZEE5 இன் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் அதிரடி டிரெய்லர் வெளியானது !!

0

இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங்க் தளமான ZEE5 தமிழில், தனது அடுத்த அதிரடி சீரிஸான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் அதிரடி டிரெய்லரை வெளியிட்டுள்ளது. நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸ் வரும் ஜூலை 18, 2025 அன்று முதல் ZEE5 இல் ஸ்ட்ரீமாகவுள்ளது.

புதுமையான களத்தில், வக்கீலாக சரவணன் கலக்கும் இந்த சீரிஸின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது. தமிழ் திரைத்துறையில் 35வது ஆண்டைக் கடந்திருக்கும் நடிகர் சரவணன், 15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்த சீரிஸ் மூலம் ஹீரோவாக திரும்பியிருக்கிறார். நடிகர் சரவணனுடன் உறுதியும், உணர்ச்சிகளும் நிறைந்த சக்திவாய்ந்த ஒரு பெண் கதாபாத்திரத்தில் நம்ரிதா MV நடித்திருக்கிறார்.

சட்டமும் நீதியும் சீரிஸ் “குரலற்றவர்களின் குரல்” எனும் கருத்திலிருந்து உருவாகியுள்ளது. நம்மைச் சுற்றியுள்ள பலர் தங்களது குரலை வெளிப்படுத்த முடியாமல் அமைதியாக இருக்கும்போது, அந்த அமைதியை உடைத்து, தனது உரிமைக்கும் மற்றொருவரின் நலனிற்காகவும் நிற்கும் ஒரு சாதாரண மனிதரின் கதைதான் இது.

அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இந்த சீரிஸை இயக்கியிருக்கிறார். “18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளார். உணர்வுப்பூர்வமான கதையுடன், சமூக அக்கறை மிக்க படைப்பாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.

ZEE5-ல் வரும் ஜூலை 18 முதல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

“பக்தி சூப்பர் சிங்கர்” அபிராமிக்கு, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தந்த திரைப்பட வாய்ப்பு !!

0

தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவி தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான பக்தி இசை ரியாலிட்டி ஷோவான “பக்தி சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சி பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் ஃபைனலுக்கு முன்னரே பல இளம் திறமையாளர்களுக்கு, திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பவித்ரா மற்றும் கார்த்திக் ஆகியோர், இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தேர்வாகியுள்ள நிலையில், அடுத்தகட்ட பாடகர்கள் வரும் வாரத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

முன்னெப்போதையும் விட இந்த முறை நடந்த பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, பாடகர்களுக்கான முன்கூட்டிய திரைப்பட வாய்ப்புகள், சர்ப்ரைஸ் தருணங்கள், பிரபலங்களின் வருகை, நெகிழ்வான சம்பவங்கள் எனக் களை கட்டியது. பல அற்புத தருணங்கள் நிறைந்த இந்த சீசன் மக்களிடம் மிகப்பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.

இந்த சூப்பர் சிங்கர் போட்டியில், பல பின்னணியிலிருந்து வரும் அற்புதமான பல பாடகர்கள், மக்களின் மனங்களைக் கவர்ந்ததோடு, திரைக்கலைஞர்களையும் கவர்ந்துள்ளனர்.

இந்த பக்தி சூப்பர் சிங்கரிலிருந்து உதித்த ஒரு நட்சத்திரமாக இளம் திறமையாளரான அபிராமி ஜொலித்து வருகிறார். தேவகோட்டை அபிராமி – காரைக்குடிக்கு அருகிலுள்ள சிற்றூரைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புறப் பாடகி. எந்த இசை பயிற்சியும் இல்லாதவர். கிராமத் திருவிழாக்களில் மட்டுமே பாடிய அனுபவமுள்ள இவர், பக்தி சூப்பர் சிங்கரில் கலந்துகொண்டதிலிருந்து ரசிகர்களின் பேரன்பையும், பாராட்டையும் பெற்றுவருகிறார்.

அபிராமியின் தனித்த குரலும், உணர்வுமிக்க பாணியும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் அவர்களைக் கவர்ந்திழுக்க, அவர் தனது அடுத்த படங்களில் அபிராமிக்குப் பாட வாய்ப்பு வழங்கியுள்ளார். இது அபிராமிக்குக் கிடைத்துள்ள ஒரு பெரிய வாய்ப்பாகும் – பக்தி சூப்பர் சிங்கர் இவரது வாழ்க்கையை திரைப்பாடகியாக மாற்றியமைத்துள்ளது.

இசைப் பட்டம் பெற்ற T.L. மகாராஜன், போட்டியாளர்களான பவித்ரா மற்றும் அலெய்னா ஆகிய இருவரையும் தனது வரவிருக்கும் பக்தி ஆல்பத்தில் பாட அழைத்துள்ளார். “தெய்வீகமான பாடலை தேடி…” எனும் பக்தி சூப்பர் சிங்கரின் டேக் லைன் உண்மையிலேயே பல இளம் திறமைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

சூப்பர் சிங்கர், ஒரு போட்டி நிழச்சியாக மட்டுமல்லாமல், திறமையால் ஒளிரும் பலருக்கு, வாழ்வின் திருப்புமுனையாக பெரும் மாற்றம் தந்து வருகிறது. பக்தி சூப்பர் சிங்கர் பலருக்கும் சினிமா இசைத்துறைக்குள் நுழையும் வாயிலைத் திறந்து வைத்துள்ளது.

பல திறமையாளர்களுக்கான அடையாளமாக மாறி, பல அற்புத தருணங்களுடன் பரபரப்பாக நடந்து வருகிறது “பக்தி சூப்பர் சிங்கர்”.

’யாதும் அறியான்’ படத்தில் விஜயின் அரசியல் தொடர்பான காட்சிகள் வைத்தது ஏன்? – படக்குழு விளக்கம்

0

வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள சைக்கோ திரில்லர் படம் ‘யாதும் அறியான்’ ஜூலை 18 ஆம் தேதி வெளியாகிறது!

தமிழ் சினிமா மற்றும் தமிழக அரசியல் இரண்டையும் சற்று அதிர செய்திருக்கிறது ‘யாதும் அறியான்’ படத்தின் டிரைலர். டிரைலரே இப்படி என்றால், படம் எப்படி இருக்கும்!, என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டிரைலர் மக்கள் மனதில் பல கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. குறிப்பாக, டிரைலரில் 2026 ஆம் ஆண்டு விஜய் முதல்வராகி விடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதை தொடர்ந்து, த.வெ.க தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் டிரைலரை கொண்டாடி வருவதோடு, மறுபக்கம் திரையுலக பிரபலங்கள் பலர் படத்தின் டிரைலரை பாராட்டி வருகிறார்கள்.

வரும் ஜூலை 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘யாதும் அறியான்’ படத்தின் டிரைலர் மக்களிடம் பெற்ற வரவேற்பு மற்றும் திரையுலகம் மற்றும் அரசியல் உலகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கும் குறித்து ‘யாதும் அறியான்’ படக்குழு பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் எம்.கோபி படம் குறித்து கூறுகையில், “நான் விஜய் ரசிகன், சினிமாத்துறையில் பயணிக்கும் போது அனைவருக்கும் ஏற்படுவது போல தான், அவரை வைத்து ஒரு படம் இயக்க மாட்டோமா! என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவரது அடுத்தடுத்த அறிவிப்புகள் வந்துக் கொண்டிருந்த நிலையில், 69 வது படத்துடன் அவர் நடிப்பதை நிறுத்துவிடப் போகிறார், என்பது அதிர்ச்சியாக இருந்தது. இனி அவருடன் இணைந்து பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அதே சமயம், அவரைப் பற்றி பேசுவதற்கான இடம் படத்தில் அமைந்ததாலேயே அப்படிப்பட்ட காட்சிகளை வைத்தோம். அது முழுக்க முழுக்க கற்பனையானதே தவிர மற்றபடி அதில் வேறு எந்த அரசியல் பிரச்சாரமும் இல்லை.” என்றார்.

படத்தின் நாயகன் தினேஷ் கூறுகையில், “மிகப்பெரிய குடும்ப பின்னணியில் இருந்து வந்தாலும், சினிமாவை பொறுத்தவரை இயக்குநர் என்ன சொன்னாரோ அதை கேட்டு மட்டுமே நடித்திருக்கிறேன். இந்த படத்திற்காக எனது பின்புலத்தை ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு கடுமையாக உழைத்திருக்கிறேன். சுமார் 15 நாட்கள் கடியான தூக்கம் இல்லாமல், உழைத்திருக்கிறேன். இப்படி ஒரு கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருப்பேன், என்று இயக்குநர் முடிவு செய்தப் பிறகு இந்த படத்திற்காக எப்படி எல்லாம் உழைக்க முடியுமோ அப்படி உழைத்திருக்கிறேன்.

படத்தின் டிரைலரில் இடம் பெற்றிருந்த விஜய் பற்றிய காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக விஜயின் அரசியல் பிரச்சாத்திற்கான விளக்கம் போல் டிரைலர் அமைந்திருப்பதாகவும் பலர் சொல்கிறார்கள். ஆனால், முதலில் என் படத்தில் இப்படிப்பட்ட காட்சிகள் மற்றும் வசனங்கள் வேண்டுமா!, என்று நான் யோசித்தேன், தயங்கினேன். ஆனால், இயக்குநரின் கண்ணோட்டத்தை பொறுத்தவரை அந்த காட்சிகள் திரைக்கதையோடு பயணிப்பதால், ஒரு நடிகனாக அதை ஏற்றுக் கொண்டேன்.” என்றார்.

2024-ல் இருந்து 2026-க்கு கதை நகர்கிறதே படத்தில் டைம் டிராவலர் கான்சப்ட் எதாவது இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் எம்.கோபி, “படத்தில் டைம் டிராவலர் கான்சப்ட் எதுவும் இல்லை, ஆனால் அப்படிப்பட்ட சம்பவங்கள் இருக்கும், அது எப்படி சாத்தியம்? என்ற கேள்வி படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்லும். மேலும், மற்ற சைக்கோ திரில்லர் படங்களுக்கும் எங்கள் படத்திற்கும் உள்ள வித்தியாசமே, டைம் டிராவல் போன்ற ஒரு பயணம் தான். அதை நாங்கள் எப்படி கையாண்டிருக்கிறோம், என்பதே மிக சுவாரஸ்யமாக இருக்கும்.” என்றார்.

சிவகார்த்திகேயனின் பாராட்டு குறித்து கூறிய நாயகன் தினேஷ், “படத்தின் டிரைலரை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன், டிரைலர் மிகவும் நன்றாக இருக்கிறது, என்று சொன்னதோடு. ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, என்று பல விசயங்களை பாராட்டி பேசினார். படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தவர் நடிகர்களின் நடிப்பு, மேக்கிங் என அனைத்தும் மிக சிறப்பாக இருப்பதாக கூறினார்.” என்றார்.

முதல் படம் நடிப்பு அனுபவம் குறித்து பேசிய நடிகர் தினேஷ், “சிறு சிறு வேடங்களில் சில படங்களில் நடித்தாலும், இந்த படத்தில் நாயகனாக நடித்திருக்கிறேன். இது எனக்காக எழுதப்பட்ட கதை அல்ல. ஒரு நண்பர் மூலமாக எனக்கு இயக்குநர் கோபி அறிமுகமானார். அவர் என்னை சந்தித்த போது, அவர் வைத்திருந்த கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன், என்று அவர் உணர்ந்ததால் மட்டுமே என்னை நடிக்க வைத்தார். நானும், 15 நாட்கள் தூக்கம் இல்லாமல் இரவு, பகலாக நடித்திருக்கிறேன். நிச்சயம் படம் மக்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.” என்றார்.

இந்த தினேஷை ஹீரோவாக நடிக்க வைப்பதற்காக எழுதப்பட்ட கதையா? என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் கோபி, “தினேஷை சந்திப்பதற்கு முன்பாகவே இந்த கதையை நான் எழுதி முடித்து விட்டேன். நானே தயாரிக்க முடிவு செய்த போது குறிப்பிட்ட ஒரு பட்ஜெட்டில் பண்ண வேண்டும் என்ற திட்டத்தில் அதற்கான பணிகளை செய்துக் கொண்டிருந்தேன். அப்போது நண்பர் மூலம் தினேஷை சந்தித்தேன், அவருக்கு நடிக்க ஆர்வம் இருப்பதையும் அறிந்தேன், அவருடன் பேசிய போது, என் கதைக்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. அதை தொடர்ந்து அவரிடம் கதையை விவரித்தேன், அவருக்கும் கதை பிடித்திருந்தது. அதே சமயம், அவரிடம் என் கதைக்கான ஹீரோவாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதால் தான் இந்த படத்தில் நடிக்க வைக்கிறேன், மற்றபடி படத்தின் பொருளாதரம் தொடர்பாக உங்களிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை, என்று கூறிவிட்டேன்.

தினேஷும் தனது பணி உள்ளிட்ட அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு அறிமுக நடிகராக எங்களுடன் பயணித்தார். படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களுடன் மிக சாதாரணமாக பழகி, படக்குழு அனுபவித்த அனைத்த கஷ்ட்டங்களையும் அவரே அனுபவித்து, படத்தை 15 நாட்களில் முடிக்க உதவியாக இருந்தார். ஒரு நடிகராக நிச்சயம் இந்த படத்தில் அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார், இந்த படமும் அவரது திறமையை வெளிக்காட்டுவதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.” என்றார்.

பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயாரிப்பில், எம்.கோபி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘யாதும் அறியான்’ படத்தில் அறிமுக நடிகர் தினேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரானா நடித்திருக்கிறார். இவர்களுடன் விஜய் டிவி KPY ஆனந்த் பாண்டி, ஷ்யாமல், அப்புக்குட்டி ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

படம் முழுவதும் ஐந்து கதபாத்திரங்கள் மட்டுமே இடம் பெற்றாலும், அவர்களை கொண்டு திரைக்கதை மற்றும் காட்சிகளை திரில்லிங்காக மட்டும் இன்றி, சைக்கோ திரில்லர் பாணியில் இதுவரை பார்த்திராத ஒரு பாணி கையாளப்பட்டிருக்கும் இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தொழில்நுட்பக் குழு:

ஒளிப்பதிவு : எல்.டி
இசை : தர்ம பிரகாஷ்
கலை : நெல்லை லெனின்
பாடல்கள் : எஸ்.கே.சித்திக்
பி.ஆர்.ஓ : தர்மதுரை, சுரேஷ்சுகு

ரெட்ரோ வில்லன் Vidhu ஹீரோவாகிறார்!

0

‘மெய்யாத மான்’ திரைப்படத்தை இயக்கிய ரத்னகுமார் தனது அடுத்த படத்தை இயக்கும் திட்டத்தில் உள்ளார். இந்த படம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ளது.

சிறந்த வில்லன் நடிப்பால் கவனம் ஈர்த்த ‘ரெட்ரோ’ பட வில்லன் Vidhu, இந்த புதிய முயற்சியில் முதன்முதலாக ஹீரோவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The title teaser of the movie ‘Elumale’, a Tharun Sudhir production, gets a star-studded launch with Shivarajkumar and Prem

0

Rakshitha’s Brother Raanna Steals the Show in ʻElumaleʼ Title Teaser

The much-awaited title teaser of ʻElumaleʼ, produced by Tharun Kishore Sudhir and directed by Punit Rangaswamy, was officially unveiled yesterday at a grand event held at Orion Mall, Bangalore. Karunada Chakravarthy Shivanna unveiled the title teaser and extended his best wishes to the entire team. Jogi Prem also attended as a special guest, wishing the cast and crew great success. Star director Tharun Sudhir is producing this film titled ʻElumaleʼ. Rakshitha’s brother Raanna and ‘Mahanati’ fame Priyanka are cast as the lead pair.

Speaking at the title teaser launch, Shivanna praised, ‘The teaser is outstanding. The title teaser is proof that good things happen to good people. Raanna looks very handsome. Priyanka doesn’t feel like a newcomer at all. New talents must come and make films. When the audience appreciates a film, the earnings will naturally follow. It always happens that way, appreciation first, then profit’
Sharing his thoughts, Jogi Prem said, ‘During Jogi’s shoot, I got to spend time with Appaji. He always referred to them as our own forest folk. It’s an honor that Shivanna launched this film, I wish them great success.’

The film’s producer, Tharun Sudhir, said, ‘Shivanna and Prem Sir are the best at telling the story of Elumale town and the Malemahadeshwara Temple through cinema across Karnataka. Shivanna launching the teaser is a blessing in itself. The film industry is like a gold mine, sometimes you strike gold early, sometimes after a long wait, but there’s always gold. And that gold is right here, in the Kannada film industry. Today, we’re proud to unveil the title teaser. Audio rights have been acquired by Anand Audio for a solid price. In fact, the movie was sold even before the title was announced’. As he put it, a strong product with good content always finds its market.

‘This is a love story, not one of conflict,’ said director Punit Rangaswamy. ‘The events that took place during that time play a significant role in how the film unfolds’, he added.
Produced by Tarun Kishore Sudhir, who is also known for directing ‘Chowka’ and ‘Kaatera’, the film has Atlanta Nagendra as co-producer.

This film draws from a true incident, and the teaser reflects a story filled with emotion. It was shot in various locations along the Karnataka-Tamil Nadu border, including Chamarajanagar, Salem, and Erode.
The film stars Raanna, Priyanka Achar, alongside Jagapathi Babu, Nagabharana, Kishore Kumar, Sardar Sathya, and Jagappa. Cinematography is handled by Advaitha Gurumurthy, with editing by K.M. Prakash. Dialogues are by Nagarjuna Sharma and Punit Rangaswamy, while D. Imman scores the music. The movie will be released simultaneously in Tamil, Telugu, and Kannada.

தருண் சுதீர் தயாரிப்பில், ராண்ணா நடிக்கும் ‘ஏழுமலை’ படத்தின் டைட்டில் டீசரை — சிவராஜ்குமார் மற்றும் ஜோகி பிரேம் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர் !!

ரக்ஷிதாவின் சகோதரர் ராண்ணா கலக்கும் ‘ஏழுமலை’ டைட்டில் டீசர் வெளியானது !

தயாரிப்பாளர் தருண் கிஷோர் சுதீர் தயாரிப்பில், புனித் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகும் ‘ஏழுமலை’ படத்தின் தலைப்பு டீசர், பெங்களூருவில் உள்ள ஓரியன் மாலில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. கருநாடா சக்ரவர்த்தி சிவண்ணா (சிவராஜ்குமார்) இந்த டீசரை வெளியிட்டு, படக்குழுவுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இயக்குநர் ஜோகி பிரேம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, படம் வெற்றிகரமாக அமைய தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

அற்புதமான காதல் கதையாக உருவாகும் இப்படத்தில், ரக்ஷிதாவின் தம்பி ராண்ணா மற்றும் ‘மகாநதி’ புகழ் பிரியங்கா ஆச்சார் ஜோடியாக நடிக்கின்றனர்.

இப்படவிழாவில் சிவராஜ்குமார் கூறியதாவது..,

“இந்த டீசர் அருமையாக இருக்கிறது. நல்ல விஷயங்கள் நல்லவர்களுக்கே நடக்கின்றன என்பதற்கு இது ஒரு சாட்சி. ராண்ணா மிகவும் ஹேண்ட்சமாக இருக்கிறார். பிரியங்காவைப் பார்க்க ஒரு புதியவரைப் போலத் தெரியவில்லை. புதியவர்கள் வந்து சினிமாவை மாற்றவேண்டும். மக்கள் பாராட்டினால் லாபம் தானாக வரும். அது தான் எப்போதும் நடந்து வருகிறது. இப்படக்குழுவிற்கு என் வாழ்த்துக்கள்”

இயக்குநர் ஜோகி பிரேம் கூறியதாவது..,

“ஜோகி படப்பிடிப்பில் தான் அப்பாஜியுடன் நெருக்கமாகப் பழகினேன். அவர் எப்போதும் சினிமாவில் வரும் புதியவர்களை ஆதரிக்க வேண்டும் எனச் சொல்வார். சிவண்ணா இப்படத்தின் டீசரை வெளியிட்டது பெருமை.”

தயாரிப்பாளர் தருண் சுதீர் கூறியதாவது..,

“சிவண்ணா மற்றும் பிரேம் சார் இருவருமே ‘ஏழுமலை’ நகரம் மற்றும் மலேமஹாதேஷ்வரர் கோயிலையும் கதை வழியாக அழகாக சொல்வதற்குச் சிறந்தவர்கள். இப்படத்தின் டைட்டில் டீசரை சிவண்ணா வெளியிட்டது ஒரு ஆசீர்வாதம். சினிமா என்பது ஒரு தங்க சுரங்கம் மாதிரி. சிலர் விரைவில் தங்கம் கண்டுபிடிக்கிறார்கள், சிலர் தாமதமாக. ஆனால் அங்கே நிச்சயமாகத் தங்கம் இருக்கிறது. அந்த தங்கம் நம்முடைய கன்னட சினிமாதான்!”

இயக்குநர் புனித் ரங்கசாமி கூறியதாவது..,
இது ஒரு அழகான காதல் கதை, உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த உணர்வுகள் டீசரிலேயே அழகாக வெளிப்பட்டுள்ளது.

கேரளா, தமிழ்நாடு எல்லைப் பகுதிகள், சாமராஜநகர், சேலம், ஈரோடு போன்ற இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள்:
ராண்ணா, பிரியங்கா ஆச்சார்

ஜகபதி பாபு, நாகபரணா, கிஷோர் குமார், சர்தார் சத்யா, ஜகப்பா

தொழில்நுட்பக் குழு:

ஒளிப்பதிவு : அத்வைதா குருமூர்த்தி

படத்தொகுப்பு : கே.எம். பிரகாஷ்

இசை : டி. இமான்

வசனங்கள் : நாகர்ஜுனா சர்மா, புனித் ரங்கசாமி

இணை தயாரிப்பாளர்: அட்லாண்டா நாகேந்திரா

இப்படம் தமிழ், தெலுங்கு, மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. இப்படத்தின்
ஆடியோ உரிமையை மிகப்பெரிய விலைக்கு ‘ஆனந்த் ஆடியோ’ நிறுவனம் பெற்றுள்ளது.

A Rooted Tale From The Heart of Telangana: ZEE5 Unveils First Look Of Its Telugu Original “Mothevari Love Story” – Premieres On August

0

India’s leading homegrown video streaming platform and a pioneer in multilingual storytelling, ZEE5 has consistently raised the bar in delivering high-quality original content across genres and languages. Continuing its tradition of showcasing culturally rich and rooted shows, the platform is now set to premiere its latest Telugu original series, “Mothevari Love Story”, a heartfelt comedy drama deeply rooted in the Telangana region and culture. The series will premiere exclusively on ZEE5 on August 8.

Mothevari Love Story features Anil Geela and Varshini Reddy Junnuthula in the lead roles. Directed by Shiva Krishna Burra, the series promises a new genre in the OTT space that is humorous, emotional and authentic, delivering a truly entertaining viewing experience for the audience.

https://www.youtube.com/playlist?list=PLv8tne3UD07PvGLSedrmPp

This seven-episode series is set against the rustic backdrop of Telangana’s heartland, where a long-held family secret sets off a chain of humorous and dramatic events. Produced by Village Show Movies and Madhura Entertainment, Mothevari Love Story is a wholesome ride of emotions and unexpected twists, all sparked by a single wedding that soon becomes the centre of everyone’s attention. Apart from directing, Shiva Krishna Burra has also penned the script. Sreekanth Arupula handled the cinematography, while Anil Geela took on editing duties in addition to playing the lead. Music for the series has been composed by Charan Arjun.

Ahead of its premiere, the first look launch event was held today in Hyderabad, with the supremely talented Anand Deverakonda gracing the occasion as the chief guest. He officially unveiled the title and poster of the series, which also saw the presence of ZEE5 leadership and the full cast and crew.

Speaking at the first look launch event, actor Anand Deverakonda said, “I don’t call this a small project, this is a ‘big-hearted’ web series. Congrats to the entire team! The title is so unique, and the poster looks amazing. When Anil messaged me, I didn’t even think for a second. I usually avoid public events, but I said yes immediately for two reasons. One, I’m a huge fan of My Village Show videos. When I was in the US, our friends and family members used to binge-watch them. They reminded us of our own villages, culture, and festivals. Second, when Madhura Sreedhar sir offered me Dorasani, I prepped for it by watching My Village Show to learn the Telangana dialect. This was my way of paying it back. I wish the ZEE5 team and everyone involved a huge success!”

Lead Actor Anil Geela said, “This is the first step in turning My Village Show into a full-fledged production house. We felt like we had hit a saturation point on YouTube and were waiting for someone to give us a wider platform. That’s when Jayanth anna called and encouraged us to pitch an idea in our style. Contrary to the belief that OTT platforms take months to approve, ZEE5 gave us a nod in the first sitting! When we were worried about production, Madhura Sreedhar anna supported us without even hearing the story. We gave up remuneration and comforts and worked hard on this series. Vijay (Deverakonda) anna gave me my film debut with World Famous Lover, and now Anand (Deverakonda) anna is launching me into OTT. They are both our lucky charms. Mothevari Love Story premieres on August 8. Hope you all enjoy it.”

Producer Madhura Sreedhar Reddy said, “We all believe in manifestation. Three years ago, I messaged Anil, saying let’s work together on a film. Since then, we’ve been trying to collaborate because I always felt he had the potential to be a hero. Then one day, the team came up with Mothevari Love Story, and I gave a green signal immediately. I’m happy to launch Anil as a hero, just as I envisioned. Big thanks to Anuradha garu and the entire ZEE5 team for their professional approach. This will be the first web series rooted in Telangana culture. My best wishes to the whole team. Mothevari Love Story will surely entertain you from August 8.”

The show’s other producer, Srikanth Sriram, said, “When we were doing My Village Show videos, we dreamt of making web series with good production values. We did a few on YouTube, but faced many hurdles. Just when we were unsure about the way forward, ZEE5 stepped in and gave us a platform and creative independence. Then Madhura Sreedhar anna joined as producer and helped us execute it well. For the first time, our team came out of our comfort zone and collaborated. We experimented a lot, despite a limited budget. Thank you to everyone who was part of this journey.”

Director Shiva Krishna Burra said, “I would like to thank the ZEE5 team for their constant support. A big thanks to Anand anna for unveiling our first look. Back then, Vijay anna introduced us on the YouTube Fanfest stage, which was a major step for us. Now, Anand anna has come to support us on our next big step. Thank you, Madhura Sreedhar anna, for putting confidence in us and okaying the project just by hearing one line of the story. I also thank Anil for standing by me over the last six months. I hope you grow bigger as a lead hero. Let’s all grow together. Charan anna has brought life to this series with his music. I also want to thank Srikanth Sriram, the direction team, and the entire cast and crew.”

ZEE5 Telugu Business Head Anuradha said, “During COVID times, we were so impressed and inspired after watching Middle Class Melodies, and bought its satellite rights. That’s how our connection with Anand garu began. A big thank you to him for launching this show’s first look. Mothevari Love Story is our series set in the Telangana dialect after Oka Chinna Family Story. That series launched Sangeeth, who has now become a popular hero, and I believe this one will do the same for Anil.”

ZEE5 Telugu Originals Vice President Sai Tej Deshraj said, “My Village Show and Anil are true examples of ‘Mattilo Manikyam’ and ‘Kashta Phali’. Their journey is so inspiring, we could make a biopic on it! Anil has been a YouTube star, and now he’s entering the OTT world. It’s not easy to create such rooted content. The show’s Telangana dialect will transport you to Karimnagar and Nizamabad. Mothevari Love Story will connect with all kinds of audiences. Say no to piracy and watch it exclusively on ZEE5.”

ZEE Telugu Senior Vice President of Commissioning and On-Air Promotions, Jayanth, said, “Upon Anuradha ma’am’s suggestion, I once called up and invited Anil to narrate a story. Then, he narrated us this story and said that he would also be the lead in it. This is a fantastic, rooted story. Everyone has worked hard, and we hope it becomes one of ZEE5’s iconic shows.”

Music director Charan Arjun said, “I earlier worked on ZEE5’s film Vimanam, and now I’m back with this series. One of my biggest hits as a lyricist, ‘Merupai Sagara’ from Style, was released under Madhura Audio. I also wrote lyrics for a song in Sreedhar garu’s debut film Sneha Geetham. Now, I’m working as a composer for his series. My heartfelt congratulations and best wishes to the entire team. I hope you all enjoy the series when it releases.”

The film’s lead actress Varshini Reddy said, “Thank you for this lovely opportunity. The series is rooted and authentic, and will give viewers a fresh experience.”

Actor and My Village Show fame Gangavva said, “Our Anil, Shiva, and Sreekanth have worked hard. I hope this becomes a big hit on ZEE5.”

Gear up for a vibrant celebration of love, land, and laughter with Mothevari Love Story, a fresh new tale with a local twist. The much-awaited Telugu original premieres exclusively on ZEE5 from August 8.

VELS Film International Begins Shoot of Their Biggest Film Yet – D54 Starring Dhanush

0

Vels Film International Ltd, spearheaded by Dr. Ishari K. Ganesh, proudly commences production of its grandest cinematic venture yet — D54 — with an auspicious pooja today.

Directed by Vignesh Raja, the acclaimed filmmaker behind the blockbuster Por Thozhil, this gripping new project is written by the same celebrated writing team, Vignesh Raja Once Again joining Hands with Writer Alfred Prakash After the Success Of Por Thozhil, promising a masterfully crafted narrative rich in suspense, emotion, and scale.

The film stars National Award winner Dhanush in the lead, alongside Mamitha Baiju, who is paired with him for the first time. The stellar ensemble cast also includes powerhouses like KS Ravikumar, Jayaram , Karunas , Suraj Venjaramoodu, Prithvi Pandiarajan, and others.

With an unmatched technical team at the helm, D54 is poised to deliver an elevated cinematic experience:

  • Music by National Award-winning composer GV Prakash Kumar
  • Cinematography by Theni Eswar, known for his raw visual brilliance
  • Editing by Sreejith Sarang, who brings sharp narrative rhythm to modern storytelling
  • production design by Maya Pandi
  • Costume by Dinesh Manohar & Kaviya Sriram

The film is being mounted on a massive scale across multiple locations, blending intense drama with stylish storytelling. With Vels’ commitment to delivering high-quality content across India, D54 is envisioned as a Absolute theatrical experience For Audience

Stay tuned for more updates as this exciting journey unfolds!

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், நிறுவனத் தலைவர் டாக்டர் ஐசரி K. கணேஷ் தலைமையில், தனுஷ் நடிக்கும் D54-படம் இன்று வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது.

‘போர் தொழில்’ ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த புதிய திரைப்படத்தினை இயக்குகிறார். போர் தொழில் திரைப்படத்தின் திரைக்கதையில் பணியாற்றிய ஆல்ஃபிரட் பிரகாஷுடன் இணைந்து விக்னேஷ் ராஜா இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளார். இந்தப் படம், பரபரப்பான கதைக்களத்தில், எமோஷனல் திரில்லராக உருவாகிறது.

பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் தேசிய விருது நாயகன் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் முதல் முறையாக மமிதா பைஜு ஜோடியாக இணைந்துள்ளார். மேலும் K.S. ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, பிரித்வி பாண்டியராஜன், உள்ளிட்ட பல்வேறு திறமையான நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

D54 திரைப்படத்தில் மிகச்சிறந்த தொழில்நுட்ப குழு பணிபுரிகிறார்கள். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார், தனித்துவமான ஒளிப்பதிவுக்கு பெயர் பெற்ற தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். கதைசொல்லலில் புதுமையை பின்பற்றும் ஸ்ரீஜித் சாரங்க் எடிட்டிங் செய்கிறார். தயாரிப்பு வடிவமைப்பு மாய பாண்டி மற்றும் காஸ்டியூம் தினேஷ் மனோகர் & காவியா ஸ்ரீராம் ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.

இந்தப் படம் பெரும் பொருட்செலவில் இந்தியாவின் பல இடங்களில், தீவிரமான கதைக்களத்தில், ஸ்டைலான ஆக்சன் திரில்லராக பிரம்மாண்டமாக படமாக்கப்படுகிறது. ஒரு மிகச்சிறந்த படைப்பாக வேல்ஸ் நிறுவனத்தின் அர்ப்பணிப்பில், D54 ஒரு பிரம்மாண்டமான திரைப்படமாக இப்படம் உருவாகிறது.

இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

“டிரெண்டிங்” பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

0

Ram film factory சார்பில், தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த் தயாரிப்பில், இயக்குநர் சிவராஜ் இயக்கத்தில், கலையரசன், பிரியாலயா நடிப்பில், இன்றைய சோஷியல் மீடியா உலகின் முகத்தைக் காட்டும், பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள படம் “டிரெண்டிங்”. வரும் ஜூலை 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்….,

தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த் பேசியதாவது…
டிரெண்டிங் திரைப்படம் எங்களின் சின்ன முயற்சி, நீங்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டுகிறேன். கலையரசன் மிகச்சிறந்த நடிகர் அவருக்கு இணையாக பிரியாலயா நன்றாக நடித்துள்ளார். இயக்குநர் சிவராஜ் இந்தக்கதையைச் சொன்ன போதே, எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. சாம் சிஎஸ் சிறப்பான இசையை தந்துள்ளார். ஒளிப்பதிவாளர் பிரவீன் சிறப்பாகச் செய்துள்ளார். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

ஒளிப்பதிவாளர் பிரவீன் பேசியதாவது…
நானும் மீடியாவிலிருந்து வந்தவன். இங்கு ஒளிப்பதிவாளராக மேடையேறி இருப்பது மகிழ்ச்சி. நானும் சிவராஜும் சேர்ந்து குறும்படங்கள் வேலை பார்த்துள்ளோம். நான் பொள்ளாச்சி போன போது, சிவராஜ் சொன்ன கதை தான் இது. சிவராஜ் இதை டெவலப் செய்த பின்னர் கலையரசன் அண்ணாவிடம் கதை சொன்னோம். கதை கேட்டவுடன் அவர் இந்த கதாபாத்திரம் செய்ய ஆசைப்படுவதாகச் சொன்னார் அப்படித்தான் இப்படம் ஆரம்பித்தது. சாம் சிஎஸ் இசை இந்தப்படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. இந்த படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி.

நடிகர் பிரேம் குமார் பேசியதாவது…
இந்தப்படம் டைட்டில் கேட்டவுடன் எனக்கு மிகவும் பிடித்து விட்டது, டைட்டிலை மாற்றி விடாதீர்கள் அப்போது தான் டிரெண்டிங்கில் இருக்கும் என்று சொன்னேன். ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை இப்படம் பேசியுள்ளது. கலையரசன் தம்பி தான் எனக்கு போன் செய்து, இந்தக் கேரக்டர் செய்ய வேண்டும் என்றார். கலையரசன், பிரியாவுடன் நடித்தது நல்ல அனுபவம். இயக்குநர் சிவராஜ் அதிர்ந்து கூட பேச மாட்டார். இந்தப்படம் ஷூட்டிங் நல்ல அனுபவமாக இருந்தது. சாம் சிஎஸ் இசையில் அசத்தியுள்ளார். இந்தப்படம் பார்த்து, அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நிர்வாகத் தயாரிப்பாளர் ஶ்ரீகாந்த் பேசியதாவது…
ஒரு மதிய வேளையில், கலையரசன் அண்ணா கூப்பிட்டிருந்தார், அப்போது பேச்சு வாக்கில் ஆரம்பித்த படம், அங்கு ஆரம்பித்த படம், கலையரசன், பிரியா, சிவராஜ் எல்லோரின் உழைப்பில் இங்கு வந்துள்ளது. உங்கள் எல்லோருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன். வரும் ஜூலை 18 ஆம் தேதி திரைக்கு வருகிறது ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் பெசண்ட் ரவி பேசியதாவது…
இப்படத்தை 20 நாட்களில் ஒரு வீட்டுக்குள் எடுத்துள்ளார்கள், ஆனால் முடிந்த அளவு மிகச்சிறப்பாக, மிக அழகாக எடுத்துள்ளனர். நாம் எத்தனை படம் செய்தாலும் டிரெய்லர் பார்க்கும் போது, அந்தப்படம் நன்றாக வந்துள்ளதா? எனத் தெரிந்துவிடும். இப்படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. சாம் சிஎஸ் மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் கலக்கியுள்ளார். சின்ன இடத்தில் லைட் செய்வது கடினம் ஆனால் அழகாகச் செய்துள்ளார். கலையரசன் சின்ன கேரக்டரில் நடித்துக்கொண்டிருக்கும் போது இருந்து தெரியும், இப்போது அவரது படங்கள் பார்க்கும் போது அவர் நடிப்பைப் பார்த்து பொறாமையாக இருக்கிறது. கலக்கி வருகிறார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையட்டும். நிறை குடம் தளும்பாது எனச் சொல்வார்கள், அது போலத் தான் இயக்குநர் சிவராஜ். மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி

நடிகர் அலெக்ஸாண்டர் பேசியதாவது…
நண்பர் ஹரி தான் இந்தப்பட வாய்ப்பை வாங்கித் தந்தார். நான் சினிமாவில் மிகவும் தாகமுள்ள நடிகன். என் ஆசைக்கு மிக நல்ல கதாபாத்திரத்தை இயக்குநர் சிவராஜ் தந்துள்ளார். முகம் வராத ஒரு கேரக்டர். எல்லோருக்கும் பிடிக்கும். ஒரு அழகான தத்துவத்தை இந்தப்படம் மூலம் பேசியுள்ளார் இயக்குநர். சாம் சிஎஸ் இசைக்கு நான் ரசிகன், இந்தப்படத்தில் நானும் பங்கு பெற்றது மகிழ்ச்சி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பேசியதாவது…
சின்னப்படம் பெரிய படம் என எதுவுமே இல்லை, ஜெயிச்ச படம் ஜெயிக்காத படம் அவ்வளவு தான். இப்போது ஜெயித்துள்ள படங்கள் எல்லாம் சின்ன படங்கள் தான். கலையரசன் தான் முதலில் கால் பண்ணி, இந்தப்படம் பற்றி சொன்னார். இதில் இரண்டு பேர் மட்டும் நடிப்பதாகச் சொன்னார். கதை முழுதாகக் கேட்க சுவாரஸ்யமாக இருந்தது. நாம் இப்போது எல்லோரும் ஆன்லைனில் அடிமையாகி, லைக்குக்காக காத்திருக்கிறோம். இந்தப்படம் ஆன்லைன் மோகத்தை, அது எப்படி மனுஷனை மாத்துகிறது என்பதை அழுத்தமாகப் பேசியுள்ளது. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இயக்குநர் சிவராஜ் இதற்கு முன்னால் போலீஸில் இருந்துள்ளார். எல்லோரும் ஐடியில் இருந்து வருவார்கள், இவர் போலீஸில் இருந்து வந்துள்ளார். அவருக்கு சினிமா தாகம் இருக்கிறது. கதையாக இப்படம் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. நாம் நேரில் தினசரி சந்திக்கும் மனிதர்களின் வாழ்வைச் சொல்கிறது. எல்லோரும் அருமையாக பெர்ஃபார்ம்ஸ் செய்துள்ளார்கள். தொழில் நுட்ப கலைஞர்கள் சிறப்பாக செய்துள்ளானர். அனைவரும் படத்தை ரசிப்பீர்கள் என நம்புகிறேன். நன்றி.

நடிகை பிரியாலயா பேசியதாவது…
டிரெண்டிங் படம் வரும் 18 ஆம் தேதி திரைக்கு வருகிறது. என் தாய் தந்தைக்கு நன்றி. படக்குழுவிற்கு நன்றி. இப்படம் ஆடிசன் முடிந்த போது சந்தோசத்தை விட பயம் தான் அதிகம் இருந்தது. ஆக்டிங் ஸ்கோப் உள்ள படம், கலையரசன் சார் கூட நடிக்க வேண்டும். இது ஒரு எமோசனல் ரோலர் கோஸ்டர். இப்படத்தில் நடித்தது உண்மையில் மிக நல்ல அனுபவம். பெயரிலேயே கலைக்கு அரசன் என வைத்துள்ளார். உண்மையில் அவர் கலைக்கு அரசன் தான். இப்படத்திற்கு சாம் சிஎஸ் மிக அற்புதமாக இசையமைத்துள்ளார். இசையோடு படம் பார்க்க அருமையாக உள்ளது. அனைத்து கலைஞர்களும் மிகச்சிறப்பாக உழைத்துள்ளனர். சோஷியல் மீடியா யூஸ் பண்ற எல்லோரும் பார்க்க வேண்டிய படம். உங்களை இருக்கை நுனியில் அமர வைக்கும், நன்றி.

இயக்குநர் சிவராஜ் பேசியதாவது..,
இந்த இடத்திற்கு வர முக்கியமான காரணம் பிரவீன் தான், நான் ஊரில் இருக்கும் போது, ஷார்ட் ஃபிலிம் எழுதிக்கொண்டிருந்தேன், பிரவீன் உதவியால் தான் அந்தப்படம் நடந்தது. அது தான் சினிமாவுக்கு வர காரணமாக இருந்தது. இந்தக்கதை பிரவீனிடம் சொன்ன போது அவர் கலையரசனிடம் அழைத்துப் போனார், ஒன்லைன் சொல்லி உடனே ஓகே ஆகிவிட்டது. இது சோஷியல் மீடியா தம்பதி பற்றிய கதை. நான் மினிமிலிஸ்ட் படம் செய்யலாம் எனத் தான் ஆரம்பித்தேன் ஆனால் கலையரசன், சாம் சிஎஸ் என பெரிய படம் ஆகிவிட்டது. சாம் சிஎஸ் அனுபவம், திறமை இப்போது திரையில் பார்க்கும்போது தெரிகிறது. நாங்கள் இந்தப்படம் செய்யும் போது, 22 படங்கள் அவர் கையிலிருந்தது. இந்தப்படம் செய்ததற்கு நன்றி. தயாரிப்பில் முழுமையாக எனக்கு ஆதரவு தந்தார்கள், எனக்கு உறுதுணையாக இருந்த ஶ்ரீகாந்த் அவர்களுக்கு நன்றி. இது உருவாக்கத்தில் சின்ன படம் ஆனால் பேசும் விசயத்தில் பெரிய படம். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன், மக்கள் மனதில் நிற்கும் என நம்புகிறேன். நன்றி.

நடிகர் கலையரசன் பேசியதாவது…
என் கேரியரில் இப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும். நான் ஹீரோவாக பல படங்கள் செய்துள்ளேன் அதில் இது வெற்றிப்படங்களில் ஒன்றாக இருக்கும். வேறொரு படம் செய்வதாக ஆனந்த் அண்ணாவுடன் பேசிக்கொண்டிருந்தோம், சிவராஜ் இந்தக்கதை சொன்ன போது எல்லோருக்கும் பிடித்தது. அவரை நோலன் என்று தான் எல்லோரும் கூப்பிடுவோம். அவரைப்பார்த்தால் போலீஸில் இருந்தவர் போலவே தெரியாது. மிகத்திறமையானவர். குறைந்த ஆர்டிஸ்ட் வைத்து 2 மணி நேரம் உட்கார வைப்பது ஈஸியான விசயமில்லை, அதை சிவராஜ் செய்துள்ளார். மியூசிக் கேமரா, நடிப்பு எல்லாம் சேர்ந்து தான் ஒரு சினிமாவில் மேஜிக் நடக்கும். சாம் சிஎஸ் மிக பிஸியாக இருந்தார், ஆனால் நாங்கள் கேட்டதற்காகச் செய்து தந்தார். பிரவீன் அவரோட சொந்தப்படம் போல அக்கறை எடுத்துக்கொண்டு செய்தார். இருவரால் இப்படத்தில் மேஜிக் நடந்துள்ளது. அலெக்ஸ் இதில் முகமில்லாமல் ஒரு அருமையான பாத்திரம் செய்துள்ளார். முகமே தெரியாமல் இருந்தாலும் நடித்தற்கு நன்றி. தயாரிப்பு தரப்பு முழு நம்பிக்கை வைத்தார்கள் அவர்களுக்கு நன்றி. நண்பன் ஶ்ரீகாந்த் இப்படம் முழுமையாக முக்கிய காரணம் அவனுக்கு நன்றி. தயாரிப்பில் முழு வேலையும் பார்த்தார். என் மனைவி பிரியா தான் உடை அலங்காரம் செய்துள்ளார் அவருக்கு நன்றி. இது கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். கண்டிப்பாக “டிரெண்டிங்” நல்ல படமாக இருக்கும் நன்றி.

சோஷியல் மீடியா குடும்பத்திற்குள் நுழைந்து, எந்தளவு வாழ்க்கைக்குள் சிக்கல்களை உருவாக்குகிறது என்பதை, பரபர சம்பவங்களுடன், ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருக்கும் அழுத்தமான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

நடிகர்கள் கலையரசன் நாயகனாக நடிக்க, பிரியாலயா நாயகியாக நடித்துள்ளார், பிரேம்குமார் பெசன்ட் ரவி, வித்யா போர்கியா, ஷிவன்யா பிரியங்கா, கௌரி, பாலாஜி தியாகராஜன் தயாளன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் ஜூலை மாதம் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தொழில்நுட்ப வல்லுநர்கள்
தயாரிப்பு நிறுவனம் – Ram film factory
தயாரிப்பு – மீனாட்சி ஆனந்த்
எழுத்து இயக்கம் – சிவராஜ்
இசையமைப்பாளர் – சாம்.சி.எஸ்
ஒளிப்பதிவு – பிரவீன் பாலு
கலை இயக்கம் – அருண்
எடிட்டிங் – நாகூரன் ராமச்சந்திரன்
பாடல் வரிகள் – குட்டி ரேவதி, கார்த்திக் நேத்தா
மக்கள் தொடர்பு – Aim சதீஷ், சிவா.

- Advertisement -

Recent Posts