Saturday, July 4, 2026
- Advertisement -
Home Blog Page 158

‘Sena Ki Jai’ Song from Tanvi The Great is Out – A Stirring Tribute to India’s Bravehearts

0

Link: https://youtu.be/yo3_EjuQmrU?si=9nDuVenPMxuCD_JA

Anupam Kher’s most passionate project, Tanvi The Great has received an overwhelmingly positive response to its trailer. The film continues to build momentum with the release of its powerful new song, Sena Ki Jai, a heartfelt tribute to the courage and sacrifice of India’s armed forces.

What makes it even more special is that the song, along with the entire album, has been released following the birthday of Academy Award-winner M.M. Keeravani, who has composed the music for Tanvi The Great. The film’s music is presented by Zee Music.

Sung by the gifted Shagun Sodhi, penned by the acclaimed Kausar Munir, and composed and arranged by none other than Oscar-winning maestro M. M. Keeravani, the track blends emotional resonance with an infectious energy that reflects the spirit of a proud, progressive India.

Set against the backdrop of a vibrant army environment, the song showcases Tanvi’s gratitude towards the army in her infectious spirit. The visuals are stirring, patriotic, and packed with vigour.

Speaking about the song, M. M. Keeravani said, “Sena Ki Jai is the heart of Tanvi The Great. This song is our tribute to all the armed forces who protect us. It’s a composition that will make you want to dance to its rhythm while filling your heart with pride which truly reflects the spirit of New India.”

Anupam Kher shares, “M.M. Keeravani is truly one of the most gifted artists of our time. Knowing him has been one of the most enriching experiences of my life. I’m honoured to release the most special song from our film, ‘Sena Ki Jai,’ as a gift for his birthday. This song will be an anthem for our bravehearts. It is composed in a way that reflects the unique thinking of an autistic mind which is deeply layered, and powerful. It captures the spirit and strength of our soldiers. A timeless tribute which will echo forever.”

This marks Anupam Kher’s return to direction after many years, with a story that lies closest to his heart, his most personal and poignant work to date.

The film introduces debutant Shubhangi, alongside a stellar cast including Jackie Shroff, Arvind Swami, Boman Irani , Pallavi Joshi, Karan Tacker, Nasser with Anupam Kher and Iain Glen.

Tanvi The Great is produced by Anupam Kher Studios in association with NFDC. The global distribution is handled by Excel Entertainment led by Ritesh Sidhwani and Farhan Akhtar and AA Films, led by Anil Thadani. Tanvi The Great hits cinemas worldwide on 18th July 2025.

“‘Oho Endhan Baby’ is truly my dream project!” – Actor Rudra

0

Romeo Pictures and Vishnu Vishal Studioz proudly present “Oho Endhan Baby”, a romantic entertainer in association with Good Show. The film is directed by Krishnakumar Ramakumar and marks the debut of actor, producer Vishnu Vishal’s younger brother Rudra, as the lead hero. The movie hits theatres on July 11.

Speaking about the film, actor Rudra shared,“Oh My Baby is nothing short of a dream come true. I owe everything to my brother Vishnu Vishal for launching me as a hero. Cinema has always been my first love, my first friend. I began this journey as an assistant director, with the hope of eventually becoming an actor. I know how important this film is — not just for me, but for everyone who believed in me.

If you feel I’ve performed well, the credit goes entirely to our director Krishnakumar. Every artist and technician in this team has poured their heart into it. I absolutely love the music by Jen Martin — it adds so much soul.

My heartfelt thanks to my family, my friends, and a special thanks to my brother. I’ve learned so much from him. Please do watch the film and share your thoughts — it means the world to me.”

Cast: Rudra, Mithila Palkar, Anju Kurian, Mysskin, Redin Kingsley, Karunakaran, Geetha Kailasam, Balaji Sakthivel & more.

Technical Crew:
Presented by: Vishnu Vishal Studioz & Romeo Pictures
Director: Krishnakumar Ramakumar
Producers: Rahul & Vishnu Vishal
Co-Producers: K.V. Durai & Javed
Associate Production: Good Show
Music: Jen Martin
Cinematography: Harish Kannan
Editor: R.C. Pranav
Art Direction: Rajesh
Stunts: Rucker Ram
Choreography: Bobby, Satish Krishnan
Story: Mukesh Manjunath
Costume Designer: Ruchi Munoth
Stylist: Ravi
Makeup: Sakthivel
Lyrics: Ahik AR, Karthik Netha, Venu Selvan, Rising Rapper
Sound Design: Sync cinema
Sound Mixing: Aravind Menon
Sound Engineers: Thilapan, Sriram (Seat Studios)
VFX: Resol FX
DI: Mango Post
Colorist: K. Arun Sangameshwar
Stills: Narain
Publicity Stills: V.S. Ananthakrishnan
Publicity Design: Gopi Prasanna
PRO: Suresh Chandra , Abdul Nasser

”’ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படம் எனது கனவு” நடிகர் ருத்ரா!

ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’ இன் அசோசியேஷன் வித் குட் ஷோ. இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்க நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். படம் ஜூலை 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

படம் குறித்து நடிகர் ருத்ரா பகிர்ந்து கொண்டதாவது, “என்னுடைய அண்ணன் விஷ்ணு விஷால் என்னை ஹீரோவாக அறிமுகம் செய்வதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சினிமா தான் என்னுடைய முதல் நண்பன். உதவி இயக்குநராக இருந்து பின்பு நடிகராகலாம் என்றுதான் சினிமா பயணத்தைத் துவங்கினேன். இந்த படம் எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும். நான் நன்றாக நடித்து இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் இயக்குநர் கிருஷ்ணா தான். நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் எல்லோரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஜென் மார்ட்டின் இசை மிகவும் பிடிக்கும். என்னுடைய குடும்பம், நண்பர்களுக்கு நன்றி. என்னுடைய அண்ணனுக்கு ஸ்பெஷல் நன்றி! அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்” என்றார்.

நடிகர்கள்: ருத்ரா, மிதிலா பால்கர், அஞ்சு குரியன், மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன், கீதா கைலாசம், பாலாஜி சக்திவேல் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு:
வழங்குபவர்கள்: விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ்,
இயக்குநர்: கிருஷ்ணகுமார் ராமகுமார்,
தயாரிப்பாளர்கள்: ராகுல் மற்றும் விஷ்ணு விஷால்,
இணை தயாரிப்பாளர்கள்: கே.வி.துரை மற்றும் ஜாவித்,
இணை தயாரிப்பு: குட் ஷோ,
இசை: ஜென் மார்ட்டின்,
ஒளிப்பதிவு: ஹரிஷ் கண்ணன்,
எடிட்டர்: ஆர்.சி. பிரணவ்,
கலை இயக்குநர்: ராஜேஷ்,
ஸ்டண்ட் மாஸ்டர்: ரக்கர் ராம்,
நடன இயக்குநர்கள்: பாபி, சதீஷ் கிருஷ்ணன்,
கதை: முகேஷ் மஞ்சுநாத்,
ஆடை வடிவமைப்பு: ருச்சி முனோத்,
காஸ்ட்யூமர்: ரவி,
ஒப்பனை: சக்திவேல்,
பாடல் வரிகள்: அஹிக் ஏஆர், கார்த்திக் நேதா, வேணு செல்வன், ரைசிங் ராப்பர்,
ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா,
ஒலிக்கலவை: அரவிந்த் மேனன்,
ஒலி பொறியாளர்: தீலபன், ஸ்ரீராம் (சீட் ஸ்டுடியோஸ்),
VFX: Resol FX,
DI: மேங்கோ போஸ்ட்,
வண்ணம்: கே. அருண் சங்கமேஸ்வர்,
ஸ்டில்ஸ்: நரேன்,
பப்ளிசிட்டி ஸ்டில்ஸ் : வி.எஸ்.அனந்தகிருஷ்ணன்,
பப்ளிசிட்டி டிசைனர்: கோபி பிரசன்னா,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- அப்துல் நாசர்.

வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’ ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது

0

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு – பகத் பாசில் இருவரும் இணைந்து மிரட்டும் ‘மாரீசன்’ திரைப்படம் எதிர்வரும் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகமாக அறிவித்துள்ளனர்.

இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள ‘மாரீசன் ‘ திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன் , ரேணுகா, சரவணா சுப்பையா , கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர். பி. சவுத்ரி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் கிரியேட்டிவ் புரொடியுசராக பணியாற்றியுள்ளது.

இப்படத்தின் டீசர் வெளியாகி நான்கு மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு, படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் ஜூலை மாதம் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘மாமன்னன்’ படத்திற்குப் பிறகு வடிவேலு – பகத் பாசில் கூட்டணி இணைந்திருப்பதாலும், இந்த படத்திற்கான டீசரில் இருவரும் அற்புதமாக நடித்திருப்பதாலும் .. படத்திற்கு ரசிகர்களிடத்தில் மட்டுமல்லாமல் திரையுலக வணிகர்களிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

ZEE5 இன் அடுத்த தமிழ் ஓரிஜினல் சீரிஸ், நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும், ‘சட்டமும் நீதியும்’ வரும் ஜூலை 18 முதல் ஸ்ட்ரீமாகிறது !

0

இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங்க் தளமான ZEE5 தமிழில், விலங்கு, அயலி, கூசே முனுசாமி வீரப்பன், ஐந்தாம் வேதம் போன்ற ஹிட் தமிழ் ஓரிஜினல்களுக்குப் பிறகு, தனது அடுத்த அதிரடி கோர்ட் டிராமா சீரிஸான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸை வரும் ஜூலை 18, 2025 அன்று வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, சென்னை மாநகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

திரையுலகில் 15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்த சீரிஸ் மூலம் ஹீரோவாக திரும்பியிருக்கிறார் நடிகர் சரவணன், தமிழ் திரைத்துறையில் 35வது ஆண்டைக் கடந்திருக்கும் அவரது சாதனை இந்நிகழ்வினில் கொண்டாடப்பட்டது. முன்னாள் ஹீரோவாகவும், பின்னர் பல வலிமையான கேரக்டர் ரோல்களால் ரசிகர்களின் மனங்களில் தனி இடம் பிடித்தவர் சரவணன், தற்போது தீவிரமும், உணர்வுகளும் கலந்த நுணுக்கமான நடிப்புடன் மீண்டும் நாயகனாகத் திரும்புகிறார். நடிகர் சரவணனுடன் உறுதியும், உணர்ச்சிகளும் நிறைந்த சக்திவாய்ந்த ஒரு பெண் கதாபாத்திரத்தில் நம்ரிதா MV நடித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இந்த சீரிஸை இயக்கியிருக்கிறார். “18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளார். உணர்வுப்பூர்வமான கதையுடன், சமூக அக்கறை மிக்க படைப்பாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.

ZEE5 தென்னிந்திய உள்ளடக்கத் தலைவர் கவுஷிக் நரசிம்மன் கூறியதாவது…
“ZEE5 எப்போதும் சமூக உண்மைகளைப் பிரதிபலிக்கும் துணிச்சலான கதைகளைத் தேர்வு செய்து வருகிறது. ‘சட்டமும் நீதியும்’ என்ற இந்த சீரிஸில், நீதியும், மனச்சாட்சியும், துணிச்சலும் எவ்வாறு ஒன்று சேரும் என்பதை, உணர்வுப்பூர்வமாக, நம் வாழ்க்கையோடு இணைந்து காணலாம்.”

சட்டமும் நீதியும் சீரிஸ் “குரலற்றவர்களின் குரல்” எனும் கருத்திலிருந்து உருவானது. நம்மைச் சுற்றியுள்ள பலர் தங்களது குரலை வெளிப்படுத்த முடியாமல் அமைதியாக இருக்கும்போது, அந்த அமைதியை உடைத்து, தனது உரிமைக்கும் மற்றொருவரின் நலனிற்காகவும் நிற்கும் ஒரு சாதாரண மனிதரின் கதைதான் இது.

இந்த சீரிஸ், மனதை உலுக்கும் நீதிமன்ற காட்சிகள், உணர்வுகள் சூழ்ந்த கதாபாத்திரங்கள், மற்றும் சமூக ரீதியாக முக்கியமான ஒரு மெசேஜ் ஆகியவற்றுடன், இந்த ஆண்டின் மிக முக்கியமான தமிழ் ஓரிஜினல் படைப்பாக வெளிவரவுள்ளது.

ZEE5-ல் வரும் ஜூலை 18 முதல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

Dream Knight Stories’ Grand Launch: Indian Cricketer Suresh Raina Makes a Surprise Debut in Tamil Cinema!

0

Chennai, India – 2025:
Dream Knight Stories, a brand-new production house, made a dazzling entry into the world of cinema with the grand launch of its debut venture, “Production No. 1”, directed by Logan, known for his work in Maan Karate, Remo, and Gethu. The event witnessed an overwhelming turnout of industry stalwarts and celebrities, making it a night to remember.

Adding star power to the event, Indian cricketer and Chennai Super Kings powerhouse Shivam Dube lit the ceremonial lamp, marking the auspicious beginning of the production house. Engaging in witty banter with the anchor, Dube shared his excitement about the launch and extended his heartfelt wishes to the director and producer, expressing how thrilled he was to be a part of this milestone moment.

D. Saravanakumar, the producer of Production No. 1, brings with him years of experience from AGS Entertainment, where he served as Production Executive across all major projects.

The launch event also unveiled the stellar technical crew behind the film:

Santhosh Narayanan– Music Composer
Sandeep K. Vijay– Director of Photography
Muthuraj– Production Designer
Resul Pookutty– Sound Designer (Academy Award Winner)
Supreme Sundar – Action Choreographer

The event saw the presence and heartfelt felicitations from several leading names in Tamil cinema, including *Director Mohan Raja, **Editor Mohan, **Producer P. L. Thenappan, **Actor Sathish, **Director Vijay Milton, **Director Thirukumaran, and *Director Bakyaraj Kannan.

In a *first-of-its-kind moment in Indian cinema history, the event featured a **star reveal even before the film’s official announcement. The surprise? None other than cricketing legend *Suresh Raina making his acting debut in Production No. 1! When asked about former teammate MS Dhoni possibly joining the cast, Raina flashed a smile and replied, “He should answer that one!”, leaving fans and media abuzz with speculation.

Director Logan said, “It’s a dream to begin my debut as a filmmaker with such a talented team and the backing of Dream Knight Stories. With names like Santhosh Narayanan and Resul Pookutty on board, we are setting out to create something truly special.”

More updates on Production No. 1 and Dream Knight Stories’ upcoming ventures will be officially announced in the coming weeks.

🔗 https://youtu.be/pw6qzGAnlSk?si=jyMAQWxjILLfDJI1

ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் பிரமாண்ட துவக்கம்: தமிழக சினிமாவில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அறிமுகமாகிறார்!

சென்னை, இந்தியா – ஜூலை 2025:
புதிய தயாரிப்பு நிறுவனமாக மலர்ந்துள்ள ட்ரீம் நைட் ஸ்டோரீஸ், தனது முதல் படைப்பான “புரொடக்‌ஷன் நம்பர் 1” மூலம் திரைப்பட உலகில் தனது கால் பதிப்பைத் தெரிவித்துள்ளது. மான் கராத்தே ரெமோ, கெத்து போன்ற படங்களிலும் விரைவில் வெளியாகவிருக்கும் ரெட்டத்தல திரைப்படத்தில் டயலாக் ரைட்டராகவும் பணியாற்றிய இயக்குனர் லோகன் இயக்கும் இந்த படத்துக்கான அறிமுக நிகழ்வு, திரையுலக பிரபலங்களும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பிரமுகர்களும் திரண்ட மகிழ்வான ஒரு இரவாக மாறியது.

இந்திய அணியின் முன்னணி வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மின்னும் ஆட்டக்காரர் ஷிவம் டூபே, நிகழ்வின் துவக்கமாக விளக்கேற்றும் விழாவில் கலந்து கொண்டார். தொகுப்பாளருடன் நகைச்சுவை கலந்த உரையாடலில் ஈடுபட்ட அவர், “இது ஒரு வரலாற்றுப் பொழுது. இத்தகைய ஒரு படத் திட்டத்தின் தொடக்கத்தில் இருக்கிறேன் என்பது பெருமை!, இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் என் வாழ்த்துக்கள்” என தனது உற்சாகத்தையும் வாழ்த்துகளையும் பகிர்ந்தார்.

AGS என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் பல முக்கியப் படங்களில் தயாரிப்பு பொறுப்பாளராக பணியாற்றிய அனுபவம் கொண்ட டி. சரவணகுமார், இத்திரைப்படத்தின் தயாரிப்பாளராக செயல்படுகிறார்.

புரொடக்‌ஷன் நம்பர் 1 படத்தின் தொழில்நுட்பக் குழுவில் உள்ள முக்கியமான தொழில்நுட்ப நிபுணர்கள்:
🎶 சந்தோஷ் நாராயணன் – இசையமைப்பாளர்
🎥 சந்தீப் கே. விஜய் – ஒளிப்பதிவாளர்
🛠 முத்துராஜ் – கலை இயக்குநர்
🔊 ரசூல் பூக்குட்டி – ஒலி வடிவமைப்பாளர் (ஆஸ்கார் விருது பெற்றவர்)
💥 சுப்ரீம் சுந்தர் – ஃபைட் மாஸ்டர்

இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக, இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக, படத்திற்கான வீரர் அறிமுகம், படத்தின் பெயர் கூட அறிவிக்கப்படுவதற்கு முன்பே நடந்தது! அனைவரும் எதிர்பார்த்த அந்த நடிகர் — இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, தனது திரையுலக அறிமுகம் இந்த படத்தின் மூலம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. நிகழ்வில் பேசிய ரெய்னா, தனது தோழரான எம்.எஸ். தோனியும் இப்படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதா எனக் கேட்டபோது, “அவர் தான் அதுக்கு பதிலளிக்க வேண்டும!” எனச் சிரித்தபடி பதிலளித்தார்.

இந்த விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துகளை தெரிவித்த திரை பிரபலங்கள்:
எடிட்டர் மோகன், இயக்குநர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன், நடிகர் சதீஷ், இயக்குநர் விஜய் மில்டன், இயக்குநர் திருக்குமரன், இயக்குநர் பக்யராஜ் கண்ணன்
“இத்தனை திறமைமிக்க அணி மற்றும் ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் போன்ற உறுதியான ஆதரவு கொண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் என் இயக்குநர் பயணத்தைத் தொடங்குவது ஒரு கனவு நனவாகும் தருணம்,” என இயக்குநர் லோகன் உருக்கமாக தெரிவித்தார். “சந்தோஷ் நாராயணனும், ரசூல் பூக்குட்டியும் போன்ற உலகத் தரம் வாய்ந்த கலைஞர்களுடன் வேலை செய்வது சிறப்பான அனுபவமாக இருக்கும்,” என்றார்.

புரொடக்‌ஷன் நம்பர் 1 குறித்த மேலும் தகவல்களும், ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் நிறுவனம் இயக்கவிருக்கும் எதிர்காலப் படைப்புகள் குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாக உள்ளன.

🔗 https://youtu.be/pw6qzGAnlSk?si=jyMAQWxjILLfDJI1

நடிகர் நட்டி நடிப்பில் வரலாற்று பின்னணியில் பிரம்மாண்டமாக தயாராகும் ‘நீலி’

0

உதயா கிரியேஷன்ஸ் சார்பில் மனோ உதயகுமார் தயாரிப்பில் உருவாகும் படம் ‘நீலி’. ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி ()எ) நட்ராஜ் சுப்ரமணியம் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘நீங்காத எண்ணம்’, ‘மேல்நாட்டு மருமகன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எம்எஸ்எஸ் (MSS) இந்த படத்தை இயக்குகிறார்.

2400 வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி வரலாற்று பின்னணியில் இந்த நீலி திரைப்படம் உருவாகிறது. அமானுஷ்ய படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கும் நிலையில் இந்தப்படம் வரலாற்று பின்னணியில் உருவாக இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு.

படம் குறித்து இயக்குநர் எம்எஸ்எஸ் கூறும்போது,

“நீலி சம்பந்தமான நிறைய வரலாற்று விஷயங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு அதனுடன் கொஞ்சம் கற்பனை நிகழ்வுகளையும் கலந்து இந்த கதையை உருவாக்கியுள்ளோம்.

இந்த படத்தின் வித்தியாசமான கதையை கேட்டதுமே பிடித்துப்போய் இதில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டார் நடிகர் நட்டி. இரண்டு முக்கிய நாயகிகள் நடிக்கிறார்கள். பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது” என்று கூறியுள்ளார்.

A Promising New Face in Tamil Cinema: Meenakshi Dinesh Makes Her Mark with Love Marriage

0

After leaving a strong impression with her performances in Malayalam cinema, actress Meenakshi Dinesh has now forayed into Tamil films with the recently released romantic drama Love Marriage, directed by Shanmuga Priyan and starring Vikram Prabhu in the lead. The film has opened to positive reviews, and Meenakshi’s portrayal has been a standout, winning over both critics and cinephiles.

Known for her impactful roles in Malayalam films such as 18+ and the emotionally intense Iratta, Meenakshi brings the same depth and charm to her role in Love Marriage. Audiences have lauded her for her expressive performance and effortless screen presence, hailing her as a fresh and promising addition to Tamil cinema.

Speaking about her journey, Meenakshi said, “I’m thrilled with the warm reception I’ve received from the Tamil audience. The role in Love Marriage was a wonderful opportunity to explore a new space, and I’m grateful to the team for believing in me.”

With an increasing interest in exploring diverse and challenging roles, Meenakshi is determined to chart her own path in the film industry. She is especially drawn to characters that allow her to break stereotypes and experiment with layered storytelling.

A passionate cinema lover, Meenakshi revealed that she has long admired Tamil actor Suriya for his versatility and intensity. “It would be a dream come true to work with Suriya sir someday,” she shared. “There’s so much to learn from someone like him, who constantly reinvents himself with every film.”

As she continues to grow her body of work across South Indian languages, Meenakshi Dinesh’s clarity of vision and strong performances are fast earning her a loyal fan base. If Love Marriage is any indication, the young actress is poised for a bright and exciting journey in Tamil cinema.

தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கைக்குரிய புது முகம்: லவ் மேரேஜ் மூலம் அசத்திய நடிகை மீனாட்சி தினேஷ்!

மலையாள சினிமாவில் தனது நடிப்பால் வலுவான முத்திரையை பதித்த நடிகை மீனாட்சி தினேஷ், சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான லவ் மேரேஜ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்துள்ளார். லவ் மேரேஜ் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. மேலும் படத்தில் மீனாட்சியின் கதாபாத்திரம் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டு விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் அனைவரது கவனத்தை. பெற்றுள்ளது.

18+ மற்றும் இரட்டா போன்ற வித்யாசமான, தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர் மீனாட்சி தினேஷ். அதே போல தமிழில் லவ் மேரேஜ் படத்திலும் தனது அழுத்தமான கதாபாத்திரம் மற்றும் நடிப்பின் மூலம் அதே தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்.

ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மீனாட்சி தினேஷின் எதார்த்தமான நடிப்பு மற்றும் ஸ்க்ரீன் பிரசன்சை பாராட்டியுள்ளனர். மேலும் மீனாட்சி தினேஷை தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய மற்றும் நம்பிக்கைக்குரிய நடிகை என பாராட்டியுள்ளனர்.
தனது பயணத்தைப் பற்றி மீனாட்சி தினேஷ் பேசுகையில், “தமிழ் ரசிகர்களிடம் இருந்து எனக்குக் கிடைத்த அன்பான வரவேற்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன். லவ் மேரேஜ் படத்தில் நடித்தது ஒரு புதிய பரிமாணத்தை ஆராய ஒரு சிறப்பான வாய்ப்பாக எனக்கு அமைந்தது, மேலும் என்னை தேர்வு செய்ததற்காக பட குழுவினருக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.”

பல்வேறுபட்ட மற்றும் சவாலான வேடங்களில் நடிப்பதில் அதிகரித்து வரும் ஆர்வத்துடன், மீனாட்சி தினேஷ் திரைப்படத் துறையில் தனது சொந்த பாதையை வகுத்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளார். ஸ்டீரியோடைப்களை உடைத்து, அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் அதிக ஆர்வம் கொண்ட மீனாட்சி தினேஷ், நடிகர் சூர்யாவின் தனித்துவமான நடிப்பிற்கு ரசிகை என்றும், நீண்ட நாட்களாக அவரை பின்தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். “சூர்யா சாருடன் பணிபுரிவது எனது கனவு, ஒருநாள் அந்த கனவு நனவாகும் என்று நம்புகிறேன்,” என்று தெரிவித்துள்ளார் மீனாட்சி தினேஷ். “ஒவ்வொரு படத்திலும் தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளும் அவரைப் போன்ற ஒருவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது” என்றும் கூறியுள்ளார்.

தென்னிந்திய மொழிகளில் தனது சிறந்த நடிப்பின் மூலம் அசத்தி வரும் மீனாட்சி தினேஷின் தெளிவான சினிமா பார்வை மற்றும் வலுவான நடிப்பு அவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை விரைவாகப் பெற்றுத் தருகிறது. லவ் மேரேஜ் படத்தின் மூலம் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி உள்ள மீனாட்சி தினேஷ் வரும் காலத்திலும் தமிழ் சினிமாவில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்.

“திருக்குறள்” திரைப்படத்தில் “ தளபதி பரிதி” வேடத்தில் பாராட்டுக்களைக் குவிக்கும் நடிகர் குணா பாபு !

0

குணச்சித்திர வேடங்களில் கவனம் ஈர்க்கும் நடிகர் குணா பாபு !

தமிழ்த் திரையுலகில் 2017 ஆம் ஆண்டில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் குணா பாபு, சமீபத்தில் வெளியான “திருக்குறள்” திரைப்படத்தில் முதன்மைப் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வீரமும் காதலும் நிறைந்த “தளபதி பரிதி” கதாபாத்திரத்தில் அவரது தனித்துவமான நடிப்பு, பார்வையாளர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது.

இளம் நடிகரான குணா பாபு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர், ஒரு தையல்காரரின் மகனாக வளர்ந்தார். ஒரு தனியார் வங்கியில் மூத்த மேலாளராக பணியாற்றிய குணா பாபு, சினிமா மீதான ஆர்வத்தால், தனது பணியைத் துறந்து, தியேட்டர் மற்றும் சினிமா நடிப்புப் பயிற்சியில் சான்றிதழ் பெற்றபின், திரையுலகில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் திரையுலகில் நிலைத்து நிற்கும் வகையில், 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, தனது திறமையைப் நிரூபித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான H.வினோத், P.S. மித்ரன், மகிழ்த்திருமேனி, கிருத்திகா, மதுமிதா, பிருந்தா, C.S. அமுதன், லோகேஷ் கனகராஜ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஜீத்து ஜோசப் போன்ற முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து, தீரன், காளி, இரும்புத்திரை, தமிழ் படம் 2, தடம், ஹீரோ, கே.டி (அ) கருப்பு துரை, தக்ஸ், லால் சலாம், விக்ரம், வேட்டையன், பாயும் ஒளி நீ எனக்கு, மற்றும் திருக்குறள் உட்பட பல ப்ளாக்பஸ்டர் படங்களில் பணியாற்றியுள்ளார்.

சின்ன சின்ன பாத்திரங்கள் முதல் குணச்சித்திர பாத்திரங்கள் வரை, தான் ஏற்றுக்கொண்ட பாத்திரங்களில் தனது முழு அர்ப்பணிப்பைத் தந்து, தனித்துவமான நடிப்புத் திறமையால், திரை ரசிகர்களிடமும், பார்வையாளர்களிடமும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறார். அவரது திறமையின் பலனாக திருக்குறள் படத்தில் “தளபதி பரிதி” பாத்திரம் அமைந்துள்ளது. திருக்குறள் படத்தில் அவரது தோற்றமும், நடிப்பும் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, பல புதிய வாய்ப்புகளையும் பெற்றுத் தந்துள்ளது. சவாலான கதாபாத்திரங்கலை ஏற்று நடப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்.

நடிகர் குணா பாபு அடுத்ததாக முன்னணி இயக்குநர்கள் இயக்க, முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும், ரிவால்வர் ரீட்டா, மாரீசன், கேங், தடை அடி உடை, மிராஜ் (மலையாளம்) உடப்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

எளிய பின்னணியிலிருந்து வந்து, திரையுலக சவால்களை மீறி, தனது திறமை மற்றும் முயற்சியால் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ள குணா பாபு, தனது எதிர்காலப் படங்கள் மூலம் இன்னும் பல உயரங்களைத் தொட தயாராக இருக்கிறார்.

Sun Pictures’ Coolie Creates Overseas Record Even Before Release – Set to Be a Benchmark Rajinikanth Film

0

Sun Pictures’ much-awaited film Coolie, starring Superstar Rajinikanth and directed by Lokesh Kanagaraj, has already made headlines by becoming the highest overseas procurement for a Tamil film to date.

The film also stars stalwarts from the Indian Film Industry like Nagarjuna, Sathyaraj, Aamir Khan, Upendra, Soubin Shahir, Shruti Haasan and others.

Anirudh has composed the music for the film marking his fourth consecutive film with director Lokesh Kanagaraj. The first single from the film Chikitu has been taking the internet by storm already.

The anticipation surrounding Coolie is unprecedented, and it is all set to create new benchmarks in terms of its global release strategy. This time around, the marketing campaign for Coolie is expected to be bigger than ever for a Superstar Rajinikanth starrer, promising a grand worldwide promotional rollout that matches the scale of the film.

Backing the film’s global distribution is the reputed Hamsini Entertainment, a key player in international film distribution. Having released over 130 films across languages worldwide, Hamsini Entertainment has a proven track record of taking Indian cinema to a global audience. Their recent ventures include the release of The Greatest of All Time (GOAT) starring Vijay in over 40 countries, and Devara, starring Jr. NTR, in more than 90 countries.

With Coolie, Hamsini Entertainment is gearing up for their biggest release yet, targeting distribution in over 100 countries, making it one of the most widespread international releases for an Indian film. Coolie is not just a film—it’s all set to be a global event for fans of Indian cinema releasing on 14th August, 2025.

ரிலீஸ்க்கு முன்பே சாதனை படைக்கும் ரஜினியின் கூலி!

சன் பிக்சர்ஸின் கூலி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே வெளிநாடுகளில் சாதனை படைக்கிறது, ரஜினிகாந்த் படங்களில் முக்கியமான ஒன்றாக மாற உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள சன் பிக்சர்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான கூலி, இதுவரை வெளிநாடுகளில் அதிக திரையில் ரிலீஸ் செய்யப்படும் ஒரு தமிழ் படம் என்ற சாதனையை பெற்று தலைப்புச் செய்திகளில் இடம் பெறப்போகிறது உறுதி .ரஜினி உடன் கூலி படத்தில் இந்திய திரைப்படத் துறையைச் சேர்ந்த நாகார்ஜுனா, சத்யராஜ், ஆமிர் கான், உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்து கூலி படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத். கூலி படத்தின் முதல் சிங்கிள் Chikitu ஏற்கனவே இணையத்தில் புயலைக் கிளப்பி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள இந்தப் படம், தற்போது ஒரு மிகப் பெரிய சாதனையை புரிந்து, தமிழ் சினிமாவின் வரலாற்றில் வெளிநாட்டு சந்தையில் அதிகபட்ச விற்பனையான படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. அதாவது, இதுவரை வெளிநாடுகளில் எந்த தமிழ் திரைப்படத்துக்கும் கிடைக்காத அளவுக்கு, ‘கூலி’ திரைப்படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமை மிகப் பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளது . இது ரஜினியின் உலகளாவிய பிரபலத்தையும், லோகேஷின் மாஸ் இயக்கமும், சன் பிக்சர்ஸின் ப்ரொடக்‌ஷன் வெல்யூவும் சேர்ந்து உருவாக்கிய மாபெரும் வரவேற்பைக் காட்டுகிறது.
சர்வதேச திரைப்பட விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் புகழ்பெற்ற நிறுவனமான ஹம்சினி என்டர்டெயின்மென்ட், இந்தப் படத்தின் உலகளாவிய விநியோகத்தை ஆதரிக்கிறது. உலகெங்கிலும் 130க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்டுள்ள ஹம்சினி என்டர்டெயின்மென்ட், இந்திய சினிமாவை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு சென்றதில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) திரைப்படத்தை 40க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிட்டதும், ஜூனியர் என்டிஆர் நடித்த தேவாரா திரைப்படத்தை 90க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிட்டதும் அவர்களின் சமீபத்திய முயற்சிகளில் ஒன்றாகும்.
கூலி படத்தை ஹம்சினி என்டர்டெயின்மென்ட் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. அதன்படி, 100க்கும் மேற்பட்ட நாடுகளில் விநியோகத்தை இலக்காகக் கொண்டுள்ளது. இதன் மூலம் முதல் முறையாக ஒரு தமிழ் திரைப்படம் உலகம் முழுவதும் அதிகமான நாடுகளில் வெளியாக உள்ளது. கூலி என்பது வெறும் ஒரு படம் மட்டுமல்ல ஒரு சகாப்தமாக உருவாகி வருகிறது.

  • இது ஆகஸ்ட் 14, 2025 அன்று வெளியாகும் இந்திய சினிமா ரசிகர்களுக்கான உலகளாவிய கொண்டாட்டமாக இருக்க போகிறது .

ஜியோஹாட்ஸ்டாரில் வெளியானது ‘குட் வொய்ஃப்’ இணையத் தொடர்…அதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் ஹைலைட்ஸ்!

0

ஜியோஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக இன்று வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம். தேசிய விருது வென்ற நடிகை பிரியாமணி மற்றும் திறமையான நடிகர் சம்பத் ராஜ் நடித்திருக்கும் இந்தத் தொடரை நடிகை-இயக்குநர் ரேவதி இயக்கியுள்ளார். இதன் மூலம் இயக்குநராக ரேவதி தமிழ் ஓடிடியில் அறிமுகமாகிறார். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

படத்தொகுப்பாளர் கிஷன், “மக்களுக்கு என்ன தேவையோ அதைத்தான் சிறப்பாக கொண்டு வந்தோம். ரேவதி மேமுடன் வேலை பார்த்தது புது அனுபவம். நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்”.

ஒளிப்பதிவாளர், துணை இயக்குநர் சித்தார்த் ராமசாமி, “இந்தப் படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ரேவதி மேம் என்னுடைய முதல் ஃபீமேல் டிரைக்டர். செம கூல்! நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

நடிகை மேகா ராஜன், “ரேவதி மேமுடைய பல படங்கள் பார்த்து நான் வளர்ந்திருக்கிறேன். அவர் நடித்த படங்கள் போன்று இப்போது வருவதில்லை. அவருடன் வேலை பார்த்தது எனக்கு மகிழ்ச்சியான, பெருமையான அனுபவம். இந்த சீரிஸில் என்னுடைய லுக் எனக்கே மிகவும் பிடித்திருந்தது. இயக்குநராக அவங்க செம கூல். யாரிடமும் கோபப்படாமல் அமைதியாக வேலை வாங்குவதில் ரேவதி மேம் திறமையானவர்”.

நடிகை அம்ரிதா, “நடிகையாக என்னுடைய கனவு நிறைவேறி இருப்பதில் மகிழ்ச்சி. ரேவதி மேம் பார்த்த முதல் கணமே என்னுடைய விருப்பம் முழுமையானது. செட்டில் தினந்தோறும் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். ப்ரியாமணி, ஆரி, சம்பத் ராஜ் இவர்களுடன் பணிபுரிந்திருக்கிறேன். நன்றி”.

பானிஜே ஆசியா வைஸ் பிரசிடெண்ட், “தமிழில் இரண்டாவதாக நாங்கள் இதைத் தயாரிக்கிறோம். ரேவதி மேம் இதை இயக்க, ஹலிதா இதற்கு வசனம் எழுதி இருக்கிறார். இண்டர்நேஷனல் அளவில் ஹிட்டான சீரிஸ் இது. தமிழ் பார்வையாளர்களுக்கும் இதை கொண்டு வந்திருக்கிறோம். பிரியாமணி, ஆரி, சம்பத்ராஜ் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் ஆரி, “வெப்சீரிஸ் நடிப்பதும் எளிது கிடையாது. இதிலும் பார்வையாளர்களை கட்டிப் போட வேண்டும். படம் செய்வதை விட பத்து மடங்கு வேலை இதில் இருக்கிறது. கோர்ட் டிராமாவை அடிப்படையாக் கொண்டு இந்தப் படம் வந்துள்ளது தமிழ் பார்வையாளர்களுக்கு நிச்சயம் புதிதானதாக இருக்கும். அனைத்து குடும்பப் பெண்களுக்கான நியாயத்தை இந்தக் கதை பேசும். இந்த வழக்கறிஞர் கதாபாத்திரத்திற்கு என்னுடைய அண்ணன் தான் இன்ஸ்பிரேஷன். ரேவதி மேம் படங்கள் எல்லாம் சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். ‘மெளன ராகம்’ எனக்கு பிடித்த படம். அந்தப் பட ஹீரோயின் இயக்கத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி. ‘குட் வொய்ஃப்’க்கான வரைமுறை இதுவரை நாம் என்ன யோசித்து வைத்திருக்கிறோமோ அது நிச்சயமாக இந்த வெப்சீரிஸூக்குப் பிறகு மாறும்” என்றார்.

நடிகர் சம்பத், “இந்த வாய்ப்பு கொடுத்த ரேவதி மேம்க்கு நன்றி. பிரியாமணி, ஆரி மற்ற நடிகர்கள் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. வெப் சீரிஸ் பொருத்தவரை ப்ரீ புரொடக்‌ஷன் மிகச்சரியாக இருக்கும். ரேவதி மேம் ரொம்பவே அமைதியான இயக்குநர். அவருடன் பணிபுரிந்தது சிறந்த அனுபவம்” என்றார்.

இசையமைப்பாளர் கே, “இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் ரேவதி மேம் மற்றும் குழுவினருக்கு நன்றி. படத்தில் பணிபுரிந்தது நல்ல அனுபவம்” என்றார்.

அம்மா கிரியேஷன்ஸ் சிவா, “நாங்கள் தயாரித்த முதல் படத்தின் கதாநாயகி ரேவதி. அவர் இயக்கி நான் ஒரு கதையில் நடித்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. அப்போது பார்த்த அதே எளிமை, அன்புதான் இப்போதும். பிரியாமணி, சம்பத் என நண்பர்களுடன் பணிபுரிந்திருக்கிறேன். என்னுடைய 44 வருட சினிமா அனுபவத்திலேயே இந்தக் கதை புதுவிதமான அனுபவம். ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாடப்படக் கூடிய கதைதான் இது. நன்றி”

நடிகை பிரியாமணி, “திரைப்படமோ அல்லது வெப்சீரிஸோ உங்களுக்கு வரும் வாய்ப்புகளை விட்டுக் கொடுக்காதீர்கள். தன் வாழ்க்கையில் வரும் சவால்களை எப்படி என் கதாபாத்திரம் தர்மிகா எப்படி எதிர்கொள்கிறது என்பதையும் இதில் பேசியிருக்கிறார்கள். நான்காவது முறையாக நான் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ரேவதி மேம் இயக்கப் போகிறார் என்றதும் உடனே சம்மதித்து விட்டேன். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லோரும் சிறப்பாக செய்திருக்கின்றனர். நாளை ஜூலை 4 ஜியோஹாட்ஸ்டாரில் இந்த வெப்சீரிஸில் வெளியாகிறது. நிச்சயம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்”.

நடிகை- இயக்குநர் ரேவதி, “ இதற்கு முன்பு படங்கள் இயக்கி இருந்தாலும் வெப் சீரிஸ் வாய்ப்பு வந்ததும் தயங்கினேன். ஏனெனில் படம் என்பது இரண்டு மணி நேரத்திற்குள் தொடக்கம் முடிவு என முடிந்துவிடும். ஆனால், வெப்சீரிஸ் அப்படி கிடையாது. நான் எழுத்தாளர் இல்லை என்பதாலும் யோசித்தேன். இந்த கதை நம் தமிழ்நாட்டுக்கு தமிழ் பார்வையாளர்களுக்கு கொண்டுபோய் சேர்க்கக்கூடிய ஒன்றுதான். இதன் கதையை ஹலிதா மிக அற்புதமாக எழுதி இருந்தார். அதில் சில மாற்றங்கள் மட்டும் செய்துவிட்டு முழுக்க முழுக்க இயக்குநராக இந்த கதையை இயக்கி இருக்கிறேன். பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

- Advertisement -

Recent Posts