- Advertisement -
Home Blog Page 161

“ ‘Parandhu Po’ is a Commercial Film” – Music Director Santhosh Dayanidhi!

0

Produced by Jio Hotstar, GKS Production, and Seven Seas & Seven Hills Productions, and directed by Ram, the feel-good entertainer “Parandhu Po” is set to release worldwide on July 4.

Music director Santhosh Dayanidhi, who has composed for the film, shared:

“At the time of ‘Parandhu Po’, Yuvan sir was quite busy, and that’s how this opportunity came my way. This film features nearly 19 songs. Not just that — several songs are also woven into the background score itself, which is a first-of-its-kind . Ram sir is not someone who prefers the usual, familiar sound. He always looks for something fresh and experimental. While ‘Parandhu Po’ is very much a commercial film, it also reflects Ram sir’s distinct style. I’m grateful to him for this chance. More than anything, I learnt from him how to truly see and shape both film and music together. I also want to thank lyricist Madhan Karky sir for his wonderful contribution.”

Cast:
Siva, Grace Antony, Master Mithun Ryan, Anjali, Aju Varghese, Vijay Yesudas, and many more.

Technical Crew:
Story & Direction: Ram

Cinematography: N. K. Ekambaram

Editing: Mathi V. S.

Music: Santhosh Dayanidhi

Lyrics: Madhan Karky

Production Design: Kumar Gangappan

Stunt Choreography: Stunt Silva

Costume Design: Chandrakant Sonawane

Dance Choreography: Richie Richardson

Sound Design: Arul Murugan

Audiography: M. R. Rajakrishnan

Colorist: Rajasekaran

VFX: Karthik Kampattan

Stills: Jayakumar Vairavan

Make-up: Sasikumar Paramasivam, Suthi Surendran

Promotional Design: Twenty.One.G

Production: Jio Hotstar, GKS Brothers Production, Seven Seas & Seven Hills Productions

Producers: Ram, V. Gunasekaran, V. Karuppusamy, V. Shankar

Worldwide Release: Romeo Pictures

Public Relations: Suresh Chandra , Abdul Nasser

”’பறந்து போ’ கமர்ஷியல் படம்”- இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி!

ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியாகிறது.

படத்திற்கு இசையமைத்திருக்கும் சந்தோஷ் தயாநிதி பகிர்ந்து கொண்டதாவது, ”’பறந்து போ’ பட சமயத்தில் யுவன் சார் பிஸியாக இருந்ததால் எனக்கு அந்த வாய்ப்பு வந்தது. படத்தில் கிட்டத்தட்ட 19 பாடல்கள் இருக்கிறது. இதுமட்டுமல்லாது, படத்தின் பின்னணி இசையிலும் பல பாடல்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது இதுவே முதல்முறை. ராம் சார் வழக்கமாக கொடுக்கும் இசையை விரும்ப மாட்டார். புதிதாக, வித்தியாசமான இசையை எதிர்பார்ப்பார். ‘பறந்து போ’ கமர்ஷியல் படம் தான். அதில் ராம் சாரின் ஸ்டைலும் இருக்கும். வாய்ப்பு தந்த ராம் சாருக்கு நன்றி. ஒரு படத்தையும் இசையையும் எப்படி பார்க்க வேண்டும் என்பதை ராம் சாரிடம் கற்றுக் கொண்டேன். பாடலாசிரியர் மதன் கார்க்கி சாருக்கும் நன்றி” என்றார்.

நடிகர்கள்: சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழு:

எழுத்து, இயக்கம்: ராம்,
ஒளிப்பதிவு: என்.கே. ஏகாம்பரம்,
படத்தொகுப்பு: மதி வி.எஸ்.,
இசை: சந்தோஷ் தயாநிதி,
பாடல் வரிகள்: மதன் கார்க்கி,
தயாரிப்பு வடிவமைப்பு: குமார் கங்கப்பன்,
சண்டைப் பயிற்சி: ஸ்டண்ட் சில்வா,
காஸ்ட்யூம்: சந்திரகாந்த் சோனாவனே,
நடன இயக்குநர்: ரிச்சி ரிச்சர்ட்சன்,
ஒலி வடிவமைப்பு: அருள் முருகன்,
ஆடியோகிராஃபர் : எம் ஆர் ராஜகிருஷ்ணன்,
கலரிஸ்ட்: ராஜசேகரன்,
விஎஃப்எக்ஸ் : கார்த்திக் கம்பேட்டன்,
ஸ்டில்ஸ் : ஜெய்குமார் வைரவன்,
ஒப்பனை : சசிகுமார் பரமசிவம், சுதி சுரேந்திரன்,
விளம்பர வடிவமைப்பு: ட்வென்டி.ஒன்.ஜி,
தயாரிப்பு: ஜியோ ஹாட்ஸ்டார், ஜிகேஎஸ் பிரதர்ஸ் புரொடக்‌ஷன், செவன் சீஸ் அண்ட் செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ்,
தயாரிப்பாளர்கள் : ராம், வி குணசேகரன், வி கருப்புசாமி, வி ஷங்கர்,
உலகளாவிய வெளியீடு: ரோமியோ பிக்சர்ஸ்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா – அப்துல் நாசர்

“No Truth In It” : Actress Komalee Prasad Refutes Speculations About Quitting Acting

0

Renowned actress Komalee Prasad has officially refuted ongoing media speculations stating that she is about quit acting to become a full-time doctor. Addressing the rumours, Komalee made it clear that there is absolutely no truth to such claims.

https://www.instagram.com/stories/komaleeprasad/3667157971223553976

The speculation stemmed from her recent Instagram post where she was seen wearing a dentist’s apron, which led to assumptions in the media that she had resumed her medical practice full-time and is about to quit acting. However, Komalee immediately clarified that the post was misunderstood and that she remains fully committed to her acting career.

Taking to Instagram, Komalee wrote, “Hello everyone, hope it’s a good day. I have seen that my recent post in an apron has been creating an ‘UNEXPECTED MISUNDERSTANDING’ that I have become a full-time doctor and that I am about to discontinue as an actor. A few articles and reels from well-noted media houses have come to my notice regarding the same and I want to clarify that there’s ‘NO TRUTH’ in this.”

“After a lot of sweat and blood, my career as an actor is going forward in the best way possible by Shiva’s grace and I do not want any misleading information to spread which raises unnecessary concerns in me or my well-wishers, hence the clarification. Destiny, I believe, has put me on this path of chasing art and I will continue to give my best foot forward until the last,” she further added.

Expressing gratitude to all her fans and well-wishers, Komalee wrote, “To all my well-wishers, THANK YOU for believing in me more than I do. I am carefully choosing my scripts and I’ll make you all very proud with the new announcements soon. Om Namah Shivaya. Yours lovingly, Komalee Prasad.”

On the work front, Komalee was recently seen in the superhit action thriller “HIT: The Third Case”. She will next be seen in the soulful romantic drama “Sasivadane” and has a strong lineup of exciting projects in the pipeline.

கலைஞர் டிவியில்லெட்சுமி ராமகிருஷ்ணனின் “உண்மை வெல்லும்” – புத்தம் புதிய நிகழ்ச்சி

0

“நேர்கொண்ட பார்வை” நிகழ்ச்சியைத் தொடர்ந்து லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் “உண்மை வெல்லும்” நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

சமூகத்தின் அவலங்கள், எளிய மக்களின் குமுறல்கள், அவர்கள் அனுபவிக்கின்ற கொடுமைகள் என அனைவராலும் பேச முடியாத அல்லது பேச தயங்குகின்ற பல்வேறு விஷயங்களை தெளிவான கண்ணோட்டத்துடன் அலசி அதன் உண்மைத் தன்மையை வெளிக் கொண்டு வரும் வகையில் இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் திருக்குறள் திரைப்படத்தை காண வேண்டும் – தொல்.திருமாவளவன் வேண்டுகோள் !!

0

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ” Welcome Back Gandhi ” என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில், திருக்குறளை மையமாக வைத்து மிகப் பிரம்மாண்டமாக படைப்பாக வெளியாகியுள்ளது ‘திருக்குறள்’. இப்படத்தை இயக்குநர் A.J.பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

தமிழக அரசியல் ஆளுமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், திரு திருமாவளவன், இன்று இப்படத்தினை பார்த்து, படக்குழுவினரைப் பாராட்டினார். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இப்படத்தை பார்க்க வேண்டுமென கோரிக்கையும் வைத்துள்ளார்.

படம் பார்த்த பிறகு திரு திருமாவளவன் கூறியதாவது…

தமிழ் சமூகத்தில் போற்றப்பட வேண்டிய ஒரு படைப்பாக இன்றைக்கு வெளிவந்திருக்கிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் சமூகம் எவ்வாறு வாழ்ந்தது என்பதை இன்றைய தலைமுறைக்கு எடுத்துக் காட்டக்கூடிய வகையில் ஐயன் திருவள்ளுவனின் படைப்பான உலக பொதுமறையாய் போற்றப்படும் திருக்குறளை கருப்பொருளாக கொண்டு படைக்கப்பட்டிருக்கிற ஒரு மகத்தான காவியம் தான் திருக்குறள்.

சமூக நோக்கு மட்டுமே இந்த திரைப்படத்தின் முதன்மையான கருப்பொருளாக இருக்கிறது. தமிழ்ச் சமூகம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி பண்பட்ட சமூகமாக வாழ்ந்திருக்கிறது அறம் தழைத்திருந்தது வீரம் எவ்வாறு செறிவாக இருந்தது, குடும்ப வாழ்க்கை, இல்லற வாழ்க்கை, என்பது எவ்வளவு இனிமையாக இருந்தது, என்பதை எல்லாம் இரண்டே கால் மணி நேரம் திரைப்படமாக ஏஜே பாலகிருஷ்ணன் அவர்கள் படைத்து நமக்கு அருளி இருக்கிறார். இன்றைக்கும் ஐயன் திருவள்ளுவன் நமக்கு தேவைப்படுகிறார் திருக்குறள் நமக்கு தேவைப்படுகிறது. இந்த சமூகம் வழிதவறி போய்விடக்கூடாது. அறம் தழைத்த ஒரு சமூகமாகவே இது தன்னை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற பொறுப்புணர்வோடு எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் திருக்குறள். இதற்கு திருவள்ளுவர் என்று கூட பெயர் வைக்காமல் திருக்குறள் என்று பெயரிட்டுருப்பதிலேயே இயக்குனர் ஏஜே பாலகிருஷ்ணன் அவர்களின் பார்வை எவ்வளவு பொறுப்புள்ளதாக இருக்கிறது என்பதை உணர முடிகிறது.

செம்பூர் ஜெயராஜ் அவர்களின் எழுத்து, ஐயன் திருவள்ளுவனின் தமிழ் இயல்பாக பேச முடியும் என்பதற்கான ஒரு அடையாளமாக இந்த திரைப்படத்தில் சாட்சியமாக இருக்கிறது. ஒவ்வொரு பாத்திரமும் தங்கள் நடிப்பு திறனை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கேமராமேன் எட்வின் அவர்களும் மிக அழகாக திரைப்பட காட்சிகளை நமக்கு படமாக்கி தந்திருக்கிறார். பாடல்களும் இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் உயிர்ப்போடு இருக்கிறது.

இந்த திரைப்படத்திற்கான உயிர்ப்பை இசையின் மூலம் அவர் தந்திருக்கிறார். ஒவ்வொரு தமிழ் குடிமகனும் பார்க்க வேண்டிய திரைப்படம் இந்த காலத்திற்கு பொருத்தமான குரல்களை தேர்வு செய்து அதை கருப்பொருளாக்கி இந்த படத்தை தமிழ் சமூகத்திற்கு தந்திருக்கிறார்கள். எனவே இந்த திரைப்படத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அவரே இந்த திரைப்படத்தை பார்ப்பதன் மூலம் ஐயன் திருவள்ளுவருக்கு அவர் செய்கிற சிறப்பாக அது அமையும். திருக்குறளுக்கு செய்கிற சிறப்பாக அமையும்.

முத்தமிழ அறிஞர் கலைஞர் அவர்கள் முதன்முதலாக ஆட்சி பீடத்தில் ஏறியபோது ஐயன் திருவள்ளுவனின் திருக்குறள் பேருந்து ஒவ்வொரு பேருந்திலும் இருக்க வேண்டும் என்று ஆணையிட்டார். வள்ளுவருக்கு கோட்டம் அமைத்தார். வானுயர சிலை குமரி முனையிலே முக்கடல் சங்கமிக்கும் இடத்திலே நிறுவினார். குரலோவியம் தீட்டினார். குரலுக்கு அவர் கொடுத்த முன்னுரிமை என்பது அளப்பெரியது. திரைப்படத்தின் கடைசி காட்சி குமரி முனையில் வானுயர நிமிர்ந்து நிற்கும் ஐயன் திருவள்ளுவனின் சிலைதான் நம் நெஞ்சில் அப்படியே ஆழமாக பதியக்கூடிய வகையில் திருக்குறளின் முக்கியத்துவம் இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் பதிவாகி இருக்கிறது.

ஆணவ கொலை இன்றைக்கு அதிகம் பெருகி வருகிற சூழலில், காதலுக்கு எதிர்ப்பு கடுமையாக சமூக பரப்பில் பரவி வரும் சூழலில், காதல் எவ்வளவு புனிதமானது என்பதை திருவள்ளுவர் எடுத்துரைக்கும் காட்சி, ஐயன் திருவள்ளுவர் மன்னனுக்கு அறிவுரை சொல்லுகிற காட்சி, கல்லுண்ணாமையை வலியுறுத்தக்கூடிய காட்சி, தமிழர்களுக்கு இடையிலே பகை கொண்டு ஒருவருக்கொருவர் மோதி கொள்வது தமிழ் சமூகம் பாழ்பட்டு போகும் என்று ஐயன் திருவள்ளுவன் கவலைப்படுவது, அதற்காக முன்னின்று அரசர்களுக்கு அறிவுரை வழங்குவது போன்ற இந்த காட்சி அமைப்புகள் எல்லாம், நமக்கு பல புதிய தகவல்களை தருகிறது, வெறும் புலவனாக இருந்து பாடல் எழுதக்கூடிய ஒரு பேரறிவாளனாக மட்டும் ஐயன் திருவள்ளுவன் வாழவில்லை, சமூகத்தில் நிலவுகிற அவலங்களை போக்க வேண்டும், பகைமையை ஒழிக்க வேண்டும் அன்பை பரப்ப வேண்டும் காதலை போற்ற வேண்டும், என்கிற பொறுப்புணர்வோடு வாழ்ந்த ஒரு பேரறிவாளன் ஐயன் திருவள்ளுவன் என்பதை இந்த திரைப்படம் நமக்கு படிப்பிக்கிறது போதிக்கிறது.

உலக திரைப்பட வரலாற்றில திருக்குறளுக்கான ஒரு தனி படமாக இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த திருக்குறளை வைத்தே இன்னும் பல படங்களை எடுக்க முடியும். திரு ஏஜே பாலகிருஷ்ணன் அவர்கள் அடுத்து திருக்குறள் இரண்டு என்று கூட எடுக்க வேண்டும் என்பது என்னுடைய அவா. அதற்கு ஏஜே பாலகிருஷ்ணன் அவர்கள் முன்வருவார் என்று நான் நம்புகிறேன்.

அரசியல் களத்தில மக்களுக்கு பணியாற்றக்கூடிய ஒவ்வொருவரும் இப்படத்தை பார்க்க வேண்டும். முதல்வர் பார்த்தால் இன்னும் அது கூடுதலான செய்தியாக மக்களுக்கு போய் சேரும் என்பதனால் நான் முதல்வரை பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன் நன்றி என்று பேசினார்.

”இயக்குநர் ராமின் ’பறந்து போ’ மிகப்பெரிய வெற்றிப் படம்!”- ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்

0

ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.

படம் குறித்து ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் பகிர்ந்து கொண்டதாவது, ”இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ படம் பார்த்தேன். ராம் சினிமாவை பார்க்கும் விதம் வேறு விதமாக இருக்கும். தனது படங்களில் மெல்லிய மனித உணர்வுகளைக் கடத்துவதில் வல்லவர். குழந்தைகள் உலகத்தை எப்படி பார்க்க வேண்டும் என்பதை கவிதையாக படைத்திருக்கிறார் இயக்குநர் ராம்.

மகிழ்ச்சி, நகைச்சுவை, அழுகை, துக்கம் என பல உணர்வுகளை இந்தப் படத்தில் கடத்தியிருக்கிறார். அப்பாவாக நடித்திருக்கும் சிவா, அம்மாவாக நடித்திருப்பவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். உணர்வுகளைக் கடத்துவதுதான் ஆகச்சிறந்த இயக்கம் என நம்புகிறேன். அதை ராம் சிறப்பாக செய்திருக்கிறார். மகனாக நடித்திருக்கும் அந்த சிறுவனும் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும். நாம் கவனிக்கத் தவறிய குழந்தைகள் உலகத்தை அவர்களோடு இருந்து பார்க்க வேண்டும் என்பதை ராம் இந்தப் படத்தில் அழகாக காட்டியுள்ளார்.

படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சி ஒன்று உண்டு. அதை ராம் அழகாக எடுத்திருக்கிறார். அனைவருக்கும் பிடிக்கும் வகையில் சிரிக்கும்படியாகவும் சிந்திக்கும்படியாகவும் அந்த காட்சி இருக்கும். டைனோசர் பற்றி அறியாத ஒரு தலைமுறையும் வாத்து பற்றி அறியாத ஒரு தலைமுறையும் சந்தித்து பேசிக் கொள்ளும்படியான காட்சியும் இந்தப் படத்தில் உண்டு. நாம் அனைவரும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் நம் குடும்பத்திற்காகவும் நேரம் ஒதுக்க வேண்டும் என்பதையும் சொல்லி இருக்கிறார். படம் பிரமாதமாக உள்ளது. மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறும். படத்தில் மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப நடிகர்கள் அனைவரும் சிறப்பான பணியை செய்துள்ளனர்” என்றார்.

ஜூனியர் என்டிஆர் பங்களிப்பால் பேட்டையாகும் ‘வார் 2’ – தெலுங்கு உரிமையை கைப்பற்றியது சிதாரா என்டர்டெயின்மென்ட்!

0

யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யூனிவர்ஸ் தொடரில் அடுத்ததாக வரவுள்ள மிகப்பெரிய ஆக்ஷன் படமான ‘வார் 2’ திரைப்படத்தின் தெலுங்கு மாநிலங்களில் வெளியீட்டு உரிமைகளை சிதாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் நாக வம்சி தலைமையில் செயல்பட்டு வருகிறது.

ஹிரிதிக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து நடிக்கும் இந்த படம், 2019-ல் வெளியான ‘வார்’ திரைப்படத்தின் தொடராக உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குவது ‘பிரஹ்மாஸ்திரா’ புகழ் அயன் முகர்ஜி.

தெலுங்கு மாநிலங்களில் ஜூனியர் என்டிஆரின் பெரும் ரசிகர் வட்டத்தை கருத்தில் கொண்டு, யாஷ் ராஜ் பிலிம்ஸ் தங்கள் வழக்கமான வெளியீட்டு திட்டத்தில் மாற்றம் செய்து, உள்ளூர் டிஸ்டிரிபியூட்டருடன் கைகோர்த்துள்ளனர். ஆரம்பத்தில் ₹100 கோடி என மதிப்பிடப்பட்ட இந்த உரிமை, இறுதியில் ₹80 கோடிக்கு முடிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிதாரா என்டர்டெயின்மென்ட் கடந்த காலத்தில் ‘தேவாரா’ திரைப்படத்தின் தெலுங்கு உரிமையை ₹120 கோடிக்கு வாங்கி வெளியிட்டு வெற்றி கண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

‘வார் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டிய நிலையில், தற்போது ஒரு பாடல் காட்சி மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

அதே நாளில் ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘கூலீ’ திரைப்படமும் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தின் தெலுங்கு உரிமையை ஏஷியன் மல்டிபிளக்ஸ் — சுனில் நாரங், சுரேஷ் பாபு மற்றும் தில் ராஜு கூட்டாக ₹50 கோடிக்கு வாங்கியுள்ளனர்.

சுதந்திர தின வார இறுதி, தெலுங்கு மாநிலங்களில் பாக்ஸ் ஆபிஸில் மோதலான மற்றும் வர்த்தக ரீதியாக மிகப்பெரிய வாரமாக அமைந்திருக்கிறது.

மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால் மலையாள சினிமாவில் அறிமுகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

0

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால், தனது நடிப்புத் திறமையுடன் பெரியவில் கால் வைக்கிறார். Saras, 2018 திரைப்படம், மற்றும் பல வெற்றிப் படங்களை இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கும் அடுத்த படத்தில் விஸ்மயா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இந்தப் புதிய திரைப்படத்தை ஆஷிர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் விஸ்மயாவின் நடிப்புடன் புதிய முகங்களை அறிமுகப்படுத்தும் விதமாக, படக்குழு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். விஸ்மயா மோகன்லாலின் அறிமுகம் மலையாள சினிமா வட்டாரத்தில் பெரும் ஆர்வத்தைக் கிளப்பியுள்ளது.

Director Jyothi Krisna re-designed Bobby Deol’s character (Aurangzeb) in Hari Hara Veera Mallu after watching Animal

0

It is known that Bobby Deol is playing the role of Mughal emperor Aurangzeb in Pawan Kalyan’s upcoming film Hari Hara Veera Mallu. The period drama is directed by Jyothi Krishna. Initially, Bobby Deol shot some scenes in the film. But later, after the director watched Bobby’s performance in Animal, he decided to completely re-write and redesign his character in Hari Hara Veera Mallu.

“Bobby Deol’s garu performance in Animal was spell bounding. His ability to convey emotions through expressions alone, despite the character’s lack of dialogues was something we all were blown away. I decided to change the arc of his character in our film too, and give a complete makeover,” said Jyothi Krishna. His desire to improve the character’s arc and better fit the role’s strength was the key to bring emotional depth in Bobby Deol’s performance. The revised role amplifies certain aspects of the character’s personality and infuse more riveting and compelling performance.

The director made major adjustments to the character’s personality, backstory, motivation, and physical portrayal. Jyothi Krisna felt that Aurangzeb’s character needs a more compelling arc to do justice to Bobby Deol’s new-found stardom and live up to his expectations. “When I narrated the revised script, Bobby garu was very excited. He is an actor who always likes to explore different possibilities and present a newer version of himself to the audiences. In Hari Hara Veera Mallu, Bobby Deol looks more intense. His powerful screen presence, elegance and the way he expresses a lot with his eyes speaks volumes. Working with him has been a great experience,” shared the director.

  • ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை மாற்றிய இயக்குநர் ஜோதி கிருஷ்ணா!
  • ‘அனிமல்’ தாக்கம்: ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை புதுப்பித்த ஜோதி கிருஷ்ணா!
  • ‘அனிமல்’ படத்தில் பாபி டேயோலின் நடிப்பு, ஹரி ஹர வீரமல்லு இயக்குநரின் கதாபாத்திர மறுஉருவாக்கத்தை தூண்டியது!
  • ஹரி ஹர வீரமல்லுவில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை மீண்டும் கவனித்த இயக்குநர் ஜோதி கிருஷ்ணா!

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் பலருக்கும்
தெரிந்த ஒன்றே. இத்திரைப்படத்தை இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ளார்.

படப்பிடிப்பின் ஆரம்ப கட்டங்களில் பாபி டேயோல் அவர்களின் சில காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன. ஆனால் பின்பு, பாபி டேயோல் நடித்த ‘அனிமல்’ திரைப்படத்திலுள்ள அவரின் பிரமிக்கவைக்கும் நடிப்பை பார்த்த பிறகு, ஜோதி கிருஷ்ணா அவர்கள் அவரது கதாபாத்திரத்தை முழுமையாக மறுபதிவை செய்து, புதியதொரு வடிவமைப்பில் உருவாக்க முடிவு செய்தார்.

“பாபி டேயோல் அவர்களின் ‘அனிமல்’ படத்தில் அளித்த அந்த மௌன நடிப்பு நம் அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியது. சொற்கள் இல்லாமல், முகபாவனைகளின் வழியாகவே ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் அவரது திறமை எனக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால்தான், ஹரி ஹர வீரமல்லு படத்திலும் அவரது கதாபாத்திரத்தின் வழித்தோணியை முழுமையாக மாற்ற வேண்டும் என முடிவு செய்தேன்,” என்கிறார் இயக்குநர் ஜோதி கிருஷ்ணா.

இந்த புதிய வடிவமைப்பின் மூலம் ஔவரங்கசீப்பின் கதாபாத்திரத்தில் ஆழமும், ஆளுமை கொண்ட அம்சங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. கதையின் பின்னணி, உந்துதல், உடல் மொழி என அனைத்தும் பாபி டேயோலின் நடிப்பு சக்திக்கு ஏற்ப மறு வடிவம் பெறப்பட்டுள்ளது.

“புதிய கதாபாத்திர வடிவத்தை நான் அவரிடம் சொன்னபோது, பாபி டேயோல் அவர்கள் மிகுந்த உற்சாகத்தைத் தெரிவித்தார். அவருக்கு, சவாலான வேடங்களில் நடிப்பதும், புதியதொரு வடிவில் ரசிகர்களிடம் தன்னை காண்பிப்பதும் மிகவும் பிடிக்கும். ஹரி ஹர வீரமல்லு படத்தில் அவர் மிகுந்த தீவிரம் கொண்ட தோற்றத்தில் தோன்றுகிறார். அவரது பார்வையின் மூலம் தான் சொல்லும் உணர்வுகள், அவரது திரை தோற்றம், ஆளுமை அனைத்தும் கதையை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு செல்கின்றன. அவருடன் பணியாற்றிய அனுபவம் மிக சிறப்பானது,” என்கிறார் இயக்குநர்.

இவ்வாறு புதிதாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரம், பாபி டேயோலின் தற்போதைய பான் இந்தியா புகழுக்கும், அவரிடம் இருக்கும் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கும் நிச்சயமாக நீதியளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

தேசிங்கு ராஜா-2 இசை வெளியீட்டு விழா

0

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். தொடர்ந்து ஜனரஞ்சகமான, குடும்பப்பாங்கான, அதேசமயம் நகைச்சுவைக்கு உத்தரவாதம் கொடுக்க கூடிய படங்களாக இயக்கி வருகிறார் இயக்குநர் எழில். கடந்த 2013ல் விமலை வைத்து இவர் இயக்கிய தேசிங்கு ராஜா படம் வெற்றிப்படமாக அமைந்தது. 12 வருடங்களுக்கு தற்போது இதன் இரண்டாம் பாகமாக விமல் நாயகனாக நடிக்கும் தேசிங்கு ராஜா-2 படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் எழில்.

இன்பினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் P.ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு இணையான இன்னொரு முக்கிய கதாபாத்தில் நடிகர் ஜனா அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக பூஜிதா பொன்னாடா, ஜூஹி, ஹர்ஷிதா ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, ரவிமரியா, புகழ், சாம்ஸ், ரோபோ சங்கர், சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், மதுரை முத்து, விஜய் டிவி கோதண்டம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளனர்.

மெலடி கிங் வித்யாசாகர் ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தை தொடர்ந்து 23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குநர் எழிலுடன் இணைந்து இந்த படத்தில் பணியாற்றியுள்ளார். படத்தின் ஒளிப்பதிவை செல்வா.ஆர் செய்துள்ளார்.

வரும் ஜூலை 11ஆம் தேதி இப்படம் உலகமென்ங்கும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதை முன்னிட்டு இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை வடபழனி கமலா தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் (FEFSI) தலைவர் இயக்குநர் ஆர்,கே. செல்வமணி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் இயக்குநர் ஆர்,வி. உதயகுமார் மற்றும் செயலாளர் இயக்குநர் பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில்

இயக்குநர் எழில் பேசும்போது,

“ஒரு படத்தில் நடிக்கும் போது அனைவரும் ஒத்துழைப்பு கொடுப்பது பெரிய விஷயம் கிடையாது. படம் முடிந்த பிறகு இது போன்ற விழாக்களுக்கு அனைவரும் வந்து கலந்து கொள்வது என்பது தான் இந்த விழாவின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் இந்த படத்தின் வேலைகளை முடித்துவிட்டு நான் இன்னொரு பட வேலைகளை கவனிக்க சென்று விட்டேன். ஆனால் தயாரிப்பாளர் ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் செலுத்தி அழகாக இதை முடித்துள்ளார். அந்த வகையில் சினிமாவை நேசிக்கக்கூடிய ஒரு தயாரிப்பாளர் நமக்கு கிடைத்துள்ளார். தேசிங்கு ராஜா படத்தில் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது விமல். இந்த இரண்டாம் பாகத்தின் வெற்றிக்கும் அவர்தான் முக்கிய காரணமாக இருக்கப் போகிறார். இத்தனை நடிகர்களை வைத்து நான் படம் பண்ணியது கிடையாது. இந்த படத்தில் ஸ்கிரிப்ட் வடிவமைப்பு வேற மாதிரி இருக்கும். மின்னல் மாதிரி போகும். வித்யாசாகர் சொன்னது போல ஒரு காமெடி சிரித்து முடிந்து உடனடியாக அடுத்த காமெடி வந்துவிடும். அவ்வளவு ஸ்பீடாக இருக்கும். இந்த படத்தில் காமெடி நன்றாகவே ஒர்க்அவுட் ஆகி இருக்கிறது. என்னுடைய முதல் படத்திலேயே வித்யாசாகர் இசையமைத்தார். அப்போது நல்ல பாடல்களாக கொடுத்து விட்டார். ஆனால் அவருடைய திறமை என்ன என்பது எனக்கு அப்போது தெரியவில்லை. இப்போது மீண்டும் அவருடன் பணியாற்றும்போது தான் பிரமிப்பாக இருக்கிறது” என்று பேசினார்.

ஜெய் நடிப்பில், “சட்டென்று மாறுது வானிலை” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

0

BV Frames சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனையை அழுத்தமாகப் பேசும், புதுமையான ரொமான்டிக் திரில்லராக உருவாகியுள்ள “சட்டென்று மாறுது வானிலை” புதிய படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்றைய சமூகத்தில் நடக்கும் மிக முக்கிய பிரச்சனை ஒன்றை மையமாக வைத்து, காதலும் திரில்லரும் கலந்து, கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது.

காவல்நிலையத்தில் காவலர்கள் தாக்க, நாயகன் ஜெய் அடிவாங்கி கதறுவதையும் காட்டும் ஃபர்ஸ்ட் லுக் தற்போதைய சமூகத்தின் நிலையை அப்படியே பிரதிபலித்து, மனதை உருக்குகிறது. மிக ஆழமான வலியைப் பிரதிபலிக்கும் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.

பிரபஞ்சம் அடுத்தடுத்து ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம். ஒருவன் வாழ்வில் அடுத்தடுத்து ஏற்படும் ஆச்சரியம், ஆனந்தம், அதிர்வுகள் தான் இக்கதையின் மையம். நம் நாட்டில் நிகழ்கின்ற, தொடர்ந்து நிகழப்போகிற ஒரு பெரும் ஆபத்தினை பற்றி இப்படம் அழுத்தமாகப் பேசியுள்ளது. காதலும் களவும் என அன்பின் ஐந்திணையைக் கொண்டு, அழகான ரொமாண்டிக் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் முன்னணி நட்சத்திரம் ஜெய் நாயகனாக நடித்துள்ளார். மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு, கேஜிஎஃப் புகழ் கருடா ராம், ஶ்ரீமன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் பாபு விஜய் தயாரித்து, இயக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங் டார்லிங் ரிச்சர்ட் சன், கலை இயக்கம் S கண்ணன், தயாரிப்பு மேற்பார்வை V. சிவராமன், உடை வடிவமைப்பு கமலி S மற்றும் P. செல்வம், மேக்கப் அப்துல் ரசாக் மற்றும் அப்துல் ரஷீத், ஸ்டண்ட் மாஸ்டர் முரளி ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகிறார்கள்.

இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

- Advertisement -

Recent Posts