Varalaxmi Sarathkumar makes her Hollywood debut alongside the acclaimed British actor Jeremy Irons.
Directed by veteran director, Chandran Rutnam, the film is shot in Sri Lanka. The film RIZANA-A Caged Bird is inspired by a true story.
When asked about the project, Varalaxmi shared her excitement, saying,”It is surreal to be working alongside Academy award winner Jeremy Irons. He is the voice of Scar from the Lion King, a film I adore to a point that I know all the dialogues by heart. To be making my Hollywood debut in a film with him is a dream come true. He is such a respected actor not just in Hollywood, but in world cinema. I am also grateful to for the chance to be directed by Chandran Rutnam, a pioneer who changed the face of film making in Sri Lanka and worldwide. This opportunity means a lot to me. It was an absolute pleasure to be working with such legends from the international film industry.”
The film promises to be a landmark collaboration between South Asian and international cinema.
ஹாலிவுட்டில் அறிமுகமாகும் நடிகை வரலட்சுமி!
புகழ்பெற்ற பிரிட்டிஷ் நடிகர் ஜெர்மி ஐயன்ஸுடன் இணைந்து நடிப்பதன் மூலம் நடிகை வரலட்சுமி சரத்குமார் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார். இயக்குநர் சந்திரன் ருட்னம் இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்றது. ’RIZANA-A Caged Bird’ திரைப்படம் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.
இந்தப் படம் பற்றி வரலட்சுமி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டதாவது, “அகாடமி விருது வென்ற ஜெர்மி ஐயன்ஸுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. எனக்கு மிகவும் பிடித்த படம் ‘ஸ்கார் ஃப்ரம் தி லயன் கிங்’. எந்தளவுக்கு பிடிக்கும் என்றால், அந்தப் படத்தின் வசனங்கள் அனைத்தும் எனக்கு மனப்பாடமாகத் தெரியும். அந்த கிங்கிற்கு ஜெர்மி ஐயன்ஸ்தான் குரல் கொடுத்திருப்பார்! இதை விட வேறு என்ன எனக்கு வேண்டும்? அவருடன் ஹாலிவுட்டில் அறிமுகமாவது எனது கனவு நனவான தருணம்.
ஹாலிவுட்டில் மட்டுமல்ல, உலக சினிமா ரசிகர்களாலும் அவர் மிகவும் மதிக்கப்படும் நடிகர். இலங்கையிலும் உலகெங்கிலும் திரைப்பட உருவாக்கத்தின் முகத்தை மாற்றிய முன்னோடியான சந்திரன் ருட்னம் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு பெருமை! சர்வதேச திரைப்படத் துறையைச் சேர்ந்த ஜாம்பவான்களுடன் பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
இந்தப் படம் தெற்காசிய மற்றும் சர்வதேச சினிமாவிற்கு இடையே ஒரு மைல்கல்லாக இருக்கும் எனப் படக்குழு உறுதியளிக்கிறது.
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடிப்பில் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’-வில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், டாக்டர்.மோகன் பாபு, அக்ஷய் குமார், காஜல் அகர்வால், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக இருக்கும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேபில் இன்று (ஜூன் 23) நடைபெற்றது. இதில், நடிகர் சரத்குமார், படத்தொகுப்பாளர் ஆண்டனி, நடிகர் சம்பத் ராம் மற்றும் படத்தை தமிழகத்தில் வெளியிடும் சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் ஆகியோர் கலந்துகொண்டு படம் பற்றிய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் நடிகர் சம்பத்ராம் பேசுகையில், “மேடையில் இருக்கும் அனைவருக்கும் வணக்கம், சரத்குமார் சாருக்கு மிகப்பெரிய நன்றி, ‘அரசு’ படத்தில் இருந்து அவருடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன். அரசு படத்தின் போது அவர் என்னை கே.எஸ்.ரவிக்குமார் சாரிடம் அறிமுகப்படுத்தி, இவருக்கு எதாவது நல்ல கேரக்டர் கொடுங்க என்று சொன்னார், எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணியிருக்கிறார், அவருக்கு இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எடிட்டர் ஆண்டனி சார், சைனர் என்ற கன்னட படத்தில் நடித்தேன், அதற்கு அவர் தான் எடிட்டிங். அவர் சிறந்த எடிட்டர் என்பது தெரியும், இந்த படத்தில் அவரது பணி பெரிய அளவில் பேசப்படும். கடந்த வாரம் ஐதராபாத்தில் கண்ணப்பா வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. அதில், பங்கேற்ற அனைவரும் சொன்னது என்னவென்றால் பிரபாஸ் சாரின் அறிமுகத்திற்குப் பிறகு படம் மிக சிறப்பாக இருக்கும் என்றார்கள். அவங்க எல்லோரும் அடிமனதில் இருந்து மகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறார்கள். இந்த படம் நிச்சயமாக நூற்றுக்கு நூறு வெற்றி படமாக இருக்கும் என்பதை நான் சொல்லிக் கொள்கிறேன். இசையமைப்பாளர் ஸ்டீபன் தேவஸியின் இசை மிக சிறப்பாக இருந்தது. ஐதராபாத்தில் அவரது பணி பேசப்பட்டது, சரத்சார் கூட பாடல்களை மீண்டும் பாடுமாறு கேட்டுக்கொண்டார். சென்னையில் மிகப்பெரிய அளவில் கண்ணப்பா நிகழ்ச்சி நடத்த இருந்தோம். ஆனால், இந்தியா முழுவதிலும் இருந்து நட்சத்திரங்கள் வர வேண்டி இருந்தது, நேரம் இல்லாததால் அது நடக்கவில்லை. அதனால் தான் சிறு குழுவாக நாங்கள் உங்களை சந்திக்கிறோம். படம் மிக சிறப்பாக இருக்கிறது, படத்தை ரசிகர்கள் பார்த்தப் பிறகு அவர்கள் பலரிடம் படத்தை பற்றி சொல்வார்கள். எனவே, ஊடகங்கள் இந்த படத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
எனக்கு, கண்ணப்பா படத்தில் வாய்ப்பளித்த மோகன் பாபு சாருக்கு நன்றி. என் நண்பர் மூலம் அவரிடம் எனக்கு அறிமுகம் கிடைத்தது. அதில் இருந்து அவரை நான் பின் தொடர்ந்தேன். அதன்படி எனக்கு அவர் மூன்றாவது முறையாக வாய்ப்பளித்திருக்கிறார். அவர் இல்லை என்றால் இந்த படத்தில் நான் இல்லை, எனக்கு இப்படி ஒரு வாய்ப்பளித்த மோகன் பாபு சார், விஷ்ணு மஞ்சு சார் இருவருக்கும் நன்றி. நான் இதுவரை 10 தெலுங்குப் படங்களில் நடித்திருக்கிறேன், எனக்கும் தனியாக போஸ்டர் வெளியிட்டு என் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தியது கண்ணப்பா படத்தில் தான் முதல் முறையாக நடந்திருக்கிறது. இதுவரை எந்த படத்திலும் எனக்கென்று தனி போஸ்டர் வெளியிட்டதில்லை. எனக்கு இதுவே மிகப்பெரிய மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது. இவ்வளவு வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டு நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த எனக்கு இது மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது, நன்றி.” என்றார்.
படத்தொகுப்பாளர் ஆண்டனி பேசுகையில், “மோகன் பாபு சார் மற்றும் விஷ்ணு மஞ்சுக்கு நன்றி. இந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் சக்திவேலனுக்கு நன்றி. சரத்குமார் சார் எனக்கு சிறந்த நண்பர். இந்த படத்தில் மூன்று டிராக்குகள் இருக்கிறது. கடவுளே இல்லை என்று சொல்லக்கூடிய ஒருவர் எப்படி தீவிர சிவபக்தராக மாறுகிறார், காதல் கதை மற்றும் ஒரு கிராமத்தை கைப்பற்ற நடக்கும் யுத்தம், என்று மூன்று டிராக்குகள் இருப்பதால் சிலருக்கு படம் நீளமாக இருப்பது போல் தோன்றும், ஆனால், அந்த உணர்வே உங்களுக்கு ஏற்படாத வகையில் படம் கிரிப்பாக இருக்கும். இதில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் சரத் சார் நடித்திருக்கிறார். சூப்பராக நடித்திருக்கிறார், இன்னும் 25 வருடங்கள் அவர் நடிப்பார். ஒரு காட்சியில் இரண்டு பேரை அப்படியே தூக்குகிறார், ரியலாக எடுத்திருக்கிறார்கள். அந்த காட்சியை பார்த்ததும் சரத் சாருக்கு போன் போட்டு, சூப்பர் சார் என்று சொன்னேன்.
இந்த படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது, கதையை மிக சிறப்பாக நகர்த்திச் சென்றிருக்கிறார்கள். கடைசி ஒரு மணி நேரம் முக்கியமான கதை, அந்த கடைசி ஒரு மணி நேரம் மிக புத்திசாலித்தனமாக இருக்கிறது. கிறிஸ்தவனான நானே சொல்கிறேன், படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. இறுதியில் நீங்கள் நிச்சயம் கண்கலங்குவீர்கள். எனவே இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைத்து படங்களிலும் பிளஸ் மற்றும் மைனஸ் இருக்கும், நீங்கள் பிளஸை மட்டும் மக்களிடம் எடுத்துச் சென்றால் நன்றாக இருக்கும், நன்றி.” என்றார்.
விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில், “சரத்குமார் சார் ஒரு நாள் எனக்கு போன் போட்டு, கண்ணப்பா படத்தை தமிழ்நாடு ரிலீஸ் பண்றீங்களா? என்று கேட்டார். சார், இது எனக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பு சார், என்று சொன்னேன். பிறகு கண்ணப்பா படத்தை தமிழ்நாட்டில் நல்லபடியாக ரிலீஸ் பண்ணிக் கொடுத்துடுங்க என்றார். பொதுவாக சினிமா வியாபாரத்தில் சில பேச்சுவார்த்தைகள் நடக்கும், எப்படி பண்ண போகிறோம் என்ற ரீதியில் சில ஆலோசனைகள் நடக்கும், என்று எதிர்பார்த்தேன். அப்போது அங்கிருந்து எனக்கு விஷ்ணு மஞ்சு சார் போன் போட்டார். அவ்வளவு பெரிய ஹீரோ, பான் இந்தியா பட ஹீரோ அவரே எனக்கு போன் போட்டது ஆச்சரியமாக இருந்தது. அவர் இரண்டு விசயங்களை மட்டுமே சொன்னார், எங்க குழந்தையை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறோம், நல்லபடியாக ரிலீஸ் பண்ணுங்க, என்று சொன்னார். சினிமா மீது உள்ள காதல் தான் அவரை இப்படி சொல்ல வைத்தது என்று நினைக்கிறேன். பிறகு டிரைலர் பார்த்தேன், அதில் அவர் சிவலிங்கத்தை கட்டிப்பிடிப்பார், அந்த காட்சியை பார்க்கும் போது, அவர் பேசிய வார்த்தைகள் தான் என் நினைவுக்கு வந்தது. இந்த படத்தை அவர் எவ்வளவு காதலித்திருக்கிறார், என்பது அந்த சிவலிங்கத்தை அவர் கட்டிப்பிடிப்பதிலே தெரிந்தது. இங்கே இருப்பவர்கள் கண்ணப்பா கதையை சிறு வயதில் இருந்தே கேட்டிருப்போம். ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட நாம் காலகாலமாக கேட்டு வந்த கதைகளை நாம் திரையில் பார்க்கும் போது, அது அவர்களை தொடர்புபடுத்திக் கொள்ளும். இந்த கண்ணப்பா படத்தை பொறுத்தவரை சிவபக்தி மற்றும் கடவுள் பக்தி உடையவர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திக் கொள்வார்கள். மிகப்பெரிய நட்சத்திரங்கள், பிரமாண்டமான காட்சி அமைப்பு என படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது.
இதில், சரத்குமார் சார் மிக சிறப்பான வேடத்தில் நடித்திருக்கிறார், அவர் வேடம் என்ன என்பது டிரைலரில் தெரிகிறது. ஆன்மீகவாதியாக நடித்திருக்கிறார். அவர் தசரதன் படத்தில் கடவுள் பக்தி இல்லாதவராக நடித்திருப்பார், ஆனால் இதில் கடவுள் பக்தி உடையவராக நடித்திருக்கிறார். இந்த படம் பட்டிதொட்டி எல்லாம் வெற்றி பெற வேண்டும். இந்த படத்தை நிறைய உழைப்புகளோடும், கனவுகளோடும் உருவாக்கியிருக்கிறார்கள். ஆண்டனி சாரின் கத்திரி மட்டுமே பேசும், அவர் பேச மாட்டார். ஆனால், அவரே இங்கு அதிகம் பேசியிருக்கிறார் என்றால் இந்த படம் எப்படி வந்திருக்கும் என்று பாருங்கள். சம்பத் ராம் சார் இந்த படத்தின் சிறு சிறு அப்டேட்களை கூட சோசியல் மீடியாவில் போட்டுக் கொண்டிருந்தார். மிகப்பெரிய உழைப்பை போட்டு பண்ணக்கூடிய படங்கள் அனைத்திற்கும் பத்திரிகையாளர்களின் ஒத்துழைப்பு இருக்கும். இந்த படத்தையும் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும், அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.
நடிகர் சரத்குமார் பேசுகையில், “’கண்ணப்பா’ படத்தின் ப்ரீ ரிலீஸ் மிகப்பெரிய அளவில் பண்ண வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள், ஆனால் சில காரணங்களால் நடக்காமல் போய்விட்டது. சரி நான் பத்திரிகையாளர்களை சந்திக்க முடிவு செய்தேன். இதை அறிந்த விஷ்ணு மஞ்சு, நம்பளே பண்ணலாம், நீங்களே படத்தின் சார்பாக பத்திரிகையாளர்களை சந்தித்துவிடுங்கள் என்றார். அதனால் தான் இந்த ஏற்பாடு.
கண்ணப்பா ஒருவரிக்கதை தான். 63 நாயனார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனார் சிவபக்தர்களில் மிக சிறப்பு வாய்ந்தவர், என்பது நமக்கு தெரியும். ஏற்கனவே ராஜ்குமார் சாரும், கிருஷ்ணா சாரும் கண்ணப்பா படத்தை பண்ணிவிட்டார்கள். இதை விஷ்ணுவின் கோணம் என்று தான் சொல்ல வேண்டும். நம்பிக்கையற்றவர், பிறகு நம்பிக்கையுள்ளவராக மாறுகிறார். கடவுள் நம்பிக்கை இல்லாதவர் எப்படி தீவிர சிவபக்தராக மாறுகிறார், அவருக்கான போராட்டம் என்பது தான் இந்த படத்தின் கரு. மோகன் பாபு சாருக்கும், விஷ்ணு மஞ்சுவுக்கும் நான் தொடர்ந்து வாழ்த்து சொல்லிக் கொண்டே இருக்கிறேன், இதற்கு காரணம் படத்தின் லொக்கேஷன் தான். இயற்கையின் சொர்க்கம் என்றால் அது நியூசிலாந்து தான். அங்கு இருப்பது நிஜமான வண்ணம், டிஐ-யில் பண்ணாத ஒரிஜினல் வண்ணம் என்று தைரியமாக சொல்லலாம். அந்த இடத்தில் 10 நாட்கள் அல்லது 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தலாம், ஆனால் 120 நாட்கள் வெளிநாட்டில் படம் எடுப்பது என்பது சாதாரண விசயம் இல்லை. அதற்கான உழைப்பு என்பது மிகப்பெரியது. அந்த காலத்தில் இந்த பூமி இப்படி தான் இருந்திருக்கும் என்று அந்த இடத்தை தேர்வு செய்தார்கள். குளிர் அதிகமாக இருந்தாலும், பணியை சிறப்பாக முடித்தோம்.
இந்த போராட்டம், சிறு வயதில் சாமி சிலை மீது கல் வீசுவது, பராசக்தி படம் போல் வசனம் பேசும் காட்சிகளும் படத்தில் இருக்கிறது. அப்படி ஒரு மனப்போரட்டத்தில் இருக்கும் தின்னா எப்படி சிவபக்தராக மாறுகிறார் என்பது தான் கதை. நான் தின்னாவின் அப்பாவாக நடித்திருக்கிறேன். பல முறை மோகன் பாபு சாருடன் படம் பண்ணுவதாக இருந்து பண்ண முடியாமல் போனது, ஆனால் இந்த படத்தில் அது நடந்திருப்பது மகிழ்ச்சி. முகேஷ் குமார் சிங் மகாபாரதத்தை சிறப்பாக இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார், அவர் 3 ஆயிரம் கோடியில் மகாபாரதத்தை பிரமாண்டமாக எடுக்கும் திட்டத்தில் இருக்கிறார், அப்படிப்பட்டவரை அழைத்து கண்ணப்பா நாயனாரின் கதையை எடுக்க சொன்னது வியப்பாக இருந்தாலும், அவர் சிறப்பாக எடுத்திருக்கிறார். எனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம், எனக்கும் தின்னாவுக்கும் இடையில் நடக்கும் போராட்டம் சிறப்பாக அமைந்திருக்கிறது. இந்த படம் மிகப்பெரியது. அக்ஷய் குமார், மோகன்லால், பிரபாஸ் என பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். கடைசி ஒரு மணி நேரம் சிறப்பாக இருக்கும் என்று ஆண்டனி சொன்னார், அவர் படத்தை முதலில் பார்த்தவர் என்பதால் அதை சொல்லியிருக்கிறார், மகிழ்ச்சியாக இருக்கிறது. அமெரிக்காவில் இருந்து ஒளிப்பதிவாளர், ஹாங்காங்கில் இருந்து ஸ்டண்ட் மாஸ்டர் என்று மிக சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். இது மக்கள் தெரிந்துக் கொண்டு புரிந்துக் கொள்ள வேண்டிய படமாக இருக்கும். தற்போதைய தலைமுறைகளுக்கு நாம் பல கதைகளை சொல்ல மறந்துவிடுகிறோம். பொன்னியின் செல்வன் கதை மூத்தவர்களுக்கு தெரியும், ஆனால் இளைய தலைமுறைகளுக்கும் தெரிய வேண்டும், என்று தான் மணி சார் அதை படமாக எடுத்திருக்கிறார். அதேபோல் தான், கண்ணப்பா கதையும் இளைய தலைமுறையினருக்கு தெரிய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இதை விஷ்ணு தனது கோணத்தில், சிவபக்தரான கண்ணப்பா அதற்கு முன் எப்படி இருந்தார், அவரது வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை சொல்லியிருக்கிறார். அது சிறிய கதையாக இருந்தாலும் கூட, விஷ்ணு கோணத்தில் அது மிக சிறப்பாக வந்திருக்கிறது, அதை அவர் சாதாரணமாகவும் சொல்லவில்லை, பல ஆராய்ச்சிகள் செய்து, கடினமான உழைப்பை செலுத்தி எடுத்திருக்கிறார். அவரது உழைப்புக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்க வேண்டும், என்று நினைக்கிறேன்.
கண்ணப்பாவின் கதை இந்தியாவை கடந்து உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும் என்றால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இரண்டாவது பக்தி, இன்று எவ்வளவு பேருக்கு பக்தி இருக்கிறது, என்று தெரியவில்லை. தினமும் கோவிலுக்கு போகாமல் இருக்கலாம், ஆனால் பிரச்சனை வந்தால் நிச்சயம் கோவிலுக்கு செல்வோம். இறைவன் இருக்கிறார் என்பதை மேலும் மேலும் சொல்லி, அதிலும் சிவபக்தியை பற்றி சொல்லி, பக்தி எவ்வளவு முக்கியம் என்பதை சிறப்பாக சொல்லியிருக்கிறார்கள். கடவுள் இருக்கிறார் என்பதை, அது ஏசுவாக இருக்கலாம், அல்லாவாக இருக்கலாம், கடவுள் இருக்கிறார், என்பதை சொல்ல வேண்டும். தற்போதைய வேகமான ஓட்டத்தில் கடவுளையும், பக்தியையும் மறந்து விடுகிறார்கள். எனவே கலை மூலமாகவும், திரைப்படம் மூலமாகவும் மக்களிடம் பக்தி பற்றி சொல்ல வேண்டியது அவசியம். அந்த வகையில், கண்ணப்பா படத்தை பார்க்கும் போது இப்படி ஒரு சிவபக்தர் இருந்தார், என்பதை மக்கள் அறிந்துக் கொள்வார்கள். பக்தி என்பது அவர் அவர் மனதில் தோன்றுவது தான், அந்த பக்தி பரவசத்தோடு இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய படம் தான் கண்ணப்பா. உங்களுடைய ஆதரவோடும், மக்களின் ஆதரவோடும் இந்த படம் வெற்றியடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
அதேபோல் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்கள் பார்வையில் இந்த படம் எப்படி இருக்கிறது, என்பதை உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு, “மச்சா உள்ளே வந்துடாதே..” என்றெல்லாம் சொல்லாதீங்க. உங்களுக்கு ஒரு கருத்து இருக்கலாம், உங்கள் நண்பர்களுக்கு வேறு ஒரு பார்வை இருக்கலாம், சிலர் பிரபாஸுக்காக படம் பார்க்க வரலாம், எனவே அவர் அவர் பார்வையில் படத்தை பாருங்கள், அதை மற்றவர்களிடம் திணிக்காதீர்கள், என்று சொல்லிக் கொள்கிறேன், நன்றி.” என்றார்.
Rockstar DSP.. He’s a True talent.. He is like a diamond weapon. His musical targets never missed, it can hit our hearts a hundred times.
Now, three(3) consecutive hits in three (3) different genres of films.. This has made DSP a real Champion. He had delivered more of a big hit. Both PUSHPA 1 & 2. Can we imagine a flower rise without a DSP? Impossible. From Kashmir to Kanyakumari, Gujarat to Nagaland, DSP songs were celebrated everywhere. Not only every tantra that rang here, but the whole world resonated. That echo gave the flower its fragrance.
Then THANDEL, Chandu Mondeti was the director. This love film songs and background score music was the one thing that took the THANDEL Movie to the next level. It was only DSP who made Thandel’s success ring with his musical performance.
Kubera right now. The duets were not written by director Sekhar Kammula. But the film is not just about the songs; it also looks more effective through rerecording Sounds. The songs and rerecording of the DSP to such a poor people’s story have made the film producers, directors and actors more of the film’s billionaires.
That’s what the journey is. DSP started very young.. Now 2025!! In the journey of many years, many milestones, many expeditions, many awards and many more glorious peaks. Hats off Rockstar DSP..
“ஹாட்ரிக் ஹிட், கலக்கும் ராக்ஸ்டார் டிஎஸ்பி!”
புஷ்பா, தண்டேல், குபேரா இசையில் கலக்கும் டிஎஸ்பி!”
இந்திய சினிமாவின் இசை உலகில் தனிச்சிறப்புடன் மின்னும் இசைப்புயல் ராக்ஸ்டார் தேவிஶ்ரீ பிரசாத் (DSP) மீண்டும் ஒரு மாபெரும் ஹாட்ரிக் வெற்றியைத் தந்து அசத்தியுள்ளார். மூன்று வெவ்வேறு வகை களங்களில், வேறு வேறு ஜானர்களில், மூன்று பிளாக்பஸ்டர் ஹிட்ஸ் தந்து, அசத்தியுள்ளார். இந்த சாதனை மூலம் தான் உண்மையான இசை சாம்ராட் என்பதை நிரூபித்துள்ளார்.
புஷ்பா 1 & 2
அல்லு அர்ஜுனின் புஷ்பா பிராஞ்சைஸ் – பாகம் 1 மற்றும் பாகம் 2 – இல் டிஎஸ்பியின் இசை படத்தின் உயிராக இருந்தது. “ஊ சொல்லவா”, “ஸ்ரீவள்ளி” முதல் “புஷ்பா புஷ்பா” என அப்படத்தின் பாடல்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகளாவிய வகையில் மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளது. அவரது இசை, புஷ்பாவின் நறுமணத்தை உலகம் முழுக்க பரவச் செய்துள்ளது.
தண்டேல்
சந்தூ மொண்டேட்டி இயக்கத்தில் வெளியான தண்டேல் திரைப்படத்தில், டிஎஸ்பியின் பாடல்கள் மற்றும் பிஜிஎம் (Background Score) தான், அந்த படத்தை புதிய உயரத்திற்கு கொண்டுசென்றன. அழகு, அனுபவம், இசை அனைத்தையும் ஒரே சேர உணர வைத்த இப்படத்தின் வெற்றிக்கு பின்னால் DSP-ன் பங்களிப்பு முக்கிய காரணமாகும்.
குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜூனா நடிப்பில் உருவாகியுள்ள குபேரா திரைப்படம் – எளிய சமூக பின்னணியில் இருக்கும் பிச்சைக்காரர்களை தழுவிய கதை. இதில் டிஎஸ்பி வழங்கிய பாடல்களும், குறிப்பாக ரீரெக்கார்டிங்கும், கதையின் உணர்வுகளை பல மடங்கு உயர்த்துகின்றன. இசையின் வலிமை இப்படத்தை ஒரு வசூல் ராக்கெட்டாக மாற்றியுள்ளது.
இளமையில் துவங்கிய அவரது இசைப் பயணம் ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சம் தொட்டு வரும் நிலையில் 2025 ஆம் வருடம் அடுத்தடுத்த பிளாகபஸ்டர் ஹிட்டுகளால் டிஎஸ்பியின் இசை சிகரங்கள் தொடரவுள்ளது. இந்திய இசைக்கான இளவரசர் என்றால் அது ராக்ஸ்டார் டிஎஸ்பி தான்!”
Yash Raj Films & Mohit Suri’s Saiyaara is the best romantic album of the year and the fourth song from the album, Humsafar, will highlight a new season of beautiful love between the lead pair of the film, Ahaan Panday & Aneet Padda.
Catch the song here: https://youtu.be/D9DiMnlpFK8?list=RDD9DiMnlpFK8
So far, all three songs of the film, Saiyaara title track, Jubin Nautiyal’s Barbaad & Vishal Mishra’s Tum Ho Toh have received unanimous love and are soaring the charts. And now, the makers have released this hugely anticipated romantic song from the album by the hit musical duo Sachet–Parampara. Humsafar sees the first ever musical collaboration between Mohit Suri and the musical duo which has set expectations very, very high.
Mohit reveals Humsafar is a deeply special song for him because Sachet-Parampara became reference points for his lead pair Ahaan and Aneet.
He says, “Sachet & Parampara became a reference point for Ahaan and Aneet to see how two people can get inspired by each other and make music! So, Ahaan & Aneet spent a lot of time closely observing the process of Sachet & Parampara.”
Mohit adds, “It was very good for the two actors because they learnt and realised how creative minds collaborate, disagree, build on ideas and create beautiful music together! So, a lot of what you see of Ahaan and Aneet in the film will be actually what they have seen of Sachet & Parampara.”
The ace director says Humsafar reveals a new layer of romance in Saiyaara. He says, “Humsafar is a very special song of our album because it talks about a very different season of love in which they realise that life becomes worth living when you find the right companion. Humsafar is about a very fulfilling feeling that you get when you are with the love of your life, where problems fade away and one feels complete with each other.”
Mohit adds, “Sachet & Parampara are two of the brightest musicians of our country today and having them in our music album of Saiyaara adds a whole new dimension of romance through their voice and music. I’m very excited to present this song to people and I am certain people will love it.”
Saiyaara brings together YRF and Mohit, both known for creating timeless love stories, for the first time. The teaser that was released before the song roll out started, has garnered unanimous praise for making an intense love story with debutants who share infectious chemistry and brilliant acting skills.
Catch the teaser here: https://youtu.be/nF31d_f4n_A
Besides the songs, the film’s title, Saiyaara, has also piqued interest of audience. It means a wandering celestial body, but in poetry it’s often used to describe something (or someone) dazzling, ethereal, or otherworldly — a wandering star – always shining, always guiding, but always out of reach.
The film launches Ahaan Panday as a YRF hero. The studio has handpicked Aneet Padda (who stole hearts with her brilliant performance in the much-acclaimed series Big Girls Don’t Cry) as the next YRF heroine. Saiyaara is produced by the company’s CEO Akshaye Widhani and it is set to release on July 18, 2025 in theatres worldwide.
YRF, in its 50 year history, is known for giving India some of the cult romantic films of all time primarily directed by Yash Chopra and Aditya Chopra. Mohit Suri, who is currently in his 20th year in cinema, has also directed some of the most favourite romantic films like Aashiqui 2, Malang, Ek Villain, etc.
அஹான் மற்றும் அனீத் இருவரும் சச்சேத் மற்றும் பரம்பராவுடன் இணைந்து அவர்கள் எப்படி ஒற்றுமையாக இசையமைக்கிறார்கள் என்பதை காண நேரத்தைச் செலவிட்டனர்!’ : சையாராவின் ஹம்சஃபர் ஏன் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதை மோஹித் சூரி வெளிப்படுத்துகிறார்
யஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் மோஹித் சூரி கூட்டணியில் உருவாகி வரும் ‘சையாரா ‘ படத்தின் இசை ஆல்பம் இந்த ஆண்டின் சிறந்த காதல் ஆல்பமாகும்.மேலும் இந்த இசை ஆல்பத்தின் நான்காவது பாடலான ‘ஹம்சஃபர்’ என்கிற பாடல் இந்த படத்தின் ஜோடிகளான அஹான் பாண்டே & அனீத் பத்தா இடையேயான அழகான காதலை வெளிப்படுத்துகிறது .
இதுவரை, இப்படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்கள் சையாரா தலைப்புப் பாடல், ஜூபின் நௌடியாலின் பர்பாத் மற்றும் விஷால் மிஸ்ராவின் தும் ஹோ தோ ஆகிய பாடல்கள் மக்களிடையே ஒருமித்த அன்பைப் பெற்றுள்ளது .மேலும் பாடல்கள் தரவரிசையில் உயர்ந்து வருகின்றது.இப்போது தயாரிப்பாளர்கள் இசை இரட்டையர்களான சச்சேத்-பரம்பராவின் இசையில் இந்த ஆல்பத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஹம்சஃபர்’ என்கிற காதல் பாடலை வெளியிட்டுள்ளனர். மோஹித் சூரி, சச்சேத் பரம்பரா இந்த கூட்டணியில் உருவாகியுள்ள முதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த பாடலின் மீது எதிர்பார்ப்பை மிகவும் அதிகரித்துள்ளது.
சச்சேத்-பரம்பரா உருவாகியுள்ள இந்த பாடல் தனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த பாடல் என்று மோஹித் கூறியுள்ளார் , ஏனெனில் இந்த படத்தின் ஜோடிகளான அஹான் மற்றும் அனீத்துக்கு சச்சேத்-பரம்பராவின் ஒற்றுமை ஒரு எடுத்துகாட்டாக மாறியது.
மோஹித் சூரி கூறுகையில், ” சச்சேத் – பரம்பரா இருவரும் எவ்வாறு ஒற்றுமையாக இசையமைக்கிறார்கள் என்பது அஹான் மற்றும் அனீத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறியது .எனவே, அஹான் ,அனீத் இருவரும் சச்சேத் மற்றும் பரம்பராவின் இசை பணிகளை நேர்த்தியாக கவனிக்க நிறைய நேரம் செலவிட்டனர்.”
மோஹித் மேலும் கூறுகையில்,”இரண்டு நடிகர்களுக்கும் இது மிகவும் நல்ல அனுபவமாக இருந்தது, ஏனென்றால் படைப்பாற்றல் மிக்க மனங்கள் எவ்வாறு ஒத்துழைக்கின்றன, கருத்துக்கள் பறிமாற்றம் மற்றும் ஒன்றாக அழகான இசையை உருவாக்குதல் என்பதைக் கற்றுக்கொண்டு உணர்ந்தனர் .எனவே, படத்தில் அஹான் மற்றும் அனீத் பற்றி நீங்கள் காணும் பல விஷயங்கள் உண்மையில் சச்சேத் மற்றும் பரம்பராவைப் பற்றி அவர்கள் பார்த்தவையாக தான் இருக்கும்.”
“ஹம்சஃபர் எங்கள் ஆல்பத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த பாடல், ஏனெனில் அது மிகவும் மாறுபட்ட காதல் பருவத்தைப் பற்றிப் பேசுகிறது, அதில் நீங்கள் சரியான துணையைக் கண்டுபிடிக்கும்போது வாழ்க்கை வாழத் தகுதியானது என்பதை கதாபாத்திரங்கள் உணர்கிறார்கள். ஹம்சஃபர் என்பது உங்கள் வாழ்க்கையின் அன்போடு இருக்கும்போது நீங்கள் பெறும் மிகவும் நிறைவான உணர்வைப் பற்றியது.அங்கு பிரச்சினைகள் மறைந்து ஒருவருக்கொருவர் முழுமையான அன்பை உணர்கிறார்கள்.”
மோஹித் மேலும் கூறுகையில்,”சச்சேத் மற்றும் பரம்பரா இன்றைய காலகட்டத்தில் நம் நாட்டின் இரண்டு பிரகாசமான இசைக்கலைஞர்கள், அவர்கள் எங்கள் சையாரா இசை ஆல்பத்தில் இருப்பது அவர்களின் குரல் மற்றும் இசை மூலம் காதலுக்கு முற்றிலும் புதிய பரிமாணத்தை சேர்க்கிறது. இந்தப் பாடலை மக்களுக்கு வழங்குவதில் நான் மிகவும் ஆவலாக உள்ளேன்.மேலும் மக்கள் இந்த பாடலை விரும்பி கேட்பார்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.”
சையாரா படத்தின் மூலம் பாலிவுட்டில் அஹான் பாண்டே ஒரு ஹீரோவாக அறிமுகப்படுத்தியுள்ளனர் ,.மேலும் அனீத் பட்டா (பிக் கேர்ள்ஸ் டோன்ட் க்ரை என்ற மிகவும் பாராட்டப்பட்ட தொடரில் அவரது அற்புதமான நடிப்பால் கவர்ந்தவர்) கதாநாயகியாக நடிக்கிறார். சையாரா படத்தை யஷ் ராஜ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அக்ஷய் விதானி தயாரித்துள்ளார்.இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 18ம் தேதியன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் S. அம்பேத்குமார் வழங்க, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி – நிமிஷா சஜயன் முன்னணி வேடத்தில் நடித்து, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ஊடாக கடந்த இருபதாம் தேதியன்று வெளியான ‘DNA’ திரைப்படம் – விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி பயணிக்கிறது.
இதை தொடர்ந்து படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் நன்றி அறிவிப்பு விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இந்த நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பட தொகுப்பாளர் சபு ஜோசப் பேசுகையில், ” இந்த ஒரு தருணத்திற்காக நாங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கஷ்டப்பட்டு உழைத்தோம். இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான நான்கு படங்களுக்கும் நான் தான் படத் தொகுப்பாளராக பணியாற்றினேன். இதற்கு முன்னரான படங்களில் பணியாற்றும்போது வணிகரீதியான வெற்றியை பெறும் படைப்பை வழங்க வேண்டும் என இயக்குநர் என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். அவருடைய கனவு இந்த டி என் ஏ படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது. இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.
ஒளிப்பதிவாளர் பார்த்திபன் பேசுகையில், ” இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘ஒரு நாள் கூத்து’ படத்திலிருந்து அவரை பின் தொடர்கிறேன் அவர் இயக்கத்தில் வெளியான ‘ஃபர்கானா ‘படத்தின் படப்பிடிப்பின் போது இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எங்கள் இருவருக்கும் இடையே நல்லதொரு புரிதலும், நட்பும் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து’ டிஎன்ஏ ‘ படத்திற்கான வாய்ப்பை வழங்கினார் அவர் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கின்றேன் என நினைக்கிறேன்.
இந்தப் படத்தில் பணியாற்றியதற்காக அனைவரும் பாராட்டுகிறார்கள். இதற்காக அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் பணியாற்றிய ‘பேச்சி’ எனும் முதல் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்தப் படத்தின் உணர்வை சிதைக்காமல் ஒளிப்பதிவு செய்திருப்பதாக நம்புகிறேன். இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. ” என்றார்.
இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா பேசுகையில், ” இது என்னுடைய இருபது ஆண்டுகால கனவு பயணம். இந்த தருணத்திற்காக மகிழ்ச்சியுடன் காத்திருந்தேன். இதற்காக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த கதையில் இடம்பெறும் விசயங்கள் அனைத்தும் உண்மையானவை தான். கடந்த பதினைந்து ஆண்டு கால இதழியல் துறையில் பணியாற்றிய அனுபவம் தான் இந்த கதையை எழுதுவதற்கு உதவியாக இருந்தது. ‘ புனைவுகளில் உண்மைத் தன்மை அதிகம் இருந்தால்.. அந்த புனைவு வெற்றி பெறும்’ என என்னுடைய குரு சொல்லி இருக்கிறார். அந்த வகையில் இந்த கதையில் 90 சதவீதம் உண்மைத் தன்மை இருக்கிறது. பத்து சதவீதம் தான் கற்பனை கலந்திருக்கிறது.
இந்தப் படத்தில் இடம்பெறும் பாட்டி கதாபாத்திரத்தில் சாத்தூர் ஜெயலட்சுமி என்பவர் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரமும் என்னுடைய வாழ்வில் சந்தித்த பெண்மணியை முன்னுதாரணமாக கொண்டு எழுதினேன். எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை – கோஷா ஆஸ்பத்திரி – ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம் – என உண்மை சம்பவங்களை தழுவித்தான் இப்படத்தின் கதாபாத்திரத்தின் வடிவமைப்பு அமைந்திருக்கும். இப்படத்தின் வெற்றிக்கு இத்தகைய உண்மைக்கு நெருக்கமான விசயங்களும் காரணம் என கருதுகிறேன். இதனால் எழுத்தாளர்களையும், அனுபவம் மிக்க பத்திரிக்கையாளர்களையும் இயக்குநர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.
இயக்குநர் நெல்சன் தான் என்னை தேடி கண்டுபிடித்து எழுத அழைப்பு விடுத்தார்.
நான் மனதிற்கு நெருக்கமாக உணர்ந்து எழுதிய பல காட்சிகளை திரையில் அற்புதமான நடிப்பால் அதர்வாவும் , நிமிஷாவும் வெளிப்படுத்தி இருந்தார்கள். இதற்காக அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை ஏதேனும் ஒரு கதாபாத்திரம் ..மற்றொரு கதாபாத்திரத்திற்கு உதவும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருப்போம். இந்த உதவி செய்யும் மனப்பான்மை எப்போது வணிகத்தனம் மிக்கதாக மாறுகிறதோ..! அங்கு குற்ற சம்பவம் நிகழ்கிறது.
இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது. கடந்த தசாப்தங்களில் வாகனத்தில் பயணிக்கும் போது ‘லிஃப்ட் ‘ கேட்பார்கள். இன்று ‘லிஃப்ட்’ என்பது ‘பைக் டாக்சி’யாக மாறிவிட்டது.
உதவி என்பது ஆத்மார்த்தமாகவும் , நேர்மையாகவும் இருக்க வேண்டும். இந்த மனிதநேயத்தை முன்னிறுத்திய இந்த திரைப்படம் ரசிகர்களிடம் சரியான முறையில் சென்றடைந்திருப்பதால் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு துணையாக நின்ற ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.
நடிகர் போஸ் வெங்கட் பேசுகையில், ” கேரளாவில் ஒரு படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றால்.. அங்கு ஐந்து கேரவன் இருந்தால், அதில் ஒரு கேரவன் ரைட்டர்ஸ் -காக இருக்கும். அந்த அளவில் கதாசிரியர்களுக்கு அங்கு மதிப்பு இருக்கிறது. அந்த வகையில் இந்தப் படத்தில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றிய அதிஷாவை மேடையேற்றி, பாராட்டு தெரிவித்ததற்காக இயக்குநர் நெல்சனுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இது ஆரோக்கியமான பயணம். என்னை பொறுத்தவரை கதாசிரியர் – வசனகர்த்தா என்பது தனி பிரிவு. அந்த பிரிவு வலிமையாக இருந்தால் ..எந்த படமும் தோற்காது. இது என்னுடைய கருத்து.
இந்தப் படத்தில் நடித்த வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் , உடன் பணியாற்றிய அனைத்து நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.
இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசுகையில், ” தமிழ் சினிமாவின் தற்போதைய சூழலில் ஒரு படத்தின் வெற்றி என்பது ஒரு இயக்குநர் நல்ல படத்தை இயக்குவதில் மட்டுமில்லை. அந்தத் திரைப்படம் சரியான தேதியில் வெளியாக வேண்டும். இது இயக்குநர்களின் கைகளில் கிடையாது. அந்தத் திரைப்படத்திற்கு சரியான விளம்பரம் கிடைக்கப் பெற வேண்டும். அதுவும் இயக்குநர்களின் கைகளில் கிடையாது. அந்தத் திரைப்படம் விநியோகஸ்தர்களின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் . அதுவும் அந்த இயக்குநரின் கைகளில் கிடையாது. அதனைத் தொடர்ந்து அந்தப் படத்திற்காக போஸ்டர் ஒட்டுவது முதல் விளம்பரப்படுத்துவது வரை உழைப்புதான் வெற்றியை தீர்மானிக்கிறது. அந்த வகையில் ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால் பலர் ஒன்று கூட வேண்டியதிருக்கிறது. பலரின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்க வேண்டும். அந்த வகையில் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றிக்கு பின்னணியில் உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படம் உருவாகுவதற்கு காரணமாக இருந்த இரண்டு, மூன்று இதயங்களுக்கு இந்த தருணத்தில் என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனந்துக்கும், திவ்யாவுக்கும் இடையேயான கதை 2009 ஆம் ஆண்டிலிருந்து என்னிடம் இருக்கிறது. ஆனந்தும், திவ்யாவும் பெயர்தான் வேறு வேறு. ஆனால் இந்த கதாபாத்திரங்களை நான் என்னுடைய வாழ்வில் சந்தித்திருக்கிறேன். அவர்களின் வலியை இதில் பதிவு செய்திருக்கிறேன். இவர்களின் வாழ்வில் திருமணம் என்பது நடைபெறுமா? என என்னுடைய மனதில் எழுந்த கேள்விதான் இந்தப் படத்தின் கதையை எழுத தூண்டியது. இதன் மூலம் ஒரு வலிமையான கதை… ஒரு வலிமையான உணர்வுடன் இணைந்து சொல்லும்போது அதற்கு வெற்றி கிடைக்கிறது. இதனை இன்னும் நான் பத்து ஆண்டுகள் கழித்த பின்னர் சொன்னாலும் வெற்றியைப் பெறும். அதற்கான வரவேற்பும் , அன்பும் மக்கள் அளிப்பார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.
அந்த உண்மையான ஆனந்திற்கும், அந்த உண்மையான திவ்யாவிற்கும் இந்த திரைப்படத்தின் வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.
இந்த படத்தில் தான் முதன்முதலாக என்னுடைய கதையை தயாரிப்பாளர் அம்பேத்குமார் ..என் முன்னிலையில் மற்றவரிடம் நான் எப்படி சொன்னேனோ…எப்படி சொல்வேனோ.. அதேபோல் சொன்னார். அவருடைய கதை சொல்லும் திறமையை கண்டு வியந்தேன். அப்போது என் கதை பிடித்திருக்கிறது. புரிந்திருக்கிறது.. என்ற சந்தோஷமும் மனதில் எழுந்தது. அந்தத் தருணம் என்னால் மறக்க இயலாது.
இந்தப் படம் உருவானதற்கு காரணமாக இருந்த சுரேஷ் சந்திரா, சந்தோஷ், ஒளிப்பதிவாளர் பார்த்திபன், படத் தொகுப்பாளர் சபு ஜோசப், எழுத்தாளர் அதிஷா, இசையமைப்பாளர்கள், பின்னணி இசையமைத்த ஜிப்ரான், ஒலி கலவை பொறியாளர் தபஸ் நாயக், இணை இயக்குநர் போன்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், விஜி சந்திரசேகர், போஸ் வெங்கட், இயக்குநர் சுப்பிரமணிய சிவா, இயக்குநர் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், அதர்வா முரளி, நிமிஷா சஜயன் என நடிகர் , நடிகைகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய சூழலில் ஒரு திரைப்படத்தை காண மக்களையும், ரசிகர்களையும் திரையரங்கத்திற்கு வரவழைக்க வேண்டும் என்றால்.. பல தரப்பினரும் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் இருக்கிறது. இதன் மூலம் நிறைய நல்ல சினிமாக்கள் வரவேண்டும் . ஆரோக்கியமான சினிமா சூழல் உருவாக வேண்டும் என்ற இலக்குடன் தான் பயணிக்கிறோம்.
சினிமா மூலம் மக்களும் பயனடைய வேண்டும். அதில் பணியாற்றிய கலைஞர்களும் பயனடைய வேண்டும். அந்த வகையில் ஒரு திரைப்படத்தின் விமர்சனமும் , பார்வையும் அமைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் படைப்பாளிகளும் , விமர்சகர்களும் கைக்குலுக்கி , ஆரோக்கியமான சினிமா சூழலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்பது குறித்து மனம் திறந்து விவாதிக்க விரும்புகிறேன். என்னுடைய திரை பயணத்தில் தொடர்ந்து ஆதரித்து வரும் ஊடகத்தினருக்கும் , ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
நடிகை நிமிஷா சஜயன் பேசுகையில், ” பொதுவாக ஒரு திரைப்படம் வெளியாகும் போது இந்த படம் ஹிட் ஆகுமா? ஹிட்டாகாதா? என்ற பதட்டம் இருந்து கொண்டிருக்கும். ஆனால் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் காட்சி திரையிட்ட பிறகு கிடைத்த விமர்சனத்தால் படம் வெளியான தருணத்தில் நான் எந்த வித பதட்டமும் இல்லாமல் நிம்மதியாக உறங்கினேன். இருந்தாலும் இரண்டு மணி அளவில் இயக்குநர் நெல்சன் போன் செய்து படம் வெற்றி என சொன்ன போது மகிழ்ச்சி அடைந்தேன். இதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் என்னுடைய நடிப்பு சிறந்ததாக இருக்கிறது என்று பாராட்டினால்.. அது இயக்குநரைத் தான் சாரும். அவர் சொல்லிக் கொடுத்ததை தான் நான் செய்திருக்கிறேன். நான் எப்போதும் போல் இயக்குநரின் கலைஞராகத்தான் இருக்க விரும்புகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து திவ்யா கதாபாத்திரத்தை அளித்ததற்காக நன்றி.
ஒவ்வொரு படத்தில் இருந்தும் ஏதேனும் ஒரு விசயத்தை கற்றுக் கொள்கிறேன். இந்த படத்தில் நான் இரண்டு விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். ஒன்று இயக்குநர். மற்றொன்று அதர்வா.
படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய போது மனதிற்கு நெருக்கமாக இருந்த படங்களில் இதுவும் ஒன்று. சக நடிகரான அதர்வா மிகுந்த திறமைசாலி. அர்ப்பணிப்பு உள்ளவர். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் சொன்னதை கச்சிதமாக செய்தார். அவருடைய ஒத்துழைப்பு மறக்க முடியாது. அவரின் ஆதரவு இல்லை என்றால் திவ்யா இல்லை.
இந்தப் படத்தில் பிறந்து நாற்பது நாட்களான குழந்தையை நடிப்பதற்காக மனமுவந்து வழங்கிய அந்தக் குழந்தையின் பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த திரைப்படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும் , ஊடகத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
நடிகர் அதர்வா முரளி பேசுகையில், ” டி என் ஏ படத்தின் வெற்றிக்கான நன்றி அறிவிப்பு விழாவில் கலந்து கொண்ட உணர்வே மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தப் படத்திற்காக உழைத்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் இந்த ஒரு தருணத்திற்காக தான்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல படத்தில் நடிக்கிறோம் என்ற உணர்வுடன் தான் கலந்து கொண்டேன். இந்தப் படம் எந்த அளவிற்கு வெற்றி பெறும்… எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் … யாருக்கு பிடிக்கும்… என்றெல்லாம் யோசிக்கவில்லை.
படப்பிடிப்பு நிறைவடையும்போது நல்ல படத்தில் நடித்து விட்டோம் என்ற உணர்வு தான் ஏற்பட்டது. இந்த படத்திற்கான பத்திரிக்கையாளர்கள் காட்சி திரையிட்ட போது.. படம் நிறைவடைந்த பிறகு சில நிமிடங்கள் கழித்து அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்பை தெரிவித்த போது.. உண்மையில் நெகிழ்ச்சி அடைந்தேன். ஊடகத்தினர் அனைவரும் ஊக்கமளிக்கும் வகையில் பாராட்டு தெரிவித்தனர். அது எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்தது. ‘வேர்ட் ஆஃப் மவுத்’ என்று சொல்வதை இந்தப் படத்தின் வெற்றி மூலம் அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.
படம் வெளியான பிறகு ரசிகர்களின் வரவேற்பை நேரில் காண்பதற்காக திரையரங்கத்திற்கு சென்றோம். அப்போது வயதான பெண்மணி ஒருவர் என்னை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு படத்தை பாராட்டினார். இந்த படத்தின் வெற்றி எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது எனச் சொன்னார். இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தின் வெற்றியை அவர்கள் தங்களின் வெற்றியாக கொண்டாடினார்கள். இதை காணும் போது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது.
இந்தத் தருணத்தில் உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான மனிதனாக என்னை நான் உணர்கிறேன்.
இயக்குநர் நெல்சன் என்னை சந்தித்து இப்படத்தை பற்றி சொன்னபோது, ‘உங்களுடைய திரையுலக பயணத்தில் நல்லதொரு திரைப்படத்தை அளிப்பேன்’ என நம்பிக்கையுடன் சொன்னார். அந்த நம்பிக்கையை அவர் காப்பாற்றி இருக்கிறார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர்- ஒளிப்பதிவாளர் -இசையமைப்பாளர்கள் – பின்னணி இசையமைப்பாளர் – என தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர், நடிகைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
The character of Deepak opened a new world. Sekhar Kammula created a miracle with Kuberaa: King Nagarjuna.
Emotion Is The Biggest Grandeur, Kuberaa proved it again: Hero Dhanush.
Superstar Dhanush, King Nagarjuna, and Rashmika Mandanna headline Sekhar Kammula’s latest unanimous blockbuster Kuberaa. Produced by Suniel Narang and Puskur Ram Mohan Rao under SVCLLP in collaboration with Sekhar Kammula’s Amigos Creations Private Limited, the film was made with a high budget and top-notch production values. Released grandly on June 20 in Telugu, Tamil, Hindi, Kannada, and Malayalam, Kuberaa has achieved unanimous blockbuster success with houseful bookings and is running successfully. On this occasion, the makers organized a grand Kuberaa blockbuster success meet, with Megastar Chiranjeevi attending as the chief guest.
At the Kuberaa blockbuster success meet, Megastar Chiranjeevi said: “Greetings to all. It feels like my own success meet; that’s the kind of joy I’m experiencing here. Everyone present here is dear to me, and seeing the happiness on their faces makes it feel like my success meet. I didn’t come here as a guest but as one of you, a close friend. I met Nagarjuna garu before this film and asked about Kuberaa. He said he played a different character, with Dhanush in the lead. I asked how he agreed to it, and he said he wanted to do something unique and open new doors, and this film would help achieve that. I watched the movie, and what he said is 100% true. After this film, he will shine for another 40 years, and that’s a fact. Sekhar writing this character and Nagarjuna accepting and performing it is the first success. I can’t imagine anyone but Dhanush as Deva. After watching his character, that’s how I felt. I couldn’t even recognize Dhanush while watching the film; he was so immersed in the role. Kuberaa is not just another film, but it’s an experience. While watching, I felt as though it were all happening in real life. Sekhar Kammula creates cinematic gems and has carved a permanent place in the audience’s hearts. When State Rowdy was being shot, Sekhar met me like a fan. That day, he decided to establish himself in the industry. Today, creating such masterpieces and earning audience appreciation is truly a matter of pride for me. On this silver jubilee year, I congratulate him again. Sekhar’s films feel close to reality. We remember characters like Deva and Deepak.
As Nag said, this film has opened another door for him, and more fantastic characters will come his way. I hope to follow his path too. Everyone in this film has been given justice. Rashmika performed fantastically. I attended her first film’s function as a guest, and now she’s not just a national but an international crush. The intensity in her character was evident in this film. Her character, Sameera, reminded me of Soundarya in Choodalani Vundi. The transformation of her character was brilliant. The character of Deva touched the heart. No one but Dhanush could have played it. With such a star image, only Dhanush in India could take on such a role so naturally. He deserves the Best Actor award for this film, and I offer my advance congratulations. If he doesn’t get it, there’s no meaning to the National Award. If he wins, it will be a matter of pride for everyone. Suniel’s father, Narayana Das, was a very honest person. There’s no one as honest in the business as him. It’s heartwarming to see Suniel and the third generation, Jahnavi, carrying forward his legacy. I’ll do a film with Jahnavi (laughs). I wish them many more successful films like Kuberaa. DOP Niketh did a fantastic job; the film looks rich. Seeing the youngsters here is delightful. The industry needs such youngsters to move forward. I wish the industry thrives with this energy. Devi Sri Prasad is like my son. He gave amazing albums during my comeback. His energy keeps growing, and the nation celebrates him. The film is very musical, and Devi’s re-recording was phenomenal. The song about the mother reminded me of Neeru Neeru from Khaidi No. 150. I congratulate everyone involved in this film by name. We need more films like this. In times when bringing audiences to theatres is a challenge, Kuberaa has proven that with good content and human emotions, audiences will come. This credit goes to Sekhar Kammula. My heartfelt wishes to the team. Love you all.”
King Nagarjuna said: “Greetings to all. Thank you to my brother, Padma Vibhushan Megastar Chiranjeevi garu. The entire industry loves him dearly. When Vikram was a big hit, he invited Kamal Haasan to his home and hosted him. When Aamir Khan came from Hindi cinema, he supported him. Be it a small or big film, Chiranjeevi is always there to support, and that’s why everyone loves him. It’s wonderful that he’s here for this event. This is Sekhar Kammula’s film. Making a thriller with human emotions is no ordinary feat, and it worked with this film. In this movie, you don’t see stars but characters like Deepak, Deva, and Sameera. This is Deva’s film, Deepak’s film, Sameera’s film, and Kushboo’s film—it belongs to Sekhar Kammula. Thank you, Sekhar, for teaching me something new about acting (laughs). Every day on this film felt fresh. Chiranjeevi garu told me in the car, ‘You did great job, you became Deepak.’ That’s when I understood Sekhar’s greatness. Thanks to everyone involved by name. Suniel is like a brother, and Ram Mohan and Jahnavi are very sweet people. Niketh gave fantastic work. Devi’s music is phenomenal. The media and audiences loved this film. No one gave it less than a three rating, which is rare. Sekhar created this miracle. I couldn’t recognize Dhanush on set; he was completely Deva. That’s not easy. Rashmika reminded me of Sridevi at times. She looks beautiful in this film. This movie opened a new world for me, and I won’t stop for another 40 years. I love you all.”
Hero Dhanush said: “Greetings to all. This is a wonderful day. Every artist waits for such a day, and we must celebrate it. It’s rare for a film to get a unanimous great response, and that happened with this film. We feel fortunate and see this as God’s gift. Thank you to the audiences and fans for embracing this film so grandly. There’s a notion that only action and blasting films work in theatres, but Sekhar Kammula has given new hope. He showed that a heartfelt film can bring audiences to theatres. Emotion is the biggest grandeur; nothing is grander than human emotions. Kuberaa proved it again. This film is doing wonderfully in Tamil. Thanks to everyone involved by name. Seeing the joy on the producer’s face tells you how successful a film is, as my father used to say. Seeing our producers happy gives me great joy. Chiranjeevi garu blessing our team is delightful. This is a mega success. Having him speak in Nagarjuna garu’s presence is a great blessing. Thank you to the media for taking this film to the next level and reaching the audience. Thanks to everyone by name.”
Director Sekhar Kammula said: “Chiranjeevi garu is my lucky charm. I’m thrilled he’s here. I met him during my college days, shook his hand, and said I’d direct him. That journey started then and has completed 25 years. I met him recently, and from there, a euphoria began for this film. Chiranjeevi garu never feels like an outsider. I can’t forget the place and stature the audience has given Kuberaa. Thank you to audiences worldwide for embracing this film so grandly. You’ve given immense strength to a filmmaker. Thanks to the media for their amazing praise. This is a film made on a large canvas. Thank you to Nagarjuna garu for accepting the role of Deepak; the response to his performance in theatres is phenomenal. Watching his performance brought tears to my eyes. About Dhanush, one word: God-like performance. Watching Poyiraa Mama gave me goosebumps. My mother watched the film and said it could’ve been 10 minutes longer, but Deva and Deepak were phenomenal. Rashmika performed wonderfully as Sameera. Devi gave amazing music. Shooting in Telugu and Tamil, with re-recording and songs in both languages, is no small task. DOP Niketh gave stunning visuals. Thanks to everyone by name. Narayana Das garu was the first to sign this film. His blessings are with us, wherever he is. Thanks to Suniel, Ram Mohan, and Jahnavi for their support, no matter the budget. Thanks to my Amigos team and direction department by name.”
Devi Sri Prasad said: “Greetings to all. Love you, Chiranjeevi garu. He’s the only one who carries a good film on his shoulders and declares it a blockbuster. Thanks to my music team by name. Nandakishore wrote fantastic lyrics; his talent should be recognized. Thanks to Bhaskar Bhatla and Chandrabose garu. Niketh gave stunning visuals. Thanks to everyone involved by name. Producer Suniel Narang is amazing; his studio is always lively. He cleared all payments before the release (laughs). Rashmika did wonderfully as Sameera, and her victories continue. Dhanush accepting this story is a success in itself. This film will get him another National Award. Nag sir is the evergreen Manmadhudu; no one else could’ve played Deepak. Sekhar made a fantastic film, and working with him was a joy. Being part of this film is delightful.”
Heroine Rashmika Mandanna said: “Greetings to all. Chiru garu is part of my journey. Thank you, sir. After hearing this story, I decided to surrender to the director on set. I resolved to perform as he directed. The credit for Sameera’s role goes to the director. Getting such a character is my luck. Dhanush garu, Nagarjuna garu, and Sekhar garu are the pillars of this film. Devi took it to another level with his music. Thanks to everyone involved by name.”
Producer Puskur Ram Mohan said: “Greetings to all. Thank you to Chiranjeevi garu for attending this event. He always supports good films. He came for Love Story too, and now for Kuberaa, which is delightful. Heartfelt thanks to him.”
Producer Jahnavi Narang said: “I first remember my grandfather. This project started with his blessings. It’s thrilling that it became such a big blockbuster. Thank you to Chiranjeevi garu for attending. I believe Kuberaa is a mega blockbuster. Chiranjeevi garu always supports good films. Working with Sekhar garu is like going to school. Devi gave amazing music. Rashmika embodied Sameera. Nagarjuna’s performance as Deepak is a masterclass. Dhanush was phenomenal as Deva. Thanks to everyone involved by name.”
DOP Niketh Bommi said: “Greetings to all. All departments worked wonderfully for this film. It’s delightful that Chiranjeevi garu is part of these celebrations. Working with Dhanush garu and Nagarjuna garu was an amazing experience. Thanks to Sekhar garu for giving such a large canvas. The producers supported us greatly. Thanks to everyone involved by name.”
Art Director Thota Tharani said: “Everyone worked hard for this film. Nagarjuna garu and Dhanush garu acted wonderfully. Performing in such locations is tough. I’ve done many films with Chiranjeevi garu, and his presence here is delightful. The credit for this film goes to Sekhar garu. Thanks to the producers for making such a wonderful film. Thank you all.”
Co-writer Chaitanya Pingali said: “Chiranjeevi garu is my hero. His presence here is delightful. This is Sekhar’s dream, and we worked on it. On set, we called all actors by their character names, and they lived as those characters. Nagarjuna garu, Dhanush garu, and Rashmika garu supported us immensely. Thanks to Sekhar Kammula and everyone involved by name.”
Lyricist Nandakishore said: “Greetings to all. Congratulations to the Kuberaa team. Writing songs for this film and getting a great response is delightful. Hearing that the mother’s song reminded people of their mothers was heartwarming. It’s a song on every mother’s lips. Sekhar garu made me write all the songs, and the ideas were his. Thanks to Devi Sri Prasad and all the singers. I never thought I’d see Nagarjuna garu and Dhanush garu in front of me. Thank you all.”
Lyricist Bhaskarbhatla said: “Greetings to all. I got the chance to write a great song for this film. The response after the release has been amazing, thanks to the sequence and context in the film. That’s why the song became a huge hit. Working with Sekhar garu was a great experience. I learned patience from him and consider it an honor to work with him. The film’s reach is growing daily, with theatres going houseful. The response is huge. Being part of such a film is delightful.”
The entire film unit attended, and the event was held grandly.
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன நிர்வாகிகள் மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை, செய்தித் துறை மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு மு.பெ. சாமிநாதன் முன்னிலையில் தலைமை செயலகத்தில் சுமூகமான முறையில் நடைபெற்றது. அடுத்த வாரமும் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.
அது சமயம் பையனூரில் திரைப்பட தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்ட , தமிழ்நாடு அரசு ஒதுக்கி உள்ள குத்தகை ஒப்பந்த அரசு ஆணையில் சில மாற்றங்கள் செய்து தர வேண்டி ,பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி அவர்கள் மாண்புமிகு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எழுதிய கோரிக்கை மனுவினை தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவரும், நடிகர் சங்க துணை தலைவருமான பூச்சி முருகன் அவர்களிடம் பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி வழங்கினார்
கலைஞர் தொலைக்காட்சியில் ஔபரப்பாகி வரும் பிரம்மாண்ட விவாத நிகழ்ச்சியான “வா தமிழா வா” ஞாயிறுதோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
மக்களின் குரலாய், மக்கள் நினைப்பதை பேசிட வாய்ப்பு வழங்க மேடை அமைத்து தரும் இந்த நிகழ்ச்சியை தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் ஆரி அர்ஜூனன் தொகுத்து வழங்குகிறார்.
சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள், பொதுமக்களின் பரவலான பேச்சு, நேர்மறை எண்ணங்கள் என மக்களின் பலவிதமான கருத்துகளை வெளிப்படுத்த உருவாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு புதிய தலைப்புடன் பல்வேறு சூழ்நிலைகளில் நடக்கும் பலதரப்பட்ட மக்களின் வாழ்வியலையும், மனதிற்கு நெருக்கமான, அன்றாடம் நாம் பார்த்து கடந்து செல்லும் நிகழ்வுகளை தலைப்புகளாக விவாதிக்க வழி வகுக்கும் இந்த நிகழ்ச்சி, அவற்றில் நிலவும் பிரச்சனைகளைக் களையவும் உதவுகிறது.
இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில், சமீபத்தில் வெளியான “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படம், ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைக் கொண்டாடும் விதத்திலும், ரசிகர்களைக் கவரும் விதத்திலும், “டிடி நெக்ஸ்ட் லெவல்” படத்தின் பேய் தீமை அடிப்படையாக வைத்து, ஒரு வித்தியாசமான புரமோ நிகழ்ச்சியை நடத்தியுள்ளது Zee5.
சந்தானம் நடிப்பில் “டிடி நெக்ஸ்ட் லெவல்” படம் Zee5 தளத்தில் வெளியான வேகத்தில், 1 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இப்படத்தை மேலும் மக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில், Zee5 ஒரு பஸ்ஸில் படத்தின் தீமை மையமாக வைத்து, படத்தின் போஸ்டர்களுடன் படத்தின் கருவை மையமாகக் கொண்ட செட் அமைக்கப்பட்டு, அதில் பேய் வேடமிட்ட ஒருவர் உலாவும் வகையில் உருவாக்கி, சென்னை முழுக்க மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் காட்சிப்படுத்தி வருகிறது.
முதல் முறையாக இந்த பஸ் மக்கள் அதிகம் புழங்கும், கிண்டி சதுக்கத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகை யாஷிகா ஆனந்த் கலந்துகொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
ரசிகர்களும், பொதுமக்களும் படத்தின் தீமில் வடிவமைக்கப்பட்ட பஸ்ஸை பார்த்து, ஆச்சரியத்தில் மூழ்கினர். பஸ்ஸை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை யாஷிகா ஆனந்த் கூறியதாவது… எங்களுடைய “டிடி நெக்ஸ்ட் லெவல்” படம், Zee5 மூலம் உலகளவில் பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது. இப்படம் வெளியான வேகத்தில் 1 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்துள்ளது மகிழ்ச்சி. எங்கள் படத்தை இன்னும் பிரபலப்படுத்தும் வகையில், Zee5 முன்னெடுத்துள்ள இந்த வித்தியாசமான புரமோசன் நிகழ்ச்சி, பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த பஸ்ஸின் வடிவமைப்பை, பார்த்து மிகுந்த ஆச்சரியப்பட்டேன். இந்நேரத்தில் எங்கள் படக்குழுவினருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். மேலும் Zee5 நிறுவனத்திற்கும் என் நன்றி. படத்திற்கு ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி.
இறந்துபோன திரைப்பட இயக்குநர் ஹிட்ச்காக் இருதயராஜ் (செல்வராகவன்) நடத்தும் ஒரு மர்மமான தனிப்பட்ட திரையிடலுக்கு, இளம் யூடுயூப் ரிவ்யூவர் கிஸ்ஸாவிற்கு அழைப்பு வருகிறது. அவனுக்குத் தெரியாமல் அவன் குடும்பம் அந்த திரையிடலுக்குச் சென்ற நிலையில், அவர்கள் படத்திற்குள் சிக்கிக்கொள்கிறார்கள். அந்த படத்திற்குள் செல்லும் கிஸ்ஸா, தன் குடும்பத்தை, தன் காதலியைக் காப்பாற்ற என்ன செய்கிறான், அதிலிருந்து எப்படித் தப்பி வெளியில் வருகிறான்? என்பது தான் இப்படத்தின் கதை. நடிகர் சந்தானம், செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் கீதிகா திவாரி நடித்துள்ள இந்தப்படம், ஜூன் மாதத்தின் மிகவும் பேசப்படும் ஓடிடி ரிலீஸாக மாறியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் ஆர்யா தனது The Show People நிறுவனம் சார்பில், இப்படத்தைத் தயாரித்துள்ளார். இயக்குநர் S. பிரேம் ஆனந்த் இப்படத்தை இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஆஃப்ரோ இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ZEE5 இல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் இப்படத்தைக் கண்டுகளிக்கலாம் !
AKB Developers & Promoters proudly presents AKB Pavilion IIT Enclave, a premium gated community spread across 6.20 acres in Thaiyur, Kelambakkam—right opposite the IIT Madras Research Campus. As AKB’s 93rd project, this development stands out for its strategic location, thoughtful planning, and investment potential.
Priced between ₹17 lakhs and ₹34 lakhs, the project offers well-laid plots from 600-1200sqft within a secure, fully developed layout featuring a 19,000+ sq. ft. exclusive park, blacktop roads, street lighting, and green spaces—designed to provide residents with a peaceful and self-contained environment.
Thaiyur has quickly emerged as an investor hotspot, driven by the IIT campus development and rapid growth along the Vandalur–Kelambakkam Road, which is considered one of South Chennai’s fastest-growing corridors. Remarkably, AKB Pavilion is priced at nearly half the rate of plots along this stretch, offering unmatched value just 5 minutes from PudupakkamAanjaneyarKoil.
With expected returns of up to 200% in the next 5–7 years, this project is poised to become one of the most sought-after residential hubs near OMR. Backed by AKB’s 36-year legacy and known for legal transparency and development quality, Pavilion IIT Enclave is not just a plot—it’s a smart investment in Chennai’s future.