“Maayakoothu”, an independent film jointly produced by Rahul Movie Makers (Rahul Deva) and Abhimanyu Creations (Prasad Ramachandran), has a unique blend of fantasy and socially conscious storytelling that highlights the responsibility of creators in a society.Written and directed by debutant A.R. Raghavendra, Maayakoothu stands out for its creative vision and technical finesse, achieved on a remarkably modest budget. Raghavendra brings over a decade of experience in short filmmaking and has previously worked under acclaimed director Bramma. His earlier work, as a story writer for the film titled “Udanpaal” , was screened at several prestigious film festivals.The cast includes veterans like Delhi Ganesh, M. Ramasamy, and Sai Dheena, along with the lead role played by actor Nagarajan and supported by emerging talents such as Pragadeeswaran, Murugan, Aishwarya, Gayathri, and Rekha.Behind the scenes, Maayaakoothu is bolstered by an expert technical team. Nagooran Ramachandran, celebrated for his editing work in Captain Miller, Don, and Saani Kaayidham, brings his precision to the film’s post-production. Cinematography is helmed by Sundar Ram Krishnan, known for his visual storytelling in Kayamai Kadakka, Super Duper, and Neetho.The soundtrack and background score, composed by Anjana Rajagopalan, a versatile musician whose original score adds emotional depth and dynamic energy to the film. The lyrics, written by Nagarajan and renowned lyricist Kaber Vasuki, complement the film’s powerful themes and vibrant tone.With final touches being made and release plans underway, Maayakoothu promises to be an evocative and thought-provoking cinematic experience that challenges conventions while entertaining audiences.
ராகுல் மூவி மேக்கர்ஸ் (ராகுல் தேவா) மற்றும் அபிமன்யு கிரியேஷன்ஸ் (பிரசாத் ராமசந்திரன்) இணைந்து தயாரித்துள்ள சுயாதீன படம் “மாயக்கூத்து”. சமூகத்தில் படைப்பாளிகளின் பொறுப்புணர்வை சுட்டிக்காட்டும் இப்படம் ஒரு கற்பனை கலந்த திரில்லர் வடிவில் உருவாகியுள்ளது. மேலும், இப்படம் சீரான பொருட்செலவில் நேர்த்தியாகவும் தரமாகவும் படைக்கப்பட்டுள்ளது. படத்தின் அனைத்து தயாரிப்பு வேலைகளும் முடிந்து, இப்போது வெளியீட்டுக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் A.R.ராகவேந்திரா எழுதி இயக்கியுள்ளார். இவர், திரைப்பட இயக்குனர் பிரம்மா அவர்களிடம் உதவியாளராகவும் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக பல குறும்படங்கள் செய்த அனுபவமும் கொண்டவர். மேலும், இவர் கதையில் உருவான “உடன்பால்” என்ற திரைப்படம் பல முக்கிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.
இப்படத்தில் முன்னணி நடிகர்களான டெல்லி கணேஷ், மு ராமசாமி மற்றும் சாய் தீனா அவர்களுடன், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் நாகராஜன் மற்றும் பல வளரும் நடிகர்களான பிரகதீஸ்வரன், முருகன், ஐஸ்வர்யா, காயத்ரி மற்றும் ரேகா நடித்திருக்கின்றனர்.
கேப்டன் மில்லர், டான் மற்றும் சாணி காயிதம் படங்களின் படத்தொகுப்பாளரான நாகூரன் ராமசந்திரன் இந்த படத்தின் படத்தொகுப்பினைச் செய்துள்ளார்.
இப்படத்திற்கு கயமை கடக்க, சூப்பர் டூப்பர் மற்றும் நீத்தோ படங்களின் ஒளிப்பதிவாளர் சுந்தர் ராம் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இசையில் பல்வேறு துறைகளிலும் வடிவங்களிலும் நிபுணத்துவம் கொண்ட அஞ்சனா ராஜகோபாலன் இப்படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார். அவரது இசைக்கு நாகராஜன் மற்றும் கேபர் வாசுகி பாடல்வரிகள் எழுதி உள்ளனர்.
தமிழகத்தின் விருப்பமான தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், தற்போது திங்கள் முதல் வெள்ளி வரை இரவு தோறும் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் “சின்ன மருமகள்” நெடுந்தொடர், மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், மக்களுடன் இணைந்து உரையாடி, அவர்களுக்கு விருந்து வைத்துக் கொண்டாடியுள்ளது விஜய் டிவி.
பெண்களை மையப்படுத்திய தமிழ் சீரியலுக்கு எப்போதுமே தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. குடும்ப பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசி, பெண் சக்தியின் பெருமையைப் பேசும் சின்ன மருமகள் தொடர், பெண்களிடம் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. அதிலும் கடந்த இரு வாரங்களாகப் பரபரப்பான கதைக்களத்தில் நகரும் இந்த சீரியல், பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைக் கொண்டாடும் ஒரு கட்டமாக, மதுரையில் ஜுன் 13 மற்றும் விருதுநகரில் ஜூன் 14 தேதிகளில் நடைபெற்ற இந்த கொண்டாட்டம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காலை பிரத்தியேகமாக, சின்ன மருமகள் சீரியல் ரசிகர்கள் 50 பேர் கலந்துகொண்டனர். பெண்களின் வாழ்க்கையில் நிகழும் நிகழ்கால பிரச்சனைகள், அவர்களுக்கு வரும் தடங்கல்கள், குடும்ப சிக்கல்கள் என சீரியலில் வருவது போலவே, தங்களின் சொந்தக் கதைகளை, குழுவினருடன் ரசிகர்கள் உணர்வுப்பூர்வமாக பகிர்ந்துகொண்டனர். சீரியல் குழுவினர் ரசிகர்களின் கதைகளைக் கேட்டு, அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து, அவர்களோடு மகிழ்வோடு உரையாடி மகிழ்ந்தனர். இந்த மொத்த நிகழ்வும் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானதாக இருந்தது.
மதியம் சின்ன மருமக்கள் தொடரின் தற்போதைய பரபரப்பான மொய் விருந்தை அடையாளப்படுத்தும் விதமாக, ரசிகர்களுக்கு அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது. ரசிகர்களுடன் படக்குழுவினரும் உணவருந்தி மகிழ்ந்தனர்.
மாலை, விஜய் டிவி சீரியல் நடிகர், நடிகையர்கள், குக் வித் கோமாளி, கலக்கப் போவது யாரு, சூப்பர் சிங்கர் முதலான விஜய் டிவி நிகழ்ச்சியின் பிரபலங்கள் அனைவரும் கலந்துகொள்ள, 4000 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் ஆடல் பாடல் நிகழ்வுகளுடன் கொண்டாட்டத் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா விஜய் டிவி ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
விஜய் டிவியின் சின்ன மருமகள் தொடர் முதலாக அனைத்து நிகழ்ச்சிகளையும், விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் கண்டு ரசியுங்கள்.
● Mr. M. K. Mohan, MLA of Anna Nagar launches the robotic system, developed by the US-based VELYS, a leader in orthopedic robotics ● CTS to use the robotic system not only for knee replacement procedures but also for other orthopedic surgeries, particularly hip replacements and partial joint reconstructions
Chennai, June 22, 2025: CTS Speciality Hospital, a trusted name in orthopedic care in Chennai, has introduced robot-assisted total knee replacement procedures at its Anna Nagar facility, becoming the only hospital in the area to offer this cutting-edge technology known for ensuring surgical precision, minimising risks, and promoting quicker, safer recovery.
The robotic system, developed by the US-based VELYS a leader in orthopedic robotics was officially launched by Mr. M. K. Mohan, MLA of Anna Nagar , in the presence of Dr. Prakash Selvam, Chairman, and Dr. Radhika Venugopal, Managing Director of CTS Speciality Hospital.
CTS Speciality Hospital is a 35-bed facility dedicated to advanced orthopedic care, led by Dr. Prakash Selvam, a seasoned orthopedic surgeon with over 20 years of clinical and surgical experience. Reputed for joint replacement and complex orthopedic procedures, the hospital has a multidisciplinary team of experts in joint replacement, arthroscopy, trauma care, sports injuries, and rehabilitation.
In his comments on the launch of robot-assisted procedure, Dr. Prakash Selvam said, “We are proud to introduce the future of orthopedic care to the people in this region with the launch of the VELYS robotic-assisted solution. While traditional knee replacement surgeries are effective, they often rely heavily on the surgeon’s skill and can vary in outcome. Robot-assisted technology enhances precision by using advanced mapping and real-time data to tailor each procedure to the patient’s unique knee anatomy. This results in more accurate implant placement, reduced tissue damage, minimal blood loss, and faster recovery. Patients benefit from improved joint alignment, greater stability, reduced pain, and better long-term mobility with a shorter hospital stay. Our strengths lie not only in surgical precision, but also in thorough pre-operative planning, personalised recovery programs, and long-term joint health management.”
CTS will not be limiting the robot-assisted surgery only to knee replacements—it will apply the technology to other orthopedic procedures, particularly hip replacements and partial joint reconstructions. “The enhanced precision of robotic systems allows for optimal implant positioning and alignment, which is critical not only in total knee arthroplasty but also in complex hip surgeries, including total hip replacements and revisions. Looking ahead, we are planning to expand robotic applications to include procedures such as unicompartmental (partial) knee replacements, shoulder arthroplasty, and even spine surgeries, based on patient suitability and future technological advancements,” he added.
On the significance of the surgeon’s expertise in robot-assisted surgery, Dr. Prakash Selvam said, “While robot-assisted technology enhances precision and consistency in knee surgeries, human expertise remains absolutely essential for successful outcomes. Robots are valuable tools—they assist with preoperative planning, ensure accurate bone cuts, and help align implants with sub-millimeter accuracy. However, it is the surgeon who makes critical decisions in real time, guided by the patient’s anatomy, joint condition, and overall health. Every patient presents unique challenges that demand clinical judgment, adaptability, and experience—qualities no machine can replicate. From selecting the appropriate implant to managing unexpected intraoperative findings, it is the surgeon’s skill that ensures the technology delivers its full potential.”
சி.டி.எஸ் சிறப்பு மருத்துவமனையில் ரோபோடிக் முழங்கால் அறுவை சிகிச்சை மற்றும் மூட்டு பராமரிப்பில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.. .
● அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் M.K.மோகன் அவர்களால் அமெரிக்காவின் VELYS நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட எலும்பியல் ரோபோடிக் மூட்டு அறுவை சிகிச்சை இயந்திரத்தை அறிமுகம் செய்யப்பட்டது… ● இந்த ரோபோடிக் இயந்திரம் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்கு மட்டுமல்லாமல், பிற எலும்பியல் அறுவை சிகிச்சைகளுக்கும், குறிப்பாக இடுப்பு மாற்று மற்றும் மூட்டு மறுசீரமைப்புகளுக்கும் ரோபோடிக் அமைப்பைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை, ஜூன் 22, 2025: சென்னையில் எலும்பியல் அறுவை சிகிச்சை மற்றும் மூட்டு பராமரிப்பில் மக்களின் நம்பிக்கை பெற்ற மருத்துவமனை சி.டி.எஸ் சிறப்பு மருத்துவமனை, தற்போது அண்ணா நகரில் ரோபோடிக் உதவியுடன் முழுமையான முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை அறிமுகம் செய்துள்ளது. இப்பகுதியில் இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்ட ஒரே மருத்துவமனையாக சி.டி.எஸ் சிறப்பு மருத்துவமனை விளங்குகிறது. இந்த ரோபோடிக் அதிநவீனத்துவம் வாய்ந்தது என்பதனால் அறுவை சிகிச்சையின் துல்லியத்தை உறுதி செய்கிறது, அபாயங்களைக் குறைக்கிறது மற்றும் விரைவான பாதுகாப்பான அறுவை சிகிச்சைக்கு வழிவகுக்கிறது.
அமெரிக்காவின் VELYS என்கிற முன்னணி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ரோபோடிக் இயந்திரத்தை, அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் M.K. மோகன் , சி.டி.எஸ் சிறப்பு மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.பிரகாஷ் செல்வம் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் ராதிகா வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.
சி.டி.எஸ் சிறப்பு மருத்துவமனையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சையில் அனுபவமுள்ள எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரகாஷ் செல்வம் தலைமையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, ஆர்த்ரோஸ்கோபி, விபத்தில் சிக்கியவருகளுக்கு மூட்டு அறுவை சிகிச்சை, விளையாட்டு வீரர்களின் காயங்கள் மற்றும் மறுவாழ்வு போன்ற பலத்துறை நிபுணர்களின் அணி இயங்குகிறது. அதுமட்டுமில்லாமல் எலும்பியல் பராமரிப்புக்காக 35 சிறப்பு படுக்கைகள் கொண்ட முன்னணி எலும்பியல் பராமரிப்பு மையமும் இதுதான்.
ரோபோடிக் உதவியுடன் முழங்கால் அறுவை சிகிச்சையைப் பற்றி எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரகாஷ் செல்வம் கூறியதாவது: மக்களுக்கான மூட்டு அறுவை சிகிச்சை மற்றும் எலும்புகள் பராமரிப்பின் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்வது அல்லது அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். VELYS ரோபோடிக் இயந்திரத்தின் அறுவை சிகிச்சை என்பது ஒரு துல்லியமான அறுவை சிகிச்சை இதனால் திசுக்களின் சேதத்தைக் குறைக்கிறது, இரத்த இழப்பைக் குறைக்கிறது மற்றும் நோயாளிகள் மூட்டு பிரச்சனையிலிருந்து அதிவிரைவில் சரியாவதற்கு பயன்படுகிறது. அறுவை சிகிச்சைகள் மருத்துவரின் திறமையை சார்ந்து இருக்கும் ஆனால், ரோபோடிக் தொழில்நுட்பம் மேம்பட்ட மேப்பிங் மற்றும் நிகழ்நேர தரவுகளைப் பயன்படுத்தி, ஒவ்வொரு நோயாளியின் தனித்துவமான எலும்புகளின் அமைப்பிற்கு ஏற்றவாறு அறுவை சிகிச்சையைத் தனித்துவம் ஆகிறது. இதனால் நோயாளிகளின் எலும்புகள் மற்றும் மூட்டு சிறந்த முறையில் சீரமைப்பு செய்யப்படுகிறது, அதோடு சேர்த்து நோயாளிகளுக்கு வலியும். நமது பலம், அறுவை சிகிச்சையின் துல்லியம் மட்டுமல்லாமல், முழுமையான முன்-அறுவை திட்டமிடல், தனிப்பட்ட திட்டங்கள் மற்றும் நீண்ட கால மூட்டு ஆரோக்கிய பராமரிப்பு ஆகியவற்றிலும் உள்ளது
CTS சிறப்பு மருத்துவமனை, ரோபோடிக் அறுவை சிகிச்சையை முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு மட்டுமல்லாமல், இடுப்பு மாற்று மற்றும் மூட்டு மறுகட்டமைப்பு போன்ற பிற மூட்டு அறுவை சிகிச்சைகளுக்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. ரோபோடிக் உயர்தர துல்லியம், முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமல்லாமல், சிக்கலான இடுப்பு அறுவை சிகிச்சைகள் மற்றும் மறுபரிசீலனை அறுவை சிகிச்சைகளுக்கும் உகந்தது. எதிர்காலத்தில், தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப, ஒற்றைப் பகுதி முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை, தோள்பட்டை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சைகளுக்கும் ரோபோடிக் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த திட்டமிடுகிறோம் என்றார் அவர்.
ரோபோடிக் அறுவை சிகிச்சையில் மருத்துவரின் நிபுணத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து டாக்டர் பிரகாஷ் செல்வம் கூறினார்: ரோபோடிக் தொழில்நுட்பம் முழங்கால் அறுவை சிகிச்சையின் துல்லியத்தையும் நிலைத்தன்மையையும் மேம்படுத்துகிறது. ஆனால், வெற்றிகரமான முடிவுகளுக்கு மனித நிபுணத்துவம் இன்றியமையாதது. ரோபோட்கள் முன்-அறுவை திட்டமிடல், துல்லியமான எலும்பு வெட்டுகள் மற்றும் பொருத்துவது மில்லிமீட்டர் துல்லியத்தில் சீரமைக்க உதவுகின்றன. ஆனால், நோயாளியின் உடல் அமைப்பு, மூட்டு நிலை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு முக்கியமான முடிவுகளை எடுப்பது மருத்துவரே. ஒவ்வொரு நோயாளியும் தனித்துவமான சவால்களைக் முன் வைக்கின்றனர். இவற்றை சமாளிக்கும் திறன், உடனடி முடிவெடுக்கும் திறன் மற்றும் அனுபவம் ஆகியவை எந்த இயந்திரத்தாலும் மாற்ற முடியாதவை. பொருத்தமான உள்வைப்பைத் தேர்ந்தெடுப்பதில் இருந்து எதிர்பாராத உள்-அறுவை சிகிச்சை கண்டுபிடிப்புகளை நிர்வகிப்பது வரை, தொழில்நுட்பம் அதன் முழு திறனையும் வழங்குவதை உறுதி செய்வது அறுவை சிகிச்சை நிபுணர்களின் திறமையாகும்.
கன்னியாகுமரி, ஜூன். 22: 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்புவதால் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முதல்வராக வருவார் என கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் 51வது பிறந்தநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி விஜய்யின் முன்னாள் மேனேஜரும், கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பி.டி.செல்வகுமார் குமரி, நெல்லை மாவட்டங்களில் 51 ஊர்களில் 51 பெண்களுக்கு ஆடுகள், 51 பெண்களுக்கு தையல் மெஷின், 51 மாணவிகளுக்கு ஐபேட் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது நாட்டை நல்ல பாதையில் கொண்டு செல்லும் தலைவர்கள் இல்லை. அமைதியான, வளர்ச்சியான தமிழகத்தை உருவாக்க விஜய் முதலமைச்சராக வர வேண்டும். அவர் ஆட்சிக்கு வந்தால் நேர்மையான பாதையில் நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவார்.ஜாதி, மதத்தால், மொழியால் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடித்து நல்லாட்சியை மலர வைப்பார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என பேசினார்.
முன்னதாக, ரஸ்தாகாடு, மணக்குடி, ஆரோக்கியபுரம், பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி உள்ளிட்ட 51 ஊர்களுக்கு நேரடியாக சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
In Kubera, Shekar Kammula steps into a more politically charged narrative than his usual social entertainers, crafting a story that tackles the divide between the haves and have-nots with bold ambition. This is a story about exploitation, capitalism, and morality, where power games orchestrated by the elite trickle down to impact the lives of society’s most invisible: beggars.
Jim Sarbh’s Neeraj, an industrialist with a dangerous scheme, sets the chain in motion. Enter Nagarjuna’s Deepak, an ex-CBI officer tasked with enlisting beggars for a shady financial operation. The emotional anchor is Dhanush’s Deva, a man from the streets whose transformation turns the tables and questions the very structure of the operation.
Dhanush delivers a searing performance—grounded, nuanced, and fully immersed—without lapsing into stereotype. Nagarjuna’s understated portrayal of moral conflict balances Dhanush’s arc with gravitas and subtlety. Their chemistry keeps the film afloat even when the script meanders.
Devi Sri Prasad’s score toggles effectively between intensity and intimacy, while Niketh Bommireddy’s cinematography captures urban contrasts with visual honesty.
However, Kubera is weighed down by its own ambition. The screenplay juggles too many threads—scam, social message, individual arcs—and ends up diluting the impact. Kammula’s signature observational finesse gets lost in overt moralising and scattered focus, especially in the second half.
Still, Kubera stands out in a sea of commercial cinema for daring to centre its narrative on the underrepresented and for trying to question systemic inequalities. It’s not flawless, but it’s brave—and that makes it a conversation-starter.
Verdict: ⭐️⭐️⭐️☆ (3.5/5) A thought-provoking yet imperfect film that raises pertinent questions about class, money, and morality—buoyed by powerful performances from Dhanush and Nagarjuna.
AK பிரேவ்மேன் பிக்சர்ஸ் வழங்கும் பீனிக்ஸ் திரைப்படம் மூலம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகிறார். ஆக்ஷன் கதைக்களத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் பீனிக்ஸ் திரைப்படம் வருகிற ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது.
பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் பீனிக்ஸ் திரைப்படத்தில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., ஒளிப்பதிவு வேல்ராஜ் மற்றும் படத்தொகுப்பு பிரவீன் கே.எல். என முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி உள்ளனர். அதிரடி சண்டை காட்சிகள் மட்டுமின்றி இந்தப் படத்தில் எமோஷனல் கதையம்சமும் கொண்டிருக்கிறது.
கதாநாயகனாக இது முதல் திரைப்படம் என்றாலும் ஏற்கனவே நானும் ரௌடி தான் மற்றும் சிந்துபாத் போன்ற படங்களில் சூர்யா நடித்துள்ளார். எனினும், பீனிக்ஸ் திரைப்படம் மூலம் அவர் படம் முழுக்க வரும் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் அவர் தன்னை முழுநேர நடிகராக பரிணமித்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
தற்போது பீனிக்ஸ் படத்தின் இரண்டாவது பாடல், “இந்தா வாங்கிக்கோ” இன்று வெளியாகி இருக்கிறது. பண்டிகை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த குத்துப் பாடலுக்கு சாம் சி.எஸ். இசையமைக்க, பாபா பாஸ்கர் நடன ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தப் பாடலுக்காக வேல்ராஜ் பதிவு செய்துள்ள காட்சிகளில் சூர்யாவின் நடனம் ஏற்கனவே இணையத்தில் பாராட்டை பெற்று வருகிறது.
தனது மகனை பெரிய திரையில் அறிமுகமாக தன் தரப்பு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், இந்தப் பாடலை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
பலம் பொருந்திய தொழில்நுட்ப குழுவுடன் ஹீரோவாக அறிமுகமாகும் சூர்யா சேதுபதி தனது பெயர் மட்டுமின்றி கதையம்சத்திலும் உறுதியான நோக்கத்துடன் களமிறங்குகிறார். பீனிக்ஸ் மூலம் அறிமுகம் மட்டுமின்றி தமிழ் திரையுலகின் நம்பிக்கைக்குரிய நாயகனாக வலம் வர இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல தரமான படங்களைத் தயாரித்து, தனக்கென தனி இடத்தைப் பெற்றுள்ள பெற்ற ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்தப் பிரமாண்ட படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. இதுவரை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எடுத்துள்ள புகழ்பெற்ற படங்களின் வரிசையில் மிக அதிக பொருட் செலவில் உருவாகும் திரைப்படம் ‘கருப்பு’.
அதேபோல், சிறிய அளவிலான ஆனால் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய படங்களை இயக்கிய ஆர்.ஜே. பாலாஜி, ‘கருப்பு’ படத்தின் மூலம் பட்ஜெட், திட்டமிடல் மற்றும் மிகப்பெரிய நடிகர் பட்டாளம் என அவரும் ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார்.
சூர்யா மற்றும் த்ரிஷா இணை இருபது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜோடி சேரும் படம் ‘கருப்பு’. அவர்களின் முந்தைய படங்களை ஒப்பிடும்போது, இத்திரைப்படத்தில் இருவருமே முற்றிலும் புதிய, வித்தியாசமான கதாபாத்திரங்களி தோன்றவுள்ளார்கள். முதல் பார்வை, டீசர், மற்றும் ட்ரெய்லர் ஆகியவை அடுத்தடுத்த இடைவெளியில் வெளியாகவுள்ளன. அவை ரசிகர்களும், திரைப்பட விரும்பிகளுக்கும் தெளிவானப் புரிதலைக் கொடுக்கும். இந்திரன்ஸ், நட்டி, ஸ்வாஸிகா, அனகா மாயா ரவி, ஷிவதா மற்றும் சுப்ரீத் ரெட்டி உள்ளிட்ட பல நடிகர்கள் மற்றும் அனுபவமிக்க கலைஞர்களின் பட்டாளம் திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.
சாய் அபயங்கர் இசையமைக்க, பல மகத்தான திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவை கையாள்கிறார். கலைவாணன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். விக்ரம் மோர் மற்றும் அன்பறிவு இரட்டையர்கள் என மூன்று சண்டைப் பயிற்சிக் கலைஞர்களும் தங்கள் அற்புதமான சண்டைக் காட்சிகளுக்காக நாடு முழுவதும் பாராட்டுகளைப் பெற்றவர்கள். இவர்கள் மூவரும் ‘கருப்பு’ திரைப்படத்தில் உயர்தர சண்டைக் காட்சிகளை அதிரடியாக வடிவமைத்துள்ளனர். விருது பெற்ற தயாரிப்பு வடிவமைப்பாளர் அருண் வெஞ்சரமூடு இந்தப் பிரமாண்டப் படத்திற்காக மிகப்பெரிய அரங்குகளை வடிவமைத்துள்ளார்.
‘கருப்பு’ திரைப்படத்தின் படப்பிடிப்பை பொருத்தவரை ஒரு சில நாட்கள் மட்டுமே மீதமுள்ளது. ஒரே நேரத்தில் இறுதி கட்ட வேலைகளையும் படக்குழு கவனித்து வருகிறது. தயாரிப்பாளர்கள் ஏற்கனவெ தெரிவித்தபடி, ‘கருப்பு’ ஒரு பண்டிகை நாள் கொண்டாட்டத்துக்கான திரைப்படமாக கச்சிதமாக இருக்கும். எனவே, வெளியீட்டு தேதி மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் மற்ற ஆச்சரிய அறிவிப்புகள் என்னவாக இருக்கும் என்று யூகித்துக் கொண்டிருங்கள். உங்களுக்காக ஒரு உயர்தர பொழுதுபோக்கு விருந்து தயாராகி வருகிறது!
Yash Raj Films’ War 2, directed by Ayan Mukerji, is the most awaited film of 2025. The massive pan-India action spectacle produced by Aditya Chopra, is the sixth film from the fabled YRF Spy Universe franchise, that has only delivered blockbusters. Ayan reveals how he focussed entirely on crafting the storyline of War 2 because he wanted a conflict that was big enough to pit two icons of Indian cinema, Hrithik Roshan against NTR.
Ayan says, “It is a huge responsibility to take forward a hugely loved franchise like War and leave your own mark on it. I saw directing War 2 as a relishing opportunity to give a hat-tip to the first film. You can’t have fun otherwise while coming on board such a huge blockbuster franchise. One has to take what has been set and then make the fans of the film and the fans of these gigantic superstars of our country go on a journey that is new, that hopefully leaves them hungry for more. As a director, I have to be honest, I immersed myself into delivering this feeling.”
He adds, “Everything about War 2 has been crafted with a lot of planning to elevate the theatrical experience of the audience. The maximum time spent was on the action set pieces and crafting the storyline and the conflict which was needed to mount the face off between Hrithik Roshan and NTR.”
Ayan calls War 2 a film that celebrates the might of Indian cinema as it brings Hrithik and NTR together for a jaw-dropping, adrenaline pumping theatrical experience like no other.
The director says, “War 2 is truly the coming together of Indian cinema with these two huge actors joining forces. We were aware of the expectations this pairing would set in the minds of their fans and the audience and every second was spent thinking of how to give them an experience of a lifetime when they sit in the theatres.”
War 2 is scheduled to hit theatres worldwide on August 14, 2025.
‘வார் 2வில் ஹ்ரித்திக் ரோஷன் & ஜூனியர் என்டிஆர் இடையிலான மோதலுக்கான சரியான கதைக்களத்தை உருவாக்குவதற்கு அதிக நேரம் தேவைப்பட்டது ‘- அயன் முகர்ஜி
யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் வார் 2 .இப்படம் இந்தாண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது.ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் YRF ஸ்பை யுனிவர்சலில் இது ஆறாவது படமாகும். இந்திய சினிமாவின் இரண்டு முக்கிய நடிகர்களான ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இருவரையும் மோத வைப்பதற்காக கதைக்களத்தை வார் 2 படத்தில் வடிவமைப்பதில், தான் எவ்வாறு முழுமையாக கவனம் செலுத்தினார் என்பதை அயன் முகர்ஜி கூறியுள்ளார் .
அயன் முகர்ஜி கூறுகையில் , “வார் 2 போன்ற மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு படத்தை முன்னெடுத்துச் சென்று அதில் என் சொந்த முத்திரையைப் பதிப்பது ஒரு பெரிய பொறுப்பு. வார் 2 படத்தை இயக்குவதை நான் முதல் படத்திற்கு ஒரு மரியாதை செலுத்தும் வாய்ப்பாகப் பார்த்தேன். இல்லையெனில், இவ்வளவு பெரிய வெற்றி பெற்ற உரிமையை ஏற்க முடியாது . மிகப்பெரிய பிளாக்பஸ்டர் தொடருடன் இணையும் போது நீங்கள் விளையாட்டு தனமாக இருக்க முடியாது. ஒருவர் ஏற்கனவே உருவாக்கிய படத்தை எடுத்துக்கொண்டு, பின்னர் அந்த படத்தின் ரசிகர்களையும், நம் நாட்டின் இந்த பிரம்மாண்டமான சூப்பர் ஸ்டார்களின் ரசிகர்களையும் ஒரு புதிய பயணத்தில் செல்ல வைக்க வேண்டும்,ஒரு இயக்குநராக, நேர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்த உணர்வை வழங்குவதற்காக நான் முழுமையாக என்னை அர்ப்பணித்தேன்.”
அவர் மேலும் கூறுகையில் , “வார் 2 படத்தின் அனைத்து பார்வையாளர்களின் திரையரங்க அனுபவத்தை உயர்த்துவதற்காக நிறைய திட்டமிடலுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் காட்சிகளை உருவாக்குவதிலும், கதைக்களத்தையும் மோதலையும் வடிவமைப்பதிலும் அதிக நேரம் செலவிடப்பட்டது.இது ஹ்ரித்திக் ரோஷனுக்கும், என்.டி.ஆருக்கும் இடையேயான மோதலை உருவாக்குவதற்கு தேவையாக இருந்தது.”
வார் 2 இந்திய சினிமாவின் வலிமையைக் கொண்டாடும் ஒரு படம். ஏனெனில் இப்படம் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆரை வேறு எந்த படத்திலும் இல்லாத அளவுக்கு ஒரு அற்புதமான தியேட்டர் அனுவத்தை ரசிகர்களுக்கு தர காத்திருக்கிறது.
இந்த இரண்டு பெரிய நடிகர்களும் இந்திய சினிமாவிற்காக ஒன்றினைந்து நடித்துள்ளனர் . இதனால் அவர்களின் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களின் மனதில் என்ன மாதிரியான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம் . மேலும் ரசிகர்கள் திரையரங்குகளில் அமர்ந்திருக்கும்போது அவர்களுக்கு நல்ல திரை அனுபவத்தை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து ஒவ்வொரு நொடியும் யோசித்துக்கொண்டிருக்கிறோம் .” என இவ்வாறு தெரிவித்துள்ளார் .
வார் 2 படம் இந்தாண்டு வருகின்ற ஆகஸ்ட் 14, 2025 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது .
New Monk Pictures சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில், ஓர் இரவில் நடக்கும் காமெடி, கலந்த உணர்வுப்பூர்வமான, சமூக படைப்பாக உருவாகியுள்ள படம் “குட் டே”. ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்….
நடிகர் கலை இயக்குநர் விஜய் முருகன் பேசியதாவது… இந்தப்படம் மிகச் சுவாரஸ்யமான படம், மிக நல்ல கதை. படம் பார்த்து விட்டேன் பிரித்திவி மிக அழகாகச் செய்துள்ளார். ஒரு இரவில் நடக்கும் கதை.உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி.
ஜீவா சுப்பிரமணியம் பேசியதாவது… இந்தப்படத்தில் எனக்கு வித்தியாசமான கதாப்பாத்திரம். இதுவரைக்கும் சேலை கட்டிக்கொண்டு நடித்திருக்கிறேன், ஆனால் இதில் எனக்கு வித்தியாசமாக போலீஸ் உடை தந்தார்கள். ஆடிசனில் எனக்கு போலீஸ் டிரெஸ் தந்தார்கள், எங்கே என்னை தேர்ந்தெடுக்க மாட்டார்களோ என நினைத்தேன், என் மேல் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. படப்பிடிப்பில் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். எனக்கு வித்தியாசமான கதாப்பாத்திரம் தந்த இந்த “குட் டே” படக்குழுவிற்கு நன்றி. சிவகார்த்திகேயன் அண்ணா சூப்பர்ஸ்டார் எல்லாம் இப்போது வரும் படங்களுக்கு ஆதரவு தருகிறீர்கள், அதுபோல எங்கள் படத்தையும் பார்த்து ஆதரவு தாருங்கள். நீங்கள் தரும் ஆதரவு மிகப்பெரிது. அனைவருக்கும் நன்றி.
ஒளிப்பதிவாளர் எடிட்டர் மதன் குணாதேவ் பேசியதாவது… எல்லாருக்கும் வணக்கம். குட் டே. இந்தப்படம் , ஒரு ஒரு இரவில் நடக்கும் கதை. அதனால் முழுக்க இரவில் தான் ஷூட் செய்தோம். இந்த டீமில் அனைவருமே நண்பர்கள் தான். எல்லோரும் எங்களால் முடிந்த அளவு சிறப்பாகச் செய்துள்ளோம். வரும் 27 ஆம் தேதி படம் வெளியாகிறது அனைவரும் ஆதரவு தாருங்கள்.
திரைக்கதை எழுத்தாளர் பூர்ணா ஜே.எஸ். மைக்கேல் பேசியதாவது… இது மூன்று வருடம் கஷ்டபட்டு செய்த படம், அனைவரும் நண்பர்கள், எல்லோரும் சிறப்பாக உழைத்துள்ளோம். ரொம்ப பெரிய படம் இல்லை. ரொம்ப சின்ன படம். ஆனால் ரொம்ப அழகான படம். பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா அவரோட கதையை ஒரு முறை சொன்னார். அதிலிருந்து உருவானது தான் இந்த ஒன்லைன். இந்தப்படம் என்டர்டைனும் பண்ணும். உங்களை எங்கேஜும் பண்ணும். இந்தப்படத்தில் புதிதாக ஒன்றை முயற்சி செய்துள்ளோம். இன்டர் கட் இல்லாமல் முழுப்படத்தை சொல்ல முயற்சி செய்துள்ளோம். முதல் ஒரு ரெண்டு நிமிஷம் மட்டும்தான் இன்டர் கட் இருக்கும். அதன் பிறகு முழுக்க கட் ஆகாது. கேமரா ஒரு கேரக்டரை ஃபாலோ செய்யும். இது ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும். இந்தக்கதை குடி மட்டும் கிடையாது. அந்த குடியால பல மனநிலைகள் பல வாரியா பல அடுக்குகளா மாறும். அந்த மாதிரியான ஒரு பல அடுக்குகள் கொண்ட ஒரு கதாபாத்திரம்தான் இந்த கதையில் இருக்கிற சாந்தகுமார். எழுத்துக்கு வாய்ப்பளித்த என்னுடைய ப்ரொடியூசர் என்னோட டைரக்டர் இருவருக்கும் நன்றி. படத்தை அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது… இது என்னுடைய வாழ்வில் நடந்த, கடந்த கால கதை, அன்பால் என்னை இதிலிருந்து மீட்டு கொண்டு வந்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி. அண்ணன் பாலாஜி தரணிதரன் மற்றும் ராஜுமுருகன் ஆகியோர் என் வாழ்வில் முக்கியமானவர்கள். இருவருக்கும் நன்றி. கோவிந்த் வசந்தா இப்படத்தில் அற்புதமான பாடல்கள் தந்துள்ளார். இந்த திரைப்படம் வெறும் குடியை மட்டும் பேசுவதில்லை, குடி ஒரு பக்கம் குற்ற உணர்வையும், இன்னொரு பக்கம் அச்சத்தையும் தரும். இது இரண்டும் பின்னிப் பிணைந்த நம்ம சமூகமே, கில்ட் மேனியக் சொசைட்டி தான். இந்த சமூகத்தில் ஒருவன் எப்படி குடிகாரனா மாறுகிறான் என்பதற்கு, நிறைய நிறையக் காரணங்கள் உண்டு. அப்படி ஒரு காரணத்தில் போய் வீழ்ந்தவன்தான் நானும். ஒரு 20 வருடம் போதைக்குள்ளேயே உழன்று மயக்கத்தில் எல்லாத்தையும் செய்து, அப்படியே இருந்தவன்தான். ஒருவன் குடிகாரனா மாற சமூக கட்டமைப்பு ஒரு காரணமா இருக்கிறது. கடுமையான பொருளாதார ஏற்ற தாழ்வுகள், ஒரு பக்கம், பணம் போய்க்கொண்டே இருக்கிறது, ஒரு பக்கம் பணம் இல்லை. ஆனால் அதே உழைப்புதான் எல்லோராலும் போடப்படுகிறது. ஆனால் பணம் வரலை எனும் போது, கிடைக்கக்கூடிய அந்த ஏமாற்றம் மனிதனை போதைக்குள் தள்ளுகிறது. அந்த விரக்தியை வெளிப்படுத்த முடியாமல், அப்படி வீழ்த்தப்பட்டவர்களில் நானும் ஒருத்தன். சலிப்புணர்வு மற்றொரு முக்கிய காரணம் இன்று எல்லாருமே போதை நோக்கி ஓடிட்டு இருக்கிறோம். இந்த சலிப்புணர்வை எதிர்கொள்ள முடியாமல் இருக்கிறதுதான் காரணம். அப்படி ஒரு குடிகாரனின் வாழ்க்கையை நெருங்கி பேசுகிறது இந்தப்படம். அதிலும் இந்த திரைக்கதை பின்னப்பட்ட விதம் ஆச்சரியம் தருகிறது. இயக்குநர் அரவிந்த் அவர்களுக்கும் கதாசிரியர் மைக்கேலுக்கும் என்னுடைய மிகப்பெரிய நன்றி. வெறுமனே ஒரு கொண்டாட்டமான ஒரு படமா இல்லாமல், குடியை நியாயப்படுத்தவும் செய்யாமல், இது தப்பு அப்படிங்கிறதை ரொம்ப ஆணித்தரமாக சொல்லி, ஆனால் அவன் குடிக்கப் போனதுக்கான காரணம் அவன் மட்டும் கிடையாது, பல பேர் இருக்கிறார்கள் அப்படிங்கறதையும் இந்த படத்தில் சொல்லியிருக்கிறார்கள். இந்த படம் பார்க்கும்போது மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கிறது. இந்த மாதிரியான நிறையப் படங்கள் வரவேண்டும். பெரிய கதை இது ஒரு நாள் இரவு நடக்கறதுனால அந்த இரவுக்குள்ள என்னென்ன சொல்ல முடியுமோ அதைச் சொல்லியுள்ளார்கள். இந்த படம் வெற்றி அடைந்து பொருளாதார ரீதியாகத் தயாரிப்பாளர் நல்ல லாபம் அடைய வேண்டும். இந்தப்படம் எல்லோருக்கும் வெற்றியைத் தரட்டும். அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் அரவிந்தன் பேசியதாவது… இந்த படத்தில் வேலை செய்த அனைத்து கலைஞர்களுக்கு என் நன்றி. அவர்களால் தான் இந்தப்படம் சாத்தியமானது. பிரித்விராஜ், கார்த்தி அண்ணா, மதன் குணதேவ அண்ணா, பூர்ணா, முக்கியமா எங்கள் கோவிந்த் வசந்தா ஆகியோருக்கு என் நன்றிகள். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
இயக்குநர் பாலாஜி தரணிதரன் பேசியதாவது… எல்லாருக்கும் வணக்கம். குட் டே டீம்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் படம் பார்த்து விட்டேன். மிக அருமையான படம். கார்த்திக் நேதா அண்ணா என்ன சொன்னாரோ அதையே தான் நானும் உணர்ந்தேன். இந்த படம் போதையைப் போற்றி பேசுவதில்லை. போதையிலிருக்கும் ஒருவரின் வலியும், அவரைச் சுற்றியவர்களின் துயரங்களும் பற்றியது. படம் பார்த்ததும், எனக்கு “It’s a Wonderful Life” னு ஒரு பழைய ஆங்கில படம் நினைவுக்கு வந்தது. ஒரே நாளில் நடக்கிற கதையாக இருந்தாலும், அதுக்குள்ள அந்த உணர்வின் ஆழம் இருந்தது. படத்தின் இயக்கம், திரைக்கதை, இசை எல்லாமே அருமை. “மின்மினிய ராசாத்தி” பாடல் உண்மையிலேயே நெகிழ வைத்தது. நல்ல படங்கள் ஓடும் – இந்த படமும் நிச்சயமாக ஓடும். நன்றி.
கலை இயக்குநர் சங்கர் பேசியதாவது… அனைவருக்கும் வணக்கம். “குட் டே” என்னுடைய இரண்டாவது படம். இப்படத்திற்கு உரிய கதைக்களம் உருவாக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என்பது மிகுந்த மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பாளர் பிரித்திவி அண்ணா, மற்றும் இயக்குநர் அரவிந்தன் பிரதர், இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. படத்தில் வேலை செய்த அனைத்து குழுவினருக்கும் நன்றிகள்.
இயக்குநர் ராஜுமுருகன் பேசியதாவது… “இந்த படம், ஒரு குடிகாரனின் வாழ்க்கையை ‘glorify’ செய்வதற்கல்ல. குடிக்குப் பின்னால் இருக்கும் சமூக, உளவியல், பொருளாதார வேர்கள் என்னவென்று கேட்கும் படம். எனக்கும் அந்த அனுபவம் இருந்ததால்தான் இதன் அழுத்தம் புரிகிறது. நாகராஜனுடைய ஒரு சிறுகதையை படித்த மாதிரி, வைக்கம் பஷீருடைய அந்த உலகத்துக்குள்ள போய்விட்டு வந்த மாதிரி ஒரு உணர்வை இந்த படம் கொடுத்தது. விஜய் மல்லையாவின் ஒரு வீடியோவைப் பார்த்து குடியை விட்டுள்ளேன் நான். இது போன்ற படங்கள் தான் அந்த அனுபவங்களை மீண்டும் நினைவூட்டுகின்றன. “போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் – அது தவிர்க்க முடியாத சமூக அழுத்தங்களால் உருவாகிறது. இந்த படம் அந்த உண்மையை மிக அழகாகச் சொல்கிறது,” படம் பார்ப்பவர்களில் ஒரே ஒரு இதயத்தையாவது மாற்றக்கூடிய படம்தான் பெரிய படம். இந்த படமும் அந்த வகையிலான படம் தான் .” கார்த்திக் நேதா ஒரு அழகான கவிஞர். கோவிந்த வசந்தா இசை – படம் முழுக்க ஆன்மாவாக இயங்குகிறது. இந்த படத்தில் பணியாற்றிய எல்லோரும் மிகச் சிறந்த பணியைச் செய்திருக்கிறார்கள்,” அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
ட்ரீம் வாரியர்ஸ் குகன் பேசியதாவது… ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் புதிய திரைப்படமான “குட் டே”, தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான பரிமாணத்தை உருவாக்க இருக்கிறது. புதிய இளைஞர்களின் கூட்டு முயற்சியாக உருவாகியுள்ள இப்படம், மனிதர்களின் மன அழுத்தம், குடிப்பழக்கத்தின் சமூகப் பின்னணி, மற்றும் வாழ்க்கையின் அர்த்தம் என மிக ஆழமான கருத்துகளுடன் நகர்கிறது. “இந்தப் படம் புதுமையை, இன்ஸ்டிங்க்ட்டை, உணர்வை, சமூக விழிப்புணர்வை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடித்துள்ள பிரித்விராஜ், தனது கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். இவருடைய நடிப்பைத் தமிழ் சினிமா கண்டிப்பாக அங்கீகரிக்கும்.” “திருப்பூர் – வேலைவாய்ப்புக்காகப் பலரும் நகரும் நகரம். அந்த நகரம் எவ்வாறு ஒரு சாதாரண மனிதனை மன அழுத்தத்திற்குள்ளாகி, அவனை புதிய வழி தேட வைக்கிறது என்பதே இந்த படத்தின் கதை. இது, ஒரு மனிதனின் ஆதங்கம் மற்றும் தேடலைச் சொல்லும் அழகான திரைப்படம்.” “தற்கொலை எண்ணங்களைத் தூண்டும் சமூக அழுத்தங்களை இந்த படம் நுணுக்கமாகப் பேசுகிறது. மனநல மருத்துவர்களும் சொல்லும் மூன்று முக்கிய காரணங்களை இந்தக் கதையில் காணலாம்.”கோவிந்த வசந்தா மற்றும் கார்த்திக் நேதா படத்திற்கு மிக அருமையான இசை மற்றும் வரிகள் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுடைய பங்களிப்பு இத்திரைப்படத்தின் ஆன்மாவாக உள்ளது. இந்த திரைப்படம், உங்கள் அனைவரது நண்பர்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்கக்கூடியது. இளைய தலைமுறை மட்டுமல்லாது, எல்லா தரப்பினருக்கும் ரிலேட்டாகக்கூடிய படம். ஜூன் 27ஆம் தேதி திரைக்கு வரவுள்ள ‘குட் டே’ படத்திற்கு உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டுகிறோம் நன்றி.
Virat Karrna, Abhishek Nama, Kishore Annapureddy, NIK Studios, Abhishek Pictures, Pan India Film NAGABANDHAM Song Shoot On 1000 Dancers In Anantha Padmanabha Swamy Temple Set, Choreography By Ganesh Acharya
Young hero Virat Karrna is coming up with a Pan-India film Nagabandham, directed by the passionate filmmaker Abhishek Nama, and produced by Kishore Annapureddy under NIK Studios, in collaboration with Abhishek Pictures. Lakshmi Ira and Devansh Nama proudly present it. The pre-look, followed by the first look received a superb response. Virat Karrna transformed himself completely for the character and his gym pictures where he appeared in beast avatar showed his dedication for the movie.
The shoot of the movie is progressing smoothly. Presently, the makers are canning a crucial sequence and also a song in a massive set, against the backdrop of a gigantic replica of the Anantha Padmanabha Swamy Temple, ambitiously crafted by production designer Ashok Kumar. Constructed with astonishing attention to detail, the set has left both the crew and visiting media awestruck, with many calling it a near-perfect recreation of the original temple in Kerala.
This song features 1000 dancers moving in unison alongside Virat Karrna, supervised by Bollywood popular choreographer Ganesh Acharya. The combination of ancient aesthetics, modern filmmaking, and explosive dance energy is expected to deliver a sequence that will be remembered for years.
With a whopping 10 crore budget dedicated to this single episode, Nagabandham is positioning itself as a visual spectacle. The producers are leaving no stone unturned to deliver grandeur on par with pan-Indian epics.
The movie features an impressive ensemble cast such as Nabha Natesh and Iswarya Menon as female leads, and Jagapathi Babu, Jayaprakash, Murali Sharma, and B.S. Avinash in supporting roles.
The movie explores the hidden secrets of India’s ancient Vishnu temples, specifically focusing on the sacred practice of Nagabandham. Inspired by recent treasure discoveries at temples like Padmanabhaswamy and Puri Jagannath, the story dives into the captivating mythology surrounding these divine locations and the enigmatic rituals designed to safeguard them. The film brings these age-old mysteries to life with a fresh, modern narrative.
The cinematography is handled by Soundar Rajan S, while Abhe juned provides the music. The film’s dialogues are written by Kalyan Chakravarthy, with Santosh Kamireddy handling the editing. Ashok Kumar contributes is the art director.
Nagabandham will be released in Telugu, Hindi, Tamil, Kannada, and Malayalam languages.
Technical Crew: Banner : NIK Studios & Abhishek Pictures Lakshmi Ira & Devansh Presents Story, Screenplay & Director: Abhishek Nama Producer: Kishore Annapureddy Director of photography: Soundar Rajan S Music: Abhe Juinad u Ceo: Vasu Potini Production Designer: Ashok Kumar Dialogues: Kalyan Chakravarthy Editor: RC Panav Costume Designer: Aswin Rajesh Executive Producer: Abhinethry Jakkal Action: Venkat, Vlad Rimburg Script Development: Shra1,Rajiv n Krishna Vfx: Thunder Studios Vfx Supervisor: Dev Babu Gandi (Bujji) Pro : Yuvraaj Publicity Designs: Kaani Studio
கவனம் ஈர்க்கும் ‘நாக பந்தம்’ படத்திற்கான பிரமாண்டமான அரங்கம்
விராட் கர்ணா, அபிஷேக் நாமா, கிஷோர் அன்னபுரெட்டி, NIK ஸ்டுடியோஸ், அபிஷேக் பிக்சர்ஸ், பான் இந்தியா திரைப்படமான “நாகபந்தம்” படத்தின் பாடல் ஆயிரம் நடன கலைஞர்கள் பங்கேற்க ஆனந்த பத்மநாப ஸ்வாமி கோவில் பிரம்மாண்ட செட்டில் கணேஷ் ஆச்சார்யா நடன அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
இளம் ஹீரோ விராட் கர்ணா, இந்த பான் இந்திய திரைப்படமான நாகபந்தத்தில் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் அபிஷேக் நாமா இயக்குகிறார். அபிஷேக் பிக்சர்ஸுடன் இணைந்து NIK ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் கிஷோர் அன்னபுரெட்டி இப்படத்தை தயாரிக்கிறார். லட்சுமி இரா மற்றும் தேவன்ஷ் நாமா ஆகியோர் பெருமையுடன் இப்படத்தை வழங்குகிறார்கள். படத்தின் முன்னோட்டம், அதைத் தொடர்ந்து வந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விராட் கர்ணா இந்த கதாபாத்திரத்திற்காக தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டுள்ளார். அதிரடி அவதாரத்தில் தோன்றிய அவரது ஜிம் படங்கள் படத்திற்கான அவரது அர்ப்பணிப்பைக் காட்டுகின்றது.
படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. தற்போது, தயாரிப்பாளர்கள் ஒரு முக்கியமான காட்சியையும் ஒரு பாடலையும் பிரம்மாண்டமான அரங்கில் படமாக்கி வருகின்றனர். அனந்த பத்மநாப சுவாமி கோயிலின் மிக பிரம்மாண்டமான செட்டை, கலை இயக்குநர் அசோக் குமார் இந்த பாடலுக்காக வடிவமைத்துள்ளார். வியக்கத்தக்க வகையில் சிறு சிறு கூர்மையான விவரங்களில், கவனம் செலுத்தி கட்டப்பட்டுள்ள இந்த அரங்கம், குழுவினரையும், ஊடகங்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பலர் இதை கேரளாவில் உள்ள அசல் கோயிலின் அட்டகாசமான மறு உருவாக்கம் என்று பாராட்டி வருகின்றனர்.
பாலிவுட்டின் பிரபல நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா நடன அமைப்பில், விராட் கர்ணாவுடன் இணைந்து 1000 நடனக் கலைஞர்கள் இணைந்து நடனமாடும் இந்தப் பாடல், பண்டைய அழகியல், நவீன திரைப்பட உருவாக்கம் மற்றும் அட்டகாசமான நடன அமைப்பு என பல ஆண்டுகளாக நினைவில் இருக்கும் ஒரு காட்சி அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாக பந்தம் படத்தில் வரும் இந்த ஒரு எபிசோடிற்காக 10 கோடி ரூபாய் பட்ஜெட் செலவிடப்பட்டுள்ளது. மக்கள் மனதில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் ஒரு அற்புதமான அனுபவமாக இப்படத்தை உருவாக்குவதற்காகவும், அகில இந்திய காவியங்களுக்கு இணையான பிரமாண்டத்தை வழங்கவும் தயாரிப்பாளர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
“நாகபந்தம்” படத்தில் நபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர், மேலும் ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா மற்றும் பி.எஸ். அவினாஷ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
பத்மநாபசுவாமி மற்றும் பூரி ஜகந்நாதர் கோயில்களில் மறைந்துள்ள, பொக்கிஷங்களின் சமீபத்திய கண்டுபிடிப்புகளின் உத்வேகத்தில், ஆன்மீக மற்றும் சாகசக் கருப்பொருள்களுடன், ஒரு அழுத்தமான ஸ்கிரிப்டை அபிஷேக் நாமா எழுதியுள்ளார். நாகபந்தம் இந்தியாவில் உள்ள 108 விஷ்ணு கோயில்களைச் சுற்றியுள்ள வரலாற்று மர்மத்தை ஆராய்கிறது, இந்த புனித தலங்களைப் பாதுகாக்கும் நாகபந்தத்தின் பண்டைய சடங்குகளை மையமாகக் கொண்டு, நவீன வடிவில் இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு சௌந்தர் ராஜன் எஸ் ஒளிப்பதிவு செய்கிறார், அபே இசையமைக்கிறார். கல்யாண் சக்ரவர்த்தி வசனம் எழுதியுள்ளார், சந்தோஷ் காமிரெட்டி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். அசோக் குமார் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.
“நாக பந்தம்” 2025 ஆம் ஆண்டில் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில், பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ளது.
நடிகர்கள்: விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா, பி.எஸ்.அவினாஷ் மற்றும் பலர்
தொழில்நுட்பக் குழு: பேனர்: NIK ஸ்டுடியோஸ் & அபிஷேக் பிக்சர்ஸ் லட்சுமி ஐரா & தேவன்ஷ் வழங்குகிறார்கள் கதை, திரைக்கதை & இயக்கம் : அபிஷேக் நாமா தயாரிப்பாளர்: கிஷோர் அன்னபுரெட்டி ஒளிப்பதிவு இயக்குனர்: சௌந்தர் ராஜன் எஸ் இசை: அபே ஜுனைத் U நிர்வாக அதிகாரி: வாசு பொதினி தயாரிப்பு வடிவமைப்பாளர்: அசோக் குமார் வசனங்கள்: கல்யாண் சக்ரவர்த்தி எடிட்டர்: ஆர்சி பனவ் ஆடை வடிவமைப்பாளர்: அஸ்வின் ராஜேஷ் நிர்வாக தயாரிப்பாளர்: அபிநேத்ரி ஜக்கல் ஸ்டண்ட் : வெங்கட், விளாட் ரிம்பர்க் ஸ்கிரிப்ட் டெவலப்மெண்ட்: ஷ்ரா1, ராஜீவ் N கிருஷ்ணா Vfx: தண்டர் ஸ்டுடியோஸ் Vfx மேற்பார்வையாளர்: தேவ் பாபு காந்தி (புஜ்ஜி) விளம்பர வடிவமைப்புகள்: கானி ஸ்டுடியோ மக்கள் தொடர்பு : யுவராஜ்