- Advertisement -
Home Blog Page 170

2 வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் மஹிபால் சிங்!

0

சென்னையில் வெற்றிகரமாக நடந்து முடிந்த 2 வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி!

2வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி, சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள லெட்ஸ் பவுல் டென்பின் பவுலிங் மையத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் இறுதிப் போட்டி கடந்த ஜூன் 18 ஆம் தேதி நடைபெற்றது. இதில் மஹிபால் சிங் – விஷ்ணு.எம் மோதினார்கள்.

பரபரப்பான இப்போட்டியில் மஹிபால் சிங் தன்னை எதிர்த்து போட்டியிட்ட விஷ்ணுவை (2-0) வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். மூன்று போட்டிகளில் சிறந்த பின்பால்கள் அடிப்படையில் நடத்தப்பட்ட இறுதிப் போட்டியில் மஹிபால் சிங் நேரடி போட்டிகளில் விஷ்ணுவை (225-217 & 202-180) என்ற பின்பால்கள் அடிப்படையில் வீழ்த்தினார்.

முன்னதாக, மூன்று போட்டிகளில் முன்னிலை பெற்றதன் அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட முதல் அரையிறுதியில் விஷ்ணு, ஷபீர் தன்கோட்டை 2-1 (182-157, 168-199 & 204-203) என்ற பின்பால்கள் அடிப்படையில் தோற்கடித்தார். இரண்டாவது அரையிறுதியில், மஹிபால் சிங் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஹரிநாராயணன்.பி-யை 2-0 (189-158 & 203-137) என்ற பின்பால்கள் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

விஷ்ணு.எம் 187.17 சராசரியுடன் 2246 பின்பால்களுடன் 2வது சுற்றுக்குப் பிறகு பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். அவருக்கு அடுத்தபடியாக மஹிபால் சிங் (பின்பால் – 2224, சராசரி – 185.33) இரண்டாம் இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு பரிசுகள்:

6 ஆட்டங்களில் அதிகபட்ச சராசரி : விஷ்ணு.எம் (201.83)
ஒரு ஆட்டத்தில் அதிகபட்ச ஸ்கோர் : விஷ்ணு.எம்(268)

2nd Tamil Nadu State Ranking Tenpin Bowling Tournament
LetsBowl, Thoraipakkam, Chennai
Mahipal wins title
Mahipal Singh defeated Vishnu M (2-0), in the finals of the 2nd Tamil Nadu State Ranking Tenpin
Bowling Tournament 2025 which concluded at LetsBowl, Thoraipakkam, Chennai today 18th
June 2025.
In the finals played based on the best of three games, Mahipal defeated Vishnu in straight games
(225-217 & 202-180).
Earlier in the day, in the first Semi-Final played based on the best of three games format Vishnu
defeated Shabbir Dhankot 2-1 (182-157, 168-199 & 204-203). In the second Semi-Final, Mahipal
marched into the finals by trouncing Harinarayanan P 2-0 (189-158 & 203-137)
Vishnu M finished on top of the table after Round 2 with a pinfall 2246 at an average of 187.17
followed by Mahipal Singh (Pinfall – 2224, Average – 185.33).
Special Prizes:
Highest Average in 6 Game Block: Vishnu M (201.83)
Highest Score in a Single Game: Vishnu M (268)
Thanking You
Best Regards
Ragini Muralidharan
President
TNTBA

பான் இந்தியா ரிலீஸுக்குத் தயாராகும் சயின்ஸ் கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ’கைமேரா’

0

நடித்த கதாபாத்திர பாதிப்பில் இருந்து மீள முடியாமல் மருத்துவ சிகிச்சை பெற்று மீண்ட ‘கைமேரா’ படத்தின் ஹீரோ

பரமு, செல்பிஷ் படங்களை இயக்கிய மாணிக் ஜெய்.N இயக்கத்தில் மூன்றாவதாக உருவாகியுள்ள படம் ‘கைமேரா’.

‘வச்சுக்கவா’ படத்தில் கதாநாயகனாக நடித்த இவர் ‘பரமு’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராக மாறினார்.

தற்போது தமிழ் மற்றும் கன்னட மொழியில் உருவாகி வரும் செல்பிஷ் என்கிற படத்தை இயக்கி நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கைமேரா என்கிற படத்தை தயாரித்து, இயக்கி முடித்துள்ளார் மாணிக் ஜெய்.

இத்திரைப்படத்தில் அறிமுக நாயகனாக LNT எத்திஷ் நடிக்கிறார்.. மாறுபட்ட வேடங்களில் தாரை கிருஷ்ணன், ரஞ்சித் குமார் மற்றும் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் மாணிக் ஜெய் நடித்துள்ளனர்..

கதையின் நாயகிகளாக சௌமியா, கிருஷ்ண நந்து, ஞானேஸ்வரி உள்ளிட்ட மூன்று பேர் நடித்திருக்கின்றனர்..

மனித உடம்புக்குள் மிருகங்களின் செல்கள் புகுத்தப்பட்டால், மனிதனின் குணம் மிருகக் குணமாக மாறினால் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது.

மிருகங்களுக்குள்ளேயே வேறு மிருகங்களின் செல்கள் புகுத்தப்பட்டு அதன் குணாதிசயங்கள் எவ்விதம் மாறுபட்டு இருக்கின்றன என்பதை ஆய்வுகள் சொல்கின்றன. அதை மையப்படுத்தித் தான் ‘கைமேரா’ என டைட்டில் வைத்துள்ளோம்.

கைமேரா என்பது மராத்திய மொழி வார்த்தை. இதை மனோ ராஜ்ஜியம் (மரபணுக்கள் மாற்றம்) என சொல்லலாம்.

பெங்களூருவைச் சுற்றி நிகழும் கதைக்களம் என்பதால் கர்நாடகாவில் பெங்களூர், ஹம்பி, இங்கே ஓசூர், ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

படத்தின் நாயகன் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்ததால் படப்பிடிப்பு முடிந்த கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகி அதிலிருந்து வெளிவர முடியாமல் தவித்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு பின்னரே அதிலிருந்து மீண்டார்..

படம் பற்றி இயக்குநர் மாணிக் ஜெய் கூறும்போது, “சயின்டிஃபிக் கிரைம் திரில்லர் படம் இது. ஒரு மனிதனின் உடம்புக்குள் மிருகத்தின் செல்களை புகுத்தினால் என்கிற புதிய கோணத்தில் யாரும் சொல்லாத ஒரு கதையாக புது அனுபவமாக இருக்கும். சஸ்பென்ஸ் பிரியர்களுக்கு ஒரு யூகிக்க முடியாத கதையாக இது இருக்கும் அதேசமயம் படம் முழுவதிலும் நகைச்சுவைக்கு குறைவில்லாமலும் அதேசமயம் குடும்பப்பாங்கான கதையம்சம் கொண்ட படமாகவும் இருக்கும்.. ரியலிஸ்டிக்காக இருக்க வேண்டும் என்பதற்காக, இந்த படத்திற்கு புதுமுகங்களை மட்டுமே நடிக்க வைத்துள்ளோம்..

இந்தப் படத்தை எந்த மொழியில் பார்த்தாலும் அவர்களுக்காகவே எடுக்கப்பட்ட படம் போலவே இருக்கும்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக இது ரிலீஸாக இருக்கிறது.

இதில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளன. உன்னி கிருஷ்ணன், சத்யபிரகாஷ், பிரசன்னா,. அனுராதா பட், மானஸா ஹொல்லா மற்றும் அந்தந்த மொழிகளில் பிரபலமான பாடகர்கள் பாடியுள்ளனர்.

குறிப்பாக பிரபல பாடகி அனுராதா பட்டுக்கு இந்த படத்தின் பாடல்கள் பிடித்துப்போனதால் எல்லா மொழியிலும் நானே பாடுவேன் என விரும்பி கேட்டு ஒரு பாடலை ஐந்து மொழிகளிலும் பாடியுள்ளார்.

தற்போது சென்சாருக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதையடுத்து அனைத்து மொழிகளிலும் இதற்கான புரமோஷன் பணிகள் துவங்கப்பட இருக்கின்றது, விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது” என்று கூறினார்..

தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்

தயாரிப்பு ; ஜெய் ருத்ரா பிக்சர்ஸ் / மாணிக் ஜெய்.N

இயக்கம் ; மாணிக் ஜெய், N

ஒளிப்பதிவு ; வினோத்

படத்தொகுப்பு ; நவீன்

இசை ; விக்னேஷ்ராஜா

ஸ்டண்ட் ; synt சூரி

மக்கள் தொடர்பு ; A.ஜான்

Grand Trailer Launch of “Charukesi” – A Powerful Tale Comes to the Big Screen

0

The trailer launch event of Charukesi was held in Chennai with great fanfare, marking a momentous occasion for Tamil cinema. The film features legendary actor Y.Gee. Mahendra in a pivotal role and boasts a stellar ensemble cast that includes Sathyaraj, Samuthirakani, Suhasini Mani Ratnam, Thalaivasal Vijay, Ramya Pandian, Raj Ayyappan, Madhumathi, Livingston, Jayaprakash, and many more.

Charukesi is produced by Arun R. and directed by acclaimed filmmaker Suresh Krissna, who has also penned the screenplay. With lyrics and dialogues by Pa. Vijay and music composed by Thenisai Thendral Deva, the film promises a deeply emotional and thought-provoking cinematic experience.

At the grand trailer launch, several cast and crew members were present and shared their thoughts and heartfelt experiences associated with the film. Notably, actor Sathyaraj addressed the gathering through a special video message due to his absence at the event.

In his message, Actor Sathyaraj said,
“Director Suresh Krissna called me one day and explained the role I was to play in Charukesi. I instantly agreed, simply because of who he is. Every dialogue written by Pa. Vijay was powerful and meaningful. I’m confident Y.Gee. Mahendra sir will win a National Award for his performance in this film. Thalaivasal Vijay has played a remarkable supporting role—so much so that if I had known about that character earlier, I might have asked to do it myself! Films today are evolving—audiences are embracing stories like Tourist Family, Maman, and Madras Matinee. Charukesi is another such film with an impactful narrative.”

Musician Shankar Mahadevan, also through a video message, expressed regret for not being able to attend the event in person.
“My heartfelt wishes to director Suresh Krissna, composer Deva sir, and Y.Gee. Mahendra sir. Among today’s releases, Charukesi will definitely stand out. Congratulations to the entire team!”

Actor Mohanlal, too, conveyed his wishes through a video, saying,
“It’s unfortunate I couldn’t be there. I hope Charukesi reaches a wide audience and becomes a grand success. Best wishes to everyone involved.”

Actress Madhuvanthi Arun, speaking on stage, said,
“It’s an emotional moment for me—as both a daughter and a mother. A stage play has transformed into a full-fledged film, and that passion for theatre I inherited from my father. He acted in many iconic films with Rajini sir and Kamal sir. I’m delighted that Charukesi is directed by Suresh Krissna, who made Baashha, and composed by Deva sir, who has given soul-stirring music here. This film features three generations—my father, myself, and my son Ritwik, who debuts in this film and has even sung a song. Please watch Charukesi in theatres and support us.”

Actor Thalaivasal Vijay stated,
“This is a landmark film in my career. Acting alongside Y.G. Mahendran sir was an honour. Thank you, Suresh Krissna sir, for giving me this opportunity. Charukesi will certainly leave a lasting impression on audiences.”

Actor Samuthirakani shared,
“Watching the Charukesi stage play made me feel a sense of responsibility. It inspired me to do good. The film industry never abandons those who live with integrity—Y.G. Mahendran sir is proof of that. He is an inspiration to me.”

Actor Jayaprakash said,
“I played a small but significant role in this film. It was a great honour to be directed by Suresh Krissna sir. He lets his work speak louder than his words. My sincere wishes for the film’s success.”

Actress Suhasini Mani Ratnam remarked,
“Everyone on this stage has played a key role in my life. After a long time, I’ve come across a film with such strong dialogues—thanks to Pa. Vijay. Y.Gee. Mahendra sir has helped me immensely. I’ve watched the Charukesi play twice. He’s a legend on stage. Acting under Suresh Krissna’s direction has been a joy. This film makes you reflect on life.”

Actress Ramya Pandian added,
“I’m extremely grateful to Suresh Krissna sir for this opportunity. This film reminds us to value our relationships. After my first shoot, Krissna sir personally appreciated me—it boosted my confidence. Being directed by the man who directed Rajini sir is a lifetime honour.”

Music Composer Deva shared,
“Across all languages—Tamil, Telugu, Malayalam—Suresh Krissna sir gave me my biggest opportunities. I’ve worked with Y.G. Mahendran sir for 45 years. He and Suhasini ma’am have lived their characters in this film. Pa. Vijay’s lyrics are extraordinary. Kudos to producer Arun for taking this story from stage to screen.”

Lyricist Pa. Vijay said,
“Some films are done for money, some for career growth—but a few films bring true emotional satisfaction. Charukesi is one of them. I owe my recognition to Deva sir. I’m thankful to Y.Gee. Mahendra sir for giving me this chance after 22 years of collaboration.”

Director Suresh Krissna recounted,
“My heartfelt thanks to Rajinikanth sir, who insisted that this stage play be made into a film. I approached Y.G. Mahendran sir after watching it, unaware that Rajini sir had told him the same earlier. Arun sir said he would produce it only if I directed. Turning a play into a film is tough—I wrote the screenplay in two days and signed Deva sir for music immediately. I believe Shankar Mahadevan will win a National Award for the song. Sathyaraj was moved to tears after watching the film. Ramya Pandian is one of the pillars of this project. And none of this would be possible without Y.G. Mahendran sir, who has astounded us all with his performance and memory at 75.”

Finally, veteran actor Y.G. Mahendran shared his emotional words:
“At 75, to get such a role is a blessing. Thank you to Arun for producing this film and Suresh Krissna sir for directing it with such finesse. Every actor came forward willingly to be part of this film. Deva sir insisted on being involved after watching the play. Suhasini and Thalaivasal Vijay have delivered excellent performances. After a long time, we have a Tamil film without violence and bloodshed. Pa. Vijay’s dialogues are brilliant. When people walk out of the theatre after watching Charukesi, they’ll feel truly fulfilled. Rajini sir has long been a mentor to me—my thanks to him. More than money, the people we earn in this journey matter most.”

CAST:
Y.Gee. Mahendran
Sathyaraj
Samuthirakani
Suhasini Mani Ratnam
Thalaivasal Vijay
Ramya Pandian
Raj Ayyappan
Madhuvanthi
Livingston
Jayaprakash

CREW:
Produced by: Arun Visualz
Story: Venkat
Screenplay & Direction: Suresh Krissna
Music: Deva
Cinematographer: Sanjay Loknath
Editor: S. Richard
Art Director: Vasudevan
Choreographers: Kala, Ashok Raja, Swarna
Lyrics & Dialogues: Pa. Vijay
Sound Engineer: Sharan
Sound Design & Mix: Lakshminarayanan A.S. (S Design)
PRO: Riaz K Ahmed, Paras Riyaz

சாருகேசி படத்தில் ஒய் ஜீ மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி மணிரத்னம், தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி, லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். அருண் ஆர் இந்த படத்தை தயாரிக்க, சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். பாடல்கள் மற்றும் வசனம் பா. விஜய் எழுத, தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ளார். சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

சாருகேசி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சத்யராஜ் நேரில் வர முடியாத காரணத்தால் வீடியோ பதிவின் மூலம் அனைவரிடமும் பேசியிருந்தார். சத்யராஜ் பேசும்போது,” அனைவருக்கும் வணக்கம். ஒருநாள் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா எனக்கு தொலைபேசி மூலம் அழைத்து சாருகேசி படத்தில் நான் நடிக்கும் கதாபாத்திரம் பற்றி விவரித்தார். நான் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா என்ற உடன் நடிக்க சம்மதித்து விட்டேன். பா விஜய் சிறப்பான வசனம் எழுதி உள்ளார். ஒவ்வொரு வசனமும் சிறப்பாக இருந்தது. இந்த படத்திற்கு கண்டிப்பா ஒய் ஜி மகேந்திரன் சாருக்கு தேசிய விருது கிடைக்கும். இன்னொரு முக்கியமான துணை கதாபாத்திரத்தில் தலைவாசல் விஜய் நடித்திருக்கிறார். சுரேஷ் கிருஷ்ணா சார் முன்பே அந்த கதாபாத்திரத்தை பற்றி சொல்லியிருந்தால் நான் அதில் நடிக்கிறேன் என்று சொல்லி இருப்பேன். அப்படி ஒரு சிறந்த கதாபாத்திரம் அது. அதிகமான ஹீரோயிசம் இருந்தால் தான் படம் வெற்றி அடையும் என்ற நிலை மாறி டூரிஸ்ட் ஃபேமிலி, மாமன், மெட்ராஸ் மேட்னி போன்ற படங்கள் மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படம் ஓஹோ என்று வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்று பேசினார்.

வீடியோ வடிவில் பேசிய சங்கர் மகாதேவன், சாருகேசி படத்தின் விழாவில் கலந்து கொள்ள முடியாதது வருத்தம் அளிக்கிறது. இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கும், தேனிசை தென்றல் தேவா அவர்களுக்கும், ஒய் ஜி மகேந்திரன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தற்போது வெளியாகும் படங்களுக்கு மத்தியில் சாருகேசி படம் நிச்சயம் உங்களை கவரும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று பேசினார்.

வீடியோ வடிவில் பேசிய மோகன்லால், “சாருகேசி படத்தின் விழாவில் கலந்து கொள்ள முடியாதது வருத்தம் அளிக்கிறது. இந்தப் படம் அனைவரிடமும் சென்று மிகப் பெரிய வெற்றி அடைய வேண்டும். படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று பேசினார்.

மதுவந்தி அருண் பேசும் போது, “இந்த மேடையில் நிற்பது ஒரு மகளாகவும், ஒரு அம்மாவாகவும் எனக்கு பெருமை சேர்க்கிறது. ஒரு மேடை நாடகம் சினிமாவாக மாறி உள்ளது. மேடை நாடகத்தின் மீது எனது தந்தைக்கு உள்ள ஆர்வம் தான் எனக்கும் வந்துள்ளது. ரஜினி சார் மற்றும் கமல் சார் உடன் அந்த காலத்தில் நிறைய படங்களில் எனது தந்தை நடித்துள்ளார். பாட்ஷா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா சார் சாருகேசி படத்தை இயக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. தேவா சார் இந்த படத்திற்கு அற்புதமான இசையை கொடுத்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு அவர் எவ்வளவு பெரிய இசையமைப்பாளர் என்று அனைவரும் புரிந்து கொள்வீர்கள். தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் மூன்று தலைமுறை நடித்துள்ளது இந்த படத்தில் தான். நானும், எனது தந்தையும் நடித்துள்ளோம். என்னுடைய மகன் ரித்விக் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறான். ஒரு பாடலும் பாடியுள்ளார். இந்த படத்தை அனைவரும் கண்டிப்பாக திரையரங்கில் பார்த்து பாராட்டவும். அனைவருக்கும் நன்றி” என்று பேசினார்.

நடிகர் தலைவாசல் விஜய் பேசும்போது, “என்னுடைய வாழ்க்கையில் முக்கியமான படம் இது. ஒய் ஜி மகேந்திரன் அவர்களுடன் நடித்தது மிகவும் பெருமையாக உள்ளது. எனக்கு இந்த கதாபாத்திரத்தை கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி. நிச்சயம் சாருகேசி படம் மிகப்பெரிய வெற்றியடையும். படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது அனைவருக்கும் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று பேசினார்.

நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, “சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது. இந்த நாடகம் பார்த்ததும் அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று தோன்றியது. வாழ்க்கையில் ஒழுக்கமாக இருப்பவர்களை சினிமா என்றும் கைவிடாது. அதற்கு எடுத்துக்காட்டு ஒய் ஜி மகேந்திரன் சார், அவர் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். நேரத்திற்கு மரியாதை கொடுப்பவர். எனது குரு பாலச்சந்தர் சாருக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சாருகேசி படத்தை அனைவரும் குடும்பமாக சென்று பார்க்க வேண்டும்” என்று பேசினார்.

நடிகர் ஜெயபிரகாஷ் பேசும்போது, “இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி. அவரது இயக்கத்தில் நான் நடித்தேன் என்பது எனக்கு மிகப்பெரிய கௌரவம். அவர் இயக்கிய படங்களை பார்த்தால் அவர் யார் என்று புரியும், ஆனால் அதனை காட்டிக் கொள்ளாமல் இருப்பார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்” என்று பேசினார்.

நடிகை சுகாசினி பேசும்போது, “மேடையில் உள்ள அனைவரும் எனது வாழ்க்கையில் முக்கியமானவர்களாக இருந்திருக்கின்றனர். நீண்ட நாட்கள் கழித்து சாருகேசி படத்தில் தான் நல்ல வசனங்கள் இடம் பெற்றுள்ளது. அதற்கு பா விஜய் அவர்களுக்கு நன்றி. எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார் ஒய் ஜி மகேந்திரன் அவர்கள். சாருகேசி நாடகத்தை நான் இரண்டு முறை பார்த்து உள்ளேன். மேடை நாடகத்தை பொறுத்தவரை ஒய் ஜி மகேந்திரன் அவர்கள் ஒரு ஜாம்பவான். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. சாருகேசி படம் வாழ்க்கையைப் பற்றி யோசிக்க வைத்தது. படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள்” என்று பேசினார்.

நடிகை ரம்யா பாண்டியன் பேசும்போது, “இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி. இந்த படம் பார்த்துட்டு அனைவரும் உறவுகளை மதிப்பார்கள். முதல் நாள் படப்பிடிப்பு முடிந்த பிறகு சுரேஷ் கிருஷ்ணா சார் வந்து என்னை பாராட்டினார், அது எனக்கு மிகவும் ஊக்கத்தை கொடுத்தது. ரஜினி சாரை இயக்கிய ஒருவர் என்னை வைத்து இயக்குவது எனக்கு வாழ்நாள் சாதனையாக இருந்தது. படப்பிடிப்பு முழுவதும் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஒய் ஜி மகேந்திரன் சார், சுகாசினி மேடம் அவர்களுடன் நடித்தது பெருமையாக இருந்தது. அனைவருக்கும் நன்றி” என்று பேசினார்.

தேனிசை தென்றல் தேவா பேசும்போது, “தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் உள்ள சூப்பர் ஸ்டார் படங்களுக்கு இசையமைத்துள்ளேன். இவை அனைத்திலும் எனது வாய்ப்பு கொடுத்தவர் சுரேஷ் கிருஷ்ணா அவர்கள். ஒய் ஜி மகேந்திரன் சாருடன் 45 வருடமாக பயணித்துக் கொண்டிருக்கிறேன். ஒய் ஜி மகேந்திரன் சார் மற்றும் சுகாசினி மேடம் இந்த படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். இருவரும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர். இந்த படத்தில் பாடல்களுக்கு பா. விஜய் அவர்கள் சிறப்பான வரிகளை எழுதி இருக்கிறார், அவருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள். இந்த நாடகத்தை ஒரு படமாக மாற்ற நினைக்க தயாரிப்பாளர் அருண் அவர்களுக்கு பாராட்டுக்கள். அனைவரும் மிகவும் ரசித்து இந்த படத்தை எடுத்துள்ளனர். இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்” என்றார்.

பா விஜய் பேசும்போது, “சில படங்கள் பணத்திற்காக வேலை செய்வோம், சில படங்கள் நம்மளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்பதற்காக வேலை செய்வோம், ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே நமது மனதிற்கு நிறைவாக இருக்கும். அப்படி ஒரு படம் தான் சாருகேசி. எனக்கு அங்கீகாரம் வாங்கி கொடுத்தவர் இசையமைப்பாளர் தேவா அவர்கள் தான். மீண்டும் அவருடன் பணிபுரிவது மகிழ்ச்சியாக உள்ளது. 22 வருடமாக ஒய் ஜி மகேந்திரன் சாருடன் பணிபுரிந்து வருகிறேன். சாருகேசி படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த ஒய் ஜி மகேந்திரன் சாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பேசும் போது, “ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி. ரஜினி சார் இந்த நாடகத்தை பார்த்து பலமுறை ஒய் ஜி மகேந்திரன் அவர்களிடம் சொல்லி இருக்கிறார், இந்த நாடகத்தை படமாக எடுங்கள் என்று. நான் இந்த நாடகத்தை முதல் முறை பார்த்து விட்டு ஒய் ஜி மகேந்திரன் சாரிடம் சென்று இந்த கதையை படமாக எடுங்கள் என்று சொன்னேன். ஆனால் எனக்கு ரஜினி சார் இப்படி ஏற்கனவே சொல்லி இருக்கிறார் என்று தெரியாது. தயாரிப்பாளர் அருண் அவர்கள் நீங்கள் இந்த படத்தை இயக்கினால், நான் தயாரிக்கிறேன் என்று சொன்னார். நாடகத்தை படமாக மாற்றுவது மிகவும் கடினம். சாருகேசி நாடகத்தைப் பார்த்ததும் இரண்டு நாட்களில் திரைக்கதை எழுதி விட்டேன், இசையமைப்பாளராக தேவா அவர்களை கமிட் செய்தோம்.

இந்த படத்தில் பாடல் பாடிய சங்கர் மகாதேவன் அவர்களுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும். தேவா அவர்கள் இசையமைக்க, அடுத்த நிமிடமே பாடல் வரிகளை எழுதிக் கொடுத்தார் பா விஜய். அதே போல வசனமும் சிறப்பாக எழுதியுள்ளார். பா விஜய்யை சமுத்திரக்கனி, சத்யராஜ் என அனைவரும் பாராட்டினர். சத்யராஜ் அவர்கள் முதல் முறையாக ஒரு படத்தை பார்த்து அழுதது இதுதான் என்று நினைக்கிறேன். தலைவாசல் விஜய் சிறப்பாக நடித்துள்ளார். ரம்யா பாண்டியன் நடிப்பை அனைவரும் பாராட்டினர். இந்த படத்திற்கு ஒரு முக்கிய தூணாகவும் மாறி உள்ளார் ரம்யா. ஒய் ஜி மகேந்திரன் அவர்கள் இல்லை என்றால் சாருகேசி என்ற படமே இல்லை. நாடகத்திற்கும், சினிமாவிற்கும் வித்தியாசத்தை புரிந்து கொண்டு சிறப்பான நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார். 75 வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பாக ஞாபக சக்தியுடன் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. அனைவருக்கும் நன்றி” என்று பேசினார்.

ஒய் ஜி மகேந்திரன் பேசும்போது, “அனைவருக்கும் வணக்கம். எனது 75 வயதில் இப்படி ஒரு கதாபாத்திரம் எனக்கு கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி, இந்த படத்தை தயாரிக்க முன் வந்த அருண் அவர்களுக்கு நன்றி. சுரேஷ் கிருஷ்ணா போன்ற இயக்குனர் கிடைப்பது வரம், இன்றைய இளம் இயக்குனர்களுக்கு மத்தியில் சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் இந்த படத்தை சிறப்பாக எடுத்துக் கொடுத்துள்ளார். இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் கேட்டு கேட்டு இந்த படத்திற்குள் வந்துள்ளனர். சாருகேசி நாடகத்தை பார்த்துவிட்டு இந்த படத்தில் நான் இருக்க வேண்டும் என்று தேவா கேட்டு வாங்கினார். சுகாசினி அவர்கள் ஒரு சிறப்பான நடிப்பை படத்தில் கொடுத்துள்ளார்.

அதேபோல தலைவாசல் விஜய் நன்றாக நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் கத்தி, ரத்தம் இன்றி வரும் படம் சாருகேசி. பா. விஜய் இந்த படத்தில் அற்புதமாக வசனம் எழுதியுள்ளார். சாருகேசி படம் முடிந்து அனைவரும் வெளியே வரும் போது மனதிற்கு நிறைவாக இருக்கும். ரஜினிகாந்த் சார் நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஆலோசராக இருந்து வருகிறார், அவருக்கு மிகப்பெரிய நன்றி. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகள். நானும் சுரேஷ் கிருஷ்ணாவும் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் பணம் சம்பாதித்தோம் என்பதை விட, இத்தனை மனிதர்களை சம்பாதித்துள்ளோம் என்பது தான் பெருமை. படத்தின் வெற்றியுடன் மீண்டும் ஒருமுறை சந்திப்போம், அனைவருக்கும் நன்றி” என்று பேசினார்.

நடிகர்கள்: ஒய் ஜீ மகேந்திரன், சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி மணிரத்னம், தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி, லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர்

தயாரிப்பு: அருண் .ஆர்

திரைக்கதை மற்றும் இயக்கம்: சுரேஷ் கிருஷ்ணா

புகைப்பட இயக்குனர்: சஞ்சய் லோக்நாத்

எடிட்டர்: எஸ் ரிச்சர்ட்

கலை இயக்குனர்: வாசுதேவன்

நடனம்: கலா, அசோக் ராஜா, ஸ்வர்ணா

பாடல்கள் & வசனம்: பா. விஜய்

இசை : தேனிசை தென்றல் தேவா

ஒலி பொறியாளர் – சரண்

ஒலி வடிவமைப்பு & மிக்ஸ் பொறியாளர் : லட்சுமிநாராயண் ஏ எஸ் (எஸ். டிசைன்)

பதிப்பாளர்: டி. பாஸ்

டி.ஐ. ஸ்டுடியோ : ரீல் பாய்ஸ்

வண்ண கலைஞர் – சண்முக பாண்டியன்

கன்ஃபார்மிஸ்ட் – எஸ். சந்தோஷ் குமார்

தலைப்பு அனிமேஷன் மற்றும் VFX : வான் கோ ஸ்டுடியோஸ்

இணை இயக்குநர்கள் : சுகி மூர்த்வ். விஜய் பாஸ்கர் ரிச்சர்ட் எஸ்

நிர்வாகத் தயாரிப்பாளர்: கவின் கே.ஆர்

கதை: வெங்கட்

SFX ஸ்டுடியோ – DS வடிவமைப்பு

புரடக்சன்: ஆர் விக்னேஷ்

தயாரிப்பு மேலாளர் SETTU BOLD

இணை ஒளிப்பதிவாளர்: ஷேக் ரஹீம்

ஸ்டில் போட்டோகிராபர்
ராமசுப்பு
டப்பிங் ஸ்டுடியோ
Wavsstudios

டப்பிங் இன்ஜினியர்
தேவா
சுபு சிவா

PRO
ரியாஸ் K அஹ்மத்
பாரஸ் ரியாஸ்

Allu Arjun Beats Giants: Pushpa2 Becomes Most Watched across Nation

0

Icon Star Allu Arjun has become a sensation in every home across the nation with his iconic character, Pushpa Raj. The epic character continues to make a lasting impact. After setting the big screen ablaze with its thunderous box office performance and collecting a jaw-dropping 1800 crore worldwide, the film’s Hindi version recently had its world television premiere.

As we all know, Allu Arjun enjoys massive stardom among Hindi-speaking audiences. As expected, the film has now claimed dominance on television, delivering a staggering 5.1 TVR rating and reaching a massive 5.4 crore viewers. This feat makes it the most-watched televised film event of the year, even surpassing some of India’s biggest blockbusters like Stree 2, Pathaan, Animal, and many more.

Beyond just impressive numbers, what truly stands out is the deep emotional connection and engagement audiences have with the film. Surpassing Bollywood giants and reaching every home across nation with a dubbed release is a remarkable feat, and whether in cinemas or at home, viewers continue to celebrate Allu Arjun’s powerful portrayal of Pushpa Raj.

This record-breaking television premiere marks another significant milestone in Allu Arjun’s career. From winning a National Award to emerging as a symbol of pan-India stardom, Allu Arjun’s legacy only continues to grow stronger with every success.

நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2’ திரைப்படம் அதிகம் பார்வையாளர்களைக் கவர்ந்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது!

ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு ரசிகர் வீட்டிலும் சென்சேஷனல் ஸ்டார் ஆனது மட்டுமில்லாது, உலகம் முழுவதும் தன்னுடைய ஐகானிக் கேரக்டர் புஷ்பா ராஜ் மூலம் இன்னும் அதிக ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார். இந்த எபிக் கதாபாத்திரம் இன்னும் ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாததாக மாறி உள்ளது. ‘புஷ்பா 2’ திரைப்படம் ரூ. 1800 கோடி பாக்ஸ் ஆபீஸில் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் இந்தி வெர்ஷன் சமீபத்தில் தொலைக்காட்சியில் பிரீமியர் ஆனது.

நடிகர் அல்லு அர்ஜூனின் இந்த மாஸிவ் கதாபாத்திரத்தை இந்தி பேசும் ரசிகர்களும் கொண்டாடினர். இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘புஷ்பா2’ திரைப்படம், 5.1 TVR ரேட்டிங் மற்றும் 5.4 கோடி பார்வைகளைப் பெற்று, இந்த வருடத்தின் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ‘ஸ்ட்ரீ 2’, ‘பதான்’, ‘அனிமல்’ மற்றும் பல பிளாக் பஸ்டர் படங்களின் ரெக்கார்டையும் இது உடைத்துள்ளது.

இந்த நம்பரையும் தாண்டி, படத்தின் எமோஷனல் தருணங்கள்தான் ஆடியன்ஸை கனெக்ட் செய்திருக்கிறது. பாலிவுட் ஜெயண்ட்ஸை தாண்டி புஷ்பா ராஜாக அல்லு அர்ஜூனை பெரிய திரையிலும் சின்னத்திரையிலும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த சாதனை நடிகர் அல்லு அர்ஜூனின் சினிமா பயணத்தில் மற்றொரு மைல்கல். தேசிய விருது பெற்றதில் இருந்து பான் இந்தியா ஸ்டாராக உருவானது என தன்னுடைய ஒவ்வொரு வெற்றியிலும் அடுத்தடுத்து உயரத்தை அடைந்து வருகிறார் நடிகர் அல்லு அர்ஜூன்.

ஆளுநர் R.N. ரவி காலை 8.05 மணிக்கு யோக பயிற்ச்சியை துவக்கி வைத்து

0

மதுரை வேலம்மாள் சர்வதேச பள்ளியில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி “யோக பயிற்ச்சியின் மூலம் மனித மன உடல் நலம் மட்டுமல்ல
மனநலனும் பாதுகாக்கப்படும்* ” – ஆளுநர் R.N. ரவி.

ஆளுநர் R.N. ரவி காலை 8.05 மணிக்கு யோக பயிற்ச்சியை துவக்கி வைத்து தொடர்ந்து மாணவர்களிடம் தொடர்ந்து உடற்பயிற்சிகளும் அதில் தண்டால் பயிற்சி மூலம் 51 தண்டால் செய்து ஆச்சரியப்படுத்தினார்.

மதுரை வேலம்மாள் சர்வதேச பள்ளி மைதானத்தில் தமிழக ஆளுநர் ஆா.என். ரவி கலந்து கொள்ளும் 11 வது சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு வேலம்மாள் கல்வி குழும நிறுவனத்தின் சார்பில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் மெகா யோக சாதனை நிகழ்வு நடைபெறுகிறது.

வேலம்மாள் கல்வி குழுமம் சார்பாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இருந்து 10 ஆயித்து 200 பேர் கலந்து கொண்ட மதுரையின் முதல் சாதனை
காலை 8 மணிக்கு நடைபெறும் சர்வதேச யோகா 11வது ஆண்டு விழா நிகழ்ச்சியினை தமிழக ஆளுநர் ரவி துவக்கி வைத்து யோகா பயிற்சி மேற்கொள்கிறார்

.
மதுரை வேலம்மாள் சர்வதேச பள்ளி உசேன் போல்ட் மைதானத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு யோகா பயிற்சி குறித்து விளக்கம் அளிக்க தமிழக ஆளுநர் ஆரன் ரவி தற்போது விழா மேடைக்கு வந்துள்ளார்

மதுரை வேலம்மாள் சர்வதேச பள்ளி மைதானத்தில் தமிழக ஆளுநர் ஆா.என். ரவி கலந்து கொள்ளும் 11 வது சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு வேலம்மாள் கல்வி குழும நிறுவனத்தின் சார்பில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் மெகா யோக சாதனை நிகழ்வு நடைபெற்றது.
தனியார் விடுதியில் தங்கி இருந்த ஆளுநர் R.N. ரவி காலை 7.50 மணிக்கு வேலம்மாள் சர்வதேச பள்ளி வளாகத்திற்கு வந்தார், வேலம்மாள் கல்வி குழும தலைவர் முத்துராமலிங்கம் மற்றும் கல்லூரி மாணவர்களின் பாண்டு இசை முழுங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர்
காலை 8 மணிக்கு சர்வதேச யோகா 11வது ஆண்டு விழா நிகழ்ச்சியினை தமிழக ஆளுநர் ரவி துவக்கி வைத்து யோகா பயிற்சியினை உசேன் போல்ட் மைதானத்தில் மேற்கொண்டார்.

வேலம்மாள் சர்வதேச பள்ளி உசேன் போல்ட் மைதானத்தில் காலை 8.05 மணிக்கு கவர்னர், ஆர். என் ரவி யோக பயிற்சியை துவக்கி பல்வேறு யோகாசனங்களின் பெயர் கூறி மாணவர்களுக்கு செய்து காட்டினர்.

வேலம்மாள் சர்வதேச பள்ளி உசேன் போல்ட் மைதானத்தில் காலை 8.05 மணிக்கு கவர்னர், ஆர். என் ரவி யோக பயிற்சியை துவக்கி பல்வேறு யோகாசனங்களின்
பெயர் கூறி மாணவர்களுக்கு செய்து காட்டினர்.

யோகசனங்களை செய்வதால் உடலுக்கும் உங்கள் மனதிற்கும் புத்துணர்வு கிடைக்கும் நன்றி
சிறப்பாக செய்கிறீர்கள்.

நன்றியுரையாக வேலம்மாள் கல்வி குழும தலைவர் முத்துராமலிங்கம் கூறுகையில்
.யோகாசன பயிற்சிகள் மூலம் நமது உடலுக்கு வலிமை சேர்ப்பது தான் மனதுக்கும் வலிமை சேர்க்கிறது நான் சில ஆண்டுகளுக்கு முன்பு முது வழியால் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டேன் அப்போது ஒரு சில யோகாசனங்கள் செய்த அதன் மூலம் எனது முதுகு வலியை யோகப்பயிற்ச்சியின் மூலம் சரிப்படுத்தி உடற்பயிற்சியின் அவசியத்தை புரிந்து கொண்டேன்.

யோக பயிற்ச்சி மிகவும் சிறந்தது.
பயிற்ச்சியாக எண்ணாமல் தொடர்ந்து செய்தோமானால் நமது உடல், மனம் வளம் பெறும் ஆசையால் நாம் யோகாவை பின்பற்றுவோம்.

வேலம்பாள் குழுமம் சார்பில் நடைபெற்ற இந்த பெருமைமிகு யோக நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த மேதகு ஆளுநருக்கு எனது நனிதியினை தெரிவித்து கொள்கின்றேன் என வேலம்மாள் கல்வி குழு தலைவர் முத்துராமலிங்கம் கூறினார்.

Jeffery and Bharath Seeni Join Vijay Milton’s Tamil-Telugu Bilingual Film – A Stellar Ensemble Grows Stronger

0

Rough Note Production is proud to announce that the ensemble of its much-awaited Tamil-Telugu bilingual film, directed by the visionary filmmaker and cinematographer Vijay Milton, just got even bigger. Joining the already dynamic lineup are two exciting additions—Jeffery, the Bigg Boss Tamil sensation who has captivated audiences with his vibrant personality, and Bharath Seeni, the breakout talent from the earlier Goli Soda series, known for his raw, grounded performances.

Jeffery steps into a role tailored to tap into his energetic screen presence and mass appeal. His transition from reality TV to the big screen marks a bold new chapter, and his character promises to be both entertaining and impactful.

Bharath Seeni, whose performance in Goli Soda resonated with audiences for its realism and intensity, reunites with Vijay Milton to portray a role that draws from the streets and souls of real people. His inclusion adds an authentic layer to the film’s deeply rooted narrative.

Earlier, the cast welcomed Ammu Abhirami, known for her powerful turns in Asuran and Raatchasan, and Kishore, the original Goli Soda star, who returns to Milton’s world in a matured, layered avatar. Director Vijay Milton had praised them, saying, “They don’t just act—they live the roles.”

With Aari donning a never-before-seen cop role, Raj Tarun making his Tamil debut, Bharath in a poignant emotional arc, Paal Dabba stepping into acting, and Sunil bringing in pan-Indian appeal—the addition of Jeffery and Bharath Seeni makes the cast nothing short of phenomenal.

This yet-to-be-titled project is shaping up to be a potent blend of rooted storytelling and mass appeal—trademarks of Vijay Milton’s cinematic language.

The official title will be unveiled on July 7th, with many more surprises in store. As the team gears up to deliver a performance-rich, emotionally resonant film, Rough Note Production invites audiences to stay tuned.

The cast is growing. The story is deepening. And the excitement is only beginning.

“Maargan will deliver an immersive cinematic experience to the audience, especially with Vijay Antony’s brilliant background score” – Director Leo John Paul

0

Director Leo John Paul, one of the finest and most acclaimed editors of Tamil film industry is all set to have his directorial debut ‘Maargan’, featuring Vijay Antony in the lead role, scheduled for June 27 release. Having mastered the sleek and stylish transitions in the Editing Suite, he is making a humble beginning as filmmaker through this film, which has already obtained excellent response for the visual promos.

With the hype getting bigger, and film all set to open tomorrow on big screens, Leo John Paul shares interesting facts about the film.

“When we started working on the film’s script, the main intention was to savour the tastes of film lovers, who prefer enjoying a good theatrical experience. We have attempted to deliver a never-before audio visual experience to cinephiles, since the film infuses Sci-fi & supernatural elements into a murder-mystery,” starts off Leo John Paul, who continues to add that, “Getting a solid league of promising actors made my script find a beautiful visual translation. Thanks to Vijay Antony sir for trusting the script, and nourishing it with his spellbinding performance. The film demanded top-notch production values, and he never hesitated spending sumptuous budget to create the visual elegance. Ajay Dhishan has delivered a laudable performance, and he is sure to leave a lasting impression after the show. He has exerted so much laborious efforts, especially the underwater sequence, demanded so much excruciating pressure on him both mentally and physically. However, he excelled performing it with dedication. Brigida will have a dimension in this film, and she shed 7 kilos to convincingly portray a cop.”

The director signs off saying, “Maargan will deliver an immersive cinematic experience to the audience, especially with Vijay Antony’s brilliant background score”

Maargan is produced by Fatima Vijay Antony of Vijay Antony Film Corporations, and is presented by Meera Vijay Antony. Apart from Vijay Antony, Ajay Dhishan, and Brigida, the others in the star-cast include Samuthirakani, Deepshikha, Mahanathi Shankar & Vinodh Sagar.

“விஜய் ஆண்டனியின் பின்னணி இசையுடன் ரசிகர்களுக்கு ஒரு முழு சினிமாட்டிக் அனுபவத்தை ‘மார்கன்’ வழங்கும்” – இயக்குநர் லியோ ஜான் பால்;

தமிழ் சினிமா துறையின் மிகச் சிறந்த மற்றும் பாராட்டப்பட்ட எடிட்டர்களில் ஒருவர் லியோ ஜான் பால், தனது இயக்குநர் அவதாரமாக ‘மார்கன்’ திரைப்படத்தை இயகியுள்ளார். விஜய் ஆண்டனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்த படம் ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. எடிட்டிங் துறையில் ஸ்லீக் மற்றும் ஸ்டைலிஷ் ட்ரான்ஸிஷன்களில் தேர்ச்சி பெற்றவர், இப்போது இயக்குநராக தாழ்மையுடன் தன் பயணத்தைத் தொடங்குகிறார். ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வீடியோ ப்ரொமோக்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இயக்குநர் லியோ ஜான் பால், ரசிகர்களுக்கு இந்தப் படத்தின் சிறப்பம்சங்களைப் பற்றி பகிர்ந்துள்ளார்.

“இந்தப் படத்தின் கதை எழுத தொடங்கியபோது, சினிமாவை அனுபவத்தை திரையரங்கில் முழுமையாக அனுபவிக்க விரும்பும் ரசிகர்களுக்காகவே உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஆரம்பித்தோம். மார்டர் மிஸ்டரி, சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் சூப்பர்நேச்சுரல் விஷயங்கள் இணைத்திருப்பதால், ஒரு புதிய, முற்றிலும் வேறுபட்ட ஆடியோ-விஸ்வல் அனுபவத்தை தர முயற்சி செய்திருக்கிறோம்”.

“மிகவும் நம்பிக்கையளிக்கும் நடிகர்கள் இணைந்ததால், எனது கதை திரையில் அழகாக உயிர் பெற்று வந்தது. விஜய் ஆண்டனி அவர்கள், கதையை நம்பி, தனது தேர்ச்சியான நடிப்பால் படத்தை மேலும் உயர்த்தினார். இப்படத்திற்கு தரமான தயாரிப்பு தேவைப்பட்டது, அதை முழு அளவில் புரிந்துகொண்டு, அவர் பட்ஜெட்டில் எந்த தயக்கமும் இன்றி பல வசதிகளை வழங்கினார்.

அஜய் திஷான் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். குறிப்பாக நீருக்கு அடியில் படமாக்கபட்ட காட்சிகளில், அவர் எதிர்கொண்ட உடல் மற்றும் மன அழுத்தம் பெரிதாக இருந்தும், அதை மிகுந்த முயற்சியுடன் கையாண்டார்.

பிரிகிடா, 7 கிலோ வரை எடை குறைத்து, தன்னிச்சையான நெகிழ்வை வெளிக்கொண்டு வந்துள்ளார்.”

“மார்கன் ரசிகர்களுக்கு ஒரு அதிரடி, உணர்ச்சிபூர்வமான, முழுமையான சினிமா அனுபவத்தை வழங்கும், குறிப்பாக விஜய் ஆண்டனியின் அபூர்வமான பின்னணி இசை படத்தை வேறு தரத்தில் உயர்த்தும்.”

மார்கன் திரைப்படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்ஸ் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க, மீரா விஜய் ஆண்டனி வழங்கியுள்ளார். விஜய் ஆண்டனி, அஜய் திஷான் மற்றும் பிரிகிடா தவிர, இப்படத்தில் சமுத்திரக்கனி, தீப்ஷிகா, மகாநதி சங்கர், வினோத் சாகர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘மார்கன்’ – ஜூன் 27 முதல் திரையரங்குகளில்!

Maargan #VijayAntony #LeoJohnPaul #TamilThriller #June27Release

“David’s script presented multiple opportunities, and I just got excited by the thought of making all of them” Director Gareth Edwards praises David Koepp’s screenplay for Jurassic World: Rebirth.

0

National, 20th June 2025: Get ready to return to a world where dinosaurs rule the screen again—Universal Pictures (distributed by Warner Bros. Discovery), unveils the next adrenaline-charged chapter in the beloved Jurassic saga. Jurassic World: Rebirth is set for a India release on July 4th, 2025 (worldwide release on July 2) and will take fans to an adventure with its breathtaking visuals and a deeper look into the new era. Under the direction of Emmy Award-winner Gareth Edwards, the film promises a truly immersive and thrilling new era. Leading the stellar cast is the powerhouse talent of Academy Award nominee Scarlett Johansson, joined by Emmy Award nominee Jonathan Bailey and Academy Award winner Mahershala Ali. Adding to the cast are talented performers Luna Blaise, Rupert Friend, Ed Skrein, and David Lacono.

Following Jurassic World Dominion, the story shifts to an isolated equatorial region where surviving dinosaurs have found a familiar, thriving habitat. Now, the fate of humankind may rest on the three most immense among them, who hold the secret to a miraculous, life-altering drug. Dr. Henry Loomis (played by Jonathan Bailey), a paleontologist, whereas Zora Bennett (played by Scarlet Johansson), a skilled covert operative who leads a skilled team on a top-secret mission to secure genetic material from the world’s three most massive dinosaurs. Her operation clashes with a civilian family’s desperate plight after aquatic dinosaurs overturn their boat. Marooned on a forgotten island, they unearth a shocking, decades-long global secret.

While talking about David Koepp’s screenplay writing, Director Gareth Edwards mentioned, “It’s a mission story that becomes a survival story with some great curveballs thrown along the way,” Edwards further said, “It elegantly balances and intertwines a story about these adventurers on a quest and an emotional family story. It’s a journey of distinct chapters set in interesting environments, sea, land, and air. Each one is their own short story thrill ride that adds up to one roller-coaster of epic story. At times, it’s like Jaws, at other times, it’s like Indiana Jones, and in between, it delights in the majesty of nature like a David Attenborough film. Truth be told, when I was reading the script, I thought if it presented one opportunity to do anything as cinematic and intense as the T. rex attack in Jurassic Park, I’d probably do it. But David’s script presented multiple opportunities, and I just got excited by the thought of making all of them.”

The dinosaurs are unleashed! Jurassic World delivers stunning spectacle and jaw-dropping visuals, igniting a thrilling new era of science and adventure. Releases worldwide July 4th, 2025!

ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்- “டேவிட்டின் திரைக்கதை பல வாய்ப்புகளைக் கொடுத்து உற்சாகமாக்கியது” என்று டேவிட் கோப்பின் திரைக்கதையைப் பாராட்டுகிறார் இயக்குநர் கேரத் எட்வர்ட்ஸ்!

நேஷனல், 20 ஜூன் 2025: டைனோசர்கள் உலகத்தில் மீண்டும் பயணிக்க தயாராகுங்கள்! யுனிவர்சல் பிக்சர்ஸ் (வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி விநியோகம்) ஜுராசிக் உலகத்தில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அடுத்த அத்தியாயமான ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த் ஜூலை 4, 2025 அன்று இந்தியாவில் வெளியாகிறது. உலகம் முழுவதும் ஜூலை 2 அன்று வெளியாகிறது. மூச்சடைக்க வைக்கும் பிரம்மாண்டமான காட்சிகள் மற்றும் கதைக்களம் என இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இது உள்ளது. எம்மி விருது வென்ற கரேத் எட்வர்ட்ஸ் இயக்கியுள்ள இந்த ஆக்‌ஷன் அட்வென்ச்சர் படத்தில் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஸ்கார்லெட் ஜோஹன்சன், எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்றும் ஆலிவர் விருது வென்ற ஜொனாதன் பெய்லி, மஹெர்ஷாலா அலி, லூனா பிளேஸ், ரூபர்ட் ஃப்ரெண்ட்எட் ஸ்க்ரீன் மற்றும் டேவிட் லாகோனோ ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் கதை ஜுராசிக் வேர்ல்ட் டொமினியனுக்குப் பிறகு வருகிறது. அங்கு மீதமுள்ள டைனோசர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அங்கு தன் இனத்தைப் பெருக்கி இருக்கிறது. அந்தச் சூழலில் இருக்கிற மிகப் பிரம்மாண்டமான மூன்று டைனோசர்கள், மனித இனத்துக்கு அதிசயிக்கத்தக்க உயிர்காக்கும் நன்மைகளைக் கொண்டுவரப்போகும் ஒரு மருந்தின் திறவுகோலைக் கொண்டிருக்கின்றன. இதில் நடிகர் ஜொனாதன் பெய்லி தொல்லுயிரியலாளர் டாக்டர் ஹென்றி லூமிஸாகவும் நடிகர் ஸ்கார்லெட் ஜோஹன்சன் திறமையான இரகசிய செயல்பாட்டு நிபுணர் ஜோரா பென்னட்டாகவும் நடித்துள்ளார்கள். அவர் உலகின் மூன்று மிகப் பெரிய டைனோசர்களிடமிருந்து மரபணுப் பொருளைப் பாதுகாப்பதற்கான ஒரு உயர் ரகசிய பணியில் திறமையான குழுவை வழிநடத்துகிறார். இது ஒரு குடும்பத்தை பாதிக்கிறது. அந்த குடும்பம் எதிர்பாராத விதமாக ஒரு தீவில் சிக்கித் தவிக்கிறார்கள். அங்கு அவர்கள் பல தசாப்தங்களாக உலகத்திலிருந்து மறைக்கப்பட்ட ஒரு அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள்.

டேவிட் கோப்பின் திரைக்கதை பற்றி இயக்குநர் கேரத் எட்வர்ட்ஸ் பகிர்ந்து கொண்டதாவது, “மிஷன் ஸ்டோரியாகத் தொடங்கும் இது சில காரணங்களால் சர்வைவல் கதையாக மாறுகிறது. இருந்தாலும் அட்வென்சர் மற்றும் எமோஷனல் ஃபேமிலி கதை என இந்த இரண்டையும் சரியாக டேவிட் கையாண்டிருக்கிறார். கடல், நிலம் மற்றும் காற்று என பல விதமான சூழல்களில் இந்தக் கதை பயணிக்கிறது. ஒவ்வொரு சூழலிலும் ஒரு சிறுகதைக்கான பரபரப்பும் எமோஷனும் இருக்கும். இது ஜாஸ் போலவும், மற்ற நேரங்களில் இந்தியானா ஜோன்ஸ் போலவும் இது இரண்டிற்கும் இடையில் டேவிட் அட்டன்பரோ படம் போல இயற்கையை கம்பீரமாகக் காட்டி இருக்கிறது” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இந்த திரைக்கதையைப் படிக்கும்போது ஜுராசிக் பார்க்கில் டைனோசர் தாக்குதல் நடத்துவது போன்ற தீவிரமான சூழல் அமைவதற்கான வாய்ப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் டேவிட்டின் ஸ்கிரிப்ட் நான் நினைத்ததை விடவும் பல வாய்ப்புகளை வழங்கியதால் நான் உற்சாகமடைந்தேன்” என்றார்.

ஜுராசிக் வேர்ல்ட் – புதிய உலகம் வரும் ஜூலை 4, 2025 அன்று வெளியாகிறது!

Emmy Award Nominee Jonathan Bailey shares his personalconnection to the Jurassic series

0

“It was a sumptuous escapist delight” Emmy Award Nominee Jonathan Bailey shares his personal
connection to the Jurassic series and how it captured his imagination National, 18th June 2025: Universal Pictures (distributed by Warner Bros. Discovery) returns with the next epic and eagerly awaited chapter in the iconic Jurassic Saga, Jurassic World: Rebirth will be releasing worldwide on 4th July, 2025.

With its breathtaking visuals, a deeper look into the new era, the movie elevates the excitement, positioning it as one of the most eagerly awaited films of 2025.

Directed by Emmy Award winning director Gareth Edwards, the film promises to immerse audiences
in a thrilling new era. Leading the stellar cast is the powerhouse talent of Academy Award nominee
Scarlett Johansson, joined by Emmy Award nominee Jonathan Bailey and Academy Award winner
Mahershala Ali offering a groundbreaking and a new path to the enduring Jurassic saga.

Following Jurassic World Dominion, the story shifts to an isolated equatorial region where surviving
dinosaurs have found a familiar, thriving habitat. Now, the fate of humankind may rest on the three most immense among them, who hold the secret to a miraculous, life-altering drug. Dr. Henry Loomis (played by Jonathan Bailey), a paleontologist, whereas Zora Bennett (played by Scarlet Johansson), a skilled covert operative who leads a skilled team on a top-secret mission to secure genetic material from the world’s three most massive dinosaurs. Her operation clashes with a civilian family’s desperate plight after aquatic dinosaurs overturn their boat. Marooned on a forgotten island, they unearth a shocking, decades-long global secret.

While discussing his love for the Jurassic series and how it has been a huge part of his childhood that
captured his imagination for cinema, Emmy Award Nominee Jonathan Bailey who plays Dr. Henry
Loomis in the upcoming Jurassic World: Rebirth shared, “I was five years old when my family took me to Jurassic Park, so a slightly questionable choice by my parents, given that it was PG-13,” Bailey further said, “I remember it was kind of spiritual, not only because of the vision and the fantasy, but because it spoke to something about the modern world’s relationship to the past and nature.

Thecharacters were so vivid and so playful, the writing was so taut, and because it was Spielberg, it was
a sumptuous escapist delight. And the John Williams score! How do you rank the John Williams scores? I’m literally paid to say this now, but I do think it’s number one.”

The dinosaurs are back! Catch the stunning spectacle of Jurassic World and jaw-dropping visuals,
igniting a new era where thrill meets science. The new era begins on July 4th, 2025!

Jurassic World: Rebirth | Official Trailer 2

JURASSIC WORLD: REBIRTH | Official Hindi Trailer 2

JURASSIC WORLD: REBIRTH | Official Tamil Trailer 2

JURASSIC WORLD: REBIRTH | Official Telugu Trailer 2

“வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சி” எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜோனாதன் பெய்லி ஜுராசிக் தொடருடனான தனது தனிப்பட்ட தொடர்பையும் அது தன்னை எவ்வாறு கவர்ந்தது என்பதையும் பகிர்ந்து கொள்கிறார்!

நேஷனல், 18 ஜூன் 2025: யுனிவர்சல் பிக்சர்ஸ் (வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி விநியோகம்) ஜுராசிக் உலகத்தில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அடுத்த அத்தியாயமான ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த் ஜூலை 4, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

மூச்சடைக்க வைக்கும் பிர்மமாண்டமான காட்சிகள் மற்றும் கதைக்களம் என இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இது உள்ளது.

எம்மி விருது வென்ற கரேத் எட்வர்ட்ஸ் இயக்கியுள்ள இந்த ஆக்‌ஷன் அட்வென்ச்சர் படத்தில் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஸ்கார்லெட் ஜோஹன்சன், எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்றும் ஆலிவர் விருது வென்ற ஜொனாதன் பெய்லி, மஹெர்ஷாலா அலி மற்றும் லூனா பிளேஸ் மற்றும் ரூபர்ட் ஃப்ரெண்ட் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் கதை ஜுராசிக் வேர்ல்ட் டொமினியனுக்குப் பிறகு வருகிறது. அங்கு மீதமுள்ள டைனோசர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அங்கு தன் இனத்தைப் பெருக்கி இருக்கிறது. அந்தச் சூழலில் இருக்கிற மிகப் பிரம்மாண்டமான மூன்று டைனோசர்கள், மனித இனத்துக்கு அதிசயிக்கத்தக்க உயிர்காக்கும் நன்மைகளைக் கொண்டுவரப்போகும் ஒரு மருந்தின் திறவுகோலைக் கொண்டிருக்கின்றன. இதில் நடிகர் ஜொனாதன் பெய்லி தொல்லுயிரியலாளர் டாக்டர் ஹென்றி லூமிஸாகவும் நடிகர் ஸ்கார்லெட் ஜோஹன்சன் திறமையான இரகசிய செயல்பாட்டு நிபுணர் ஜோரா பென்னட்டாகவும் நடித்துள்ளார்கள். அவர் உலகின் மூன்று மிகப் பெரிய டைனோசர்களிடமிருந்து மரபணுப் பொருளைப் பாதுகாப்பதற்கான ஒரு உயர் ரகசிய பணியில் திறமையான குழுவை வழிநடத்துகிறார். இது ஒரு குடும்பத்தை பாதிக்கிறது. அந்த குடும்பம் எதிர்பாராத விதமாக ஒரு தீவில் சிக்கித் தவிக்கிறார்கள். அங்கு அவர்கள் பல தசாப்தங்களாக உலகத்திலிருந்து மறைக்கப்பட்ட ஒரு அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள்.

ஜுராசிக் தொடரின் மீதான தனது காதலையும், அது தனது குழந்தைப் பருவத்தில் எவ்வாறு பெரும் பங்கு வகித்தது என்பதையும் பற்றி வரவிருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்’தில் டாக்டர் ஹென்றி லூமிஸாக நடித்திருக்கும் எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜொனாதன் பெய்லி பகிர்ந்து கொள்கிறார். “எனக்கு ஐந்து வயதாகும் போது, என் குடும்பத்தினர் என்னை ஜுராசிக் பார்க் படத்திற்கு அழைத்து சென்றனர். இது ஒருவித ஆன்மீக உணர்வைக் கொடுக்கும். ஏனெனில், இது கற்பனை மட்டுமல்ல. நவீன உலகின் கடந்த காலத்துக்கும் இயற்கைக்கும் உள்ள உறவைப் பற்றி பேசியது” என்றார்.

மேலும், “கதாபாத்திரங்கள் மிகவும் வலுவானது. ஸ்பீல்பெர்க் மற்றும் ஜான் வில்லியம்ஸின் இசை என்பதால் என் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தையே இல்லை” என்றார்.

ஜுராசிக் வேர்ல்ட் – புதிய உலகம் வரும் ஜூலை 4, 2025 அன்று வெளியாகிறது!

Jurassic World: Rebirth | Official Trailer 2

JURASSIC WORLD: REBIRTH | Official Hindi Trailer 2

JURASSIC WORLD: REBIRTH | Official Tamil Trailer 2

JURASSIC WORLD: REBIRTH | Official Telugu Trailer 2

விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

0

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு – சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘லவ் மேரேஜ்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த விழாவில் நடிகர் – இயக்குநர் முருகானந்தம் பேசுகையில், ” இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஜூனியர்கள் சீனியர்களை இயக்குவது போல் இருந்தது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் கலைஞர்களை அவர்கள் கையாண்ட விதம் நன்றாக இருந்தது. ஒரு குடும்பம் போல் படப்பிடிப்பு தளம் கலகலப்பாக இருந்தது. ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் ஒவ்வொரு விதமான அனுபவம் கிடைக்கும். இந்தப் படத்தில் நடிக்க தொடங்கி நிறைவை எட்டிய போது, ஆஹா! படத்தின் படப்பிடிப்பு இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே? என்ற ஏக்கத்தை உண்டாக்கியது. இதுதான் இயக்குநர் சண்முக பிரியனுக்கு கிடைத்த முதல் வெற்றி. அந்த அளவிற்கு ஒட்டுமொத்த படக் குழுவையும் அவர் நேர்த்தியாக அரவணைத்தார்.

படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விக்ரம் பிரபு சக கலைஞர்கள் மீது அதிக அக்கறையும் அன்பும் காட்டினார். இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் சுஷ்மிதா படத்தில் மட்டுமல்ல படப்பிடிப்பு தளத்திலும் எதார்த்தமான ஹீரோயினாகவே இருந்தார். அவருக்கும் வாழ்த்துக்கள்.

படத்தில் பணியாற்றத் தொடங்கும் போது இயக்குநர் யார் ? என்று தெரியாது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் எனக்கு தலை வலிக்கிறது உடல் வலிக்கிறது என ஏதாவது காரணத்தை சொன்னால் உடனே ஒரு பெயரை சொல்லி அந்த மாத்திரையை வாங்கி சாப்பிட சொல்வார். அதன் பிறகு தான் அவர் மருத்துவர் என தெரியவந்தது. எந்த வேலை பார்த்தாலும் இயக்குநராக வரலாம். ஆனால் ஒரு மருத்துவராக இருந்து இயக்குநராகி இருக்கிறார் என்றால்.. முதலில் அவருடைய பெற்றோர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

லவ் மேரேஜ் திரைப்படத்திற்கு அரேஞ்ச் மேரேஜ்க்கு வரும் கூட்டம் போல் அனைவரும் வருகை தந்து வெற்றி பெற செய்ய வேண்டும் ” என்றார்.

தயாரிப்பாளர் டாக்டர் ஸ்வேதா ஸ்ரீ பேசுகையில், ” எல்லோருக்கும் அவர்களுடைய முதல் குழந்தை ஸ்பெஷலானது. அது கடவுளின் ஆசி என்று சொல்வார்கள் அந்த வகையில் எங்களின் அஸ்யூர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் முதல் படம் லவ் மேரேஜ். நான் வணங்கும் பெருமாளின் அருளுடன் ஜூன் 27ஆம் தேதியன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இன்று இப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிடும் நடிகர் தனுசுக்கு நன்றி.

இப்படத்தின் கதையை இயக்குநர் சண்முக பிரியன் முதன் முறையாக சொல்லும் போதே எனக்கு பிடித்திருந்தது. இதுதான் எங்களின் முதல் படமாக இருக்க வேண்டும் என தீர்மானித்தோம். இந்த கதையை மிகவும் திறமையாகவும் இயக்கியிருக்கிறார். ரசிகர்கள் அனைவரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ரசிக்கும் வகையில் படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த திரைப்படம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது. அந்த மண்ணின் மணம் மாறாமல் அழகியலுடன் படம் உருவாகி இருக்கிறது. படத்தில் நடித்த நடிகர்களின் பாசிட்டிவிட்டி படத்திலும் இடம் பிடித்திருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்த விக்ரம் பிரபு , சத்யராஜ், சுஷ்மிதா பட், அருள்தாஸ், ரமேஷ் திலக் ஆகிய அனைத்து நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் இந்தப் படத்திற்காக எங்களுடன் இணைந்து பணியாற்றிய ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகருக்கும், இந்த படத்தின் இசையை வெளியிட்ட சோனி மியூசிக் நிறுவனத்திற்கும், படத்தை தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலனுக்கும், தயாரிப்பில் எங்களுடன் தொடக்கத்திலிருந்து முழு ஒத்துழைப்பு வழங்கிய தயாரிப்பாளர் யுவராஜ் கணேசனுக்கும், சிறப்பு விருந்தினராக வருகை தந்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

‘லவ் மேரேஜ்’ ஜாலியான படம். ஜூன் 27ஆம் தேதியன்று அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து கொண்டாடி ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகை சுஷ்மிதா பட் பேசுகையில், ” இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆண்டவனின் ஆசியாகவே பார்க்கிறேன். இதற்குக் காரணமாக இருந்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழில் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறேன்.

இந்தப் படத்தில் அனுபவம் மிக்க இளைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு கிடைத்த பாக்கியமாகவே கருதுகிறேன். இப்போது அவர்கள் அனைவரும் என்னுடைய குடும்பமாக ஆகிவிட்டனர். விக்ரம் பிரபு சாரை பற்றி சொல்ல வேண்டும் என்றால் திறமையானவர். நட்பாக பழகக் கூடியவர்.

இந்தப் படத்தில் அனைவரும் தங்களுடைய முழுமையான அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். இதற்காக அனைவருக்கும் வாழ்த்தும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசுகையில், ” லவ் மேரேஜ் படத்தின் ட்ரெய்லரை.. 90ஸ் கிட்ஸ்களின் எதிரொலியாகத்தான் பார்க்கிறேன். இந்த படத்தின் முன்னோட்டத்துடன் என்னால் எளிதாக தொடர்பு கொள்ள முடிந்தது. இப்படத்தில் மிஷ்கின் பாடிய பாடலை கேட்டவுடன் இந்தப் பாட்டு ஹிட் ஆகும் என சொன்னேன்.
ஒரு படத்திற்கு பாசிட்டிவிட்டியை முதன்முதலாக பரப்புவது அப்படத்தின் டைட்டிலிருந்து தொடங்கும் என்பதை நம்புபவன். அந்த வகையில் லவ் மேரேஜ் என்பது எல்லா தரப்பினரும் இயல்பாக கேட்டிருக்கும் பார்த்திருக்கும் வார்த்தை.

நம்முடைய நண்பர்கள், உறவினர்கள் யாராவது காதலித்திருப்பார்கள் அல்லது காதலித்துக் கொண்டிருப்பார்கள். காதல் என்பது திருமணம் வரை செல்லக்கூடியது தான். இதனால் இந்தப் படத்திற்கு டைட்டிலே மிகப்பெரிய வெற்றியைத் தரும். இதற்காக இயக்குநருக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் ரசிகன் நான். அவரை நீண்ட காலமாக பின் தொடர்கிறேன். அவருடைய இசையில் ஒலிகள் வித்தியாசமாக ரசிக்கக் கூடிய வகையில் இருக்கும். அந்த ஓசை இளைய தலைமுறையினர் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

விக்ரம் பிரபு கடினமாக உழைக்கக்கூடிய நடிகர். பக்கத்து வீட்டு பையனாக இந்த படத்தில் அவர் நடித்திருக்கிறார் . இதற்காகவே இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும். அவர் வில்லனாகவும் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பரிசோதனை முயற்சியாக நிறைய படங்களில் நடித்து வருகிறார். அவர் இயல்பாக நடித்திருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் ” என்றார்.

பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், ” தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தான் இந்த படக்குழுவினரை அறிமுகப்படுத்தினார்.‌ இயக்குநர் சண்முக பிரியன் இசையமைப்பாளர் ஷான் ரோல்டனை சந்திக்கும் போதெல்லாம் ஷான் ரோல்டன் உற்சாகமாகி விடுவார். அந்த அளவிற்கு இயக்குநரை நேசிப்பார். இயக்குநர் போனில் ‘அண்ணா’ என அழைக்கும் போதெல்லாம் அந்த சொல்லிற்கான உணர்வை நான் உணர்ந்திருக்கிறேன்.

இந்தப் படத்தில் மிஷ்கின் பாடிய பாடலை தான் நாங்கள் முதல் முதலில் உருவாக்கினோம். மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் அந்தப் பாடல் உருவானது. அதாவது ஒரே நாளில் இந்த பாடலை நிறைவு செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் அந்தப் பாடலை ஒரு மணி நேரத்தில் நிறைவு செய்தோம். இதற்காக மிஷ்கினுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர்களின் திருமண கலாச்சாரத்தில் மாப்பிள்ளை அழைப்பிற்கான பாடல் மிக அரிதாகத்தான் இருக்கிறது. அந்தக் குறையை போக்குவதற்காக இந்த படத்தில் ஒரு மாப்பிள்ளை அழைப்பிற்கான பாடல் இருக்கிறது. பாடல் நிறைவு பெற்ற பின் இயக்குநர் சண்முகப்பிரியன் என்னை தொடர்பு கொண்டு இந்தப் பாடலில் எங்கேனும் சில வார்த்தைகள் திரும்பத் திரும்ப வர வேண்டும் என விரும்புகிறேன் என்றார். அதன் பிறகு புதிதாக நான்கு வரிகளை சேர்த்த பிறகு பாடலின் தரம் மிக உயர்ந்ததாக இருந்தது.

இந்தப் படத்தில் நான் மூன்று பாடல்களை எழுதி இருக்கிறேன். ஷான் ரோல்டனுடன் இணைந்து பணியாற்றிய பிறகுதான் எனக்கு சிறந்த பாடலாசிரியருக்கான ஆனந்த விகடன் விருது கிடைத்தது. இதற்காகவும் அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ” என்றார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில், ” இந்தப் படத்தில் நான் பணியாற்றியதற்கு மிக முக்கியமான காரணம் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தான்.‌ இதற்காக முதலில் அவருக்கு நன்றி.

இயக்குநர் என்னை சந்தித்து கதை சொன்ன பிறகு கதையைப் பற்றிய ஒரு விசுவல் பேலட்டை ( காட்சி மொழிக்குரிய சித்திரங்கள்) காண்பித்தார். அதைப் பார்த்தவுடன் இந்த படத்தில் பணியாற்ற வேண்டும் என தீர்மானித்தேன்.

நான் ஒரு 90ஸ் கிட்ஸ். அதனால் திரையரங்கத்திற்கு செல்லும் போது தமிழ் படம் பார்க்க வேண்டும் என்று தான் செல்வோம். தற்போது பான் இந்திய திரைப்படங்களை பார்க்கிறோம் தென்னிந்திய திரைப்படங்களை பார்க்கிறோம். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற தமிழ் படத்தை பார்த்த மன நிறைவை ஏனைய திரைப்படங்கள் ஏற்படுத்துமா? என்று கேட்டால் தெரியாது. வேற்று மொழி திரைப்படங்களும் இங்கு வெற்றி பெறுகிறது. ஆனால் தமிழர்களுக்கு என ஒரு அடையாளம் இருக்கிறது. அந்த அடையாளம் இந்த படத்தின் கதையைக் கேட்கும் போது இருந்தது. இயக்குநர் சண்முக பிரியன் இசைமீது பற்று கொண்டவர். இப்போது அவர் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் ஆகிவிட்டார். அவருக்கு திரைத் துறையில் பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் உண்டு.

புதிய தயாரிப்பாளர்களான டாக்டர் ஸ்வேதாவும் , டாக்டர் தீரஜும் சினிமா மீது உள்ள காதலால் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். அதை அவர்களை சந்தித்து பேசும்போது தெரிந்து கொண்டேன். ஆர்வம் மட்டும் இல்லாமல் சினிமா பற்றிய வர்த்தக அறிவும் அவர்களிடத்தில் இருக்கிறது.

விக்ரம் பிரபு சினிமாவில் நான் சந்தித்த நபர்களிலேயே நேர்மையானவர் . கண்ணியமானவர் . அவர் நடித்த படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். அவருடன் இணைந்தும் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் இந்த படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியது சிறந்த தொடக்கமாக இருக்கும் என கருதுகிறேன். அவருடைய படத்தில் சிறந்த பாடல்களை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. அது இந்த படத்தில் சாத்தியமாக இருக்கிறது. இந்த படத்தின் பாடல்கள் ஆல்பமாக ஹிட் ஆகும்.

மிஷ்கின் ஒரு முழுமையான கலைஞன். அவர் இந்த படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் நூல் தான். அந்த நூலில் கட்டப்பட்ட பூக்கள் தான் மோகன் ராஜாவின் பாடல் வரிகள். இதனால் பூமாலையில் அவர் பூவாக இருக்கிறார். அவருடன் இணைந்து பணியாற்றுவது எப்படி இருக்கும் என்றால் நல்ல குளிரான சூழலில் கதகதப்பான நெருப்பிற்கு முன் உட்காருவது போல் சௌகரியமாக இருக்கும். அவர் தமிழ் சினிமாவில் பாடல்கள் மூலம் இன்றைய இளம் தலைமுறையினருக்கு பல தமிழ் வார்த்தைகளையும் ,தமிழ் தத்துவங்களையும் சாமர்த்தியமாக உள்ளே புகுத்தி வருகிறார். இந்தப் படத்தில் கூட காதலுக்கான அழகான வரிகளை எழுதி இருக்கிறார்.

இந்தப் படத்தை அனைவரும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு சென்று கண்டு ரசிக்கலாம். இந்தப் படம் சிறந்த படமாக இருக்கும். அனைவருக்கும் திருப்தியை அளிக்கும் படமாகவும் இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.

விநியோகஸ்தர் சக்தி வேலன் பேசுகையில், ” சில தினங்களுக்கு முன் கள்ளக்குறிச்சி பகுதியில் இருந்து திரையரங்க அதிபர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு ‘லவ் மேரேஜ்’ படத்தின் பிரத்யேக காட்சி திரையிட்டால் உடனே தகவல் தெரிவிக்கவும் நான் என்னுடைய குடும்ப உறுப்பினர்களுடன் அந்தப் படத்தை காண ஆவலாக இருக்கிறேன் என்றார். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக திரைப்படங்களை முன்கூட்டியே திரையிட்டால் திரையரங்க தரப்பிலிருந்து அதனை காண்பதற்கு ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு வாரத்தில் நான்கு ஐந்து படங்கள் திரையிடுவதால் அதற்கான பணிச்சுமை இருக்கும்.‌

அவர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸின் நெருங்கிய நண்பரும் கூட. இவர்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருந்த பொழுது விரைவில் வெளியாகும் நல்ல படங்களை பற்றிய பேச்சு நடந்தபோது .. லவ் மேரேஜ் கண்டிப்பாக மிக நல்ல படமாக இருக்கும் என ஏ ஆர் முருகதாஸ் அவரிடம் தெரிவித்து இருந்தாராம்.

ஒரு படம் வெளியாவதற்கு முன் அங்கீகாரம் கிடைப்பது என்பது… அதிலும் அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்கிய படத்திற்கு இந்தியா முழுவதும் திறமையான இயக்குநர் என அறியப்பட்ட ஏ ஆர் முருகதாஸ் சிறந்த படம் என பாராட்டும் போது உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன்.

எங்கள் அன்னை இல்லத்தில் வாரிசான விக்ரம் பிரபு இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிப்பை வழங்கி சிறப்பித்து இருக்கிறார்.‌ 90ஸ் கிட்ஸ் ரசிகர்கள் அனைவரும் இந்தப் படத்துடன் தங்களை எளிதாக தொடர்பு படுத்திக் கொள்வார்கள்.

திருமணம் தொடர்பான விசயங்களை தமிழ் சினிமாவிற்கான பாரம்பரிய இலக்கணங்களுடன் உருவாகி இருக்கும் படம். அற்புதமான – அழகான பீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கிறது.

இந்த திரைப்படத்துடன் வணிக ரீதியாக தொடர்பே இல்லாத தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன், இப்படத்தின் வெற்றிக்காக தொடர்ந்து கடுமையாக உழைத்து வருகிறார். இது எனக்கு மிகப்பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது.
அந்த அளவிற்கு இயக்குநர் சண்முக பிரியன் திரையுலகில் வலிமையான நட்பு வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். இதனை நான் அவரின் வெற்றியாகவே பார்க்கிறேன்.

மருத்துவராக இருந்தும் சினிமா மீதான ஆர்வம் காரணமாக இப்படத்தின் மூலம் அறிமுக தயாரிப்பாளராக களம் இறங்கி இருக்கும் தயாரிப்பாளர்கள் ஸ்வேதா ஸ்ரீ – தீரஜ் ஆகியோருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றால் இவர்களைப் போல் ஏராளமான புதுமுக தயாரிப்பாளர்கள் திரையுலகிற்கு வருகை தருவார்கள். ரசிகர்களுக்கும் நல்ல படைப்புகள் கிடைக்கும். ” என்றார்.

இயக்குநர் சண்முக பிரியன் பேசுகையில், ” சிறப்பு விருந்தினராக வருகை தந்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நன்றி. அவருடைய படங்களில் இருக்கும் எனர்ஜி எனக்கு மிகவும் பிடிக்கும்.‌ அவர் இயக்குவது போன்ற படங்களை இயக்க வேண்டும் என்றால் எனக்கு இன்னும் சில ஆண்டுகாலம் ஆகும் என நினைக்கிறேன்.

இந்தப் படத்தின் பணிகள் தொடங்குவதற்கு காரணமாக திகழ்ந்த என்னுடைய இயக்குநர் ரா. கார்த்திக்கு நன்றி. 2017 ஆம் ஆண்டின் சினிமாவில் உதவிய இயக்குநராக சேர்வதற்கு முயற்சி செய்தேன். அந்த தருணத்தில் நானும், தயாரிப்பாளர் யுவராஜும் இணைந்து குறும்படத்தினை உருவாக்கினோம். அன்றிலிருந்து இன்று வரை அவருடனான நட்பு தொடர்கிறது.‌ இயக்குநர்கள் ஆனந்த் சங்கர், ரா. கார்த்திக் ஆகியோருடன் பணியாற்றியிருக்கிறேன்.

படத்தின் தயாரிப்பாளரான ஸ்வேதா ஸ்ரீ என்னுடைய நண்பர் தான். அவருடைய வீட்டிற்கு ஒரு முறை சென்ற போது உணவருந்தி கொண்டே படத்தைப் பற்றிய விசயங்களை பேசினேன். நானே தயாரிக்கிறேன் என அவரே ஆர்வத்துடன் முன் வந்தார். இந்தப் படத்திற்கு என்ன பட்ஜெட் என்று அவர் கேட்கவில்லை. ஆனால் நான் கேட்டது எல்லாம் கிடைத்தது. சுதந்திரமாக இந்த படத்தினை உருவாக்கி இருக்கிறேன். இதற்காக தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌

இந்தப் படத்திற்கு விக்ரம் பிரபு தான் நாயகன் என தீர்மானித்து விட்டேன். ஆனால் என்னுடைய நண்பர்கள்தான் அவர் ஆக்சன் ஹீரோ! இந்த கதைக்கு பொருத்தமாக இருப்பாரா? என்ற சந்தேகத்தை எழுப்பினார்கள். அப்போதுதான் அவருடைய நடிப்பில் ‘இறுகப்பற்று ‘என்ற படம் வெளியானது. அதில் அவருடைய நடிப்பில் வேறு ஒரு பரிமாணம் வெளிப்பட்டது. இது எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது. அதன் பிறகு அவரை நேரில் சந்தித்தேன்.
அவர் நடிக்க சம்மதம் தெரிவித்த உடன் இப்படத்தின் பணிகள் வேகம் எடுத்தது. படத்தின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை எந்த கேள்வியும் என்னிடம் கேட்கவில்லை. என் மீது முழு நம்பிக்கை வைத்தார். தற்போது இந்த படத்தை பார்த்த பிறகும் என் மீதான நம்பிக்கை விலகவில்லை என நம்புகிறேன்.‌ இவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இசையப்பாளர் ஷான் ரோல்டனை சந்தித்த போதும் விக்ரம் பிரபுவிடம் சொன்னது போல் எனக்கு கதை சொல்ல தெரியாது. திரைக்கதையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள் என்றேன். அதன் பிறகு அவரிடம் ஒன்றரை மணி நேரம் கதையை சொன்னேன். அவரும் என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தில் பணியாற்ற தொடங்கினார். அந்தத் தருணத்தில் விக்ரம் பிரபுவுக்கு சிறந்த ஆல்பம் ஒன்றை இந்த முறை நான் தருவேன் என்று என்னிடம் சொன்னார். அந்த வகையில் இதுவரை வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை தொடர்ந்து பாடலாசிரியர் மோகன் ராஜன், நடிகர் ரமேஷ் திலக் , விநியோகஸ்தர் சக்தி வேலன், அருள் தாஸ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு, சுஷ்மிதா பட் ஆகிய நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருக்கும். கல்யாணம் ஆகாத அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும். 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கல்யாணத்திற்காக காத்திருக்கின்ற எல்லா ஆண்களும், பெண்களும் இந்த படத்தை பார்க்கலாம்.

இந்த சமூகம் வயதுடன் பல விசயங்களை ஒப்பிட்டு பேசிக் கொண்டே இருக்கிறது. அது தொடர்பான கேள்வியையும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. பொதுவாக யாருக்கும் மற்றவர்கள் கேள்வி கேட்டால் பிடிக்காது. அந்த வகையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும். ” என்றார்.

நடிகர் விக்ரம் பிரபு பேசுகையில், ” நாங்கள் இங்கே அனைவரும் குடும்பமாக இணைந்து ஒரு குடும்ப படத்தை வழங்குகிறோம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தருணத்தில் கிடைத்த மகிழ்ச்சி இதற்கு முன் எந்த திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் கிடைத்ததில்லை. நான் இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக கோபிசெட்டிபாளையம் செல்கிறேன் என்று அப்பாவிடம் சொன்னதும் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அத்துடன் மட்டும் நிற்காமல் அங்கு சென்றால் இன்னார் வீட்டுக்கு செல்… இன்னார் வீட்டுக்கு செல்.. என்று ஏராளமானவர்களை மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அவர்களை அங்கு சந்தித்தபோது மகிழ்ச்சி இரட்டிப்பானது.
அந்தத் தருணத்திலேயே இந்த படம் நல்ல படமாக வரவேண்டும் என்ற அழுத்தம் எனக்குள் ஏற்பட்டது. இந்தப் படம் சிறப்பாக வரவேண்டும் என நான் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த பட குழுவும் மகிழ்ச்சியுடன் பணியாற்றியது.

ஷான் ரோல்டனை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் தான் இந்த படத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றினோம். இந்தப் படத்திற்கு இசை மிகப்பெரிய பலம். அவர் அழகாக செய்து இருக்கிறார் நல்ல ஆல்பமாக கொடுத்து சாதித்து இருக்கிறார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

படப்பிடிப்பு நடைபெற்ற ஒரு மாத காலம் வரை குடும்பமாக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினோம். இது மறக்க இயலாத அனுபவம்.

இந்தப் படத்தில்… இந்த கதாபாத்திரத்தில்… நடிகை சுஷ்மிதாவை தவிர வேறு யாராலும் பொருத்தமாக நடித்திருக்க முடியாது. அந்த அளவிற்கு அற்புதமாக நடித்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள். தமிழ் சினிமா சார்பில் அவரை மனதார வரவேற்கிறேன்.

இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

லவ் மேரேஜ் படத்திலும் வித்தியாசமாக குடும்பத்தினர் அனைவரும் கண்டு களிக்கும் வகையிலான குடும்ப படமாக உருவாக்கி இருக்கிறோம். எப்போதும் போல் என் மீதும், என் படங்கள் மீதும் அன்பு செலுத்தி, படத்தை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகி ஜூன் 27 ஆம் தேதி அன்று வெளியாகும் ‘லவ் மேரேஜ்’ திரைப்படத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட் ,ரமேஷ் திலக், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை ராஜா கவனித்திருக்கிறார். ஃபேமிலி எண்டர்டெயின்ராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அஸ்யூர் ஃபிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டேய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் டாக்டர் ஸ்வேதா ஸ்ரீ மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் சக்தி வேலன் வழங்குகிறார்.

இதனைத் தொடர்ந்து ‘லவ் மேரேஜ் ‘ படத்தின் முன்னோட்டத்தை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

- Advertisement -

Recent Posts