பன் பட்டர் ஜாம் திரைப்படத்தின் ப்ரமோஷன் வீடியோவில் இயக்குநர் ராகவ் மிர்தாத், சமீபத்தில் அறிமுகமான Veo3 AI எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளார். பார்பதற்கு உண்மையான மனிதர்களை வைத்து எடுக்கப்பட்ட வீடியோக்களைப் போல் தோன்றும் இவை அனைத்தும் முழுக்க முழுக்க 0 மற்றும் 1, பைனரி கோடால் (Binary code)ஆல் உருவாக்கப்பட்டது. அத்தனை தத்ரூபமாக ஒளிப்படங்களை உருவாக்கும் இந்த தொழில்நுட்பத்தை, கடந்த மே மாதம் தான் Google நிறுவனம், அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியது.
Veo3 AI என்பது, இயற்கையான தோற்றம் மற்றும் சினிமா தரம் கொண்ட வீடியோக்களை உருவாக்கும் திறமை கொண்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாகும். இன்னும் இந்த தொழில்நுட்பம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்குள்ளாகவே, இத்தகைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி “பன் பட்டர் ஜாம்” குழு மாபெரும் கவன ஈர்ப்பை பெற்றிருக்கிறது.
Veo3 AI தொழில்நுட்பத்தின் மூலம் வீடியோவில் உயிரோட்டமான மனிதர்களை படைப்பது மட்டும் இன்றி, அவர்களை உலகின் எந்த மொழியையும் சரியான உதட்டசைவோடு பேச வைக்கலாம் என்பதுதான் சினிமா உலகையே புரட்டிப்போடக் கூடிய முக்கிய தகவல். முழு படத்தையே கூட ஒரு கம்யூட்டரின் உதவியோடு வருங்காலத்தில் இதன் மூலம் எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்று கூறப்படுகிறது.
பன் பட்டர் ஜாம் திரைப்பட குழுவினர் Veo3 AI வைத்து உருவாக்கிய ப்ரோமோஷன் வீடியோவில், அத்தொழில் நுட்பத்தின் ஆழம் நன்றாக வெளிப்படுத்துகிறது. இதில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் அனைவரும் இயற்கையாக இருப்பது வியப்பில் ஆழ்த்துகிறது. அதில் உள்ள செய்தியாளர், ஆப்பிரிக்கா மனிதர், ஐஸ்லாந்து பெண்மணி மற்றும் பலர், AI ஆல் உருவாக்கப்பட்ட இந்த அனைத்து கதாப்பாத்திரங்களும், அழகிய தமிழ் மொழியில் மிக உயிர்ப்புடன் பேசுவது கூடுதல் சிறப்பு.
முதன் முறையாக, இந்தியாவில் இன்னும் அறிமுகமே படுத்தப்படாத இத்தகைய தொழில்நுட்பத்தை வைத்து விளம்பரப்படுத்தியதில், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது “பன் பட்டர் ஜாம்”.
Gen Z தலைமுறையின் கதை சொல்லும் “பன் பட்டர் ஜாம்” !!
பிக்பாஸ் ராஜு கதாநாயகனாக அறிமுகமாகும் Gen Z தலைமுறை திரைப்படம் “பன் பட்டர் ஜாம்” !!
இப்படத்தை Rain Of Arrows Entertainment சார்பில் சுரேஷ் சுப்ரமணியன் தயாரிக்கிறார். ‘எண்ணித்துணிக’ படத்தை அடுத்து இரண்டாவது படமாக இப்படத்தை தயாரிக்கிறார். .
பிக்பாஸ் புகழ் ராஜூ, ஆத்யா பிரசாத் மற்றும் பவ்யா திரிகா நடிப்பில் இன்றைய Gen Z தலைமுறை ரிலேஷன்ஷிப்பை நகைச்சுவை ததும்பச் சொல்லும், அழகான டிராமாவாக உருவாகி உள்ளது, ”பன் பட்டர் ஜாம்”.
இறந்தகால வலிகளின் சுமைகளுக்கும், எதிர்காலத்தைப் பற்றிய பயங்களுக்கும் நடுவே ஊசலாடாமல், நிதானமாக நின்று நிகழ்காலத்தை புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக்கொள்ளும் Gen z இளைஞர்களைப் பற்றிய கதைதான் பன் பட்டர் ஜாம். சுற்றி எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அந்தந்த கணத்தை முழுமையாக வாழப் பழகினால், கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை என்கிற பாசிட்டிவிவான கருத்தை பரபரப்பாகவும், முழுக்க முழுக்க நகைச்சுவை ததும்பச் சொல்லும் வகையிலும், இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.
ராகவ் மிர்தாத், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் பீல் குட் ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கியுள்ளார். முக்கியமாக சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி ஜோடி அதகளப்படுத்தி இருப்பதாக பேசப்படுகிறது. நடிகர் சார்லியின் கதாப்பாத்திரம் அவரின் அடுத்த மைல் கல்லாக இருக்குமென்று கூறுகிறார்கள். இவர்களுடன் மைக்கேல் தங்கதுரை மற்றும் V.J பப்பு முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
ஜூலை 18 ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் வெளியாகிறது. தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்
தயாரிப்பு நிறுவனம் : Rain Of Arrows Entertainment எழுத்து , இயக்கம் : ராகவ் மிர்தாத் இசை: நிவாஸ் K பிரசன்னா ஒளிப்பதிவு : பாபு குமார் IE எடிட்டிங்: ஜான் ஆபிரகாம் கலை இயக்குநர் : ஸ்ரீ சசிகுமார் பாடல்கள்: கார்த்திக் நேதா, உமா தேவி, மோகன் ராஜா, சரஸ்வதி மேனன் நடனம்: பாபி நிர்வாக தயாரிப்பு : M.J.பாரதி மக்கள் தொடர்பு : ஜான்சன்
Actor Mahat Raghavendra Trains with Australian Boxing Champion Koen Mazoudier: A Cross-Continental Pursuit of Power and Precision
Chennai, India – June 18, 2025: Renowned Indian actor Mahat Raghavendra, known for his standout roles in films such as Mankatha, Backbench Student, and Double XL, has taken his passion for physical transformation and discipline to the next level—by stepping into the boxing ring. Over the past year, Mahat has been rigorously training in India, followed by an intensive three-month boxing mentorship in Australia.
The highlight of his boxing journey was the opportunity to train under Koen Mazoudier, the 2025 Australian Super Welterweight Boxing Champion. Mahat describes the experience as “an incredible journey of power, speed, focus, balance, and skill.” The actor immersed himself in the champion’s world, embracing the challenges of elite-level training while balancing his acting commitments.
“This wasn’t just about fitness—it was about building a fighter’s mindset,” said Mahat. “Working with Koen gave me a deeper understanding of focus, strategy, and the mental discipline it takes to succeed in any arena—whether in the ring or in front of the camera.”
This new chapter reflects Mahat’s commitment to personal growth and a deeper pursuit of excellence, both physically and artistically. “ iam deeply motivated by Ajith Anna breaking stereo types ,Ajith Anna’s car racing achievements show that actors can push boundaries and excel in undisputed areas !I shall incline to participate in competitive sports a sport which I love and prove my mettle“ the handsome actor added.
Fans can expect to see a bolder, sharper version of Mahat in upcoming projects, with this real-world training experience likely to influence his future performances—especially in action-centric roles.
About Mahat Raghavendra: Mahat is a versatile Indian actor with a strong presence in Tamil and Telugu cinema. He made his film debut with The massive hit Mankatha and gained recognition through critically acclaimed roles in Mankatha, Jilla, Double XL, and Backbench Student. A finalist on Bigg Boss Tamil Season 2, he continues to evolve as both an entertainer and a committed athlete.
“அஜித் அண்ணா தான் இன்ஸ்பிரேஷன்!” ~ ஆஸ்திரேலிய பாக்ஸிங் சாம்பியன் கோயன் மசூடியரிடம் பயிற்சி பெற்ற நடிகர் மஹத் ராகவேந்திரா!
சென்னை, இந்தியா- ஜூன் 18, 2025: ‘மங்காத்தா’, ‘பேக்பென்ச் ஸ்டூடண்ட்’, ‘டபுள் XL’ போன்ற படங்களில் தனது தனித்துவமான கதாபாத்திரங்களால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் மஹத் ராகவேந்திரா. தனது பிசிக்கல் டிரான்ஸ்ஃபர்மேஷனுக்காக தற்போது பாக்ஸிங் கற்றுள்ளார். கடந்த ஒரு வருடமாக இந்தியாவில் பாக்ஸிங்கில் நடிகர் மஹத் கடுமையான பயிற்சி பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் ஆஸ்திரேலியாவில் பாக்ஸிங் பயிற்சி பெற்றார்.
இந்த வருடம் அதாவது 2025 ஆஸ்திரேலிய சூப்பர் வெல்டர்வெயிட் குத்துச்சண்டை சாம்பியனான கோயன் மசூடியரிடம் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்ததுதான் நடிகர் மஹத் குத்துச்சண்டை பயணத்தின் சிறப்பம்சம். இந்த அனுபவத்தை “சக்தி, வேகம், கவனம், சமநிலை மற்றும் திறமை ஆகியவற்றின் நம்பமுடியாத பயணம். இதில் பல சவால்கள் இருந்தாலும் அதை சமாளித்து பயிற்சி பெற்றேன். இது ஃபிட்னஸ் தொடர்புடையது மட்டுமல்ல, ஒரு போராளியின் மனநிலையையும் எனக்குள் உருவாக்கியது” என்று நடிகர் மஹத் கூறினார்.
மேலும் கோயனுடன் பயிற்சி பெற்றது பற்றி விவரிக்கும்போது, “கோயனிடம் பயிற்சி பெற்றது சிறந்த அனுபவம். பாக்ஸிங் அரங்கமோ அல்லது கேமராவுக்கு முன்பு என்றாலுமே சரி வெற்றிபெற தேவையான கவனம், உத்தி மற்றும் மன ஒருமைப்பாடு பற்றிய ஆழமான புரிதலை எனக்கு அளித்தது” என்றார்.
இந்தப் புதிய அத்தியாயத்தின் மூலம் மஹத் தனது தனிப்பட்ட வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு, உடல் ரீதியாகவும் கலை ரீதியாகவும் தன்னை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்வதையும் இதன் மூலம் உறுதி செய்துள்ளார். “நடிகர்கள் தங்களுக்கான ஸ்டிரீயோ டைப்பை உடைக்க வேண்டும் என்பதை கார் ரேஸ் சாதனைகள் மூலம் எனக்கு அஜித் அண்ணாதான் புரிய வைத்தார். நான் விரும்பும் போட்டி விளையாட்டுகளில் பங்கேற்கவும், என் திறமையை நிரூபிக்கவும் இனிவரும் காலங்களில் விரும்புகிறேன். அடுத்தடுத்து எனது படங்களிலும் திறமையை மேம்படுத்தவும் இது உதவும்” என்றார்.
நடிகர் மஹத் ராகவேந்திரா பற்றி:
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகர் மஹத் ராகவேந்திரா. அவர் மிகப்பெரிய வெற்றி பெற்ற ’மங்காத்தா’ மூலம் திரையுலகில் அறிமுகமானார். மேலும் ’ஜில்லா’, ’டபுள் எக்ஸ்எல்’ மற்றும் ’பேக்பெஞ்ச் ஸ்டூடண்ட்’ ஆகிய படங்களிலும் தனது நடிப்பு மூலம் முத்திரை பதித்தார். பிக் பாஸ் தமிழ் சீசன் 2 இல் இறுதிப் போட்டியாளராகவும் வந்தார். தற்போது நடிகராக மட்டுமல்லாது பயிற்சி பெற்ற அத்லெட்டாகவும் மாறி இருக்கிறார்.
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்தத் திரைப்படத்திற்கு ஊடகங்களும் நல்ல படைப்பு என்ற விமர்சனத்தை வழங்கி வருகிறது. இதனால் இந்த திரைப்படம் மிகப் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. தொடர்ந்து நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவுடன் இந்த படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த தருணத்தில் படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும் , ரசிகர்களுக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நடிகர் ‘லொள்ளு சபா’ சாமிநாதன் பேசுகையில், ” புதிய கலைஞர்களின் முயற்சியை ஊடகங்கள் பாராட்டின. இதனால் இந்த படத்திற்கு வெற்றி கிடைத்தது.
இந்தப் படத்தில் என்னுடைய வழக்கமான பாணியில் நடிக்காமல் இயக்குநர் சொன்னதை கேட்டு நடித்தேன். படப்பிடிப்பு தளத்திற்கு மதியம் ஒரு மணிக்கு சென்றேன். இரண்டு மணிக்கு காட்சிகளை படமாக்க தொடங்கினர். நான்கு மணிக்கு என்னுடைய பங்களிப்பு நிறைவு என்று சொல்லிவிட்டார்கள். அதன் பிறகு படத்திற்கு பின்னணி பேசுவதற்காக சென்றேன். அங்கும் எனக்கு வித்தியாசமான அனுபவம் தான் கிடைத்தது. இப்படத்தின் இயக்குநரை நினைத்தால் பெருமிதமாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியையும் ரசனையுடன் சொல்லிக் கொடுத்தார்.
படத்தில் நடித்த அனைத்து நடிகர் , நடிகைகளுக்கும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி. ” என்றார்.
இசையமைப்பாளர் கே. சி. பால சாரங்கன் பேசுகையில், ” அனைவருக்கும் நன்றி. இப்படம் தொடர்பாக இணையத்தில் வெளியான அனைத்து விமர்சனங்களையும் நான் கவனித்து வாசித்திருக்கிறேன். அனைவரும் தங்களின் மேலான ஆதரவை வழங்கியிருக்கிறார்கள். படத்தை தங்களுடைய படமாக நினைத்து அனைவரிடமும் பகிர்ந்து கொண்ட ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. இந்த படத்திற்கு சிறப்பான திரையரங்க அனுபவத்தை ஒலி மூலம் வழங்கிய தொழில்நுட்பக் கலைஞர் ரூபனுக்கும் நன்றி. என்றார்.
நடிகர் விஷ்வா பேசுகையில், ” இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு நன்றி. வெளியான நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் வித்தியாசமான அனுபவங்களை சந்திக்கிறேன். எனக்கு இந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வழங்கிய இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி.
படத்தில் நடிப்பதற்கு ஒவ்வொரு கலைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கிய இயக்குநருக்கு நன்றி. குறிப்பாக என் மீது நம்பிக்கை வைத்து தினேஷ் கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார் .
நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் பேசுகையில், ” சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் எங்களின் கனவு பெரிதாக இருந்தது. கனவும் , ஆசையையும் வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தொடங்கும்போது பேப்பரில் இருந்த இந்த கதையை திரைக்கு கொண்டு வந்து, அந்த உணர்வை அனைவரும் உணர்ந்து ரசித்து பாராட்டும் போது அதை சொல்வதற்கு வார்த்தை இல்லை. நாங்கள் அனைவரும் இணைந்து நடித்த ஒரு படத்திற்கு அனைவரும் தங்களின் இதய பூர்வமான ஆதரவை தெரிவித்ததை நேரில் பார்க்கும் போது உற்சாகமாக இருந்தது. ரசிகர்கள், ரசிகைகள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது. ” என்றார்.
இந்தப் படத்தை வெளியிட்ட ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும், இந்த படத்தை பார்த்து பாராட்டிய திரையுலக பிரபலங்களுக்கும் நன்றி” என்றார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விநியோகிஸ்தர் குகன் பேசுகையில்… இப்படத்திற்கு ஊடகங்களும் , ரசிகர்களும் கொடுத்த ஆதரவும் , வரவேற்பும் மிக அதிகம். இதற்கு எங்கள் நிறுவனத்தின் சார்பில் கோடான கோடி நன்றிகள். இந்தப் படத்தைப் பார்த்து பாராட்டிய திரையுலக பிரபலங்களுக்கு நன்றி.
‘மெட்ராஸ் மேட்னி’ நடுத்தர குடும்பத்து மக்களின் கதை. இதில் என்ன கதையை இவர்கள் சொல்ல வருகிறார்கள்..? இது ஒரு சாதாரண கதை. ஆனால் இதை ஒரு திரைப்படமாக உருவாக்குவதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். மேலும் இந்த கதை மீது நம்பிக்கை வைத்த இயக்குநர் கார்த்திகேயன் மணிக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும்.
சாதாரண கதையை அசாதாரணமான திரைக்கதை மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருந்தார். அதனால் தான் இந்தப் படத்தை பார்த்த மக்கள் அனைவரும் பாராட்டினார்கள். படத்துடன் உணர்வுபூர்வமாக தொடர்பு கொண்டார்கள். படம் வெளியான பிறகு படத்தைப் பார்த்த ரசிகர்களிடத்தில் அதன் தாக்கம் அதிகம் இருந்தது.
படத்தின் கதையை கேட்டு நடித்த நடிகர்கள் அனைவரும் இதனை எப்படி புரிந்து கொண்டிருப்பார்கள். அதை திரையில் வழங்கிய விதம் இன்னும் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.
இயக்குநர் – இசையமைப்பாளர் – ஒளிப்பதிவாளர் – படத்தொகுப்பாளர் – என அனைவரும் புதுமுக கலைஞர்கள். சினிமா மீது அர்ப்பணிப்புடன் கூடிய ஆர்வத்துடன் இருப்பவர்கள். இதன் காரணமாகத்தான் இவர்களால் இப்படி ஒரு படைப்பை உருவாக்க முடிந்தது என நான் நினைக்கிறேன்.
இந்தத் தருணத்தில் எங்கள் நிறுவனத்துடன் இணைந்து பயணித்த திரையரங்கு உரிமையாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கள் நிறுவனம் கலந்து கொள்ளும் மூன்றாவது நன்றி அறிவிப்பு விழா இது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் மூன்று படங்களில் பணியாற்றியவர்கள் அனைவரும் புதுமுக படைப்பாளிகள் என்பது தான். ” என்றார்.
இயக்குநர் கார்த்திகேயன் மணி பேசுகையில், ” மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படத்தை ஏன் முதலில் இயக்கினேன் என்றால்.. இது வரை சொல்லப்படாத ஒரு கதை. உண்மையான ஹீரோ யார் என்பதை சொல்லும் கதை இது.
தான் முன்னேற வாய்ப்பே இல்லை என்று தெரிந்தும் ஓயாமல் ஓடும் நம்முடைய அப்பா அம்மாக்கள் தான் என்னைப் பொறுத்தவரை ரியல் ஹீரோ.
அவர்களுடைய கதையை ஒரு திரையரங்க அனுபவத்துடன் கூடிய கதையாக சொல்ல வேண்டும் என நினைத்தேன். இந்த நோக்கத்தில் உருவானது தான் இந்த திரைப்படம்.
புது தயாரிப்பு நிறுவனம் – புது இயக்குநர் – புது தொழில்நுட்பக் கலைஞர்கள் – சின்ன பட்ஜெட் படம் – நாங்கள் எளிதாக காணாமல் போயிருக்கலாம். அதற்கான வாய்ப்பும் அதிகம் இருந்தது. ஆனால் இந்த கதை ஒரு அர்த்தமுள்ள கதையாக இருந்ததால்.. ஊடகங்கள் இந்த படத்தை வெகுவாக ஆதரித்தன. இதுதான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அத்துடன் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எனும் பிரபலமான நிறுவனம் எங்களுடன் இணைந்ததால் இந்த வெற்றி சாத்தியமானது. இதற்காக அந்த நிறுவனத்திற்கும் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு மற்றும் குகனுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதைத்தொடர்ந்து இந்த படத்திற்கு நடிகர்கள் தங்களின் அர்ப்பணிப்புள்ள உழைப்பை வழங்கி கதாபாத்திரத்திற்கு உயிர்ப்பூட்டியதால் இந்த வெற்றி கிடைத்தது. இதற்காக இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் , நடிகைகளுக்கும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவர்களுடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது.
இந்தப் படத்திற்கு ரசிகர்களின் எதிர்வினையை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். படம் வெளியான இரண்டாவது நாள் பல்லாவரத்தில் இரவு காட்சியை பார்த்துவிட்டு திரும்பும் ஒரு பெண் தன் கண்ணீரை அடக்கிக் கொண்டு’ நான் ஒரு டாக்டர் என் அப்பா ஒரு ஆட்டோ டிரைவர் ‘என்று என்னிடம் சொன்னபோது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது.
தமிழ் ரசிகர்கள் உணர்வுபூர்வமானவர்கள் மட்டுமல்ல. அறிவு பூர்வமானவர்களும் கூட. இந்த இரண்டும் இணைந்து கொடுத்தால் அவர்கள் கொண்டாடத் தவறுவதில்லை. மெட்ராஸ் மேட்னி அதற்கு ஒரு சிறந்த உதாரணம். படத்தை திரையரங்கிற்கு சென்று பார்க்கும் ரசிகர்களுக்கு நன்றி.
இந்தப் படம் வெளியான பிறகு, ‘காளி வெங்கட் கொண்டாடப்பட வேண்டியவர்’ என்பதை உணர்ந்தேன். அவர் ஒரு லாபத்தை வழங்கும் நட்சத்திர நடிகர் என்பதையும் ஒரு தயாரிப்பாளராக இங்கு கூறுவதில் பெருமிதம் கொள்கிறேன்” என்றார்.
நடிகர் காளி வெங்கட் பேசுகையில், ” இந்தப் படத்திற்கு இதுவரை வழங்கிய ஆதரவிற்கும், இதற்கும் மேலும் தொடர்ந்து வழங்கப் போகும் ஆதரவிற்கும் நன்றி.
இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கு நன்றி. இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசரான அபிஷேக் ராஜா மூலம் இயக்குநர் அறிமுகமாகி கதையை சொன்னார். அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தை சொன்னார். அது என்னுடைய தந்தையை நினைவு படுத்தியது. அவருக்கு சமர்ப்பிக்க இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது என்று இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
இந்தப் படம் வெளியான பிறகு ரசிகர்களின் வரவேற்பை தெரிந்து கொள்வதற்காக திரையரங்கத்திற்கு சென்ற போது, சிலர் என்னை கட்டிப்பிடித்து அழுதனர். என் சட்டை ரசிகர்களின் கண்ணீரால் நனைந்தது. இந்த அனுபவம் புதிதாக இருந்தது மறக்க முடியாததாகவும் ஆகிவிட்டது.
நடிக்கும்போது அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை.
கலையில் மட்டும் தான் அழுவதை கூட ரசிக்க முடியும். இது சினிமாவில் உள்ள நடிகர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம்.
நான் இதற்கு முன்பு அதிகமாக பார்த்த படம் கார்கி. தற்போது அதைவிட அதிகமாக பார்த்த படம் மெட்ராஸ் மேட்னி. ஏனெனில் இந்தப் படத்தின் ஒலி அமைப்பு மிகச் சிறப்பாக இருந்தது.
இந்தப் படத்தில் ஒரு பாடலை பாடிய வடிவேலுக்கு நன்றி. மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை படமாக்குவதில் என்ன இருக்கிறது? என்ற கேள்விக்கு இயக்குநர் இந்த படத்தை பதிலாக அளித்திருக்கிறார். இதனால் நான் இயக்குநரை மனதார பாராட்டுகிறேன். மேலும் இந்தக் கதையை.. அவர் சொன்ன விதத்தை நான் முக்கியமானதாக பார்க்கிறேன்.
ஒரு கவிதையை மொழிபெயர்த்து அதனை திரைப்படமாக உருவாக்குவது போல் இருந்தது. இயக்குநர் கார்த்திகேயன் மணி தொடர்ந்து இது போன்ற படங்களையும் இயக்க வேண்டும். மேலும் இந்தப் படம் ஏராளமானவர்களுக்கு புது நம்பிக்கையை அளித்திருக்கிறது. இதற்காகவும் இயக்குநர் கார்த்திகேயன் மணிக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
Yash Raj Films and Mohit Suri’s Saiyaara is turning out to be the best music album to have come out of Bollywood in a long, long time. After the chartbuster Saiyaara title track, the second song Barbaad, sung by Jubin Nautiyal, is also a rage on the internet now. The makers have dropped the third song of the film today, a peppy love track called Tum Ho Toh, sung by the most talked-about young singer of India today, Vishal Mishra!
Catch the song here : https://www.youtube.com/watch?v=rOUuGvJkBrQ
Mohit Suri reveals that he has known Vishal for 12 years now and was overwhelmed to learn that Vishal decided to pursue music as a career after listening to Mohit’s soulful love songs during his college days.
Mohit, who completes 20 years in the Hindi film industry during which he has delivered scores of musical megahits that the country has called in love with, says, “Vishal & I had always planned to collaborate on something special ever since he came to meet me over 12 years back! We just waited for the right moment and I’m glad it was for Saiyaara. I was humbled to hear him say that it was my music that made him want to pursue music as a career. He fell in love with my brand of music when he was going through a heart-break during his college days!”
He adds, “When you hear your work have an impact like this on someone, it is an overwhelming feeling. I have always felt that music has the ability to touch people’s hearts and is an extremely pure medium. So, in my 20 years of directing and creating music, I do feel grateful that I have created memories for people through my songs. Vishal Mishra is one of the most talented artistes I have ever met in my career and it is my privilege to have him in the music album of Saiyaara. I still have the scratches that Vishal had given me since he kept meeting me for 12 years now and they are just pure gold!”
Mohit is thrilled to see Vishal’s meteoric success due to his sheer talent. He says, “To know him, to collaborate with him and to see him grow as an artist, just gives me a lot of joy. He has created magic in my opinion with Tum Ho Toh and I can’t wait to unleash his genius with the third song drop from Saiyaara. For those who love his music, they will be thrilled to probably have his best romantic song yet and for those who are growing fond of Vishal’s music, they will fall in love with him with Tum Ho Toh.”
Ever since the teaser release, Saiyaara that brings together YRF and Mohit, both known for creating timeless love stories, has garnered unanimous praise for making an intense love story with debutants who share infectious chemistry and brilliant acting skills.
The title of Saiyaara has also piqued interest of audience. It means a wandering celestial body, but in poetry it’s often used to describe something (or someone) dazzling, ethereal, or otherworldly — a wandering star – always shining, always guiding, but always out of reach.
The film introduces Ahaan Panday as a hero to the Hindi film industry and also stars Aneet Padda (who stole hearts with her brilliant performance in the much-acclaimed series Big Girls Don’t Cry) as the female lead. Saiyaara is produced by the company’s CEO Akshaye Widhani and it is set to release on July 18, 2025 in theatres worldwide.
YRF, in its 50 year history, is known for giving India some of the cult romantic films of all time primarily directed by Yash Chopra and Aditya Chopra. Mohit Suri, who is currently in his 20th year in cinema, has also directed some of the most favourite romantic films like Aashiqui 2, Malang, Ek Villain, etc.
என்னுடைய பாடல்கள் தான் இசை கலைக்கு வர தூண்டியது என்று விஷால் மிஸ்ரா சொல்வதைக் கேட்டு வியப்பில் உள்ளேன் !’: சையாராவின் புதிய பாடலான ‘தும் ஹோ தோ’-ல் விஷால் மிஸ்ராவுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறார் மோஹித் சூரி
யஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் மோஹித் சூரியின் கூட்டணியில் உருவாகியுள்ள சையாரா படத்தின் பாடல்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு பாலிவுட்டில் இருந்து வெளிவந்த சிறந்த இசை ஆல்பமாக மாறியுள்ளது .சையாரா டைட்டில் பாடலுக்கு பிறகு, ஜூபின் நௌடியல் பாடிய இரண்டாவது பாடல் பர்பாத் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது இந்த படத்தின் மூன்றாவது பாடலான ‘தும் ஹோ தோ’ என்கிற காதல் பாடலை இன்று வெளியிட்டுள்ளனர். இப்பாடலை இன்று இந்தியாவின் மிகவும் பேசப்படும் இளம் பாடகர் விஷால் மிஸ்ரா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஷாலை கடந்த 12 வருடங்களாகத் தெரியும் .கல்லூரி நாட்களில் தன் படங்களில் இடம்பெற்ற ஆத்மார்த்தமான காதல் பாடல்களைக் கேட்ட பிறகு தான் விஷால் இசை கலைக்கு வர முடிவு செய்ததை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக மோஹித் சூரி கூறியுள்ளார் .
பாலிவுட் திரையுலகில் 20 ஆண்டுகளை நிறைவு செய்து, நாடு முழுவதும் போற்றும் ஏராளமான மெகா ஹிட் பாடல்களை வழங்கிய மோஹித் கூறுகையில் , “விஷால் 12 ஆண்டுகளுக்கு முன்பு என்னைச் சந்திக்க வந்ததிலிருந்து, நானும் அவரும் கண்டிப்பாக ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என திட்டமிட்டிருந்தோம் .சரியான தருணத்திற்காக நாங்கள் காத்திருந்தோம்.அது சையாராபடத்தில் நிகழ்ந்தது. இதனால் நான் மகிழ்ச்சியடைகிறேன். கல்லூரி நாட்களில் அவர் மனவேதனையில் இருந்தபோது, எனது இசை அவரை கவர்ந்தது. உங்கள் படைப்புகள் ஒருவரின் மீது இது போன்ற தாக்கத்தை ஏற்படுத்துவதை நீங்கள் கேட்கும் போது, அது ஒரு மிகப்பெரிய உணர்வு. இசை மக்களின் இதயங்களைத் தொடும் திறன் கொண்டது என்றும், அது மிகவும் தூய்மையான ஊடகம் என்றும் நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். எனவே, எனது 20 ஆண்டுகால இசை இயக்கம் மற்றும் உருவாக்கத்தில், எனது பாடல்கள் மூலம் மக்களுக்கு நினைவுகளை உருவாக்கியதற்கு நான் நன்றி உள்ளவனாக உணர்கிறேன். விஷால் மிஸ்ரா எனது வாழ்க்கையில் நான் சந்தித்த மிகவும் திறமையான கலைஞர்களில் ஒருவர், அவருடன் பயணிப்பது ஒரு பாக்கியம்.விஷாலின் அபாரமான திறமையால் அவரது அபார வெற்றியைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன் .அவரை அறிவது, அவருடன் இணைந்து பணியாற்றுவது மற்றும் அவர் ஒரு கலைஞராக வளர்வதைப் பார்ப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தும் ஹோ தோவுடன் அவர் என் கருத்துப்படி ஒரு மேஜிக்கை உருவாக்கியுள்ளார்.மேலும் சையாராவின் மூன்றாவது பாடல் மூலம் அவரது இசையை விரும்புவோருக்கு, அவரது சிறந்த காதல் பாடல் இன்னும் கிடைப்பதில் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
சையாரா தலைப்பு பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இது ஒரு அலைந்து திரியும் நட்சத்திரம் ,எப்போதும் பிரகாசிக்கும், எப்போதும் வழிகாட்டும், ஆனால் எப்போதும் எட்டாதது.” என இவ்வாறு கூறியுள்ளார் .
இந்த திரைப்படத்தின் மூலம் அஹான் பாண்டே ஹிந்தித் திரைப்படத் துறைக்கு ஒரு ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார் . மேலும் அனீத் பத்தா (பிக் கேர்ள்ஸ் டோன்ட் க்ரை என்ற மிகவும் பாராட்டப்பட்ட தொடரில் அவரது அற்புதமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் ) கதாநாயகியாக நடிக்கிறார். சையாராவை யஷ் ராஜ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அக்ஷய் விதானி தயாரித்துள்ளார். இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 18ந் தேதியன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது.
On the special occasion of the birthday of legendary Malaysian Indian music icon Darkkey Nagaraja, celebrated music composer GV Prakash Kumar launched the much-awaited glimpse of the upcoming feature film AKU DARKKEY – a powerful musical biopic chronicling the extraordinary journey of the man who pioneered the unique genre of Sambarock.
Produced by Poketplay Films and helmed by director Vicram Lachumanam, AKU DARKKEY is not just a film — it is a celebration of resilience, rhythm, and revolution in the Malaysian Indian independent music scene. The story traces the humble beginnings of Darkkey, who arrived in Kuala Lumpur from Kuala Lipis with big dreams and nothing in his pocket, and went on to become a cultural icon who shaped generations with his music.
“Aku” means “I Am” in Malay — making the title a bold declaration of identity and legacy, capturing the essence of Darkkey’s fearless voice and enduring presence.
Darkkey, the frontman of the iconic band The Keys, carved his name in musical history with groundbreaking compositions and unforgettable performances, becoming a torchbearer for aspiring Malaysian Indian artists. The film delves deep into his struggles, his creative process, his impact on music and cinema, and the personal sacrifices behind the spotlight.
Director Vicram Lachumanam, who has previously collaborated with acclaimed filmmakers like Venkat Prabhu (Briyani, Mass) and Pa. Ranjith (Kabali), brings a wealth of cinematic insight and emotional depth to this narrative.
What makes this project even more special is the bond between the people behind it — more than just a crew of professionals, they are a circle of friends and admirers who’ve come together to pay tribute to Darkkey and his story from the heart.
The core creative team includes:
DOP: Yugan Shanmugam
Editor: Elayaraja Sekar
Sound Mix & Design: Suren.G, Alagiakoothan
Music Producers: Ashwath & Roshan Jamrock
Publicity Designers: Tuney John & Deepika Ravishankar
VFX & DI: Mango Post
PRO: Rekha
Producers Veerasegar Thyagarajan and Thiruvarasu Sandreseger, with Executive Producers Vicram Lachumanam and Amaresh, are backing this ambitious project that aims to shine a global spotlight on the vibrant and underrepresented Malaysian Indian music movement.
Through AKU DARKKEY, Poketplay continues its commitment to championing culturally rich and commercially viable cinema that resonates with audiences across borders.
The film is a heartfelt homage to a living legend whose voice still echoes across stages and hearts. Stay tuned for more updates and exclusive looks into the world of AKU DARKKEY.
பிரபல பாடகர் டார்க்கி நாகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு ‘AKU DARKKEY’ திரைப்படத்தின் ஃகிளிம்ஸை வெளியிட்டார் ஜி.வி. பிரகாஷ்;
இசை சார்ந்து உருவாகும் டார்க்கி நாகராஜின் பயோ-பிக் திரைப்படமான “AKU DARKKEY”;
மலேசிய இந்திய இசைத் துறையின் தலைசிறந்த புரட்சியாளராக திகழும் டார்க்கி நாகராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு, புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், பலரும் எதிர்பார்த்திருந்த ‘AKU DARKKEY’ திரைப்படத்தின் முதல் ஃகிளிம்ஸை வெளியிட்டார்.
Poketplay Films நிறுவனம் தயாரிக்க, விக்ரம் லட்சுமணம் இயக்கும் இந்த திரைப்படம், மலேசிய இந்திய சுயாதீன இசையின் களத்தில் ஒரு வரலாற்றுச் செயல்பாட்டாகும். சாம்பாராக் எனும் தனித்துவமான இசைமுறையை உருவாக்கிய டார்க்கியின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்த சினிமா பயோபிக் (musical biopic), அவரின் வாழ்க்கைப் பயணத்தையே திரைபடமாகக் கொண்டு வருகிறது.
“Aku” என்பது மலாய் மொழியில் “நான்” என்று பொருள்படும் – ஆகவே, ‘AKU DARKKEY’ என்பது ஒரு வலிமையான அடையாளமும், பெருமைமிக்க மரபும் கொண்ட தலைப்பாகும். டார்க்கியின் துணிச்சலான குரல் மற்றும் அழியாத பார்வையை இந்த பெயர் பிரதிபலிக்கிறது.
கோலா லிப்பிஸிலிருந்து கோலா லம்பூருக்குள் வெறும் கனவுகளோடு வந்த டார்க்கி, பின்னாளில் “The Keys” என்ற புகழ்பெற்ற இசைக்குழுவின் தலைவராக எழுந்து, பல தலைமுறைகளை தனது இசையால் கவர்ந்தவர். அவர் எதிர்கொண்ட போராட்டங்கள், உருவாக்கக் கலை, சினிமா மற்றும் இசைக்கு அளித்த தாக்கம் மற்றும் பிரபலம் பின்னே இருக்கின்ற தியாகங்களை இந்த திரைப்படம் ஆழமாக எடுத்துரைக்கிறது.
இயக்குநர் விக்ரம் லட்சுமணம், முன்னதாக வெங்கட் பிரபு (பிரியாணி, மாஸ்) மற்றும் பா. ரஞ்சித் (கபாலி) போன்ற இயக்குநர்களுடன் பணியாற்றியவர், அவரது கதை சொல்லும் திறன் மற்றும் உணர்ச்சிகரமான அணுகுமுறையால் இந்தப் படத்திற்கு ஆழமான அடித்தளத்தை வழங்குகிறார்.
இந்தப் படத்தின் மற்ற முக்கியக் கலைத்துறையினர்:
ஒளிப்பதிவாளர்: யுகன் சண்முகம் தொகுப்பு: இலையராஜா சேகர் சத்த ஒலி & வடிவமைப்பு: சுரேன்.ஜி, அழகியகூத்தன் இசை தயாரிப்பாளர்கள்: அஸ்வத் & ரோஷன் ஜாம் ராக் பொதுமக்கள் தொடர்பு வடிவமைப்பாளர்கள்: டியூனி ஜான் & தீபிகா ரவிசங்கர் VFX & DI: மேங்கோ போஸ்ட் PRO : ரேகா
இந்தத் திரைப்படத்தை வீரசேகர் தியாகராஜன் மற்றும் திருவரசு சாண்டிரசேகர் தயாரிக்க, விக்ரம் லட்சுமணம் மற்றும் அமரேஷ் இணை தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளனர். மலேசிய இந்திய இசை இயக்கத்தின் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள கலாச்சார பிம்பத்தை உலக அளவில் கொண்டு செல்லும் நோக்கத்தில் இத்திரைப்படம் உருவாகிறது.
AKU DARKKEY மூலமாக, Poketplay Films, வர்த்தக ரீதியாக பயனுள்ளதாகவும், கலாசார ரீதியாக ஆழமான தாக்கம் கொண்ட சினிமாக்களை உருவாக்கும் தனது நோக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டுகிறது.
இது ஒரு நேரடியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு இசைப் புரட்சியாளருக்கான உணர்ச்சிகரமான பாராட்டு.
மேலும் அப்டேட்கள் மற்றும் ‘AKU DARKKEY’ உலகிற்குள் உங்கள் பார்வையை விரிவுபடுத்த எக்ஸ்க்ளூசிவ் தகவல்களுக்காக காத்திருக்கவும்!
இந்த கதை இப்போது தன்னைத்தானே இசையாக பேச ஆரம்பித்துவிட்டது.
Sony LIV in collaboration with Applause Entertainment and Kukunoor Movies brings this extraordinary true story to the screen in The Hunt: The Rajiv Gandhi Assassination Case, a gripping political thriller based on the bestselling book Ninety Days by investigative journalist Anirudhya Mitra.
Directed by National Award-winning filmmaker Nagesh Kukunoor, and co-written with Rohit Banawalikar and Sriram Rajan, the series delves deep into a world of espionage, blurred loyalties, intelligence breakdowns, and the sheer human cost of justice.A Riveting Ensemble Cast Includes: Amit Sial as D.R. Kaarthikeyan (Chief of SIT), Sahil Vaid as Amit Verma, (SP-CBI), Bhagavathi Perumal as Ragothaman (DSP-CBI), Danish Iqbal as Amod Kanth (DIG-CBI), Girish Sharma as, Radhavinod Raju (DIG-CBI), Vidyut Garg as Capt. Ravindran (NSG Commando)Along with Shafeeq Mustafa, Anjana Balaji, B Sai Dinesh, Shruthy Jayan, Gouri Menon, and others
ஜூன் 20, 2025 அன்று திரையரங்குகளில் வெளிவரவுள்ளது!
இன்சைட் அவுட் 2 மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, டிஸ்னி மற்றும் பிக்சார் இணைந்து மற்றுமொரு கனவுபோன்ற அதிரடியான திரைப்படத்தை வழங்க உள்ளன – “எலியோ”! இந்த இன்டர்கலக்ஸி அத்தியாயம் வரும் ஜூன் 20, 2025 அன்று ஆங்கிலம், தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகமெங்கும் வெளியாகிறது.
இன்க்ரெடிபிள்ஸ், டாய் ஸ்டோரி, ஃபைண்டிங் நீமோ, இன்சைட் அவுட் போன்ற கனவுகளை ரசிகர்களுக்கு வழங்கிய புகழ்பெற்ற ஸ்டூடியோ, இப்போது நம்மை விண்வெளிக்கு அப்பால் அழைத்துச் செல்லும் புதிய அனுபவத்தை வழங்குகிறது.
எலியோ – விண்வெளியை பற்றிய ஆசையுடன் வாழும் ஒரு சிறுவன், எதிர்பாராத விதமாக அண்டாரங்கள் முழுவதும் பயணம் செய்யும் புது அவதாரத்தில், பூமியின் தூதராக பரிசீலிக்கப்படுகிறான்! வித்தியாசமான கிரகங்கள், வினோதமான உயிரினங்கள் மற்றும் பிரபஞ்சத்தை பாதிக்கும் ஒரு பெரும் சிக்கலை சந்திக்கிறான் எலியோ. இந்த பயணத்தில், தனக்கென இருக்கும் இடத்தை உணர்வதும், உண்மையிலேயே யார் என்பதை கண்டுபிடிப்பதும் தான் கதையின் மையம்.
கலைஞர் தொலைக்காட்சியில் வெற்றிகரமாகஒளிபரப்பாகி வரும் “தமிழோடு விளையாடு” இரண்டாவதுசீசன் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது.
பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் தொகுத்துவழங்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறுபள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றுஅசத்தி வரும் இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிஅத்தியாயத்தை நெருங்கி இருக்கிறது. தற்போது, தமிழோடு விளையாடு 2 பட்டத்தை வெல்லும் நோக்கில் 6 பள்ளிகள் கடுமையாக போட்டி போடுகின்றன. நிகழ்ச்சியின்பிரம்மாண்ட இறுதிச்சுற்று வருகிற ஞாயிறு மாலை 6 மணிமுதல் 8 மணி வரை தொடர்ந்து 2 மணிநேரம் ஒளிபரப்பாகஇருக்கிறது.
இந்த நிகழ்ச்சி மாணவர்களின் தமிழ் அறிவைசோதிக்காமல், தமிழ் அறிவை ஊட்டும்உணர்ச்சிப்பூர்வமான சுற்றுகளைக் கொண்டுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.
Dashing director Puri Jagannadh is all set to begin the shoot for his most ambitious Pan-India project, with the versatile Vijay Sethupathi in the lead role. Known for his high-octane storytelling, Puri blends his signature mass and commercial style with Vijay Sethupathi’s magnetic screen presence, promising a one-of-a-kind cinematic experience. The film will be produced under the Puri Connects banner by Puri Jagannadh and Charmme Kaur, and all pre-production formalities have been completed.
The makers recently announced the key cast members of the movie one after the other. Tabu and Duniya Vijay Kumar play crucial roles in the movie. Now, the very talented Samyuktha who is termed as the lucky charm of Tollywood comes on board to portray leading lady in the movie.
Importantly, this is not a conventional heroine role. Samyuktha’s character is integral to the narrative, with ample scope for performance and emotional depth. The actress is reportedly thrilled with the story and her role, and is eager to begin shooting.
The team has recently completed an extensive recce in Hyderabad and Chennai to finalize locations for the first schedule. The regular shoot is set to begin in the last week of June.
This pan-India project will be released in Telugu, Tamil, Kannada, Malayalam, and Hindi, aiming to captivate audiences across the country.
‘மக்கள் செல்வன் ‘விஜய் சேதுபதி- பூரி ஜெகன்நாத் -சார்மி கார் -பூரி கனெக்ட்ஸ் -கூட்டணியில் இணைந்த நடிகை சம்யுக்தா
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – இயக்குநர் பூரி ஜெகன்நாத்- சார்மி கவுர் – பூரி கனெக்ட்ஸ் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா இணைந்திருக்கிறார்.
அற்புதமான இயக்குநர் பூரி ஜெகன்நாத், பல் துறை திறமை கொண்ட ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியை முன்னணி வேடத்தில் நடிக்க வைத்து, தன்னுடைய இலட்சிய பான் இந்திய படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளார். தனது அதி நவீன பாணியிலான கதை சொல்லலுக்கு பெயர் பெற்ற பூரி ஜெகன்நாத் – தனது தனித்துவமான வெகுஜன மற்றும் வணிகத்தனம் மிக்க பாணியை, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் காந்தம் போன்ற திரை தோற்றத்துடன் இணைந்து தனித்துவமான சினிமா அனுபவத்தை வழங்க உறுதியளிக்கிறார். இந்த திரைப்படத்தை பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர் பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கின்றனர். மேலும் இது தொடர்பான அனைத்து முன் தயாரிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளன.
இப்படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்களின் பட்டியலை தயாரிப்பாளர்கள் அண்மையில் ஒன்றன்பின் ஒன்றாக அறிவித்தனர். தபு, துனியா விஜய் குமார் ஆகியோர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த பட்டியலில் தற்போது ‘தென்னிந்திய சினிமாவின் வசீகரம் ‘என போற்றப்படும் திறமையான நடிகை சம்யுக்தா முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இது வழக்கமான கதாநாயகி வேடம் அல்ல. சம்யுக்தாவின் கதாபாத்திரம் கதையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். நடிப்பிற்கும், உணர்ச்சிபூர்வமான ஆழத்திற்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. நடிகை சம்யுக்தா – இந்த படத்தின் கதை மற்றும் அவரது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆர்வமாக இருப்பதாகவும், படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நாளை ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
சென்னை மற்றும் ஹைதராபாத்தில் இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பை நடத்துவதற்கான இடங்களை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். இதன் வழக்கமான படப்பிடிப்பு ஜூன் மாத இறுதியில் தொடங்குகிறது.
பான் இந்திய அளவிலான இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியிடப்படும். மேலும் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவரும் நோக்கில் இந்த படம் இருக்கும்.
எழுத்து & இயக்கம் : பூரி ஜெகன்நாத் தயாரிப்பாளர்கள் : பூரி ஜெகன்னாத் – சார்மி கவுர் தயாரிப்பு நிறுவனம் : பூரி கனெக்ட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி : விஷூ ரெட்டி மக்கள் தொடர்பு : யுவராஜ் மார்க்கெட்டிங் : ஹாஷ்டாக் மீடியா
தென்னிந்திய நடிகர் சங்க மூத்த உறுப்பினரும், நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினரும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தலைவருமான உலக நாயகன் பத்மஸ்ரீ டாக்டர்.கமல்ஹாசன் அவர்கள் மாநிலங்களவைக்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நடிகர் சங்க தலைவர் திரு.நாசர், பொருளாளர் திரு.கார்த்தி, துணைத்தலைவர் திரு.பூச்சி எஸ்.முருகன், செயற்குழு உறுப்பினர் திரு.பிரேம், நியமன செயற்குழு உறுப்பினர்கள் திருமதி.லலிதாகுமாரி , திருமதி டையானா விசாலினி ஆகியோர் அவரை நேரில் சென்று சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் சங்க மேலாளர் தாமராஜ் உடன் இருந்தார்.
தலைவர் திரு.நாசர், பொருளாளர் திரு.கார்த்தி, துணைத்தலைவர் திரு.பூச்சி எஸ்.முருகன், செயற்குழு உறுப்பினர் திரு.பிரேம், நியமன செயற்குழு உறுப்பினர்கள் திருமதி.லலிதாகுமாரி , திருமதி டையானா விசாலினி ஆகியோர் அவரை நேரில் சென்று சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் சங்க மேலாளர் தாமராஜ் உடன் இருந்தார்.