- Advertisement -
Home Blog Page 183

வித்தியாசமான திரில்லர் டிராமா “மனிதர்கள்” மே 30 முதல் திரையரங்குகளில் !!

0

Studio Moving Turtle மற்றும் Sri Krish Pictures தயாரிப்பில், அறிமுக இயக்குநர் இராம் இந்திரா இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும், திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “மனிதர்கள்” திரைப்படம், வரும் மே 30 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரெய்லர், திரை ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, திரைப் படைப்பாளிகள் மத்தியில் பெரும் பாராட்டுக்களைக் குவித்துள்ளது.

இப்படத்தின் டிரெய்லரைப் பார்த்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெகு சுவாரஸ்யமான டிரெய்லர், படத்திற்காக காத்திருக்கிறேன் எனக் கூறியதோடு, தனது சமூக வலைத்தள பக்கத்திலும் படத்தின் டிரெய்லரைப் பகிர்ந்துள்ளார்.

புகழ் மிகு ஒளிப்பதிவாளர் பி சி ஶ்ரீராம் இப்படத்தின் டிரெய்லரால் ஈர்க்கப்பட்டு, உடனடியாக படக்குழுவினரை அழைத்துப் பாராட்டி, அவர்களோடு உரையாடியுள்ளார். அந்நிகழ்வில்.. முதல் சில நொடிகளிலேயே இந்தப்படம் என்னை ஈர்த்துவிட்டது. காட்சியும் களமும் வெகு சுவாரஸ்யமாக உள்ளது. படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள், எனத் தெரிவித்துள்ளார்.

ஒரு இரவில் ஒன்று சேர்ந்து மது அருந்தும் ஆறு நண்பர்கள், அடுத்த ஆறு மணி நேரத்தில், அவர்களுக்கும் ஏற்படும் ஒரு சிறு பொறி, எப்படி பெரும் பிரச்சனையாக வெடிக்கிறது என்பதை, பரபரப்பான திரைக்கதையில், வித்தியாசமான களத்தில் புதுமையான திரில்லராக, அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில், இப்படத்தை உருவாகியுள்ளார் அறிமுக இயக்குநர் இராம் இந்திரா.

இப்படத்தில் அறிமுக நடிகர்கள் கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வெளியீட்டுக்கு முன்னதாகவே மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், வரும் மே 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகீறது.

தொழில் நுட்ப குழு
எழுத்து – இயக்கம் – இராம் இந்திரா
ஒளிப்பதிவு – அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ்,
இசை – அனிலேஷ் எல் மேத்யூ ,
படத்தொகுப்பு – தின்சா,
கலை – மகேந்திரன் பாண்டியன்,
பாடல் – கார்த்திக் நேத்தா,
ஒப்பனை – அ சபரி கிரிசன்,
துனைத்தயாரிப்பு – தரணிதரன் பரிமளா குலோத்துங்கன்,
நா யுவராஜ்,
உதவி இயக்கம் – லோகேஷ் க கண்ணன்,
சண்டை பயிற்சி – வின் வீரா,
ஒளிக்கலவை – ஆனந்த் இராமச்சந்திரன்,
சப்தம் – சதீஷ்,
வண்ணம் – வசந்த் செ கார்த்திக்,
வரைகலை – ஆன்டனி பிரிட்டோ,
விளம்பர வடிவமைப்பு – ரிவர் சைடு ஹவுஸ்.

தயாரிப்பு (producers):
இராஜேந்திர பிரசாத்,
ஜெ.நவீன் குமார்,
மு.கி.சாம்பசிவம்.

மக்கள் தொடர்பு : AIM சதீஷ், சிவா.

விக்ராந்த் – சோனியா அகர்வால் கூட்டணியில் உருவான ‘ வில் ‘பட டீஸர் வெளியீடு

0

தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திரங்களான விக்ராந்த்- சோனியா அகர்வால் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கும் ‘வில் ‘எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான அருண் விஜய் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் எஸ். சிவராமன் இயக்கத்தின் உருவாகியுள்ள ‘வில்’ திரைப்படத்தில் விக்ராந்த், சோனியா அகர்வால், அலேக்யா, பதம் வேணு குமார், மோகன் ராமன் , ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். டி. எஸ். பிரசன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நடிகை சோனியா அகர்வாலின் சகோதரரான சௌரப் அகர்வால் இசையமைத்திருக்கிறார். நீதிமன்ற பின்னணியில் நடைபெறும் இந்த திரைப்படத்தை ஃபுட் ஸ்டெப்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் கோத்தாரி மெட்ராஸ் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஒரு பாடல் ஆகியவை வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்.. இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

டீஸர் குறித்து இயக்குநர் பேசுகையில், ”
வில் படத்தின் டீஸரில் ஒரு கதாபாத்திரம் சனாதனம் வேண்டுமா? திராவிடம் வேண்டுமா? இந்த இரண்டும் வேண்டுமா? வேண்டாமா? என்பது தொடர்பாக விமர்சிக்கும் வகையில் உரையாடல் ஒன்று இடம் பிடித்திருக்கிறது. இதற்கு தணிக்கை குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் சர்ச்சையை ஏற்படுத்தும் அந்த இரண்டு சொற்களையும் நீக்க வேண்டும் என்றார்கள். இதற்கு உரிய விளக்கம் அளித்த பிறகு, மும்பையில் உள்ள தணிக்கை குழுவினர் ஆய்வு செய்து டீஸரில் இடம் பிடிப்பதற்கு அனுமதி அளித்தனர்.

‎மேலும் இந்தத் திரைப்படத்தில் தற்போதைய நீதிமன்றத்தின் நடைமுறைகளை யதார்த்தமாகவும், இயல்பை மீறாமலும் பதிவு செய்திருக்கிறோம்.

‎உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக பணியாற்றி வருவதால்.. மக்களுக்கு நன்மை செய்வதில் நீதிமன்றத்தின் பங்களிப்பு குறித்த விவரங்களை முழுமையாக விவரித்திருக்கிறேன்.

‎நீதி மன்றத்தில் பரபரப்பாக நடைபெறும் வழக்கு குறித்த விவரங்களை விவாதமாகவும், விமர்சனமாகவும் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை சுதந்திரத்தின் அடிப்படையில் முன் வைத்திருக்கிறோம்.

‎சொத்து வைத்திருப்பவர்கள் உயில் எழுதும் போது ‘வில்’ என்ற நீதிமன்ற மற்றும் சட்டப்பூர்வமான விசயத்தை மேற்கொள்ள வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்தும் விரிவாக விளக்கமளித்திருக்கிறோம்.

‎சொத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கு சட்டத்திற்கு உட்பட்ட முறையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் தெளிவு படுத்தி இருக்கிறோம்.

‎ஒரு தலைமுறையினருக்கான சொத்து.. அடுத்த தலைமுறைக்கு எப்படி சட்டபூர்வமாக உரிமையாகிறது என்பது தொடர்பான சட்ட நுணுக்கங்களையும் இடம்பெறச் செய்திருக்கிறோம்.

‎ஒருவர் தன்னுடைய சொத்தை.. தன் விருப்பத்திற்குரிய ஒருவருடைய பெயருக்கு எழுதி வைக்கிறார் என்றால்… அது அவருக்கு சட்டபூர்வமாக எப்படி சென்று சேரும் என்பது குறித்த குழப்பத்தை நீக்கும் வகையில் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

‎இதனை நேரடியாக விவரிக்காமல் .. ஒரு குடும்பத்திற்குள் நிகழும் உணர்வு பூர்வமான சம்பவங்கள் மூலம் கமர்சியல் அம்சங்கள் கலந்து அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறோம்.

‎இதில் நீதியரசர், சொத்து தொடர்பான சிக்கல்களுக்கு புலன்விசாரணை மேற்கொள்ளும் விசயம் ரசிகர்களுக்கு புதுவித திரை அனுபவத்தை வழங்கும். மேலும் இந்த டீஸர்- படத்தின் கதை அம்சத்தை முழுவதுமாக பிரதிபலிக்கிறது.” என்றார்.

இப்படத்தின் டீசர் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இணையவாசிகளின் கவனத்தைக் கவர்ந்து பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.

வார் 2 டீசர்: ஹிருத்திக் ரோஷன் ஜூ.என்.டிஆர்-ஐ நரகத்துக்கு வரவேற்கிறார்

0

YRF நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வார் 2 படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது. 1 நிமிடம் 34 விநாடிகள் நீளமான இந்த டீசர் இணையத்தில் ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த டீசரை சூப்பர்ஸ்டார் ஹிருத்திக் ரோஷன் X (முன்னதாக Twitter) பக்கத்தில் பகிர்ந்துள்ளார், மேலும் ஜூ.என்.டிஆர்-ஐ இந்த பிராஞ்சைசில் வரவேற்கிறார்.

தனது கபீர் என்ற கதாபாத்திரத்தில் உண்மையாக இருந்து, ஹிருத்திக் ரோஷன் ஜூ.என்.டிஆர்-ஐ சவாலாக வரவேற்கிறார். அவர் எழுதியுள்ளார்:
“இப்போது இங்கு துவங்குகிறது, @tarak9999. தயார் வா, இங்கு இரக்கத்திற்கு இடமில்லை. நரகத்திற்கு வரவேற்கிறேன். அன்புடன், கபீர். #War2teaser #War2”

2019-ல் வெளியாகிய வார் திரைப்படம் YRF ஸ்பை யூனிவர்ஸின் மூன்றாவது படமாக ஹிருத்திக் ரோஷனின் தலைமையில் வந்தது. இந்த படம் ஆண்டின் மிகப் பெரிய ஹிட்களாகும் மட்டுமல்லாமல் சாதனை படைத்த படமாகவும் இருக்கிறது. வார் 2 திரைப்படம், ஹிருத்திக் கதாபாத்திரமான கபீர் சுற்றி மேலும் த்ரில் மற்றும் ஆக்ஷனை கொண்டு வருகிறது, இப்பொழுது ஜூ.என்.டிஆர் ஒரு வில்லனாகக் களமிறங்குகிறார்.

டீசரில் ஹிருத்திக் ரோஷன் அவரது கபீர் கதாபாத்திரத்தில் மேலும் கொடூரமாகவும், இருண்ட சாயலில், கட்டிய உடம்பில், பயமுறுத்தும் தோற்றத்தில் மாறியிருப்பது காணப்படுகிறது. வியக்கவைக்கும் காட்சிகள் மூலம் ஹிருத்திக் ரோஷன் ஆக்ஷனை புதிய அளவுக்கு கொண்டு செல்கிறார் — அவரை சுவர்க்கத்துடன் சண்டையிடுவது, வாகன ஓட்டத்துடன் சாகசங்கள், பவளங்களை காட்சியளிப்பது, கடுமையான குத்துகள் என பல அதிரடியான காட்சிகள் இடம்பிடிக்கின்றன.
வார் 2 திரைப்படம் முதலில் 2023ல் வெளியாகிய டைகர் 3 திரைப்படத்தின் எண்ட்-கிரெடிட் சீனில் அறிவிக்கப்பட்டது. அப்போது, “மீண்டும் மிகக் கொடூரமான கபீராக” திரும்புவேன் என்று ஹிருத்திக் கூறியிருந்தார். இந்த டீசர் அந்த வாக்கை நிரூபிக்கிறது.

இந்திய சினிமாவில் தனது 25வது வருடத்தை கொண்டாடும் ஹிருத்திக் ரோஷன், மீண்டும் தனது ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தயாராக இருக்கிறார். Dhoom 2, Agneepath, War, Vikram Vedha, Fighter போன்ற திரைப்படங்களால் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய ஹிருத்திக், தொடர்ந்து ஆக்ஷன் திரில்லர்களில் புதுமையை கொண்டு வருகிறார்.

ஆதித்யா சோப்ரா தயாரிக்கும் Yash Raj Films நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கும் வார் 2 திரைப்படத்தில் ஹிருத்திக் ரோஷன், ஜூ.என்.டிஆர் மற்றும் கியாரா அத்வானி நடிக்கின்றனர். இப்படம் உலகம் முழுவதும் 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையிடப்பட உள்ளது.

”Nilave Is Nothing Short of a Big Film,” Say Directors Sowmith Rao And Sai Vennam About Their Passion Project

0

A group of passionate nobodies, with an extreme love towards films, is bringing the biggest musical drama of Telugu cinema, Nilave. Directed by Sowmith Rao and Sai Vennam, Nilave stars Sowmith Rao and Shreyansi Sen in lead roles. Sai Vennam and Giridhar Rao Poladi bankrolled this soulful project under the banner POV Arts Production, in association with Taher Cine Tecq.

The recently released teaser got a terrific response from the viewers and raised anticipation for this small but honest piece of art. Recently, Nilave’s team held a press meet, revealing more details about the film and their passion towards it.

One of the directors, Sai Vennam, said that Nilave is nothing short of a big film. He said, “I hope you all like the content, like we told you. It’s been a long journey. This is nothing short of a big film you see. We are a small team, but we had a big idea and executed it, as you have seen. The visuals and concept of this movie will be nothing short of any big movie you’ve seen. Telugu filmmakers always dream big. Nilave is also such a big idea. It’s a love story. The story deals with the journey of a lonely person who finds magical love. Nilave is special because we tried to weave a story with music. It came out really well, and we are very confident. I feel honest films will always work. Even Nilave is honest and big at heart. Telugu films, bigger films, and how well they are doing, are our inspiration. If we can contribute to that and make them proud, that will be our success.”

Lead actor-director Sowmith Rao said that Nilave will definitely surprise the audience. He said, “Nilave is the biggest musical romantic drama from a bunch of nobodies like me. We started the film with honest intentions. We may promote our film like everyone else by saying that we worked hard and brought sensational visuals, but we want our content to speak. Audiences should feel that our content resonates with them. We don’t want to rule Telugu cinema but want to be a small part of its growth. Our film will definitely surprise you.”

Music director Kalyan Nayak said, “I have been very selective in my choices since the beginning of my career. When this film came to me, I had no work to showcase. I only had big dreams. We scored this music with such raw and big dreams. We don’t want to brag about our film, but I can say it is an honest attempt that will make you feel and involve you in its content. I just want to tell you to please have a look at us. We will definitely make you come to the theatres. Please support us and remember that you are supporting something sensational.”

DOP Dileep K Kumar said, “When Sai and Sowmith narrated the story to me, I felt the genuineness of their passion. Their madness towards cinema made me do this film. I tried my best, and hopefully, you will like the film too.”

Lyricist M.V.S Bharadwaj said, “Sowmith and I used to do short films with two cameras in the past. We have had this idea in our minds since those days. Our dream was to showcase this idea as a film to everyone. We don’t have a big budget, cast, or crew, but we have a big dream, passion, and honesty. I feel everyone who watches the film will feel that passion.”

Additional lyricist Koti said, “I feel a bit nervous as this is the first time I’m speaking on this stage. Right from the beginning, the working style of Sai and Sowmith excited me. They excite me with their ideas every single time we meet.”

Nilave features an ensemble of talented cast, including Harsha Chemudu, Supriya Aysola, Rupesh Marrapu, Jeevan Kumar, Gururaj, Siddarth Gollapudi, Anala Susmitha, and others.

It also boasts a skilful, passionate crew, including Venkat Konakandla and Sanjana Krishna as co-producers; Anvesh Perati and Ajay Kumar Puppala as Production Executives; and Sunanda Aithani and Sushrith Devi as the Line Producers. Satyaa G is serving as the editor, and Arjun Singh handled the costume design. Katta Siva Rama Krishna and Jiya Ghosh served as production designers. Naidu Surendra Kumar is working as the PRO of the film.

Nilave reflects the team’s sheer passion towards cinema, and it is set to create a new benchmark in Telugu musical dramas with its beautiful emotions, enchanting music, and dreamy visuals. Stay tuned for further updates regarding the film.

இந்த வாரம் டெண்ட்கோட்டா-வில் அற்புதமான மூன்று திரைப்படங்கள் – சுமோ, வல்லமை, மற்றும் அம்..ஆ

0

தமிழ் பொழுதுபோக்குக்கான தளமான Tentkotta-இல், இந்த வாரம் மூன்று புத்தம் புதிய படங்களின் தொகுப்பு வெளியாகி இருக்கிறது: சிவா மற்றும் Yoshinori Tashiro நடித்த SUMO, பிரேம்ஜி அமரனின் வல்லமை, மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மலையாளத் திரைப்படத்தின் தமிழ்-டப்பிங் பதிப்பு Am..aa.

இந்த வெளியீடுகள் மட்டுமில்லாமல் கடந்த வாரங்களில் டென்ட்கோட்டாவில் சமீபத்தில் வெளியான ஃபயர், ஜென்டில்வுமன், காதல் என்பது பொதுவுடைமை, மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங், மர்மர், ட்ராமா, தருணம் மற்றும் பரவலாகப் பாராட்டப்பட்ட சிபி சத்யராஜ் நடிப்பில் Ten Hours உள்ளிட்ட பல தரமான குறிப்பிடத்தக்க படங்கள் இருக்கின்றன. மேலும் தலைசிறந்த 4k, Dolby Atmos தரத்தில் பார்க்கும்போது நமக்கு ஒரு படத்தை முழுமையாக ரசிக்க முடிகிறது.

இந்த வார படங்களின் சிறப்பம்சங்கள்:

  • SUMO – சிவா நடித்த வேடிக்கை நிறைந்த பொழுதுபோக்கு காமெடி, மற்றும் சுமோ-வுடன் சேர்ந்த அதிரடி அதகளம்.
  • வல்லமை – பிரேம்ஜி அமரன் புத்துணர்ச்சியூட்டும் வேடத்தில் நடித்துள்ள ஒரு மனதைத் தொடும் படம் அப்பா மகள் பற்றிய வாழ்க்கை போராட்ட கதை
  • அம்..ஆ – தேவதர்ஷினி சேதன் நடித்த சிந்தனையைத் தூண்டும், விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட மலையாளத் திரைப்படம், இப்போது பரந்த பார்வையாளர்களுக்காக தமிழில் டப்பிங் இருக்கிறது.

டெண்ட்கோட்டா உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு மாறுபட்ட மற்றும் முக்கியமான கதையம்சம் கொண்ட தமிழ் சினிமாக்களை நமக்கு தொடர்ந்து கொண்டு வருகிறது – இப்பொழுதே Tentkotta-இல் இணைந்து ஒரு Pocket-Friendly Entertainment-கு தயாராகுங்கள்.

*

Tentkotta Premieres Three Exciting Films This Week – SUMO, Vallamai, and Am..aa

Tentkotta, your premier destination for Tamil entertainment, is thrilled to announce the release of three brand-new films this week: the Shiva-starrer SUMO, Premgi Amaren’s Vallamai, and Am..aa, the Tamil-dubbed version of a critically acclaimed Malayalam film.

These releases follow an impressive line-up of recent premieres on Tentkotta, including Fire, Gentlewoman, Kadhal Ennadhu Podhu Udamai, Mr. HouseKeeping, Murmur, Trauma, Tharunam, and the widely appreciated Ten Hours. Each film has added unique flavors to our ever-growing library, celebrating bold storytelling, fresh talent, and meaningful cinema.

This week’s highlights:
• SUMO – A fun-filled entertainer starring Shiva, packed with action and comedy.
• Vallamai – A heartwarming film featuring Premgi Amaren in a refreshing role.
• Am..aa – A thought-provoking, critically acclaimed Malayalam film, now dubbed in Tamil for wider audiences.

Tentkotta continues to bring diverse and compelling Tamil cinema to viewers across the globe—fresh every week.

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகர் யாஷ் -ன் தாய் புஷ்பா அருண்குமார்

0

ராக்கிங் ஸ்டார் யாஷ்-ன் தாயார் புஷ்பா அருண்குமார் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். பி.ஏ. புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் புஷ்பா அருண்குமார் தயாரிக்கும் முதல் திரைப்படத்திற்கு “கொத்தாலவாடி” என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கும் குறிக்கோளுடன் பி.ஏ. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு இருக்கிறது.

நடிகர் டாக்டர் ராஜ்குமாரின் மனைவி பரவதம்மா ராஜ்குமார் போன்று புஷ்பா அருண்குமார் இளம் நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளார். தற்போது கன்னட திரையுலகில் பயணத்தை தொடங்கியுள்ள பி.ஏ. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.

தயாரிப்பாளர் புஷ்பா அருண்குமார் தயாரிக்கும் முதல் திரைப்படமான “கொத்தாலவாடி”-இல் பிருத்வி அம்பார் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக காவ்யா ஷைவா நடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் ஶ்ரீராஜ் எழுதி, இயக்குகிறார். சமீபத்தில் வெளியான “கொத்தாலவாடி” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு, படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்து இருந்தது.

இந்த நிலையில், படக்குழு தற்போது “கொத்தாலவாடி” படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது. படத்தின் டீசர் கொத்தாலவாடி உலகினை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மாஸ் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த டீசரில் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டன. ஒளிப்பதிவாளர் கார்த்திக்-இன் விஷூவல்கள் ஆழமாகவும், உணர்வுப்பூர்வமான பின்னணியை பிரதிபலித்தன.

மேலும், அபினந்தன் காஷ்யப்-இன் பின்னணி இசை காட்சிகளுடன் ஒன்றியிருந்தது. பிருத்வி அம்பார் ரக்கட் தோற்றத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 90 நொடிகள் ஓடும் டீசர் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. மேலும், இயக்குநர் சிராஜ் மிகவும் உறுதியான கதையுடன் வருவதை டீசரிலேயே உறுதிப்படுத்தி இருக்கிறார்.

படத்தின் தலைப்பான “கொத்தாலவாடி” கர்நாடக மாநிலத்தின் குண்ட்லுப்பெட் தாலுக்காவில் உள்ள கிராமத்தை தழுவி சூட்டப்பட்டுள்ளது. இந்த கிராமத்திலேயே படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. படத்தின் கதையோடு ஒன்றியிருக்கவே படப்பிடிப்பு இந்த கிராமத்தில் நடந்ததாக படக்குழு தெரிவித்தது.

இப்படத்தில் கோபால் தேஷ்பாண்டே, ராஜேஷ் நடரங்கா, அவினாஷ், காவ்யா ஷைவா, மன்சி சுதிர், ரகு ரமனகோப்பா மற்றும் சேத்தன் காந்தரவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் பி.ஏ. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இசை பிரிவில் இரு புதிய கலைஞர்களை அறிமுகம் செய்துள்ளது. விகாஷ் வசிஷ்தா படத்தின் பாடல் ஒன்றுக்கு இசையமைத்துள்ள நிலையில், அபினந்தன் காஷ்யப் பின்னணி இசை அமைத்துள்ளார்.

ரகு நீனந்தல்லி படத்திற்கு வசனம் எழுத, படத்தொகுப்பு பணிகளை ராமிஷெட்டி பவன் மேற்கொண்டுள்ளார். தினேஷ் அசோக் படத்தின் போஸ்டர்களை வடிவமைத்துள்ளார். “கொத்தாலவாடி” திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில், மூர்கத்தனமான, சென்டிமென்ட் மற்றும் கமர்ஷியல் அம்சங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Roshan Mathew on becoming Ashu in Sony LIV’s KanKhajura: “Some roles choose you”

0

In Sony LIV’s gritty upcoming drama KanKhajura, Roshan Mathew steps into the shoes of Ashu, a character shrouded in silence, scared by his past, and driven by a longing for belonging. For Roshan, this wasn’t just another role; it was a calling! “I knew immediately that this is a character that doesn’t come by very often. I didn’t want to miss the chance to discover what my version of Ashu would be,” said Mathew.

Roshan was drawn to Ashu’s emotional clarity beneath the surface complexity. He added, “Though he might work in mysterious ways, he’s a fairly clear guy. All he wants is to be a part of the family, a part of the gang. That’s it.” Much of this layered portrayal, Roshan said, is thanks to his collaboration with director Chandan Arora. He concluded, “Chandan sir helped me crack Ashu, what his tactics would be, how he would react in each situation, what the possibilities were at each turning point.”

KanKhajura is a psychological thriller set in Goa, where silence masks secrets and guilt refuses to fade. When two estranged brothers are forced to confront their haunted past, memories twist into a dangerous reality. Produced by Ajay Rai and directed by Chandan Arora, KanKhajura features a compelling ensemble cast including Mahesh Shetty, Mohit Raina, Ninad Kamat, Roshan Mathew, Sarah Jane Dias, Trinetra Haldar, and Usha Nadkarni.

Based on the acclaimed Israeli series Magpie, the show has been reimagined under license from yes Studios by creators Adam Bizanski, Omri Shenhar, and Dana Eden, and produced by Donna and Shula Productions. It delivers a gripping tale of fractured families, betrayal, and the fragile line between guilt and survival. Stay tuned, Roshan Mathew’s Ashu is not a character you’ll easily forget.

KanKhajura premieres on 30th May, only on Sony LIV!

Sony LIV-இன் KanKhajura-வில் Ashu ஆக மாறிய Roshan Mathew: “சில கதாபாத்திரங்கள்தான் உங்களைத் தேர்ந்தெடுக்கின்றன”

Sony LIV-இன் தரமான புதிய வெப் தொடரான KanKhajura-வில் Roshan Mathew, மௌனத்தில் புதைந்து கிடந்தும், கடந்தகால சம்பவங்களால் பயந்து கிடந்தும், யாராவது நம்மை ஏற்றுக் கொள்ள மாட்டார்களா என்று ஏங்கும் Ashu என்ற கதாப்பாத்திரத்தில் களமிறங்குகிறார்.

இது பற்றி Roshan Mathew கூறும் பொழுது, “இது எனக்கு வெறும் ஒரு வேடம் மட்டுமல்ல; இது ஒரு அழைப்பு”. “இந்தக் கதாப்பாத்திரம் எளிதில் கிடைக்கக் கூடியது அல்ல என்பது எனக்குத் திடீரெனத் தெரிந்தது. என்னைச் சார்ந்த Ashu எப்படி இருப்பார் என்பதை கண்டுபிடிக்க அந்த வாய்ப்பை இழக்க விரும்பவில்லை,” என்கிறார் Mathew.

மேலும் கண்களுக்கு புலப்படாத உணர்வுச் சிக்கல்களுக்கு அடியில் இருக்கிற Ashu-வின் கேரக்டர்தான் Roshan-ஐ இழுத்தது. மேலும் இந்தக் கதாபாத்திரம் பற்றி கூறும் பொழுது, “அவன் வித்தியாசமான முறையில் நடந்தாலும், உண்மையில் தெளிவான மனிதன். அவனுக்கு ஒரு குடும்பத்தில் இருக்கும் உணர்வு வேண்டும், ஒரு கூட்டத்தில் ஒருவனாக இருக்க வேண்டும. அவ்வளவுதான்.” Ashu-வின் இந்தப் பன்முகக் கதாபாத்திரத்தன்மைக்கு முக்கிய காரணமாக, இயக்குநர் Chandan Arora-வுடன் உள்ள ஒத்துழைப்பை Roshan குறிப்பிட்டார். “Chandan sir, Ashu-வின் வழிமுறைகள் என்னவாக இருக்கும், ஒவ்வொரு சூழ்நிலையையும் அவன் எப்படி எதிர்கொள்வான், ஒவ்வொரு திருப்பங்களின் போதெல்லாம் என்னென்ன சாத்தியங்கள் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள உதவினார்,” என்று கூறினார் .

KanKhajura என்பது கோவாவை மையமாகக் கொண்டு உருவான (அங்கே அமைதி இரகசியங்களை மறைக்கும். குற்ற உணர்வுகள் விலக மறுக்கும்..) ஒரு உளவியல் த்ரில்லர் தொடர். . இரண்டு பிரிந்துபோன சகோதரர்கள் தங்களது கடந்தகாலத்தை எதிர்கொள்கையில்,அவர்களது நினைவுகள் ஒரு ஆபத்தான யதார்த்தமாக மாறுகின்றன. Ajay Rai தயாரித்து, Chandan Arora இயக்கியுள்ள இந்தத் தொடரில் Mahesh Shetty, Mohit Raina, Ninad Kamat, Roshan Mathew, Sarah Jane Dias, Trinetra Haldar மற்றும் Usha Nadkarni ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

புகழ்பெற்ற இஸ்ரேலிய தொடரான Magpie அடிப்படையில் உருவான இந்தக் கதை, yes Studios-இன் உரிமையில் Adam Bizanski, Omri Shenhar மற்றும் Dana Eden ஆகியோரால் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு, Donna மற்றும் Shula Productions நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. சிதறிப்போன குடும்பங்கள், துரோகம், வாழ்வுக்கும் குற்ற உணர்வுக்கும் இடையிலான மெல்லிய கோடு ஆகியவற்றை நுட்பமாகக் கூறும் ஒரு மையக் கதை. அதிலும் Roshan Mathew ஏற்கும் Ashu என்ற கதாப்பாத்திரம் உங்களால் எளிதில் மறக்க முடியாது.

KanKhajura – மே 30 முதல் Sony LIV-இல் மட்டும்!

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

0

இயக்குநர்-நடிகர் சேரன் முதன்மை வேடத்தில் நடித்து பாராட்டுகளை குவித்த ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தை படைத்த இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி இருக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ படத்தில் விமல் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

வரும் ஜூன் 6 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ‘பரமசிவன் பாத்திமா’ வெளியாகிறது. இப்படத்தில் விமல் நாயகனாக நடிக்க சாயாதேவி, எம். எஸ். பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், சேஷ்விதா ராஜு, கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்திற்கு மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, தீபன் சக்கரவர்த்தி இசை அமைக்க, இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியுள்ளார்.

‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

பாடலாசிரியர் ஏகாதசி பேசுகையில், “இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள். ஐந்தையும் நான் தான் எழுதியுள்ளேன். ஐந்து பாடல்களும் வெவ்வேறு வகையிலானவை. இப்படத்தின் குழுவினர் மிகவும் நேர்மையோடு கடினமாக உழைத்துள்ளனர். பாடல்கள் சிறப்பாக வர வேண்டும் என்று இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தியும் இயக்குநர் இசக்கி கார்வண்ணன் அவர்களும் தனி கவனம் செலுத்தினர். படத்தின் நாயகன் விமல் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி. ‘பரமசிவன் பாத்திமா’ மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்,” என்றார்.

ஒளிப்பதிவாளர் மைனா சுகுமார் பேசுகையில், “இப்படத்தில் எனக்கு நடிக்கவும் வாய்ப்பு கொடுக்க இயக்குநர் இசக்கி கார்வண்ணனுக்கு நன்றி. ‘பரமசிவன் பாத்திமா’ படத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் கோருகிறேன், நன்றி,” என்றார்.

நடிகை சேஷ்விதா ராஜு பேசுகையில், “இன்று எனக்கு மிக முக்கியமான நாள். தமிழ் சினிமாவில் என் பயணம் இப்போது தான் தொடங்குகிறது. வாய்ப்பு கொடுத்த இயக்குநர் இசக்கி கார்வண்ணனுக்கும் விழாவில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் நன்றி,” என்றார்.

இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தி பேசுகையில், “இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் என்னை விட சீனியர்கள். அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். பாடலாசிரியர் ஏகாதசி சொன்னது போல இந்த படத்தில் உள்ள ஐந்து பாடல்களும் வெவ்வேறு வகையிலானவை, அனைத்துப் பாடல்களும் மிகவும் சிறப்பாக வந்துள்ளன. இயக்குநர் இசக்கி கார்வண்ணன் மிகவும் தெளிவாக அவருக்கு தேவையான பாடல்களை வாங்கி விடுவார். இந்த மேடையில் நான் பேச காரணமான எனது தாயாருக்கும், வாய்ப்பளித்த இயக்குநருக்கும், இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் மிக்க நன்றி,” என்றார்.

இயக்குநரும் எழுத்தாளருமான சுகா பேசுகையில், “இயக்குநர் இசக்கி கார்வண்ணன் எங்கள் நண்பர்கள் குழுவில் ஒருவர். இப்படத்தின் கதையை அவர் என்னிடம் கூறிய போது மகிழ்ச்சியாக இருந்தது. இந்திய சினிமாவை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த சத்யஜித்ரே தனது படத்திற்கான கதைகளை தன்னை சுற்றி நடப்பவைகளிடம் இருந்தே உருவாக்கினார். அவ்வாறு இசக்கி கார்வண்ணனும் அவரது ஊரில் அவர் பார்த்த சம்பவங்களை கதையாக்கி படமாக்கி இருக்கிறார். அதற்காக அவருக்கு வாழ்த்துகள். இப்படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்,” என்றார்.

நடிகர் காதல் சுகுமார் பேசுகையில், “இந்தப் படக்குழுவினர் என்னுடைய குடும்பத்தினர் போன்றவர்கள். இப்படத்தில் இயக்குநர் இசக்கி கார்வண்ணன் மிகவும் தைரியமான ஒரு விஷயத்தை சிறப்பாக கையாண்டு இருக்கிறார். ‘பரமசிவன் பாத்திமா’ படத்தில் ஒரு காவலராக நான் நடித்துள்ளேன். இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குநருக்கு நன்றி. எம் எஸ் பாஸ்கர் போன்ற திறமையான கலைஞர்களுடன் நடித்தது மிக்க மகிழ்ச்சி. படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள், நன்றி,” என்றார்.

நடிகை ஆதிரா பேசுகையில், “இந்த விழாவுக்கு வந்திருக்கும் அனைத்து விருந்தினர்களுக்கும் நன்றி. படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள், வணக்கம்,” என்றார்.

தயாரிப்பாளர் பி எல் தேனப்பன் பேசுகையில், “இயக்குநர் இசக்கி கார்வண்ணன் சினிமாவை காதலிப்பவர். ஒரு வலுவான கதையுடன் தற்போது ‘பரமசிவன் பாத்திமா’ மூலம் வந்துள்ளார். நாயகன் விமலுக்கு வாழ்த்துகள், நடிகராக அறிமுகமாகும் ஒளிப்பதிவாளர் சுகுமாருக்கும் வாழ்த்துகள். படம் வெற்றி அடைய வாழ்த்துகிறேன், நன்றி,” என்றார்.

நாயகி சாயாதேவி பேசுகையில், “இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இயக்குநர் இசக்கி கார்வண்ணன் உடனும் நடிகர் விமல் உள்ளிட்டோருடனும் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் ஐந்தாம் தேதி இப்படம் வெளியாகிறது, அனைவரும் ஆதரவு தாருங்கள். இந்த விழாவின் நாயகனான இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்திக்கு வாழ்த்துகள்,” என்றார்.

இயக்குநர் பிரசாத் முருகேசன் பேசுகையில், “இயக்குநர் இசக்கி கார்வண்ணன் சினிமா மீது காதல் கொண்டவர். இப்படம் வெற்றியடைய அவருக்கும் அவரது குழுவினருக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன். பாடலாசிரியர் ஏகாதசி அவர்கள் ‘கிடாரி’ திரைப்படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து பாடல் எழுதினார், அதற்காக அவருக்கு நன்றி. இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்திக்கு வாழ்த்துகள்,” என்றார்.

இயக்குநர் மனோஜ் குமார் பேசுகையில், “இயக்குநர் இசக்கி கார்வண்ணன் ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செய்பவர். ஒரு குடும்பம் போல் குழுவினரை வழி நடத்தி செல்வார். இப்படத்தை மிகவுக் சிறப்பாக உருவாக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் சுகுமார் பிரமாதமாக தனது பணியை செய்துள்ளார். விமலுக்கு இது ஒரு மைல்கல் படமாக அமையும். இப்படத்தின் வெற்றி விழாவில் மீண்டும் சந்திப்போம்,” என்றார்.

நடிகர் விமல்ராஜா (வி ஆர்) பேசுகையில், “இப்படத்தில் சலீம் எனும் பாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த வாய்ப்பை பெற உதவிய ஒளிப்பதிவாளர் சுகுமாருக்கு நன்றி. விமல் சாருடன் வேலை செய்தது நல்ல அனுபவம். இந்த படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள்,” என்றார்.

நடிகர் எம் எஸ் பாஸ்கர் பேசுகையில், “புரட்சிகரமான ஃபாதர் பாத்திரத்தில் நான் இப்படத்தில் நடித்துள்ளேன். படக்குழுவினரும் படப்பிடிப்பு நடந்த ஊர் மக்களும் உறவினர் போல பழகினோம், மறக்க முடியாத அனுபவம். இப்படத்தை வெற்றி படமாக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்,” என்றார்.

நடிகர் கூல் சுரேஷ் பேசுகையில், “இந்த மேடையில் நான் வாங்கும் கைதட்டல் அனைத்தும் ‘பரமசிவன் பாத்திமா’ குழுவினரையே சேரும். படம் வெற்றி பெற உங்கள் அனைவரின் ஆதரவும் அன்பும் தேவை,” என்றார்.

நடிகர் மகேந்திரன் பேசுகையில், “இசக்கி கார்வண்ணன் அவர்கள் எனக்கு ஊக்கமளித்தவர். எனவே இப்படத்தில் நடிக்குமாறு அவர் அழைத்துவுடன் மகிழ்ச்சியுடன் உடனே சம்மதித்தேன். இப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்,” என்றார்.

சாட்டை துரைமுருகன் பேசுகையில், “இயக்குநர் இசக்கி கார்வண்ணன் உணர்ச்சிக் குவியலான ஒரு நபர். அவரது உணர்ச்சி மொழிக்கானது, மண்ணுக்கானது, மக்களுக்கானது. இப்படத்தின் மூலம் ஒரு சிறந்த கருத்தை மக்கள் முன் வைக்கிறார். எங்கு சென்றாலும் நம் வேர்களை மறக்கக் கூடாது என்பதே அவர் சொல்லும் செய்தி. இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

நாயகன் விமல் பேசுகையில், “வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். இயக்குநர் இசக்கி கார்வண்ணன், ஒளிப்பதிவாளர் சுகுமார், இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்தி, சாயா தேவி, எம் எஸ் பாஸ்கர் அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இப்படம் வெற்றியடைய உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை,” என்றார்.

தயாரிப்பாளர்-இயக்குநர் இசக்கி கார்வண்ணன் பேசுகையில், “இது வாழ்வியல் சம்பந்தப்பட்ட கதை. என்னை சுற்றி வாழ்ந்த மக்களின் கதை. இது மதவாத படமல்ல, மனிதம் பேசும் படம். இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்தியும், பாடலாசிரியர் ஏகாதசியும் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளார்கள். ஒளிப்பதிவாளர் சுகுமார் மிகவும் திறமை வாய்ந்த கலைஞர். இப்படம் அதற்கு மற்றுமொரு சான்று. விமல் ஒரு கடின உழைப்பாளி. சாயா தேவியும் சுகுமாரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். எம் எஸ் பாஸ்கர் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். எடிட்டர் புவன் படத்தொகுப்பு அருமை. இப்படி அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்தனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், “சிறு வயதிலேயே சிறப்பான இசையை தம்பி தீபன் சக்ரவர்த்தி வழங்கி உள்ளார். இயக்குநர் இசக்கி கார்வண்ணனிடமும் இதைக் கூறியுள்ளேன். தம்பி ஏகாதசியின் வரிகள் வலிமை மிக்கவை. காவியப் படைப்பை தந்துள்ளார். முன்னோட்டத்தை பார்த்தவுடன் ஒளிப்பதிவாளர் யார் என்று தான் கேட்டேன். சுகுமார் என்று சொன்னவுடன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது, ஒளியோடு விளையாடி இருக்கிறார். இப்படத்தில் நடித்துள்ள விமல் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். மொழிப்பற்றும் இனப்பற்றும் என்னையும் இயக்குநர் இசக்கி கார்வண்ணனையும் இணைக்கிறது. ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படம் சிறப்பாக உருவாகியுள்ளது. மிகவும் முக்கியமான ஒரு பிரச்சனையை துணிச்சலாக கையாண்டுள்ளார். அவரது போர்க்குணம் தான் இந்தக் கதையை படமாக எடுக்க காரணம். அவருக்கும் அவரது குழுவினருக்கும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்,” என்றார்.

The Trance of Kuberaa Unveils A Spellbinding Glimpse Into Sekhar Kammula’s Cinematic World — Audiences Already Hailing It A Blockbuster!

0

The much-awaited “Trance of Kuberaa” from the upcoming film Kuberaa has finally dropped, giving fans a breathtaking glimpse into the unique world envisioned by National Award-winning director Sekhar Kammula. Featuring an ensemble of powerhouse performers — Dhanush, King Nagarjuna, Rashmika Mandanna, Jim Sarbh, and Dalip Tahil — the teaser has set social media ablaze, with fans and industry insiders alike declaring it a surefire blockbuster even before its release.

The teaser offers a subtle yet intriguing hint of the story, inviting viewers into a layered, atmospheric narrative that promises to blend drama, intensity, and visual spectacle. With Sekhar Kammula’s signature storytelling finesse on full display, “Trance of Kuberaa” builds a world that is both mysterious and captivating, leaving audiences hungry for more.

The production houses — Sree Venkateswara Cinemas, Asian Cinemas, and Amigos Creations — have kept the momentum high with a series of exciting updates leading up to this teaser release. Earlier this month, the first single “Poyivaa Nanba” became an instant chartbuster. A collaboration of the dream trio — Kammula, Dhanush, and rockstar Devi Sri Prasad (DSP) — the song features Dhanush’s dynamic vocals set to Viveka’s catchy lyrics and DSP’s electrifying score. The song’s teaser, which dropped just days ago, sent fans into a frenzy, and the full release has only amplified the buzz, trending across social media and music platforms.

As anticipation mounts, Kuberaa is shaping up to be one of the most eagerly awaited cinematic events of the year. With a prestigious bilingual production and a release slated for June 20, 2025, the countdown has officially begun.

மாடலிங் துறையில் பிரபலமான தமிழ்வாணன் முதல் முறையாக கதாநாயகனாக நடிக்கும் புரொடக்ஷன் நம்பர் -1 படத்தின் பூஜை.

0

‘போங்கு’ பட இயக்குனர் தாஜ் இயக்கும்
கமர்ஷியல் படம், பூஜையுடன் துவங்கியது!!

Tam’s Consultancy நிறுவனம் சார்பில், தமிழ்வாணன் தயாரித்து, நாயகனாக நடிக்க, போங்கு பட இயக்குநர் தாஜ் இயக்கத்தில், உண்மைச் சம்பவத்தின் அடிப்டையில் அசத்தலான புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது.

உலகில் பணத்தை விட அதிகாரம் தான் பெரியது. இதைப் புரிந்து கொண்ட ஒருவன், வாழ்வில் தனக்கு கிடைக்கும் அதிகாரத்தை வைத்து என்ன செய்கிறான் என்பது தான் இந்தக்கதையின் மையம்.
அந்த இளைஞனுக்கு ஏற்படும் காதலில் வரும் பிரச்சனைகளையும், அவன் நண்பர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும், தன் அதிகாரத்தால் எப்படி சரி செய்கிறான் என்பது தான் இப்படத்தின் கதை.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் குடும்பத்தினருடன் ரசிக்கும் காதல் காமெடி கலந்து ஒரு அட்டகாசமான கமர்சியல் படமாக இப்படம் உருவாகவுள்ளது.

நட்டி நடிப்பில் ‘போங்கு’ படத்தை இயக்கிய தாஜ்
இயக்கும் இரண்டாவது படம்.
இப்படத்தை, எழுதி, இயக்குகிறார்.

நாயகனாக தமிழ்வாணன் நடிக்க
இவருக்கு ஜோடியாக
பிரபல நடிகை சாய் பிரியா நடிக்கிறார். படத்தில் மேலும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கவுள்ளனர்.

விரைவில் சென்னையில் துவங்கி பரபரப்பாக நடக்கபோகும் இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

படத்தின் தொழில்
நுட்ப குழு விபரம்-

தமிழ்வாணன்(நாயகன்)
சாய் பிரியா(நாயகி)
எழுத்து, இயக்கம், – தாஜ்
இசை – எம்.எஸ் ஜோன்ஸ் ரூபர்ட்
ஒளிப்பதிவு – விஜய் எஸ் குமரன்
எடிட்டர் – லினு.எம்
கலை இயக்கம் – தாஜ் (சங்கர்)
பாடலாசிரியர் – துரை ராஜ் & ராஜா முகமது
நடனம் – ஆனந்த் குமார் & செல்வி
ஆடை வடிவமைப்பாளர் – பிரியா புஷ்பநாதன் ஸ்டண்ட் கோரியோகிராஃபர் – வி கோட்டி |
மக்கள் தொடர்பு – சரண்
ஒப்பனை – வீர சேகர்
புகைப்படங்கள் – பாலாஜி
போஸ்டர் டிசைனர் – தீரன்
லைன் தயாரிப்பாளர் – பிரபு
தயாரிப்பு மேலாளர் – நாகராஜ்
புரமோசன்ஸ் – CTC ரியாஸ்
VFX – சஞ்சய்
சோஷியல் மீடியா மார்க்கெட்டிங் – முகமது

- Advertisement -

Recent Posts