வெள்ளிவிழா நாயகன் மோகன் அவர்களின் பிறந்த நாள் சென்னை பரணிபுதூர் ரொஹாபாத் பெண்கள் மனநலம் பாதுகாப்பு இல்லத்தில் உதவிகள் வழங்கி அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது…பின்பு ஐயப்பன் தாங்கல் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுக்கு மோர், பிரியாணி வழங்கப்பட்டன…இவ்விரு நிகழ்ச்சிகளுக்கும் நடிகர் மோகன் அவர்கள் நேரில் வருகை தந்து தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்… நிகழ்வில் சேலம் ஆர் ஆர் பிரியாணி உரிமையாளர் திரு. ஆர்.தமிழ்ச்செல்வன், முன்னால் தமிழக அரசவை கவிஞரும் மோகன் அவர்களுக்கு மிகப்பெரிய ஹிட் பாடல்களை தந்த கவிஞர் முத்துலிங்கம் மற்றும் ரசிகர்களும் கலந்து கொண்டனர்…நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வெள்ளிவிழா நாயகன் மோகன் ரசிகர் குழுமத்தினர் செய்து இருந்தனர்…
In view of the ongoing national situation and rising security concerns, we at Four Square Studious and Lyon Globus have made the responsible decision to discontinue the theatrical screening of Gajaana at this time.
The safety and well-being of our audience are far more important than any celebration. At this moment, our hearts and thoughts are with our brave soldiers and fellow citizens. We stand in full support of the incredible josh and sacrifice of our armed forces.
We will soon bring Gajaana back to you in the theatres.
Thank you for your understanding, and we hope the film finds its place in your hearts when the time is right.
With respect and gratitude,Team Gajaana
யுத்த மனநிலையில் இருக்கும் மக்களுக்காக ‘கஜானா’ படம் நிறுத்தம்! – மறுவெளியீட்டு தேதி விரைவில் அறிவிப்பு
யோகி பாபு, வேதிகா, இனிகோ பிரபாகர், பிரதாப் போத்தன், சாந்தினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், பிரமாண்டமான ஃபேண்டஸி அட்வெஞ்சர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘கஜானா’ திரைப்படத்தை ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் சார்பில் பிரபதீஸ் சாம்ஸ் தயாரித்து இயக்கியுள்ளார்.
கோடை விடுமுறை கொண்டாட்டமாக, இப்படத்தை மே 9 ஆம் தேதி வெளியிட முடிவு செய்த படக்குழு, அறிவித்தது போல் நேற்று (மே 9) படத்தை திரையரங்குகளில் வெளியிட்டதோடு, நேற்றே பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு திரையிடல் காட்சி திரையிடப்பட்டது. படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் வெகுவாக பாராட்டியதோடு, ”நீண்ட நாட்களுக்குப் பிறகு அனிமேஷன் காட்சிகள் நிறைந்த, சுவராஸ்யமான ஃபேண்டஸி படத்தை பார்த்தோம். நிச்சயம் இந்த படம் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் புதிய அனுபவத்தை கொடுக்கும்” என்று பாராட்டினார்கள்.
இந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டிருக்கும் போர் பதற்றம் தற்போது அதிகரித்து வரும் நிலையில், மக்கள் யுத்த மனநிலைக்கு மாறியுள்ளனர். இந்த போரின் தமிழகத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும், நம் அண்டை மாநிலங்களும், அம்மக்களும் பாகிஸ்தானின் தாக்குதலால் பாதிக்கப்படும் செய்திகளால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். இதனால், மக்களிடம் தற்போது திரைப்படம் பார்க்கும் மனநிலை இல்லை என்பதாலும், அனைவரும் போர் பதற்றம் குறித்த செய்திகளை அறியவே விருப்பம் காட்டுவதால், திரையரங்குகளுக்கு மக்களின் வருகை மிக மிக குறைவாகவே உள்ளது.
எனவே, பல கோடி ரூபாய் செலவு செய்ததோடு, பல வருடங்களாக உழைத்து மிகச்சிறந்த வி.எப்.எக்ஸ் காட்சிகள் மூலம் உருவாக்கிய ‘கஜானா’ திரைப்படத்தை ஒரு சாதாரண வெளியீட்டாக அல்லாமல், பெரும்பாலான மக்கள் பார்த்து மகிழக்கூடிய மிகப்பெரிய வெற்றி படமாக்க வேண்டும், என்பதற்காக படக்குழு படத்தின் வெளியீட்டை நிறுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, ‘கஜானா’ படத்தை இன்று மாலை காட்சியோடு நிறுத்த முடிவு செய்துள்ள படக்குழு, யுத்த பதற்றம் தணிந்த பிறகு வேறு ஒரு நல்ல தருணத்தில், படத்தைப் போலவே வெளியீட்டையும் பிரமாண்டமான முறையில் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
அதன்படி, இதுவரை தங்களுக்கு ஒத்துழைப்பு அளித்து, தங்களது முயற்சிக்கும், உழைப்பிற்கும் ஊக்கமளிக்கும் ஊடகத்தினர், எங்களது இந்த முடிவுக்கும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், என்று படக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், ‘கஜானா’ படத்தின் மறுவெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
Quantum Film Factory என்ற பட நிறுவனம் சார்பில் R. K. வித்யாதரன் தயாரித்து, இயக்கியுள்ள படம் ” ஸ்கூல் “
இந்த படத்தில் பூமிகா சாவ்லா, யோகிபாபு, கே.எஸ். ரவிகுமார் மூவரும் முக்கிய கதாபாதிரத்தில் நடித்திருக்கிறார்கள் மற்றும் நிழல்கள்ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க ஸ்கூல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார்.
ஒளிப்பதிவு : ஆதித்யா கோவிந்தராஜ்.
எடிட்டிங் : ராகவ் அர்ஸ்
கலை : ஶ்ரீதர்
ஸ்கிரிப்ட் கன்சல்ட்ண்ட் : V. நிவேதா
விளம்பர வடிவமைப்பு : சதீஷ் J
மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ்
இணை தயாரிப்பு : K. மஞ்சு
தயாரிப்பு : Quantum Film Factory R.K.வித்யாதரன்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் R.K. வித்யாதரன்.
இது ஒரு உளவியல் ரீதியான திரில்லர் படம். இன்றைய பள்ளி மாணவ மாணவிகளின் கண்ணோட்டத்தில் சமுதாயத்தில் நடக்கும் கொலை ,தற்கொலை, விபத்து, கலவரம் போன்ற பல முக்கியமான கிரைம் சம்பவங்களை பற்றி அலசி ஆராயும் விதமாக விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்துள்ளோம்.
கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த இந்த படத்தை இன்றைய இளைய தலைமுறையினருக்கு தேவையான பாடமாக உருவாக்கி இருக்கிறோம்.
படம் கோடை கொண்டாட்டமாக இம்மாதம் 23 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு பிரபல கன்னட நடிகர் உபேந்திரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குனர் R. K. வித்யாதரன் நடிகர் உபேந்திராவை நேரில் சந்தித்து ஸ்கூல் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லரையும் காண்பித்து வாழ்த்து பெற்றார். ஸ்கூல் படத்தின் பாடல்கள் மட்டும் டிரைலரை பார்த்துவிட்டு உபேந்திரா அவர்கள் மிக நன்றாக இருப்பதாக கூறியதோடு படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.
ஸ்கூல் படத்தின் இயக்குனர் ஆர்.கே வித்யாதரன் ஏற்கனவே உபேந்திரா, ரேணுகா மேனன், ரீமாசென் அகியோரை வைத்து கன்னடத்தில் ” நியூஸ் ” என்ற பிரபல படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓடிடியில் கலக்கும் ZEE5-இன் கன்னட சீரிஸ், “அய்யனா மானே” !!
~ இயக்குநர் ரமேஷ் இந்திரா இயக்கத்தில், குஷி ரவி, அக்ஷயா நாயக் மற்றும் மானசி சுதீர் நடிப்பில் உருவான ZEE5-இன் அய்யனா மானே – கர்நாடகத்தின் பெருமையாகவும், ஓடிடி உலகின் அடுத்த பிளாக்பஸ்டர் சீரிஸாகவும், சாதனை படைத்து வருகிறது ~
இளைஞர்களின் இதயம் கவர்ந்த நடிகை குஷி ரவி நடிப்பில், சமீபத்தில் வெளியான ZEE5 இன் முதல் கன்னட ஓரிஜினல் வெப் சீரிஸான “அய்யனா மானே” பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த சீரிஸ் தற்போது 5 கோடி ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. மக்களின் உள்ளார்ந்த கலாச்சார அம்சத்தோடு, நவீனத்தை இணைக்கும் ZEEயின் கதைகளில் இது ஒரு சிறந்த படைப்பாக அமைந்துள்ளது. ஆறு எபிசோடுகளைக் கொண்ட இந்த திரில்லர் சீரிஸை, இயக்குநர் ரமேஷ் இந்திரா இயக்க, ஸ்ருதி நாயுடு புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ZEE5 டிஜிட்டல் உலகில் தனது தனித்துவமான நிபுணத்துவத்தால், இன்றைய தலைமுறையை ஈர்க்கும், நல்ல கதைகளைத் தருவதில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. “அய்யனா மானே” குடும்பத்துடன் முழுவதும் ரசிக்கக்கூடிய ஒரு உணர்ச்சிப் பூர்வமான திகில் அனுபவமாக அமைந்துள்ளது. இளைஞர்களின் கனவுக்கன்னி குஷி ரவி பாத்திரம், தனித்த பாராட்டுக்களைப் பெற்று வருவதுடன், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்று வருகிறது. தியா திரைப்படம் குஷி ரவிக்கு, தமிழிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றுத் தந்துள்ள நிலையில், “அய்யனா மானே” சீரிஸ் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
டிஜிட்டல் தளங்களில் இதன் டிரெய்லர் மட்டும் 14-15 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த சீரிஸின் இந்தி டப்பிங் தேசிய ரீதியில் அதிகமான பார்வையாளர்களைப் பெற உதவியுள்ளது.
சிக்கல் நிறைந்த சிக்மங்கலூர் மலைப்பகுதியில் வாழும் சக்திவாய்ந்த அய்யனா மானே குடும்பம் ஒரு பயங்கரமான ரகசியத்தை மறைக்கிறது – அக்குடும்பத்தில் மூன்று மருமகள்கள் மர்மமான முறையில் இறந்துபோகின்றனர், ஒவ்வொரு மரணமும் குடும்பத்தின் தெய்வமான கொண்டையாவுடன் தொடர்புடையதாக உள்ளது. ஜாஜி (குஷி ரவி) அக்குடும்பத்தில் திருமணம் செய்து கொள்ளும்போது, ஒரு புதிய தொடக்கமாக இருக்க வேண்டிய அவரது வாழ்வு, விரைவாகவே சாபமிக்க கனவாக மாறுகிறது. சாபங்களின் கிசுகிசுக்கள், அமானுஷ்ய சம்பவங்கள் மற்றும் பழம்பெரும் மரபுகள் என எல்லாம் இணைந்து, ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்தி விளையாடுகிறதா? அல்லது வீட்டிற்குள் இன்னும் மோசமான ஏதோ ஒன்று பதுங்கியிருக்கிறதா? என்று அவளைக் கேள்வி கேட்க வைக்கின்றன. குடும்பப் பணிப்பெண் தாயவ்வா மற்றும் காவல்துறை அதிகாரி மகாந்தேஷ் ஆகியோரின் உதவியுடன், அவள் ஆழமாக விசாரிக்கும் போது, ஒவ்வொரு பதிலும் இன்னும் பயங்கரமான கேள்விகளுக்கு மட்டுமே வழிவகுக்கிறது என்பதை ஜாஜி உணர்கிறாள். அவள் விதியின் வலையில் சிக்கிக் கொண்டாளா? மேலும் முக்கியமாக – அவள் உயிருடன் தப்பி வருவாளா? என்பது தான் இந்த சீரிஸின் கதை.
நடிகை குஷி ரவி கூறுகையில்:
”‘அய்யனா மானே’ ஒரு மறக்க முடியாத அனுபவம். இந்த கதாபாத்திரத்தில் பயம், எதிர்பார்ப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துவது சவாலானதாய் இருந்தது, ஆனால் அதே சமயம் எனக்கு மிகவும் திருப்தி அளித்த பாத்திரமாக அமைந்தது. இந்த சீரிஸ் இந்த அளவிற்கு ரசிகர்களிடம் சென்று சேரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இப்போது ரசிகர்கள் என் மீது காட்டும் அன்பு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இதற்காக ZEE5 மற்றும் ஸ்ருதி நாயுடு புரொடக்ஷன்ஸுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.”
இயக்குநர் ரமேஷ் இந்திரா கூறுகையில் :
“அய்யனா மானே எனது உள்ளார்ந்த பயம், நம்பிக்கை மற்றும் குடும்பத்தைப் பற்றிய எண்ணங்களிலிருந்து உருவானது. இது கர்நாடக கலாச்சாரத்தின் ஆழத்தைப் பிரதிபலிக்கும் ஒரு முயற்சியாகவும் இருந்தது. இந்த வெற்றி, இந்தியாவில் உள்ள மண் மற்றும் மொழி சார்ந்த கதைகள் புதிய உயரங்களை எட்ட முடியும் என்பதை மீண்டும் நிரூபிக்கிறது.”
இப்போதே ‘அய்யனா மானே’ சீரிஸை ZEE5-இல் கண்டு களியுங்கள் – திரில்லரின் புதிய அனுபவத்தைப் பெறுங்கள்.
There are certain movies, especially horror flicks, that we grew up watching where just the mention of the title is enough to bring back those spine-chilling cinematic memories. One such unforgettable film is Jenma Natchathiram, a title that left audiences trembling with its intense horror experience in theatres. Now, after many years, a new film bearing the same title is all set to send fresh shivers down our spines. The element of 666 was a striking and mysterious symbol in the original horror classic. Carrying forward that eerie legacy, the makers of the new Jenma Natchathiram have unveiled the title and first look precisely at 6 hours, 6 minutes, and 6 seconds in the evening, underscoring the importance of this number in their new creation.
Director B. Manivarman says, ”Just like the classic magnum opus, Jenma Natchathiram will be the talk of the town. While the title is inspired by the all-time classic horror hit, this is a completely new story with a different premise and screenplay. There is a subtle link between the two films, and the audience will feel it when they watch this in theatres. We chose to reveal the first look and title at exactly 06.06.06 P.M. to signify the powerful presence of ‘666’ in the film, just as it played a vital role in the original Jenma Natchathiram.”
The film is produced by Subhashini. K under the banner of Amoham Studios in association with White Lamp Pictures and directed by B. Manivarman. The cinematography is handled by K G, while the music is composed by Sanjay Manickam. Editing is done by S. Guru Suriya and art direction is by SJ Ram. The costumes are designed by Subika A, with Ramesh as the costumer. Stunt choreography is by Miracle Michael and the project is headed by Vijayan Rengarajan.
The film features an ensemble cast including Taman Akshan, Malvi Malhotra, Maithreya, Raksha Cherin, Sivam, Arun Karthi, Kali Venkat, Munishkanth, Velaramamoorthy, Thalaivasal Vijay, Santhana Bharathi, Boys Rajan, Nakalites Niveditha, and Yasar performing powerful roles.
The film’s postproduction work is already completed and is all set for its worldwide theatrical release shortly. Following the grand success of GOAT and Good Bad Ugly, Romeo Pictures Raahul has acquired the worldwide theatrical rights of this film, and the official announcement on release date will be made soon.
இயக்குநர் பி. மணிவர்மன் இயக்கத்தில் ஜென்ம நட்சத்திரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
திரையுலகில் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. ஆனால், நாம் கண்டுகளித்த திரைப்படங்களில் ஹாரர் எனப்படும் பேய் கதையம்சம் கொண்ட படங்களை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. நல்ல ஹாரர் திரைப்படம் கொடுத்த அனுபவம் நீண்ட காலம் நம் மனங்களில் அப்படியே இருக்கத்தான் செய்யும். கடந்த கால படங்களின் தலைப்புக்கூட நம்மை அஞ்சி நடுங்க வைத்த சம்பவங்கள் உண்டு. அந்த வகையில், ஜென்ம நட்சத்திரம் திரைப்படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இதே தலைப்பு கொண்ட திரைப்படம் வெளியாக இருக்கிறது. முந்தைய படத்தை போன்றே புதிய ஜென்ம நட்சத்திரம் திரைப்படமும் நம்மை அஞ்சி நடுங்க செய்யும் அளவுக்கு ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் தான் உருவாகி இருக்கிறது. படத்தில் 666 என்ற விஷயம் மிகவும் கவனிக்கும் படியாக அமைந்து இருந்தது. இந்த நிலையில், புதிய படத்தின் அறிவிப்பில் இருந்தே அதன் தன்மையை வெளிக்கொண்டு வரும் வகையில், இந்தப் படக்குழு படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்டவற்றை மாலை சரியாக 6 மணி, 6 நிமிடங்கள் மற்றும் 6 நொடியில் வெளியிட்டுள்ளது.
படம் குறித்து பேசிய இயக்குநர் பி. மணிவர்மன், “முந்தைய ஜென்ம நட்சத்திரம் போன்றே, இந்தப் படமும் பேசும் படியாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்திற்கான தலைப்பு அதன் அசல் ஹாரர் படத்தில் இருந்தே பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம். ஆனால், படத்தின் கதை மிகவும் வித்தியாசமாகவும், திரைக்கதையை தனித்துவமாகவும் அமைத்து இருக்கிறோம். படத்தை பார்க்கும் போது இரு படங்களுக்கும் இடையில் உள்ள இணைப்பை ரசிகர்கள் திரையரங்குகளில் ரசிக்க முடியும். படத்தில் உள்ள சக்திவாய்ந்த 666 தன்மையை எடுத்துரைக்கும் வகையில் தான் இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவற்றை சரியாக மாலை 6.06.06 மணிக்கு வெளியிட்டு இருக்கிறோம்,” என்று தெரிவித்தார்.
இந்தப் படத்தை அமோஹம் ஸ்டூடியோஸ் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் தயாரிப்பில் கே.சுபாஷினி தயாரித்து பெருமையுடன் வழங்க ஒரு நொடி பட இயக்குநர் பி. மணிவர்மன் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கே.ஜி. மேற்கொள்ள, இசையை சஞ்சய் மாணிக்கம் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பு பணிகளை எஸ். குரு சூரியாவும், கலை இயக்க பணிகளை எஸ்.ஜே. ராம் மேற்கொண்டுள்ளனர். ஆடை வடிவமைப்பை சுபிகா ஏ மேற்கொள்ள காஸ்ட்யூமராக ரமேஷ் பணியாற்றியுள்ளார். சண்டை காட்சிகளை மிராக்கிள் மைக்கேல் படமாக்கி இருக்கிறார்.
ஜென்ம நட்சத்திரம் படத்தில் தமன் அக்ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா செரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஸ்காந்த், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சந்தான பாரதி, பாய்ஸ் ராஜன், நக்கலைட்ஸ் நிவேதித்தா மற்றும் யாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் நிறைவு பெற்று விரைவில் உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. இப்படத்தை உலகமெங்கும் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் வெளியிடுகிறார்.
வாமா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி தயாரிப்பில், நடிகர் யோகிபாபு நடிப்பில், இயக்குநர் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில், மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் “ஜோரா கைய தட்டுங்க”.
இப்படத்தில் ஹரிஸ் பேரடி, வசந்தி, ஜாகிர் அலி, மணிமாறன், சாந்தி தேவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு எஸ்.என். அருணகிரி இசையமைத்துள்ளார். இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர் மது அம்பாட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் வரும் மே 16 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்
தயாரிப்பாளர் ஜாகிர் அலி பேசியதாவது…
நான் ஒரு மலையாளி, தமிழ் மீதான நம்பிக்கையில், யோகிபாபு மீதான அன்பில், இப்படத்தை எடுத்துள்ளோம். நீங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். யோகிபாபு இப்படத்திற்கு மிகப்பெரும் ஆதரவாக இருந்தார். இப்படம் மே 16 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
எடிட்டர் சாபு ஜோசப் பேசியதாவது…
இயக்குநரை 10 வருடம் முன்பிருந்தே தெரியும். அவர் இயக்கிய தீப்பிடிக்கும் பச்சை மரம் படத்திற்கு என் மனைவி தான் எடிட்டர், இப்போது பத்து வருடங்கள் கழித்து, இப்படத்திற்கு நான் எடிட்டர் மகிழ்ச்சி. என்னிடம் கதை சொல்லும் பல இயக்குநர்கள், யோகிபாபு தான் ஹீரோ என்பார்கள். யோகிபாபு எல்லோரும் அணுகக்கூடிய நாயகனாக இருக்கிறார். அவர் அதிக படம் செய்யும் போது, சினிமா நன்றாக இருக்கும். இந்தப்படத்திற்கு மது அம்பாட் கேமராமேன், பல தேசிய விருதுகள் வென்றவர், அவர் படத்தில் நான் இருப்பது எனக்குப் பெருமை. இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
நடன இயக்குநர், நடிகை வசந்தி பேசியதாவது..,
ஜோரா கைய தட்டுங்க படத்திற்கு என்னை அழைத்த விநீஷ்க்கு நன்றி. யோகிபாபு நிறைய ஒத்துழைப்பு தந்தார். இந்தப்படத்தின் சண்டைக்காட்சிகளில் உண்மையிலேயே அவரை அடித்துள்ளேன், பரவாயில்லை தயங்காமல் நடியுங்கள் என எனக்கு ஊக்கம் தந்தார். அவர் நிறைய உதவும் குணம் கொண்டவர். இப்படம் மிக நன்றாக வந்துள்ளது.
நடிகர் ஶ்ரீதர் கோவிந்தராஜ் பேசியதாவது…
இயக்குநர் விநீஷ் சார், என்னை நம்பி மிகப்பெரிய கதாப்பாத்திரம் தந்துள்ளார். அவர் நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளேன் என நம்புகிறேன். யோகிபாபு அண்ணாவிடம் ஒரு சாரி கேட்டுக்கொள்கிறேன். படத்தில் அவர் மீது பாட்டிலால் அடிக்கும் காட்சியில் உண்மையிலேயே அடித்து விட்டேன் ஆனால் அவர், கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல், கவலைப்படாதே இயக்குநருக்கு ஒகே இல்லை என்றால், ஒன்மோர் போகலாம் என்றார். என்னை ஊக்கப்படுத்தினார் அவருக்கு என் நன்றி. மது அம்பாட் சார் படத்தில் நானும் நடித்திருப்பது எனக்குப் பெருமை. எல்லோருக்கும் மிக்க நன்றி. மே 16 ஆம் தேதி படம் வருகிறது. ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் அருவி பாலா பேசியதாவது…
இந்தப்படம் செய்யும் போது தான் வேட்டையன் பட வாய்ப்பு கிடைத்தது. மது அம்பாட் சார் மூலம் தான் இந்த பட வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவருக்கு நன்றி. வாய்ப்பு தந்த இயக்குநர் விநீஷ் அண்ணாவிற்கு நன்றி. தயாரிப்பாளருக்கு நன்றி. யோகிபாபு அண்ணன் நிஜத்திலும் அண்ணனாகவே நடந்து கொண்டார். அவருடன் பல படங்களில் நடித்துள்ளேன், என்னை கைட் பண்ணிக் கொண்டே இருப்பார். அவருக்கு நன்றி. என்றார்.
ஒளிப்பதிவாளர் மது அம்பாட் பேசியதாவது…
இந்தப்படத்திற்காக விநீஷ் என்னை அழைத்தது மகிழ்ச்சி. யோகிபாபு மிக நல்ல நடிகர். சிறப்பாக நடித்துள்ளார். எல்லோரும் மிக சந்தோசத்துடன் வேலை பார்த்துள்ளோம். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…
தயாரிப்பாளர் ஜாகிர் அலிக்கு வாழ்த்துகள். மது அம்பாட் இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர், அவர் இப்படத்தில் வேலை பார்த்துள்ளது பெருமை. அவர் எப்போதும் தேர்ந்தெடுத்துத் தான் படம் செய்வார். இது இப்படத்திற்குப் பெருமை. எல்லோரும் மிகவும் தன்னடக்கமாக இருக்கிறார்கள். யோகிபாபு பல சின்ன பட்ஜெட் படங்களில் தொடர்ந்து நடிக்கிறார். இது சினிமாவுக்கு நல்லது. எனக்கு இன்னும் படம் காமிக்கவில்லை, டிரெய்லர் நன்றாக உள்ளது. படமும் நன்றாக இருக்குமென நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துகள். யோகிபாபுவை கலகலப்பு படத்திலிருந்து பார்க்கிறேன், அவரது இந்த உயரத்திற்கு கடின உழைப்பு தான் காரணம். யோகிபாபு புரமோசன் வருவதற்கு 7 லட்சம் கேட்கிறார் என புகார் கூறுகிறார்கள், ஆனால் அவர் அப்படியில்லை என எனக்குத் தெரியும். அவர் 1 நாள் நடித்த படத்திற்குக் கூப்பிடுவது எல்லாம் அழகல்ல. அவர் பல படங்களுக்கு புரமோசனுக்கு வருகிறார். அவரைப் பற்றி தப்பாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
இயக்குநர் விநீஷ் மில்லினியம் பேசியதாவது…
நான் கொஞ்சம் மலையாளி, மலையாளத்தின் தாய்மொழி தமிழ் தான். 2013 ல் புதுமுகங்களின் முயற்சியில் தீக்குளிக்கும் பச்சை மரம் படம் எடுத்தேன் பலருக்குத் தெரிந்திருக்கும். அப்போது என்னிடம் 400 பேர் நடிக்கக் கேட்டு வந்தார்கள், அப்போது ஒருவர் என்னிடம் வந்திருந்தார், அவருக்கு ஒரு நாள் 1000 ரூபாய் சம்பளம் பேசி 25 நாள் நடிக்கச் சொன்னேன், ஆனால் நான் நிறையப் படம் நடித்துள்ளேன், எனக்கு 2000 சம்பளம் தாருங்கள் என்றார், ஆனால் நான் நடிக்க விருப்பமிருந்தால் நடி இல்லையென்றால் ஓடிவிடு என்றேன். அவர் தான் யோகிபாபு. ஆனால் சில வருடம் கழித்து நான் போன் செய்த போது, அன்போடு என்னை அழைத்துப் பேசினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் படம் செய்யப்போகிறேன் என்று சொன்ன போது, கதையெல்லாம் சொல்ல வேண்டாம், உங்களுக்காக நடிக்கிறேன் எனச் சொன்னார். அவருக்கு இந்த இடத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்தப்படம் கண்டிப்பாக அவரது நடிப்பில் மிக வித்தியாசமான படமாக இருக்கும். மது அம்பாட் சார் இப்போதும் சுறுசுறுப்பாக இயங்குவார், இப்போது சொன்னாலும் மலை ஏறுவார். இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர் என் படத்தில் வேலை பார்த்தது மகிழ்ச்சி. எனக்குத் தமிழில் முழு ஆதரவு தந்த தயாரிப்பாளர் தாணு சாருக்கு நன்றி. தயாரிப்பாளர் தனஞ்செயன் சாருக்கு நன்றி. என்றார்.
கலைப்புலி தாணு பேசியதாவது…
இப்படத்தின் டிரெய்லர் பாடல்களை முன்பே பார்த்து விட்டேன். நண்பர் தயாரிப்பாளர் ஜாகிர் அலியை வரவேற்கிறேன். யோகிபாபு எல்லோருக்கும் நல்லவராகத் தான் இருக்கிறார். நான் போன் செய்தபோது, ஒரு தயாரிப்பாளருக்குப் பணமே வாங்காமல் நடித்துத் தந்தார். அவரது பெயருக்குக் களங்கம் வரக்கூடாது. இந்தப்படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
நடிகர் யோகிபாபு பேசியதாவது…,
தயாரிப்பாளர் ஜாகிர் அலி மிகவும் கஷ்டப்பட்டு இப்படம் செய்துள்ளார், என்னால் இல்லை, அதற்கு வேறு பல காரணங்கள், ஆனால் படத்தை நன்றாக எடுத்துள்ளார். இயக்குநர் விநீஷ் சார் சொன்னது உண்மை தான். தீக்குளிக்கும் பச்சை மரம் 2013ல் நடித்தேன், 1000 ரூபாய் சம்பளம். மீண்டும் பல வருடம் கழித்து போன் செய்து அவர் பேசியவுடனே சொல்லுங்கள் விநீஷ் சார் என்றவுடன் ஆச்சரியப்பட்டார். நான் எப்போதும் பழசை மறக்க மாட்டேன். நான் எல்லோருக்கும் சப்போர்ட் செய்து தான் நடித்துக்கொண்டிருக்கிறேன். என்னிடம் உதவியாளராக இருந்தவர் ஹீரோவாக நடித்தார் அந்தப்படத்தில் ஒரு நாள் நடித்தேன், அந்தப்படத்திற்குத் தான் 7 லட்சம் கேட்டேன் எனப் புகார் சொல்லியுள்ளார்கள். இது நான் நடித்த படம் அதனால் நான் வரவேண்டும், வந்துள்ளேன். நான் என் சம்பளத்தை, நிர்ணயிப்பதில்லை, ஆனால் எனக்குச் சொன்ன சம்பளம் வருவதே இல்லை. எனக்கு வர வேண்டிய சம்பளம் மிகப்பெரிய லிஸ்ட் இருக்கிறது, அதனால் யாரும் தவறாகப் பேசாதீர்கள். இப்படம் மிக நன்றாக வந்துள்ளது எல்லோரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
Rough Note Production, known for delivering content-driven cinema that resonates with audiences and critics alike, is proud to announce its next project, tentatively titled Production No.5. This upcoming bilingual film will be helmed by the acclaimed filmmaker and cinematographer Vijay Milton, and marks the Kollywood debut of Tollywood sensation Raj Tarun.
The announcement comes as a special tribute on the occasion of Actor Raj Tarun’s birthday, and Rough Note Production is thrilled to officially introduce this dynamic collaboration to audiences across the South.
Raj Tarun, who won hearts with his impressive debut in Uyyala Jampala and delivered hits like Kumari 21F and Cinema Choopistha Mava, is now all set to make his grand entry into Tamil cinema. With this project, he will take on a refreshing new role that promises to surprise his fans and showcase a different dimension of his talent.
Director Vijay Milton, celebrated for his visually compelling storytelling and strong character-driven narratives, will be steering this film. His past directorial ventures like 10 Endrathukulla,Goli Soda, Goli Soda 1.5, Kadugu, Bairagee etc., have earned both commercial success and critical acclaim. As a cinematographer, his extensive body of work across more than 40 films includes collaborations with top stars such as Shivarajkumar, Vijay, Ajith, Vikram etc., further solidifying his mark in Indian cinema.
Speaking about the project, Vijay Milton shared:
“This film is very close to my heart. We’re building something that’s packed with energy, grit, and emotion – everything the Goli Soda franchise stands for. Raj Tarun brings a unique freshness and charm, and I’m confident his performance will be a revelation to the Tamil audience.”
Production No.5 will continue in the spirit of the Goli Soda franchise, known for its raw storytelling and grounded yet high-impact cinematic experiences. With its bilingual approach, the film aims to bridge audiences from Tamil and Telugu cinema, offering a gripping narrative and a compelling lead performance.
The rest of the cast and crew details will be announced shortly. Rough Note Production is proud to be launching a vibrant and talented actor like Raj Tarun into the Tamil film industry and looks forward to an exciting journey ahead.
Stay tuned for more updates!
விஜய் மில்டன் இயக்கும் தமிழ்-தெலுங்கு இருமொழிப் படத்தில் ராஜ் தருண் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, ரஃப் நோட் புரொடக்ஷன் அடுத்த தயாரிப்பை அறிவிக்கிறது.
கதை உள்ளடக்கம் மிக்க சினிமாவை வழங்கி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ள ரஃப் நோட் புரொடக்ஷன், தனது அடுத்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது. தற்காலிகமாக படத்தின் தலைப்பாக “புரொடக்ஷன் நம்பர் 5” என வைக்கப்பட்டுள்ளது. இந்த இருமொழிப் படத்தை புகழ்பெற்ற இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்குகிறார். இந்தப் படம், தெலுங்கு திரையுலகில் பெரும் கவனம் பெற்ற நடிகர் ராஜ் தருணின் கோலிவுட் அறிமுகமாகும்.
இந்த அறிவிப்பு, நடிகர் ராஜ் தருணின் பிறந்தநாளுக்கான சிறப்பு பரிசாக வெளியாகியுள்ளது. மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே இந்த வலுவான கூட்டணியை அறிமுகப்படுத்துவதில் ரஃப் நோட் புரொடக்ஷன் மகிழ்ச்சியடைகிறது.
உய்யாலா ஜம்பாலா படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற ராஜ் தருண், குமாரி 21F, சினிமா சூப்பிஸ்த மாமா போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர். இப்போது, தமிழ் சினிமாவிற்கு ஒரு புது பரிமாணத்துடன் காலடி எடுத்து வைக்கிறார். இந்தப் படத்தில் அவர் புதிய தோற்றத்திலும், வித்தியாசமான கதாபாத்திரத்திலும் ரசிகர்களை கவரத் தயாராக இருக்கிறார்.
விஜய் மில்டன், வலுவான கதைகளுடன் காணக் கூடிய காட்சிப்படிமங்களை இயக்குவதில் முன்னோடியாகத் திகழும் இயக்குநர். அவரது முந்தய படங்களான 10 எண்ணுறதுக்குள்ள, கோலி சோடா, கோலி சோடா 1.5, கடுகு, பைரகி உள்ளிட்ட படங்கள் விமர்சன மற்றும் வணிக ரீதியாக வெற்றியடைந்தன. ஒளிப்பதிவாளராகவும், சிவராஜ்குமார், விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் 40-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.
இந்தப் படம் குறித்து விஜய் மில்டன் கூறுகையில்:
“இந்த படம் எனக்கு மிக மிக நெருக்கமான ஒரு படம். கோலி சோடா பாணியை தொடர்ந்து- இது ஒரு சக்திவாய்ந்த, உணர்ச்சிமிக்க, உண்மையான கதையை கொண்டு வருகிறது . ராஜ் தருண் மிகவும் புத்துணர்ச்சியுடனும், இளமையாகவும் தோன்றுகிறார்; தமிழ் ரசிகர்களை அவருடைய நடிப்பு ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என எனக்கு நம்பிக்கை உள்ளது.”
புரொடக்ஷன் நம்பர் 5 படமானது, கோலி சோடா திரைப்படங்கள் போலவே, நியாயமான ஆனால் தாக்கம்மிக்க காட்சிப்படுத்தலோடு தொடரும். தமிழ் மற்றும் தெலுங்கு பார்வையாளர்களை இணைக்கும் முயற்சியாகவும், வலுவான கதையம்சம் மற்றும் பிரதான கதாநாயகனின் அர்ப்பணிப்பு நிறைந்த நடிப்பை வழங்கும் நோக்கத்துடனும் உருவாக்கப்படுகிறது.
மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். ராஜ் தருண் போன்ற ஒரு சக்திவாய்ந்த, திறமைமிக்க நடிகரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்துவதில் ரஃப் நோட் புரொடக்ஷன் பெருமை கொள்கிறது. மேலும் இந்தப் படத்தைப் பற்றிய தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆவலுடன் இருக்கிறது.
பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக வெளியான திரைப்படம் ‘அஸ்திரம்’. ஷாம் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார். அறிமுக எழுத்தாளர் ஜெகன் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார். கதாநாயகியாக மாடலிங் துறையை சேர்ந்த நிரா நடிக்க முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர், வெண்பா மற்றும் அறிமுக நடிகர் ரஞ்சித் DSM ஆகியோர் நடித்துள்ளார்கள்
இந்த படம் கடந்த மார்ச் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்களின் பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று இருந்தது.
நீங்கள் க்ரைம் த்ரில்லர்களைப் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்தால், இது உங்களுக்கானது. இறந்தவர்களிடையே காணப்படும் பொதுவான வடிவத்தைக் கொண்ட தொடர்ச்சியான தற்கொலை வழக்குகளை விசாரிக்கும் ஒரு போலீஸ் அதிகாரியை சுற்றி அஸ்திரம் நகர்கிறது. தற்கொலைகளில் தவறு நடந்ததாக சந்தேகிக்கும் நாயகன் விசாரணையைத் தொடங்குகிறார், பல விறுவிறுப்பான திசைகளில் பயணித்து சுவாரஸ்யமான திருப்பங்களுடன் உறையவைக்கும் உண்மைகளை கண்டுபிடிக்கிறார்.
‘அஸ்திரம்’ திரைப்படம் நிச்சயம் த்ரில்லர் மற்றும் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் விரும்பும் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். திரையரங்குகளில் கானத்தவறியவர்கள் தற்போது Aha Tamil OTT தளத்தில் கண்டுகளிக்கலாம்.
திருப்பதி வெங்கடேசுவர சுவாமி கோவிலுக்குப் பிறகு திருப்பதி என்றால் சட்டென்று நினைவுக்கு வருவது ‘திருப்பதி பீமாஸ்’ தான். உணவகம் மற்றும் தங்கும் விடுதிகள் என 1954 ஆம் ஆண்டு முதல், சுமார் 70 ஆண்டுகளை கடந்து இத்தொழிலில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் திருப்பதி பீமாஸ் தற்போது தமிழகத்தில் தனது முதல் கிளையை சென்னை, அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர்ஸ் பிளாசா மாலில் திறந்துள்ளது.
இன்று (மே 11) நடைபெற்ற திருப்பதி பீமாஸ் சைவ உணவகத்தின் திறப்பு விழாவில், பிரபல திரைப்பட நடிகை தேவயானி மற்றும் இயக்குநரும், நடிகருமான தம்பி ராமையா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்கள். இவர்களுடன் தொழில் முனைவர்கள், திரையுலக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய திருப்பதி பீமாஸ் உணவகத்தின் நிர்வாக இயக்குநர் அசோக், “70 ஆண்டுகளாக உணவகம் மற்றும் விடுதி தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது 4 வது தலைமுறையில் நாங்கள் அடியெடுத்து வைக்கிறோம். ஒவ்வொரு தலைமுறையின் போதும், நவீன காலத்துக்கு ஏற்ப எங்களை புதுப்பித்துக் கொண்டதால் தான் இந்த தொழிலில் நாங்கள் வளர்ச்சியடைந்து வருகிறோம். முதன் முதலில் லாட்ஜ்களை திறந்ததும், ஓட்டல்களில் அட்டாச் பாத் அமைத்ததும் நாங்கள் தான். பிறகு, 2 ஸ்டார், 3 ஸ்டார் விடுதிகளை அமைத்ததும் நாங்கள் தான். இப்படி திருப்பதியில் தொடங்கி, காக்கிநாடா, பெங்களூர் ஆகிய பகுதிகளில் எங்கள் கிளைகள் திறக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
தமிழகத்தில் ‘திருப்பதி பீமாஸ்’ சைவ உணவகத்தின் முதல் கிளை சென்னை, அண்ணா சாலையில், ஸ்பென்சர்ஸ் பிளாசா மாலில் திறக்கப்பட்டுள்ளது. இந்த கிளையை தொடர்ந்து மேலும் 10 புதிய கிளைகளை சென்னையில் திறக்க திட்டமிட்டுள்ளோம். மேலும், இந்தியா முழுவதும் திருப்பதி மீமாஸ் உணவகம் மற்றும் விடுதிகளை திறக்கவும் திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.
திருப்பதி பீமாஸின் தனித்துவமான உணவு குறித்து கூறிய அசோக், “திருப்பதி பீமாஸ் உணவைப் பொறுத்தவரை முழுவதும் ஆந்திராவாகவும் இருக்காது, முழுவதும் தமிழ்நாட்டைச் சேர்ந்ததாகவும் இருக்காது. இரண்டுமே பாதி, பாதி என்ற ரீதியில் தான் இருக்கும். அதனால், ஆந்திர மக்களுக்கு எங்கள் உணவு பிடிக்கும், தமிழக மக்கள் எதிர்ப்பார்க்கும் சுவை, உணவு வகைகளும் எங்களிடம் கிடைப்பது, எங்களது தனித்துவம். மேலும், கடந்த 70 ஆண்டுகளாக எங்களது சிறப்பு வாய்ந்த உணவு என்றால் அது தாலி தான். சுமார் 14 வகையான உணவு வகைகள் கொண்ட தாலியில், ஆந்திராவைச் சார்ந்த 4 வகை உணவுகளும், தமிழகத்தைச் சார்ந்த 4 வகைகள் மற்றும் பிற மாநிலத்தின் வகைகள் இருப்பதோடு, அன்லிமிடெட் தாலி கொடுக்கிறோம். எனவே, எங்களது தாலி உணவு மக்களை அதிகமாக கவர்ந்த உணவாகும். மற்றபடி, சைனீஷ், நார்த் உள்ளிட்ட அனைத்து வகையான சைவ உணவுகள் இருக்கும். காலை உணவை பொறுத்தவரை, எங்களது பொங்கல் அந்த காலத்தில் கோவில்களில் வழங்கப்படும் பிரசாதத்தின் சுவையில் இருக்கும். அதே போல், மற்ற உணவகங்களில் ஒரே ஒரு சாம்பார் மட்டும் தான் தருவார்கள், ஆனால் நாங்கள் டிபனுக்கு ஒரு சாம்பார், சாப்பாட்டுக்கு ஒரு சாம்பார் என்று இரண்டு வகையான சாம்பார் கொடுக்கிறோம். விலையை பொறுத்தவரை மிடில் கிளாஸ், அப்பர் மிடிள் கிளாஸ் மக்கள் சாப்பிடும் வகையில் நியாயமானதாக இருக்கும்.
சென்னையில் எங்களது புதிய கிளையை திறக்க பலர் எங்களிடம் கோரிக்கை விடுத்து வந்ததை தொடர்ந்து ஸ்பென்சர் பிளாசாவில் புதிய கிளையை திறந்தோம். ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள பீமாஸில் சாப்பிட வருபவர்களுக்கு பார்க்கிங் கட்டணம் இல்லை, இலவசம் தான். அதே சமயம் சாப்பிட்டு விட்டு செல்லும் போது பார்க்கிங் கூப்பனில் எங்களது முத்திரையை பெற்று சென்றால் போதும்.” என்றார்.
நடிகை தேவயானி பேசுகையில், “பீமாஸ் உணவகம் 70 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கது. தற்போது 4வது தலைமுறையில் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள் என்பது மிகப்பெரிய சாதனையாகும். இதுபோல் மேலும் பல தலைமுறைகளை கடந்து இவர்கள் பல சாதனைகள் படைக்க வேண்டும். இவர்களது உணவு அனைத்தும் சுவை மிக்கதாக இருக்கிறது. அதனால், சுவையான சைவ உணவு சாப்பிட வேண்டுமானால், ஸ்பென்சர்ஸ் பிளாசாவில் இருக்கும் திருப்பதி பீமாஸுக்கு வாங்க.
பொதுவாக சைவ உணவு என்பது நம்ம உடலுக்கு மிக ஆரோக்கியமானது. எளிதியில் ஜீரணம் ஆக கூடியதும் சைவ உணவு தான். அதிலும், திருப்பதி பீமாஸ் உணவகம் போன்ற தரமான உணவுகள் சுவையாக மட்டும் இன்றி உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கிறது. பீமாஸின் பருப்பு பொடி, நெய் மற்றும் கோங்ரா சட்னி சிறப்பானது என்று சொல்கிறார்கள். எனக்கு சாம்பார், ரசம் மிகவும் பிடிக்கும். இன்று சென்னையில் முதல் கிளையை திறந்திருக்கும் திருப்பதி பீமாஸ், மேலும் 10 கிளைகள் திறக்க இருக்கிறார்கள். பத்துக்கு மேலும் திறக்க வேண்டும், என்று நான் வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.
நடிகர் இயக்குநர் தம்பி ராமையா பேசுகையில், “திருப்பதி பீமாஸ் என்ற பெயரை நாம் நீண்ட நாட்களாகவே கேள்வி பட்டிருக்கிறோம், ஒரு நாளாவது இந்த விடுதியில் தங்க முடியுமா, என்றெல்லாம் யோசித்தது உண்டு. அப்படிப்பட்ட புகழ் பெற்ற திருப்பதி பீமாஸின் புதிய கிளை திறப்பு நிகழ்ச்சியில் நான் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி. திருப்பதியில் பிரபலமாக இருக்கும் திருப்பதி பீமாஸ், இப்போது என்னையில் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது. எனவே, இனி சென்னையிலும் திருப்பதி பீமாஸ் பிரபலமடைய வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.
நிகழ்ச்சியின் இறுதியில், நடிகை தேவயானி மற்றும் தம்பி ராமையாவுக்கு திருப்பதி பீமாஸ் உணவக நிர்வாகத்தினர் சால்வை அணிவித்து, சாமி சிலை ஒன்றை நினைவு பரிசாக வழங்கி சிறப்பித்தனர். நடிகை தேவயானி திருப்பதி பீமாஸ் உணவகத்தின் சில உணவு வகைகளை ருசித்து பார்த்ததோடு, “இந்த அளவுக்கு நான் சாப்பிட்டது இதுவே முதல் முறை, அந்த அளவுக்கு உணவு சுவையாக இருந்தது” என்று பாராட்டினார்.
Verdict: “A futuristic vision clouded by narrative confusion and lost potential.”
Synopsis: A Bleak Glimpse into Tomorrow
Set in the year 2064, Kaliyugam paints a grim portrait of a world where humanity is on the brink of collapse. Basic resources like food and water are scarce, and power has been seized by a ruthless elite group called the “Residents.” As they impose control through fear and violence, a rebellion rises in the form of the “Liberators,” who envision a fair, egalitarian future. The setup hints at an epic struggle for survival and justice — but unfortunately, the storytelling never quite lives up to the premise.
Worldbuilding: Rich Concept, Rushed Execution
Director Pramodh Sundar clearly has an ambitious vision. The dystopian backdrop is creatively imagined, and the political undertones about power imbalance and societal decay feel relevant. However, the film gets bogged down early on. The initial worldbuilding, instead of drawing viewers in, feels overly stretched and poorly paced, making it difficult to stay invested.
Performances: Strong Cast, Scattered Narrative
Kishore, playing Sketch, enters the film with promise, bringing a stoic intensity to his role. Iniyin Subramani offers a sincere performance as well. But the film only starts to find its footing with the arrival of Shraddha Srinath’s character, Pari. Well-written and emotionally engaging, Pari becomes the film’s emotional anchor. Shraddha delivers a powerful performance, injecting much-needed energy and purpose into the story.
Screenplay & Direction: A Vision Without Control
Kaliyugam 2064 has all the ingredients for a compelling sci-fi thriller: an oppressive regime, a resistance movement, a desperate populace, and emotional stakes. However, the screenplay falters by trying to juggle too many ideas without grounding them in a coherent flow. Revelations made in the second half attempt to retroactively add meaning to earlier scenes, but the impact is diluted by a disjointed narrative.
The film wants to be both philosophical and action-driven, but struggles to balance these tones. It becomes a film driven by its vision more than its execution — admirable in ambition but lacking in delivery.
Visuals & Music: Atmospheric but Inconsistent
Visually, Kaliyugam does have moments that evoke the bleakness of a dystopian world — desolate landscapes, dim lighting, and minimalist design reflect the tone well. However, technical inconsistencies in editing and production design affect immersion. The music supports the film’s mood but doesn’t stand out as a memorable element.
Final Thoughts
Kaliyugam 2064 dares to dream big and touches on themes that resonate with present-day anxieties — inequality, survival, resistance. But the film falters due to an unfocused narrative, uneven pacing, and underwhelming execution. It’s a brave attempt at Tamil dystopian cinema, but it falls short of the impact it sets out to create.