- Advertisement -
Home Blog Page 197

வண்ணம் கொண்ட வெண்ணிலவே படத்தில் அனிருத் பாடிய அஜாலுக்கா உஜாலா பாடல் வெளியீடு

0

ஆர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் அனுஷா மகாராஜன் & தயானி பாலா தயாரித்து இருக்கும் படம் ‘வண்ணம் கொண்ட வெண்ணிலவே’. சச்சின், வகீஷா சல்காடோ நடித்து இருக்கும் இப்படத்தை தனுஷான் சந்திரசேகர் இயக்கி இருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. தற்போது நிலுக்ஷன் யோகேஸ்வரன் இசையில் அனிருத் பாடி இருக்கும் அஜாலுக்கா உஜாலா பாடல் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

‘Bison Kaalamaadan’ will light up screens this Diwali. Mari Selvaraj’s next explodes in theatres on October 17 – A Diwali celebration awaits with Applause Entertainment & Neelam Studios

0

The wait is over. The much-anticipated Tamil sports drama Bison Kaalamaadan is all set to hit theatres on October 17, 2025, as the biggest Diwali celebration in Tamil cinema this year. Produced by Applause Entertainment and Neelam Studios and directed by the acclaimed Mari Selvaraj, this gripping tale of guts and glory promises to captivate audiences.

Starring Dhruv Vikram in a transformative role, Bison Kaalamaadan brings together a stellar ensemble cast including Anupama Parameswaran, Director Ameer, Director Lal, Pasupathy and Rajisha Vijayan.

Directed by Mari Selvaraj and produced by Applause Entertainment and Neelam Studios, this film marks another significant milestone in Applause’s journey into Tamil cinema, continuing their commitment to collaborate with top-tier talent and deliver powerful, story-driven films.

துருவ் விக்ரம் நடிக்கும், “பைசன் காளமடான்” திரைப்படம், வரும் அக்டோபர் 17, தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் வெளியாகிறது !!

இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில், தமிழ் திரையுலகில் மிகவும் எதிபார்க்கப்படும், ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான “பைசன் காளமாடன்” திரைப்படம், வரும் 2025 அக்டோபர் 17 அன்று, தீபாவளிக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், துணிவும் தைரியமும் நிறைந்த ஒரு விளையாட்டு வீரனின், ஆழமான கதையை சொல்ல வருகிறது.

நடிகர் துருவ் விக்ரம் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், அனுபமா பரமேஸ்வரன், இயக்குநர் ஆமீர், இயக்குநர் லால், பசுபதி, மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தமிழ்த் திரையுலகப் பயணத்தில் மற்றொரு மைல்கல்லாக இப்படம் அமைந்துள்ளது. மாறுபட்ட கதைக்களத்தில், அழுத்தமான திரைக்கதையுடன், மிகச்சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களின் உழைப்பில், புதுமையான அனுபவம் தரும் படைப்பை, அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் வழங்கியுள்ளது.

ஆளில்லாத கிராமங்கள் அதிகரித்து வருகிறது, கிராமங்களை காப்பாற்றுங்கள்!

0

“ஆண்டவன்” இசை விழாவில் இயக்குனர் கே.பாக்யராஜ், ஜாகுவார் தங்கம், கேந்திரன் முனியசாமி, கஞ்சா கருப்பு, முத்துக்காளை, மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் கலந்துக் கொண்டு, இயக்குனர் வில்லிதிருக்கண்ணன், கதாநாயகன் மகேஷ், கதாநாயகி வைஷ்ணவி மற்றும் படக்குழுவினரை வாழ்த்தினார்கள்!

ஆளில்லாத கிராமங்கள் அதிகரித்து வருகிறது, கிராமங்களை காப்பாற்றுங்கள்!

எதார்த்தமான கதைக்களத்தில், வில்லியம் பிரதர்ஸ் நிறுவனம் “ஆண்டவன்” என்ற திரைப்படத்தை உருவாகியுள்ளது. இதில் கலெக்டராக கே.பாக்யராஜ் நடிக்கிறார். கதாநாயகனாக யூடியூப்பர் மகேஷ் நடிக்கிறார். கதாநாயகியாக வைஷ்ணவி நடிக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, முத்துக்காளை, ஹலோ கந்தசாமி, ஆதிரா, டாக்டர் முத்துச்செல்வம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு மகிபாலன், இசை கபிலேஷ், பின்னணி இசை சார்லஸ் தனா, எடிட்டிங் லட்சுமணன், நடனம் பவர் சிவா, சண்டை பயிற்சி சரவெடி சரவணன், பிஆர்ஓ கோவிந்தராஜ். இனைத் தயாரிப்பு டாக்டர் முத்துச்செல்வம், சேலையூர் எஸ்.எஸ்.சுரேஷ். எழுத்து, இயக்கம் வில்லிதிருக்கண்ணன்

இம்மாதம் 16’ம் தேதி திரைக்கு வருகிறார் “ஆண்டவன்”!

Jagadeesh Aamanchi’s ‘Yaman’ New Poster Grabs Attention

0

It’s no secret that films with a mythological touch are currently striking gold at the box office. Riding this wave is Yaman, an intriguing new film under the banner of Jagannatha Pictures. Actor Jagadeesh Aamanchi not only plays the lead role but also dons the director’s hat for this project. The film carries the powerful tagline, “Dharmo Rakshati Rakshitah (Dharma protects those who protect it).” Shravani Shetty stars opposite Jagadeesh as the female lead.

The makers have now unveiled a brand-new poster from the film, and it’s creating quite a buzz. Previously released title posters and the special Deepavali edition posters had already captivated audiences. But this latest release takes things up a notch.

In the new poster, Jagadeesh appears in a fierce avatar as Yaman (the God of Death), exuding a powerful and terrifying presence. The backdrop featuring a demonic figure (Mahishasura-like), the heavy chains in Yaman’s hands everything is designed to send chills down your spine.

One striking visual is the heroine being held captive by the Yamapasha, while Jagadeesh’s look in the attire of Yaman leaves a lasting impact. The intense imagery is bound to give viewers goosebumps.

While Vishnu Reddy Vanga cranks the camera, the music is provided by Bhavani Rakesh. KCB Hari is the editor, whereas Hari Allasani and Jagadeesh Aamanchi are the writers. The screenplay was written by Shiva Kundrapu.

The film has completed its shooting phase and is currently in post-production. The team is working hard to wrap up the final touches, and an official release date will be announced soon.

Cast: Jagadeesh Aamanchi, Shravani Shetty, Akash Challa, and others

Technical Crew
Banner: Jagannatha Pictures
Story, Director & Producer: Jagadeesh Aamanchi
Writers: Hari Allasani, Jagadeesh Aamanchi
Screenplay: Shiva Kundrapu
Executive Producer: Rajini Aamanchi
Editor: KCB Hari
DOP: Vishnu Reddy Vanga
Music: Bhavani Rakesh
PRO: Rekha

ஜகதீஷ் ஆமாஞ்சியின் ‘யமன்’ புதிய போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது

இப்போது பாக்ஸ் ஆஃபிஸில் புராண அடிப்படையிலான திரைப்படங்கள் வெற்றி பெறுவது ஒரு வெளியறிய ரகசியமல்ல. இந்த ஒரு அலை மீது சவாரி செய்கிற படம் தான் யமன், ஜகந்நாதா பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஒரு புதுமையான திரைப்படம். இதில் நடிகர் ஜகதீஷ் ஆமாஞ்சி முக்கிய கதாப்பாத்திரத்துடன் இயக்குநராகவும் பணியாற்றுகிறார். “தர்மோ ரக்ஷதி ரக்ஷித꞉” எனும் சக்திவாய்ந்த வாசகம் படத்துக்கு அடையாளமாக இருக்கிறது. ஜகதீஷுக்கு ஜோடியாக நடிகை ஸ்ராவணி ஷெட்டி நடித்துள்ளார்.

இப்போது இப்படத்திற்கான புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது, இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதற்கு முன்பு வெளியான தலைப்பு போஸ்டர்கள் மற்றும் தீபாவளி சிறப்பு பதிப்புகள் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. ஆனால் இந்த புதிய போஸ்டர் அதன் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது.

புதிய போஸ்டரில், யமன் என்ற மரண தெய்வமாக ஜகதீஷ் பயமுறுத்தும் வலிமையான தோற்றத்தில் தோன்றுகிறார். பின்னணியில் மகிஷாசுரனைப் போன்ற அரக்க வடிவம், யமனின் கையில் உள்ள கனமான சங்கிலிகள் போன்றவை பயமுறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

முக்கியமான ஒரு காட்சியில், கதாநாயகி யமபாசத்தில் சிக்கியிருப்பதும், யமனின் அலங்காரத்தில் ஜகதீஷின் தோற்றம் தீவிர பாதிப்பை ஏற்படுத்துவது போன்று உள்ளது. இந்தக் காட்சிகள் பார்வையாளர்களுக்கு உணர்வுபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு உள்ளன.

விஷ்ணு ரெட்டி வங்கா ஒளிப்பதிவு செய்ய, பாவனி ராகேஷ் இசையமைத்துள்ளார். கே.சி.பி. ஹரி அட தொகுப்பாளராகவும், ஹரி அல்லாசானி மற்றும் ஜகதீஷ் ஆமாஞ்சி கதாசிரியர்க அகவும் ளாகவும் உள்ளனர். திரைக்கதை சிவா குண்ட்ராபு எழுதியுள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு முழுமையடைந்துவிட்டது, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

நடிப்பு: ஜகதீஷ் ஆமாஞ்சி, ஸ்ராவணி ஷெட்டி, ஆகாஷ் செல்லா மற்றும் பிறர்

தொழில்நுட்பக் குழு:

தயாரிப்பு நிறுவனம்: ஜகந்நாதா பிக்சர்ஸ்

கதை, இயக்கம் மற்றும் தயாரிப்பு: ஜகதீஷ் ஆமாஞ்சி

எழுத்து: ஹரி அல்லாசானி, ஜகதீஷ் ஆமாஞ்சி

திரைக்கதை: சிவா குண்ட்ராபு

செயற்குழுத் தயாரிப்பாளர்: ரஜினி ஆமாஞ்சி

தொகுப்பு: கே.சி.பி. ஹரி

ஒளிப்பதிவு: விஷ்ணு ரெட்டி வங்கா

இசை: பாவனி ராகேஷ்

பி.ஆர்.ஓ: ரேகா

யோகி பாபு பற்றிய சர்ச்சை கருத்து! – ‘கஜானா’ பட இயக்குநரும், தயாரிப்பாளருமான பிரகதீஸ் சாம்ஸ் வருத்தம்

0

யோகி பாபு எங்கள் படத்திற்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார் – ‘கஜானா’ திரைப்பட தயாரிப்பாளர் விளக்கம்

ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் (Four Square Studios) சார்பில் பிரபதீஸ் சாம்ஸ் தயாரித்து, இயக்கியிருக்கும் ’கஜானா’ திரைப்படம் வரும் மே 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டவர்களில் ஒருவரான தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ராஜா, பேசும் போது, ”பணம் கொடுத்தால் தான் யோகி பாபு படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும், என்று கூறுகிறார். இது தவறானது, இதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன்”, என்று பேசினார். அவர் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், அவரது இத்தகைய கருத்துக்கும், ‘கஜானா’ படத்திற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை, என்று ‘கஜானா’ படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான பிரபதீஸ் சாம்ஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள பிரபதீஸ் சாம்ஸ், “யோகி பாபு எங்கள் படத்தின் ஆரம்பத்தில் இருந்து தற்போதுவரை முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். படப்பிடிப்பு தேதி கொடுப்பதில் இருந்து, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட போஸ்டர்கள் வெளியிடுவது என அனைத்திற்கும் அவர் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடக்கும் தேதியன்று தவிர்க்க முடியாத சில பணிகள் அவருக்கு இருப்பதால், பங்கேற்க இயலாது, என்று முன்கூட்டியே தெரிவித்து விட்டார். நிகழ்ச்சியை சிறப்பாக நடந்துங்கள், என்று எங்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.

ஆனால், நாங்கள் சற்றும் எதிர்பார்க்காத நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக இருக்கும் ராஜா, யோகி பாபு பற்றி சர்ச்சையான கருத்துகளை தெரிவித்தார். அவர் பேசியது முழுக்க முழுக்க அவரது தனிப்பட்ட கருத்தும், தயாரிப்பாளர் சங்கத்தின் பிரச்சனையும், அதற்கும் எங்களுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. எங்கள் படத்தை பொறுத்தவரை யோகி பாபு எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.

மேலும், ‘கஜானா’ இரண்டாம் பாகத்திலும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்க இருக்கிறார். அதற்கான தேதிகளையும் அவர் எங்களுக்கு கொடுத்து விட்டார், என்பதை தெரிவித்துக் கொள்வதோடு, எங்கள் நிகழ்ச்சியில் அவரைப் பற்றி வெளியான சர்ச்சையான கருத்துக்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று தெரிவித்தார்.

ஃபேன்டஸி திரில்லர் திரைப்படம் “நாக் நாக்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!

0

பன்முகத் திறமை கொண்ட ராகவ் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகும் புதிய மர்மம் மற்றும் ஃபேன்டஸி கலந்த திரில்லர் திரைப்படம் “நாக் நாக்”. இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. ராகவ்வின் முதல் இயக்க முயற்சியான இந்தப் படம், அதன் வெளியீட்டு தருணத்திலேயே ஒரு முக்கிய வலு சேர்க்கும் விதமாக, தேஜாவு, தருணம் போன்ற தரமான படங்களை இயக்கியவரும், இயக்குநருமான அரவிந்த் ஸ்ரீனிவாசன், தனது “ஆர்கா என்டர்டெய்ன்மெண்ட்ஸ்” நிறுவனம் வாயிலாக வெளியிட உள்ளார்.

ஒரு புதிய சினிமா அனுபவத்தை ‘நாக் நாக்’ திரைப்படம் நிச்சயம் தரும். இந்தப் படத்தின் தனித்துவமான கதைக்கருவும், தரமான உருவாக்கமும் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் அவர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த அவர், இந்தப் படத்துடன் கைகோர்த்துள்ளார்.

இதுகுறித்து அரவிந்த் ஸ்ரீனிவாசன் கூறுகையில், “நான் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதன் நோக்கமே, திறமையான புதிய இயக்குனர்களை அடையாளம் கண்டு, அவர்களின் தரமான கதைகளை பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதுதான். ‘நாக் நாக்’ பார்த்தபோது, இது மிகவும் தனித்துவமான, தரமான உள்ளடக்கம் என்று எனக்கு தோன்றியது. அதனால் உடனடியாக இந்த படக் குழுவினருடன் இணைய முடிவு செய்தேன். இப்படி ஒரு படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்தார்.

இயக்குநர் ராகவ் ரங்கநாதன் நெகிழ்ச்சியுடன் தனது திரைப்பயணம் மற்றும் இந்தப் படம் பற்றி கூறியதாவது. “இது எனக்கு ஒரு முக்கியமான தருணம்… மிகவும் தனிப்பட்ட பயணத்தின் ஒரு பகுதி. இத்தனை காலமாக நீங்கள் என்னை ஒரு நடிகர், நடனக் கலைஞர், இசையமைப்பாளராகப் பார்த்திருக்கிறீர்கள். ஆனால், இன்று முதல்முறையாக ஒரு இயக்குநராக உங்கள் முன் நிற்கிறேன்,” என்று ராகவ் ரங்கநாதன் கூறினார். “இயக்கம் என்பது எனக்குள் எப்போதும் ஒரு அமைதியான கனவாக இருந்தது. சொல்லப்போனால், அது ஒரு தொடர்ச்சியான தட்டல். இப்போது… நாக் நாக் மூலம் அந்தக் கனவு நனவாகியுள்ளது.”

படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி அவர் தொடர்ந்து கூறியதாவது: “ஆம், நான் இந்தப் படத்தை எனக்காக எழுதினேன் – ஆனால் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது வழக்கமான ஹீரோவை மட்டுமே மையப்படுத்திய கதை அல்ல. பெரிய பட்ஜெட்டில் ஹீரோ பறக்கும் காட்சிகளோ, மெதுவாக நடக்கும் காட்சிகளோ (அப்படி செய்ய எங்களிடம் பட்ஜெட்டும் இல்லை 😄) இந்தப் படத்தில் இருக்காது. ‘நாக் நாக்’கில், நான் கதாநாயகனாக இருக்கலாம். ஆனால் நான் ஹீரோ கிடையாது. கதையேதான் ஹீரோ.”

அவர் தொடர்ந்து பேசுகையில், “அந்தக் கதை எனக்கு மட்டும் சொந்தமானது அல்ல. திரையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சொந்தமானது. கே.பாலச்சந்தர் போன்ற ஆரம்பகால இயக்குநர்களின் படைப்புகளில் நான் பெரிதும் ரசித்தது, துணைக் கதாபாத்திரங்களின் ஆழம்தான். ‘எதிர்நீச்சல்’ போன்ற படங்களில் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும். எனது படத்திலும், ஒவ்வொரு கதாபாத்திரமும் உயிர் துடிப்புடன் இருக்க வேண்டும், முக்கியத்துவம் பெற வேண்டும், படம் முடிந்த பிறகும் உங்கள் மனதில் நிற்க வேண்டும் என்று விரும்பினேன். அப்படி ஒரு படத்தைத் தான் நான் உருவாக்க முயன்றேன்.”

தனது இயக்கம் மற்றும் கதை சொல்லும் ஆர்வம் எங்கிருந்து தொடங்கியது என்பதைப் பற்றி ராகவ் விளக்கினார்: “இதெல்லாம் எங்கிருந்து தொடங்கியது? நடன ரியாலிட்டி ஷோக்களில் என் மனைவியையும் என்னையும் சிலர் பார்த்திருக்கலாம். நாங்கள் சில போட்டிகளில் வென்றதும் உண்டு. அப்போது எனக்கு கிடைத்த பாராட்டுகளில் நான் மிகவும் பொக்கிஷமாக கருதியது, ‘நீங்கள் வெறும் நடனமாடவில்லை – ஒரு கதையைச் சொல்கிறீர்கள்’ என்பதுதான். அது எனக்கு பெரிய அர்த்தம் தந்தது. ஏனெனில் அந்த நடனங்களுக்கான பெரும்பாலான கதைகள் – கருத்துக்கள் – என்னிடமிருந்து உருவானவைதான். அந்த நடன ஒத்திகை அறைகளில்தான் எனக்குள் படைப்பாற்றல் இருப்பதை உணர்ந்தேன். சொல்லப்போனால், மானாட மயிலாட நிகழ்ச்சியில் எங்கள் பெர்ஃபாமென்ஸ்களுக்கு பிறகு, என் தலைக்குள் ஒரு நல்ல இயக்குனர் இருக்கிறார் என்று கலா மாஸ்டர் சொல்வார்கள். அப்படித்தான் எனக்குள் இருந்த கதைசொல்லி பிறந்தான்.”

‘நாக் நாக்’ அதனுடைய ஒரு நீட்சிதான் என்று கூறிய அவர், “நான் இதற்கு முன்பு பார்த்திராத, யாரும் ஆராயாத ஒரு கதைக்கருவை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இது புதியது, பரபரப்பானது, மேலும்… உணர்வுபூர்வமானது. இந்தப் படத்தை நீங்கள் அனுபவிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

தனது முதல் பட இயக்குநராக உணரும் பொறுப்பு குறித்துப் பேசிய ராகவ் ரங்கநாதன், தனது உத்வேகத்தைப் பகிர்ந்து கொண்டார்: “எனக்கு ‘எந்திரன்’ படத்தில் சில காட்சிகளில் நடித்த வாய்ப்பு கிடைத்தது, அதைப் பற்றி இன்றும் பலர் பேசுகிறார்கள். அல்லது ‘நஞ்சுபுரம்’ போன்ற ஒரு படம், அது வெளிவந்த போது பலரை சென்றடையவில்லை என்றாலும், இன்று அதன் இசை, கதை, ஆத்மாவுக்காக பாராட்டப்படுகிறது. இருந்தாலும், இந்தப் படம் எனக்கு வேறுபட்டதாகத் தோன்றுகிறது. ஏனெனில், இந்த முறை எல்லாமே என் மீதுதான். முழுப் பொறுப்பும் சுமையும் என் மீதுதான்.”

இது அவரை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் தைரியத்தை நினைவுபடுத்தியது: “இது என்னை ஒருவரிடம் கொண்டு செல்கிறது. அவருடைய தைரியம் என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது. அவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தனது திரைப்பயணத்தில் ஒரு சவாலான காலகட்டத்தில், அவர் ‘நாடோடி மன்னன்’ என்ற படத்துக்காக அனைத்தையும் முதலீடு செய்தார்… பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பிரபலமாக சொன்னதுண்டு: ‘இந்தப் படம் தோற்றால் நான் நாடோடியாகிறேன். வெற்றி பெற்றால் மன்னனாகிறேன்’.” அத்தகைய நம்பிக்கைதான் தனக்கு இப்போது உத்வேகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் திருவள்ளுவர் வாக்கையும் அவர் குறிப்பிட்டார்: “தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்.”

தனது நம்பிக்கையுடன் அவர் நிறைவு செய்தார்: “தமிழ் திரைப்படத் துறையில் வெற்றிக் கதவுகளை நான் நீண்டகாலமாகத் தட்டிக் கொண்டே இருக்கிறேன். ஆனால் ‘நாக் நாக்’ மூலம்… அந்தக் கதவு இறுதியாகத் திறக்கும் என நம்புகிறேன். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த உங்களுக்கு நன்றி. இந்தப் படத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

முக்கிய கதாபாத்திரங்களில்:

இப்படத்தில் திறமையான நட்சத்திர பட்டாளம் இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்கள்:

கார்த்திக் குமார்
சனம் ஷெட்டி
லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி
பப்லு பிரித்விராஜ்
வட்சன் சக்கரவர்த்தி
ஐஸ்வர்யா
கலை

இல்லுஷன்ஸ் இன்ஃபினிட் நிறுவனம் சார்பாக இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவை ராஜா பட்டாச்சார்ஜியும், இசையமைப்பை நவீன் சுந்தரும் கவனித்துள்ளனர். ஃபர்ஸ்ட் லுக்கில் பிரதிபலிக்கும் வகையில், படத்தின் மர்மம் மற்றும் ஃபேன்டஸிக்கு உயிர் கொடுக்கும் விதத்தில் இசை அமைந்துள்ளது.

இப்படத்தின் வெளியீட்டு தேதியை விரைவில் முடிவு செய்து அறிவிப்பதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vembu to have worldwide theatrical release on May 23

0

Manjal Cinemas Golden Suresh and S. Vijayalakshmi presents “Vembu”

Debut filmmaker Justin Prabhu’s directorial features Madras fame Hari Krishnan (Johny) in the lead role with Sheela playing the female lead character. Marimuthu, Jaya Rao, Pariyerum Perumal-Karnan fame Janaki alongside many others will be seen playing the pivotal roles.

While the film’s postproduction work is already completed, the makers are planning for release shortly.

Uthra Productions (Hari Uthra) that has been consistently releasing many movies, and witnessing tremendous success is releasing this film on May 23 across many screens. On the other hand, the film has been screened at various international film festivals.

Likewise, Hari Krishnan has won the Best Male Actor Award and Sheela – The Best Female Actor Award at Ahmadabad International Film Festival. The entire crew is elated for having found an incredible accreditation through these honours.

Filmmaker Justin Prabhu says, “Both the lead actors Hari Krishnan and Sheela have been consistently choosing unique content-driven roles in their career.

In the same manner, the role that Hari Krishnan has donned in this film will defiantly surprise the audiences. The honours of Best Actor Award at Ahmadabad Film Festival has exhibited this fact significantly.

Recently, actor Vikram raving about Hari Krishnan has created a huge sensation.

Actress Sheela’s ‘To-Let’ has won more than 100 International Film Festival Awards and her ‘Mandela’ won National Awards. With ‘Vembu’, she has made her first appearance in the Film Festival and has won the Best Female Actor Award at Ahmadabad.

So far, many have been valuing the International Film Awards, but I feel our own National Film Festival Awards are precious.

We often celebrate the beautiful movies of Malayalam film industry, but we fail to sing praises and value the best movies created in our own Tamil film industry.

It’s great to see Tourist Family winning everyone’s hearts.

Movies like this have social-centric issues as the backdrop, but have witnessed commercial success as well. Sivakarthikeyan’s commercial hit movie ‘Don’ too embellished the beauty of father-son bonding.

The current trend of Tamil Cinema has always been inclined to the emotional and sentimental concepts, and audiences are loving it. Vembu will be one among this league that will endorse the social values as the core concept laced with sentiments.

This is not just a film for women — it is a story for the entire generation.
In today’s world, it emphasizes how a father should raise his daughter with safety and dignity, the importance of giving her the respect she deserves, and how both husband and wife must understand and support each other through life’s circumstances. It also highlights how children, even as they chase their dreams, should never forget to respect their parents. The film is filled with such heartfelt and meaningful moments.

So far, we have been witnessing Hari Krishan as the North Chennai boy, but this film will exhibit him in a village based character. He took laborious efforts in gaining the rural linguistic skills and body language & mannerisms for this role.

Theater Lab Jaya Rao is playing Sheela’s father character in this movie.

Pariyerum Perumal, Karnan and Vaazhai fame Janaki will be seen playing an emotional role it his movie.

A. Kumaran of ‘Thanga Magan’ fame is handling cinematography and his visuals will be highly appreciated in this film. ‘Rebel’ fame Manikandan is composing music. Miruthan fame K.J. Venkatarman is overseeing editing works for this film. The others in the technical crew include Gopi Karunanidhi as the art director.

The producers of the film, Mr. Golden Suresh and Mrs. S. Vijayalakshmi, are the true driving force behind the quality of this project — a film that’s now worthy of being submitted to prestigious awards. Their constant encouragement and wholehearted support made all the difference.

Despite this being my debut as a director, both Sheela and Harikrishnan never treated it that way. Their dedication and full cooperation throughout the shoot helped us complete the film on schedule.

As of now, preparations are underway for the release of Vembu on May 23, with Hari Uthraa set to release the film on a large scale. I truly believe the audience will connect with and appreciate this film.”

Technical Crew

Production: Golden Suresh and S. Vijayalakshmi
Direction: V. Justin Prabhu
Cinematography: A. Kumaran
Editing: KJ. Venkataramanan
Music: Manikandan Murali
Art Direction: Gopi Karunanidhi
Playback Singers: Anthony Daasan, Thanjai Chinna Ponnu, Sundar Iyer, Kapil Kapilan, Meenakshi Ilaiyaraaja, Manikandan Murali
Public Relations: A. John

மலையாளப் படங்களை கொண்டாடுகிறோம்…தமிழ்ப்படங்களை விட்டுவிடுகிறோம்
-இயக்குநர் ஜஸ்டின் பிரபு வருத்தம்.

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’.

அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, ஷீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

மாரிமுத்து, ஜெயராவ், பரியேறும் பெருமாள், கர்ணன் புகழ் ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நிறைவடைந்து தற்போது ரிலீஸுக்குத் தயாராக உள்ளது.

நிறைய படங்களை திரையரங்குகளுக்கு கொண்டு வந்து வெற்றி காணும் “உத்ரா புரொடக்சன்ஸ்- (ஹரி உத்ரா ) ‘வேம்பு’ படத்தை மே-23ஆம் தேதி தமிழகமெங்கும் அதிக அளவு திரையரங்குகளில் வெளியிடுகிறது.

இன்னொரு பக்கம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ளவும் ‘வேம்பு’ படம் அனுப்பப்பட்டு வருகிறது.

அந்தவகையில் அகமதாபாத் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான வேம்பு, சிறந்த நடிகருக்கான விருதை ஹரிகிருஷ்ணனும், சிறந்த நடிகைக்கானை விருதை ஷீலாவும் பெற்றனர். இவ்விரண்டு விருதுகளைப் பெற்றது இப்படத்திற்கான முதல் அங்கீகாரம் என்பதாகப் படக்குழு மகிழ்கிறது.

இயக்குநர் ஜஸ்டின் பிரபு கூறும்போது, “படத்தின் நாயகன் ஹரிகிருஷ்ணன், நாயகி ஷீலா இருவருமே வித்தியாசமான கதைகளையும் வித்தியாசமான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்கள்.

அந்த வகையில் ஹரி கிருஷ்ணன் இந்த வேம்பு படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரமும் கூட ரசிகர்களுக்கு ஆச்சரியம் தரக்கூடிய ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். அமதாபாத் திரைவிழாவில் சிறந்த நடிகருக்கான விருது ஹரிகிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது அதை உறுதிசெய்துள்ளது.

சமீபத்தில் நடிகர் விக்ரம் ஹரியைப் பாராட்டி பேசியது மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது.

நாயகி ஷீலா நடித்த ‘டூ லெட்’ திரைப்படம் 100 சர்வதேச விருதுகளுக்கு மேல் பெற்றுள்ளது. அவர் கதாநாயகியாக நடித்த மண்டேலா திரைப்படம் தேசிய விருது பெற்றது. தற்போது இந்த வேம்பு திரைப்படம் அகமதாபாத் சர்வதேச திரைப்பட விழாவில் முதன்முறையாக கலந்து கொண்டுள்ளதுடன் சிறந்த நடிகைக்கான விருதையும் ஷீலாவுக்கு பெற்றுத் தந்துள்ளது.

நம்மைப் பொறுத்தவரை வெளிநாட்டில் இருந்து பெறும் விருதுகளைத் தான் உயர்வாக நினைக்கிறோம்.

ஆனால் இங்கே நம் நாட்டிலேயே வழங்கப்படும் விருதுகளும் உயர்வானது என்று தான் நான் நினைக்கிறேன்.

மலையாளத் திரையுலகில் வெளியாகும் யதார்த்தப் படங்களை நாம் ஆஹா ஓஹோ எனக் கொண்டாடுகிறோம்.

நம் தமிழ் சினிமாவிலும் சின்ன பட்ஜெட்டில் வெளியான அருவி, டாடா, குடும்பஸ்தன் போன்ற பல படங்கள் வந்திருக்கின்றன.

இப்போது “டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய வெற்றி பெற்றுள்ளது.

இந்த படங்கள் எல்லாமே ஒரு சமூகக் கருத்தை உள்ளடக்கி வெளியான படங்கள். கமர்சியலாகவும் பெரிய வெற்றியைப் பெற்றன.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கமர்சியலாக வெளியான “டான்” படம் கூட, தந்தையின் அன்பு என்கிற சென்டிமென்ட்டை மையப்படுத்தி தான் வெற்றி பெற்றது.

இன்றைய தேதியில் சென்டிமென்ட்டுடன் பின்னிப் பிணைந்து தான் நம் தமிழ் சினிமா இருக்கிறது. அதுதான் பார்வையாளர்களின் மன நிலையாகவும் இருக்கிறது. அந்த வரிசையில் இந்த வேம்பு திரைப்படமும் சமூக கருத்து கொண்ட படமாக மட்டுமல்லாமல் சென்டிமென்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு படமாகவும் இருக்கும் என நான் உறுதியாகச் சொல்கிறேன்.

இது ஒரு பெண்களுக்கான படமாக மட்டுமல்லாமல், இப்போதைய தலைமுறைக்கான படமாகவும் இருக்கும்.

இன்றைய சூழலில் ஒரு தந்தை எப்படி பெண் குழந்தையை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும், அவர்களுக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், கணவன், மனைவி இருவருமே ஒருவருக்கொருவர் சூழலை புரிந்து எப்படி ஆதரவாக இருக்க வேண்டும், குழந்தைகள் தங்களுக்கு என ஒரு கனவு இருந்தாலும் பெற்றோரை எப்படி மதித்து நடக்க வேண்டும் போன்ற பல சென்டிமென்ட்டான விஷயங்கள் இந்த படத்தில் இருக்கின்றன.

ஹரிகிருஷ்ணனை வடசென்னை பையனாகவே தான் பார்த்து வருகிறோம்.

இப்படத்தில் முழுக்க முழுக்க ஒரு கிராமத்து இளைஞனாக நடித்துள்ளார் ஹரி.

இதற்காக கிராமத்துப் பழக்க வழக்கங்களையெல்லாம் கற்றுக்கொண்டு ஒரு கிராமத்து மண் சார்ந்த மனிதனாகவே நடித்துள்ளார்.

ஷீலாவின் தந்தையாக தியேட்டர் லேப் ஜெயராவ் ஒரு இயல்பான வாழ்வியல் தந்தையாக வாழ்ந்துள்ளார் என்று சொல்லலாம்.

பரியேறும் பெருமாள், கர்ணன், வாழை உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்த ஜானகி கண்கலங்க வைக்கும் விதமாக மிகச் சிறந்த யதார்த்தமான நடிப்பை இதில் வெளிப்படுத்தி உள்ளார்.

தங்க மகன் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ஏ.குமரனின் ஒளிப்பதிவு மிகச் சிறந்ததாக பேசப்படும். வேம்பு படத்தை அழகிய வாழ்வியலாக ஒளிப்பதிவு செய்துள்ளார். அதே முகம், ரபேல் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய மணிகண்டன் முரளி இசையமைத்துள்ளார்.

மிருதன் படத்தில் பணியாற்றிய கே.ஜே வெங்கட்ராமன் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்குநர் கோபி கருணாநிதி படப்பிடிப்பு லொகேஷன்களில் என்ன கிடைக்கிறதோ அதை வைத்து காட்சிகள் இயல்பாக அமையும் விதமாக சுற்றுப்புற சூழலை உருவாக்கிக் கொடுத்தார்.

படம் யதார்த்தமாக வந்திருப்பதற்கு அவரது கலை இயக்கமும் ஒரு காரணம்.

படத்தின் தயாரிப்பாளர்கள் கோல்டன் சுரேஷ் மற்றும் எஸ்.விஜயலட்சுமி தம்பதியினர் படம் இந்த அளவுக்கு விருதுகளுக்கு அனுப்பப்படும் வகையில் தரமாக உருவாகி இருக்கிறது என்றால் அதற்கு முழு முதல் காரணம் இவர்கள் கொடுத்த உற்சாகமும் ஒத்துழைப்பும் தான்..

அறிமுக இயக்குநர் தானே என்று நினைக்காமல் ஷீலா , ஹரிகிருஷ்ணன் இருவருமே படம் முழுவதும் மிகப்பெரிய ஒத்துழைப்பைக் கொடுத்தார்கள். அவர்கள் கொடுத்த அந்த ஒத்துழைப்பில் தான் படத்தைக் குறித்த நேரத்தில் முடிக்க முடிந்தது.

அந்த வகையில் இந்த வேம்பு திரைப்படம் மே 23 இல் வெளியிடத் திட்டமிட்டு வேலைகள் நடந்து வருகின்றன. ஹரி உத்ரா பெரிய அளவில் வெளியிடுகிறார். மக்களுக்கு படம் பிடிக்கும் என நான் நம்புகிறேன்” என்று கூறினார் .

தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரம்

தயாரிப்பு ; கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி

இயக்கம் ; V.ஜஸ்டின் பிரபு

ஒளிப்பதிவு ; A.குமரன்

படத்தொகுப்பு ; KJ. வெங்கட்ரமணன்

இசை ; மணிகண்டன் முரளி

கலை ; கோபி கருணாநிதி

பாடகர்கள் ; அந்தோணி தாசன், தஞ்சை சின்ன பொண்ணு,
சுந்தர அய்யர் மற்றும் கபில் கபிலன், மீனாட்சி இளையராஜா, மணிகண்டன் முரளி.

மக்கள் தொடர்பு ; A.ஜான்

பான் இந்தியா நடிகராக உருவெடுத்துள்ள சம்பத் ராமுக்கு விருது வழங்கி கெளரவித்த மலையாள புரஷ்கரம் சமிதி!

0

மலையாள திரையுகினருக்கு வழங்கப்படும் சிறந்த விருதான ‘மலையாளம் புரஷ்காரம் 1200’ விருது வென்ற நடிகர் சம்பத் ராம்!

தமிழ் சினிமாவில் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்துக் கொண்டிருப்பவர் நடிகர் சம்பத் ராம். பல முன்னணி இயக்குநர்கள், நடிகர்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தாலும், தனக்கு கொடுக்கப்படும் வேடத்தை சிறப்பாக செய்யக்கூடிய நடிகர்களில் ஒருவரான சம்பத் ராம், தற்போது தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் பிஸியான வில்லன் நடிகராக உருவெடுத்திருப்பதோடு, பான் இந்தியா படங்களில் நடிக்கும் பான் இந்தியா நடிகராகவும் வலம் வருகிறார்.

இந்த நிலையில், மலையாள திரையுலகம் மற்றும் எழுத்துலகில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வரும் மலையாள புரஷ்காரம் சமிதி, நடிகர் திலீப் நடித்த ’தங்கமணி’ என்ற மலையாளத் திரைப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்த சம்பத் ராமுக்கு, சிறந்த வில்லன் நடிகருக்கான ‘மலையாள புரஷ்காரம் 1200’ விருது வழங்கி கெளரவித்துள்ளது. கேரளாவின் கெளரவம் மிக்க விருதுகளில் ஒன்றான இவ்விருதுக்குரியவர்களை அம்மாநில பத்திரிகையாளர்கள், கலை மற்றும் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் எழுத்தாளர்கள் குழு தேர்வு செய்கிறது, என்பது குறிப்பிடத்தக்கது.

மோகன்லால், சுரேஷ் கோபி நடித்த ‘ஜனகன்’ படத்தின் மூலம் மலையாளத்தில் முக்கிய வில்லனாக அறிமுகமான சம்பத் ராம், தொடர்ந்து ‘மாளிகைபுரம்’ படம் மூலம் மலையாளத்தில் தனக்கென தனியிடம் பிடித்தார். அப்படத்தின் வெற்றி மற்றும் தனது நடிப்பு மூலம் கவனம் ஈர்த்தவர் தற்போது மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளார். மோகன் லால், மம்மூட்டி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான வில்லன் வேடத்தில் நடித்து வருபவர், ‘பாக்கியலட்சுமி’ என்ற படத்தில் குணச்சித்திர வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார். இதுவரை வில்லனாக மிரட்டி வந்தவர், முதல் முறையாக அழுத்தமான குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார். இஸ்லாமிய பள்ளி தலைமை ஆசிரியர் வேடத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் இந்த கதாபாத்திரம் மக்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, வில்லன் என்ற பார்வையை தாண்டி, சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற புதிய பார்வையை தன் மீது ஏற்படுத்தும், என்று சம்பத் ராம் தெரிவித்துள்ளார்.

பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மோசஸ் இயக்கும் ‘வெக்கை’, இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஒரு படம், ‘சாட்டை’ புகழ் அன்பழகன் இயக்கும் ’மனிதி’, ‘கங்கணம்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்திருப்பதோடு, உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘கண்ணப்பா’ திரைப்படத்திலும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

‘சாலமோன்’, ‘கார்லோஸ்’ மற்றும் ‘பொங்கலா’ ஆகிய மலையாளத் திரைப்படங்களுடன், ‘தேவரா ஆட்ட பல்லவராரு’ என்ற கன்னட படத்திலும் நடித்து, மேலும் இரண்டு கன்னட படங்களில் முக்கிய வில்லனாக நடித்திருக்கிறார். இப்படி தென்னிந்திய சினிமாவில் பிஸியாக வலம் வந்தாலும் சம்பத் ராமுக்கு தன் சொந்த மொழியான தமிழ் சினிமாவில் மற்ற மொழிகளில் கிடைக்கும் அங்கீகாரம் கிடைக்கவில்லை, என்ற வருத்தமும் இருக்கத்தான் செய்கிறது.

மலையாள சினிமாவில் மோகன்லால், மம்மூடி என முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான வில்லனாக நடிப்பவர், தெலுங்கில் பிரபாஸ், விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு ஆகியோர் நடிப்பில் உருவாகும் ‘கண்ணப்பா’ மற்றும் கன்னடத்திலும் முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

சுமார் 25 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பயணித்து, தொடர்ந்து சிறு சிறு வில்லன் வேடங்களில் நடித்து வந்தாலும், பெரிய நடிகர்களின் படங்களில் முக்கிய வில்லனாக நடிக்க வேண்டும், என்பது எனது நீண்ட நாள் கனவு. அதற்காக நான் பல வருடங்களாக கடுமையாக உழைத்தாலும், தமிழில் அப்படி ஒரு வாய்ப்பு இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. அத்தகைய வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் மற்ற மொழிகளைப் போல் தமிழ் சினிமாவிலும் என் திறமையை நிரூபிப்பேன். இருந்தாலும் நான் மனம் தளராமல் தொடர்ந்து, அத்தகைய வாய்ப்பை பெறுவதற்கு கடுமையாக உழைப்பதோடு, தொடர்ச்சியாக முயற்சித்தும் வருகிறேன் என்று கூறியவர், மற்ற மொழிகளில் எப்படி எனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து முன்னணி வில்லன் நடிகராக உயர்ந்தேனோ அதுபோல் நிச்சயம் தமிழ் சினிமாவிலும் எனக்கான அங்கீகாரத்தை பெறுவேன், என்று நம்பிக்கை தெரிவித்தார் சம்பத் ராம்!

கோடை விடுமுறைக்கு ஏற்ற பிரமாண்ட திரைப்படமாக மே 9 ஆம் தேதி வெளியாகும் ‘கஜானா’!

0

வியக்க வைக்கும் VFX காட்சிகள் மூலம் உருவாகியுள்ள ‘கஜானா’! – மே 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

மே 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கஜானா’ திரைப்படத்தை டி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் திருமலை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

ஹாலிவுட் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு மற்றும் வியாபாரம் இருப்பதற்கு முக்கிய காரணம், அப்படங்களின் பிரமாண்டம் மற்றும் பிரமிக்க வைக்கும் VFX காட்சிகளே. அப்படிப்பட்ட ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் அளவுக்கு தமிழ் சினிமாவில் உருவாகியிருக்கும் படம் தான் ‘கஜானா’. மொழிகளை கடந்த கதைக்களத்துடன் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படம் வியக்க வைக்கும் VFX காட்சிகளுடன் உருவாகியுள்ளது.

‘இண்டியானா ஜோன்ஸ்’, ‘நேஷ்னல் டிரஸ்சர்’ போன்ற சாகச ஹாலிவுட் படங்களுக்கு இணையான, மாயமந்திர காட்சிகளும், யானை, புலி, பாம்பு போன்ற மிருகங்களின் சாகசக் காட்சிகளோடு மிக பிரமாண்டமான சாகச திரைப்படமாக உருவாகியுள்ள ‘கஜானா’ திரைப்படம் வரும் மே 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள VFX காட்சிகளை உலகத்தரத்துடன் அமைக்க வேண்டும் என்பதற்காக படக்குழு அதிகமாக மெனக்கெட்டது. அதன் காரணமாகவே இப்படத்தின் வெளியீட்டுக்கு காலதாமதம் ஏற்பட்ட நிலையில், தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

மேலும், இதுவரை அச்சு வடிவிலும், சிற்ப வடிவிலும் நாம் பார்த்து வந்த யாளி விலங்கை முதல் முறையாக திரையில் தோன்ற செய்து ரசிகர்களை வியக்க வைக்கும் பணியை இப்படக்குழு மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

மலேசியா மற்றும் லண்டனில் நடைபெற்ற இபப்டத்தின் VFX பணிகள் யாளி விலங்கை வடிவமைப்பதில் அதிகம் மெனக்கெட்டிருப்பதோடு, அந்த விலங்கை வியக்க வைக்கும் விதத்திலும், சிறுவர்கள் கொண்டாடும் விதத்திலும் உருவாக்கியிருக்கிறார்களாம். இதுவரை டைனோசரை விரும்பி வந்த சிறுவர்கள் ‘கஜானா’ படத்திற்கு பிறகு யாளி விலங்கை நிச்சயம் கொண்டாட கொண்டாடுவார்கள். அதேபோல், படத்தில் இடம்பெற்றுள்ள சாகச காட்சிகளும், அதனை VFX மூலம் வடிவமைத்த விதமும் நிச்சயம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் வியக்க வைக்கும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

காமெடி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் பல ஹிட் படங்களை கொடுத்து வரும் யோகி பாபு, வேதிகா, சாந்தினி, இனிகோ பிரபாகர் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் பிரதாப் போத்தன், வேலு பிரபாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், வேதிகாவுடன் சாந்தினியும் இணைந்து ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருப்பதோடு, ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் அழகிலும், கவர்ச்சியிலும் கிரங்கடிக்கவும் செய்திருக்கிறார்கள்.

படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள், விலங்குகளுடன் உரையாடும் காட்சிகளும் மிக தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நடிகர் யோகி பாபு, அனிமேஷன் கதாபாத்திரங்களுடன் பேசி நடித்தது இதுவே முதல் முறையாகும். VFX பணிகளினால் இப்படம் வெளியாவது சற்று காலதாமதம் ஆனாலும், படத்தில் இடம்பெறும் VFX காட்சிகள் உலகத்தரத்தோடு, இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படத்திலும் இடம்பெறாத காட்சிகளாகவும் வந்திருப்பதால் இப்படம் ரசிகர்களுக்கு பிரமாண்டமான மற்றும் வியக்கத்தக்க அனுபவத்தை கொடுக்கும் என்பது உறுதி என்கின்றனர் ‘கஜானா’ படக்குழு.

ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் (Four Squar Studios) நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி பிரபாதிஸ் சாம்ஸ் இயக்குகிறார், இணை தயாரிப்பாளர் டிக்கிம் சன்ஞ்

மே 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கஜானா’ திரைப்படத்தை டி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் திருமலை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

“Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look”

0

“Debut Director Raam indhra’s ‘Manidhargal’ Grabs Attention with First Look”

Debut director Raam indhra’s thriller drama set over a single night – “Manidhargal”!

Produced by Studio Moving Turtle and Sri Krish Pictures, “Manidhargal” is a thriller drama helmed by debutant director Raam indhra, featuring a cast of fresh faces. The film delves into the strange nature of human behavior and promises a gripping narrative.

The impressive first look poster of “Manidhargal” was released yesterday by popular film personalities Aishwarya Rajesh, Bobby Simha, Santhosh Prathap, and producer C.V. Kumar.

Set in a unique backdrop, the first look poster visually explores the inner conflicts and entanglements of humans, and has been well-received by cinema enthusiasts and fans alike.

The story unfolds over the course of one night, where director Ram Indira has crafted a novel thriller experience within a different setting.

Speaking about the film, director Raam indhra said:

“This film was made with the help of friends and through a crowdfunding effort. Human minds are complex and change every moment. I wanted to bring that emotional turbulence to the screen. The story revolves around six friends who gather one night for drinks. Within the next six hours, a minor spark turns into a massive problem. We’ve made it into a gripping thriller that audiences will enjoy. The entire story takes place at night — but not like the night you’ve seen on screen before. We’ve portrayed the very feel and tone of night as you would experience it yourself. As Dindigul is my hometown, we completed the full shoot there. I owe a lot of thanks to my people. This will be a completely unique experience for audiences.”

The film features debut actors Kapil Velavan, Daksha, Arjun dev Saravanan, Gunavanthan, and Sambasivam in lead roles.

With all production work completed, the team is planning to bring the film to theatres soon. The official theatrical release date will be announced shortly.

Technical Crew:

Written & Direction – Raam indhra
Cinematography – Ajay Abraham George
Music – Anilesh L mathew
Edit – Dinsa
Art Direction – Mahendhran Pandiyan
lyrics – Karthick Netha
Singer – Kapil Kapilan
Sound mixing – Anand Ramachandran
Makeup – A sabari girisan
Vfx – Antony britto
DI – Vasanth S karthik
Design – Riverside house
Sfx – sathish
Stunt – Win veera
First AD – Lokesh k kannan
Co – Producers: Dharanidharan parimala kulothungan, Yuvaraj N

Actors
Kapil vaelavan
Dhaksha
Arjun dev Saravanan
Gunavandhan
Sambasivam

Production – Studio Moving Turtle & Sri Krish Pictures
Producers – Rajendra Prasad, Naveen Kumar, Sambasivam K

Pro : Sathish, Siva (AIM)

பாராட்டுக்களைக் குவிக்கும் மனிதர்கள் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !!

அறிமுக இயக்குநர் இராம் இந்திரா இயக்கத்தில், ஒர் இரவில் நடக்கும் திரில்லர் டிராமா “மனிதர்கள்” !!

Studio Moving Turtle மற்றும் Sri Krish Pictures தயாரிப்பில், அறிமுக இயக்குநர் இராம் இந்திரா இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும், திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மனிதர்கள்”.

இப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, முன்னணி திரைப்பிரபலங்கள் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் பாபி சிம்ஹா, நடிகர் சந்தோஷ் பிரதாப் மற்றும் தயாரிப்பாளர் சி.வி. குமார் ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ளனர்.

சகதிக்குள் மல்லுக்கட்டும் மனிதர்களை வித்தியாசமான களத்தில், காட்சிப்படுத்தியிருக்கும் ஃபர்ஸ்ட் லுக், திரை ஆர்வலர்களிடமும், ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.

ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து, வித்தியாசமான களத்தில் புதுமையான திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் இராம் இந்திரா.

படம் குறித்து இயக்குநர் இராம் இந்திரா கூறியதாவது…
இது நண்பர்களின் உதவியால், கிரவுட் ஃபண்டிங் முயற்சியில் உருவான திரைப்படம். மனிதனின் மனம் வித்தியாசமானது, நொடிக்கு நொடி மாறும் தன்மை கொண்டது. அதன் உணர்வுக்குவியல்களை திரையில் கொண்டு வரலாம் என்ற எண்ணத்தில் உருவானது தான் இந்தப்படம். ஒரு இரவில் ஒன்று சேர்ந்து மது அருந்தும் ஆறு நண்பர்கள், அடுத்த ஆறு மணி நேரத்தில், அவர்களுக்கும் ஏற்படும் ஒரு சிறு பொறி, எப்படி பெரும் பிரச்சனையாக வெடிக்கிறது என்பதை, பரபரப்பான திரைக்கதையில், ரசிகர்கள் ரசிக்கும் திரில்லராக உருவாக்கியுள்ளோம். இது முழுக்க இரவில் நடக்கும் கதை, இதுவரை திரையில் பார்த்த இரவாக இது இருக்காது, நீங்கள் நேரில் அனுபவிக்கும் இரவின் நிறத்தைத் திரையில் கொண்டு வந்துள்ளோம். திண்டுக்கல் என் சொந்த ஊர் என்பதால் அங்கேயே முழுப்படப்பிடிப்பும் நடத்தி முடித்தோம். என் ஊர் மக்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். இப்படம் ரசிகர்களுக்கு முற்றிலும் ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்.

இப்படத்தில் அறிமுக நடிகர்கள் கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ், சரவணன், குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முழுப்பணிகளும் முடிந்த நிலையில், விரைவில் திரைக்குக் கொண்டு வரப் படக்குழு திட்டமிட்டுள்ளனர். திரையரங்கு வெளியீட்டுத் தேதி, விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தொழில் நுட்ப குழு
எழுத்து – இயக்கம் – இராம் இந்திரா
ஒளிப்பதிவு – அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ்,
இசை – அனிலேஷ் எல் மேத்யூ ,
படத்தொகுப்பு – தின்சா,
கலை – மகேந்திரன் பாண்டியன்,
பாடல் – கார்த்திக் நேத்தா,
ஒப்பனை – அ சபரி கிரிசன்,
துணைத்தயாரிப்பு – தரணிதரன் பரிமளா குலோத்துங்கன், நா யுவராஜ்,
உதவி இயக்கம் – லோகேஷ் க கண்ணன்,
சண்டை பயிற்சி – வின் வீரா,
ஒளிக்கலவை – ஆனந்த் இராமச்சந்திரன்,
சப்தம் – சதீஷ்,
வண்ணம் – வசந்த் செ கார்த்திக்,
வரைகலை – ஆன்டனி பிரிட்டோ,
விளம்பர வடிவமைப்பு – ரிவர் சைடு ஹவுஸ்.

தயாரிப்பு (producers):
இராஜேந்திர பிரசாத்,
நவீன்,
மு.கி.சாம்பசிவம் (Studio Moving Turtle மற்றும் Sri Krish Pictures)

மக்கள் தொடர்பு : சதீஷ், சிவா (AIM)

- Advertisement -

Recent Posts