Saturday, June 20, 2026
- Advertisement -
Home Blog Page 22

நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில், ரஞ்ஜன் பட டைட்டில் லுக் டீசர் வெளியீடு!

0

டாப் ஸ்டார் பிரஷாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் புதிய படமான ரஞ்ஜன்” படத்தின் டைட்டில் லுக் டீசர், திரைபிரபலங்கள் முன்னிலையில் இன்று கோலாகலமாக வெளியிடப்பட்டது.
இப்படத்தின் முதன்மை நாயகனாக பிரஷாந்த் நடிக்கிறார். தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் மகன் ஹரி இளம் நாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக நடிகை தேவயானி மகள் பிரியங்கா நடிக்கிறார் பிரஷாந்த் பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் இவர்களை அறிமுகப்படுத்தும் விழாவும் இணைந்து நடந்தது.

இன்றைய விழாவில் திரையுலக பிரபலங்கள் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு ஃபைவ் ஸ்டார் செந்தில் ஃபைவ் ஸ்டார் கல்யாண் கமல்போரா. SK சம்பத்குமார், மதியழகன், நடிகர்கள் விஷால், RK சுரேஷ் சத்யா ஆதேஷ்பாலா, மோகன்லால், சந்தோஷ்பிரபாகர், நடிகைகள் கிரண், ஆதிரா. செம்மலர் அன்னம், நடிகர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். இயக்குநர்கள் ஆர்.கே செல்வமணி, கே எஸ் ரவிக்குமார், சரண் வெற்றிமாறன், துரை செந்தில்குமார் ஸ்ரீகணேஷ் கணேஷ் K பாபு வினோத் கார்த்திக், கலை இயக்குனர் செந்தில் ராகவன் உட்பட பலர் கலந்து கொண்டு பிரஷாந்திற்கும் புதுமுகங்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது:-

பிரஷாந்திற்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள் பிரஷாந்திற்கு மிக மிக சிறப்பான எதிர்காலம் வருகிறது. மீண்டும் இந்தப்படம் மூலம் அவர் கலக்குவார் என வாழ்த்துகிறேன். இப்படத்தில் புதிதாக அறிமுகமாகும் நாயகன் நாயகிக்கும் என் வாழ்த்துக்கள்.

இயக்குநர் சரண் பேசியதாவது:-

பிரஷாந்த் சார் பற்றி சொல்லணும்னா. நான் அவரை பார்த்தேன். ரசித்தேன். இன்றும் பார்த்து ரசித்து கொண்டே இருக்கிறேன். ஒரு விஷயத்தை நான் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன் பிரஷாந்த் சார் நடித்த ஒரு படத்தின் டைட்டிலில் டாப் ஸ்டார் என்ற பட்டத்தை நான் தான் கொடுத்தேன். அந்த டாப் ஸ்டார் என்ற பெயர் இன்று வரை நிலைத்து நிற்பது எனக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சியை தருகிறது. இந்த படம் மிகவும் முக்கியமான ஒன்று ஏன்னா இது பிரஷாந்த் சாரை தாண்டி கதிரேசன் மகனும் தேவயானி மகளும் அறிமுகமாகும் ஒரு சிறப்பு படம் இந்த நிகழ்ச்சி நடக்கும் இந்த இடம் கூட மிகவும் விசேஷமானது இங்கிருந்து வெளியே போகும் இந்த இருவரும் மிகப்பெரிய உயரத்தை அடைவார்கள் இன்றைய இந்த நிகழ்வில் பிறந்தநாளை கொண்டாடும் நம்ம டாப் ஸ்டார் பிரஷாந்தக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது:-

பிரஷாந்த பண்பானவர் உறுதியானவர் குழந்தை மனம் கொண்டவர். அன்பும் காதலும் நிறைந்தவர். அவரோட அந்த எளிமை, அந்த இயல்பு இன்னைக்கும் மாறாமல் இருக்கிறது. நாம் எல்லாருக்கும் ஒரு தொடர்பாக ஒரு நெருக்கமாக உணர வைக்கும் மனிதர் அவர். எப்போதும் அப்பா பேச்சை தட்டாத பிள்ளை இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கு பிறகுதான், இது ஒரு படத்தின் டைட்டில் வெளியீடும் சேர்ந்த நிகழ்ச்சி என்று தெரிந்தது. அந்த படத்தை இயக்கும் தியாகராஜன் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்த படத்தில் தேவயானி மகளும், கதிரேசன் மகனும் நடிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். இது ஒரு நல்ல தொடக்கம் இந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றி அடையும் இதில் நடிக்கும் அனைவருக்கும் பெரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். நீங்கள் எல்லோரும் மிகப்பெரிய இடத்தை அடைய வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். மீண்டும் ஒரு முறை பிரஷாந்தக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது:-

இன்று இந்த விழாவில் இருப்பது பெரும் மகிழ்ச்சி. கதிரேசன் மகனை அறிமுகப்படுத்துவது பற்றி ரொம்ப நாளாக பேசிக்கிட்டே இருந்தோம் ஏதாவது ஒரு நல்ல படம் ப்ராஜெக்ட் பண்ணலாம் என்று நினைத்தோம் அப்போது தான் தியாகராஜன் சார் இப்படி ஒரு படத்தை செய்கிறார் என கதிரேசன் சொன்னார் தேவயானி பொண்ணும் இதில் ஹீரோயினாக நடிக்கிறார். தேவயானி நமக்கு நிறைய நல்ல படங்கள் தந்தவர். புதுமுகங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் பிரஷாந்தக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

இயக்குநர் தியாகராஜன் பேசியதாவது:-

இப்படத்தின் டைட்டிலை பிரஷாந்த் பிறந்தநாள் விழாவில் அறிவிப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் இளம் ஜோடி கதாப்பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. நிறைய பேரை அந்த கதாப்பாத்திரத்திற்காக தேடினோம். கதிரேசன் மகன் ஹரியை ஒரு கல்யாணத்தில் பார்த்தேன் அவர் தோற்றம் பிடித்திருந்தது அவர் கராத்தே குதிரையேற்றம் முதல் பல பயிற்சிகள் எடுத்து வருவதாக தெரிந்தது உடனே ஒப்பந்தம் செய்து விட்டேன் அதேபோல பிரியங்கா நடிப்பதை பார்க்கும் போது மிகச்சிறந்த நடிகையாக வருவார் எனத் தோன்றியது. இருவருக்கும் என் வாழ்த்துகள்.

நடிகர், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசியதாவது:-

எனக்கு இசையமைப்பாளராக வாய்ப்புகள் தேடிய போது முதன் முதல் அட்வான்ஸ் தந்தது இயக்குனர் தியாகராஜன் சார் தான் ஆனால் அந்தப்படம் தள்ளிப்போய் நடக்கவில்லை. அவர் கொடுத்த அட்வான்ஸ் இன்னும் என்னிடம் தான் இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது அவருடன் இணைந்து வேலை பார்ப்பது மகிழ்ச்சி. பிரஷாந்த் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் விஷால் பேசியதாவது:-

நல்ல விஷயங்கள் ஒரே நேரத்தில் நடப்பது என்பது மிகப் பெரிய சந்தோஷம் இரண்டு நல்ல நிகழ்வுகளும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் நல்ல முறையில் நடைபெறுவது இன்னும் அதிக மகிழ்ச்சி தருகிறது முதலில், என் அன்புக்குரிய பிரஷாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் எப்போதும் இப்படி சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

நான் இளமைக் காலத்திலிருந்தே அவருடைய படங்களை பார்த்து வளர்ந்தவன் திருடா திருடா செம்பருத்தி போன்ற படங்களை திரையரங்கில் பார்த்து ரசித்திருக்கிறோம் சினிமாவில் வந்த நாளில் இருந்தே அவருக்கு பெரிய வரவேற்பும், ரசிகர் ஆதரவும் இருந்து வருகிறது. ஒரு நடிகர் உயர்ந்து நிற்க அவருக்குப் பின்னால் ஒரு வலிமையான ஆதரவு அவசியம். அந்த வகையில் அவரின் அப்பா இயக்குனர் தியாகராஜன் அவர்களின் பார்வையும், முயற்சியும் மிக முக்கியமானது அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் உங்கள் பார்வை தான் இன்றைக்கும் பிரஷாந்த் அவர்களை உயரமாக நிறுத்தி இருக்கிறது.

இந்த புதிய முயற்சிக்காக ஹரிக்கும் முழுக் குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் அடுத்து தேவயானி பற்றி சொல்ல வேண்டும் அவர்கள் சினிமாவைத் தாண்டி ஒவ்வொரு வீட்டிலும் சென்றடைந்தவர் அந்த மரபை முன்னெடுத்து செல்லும் அவர் மகள் பிரியங்காவுக்கு என் வாழ்த்துகள். நீங்கள் கண்டிப்பாக சிறப்பாக செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். இந்த படத்தில் பணியாற்றும் இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

நடிகை தேவயானி பேசியதாவது:-

ரஞ்ஜன் படத்தின் டைட்டில் லுக் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கும். அதே நேரத்தில் பிரஷாந்த் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கும் வந்திருக்கும் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.

முதலில் தியாகராஜன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஒரு புதிய தலைமுறையை அறிமுகப்படுத்துவது என்பது மிகவும் பெரிய விஷயம் புதுமுகங்களை கொண்டு வந்து அவர்களின் எதிர்காலத்தை உருவாக்குவது என்பது ஒரு சிறப்பான செயல் அந்த வகையில் இந்த படத்தில் என் மகள் பிரியங்கா மற்றும் ஹரி ஆகிய இருவரையும் அறிமுகப்படுத்தும் தியாகராஜன் அவர்களுக்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன். ஒருவரை அறிமுகப்படுத்துவது என்பது அவர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையை அளிப்பதற்குச் சமம் அந்த வாய்ப்பை நீங்கள் இவர்கள் இருவருக்கும் அளித்துள்ளீர்கள் கண்டிப்பாக இவர்கள் உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவார்கள். கடினமாக உழைத்து சிறப்பாக நடித்து சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து நிற்பார்கள்.

அடுத்து பிரஷாந்த் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எப்போதும் இப்படியே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உங்கள் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி அப்பு படத்தில் நடிக்கும் போது நான் யோசிக்கவே இல்லை பின்னாளில் என் மகள் உங்களுடன் இணைந்து உங்கள் தயாரிப்பில் நடிப்பார் என்று நான் நினைத்ததே இல்லை ஆனால் இன்று அது நிஜமாகி இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நினைத்தாலே இதயம் இனிக்கும் ஒரு தருணம் இது.
அதேபோல், இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இவர்களும் இந்த படத்திற்கு பெரிய பலமாக உள்ளனர் இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.

ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது:-

‘எனக்கு கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. பல மேடைகளில் பேசியிருக்கிறேன்.. ஆனால் இன்று ஒரு மிகவும் சந்தோஷமான நாள் என்று சொல்லலாம் முதலில் ஒரு சிறந்த மனிதர் ஒரு சிறந்த நடிகர் அதைவிட ஒரு அன்பான தந்தையின் அரவணைப்பில் இந்தத் திரைப்பட உலகில் பல ஆண்டுகளாக பல பெரிய வெற்றிகளை அளித்து பல முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றிய பிரஷாந்த் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்
இங்கே நான் ஒரு விஷயம் சொல்லணும் தியாகராஜன் அவர்களைப் பற்றி தியாகராஜன் சார், ஒரு அப்பாவாக என்ன செய்ய வேண்டும் என்று நான் நினைத்தேனோ அதை இன்று என் மகன் ஹரிக்காக செய்து காட்டுகிறீர்கள் ஒரு பெரியவராக ஒரு தந்தையாக நீங்கள் என் குடும்பத்துக்கு கொடுத்த ஆதரவுக்கு நான் நன்றி என்று சொல்வது மட்டும் போதாது. உண்மையிலேயே அது சொல்ல முடியாத உணர்ச்சி. எனக்கு கண்கள் கலங்குகிறது இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் தருணம்.

பிரஷாந்த் அவர்களுக்கும் அவர்களுடன் இருக்கும் அனைவருக்கும் இனி வரும் நாட்களில் மேலும் பல வெற்றிகள் கிடைக்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். இன்று டைட்டில் லாஞ்ச் நிகழ்ச்சியில் கண்கள் கலங்கியதுபோல. நாளை இந்த படம் வெளியாகி பெரிய வெற்றி பெறும் போது அந்த சந்தோஷத்தில் மீண்டும் கண்கள் கலங்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.

இந்த நிகழ்ச்சி உங்களால் தான் சாத்தியமானது. நீங்கள் இல்லாமல் இது அற்புதமான தந்தை நடந்திருக்காது தியாகராஜன் சார் நீங்கள் ஒரு உங்கள் மகலுக்கான இந்த நிகழ்ச்சியை இவ்வளவு அழகாக ஒருங்கிணைத்து நடத்தும் இந்த தருணம் மிகவும் பெருமையாக இருக்கிறது. உங்களுக்கு என் அன்பும் வாழ்த்துகளும் என்றும் இருக்கும். நன்றி.

இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது:-

அனைவருக்கும் வணக்கம் தியாகராஜன் அவர்களுக்கு நன்றி பிரஷாந்த் பிறந்த நாளுக்கு அழைக்காமலேயே வருவேன். டைட்டில் பார்க்கும் போது மிக பிரமாண்டமான டைட்டிலாக இருக்கிறது. இந்த படம் எனக்கு மிக நெருக்கமான படம்.
முதல் விஷயம் என் நண்பர் சகோதரர் பிரஷாந்த் நடிக்கிறார். அடுத்து இந்த படத்தை இயக்குவது தியாகராஜன் என்பது இரண்டாவது மகிழ்ச்சி அடுத்து என் நண்பரின் மகள் பிரியங்கள் நடிப்பது மகிழ்ச்சி ஹிரோவாக நடிக்கும் ஹரி என் நண்பர் கதிரேசன் மகன் என்பதும் கூடுதல் மகிழ்ச்சி இந்த படத்தில் வாரீசுகளாக நடிக்கிறார்கள். பிரஷாந்தை முன்பு எப்படி பார்த்தேனோ அப்படியே இருக்கிறார். ஏற்கனவே செம்பருத்தி கண்மணி புலன் விசாரணை 2 எல்லாம் இணைந்து பணியாற்றினோம்.

மீண்டும் பிரஷாந்த்தை வைத்து படம் இயக்குவேன் ஆக்ஷன் பன்றத்துல மற்ற எல்லாரைவிட விஜயகாந்துக்கு இணையானவர் பிரஷாந்த்தான். அதேபோல டான்ஸ் ஆடுவதிலும் பிரபுதேவாவுக்கு இணையாக டான்ஸ் ஆடுபவரும் பிரஷாந்த்தான். காதல் இளவரசன் அப்படின்னு பிரஷாந்த்துக்கு நான் தான் டைட்டில் குடுத்தேன். உண்மையாகவே பிரஷாந்த் வந்து ஒரு அஷ்டாவதானி ஏன்னா அப்பல்லாம் சிஜி எல்லாம் வரல அப்பவே கம்ப்யூடர் வைச்சிகிட்டு ஏதாவது செய்துகிட்டே இருப்பார். உங்களுக்கு தெரியாது சார் சினிமா வேறவா மாறப்போகுதுன்னு சொல்வார் பிரஷாந்த்துக்கு டைரக்ஷன் தெரியும், எடிட்டிங் தெரியும் மியூசிக் தெரியும் சிஜி தெரியும், ஏஐ தெரியும் இப்படி எல்லாம் தெரியும். பிரஷாந்த் பழகுவதற்கு இனிய நண்பர் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் சின்ன ஆளு பெரிய ஆளுன்னு பாக்காம எல்லாரையும் சக மனிதரா பாத்து பழகும் குணம் கொண்டவர் பிரஷாந்த்.

நடிகர் பிரஷாந்த் பேசியதாவது:-

இங்கே வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். எப்போதும் போல நீங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இணைந்து, சேர்ந்து இந்த நிகழ்வை கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு புதிய படத்தின் தலைப்பு வெளியீடும், அதே நேரத்தில் ஒரு புதிய தொடக்கமும் இங்கே நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை இவ்வளவு பிரம்மாண்டமாக நடத்த உதவிய அனைவருக்கும் என் நன்றிகள்.

இந்த தலைப்பை வெளியிட வருகை தந்த தயாரிப்பாளர்கள். இயக்குநர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

இன்று இந்த படத்தின் மூலம் ஹரி அறிமுகமாகிறார். ஒரு தந்தையாக, மேடையில் தனது மகன் நிற்பதைப் பார்ப்பது எவ்வளவு பெருமையான தருணமோ, அதே உணர்வு கதிரேசன் அவர்களுக்கும் இருக்கிறது. அது ஒரு சொல்ல முடியாத மகிழ்ச்சி அதேபோல், ஒரு மகள் மேடையில் நிற்கும் தருணம், உலகமே அவளை கவனிக்கும் தருணம் அது ஒரு பெற்றோருக்கு மிகப் பெரிய பெருமை அந்த உணர்வை நாமெல்லாரும் பகிர்ந்து கொள்கிறோம்.

எங்களுக்குப் இந்த சினிமா உலகமே ஒரு பெரிய குடும்பம். அந்த குடும்பத்தில் இப்படி ஒரு அழகான தருணத்தை பகிர்ந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.

இந்த படம் தற்போது படப்பிடிப்பில் உள்ளது. இதில் நடிக்கும் அனைத்து நடிகர்களும் எங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களும் அன்பானவர்களும் இது ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டணி ஒரு படம் சிறியதாக இருந்தாலும் அதில் பெரிய கலைஞர்கள் சேர்ந்தால் அது மேலும் உயரம் அடையும் அதுபோல, இந்த படமும் ஒரு மிகப்பெரிய அளவில் உருவாகி வருகிறது. இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவும் மிக வலிமையானது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் மற்றும் கலை இயக்குனர் செந்தில் ராகவன் இவர்கள் அனைவரும் இந்த படத்திற்கு பெரிய பலமாக உள்ளனர். இந்த அணியைக் கொண்டுவந்த முக்கியமான நபர் என் அப்பா எங்கள் இயக்குநர் அவருக்கு என் மனமார்ந்த நன்றி ஒரு இயக்குநராகவும். நடிகராகவும், கலைஞர்களை எப்படி கையாள வேண்டும் என்பதையும் அவர் நன்றாக அறிவார். அவருடன் பணிபுரிவது எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி இந்த படம் மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகிறது கண்டிப்பாக இது ஒரு தரமான படமாக அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும் இறுதியாக, இந்த நிகழ்ச்சிக்கு வந்து ஆதரவு அளித்துள்ள பத்திரிகை க தொலைக்காட்சி, வலைதள நண்பர்கள் உட்பட உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் எப்போதும் எனக்கு வலிமையாக உள்ளது. உலகம் முழுதும் இருக்கும் என் ரசிகர்களின் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு என் அன்பும் நன்றியும் விரைவில் திரையரங்கில் சந்திப்போம்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு பெரும் பொருட்செலவில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு பரபரப்பாக நடந்து வருகிறது. படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

இசைஞானி இளையராஜா இசையில், வரும் சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் வழங்கும் “லெனின் பாண்டியன்” !!

0

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக தரமான படைப்புகளை வழங்கி வரும் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம், மறுபடியும் ஒரு நினைவுகூரத்தக்க கூட்டணியை உருவாக்கியுள்ளது. தயாரிப்பாளர் T. G. தியாகராஜன் மற்றும் இசை மாமன்னன் இசைஞானி இளையராஜா, 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கைகோர்த்து “லெனின் பாண்டியன்” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்கவுள்ளனர். அற்புதமான ஒரு சிறு வீடியோ மூலம் படக்குழு இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஒரு காரில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், இசைஞானி இளையராஜா இருவரும் தங்களின் அற்புதமான படங்களின் பழைய பாடல்களை கேட்டுக்கொண்டே பயணிக்கும் அழகான அனிமேசன் வீடியோ இணையம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த கூட்டணி தமிழ்சினிமாவில் ஏற்கனவே பல மறக்க முடியாத படைப்புகளை வழங்கியுள்ளது. குறிப்பாக மூன்றாம் பிறை (1982), தங்க மகன் (1983), காக்கி சட்டை (1985), பகல் நிலவு (1985), காதல் பரிசு (1987), கிழக்கு வாசல் (1990), பணக்காரன் (1990), இதயம் (1991) ஆனஸ்ட் ராஜ் (1994) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து பணியாற்றி பல கல்ட் கிலாசிக் படங்களை வழங்கி, ரசிகர்களின் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணி, பழைய அற்புத நினைவுகளை மீட்டெடுப்பதோடு, புதிய தலைமுறைக்கும் ஒரு வலுவான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது, அந்த வெற்றிகரமான கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளதால் “லெனின் பாண்டியன்” திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் D. D. பாலச்சந்திரன் இயக்கத்தில், நம் கிராமத்து மண்ணின் வாழ்வியல் மற்றும் சமூக உண்மைகளை பேசும் ஒரு அழுத்தமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

இத்திரைப்படத்தில், நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் பேரன் தர்ஷன் நாயகனாக அறிமுகமாகிறார். காவல்துறையில் பணியாற்றும் இளைஞனாக அவர் இப்படத்தில் நடித்துள்ளார். மேலும், கங்கை அமரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, திரையுலகில் மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகை ரோஜா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இவர்களின் கதாப்பாத்திர அறிமுக வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கிராமத்து பின்னணியில், சமூகத்தில் நிகழும் அவலங்களை நேர்மையாக வெளிப்படுத்தும், உணர்வுப்பூர்வமான படைப்பாக இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் D.D பாலச்சந்திரன். இது ஒரு கிராமத்து வாழ்க்கையை மையமாகக் கொண்ட, உணர்ச்சி பூர்வமான மற்றும் வலுவான கதையாக உருவாகியுள்ளது.

இந்த படத்தை செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். மேலும், சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் T.G. தியாகராஜன் இப்படத்தை வழங்குகிறார்.

இப்படத்தின் அமைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு பணிகள் திட்டமிடப்பட்டு வருகிறது. வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும். மொத்தத்தில், பழைய வெற்றி கூட்டணி, புதிய தலைமுறை கதை, சமூக பின்னணி என இந்த மூன்றின் இணைப்பாக “லெனின் பாண்டியன்” படம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

தொழில்நுட்ப குழு விபரம்

தயாரிப்பு நிறுவனம் – சத்யஜோதி பிலிம்ஸ்
தயாரிப்பு – T.G.தியாகராஜன்
எழுத்து இயக்கம் – D.D பாலச்சந்திரன்
ஒளிப்பதிவு – A. Mஎட்வின் சகாய்
எடிட்டிங்க் – நாகூரான் இராமச்சந்திரன்
ஸ்டண்ட் – தளபதி தினேஷ்
கலை இயக்கம் – அதூரி ஜெய்குமார்
மக்கள் தொடர்பு – AIM சதீஷ்

நடிகர் ஜெய் பிறந்தநாளில், பாரதியாரின் வரிகளில், “சட்டென்று மாறுது வானிலை” 3வது சிங்கிள் வெளியீடு !

0

தேர்தல் சூழலை பிரதிபலிக்கும் ஆக்ரோஷ பாடல்!

நடிகர் ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது புதிய படமான “சட்டென்று மாறுது வானிலை” படக்குழு ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக, பாரதியார் வரிகளில், மூன்றாவது சிங்கிள் பாடலை வெளியிட்டு கவனம் ஈர்த்துள்ளது. சமூக அக்கறை மற்றும் அரசியல் பின்னணியுடன் உருவாகியுள்ள இந்தப் பாடல் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

பாரதியாரின் புகழ்பெற்ற வரிகளான “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” என்ற பாடல் வரிகளை அடிப்படையாகக் கொண்டு, இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் மதுரை ராப் இசைக்குழு மதுரை சோல்ட்ஜர்ஸுடன் இணைந்து இந்தப் பாடலை உருவாக்கியுள்ளார். சமூக அவலங்களையும், தற்போதைய நிலைமைகளையும் ஆவேசமாக வெளிப்படுத்தும் இந்தப் பாடலை கிரிஷ் கோபாலகிருஷ்ணன் மற்றும் மதுரை சோல்ட்ஜர்ஸ் இணைந்து பாடியுள்ளனர். தேர்தல் சூழல் சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில், சமூக விழிப்புணர்வை தூண்டும் விதமாக இந்தப் பாடல் உருவாகியிருப்பது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BV Production நிறுவனத்தின் கீழ், இயக்குநர் பாபு விஜய் தயாரித்து இயக்கும் இப்படம், இன்றைய சமகால பிரச்சனையை அழுத்தமாக பேசும், புதுமையான ரொமான்டிக் திரில்லராக புதிய முயற்சியாக உருவாகியுள்ளது. நாயகனாக ஜெய் நடித்துள்ள இப்படத்தில், நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு, கருடா ராம், ஶ்ரீமன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமூகத்தின் கடுமையான உண்மைகளை பிரதிபலிப்பதாக பாராட்டப்பட்டன. மனித வாழ்வில் தொடர்ந்து நிகழும் அதிர்வுகள், ஆச்சரியங்கள் மற்றும் உணர்வுகளின் பயணமே இப்படத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளது. மேலும், நாட்டில் நடைபெறும் மற்றும் நடைபெறவிருக்கும் முக்கிய பிரச்சனைகளை இப்படம் தைரியமாக பேசவுள்ளது.

இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவை ரிச்சர்ட் M நாதன் மேற்கொண்டுள்ளார். எடிட்டிங் டார்லிங் ரிச்சர்ட்சன், கலை இயக்கம் S கண்ணன் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர் இப்படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளனர்.

முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு பிறகு வரும் மே மாதத்தில் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

“அறிவு” படக்குழுவின் மனிதநேயம் – பள்ளியை மாற்றிய தயாரிப்பாளர் சாய்வினோத் ஜெயக்குமார் !

0

மூணாறில் “அறிவு” பட படப்பிடிப்பு… மாணவர்களின் வாழ்க்கையை மாற்றிய தயாரிப்பாளர் சாய்வினோத் ஜெயக்குமார்!

Movietron Production சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் உருவாகி வரும், உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி இணைந்து நடிக்கும் “அறிவு” திரைப்படம், சமூக அக்கறையையும் மனிதநேயத்தையும் இணைக்கும் வகையில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

மூணாறு அருகிலுள்ள ஒத்தப்பாறை பகுதியில் அமைந்துள்ள ஒரு அரசுப்பள்ளியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது, அந்த பள்ளியில் மாணவர்களுக்கான போதிய வசதிகள் இல்லாத நிலையை கண்டு படத்தின் தயாரிப்பாளர் சாய்வினோத் ஜெயக்குமார் உடனடியாக அந்த பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை முன்னெடுத்தார்.

அதன்படி, பள்ளி முழுவதும் புதிய பெயிண்டிங் வேலைகள் செய்யப்பட்டதுடன், மறு சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும், மாணவர்களுக்கான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டதோடு, அவர்கள் தினசரி கல்வி பெற தேவையான அடிப்படை வசதிகளும் முழுமையாக வழங்கப்பட்டன. பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியிலிருந்து வரும் மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளிக்கு வழங்கப்பட்ட இந்த உதவி, படக்குழுவின் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது.

“அறிவு” திரைப்படம் ஆரம்பத்திலிருந்தே பெண் உரிமைகளை மையமாகக் கொண்ட வலுவான சமூகக் கதைக்களத்துடன் உருவாகி வருகிறது. தற்போது இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மூணாறு பகுதிகளில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தேனி பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் I. M. விஜயன், சிங்கம்புலி, தீபா சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதையும், திரைக்கதையும் எழுதி இயக்கும் சத்யசிவா, வலுவான சமூக கருத்துக்களை விறுவிறுப்பான சினிமா மொழியில் சொல்வதில் பெயர் பெற்றவர்.

இப்படத்தினை Movietron Production சார்பில் தயாரிப்பாளர் சாய்வினோத் ஜெயக்குமார் பெரும் பொருட்செலவில் தரமான படைப்பாக உருவாக்கி வருகிறார் இணைத் தயாரிப்பாளர் சாய்பிரபு ஜெயக்குமார் செயல்படுகிறார். இசையமைப்பாளர் D.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவை தில் ராஜு மேற்கொள்ள, படத்தொகுப்பை வெற்றி கிருஷ்ணன் கவனிக்கிறார். கலை இயக்குநராக S.K., கிரியேட்டிவ் ஹெட்டாக ராமு M. பணியாற்றுகின்றனர்.

மூணாறு பகுதிகளில் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு தேனியில் இரண்டாம் கட்டப்படிப்பு நடந்து வருகிறது. தமிழ்ப் புத்தாண்டுக்கு முன்னதாக படப்பிடிப்பை முழுமையாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. சமூகச் செய்தியையும் விறுவிறுப்பையும் இணைக்கும் இப்படம், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மனிதநேய செயல்களுடன் முன்னேறும் “அறிவு” திரைப்படம், திரையுலகில் மட்டுமின்றி சமூகத்திலும் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றத்திற்கு எல்லைகளும் இல்லை, மொழி தடைகளும் இல்லை; அந்த உண்மையை எதிர்பாராத வகையில் உயிர்ப்பிக்கிறது ‘காக்கி சர்கஸ்’ –

0

தமிழ் மற்றும் மலையாள ZEE5 இன்று தங்களது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்கஸ்’ ஐ அறிவித்துள்ளது. வித்தியாசமான நகைச்சுவை, அதிரடி, கற்பனை மற்றும் திரில்லர் அம்சங்கள் கலந்த இந்த ஏழு எபிசோடுகள் கொண்ட சீரிஸ், ஒரு சப்-ஜெயிலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. தயாரிப்பு நிலையில் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம் ( ‘Once Upon a Time in Kayamkulam’ ) என்ற பெயரில் உருவான இந்த சீரிஸ், தற்போது ‘காக்கி சர்கஸ்’ என்ற புதிய பெயரில் பார்வையாளர்களை சந்திக்க வருகிறது. இந்த சீரிஸின் தனித்துவமான நகைச்சுவை, விசித்திரமான கதாபாத்திரங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிரம்பிய உலகத்தை இந்த தலைப்பு அழகாக பிரதிபலிக்கிறது.

இந்த சீரிஸை அமீன் பாரிஃப் எழுதி இயக்கியுள்ளார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். மேலும், முனிஷ்காந்த், சுபாஷ் செல்வம், ராஜேஷ் மாதவன், கவுதமி நாயர், வின்சு ரேச், சவித்திரி, அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ் உஷார், விக்னேஷ்வர், அருண்குமார் பவும்பா மற்றும் சித்திரசேனன் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் இதில் நடித்துள்ளனர்.

தமிழ் டிரெய்லர் லிங்க் – https://www.youtube.com/watch?v=OAAEON0n5wE

அமைதியான ஒரு கடற்கரை நகரத்தில் நடைபெறும் விசித்திரமான குற்றச் சம்பவம், ஒரு சப்-ஜெயிலை முழுமையான குழப்பத்தில் ஆழ்த்துகிறது. காரணம், யாரோ ஒருவர் சிறையிலிருந்து தப்பிச் செல்லாமல், தடைகளை உடைத்து அதற்குள் நுழைகிறார் ! புத்தகங்களில் மூழ்கியிருக்கும் ஒரு ஜெயிலரும், அளவுக்கு மீறிய ஆர்வமுள்ள ஒரு கான்ஸ்டபிளும் இந்த புதிரை புரிந்துகொள்ள போராடும் நிலையில், மர்மமான திருடன் பல அடிகள் முன்னிலையில் இருந்து, தான் உருவாக்கிய இந்த குழப்பங்களை ரசித்தபடி இருக்கிறான். சாதாரண ஊர்மக்கள், தங்களைத் தாங்களே டிடெக்டிவ்களாக நினைக்கும் சிலர், தெரியாமலே இதற்குள் சிக்கிக்கொள்ளும் கைதிகள் — இவர்கள் அனைவரும் சூழ்நிலையை இன்னும் வினோதமாக மாற்ற, இந்த வழக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய பரபரப்பான வேட்டையாக மாறுகிறது. இங்கே எதுவுமே எளிதல்ல, ஒவ்வொன்றும் இன்னும் பல விசித்திரமான உண்மையை மறைத்து வைத்திருக்கிறது.

இயக்குநர் அமீன் பாரிஃப் கூறுகையில்…,
“இந்த கதை என்னை மிகவும் கவர்ந்தது. ஏனெனில் இது நமக்குத் புதுமையான கதைக்களத்தில் விளையாடும் ஒரு அரிய வாய்ப்பை இது தந்தது — ஒரு பக்கம் நகைச்சுவை, ஒரு பக்கம் திரில்லர், இன்னொரு பக்கம் வித்தியாசமான கற்பனை, ஆனால் அதே சமயம் ஒரு சிறிய நகரத்தின் இயல்பான உண்மைத்தன்மையையும் இழக்காமல் கதை சொல்ல முடிந்தது. தயாரிப்பின் ஆரம்ப நிலையில் இருந்தபோதே, இந்த சீரிஸின் மையம் அதன் கதாபாத்திரங்கள்தான் என்பதை நாங்கள் உணர்ந்தோம். குழப்பத்தின் மத்தியில் அவர்கள் வெளிப்படுத்தும் விசித்திரமான, நகைச்சுவையான, மனித மனதின் இயல்பான குறைகளுடன் கூடிய உணர்வுகளே இக்கதையின் இதயம். இந்த கதையை அதன் அனைத்து தனிச்சிறப்புகளுடனும் சொல்ல ZEE5 எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தது. நாங்கள் உருவாக்கிய இந்த ‘சர்க்கஸ்’ உலகத்தை பார்வையாளர்கள் ரசிப்பதைக் காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்றார்.

நடிகர் முனிஷ்காந்த் கூறுகையில்,
“நான் இதுவரை நடித்தவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அனுபவமாக இருந்தது ‘காக்கி சர்கஸ்’. இது கணிக்க முடியாத, வேகமாக நகரும், அதே நேரத்தில் நகைச்சுவையுடனும், நிஜத்தன்மையுடனும் நிறைந்த கதாபாத்திரங்களை கொண்ட ஒரு சீரிஸ். இதில் எனக்கு மிகவும் பிடித்தது — நகைச்சுவைக்கும் பதற்றத்துக்கும் இடையிலான அசாதாரண சமநிலை. ஒவ்வொரு காட்சியும் எந்த விதமாகவும் மாறிவிடும் என்ற உணர்வு இருக்கும். இது புதுமையானது, நம் மண்ணின் வாசனையுடன் கூடிய கதை, மிகவும் வேடிக்கையானதும் கூட. இப்படிப்பட்ட கதைகளுக்கு ZEE5 போன்ற தளம் கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார்.

பார்வையாளர்களுக்கு எதிர்பாராத சுவாரஸ்யங்களும், பரபரப்பும், வித்தியாசமான நகைச்சுவையும் கலந்த ஒரு விருந்தாக அமைய உள்ள ‘காக்கி சர்கஸ்’, தமிழ் மற்றும் மலையாள ZEE5 தளங்களில் ஏப்ரல் 10 முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

ZEE5 பற்றி:
ZEE5 என்பது பாரதத்தின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும். ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தின் ஒரு பகுதியாக செயல்படும் ZEE5, பல மொழிகளில் கதைகளை சொல்லும் தளமாக விளங்குகிறது. 4,071+ திரைப்படங்கள், 1,800+ டிவி நிகழ்ச்சிகள், 422+ வெப் ஒரிஜினல்ஸ், 4,492+ இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரத்திற்கு மேற்பட்ட ஆன்-டிமாண்ட் உள்ளடக்கங்களை கொண்ட விரிவான நூலகத்தை இது வழங்குகிறது.
12 மொழிகளில் – இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம், ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி – தனிப்பயன் மற்றும் ஹைப்பர்-லோக்கல் சந்தா திட்டங்களுடன் உள்ளடக்கம் வழங்கப்படுகிறது.
உலகளாவிய டெக் கூட்டாளிகளுடன் உருவாக்கப்பட்ட வலுவான டீப்-டெக் கட்டமைப்பு, பல சாதனங்கள் மற்றும் இயக்க முறைமைகளில் தடையற்ற பார்வை அனுபவத்தை ZEE5 வழங்க உதவுகிறது.

The vibrant political comedy commercial film “ TN 2026 “ is all set to release worldwide in theatres on April 10!

0

Produced by Kannan Ravi and Deepak Ravi under the banner of KRG Kannan Ravi Group, and directed by Umabathi Ramaiah, the film stars Natti Natraj in the lead role. “TN 2026” is designed as a lively political satire blended with a commercial entertainment format.

The film delivers a mix of political humor and socially relevant themes, making it an engaging entertainer for all sections of the audience.

The newly released poster presents Natti at the center, standing on a stage with his hand raised, while key characters around him chant slogans. A massive crowd surrounds them, holding flags and satirical banners, creating a striking and energetic visual. The poster has already received a strong response from fans across the internet.

The story is written by Thambi Ramaiah, while the screenplay and direction are handled by Umabathi Ramaiah. The film is produced on a notable scale by Kannan Ravi and Deepak Ravi, who continue to deliver quality projects in Tamil cinema.

Alongside Natti Natraj, the film features Siruttha Rao, Santhini Tamilarasan, and Yashika Aannand as the female leads. Veteran actors including M. S. Bhaskar, Ilavarasu, and Thambi Ramaiah appear together for the first time.

The supporting cast includes Redin Kingsley, Lollu Sabha Maaran, Bigg Boss Muthukumar, Adithya Kathir, Chitra Lakshmanan, Thalaivasal Vijay, Vaiyapuri, Vadivukkarasi, Viji Chandrasekhar, Sreeja Ravi, and Indraja Robo Shankar. Sandy appears in a cameo role.

With all production work completed, the film is gearing up for a grand theatrical release worldwide on April 10.

Technical Crew:
Screenplay & Direction – Umabathi Ramaiah
Story – Thambi Ramaiah
Music – Dharbuka Siva
Cinematography – P. G. Muthiah
Editing – Arul R. Thangam
Art – NK Rahul
Stunts – Mahesh Mathew
Head of operations – Srinath viswanathan
Choreography – Sandy, Praveen
Producers – Kannan Ravi, Deepak Ravi
PRO – AIM Sathish

கலகலப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமான “TN 2026” வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!

KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026”. இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

அரசியல் பகடி கலந்து, சமூக அக்கறை மிக்க கருத்துக்களுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டரில், நட்டி நடுநாயகமாக மேடையின் மீது கையை உயர்த்தி நிற்க, அருகில் முக்கிய கதாப்பாத்திரங்கள் கோஷமிட, சுற்றிலும் பெரும் கூட்டம் கொடிகள் மற்றும் பகடியான வசன பதாகைகளுடன் சூழ்ந்து நிற்கிறது. பார்த்தவுடன் ஈர்க்கும் இந்த போஸ்டர் இணையம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

தம்பி ராமையா கதை எழுதியுள்ள இப்படத்தை திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் உமாபதி ராமையா. தமிழ் திரையுலகில் தரமான வெற்றிப் படங்களை தொடர்ந்து வழங்கி வரும் KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இப்படத்தை தயாரித்துள்ளனர்.

நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் நாயகிகளாக நடித்துள்ளனர். எம். எஸ். பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், பிக்பாஸ் முத்துக்குமரன், ஆதித்யா கதிர், சித்ரா லட்சுமணன், தலைவாசல் விஜய், வையாபுரி, வடிவுக்கரசி, விஜி சந்திரசேகர், ஸ்ரீஜா ரவி, இந்திரஜா ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சாண்டி கேமியோ கதாப்பாத்திரத்தில் தோன்றியுள்ளார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தொழில்நுட்பக் குழு:

திரைக்கதை & இயக்கம் – உமாபதி ராமையா
கதை – தம்பி ராமையா
இசை – தர்புகா சிவா
ஒளிப்பதிவு – பி. ஜி. முத்தையா
எடிட்டிங் – அரள் R. தங்கம்
கலை – NK ராகுல்
ஸ்டண்ட் – மகேஷ் மேத்யூ
நடனம் – சாண்டி, பிரவீன்
தயாரிப்பு மேற்பார்வை – ஶ்ரீநாத் விஸ்வநாதன்
தயாரிப்பு – கண்ணன் ரவி, தீபக் ரவி
மக்கள் தொடர்பு – AIM சதீஷ்

Allu Arjun Fans Association (AAFA) Launches HPV Vaccine Drive to Promote Women’s Health Awareness

0

The Allu Arjun Fans Association (AAFA) has proudly initiated an HPV Vaccine Drive, taking forward Icon Star @alluarjun’s “One Good Deed Every Year” vision through a meaningful social responsibility initiative focused on public health awareness and community welfare.

The initiative is being conducted during the celebratory week leading up to Allu Arjun’s birthday on April 8, transforming the occasion into an opportunity for meaningful social impact and public service.

This initiative aims to create awareness about the importance of the Human Papillomavirus (HPV) vaccination, a crucial preventive measure against cervical cancer, one of the most common cancers affecting women. Through this drive, AAFA seeks to encourage preventive healthcare practices and contribute towards building a healthier society.

With the message —
“One Vaccine Today will save our Daughters from Cervical Cancer Tomorrow.” —
the association emphasizes the importance of early vaccination and awareness among families and communities.

As part of the program, awareness activities and vaccination support initiatives will be conducted to educate the public and promote women’s health protection.

This initiative reflects AAFA’s continued commitment to social service, aligning with Allu Arjun’s belief in using influence and collective strength for positive societal change.

பெண்களின் உடல்நலனை மேம்படுத்தும் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் (AAFA) HPV தடுப்பூசி முகாமை தொடங்கியுள்ளது!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ‘ஒவ்வொரு ஆண்டும் ஒரு நல்ல செயல்’ என்ற நோக்கத்தை முன்னெடுத்து செல்லும் வகையில், அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் (AAFA) செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக பெண்கள் நலன் மற்றும் பொதுச் சுகாதார விழிப்புணர்வை மையமாகக் கொண்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கியுள்ளது.

வருகிற ஏப்ரல் 8ஆம் தேதி நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு வாரம் முழுக்க கொண்டாட்டங்களை ரசிகர்கள் முன்னெடுத்து வருகின்றனர். சமூகசேவைக்கான அர்த்தமுள்ள முயற்சியாக இந்த கொண்டாட்ட வாரத்தை மாற்றும் நோக்கில் HPV தடுப்பூசி இயக்கம் முன்னெடுக்கப்படுகிறது.

பெண்களை அதிகமாக பாதிக்கும் புற்றுநோய்களில் ஒன்றான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசியின் அவசியத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம். மேலும், சுகாதார பழக்கங்களை ஊக்குவித்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் முனைப்புடன் செயல்படுகிறது.

’நாளை நம் மகள்களை கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து காப்பாற்றவே இன்று ஒரு தடுப்பூசி’ என்ற கேப்ஷனுடன் குடும்பங்களிலும் சமூகத்திலும் இந்த தடுப்பூசி மற்றும் சுகாதார விழிப்புணர்வின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படும்.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தடுப்பூசி நடவடிக்கைகள் மற்றும் பெண்களின் ஆரோக்கிய பாதுகாப்பை மேம்படுத்தும் செயல்களும் நடைபெறும்.

நேர்மறையான சமூக மாற்றத்திற்காக செல்வாக்கையும் கூட்டு பலத்தையும் பயன்படுத்த வேண்டும் என்ற நடிகர் அல்லு அர்ஜுனின் எண்ணத்துடன் ஒத்துப்போகும் வகையில், சமூக சேவைக்கான அல்லு அர்ஜூன் ரசிகர் மன்றத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த முன்னெடுப்பு பிரதிபலிக்கிறது.

Delhi High Court fines Rakshit Shetty ₹5 lakh for unauthorised use of songs in Bachelor Party film

0

The Court stopped short of sending Shetty to jail, instead asking him and Paramvah Studios to pay ₹5 lakh to purge contempt of its orders.

The Delhi High Court recently ordered Paramvah Studios, the production house spearheaded by Kannada actor-director Rakshit Shetty, to pay a total of ₹25 lakh for the unauthorised use of two songs in his Kannada film Bachelor Party. [MRT Music v. Paramvah Studios]

Justice Tejas Karia held the studio liable for copyright infringement and willful disobedience of court directions, rejecting the filmmakers’ defence that the musical usage was too “minimal” to require a license.

“In any event, the use of the Original Works in the Impugned Film was not minimal as the song “Omme Ninnanu” was incorporated for substantial 31 seconds whereas the song “Nyaya Ellide” was used for 7 seconds. As per Section 14(d)(i)(A) of the Copyright Act, even a single photograph of any image forming part of the film is an exclusive right given to the copyright owner and, therefore, the Defendants could not have used even a single frame for even a second from the audio-visual of the song “Nyaya Ellide” without permission of the Plaintiff,” the Court held.

The Court stopped short of sending Shetty to jail, instead asking him and Paramvah Studios to pay ₹5 lakh to purge contempt of its orders.

“However, upon consideration of the Affidavit dated 31.10.2025 submitted by Defendant Nos. 1 and 2 expressing regret for their actions, the Court is inclined to exercise leniency. Rather than imposing simple imprisonment on Defendant No. 2 for contempt of the Order dated 12.08.2024, Defendant Nos. 1 and 2 are directed to remit an exemplary cost of ₹5,00,000/- to the Plaintiff within two weeks to purge the contempt committed.”

MRT Music, a music label, claimed ownership over the two songs, including their sound recordings and underlying literary and musical works, on the basis of an assignment deed executed in 2020.

The company alleged that the songs were used in Bachelor Party without obtaining a licence. One of the songs was played on a television in a scene, while the other was sung in a classroom sequence to support the narrative. The film was released theatrically in January 2024 and later made available on OTT platforms.

On August 12, 2024, the Court passed an interim order directing the defendants to deposit ₹20 lakh within four weeks and take down infringing content. However, they did not comply within the stipulated period and continued to exploit the works, leading MRT Music to initiate contempt proceedings.

The defendants subsequently deposited the amount during the course of the proceedings, but the delay in compliance formed the basis of the contempt action.

The Court rejected the lapse argument under Section 19(4), noting that MRT had continued to exploit the works, including on digital platforms. Since there was no evidence of non-use, the rights had not reverted and continued to subsist on the date of the suit.
Shetty and Paramvah Studios argued the use was “de minimis” (minimal), noting that “Nyaya Ellide” appeared for only 7 seconds and “Omme Ninnanu” for 31 seconds. However, the Court looked beyond the stopwatch to the creative intent behind the clips.

It shot down the argument that these uses were “incidental” or “irrelevant”. Instead, the judge found that the songs were carefully selected to drive the movie’s narrative.

The Court noted that the title “Nyaya Ellide” translates to “Where is the justice?”. Choosing this specific song to play while the protagonist was suffering was deemed a deliberate creative decision to highlight his plight.

“This clearly shows that the use of Original Works was not merely incidental or irrelevant but was actually a conscious creative call taken to further the plot of the Impugned Film.”

The Court concluded that because the songs were used for commercial gain and to match the script, they did not qualify for the “de minimis” exception.

The total financial mandate consists of two separate directions:
1) The Court directed the Registry to release the ₹20 lakh previously deposited by Shetty and Paramvah Studios to MRT Music.
2) The Court imposed an additional ₹5 lakh penalty because the filmmakers failed to meet the original 2024 deposit deadline.

MRT Music was represented by Senior Advocate Swathi Sukumar with Advocates Asavari Jain, Geetanjali Visvanathan, Shivansh Tiwari from Ira law and Advocates Ritik Raghuvanshi, Shrudula Murthy, Rishika Aggarwal.

Paramvah Studios and others were represented by Senior Advocate J Sai Deepak with Advocates Meenakshi Ogra, Samrat S Kang and Vishnu Gambhir.

‘பேச்சுலர் பார்ட்டி’ திரைப்படத்தில் அனுமதியின்றி பாடல்கள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ரக்‌ஷித் ஷெட்டிக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்த டெல்லி உயர்நீதிமன்றம்!

சிறைக்கு அனுப்பாமல் இருக்கவும், நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றத்திலிருந்து விடுபடுவதற்காகவும் ரக்‌ஷித் ஷெட்டி மற்றும் பரம்வா ஸ்டுடியோஸும் ரூ. 5 லட்சம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

கன்னட நடிகர், இயக்குநர் ரக்‌ஷித் ஷெட்டி தலைமையிலான தயாரிப்பு நிறுவனமான பரம்வா ஸ்டுடியோஸ், தனது ‘பேச்சிலர் பார்ட்டி’ என்ற கன்னடத் திரைப்படத்தில் இரண்டு பாடல்களை அனுமதியின்றிப் பயன்படுத்தியதற்காக, மொத்தம் ரூ. 25 லட்சம் செலுத்த வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இசை பயன்பாடு உரிமம் குறைவான நீளத்திலேயே பயன்படுத்தியிருக்கிறோம் என்ற திரைப்படத் தயாரிப்பாளர்களின் வாதத்தை நீதிபதி தேஜஸ் காரியா நிராகரித்தார். பதிப்புரிமை மீறல் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை வேண்டுமென்றே மீறியதற்காக பரம்வா ஸ்டுடியோஸிற்கும் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

“‘ஓம்மே நின்னானு’ பாடல் 31 வினாடிகளுக்கும், ‘நியாயா எல்லிடே’ பாடல் 7 வினாடிகளுக்கும் பயன்படுத்தப்பட்டிருப்பது குறைவான நீளம் கிடையாது. ஏனெனில் பதிப்புரிமைச் சட்டத்தின் பிரிவு 14(d)(i)(A)-ன் படி, திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் அசல் புகைப்படம் கூட உரிமையாளருக்கு வழங்கப்படும் பிரத்யேக உரிமையாகும். எனவே, சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி ‘நியாயா எல்லிடே’ பாடலின் ஒலி-ஒளிக் காட்சியிலிருந்து ஒரு நொடி கூட பயன்படுத்த முடியாது” என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சிறைக்கு அனுப்பாமல் இருக்கவும், கோர்ட் உத்தரவை அவமதித்த குற்றத்திலிருந்து விடுபடுவதற்காகவும் ரக்‌ஷித் ஷெட்டி மற்றும் பரம்வா ஸ்டுடியோஸும் ரூ. 5 லட்சம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

”இருப்பினும், பிரதிவாதிகள் 1 மற்றும் 2 ஆகியோர் தங்கள் செயல்களுக்காக வருத்தம் தெரிவித்து சமர்ப்பித்த 31.10.2025 தேதியிட்ட பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றம் பரிசீலித்துள்ளது.12.08.2024 தேதியிட்ட உத்தரவை அவமதித்ததற்காக பிரதிவாதி எண் 2-க்கு சிறைத் தண்டனை விதிப்பதற்குப் பதிலாக, அவர்கள் செய்த அவமதிப்பில் இருந்து விடுவிக்கவும் இரண்டு வாரங்களுக்குள் ரூ. 5,00,000 முன்மாதிரி செலவுத் தொகையை வாதிக்குச் செலுத்துமாறு உத்தரவிடப்படுகிறது”.

கடந்த 2020-ல் நிறைவேற்றப்பட்ட உரிமை மாற்றப் பத்திரத்தின் அடிப்படையில் அந்த இரண்டு பாடல்களின் ஒலிப்பதிவுகள் மற்றும் இசைப் படைப்புகளுக்கு எம்.ஆர்.டி மியூசிக் இசை நிறுவனம் உரிமை கோரியது. ’பேச்சிலர் பார்டி’ திரைப்படத்தில் உரிமம் பெறாமல் பாடல்கள் பயன்படுத்தப்பட்டதாக அந்நிறுவனம் குற்றம் சாட்டியது. ஒரு காட்சியில் ஒரு பாடல் தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்பட்டது, மற்றொன்று கதைக்கு வலு சேர்க்கும் வகையில் ஒரு வகுப்பறைக் காட்சியில் பாடப்பட்டது. இப்படம் ஜனவரி 2024 ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி, பின்னர் ஓடிடி தளங்களிலும் வெளியிடப்பட்டது.

ஆகஸ்ட் 12, 2024 அன்று பிரதிவாதிகள் நான்கு வாரங்களுக்குள் ரூ. 20 லட்சத்தைச் செலுத்தவும், உரிமம் பெறாமல் பயன்படுத்தியுள்ள பாடல்களை அகற்றவும் நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. இருப்பினும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் தொடர்ந்து பாடல்களை பயன்படுத்தியதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. பின்னர் பிரதிவாதிகள் அபராதத் தொகையை செலுத்தினாலும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதமே நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு அடிப்படையாக அமைந்தது.

டிஜிட்டல் தளங்கள் உட்பட பல தளங்களிலும் எம்.ஆர்.டி அந்தப் படைப்புகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததைக் குறிப்பிட்ட நீதிமன்றம், பிரிவு 19(4)-ன் கீழ் உரிமை இழப்பு வாதத்தை நிராகரித்தது. பயன்படுத்தப்படவில்லை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும், வழக்குத் தொடரப்பட்ட தேதியில் இருந்து அவை தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தன.

’நியாய எல்லிடே’ வெறும் 7 வினாடிகளுக்கும், ’ஓம்மே நின்னானு’ 31 வினாடிகளுக்கும் மட்டுமே இருப்பதைக் குறிப்பிட்டு ’மிக குறைவான நேரமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது’ என ரக்‌ஷித் ஷெட்டியும் பரம்வா ஸ்டுடியோஸும் வாதிட்டனர். இருப்பினும், நீதிமன்றம் அந்தக் காணொளிகளுக்குப் பின்னால் உள்ள படைப்பு நோக்கத்தை ஆராய்ந்தது.

வாதத்தில் பயன்படுத்தப்பட்ட ’தற்செயலானவை’ அல்லது ’தொடர்பற்றவை’ என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. மாறாக, திரைப்படத்தின் கதையை முன்னெடுத்துச் செல்வதற்காகப் பாடல்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நீதிபதி சுட்டிக்காட்டினார். ’நியாயா எல்லிடே’ என்ற தலைப்புக்கு ’நீதி எங்கே?’ என்று பொருள் என்பதையும் நீதிமன்றம் குறிப்பிட்டது. கதாநாயகன் துன்பப்படும்போது இந்தப் பாடலை ஒலிக்கச் செய்தது, அவனது அவலநிலையை எடுத்துக்காட்டுவதற்கான திட்டமிட்ட படைப்பு என்பதை இது தெளிவாகக் காட்டுவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

பாடல்கள் வணிக ஆதாயத்திற்காகவும், கதைக்கு ஏற்றவாறும் பயன்படுத்தப்பட்டதால், அவை ‘டி மினிமிஸ்’ விதிவிலக்கிற்குத் தகுதி பெறவில்லை என்று நீதிமன்றம் முடிவு செய்தது.

மொத்த நிதி உத்தரவு இரண்டு தனித்தனி வழிகாட்டுதல்களைக் கொண்டுள்ளது:

1) ஷெட்டி மற்றும் பரம்வா ஸ்டுடியோஸ் முன்பு எம்.ஆர்.டி மியூசிக்கிடம் டெபாசிட் செய்திருந்த ரூ. 20 லட்சத்தை விடுவிக்குமாறு ரெஜிஸ்ட்ரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

2) திரைப்படத் தயாரிப்பாளர்கள் 2024ஆம் ஆண்டு டெபாசிட் காலக்கெடுவைத் தவறவிட்டதால், நீதிமன்றம் கூடுதலாக ரூ. 5 லட்சம் அபராதம் விதித்தது.

எம்ஆர்டி மியூசிக் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்வாதி சுகுமார், வழக்கறிஞர்கள் அசவாரி ஜெயின், கீதாஞ்சலி விஸ்வநாதன், ஐரா லா-வை சேர்ந்த சிவன்ஷ் திவாரி மற்றும் வழக்கறிஞர்கள் ரித்திக் ரகுவன்ஷி, ஷ்ருதுலா மூர்த்தி, ரிஷிகா அகர்வால் ஆகியோர் ஆஜராகினர். பரம்வா ஸ்டுடியோஸ் மற்றும் பலர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜே சாய் தீபக் மற்றும் வழக்கறிஞர்கள் மீனாட்சி ஓக்ரா, சாம்ராட் எஸ் காங் மற்றும் விஷ்ணு கம்பீர் ஆகியோர் ஆஜராகினர்.

எல்லா கதாநாயகர்களுக்கும் முன்னோடி ராமர்!

0

‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து ராமராக நடிகர் ரன்பீர் கபூரின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!

எட்டு முறை அகாடமி விருது வென்ற புரொடக்‌ஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஸ்டுடியோவான DNEG மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகியவற்றுடன் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும், நிதேஷ் திவாரி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகும் நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து ராமராக ரன்பீர் கபூரின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2, 2026: ’ராமாயணம்’ திரைப்படத்தின் முக்கிய அத்தியாயம் இன்று வெளியாகியுள்ளது. திரையுலக ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருக்கும் தயாரிப்பாளர், இயக்குநர் நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து ‘ராமா’ கதாபாத்திரத்தின் முதல் பார்வை டீசர் வெளியாகியுள்ளது. இதில் ராமபிரானாக ரன்பீர் கபூர் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்

5,000 ஆண்டுகளாக மனிதகுலத்தின் நினைவில் வாழ்ந்து வரும் ராமர் கதாபாத்திரத்தை ரசிகர்களிடம் புதிய பார்வையில் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட ‘ராமா’ டீசர் கொண்டு சேர்த்துள்ளது. ராமாயணம் கதையுடன் வளர்ந்தவர்களுக்கு இது புது அனுபவமாகவும், முதல் முறையாக அறிமுகமாகும் பார்வையாளர்களுக்கு பிரம்மாண்டமான அனுபவமாகவும் அமைகிறது.

இந்த காலத்தில் உலகம் காண்பதற்கு அரிய ஹீரோ ராமன். அதிகாரத்தை விட கடமையை தேர்ந்தெடுக்கும் ஹீரோதான் ராமன். ஆசையை விட தர்மத்தை முன்னிறுத்துபவர். ’மர்யதாம் புருஷோத்தம்’ என போற்றப்படும் ராமன், மனிதகுல ஒழுக்கத்தின் உச்ச வடிவமாக கருதப்படுகிறார். துன்பம், நாடுகடத்தல் மற்றும் இழப்புகளின் மத்தியில் கூட நேர்மை, கருணையை காக்கும் அவரது பண்பே அவரை காலத்தைக் கடந்தவராக மாற்றியுள்ளது.

இரண்டு பாகங்களாக உருவாகும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் இயக்குநர் நிதேஷ் திவாரி பகிர்ந்து கொண்டதாவது, “ராமாயணத்தின் மகத்துவம் அதன் உணர்வு பூர்வமான தருணங்களில் உள்ளது. இது வெறுமனே நல்லது, கெட்டது பற்றிய கதையல்ல. மனிதன் எடுக்கும் முடிவுகள் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய கதை. ராமனின் பயணம் மிகவும் மனிதத்தன்மை கொண்டது. அதையே உண்மையாக காட்ட முயன்றுள்ளோம்” என்றோம்.

ராமர் கதாபாத்திரம் பற்றி நடிகர் ரன்பீர் கபூர் பகிர்ந்து கொண்டதாவது, “ராமரை பிரதிநிதித்துவப்படுத்த நான் வரவில்லை. அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவே வந்திருக்கிறேன். அவரின் எளிமையும் தூய்மையும் மிகவும் அரிதானவை. அதை புரிந்து கொள்ளும் பயணம் எனக்கு தெய்வீகமான அனுபவமாக இருந்தது” என்றார்.

தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா பகிர்ந்து கொண்டதாவது, “ராமரின் கதையின் வலிமை, அவர் எதை வென்றார் என்பதில் இல்லை. அவர் எதை கைவிட்டார் என்பதில்தான் உள்ளது. எளிதானதோ, வசதியானதோ அல்லாத, ஆனால் அவசியமான ஒரு தரத்தை ராமர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் ஆசையை விடக் கடமையையும், சுகத்தை விட உண்மையையும், தன்னலத்தை விட தியாகத்தையுமே முக்கியம் எனத் தேர்ந்தெடுக்கிறார். அதனால்தான் அவரது கதை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது. இன்றும் அது முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தொடர்கிறது”

நமித் மல்ஹோத்ராவின்‘ராமாயணம்’ திரைப்படம் பற்றி:

நமித் மல்ஹோத்ரா தயாரிக்கும் ‘ராமாயணம்: பார்ட்1’ திரைப்படம், உலகின் மிகப் பழமையான காவியங்களில் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பாகங்களாக உருவாகிறது. உலகம் உருவானதில் இருந்து மும்மூர்த்திகளும் மூன்று உலகங்களையும் ஆண்டு வருகின்றனர். அதாவது, பிரம்மா படைப்பையும், விஷ்ணு காத்தலையும், சிவன் அழித்தலையும் செய்து வருகின்றனர். விண்ணுலகமும் மண்ணுலகமும் குழப்பத்தை நோக்கிச் செல்லும் வேளையில், சமநிலையை நிலைநாட்ட மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு மனித குல இளவரசனாக ராமர் (ரன்பீர் கபூர்) அவதாரத்தில் பூமியில் பிறக்கிறார். அறிவிலும் சக்தியிலும் ஒப்பற்ற அரக்க மன்னன் ராவணன் (யாஷ்) ராமருக்கு எதிராக நிற்கிறான். அகம்பாவம் மற்றும் பழிவாங்கும் எண்ணத்தால் இயக்கப்படும் ராவணனுடன் நடைபெறும் மாபெரும் மோதலும் அதன் பின்னான நிகழ்வுகளுமே ‘ராமாயணம்’. இராவணனை எதிர்த்து நிற்க விதிக்கப்பட்ட ஒரே எதிரி தான்தான் என்ற தனது உண்மையான நோக்கத்தை அறியாமல், இராமர் தர்மத்தின் சின்னமாகவும், அக்காலத்தின் மாபெரும் மனித வம்சமான அயோத்தியின் மிகவும் நேசிக்கப்பட்ட பட்டத்து இளவரசராகவும் திகழ்கிறார். ராமர் தனது மனைவி சீதா (சாய் பல்லவி) மற்றும் தம்பி லட்சுமணன் (ரவி துபே) உடன் அமைதியான வாழ்க்கையை வாழ முயலும் போது, விதி அவரை வனவாசத்திற்கும் இறுதி போருக்கும் அழைத்துச் செல்கிறது.

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் ’ராமாயணம்’ திரைப்படத்தில் இந்திய சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். ரன்பீர் கபூர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர். இருவருக்கும் உலகம் முழுவதும் அதிக ரசிகர்கள் இருக்கும் நிலையில் இருவரும் எதிரெதிர் கதாபாத்திரங்களில் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீதையாக சாய் பல்லவி, ஹனுமனாக சன்னி் தியோல், லட்சுமணனாக ரவி துபேவும் நடிக்கின்றனர். நமித் மல்ஹோத்ரா தயாரிக்கும் இந்தப் படத்தை நிதேஷ் திவாரி, விருது பெற்ற திரைக்கதை எழுத்தாளர் ஸ்ரீதர் ராகவனால் தழுவி எழுதப்பட்ட கதையை மையமாகக் கொண்டு இயக்குகிறார். ஆஸ்கார் விருது வென்ற ஹன்ஸ் சிம்மர் மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் ஆகிய இருவரும் இசையமைக்கின்றனர். பழங்கால இந்தியாவை கண்முன் கொண்டு வரும் வகையில் தயாரிப்பு வடிவமைப்பை ரவி பன்சால் மற்றும் ராம்சே அவேரி பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளனர். சண்டை காட்சிகளை ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர்கள் டெர்ரி நோட்டரி & கய் நொரிஸ் வடிவமைக்கின்றனர்.

வால்மீகி ராமாயண கதையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகிறது. நமித் மல்ஹோத்ராவின் முதல் பாகத்தை, எட்டு முறை அகாடமி விருது வென்ற தயாரிப்பு மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஸ்டுடியோவான DNEG மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து, பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் வழங்குகிறது.

நமித் மல்ஹோத்ராவின் ராமாயணா: பார்ட்1 திரைப்படம் உலகம் முழுவதும் தீபாவளி, 2026ல் வெளியாகிறது. இரண்டாவது பாகத்தின் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் வேளையில் அடுத்த வருடம் 2027, தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது.

சரியான நேரத்தில் மீண்டும் வரும் ‘ராமாயணம்’ கதை:

ராமாயணம் ஒரு கதை மட்டுமல்ல, அது வாழும் கலாச்சார சக்தி. போரில் வெற்றி பெற்ற பிறகு ராமர் அயோத்திக்கு திரும்பிய நாளே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. அதாவது, இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியை குறிக்கும் நினைவாக கொண்டாடப்படுகிறது. ராமன் தர்மம், கருணை, தியாகத்தை பிரதிபலிக்கிறார். ராவணனின் வீழ்ச்சி அகம்பாவம் மற்றும் ஆசையின் விளைவாகும். இந்த எதிர்மறை, நேர்மறை மோதல்தான் ராமாயணத்தை மனித வரலாற்றின் நீண்ட காலம் நிலைத்த காவியமாக மாற்றியுள்ளது.

சுவாரஸ்ய தகவல்கள்:

  • உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களிலும் பிராந்தியங்களிலும் 300க்கும் மேற்பட்ட பதிப்புகளில் ராமாயணம் மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளது.
  • கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 13.5 கோடி பக்தர்களை ஈர்த்த ஆன்மீக தலமாக ராமர் பிறந்த அயோத்தி உள்ளது.
  • கடந்த 2024 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட ராம் மந்திர் பல நூற்றாண்டு பாரம்பரியத்தின் அடையாளமாக திகழ்கிறது.
  • அமெரிக்காவில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் ராம் மந்திர் கும்பாபிஷேகத்தை கொண்டாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் பற்றி:

நமித் மல்ஹோத்ரா நிறுவிய பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் உலகளாவிய திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் கேமிங் உள்ளடக்கங்களை உருவாக்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று. ஒலிப்பதிவுக் கூடங்கள், தயாரிப்பு வசதிகள், விஷுவல் எஃபெக்ட்ஸ், முழு நீள அனிமேஷன் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய DNEG குழுமத்தின் விருது பெற்ற உலகளாவிய திறன்களைப் பயன்படுத்தி, பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் திறமையான இயக்குநர்களுக்கும், ஸ்டுடியோக்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு பார்ட்னராக திகழ்கிறது.

மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் பற்றி:

நடிகர் யாஷ் நிறுவிய மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் புதிய திறமையாளர்கள் மற்றும் கதைகளை ஊக்குவித்து சினிமாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் செயல்படும் தயாரிப்பு நிறுவனம். மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் தற்போது இரண்டு பிரம்மாண்டமான திரைப்படங்களை இணைந்து தயாரித்து வருகிறது. ஒன்று கேவிஎன் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து ’டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ திரைப்படம், மற்றொன்று பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ’ராமாயணம்‘ திரைப்படம்.

Namit Malhotra’s Ramayana, directed by Nitesh Tiwari, a two-part cinematic franchise, unveils its first glimpse of Rama, with Ranbir Kapoor stepping into the role

Produced by Prime Focus Studios, in association with eight-time Academy Award®️-winning production and visual effects studio DNEG and Yash’s Monster Mind Creations
APRIL 2, 2026 : Ramayana has unveiled its most important chapter yet.

Namit Malhotra, producer, filmmaker and creative architect behind one of the world’s most ambitious cinematic productions RAMAYANA, introduces ‘Rama’; one of the most enduring figures in storytelling, through a dedicated teaser, offering audiences across the world their first look at Ranbir Kapoor as Rama.

A GLOBAL MOMENT : Unveiled globally with equal fanfare, the ‘Rama’ teaser marks a significant moment for audiences worldwide, bringing into focus a figure whose story has endured for over 5,000 years. For those who have grown up with this story, it offers a refreshed perspective. For others, it offers an opportunity to engage with it for the first time at this scale.

A HERO DEFINED BY THE CHOICES HE MADE : Rama represents the kind of hero the world rarely sees anymore. A hero who chooses duty over desire. Who walks away from power when it is right to do so. Who does what is necessary, even when it costs him everything. Revered as Maryada Purushottama – ‘the highest ideal of human conduct’, Rama embodies dignity, compassion, and moral clarity – even in the face of exile, loss, and injustice. That is what makes him timeless.

Nitesh Tiwari, Director of Ramayana – the 2 part film franchise
“Ramayana’s greatness lies in its emotional richness. At its heart, it is not just about good and evil, but about choices, consequences, and the weight of doing what is right. Rama’s journey is deeply human and that is what we have tried to stay true to.

Ranbir Kapoor on playing Rama
“I don’t think I’m here to represent Rama. I’m here to learn from him. There is a simplicity and purity to him that is very rare; and trying to understand and imbibe that has been a deeply humbling experience.”

Namit Malhotra, Producer, Film-maker and Creative Architect of Ramayana
“The power of Rama’s story is not in what he conquers, but in what he lets go of. He represents a standard that is not easy, not convenient; but necessary. He chooses duty over desire, truth over comfort, and sacrifice over self. That is why his story has endured for thousands of years, and why it continues to matter today.”

ABOUT NAMIT MALHOTRA’s RAMAYANA
From visionary producer and film-maker Namit Malhotra comes RAMAYANA: PART 1, a sweeping, two-part cinematic event inspired by one of the world’s most enduring epics.

Since the beginning of time, the Trinity Gods rule the three worlds; Brahma – god who creates; Vishnu – god who protects and Shiva – god who transforms. As the realms of heaven, earth edge toward chaos, the Trinity god Vishnu descends to earth in an avatar to restore balance. This time, Vishnu is reborn as RAMA (Ranbir Kapoor), a human prince destined to restore balance. Opposing him, stands the most formidable, learned, undefeatable and immortal demon king RAVANA (Yash), blessed by the Trinity themselves, driven by pride and a vengeance powerful enough to shatter the cosmos.

Unaware of his true purpose as the only opponent destined to stand up to Ravana in a fateful cosmic design; Rama is the idol of Dharma (duty above all) and the most loved crown prince of Ayodhya, the greatest human dynasty of the time. Rama tries to build a life of quiet honor with his beloved wife Sita (Sai Pallavi) and loyal brother Lakshman (Ravie Dubey) amongst others, until a twist of fate drives him into exile and toward an inevitable clash with Ravana in a reckoning so cataclysmic, it will decide the destiny of gods and mortals.

Ramayana is one of the most ambitious films in the history of Indian cinema, bringing together some of the biggest names in global entertainment to portray characters that have shaped storytelling across generations.

At its core is a landmark casting – Ranbir Kapoor and Yash (also producer on Ramayana) – two of Indian cinema’s most influential and widely followed stars, coming together in opposing roles. Each commanding a massive global fanbase and unparalleled star power. Their pairing marks a rare cinematic moment, bringing together two forces of scale, stature, and cultural impact in a single narrative.

The movie also stars India’s A-list acting talent including – Sai Pallavi (Sita), Sunny Deol (Monkey God Hanuman) , and Ravie Dubey (Lakshamana).

Produced by trailblazing filmmaker Namit Malhotra, helmed by one of India’s most successful award-winning director Nitesh Tiwari, and adapted by award-winning screenwriter Shridhar Raghavan; Ramayana features music by Oscar®️-winning composers Hans Zimmer and A.R. Rahman.

Production design reimagines ancient India at an unprecedented scale, led by Ravi Bansal and Ramsey Avery, while action is helmed by Hollywood’s leading stunt directors Terry Notary and Guy Norris.
Prime Focus Studios, in association with eight-time Academy Award®️-winning production and visual effects studio DNEG and Monster Mind Creations, presents NAMIT MALHOTRA’S RAMAYANA: PART 1, the first of a two-part live-action epic based on the ancient writings of the revered Indian poet, Valmiki.

NAMIT MALHOTRA’S RAMAYANA: PART 1 opens in theatres globally this fall during Diwali 2026. PART 2 is currently in production and slated to debut globally during Diwali 2027.

A STORY RETURNING AT THE RIGHT TIME
The Ramayana is not just a story, it is a living cultural force. Its most defining moment Rama’s return to Ayodhya after victory, is celebrated as Diwali, symbolising the triumph of light over darkness, and good over evil. Celebrated by billions across the world, Diwali is the continued remembrance of this story and what it stands for.

At its heart, the Ramayana is a profoundly human story, where Rama stands for dharma (duty above all), compassion, and selflessness while Ravana’s tragic downfall was driven by immeasurable ego, control, and desire

This contrast between sacrifice and ambition, humility and pride, is what has makes Ramayana one of the most enduring and celebrated epics in human history.

INTERESTING FACTS
The Ramayana has been retold in over 300 versions across cultures and regions worldwide
Ayodhya, Rama’s birthplace has emerged as one of the most visited spiritual destinations in the world, with over 135 million visitors recorded in 2024 alone

The Ram Mandir, inaugurated in 2024, marks a moment of profound cultural significance tied to a centuries-long legacy associated with the birthplace of Rama
As per media reports over a 1000 temples in USA celebrated Rama Mandir consecration in Ayodhya in 2024

About Prime Focus Studios
Prime Focus Studios, founded by filmmaker and producer Namit Malhotra, finances and produces innovative and compelling content across film, TV, and gaming for global audiences. Leveraging the DNEG Group’s award-winning global capabilities, including soundstages, production facilities, visual effects, feature animation, and more, Prime Focus Studios is a new home to innovative filmmakers and a partner to studios and rights-holders.

About Monster Mind Creations
Founded by Rocking Star Yash, Monster Mind Creations is an independent production house driven by a vision to nurture creative talent and deliver pioneering content that redefines cinematic storytelling. Monster Mind Creations is currently co-producing two event films: “Toxic: A Fairy Tale for Grown-Ups” in collaboration with KVN Productions and “Ramayana” alongside Prime Focus Studios

Yaan Foundation வழங்கும் “அகரவா மகரவா ” ஆன்மிக ஆல்பம் பாடல் வெளியானது!!

0

காற்றோடு பட்டம் போல, நீலோத்தி பாடலை எழுதிய சாரதி எழுதியுள்ள சிவன் பாடல் ” அகரவா மகாரவா “

இறைவன் சிவபெருமானின் பெருமை, தெய்வீக ஆற்றல் மற்றும் ஆன்மிக உணர்வுகளை உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள “அகரவா மகரவா” என்ற புதிய ஆன்மிக ஆல்பம் பாடல் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. Yaan Foundation வழங்கியுள்ள இந்த பாடல், பக்தி மற்றும் ஆன்மிக சிந்தனைகளை அழகாக இணைக்கும் விதத்தில் உருவாகியுள்ளது.

இந்த பாடல் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் திரையரங்கில் நடைபெற்றது. திண்டுக்கல் சிவபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருமதி.தேச மங்கையர்கரசி, முனைவர் சிவ.சதீஷ்குமார் ,பல்கலை வித்தகி திருமதி.ரேகா மணி மற்றும் திரைப்பட இயக்குனர்கள் இயக்குனர் ரோமியோ ஜூலியட் லஷ்மன், வசந்தமணி , சுகுமார் அழகர்சாமி, s.சாம் , ராஜவேல் ஆகியோர் கலந்து கொண்டு இந்த ஆமீக பாடலை வெளியிட்டனர்.

இந்த பாடலை பிரபல ஆன்மிக பாடகர் கோல்ட் தேவராஜ் அவர்கள் ஆழ்ந்த உணர்வுகளுடன் பாடியுள்ளார். அவரது குரல், பாடலின் பக்தி உணர்வை மேலும் உயர்த்துகிறது.

பாடலின் வரிகளை, “நீலோத்தி”, “கற்றோடு பட்டம் போல” போன்ற மிக பிரபலமான சினிமா பாடல்களை எழுதிய சாரதி எழுதியுள்ளார். எளிய சொற்களிலும் ஆழமான அர்த்தங்களிலும் அமைந்துள்ள இந்த வரிகள், கேட்பவர்களின் மனதில் நீங்கா தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த பாடலுக்கு இசையை கணேஷ் ராகவேந்திரா அமைத்துள்ளார். ஆன்மிகத்தையும், இசை நயத்தையும் இணைக்கும் வகையில் இசை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் சமுத்திரக்கனி மற்றும் லக்ஷ்மன் இருவரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றிய சாவியோ இந்த பாடலை இயக்கியுள்ளார்.

எடிட்டிங் மற்றும் AI பணிகளை கௌதம் மேற்கொண்டுள்ளார். தயாரிப்பாளர்களாக பிரதீப் குமார் – தீபா செயல்பட்டுள்ள நிலையில், தயாரிப்பு நிர்வாகியாக முஹம்மது பிலால் ஆகியோர் இந்த ஆல்பத்தை முன்னெடுத்து வருகின்றார்.

மொத்தத்தில், “அகரவா மகரவா” ஆன்மிக பாடல், பக்தி இசையை விரும்பும் ரசிகர்களுக்கு சிவனின் பக்தர்களுக்கும் ஒரு சிறந்த அனுபவமாக அமைந்துள்ளது. இப்பாடல் வெளியானவுடன் சமூக வலைதளங்களில் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த பாடலை யான் அறக்கட்டளையின் YaanTamil என்ற youtube சேனலில் பார்த்து மகிழலாம்.

song link ; https://youtu.be/fi0T5plA4II?si=WbTlGXviINTmSycl

- Advertisement -

Recent Posts