- Advertisement -
Home Blog Page 258

என் திரையுலக பயணத்தில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவான படம் ‘தண்டேல்’

0

ஆந்திரா, தெலுங்கானா மட்டுமில்லாமல் தமிழ்நாடு கேரளா கர்நாடகா வட இந்தியா முழுவதும் பிப்ரவரி 7 ஆம் தேதி அன்று வெளியாகும் நாக சைதன்யா – சாய் பல்லவி இணைந்து நடித்திருக்கும் ‘தண்டேல்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

மீனவ இளைஞனின் தேசபக்தி மிக்க உணர்வுபூர்வமான காதல் கதையை மையமாகக் கொண்ட இந்த ‘தண்டேல்’ படத்திற்கு, படக்குழுவினர் இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடையும் வகையில் தீவிரமாக விளம்பரப் படுத்தி வருகிறார்கள்.

இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி இருக்கும் தண்டேல் எனும் திரைப்படத்தில் நாக சைதன்யா சாய் பல்லவி கருணாகரன் ஆடுகளம் நரேன் பப்லு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சியாம் தத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் தயாரித்திருக்கிறார். எதிர்வரும் ஏழாம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரித்திருக்கிறார் இந்த திரைப்படத்தை அல்லு அரவிந்த் வழங்குகிறார் தமிழில் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு வழங்குகிறார்.

படத்தைப் பற்றிய ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறி வரும் நிலையில் படத்தைப் பற்றி தனது அனுபவங்களை நாயகன் நாக சைதன்யா பகிர்ந்து கொள்கிறார்.

சென்னையை பற்றி…?

சென்னை எனக்கு எப்போதும் ஸ்பெஷலலானது.‌ என் வாழ்க்கை இங்கு தான் தொடங்கியது. சென்னையில் எனக்கு மறக்க முடியாத அனுபவம் நிறைய உள்ளது.

இப்படத்தில் நடிக்க தூண்டுதலாக இருந்த விசயம் எது?

இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடன் அனைத்து கமர்சியல் அம்சங்கள் இருந்தாலும் அடிப்படையில் இது ஒரு காதல் கதை. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தை பார்க்கும் ரசிகர்களும் இந்த காதலை நெருக்கமாக உணர்வார்கள்.

வழக்கமான நாக சைதன்யாவை விட இந்த திரைப்படத்தில் வித்தியாசமாக தோன்றுகிறீர்களே.. இது தொடர்பாக..!?

இந்தப் படத்தில் என் கதாபாத்திரத்தின் திரை தோற்றம் குறித்து இயக்குநர் சந்து என்னை சந்தித்தபோது விவரித்தார். அதைக் கேட்டவுடன் நடிகருக்கு தன் திறமையை வெளிப்படுத்துவதற்கான சரியான சந்தர்ப்பம் என நம்பினேன். படத்தின் கதையும் விசாகப்பட்டினத்தில் அருகே உள்ள ஸ்ரீ கா குளத்திலிருந்து பயணித்து, குஜராத்திற்கு சென்று, அங்கிருந்து பாகிஸ்தானுக்கு சென்று, அங்குள்ள சிறைக்கு சென்று, அதன் பிறகு சொந்த மண்ணுக்கு திரும்புவது போன்ற நீண்ட பயணம். இது என்னை மிகவும் கவர்ந்தது.

அதன் பிறகு ஸ்ரீ கா குளத்திற்கு நேரில் சென்று அங்குள்ள மீனவர்களை சந்தித்து, அவர்களின் வாழ்வியல் முறை- மொழி உச்சரிக்கும் பாணி- உடல் தோற்றப் பாணி- தொழில் சார்ந்த பாணி- ஆகியவற்றை குறித்து அவர்களிடம் உரையாடி தெரிந்து கொண்டேன்.

கடலுக்கு போகும் போது அவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன? அதனை எப்படி எதிர்கொள்வார்கள்? இதைப்பற்றியெல்லாம் விரிவாக கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
அவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் செல்லும்போது ஏறத்தாழ ஒரு மாத காலம் வரை கடலிலேயே இருப்பார்களாம். கடலில் இருக்கும் போது அவர்களிடத்தில் இருக்கும் செல்போன்கள் செயல்படாது. அவர்களுக்கும், இந்த உலகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லாமல் இருப்பார்கள். இதையெல்லாம் கேட்ட பிறகு இன்ஸ்பிரேஷன் ஆகி இந்த கதாபாத்திரத்திற்காக என்னை தயார் செய்து கொள்ள தொடங்கினேன். இது என்னுடைய திரையுலக பயணத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. என்னுடைய தோற்றமாகட்டும்… என்னுடைய உடல் மொழியாகட்டும்… என்னுடைய உள்ளூர் பேச்சு வழக்கு வசன உச்சரிப்பாகட்டும்… கிட்டத்தட்ட ஓராண்டு காலம் இதிலேயே லயித்திருந்தேன். இந்தப் பயணம் மறக்க முடியாத அனுபவத்தை அளித்தது.

‘தண்டேல்’ படத்தில் நான் நடித்த ராஜு கதாபாத்திரம் என்னை பல விதங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரு மனிதனுடைய பரிணாம வளர்ச்சி தொடர்பான அத்தனை உணர்வுகளும் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போது ஏற்பட்டது. மனிதர்களிடத்தில் பேரன்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று என்பதையும் உணர்த்தியது.

இயக்குநருடன் பணிபுரிந்த அனுபவம் எப்படி?

இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் நான் நடிக்கும் மூன்றாவது படம் இது. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில் இருக்கும். இந்தப் படத்தின் கதை. இந்த படத்தின் பட்ஜெட். இதன் பிரம்மாண்டம். தயாரிப்பின் தரம்.. எல்லாம் எனக்கும், இயக்குநருக்கும் புதிது. இதுவரை எந்த திரைப்படத்திலும் இல்லாதது. மிகப் பெரிது.‌ இது இயக்குநரின் வளர்ச்சியைத் தான் காட்டுகிறது.‌

சந்து எனக்காக நிறைய சிந்திப்பார். அவர் இந்த படத்தில் என்னை புதிய தோற்றத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார். காதல் காட்சியாகட்டும்… சண்டைக் காட்சியாகட்டும்… நடன காட்சியாகட்டும்.. சந்து எப்போது எனக்கு ஆதரவாகவே இருப்பார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிப்பை தவிர்த்து உங்களின் பொழுதுபோக்கு என்ன?

நடிப்பை தவிர்த்து கார் பந்தயங்களில் ஈடுபாடு உண்டு. இதற்காக நான் சென்னைக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை இருங்காட்டு கோட்டையில் உள்ள கார் பந்தய மைதானத்தில் நடைபெறும் கார் பந்தயங்களை பார்வையிட்டிருக்கிறேன். ரசித்திருக்கிறேன். அது என்னுடைய பொழுதுபோக்கு மட்டும் தான். அதற்காக நான் முறையான பயிற்சியை எடுத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும் ஓய்வு கிடைக்கும் போது பந்தயக் கார்களை இயக்கிருக்கிறேன்.

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவன்- எல்லையைத் தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக அண்டை நாடான பாகிஸ்தான் அரசு கைது செய்து மீனவர்களை சிறையில் அடைக்கிறது.‌ அவர்கள் எப்படி சிறையிலிருந்து மீண்டார்கள்? அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களின் போராட்டம் எப்படி இருந்தது? இந்த உண்மை சம்பவத்தை தழுவி உணர்வு பூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் ‘தண்டேல்’ திரைப்படம் தமிழக மீனவர்களின் உணர்வையும் பிரதிபலிப்பதால் இந்த திரைப்படம் தமிழகத்திலும் மாபெரும் வெற்றியை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஏழாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.‌

பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதிய “கலைஞர் 100”

0

தமிழ் திரையுலகின் முதல் பொதுஜன தொடர்பாளர் என்கிற பெருமைக்குரியவர் பிலிம் நியூஸ் ஆனந்தன். பேசும் படம் தொடங்கியது முதல் அவர் மறையும் வரையிலான திரைப்பட புள்ளி விவரங்களை சேகரித்து தொகுத்து “சாதனை படைத்த தமிழ் திரைப்பட வரலாறு” என்கிற நூலினை தமிழக அரசின் உதவியுடன் வெளியிட்டார்.

தமிழ்த் திரையுலகின் தகவல் களஞ்சியமாக திகழும் அந்தப் புத்தகத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.

முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களைப் பற்றிய ஒரு தொகுப்பு முக்கியமான நூலாகும்.

தமிழ் திரையுலைகில் வசனகர்த்தவாக, பாடல் ஆசிரியராக, திரைக்கதை ஆசிரியராக, தயாரிப்பாளராக சரித்திரம் படைத்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்.

அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் ‘கலைஞர் 100’ என்கிற நூலாக மலர்ந்திருக்கிறது.

இந்த நூலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று வெளியிட்டுள்ளார். ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் மகன் டைமண்ட் பாபு நூலை பெற்றுக்கொண்டு, வாழ்த்து பெற்றார்.

தங்க பதக்கம் வென்ற திரைப்பட தொகுப்பளரின் மகள் யோமிதா

0

மஞ்சப்பை கடம்பன் போன்ற பல்வேறு திரைபடங்களில் படதோகுப்பளராக பணிபுரிந்த திரு.தேவா அவர்களின் மகள் “யோமிதா“ சென்னை கேகே நகரில் உள்ள SPUNK ROLLER SKATING அகடாமியில் தனது ஆறு வயது முதல் திரு.ராஜா என்பவரிடம் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொள்கிறார். இவர் இதுவரை நடைபெற்ற மாவட்ட, மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் கலந்து கொண்டு 23-தங்க பதக்கம், 4-வெள்ளி பதக்கம், 2-விருது, 3-தனிப்பட்ட CHAMPIONSHIP TROPHY பெற்றுள்ளார். கடந்த ஜனவரி மாதம் மதுரையில் SPEED SKATING FEDRATION OF INDIA- (SSFI) நடத்திய 24வது தேசிய ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா புதுச்சேரி, ஒடிசா, மகாராஷ்டிரா, குஜராத், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் இருந்து 1200 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் யோமிதா UNDER-8 பிரிவில் பங்கேற்று 200 மீட்டரிலும், 400 மீட்டரிலும் இரண்டு பிரிவிலும் தங்க பதக்கமும் பெற்று தனிப்பட்ட சாம்பியன் ஷிப் கோப்பையும் (INDIVIDUAL CHAMPIONSHIP TROPHY) கைப்பற்றினார். மேலும் இவர் ஜூன் மாத இறுதியில் நடைபெற உள்ள சர்வதேச ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியா சார்பாக இந்தோனேசியாவில் கலந்து கொள்ள உள்ளார்…

Munawar Faruqui forays into acting with his newly released song ‘Hawa Banke’

0

Munawar Faruqui is proving yet again that he is a force to be reckoned with—not just in comedy, music, and poetry but now in acting as well. The multi-talented artist has made a seamless transition to the screen with his newly released song, Hawa Banke, showcasing his depth as a performer and adding another feather to his creative cap.

Presented by Anshul Garg, Hawa Banke stars Munawar alongside the stunning Kinza Hashmi in a breathtaking love story set against the ethereal landscape of Nepal. This soulful track, sung by the exceptionally talented Rito Riba and the iconic Neha Kakkar, is composed by Rajat Nagpal, with heartfelt lyrics penned by Vicky Sandhu.

The music video beautifully captures the magic of love—its fleeting moments and its transformative power. Munawar’s raw intensity and emotive screen presence make every frame relatable, while his chemistry with Kinza Hashmi adds to the song’s romantic allure.

Speaking about his foray into acting, Munawar shared, “I’m very grateful and fortunate to have fans who support my every move, and I feel a sense of responsibility to entertain them with whatever I do. Hawa Banke is special because it allows me to explore another side of my artistic expression. This time, I’m excited about enlivening a song sung by the super-gifted Rito Riba and the iconic Neha Kakkar. I hope my audience pours the same love into my acting endeavor as they have for my other ventures.”

Set to head for a world tour, Munawar has a web series titled, First Copy starring him along with Gunshar Grover and Krystle D’Souza and a few unannounced projects on his slate.

கெத்து தினேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் “கருப்பு பல்சர்” !!

0

Yasho Entertainment சார்பில், Dr. சத்யா M தயாரிப்பில், கெத்து தினேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கத்தில், மதுரை மற்றும் சென்னைப் பின்னணியில், ஒரு மாறுபட்ட கமர்ஷியல் கொண்டாட்டமாக உருவாகியுள்ள திரைப்படம் “கருப்பு பல்சர்”. இப்படத்தின் முழுமையாக முடிந்த நிலையில், தற்போது திரைக்குக் கொண்டுவரும் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

பிரபல இயக்குநர் எம் ராஜேஷ் அவர்களிடம் உதவி இயக்குநராகவும், அவரது படங்களில் திரைக்கதையிலும் பணியாற்றிய முரளி கிரிஷ் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

மதுரை பின்னணியில் கருப்பு காளையுடன் வாழும் ஒரு இளைஞன், சென்னையில் பல்சருடன் வாழும் இளைஞன், இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அவர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள், அதை எப்படித் தாண்டி வருகிறார்கள் என்பது தான் கதை. அசத்தலான காமெடியுடன், பரபர திருப்பங்களுடன், அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

லப்பர் பந்து படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு மதுரை கிராமத்து இளைஞனாகவும், சென்னை மாடர்ன் இளைஞனாகவும் இரண்டு மாறுபட்ட தோற்றங்களில் அசத்தியுள்ளார் கெத்து தினேஷ்.

படம் குறித்து இயக்குநர் முரளி கிரிஷ் கூறியதாவது…
இதுவரையில் தமிழில் மிகச்சிறந்த இரட்டை வேடப் படங்கள் பல வந்திருக்கிறது. இந்தப்படம் அந்தப்படங்கள் போல இருக்காது. இப்படம் மக்கள் மனம் விட்டுச் சிரித்து மகிழும் வகையில் முழுக்க முழுக்க நகைச்சுவையுடன், ஒரு அசத்தலான கமர்ஷியல் படமாக இருக்கும், பொல்லவாதவன் பட கருப்பு பல்சர், ஜல்லிக்கட்டு போராட்டம் இந்த இரண்டும் தான் இப்படத்தின் கரு உருவாகக் காரணமாக இருந்தது. மதுரையின் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டைப் படத்தில் லைவ்வாக காட்டியுள்ளோம். இப்படத்தின் கதை கேட்டு உடனே நடிக்க ஒப்புக்கொண்டார் தினேஷ். இந்தப்படத்தில் அவரின் உழைப்பு அபாரமானது. இரண்டு நாட்கள் ஜல்லிக்கட்டில் உண்மையாகவே மாடுகளைப் பிடித்தார். அப்போது அவருக்கு அடிபட்டது அதையும் பொருட்படுத்தாமல் நடித்துத் தந்தார். சென்னை இளைஞனாகவும் கலக்கியிருக்கிறார். சென்னை, மதுரையில் 28 நாட்களில் படத்தை முடித்துவிட்டோம். லப்பர் பந்துக்குப் பிறகு ரசிகர்களுக்கு விருந்தாக இந்தப்படம் இருக்கும் என்றார்.

இப்படத்தில் தினேஷ் இரட்டை வேடத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக ரேஷ்மா வெங்கட், மதுனிகா நடித்துள்ளன்ர். இவர்களுடன், மன்சூர் அலிகான், கலையரசன் , சரவணன் சுப்பையா, பிரின்ஸ் அஜய், பிராங்க்ஸ்டர் ராகுல் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இன்பராஜ் ராஜேந்திரன் பாடல் எழுதி இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சசி தாட்ச எடிட்டிங் செய்ய, T.உதயகுமார் சவுண்ட் டிசைன் செய்துள்ளார். KV. தமிழரசு, முருகானந்தம் நிர்வாக தயாரிப்பு பணிகளைச் செய்துள்ளனர்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், தற்போது திரைக்குக் கொண்டு வரும் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் டிரெய்லர், மற்றும் இசை வெளியீடு பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Thanks & Regards,
PRO P.Thyagarajan &
R.Mani Madhan

Gethu Dinesh’s next ‘Karuppu Pulsar’ Releasing soon

Gethu Dinesh plays dual roles in ‘Karuppu Pulsar’

Gethu Dinesh’s ‘Karuppu Pulsar’ on its final stages of postproduction

Dr. Sathya M of Yasho Entertament is producing the film ‘Karuppu Pulsar’, featuring Gethu Dinesh in the lead role, directed by debutant Murali Krish, which is a commercial entertainer, set against the backdrops of Chennai and Madurai. With the film’s postproduction works completed, the plans are going on to release the film soon.

Murali Krish, a former assistant to filmmaker M. Rajesh, and also a screenwriter for his movies, embarks on the directional journey through the movie.

Following the grand success of Lubber Pandhu, Dinesh performs dual roles as a authentic young man from Madurai and a Chennai youngster. The film revolves around the incidents that unfolds after the meeting of these characters, and how they tackle the odds. The film has been crafted with a heavy dose of comedy laced with racy twists and tuns, letting audiences of all age groups enjoy watching the movie.

Director Murali Krish says, “So far, there have been many Tamil movies with double action hero stories, but this one will be an exception. This will be an out-and-out comedy commercial entertainer that will keep tickling your funny bones throughout the show. Both the Black Pulsar in Polladhavan movie, and Jallikattu protest sparked off the basic idea of this film in me. We have shot the ‘Live Jallikkattu event’ in Madurai for this film. Dinesh accepted to be a part of this film without any thoughts after listening to the story. What was more astonishing was his dedication, where he got involved in the Jallikattu traditional sport without any dupes for a couple of days for the sake of this film and embraced the bulls in a professional champion style. He has performed another role of a Chennai youngster as well. We completed shooting the entire film across Chennai and Madurai in a span of 28 days. Following ‘Lubber Pandhu’, this will be a delighted treat for the audiences.”

While Dinesh is playing dual roles in this film, Reshma Venkat & Madhunika are essaying the female lead roles opposite him. Mansoor Ali Khan, Kalaiarasan, Saravanan Subbiah, Prince Ajay, Prankster Rahul among others will be seen playing pivotal roles.

Inbaraj Rajendran is penning lyrics. Bhaskar Aarumugam is handling cinematography. Sasi Thatche is overseeing editing works, and T Udhayakumar is responsible for Sound Designing. KV Thamizharasu and Muruganantham are executive producers.

With the film’s entire production and postproduction works completed, the plans are going on full swing to get the theatrical release soon. The makers will be soon making official announcements on the trailer and audio launch.
Dear media friends,

Thanks & Regards,
PRO P.Thyagarajan &
R.Mani Madhan

“மதகஜராஜா” திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக இன்று 25வது நாள் மக்களால் கொண்டாடப்பட்டு

0

2025ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா திருநாளில் “மதகஜராஜா” திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக இன்று 25வது நாள் மக்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி கூறும் நேரம் இது.

“மதகஜராஜா” திரைப்படம் பெரும் உழைப்பாலும் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு கடந்த 2013ஆம் ஆண்டு இதே பொங்கல் திருநாளில் வெளிவர தயாராக இருந்த சூழ்நிலையில் தவிர்க்கமுடியாத சில காரணங்களாலும் பட நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பட குழுவினர்களுக்கு உண்மையான காரணங்கள் என்னவென்று தெரியாமலே அன்று படம் வெளிவர முடியாமல் போனது. அதனை தொடந்து நானும், அன்பிற்கினிய சகோதரர் இயக்குநர் திரு.சுந்தர்.C அவர்களும் சோர்வடையாமல் ஒவ்வொரு வருடமும் வெளியிடுவதற்கான முயற்சிகள் எடுத்து வந்தோம்.

இந்த 2025ஆம் வருடம் “மதகஜராஜா” திரைப்படத்தை வெளியிடுவதற்கான முயற்சியில் எங்களுக்கு வலிமையான முதல் தூணாக இருந்தவர் அன்பிற்கினிய அண்ணன் திருப்பூர் திரு.சுப்பிரமணியம் அவர்கள் இத்திரைப்படத்தை முதலில் அவர் பார்த்த உடன் அதன் மீது உள்ள முழு நம்பிக்கையில் பொங்கல் திருவிழா திருநாளில் வெளியிடுவதற்கு முன்னெடுத்து முழு ஆதரவையும் வழங்கி வழி நடத்தி எங்களுக்கு உறுதுணையாக இருந்தார்.

அடுத்து வலிமையான இரண்டாவது தூணாக இருந்தவர் அன்பிற்கினிய சகோதரர் இயக்குனர் திரு.சுந்தர்.C அவரும், நானும் எப்போது பேசினாலும், மதகஜராஜா எப்போது திரையில் வெளிவந்தாலும் நிச்சயம் மக்களிடம் பெரும் வரவேற்பு அடையும் என்பதே எங்களின் அதீத நம்பிக்கையாக இருந்தது.

இயக்குனர் திரு.சுந்தர்.C அவர்கள் வைத்த வேண்டுகோளினை ஏற்று ஒரு மணி நேரத்திற்குள் படத்தை வெளியிடுவதற்குத் தேவையான முழு தொகையும் வழங்கி “மதகஜராஜா” திரைப்படத்தை வெளியாவதற்கு விநியோகம் செய்ய முன் வந்து ஆதரவு வழங்கிய மிக முக்கியமான வலிமையான மூன்றாவது தூண் என் அன்பிற்கினிய சகோதரர் மற்றும் நண்பர் திரு.ஏ.சி.சண்முகம் அவர்கள்.

சிறப்பு மிக்க தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ஆரம்ப காலங்களில் இருந்தே எங்களுக்கு உறுதுணையாக இருந்து நிதி உதவி வழங்கிய திரு.ஏ.சி.சண்முகம் அவர்களின் வாழ்த்துக்களுடன் இப்போது தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் நிறைவு பெரும் நிலையில் உள்ளது என்பதனை இந்த மகிழ்ச்சியான நேரத்தில் தெவித்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

“மதகஜராஜா” திரைப்படம் வெளியாவதற்கு பல நாட்கள் இரவு பகல் என்றும் பாராமல் அயராது உழைத்து உறுதுணையாக இருந்தவர் அன்பிற்கினிய தோழி அதிதி அவர்கள்.

இப்பேர்ப்பட்ட நல் உள்ளங்களின் உறுதுணையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி பொங்கல் திருவிழா திருநாளில் “மதகஜராஜா” திரைப்படம் வெளியானது.

நான்காவது வலிமையான தூண், என் தெய்வங்களாகிய எம் மக்கள்,
12ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் மக்களிடம் பிரசித்தி பெறுவதை போன்று அதே எதிர்பார்ப்புடன் 12ஆண்டுகள் கடந்து வெளியான “மதகஜராஜா” திரைப்படமும் மக்களின் பேராதரவு பெற்று பல கோடி வசூலையும் கடந்து மக்கள் குடுபங்களுடன் திரையரங்குகளுக்கு வந்து கொண்டாடிய
2025 ஆண்டின் முதல் வெற்றி பெற்ற இப்படம், மாபெரும் வசூல் படைத்த திரைப்படமாக திரையுலகில் கால் பதித்தது.

இப்படத்தின் முதல் அறிவிப்பு முதல் படத்தின் பிரத்தியோக காட்சி முடிந்தது வரை ஏகோபித்த வரவேற்பு கொடுத்த எனது அருமை பத்திரிகை நண்பர்கள் கொடுத்த ஊக்கம் மிகப்பெரிய பலமாக இருந்தது.

சினிமா வரலாற்றில் ஒரு நல்ல திரைப்படம் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும், அத்திரைப்படம் வெளியிட முடியாமல் பல ஆண்டுகள் கடந்து எப்போது திரையில் வந்தாலும் மக்களின் பேராதரவு உண்டு என்பதற்கு “மதகஜராஜா” திரைப்படம் ஒரு சான்று.
அதே போன்று இன்னும் வெளிவராமல் இருக்கும் பல படங்களுக்கு “மதகஜராஜா” திரைப்படம் முன்மாதிரியாகவும் அவர்களுக்கு புத்துணர்ச்சி உண்டாக்கும் வகையில் இருந்து வருகிறது.

என்னை ஒரு பாடகராக ஏற்று #MyDearLoveru பாடலுக்கு பேராதரவு வழங்கியமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு இந்நாள் மிகவும் முக்கியமான மறக்க முடியாத நாளாக இருக்கிறது.

பல தடைகளை தாண்டி நான்கு வலிமையான தூண்கள் உதவியுடன் “மதகஜராஜா” திரைப்படம் தமிழில் மாபெரும் வெற்றி பெற்று பல கோடி வசூல் சாதனை படைத்தது போல், பல தடைகளை தாண்டி தெலுங்கிலும் வெளியாகி வெற்றி பாதையில் பயணிக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் ஒருமுறை இத்திரைப்படத்திற்கு உறுதுணையாக இருந்த அண்ணன் திருப்பூர் திரு.சுப்பிரமணியம், நண்பர் திரு.ஏ.சி.சண்முகம், சகோதரர் இயக்குனர் திரு.சுந்தர்.C, என் தெய்வங்களாகிய எம்மக்கள், ரசிகர்கள் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

“மதகஜராஜா” திரைப்படம் போன்று உங்களை மகிழ்விக்கும் நல்ல திரைப்படங்களை வழங்கிடுவேன் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

நன்றி,
வணக்கம்,
உங்களவன் விஷால்

“காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை காதலர் தினம் ” புதுமையான தலைப்பில் புதிய படம்!

0

” காதலை மூன்று வகை படுத்தி இளைஞர் இளைஞிகளுக்காக கெளரி சங்கர் பல பொறுப்புகளை ஏற்று இயக்கி உள்ள படம்தான் ” காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை காதலர் தினம் ” என்ற படம்.

சரவணன் , அபிநயா அன்பழகன், ஸ்ரீ பவி , ஐஸ்வர்யாபாஸ்கரன், ரமேஷ் கண்ணா, கும்கி அஸ்வின், நடேசன், தெனாலி, சன் டிவி அகல்யா என நிறைய பேர் நடித்துள்ளனர்.

ஆதிஷ் உத்ரியன் இசையையும், து. மகிபாலன் ஒளிப்பதிவையும், லட்சுமணன் படத்தொகுப்பையும், சரவணன் சண்டை பயிற்சியையும், சுரேஷ் நடன பயிற்சியையும் கவனித்துள்ளனர்.

கலை, உடை, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு. இயக்கம் என எட்டு பொறுப்புகளை ஏற்றுள்ள கெளரி சங்கர் படத்தை பற்றி கூறியதாவது, ” இன்றைய காதலை மூன்று வகைப்படுத்தியிருக்கிறேன். புரிந்த காதல், புரியாத காதல், புதிரான காதல் என்பது தான் அது. புரிந்த காதல் சுகமானது. புரியாத காதல் சுமையானது. மூன்றாவது புரியாத காதல் முடிவில்லாதது. இதற்காக ஒவ்வொரு காதலுக்கும் ஒவ்வொரு ஜோடிகளை வைத்திருக்கிறேன். இன்றைய இளைய சமுதாயம் சமூகத்தில் வாழ்க்கையை தொலைக்கிறார்களா? அதையே தொடர்கிறார்களா? என்பதை சுவையான திரைக்கதையில் விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறேன். ” என்று கூறும் கெளரி சங்கர் தமது எம்.ஜி.எஸ். நிறுவனம் சார்பில் ” காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை காதலர் தினம் ” படத்தை தமது மூன்றாவது படமாக இயக்கி உள்ளார்.

விஜயமுரளி
PRO

மதுரையில் கோலாகலமாக நடைபெற்ற இயக்குநர் எஸ். யூ. அருண் குமாரின் திருமணம்

0

திரைப்பட இயக்குநர் எஸ். யூ. அருண் குமாருக்கும், ஏ. அஸ்வினி என்பவருக்கும் இரு தரப்பு பெற்றோர்களின் சம்மதத்துடன் நேற்று மதுரையிலுள்ள ஹெரிடேஜ் நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு தமிழ் திரையுலகிலிருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

‘பண்ணையாரும் பத்மினியும்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் எஸ். யூ. அருண்குமார். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ என இரண்டு படங்களை தொடர்ந்து இயக்கினார். பிறகு சித்தார்த் நடிப்பில் வெளியான ‘சித்தா’ திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். இவர் தற்போது சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் ‘வீர தீர சூரன்’ எனும் திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இந்நிலையில் இவருக்கும், ஏ. அஸ்வினி என்ற பட்டதாரி பெண்ணிற்கும் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயமானது. இதனைத் தொடர்ந்து நேற்று மதுரையில் உள்ள ஹெரிடேஜ் நட்சத்திர ஹோட்டலில் பெற்றோர்கள் – நண்பர்கள்- உறவினர்கள்- திரையுலக பிரபலங்கள் – முன்னிலையில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு முன்னணி திரையுலக பிரபலங்களான சீயான் விக்ரம், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குநர் வெற்றிமாறன், எஸ் ஜே சூர்யா, சித்தார்த் , தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ், இயக்குநர் விக்னேஷ் சிவன், சுராஜ் வெஞ்சரமூடு, நடிகை துஷாரா விஜயன்,தயாரிப்பாளர் அருண் விஷ்வா, இயக்குநர் பூ சசி, இயக்குநர் சதீஷ், விவேக் பிரசன்னா, பால சரவணன், ஜி.கே பிரசன்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Mohanlal’s Magnum Opus ‘Vrusshabha’ Wraps Shoot

0

Grand Celebration Marks Milestone
The highly anticipated pan-Indian epic action entertainer Vrusshabha made on a mega budget, starring
lalettan Mohanlal, has officially wrapped filming. The final schedule, which took place in Mumbai,
marked the completion of this ambitious project, and the cast and crew commemorated the occasion with
a grand cake-cutting ceremony. The atmosphere was charged with excitement and emotion as the team
celebrated months of hard work, dedication, and creative collaboration.
Written and Directed by acclaimed filmmaker Nanda Kishore and presented by Connekkt Media and
Balaji Telefilms, Vrusshabha has generated immense buzz for its grandeur, compelling storytelling, and
stellar performances. With a unique blend of action, emotion, and mythology, the film aims to transport
audiences into a world of intense drama and breathtaking visuals.
The film has been shot simultaneously in Malayalam and Telugu, ensuring an authentic experience for
audiences at a pan-Indian and global level. Alongside Mohanlal, the cast features powerhouse performers
whose roles are poised to leave a lasting impact. The technical brilliance of the film, from massive fight
sequences to mesmerizing cinematography, promises a spectacular viewing experience.
With production now complete, the film enters post-production, with industry leading visual effects,
editing, and sound design. The film has been made on a mega budget to ensure that Vrusshabha pushes
the boundary on cinematic excellence.
Scheduled for a grand Diwali 2025 release, Vrusshabha will hit screens in five languages—Telugu,
Malayalam, Hindi, Tamil, and Kannada. The film is expected to set the box office on fire across India
and overseas markets.
Vrusshabha is Produced by Shobha Kapoor, Ektaa R Kapoor, CK Padma Kumar, Varun Mathur,
Saurabh Mishra, Abhishek Vyas, Vishal Gurnani, and Juhi Parekh Mehta, this larger-than-life saga
is set to redefine epic storytelling in Indian cinema. Every aspect of the film, from its screenplay to its
larger-than-life sets, has been meticulously crafted to ensure an unforgettable cinematic journey. As the
post-production gears up, fans can look forward to exclusive glimpses, behind-the-scenes content, and a
thrilling promotional campaign leading up to the film’s release. The journey of Vrusshabha has just begun,
and audiences can expect an epic spectacle unlike anything seen before.

மோகன்லாலின் மிகப் பிரம்மாண்டமான திரைப்படமான ‘விருஷபா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது!

முன்னணி நடிகர் மோகன்லாலின் நடிப்பில், இந்தியாவின் மிகப்பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் ‘விருஷபா’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றது. மும்பையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர், அர்ப்பணிப்பு மிக்க தொடர் உழைப்பைத் தொடர்ந்து, படப்பிடிப்பு நிறைவடைந்ததை, கேக் வெட்டிக் கொண்டாடினர்.

புகழ்மிகு இயக்குநர் நந்த கிஷோர் எழுத்து இயக்கத்தில், கனெக்ட் மீடியா மற்றும் பாலாஜி டெலிஃபிலிம்ஸ் ஏவிஎஸ் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் இப்படம், உணர்ச்சிமிகு கதைக்களம் மற்றும் புராணங்களின் தனித்துவமான கலவையுடன், மிரட்டலான ஆக்சன் காட்சிகளுடன், இந்தியாவின் பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகிறது.

இப்படம் பான் இந்திய அளவில் அனைத்து பார்வையாளர்களும் ரசிக்கும் வகையில், மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மோகன்லாலுடன், இந்திய அளவிலான முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். திறமைமிகு முன்னணி தொழில் நுட்ப கலைஞர்களின் கை வண்ணத்தில், மயக்கும் ஒளிப்பதிவு, மிரட்டலான சண்டைக் காட்சிகளுடன், ஒரு அற்புதமான காட்சி அனுபவமாக உருவாகியுள்ளது.

படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் பரபரப்பாகத் துவங்கியுள்ளது. உலகளாவிய தரத்திலான விஷுவல் எஃபெக்ட்ஸ், எடிட்டிங்க் மற்றும் ஒலி வடிவமைப்புடன், “விருஷபா” மெகா பட்ஜெட்டில் ஒரு புதுமையான சினிமா அனுபவமாக உருவாகியுள்ளது

விருஷபா திரைப்படம், தெலுங்கு, மலையாளம், இந்தி, தமிழ், கன்னடம் என ஐந்து மொழிகளில்
2025 ஆம் ஆண்டு தீபாவளிக்குப் பிரமாண்டமாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படம் இந்தியா மற்றும் உலகளவில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ப்ளாக்பஸ்டராக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஷோபா கபூர், ஏக்தா R கபூர், CK பத்ம குமார், வருண் மாத்தூர், சௌரப் மிஸ்ரா, அபிஷேக் வியாஸ், விஷால் குர்னானி மற்றும் ஜூஹி பரேக் மேத்தா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படம், மறக்க முடியாத சினிமா அனுபவமாக உருவாகியுள்ளது. படத்தின் விளம்பர பணிகள் தற்போது பரபரப்பாகத் துவங்கியுள்ளது. திரைக்குப் பின்னால் நடந்த காட்சிகள், போஸ்டர்ஸ், சிங்கிள்ஸ் என வரிசையாக வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. பார்வையாளர்கள் இதுவரையில் திரையில் பார்த்திராத ஒரு புதுமையான அனுபவமாக இப்படம் இருக்கும்.

“THEN CHENNAI” released on Tentkotta OTT

0

THEN CHENNAI is a gripping action thriller, family drama directed by Ranga. This December 2024 theatrical release which got good reviews is now streaming on TENTKOTTA from this weekend.
Ranga himself plays as the male protagonist and another new comer Riya play as the female lead. Nithin mehta , Elango Kumanan, Vatsan Natarajan, Suma plays some important roles in this gripping movie. Though the movie seems jumbled with unfamiliar faces, and open loops in the first half, the second half closes all the points and give a great feel good movie experience by the end.
Background score and the wonderful soothing song are the highlights of this fabulous craft.

Movie title : THEN CHENNAI

Cast & Crew:

Director & Lead Actor: Ranga (Debutant)
Lead Actress: Riya

Notable Cast:

Nithin Mehta – Ex-army officer turned actor
Elango Kumanan – Known for the stage play “Ponniyin Selvan”, Movies ‘Sivakumarin Sabatham’, ‘Joe’ , ‘Kadaisi Ulaga Por’
Supporting cast includes Vathsan Natarajan, Suma, Aaru Bala, Dhileepan, and Tharani

Music: Jen Martin (background score), Siva Pathmayan (Song Composer)
Featured Song: “Puthu Vaanam Puthu Bhoomi” composed by Siva Pathmayan, Lyrics by Ranga and Sung by Naresh Iyer
Cinematographer: SarathKumar
Editor: Elangghovan C M

Production Company: Ranga Film Company
Producer : Ranga
Background Music : Jen Martin
Song composed by : Siva Pathmayan
Lyrics : Ranga
Vocals: Naresh Iyer
Audiography: Tharanipathy.G
Sound Design: Prem
Audio Production: Soundbanks
Dop: Sarathkumar.M
Associate Cameraman : Arun, Ashwanth
Editor : Elangghovan.C.M
Costume Designer : Nivetha
Costumer : Sulthan
Dialogues & Writer : Ranga
Co-Director: Hareram.S
Stills : Balaji
DI: Celebration studios
Colorist: Chittacang
Vfx & Cg : Rajapandian
Associate Directors : Saravanan
Publicity Designs : Ghibson
Production Manager : Marimuthu.P
PRO: Hemananth

டென்ட்கொட்டா ஓ.டி.டி.யில் வெளியாகும் “தென் சென்னை”

புது முகங்கள் ரங்கா, ரியா நடிப்பில் புதுமையான ஆக்சன் திரில்லராக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் “தென் சென்னை”
அறிமுக இயக்குநர் ரங்கா இப்படத்தை தயாரித்து இயக்குவதுடன், கதையின் நாயகன், பாடல் ஆசிரியர் என பல முயர்ச்சிகளில் இறங்கியுள்ளார்.
இதில்முன்னாள் ரானுவ அதிகாரியாக இருந்து நடிகரான நிதின் மெஹ்தாவும், இளங்கோ குமனனும் பிறதான பாத்திரங்கள் ஏற்றுள்ளனர். மேலும் வத்சன் நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன், தாரனி மற்றும் பலர் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜென் மார்டின், இந்த படதிற்க்கு பின்னனி இசை அமைத்துள்ளார். குறைந்த அளவு திரைஅரங்குகளிள் வெளிவந்த இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
படம் பார்த்த அனைவரும் கதை, திரைக்கதை, அனைவரின் நடிப்பு மற்றும் புதிய படக்குழுவினரின் முயர்ச்சிகளுக்கு பெரும் பாராட்டைத் தந்தனர்.

இந்த நிலையில் இப்படம் டென்ட்கொட்டா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

கதாபாத்திரம்

ரங்கா – ஜேசன் (கதாநாயகன்)
ரியா – மேகா (கதாநாயகி)
இளங்கோ குமணன் – டோனி (கதாநாயகன் மாமா)
சுமா – மரியா (கதாநாயகன் தாய்)
தாரணி – தாரா (கதாநாயகன் அக்கா)
நிதின் மேஹ்தா – ருத்ரா (வில்லன் 1)
திலீபன் – சிவக்குமார் (இன்ஸ்பெக்டர்)
தன்ஷிவி, நித்யநாதன் – கிருஷ்ணா (குழந்தை)
வத்ஷன் எம் நட்ராஜன் – எஸ் கே (வில்லன் 2)

தொழில்நுட்ப வல்லுநர்கள் விபரம்

எழுத்து & இயக்கம் : ரங்கா
ஒளிப்பதிவாளர்: சரத்குமார் எம்
எடிட்டிங் தொகுப்பாளர்: இளங்கோவன் சி எம்
பின்னணி இசை : ஜென் மார்டின்
பாடல் இசை : சிவ பத்மயன்
பாடல் : ரங்கா
பாடியவர் : நரேஷ் ஐயர்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு : மாரிமுத்து
வண்ணம் – சிட்டகாங்
தயாரிப்பாளர்: ரங்கா ஃபிலிம் கம்பனி
மக்கள் தொடர்பு – ஹேமானந்த்

- Advertisement -

Recent Posts