- Advertisement -
Home Blog Page 261

L2 Empuraan grand teaser launch : Most anticipated Malayalam film of the year arrives soon

0

The most anticipated Malayalam movie of the year L2: Empuraan’s teaser launch took place on Sunday in Kochi. Mammootty, Mohanlal, Prithviraj, Murali Gopy, Manju Warrier, Tovino graced the occassion. The event also marked the debut of Lyca Productions in Malayalam Industry.

Manju Warrier who plays the character Priyadarshini Ramdas expressed her excitement for the film, “I do not even remember the number of films I have worked for Ashirvad Cinemas. Lucifer has one of my most memorable characters, Priyadarshini Ramdas. I hope people will love Empuraan just like they did for Lucifer.”

Tovino Thomas who shared the stage with Manju Warrier also shared his excitement ” During the narration of Lucifer Prithviraj had told me that my character would gain huge appluase from public and rightly so. As an artist, the character Jathin Ramdas gave me a huge visibility. I have huge hopes on Empuraan. In this film, I got a chance to share screen with Lalettan which did not happen in Lucifer which was also a great learning experience.”

The captain of the ship Prithviraj Sukumaran started off by thanking the legendary film makers who made it possible for bringing out the director inside. “Welcome to Malayalam Cinema, Lyca Productions. I hope Empuraan turns out to be a great entry point. I will have to talk about my brother, my producer Antony Perumbavoor. I thought there would be no one crazier than me about cinema but I was wrong. Antony backed the project from the start and stood with me throughout the project. “

Prithviraj spoke highly about Mohanlal “This whole thing would not have been possible if not for him. He stood with me more than as a star or as an actor. It might seem like a cliche statement but it’s not. There was an incident when I used to make him sit idle for one whole week due to the weather conditions. When I went to explain the situation, he said its completely okay and asked me to concentrate on film making.

The most awaited speech of Mohanlal concluded the event. “Thank you Lyca for joining hands with Aashirvad Cinemas.” Turning towards Prithviraj, Mohanlal said, “Prithviraj claimed that he was an accidental director but thats not the right word. You are the chosen one. I hope he becomes one of India’s best directors. Coming to Empuraan, we had to face a lot of obstacles. I had watched the film and Director Prithviraj has given his 100%”

Empuraan will arrive in theatres on March 27. The film promises to be a landmark for Malayalam Cinema.

சென்னை நந்தனம் ஒ ய்எம் சி ஏ மைதானத்தில் பிப்ரவரி 8 அன்று ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

திரையுலகில் 47 வருடங்களைக் கடந்து, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் பாடகி சித்ரா. “சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா” பாடல் பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்ற நிலையில், இவர் சின்னக்குயில் சித்ரா என்றே மக்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். இவர் முதன் முறையாகத் தனது ரசிகர்களைக் குஷிப்படுத்தும் வகையில், இந்த இன்னிசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த பத்திரிக்கை சந்திப்பு நிகழ்வினில்….

E Lounge Events சார்பில் வெங்கட் பேசியதாவது…

இந்த ஆண்டில் வரும் பிப்ரவரி 8ம் தேதி சென்னை YMCA நந்தனம் மைதானத்தில், இந்த லைவ் இன் கான்சர்ட் நடக்கவுள்ளது. இது இன்னிசை நிகழ்ச்சி அல்ல, நம் அனைவருக்கும் பிடித்த சித்ரா அம்மாவைக் கொண்டாடும் ஒரு விழா. 47 வருடங்களைக் கடந்து, உலகளவில் நம் அனைவரையும் அசத்தி வரும் அவரைக் கொண்டாடும் வகையில், இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளோம். எந்த ஒரு பாடலையும் உடனடியாக ஸ்வரம் எழுதிப் பாடும் திறமை கொண்ட கலைஞர் சித்ரா அம்மா. அவர் இந்த தமிழ் மண்ணில் தான் தொடர்ந்து பாடி வருகிறார். அதனால் இந்த விழாவைச் சென்னையில், இங்கு நடத்துவது தான் சிறப்பாக இருக்கும். அவர் இந்த விழாவிற்கு ஒப்புக்கொண்டது எங்களுக்குப் பெருமை. இந்த நிகழ்ச்சியை நடத்த உதவிய கனரா வங்கிக்கு நன்றி. இந்த செய்தியை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்குமாறு ஊடகங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

கனரா வங்கி சார்பில் ஐசக் ஜானி பேசியதாவது….

சித்ரா அம்மா பெயரைச் சொன்னால் தெரியாதவர்கள் யாருமே இல்லை, இது வெறும் இசை நிகழ்ச்சி அல்ல, சித்ரா அம்மாவைக் கொண்டாடும் ஒரு நிகழ்வு. இந்த நிகழ்வை எங்களது கனரா வங்கி ஸ்பான்சர் செய்வது எங்களுக்குப் பெருமை. இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி. கனரா வங்கி சார்பில், உலகமெங்கும் உள்ள ரசிகர்களை இந்நிகழ்ச்சிக்கு வரவேற்கிறேன்.

Noise & Grains சார்பில் மஹாவீர் பேசியதாவது….

எங்களது எல்லா நிகழ்ச்சிகளிலும், நீங்கள் எல்லோரும் எப்போதும் துணை நிற்கிறீர்கள் நன்றி. நானும் கார்த்தியும் எப்போதும் அவரை சித்ரா அம்மா என்றே அழைப்போம். அது அன்பால் நிகழ்ந்தது. சிங்கப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் எஸ் பி பி சார் இருந்த போது ஒரு நிகழ்வு நடந்தது, எப்போதும் ஒரு சிலர் தான் நம்மைக் கவனித்து, தட்டிக்கொடுத்து, நீ சரியாகச் செய்து விடுவாய் என ஊக்கம் தருவார்கள், அதைப் புன்னகையுடன் எஸ் பி பி சார் செய்வார். அதன்பிறகு அதைச் செய்வது சித்ரா அம்மா தான். எப்போதும் பாஸிடிவிடி தருவார். நம் தமிழக மக்கள் போல இசை நிகழ்வை ரசிப்பது யாருமில்லை. எல்லாவிதமான இசையையும் ரசிப்பார்கள், அப்பா அம்மா எமோஷனல் கனக்ட்டும் இந்த ஊரில் இருக்கிறது. என் அப்பா அம்மவை அனுப்பி வைக்க வேண்டும் எனப் பலர் இந்நிகழ்ச்சிக்கு டிக்கெட் கேட்டார்கள், அது எங்களுக்குக் கிடைத்த ஆசீர்வாதம் தான். எங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சித்ரா அம்மாவிற்கு நன்றி. E Lounge Events மற்றும் கனரா வங்கிக்கும் நன்றி. அனைவரும் காலத்தைத் திருப்பித் தரும், இந்நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டாடுங்கள் நன்றி.

பாடகி சின்னக்குயில் சித்ரா பேசியதாவது…

அனைவரும் வந்தது மிகுந்த மகிழ்ச்சி. நான் இதை எதிர்பார்க்கவில்லை, இதுவரை நான் பல இசை நிகழ்ச்சிக்குச் சென்று பாடியுள்ளேன், ஆனால் இந்த நிகழ்ச்சியை என்னைக் கொண்டாடும் நிகழ்வாக ஒருங்கிணைத்துள்ளார்கள். 3 மணி நேரம், மது பாலகிருஷ்ணன், சத்ய பிரகாஷ், திஷா பிரகாஷ், ருபா ரேவதி என நான்கு பாடகர்கள் என்னுடன் இணைந்து பாடவுள்ளனர். பாப்புலரான பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடவுள்ளோம். எனக்கு இத்தனை வருடங்கள் தந்து வரும் ஆதரவிற்கு நன்றி. இந்த நிகழ்ச்சிக்கும் ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்யுங்கள் நன்றி.

உலகளவில் பல நிகழ்ச்சிகளை சிறப்பாக ஒருங்கிணைத்து வழங்குவதில் புகழ்பெற்ற, ஐக்கிய அரபு எமிரேட், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், கத்தார், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் மற்றும் செஷில்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாராட்டு பெற்ற நிகழ்ச்சிகள் பலவற்றை நடத்திய E Lounge Events நிறுவனமும், திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள Noise & Grains நிறுவனமும் இணைந்து, கனரா வங்கி ஆதரவுடன் இந்த இசைக்கச்சேரி நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.

‘டைம்லெஸ் மெலோடிஸ் ஆஃப் எ லைஃப்டைம்: கே.எஸ். சித்ரா லைவ் இன் கான்செர்ட்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி சென்னை நந்தனத்தில் உள்ள‌ ஒ ய் எம் சி ஏ மைதானத்தில் பிப்ரவரி 8 சனிக்கிழமை மாலை ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது, இதற்கான நுழைவுச் சீட்டுகள் இன்ஸைடர்.இன் மற்றும் புக் மை ஷோ இணையதளங்கள் மற்றும் செயலிகளில் கிடைக்கும்.

பெரு வெற்றி பெற்ற “தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள், ZEE5 ல் ஸ்ட்ரீமாகவுள்ளது !!

0

~ ஜனவரி 24 அன்று ப்ரீமியரான “தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படத்தினை, தமிழ் மற்றும் தெலுங்கில் புதிய பார்வையாளர்களுக்கு வழங்கும் விதமாகப் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமாகவுள்ளது ~

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, “சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படத்தினை, பார்வையாளர்கள் எளிதாக ரசிக்கும் வகையில், அவர்களின் உள்ளூர் மொழியில் கொண்டு வருகிறது. இயக்குநர் தீரஜ் சர்னா இயக்கத்தில், விக்ராந்த் மாஸ்ஸி, ராஷி கண்ணா மற்றும் ரித்தி டோக்ரா ஆகியோரின் நடிப்பில், 24 ஜனவரி 2025 அன்று திரையிடப்பட்ட இந்தத் திரைப்படம், இந்தியாவின் மிகவும் வேதனையான மற்றும் சர்ச்சைக்குரிய சோகங்களில் ஒன்றான 2002 கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை, பின் களமாகக் கொண்ட அரசியல் டிராமா திரைப்படமாகும். நீதியின் உண்மை முகத்தை, ஊடகங்களின் பார்வையை, உண்மையின் விலையை அழுத்தமாகப் பேசும், இந்தத் திரைப்படம் நாடு முழுதும் சிறப்பான பாராட்டுக்களைப் பெற்றது. குடியரசு தினத்தன்று “தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படத்தை ZEE5 பார்வையாளர்களுக்குத் தெலுங்கு மற்றும் தமிழில் வழங்குகிறது.

59 அப்பாவி பயணிகளின் உயிரைக் கொன்ற 2002 கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் பின்னணியில் அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிக்கொணரும் ஆர்வமுள்ள பத்திரிகையாளர் சமர் குமாரை (விக்ராந்த் மாஸ்ஸி) சபர்மதி ரிப்போர்ட்ஸ் படம் பின்தொடர்கிறது. சமர் ஆழமாக ஆராயும்போது, ​​உண்மையை மறைக்க ஊடக விவரிப்புகளைக் கையாளும், சக்திவாய்ந்த அரசியல் பிரமுகர்களை உள்ளடக்கிய ஒரு ஆபத்தான சதியை அவர் கண்டுபிடிக்கிறார். அவரது கண்டுபிடிப்புகள் அவரது ஆசிரியரான மணிகா ராஜ்புரோஹித் (ரித்தி டோக்ரா) மூலம் முடக்கப்படும்போது, ​​சமரின் வாழ்க்கை அழிக்கப்பட்டு, அவர் தெளிவற்ற ஒரு நிலைக்குத் தள்ளப்படுகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, நிருபர் அம்ரிதா கில் (ராஷி கண்ணா) சமரின் மறைக்கப்பட்ட அறிக்கையின் மீது ஈர்க்கப்பட்டு, உண்மையான கதையை அம்பலப்படுத்த அவருடன் இணைந்து கொள்கிறார். ஒன்றாக, ஊழல், வஞ்சகம் மற்றும் துரோகம் ஆகியவற்றின் வலையை அவிழ்க்க அவர்கள் பணியாற்றும்போது பெருகிவரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறார்கள், நீதியை வெளிச்சத்திற்குக் கொண்டுவர எல்லாவற்றையும் பணயம் வைக்கிறார்கள். இந்த அதிரடியான உண்மைகளை விவரிக்கிறது “தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படம்.

விக்ராந்த் மாஸ்ஸி கூறுகையில்..,
“தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” மூலம், தற்போதைய நிலைக்கு எதிரான, சங்கடமான உண்மைகளை எதிர்கொள்ளத் தூண்டும் ஒரு கதையை நாங்கள் சொல்கிறோம். இது பத்திரிகையின் சக்தியையும், எவ்வளவு இழந்தாலும் நீதிக்காக நிற்பதன் முக்கியத்துவத்தையும் நினைவூட்டுகிறது. இந்த படம் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் ஆழமாக எதிரொலித்தது, ஊடக மாஃபியா மற்றும் உண்மையைப் பின்தொடர்வது பற்றிய முக்கியமான உரையாடல்களைத் தூண்டியது. இந்தக் கதை தமிழ் மற்றும் தெலுங்கு பார்வையாளர்களை அவர்களின் உள்ளூர் மொழியில் சென்றடைவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் இது நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை ஊக்குவிக்கும் மற்றும் ஈர்க்கும் என நம்புகிறேன்.”

நடிகை ராஷி கண்ணா கூறுகையில்..,
“அம்ரிதா கில் ஒரு உறுதியான மற்றும் அச்சமற்ற பத்திரிகையாளர், தனிப்பட்ட இழப்பைப் பொருட்படுத்தாமல் உண்மையை வெளிக்கொணர வேண்டும் என நினைப்பவர். இந்த பாத்திரத்தில் நடித்ததன் மூலம், அடக்குமுறை நிறைந்த உலகில் எது சரியானது என்பதற்கு ஆதரவாக நிற்க எடுக்கும் தைரியத்தை ஆராய என்னை அனுமதித்தது. நீதியை நம்பும் எவருக்கும் இது மிக முக்கியமான பாத்திரம். இப்படம் இப்போது இந்தியில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கிலும் ரசிகர்களுக்குக் கிடைக்கும் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

ரிதி டோக்ரா கூறுகையில்..,
“தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பார்வையாளர்களுக்கு அவர்கள் விரும்பும் சொந்த மொழியில் கிடைக்கும். நான் குறிப்பாக ஆர்வமாக இருந்தது உண்மையைச் சுற்றி நடக்கும் நாடகம் மீதானது தான். உண்மை எப்போதும் நிலையானது வலுவானது. பரப்பப்படும் செய்திகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதையும், எல்லாவற்றிற்கும் பின்னால் ஒரு பெரிய நிறுவனம் எவ்வாறு உள்ளது என்பதையும் பார்வையாளர்கள் அறிந்து கொள்வதும் முக்கியம். எப்போதும் ஒரு செய்தி மக்களுக்குத் தீனியாக்கப்படுகிறது.

இப்படத்தில், மாணிக்கா ராஜ்புரோஹித் தீவிரமான ஒரு வேலையைச் செய்கிறார், பல தடைகளைத் தாண்டி, மிகப்பெரிய சதி வலையின் உண்மைகளை, வெளியே கொண்டுவரப் போராடுகிறார். நடிகர்களாக இல்லாமல், உண்மையான மனிதர்களைத் திரையில் கொண்டு வருவது, எனக்கு மிகச் சுவாரஸ்யமாக இருந்தது. உற்சாகமாகவும் இருந்தது” ஒரு நடிகராக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

உண்மை மற்றும் நீதியின் பின்னணியிலான அழுத்தமான இந்தக் கதையைத் தவறவிடாதீர்கள் – ZEE5 இல் தமிழ் மற்றும் தெலுங்கில் திரையிடப்படும் “தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படத்தை ட்யூன் செய்யுங்கள்!

ZHEN STUDIOS நிறுவனத்தின் முதல் படைப்பாக உருவாகியுள்ள “தருணம்” படம், ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகிறது !!

0

ZHEN STUDIOS சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள “தருணம்” திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது.

தேஜாவு திரில்லர் படம் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் ஒரு அருமையான காதல் கதை மூலம் மகிழ்விக்கவுள்ளார்.

வாழ்வே பல தருணங்களால் ஆனது ஆனால், ஒரு தருணம் மொத்த வாழ்க்கையையும் மாற்றும் அப்படியான ஒரு தருணத்தை, காதல் கலந்து சொல்லும் அருமையான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

தமிழ்த்திரையுலகில் கால்பதித்துள்ள ZHEN STUDIOS நிறுவனம் சார்பில் புகழ் மற்றும் ஈடன், பெரும் பொருட்செலவில் இப்படத்தை உயர்தரமான படைப்பாகத் தயாரித்துள்ளனர்.

ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, உலகமெங்கும் எண்ணற்ற திரையரங்குகளில் வெளியாகிறது.

தொழில் நுட்ப கலைஞர்கள்

எழுத்து, இயக்கம் – அரவிந்த் ஶ்ரீநிவாசன்
ஒளிப்பதிவாளர் – ராஜா பட்டாசார்ஜி
இசை – தர்புகா சிவா
பின்னணி இசை – அஸ்வின் ஹேமந்த்
படத்தொகுப்பு – அருள் E சித்தார்த்
கலை இயக்குனர் – வர்ணாலயா ஜெகதீசன்
சண்டைப்பயிற்சி – Stunner சாம்
தயாரிப்பாளர் – புகழ் A, ஈடன் (ZHEN STUDIOS )
மக்கள் தொடர்பு – சதீஸ், சிவா (AIM)

Shakthi Thirumagan – A Landmark Film in Vijay Antony’s Career

0

The much-anticipated film Shakthi Thirumagan, starring Vijay Antony, is set to be a milestone in his illustrious career. This marks his 25th film, promising to be a mass action family entertainer that will captivate audiences with its power-packed performances and gripping storyline.

A Blend of Mass Appeal & Strong Storytelling

Directed by Arun Prabu, known for his critically acclaimed films Aruvi and Vaazhl, Shakthi Thirumagan retains his signature storytelling while delivering a high-octane action spectacle. The film is produced by Vijay Antony Films Corporation, Meera Vijay Antony presenting the project.

The film’s ensemble cast includes seasoned actors Vaagai Chandrasekar, Sunil Kriplani, Cell Murugan, Trupthi Ravindra, and child actor Master Keshav, adding depth and versatility to the narrative.

Technical Brilliance Behind the Film

The film boasts a stellar technical crew:

Writer-Director: Arun Prabu

Cinematography: Shelley Calist

Music: Vijay Antony

Editing: Raymond Derrick Crasta

Action Choreography: Rajashekar

With its powerful mass appeal, intense family drama, and a blend of action and emotions, Shakthi Thirumagan is set to be a defining moment in Vijay Antony’s career. The film is currently in post-production, and the team is working diligently to deliver a grand cinematic experience to audiences soon.

Stay tuned for further updates on Shakthi Thirumagan!

விஜய் ஆண்டனியின் 25வது படம் ‘ சக்தி திருமகன் ‘!

விஜய் ஆண்டனி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியாக இருக்கிறது ‘ சக்தி திருமகன் ‘ திரைப்படம். அவரது கேரியரில் இந்தப் படம் நிச்சயம் மைல் கல்லாக அமைய உள்ளது. அவரது 25வது திரைப்படமாக வெளியாக இருக்கும் இப்படம் மாஸ் ஆக்‌ஷன் ஃபேமிலி என்டர்டெய்னராக இருக்கும் என்று படக்குழு உறுதியளித்துள்ளனர்.

எதார்த்தமாகவும், வலிமையாகவும் கதை சொல்லும் திறமை கொண்ட இயக்குநர் அருண் பிரபு இப்படத்தை இயக்கவிருக்கிறார். இவரின் முந்தைய படங்களான ‘அருவி‘, ‘வாழ்‘ உள்ளிட்ட படங்கள் இப்போதும் தமிழ் சினிமாவின் தனித்துவமான கதைகளாகக் கொண்டாப்பட்டு வருகின்றன. அதன் வரிசையில் இப்படமும் ஆழமான கதையுடன் கூடிய ஆக்‌ஷன் மாஸ் படமாக இடம் பெறும். படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிக்க, மீரா விஜய் ஆண்டனி வழங்குகிறார்.

விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் வாகை சந்திரசேகர், சுனில் கிரிப்லானி, செல் முருகன், த்ருப்தி ரவீந்திரன் மற்றும் குழந்தை நடிகர் மாஸ்டர் கேசவ் ஆகிய திறமையான நடிகர்கள் குழு உடன் நடிக்கவிருக்கிறார்கள்.

படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள்

எழுத்தாளர்-இயக்குனர்: அருண் பிரபு

ஒளிப்பதிவு: ஷெல்லி காலிஸ்ட்

இசை: விஜய் ஆண்டனி

எடிட்டிங்: ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா

ஆக்ஷன் நடனம்: ராஜசேகர்

குடும்பம், ஆக்‌ஷன், மாஸ் மற்றும் உணர்வுகள் சூழந்த கதையாக நிச்சயம் ‘சக்தி திருமகன்‘ பார்வையாளர்களுக்கு நல்லதொரு திரை அனுபவத்தைக் கொடுக்கும். விஜய் ஆண்டனியின் 25வது திரைப்படமாக அவருடைய கேரியரிலும் முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமையும். தற்சமயம் படம் போஸ்ட் புரடெக்‌ஷனில் உள்ளது. படம் குறித்து கூடுதல் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

Acclaimed cinematographer Ravi Varman has been honoured with the membership of the world-renowned American Society of Cinematographers (ASC).

0

It is a tough task for non-American cinematographers to receive this recognition. It is noteworthy that cinematographers who have won multiple Oscar awards watch a cinematographer’s body of work, assess the quality of the cinematography, discuss and only then collectively grant this recognition.

Ravi Varman, who has been honoured with many accolades including a National Award, has been greeted by the film fraternity and prominent personalities following his acceptance as a highly respected ASC member.

Accepting this recognition , Ravi Varman said, “I would like to convey my heartfelt gratitude to the board of the American Society of Cinematographers (ASC) for inducting me as a member. Cinematographers from all over the world dream of joining this association. It gives me great joy and pride to be included in a platform where the world’s leading cinematographers who have won awards including Oscars are members. I wholeheartedly thank those who made me realise this dream.”

In the last 25 years, Ravi Varman has shot many films in Tamil, Malayalam, Telugu, Kannada, Hindi and English. He has collaborated with many great directors of India.

Some of the noteworthy films that Ravi Varman has done cinematography are Ponniyin Selvan’, ‘Dasavatharam’, ‘Vettaiyaadu Vaidyaadu’, ‘Barbi’, ‘Sanju’, etc.

Ravi Varman became the second Indian to be inducted into the American Society of Cinematographers, after cinematographer Santosh Sivan.

சர்வதேச புகழ் பெற்ற, உலகின் முன்னணி ஒளிப்பதிவாளர் அமைப்பான அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் (ASC) உறுப்பினராக பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அமெரிக்கர் அல்லாத, வெளிநாட்டில் வசிக்கும் ஒளிப்பதிவாளர்கள் இந்த அங்கீகாரத்தைப் பெறுவது என்பது மிக மிகக் கடினமான ஒன்றாகும். பல ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒளிப்பதிவாளர்கள் ஒரு ஒளிப்பதிவாளரின் படங்களை பார்த்து அந்த ஒளிப்பதிவின் தரத்தை சோதித்து அதைப்பற்றி ஆலோசித்து அதற்குப் பிறகு தான் கூட்டாக இந்த அங்கீகாரத்தை வழங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு உயரிய பெருமைகளை ஏற்கனவே பெற்றுள்ள ரவிவர்மன், பெரிதும் மதிக்கப்படும் ஏ எஸ் சி உறுப்பினராக ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து திரையுலகினர் மற்றும் பல்வேறு தரப்பினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ரவிவர்மன், “ஏ எஸ் சி என்று அழைக்கப்படும் அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் உறுப்பினராக என்னை இணைத்துக் கொண்டதற்காக அதன் தலைமை மற்றும் குழுவினருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் எங்கும் இருக்கின்ற ஒளிப்பதிவாளர்கள் இந்த சங்கத்தில் இணைவதைக் கனவாக கொண்டிருப்பார்கள். ஆஸ்கர் உள்ளிட்ட விருதுகளை வென்ற உலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்கள் உறுப்பினர்களாக இயங்கும் தளத்தில் நானும் இடம் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது,” என்றார்.

கடந்த 25 ஆண்டுகளில், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கில படங்களில் சிறந்த ஒளிப்பதிவை ரவிவர்மன் வழங்கி இருக்கிறார். இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர்கள் அனைவரோடும் அவர் பணி புரிந்திருக்கிறார். ‘பொன்னியின் செல்வன்’, ‘தசாவதாரம்’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘பர்பி’, ‘சஞ்சு’, போன்ற பல படங்களுக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் உறுப்பினர் ஆகும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார் ரவிவர்மன். இதற்கு முன்னர் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மட்டுமே இந்தச் சங்கத்தின் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

Viduthalai Chiruthaigal Katchi President Thol. Thirumavalavan appreciates the team of ‘Dr. Ambedkar’ film

0

V. Palanivel, who has produced successful films including ‘Vathiyaar’ starring Arjun, ‘Oram Po’ starring Arya, ‘6.2’ starring Sathyaraj, and ‘Nee Venumda Chellam’ under the banner of Vaidhyanathan Film Garden, is currently producing ‘Dr. Ambedkar’ on a grand budget.

J.M. Bashir, who played the role of Pasumpon Muthuramalingath Thevar in the upcoming film ‘Desiya Thalaivar’, will play the role of Ambedkar. The film will be directed by V. Senthilkumar and will have music composed by Thenisai Thendral Deva.

The film will be shot in various significant locations related to Dr. Ambedkar’s life, including his birthplace Mhow (Madhya Pradesh), Pune where he studied, Mumbai where he lived, Delhi where he served as a minister, London where he earned his Barrister degree, and even in the United States.

It is well known that Dr. Ambedkar was the chief architect of the Indian Constitution. To present his greatness to the global audience, extensive research has been conducted using historical books and insights from his followers. This has been the foundation for crafting the film.

In this regard, the ‘Dr. Ambedkar’ film crew met Viduthalai Chiruthaigal Katchi (VCK) leader Thol. Thirumavalavan. During the meeting, he extended his heartfelt wishes, hoping that the film achieves massive success and spreads Dr. Ambedkar’s ideology across the world.

Following his advice, ‘Dr. Ambedkar’ is being developed as a Pan-World film, portraying the life of this global leader in multiple languages. The shooting is set to commence soon.

வெற்றிமாறனுக்கு இயக்குனர் பேரரசு பதில்!

0

மதிப்பிற்குரிய வெற்றிமாறன் அவர்களே!
சீமான் அவர்கள்
பெரியாருக்கு எதிராக பேசவில்லை
பெரியார் பேசியதை சொல்கிறார்!
அவரைப் பற்றி அவதூறு பரப்பவில்லை,
அவரைப் பற்றிய உண்மையை சொல்கிறார்.
சீமான் அவர்கள் சொல்வது பொய்யென்றால்
அவர் சொல்வது பொய்யென்று சொல்லுங்கள்!
பொய்யென்று நிரூபியுங்கள்!
தமிழ் மொழியைப் பற்றி பெரியார் இப்படி எல்லாம் இழிவாக பேசவில்லை என்று சொல்லுங்கள்.
பெண்களின் உறவுகள் பற்றி இப்படி எல்லாம் பெரியார் அசிங்கமாக பேசவில்லை என்று சொல்லுங்கள்.
அது இருக்கட்டும்
சீமான் அவர்கள் பெரியாரைப் பற்றி எத்தனை விஷயங்களை பொதுவெளியில் வைக்கிறார்.
ஏன் வீரமணி அவர்களும் சுப.வீரபாண்டியன் அவர்களும் பதில் கூறாமல் பதுங்கி இருக்கிறார்.
பதில் கூற கடமைப்பட்டிருக்கும் திரு வீரமணி அவர்களே அமைதியாக இருக்கும் பொழுது நாம் ஏன் இதை பற்றி பேச வேண்டும்?
சீமான் பேசுவது அரசியல் ஆபத்து அல்ல,
பெரியாரை வைத்து பொழப்பு நடத்தும் சில அமைப்புகளுக்கும்,
சில கட்சிகளுக்கும்தான் ஆபத்து.

–இயக்குனர் பேரரசு

Sakshi Agarwal shines as Shaheena in Her Malayalam Debut Besty with Ashkar Soudan

0

Actor Sakshi Agarwal makes a striking impression in her Malayalam debut Besty, produced by Benzy Productions’ Abdul Nasser and directed by Shanu Shamanth. Portraying Shaheena, a bold and fearless Malayali Muslim woman, Sakshi embraces a challenging role that highlights her talent and versatility. The film promises an engaging mix of action, heartfelt storytelling, and vibrant dance sequences.

In yet another action-packed role, Sakshi shines with her dedication and commitment. The film features thrilling stunts choreographed by Phoenix Prabhu Master, including a gripping bike chase on a Bullet, where Shaheena outmaneuvers her pursuers in a heart-pounding sequence. The climactic fight scenes deliver intense and memorable moments, adding to the excitement.

Sakshi also showcases her graceful dancing in a lively wedding song choreographed by Rakesh Maater. The colorful kalyanam dance doubles as a high-energy party number, adding vibrancy to the film. Reflecting on the experience, Sakshi shared, “Besty challenged me to step outside my comfort zone—whether it was performing stunts, riding a Bullet, or delivering high-energy dance moves. Shaheena embodies strength, resilience, and grace, making her a truly special character. I had a great time sharing screen space with Mammooty Sir’s nephew Ashkar Soudan as well. He’s such a talented actor and supportive co-star.”

With her stunning performance, dynamic action sequences, and captivating dance moves, Sakshi Agarwal’s portrayal of Shaheena has left a lasting impact on audience. The film showcases her passion, dedication, and talent like never before. Besty is now running in cinemas.

பெரு வெற்றி பெற்ற “தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள், ZEE5 ல் ஸ்ட்ரீமாகவுள்ளது !!

0

~ ஜனவரி 24 அன்று ப்ரீமியரான “தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படத்தினை, தமிழ் மற்றும் தெலுங்கில் புதிய பார்வையாளர்களுக்கு வழங்கும் விதமாகப் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமாகவுள்ளது ~

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, “சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படத்தினை, பார்வையாளர்கள் எளிதாக ரசிக்கும் வகையில், அவர்களின் உள்ளூர் மொழியில் கொண்டு வருகிறது. இயக்குநர் தீரஜ் சர்னா இயக்கத்தில், விக்ராந்த் மாஸ்ஸி, ராஷி கண்ணா மற்றும் ரித்தி டோக்ரா ஆகியோரின் நடிப்பில், 24 ஜனவரி 2025 அன்று திரையிடப்பட்ட இந்தத் திரைப்படம், இந்தியாவின் மிகவும் வேதனையான மற்றும் சர்ச்சைக்குரிய சோகங்களில் ஒன்றான 2002 கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை, பின் களமாகக் கொண்ட அரசியல் டிராமா திரைப்படமாகும். நீதியின் உண்மை முகத்தை, ஊடகங்களின் பார்வையை, உண்மையின் விலையை அழுத்தமாகப் பேசும், இந்தத் திரைப்படம் நாடு முழுதும் சிறப்பான பாராட்டுக்களைப் பெற்றது. குடியரசு தினத்தன்று “தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படத்தை ZEE5 பார்வையாளர்களுக்குத் தெலுங்கு மற்றும் தமிழில் வழங்குகிறது.

59 அப்பாவி பயணிகளின் உயிரைக் கொன்ற 2002 கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் பின்னணியில் அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிக்கொணரும் ஆர்வமுள்ள பத்திரிகையாளர் சமர் குமாரை (விக்ராந்த் மாஸ்ஸி) சபர்மதி ரிப்போர்ட்ஸ் படம் பின்தொடர்கிறது. சமர் ஆழமாக ஆராயும்போது, ​​உண்மையை மறைக்க ஊடக விவரிப்புகளைக் கையாளும், சக்திவாய்ந்த அரசியல் பிரமுகர்களை உள்ளடக்கிய ஒரு ஆபத்தான சதியை அவர் கண்டுபிடிக்கிறார். அவரது கண்டுபிடிப்புகள் அவரது ஆசிரியரான மணிகா ராஜ்புரோஹித் (ரித்தி டோக்ரா) மூலம் முடக்கப்படும்போது, ​​சமரின் வாழ்க்கை அழிக்கப்பட்டு, அவர் தெளிவற்ற ஒரு நிலைக்குத் தள்ளப்படுகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, நிருபர் அம்ரிதா கில் (ராஷி கண்ணா) சமரின் மறைக்கப்பட்ட அறிக்கையின் மீது ஈர்க்கப்பட்டு, உண்மையான கதையை அம்பலப்படுத்த அவருடன் இணைந்து கொள்கிறார். ஒன்றாக, ஊழல், வஞ்சகம் மற்றும் துரோகம் ஆகியவற்றின் வலையை அவிழ்க்க அவர்கள் பணியாற்றும்போது பெருகிவரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறார்கள், நீதியை வெளிச்சத்திற்குக் கொண்டுவர எல்லாவற்றையும் பணயம் வைக்கிறார்கள். இந்த அதிரடியான உண்மைகளை விவரிக்கிறது “தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படம்.

விக்ராந்த் மாஸ்ஸி கூறுகையில்..,
“தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” மூலம், தற்போதைய நிலைக்கு எதிரான, சங்கடமான உண்மைகளை எதிர்கொள்ளத் தூண்டும் ஒரு கதையை நாங்கள் சொல்கிறோம். இது பத்திரிகையின் சக்தியையும், எவ்வளவு இழந்தாலும் நீதிக்காக நிற்பதன் முக்கியத்துவத்தையும் நினைவூட்டுகிறது. இந்த படம் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் ஆழமாக எதிரொலித்தது, ஊடக மாஃபியா மற்றும் உண்மையைப் பின்தொடர்வது பற்றிய முக்கியமான உரையாடல்களைத் தூண்டியது. இந்தக் கதை தமிழ் மற்றும் தெலுங்கு பார்வையாளர்களை அவர்களின் உள்ளூர் மொழியில் சென்றடைவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் இது நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை ஊக்குவிக்கும் மற்றும் ஈர்க்கும் என நம்புகிறேன்.”

நடிகை ராஷி கண்ணா கூறுகையில்..,
“அம்ரிதா கில் ஒரு உறுதியான மற்றும் அச்சமற்ற பத்திரிகையாளர், தனிப்பட்ட இழப்பைப் பொருட்படுத்தாமல் உண்மையை வெளிக்கொணர வேண்டும் என நினைப்பவர். இந்த பாத்திரத்தில் நடித்ததன் மூலம், அடக்குமுறை நிறைந்த உலகில் எது சரியானது என்பதற்கு ஆதரவாக நிற்க எடுக்கும் தைரியத்தை ஆராய என்னை அனுமதித்தது. நீதியை நம்பும் எவருக்கும் இது மிக முக்கியமான பாத்திரம். இப்படம் இப்போது இந்தியில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கிலும் ரசிகர்களுக்குக் கிடைக்கும் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

ரிதி டோக்ரா கூறுகையில்..,
“தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பார்வையாளர்களுக்கு அவர்கள் விரும்பும் சொந்த மொழியில் கிடைக்கும். நான் குறிப்பாக ஆர்வமாக இருந்தது உண்மையைச் சுற்றி நடக்கும் நாடகம் மீதானது தான். உண்மை எப்போதும் நிலையானது வலுவானது. பரப்பப்படும் செய்திகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதையும், எல்லாவற்றிற்கும் பின்னால் ஒரு பெரிய நிறுவனம் எவ்வாறு உள்ளது என்பதையும் பார்வையாளர்கள் அறிந்து கொள்வதும் முக்கியம். எப்போதும் ஒரு செய்தி மக்களுக்குத் தீனியாக்கப்படுகிறது.

இப்படத்தில், மாணிக்கா ராஜ்புரோஹித் தீவிரமான ஒரு வேலையைச் செய்கிறார், பல தடைகளைத் தாண்டி, மிகப்பெரிய சதி வலையின் உண்மைகளை, வெளியே கொண்டுவரப் போராடுகிறார். நடிகர்களாக இல்லாமல், உண்மையான மனிதர்களைத் திரையில் கொண்டு வருவது, எனக்கு மிகச் சுவாரஸ்யமாக இருந்தது. உற்சாகமாகவும் இருந்தது” ஒரு நடிகராக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

உண்மை மற்றும் நீதியின் பின்னணியிலான அழுத்தமான இந்தக் கதையைத் தவறவிடாதீர்கள் – ZEE5 இல் தமிழ் மற்றும் தெலுங்கில் திரையிடப்படும் “தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படத்தை ட்யூன் செய்யுங்கள்!

மாதவன் நடித்த நையாண்டி டிராமா ‘ஹிசாப் பராபர்’!

0

நட்சத்திர நடிகர் மாதவன் நடிப்பில், ZEE5 ஒரிஜினல் படமான ‘ஹிசாப் பராபர்’ இப்போது இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பாகிறது!

முன்னணி நட்சத்திர நடிகர் மாதவன் நடிப்பில், கடந்த ஆண்டின் “சைத்தான்” பட வெற்றிக்குப் பிறகு, அடுத்த அதிரடி திரைப்படமான ‘ஹிசாப் பராபர்’ மூலம் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார். இப்படம் இப்போது ZEE5 இல் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம், மிகப்பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. ஹிசாப் பராபரில், ஊழலுக்கு எதிராகப் போராடும் ஒரு சாதாரண மனிதனாக, மாதவன் நடித்துள்ளார். அஷ்வினி திர் இயக்கியுள்ள இப்படத்தை, ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் எஸ்பி சினிகார்ப் நிறுவனங்கள் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நீல் நிதின் முகேஷ் மற்றும் கிர்த்தி குல்ஹாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நையாண்டி பாணியில் சமூக அக்கறை மிக்க படைப்பாக, ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படமாக இப்படம் உருவாகியுள்ளது.

ஒரு சாதாரண ரயில்வே டிக்கெட் பரிசோதகரான ராதே மோகன் ஷர்மா (ஆர். மாதவன்), ஒரு பெரிய வங்கி மோசடியின் பின்னணியில், எதிர்பாராதவிதமாக ஊழலின் கொடிய வலையில் சுழலும் நிதி முரண்பாட்டைக் கண்டுபிடிக்கிறார். அதை விசாரிக்க ஆரம்பிக்கும் போது, ​​இரக்கமற்ற வங்கியாளர் மிக்கி மேத்தா (நீல் நிதின் முகேஷ்) தலைமையிலான அதிகார சக்திகளுக்கு எதிராக மாட்டிக்கொள்கிறார். அவரது நேர்மை மற்றும் அவரைச் சுற்றியுள்ள உலகின் அதிர்ச்சிகரமான உண்மைகளுக்கு இடையில் மாட்டிக்கொள்ளும் ராதே, என்ன முடிவெடுக்கிறார். என்பதை இப்படம் சொல்கிறது. இப்படம் இப்போது ZEE5 இல் பிரத்தியேகமாக ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

நடிகர் R. மாதவன் கூறுகையில்..,
“ZEE5 உடனான எனது முதல் முயற்சியான ஹிசாப் பராபரின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்!. ராதே மோகன் ஷர்மாவாக நடித்தது மிகச் சவாலான பணியாக இருந்தது. அவர் ஒரு அசாதாரண சூழ்நிலையில் தள்ளப்பட்ட மிகச் சாதாரண மனிதர், அவரது பயணம் அசாத்தியமானது. ஹிசாப் பராபர் ஒரு ரோலர் கோஸ்டர் பயணம், ஒரு சாதாரண மனிதனும், முறையான ஊழலுக்கு எதிரான அவனது போராட்டமும், ராதேவின் விடாமுயற்சியும், பின்னடைவும் பலரை ஊக்குவிக்கும் என்பதால், இந்தப்படம் சிறியவர் முதல் பெரியவர் வரை, அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும். மிக உண்மையான ஒரு எழுச்சி மிக்க இந்தக்கதையை, மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும்.

நீல் நிதின் முகேஷ் கூறுகையில்…,
“ஹிசாப் பராபரின் ஒரு அங்கமாக இருப்பதும், மிக்கி மேத்தாவாக ஒரு இரக்கமற்ற வங்கியாளராக நடிப்பதும் சவாலாகவும். நம்பமுடியாத அளவிற்கு நிறைவான பயணமாக இருந்தது. இருண்மை கொண்ட பாத்திரங்கள் மீது எனக்கு எப்போதும் ஈர்ப்பு உண்டு. மிக்கி பாத்திரம் தனித்துவமானது. மேலும், ஆர். மாதவனுடன் இணைந்து பணியாற்றியது ஒரு முழுமையான மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அவர் ஒரு அற்புதமான மனிதர் மட்டுமல்ல, ஒரு அற்புதமான சக நடிகரும் கூட, எங்களின் அட்டகாசமான கெமிஸ்ட்ரியை படத்தில் பார்த்து மகிழுங்கள். ஹிசாப் பராபர் படத்தை ZEE5 இல் பார்த்து ரசியுங்கள்”.

கீர்த்தி குல்ஹாரி மேலும் கூறுகையில்..,
“ஒரு நடிகராக எனக்குச் சவால் விடும் மாறுபட்ட வேடங்களில் நடிப்பதை நான் எப்போதும் விரும்புவேன், ஹிசாப் பராபரும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு அசத்தலான கதாபாத்திரம் மட்டுமின்றி, எனது சக நடிகரான ஆர் மாதவனுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். மற்றும் இயக்குநர் அஷ்வினி திர், செட்டில் உள்ள சூழ்நிலை மிகவும் அழகாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்குமாறு பார்த்துக் கொண்டார். அனைத்து இந்தியர்களையும் மகிழ்விக்கும் பொழுதுபோக்கு திரைப்படமாக மட்டுமில்லாமல், சிந்தனையைத் தூண்டும் படமாகவும் இப்படம் இருக்கும். குடியரசு தின வார இறுதிக்கு இது சரியான படம், எனவே ரசிகர்கள் அனைவரும் இதை ZEE5 இல் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ZEE5 இல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும் ஹிசாப் பராபரை இப்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் கண்டுகளியுங்கள் !!

ZEE5 பற்றி
ZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு பன்மொழியில் கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தில் இருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள் கொண்ட ஒரு பெரும் திரை நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது. பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு 12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5 வழங்குகிறது.

மேலும் சமூகவலைதளங்களில் ZEE5 ஐ தொடர :
Facebook – https://www.facebook.com/ZEE5
Twitter – https://twitter.com/ZEE5India
Instagram – https://www.instagram.com/zee5/

- Advertisement -

Recent Posts