- Advertisement -
Home Blog Page 265

’Yaathisai’ Director Dharani Rasendran’s next movie announcement

0

Creating a renaissance in the K-Town with a groundbreaking film ‘Yaathisai’, director Dharani Rasendran became the cynosure of Indian film industry. His sheer vision, and the invincible craftsmanship in materializing the movie, has made him the bankable filmmaker among the industry and trade circles. The filmmaker is all set to enthral the film enthusiasts with his next ambitious film. This yet-to-be-titled movie is produced by J Kamalakannan of JK Film International. The film was launched with a simple ritual pooja ceremony attended by eminent personalities of the film industry including Distributor B. Sakthivelan (Sakthi Film Factory), G. Dhananjayan, Chitra Lakshmanan, Director Manithira B Moorthy, Director Muthu (Ayali Web Series), Producer Ganesh Common Man, YouTubers Madan Gowri, Mr G.K. and Cherry alongside many others.

Actor Seyon, who delivered a promising performance in Yaathisai is playing the protagonist’s character. Bhavani Sri, who has won the hearts of audiences with her spellbinding performance in ‘Viduthalai’ franchise is playing the female lead. Samuthirakani is performing a pivotal role int his movie and the details about the others in the star-cast will be revealed soon.

The film marks the maiden production of J Kamalakannan, who is producing this film for JK Film International, a successful entrepreneur. He says, “I was always driven by passion to be a small part of the film industry, and the long run dream finally gets fulfilled through this project. JK Film International is happy to collaborate with director Dharani Rasendran, who became an overnight showstopper in the industry with his magnum opus ‘Yaathisai’. Our production house will strive to create good contents and promote the talented and aspiring filmmakers.”

The film’s shooting will take off by first week of February, and the other details including the film’s genre will be revealed soon.

Technical Crew

Production: JK Film International
Producer: J Kamalakannan
Director: Dharani Rasendran
Cinematographer : R Sethumurugavel Jeganathan
Editor: Mahendran Ganesan
Music director: Chakravarthy
Sound design: Saravanan Ramachandran
PRO: Suresh Chandra-Abdul Nassar

‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரனின் அடுத்த படம் குறித்தான அறிவிப்பு!

இயக்குநர் தரணி ராசேந்திரன் தனது ‘யாத்திசை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் புது வெளிச்சத்தை பாய்ச்சியவர். அவர் படத்தை கையாளும் திறன், கதை சொல்லல் இதெல்லாம் பார்வையாளர்களையும் சினிமாவில் வர்த்தக வட்டாரத்தினரையும் கவர்ந்துள்ளது. ’யாத்திசை’ படத்தை அடுத்து அவர் புதிய படத்தை இயக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ஜேகே ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜே கமலக்கண்ணன் தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கான பூஜை எளிமையான முறையில் நடைபெற்றது. பூஜையில் சக்தி ஃபிலிம் பேக்டரியின் விநியோகஸ்தர் பி.சக்திவேலன், ஜி.தனஞ்செயன், சித்ரா லட்சுமணன், இயக்குநர் மணித்திர பி மூர்த்தி, ’அயலி’ வெப் சீரிஸ் புகழ் இயக்குநர் முத்து, தயாரிப்பாளர் கணேஷ் காமன் மேன், யூடியூபர்ஸ் மதன் கௌரி, மிஸ்டர் ஜி.கே. மற்றும் செர்ரி உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

’யாத்திசை’ படத்தில் நம்பிக்கையூட்டும் நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் சேயோன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘விடுதலை’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பவானி ஸ்ரீ கதாநாயகியாக நடிக்கிறார். சமுத்திரக்கனி இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், மற்ற நடிகர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

ஜே.கே ஃபிலிம் இன்டர்நேஷனல், ஜே.கமலக்கண்ணனின் முதல் தயாரிப்பாக இப்படம் அமைகிறது. அவர் கூறுகையில், “திரையுலகில் என்னுடைய சிறிய பங்கும் இருக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தது. ’யாத்திசை’ படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த தரணி ராசேந்திரனுடன் ஜேகே ஃபிலிம் இன்டர்நேஷனல் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறது. எங்கள் தயாரிப்பு நிறுவனம் நல்ல படங்களைத் தரவும், திறமையான மற்றும் ஆர்வமுள்ள படைப்பாளிகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது” என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும். படத்தின் ஜானர் உள்ளிட்ட மற்ற விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

தொழில்நுட்ப குழு:

தயாரிப்பு: ஜேகே ஃபிலிம் இன்டர்நேஷனல்,
தயாரிப்பாளர்: ஜே. கமலக்கண்ணன்,
இயக்குநர்: தரணி ராசேந்திரன்,
ஒளிப்பதிவாளர்: ஆர். சேதுமுருகவேல் ஜெகநாதன்,
எடிட்டர்: மகேந்திரன் கணேசன்,
இசையமைப்பாளர்: சக்ரவர்த்தி,
ஒலி வடிவமைப்பு: சரவணன் ராமச்சந்திரன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-அப்துல் நாசர்

Capture Every Live Moment: OPPO Reno13 Series Launched in India with New MediaTek Dimensity 8350 Chipset and AI-Ready Cameras

0
  • The OPPO Reno13 Series brings GenAI to a wider audience, setting a new benchmark for AI-powered smartphones in the Indian market.
  • Equipped with AI Livephoto, AI Clarity, and underwater photography supported by IP66 / IP68 / IP69 ratings for water and dust resistance
  • OPPO Reno13 Series will be the first to come with the MediaTek Dimensity 8350, an energy-efficient AI-smartphone chip ideal for gaming
    New Delhi, 11th January 2025: OPPO India has officially launched the much-anticipated Reno13 Series 5G, designed to redefine the smartphone experience. Featuring a flagship-level camera system, powered by the MediaTek Dimensity 8350 SoC, and equipped with cutting-edge AI features for both imaging and productivity, the Reno13 Series is engineered to deliver exceptional performance. With its ultra-durable design, the series – including the Reno13 and Reno13 Pro – also boasts IP66, IP68, and IP69 certifications for water and dust resistance, making it the perfect device for those who value both style and durability. Additionally, the Reno13 Series offers 80W SUPERVOOC fast-charging, ensuring optimal power for extended use. The smartphones are now available for purchase through Mainline Retail Outlets, the OPPO e-Store, and Flipkart, with prices starting at INR 37,999.
    Flagship Design with Durability

The OPPO Reno13 5G boasts an aerospace-grade aluminium frame and Corning Gorilla Glass 7i on the front and back. Its One-piece Sculpted Glass on the back is a blend of matte and gloss finishes with a unique texture on the Ivory White variant. OPPO has also introduced an exclusive Luminous Blue color variant for India. This variant features a unique glowing effect achieved through offset printing and reflective coating to produce a subtle yet captivating glowing outline around the camera module.

The device comes with OPPO’s signature All-Round Armour architecture, protecting the internals against shock for added durability. The smartphone is IP66, IP68, and IP69-certified for resistance to dust and submersion in freshwater up to 1.5 meters, tested up to 2 meters in OPPO labs for 30 minutes.

The Reno13 stands out with its slim and lightweight design: The Ivory White model is a mere 7.24mm thin, while the Luminous Blue model is 7.29mm slim; the handsets tilt the scale at a lightweight 181g.

Expansive Infinite View Display with Blue Light Solution

The Reno13 sports a 6.59-inch flat screen and is equipped with a 120Hz Smart Adaptive 1.5K OLED ProXDR display, offering an impressive 93.4% screen-to-body ratio for a bezel-less viewing experience. With peak brightness of 1,200 nits (HBM), it ensures visibility even under harsh sunlight. OPPO’s screen technology is designed for eye comfort with a low-blue-light solution, certified by BOE SGS Seamless Pro Eye Protection.
Premium Camera with the Power of GenAI

The Reno13 features a flagship-level camera system, including a 50MP primary, 8MP ultra-wide camera, and 2MP monochrome camera. The device includes a tri-microphone system, audio zoom, and support for dual 4K video recording from the front and back cameras simultaneously.

AI Livephoto in 2K Clarity

The Reno13 offers creative control with its AI Livephoto feature, which automatically records video clips from 1.5 seconds before the shutter is pressed to 1.5 seconds after. The result is a 2K ultra-clear video, enabling users to select and edit any frame. Real-time adjustments, such as retouching, makeup, and filters, are also possible for these Livephotos.

One-Click AI Clarity

The Reno13 comes equipped with OPPO’s AI Clarity, a suite of advanced GenAI tools designed to enhance images with just a tap. Its AI Clarity Enhancer leverages powerful algorithms to boost image quality at 10X zoom, ensuring remarkable clarity even when viewed at 8X digital zoom.
With AI Unblur, the Reno13 ensures that every photo retains sharp details and vibrant colors, even when capturing subjects in motion.
OPPO’s AI Reflection Remover guarantees flawless photos by eliminating unwanted reflections. Additionally, with AI Eraser 2.0, you can easily remove photobombers or distracting background objects, leaving behind a picture-perfect memory.

AI Imaging

The Reno13 enhances portraits and group photos with AI-powered features like AI Portrait and AI Night Portrait. AI Imaging uses OPPO’s proprietary algorithms to enhance facial details and refine facial contours in low light. AI Best Face automatically identifies subjects with closed eyes and corrects the photo with AI.

AI Studio

The AI Studio on the Reno13 lets users transform their photos with GenAI features, such as sci-fi, vintage, or cartoon styles. Users can also create animated moments from still images using AI Motion or reinterpret photos with AI Reimage using more than 20 templates.

Get Creative with Underwater Photography

The Reno13’s industry-leading dust ingress and water resistance ratings open new possibilities for underwater photography. The IP66, IP68, and IP69 certifications ensure the device can capture stunning moments above and below the surface, with AI adjustments to enhance underwater images.

Powerful Processor and Big Battery Life

The Reno13 features the customized MediaTek Dimensity 8350 processor, offering up to 60% improved peak performance and 55% greater power efficiency. The device packs a 5600mAh battery with 80W SUPERVOOC Flash Charge support, enabling fast charging and extended battery life. It can charge the battery from 0 to 17% in just 5 minutes, to 49% in 20 minutes, and to 100% in approximately 47 minutes and 23 seconds.

The device delivers uninterrupted gaming experience backed by a large battery and AI HyperBoost, it ensures smooth, lag-free gameplay for up to 8 hours, earning an S Rating from TÜV SÜD. It also includes an AI Multi-Cooling System featuring an expanded Vapour Chamber (VC) for temperature control during long gaming sessions.

In addition to this, AI LinkBoost 2.0 and OPPO’s custom SignalBoost X1 Chip ensure that the phone boosts Wi-Fi performance in weak signal areas and ensures smooth connectivity even in challenging environments, validated by TÜV Rheinland High Network Performance Certification.

ColorOS 15: Smart & Smooth

The Reno13 comes with ColorOS 15, delivering a sophisticated set of AI-driven features for enhanced productivity and creativity. OPPO’s 60-month fluency testing guarantees smooth, reliable performance for up to 5 years.

GenAI Integrated into Everyday Life

The OPPO Reno13 integrates GenAI features to make everyday tasks easier. Features like AI Summary, AI Rewrite, AI Reply, and AI Recording Summary allow for efficient work and productivity. The AI Toolbox 2.0 includes productivity features like Screen Translator, AI Writer, AI Reply and AI Recording Summary that can record office meetings—in English and Hindi as long as five hours and generate notes, summaries and transcripts.
Additionally, Circle to Search with Google allows users to instantly search for anything on-screen with a simple long press of the home button or navigation bar. And the Google Gemini app enables users to supercharge their productivity and creativity through AI-powered interactions.

OPPO Reno13 Pro 5G

The company has also introduced the OPPO Reno13 Pro, setting a new standard for smartphone photography with its flagship-level camera system, paired with a stunning 6.83-inch Infinite View Display featuring four-sided micro-curves and an impressive 93.8% screen-to-body ratio with a bezel-less viewing experience, making it perfect for binge-watching videos and browsing social media. The device boasts a 50MP + 50MP + 8MP triple-camera setup, including a 3.5x telephoto lens, along with AI-powered features. The 50MP Telephoto Camera with a 3.5x optical zoom ensures an equivalent focal length of 85mm for detailed shots. AI technology enhances ultra-zoom shots up to 120X, so no details are missed. Combined with AI Zoom capabilities, the tri-microphone system, and Audio Zoom ensure that these phones are perfect for recording concerts and other exceptional-quality performances. The smartphone boasts 5800mAh battery and support 80W SUPERVOOC Flash Charge.

Price & Availability

The OPPO Reno13 5G will be available in two variants with a net effective price with all the offers at INR 34,199 for the 8GB + 128GB and INR 35,999 for the 8GB + 256GB variant. Whereas the Reno13 Pro 5G will be available in two variants at a net effective price with all the offers at INR 44,999 for the 12GB+256GB and INR 49,499 for the 12GB+512GB version.
The Reno13 Series is available for purchase starting January 11th, 2025, with exciting offers:
6 months of Liquid Damage Protection and an Exchange Bonus of ₹3,000 on the OPPO Reno13, available at Mainline Retail Outlets, OPPO E-store, and Flipkart.
Exclusive Offers on Mainline Retail Outlets and OPPO E-store:

  • EMIs starting at ₹2,111/month
  • 10% instant cashback using cards from select banks
  • Zero down payment plans for up to 12 months via multiple finance partners
    Exclusive Offers on Flipkart:
  • No-cost EMI options for up to 9 months with select banks

Specifications
OPPO Reno13 Pro 5G
OPPO Reno13 5G
Display
6.83-inch, 1.5K Infinite View Screen​, 120Hz dynamic refresh rate
6.59-inch, 1.5K Flat Screen​, 120Hz dynamic refresh rate
Built material & IP Rating
Aerospace-grade Aluminium Frame
Aerospace-grade Aluminium Frame

Corning Gorilla Glass 7i front and back
Corning Gorilla Glass 7i front and back

IP66, IP68 and IP69 Rating
IP66, IP68 and IP69 Rating

Supports underwater photography
Supports underwater photography
Weight & Profile
195g/ 7.55mm – Mist Lavender & Graphite Gray
181g/ 7.24mm slim – Ivory White
181g/7.29mm slim – Luminous Blue
OPPO AI features
AI Livephoto, AI Clarity Enhancer, AI Reflection Remover, AI Unblur, AI Eraser 2.0, AI Night Portrait, AI Motion, AI Reimage, AI Portrait, AI Clear Face, AI Best Face, AI Reply, AI Writer, AI Summary, AI Speak, AI Recording Summary, BeaconLink, AI LinkBoost, AI Clear Voice, AI Scan Document
AI Livephoto, AI Clarity Enhancer, AI Reflection Remover, AI Unblur, AI Eraser 2.0, AI Night Portrait, AI Motion, AI Reimage, AI Portrait, AI Clear Face, AI Best Face, AI Reply, AI Writer, AI Summary, AI Speak, AI Recording Summary, BeaconLink, AI LinkBoost, AI Clear Voice, AI Scan Document
Camera rear setup
50MP Main Sony IMX890 camera with OIS and AF
50MP Main Sony LYT600 camera with OIS and AF

50MP telephoto camera with JN5 Sensor and 3.5x optical zoom
8MP OVo8D ultra wide-angle 115° snapper with AF

8MP OV08D ultra wide-angle 115° snapper with AF
2MP Monochrome Camera
Front Camera
50MP JN5 sensor with AF
50MP JN5 sensor with AF
Processor
MediaTek Dimensity 8350
MediaTek Dimensity 8350
RAM & Storage
Storage 256/512GB UFS 3.1
RAM: 12GB (+12 with OPPO RAM expansion technology) LPDDR5X
Storage: 128/256 GB UFS 3.1
RAM: 8GB (+12 with OPPO RAM Expansion technology) LPDDR5X
SIM Support and Bluetooth
Dual SIM Hybrid
Bluetooth 5.4
Dual SIM Hybrid
Bluetooth 5.4
Additionally features
Tri-microphone system with Audio Zoom
Tri-microphone system with Audio Zoom

IR Blaster
IR Blaster
Battery
5800mAh battery 80W SUPERVOOCTM
5600mAh battery 80W SUPERVOOCTM
Operating System
ColorOS 15 based on Android 15 3 years of OS updates and 4 years of security updates
ColorOS 15 based on Android 15 3 years of OS updates and 4 years of security updates

About OPPO
OPPO is a leading global smart device brand, dedicated to providing the perfect synergy of aesthetics and innovative technology. OPPO offers a wide range of smart devices, including the Find and Reno series, along with ColorOS and internet services. With a presence in over 70 countries and regions, OPPO has more than 40,000 employees committed to improving the lives of customers worldwide.
For any inquiry, please contact:
OPPO India: [email protected]

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வழங்கும் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

0

தனித்துவமான படைப்புகள் தந்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், முன்னணி யூடியூப் படைப்பாளியான ஹரி பாஸ்கர், பிக்பாஸ் புகழ் ரயான்
மற்றும் லாஸ்லியா நடிப்பில், ஜனரஞ்சகமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்’ வரும் ஜனவரி 24 ஆம் தேதி, இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, படம் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் என். இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி பேசியதாவது…,
இயக்குநர் அருண் இந்தக்கதையைப் பலமுறை எங்களிடம் சொல்லி, இறுதியாக முடிவு செய்து தயாரித்துள்ளோம். இப்படத்தை உருவாக்கும்போதே இந்தக்கால டிரெண்ட்டுக்கு ஏற்றவாறு இருப்பதுடன், குடும்பங்கள் ரசிக்கும் படமாக இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். ஹரி பாஸ்கர், லாஸ்லியா, ரயான் என எல்லோரும் இளமையானவர்கள். புதிய இளைஞர்கள் எப்போதும் சாதிக்கும் ஆரவத்துடன் இருப்பார்கள், அவர்களுக்கு வாய்ப்பு வரும் போது கண்டிப்பாகப் பன்மடங்கு உழைப்பார்கள் என்பது, என் அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்டது. இயக்குநர் வாசு சாரிடம் இருந்து வந்தவர் அருண், மிக நன்றாகப் படத்தை உருவாக்கியுள்ளார். நிதின் உடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளோம். படம் நன்றாக வந்துள்ளது, உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் .

தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் சித்ரா லட்சுமணன் பேசியதாவது…
இந்தப் படக்குழுவினர் மிகத் திறமையானவர்கள். இரண்டு நாட்கள் முன் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்றைய காலகட்டத்தில், சின்னத்திரை, பிக்பாஸ், யூடியூப் மூலம் பல கலைஞர்கள் வந்து அசத்துகிறார்கள். இந்த இளைஞர்களிடம் நல்ல திறமை இருக்கிறது. நண்பர் இளவரசு இந்த படக்குழுவினர் மிகச்சிறப்பாக உழைத்துள்ளதாக என்னிடம் கூறினார். அவர் ஒரு சிறந்த விமர்சகர். படக்குழுவினர் மிகத் தெளிவுடன் இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இப்படத்தைத் தயாரித்திருக்கும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் முரளிக்கு என் வாழ்த்துகள். இந்த காலத்திற்கு ஏற்ற ஒரு படத்தைத் தந்துள்ளார். கண்டிப்பாக இப்படம் பெரிய வெற்றி பெறும் வாழ்த்துகள்.

பிக்பாஸ் புகழ் ரயான் பேசியதாவது..
இந்த வாய்ப்பை எனக்கு அளித்த முரளி சார், நிதின் சாருக்கு நன்றி. வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கிற நேரத்தில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இது. அருண் நிறையச் சொல்லித் தந்தார். என் கதாபாத்திரத்தை மெருகேற்ற நிறைய உழைத்திருக்கிறேன். இப்படத்தில் நிறையக் கற்றுக்கொண்டேன். லாஸ்லியா உடன் நடித்தது மகிழ்ச்சி. அவரும் பிக்பாஸில் இருந்து வந்தவர். நிறைய அதைப்பற்றிப் பேசினோம். ஷூட் மிக மகிழ்ச்சியாக இருந்தது. இப்படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள்.

நடிகர் சாரா பேசியதாவது…
என் அப்பா நான் தேனாண்டாள் பிலிம்ஸ் படத்தில் நடிக்கிறேன் என்றவுடன் மிகவும் சந்தோசப்பட்டார் அவருக்குப் பிடித்த நிறுவனம் இது. இயக்குநர் அருண் ஹீரோவாக நடிக்கத் தகுதியானவர், நான் வேலை செய்த இயக்குநர்களில் மிகவும் பிடித்தவர். நல்ல ரைட்டர். ஹரிபாஸ்கருடன் நடித்தது மிக ஜாலியாக இருந்தது. சமீபத்தில் மிகவும் ரசித்து நடித்த படம் இது தான். லாஸ்லியாவுடன் எனக்குக் காட்சிகள் இல்லை, மிக நன்றாக நடித்துள்ளார். படம் எல்லோருக்கும் பிடிக்கும். 2 மணி நேரம் எல்லோரையும் சந்தோசப்படுத்தும் படமாக இருக்கும்.

நடிகர் இளவரசு பேசியதாவது…
தேனாண்டாள் பிலிம்ஸ் 100 படம் முடித்து, 101வது படமாக இதனை தயாரித்திருக்கிறார்கள். தயாரிப்பு நிறுவனம் 100 ஐ கடப்பது அத்தனை சாதாரண விசயமல்ல. இந்தக் கம்பெனியில் வேலை பார்த்தது எனக்குப் பெருமை. ராமநாரயணன் சார் மிகப்பெரிய தயாரிப்பாளராகப் புகழ் பெற்றவர். விஜயகாந்த்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். அப்படியான கம்பெனியில் பி வாசு பள்ளியிலிருந்து வந்த அருண் இப்படத்தை இயக்கியுள்ளார். அவர் எனக்கு அப்பா பாத்திரம் எனச் சொன்னபோது, எனக்கு எல்லாம் அப்பாவாகத்தான் வருகிறது. இதைச்செய்ய வேண்டுமா? எனத் தயங்கினேன். ஆனால் அருண் கதையையே ஷாட் ஆர்டராகத் தான் சொன்னார். அவரிடம் இருந்த தெளிவு எனக்கு பிடித்திருந்தது. இன்றைக்குத் திட்டமிட்டு ஷூட் முடித்தால் அதுவே சாதனை தான். அந்த வகையில் அருண் மிக அருமையாகத் திட்டமிட்டு எடுத்தார். வாசு சார் அந்த வகையில் ஜாம்பவான். அவரிடமிருந்த திறமை இந்த தலைமுறைக்கு வரவேண்டும். இந்தப்படத்தில் ஹரிபாஸ்கர் நாயகன் அவர் ஒரு யூடுபர் ஆனால், படத்தில் நடிக்க கேமராவை அணுகி நடிப்பதில், திறமை வேண்டும். முதல் நாளிலேயே ஹரிபாஸ்கர் வெகு இயல்பாக நடித்தார். களவாணியில் விமலிடம் நான் பார்த்த திறமையை ஹரிபாஸ்கரிடம் பார்த்தேன் அவருக்கு வாழ்த்துகள். தமிழ் பேசத்தெரிந்த மேற்கத்திய அழகி லாஸ்லியா. நல்ல கதாப்பாத்திரம் நன்றாக நடித்துள்ளார் வாழ்த்துக்கள். இசையமைப்பாளர் ஓஷோ வெங்கட் ரொம்ப சின்னப்பையன் அருமையான பாடல்கள் தந்துள்ளார். கேமராமேன் மிக அருமையாகச் செய்துள்ளார். இந்தப்படம் எல்லோருக்கும் பெரிய திருப்பத்தைத் தர வேண்டும் வாழ்த்துகள்.

இசையமைப்பாளர் ஓஷோ வெங்கட் பேசியதாவது…
எனக்கு இந்தப்படத்தில் 6 பாடல்கள். பாட்டே இல்லாமல் படம் வரும் காலத்தில், எனக்கு இந்தப்பட வாய்ப்பை தந்து, என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. அருண் மிகச் சுறுசுறுப்பானவர். அவர் தந்த ஆதரவிற்கு நன்றி. லாஸ்லியா என் முதல் ஆல்பத்தில் நடித்திருந்தார் அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. கேட்ட அனைத்தையும் தந்து, முழு ஆதரவு தந்த நிதின் சார், முரளி சாருக்கு நன்றி. ஹரி பாஸ்கர் யூடுபிலிருந்து சினிமாவிற்கு வருவது அத்தனை எளிதல்ல, அவர் இந்த இடத்திற்கு வர நிறையக் கஷ்டப்பட்டுள்ளார். அவர் இந்தப்படத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார். அவர் என் நண்பர். படம் செய்ய வேண்டுமென்பது எங்கள் கனவு. அது இப்படத்தில் நிறைவேறியுள்ளது. அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் பேசியதாவது…
இது என் முதல் மேடை, 12 வது படிக்கும் போது பாலா சாரின் தாரை தப்பட்டை ஷூட்டிங் நடந்தது. அதை வேடிக்கை பார்த்தபோது அங்கு அவ்ளோ பேர் கூடியிருந்தார்கள். வெற்றியைத் தாண்டி, அந்த கூட்டமே தனியாகத் தெரிந்தது. அன்று என்னிடம் இருந்த கோனார் தமிழ் உரையில் எழுத்து இயக்கம் என என் பெயரை எழுதினேன். 10 வருடத்தில் இந்த இடத்திற்கு வந்துள்ளது மகிழ்ச்சி. வாசு சாரின் கோ டைரக்டர் சுகுமார் அண்ணன் ஒரு ஷூட்டிங்கில் எனக்கு அறிமுகமானார். அவர் மூலம் தான் இதெல்லாம் நடந்தது. அவர் தான் வாசு சாரிடம் அறிமுகப்படுத்தினார். அவரிடம் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன். முரளி சாரிடம் இந்தக்கதை சொன்ன போது அவர் ரியாக்ட் செய்யவே இல்லை சைலண்டாகவே இருந்தார். எனக்கு நம்பிக்கையே இல்லை. ஆனால் அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர் இந்தப்படத்தை நாம் செய்யலாம் என்றார். இவ்வளவு பெரிய வாய்ப்பைத் தந்ததற்கு நன்றி. நிதின் சாரை முதன் முதலில் வீடியோ காலில் தான் பார்த்தேன். கதை அவருக்கும் பிடித்திருந்தது. இந்தப்படம் செய்ய எனக்கு சப்போர்ட் தேவைப்பட்டது. சுகுமார் அண்ணாவிடம் கேட்டேன் அவர் முழுமையாக வந்து வேலை பார்த்துத் தந்தார். லாஸ்லியா இன்ஸ்டா போஸ்ட் பார்த்துத் தான் இந்தக் கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என அவரைத் தேர்ந்தெடுத்தோம். மிக நன்றாக நடித்துள்ளார். இளவரசு சார் இந்தப்படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய கிஃப்ட். அவருடன் வேலை பார்த்தது பெருமை. இப்படத்தில் உழைத்த அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. இந்தப்படத்தின் ரீரெக்கார்டிங் வந்த பிறகு கண்டிப்பாக இசையமைப்பாளர் பெரிய ஹீரோ படத்தில் வேலை செய்வார். ஹரி பாஸ்கர் என் நண்பர் அவர் மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். வரும் 24 ஆம் தேதி படம் வருகிறது அனைவரும் படம் பார்த்து உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள் .

நடிகை லாஸ்லியா பேசியதாவது…
இப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த முரளி சார், நிதின் சாருக்கு நன்றி. இப்படி ஒரு கதாப்பாத்திரம் தந்த அருணுக்கு நன்றி. ஒஷா 6 நல்ல பாடல்கள் தந்துள்ளார். அவரை வாழ்த்துங்கள். ரயான் பிக்பாஸ் முடிந்து வந்துள்ளார். அவருக்கு இன்னும் நிறையப் படங்கள் கிடைக்க வாழ்த்துகள். இளவரசு சார், சாரா போன்ற நடிகர்கள் நடிக்கும் படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி. ஹரியும் இயக்குநரும் பயங்கர குளோஸ், என்னை மிக நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். ஹரிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. வரும் 24 ஆம் தேதி படம் வருகிறது அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் ஹரிபாஸ்கர் பேசியதாவது…,
இந்த திரைப்படம் மிக அற்புதமான பயணம், எங்கிருந்து ஆரம்பித்தது என்று நினைத்தால் மிக ஆச்சரியமாக இருக்கிறது. கனவு பலித்த தருணமாக உள்ளது. வரும் 24 ஆம் தேதி படம் வருகிறது. என்னை அறிமுகப்படுத்தும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி சாருக்கு வாழ்த்துகள். முரளி சார் அறிமுகமானதிலிருந்து, 1 வருடமாக தொடர்ந்து ஃபாலோ செய்தேன். அருணும் நானும் நண்பர்கள், அவர் சொன்ன லைனை முரளி சாரிடம் சொன்னோம். அவருக்குப் பிடித்திருந்தது. நிதின் சாரும் எங்களுடன் இணைந்து பயணித்தார். அவர் டெக்னிகலாக எல்லாவற்றையும் பிரித்து அலசி விடுவார். அவரிடம் அடுத்துச் சிக்கும் இயக்குநர் தான் பாவம். எல்லோரும் இணைந்து அர்ப்பணிப்போடு இப்படத்தை எடுத்துள்ளோம். லாஸ்லியா ஃபர்ஸ்ட் இரண்டு நாள் அமைதியாக இருந்தார் ஆனால் இரண்டாவது நாளிலிருந்து செம்ம கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டார். மிக அருமையாக நடித்துள்ளார். சாரா அண்ணன் யூடுப்பில் கலக்கிவிட்டு இப்போது சினிமாவில் கலக்குகிறார். அவர் என் படத்தில் நடித்தது மகிழ்ச்சி. இளவரசு ஒரு லெஜெண்ட், அவர் எங்களுக்கு காட்ஃபாதர் மாதிரி, அவர் எங்கள் படத்தில் நடித்தது பெருமை. அருண் என் நண்பர் எல்லாவற்றையும் மிகத் தெளிவாக அணுகுவார், சுகுமார் அண்ணன், இப்படத்தை மிகச் சரியாகத் திட்டமிட்டது அவர் தான். அவருக்கு நன்றி. கேமரா மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். ஒஷா அட்டகாசமான பாடல்கள் தந்துள்ளார். படத்தில் உழைத்த அத்தனை பேரும் மிக அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

இயக்குநர் வாசு பேசியதாவது..
அருண் என் உதவியாளர், அவர் படம் செய்கிறேன் என்றவுடன் யார் புரோடியூசர் எனது கேட்டேன், தேனாண்டாள் பிலிம்ஸ் என்றார். அந்தக்கம்பெனியில் படம் செய்வது பெரிய விசயம், இதுவே பெரிய வெற்றி என்றேன். தேனாண்டாள் பிலிம்ஸ் இராம நாராயணன் மிகப்பெரிய ஆளுமை, அவரிடமிருந்து நான் நிறையக் கற்றுக் கொண்டுள்ளேன். ரஜினி, விஜயகாந்த் எல்லாம் அவரைப்பற்றி அவ்வளவு சொல்வார்கள். அவரின் மகன் தான் முரளி. அப்படிப்பட்ட கம்பெனியில் அருண் படம் செய்வது மகிழ்ச்சி. நான் பாடல்கள் பார்த்தேன் மிகவும் பிடித்திருந்தது, இளைஞர்களுக்குப் பிடித்த ஜாலியான படமாக இருக்கும். இன்றைய காலகட்டத்தில் கமர்ஷியல் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பல வருடம் கழித்து வந்த மதகஜராஜா ஜெயித்துள்ளது. நடிகர் விஜய் என்னுடைய நடிகன் படம் நடிக்க ஆசைப்பட்டார். அது மிகச்சிறந்த கமர்ஷியல் படம். ஆனால் கவுண்டமணி, மனோரமா இல்லாமல் இப்போது அந்தப்படத்தை எடுக்க முடியாது. இந்தப்படத்திற்கு வருவோம். லாஸ்லியா தமிழ் பேசும் நடிகை, அவர் இன்னும் உயரம் தொட வாழ்த்துகள். ரயானிடம் நல்ல திறமை உள்ளது. ஹரி பாஸ்கருக்கு வாழ்த்துகள். படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

தயாரிப்பாளர் நிதின் பேசியதாவது…
ஒரு அருமையான படத்தில் நானும் பங்கு பெற்றது மகிழ்ச்சி. இங்குள்ள இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. எதிர்கால ஏ ஆர் ரஹ்மான், ரஜினி, நயன்தாரா எல்லோரும் உள்ளனர். எல்லோருக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது. படம் பார்த்து, அனைவரும் ஆதரவு தாருங்கள்.

யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர், இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இளம் நடிகையாக இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த லாஸ்லியா இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

முழுக்க முழுக்க ரசிகர்களைச் சிரிக்க வைக்கும்படியான கதைக்களத்தில், கலக்கலான கமர்ஷியல் படமாக, அறிமுக இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

இப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

எஸ்.வி. சேகரின் நாடக பிரியாவின் மக்கள் தொடர்பாளர்களுக்கும் நினைவு கேடயங்களை முதலமைச்சர் வழங்கினார் !

0

எஸ்.வி.சேகரின் நாடக பிரிய குழுவின் சார்பில் 7000 மாவது நாடகம் தமிழக முதல்வர் தலைமையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் நடை பெற்றது. எஸ்.வி.சேகரின் நாடக குழுவிற்கு P.R.O. பணியில் உள்ள ஈ.வெ.ரா மோகன், விஜயமுரளி, கிளாமர் சத்யா மூவர் உட்பட அவர் குழுவில் உள்ள கலைஞர்கள் அனைவருக்கும் நினைவு கேடபங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் திருக்கரங்களால்
வழங்கப்பட்டது.
நாடகம் பார்ப்பவர்கள் மட்டுமல்ல ,
தன்னுடன் இருப்பவர்களும் மகிழ்வுடன் இருக்க வேண்டும் என்ற எஸ்.வி.சேகரின் நல்ல செயல்களுக்கு இது ஒரு எடுத்துக் காட்டு என்று நினைவு கேடயங்களை பெற்ற அனைவரும் நன்றியுடன் கூறினார்கள்.


டைமண்ட்பாபு
வெங்கட்
உதயா
PRO

Niharika Entertainment and The Show People produce, Arya presents, Santhanam’s ‘DD Next Level’ first look unveiled on Santhanam’s birthday today

0

The next instalment of hugely successful movie ‘DD Returns’ is here. Starring Santhanam as the protagonist once again, this newest addition to the franchise, titled ‘DD Next Level’ is progressing on a brisk pace and shoot is in its final phase. The film will hit the screens in May.

Produced by Niharika Entertainment and The Show People on a huge budget, the film will be presented by actor Arya. The first look of ‘DD Next Level’ was unveiled today to mark Santhanam’s birthday. It has been designed in such a way to impress fans immediately.

S. Prem Anand who directed ‘DD Returns’ is helming this new film as well. Popular stars are playing important roles.

Speaking about the film, director Prem Anand said, “DD Returns was a huge success with great response from audience from all walks of life. We worked on the script of its sequel for one year. From children to adults, everyone will laugh and enjoy this flick too.”

He added, “The story of this film starts on a cruise ship and takes place on an island. We erected sets with a huge budget. It’s great that Niharika Entertainment, actor Arya and Santhanam have teamed up to produce this film. It will be more exciting and hilarious than ‘DD Returns’. The film will be an enjoyable experience to fans of all age groups.”

Dipak Kumar Padhy handles the cinematography of ‘DD Next Level’, and Ofro composes the music. Bharath is in charge of editing and AR Mohan handles art direction.

நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் மற்றும் தி ஷோ பீப்பிள் தயாரிப்பில் ஆர்யா வழங்க சந்தானம் நடிக்கும் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ முதல் பார்வை சந்தானம் பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டது

சந்தானம் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் அடுத்த பாகமான ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ முதல் பார்வை சந்தானத்தின் பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டது. ரசிகர்கள் அனைவரையும் கவரும் வகையில் முதல் பார்வை உள்ளது.

நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் மற்றும் தி ஷோ பீப்பிள் நிறுவனங்கள் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மே மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த், ‘டிடி நெக்ஸ்ட் லெவெல்’ திரைப்படத்தையும் இயக்குகிறார். முக்கிய வேடங்களில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்ற‌னர்.

திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் பிரேம் ஆனந்த், “‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்போடு பெரும் வெற்றி பெற்றது. அதன் அடுத்த பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை ஒரு வருடமாக தொடர்ந்து செய்து முடித்தோம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிரித்து, ரசித்து மகிழும் திரைப்படமாக இதுவும் இருக்கும்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “மிக அதிக பொருட்செலவில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் கதை ஒரு சொகுசு கப்பலில் தொடங்கி தீவு ஒன்றில் நடைபெறும் வகையில் அமைந்துள்ளது. இதற்காக பிரம்மாண்ட பட்ஜெட்டில் அரங்கங்களை அமைத்தோம். இப்படத்தை தயாரிப்பதற்காக நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், நடிகர் ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை விட அதிக குதூகலத்தையும் உற்சாகத்தையும் ரசிகர்களுக்கு இப்படம் வழங்கும்,” என்று கூறினார்.

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் ஒளிப்பதிவை தீபக் குமார் பதி கையாள, ஆஃப்ரோ இசையமைக்கிறார். பரத் படத்தொகுப்புக்கும் ஏ ஆர் மோகன் கலை இயக்கத்திற்கும் பொறுப்பேற்றுள்ளனர்.

அரசியல் ஆன்மீகம் சினிமா : நடிகர் மை. பா. நாராயணன்!

0

வளர்ந்து வரும் நடிகர் மை. பா. நாராயணன்!

தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்.அப்படி எல்லா இடத்திலும் இருப்பவராக மை.பா. நாராயணனைச் சொல்லலாம். அரசியல் மேடைகளில், ஆன்மீக உரைகளில், பட்டிமன்றங்களில், தொலைக்காட்சி விவாதங்களில், இலக்கிய, உரைகளில் என்று எல்லாவற்றிலும் முகம் காட்டுபவர். கூடுதலாக அண்மைக்காலமாக திரையுலகிலும் முகம் காட்டி வருகிறார்.அண்மையில் வெளிவந்த ‘வணங்கான்’ படத்தில் நீதிபதியாக வரும் மிஷ்கினிடம் ஒரு போக்ஸோ வழக்கு வரும். அதைத் தொடுத்து மிஷ்கினிடம் மூக்குடை படும் வழக்கறிஞராக கவனிக்கத்தக்க வகையில் ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கும் முகத்தைப் படம் பார்த்த அனைவராலும் மறக்க முடியாது.
அவர்தான் மை.பா.நாராயணன். இதற்கு முன்பு பாலாவின் , ‘நாச்சியார்’, ‘இறுகப்பற்று’ உள்ளிட்ட 13 படங்களில் நடித்துள்ளார்.

மை.பா. நாராயணன் ஆனந்த விகடனில் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர் .இந்தத் துறையில் அவருக்கு 30 ஆண்டு கால அனுபவம் உண்டு. ஊடக விளம்பரத் துறையிலும் ஈடுபட்டவர், ஒரு பத்திரிகையாளராக கலைஞர், ஜெயலலிதா உள்ளிட்ட முன்னணி அரசியல் கட்சித் தலைவர்களையும்
பிரமுகர்களையும் நேர்காணல் செய்தவர் .
திரையிலும் நடிகராக உலாவரும் அவர்,
தனது திரையுலக அனுபவம் குறித்துப் பேசும்போது,

“எனது திரை உலகப் பிரவேசத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் தம்பி ராஜுமுருகன் தான்.அவரது ‘ஜோக்கர்’ படம் தான் எனக்கு முதல் படம்.
பிறகு ‘தீரன் அதிகாரம் ஒன்று’, அதற்குப் பிறகு அண்ணன் பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில் நடித்தேன்.

தலையின் ‘நேர்கொண்ட பார்வை’யில் நடித்தேன். பிறகு பெரிய வெற்றிப்படமான ‘இறுகப்பற்று’ ,துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் ‘கலகத் தலைவன்’, ‘பொம்மை நாயகி’ என 13 படங்களில் நடித்த பிறகு இப்போது மீண்டும் அண்ணன் பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ வந்துள்ளது.அவர் இயக்கத்தில் நடிப்பது என்பது படித்து ஒரு சான்றிதழ் பெற்ற அனுபவத்தைக் கொடுப்பது.
‘வணங்கான்’
படப்பிடிப்பில் இரண்டாவது முறை அண்ணன் பாலாவின் இயக்கத்தில் நடித்தது மறக்க முடியாதது.ஒரு சிறு பாத்திரமாக இருந்தாலும் அதை உயிர்ப்புள்ள குணச்சித்திரமாக மாற்றுவதில் அவர் காட்டும் ஈடுபாடு வியக்க வைக்கும். அவர் நடிப்புக்கலைஞர்களிடம் வேலை வாங்கும் விதத்தைப் பார்த்து ஏராளம் கற்றுக் கொள்ளலாம். அதே போல் படப்பிடிப்பில் நடிகர் அருண் விஜய்யுடன் பேசிப் பழகியதை அவர் காட்டிய அன்பை மறக்க முடியாது.

பல அரசியல் கட்சித் தலைவர்களிடமும் பிரமுகர்களிடமும் எனக்கு நட்பான தொடர்பு உண்டு .அவர்கள் அனைவரது அன்புக்கும் பாத்திரமானவனாக நான் இருக்கிறேன் .அதுவே எனது வாழ்க்கைப் பாதையில் வளர்ச்சியை நோக்கிப் பயணம் செய்ய உதவுகிறது.

கலைஞர் அவர்களின் மறைவின்போது நடைபெற்ற நேரலை இரங்கல் நிகழ்ச்சியில் நான் பேசியதும் அதேபோல புரட்சிக் கலைஞர் அவர்களின் மறைவின் போது நடைபெற்ற நேரலையிலும் நான் பேசியதும் என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரிய பாக்கியம் என்று நான் நினைக்கிறேன்.தனிப்பட்ட முறையில் புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களின் அன்பைப் பெற்றவன் நான்.

நான் நடித்த படங்களில் சிறு வேடமாக இருந்தாலும் பார்வையாளர் மனதில் பளிச்செனப் பதியும் வேடங்களில் நடித்து வந்துள்ளேன்.

இப்போது
அறம் கோபியின் புதிய படத்திலும், வ.கௌதமனின் காடுவெட்டி குரு கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் புதிய படத்திலும் நடித்து வருகிறேன். மேலும்இரண்டு புதிய படங்களும் வந்துள்ளன.

அது இல்லாமல் ஆன்மீகம், இலக்கியம் என்று சொற்பொழிவு ஒரு பக்கம் போய் கொண்டு இருக்கிறது. இப்படி இறைவன் அருளால் எப்போதும் நான் ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறேன். ஓட்டத்தைத் தொடர்ந்து வருகிறேன். இன்னும் பெரிய அளவில் வளர வேண்டும். அதற்கேற்றபடி அன்பானவர்கள் வழங்கும் வாய்ப்புகளுடன் மேலும் வளர்வேன் என்று நம்புகிறேன் “இவ்வாறு மை.பா.நாராயணன் கூறினார்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் “சூக்ஷ்மதர்ஷினி” திரைப்படத்தை, ஸ்ட்ரீம் செய்து வருகிறது

0

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த “சூக்ஷ்மதர்ஷினி” எனும் அட்டகாசமான ஃபேமிலி டிராமா திரில்லரை, கடந்த ஜனவரி 11 முதல் ஸ்ட்ரீம் செய்து வருகிறது. நஸ்ரியா நடிப்பில், இந்த மிஸ்டரி த்ரில்லர் திரைப்படத்தினை, அதுல் ராமச்சந்திரன் மற்றும் லிபின் டி.பி. எழுத்தில், எம்.சி. ஜித்தின் இயக்கத்தில், ஹாப்பி ஹவர்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஏவிஏ புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

முன்னணி நடிகை நஸ்ரியா நஜிம், சிறு இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இப்படத்தில் முதன்மைப் பாத்திரம் ஏற்றுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில், படத்தின் மீது பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது. பாசில் ஜோசப், அகிலா பார்கவன், மெரின் பிலிப், பூஜா மோகன்ராஜ், சித்தார்த் பரதன், தீபக் பரம்போல், மனோஹரி ஜாய், அபிராம் ராதாகிருஷ்ணன், ஜனனி ராம் (டயானாவாக), ஹெஸ்ஸா மேஹக் மற்றும் சரஸ்வதி மேனன் உட்பட ஒரு பெரும் நட்சத்திரம் கூட்டம் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

கிறிஸ்டோ சேவியரின் இசையில், சமன் சாக்கோவின் படத்தொகுப்பில், சூக்ஷ்மதர்ஷினி ஒரு அற்புதமான சினிமா அனுபவமாக உருவாகியுள்ளது. இப்படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.

இந்த பரபரப்பான ஃபேமிலி டிராமா திரில்லரைத் தவறவிடாதீர்கள். டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் சூக்ஷ்மதர்ஷினி பார்த்துக் கொண்டாடுங்கள் !

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றியுள்ளது – அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது. மேலும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

0

‘விலங்கு’ எனும் இணைய தொடரை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாமன் ‘ எனும் திரைப்படத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கணேஷ் சிவா மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஜி. துரை ராஜ் கவனிக்கிறார். தாய் மாமன் உறவைப் பற்றி மண் மணம் கமழும் படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கிறார்.

இப்படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகி வருகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து ரசிக்கும் வகையில் ஃபேமிலி என்டர்டெய்னராக ‘மாமன்’ உருவாகி வருகிறது” என்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சூரியின் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ‘கருடன்’ எனும் வெற்றி படத்திற்குப் பிறகு மீண்டும் நடிகர் சூரி- தயாரிப்பாளர் கே. குமார் ஆகியோர் இணைந்திருப்பதால், ‘மாமன்’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடையேயும், திரையுலக வணிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதிராஜா – நட்டி- ரியோ ராஜ் – சாண்டி- கூட்டணியில் உருவாகும் ‘நிறம் மாறும் உலகில் ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

0

இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘ நிறம் மாறும் உலகில் ‘ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் பிரிட்டோ J B இயக்கத்தில் உருவாகி வரும் ‘ நிறம் மாறும் உலகில் ‘ எனும் திரைப்படத்தில் பாரதிராஜா, நட்டி என்கிற நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர் , விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், நிவாஸ் ஆதித்தன், சல்மா, சுரேஷ் மேனன், ‘ஆடுகளம்’ நரேன், மைம் கோபி , வடிவுக்கரசி , விக்னேஷ் காந்த், ரிஷிகாந்த், கனிகா, ஆதிரா, காவ்யா அறிவுமணி ,துளசி, ஐரா கிருஷ்ணன் , லிசி ஆண்டனி, நமோ நாராயணன் , சுரேஷ் சக்கரவர்த்தி , ஏகன், விஜித், ஜீவா சினேகா, திண்டுக்கல் சரவணன், பாலாஜி தயாளன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மல்லிகா அர்ஜுன்- மணிகண்ட ராஜா ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவ் பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ராம் -தினேஷ் – சுபேந்தர் -ஆகிய மூவர் கலை இயக்குநர்களாக பணியாற்றி இருக்கும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் ஏற்றிருக்கிறார். ஹைபர் லிங்க் பாணியிலான இந்த திரைப்படத்தை சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

நான்கு விதமான வாழ்க்கை – நான்கு கதைகள் – அதை இணைக்கும் ஒரு புள்ளி – என நம் வாழ்வில் உறவுகளின் அவசியத்தை உணர்வுபூர்வமாக விவரிக்கும் கமர்சியல் படமாக இப்படம் உருவாகி இருக்கிறது. மும்பை – வேளாங்கண்ணி – சென்னை- திருத்தணி – என நான்கு வெவ்வேறு களங்களில் இப்படத்தின் கதை நடைபெறுகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்திருக்கிறது என பிரத்யேக காணொளியை வெளியிட்டுள்ளனர். இந்த காணொளி மூலம் படத்தின் தரம் சர்வதேச அளவில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கி இருக்கிறது என்றும்,
விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தனித்துவமான கதை சொல்லும் பாணியில் உருவாகும் ‘நிறம் மாறும் உலகில்’ எனும் படைப்பில் பாரதிராஜா -நட்டி -ரியோ ராஜ் -சாண்டி மாஸ்டர்- ஆகிய திறமைசாலிகள் ஒன்றிணைந்திருப்பதால் .. இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Actress Devayani’s directorial debut short film ‘Kaikuttai Rani’ wins award at the Jaipur International Film Festival

0

Actress Devayani, who has acted in around 100 films across various languages over the past three decades, has made her directorial debut with the short film ‘Kaikuttai Rani’ (‘Handkerchief Queen’). The film has won the prestigious award for Best Short Film for Children at the 17th Jaipur International Film Festival.

‘Kaikkuttai Rani’, which is produced, written, and directed by Devayani under the D Films banner, features music by maestro Ilaiyaraaja, with editing by the renowned B. Lenin. The film has cinematography by Rajan Miryala and sound design by Lakshmi Narayanan A.S.

With a runtime of 20 minutes, ‘Kaikuttai Rani’ explores the emotional journey of a young girl who faces various challenges after losing her mother, while her father works in a distant place. The short film beautifully portrays the emotions and struggles of children through a deeply touching narrative.

The jury at the 17th Jaipur International Film Festival recognized ‘Kaikkutai Rani’ for its exceptional portrayal of children’s emotions, awarding it the Best Short Film for Children. The film’s cast and crew led by Devayani received high praise for their remarkable contributions.

Expressing her joy over the recognition, Devayani shared, “While I have acted in many films, it is an immense source of pride and happiness that my first directorial project has received an international award. I extend my heartfelt gratitude to all the senior artistes who were part of this project. We are also working on taking ‘Kaikuttai Rani’ to other international film festivals.”

The lead roles in ‘Kaikuttai Rani’ are played by Niharika V.K. and Naveen N. The sound effects were designed by C. Sethu, and DI Colorist is Antony Bebin A. The film is being represented at international film festivals by Ulaga Cinema Baskaran.

‘Kaikuttai Rani’ continues to garner attention for its powerful storytelling and is expected to make an impact at other global film festivals.

இசைஞானி இளையராஜா இசையில் பி. லெனின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள ‘கைக்குட்டை ராணி’ குழந்தைகளின் உணர்வுகளை பேசுகிறது

திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு மொழிகளில் சுமார் 100 படங்களில் நடித்துள்ள நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படமான‌ ‘கைக்குட்டை ராணி’ 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைபப்ட விழாவில் சிறந்த குழந்தைகள் குறும்படத்திற்கான விருதை வென்றுள்ளது.

டி ஃபிலிம்ஸ் பேனரில் தேவயானி தயாரித்து, எழுதி, இயக்கியுள்ள ‘கைக்குட்டை ராணி’ திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க, பிரபல எடிட்டர் பி. லெனின் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். ராஜன் மிர்யாலா ஒளிப்பதிவையும், லட்சுமி நாராயாணன் ஏ.எஸ். ஒலி வடிவமைப்பையும் கையாண்டுள்ளனர்.

சுமார் இருபது நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம் குழந்தைகளின் உணர்வுகளை திரையில் சொல்கிறது. தாயை இழந்த, தந்தை வெளியூரில் பணிபுரியும் ஒரு பெண் குழந்தை எத்தகைய சிக்கல்களை சந்திக்கிறது என்பதை உணர்ச்சிப்பூர்வமாக இப்படம் வெளிப்படுத்தியுள்ளது.

‘கைக்குட்டை ராணி’ குறும்படத்தை பார்த்த 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா நடுவர் குழுவினர் குழந்தைகளுக்கான சிறந்த குறும்படத்திற்கான விருதுக்கு இதை தேர்ந்தெடுத்திருப்பதோடு தேவயானி மற்றும் குழுவினரை வெகுவாக பாராட்டினர்.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த தேவயானி, “எத்தனையோ படங்களில் நான் நடித்திருந்த போதிலும், முதன்முறையாக நான் இயக்கிய குறும்படம் சர்வதேச‌ அளவில் விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சையையும் பெருமையையும் அளிக்கிறது. இதில் பங்காற்றியுள்ள மூத்த கலைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இதர சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் இப்படத்தை கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்,” என்றார்.

‘கைக்குட்டை ராணி’ குறும்படத்தில் நிஹாரிகா வி.கே. மற்றும் நவீன் என் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சவுண்ட் எஃபெக்ட்ஸ் வடிவமைப்பு: சி., சேது, டிஐ கலரிஸ்ட்: ஆன்டனி பேபின் ஏ. திரைப்படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு கொண்டு செல்லும் பணியை உலக சினிமா பாஸ்கரன் ஏற்றுள்ளார்.

- Advertisement -

Recent Posts