Wednesday, July 15, 2026
- Advertisement -
Home Blog Page 290

மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

0

திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் & தங்கம் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னை கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இயக்குநர் பா. ரஞ்சித் முன்னோட்டத்தை வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

அறிமுக இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, ஹரிஷா ஜஸ்டின், வாகை சந்திரசேகர், ராதா ரவி, எம். எஸ். பாஸ்கர், அருள்தாஸ், கல்கி, கராத்தே கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் மற்றும் ஹரி எஸ். ஆர். ஆகியோர் இணைந்து இசை அமைத்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மற்றும் தங்கம் சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் சி. வி. குமார் மற்றும் எஸ் .தங்கராஜ் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சண்முகா ஃபிலிம்ஸ் கே. சுரேஷ் வெளியிடுகிறார்.

இம்மாதம் பதிமூன்றாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் வெளியீட்டுக்கு முன்னரான நிகழ்வில் இயக்குநர்கள் பா. ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, ஆர். ரவிக்குமார், ஏ ஆர் கே சரவணன், நடிகர் பாபி சிம்ஹா உள்ளிட்ட பல முன்னணி திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்களுடன் இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன், ஒளிப்பதிவாளர் கார்த்திக் தில்லை, இசையமைப்பாளர் எட்வின் லூயிஸ் விஸ்வநாத், படத்தொகுப்பாளர் இக்னேஷியஸ், கலை இயக்குநர் சுரேந்தர், நடிகர்கள் வாகை சந்திரசேகர், மிர்ச்சி சிவா, அருள்தாஸ், ஹரிஷா ஜஸ்டின், கருணாகரன், கல்கி, கராத்தே கார்த்தி உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் தொடக்கமாக ‘சூது கவ்வும் 2 ‘ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் எட்வின் லூயிஸ் விஸ்வநாத் மேடை ஏறி இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை பாடி, பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தங்கராஜ் பேசுகையில், ”சி வி குமார் ஸ்கூலில் இருந்து ஏராளமான திறமைசாலிகள் உருவாகி இருக்கிறார்கள்.‌ அந்த வரிசையில் இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் என்னை சந்தித்தார். அவர் முதலில் ‘பீட்சா 4 ‘ படத்தை உருவாக்குவதற்காக தான் சந்தித்தார். அந்த படத்தின் கதை, திரைக்கதையை எழுதி முடித்த பிறகு ஒரு நாள் ‘சூது கவ்வும் 2’ படத்தின் கதையை எழுதி முடித்து விட்டேன். உங்களிடம் சொல்கிறேன், கேளுங்கள் என்றார். அப்போது அவரிடம் முதலில் பீட்சா 4 படத்தை தயாரிப்போம். சூது கவ்வும் 2 படத்தின் பட்ஜெட் அதிகமாகும் என நினைக்கிறேன் என்றேன். கதையை முழுமையாக கேளுங்கள், அதன் பிறகு தீர்மானிக்கலாம் என்றார்.

நான் திரைத்துறைக்கு வந்த புதிதில் ‘சூது கவ்வும்’ முதல் பாகத்தை தொடர்ச்சியாக மூன்று காட்சிகள் பார்த்து வியந்து இருக்கிறேன்.‌ அது ஒரு கல்ட் கிளாசிக் மூவி.‌ இது மனதில் ஓடியதால் பீட்சா 4 படத்திற்கு முன்பாக சூது கவ்வும் 2 படத்தினை தயாரிக்கலாம் என ஆசைப்பட்டேன். அப்படித்தான் இந்த படத்தின் பணிகள் தொடங்கின.

முதலில் மிர்ச்சி சிவாவிடம் பேசி ஒப்பந்தம் செய்தோம். அவர் ‘கலகலப்பு’, ‘சென்னை 28’, ‘தமிழ் படம்’ ஆகிய படங்களின் இரண்டாவது பாகத்தில் நடித்திருந்தார். அனைத்தும் வெற்றி பெற்ற படங்கள். இந்த செண்டிமெண்ட் காரணமாக அவரை ஒப்பந்தம் செய்தோம். அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது மகிழ்ச்சியை தந்தது.

அதன் பிறகு நானும், சி வி குமாரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கத் தொடங்கினோம்.‌ நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். அதற்காக இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படம் வரும் 13ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில், ”தயாரிப்பாளர்கள் சி.வி.‌குமார் மற்றும் தங்கராஜ் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள். படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் ரசிக்கும் படி சுவாரசியமாக இருக்கின்றன. நிச்சயமாக இந்த திரைப்படம் வெற்றி பெறும். ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.

சென்னை 28 படத்தில் நான் பணியாற்றும்போது மிர்ச்சி சிவாவும் அதில் நடித்திருந்தார். அவருடைய திறமை இன்னும் வெளிப்படவில்லை என்று தான் நான் கருதுகிறேன். நல்லதொரு தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார். நிச்சயமாக அவர் வெல்வார் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.‌

தயாரிப்பாளர் சி வி குமாரிடம் வாய்ப்பு பெற்றது தனி கதை. நானும் என்னுடைய நண்பரும் இணைந்து எங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் அவருக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பி, அதன் மூலமாக வாய்ப்பினை பெற்றோம். அது மறக்க இயலாத நிகழ்வு.

பின்னர் நான் சந்தோஷ் நாராயணனை சந்தித்தேன். அவருடைய இசையில் உருவான பாடல்கள் எதுவும் எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு வேறு மாதிரியான இசை வேண்டும் என்று கேட்டேன். அவர் அதற்கும் தயாராக இருந்தார். இன்று அவர் தனித்துவமான அடையாளத்துடன் இருக்கிறார். இதற்காக அவர் கடுமையாக உழைத்தார். இன்று புதிய சினிமா உருவாக்க வேண்டும் என்று நினைக்கும் படைப்பாளிகளுக்கு அவர்தான் முதல் தேர்வு. அவருடைய திறமையை கண்டெடுத்த சி வி குமாருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌ சூது கவ்வும் 2 படமும் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்று தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை தர வேண்டும் என வாழ்த்துகிறேன். மகிழ்ச்சி, நன்றி,” என்றார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், ”பா ரஞ்சித் மின்னஞ்சல் அனுப்பி தயாரிப்பாளர் சி வி குமாரை கவர்ந்தார். நான் அவருக்கு ஃபேஸ்புக்கில் மெசேஜ் அனுப்பி வாய்ப்பினை பெற்றேன். நானும் நலன் குமாரசாமியும் குறும்படங்களை இயக்கி வெற்றி கண்ட பிறகு திரைப்படங்களை உருவாக்குவதற்காக தயாரிப்பாளர்களை அணுகத் தொடங்கினோம். தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லும் ஸ்டைல் எனக்கு என் மீது இருந்த தன்னம்பிக்கையை குறைத்து விட்டது. கதை சொல்லும் விதம் எனக்கு பிடிபடவில்லை. அதனால் ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி அவர்களை சம்மதிக்க வைப்பதெல்லாம் முடியாது. அதனால் நமக்கெல்லாம் தயாரிப்பாளர்கள் கிடைக்க மாட்டார்கள் என்று நம்பினேன். அந்த தருணத்தில் தான் அட்டகத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது தயாரிப்பாளர் மதுரையிலிருந்து வருகை தந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டவுடன் அவரை ஃபேஸ்புக்கில் பின் தொடர்ந்தேன். ஒரு நாள் அவருடைய சென்னை அலுவலகத்திற்கு வரவழைத்து கதையை கேட்டார்.‌ அவரை சந்தித்த உடன் நான் சொன்ன முதல் வார்த்தை எனக்கு கதை சொல்ல வராது என்றேன், அவர் பரவாயில்லை திரைக்கதையை கொடுங்கள் என்றார். அதன் பிறகு ஒரு மணி நேரத்தில் கதையை வாசித்து விட்டு படம் தயாரிக்கலாம் என்றார். அதற்காக இந்த தருணத்தில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேடையில் தற்போது நின்றிருக்கும் அனைத்து திறமைசாலிகளையும் உருவாக்கியதற்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சூது கவ்வும் படத்தின் கதையை நலன் குமாரசாமி எழுதும்போதே எனக்கு தெரியும். அவர் ஃபாதர் ஆப் டார்க் ஹுயூமர். அவருடைய திரைக்கதை சிறப்பாக இருக்கும். சூது கவ்வும் படத்தை நாம் எப்போது வேண்டுமானாலும் பார்த்து ரசிக்கலாம். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி இருக்கிறது. இதற்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியும், வாழ்த்தும் தெரிவித்துக் கொள்கிறேன். சூது கவ்வும் படத்தின் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் தொடர்புள்ள ஒரே கதாபாத்திரம் அருமை பிரகாசம். அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருணாகரனுக்கும் என்னுடைய வாழ்த்துகள். சூது கவ்வும் படத்தின் முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் பெரிய அளவில் வெற்றியைப் பெறும்,” என்றார்.

இயக்குநர் நலன் குமாரசாமி பேசுகையில், ”சூது கவ்வும் படத்தை உருவாக்கும் போதே மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது அதனை 47 நாட்களில் உருவாக்கினோம். அதன் பிறகு நீண்ட தூரம் பயணித்து விட்டேன். அது ஒரு மேஜிக் போல் நடந்தது.

சி வி குமார் ஸ்கிரிப்ட் படித்து அதனை நன்றாக ஜட்ஜ் செய்யக்கூடிய திறமை பெற்றவர். அவர் ஸ்கிரிப்டை மட்டுமல்ல டைரக்டரையும் ஜட்ஜ் செய்யக்கூடியவர். திறமையான இயக்குநர்கள் உருவாகி இருக்கிறார்கள் என்றால் அதில் அவருடைய கணிப்பும் இருக்கிறது.
சூது கவ்வும் 2 படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும்,” என்றார்

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசுகையில், ”இயக்குநர்கள் பா ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி இதுவரை எந்த நிகழ்வுக்கும் ஒன்றாக வந்ததில்லை என நினைக்கிறேன். இங்கு அவர்கள் ஒன்றாக வந்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அட்டகத்தி படத்திற்கு முன்பு என்னை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு தயாரிப்பாளரிடத்திலும் அறிமுகப்படுத்தி திறமையான இசை கலைஞர் வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டவர் அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா.‌ நான் எப்போதெல்லாம் சோர்ந்து போகிறேனோ அப்போதெல்லாம் உற்சாகப்படுத்துபவர் மிர்ச்சி சிவா தான்.

மிர்ச்சி சிவா நடித்த தமிழ் படம் தான் நான் இசையமைக்க வேண்டிய முதல் திரைப்படமாக இருக்க வேண்டியது.‌ அந்தப் படத்தின் இசை வேறு வடிவமாக இருக்கும் நீ வேண்டாம் என்று நாசுக்காக மறுத்தவர் மிர்ச்சி சிவா.

அதன் பிறகு சி.வி.‌குமார் என்னை ஒருநாள் சந்தித்தார். என்னுடைய இசை எல்லாம் கேட்டுவிட்டு நன்றாக இருக்கிறது, ஒரு மூன்று மாதம் காத்திருங்கள் என்றார். சொன்னது போல் மூன்று மாதம் கழித்து வந்தார், பா. ரஞ்சித்தை அறிமுகப்படுத்தினார்.‌ அவருக்கு என்னுடைய இசை பிடிக்கவில்லை. இந்த மக்களை பார் என்று அழைத்துச் சென்று காண்பித்தார். அதன் பிறகு ஃபோக் மியூசிக்கை பற்றி தெரிந்து கொண்டேன்.‌ உண்மையை சொல்லப் போனால் என்னை ஒரு கலைஞராக மாற்றியது பா. ரஞ்சித் தான்.

எனக்கு கிடைத்த முதல் மூன்று படங்கள் என்னை அடையாளப்படுத்தியவை. இதற்காக இந்த மூன்று இயக்குநர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சூது கவ்வும் படத்தின் முதல் பாகத்திற்கு இசையமைக்கும் போது உணர்வுப்பூர்வமாக இருந்தது. அது மறக்க முடியாத அனுபவம். இந்த மூன்று இயக்குநர்களிடம் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்.

சூது கவ்வும் 2 படத்திற்கு இசையமைத்த அறிமுக இசையமைப்பாளருக்கு வாழ்த்துகள். அவர் இங்கு மேடையில் நேரலையாக இசை நிகழ்ச்சி நடத்தினார். இது என்னை மிகவும் கவர்ந்தது. இந்த இசை அமைப்பாளருக்கு தொடர்ந்து இரண்டு படங்களில் வாய்ப்பு வழங்குங்கள் என்று தயாரிப்பாளர் சி வி குமாரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

சூது கவ்வும் 2 குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.‌ இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள், நன்றி,” என்றார்.

தயாரிப்பாளர் சி வி குமார் பேசுகையில், ”பா ரஞ்சித் அவருடைய திருமணத்திற்காக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒரு அழைப்பிதழை அனுப்பி இருந்தார். அதன் பிறகு அவருடனான நட்பு தொடர்ந்தது. ஒரு நாள் அவர் கதையை சொன்னார். அது எனக்கு பிடித்திருந்தது.‌
அட்டகத்தி படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கார்த்திக் சுப்பராஜ் சொன்ன பீட்சா கதை பிடித்தது, அந்த படத்தின் பணிகளையும் தொடங்கினேன்.

இவரிடம் நல்ல ஒரு கதை இருக்கிறது என்று நலன் குமாரசாமியை அறிமுகப்படுத்திய பிறகு கார்த்திக் சுப்புராஜ் என்னிடம் சொன்னார்.‌ அதன் பிறகு அவர் சொன்ன கதையும் பிடித்தது.

சந்தோஷ் நாராயணனை சந்தித்தபோது அவர் வேறு ஒரு படத்திற்காக பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆனால் அவருடைய திறமை எனக்கு பிடித்திருந்தது, நம்பிக்கையும் இருந்தது.

பா. ரஞ்சித் என்னை சந்தித்தபோது இசை யுவன் ஷங்கர் ராஜா தான் வேண்டும் என்று கேட்டார். அவரை சமாதானப்படுத்தி சந்தோஷ் நாராயணனை ஒரு முறை சந்தியுங்கள், அவருடன் பணியாற்றுங்கள், பிடிக்கவில்லை என்றால் மாற்றிக் கொள்ளலாம் என்றேன்.

சூது கவ்வும் 2 படத்தின் கதையை எழுதிக் கொடுங்கள் என்று நலன் குமாரசாமியிடம் கேட்டேன். அவரால் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை, அதன் பிறகு அவரிடம் கதை கருவை கொடுங்கள். நாங்கள் திரைக்கதை எழுதிக் கொள்கிறோம் என்று நான் அனுமதி கேட்டேன். அர்ஜுன் திறமையான எழுத்தாளர். அவருக்கு கதையைப் பற்றிய அறிவு நிறைய இருக்கிறது. இன்று ஏராளமானவர்களுக்கு காமெடியை காட்சிப்படுத்த தெரியவில்லை. ஆனால் இயக்குநர் அர்ஜுன் அதனை இந்தப் படத்தில் நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார்.‌

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர், என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி இருக்கிறார்கள்.

இந்தப் படம் இன்று இந்த அளவிற்கு ரசிகர்களை சென்றடைகிறது என்றால் அதற்கு முதன்மையான காரணம் தயாரிப்பாளர் தங்கராஜ் தான். திரைப்படம் நன்றாக வந்திருக்கிறது, திரையரங்கில் பார்த்து ரசிக்கும் வகையிலான படம். அனைவருக்கும் பிடிக்கும். இந்த படத்தின் பணிகள் நிறைவடையும் முன்பே அடுத்த பாகத்திற்கான கதையையும் அர்ஜுன் எழுதிக் கொடுத்து விட்டார். அந்த படமும் விரைவில் நடைபெறும் என்று நம்புகிறேன். எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி,” என்றார்.

இயக்குநர் எஸ் ஜே அர்ஜுன் பேசுகையில், ”தயாரிப்பாளர் சி வி குமார் நிறைய விஷயங்களை மனதிற்குள் வைத்திருப்பார்.‌ அது நடைபெறும் போது தான், சாத்தியமாகும் போது தான், அவர் என்ன நினைத்தார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிகழ்வு திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட்டின் ரீ யூனியன் நிகழ்வாக இருக்கிறது.

நான் முண்டாசுப்பட்டி படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன். பா ரஞ்சித், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரை பார்க்கும்போது எனக்குள் பயம் இருக்கும். அந்த பயம் தற்போது எனக்கு மீண்டும் வந்து விட்டது இவர்கள் அனைவரையும் ஒன்றாக இங்கு பார்க்கிறேன்.

சூது கவ்வும் 2 படத்தினை இயக்குவதற்காக எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி. படத்தை ஓரளவு சிறப்பாகவே செய்து இருக்கிறோம். இந்தப் படத்தை இயக்குநர் நலன் குமாரசாமி பார்த்துவிட்டு திட்டாமல் இருந்தாலே வெற்றி பெற்றதாகவே நினைக்கிறேன்.

இந்தப் படத்தில் நடித்த கருணாகரன், எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் தங்களுக்கான கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்தனர். படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். அனைவருக்கும் இந்த தருணத்தில் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தை இயக்குவதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சி வி குமாருக்கும் நன்றி. தயாரிப்பாளர் தங்கராஜை அவருடைய உணவகத்தில் சந்தித்து முதலில் பீட்சா 4 படத்தின் கதையை விவரித்தேன். அதன் பிறகு சூது கவ்வும் 2 படத்தின் கதையை முழுவதுமாக சொன்னேன். அதை கேட்டுவிட்டு அவர் இந்த படத்தை தயாரிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார் இதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

நடிகர் பாபி சிம்ஹா பேசுகையில், ”சூது கவ்வும் 2 படத்தின் முன்னோட்டம் சிறப்பாக இருக்கிறது, மிகப்பெரிய நகைச்சுவை படைப்பாக இருக்கும் என்று நம்பிக்கையே உண்டாக்குகிறது. இந்தப் படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும். ஏனென்றால் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்திருக்கிறார். சில பேரால் தான் சில கேரக்டர்களை ஏற்று நடிக்க முடியும். இந்த வகையில் இந்த படத்தில் இடம்பெறும் குருநாத் என்ற கேரக்டரை சிவாவால் மட்டுமே நடிக்க முடியும். அவர் நன்றாக நடித்திருப்பார் என்று நான் நம்புகிறேன்.‌

சி. வி. குமார் சார் ‘சூது கவ்வும் 2’ வெல்லும், கவலைப்படாதீர்கள். சூது கவ்வும் படத்தின் முதல் பாகத்தில் நடித்தேன். என் நடிப்பு மீது இயக்குநருக்கு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. எடிட்டர் சில காட்சிகளை பார்த்துவிட்டு பாபி சிம்ஹா நன்றாகத்தான் நடிக்கிறார் என்று சொன்ன பிறகுதான் இயக்குநருக்கு நம்பிக்கை வந்தது.

தயாரிப்பாளர் சி வி குமாரிடம் சம்பளம் வாங்கிய அனுபவம் மறக்க முடியாதது.‌ இந்தப் படம் நிச்சயமாக பெரிய வெற்றியை பெறும்,” என்றார்

நடிகர் மிர்ச்சி சிவா பேசுகையில், ”தயாரிப்பாளர் சி வி குமாரும், இயக்குநர் அர்ஜுனும் என்னை சந்தித்தனர். சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறோம் என்றனர். இந்தப் படத்திற்கு நலன் குமாரசாமி ஒரு அவுட்லைனை சொல்லி இருக்கிறார், அதனை நாங்கள் விரிவுபடுத்தி இருக்கிறோம் என இயக்குநர் அர்ஜுன் முழு கதையையும் சொன்னார், நன்றாக இருந்தது.

தயாரிப்பாளர் சி வி குமார் தமிழ் சினிமாவின் சொத்து. அவர் ஒரு பல்கலைக்கழகம். அந்தப் பல்கலைக்கழகத்தில் வசதி இல்லை என்றாலும் திறமையான மாணவர்களை உருவாக்கியிருக்கிறார். சினிமாவை அளவு கடந்து நேசிப்பவர். இன்னும் நிறைய புதுமுக திறமைசாலிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து அவர் படங்களை தயாரிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

தயாரிப்பாளர் தங்கராஜ் தங்கமான மனிதர். படப்பிடிப்பு முழுவதும் சுவையான உணவை வழங்கினார். இந்தப் படத்திற்கான சம்பளம் காசோலையாக எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகியவை விற்பனையான பிறகு சம்பளம் கிடைக்கும் என சொல்லி இருக்கிறார்கள். அதனை நினைவூட்ட விரும்புகிறேன்.

இந்த படத்தில் வாகை சந்திரசேகருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது மறக்க முடியாத அனுபவம்.

இந்த படத்தின் இசையமைப்பாளர் எட்வின் லூயிஸ் அற்புதமான திறமைசாலி. அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது வாழ்த்துகள்,” என்றார்.

” திருக்குறள் ” படத்திற்கு பாடல்கள் எழுதி இசையமைக்கும் இசைஞானி இளையராஜா.

0

வரலாற்று நிகழ்வாக
இசைஞானி இளையராஜா இசையில்
‘திருக்குறள்’ திரைப்படம்

” திருக்குறள் ” படத்திற்கு பாடல்கள் எழுதி இசையமைக்கும் இசைஞானி இளையராஜா.

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.

அறம் சார் வாழ்வியலை மானுடர்க்கு போதிப்பதில் உலகில் முன்னிலை வகிக்கும் நூல் திருக்குறள். திருக்குறளின் முப்பாலை மையக் கருவாகக் கொண்டு, இப்படத்திற்கான திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.
படைப்பினூடாக படைப்பாளியைக் கண்டடையும் முயற்சியில் திருவள்ளுவரும் இப்படத்தில் ஒரு பாத்திரமாக வருகிறார். கூடவே வாசுகியும், அதோடு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியலும் இத்திரைப்படத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது.

காதலோடு, வீரமும் தமிழர் வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாகும். அன்றைய தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் போர்க்களக் காட்சிகளும் மிகுந்த பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளன.

இத்திரைப்படத்தைப் பார்த்த இசைஞானி இளையராஜா, உடனடியாக இசையமைக்க இசைவு தெரிவித்தார். அத்துடன் இப்படத்திற்காக, சங்க இலக்கியச் சொற்களோடு, கவித்துவமும், பொருட்செறிவும் மிக்க இரு பாடல்களையும் எழுதியுள்ளார்.
முத்தமிழில், முதல் தமிழுக்கான உயரிய படைப்பிற்கு, இரண்டாம் தமிழின் அரியணையில் வீற்றிருக்கும் இசைஞானி இசையமைப்பது, இத்தனை ஆண்டுகால தமிழுக்கான வரலாற்றில் ஒரு அற்புத நிகழ்வாகும்.

ஜி.யூ.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பின்பு தான், திருக்குறள் உலக அளவில் அறிஞர்களின் கவனத்தை ஈர்த்தது. அதுபோல் இந்நிகழ்விற்குப் பின் சர்வதேச அளவில் உலக மக்களின் கவனத்தையும் நிச்சயம் இந்த திருக்குறள் படம் ஈர்க்கும்.

இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோரோடு, குணாபாபு, பாடினி குமார் மற்றும் முக்கிய நடிக, நடிகையர் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கலை இயக்குநராக சுரேஷ் கலேரியும், ஆடைவடிவமைப்பாளராக சுரேஷ் குமாரும் பணியாற்றியுள்ளனர். செம்பூர்.கே.ஜெயராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுத எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இத்திருப்பணியில் மதுரை டி.பி.ராஜேந்திரன் முதன்மைப் பங்களிப்புச் செய்துள்ளார். வி.ஐ.டி.வேந்தர் கோ.விஸ்வநாதன் தலைமையிலான தமிழியக்கமும் இப்பணியில் இணைந்துள்ளது. ரமணா கம்யூனிகேஷன்ஸ் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.

காமராஜ் படத்தை இயக்கிய ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sherif Master Launches India’s First Dance OTT Platform, JOOPOP HOME

0

Vadapalani, Chennai – Celebrated choreographer Sherif Master marked a significant milestone today with the launch of JOOPOP HOME, India’s first-ever OTT platform dedicated to dance. The app, unveiled at a vibrant event at Nexus Vijaya Mall, Vadapalani, promises to revolutionize how dance enthusiasts, performers, and creators engage with the art form.

The event was graced by Sherif’s close friends and collaborators, including acclaimed filmmaker *Karthik Subbaraj, director **Rajkumar Periyasamy, and actor *Bobby Simha. Their presence highlighted the deep personal and professional bonds Sherif has nurtured over the years, reflecting his inspiring journey in the world of dance.

Sherif Master’s path to success is a testament to dedication and perseverance. He began his career in *2003, teaching at his own dance school, **Sherif Dance Company (SDC), where he honed his craft and trained aspiring dancers. It is to be Noted that Reputed Actress **Sai Pallavi trained from Sherif dance company and went on to become a great dancer on-screen..Later in **2009, Sherif achieved national fame as the title winner of *Ungalil Yaaru Adutha Prabhu Deva, a dance competition directed by Rajkumar Periyasamy. This life-changing victory not only brought him recognition but also opened the doors to his career as a film choreographer.

Since then, Sherif has choreographed over 250 songs across Tamil, Malayalam, Telugu, and Kannada films, carving a unique niche for himself in the industry. His collaborations with Rajkumar and Karthik Subbaraj have been particularly notable. Sherif choreographed the hit songs in Rajkumar’s recent blockbuster *Amaran, and with Karthik, he has worked on every film from *Iraivi to the upcoming Suriya 44, showcasing his creative genius and versatility.

The stars present at the event shared an intriguing insight into Sherif’s unwavering commitment to his vision. Karthik Subbaraj, Rajkumar Periyasamy, and Bobby Simha revealed that Sherif had been talking about the idea for JOOPOP HOME for nearly 6-7 years. They noted how his relentless belief in the project had finally brought it to life.

Speaking about Sherif’s journey, Rajkumar Periyasamy said: “I’ve witnessed Sherif’s unwavering commitment to dance since his early days. His vision and passion were evident even during the competition I directed in 2009. Watching him launch JOOPOP HOME is a proud moment for me, as it reflects his ability to dream big and achieve it.”

Karthik Subbaraj echoed these sentiments: “Sherif is not just a choreographer; he is a storyteller through movement. Every project we’ve worked on together has been elevated by his creativity. JOOPOP HOME is a testament to his drive to take dance to greater heights.”

Sherif, visibly moved by the overwhelming support at the event, shared his vision for JOOPOP HOME: “Dance has been my life since the very beginning. Starting with my dance school, to the competition in 2009, and now as a film choreographer, I’ve always believed in pushing boundaries. JOOPOP HOME is my way of giving back to the community and creating a space for dancers to shine on a global stage.”

The app aims to be a comprehensive platform offering tutorials, performances, competitions, and exclusive behind-the-scenes glimpses into the world of dance. Sherif hopes it will inspire and empower the next generation of dancers while giving them access to unparalleled opportunities.

The event culminated in heartfelt speeches and applause, with Sherif Master’s close friends emphasizing the importance of this moment not just for him but for the entire dance fraternity.

About JOOPOP HOME
JOOPOP HOME is India’s first OTT platform focused solely on dance, offering a wide range of content to entertain, educate, and inspire dancers and enthusiasts. The app is available for download now, inviting users to be part of a growing global dance community.

As Sherif Master embarks on this new chapter, his journey continues to inspire, reminding everyone that with passion and determination, dreams can indeed take flight.

ஷெரிஃப் மாஸ்டர் டான்ஸ்கான இந்தியாவின் முதல் OTT பிளாட்ஃபார்ம், JOOPOP HOME ஐ துவங்கியுள்ளார் !!

தமிழ் திரையுலகின் பிரபல டான்ஸ் மாஸ்டரான ஷெரிப் மாஸ்டர் டான்ஸ்காக பிரத்தியேகமான,  இந்தியாவின் முதல் OTT தளமான JOOPOP HOME ஐ துவங்கியுள்ளார்.  வடபழனி நெக்ஸஸ் விஜயா மாலில் நடைபெற்ற விழாவில்,  இந்த செயலி (app) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலி (app)  நடன ஆர்வலர்கள், நடன கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகள், கலை வடிவத்துடன் எவ்வாறு மேம்படுத்தலாம்  என்பதில் புதிய  புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

JOOPOP HOME அறிமுக நிகழ்வில் புகழ்பெற்ற திரைப்பட கலைஞர்களான *இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், இயக்குநர் *ராஜ்குமார் பெரியசாமி மற்றும் நடிகர் பாபி சிம்ஹா ஆகியோருடன் ஷெரீப்பின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் கலந்து கொண்டனர். பல ஆண்டுகளாக நடனத் துறையில் ஷெரிஃப் ஆற்றி வந்த 

சிறப்பான பணிகள், இனி இணையம் வழியே நடன உலகில் அனைவரையும் ஊக்குவிக்கும். 

ஷெரீஃப் மாஸ்டரின் வெற்றிக்கான பாதை, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சிக்கு ஒரு சான்றாகும்.  ஷெரீஃப் 2003 ல் தனது சொந்த நடனப் பள்ளியான * ஷெரீஃப் டான்ஸ் கம்பெனி (SDC)* மூலம் டான்ஸ்  கற்பிக்கத் துவங்கினார்.  அவர் தனது தனித்துவமான நடனத் திறமையை மேம்படுத்தி, ஆர்வமுள்ள நடனக் கலைஞர்களுக்கு பயிற்சி அளித்தார். இந்த நிறுவனம் மூலமே நடிகை சாய்பல்லவி டான்ஸில் அறிமுகமாகி கலக்கினார் என்பது குறிப்பிடதக்கது. 2009 இல், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய உங்களில் யாரு அடுத்த பிரபு தேவா என்ற நடனப் போட்டியில் வென்று, தேசிய அளவில் புகழ் பெற்றார் ஷெரீஃப். இந்த பிரம்மாண்ட வெற்றி அவருக்கு அங்கீகாரத்தை அளித்தது மட்டுமல்லாமல், ஒரு திரைப்பட நடன இயக்குநராக அவரது திரை வாழ்க்கைக்கான கதவுகளையும் திறந்து, பல திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று தந்தது.

 ஷெரீஃப் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்களில் 250 பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். அதில்  இயக்குநர் ராஜ்குமார் மற்றும்  இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உடன் அவர் பணிபுரிந்த படங்கள்  குறிப்பிடத்தக்கவை. ராஜ்குமாரின் சமீபத்திய பிளாக்பஸ்டர் அமரன்  படத்தில் ஹிட் பாடல்களுக்கு  ஷெரீஃப் நடனம் அமைத்துள்ளார். மேலும் கார்த்திக்குடன் இணைந்து இறைவி முதல் வரவிருக்கும் சூர்யா 44 வரை தொடர்ந்து பணியாற்றி, அவரது படைப்பாற்றல் மற்றும் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தி வருகிறார்.

JOOPOP HOME அறிமுக நிகழ்வில் கலந்து கொண்ட நட்சத்திரங்கள், ஷெரிப்பின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பற்றிய தங்கள் பார்வையைப் பகிர்ந்து கொண்டனர். கார்த்திக் சுப்பராஜ், ராஜ்குமார் பெரியசாமி மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் JOOPOP HOME  பற்றிய ஐடியாவை பற்றி, ஷெரிப் சுமார் 6-7 ஆண்டுகளாக பேசிக் கொண்டிருந்ததாக தெரிவித்தனர். இந்த திட்டத்தின் மீது  அவர் இடைவிடாத நம்பிக்கை கொண்டு, இறுதியாக உயிர்ப்பித்தது குறித்து, தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

ஷெரீப்பின் பயணம் குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூறியதாவது: *”ஆரம்ப காலத்தில் இருந்தே ஷெரீப்பின் அசைக்க முடியாத நடனத் திறமையைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். 2009 இல் நான் இயக்கிய போட்டியில் கூட, அவருடைய  தனித்த பார்வையும் ஆர்வமும் வெளிப்பட்டது. அவர் JOOPOP HOME ஐத் தொடங்குவதைப் பார்ப்பது, எனக்கு ஒரு பெருமையான தருணம், ஏனெனில் ஒரு மிகப்பெரிய  கனவை காண்பதோடு, அதை அடைய முடியும் என்கிற உற்சாகத்தை இது தருகிறது.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறுகையில் : “ஷெரிப் ஒரு நடன இயக்குநர் மட்டுமல்ல; அவர் ஒரு கதைசொல்லி. நாங்கள் இணைந்து பணியாற்றிய ஒவ்வொரு திரைப்படத்திலும் அவரது படைப்பாற்றலால் உயர்ந்து கொண்டே வருகிறது. JOOPOP HOME எனும் இந்த ஆப்  நடனத்தை அடுத்த படிக்கு கொண்டு  செல்வதற்கான அவரது உந்துதலுக்கு ஒரு சான்றாகும்.”

டான்ஸ் மாஸ்டர்  ஷெரிப் கூறுகையில் : “ஆரம்பத்தில் இருந்தே நடனம்தான் என் வாழ்க்கை. எனது நடனப் பள்ளியிலிருந்து தொடங்கி, 2009 இல் போட்டி, இப்போது ஒரு திரைப்பட நடன இயக்குநர் என, நான் எப்போதும், அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை வைத்திருக்கிறேன். JOOPOP HOME  என்பது சமூகத்திற்கு நான் ஆற்றும் பங்களிப்பாகும், நடனக் கலைஞர்கள் உலகளாவிய அரங்கில் பிரகாசிக்க ஒரு இடத்தை உருவாக்குவதற்கு என்னுடைய ஒரு சிறு முயற்சியாக இது இருக்கும்.”

பயிற்சிகள், நிகழ்ச்சிகள், போட்டிகள் மற்றும் நடன உலகில் பிரத்யேகமான திரைக்குப் பின்னால் உள்ள காட்சிகளை வழங்கும், ஒரு விரிவான தளமாக இந்த செயலி செயல்படும். இது அடுத்த தலைமுறை நடனக் கலைஞர்களை ஊக்குவிக்கும் மற்றும் அவர்களுக்கு இணையற்ற வாய்ப்புகளை வழங்கும் என்று ஷெரிப் நம்புகிறார்.

இவ்விழா இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் மற்றும் கைதட்டல்களுடன் உச்சக்கட்டத்தை அடைந்தது, ஷெரிப் மாஸ்டரின் நெருங்கிய நண்பர்கள் அவருக்கு மட்டுமல்லாது, முழு நடன சமூகத்திற்கும் இந்த தருணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்கள்.

JOOPOP HOME பற்றி 

JOOPOP HOME என்பது நடனத்தில் மட்டுமே கவனம் செலுத்தும் இந்தியாவின் முதல் OTT தளமாகும், இது நடனக் கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்களை மகிழ்விக்கவும், கற்பிக்கவும், ஊக்கப்படுத்தவும் பரந்த அளவிலான உள்ளடக்கத்தை வழங்குகிறது. வளர்ந்து வரும் உலகளாவிய நடன சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பை வழங்கும், இந்த செயலியை, இப்போது அனைவரும் பதிவிறக்கம் செய்யலாம். 

ஷெரீஃப் மாஸ்டர் இந்தப் புதிய பயணத்தை துவங்குவது, ஆர்வமும் உறுதியும் இருந்தால், கனவுகளை சாத்தியமாக்க முடியும் எனும்  நம்பிக்கையை தந்து, அனைவருக்கும்  ஊக்கமளிக்கிறது.

புயல் மற்றும் கனமழை காரணமாக டிசம்பர்-27க்கு மாற்றி வைக்கப்பட்ட ‘ராஜா கிளி’ ரிலீஸ்

0

‘மிக மிக அவசரம்’, ‘மாநாடு’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’.

கதை, வசனம், பாடல்கள், இசையமைப்பு என நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் கைவண்ணத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மூலம் அவரது மகனான நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

தம்பி ராமையா இந்த படத்தில் கதைநாயகனாக நடிக்க அவரது வெற்றி கூட்டணியாக வலம் வரும் நடிகர் சமுத்திரக்கனி இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பாடகர் கிரிஷ், வெற்றிக்குமரன், இயக்குநர் மூர்த்தி, ஷ்வேதா ஷிரிம்டன், சுபா, பிரவீன், முபாஸிர், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வரும் டிசம்பர் 13-ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவின் போது அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்கள் கன மழையால் பாதிக்கப்பட்டு மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.

மேலும் இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள் வரும் டிசம்பர் 13-ஆம் தேதி மீண்டும் ஒரு கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை மையத்தில் இருந்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மழை நாட்களில் மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை சமாளிக்கவே போராடும் சூழ்நிலையில் ‘ராஜா கிளி’ படத்தை டிசம்பர் 13-ல் வெளியிடுவது சரியாக இருக்காது எனக் கருதிய படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இதன் ரிலீஸ் தேதியை டிசம்பர் 27 ஆம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளார்.

‘ராஜா கிளி’ இன்றைய காலத்திற்கு ஏற்ற ‘ரத்தக்கண்ணீர்’ போன்ற ஒரு நல்ல கருத்தம்சம் கொண்ட படம் என்பதால் மக்கள் இந்த படத்தை தங்கள் பிரச்சனைகளை மறந்து திரையரங்குகளில் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ரிலீஸ் தேதி மாற்றம் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவாமிஐயப்பன் படத்திற்காக திரைக்கலைஞர் களுடன் ஆடிப்பாடிய குழந்தை நட்சத்திரம் லக் ஷனா ரிஷி.

0

——————————————அப்பா மீடியாவின் எங்க அப்பா இசை ஆல்பத்தின் வெற்றியைத் தொடர்ந்து “சுவாமி சரணம் பாடுவோம்” என்ற இரண்டாவது இசை ஆல்பம் லக்ஷனா ரிஷி பல திரைக்கலைஞர்களுடன் இணைந்து “கார்த்திகையில் மாலையிட்டு சரணம் பாடுவோம்
சுவாமி சரணம் பாடுவோம்
நெய்விளக்கு தீபமிட்டு சரணம் பாடுவோம்” என்று ஆடிப்பாடிநடித்திருக்கும் பாடல் காட்சியை கேரளாவின் மலைப்பகுதிகளில் உள்ள புல்லுமேடு. வாகமன், பசுப்பாறை, .மேரி குளம்,பருந்தும்பாறை,மற்றும் ஐயப்பன் கோவிலைச்சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கினார்கள். இதில் கருப்பாடை அணிந்து குழந்தை நட்சத்திரம் லக் ஷ ணா ரிஷியுடன் இணைந்து ஆடிப்பாடிய திரைக்கலைஞர்கள்பாவாலட்சுமணன், காதல் சுகுமார், கொட்டாச்சி. ஆன்ந்த் செல்வராஜ், செந்தூர்பாண்டியன், சாரப் பாம்பு சுப்புராஜ், காதல் சரவணன், ராஜாஜிராஜன், சித்ரகுப்தன். தெனாலி சாமி.சங்கர், சிவலிங்கம், மற்றும் பலர் கருப்பாடை அணிந்து ஆடிப்பாடி நடித்திருக்கிறார்கள்
இந்த பாடல் காட்சி கால் கொலுசு படத்தை இயக்கிய டைரக்டர் எஸ்.வி.ரிஷி இயக்கிக் கொண்டிருக்கும் சுவாமி ஐயப்பன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் இந்த ஆல்பம் பாடல் இடம் பெறுகிறது. கதைப்படி மாலைப் போட்டுக்கொண்ட ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதும் அதனால் ஏற்படும் ஆபத்து களும், பிரச்சனைகளும் அதிலிருந்து எப்படி தப்பித்து ஐயப்பனின் ஆசியோடு ஐயனைதரிசனம் செய்கிறார்கள் என்பதை விளக்கும் பாடல் காட்சி தான் இது. ஒளிப்பதிவு: ரெஜி, இசை – சந்தோஷ் சாய், எடிட்டிங்:
பிரகாஷ் மப்பு ,
தயாரிப்பு மேற்பார்வை: சைமன் நெல்சன்
மக்கள் தொடர்பு..பெருதுளசிப பழனிவேல்
தயாரிப்பு: திருமதி அனீஷா சதீஷ்
எழுத்து இயக்கம்
எஸ்.வி.ரிஷி.

HIGHLIGHTS OF THE 22nd CHENNAI INTERNATIONAL FILM FESTIVAL

0

WITH THE SUPPORT OF THE GOVERNMENT OF TAMIL NADU OUR HONOURABLE CHIEF MINISTER THIRU M.K. STALIN AND HONOURABLE DEPUTY CHIEF MINISTER THIRU UDHAYANIDHI STALIN CHENNAI INTERNATIONAL FILM FESTIVAL PRESENTS ITS 22ND EDITION

Dates of the Festival: 12th to 19th December, 2024
Venues: PVR – Sathyam Cinemas, Chennai PVR INOX Chennai City Centre

Opening Ceremony: PVR – Sathyam Cinemas, Chennai Sathyam Screen (12th of December, 2024 at 6:00 pm)
Closing Ceremony: PVR – Sathyam Cinemas, Chennai Sathyam screen (19th of December, 2024 at 6:00 pm)

The submission process for the Tamil Films Competition category was communicated through the press, postings on the official website, and social media pages, with the deadline for receiving entries set as 2nd November, 2024. A total of 25 films were selected by the Preview Committee.

Similar to the previous year, we organized the competition for the World Cinema category, inviting entries through the FilmFreeway website, and the response was encouraging. The preview committee selected 12 films for this category. The awards for the Tamil film competition and World Cinema Competition will be unveiled during the closing ceremony.

HIGHLIGHTS OF THE 22nd CHENNAI INTERNATIONAL FILM FESTIVAL

Number of Countries: 50 Number of Films: 123
Guests: Diplomats from various Foreign Missions across India and Film Directors from all over the World
Opening Film: The Room Next Door by Pedro Almodóvar (Venice Film Festival, Golden Lion Winner)
Closing Film: Anora by Sean Baker (Cannes Film Festival, Palme d’Or Winner)

AWARD WINNING & NOMINATED FILMS AT PRESTIGIOUS INTERNATIONAL FILM FESTIVALS TO BE SCREENED AT THE 22nd CHENNAI INTERNATIONAL FILM FESTIVAL, 2024

Cannes Film Festival 2024 – Winners & Nominations

  1. Emilia Perez by Jacques Audiard (Jury Prize)
  2. The Seed of the Sacred Fig by Mohammad Rasoul (Special Prize)
  3. The Substance by Coralie Fargeat (Best Screenplay)
  4. Grand Tour by Miguel Gomes (Best Director)
  5. Norah by Tawfik Alzaidi (Special mention – Un Certain Regard)
  6. The Shameless by Konstantin Bojanov – Anasuya Sengupta (Best Actress – Un Certain Regard)
  7. Anora by Sean Baker (Palme d’Or Winner)
  8. Motel Destino by Karim Ainouz (Nomination)
  9. The Girl with the Needle by Magnus Von Horn (Nomination)
  10. The Village Next to Paradise by Mo Harawe (Nomination)
  11. To a Land Unknown by Mahdi Fleifel (Nomination)

Venice Film Festival 2024 – Winners & Nominations

  1. The Room Next Door by Pedro Almodóvar, (Golden Lion Award for Best Film)
  2. One of Those Days When Hemme Dies By Murat Fıratoğlu, (Special Orizzonti Jury Prize)
  3. Quiet Life by Alexandros Avranas (Nomination)

Berlin International Film Festival 2024 – Winners & Nominations

  1. Memories of a Burning Body by Antonella Sudasassi Furniss (Panorama Audience Award for Best Feature Film)
  2. All Shall be Well by Ray Yeung (Teddy Award for Best Feature film)
  3. Shahid by Narges Kalhor (International Confederation of Art Cinemas -CICAE Art Cinema Award)
  4. Who Do I Belong To by Meryam Joobeur (Nomination)
  5. Andrea Gets a Divorce by Josef Hader (Nomination)
  6. Above the Dust by Wang Xiaoshuai (Nomination)
  7. Scorched Earth by Thomas Arslan (Nomination)
  8. In The Blind Spot by Ayse Polat (Nomination)

Films contribution from Embassies and Cultural Institutes of various countries German: 1 film (Courtesy: The Goethe-Institut, Max Mueller Bhavan, Chennai) Spain: 3 films (Courtesy: Embassy of Spain in India, New Delhi)
Thailand: 1 film (Courtesy: Royal Thai Consulate- General, Chennai)
Taiwan: 2 films (Courtesy: Taipei Economic and Cultural Center,Chennai) French Films: 2 films (Courtesy: Alliance Française Madras, Chennai)
Iranian films: 5 films (Courtesy: Iran Culture House, Mumbai)
Chile: 1 film (Courtesy: Embassy of Chile in India, New Delhi) Hungary: 2 films (Courtesy: Embassy of Hungary, New Delhi)
Russia: 2 films (Courtesy: Russian Centre of Science and Culture, Chennai) Slovakia: 1 film (Courtesy: Embassy of the Slovak Republic to India, New Delhi) Peru: 2 films (Courtesy: Embassy of Peru in India, New Delhi)
Slovenia: 3 films (Courtesy: Embassy of the Republic of Slovenia, New Delhi) Australia: 2 films (Courtesy: Australian Consulate-General, Chennai)

Indian Panorama

A total of 16 films were selected by the preview committee under the Indian Panorama category, representing the best of Indian cinema. Out of the 16 films we are receiving 6 films from the Directorate of Film Festivals, National Film Development Corporation of India (NFDC), India.

Short films by the students of Tamil Nadu Government MGR Film & Television Institute

Best 10 films by the Diploma students of the Tamil Nadu Government MGR Film & Television Institute will be screened at the festival.

Master Talks:

A special premiere for over 5+ movies will take place as part of “Master Talks” at the 22nd Chennai International Film Festival. This is a first-of-its-kind initiative by the Festival Director, Mr AVM K Shanmugam, which is a special initiative introduced in this edition of the festival. As a part of this initiative film directors and crew will be honoured, and they will be briefly interacting with the audience before or after the screening of the film.

Masterclasses & Conversations:

A set of over 10 sessions are planned with eminent personalities from the film industry to conduct a series of masterclasses and conversations for the student community. The Department of Visual Communication, Avichi College of Arts & Science will curate and organize the masterclasses and conversations.

Student Volunteers:

This year we will be taking student volunteers from Avichi College of Arts & Science, Ethiraj College for Women and Hindustan College of Arts & Science.

Delegate Registration:
Online registration only – https://chennaifilmfest.com/ , https://insider.in/22nd-chennai- international-film-festival-delegate-registration-dec12-2024/event
For Media Passes: https://chennaifilmfest.com/media-registration-22nd-ciff/

STRI Cinemas Proudly Announces the Official Biopic on the South Indian Cinema Icon, Silk Smitha

0

On the occasion of the legendary actress Silk Smitha’s birthday, STRI Cinemas is thrilled to announce its upcoming feature film, “Silk Smitha – Queen of the South”.

This official biopic will bring to life the captivating story of the beloved actress, starring Chandrika Ravi in the titular role.

Directed by Jayaram Sankaran, and produced by Vijay Amirtharaj, the film is set to commence production in early 2025.

To mark this special announcement on her birthday, the makers have unveiled an exclusive video, giving audiences a glimpse into the world of Silk Smitha.

SILK SMITHA – Queen of the South

தென்னிந்திய சினிமாவின் அடையாளமான சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை STRI சினிமாஸ் பெருமையுடன் அறிவித்துள்ளது.

பழம்பெரும் நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, STRI சினிமாஸ் தனது வரவிருக்கும் திரைப்படமான “சில்க் ஸ்மிதா – Queen of the South” திரைப்படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
இந்த அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாறு, நடிகை சில்க் ஸ்மிதாவின் வசீகரிக்கும் கதையை உயிர்ப்பிக்கும். இதில் சந்திரிகா ரவி பெயரிடப்பட்ட பாத்திரத்தில் நடிக்கிறார்.

ஜெயராம் சங்கரன் இயக்கத்தில், S.B விஜய் அமிர்தராஜ் தயாரிப்பில், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தப் படம் தயாரிப்பைத் தொடங்க உள்ளது.

அவரது பிறந்தநாளில் இந்த சிறப்பு அறிவிப்பைக் குறிக்கும் வகையில், தயாரிப்பாளர்கள் ஒரு பிரத்யேக வீடியோவை வெளியிட்டுள்ளனர், இது பார்வையாளர்களுக்கு காந்தக்கண்ணழகி – சில்க் ஸ்மிதாவைப் பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறது

ARC 33வது தேசிய டென்பின் பௌலிங் சாம்பியன்ஷிப்

0

25 நவம்பர் – 30 நவம்பர் 2024
அமீபா, சர்ச் ஸ்ட்ரீட், பெங்களூர்

2 டிசம்பர் 2024

ஆகாஷ் மற்றும் சுமதி சாம்பியன்கள்!!

பெங்களூரில் உள்ள அமீபா பௌலிங் மையத்தில் நடந்து முடிந்த ARC 33வது தேசிய டென்பின் பௌலிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கர்நாடகாவின் ஆகாஷ் அசோக் குமார் மற்றும் ஆந்திராவின் சுமதி நல்லபந்து ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

தனது ஏழாவது தொடர் இறுதிப் போட்டியில், கர்நாடகாவின் ஆகாஷ் டெல்லியின் ஷேக் அப்துல் ஹமீதை (425- 353) இரண்டு கேம் டைட்டில் மோதலில் எளிதாக வென்று 3வது பட்டத்தை வென்றார்.

ஸ்டெப்லேடர் சுற்று ஆட்டங்களில், 2 கேம்களின் மொத்த பின்ஃபால் அடிப்படையில், டெல்லியின் ஷேக் அப்துல் ஹமீத், டெல்லியின் துருவ் சர்தாவை (433-335) 98 பின்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

முதல் போட்டியில், டெல்லியின் துருவ் சர்தா, தமிழகத்தின் ஷபீர் தன்கோட்டை (412-372) வீழ்த்தினார்.

தமிழ்நாடு அணியின் ஷபீர் தன்கோட், கணேஷ் என்டி மற்றும் மஹிபால் சிங் ஆகியோர் முறையே 4, 5 மற்றும் 7வது இடத்தைப் பிடித்தனர்.

பெண்களுக்கான இறுதிப் போட்டியில் ஆந்திராவின் சுமதி நல்லபந்து, கர்நாடகாவின் பிரீமல் ஜேவை (342–286) தோற்கடித்தார்.
இது சுமதியின் 4வது தேசிய கிரீடம்.

முன்னதாக, சுமதி (ஆந்திரப் பிரதேசம்) அனுராதா சர்தாவை (டெல்லி) தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் (356-272)
மற்றும் ஆட்டம் 1 இல், சுமதி காஷ்மீர் குடாலேவை (மகாராஷ்டிரா) தோற்கடித்தார் (424-309)

சிறப்பு விருதுகள்:
1) மிகவும் நம்பிக்கைக்குரிய வீரர் – தனுஷ் ரெட்டி (கர்நாடகா)
2) 225க்கு மேல் பெற்ற அதிகபட்ச பின்பால்(ஆண்கள்) – ஷேக் அப்துல் ஹமீத் (டெல்லி) (11)
3) 200 ககு மேல் பெற்ற அதிகபட்ச பின்பால் (பெண்கள்) – ஷபீனா கஸ்மானி (மகாராஷ்டிரா) (4)
4) 6 விளையாட்டுகளில் அதிக பின்பால் (ஆண்கள்) – ஷேக் அப்துல் ஹமீத் (டெல்லி) (1359 பின்கள்)
5) 6 விளையாட்டுகளில் அதிக பின்பால் (பெண்கள்) – அனுராதா சாரதா(டெல்லி) (1081 பின்பால்)
6) பெர்ஃபெக்ட் கேம்- ஷேக் அப்துல் ஹமீத் (டெல்லி)

Lakshmi Creations presents ‘Paramasivan Fathima’ directed and produced by Esakki Karvannan, starring Vimal, speaks about hurdles posed by religions to love

0

Esakki Karvannan, the filmmaker behind the critically acclaimed movie ‘TamilKudimagan’, which starred Director-Actor Cheran in the lead role, is producing and directing a new film under the banner of Lakshmi Creations. Titled ‘Paramasivan Fathima’, the film stars Vimal in the lead role and focuses on a theme of how religions pose hurdles to love even in this modern era.

Earlier referred to as ‘Production Number 7’, the film depicts the lives of two communities from a hill village who are affected by the policies and ideologies of their respective religions. The movie explores, in an engaging and non-preachy manner, how religious issues impact the lives of the people in these communities.

‘Paramasivan Fathima’ features a talented ensemble cast, including Vimal in the lead role, with Chayadevi, M. S. Bhaskar, Manoj Kumar, Sri Ranjani, Athira, Aruldoss, Cool Suresh, Kadhal Sukumar, Veerasamar, and others in key roles.

The film is cinematographed by Myna Sukumar, with music composed by Deepan Chakravarthy. Esakki Karvannan has written and directed the movie. The final leg of the film’s shoot is currently underway, with high-energy scenes being filmed.

The production team has confirmed that the shooting of ‘Paramasivan Fathima’ will conclude soon, and further official announcements, including the title of the film, will be made shortly.

Stay tuned for more updates on this exciting new project from Lakshmi Creations written and directed by Esakki Karvannan, with Vimal playing the protagonist.

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல் நடிக்கும் புதிய படம் ‘பரமசிவன் பாத்திமா’, காதலுக்கு மதங்கள் எவ்வாறு தடையாக நிற்கின்றன என்பது குறித்து பேசுகிறது

இயக்குநர்-நடிகர் சேரன் முதன்மை வேடத்தில் நடித்து பாராட்டுகளை குவித்த ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தை படைத்த இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ எனும் புதிய படத்தில் விமல் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

புரொடக்ஷன் நம்பர் 7 ஆக உருவாகும் இப்படம், மலை கிராமத்தில் வசிக்கும் இரு வேறு நம்பிக்கைகளை சார்ந்த மக்களின் வாழ்க்கையை மதங்களின் கொள்கைகளும் கோட்பாடுகளும் எவ்வாறு பாதிக்கின்றன‌ என்பதை பாசாங்கின்றி சுவாரசியத்துடன் விவரிக்கிறது.

இப்படத்த்தில் விமல் நாயகனாக நடிக்க சாயாதேவி, எம். எஸ். பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்திற்கு மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, தீபன் சக்கரவர்த்தி இசை அமைக்க, இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்குகிறார். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். படம் குறித்த இதர தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெகு விரைவில் வெளியிடப்படும்.

கண்கள்’ & ‘கண்ணை நம்பாதே’ படங்களின் இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் ‘பிளாக்மெயில்’ படத்தின் டப்பிங் தொடங்கியது!

0

ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜெயக்கொடி அமல்ராஜ் வழங்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ & ‘கண்ணை நம்பாதே’ படங்களின் இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் ‘பிளாக்மெயில்’ படத்தின் டப்பிங் தொடங்கியது!

நடிகர் அருள்நிதியின் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ‘கண்ணை நம்பாதே’ போன்ற த்ரில்லர் திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் மாறன். இப்போது, ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி, ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ படத்தை இயக்கியுள்ளார். படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இன்று ஜி.வி.பிரகாஷ் குமார் தனது டப்பிங்கை தொடங்கியுள்ளார்.

இயக்குநர் மு. மாறன் கூறும்போது, ​​“திட்டமிட்டபடி படம் சரியான வேகத்தில் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி தற்போது முடியும் தருவாயில் உள்ளது. நடிகர், இசையமைப்பாளர் என ஜிவி பிரகாஷ் பிஸியாக இருந்தாலும் இந்தப் படத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். அவர் தனது டப்பிங் தொடங்கி இருக்கிறார். விரைவில் அனைத்து பணிகளும் நிறைவடையும்” என்றார்.

எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட க்ரைம்- டிராமா கதைதான் ‘பிளாக்மெயில்’. இந்தப் படத்தின் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், நடிகர்கள் பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைக்கிறார் மற்றும் சான் லோகேஷ் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். சமீபத்தில் வெளியான ‘பிளாக்’ படம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த கோகுல் பெனாய் படத்தின் ஒளிப்பதிவைக் கையாண்டுள்ளார்.

JDS Film Factory Jayakodi Amalraj presents

’Iravakku Aayiram Kangal’ & ‘Kannai Nambathey’ fame Mu. Maran directorial

GV Prakash Kumar’s ‘Blackmail’ dubbing commences

Filmmaker Mu. Maran proved his excellence in filmmaking artistry through his couple of content-driven blockbuster movies like Arulnithi’s ‘Iravukku Aayiram Kangal’ and Udhayanidhi Stalin’s ‘Kannai Nambathey’. The director’s next outing titled ‘Blackmail’ starring GV Prakash Kumar in the lead role is produced by Jayakodi Amalraj of JDS Film Factory. The production house is delighted to announce that the dubbing works for the film has began, and GV Prakash Kumar has started dubbing his portions today.

Director Mu. Maran says, “We are happy that the film is progressing at the right pace as planned. We have already completed shooting the film, and the postproduction work is briskly nearing completion. GV Prakash Kumar despite his busy schedules as actor and music director, has shown complete cooperation for this film. He has started dubbing his portions, and we will be soon wrapping up the entire process.”

Blackmail is a crime-drama laced with unexpected twists and turns that will keep audience engrossed throughout the show. Teju Ashwini is playing the female lad role in this film. Srikanth is playing a pivotal role in this movie, and his role will have a tremendous prominence. Bindu Madhavi, Vettai Muthukumar, Redin Kingsley, Ramesh Thilak, Hari Priya alongside many prominent actors are playing important roles in this film. D Imman is composing music and San Lokesh is overseeing editing works for this film with Gokul Benoy who recently captivated audiences with his visuals in Black, handling cinematography

- Advertisement -

Recent Posts