Wednesday, July 15, 2026
- Advertisement -
Home Blog Page 297

ARJUN DAS ROARS AS MUFASA FOR THE TAMIL VERSION OF DISNEY’S ‘MUFASA: THE LION KING’!

0

Tamil Industry’s Leading Voices- Ashok Selvan, Robo Shankar, Singam Puli, VTV Ganesh and
M. Nasser join Arjun Das for the much-awaited family entertainer!

~ Director Barry Jenkins’ Mufasa: The Lion King releases in India on 20th December 2024 in English, Hindi, Tamil & Telugu ~

Chennai, 20 November 2024: It’s time to delve into the legacy of the ultimate king of the jungle, Mufasa: The Lion King, now brought to life in Tamil with some of the most popular voices of the Tamil industry! Following the blockbuster success of 2019’s live-action ‘The Lion King’, the visually stunning live-action Mufasa: The Lion King has a special treat in store for fans as the Tamil dubbed version presents Arjun Das as Mufasa, Ashok Selvan as Taka, the beloved duo of Robo Shankar and Singam Puli reunite as Pumbaa and Timon respectively, VTV Ganesh as young Rafiki and industry veteran M. Nasser joining the team as Kiros.

Speaking on voicing for one of the most loved characters of cinema, Arjun Das shares, “Being part of Mufasa: The Lion King is a dream come true, and it’s an honour to voice such an iconic character that holds a special place in all our childhood memories. As a little kid, I remember watching The Lion King, never imagining that years later I would be the voice of Mufasa in Tamil. I’ve always wanted to learn more about how Mufasa became one of the greatest kings in cinematic history. Bringing Mufasa to life for Tamil audiences and being a part of Disney’s unparalleled storytelling has truly been a once-in-a-lifetime experience!”

Ashok Selvan speaks on voicing Taka, “Generations across the world have grown up watching The Lion King, and I too have fond memories of this fantastic story, the iconic songs, comical adventures and enjoying it with my friends and family. To bring Taka to life for Tamil audiences in Mufasa: The Lion King, was an experience I will never forget! This is a visual spectacle for families to come together and enjoy on the big screen.”

Robo Shankar speaks on bringing Pumbaa back to life again, ” once again it has been fantastic to be part of this iconic franchise and give my personal touch as the Tamil voice of Pumbaa for Mufasa: The Lion King. Pumbaa is full of life and raises the spirit of those around him with his one-liners and hilarious moments, and voicing for Pumbaa made me relive all the fond memories of 2019, I hope audiences enjoy Pumbaa’s new comedy on the big screen on 20th December.”

Back to voice the beloved Timon after the smashing success of the 2019 film, Singam Puli says, “It is a very happy moment for me to be back as Timon and be a part of such an iconic film that will bring families together to the theatre. My 2019 experience was extremely memorable, and it was great to relive those moments and bring new touches to Timon’s character this time for Mufasa: The Lion King. What I really like about Timon is that he knows how to be happy in any situation and shares his positivity with everyone, audiences will have a great time watching Timon’s antics onscreen once again!” Known for his award-winning comic timing, veteran VTV Ganesh speaks on essaying young Rafiki, “It has been a great experience to be a part of this blockbuster franchise and I enjoyed giving my personal touch to the Tamil voice of Rafiki. Family audiences are in for a treat when Mufasa: The Lion King releases on 20th December!”

Industry veteran M. Nasser joins the dynamic team as the voice of Kiros, “I absolutely enjoyed voicing for this very dynamic character, and it has been great to be part of Disney’s stellar legacy and this much-loved franchise. While voicing, the challenge is always to be able to stay true to the story but also connect in our local language. With this character, I felt empowered to do so and I hope this new avatar of mine is appreciated by my fans.”
Bringing new and fan-favourite characters to life and blending live-action filmmaking techniques with photoreal computer-generated imagery, “Mufasa: The Lion King” is directed by Barry Jenkins. “Mufasa: The Lion King” enlists Rafiki to relay the legend of the unlikely rise of the beloved king of the Pride Lands, introducing an orphaned cub called Mufasa, a sympathetic lion named Taka—the heir to a royal bloodline—and their expansive journey alongside an extraordinary group of misfits.
Director – Barry Jenkins; Original songs by: Lin-Manuel Miranda

English Voices:
Aaron Pierre (Mufasa), Kelvin Harrison Jr. (Taka), Tiffany Boone (Sarabi), Kagiso Lediga (Young Rafiki), Preston Nyman (Zazu), Mads Mikkelsen (Kiros), Thandiwe Newton (Eshe), Lennie James (Obasi), Anika Noni Rose (Afia), Keith David (Masego), John Kani (Rafiki), Seth Rogen (Pumbaa), Billy Eichner (Timon), Donald Glover (Simba), Blue Ivy Carter (Kiara), Braelyn Rankins (Young Mufasa), Theo Somolu (Young Taka), Folake Olowofoyeku, Joanna Jones, Thuso Mbedu, Sheila Atim, Abdul Salis, Dominique Jennings, and Beyoncé Knowles-Carter (Nala).

Mufasa: The Lion King will be in Indian theatres on December 20, 2024, in English, Hindi, Tamil and Telugu.

டிஸ்னியின் ‘முஃபாசா’ தி லயன் கிங்’ திரைப்படத்தின் தமிழ் வெர்சனில் அர்ஜுன் தாஸ் முஃபாஸாவாக கர்ஜிக்கிறார்!

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் திரைப்படத்திற்காக தமிழ் சினிமாத் துறையின் முன்னணி நாயகர்களான அசோக் செல்வன், ரோபோ சங்கர், சிங்கம் புலி, வி.டி.வி கணேஷ் மற்றும்M. நாசர் ஆகியோருடன் இணைந்து அர்ஜுன் தாஸும் குரல் கொடுத்திருக்கிறார்!

~ இயக்குனர் பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ள முஃபாசா: தி லயன் கிங் இந்தியாவில் 2024 டிசம்பர் 20ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது ~

Chennai, 20th November 2024: காடுகளின் இறுதி ராஜாவான முஃபாசா: தி லயன் கிங், இப்போது தமிழ்த் திரைப்படத் துறையின் மிகவும் பிரபலமான சில குரல்களுடன் தமிழ் மொழியிலும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளதை ஆராய்வதற்கான நேரம் இது! 2019ஆம் ஆண்டின் லைவ்-ஆக்‌ஷன் திரைப்படமான ‘தி லயன் கிங்’ பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, பிரமிக்க வைக்கும் லைவ்-ஆக்சன் முஃபாசா: தி லயன் கிங் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு விருந்தாக வந்துள்ளது. ஏனென்றால், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பதிப்பில் அர்ஜுன் தாஸ் முஃபாசாவாகவும், அசோக் செல்வன் டாக்காவாகவும் நடித்துள்ளனர். ரோபோ சங்கர் மற்றும் சிங்கம் புலியின் பிரியமான ஜோடி முறையே பும்பா மற்றும் டிமோனாக மீண்டும் இணைகிறார்கள், அத்துடன், வி.டி.வி கணேஷ் இளம் ரஃபிக்கியாக வருகிறார். பழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகர் எம். நாசர் கிரோஸ் அணியில் இணைகிறார்.

அர்ஜுன் தாஸ் சினிமாவின் மிகவும் பிரியமான கதாபாத்திரங்களில் ஒன்றிற்கு குரல் கொடுத்தது குறித்த தனது உற்சாகத்தைப் பின்வருமாறு பகிர்ந்து கொள்கிறார், “முஃபாஸா: தி லயன் கிங் படத்தின் ஒரு பகுதியாக இருப்பது ஒரு கனவு போன்றது. அது நனவாகி உள்ளது. நம் குழந்தைப் பருவ நினைவுகள் அனைத்திலும் தனி இடத்தைப் பிடித்திருக்கும் ஒரு சின்னப் பாத்திரத்திற்குக் குரல் கொடுப்பது பெருமையாக இருக்கிறது. சிறுவயதில், தி லயன் கிங்* படத்தைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. சினிமா வரலாற்றில் முஃபாசா எப்படி சிறந்த மன்னர்களில் ஒருவரானார் என்பதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள நான் எப்போதுமே விரும்புவேன். தமிழ் பார்வையாளர்களுக்கு முஃபாஸாவை உயிர்ப்பித்துக் காட்டியதும், டிஸ்னியின் ஈடு இணையற்ற கதைசொல்லலின் ஒரு பகுதியாக இருப்பதும் வாழ்நாளில் நான் இனி எப்போதும் காணக் கிடைக்காத பாக்கியமாகும்!”
டாக்காவுக்கு குரல் கொடுத்தது குறித்து அசோக் செல்வன் குரல் கூறியதாவது, “உலகம் முழுவதும் உள்ள தலைமுறைகள் லயன் கிங்கைப் பார்த்து வளர்ந்துள்ளன, எனக்குள்ளும் இந்த அருமையான கதை, தனித்துவமான பாடல்கள், நகைச்சுவை சாகசங்கள் மற்றும் எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அதை ரசித்தது பற்றிய இனிமையான நினைவுகள் உள்ளன. முஃபாஸா: தி லயன் கிங் திரைப்படத்தில் தமிழ் பார்வையாளர்களுக்காக டாக்காவை உயிர்ப்பித்துக் காட்டியது, என்னால் மறக்க முடியாத ஒரு உன்னத அனுபவம்! குடும்பங்கள் ஒன்று கூடி பெரிய திரையில் ரசிக்கும் காட்சியாக இத்திரைப்படம் இருக்கும்”.
பும்பாவின் கதாபாத்திரத்திற்கு மீண்டும் உயிரோட்டம் அளித்தது குறித்து ரோபோ ஷங்கர் பேசுகையில், “இன்னொருமுறை இந்த தனித்துவமான திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதும், முஃபாசா: தி லயன் கிங்கிற்காக பும்பாவின் தமிழ் குரலாக எனது தனிப்பட்ட பங்களிப்பை அளிப்பதும் அருமையாக உள்ளது. பும்பா முழுக்க முழுக்க உயிர்ப்புடன் இருப்பதோடு, தனது ஒற்றைப் பாடல்களாலும், மகிழ்ச்சியான தருணங்களாலும் தன்னைச் சுற்றியிருப்பவர்களின் மனதை உற்சாகப்படுத்தினார். பும்பாவுக்காகக் குரல் கொடுத்தது, 2019ம் ஆண்டின் அவருடனான அனைத்து இனிய நினைவுகளையும் மீட்டெடுக்க வைத்தது. டிசம்பர் 20ஆம் தேதி பெரிய திரையில் பும்பாவின் புதிய நகைச்சுவையைப் பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.”

2019 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அன்பான டைமனுக்கு மீண்டும் குரல் கொடுத்த சிங்கம் புலி கூறியதாவது, “நான் மீண்டும் டைமனாக வருவதும் மற்றும் குடும்பங்களை ஒன்றிணைக்கும் தனித்துவமான படத்தில் ஒரு பகுதியாக இருப்பதும் எனது வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியான தருணங்கள், எனது 2019 அனுபவம் மறக்க முடியாதது. மேலும் அந்தத் தருணங்களை மீட்டெடுப்பது, முஃபாசா: தி லயன் கிங்கிற்காக இந்த முறை டிமோனின் கதாபாத்திரத்திற்குப் புதிய தொடுதல்களைக் கொண்டு வந்தது. டிமோனைப் பற்றி எனக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால், எந்தச் சூழ்நிலையிலும் எப்படி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை அவர் அறிந்திருப்பார், மேலும் அவர் தனது நேர்மறையை அனைவருடனும் பகிர்ந்துகொள்கிறார், பார்வையாளர்கள் மீண்டும் ஒருமுறை டிமோனின் செயல்களை திரையில் பார்த்து மகிழ்வார்கள்!”

விருது பெற்ற காமிக் டைமிங்கிற்கு பெயர் பெற்ற, மூத்த வி.டி.வி கணேஷ் இளம் ரஃபிக்கியின் கதாப்பாத்திரம் பற்றி பற்றி பேசியதாவது, “இந்த பிளாக்பஸ்டர் உரிமையின் ஒரு பகுதியாக இருப்பது ஒரு சிறந்த அனுபவமாக உள்ளது, மேலும் தமிழில் ரஃபிகியின் கதாபாத்திரத்திற்கு எனது தனிப்பட்ட பங்களிப்பைக் கொடுத்து மகிழ்ந்தேன். குடும்ப ரசிகர்கள் டிசம்பர் 20ஆம் தேதி அன்று வெளியாகும் முஃபாசா: தி லயன் கிங்கின் விருந்துக்காகக் காத்திருக்கிறார்கள்!”
கிரோஸின் குரலாக டைனமிக் டீமில் இணைந்த தமிழ் திரைப்படத்துறையின் பழம்பெரும் நடிகர் எம். நாசர் கூறியதாவது, “இந்த ஆற்றல்மிக்க கதாபாத்திரத்தை நான் மிகவும் ரசித்தேன், மேலும் டிஸ்னியின் நட்சத்திர மரபு மற்றும் மிகவும் விரும்பப்படும் இந்தத் திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. குரல் கொடுக்கும்போது, எப்போதும் கதைக்கு உண்மையா இருப்பது சவாலானது. அத்துடன் நம் உள்ளூர் மொழியில் இணைவது இன்னும் சவால் நிறைந்தது. இந்தக் கதாபாத்திரத்தின் மூலம், நான் அவ்வாறு செய்ய அதிகாரம் பெற்றதாக உணர்ந்தேன், என்னுடைய இந்த புதிய அவதாரத்தை ரசிகர்கள் விரும்புவார்கள் என்று நம்புகிறேன்..”
புதிய மற்றும் ரசிகர்களுக்குப் பிடித்த கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டி, லைவ்-ஆக்சன் திரைப்படத் தயாரிப்பு நுட்பங்களை ஃபோட்டோரியல் கம்ப்யூட்டர் மூலம் உருவாக்கப்பட்ட படங்களுடன் கலந்து, “முஃபாசா: தி லயன் கிங்” கதையை பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார். முஃபாசா: தி லயன் கிங் கதையில், பிரைட் லாண்ட்ஸின் அன்பான ராஜா எப்படி ஆட்சிக்கு வந்தார் என்பதை ரஃபிகி கூறுகிறார். ஆதரவற்ற ஒரு குட்டியான முஃபாசாவையும், அரச குடும்பத்தின் வாரிசான டாக்கா எனப்படும் ஒரு அன்பான சிங்கத்தையும் இந்தக் கதை அறிமுகப்படுத்துகிறது. அவர்கள் தனித்துவமான மற்றும் அசாதாரண தோழர்களின் குழுவுடன் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

இயக்குநர் – பேரி ஜெர்கின்ஸ்; அசல் பாடல்கள்: லின்-மேனுவல் மிராண்டா

ஆங்கில குரல்கள்:
ஆரோன் பியர் (முஃபாசா), கெல்வின் ஹாரிசன் ஜூனியர் (டாக்கா), டிஃப்பனி பூன் (சராபி), ககிசோ லெடிகா (இளம் ரஃபிகி), பிரஸ்டன் நைமன் (ஜாசு), மேட்ஸ் மிக்கெல்சன் (கிரோஸ்), தாண்டிவே நியூட்டன் (ஈஷே), லெனி ஜேம்ஸ் (ஒபாசி) , அனிகா நோனி ரோஸ் (ஆஃபியா), கீத் டேவிட் (மசெகோ), ஜான் கனி (ரஃபிகி), சேத் ரோஜென் (பும்பா), பில்லி ஐச்னர் (டிமோன்), டொனால்ட் குளோவர் (சிம்பா), ப்ளூ ஐவி கார்ட்டர் (கியாரா), பிரேலின் ராங்கின்ஸ் (யங் முஃபாசா), தியோ சோமோலு (யங் டாக்கா), ஃபோலேக் ஓலோஃபோயோகு, ஜோனா ஜோன்ஸ், துசோ எம்பேடு, ஷீலா அதிம், அப்துல் சாலிஸ், டொமினிக் ஜென்னிங்ஸ் மற்றும் பியோனஸ் நோல்ஸ்-கார்ட்டர் (நாலா).

முஃபாசா: தி லயன் கிங் டிசம்பர் 20, 2024 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்திய திரையரங்குகளில் வெளியாகும்.

‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

0

நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தை சக்தி சிதம்பரம் இயக்கியிருக்கிறார். ராஜன் & நீலா தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் மடோனா, அபிராமி, யோகிபாபு, ரோபோ சங்கர் என ஏராளமானோர் நடித்திருக்கின்றனர். நவம்பர் 22ஆம் தேதி படம் வெளியாகிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

தயாரிப்பாளர் ராஜேந்திரன் ராஜா, “நிகழ்விற்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறேன். இது என்னுடைய நான்காவது படம். அடுத்து தமிழில் மல்டி ஸ்டாரர் படமாக பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கிறோம்”.

எடிட்டர் நிரஞ்சன், “இந்த பட வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. படம் எண்டர்டெயினிங்காக இருக்கும்”.

டான்ஸ் மாஸ்டர் பூபதி, “என்னைப் போன்ற பலருக்கும் மாஸ்டர் ஒரு இன்ஸ்பிரேஷன். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் மாஸ்டர் நடித்திருக்கிறார். படத்தில் நிறைய பாடல்கள் உள்ளது. அதில் இரண்டு பாடல் வித்தியாசமானதாக இருக்கும். இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி”.

நடிகை அபிராமி, “மிகவும் எளிமையான கதை இது. நம்முடைய டென்ஷன் எல்லாம் வீட்டில் வைத்துவிட்டு ரிலாக்ஸாக இந்தப் படம் பார்க்கலாம். தயாரிப்பாளர் ராஜன் சார் மற்றும் இயக்குநர் சக்தி சிதம்பரம் சாருக்கு நன்றி. மடோனா உள்ளிட்ட படத்தில் பணிபுரிந்த நாங்கள் நான்கு பெண்களுமே மகிழ்ச்சியுடன் இருந்தோம். பிரபுதேவா சார், ரோபோ சங்கர் உள்ளிட்ட அனைவருடனும் பணி புரிந்தது மகிழ்ச்சி” என்றார்.

நடிகர் ரோபோ சங்கர், “பிரபு மாஸ்டருடன் சேர்ந்து நடிப்பது ஜாலியாக இருக்கும். நாம் நடிப்பதையும் அவர் என்ஜாய் செய்வார். குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படம். அடுத்த வாரம் வெளியாகிறது”.

ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா, “பிரபுதேவா மாஸ்டருடன் பணிபுரிய வேண்டும் என்பது என் ஆசை. அதனால்தான் கதை கூட கேட்காமல் ஒத்துக் கொண்டேன். சக்தி சார் கடுமையான உழைப்பாளி. தயாரிப்பாளர் ராஜன் சார் நல்ல மனிதர். மடோனா, அபிராமி என எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளனர். டீமே ஜாலியாக பணிபுரிந்தோம். இந்தப் படம் கிடைத்ததற்கு இயற்கைக்கு நன்றி. படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்”.

நடிகை மடோனா செபாஸ்டின், “‘ஜாலியோ ஜிம்கானா’ ஒரு ஜாலியான படம். பிரபு மாஸ்டருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். சக்தி சிதம்பரம் சார் படம் இயக்குவதில் மாஸ்டர். அபிராமி, ரோபோ சங்கர் உள்ளிட்டப் பலருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான விஷயம். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

விநியோகஸ்தர் சக்திவேலன், “இந்தப் படம் ஜாலியான படம். ஒரு தமிழர் மும்பை சென்று அங்கு ஜெயிப்பது சாதாரண விஷயம் கிடையாது. படத்தின் தயாரிப்பாளர் ராஜேந்திரன் அப்படிப்பட்டவர் தான். ஜெயித்த பிசினஸ்மேன் சினிமாவுக்கு வருவது வரப்பிரசாதம். சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அவருடன் எனர்ஜியான டீம் ஒன்று உள்ளே வந்திருக்கிறது. இந்தப் படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் செய்திருக்கிறார்கள். சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் படம் நிச்சயம் எண்டர்டெயினிங்காக இருக்கும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் “.

இசையமைப்பாளர் அஸ்வின், “இந்தப் படத்தில் வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர் ராஜன் சாருக்கு நன்றி. இந்தியன் மைக்கேல் ஜான்சன் பிரபு சாருக்கு மியூசிக் போடுவது என்னுடைய கனவு. வெளியான இரண்டு பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. வெறும் ஜாலி படமாக மட்டுமல்லாமல். இதில் கதையும் கொடுத்திருக்கிறார் சக்தி சார். அவருக்கும் எனக்கும் நல்ல சிங்க் இருந்தது. எண்டர்டெயின்மெண்ட் படத்திற்கு இசையமைப்பது சாதாரண விஷயம் கிடையாது. மடோனாவை அடுத்தப் படத்தில் நிச்சயம் பாட வைத்துவிடுவேன். அபிராமி மேமின் தீவிர ரசிகன். தொழில்நுட்ப குழு எல்லோருமே சிறப்பாக பணியாற்றியுள்ளனர். நன்றி”.

இயக்குநர் சக்தி சிதம்பரம், “கடந்த இரண்டு, மூன்று வருடங்களாகவே தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் வன்முறை, சாதியை மையப்படுத்தியே இருக்கிறது. அப்போதுதான், டெட்பாடி, அதைத்தூக்கி செல்லும் ஹீரோவை மையப்படுத்திய கதை இது. கதை கேட்டதும் டெட்பாடியாக நடிக்கிறேன் என பிரபுதேவா சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பின்பு, அவரை மையப்படுத்தி நான்கு ஹீரோயின்களை கொண்டு வந்தோம். ஒன்றரை நாளில் நடக்கும் கதை இது. இதற்கான ஸ்க்ரீன்பிளே எழுதுவது எளிது கிடையாது. டெட்பாடியாக மாஸ்டர் இருக்கும்போது அவர் முன்னாடி பலரும் நகைச்சுவை செய்து கொண்டிருப்பார்கள். அதெல்லாம் கட்டுப்படுத்திதான் மாஸ்டர் சிறப்பாக நடித்திருக்கிறார். படம் நன்றாக வருவதற்கு கதையைப் போலவே காசும் முக்கியம். தயாரிப்பாளர் ராஜன் சாருக்கு கதை ரொம்பவே பிடித்து விட்டது. நான் கேட்காமலேயே படத்திற்கு நிறைய அள்ளிக் கொடுத்தார். அவர் படத்தின் மீது நம்பிக்கை வைத்து சிறப்பாக செய்து கொடுத்தார். பிரபு மாஸ்டருக்கும் எனக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. மடோனாவை நான் டான் என்றுதான் கூப்பிடுவேன். அந்த அளவுக்கு டானாக சூப்பராக நடித்திருக்கிறார். அபிராமியுடன் எனக்கு இரண்டாவது படம். காமெடி சிறப்பாக செய்திருக்கிறார். தொழில்நுட்ப குழுவும் சூப்பராகப் பணியாற்றியுள்ளனர். எல்லோருக்கும் நன்றி”.

பாடலாசிரியர், தயாரிப்பு நிர்வாகி ஜெகன், “நான் ட்ரான்ஸ் இந்தியா நிறுவனத்தில் ஆஃபிஸ் பாயாக சேர்ந்தேன். இப்போது அந்த கம்பெனியில் தயாரிப்பு நிர்வாகியாக இருக்கிறேன். இந்தப் படத்திலும் நான் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றினேன். முதலில் இந்தப் பாடல் எப்படி உருவானது என்று சொல்லி விடுகிறேன். இந்தப் பாடல் ஜானரில் ஏற்கனவே சில்க் ஸ்மிதாவுக்கு ஒரு பாடல் வந்திருக்கிறது. அதேபோல் மலையாளத்திலும் வந்திருக்கிறது. அதை இன்ஸ்பிரேஷனாக வைத்துதான் இந்தப் பாடலை உருவாக்கினோம். நான் இந்தப் பாடலை எழுதினேன். நேரடியாக இசையமைப்பாளருக்கு வரிகளை நான் அனுப்பமாட்டேன். இயக்குநர் வழியாகத்தான் வரிகள் இசையமைப்பாளரிடம் போகும். அப்படி நான் அனுப்பியது என்னிடம் இருக்கிறது. இந்தப் படத்தை 8 கோடி ரூபாய் பட்ஜெட் என்றுதான் ஆரம்பித்தோம். ஆனால் 15 கோடி ரூபாய்வரைக்கும் செலவு ஆனது. இதுதொடர்பாக எங்கள் தயாரிப்பாளரிடம் நான் சில விஷயங்களை சொன்னேன். அது இயக்குநர் சக்தி சிதம்பரத்தை கோபப்படுத்திவிட்ட்து. அப்போதே அவர் தயாரிப்பாளரிடம், ‘பாடலில் ஜெகனின் பெயரை போடமாட்டேன்’ என்று சொல்லிவிட்டார். எங்கள் தயாரிப்பாளரோ வளர்ந்து வரும் பையன் ஜெகன்; அவர் பெயரை போடுங்கள் என்று வேண்டுகோள் வைத்தார். ஆனால் அவர் கேட்கவில்லை. இத்தனை காலமும் நான் ஏன் அமைதியக இருந்தேன் என்றால் இந்தப் படம் நல்லபடியாக வெளியாக வேண்டும் என்பதால்தான்” என்றார்.

நடிகர் பிரபுதேவா, “இந்த மாதிரி கதையை ஒத்துக்கொண்டு தயாரிக்க ஒரு தைரியம் வேண்டும். ராஜன் சாருக்கு நன்றி. இயக்குநர் சக்தி சிதம்பரம் என்னுடைய நண்பர் இப்போது. நல்ல கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்காக நன்றி. டெக்னீஷியன்ஸ் எல்லோரும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். அபிராமி சின்ன பொண்ணாக பார்த்திருக்கிறேன். இப்போது இன்னும் புத்திசாலியாக மாறியிருக்கிறார். மடோனாவும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஜெகன் – சக்தி பிரச்சினை இப்போது தான் எனக்கு தெரிய வந்திருக்கிறது. நிச்சயம் இதுபற்றி பேசுவோம்” என்றார்.

திரைப்பட விமர்சனம் என்கிற பெயரில் தனிமனித தாக்குதல் மற்றும் வன்மத்தை விதைத்தல் – நமது சங்கத்தின் கண்டனம்

0

திரைப்படங்களின் நிறை குறைகளை விமர்சிக்க அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால் அது திரைப்படத்தை பற்றி மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், கதாநாயகன் மீது தனிமனித தாக்குதல்கள் மற்றும் அவர்கள் மீது இருக்கும் வன்மத்தை பொதுவெளியில் கக்க ஒரு கருவியாக, திரைப்பட விமர்சனத்தை சில ஊடகங்கள் சமீப காலங்களில் பயன்படுத்தி வருவதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

திரைத்துறை விமர்சகர்கள் தராசு போல ஒரு திரைப்படத்தின் நிறை குறைகளை சொல்லி, மொத்தத்தில் தங்களின் அபிப்பிராயத்தை சொல்லலாமே தவிர, அதை ஒட்டுமொத்தமாக ஒழிக்கும் விதத்தில் கடுமையாக விமர்சனம் செய்து, தனிமனித தாக்குதல்களும் செய்வது, திரைப்பட துறையை மொத்தமாக அழிக்கும் செயலாக நமது சங்கம் கருதுகிறது. அவ்வாறு செய்து வரும் ஊடகவியலாளர்கள் மீது தனது கண்டனத்தை நமது சங்கம் தெரிவிக்கிறது.

ஒரு திரைப்படத்தை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும். விமர்சகர்கள் தங்களின் கருத்துக்களை அனைவரின் கருத்தாக மக்களிடம் கொண்டு செல்வது தவிர்க்கப்பட வேண்டும். ஒரு படம் ஏமாற்றி விட்டதாக இந்தளவுக்கு கொந்தளித்து பேசி வரும் பலர் (பார்வையாளர்கள் உட்பட), நம்மைச் சுற்றி நடக்கும் எத்தனையோ அநீதிகளை, அத்துமீறல்களை, மோசடிகளை கண்டும் காணாமல் கடப்பதையும் நாம் பார்த்து வருகிறோம். ஒரு திரைப்படத்தை மூன்று மணி நேரம் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பார்க்காமல், அது ஏதோ மொத்த சமுதாயத்திற்கும் அநீதி விளைவித்தது போல பலர் பேசி வருவது அநீதியான செயல் என்று கருதுகிறோம்.

விமர்சகர்களுக்கு திரைப்படங்களை விமர்சனம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது. ஆனால் தனிப்பட்ட காழ்புணர்ச்சியின் காரணமாக ஒரு திரைப்படத்தை பற்றிய வெறுப்பை ஊடங்களில் விதைக்க கூடாது என்பதை அனைத்து ஊடகவியலாளர்களும் மனதில் வைத்து திரைப்பட விமர்சனங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இந்த சினிமா துறையால் வாழ்ந்து வரும் ஊடகவியலாளர்கள் இனிமேலாவது தங்களை திருத்தி கொண்டு, சரியான முறையில் விமர்சனங்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
அதே சமயம், திரையரங்குகளுக்கு வெளியே, திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன், பார்வையாளர்களின் கருத்துக்களை பதிவு செய்து வரும் பல YouTube Channel-கள், எல்லை மீறி கருத்துக்களை சொல்லும் பார்வையாளர்களை ஊக்குவித்து, அதை தொடர்ந்து வெளியிட்டு, அதிக அளவில் அத்தகைய கருத்துக்களை, ஏதோ அனைத்து பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உலக அளவில் அதை எடுத்து செல்வது மிகவும் கண்டிக்க தக்கது. சமீபத்தில், “கங்குவா” திரைப்படத்திற்கு விமர்சனம் என்ற பெயரில் ஒரு பெரியவர், ஒரு திரையரங்குக்கு வெளியே தனிமனித தாக்குதல்களும், வன்மத்தை கக்கியதும், அனைவரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அத்தைகைய கருத்துக்களை பதிவு செய்து, மக்களிடம் அதை பெரிய அளவில் கொண்டு சென்ற YouTube Channel-களை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, உணவு நன்றாக இல்லாத பட்சத்தில், வெளியே வந்து அந்த ஓட்டல் பற்றி ஊடங்களில் ஏதோ தன் வாழ்க்கையே அதனால் நாசமானது போல யாரவது பேசி இருக்கிறார்களா? அவ்வாறு பேசி இருந்தால், அந்த ஓட்டல் தான் சும்மா விட்டிருப்பார்களா? ஓட்டல் மட்டுமில்லை, எந்த பொருளை வாங்கும் அல்லது உபயோகிக்கும் இடத்தில், அது பிடிக்காத பட்சத்தில், அதை நாகரிகமாக எடுத்து சொல்லி அதற்கான தீர்வை காண்பார்களே தவிர, ஊடங்களில் அது பற்றி மோசமாக பேசி, அந்த ஒட்டலையோ, விற்பனை அங்காடியையோ, Service Centre-யோ எவரும் வசைபாடி, பேசி நாம் பார்த்ததில்லை.
திரையரங்குகளுக்கு வெளியே இவ்வாறு பார்வையாளர்களின் கருத்தை கேட்டு YouTube Channel-களில் பதிவு செய்யும் முறை வந்த பின், பல பார்வையாளர்கள் (Audience) இத்தகைய வீடியோக்கள் மூலம் பிரபலம் அடைய தன்னை திரைத்துறை மேதாவியாக நினைத்து பேசி வருவதும், ஏதோ அத்திரைப்படம், அவரின் மொத்த நிம்மதியையே குலைத்து விட்டது போல பேசி பிரபலம் அடைய முயற்சிக்கிறார்கள். அவ்வாறு அவர்கள் பேசுவது எத்தகைய பாதிப்பை அத்திரைப்படத்திற்கு ஏற்படுத்தும் என்பதை நன்கு உணர்ந்தும் பல YouTube Channel-கள் அவைகளை ஊக்குவித்து வருகின்றன. எந்தவித எடிட்டிங்கும் செய்யமால் அத்தகைய கருத்துக்களை உடனுக்குடன் வெளியிட்டு பிரபலப்படுத்துகின்றன.

சினிமா துறையை ஒட்டுமொத்தமாக அழிக்கும் இந்த செயல்களை உடனே தடுத்து நிறுத்து வேண்டிய கட்டாயம் திரைத்துறையை சார்ந்த அனைவருக்கும் உள்ளது.

தமிழ் நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திரு.திருப்பூர் சுப்ரமணியம் அவர்கள் இன்று அறிவித்தது போல, திரையரங்கு வளாகம் மட்டுமில்ல, அதற்கு அருகிலும், எந்த YouTube Channel-களும் பார்வையாளர்கள்/ரசிகர்களிடம் இனிமேல் புதிய திரைப்படங்களை பற்றி பேட்டி எடுக்க தமிழ் நாட்டில் உள்ள அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் அனுமதிக்க கூடாது. Public Review/Public Talk என்கிற பெயரில் பார்வையாளர்களை திரைப்படங்கள் மீதும் அதில் சம்பந்தபட்டவர்கள் மீதும் வன்மத்தை கக்கும் மனிதர்களாக மாற்றும் இந்த போக்கை உடனே தடை செய்யுமாறு அனைத்து திரையரங்க உரிமையாளர்களையும் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

மேற்கொண்டு, திரைப்படங்களை தார்மீக முறையில் விமர்சிக்காமல், தனிமனித தாக்குதல்கள், வன்மத்தை கக்குத்தல் போன்ற செயல்களை ஊடகங்கள் மூலம் செய்யும் நபர்கள்/ரசிகர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க நமது சங்கம் அனைத்து முயற்சிகளையும் எடுக்கவிருக்கிறது என்பதையும் இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறோம். பார்வையாளர்கள்/ரசிகர்கள், தங்களின் இத்தகைய வன்மம் மிகுந்த கருத்துக்கள், எவ்வாறு பெருமளவில் பாதிப்பை திரைத்துறைக்கு ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்து, பொறுப்பான முறையில் விமர்சனங்களை இனிமேலாவது சொல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

இந்த 2024 வருடத்தில் இந்தியன் 2, வேட்டையன் மற்றும் கங்குவா திரைப்படங்களுக்கு Public Review/Talk மூலம் பெருமளவில் பாதிப்பை YouTube Channel-கள் ஏற்படுத்தியுள்ளன. அவைகளை இனிமேல் ஊக்குவிக்காமல், திரைத்துறையை சார்ந்த அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து இந்த முறையை தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

அதன் முதல் முயற்சியாக, அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களின் பேட்டியை தங்கள் வளாகங்கள் மற்றும் வளாகத்தின் அருகில் எந்த YouTube Channel-களும் எடுக்க தடை செய்து, இந்த FDFS Public Review/Talk நடைமுறையை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம்.

நன்றியுடன்,
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில்,

பாரதிராஜா
தலைவர்

T.G.தியாகராஜன் செயல் தலைவர்

T.சிவா
பொது செயலாளர்

Disney+ Hotstar to stream the Hotstar Specials ‘Parachute’ from November 29

0

India’s leading streaming platform Disney+ Hotstar has released the trailer of Hotstar Specials, ‘Parachute’ and also announced it will begin streaming of this series from November 29 this year.

A gripping trailer of the Hotstar Specials gives away the fact that the film will be a pulsating search and rescue drama that will revolve around two cute children, who are deeply loved by their parents. The trailer shows that the children fear their dad, a strict disciplinarian, who nurtures the belief that sparing the rod can spoil the children. One day, to escape his blows, they ride off on his moped called Parachute without their parents’ knowledge. What happens then is what ‘Parachute’ is all about.

Directed by Rasu Ranjith, the series features some of the finest actors in the Tamil film industry in the lead roles. It has actor Kishore playing the father of the children, well known actress — ‘Cooku With Comali’ fame Kani — playing the mother of the children, and actor Krishna Kulasekaran plays a cop. Interestingly, Krishna, apart from acting in the series, is also handling production of this series.

The series will also feature actors Kaali Venkat, Sharanya Ramachandran and Bava Chelladurai in pivotal roles.

Written by Sridhar K, ‘Parachute’ has music by one of the country’s top music directors Yuvan Shankar Raja. It has cinematography by Om Narayan and editing by Richard Kevin. Art direction for the series is by Remiyan, while stunts and costumes are by Danger Mani and Swapna Reddy respectively.

About Disney+ Hotstar:
Disney+ Hotstar (erstwhile Hotstar) is India’s leading streaming platform that has changed the way Indians watch their entertainment – from their favorite TV shows and movies to sporting extravaganzas. With the widest range of content in India, Disney+ Hotstar offers more than 100,000 hours of TV Shows and Movies in 8 languages and coverage of every major global sporting event.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வரும் நவம்பர் 29 முதல் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘பாராசூட்’ சீரிஸை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது!!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான ‘பாராசூட்’ டிரெய்லரை வெளியிட்டுள்ளது, மேலும் இந்த சீரிஸ், இந்த ஆண்டு நவம்பர் 29 முதல் ஸ்ட்ரீமாகும் என்றும் அறிவித்துள்ளது.

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான பாராசூட் சீரிஸ், இரண்டு இளம் சிறார்களின் உலகை பற்றியதாக உருவாகியுள்ளது. குழந்தைகளின் மீது பெரும் அன்பை வைத்திருக்கும் பெற்றோர்கள், அவர்கள் நன்றாக வளர வேண்டுமென அவர்கள் மீது கண்டிப்பு காட்டுகிறார்கள். இரு சிறுவர்களும் பெற்றோருக்கு தெரியாமல், பாராசூட் எனும் மொபட் பைக்கை எடுத்துக்கொண்டு பயணம் செல்கிறார்கள். அப்போது என்ன நடக்கிறது என்பதுதான் ‘பாராசூட்’.

இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கியுள்ள இந்த சீரிஸில், தமிழ்த் திரையுலகின் சிறந்த நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதில் நடிகர் கிஷோர் குழந்தைகளின் தந்தையாகவும், பிரபல நடிகை ‘குக்கு வித் கோமாளி’ புகழ் கனி குழந்தைகளுக்கு அம்மாவாகவும், நடிகர் கிருஷ்ணா குலசேகரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கிருஷ்ணா குலசேகரன் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பதோடு, இந்தத் சீரிஸின் தயாரிப்பையும் கையாண்டுள்ளார்.

இந்த சீரிஸில் நடிகர்கள் காளி வெங்கட், சரண்யா ரவிச்சந்திரன் மற்றும் பாவா செல்லதுரை ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஶ்ரீதர் K எழுதியுள்ள ‘பாராசூட்’ சீரிஸிற்கு முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த சீரிஸிற்கு ஓம் நாராயணன் ஒளிப்பதிவும், ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பும் செய்துள்ளார்கள். இந்த சீரிஸிற்கு கலை இயக்கம் ரெமியன், ஸ்டண்ட் மற்றும் உடைகளை டேஞ்சர் மணி மற்றும் ஸ்வப்னா ரெட்டி ஆகியோர் செய்துள்ளனர்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றியுள்ளது – அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது. மேலும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

ஒரு மொக்கை கதையில் கமல்ஹாசனை நடிக்க வைத்தேன் : இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேச்சு !

0

கங்குவா பற்றி பேச மாட்டேன் கே ராஜன் லாரா படத்தைப் பற்றி பேசிய கே ராஜன்.

காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘லாரா’. இப்படத்தை மணி மூர்த்தி இயக்கியுள்ளார். எம் கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கார்த்திகேசன் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் முருகா, பிடிச்சிருக்கு படங்களின் நாயகன் அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுஸ்ரேயா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, வெண்மதி ஆகியோருடன் தயாரிப்பாளர் கார்த்திகேசன் முக்கியமான பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஆர்.ஜே.ரவீன், இசை ரகு ஸ்ரவன் குமார், கலை இயக்கம் முருகன்.

‘லாரா’ படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பாடலாசிரியர் முத்தமிழ் பேசும் போது,

“எனது நண்பர் மூலம் இந்தப் படத்தின் இயக்குநர் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தின் தயாரிப்பாளரை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் தானே உருவாக்கிக் கொண்ட பாதையில் பயணித்து வெற்றி பெற்றுள்ளார். இந்தப் படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி “
என்றார் .

படத்தில் நடித்திருக்கும் நடிகர் மேத்யூ வர்கீஸ் பேசும்போது,

“முதலில் என்னைத் தயாரிப்பாளர் தான் சந்தித்தார். வழக்கம் போல யூனிபார்ம் போடும் பாத்திரங்கள் தருவார்களோ என்று எனக்கு ஒரு தயக்கம்.இதைப் பற்றிக் கேட்டபோது இதில் அப்படி இல்லை நீங்கள் கதாநாயகனுக்கு அப்பாவாக நடிக்கிறீர்கள் என்றார். அப்போதே நான் சம்மதித்தேன் .முதல் படம் தயாரிக்கும் அவரது தைரியமும் தெளிவும் பெரிய விஷயமாக இருந்தது. படம் எடுப்பது பெரிய விஷயம். செலவுகளைப் பற்றிப் பொருட்படுத்தாமல் அதைச் சரியாகச் செய்து முடிப்பது அதைவிட பெரிய விஷயம். படப்பிடிப்பில் நமது சௌகரியங்களைப் பார்த்து நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள். இந்தப் படத்தின் தயாரிப்பு நிர்வாகி, தயாரிப்பு உதவியாளர், தயாரிப்பாளர் என்று எல்லா மும் அவராகவே இருந்தார். இந்தப் படத்திற்காக அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்கள். அதற்குப் பலனாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது” என்றார்.

இசையமைப்பாளர் ரகு ஸ்ரவன் குமார் பேசும்போது,

“இது எனக்கு மூன்றாவது படம். நான்கு பாடல்கள் இந்தப் படத்தில் உள்ளன . நாலைந்து நாட்களில் பின்னணி இசை சேர்ப்புப்பணியை முடித்து விட்டேன் .அந்த அளவிற்கு எனக்கு ஆர்வம் ஏற்படுத்திய படம் “என்றார்.

தயாரிப்பாளர்,நடிகர் கார்த்திகேசன் பேசும்போது,

“நான் ஒரு சிக்கலான மனிதன். என்னைச் சகித்துக் கொண்டு படம் எடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதை இந்த இயக்குநர் செய்து முடித்திருக்கிறார். கோடம்பாக்கத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு நான்சினிமா வாய்ப்புக்காக ஏகப்பட்ட இடங்களுக்கு அலைந்து திரிந்து வாய்ப்பு கேட்டு,ஒரு கட்டத்தில் மனம் வருந்தி கோயம்புத்தூருக்குச் சென்று விட்டேன். போன இடத்தில் என்னை வளர்த்துக்கொண்டு 25 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கே வந்திருக்கிறேன். நமக்கு கனவுகள் இருக்கலாம், கற்பனை இருக்கலாம் .அதனை செயல்படுத்துவது முக்கியம். என்னைப் பொறுத்தவரை பணம் சம்பாதிப்பதை விட நான் நண்பர்களை அதிகம் சம்பாதித்து இருக்கிறேன். தனிமரம் தோப்பாகாது என்பது போல் பல பேர் சேர்ந்து உழைத்ததால் தான் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. நான் ஆண்டுக்கு ஒரு படம் தயாரிக்கும் திட்டத்தில் இருக்கிறேன்.
நான் மனிதர்களைச் சம்பாதித்ததால் தான் உள்ளூரில் 500 ரூபாய் கடன் கொடுக்கத் தயங்குகிற இந்த உலகத்தில் எனக்கு 5 கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு எனக்கு நண்பர்கள் ஆதரவு இருக்கிறது “என்றார்.

படத்தின் நாயகி அனுஸ்ரேயா ராஜன் பேசும்போது ,

“நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தமிழ் சினிமாவில் நான் அறிமுகமாக ஆகியிருக்கிறேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருந்தது .படத்தின் வெளியீட்டுத் தேதிக்காக நான் காத்திருக்கிறேன்.எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி” என்றார் .

கதாநாயகன் அசோக் குமார் பேசும்போது,

” நல்ல உள்ளங்களின் ஆசீர்வாதங்களுடன் இந்தப் பட விழா இங்கே தொடங்கி இருக்கிறது. இன்று என்னுடன் இருக்கும் இந்தப் பெரியவர்களின் ஆசீர்வாதம் பெரிய பலமாக எனக்குப் பக்க பலமாக இருக்கிறது.லாரா படத்தின் வாய்ப்பு ஆல்பர்ட் என்கிற நண்பர் மூலம் இயக்குநர் அறிமுகம் கிடைத்தது. அதன் மூலம் இந்தப் பட வாய்ப்பு வந்தது. என்னிடம் வருபவர்கள் ஒரு லோ பட்ஜெட் படம் இருக்கிறது என்றுதான் ஆரம்பிப்பார்கள். அப்படி ஆரம்பிப்பதை எல்லாம் நம்ப முடியாது . ஏனென்றால் கதைக்கேற்ற செலவு செய்யக்கூடிய தயாரிப்பாளராக இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டி இருக்கிறது. அப்படி இந்தப் படத்தில் தயாரிப்பாளர் அமைந்தார். கதைக்கேற்ற செலவுகளை முழுமையாகப் பூர்த்தி செய்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது .அழுத்தமான படைப்பில் நான் இருப்பதற்காக மகிழ்ச்சி செய்கிறேன். இது ஒரு இன்வெஸ்டிகேஷன் கிரைம் த்ரில்லர் .இதில் நிறைய புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள் .ஆனால் அனுபவசாலிகள் போல் நடித்திருக்கிறார்கள். பிரபலமானவர்கள் நடித்திருந்தால் இந்த அளவுக்கு வந்திருக்குமா என்று தெரியாது ,அந்த அளவிற்கு நடித்திருக்கிறார்கள். அதில் ஒரு புதுமை தெரிகிறது.

என்னைப் பற்றி இவன் நன்றாக ஆடுகிறான்,நன்றாக நடிக்கிறான்,நன்றாக ஃபைட் செய்கிறான் இவனுக்கு ஒரு நல்ல ஒரு எதிர்காலம் வர வேண்டும் என்று பார்க்கிறவர்கள் சொல்வார்கள். இந்தப் படம் நன்றாக வர வேண்டும். ஒரு நல்ல கதையை வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது.கதாநாயகனை வைத்து அல்ல. கதையை மட்டுமே நம்பி வந்திருக்கிறார்கள் .
அப்படித் தயாரிப்பாளரின் ஒரு கதையைத் தத்தெடுத்து இயக்குநர் லாராவை உருவாக்கி இருக்கிறார்.

இந்தப் படத்தின் டைட்டிலை சத்யராஜ் சார் பெரிய மனதுடன் வெளியிட்டார். அதேபோல் ஃபர்ஸ்ட் லுக் விஜய் சேதுபதி சார் அறிமுகம் செய்தார் .அந்த நல்ல மனிதர்களுக்கு இப்போது என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நல்ல படங்கள் ஜெயிக்க வேண்டும், அப்போதுதான் மேலும் நல்ல படங்கள் உருவாகும். அனைவரும் இந்தப் படத்திற்கு ஆதரவு தர வேண்டும் “என்றார்.

இயக்குநர் மணி மூர்த்தி பேசும்போது,

“இந்தப் படம் எப்படி எல்லாம் வர வேண்டும் என்று நானும் தயாரிப்பாளரும் முன்பாகவே ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு நன்றாகத் திட்டமிட்டும் அதன்படி எடுத்தோம் .எப்போதுமே எங்குமே தேங்கி நிற்கவில்லை. கதை எழுதியது அவர் என்றாலும் அதைப் படமாக உருவாக்குவதில் எனக்கு எந்த விதமான இடையூறும் செய்யாமல் முழுமையான படைப்பு சுதந்திரத்தைக் கொடுத்தார். ஒளிப்பதிவாளர்,இசையமைப்பாளர் என்று நாங்கள் எல்லாம் வா டா போடா என்று பேசிக்கொள்கிற அளவுக்கு நண்பர்களாகி விட்டோம். அப்படி இந்தப் படத்தில் நடித்த நடிகர்களும் நண்பர்களாக மாறி ஒரு நட்புக் கூட்டணியாக உருவாகி இந்தப் படத்தை முடித்து இருக்கிறோம். அனைவரும் கடுமையான உழைப்பைப் போட்டாலும் அதை மகிழ்ச்சியாகக் கொடுத்தார்கள்.அதனால்தான் குறுகிய காலத்தில் நிறைய வேலை செய்ய முடிந்தது . அனைவரும் கொடுத்த ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியப்பட்டு இருக்காது .சினிமாவில் எத்தனை படங்கள் வருகின்றன, எத்தனை படங்கள் தயாரிப்பாளரைக் கரை சேர்க்கின்றன என்று சொல்ல முடியாது. ஆனால் எது பற்றியும் கவலை இல்லாமல் என்னை நம்பி இந்தப் படத்தை ஒப்படைத்தார். நான் சரியாக வேலை செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.படப்பிடிப்பு இடங்களில் பெரிய வசதிகளை எதிர்பார்க்காமல், அடிப்படை வசதிகளை மட்டும் ஏற்றுக் கொண்டு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.அவர்களுக்கு நன்றி”சென்றார் .

விநியோகஸ்தர் சங்கத் தலைவர் .கே ராஜன் ,பேசும்போது

” இந்தத் தயாரிப்பாளரை நான் மனமார வரவேற்கிறேன். சென்னையில் வந்து கஷ்டப்பட்டு பசியால் வாடி, முடியாமல் கோயம்புத்தூர் சென்று அங்கு முன்னேறி சம்பாதித்து வெற்றி பெற்றிருக்கிறார் .இவர் நட்பு வட்டத்தைப் பெரிதாகச் சம்பாதித்துள்ளார் .நிச்சயம் இந்தப் படம் வெற்றி பெறும். இந்த படம் வெற்றி பெறாவிட்டால் கூட இந்தத் தயாரிப்பாளர் அடுத்த படம் எடுக்க வேண்டும்.ஏனென்றால் இப்படிப்பட்ட தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்குத் தேவை.

லாரா படத்தின் சில காட்சிகளைப் பார்த்தேன் நன்றாக இருந்தது. இஸ்லாமிய திருமணம் சார்ந்து ஒரு பாடல் வருகிறது. எம்மதமும் சம்மதம் என்பதுதான் நமது கொள்கை. எல்லா மதங்களும் நல்லவற்றையே சொல்கின்றன.

குறுகிய நாட்களில் இந்த படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள். ஒரு திரைப்படத்திற்குக் கதை தான் முக்கியம். ஹீரோவுக்கு கொட்டிக் கொடுத்தால் .அவர்கள் நன்றாக இருப்பார்கள், தயாரிப்பாளர்கள்தான் நடுத்தெருவுக்கு வருவார்கள் இன்று இருநூறு தயாரிப்பாளர்கள் நடுத்தெருவுக்கு வந்திருக்கிறார்கள். முன்னூறு நானூறு படங்கள் வெளியிட முடியாமல் இருக்கின்றன .

இது சின்ன படங்களின் காலம். இன்று சின்ன படங்கள் ஓடுகின்றன. இந்த ஆண்டு நல்ல கதை உள்ள சின்ன படங்கள் எல்லாம் ஓடி இருக்கின்றன. பல கோடிகளில் எடுக்கப்படுவது எல்லாம் ஓடுவதில்லை. சின்ன படம் வாழை, லப்பர் பந்து போன்ற படங்கள் வெற்றி பெற்றுள்ளன.

படத்துக்கு விமர்சனம் தேவைதான். நல்லது நன்றாக இருந்தால் நல்லதாக எழுதுங்கள் .குறை இருந்தால் குறைவாக எழுதுங்கள். சின்ன படங்களைக் காப்பாற்றுங்கள்.

ஒரு கதாநாயகன் நடிகர் ஒன்பது பேரிடம் பல கோடிகள் முன்பணம் வாங்கி இருக்கிறார். அதும் போதாது என்று இன்றைக்கு இந்திக்கு நடிக்கச் சென்று விட்டார். இப்படி இருக்கிறது நிலைமை.

இந்தப் படத்திற்கு மூன்று கதாநாயகிகளும் படத்தை விளம்பரப்படுத்தும் இந்த பிரமோஷன் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்கள்.மகிழ்ச்சி. இப்போது எல்லாம் நடித்த நடிகைகளே அவர்கள் படங்களின் பிரமோஷனுக்கு வருவதில்லை .அதற்குத் தனியாகப் பணம் தர வேண்டும் என்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்த்து நல்லதை எழுதுங்கள், உள்ளதை எழுதுங்கள், குறைகளை குறைத்து எழுதுங்கள்” என்றார்.

இயக்குநர் ஆர் அரவிந்தராஜ் பேசும்போது,

” திரைப்படமே ஒரு கூட்டு முயற்சி தான். இங்கே ஒரு வேடிக்கையான அனுபவத்தைக் கண்டேன். தயாரிப்பாளர் என்னைச் சகித்துக் கொண்டிருப்பது சிரமம் என்றார். ஆனால் இயக்குநரோ தயாரிப்பாளரின் நல்ல குணங்களை எடுத்துக் கூறினார். நாங்கள் தாய்நாடு படம் எடுத்த போது சத்யராஜ் சார் நடித்தார். அப்படி அவர் நடித்த போது நாங்கள் படக்குழுவினர் பழகுவதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார்,பாராட்டினார். ஏனென்றால் நான் கேமரா மேன் எல்லாம் வாடா போடா என்று பேசிக் கொண்டிருப்போம்.இது சரியாக வரும், வராது என்று எங்களுக்குள் கருத்து மோதல் வரும். இருந்தாலும் அப்படி ஒரு நட்பாக இருந்தோம்.
அதேபோல் இந்தப் படத்தின் குழுவினரைப் பார்க்கிறேன். இந்தப் படத்தின் கதாநாயகன் அசோக்குமார் அடைய வேண்டிய உயரத்தை இன்னமும் அடையவில்லை. அடைய வேண்டிய வெற்றியை அடையவில்லை. அவர் நடித்த இந்தப் படம் வெற்றி அடைய வேண்டும். ஒரு ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டு, சாப்பாடு சரி இல்லை என்றால் கூட வாசலில் நின்று அந்த இந்த ஓட்டலில் சாப்பாடு சரியில்லை என்று கூற முடியாது.விடமாட்டார்கள். ஆனால் ஒரு படத்தைப் பார்த்துவிட்டு திரையரங்கு வாசலில் நின்று கொண்டு இந்தப் படம் நல்லா இல்லை போகாதீர்கள் என்று சொல்கிற நிலை இப்போது உள்ளது. சினிமாவுக்கு மட்டும் தான் இந்த அவல நிலை இருக்கிறது. இது ஏன் ?ஒரு படத்திற்குப் பலரும் உயிரைக் கொடுத்து உழைக்கிறார்கள். அது அவர்களுக்கு புரிவதில்லை ” என்றார்.

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் இயக்குநர் ஆர். வி உதயகுமார் பேசும்போது,

“ஒரு நல்ல படத்திற்குக் கதை வேண்டும், நல்ல கதை வேண்டும் என்கிறார்கள். ஆனால் அது தேவையில்லை என்பேன். ஏனென்றால் ஒரு மொக்கை கதையை வைத்துக் கொண்டு நான் சிங்காரவேலன் படத்தை எடுத்தேன். கலைஞானி கமல்ஹாசனை வைத்துக்கொண்டு இப்படிக் கதை இல்லாமல் எடுக்க எவ்வளவு துணிச்சல் வேண்டும்? எவ்வளவு லொள்ளு வேண்டும்?
சின்ன வயதில் ஜட்டி பனியனோடு காணாமல் போன ஒரு சின்னப் பெண்ணை தேடிக் கண்டுபிடித்து திருமணம் செய்கின்ற கதாநாயகன் என்பது தான் கதை . இதைச் சொன்னால் இப்போது ஒப்புக் கொள்வார்களா? அப்படி எடுத்த படம் தான் அது. கதைக்கான காட்சிகள் எல்லாம் நாங்கள் பெரிதாக யோசிக்கவே இல்லை.போகிற போக்கில் போகிற வழியில் எழுதியவை தான். இந்தப் படத்தின் விளம்பரத்தின் போது நான் மூளையை கழற்றி வீட்டில் வைத்துவிட்டு வாருங்கள் என்று விளம்பரம் செய்தேன் .அப்படி ஒரு நம்ப முடியாத கதை அது. பொள்ளாச்சியில் இருந்து ஒருவன் கருவாடு எடுத்துகொண்டு சென்னைக்கு வருவான். சென்னையில் கிடைக்காத கருவாடா என்று அப்போது யாரும் கேட்கவில்லை. ஏனென்றால் அப்போது அந்த கேள்வி எழாத அளவிற்கு அப்போது ரசிகர்கள் இருந்தார்கள்.

என்னிடம் வாய்ப்பு கேட்டு பலரும் வருவார்கள் .எல்லாருக்கும் வாய்ப்பு கொடுக்க முடியாது ஏதோ சிலருக்குக் கொடுப்பதுண்டு. இதனால் சிலர் பிறகு கோபித்துக் கொள்வதுண்டு.அவர்களை
எனக்கே தெரியாது மறந்து இருப்பேன் .

ஒரு படத்தில் சிலருக்கு மட்டுமே கொடுக்க முடியும் . பலருக்குக் கொடுக்க முடியாத நிலை இருக்கும். அப்படி என்னிடம் வாய்ப்பு கேட்டு ஒருவர் வந்திருக்கிறார்.என்னால் முடியவில்லை.அவர் ஒரு நாள் என்னை நேரில் சந்தித்தபோது நான் வாய்ப்பு கேட்டு வந்தேன் நீங்கள் மறுத்து விட்டீர்கள்,நான் சினிமாவை விட்டே போய்விட்டேன் என்று கூறினார். அப்போது அவரைச் சந்தித்தபோது அவர் 15 கல்லூரிகளுக்கு முதலாளியாக இருந்தார். நல்ல வேளை அவருக்கு நான் வாய்ப்பு தரவில்லை என்று நினைத்துக் கொண்டேன். இந்தப் படத்திற்காக ஒரு குடும்பமாக உழைத்து உள்ளார்கள். இந்தப் படம் ஓடவில்லை என்றாலும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அடுத்த படம் எடுக்க வேண்டும்.
இவர் எங்கள் கோயமுத்தூர்காரர். இவர் அடுத்த படத்திற்கு வாய்ப்பு கொடுத்தால் இந்தப் படத்தை விட ஒரு கோடி குறைத்துக் கொண்டு நான் படம் எடுத்துக் கொடுக்கத் தயார்.

என்னைச் சந்திப்பவர்கள் எப்படி பீக்கில் இருந்தீர்கள் இப்போது ஏன் படம் எடுப்பதில்லை என்று கேட்பார்கள். நானா முடியவில்லை என்கிறேன், யாரும் தருவதில்லை.

நான் சூப்பர் ஸ்டார் ரஜினி, இளையராஜா, ஏவிஎம் என்று எவ்வளவோ உயரத்தைப் பார்த்து விட்டேன்.உச்சியில் ஏறி விட்டால், அந்த இடம் சிறியது நீண்ட நேரம் அங்கே இருக்க முடியாது. கீழே இறங்கித்தான் வரவேண்டும் .இப்படித்தான் ஒவ்வொரு பெரிய இயக்குநரும் மேலே சென்று இறங்கியதால் தான் அடுத்தடுத்து வந்தவர்கள் மேலே ஏற முடிந்தது.

இப்போது விமர்சனங்கள் என்கிற பெயரில் நிறைய போலிகள் சுற்றுகிறார்கள். அவர்கள் உண்மையான விமர்சகர்களா ?நானும் 40 ஆண்டுகளாக கத்திரிகையாளர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னை உயர்த்தி வைத்தார்கள், இன்றும் என் நண்பர்களாக இருக்கிறார்கள்.அவர்கள் அப்படிப் புண்படுத்தும் படியோ, இழிவாகவோ ஒரு நாளும் எழுதியதில்லை.
விமர்சனம் எழுதும் போது காழ்ப்புணர்ச்சியைத் தவிர்த்து விடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது,

” இந்தத் தயாரிப்பாளரின் நட்பு பலத்தை இங்கே பார்க்க முடிகிறது .அவ்வளவு கூட்டம் கூடி இருக்கிறார்கள். உறவுகளை விட நட்பு முக்கியம் .இந்தத் தயாரிப்பாளர் சினிமாவை நேசித்து வந்திருக்கிறார். ஒரு இயக்குநர் தனது சொந்தக்கதையை இயக்குவதில் பிரச்சினை இல்லை. ஓர் எழுத்தாளர் எழுதிய கதையை இயக்குவதில் கூட பிரச்சினை இல்லை. ஆனால் தயாரிப்பாளர் கதையை இயக்குவது என்பது பிரச்சினையான ஒன்று. அதுவும் படப்பிடிப்பில் கூடவே இருந்து நடித்துக் கொண்டிருக்கிற தயாரிப்பாளர் என்றால் மேலும் சிரமமாக இருக்கும், பயமாக இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் நம் படைப்பு சுதந்திரம் அதில் இருக்குமா என்பது சந்தேகம். எனவே தயாரிப்பாளர் கதையை இயக்கி இருக்கும் இயக்குநருக்கு பெரிய நம்பிக்கை இருந்திருக்க வேண்டும் .இந்த சினிமாவில் மதம் கிடையாது, ஜாதி கிடையாது .வெளியில் போனால் தான் மதம் ஜாதி என்று வைத்துக்கொண்டு அரசியல் செய்கிறார்கள்.

லாரா படத்தின் கதாநாயகன் அசோக்குமார் சினிமாவின் ஒரு கஜினி முகம்மது என்று சொல்வேன். அவர் தோல்விகளைச் சந்திக்கவில்லை, வெற்றிக்கான பயணத்தில் முயற்சியில் இருக்கிறார் .நான் புதிய கதாநாயகர்களுக்குச் சொல்லிக் கொள்வேன் .ஒரு படத்தில் 25 லட்சம் சம்பளம் வாங்கினால் அடுத்த படத்தில் 50 அடுத்த அடுத்த படங்களில் என்றால் உயர்த்தி ஒரு கோடி வரை செல்லலாம். ஆனால் 25 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியவர்கள் அடுத்த படத்திலேயே மூன்று கோடி கேட்பார்கள் என்றால் அது அநியாயம். பேராசைப்பட வேண்டாம் படிப்படியாக உயர்த்தி வளருங்கள். அநியாயமாக உயர்த்த வேண்டாம் ” என்று கூறிப் படக் குழுவினரை வாழ்த்தினார்.

விழாவில் இயக்குநர்கள்
காளி ரங்கசாமி, வீராயி மக்கள் படத்தின் கதாநாயகன் சுரேஷ் நந்தா, பாடகர் முகமது ரிஸ்வான்.
கதாநாயகிகள் வெண்மதி, வர்ஷினி வெங்கட், ஒளிப்பதிவாளர்
ஆர்.ஜே.ரவீன்,கலை இயக்குநர் முருகன்,
எடிட்டர் வளர் பாண்டியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Mohanlal and Mammootty unites after two decades!! Malayalam cinema’s grand venture begins filming in Sri Lanka!!

0

The grand venture that is set to rewrite the history of Malayalam cinema has officially begun with Mohanlal lighting the ceremonial lamp. Directed by Mahesh Narayanan, this multi-starrer film brings Mammootty and Mohanlal together on screen after more than two decades. Along with these legends, the star-studded cast includes Fahadh Faasil, Kunchacko Boban, and Nayanthara, among others, making it one of the most anticipated projects in Malayalam cinema.

Mohanlal had reached Sri Lanka earlier, and with Mammootty and Kunchacko Boban joining recently, the much-awaited film has commenced its production. The ceremonial switch-on was done by co-producers Subhash George Manuel, while the first clap was given by C.R. Salim. Along with Mohanlal, Rajesh Krishna, Salim Sharjah, Anura Mathai, and Tejas Thampi were also present at the lamp-lighting ceremony.

The movie, produced by Anto Joseph with co-producers C.R. Salim and Subhash George Manuel, is penned by Mahesh Narayanan. Rajesh Krishna and C.V. Sarathy are the executive producers. The ensemble cast also features notable actors like Ranji Panicker, Rajiv Menon, Danish Husain, Shaheen Siddique, Sanal Aman, Revathi, Darshana Rajendran, Sereen Shihab, and theater artist-director Prakash Belawadi, known for his work in Madras Cafe and Pathaan. Cinematography is by renowned Bollywood cinematographer Manush Nandan.

The production design is by Joseph Nellickal, makeup by Ranjith Ambady, costumes by Dhanya Balakrishnan, and production controlled by Dixon Poduthas. Linu Antony serves as the chief associate director, while Phantom Praveen is the associate director.

The film will be shot across various locations, including Sri Lanka, London, Abu Dhabi, Azerbaijan, Thailand, Visakhapatnam, Hyderabad, Delhi, and Kochi, over a span of 150 days. It will be distributed by ANN Mega Media. PRO : Sathish Kumar S2 Media

மோகன் லால் & மம்முட்டி இணையும் பிரம்மாண்ட திரைப்படம் !!

இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு மோகன்லாலும் மம்முட்டியும் இணையும், மலையாள சினிமாவின் பிரமாண்ட முயற்சி, இலங்கையில் படப்பிடிப்பு ஆரம்பம்!!

மலையாள சினிமாவின் வரலாற்றை மாற்றி எழுதும் பிரமாண்ட முயற்சி,  மோகன்லால் தீபம் ஏற்றி வைக்க அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில், இந்த மல்டி ஸ்டாரர் படம், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மம்முட்டி மற்றும் மோகன்லாலை திரையில் ஒன்றாகக் கொண்டுவருகிறது. இந்த பெரும் ஆளுமைகளுடன், நட்சத்திர நடிகர்களான ஃபஹத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன் மற்றும் நயன்தாரா உட்பட மற்றும் பலர் இணைந்து நடிக்கவுள்ளனர். இது மலையாள சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் தயாரிக்கும் இப்படத்தை, சி.ஆர்.சலீம் மற்றும் சுபாஷ் ஜார்ஜ் மானுவல் ஆகியோர் இணை தயாரிப்பு செய்கின்றனர்.  படத்தின் கதை திரைக்கதையை மகேஷ் நாராயணன் எழுதியுள்ளார். ராஜேஷ் கிருஷ்ணா மற்றும் சி.வி. சாரதி நிர்வாக தயாரிப்பாளர்கள். நடிகர்கள் ரஞ்சி பணிக்கர், ராஜீவ் மேனன், டேனிஷ் ஹுசைன், ஷாஹீன் சித்திக், சனல் அமன், ரேவதி, தர்ஷனா ராஜேந்திரன், செரீன் ஷிஹாப் மற்றும் மெட்ராஸ் கபே மற்றும் பதான்  படங்களில் பணியாற்றிய நடிகர்-இயக்குநர் பிரகாஷ் பெலவாடி போன்ற குறிப்பிடத்தக்க நடிகர்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். பிரபல பாலிவுட் ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்கிறார்.

தயாரிப்பு வடிவமைப்பு ஜோசப் நெல்லிக்கல், ஒப்பனை ரஞ்சித் அம்பதி, ஆடைகளை தன்யா பாலகிருஷ்ணன், புரொடக்சன் கண்ட்ரோல் டிக்சன் போடுதாஸ். லினு ஆண்டனி தலைமை இணை இயக்குநராகவும், பாண்டம் பிரவீன் இணை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இலங்கை, லண்டன், அபுதாபி, அஜர்பைஜான், தாய்லாந்து, விசாகப்பட்டினம், ஹைதராபாத், டெல்லி மற்றும் கொச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 150 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. அதை ஏஎன்என் மெகா மீடியா விநியோகம் செய்யும். மக்கள் தொடர்பு  : சதீஷ் குமார் S2 Media

A Spectacular Return to the Sands of Rome

0

Film: Gladiator 2
Director: Ridley Scott
Cast: Paul Mescal, Denzel Washington, Joseph Quinn, Fred Hechinger, Derek Jacobi, Connie Nielsen
Cinematography: John Mathieson
Music: Harry Gregson-Williams


Introduction

Ridley Scott returns to the world of swords, betrayal, and honor with Gladiator 2, a sequel that surpasses its predecessor in scale and storytelling. After a gap of 24 years, the legendary filmmaker has crafted a visually arresting narrative that masterfully intertwines complex human emotions, political intrigue, and epic battles.


Plot Overview

The story centers on Lucius Verus (Paul Mescal), the son of Maximus, the betrayed general who sacrificed his life in the first film. Set sixteen years after the death of Emperor Aurelius, Rome is under the despotic rule of two power-hungry siblings, Emperor Greta (Joseph Quinn) and Emperor Caracalla (Fred Hechinger).

Their relentless pursuit of conquest leads them to Numidia, the last free city in Africa. A Roman fleet, led by General Acacius, captures Numidia and takes prisoners, including Lucius Verus. His fighting spirit catches the eye of Macrinus (Denzel Washington), a scheming Roman noble who manipulates gladiators for political gain.

What follows is a gripping tale of survival, revenge, and the pursuit of justice in a world where power and corruption rule.


Ridley Scott’s Direction

Ridley Scott’s vision for the sequel is nothing short of extraordinary. The narrative is layered with intricate plot developments, each seamlessly interwoven to create a captivating story. Scott masterfully balances the epic scale of Roman warfare with intimate moments that delve into human ambition, betrayal, and resilience.

Despite the complex nature of the plot, Scott’s precise storytelling ensures clarity. Every development feels deliberate, and the audience is never lost amidst the grandeur. The pacing is immaculate, keeping viewers engaged from start to finish.


Technical Brilliance

The technical aspects of Gladiator 2 are a feast for the senses.

Cinematography: John Mathieson’s work is breathtaking. The depiction of Rome, the Colosseum, and the Numidian battlefields immerses the audience in the ancient world. The visuals are so sharp and vivid that you feel transported to the heart of the action.

Art Direction: The film’s recreation of ancient Rome is nothing short of a masterpiece. The attention to detail in the Colosseum, palatial structures, and Roman streets adds authenticity to the narrative.

Music: Harry Gregson-Williams’s score elevates the film’s emotional impact, blending haunting melodies with powerful orchestral pieces to match the intensity of the story.


Performances

The cast delivers performances that leave a lasting impact.

Denzel Washington as Macrinus: Washington is magnetic in his portrayal of the cunning and ambitious Roman noble. His commanding presence and nuanced expressions make him the standout performer, embodying greed and power with perfection.

Paul Mescal as Lucius Verus: Mescal captures the spirit of a reluctant warrior rising to the occasion. His portrayal balances vulnerability and strength, resonating with the audience.

Joseph Quinn and Fred Hechinger: The duo brings depth to their roles as the tyrannical emperors, portraying their lust for power with convincing intensity.


Highlights

The sequence showcasing the Roman fleet’s march to Numidia is awe-inspiring, both in scale and execution.

The gladiatorial battles in the Colosseum are intense and raw, embodying the stakes of survival.

The film’s exploration of human greed and moral dilemmas resonates universally, transcending its historical setting.


Verdict

“A monumental sequel that outshines the original.”

Ridley Scott has delivered a cinematic marvel in Gladiator 2. With its compelling narrative, breathtaking visuals, and stellar performances, the film is a masterclass in epic storytelling. It’s not just a movie—it’s an experience.

Rating: ★★★★★
Recommendation: A must-watch for fans of historical dramas and epic sagas.

STATEMENT FROM VANDANA SHAH AND ASSOCIATES ON BEHALF OF MRS. SAIRA W/O ALLAHRAKKA RAHMAN (A.R. RAHMAN)

0

Mumbai, 19th November 2024 – On behalf and instruction of Mrs.
Saira, wife of the renowned musician Allah Rakha Rahman (A.R.
Rahman), Vandana Shah and Associates issue the following
statement regarding the couple’s decision to part ways.
After many years of marriage, Mrs. Saira has made the difficult
decision to separate from her husband Mr. A R. Rahman. This
decision comes after significant emotional strain in their relationship.
Despite their deep love for each other the couple has found that the
tensions and difficulties have created an insurmountable gap
between them, one that neither party feels able to bridge at this time.
Mrs. Saira emphasized that she has taken this decision out of pain
and agony.
Mrs. Saira requests privacy and understanding from the public
during this challenging time, as she navigates this difficult chapter
in her life.
About Vandana Shah and Associates:
Award Winning Divorce Lawyer and Author
For Media Inquiries:
Vandana Shah and Associates
Phone: 9321822468/9819662468
[email protected]
Email: [email protected]

முப்பது வருடத்தை எட்டுவோம் என்று நாங்கள் நம்பியிருந்தோம், ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாகத் தெரிகிறது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்கக்கூடும். இன்னும், இந்த சிதைவில், துண்டுகள் மீண்டும் தங்கள் இடத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், அர்த்தத்தைத் தேடுகிறோம். எங்கள் நண்பர்களுக்கு, இந்த பலவீனமான அத்தியாயத்தை நாங்கள் கடந்து செல்லும்போது உங்கள் கருணைக்கும் எங்கள் தனியுரிமைக்கு மதிப்பளித்ததற்கும் நன்றி.
ஏ ஆர் ரகுமான்

Vanangaan Worldwide Release on January 10 for Pongal Festival

0

V House Productions Suresh Kamatchi’s upcoming production ‘Vanangaan” in collaboration with B Studios, directed by Bala, features Arun Vijay and Roshini Prakash in the lead roles. The film has ensemble star-cast of Samuthirakani, Mysskin, Radharavi, John Vijay, Ravi Mariah, Singampuli, Aruldoss and many others.

While G.V. Prakash Kumar is composing music, the background score is done by Sam C.S with Kaviperarasu Vairamuthu penning the lyrics. R.B. Gurudev is handling cinematography, and Sathish Suriya is overseeing editing works. R.P. Nagu is the art director and Stunt Silva is choreographing action sequences.

Following the blockbuster hit ‘Maanaadu’, V House Production is producing this film, which has created a huge sensation, especially for the reason it marks the directorial comeback of Bala after six long sabbatical years.

Besides, Arun Vijay recent statement, “Even during the film’s shooting, I didn’t experience the substantiality and impact of the role I am donning. But I am totally drenched in its world after watching the film recently. I am speechless, and ‘Vanangaan’ is a very special movie in my entire career,” has escalated the expectation level of this movie.

While the first look and the teaser have garnered phenomenal response from the film enthusiasts, the official announcement is made pertaining to the worldwide theatrical release. V House Productions Suresh Kamatchi has officially confirmed that the film will be releasing on January 10, 2025 for the festive occasion of Pongal.

The film’s final stage works are proceeding briskly.

பொங்கல் பண்டிகை வெளியீடாக ஜன-10ல் வெளியாகும் ‘வணங்கான்’

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் இயக்குநர் பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ இணைந்து தயாரிக்க பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வணங்கான்’. அருண்விஜய் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின், ராதாரவி, ஜான் விஜய், ரவிமரியா, சிங்கம்புலி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க பின்னணி இசையை சாம் சி.எஸ் மேற்கொள்கிறார். பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதுகிறார். ஒளிப்பதிவை ஆர்.பி.குருதேவ் மேற்கொள்ள படத்தொகுப்பை சதீஷ் சூர்யா கவனிக்கிறார். கலை இயக்குனராக ஆர்.பி.நாகு பொறுப்பேற்றுள்ளார். ஆக்சன் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா வடிவமைத்துள்ளார்.

‘மாநாடு’ என்கிற பிளாக் பஸ்டர் வெற்றி படத்தை தொடர்ந்து வி ஹவுஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் என்பதுடன், இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் ஆறு வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதாலும் இந்தப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது.

அதுமட்டுமல்ல, “படப்பிடிப்பின் பொழுது கூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை. ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில், என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. எனது திரையுலக பயணத்தில், ‘வணங்கான்’ ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை” என சமீபத்தில் நாயகன் அருண்விஜய் நெகிழ்ந்து போய் கூறியது இன்னும் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தவே செய்கிறது.

ஏற்கனவே ‘வணங்கான்’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் ‘வணங்கான்’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகை வெளியீடாக ஜன-10 2025 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது என்கிற அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

’பராரி’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

0

இயக்குநர், தயாரிப்பாளர் ராஜூமுருகன், “என் உதவி இயக்குநர் எழில் இயக்கி இருக்கும் படம் இது. இந்தப் படம் சமூக அக்கறையுடன் உருவாக்கியுள்ளது. பலருடைய உழைப்பும் சமூக அக்கறை சார்ந்து இந்தப் படம் உருவாகியுள்ளது. அனைவரும் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன்”.

தயாரிப்பாளர், நடிகர் ஹரி, “‘பராரி’ படம் எங்களுடைய சின்ன முயற்சி! உண்மையான உழைப்பைக் கொடுத்துள்ளோம்”.

நடிகை சங்கீதா, “இதுதான் என்னுடைய முதல் படம். எங்கள் அனைவருடைய உழைப்பும் நீங்கள் ஆதரிப்பீர்கள் என நம்புகிறேன். இவர்கள் எல்லாரிடம் இருந்தும் புது விஷயங்களை தினமும் கற்றுக் கொண்டேன். எல்லாருக்கும் நன்றி”.

ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், “’பரியேறும் பெருமாள்’ படத்திற்கு பிறகு நான் ஐந்தாறு படங்கள் முடித்துவிட்டேன். ஒருநாள் ராஜுமுருகனின் உதவியாளர் எழில் என்னிடம் வந்து இந்த கதையை படிக்க சொல்லி கொடுத்தார். கதையின் கிளைமாக்ஸ் என்னை மிகவும் பாதித்தது. அப்போதே இந்தப் படத்தை செய்ய வேண்டும் என முடிவு செய்து விட்டேன். ரிகர்சலில் புதுமுகங்கள் எல்லாருமே ஒரே ஸ்ட்ரெச்சில் இரண்டரை மணி நேரத்தில் படத்தை நடித்து காட்டிவிட்டார்கள். இந்த படம், படத்தில் நடித்த நடிகர்களுக்கு சமர்ப்பணம். தயாரித்த ராஜூமுருகன் அண்ணனுக்கு நன்றி. இந்த வாய்ப்பைக் கொடுத்த இயக்குநர் எழிலுக்கும் நன்றி. லைவாக பல விஷயங்கள் பதிவு செய்தோம். இந்தப் படத்திற்கு ஆதரவு கொடுங்கள்”

எடிட்டர் சாம், “ஸ்ரீதர் சார்தான் என்னை இந்தப் படத்திற்கு ரெஃபர் செய்தார். இந்தப் படத்தில் நான் வேலை செய்தபோதே படத்தின் ரிசல்ட் பாசிட்டிவாக வரும் என்பதை உணர முடிந்தது. வாய்ப்புக்கு நன்றி ஸ்ரீதர் சார். எழிலின் கதையை எந்த விதத்திலும் கெடுத்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். அவர்களிம் உழைப்பு நிச்சயம் பேசப்படும். நீங்களும் படத்தை பார்க்க வேண்டும்! “

நடிகர் புகழ் மகேந்திரன், “இது எனக்கு மூன்றாவது படம். ஹீரோவாக முயற்சி செய்து சில படங்கள் நடித்து வந்தேன். இந்தக் கதை கேட்டபோது, வில்லனாக நடிக்க பயமாக இருந்தது. ஆனால், கதை சொல்லி எழில் சார் நம்பிக்கை கொடுத்தார். அவர் சொல்லிக் கொடுத்ததைதான் நடித்திருக்கிறேன். நிறைய போட்டிப் போட்டு, கஷ்டப்பட்டு நடித்திருக்கிறோம். தொழில்நுட்ப குழுவினரும் சிறப்பான பணியை கொடுத்துள்ளனர். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

இயக்குநர் எழில் பெரியவேடி, “என்னுடய குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் நன்றி! என்னுடைய உதவி இயக்குநர்கள் இல்லாமல் இந்தப் படம் இல்லை. இந்தப் படத்தை ‘ஜிப்ஸி’ பட சமயத்திலேயே முடித்துவிட்டேன். நான் பிற தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி முடிக்கும் வரை ராஜூமுருகன் வெளியே காத்திருப்பார். எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும் என தெரியவில்லை. நான் கதை சொன்ன எல்லோருக்குமே கதை பிடித்திருந்தது. ஆனால், ஏதோ ஒரு இடத்தில் தயக்கம் இருந்தது. பின்புதான் ராஜூமுருகன் சார் ஹரியை உள்ளே கொண்டு வந்து இரண்டு பேரும் சேர்ந்து படத்தைத் தயாரித்தார்கள். அவர் இந்தப் படத்திற்காக எடை குறைத்தார். திருவண்ணாமலை மக்களையும் உள்ளே கொண்டு வந்து இந்தப் படத்தில் நடிக்க வைத்தோம். கதைக்காக அனைத்து நடிகர்களுக்கும் ரிகர்சல் கொடுத்தோம். ‘ஜோக்கர்’ படத்தில் இருந்தே ஷான் ரோல்டன் எனக்கு நல்ல பழக்கம். அவரும் பாடலாசிரியர் உமாதேவியும் இல்லை என்றால் இந்தப் படம் இல்லை. ஸ்ரீதர் இந்தப் படத்துக்காக ஆறு படங்களை விட்டுவிட்டார். இது என்னுடைய படம் என்பதைத்தாண்டி அவருடைய படம். சாமும் எனக்கு குடும்பம் போல. எல்லா தொழில்நுட்ப கலைஞர்களும் இந்தப் படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளனர். நடிகர்களும் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளனர். இந்த பூமிக்கு நாம் எல்லோருமே விருந்தினர்கள் தான். எதுவுமே நமக்கு சொந்தம் கிடையாது. நாம் பூமியை விட்டு போகும்போது எதாவது ஒரு நல்ல விஷயத்தை சொல்ல வேண்டும் என்பதுதான் ‘பராரி’ படத்தின் நோக்கம். இது எங்களின் கூட்டு முயற்சி. நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்.

- Advertisement -

Recent Posts