- Advertisement -
Home Blog Page 34

ZEE5 இன் “தடயம்” சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா!!!

0

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 இல் கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியான தமிழ் ஒரிஜினல் சீரிஸ் “தடயம்”, வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களின் பெரும் வரவேற்பில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

தமிழில் உருவாகும் க்ரைம் த்ரில்லர் கதைகளிலிருந்து மாறுபட்டு, உண்மை சம்பவங்களின் பின்னணியுடன் பரபரப்பும் மர்மமும் நிறைந்த அனுபவத்தை வழங்கும் இந்த சீரிஸ், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான சில நாட்களுக்குள்ளாகவே 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளதும் அதன் வெற்றியை நிரூபிக்கிறது.

இதனைக் கொண்டாடும் வகையில், படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து, விமர்சனங்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வினில்..,

ZEE5 சார்பில் கௌஷிக் நரசிம்மன் பேசியதாவது…,
பொதுவாக ஒரு சீரிஸ் வெளியான பிறகு, அதன் முழு வரவேற்பையும் பல வாரங்கள் கடந்த பிறகுதான் நாம் பார்க்க முடியும். ஆனால் தடயம் சீரிஸில், இன்னும் ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், அதுவும் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை எட்டியுள்ளது. இது மிகப் பெரிய சாதனை என்று நான் நினைக்கிறேன்.

இதற்கு முன்பு ZEE5 தளத்தில் பல சீரிஸ்கள் வெளியானது. விலங்கு, அயலி போன்ற சீரிஸ்கள் நல்ல வரவேற்பைப் பெற்றவை. ஆனால் அவற்றை ஒப்பிடும்போது மிகக் குறுகிய காலத்திலேயே இந்த அளவிலான பார்வை நிமிடங்களை ‘தடயம்’ எட்டியுள்ளது. ஒரு வாரத்திலேயே இப்படிப்பட்ட சாதனைகள் உருவாகியுள்ளது என்பது மிகப்பெரிய விஷயம். இந்த சாதனைக்கு முக்கிய காரணம் பார்வையாளர்கள்தான். அவர்கள் ஆதரவு இல்லாமல் இது நடந்திருக்காது. அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. அடுத்தடுத்து இன்னும் பல நல்ல படைப்புகள் வரப்போகிறது. அதை நீங்கள் தொடர்ந்து ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

அதே நேரத்தில், இந்த தொடரின் வெற்றிக்கு பங்களித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பு குழுவினருக்கும் எனது நன்றி.

Cocktail Cinemas தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணா பேசியதாவது..,

இந்த அளவிலான வரவேற்பை ‘தடயம்’ சீரிஸுக்கு கொடுத்ததற்கு அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. நீங்கள் அனைவரும் சேர்ந்து என்னையும், எங்கள் முழு குழுவையும் மிகப் பெரிய கௌரவத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள். தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் என அனைவரும் இணைந்து இந்த வெற்றியை உருவாக்கியுள்ளனர். இது எனக்கு தயாரிப்பாளராக முதல் முயற்சி. ஆனால் அந்த முதல் முயற்சியே இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றி ரசிகர்களின் ஆதரவால் மட்டுமே சாத்தியமானது. நீங்கள் இல்லையென்றால் இன்று நாங்கள் இந்த மேடையில் நிற்க முடியாது.

இந்த படைப்பை என்னால் முடியும் என்று நம்பிக்கை வைத்து, எனக்கு வாய்ப்பு கொடுத்த கௌஷிக் சார் அவர்களுக்கு நான் மிகவும் நன்றி கூற வேண்டும். அவரின் நம்பிக்கையும் ஊக்கமும் இல்லையென்றால் இன்று இந்த தருணம் எனக்கு கிடைத்திருக்காது. அதேபோல் எப்போதும் எனக்கு துணையாக இருந்து, எந்த பிரச்சனை வந்தாலும் தைரியம் கொடுத்து முன்னேற்றிய கனி அண்ணனுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். அவரின் ஆதரவும் ஊக்கமும் தான் இன்று நான் இங்கு நிற்க காரணம். இந்த சீரிஸில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் என் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி. அனைவருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் விபின் பாஸ்கர் பேசியதாவது..,

எல்லாருக்கும் வணக்கம். இந்த தருணத்தை கொண்டாடுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த சீரிஸில் வேலை செய்த போது, எங்களுக்கு பல அழுத்தங்கள் இருந்தன. ஆனாலும் நல்லதாக ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் முழு ஈடுபாட்டோடு வேலை செய்தோம். இன்று அதன் முடிவு ரசிகர்களை சென்றடைந்துள்ளது என்று பார்க்கும்போது, எங்கள் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக இதை உணர்கிறேன். எங்கள் டீம், இயக்குநர், சேனலிலிருந்து கௌஷிக் சார், முகில் சார், தயாரிப்பாளர் சார் ஆகிய அனைவரும் இந்த முழு பணிச்சூழலிலும், குறிப்பாக போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் இசை பணிகளின் போது எங்களுக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார்கள். அதேபோல் எங்கள் டீம், பாடலாசிரியர்கள், பாடகர்கள், இசைக்கலைஞர்கள் என எங்களுடன் பணியாற்றிய அனைவரும் மிகவும் ஒத்துழைப்பாக இருந்தனர். அவர்களின் ஆதரவும் உழைப்பும் தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று நான் நினைக்கிறேன். நன்றி.

ஒளிப்பதிவாளர் KK பேசியதாவது..,

இந்த வெற்றி விழா மேடையில் நிற்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது முதல் மேடை அனுபவமே ஒரு வெற்றி விழாவாக அமைந்ததற்கு அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய அஜய் சார், இயக்குநர் ஆகியோருக்கு நான் மிகவும் நன்றிகூற வேண்டும். அவர்களால்தான் இந்த சீரிஸில் நான் இணையும் வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் இயக்குநரும் முழு குழுவும் எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார்கள். இந்த வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி.

எடிட்டர் தினேஷ் குமார் பேசியதாவது..,
இந்த சீரிஸில் நாங்கள் பணியை தொடங்கிய போது, இயக்குநர் நவீன் அண்ணா ஸ்கிரிப்டை கொடுத்து முதலில் படிக்கச் சொன்னார். அப்போது படித்தவுடன் இது ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நாங்கள் உணர்ந்தோம். நாங்கள் நினைத்ததுபோலவே இந்த சீரிஸ் பெரிய வரவேற்பைப் பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வாய்ப்பை அளித்த நவீன் அண்ணாவுக்கு நன்றி. பெரிய வாய்ப்புகள் வந்தபோதும் தனியாக செல்லாமல், எங்களையும் கூட சேர்த்துக்கொண்டு சென்றதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி. அதேபோல் இந்த சீரிஸில் ஆதரவாக இருந்த அஜய் சார், சரவணன் சார், எங்கள் உதவி இயக்குநர்கள் மற்றும் முழு டீமுக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன். நன்றி.

இயக்குநர் நவீன்குமார் பழனிவேல் பேசியதாவது..,
இந்த வெற்றிக்கு பலரின் ஆதரவு காரணமாக இருந்தது. குறிப்பாக கௌஷிக் சார் ஆரம்பத்திலிருந்தே எங்களுக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார். எந்த நேரமாக இருந்தாலும் — இரவு நேரங்களிலும் கூட — எப்போதும் தொடர்பில் இருந்து ஆலோசனைகள் வழங்கி, இந்த படைப்பை இந்த அளவுக்கு கொண்டு வர முக்கிய பங்கு வகித்தார். இந்த வெற்றியின் முக்கிய காரணங்களில் ஒருவர் கௌஷிக் சார் தான். அதேபோல் ZEE5 அணியில் இருந்து முகில் சார் உள்ளிட்ட அனைவரும் தொடர்ந்து ஆதரவாக இருந்தனர். மேலும் கனி அண்ணா மிகவும் ஆதரவாக இருந்து இந்த படைப்பு வெற்றியாக அமைய முக்கிய காரணமாக இருந்தார்.

என்னுடன் பணியாற்றிய என் முழு குழுவினருக்கும் நன்றி. குறிப்பாக மியூசிக் டைரக்டர், KK சார் இருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சீரிஸில் பல முக்கிய தருணங்களில் இசை மிகவும் பெரிய பலமாக இருந்தது. அதேபோல் எங்களுடன் பணியாற்றிய அனைத்து துணை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் என் டீம் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. குறைந்த காலக்கெடுவில் — சுமார் 20 நாட்களுக்குள் — இந்த பணியை முடிக்க வேண்டிய சூழல் இருந்தது. அதனால் சில நேரங்களில் நான் கடுமையாக நடந்துகொண்டிருக்கலாம். அதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இருந்தாலும் நீங்கள் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்த படைப்பை முடித்ததற்கு நன்றி. சில குறைகள் இருந்தால் அதை அடுத்த படைப்புகளில் சரி செய்து இன்னும் சிறப்பாக செயல்பட முயற்சி செய்வேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

நடிகர் ராஜ்கிரண் தாஸ் பேசியதாவது..,
எல்லாருக்கும் வணக்கம். இந்த அளவிலான வரவேற்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உண்மையில் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த சீரிஸில் பங்கெடுத்த கௌஷிக் சார், நவீன், அஜய் சர்மா, கனி சார் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பாராட்டு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் இந்த சீரிஸை தொடர்ந்து ஆதரித்து வரும் மீடியா நண்பர்களுக்கும், சமூக வலைதளங்களில் அதை மக்களிடம் கொண்டு சென்ற அனைத்து ரசிகர்களுக்கும் என் நன்றி.

எழுத்தாளர், நடிகை கொற்றவை பேசியதாவது..,
‘தடயம்’ வெப் சீரிஸ் எனக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் நவீன் குமார் அவர்களுக்கும், ZEE5 நிறுவனத்திற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய நிறமும் தோற்றமும் காரணமாக பல தடைகளை சந்தித்திருக்கிறேன். ஆனால் இந்த கதாபாத்திரம் எனக்கு ஒரு பெரிய நம்பிக்கையை அளித்தது. இந்த வேடத்தில் ஒரு வித்தியாசமான மாற்றத்துடன் நடிக்க வாய்ப்பு கொடுத்த நவீன் குமார் அவர்களுக்கு என் சிறப்பு நன்றி. என் நடிப்பின் மீது அவர் வைத்த நம்பிக்கை எனக்கும் ஒரு பெரிய தைரியத்தை கொடுத்துள்ளது. என்னாலுமே நன்றாக நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த வாய்ப்பு எனக்கு தந்துள்ளது. இங்கு வந்திருக்கும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் நன்றி.

திரு அழகன் தமிழ்மணி பேசியதாவது..,
என் அருமை சகோதரர், சகோதரி பத்திரிகையாளர்களே… நான் உங்களின் ஒருவன். என் வாழ்க்கை உங்களோடு தான் தொடங்கியது. ஆரம்ப காலத்தில் என்னோடு பணியாற்றிய பலர் இன்று கூட சகோதரர்களாகவே இருக்கிறார்கள். என் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே ஆதரவாக இருந்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.

இன்று இந்த மேடையில் என் மகனைப் பார்க்கும்போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவனை நேரடியாக தயாரிப்பாளராக உருவாக்கவில்லை. ஆரம்பத்திலிருந்து சினிமாவின் அடிமட்டத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்து, முதலில் என் சீரியல்களில் நடிக்க வைத்தேன். அதன் பிறகுதான் தயாரிப்பாளராக வர வேண்டும் என்று சொல்லி வளர்த்தேன். இன்று எந்த உதவியும் இல்லாமல் தனது முயற்சியால் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கும் என் மகன் அஜய் கிருஷ்ணாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

‘தடயம்’ சீரிஸை நான் வீட்டில் உட்கார்ந்து பார்க்கும்போது, அது ஒரு வெப் சீரிஸ் போலவே எனக்குத் தோன்றவில்லை. ஒரு திரைப்படம் போலவே உணர்ந்தேன். அடுத்தது என்ன நடக்கப் போகிறது என்ற ஆர்வத்தில், முடிவுவரை பார்த்து முடித்த பிறகுதான் எழுந்தேன். அந்த அளவுக்கு இயக்குநரின் கைவண்ணமும், ஒளிப்பதிவாளரின் பணியும், எடிட்டரின் வேலையும் மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த சீரிஸை திரைப்பட தரத்தில் உருவாக்கிய முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.

நான் சின்னத்திரைக்கு புதிதானவன் அல்ல. 1999ஆம் ஆண்டிலேயே ‘மங்கை’ என்ற தொடர் மூலம் மதிய நேர மெகா தொடரை தொடங்கியவர்களில் ஒருவன் என்ற பெருமை எனக்கு உள்ளது. சின்னத்திரை தான் என்னை வளர்த்தது. நான் சின்னத்திரையில் சம்பாதித்ததால்தான் பெரியத்திரையில் ஏற்பட்ட கடன்களை கூட அடைக்க முடிந்தது. அந்த சின்னத்திரையையே நான் வாழ்நாள் முழுவதும் கடன்பட்டவனாக நினைக்கிறேன். அதே பாதையில் என் மகனையும் அனுப்பியிருக்கிறேன். அவருடைய பயணத்திலும் நீங்கள் அனைவரும் பங்கெடுத்து, அவருக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

நடிகர் பிரேம் பேசியதாவது..,
இந்த சீரிஸில் பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் நிறைவாக இருக்கிறது. இது எனக்கு ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த வாய்ப்பை அளித்த அஜய் சார், நவீன் சார், அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த சீரிஸில் பணியாற்றும் போது அவர்கள் என்னை ஒரு கலைஞராக மட்டும் அல்லாமல், தங்களுடைய சகோதரனைப் போலவே பார்த்துக்கொண்டார்கள். அதற்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன். அதேபோல் என்னுடன் நடித்த அண்ணன் கனி, அண்ணன் ராஜா உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன். இந்த குழு இனியும் பல நல்ல படைப்புகளை உருவாக்கும் என்று நம்புகிறேன். நன்றி.

நடிகர் சமுத்திரகனி பேசியதாவது..,
ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடி ஏங்கிக்கொண்டே இருக்கும். ‘தடயம்’ அந்த நிறைவை மிகவும் ஆழமாக மனசுக்குள் கொண்டு வந்து பல விஷயங்களை சரி செய்த மாதிரி உணர்வைத் தருகிறது. அதுதான் இந்த வெற்றியின் மகிழ்ச்சி. நான் சின்னத்திரையில் கிட்டத்தட்ட 3000 எபிசோடுகள் இயக்கியிருக்கிறேன். ஆனால் அந்த பயணத்தில் இவ்வளவு நேர்மையாக பாராட்டுகளை கேட்கும் வாய்ப்பு அரிது. இன்று அந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது. அவரும், அஜய், நவீன், KK சார் உள்ளிட்ட பலர் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறார்கள். அனைவரின் உழைப்பும் சேர்ந்து தான் இந்த வெற்றியை கொடுத்திருக்கிறது. ஒரு அப்பாவிடம் இருந்து பிள்ளைக்கு கிடைக்கும் அங்கீகாரம் மிகப் பெரிய விஷயம். அந்த அங்கீகாரம் அஜய்க்கு இவ்வளவு சீக்கிரம் கிடைத்திருப்பது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

இந்த வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றி இங்கேயே நிற்காமல் இன்னும் பல தூரம் எங்களை அழைத்து செல்லும் என்று நம்புகிறேன். இன்னும் பல வெற்றிகளை சேர்த்து மீண்டும் மீண்டும் சந்தித்து இந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வோம். நன்றி.

இயக்குநர் நவீன்குமார் பழனிவேல் எழுதி இயக்கியுள்ள இந்த சீரிஸில் சமுத்திரகனி, சிவாதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1990களின் இறுதிக் கால தென்னிந்திய கிராமப்புற பின்னணியில் அமைந்துள்ள இந்த சீரிஸ், தொடர் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க முயலும் காவல் அதிகாரியின் விசாரணையை மையமாகக் கொண்டது.

ZEE5 பற்றி:

தமிழ் பார்வையாளர்களுக்கென மண் சார்ந்த தனித்துவமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ZEE5, இந்த சீரிஸின் மூலம் மீண்டும் ஒரு வித்தியாசமான க்ரைம் திரில்லர் அனுபவத்தை வழங்கியுள்ளது. தற்போது “தடயம்” சீரிஸ் ZEE5 தளத்தில் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Priyanka Mohan’s ‘Made in Korea’ Press & Media Interaction

0

Producer Sreenidhi Sagar of Rise East Entertainment and director Ra. Karthik, the duo known for the breezy feel-good film Nitham Oru Vaanam, have collaborated once again for Made in Korea. The film, featuring Priyanka Arul Mohan in the lead role, will premiere on Netflix on March 12. Marking the release, actress Priyanka Mohan, producer Sreenidhi Sagar and director Ra. Karthik interacted with the press and media, sharing their experiences of creating the film for Netflix.

Here are some excerpts from the interaction.

Director Ra. Karthik said: “I take this opportunity to thank the press and media for spreading positive reviews about my debut directorial Nitham Oru Vaanam.” Speaking about the colour palette used in the film, he said, “I strongly believe that every city has its own colour – be it Chennai or any other city. Our crew stayed there for a couple of months, and every place we travelled to gave me different shades and moods. That is what we see reflected in the visuals of the trailer. When asked about what impressed him the most about Korea, he said, “The perfect planning of the crew there was truly inspiring. During our stay, we met strangers every day, and that’s when our true selves are revealed. It becomes a process of self-realisation, and that is something I personally experienced while filming this movie in Korea.”

Actress Priyanka Mohan said:“The story revolves around a girl from a small village in Tamil Nadu who hasn’t seen the world beyond her horizon. While playing the character Shenba, I felt like I was experiencing Korea through her journey. This was possible because of Karthik sir’s guidance and the way the entire crew made me feel comfortable. One word that I learnt and brought back home is ‘Kamsahamnida’, which means ‘Thank you’. Every day after the shoot, everyone in the crew would bow and say those words.”

Producer Sreenidhi Sagar, Rise East Entertainment said: “Made in Korea is among the first Tamil films to be extensively shot in Korea. The script itself impressed me, and I had previously worked with Ra. Karthik on Nitham Oru Vaanam. The protagonist’s character, played by Priyanka Mohan, was very promising.
“We faced many challenges while shooting the film. While reading the script everything seemed easy, but once we began filming, we realised the scale of the effort involved. However, the experience was wonderful. As a producer, I feel extremely proud after watching the final version.” He further added, “Priyanka Mohan has a strong fan base beyond the Tamil industry as she is also well known in Telugu, Malayalam and Kannada cinema. Her presence is definitely a big strength for the film.”

நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ப்ரீமியர் ஆகிறது. இதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது.

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர், “கொரியாவில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் இது. ஒரு பெண்ணின் கனவு நனவாவதை பற்றி உணர்வுப்பூர்வமான திரைக்கதையை கார்த்திக் படமாக்கியுள்ளார். அவருடன் எனக்கு இது இரண்டாவது படம். கொரியாவில் படமாக்கும்போது சில சவால்களை சந்தித்தோம். ஆனால், அதையும் தாண்டி நடிகர்களின் நடிப்பு, படமாக்கப்பட்ட சூழல் எல்லாம் நன்றாக வந்திருக்கிறது.

பிரியங்கா மோகனின் பக்கத்துவீட்டு பெண் போன்ற எளிய தோற்றமே அவரை இந்த கதைக்குள் கொண்டு வந்தது. தமிழ்நாடு மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி ரசிகர்களுக்கும் பிரியங்கா பரிச்சியம் என்பதும் அவரை நாங்கள் தேர்ந்தெடுக்க முக்கிய காரணம். உங்களுக்கு ஒரு கனவு இருந்தால் அதற்காக கடுமையான உழைப்பை கொடுத்தால் நிச்சயம் அது ஒருநாள் நிறைவேறும் என்பதுதான் இதில் சொல்லியிருக்கிறோம்” என்றார்.

இயக்குநர் கார்த்திக், “என்னுடைய முதல் படமான ‘நித்தம் ஒரு வானம்’ படத்திற்கு நீங்கள் அனைவரும் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. ’மேட் இன் கொரியா’ என்னுடைய இரண்டாவது படம். சரியான திட்டமிடுதல் இல்லை என்றால் கொரியாவில் படமாக்குவது கஷ்டம். இது நான் அங்கு கற்றுக்கொண்ட பெரிய விஷயம். திரையரங்குகளை விட நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ‘நித்தம் ஒரு வானம்’ படம் வெளியானபோது இன்னும் அதிக ரசிகர்கள் பார்த்துவிட்டு வாழ்த்தினார்கள். திரைத்துறையிலும் எனக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கிடைத்தது.

அதனால், நெட்ஃபிலிக்ஸ் உடன் அடுத்த படம் என்றதும் உடனே ஒப்புக்கொண்டு ‘மேட் இன் கொரியா’ ஆரம்பித்தேன். 13 மொழிகளில் இந்தப் படத்தை டப் செய்தும் 36 மொழிகளில் சப்டைட்டில் உடனும் நெட்ஃபிலிக்ஸ் இந்தப் படத்தை வெளியிடுவதால் அதிக ரீச் கிடைக்கும். அதனால், ஓடிடியில் நேரடியாக இந்தப் படம் வெளியாவது மகிழ்ச்சி. இன்றைய தலைமுறையினர் பலரும் கே-டிராமா ரசிகர்கள். அவர்களுக்கு எல்லாம் ஒருமுறையாவது கொரியா போக வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவர்கள்தான் இந்தப் படத்தின் மெயின் ஆடியன்ஸ்” என்றார்.

நடிகை பிரியங்கா மோகன் பேசியதாவது, “’மேட் இன் கொரியா’ படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னால் கொரியன் டிராமா பார்ப்பது, சில வார்த்தைகள் கற்றுக் கொண்டது என தயாரானேன். இயக்குநர் கார்த்திக் கொடுத்த இன்புட்ஸூம் உதவியாக இருந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் அங்கு படமாக்கினோம். கணிக்க முடியாத காலநிலைதான் அங்கு பெரும் சவாலாக இருந்தது. காலையில் படப்பிடிப்பிற்கு செண்பாவாக சென்று மாலையில் செண்பாவாக திரும்புவேன்.

நாங்கள் அங்கு சென்று கொரிய வார்த்தைகள் நிறைய கற்றுக்கொண்டது போல, ‘தளபதி’ படத்தின் சுந்தரி பாடலையும் நிறைய தமிழ் வார்த்தைகளையும் அங்குள்ளவர்களுக்கு சொல்லி கொடுத்திருக்கிறோம். இயக்குநரின் மனைவி கொரியன் டிராமா ரசிகை. அவரை இன்ஸ்பிரேஷனாக வைத்துதான் இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறார். செண்பா தன்னை யார் என்று கண்டுபிடிப்பதுதான் ‘மேட் இன் கொரியா’” என்றார்.

“Mustafa Mustafa has all the elements of a wholesome entertainer and several moments that are sure to capture the pulse of the youth audience” – Sakthivelan B, Sakthi Film Factory

0

As Mustafa Mustafa gears up for its theatrical release across Tamil Nadu today, the film’s producer Pradeep Mahadevan and Sakthivelan B of Sakthi Film Factory, who is presenting and releasing the film, are elated as the film’s early preview and press shows have garnered an excellent response. Both Pradeep Mahadevan and Sakthivelan B are delighted that the positive reception has further strengthened the film’s release, enabling Mustafa Mustafa to arrive in theatres across 150 Plus screens in Tamil Nadu.

Producer Pradeep Mahadevan said, “For a film like Mustafa Mustafa, which has been created with a lot of passion and sincerity, reaching the audience in a big way is very important. That is where the support of experienced distributors becomes crucial. The Midas touch of icons like Sakthivelan sir is something every filmmaker would wish for. Sakthi Film Factory has consistently encouraged and released many films that have unique contents laced with entertainment factors, helping them gain phenomenal reach among audiences across Tamil Nadu. We are extremely happy and honoured that he has come forward to release our film, and we believe his support will help Mustafa Mustafa connect with a wider audience.”

Sakthivelan B of Sakthi Film Factory said, “When I watched Mustafa Mustafa, I was very impressed with the way the film has been crafted. It has all the elements of a wholesome entertainer and several moments that are sure to capture the pulse of the youth audience. The screenplay kept me engaged throughout, and those who watched the film along with me also appreciated and enjoyed it very much. The team has worked with great dedication, and I am confident that the film will entertain audiences in theatres.”

Mustafa Mustafa features Sathish and Suresh Ravi in the lead roles, with Monica Chinnakotla and Maanasa Choudhary as the female leads. The film is written and directed by Praveen Saravanan and produced by Pradeep Mahadevan. The music is composed by Jones Rupert, and the film is backed by a dedicated team of technicians who have contributed to shaping the film as a wholesome entertainer. The film is released across Tamil Nadu by Sakthi Film Factory

”முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் இளைஞர்களை கவரும் திரைப்படமாக ‘முஸ்தபா முஸ்தபா’ உருவாகியுள்ளது”- சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பி!

‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. பத்திரிகையாளர்களுக்கான திரையிடல் மற்றும் சிறப்பு திரையிடலில் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் பிரதீப் மகாதேவன் மற்றும் இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பி ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த சிறப்பான வரவேற்பு காரணமாக, பார்வையாளர்கள் மத்தியிலும் படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 150-க்கும் அதிகமான திரைகளில் படம் வெளியாகிறது.

தயாரிப்பாளர் பிரதீப் மகாதேவன் பகிர்ந்து கொண்டதாவது, “ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் உருவாகியுள்ள ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் அதிகளவில் பார்வையாளர்களை சென்றடைவது மிகவும் முக்கியம். அதற்கு அனுபவம்மிக்க விநியோகஸ்தர்களின் ஆதரவு அவசியம். சக்திவேலன் சார் போன்ற முன்னணி விநியோகஸ்தர்களின் ஆதரவு கிடைப்பது எந்த திரைப்பட இயக்குநரும் விரும்பும் விஷயம். சக்தி பிலிம் பேக்டரி பல தனித்துவமான கதைக்களம் கொண்ட, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய திரைப்படங்களை தொடர்ந்து ஊக்குவித்து, அவற்றை தமிழ்நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு சென்றுள்ளது. எங்கள் திரைப்படத்தை வெளியிட அவர் முன்வந்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. அவருடைய ஆதரவு ’முஸ்தபா முஸ்தபா’ திரைப்படத்தை மேலும் பல பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பி பகிர்ந்து கொண்டதாவது, “’முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. குறிப்பாக, முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் இளைஞர்களை கவரும் பல தருணங்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. படத்தின் திரைக்கதை பார்வையாளர்களை கட்டிப்போடும் விதமாக அமைந்துள்ளது என என்னுடன் படம் பார்த்தவர்களும் ரசித்து பாராட்டினர். முழு அணியும் மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்தப் படத்திற்காக உழைத்துள்ளது. இந்த படம் திரையரங்குகளில் பார்வையாளர்களை நிச்சயம் மகிழ்விக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றார்.

’முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் மார்ச் 6, 2026 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகர்கள்: நடிகர்கள் சதீஷ் மற்றும் சுரேஷ் ரவி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்க கதாநாயகிகளாக மோனிகா சின்னகோட்லா, மானசா செளத்ரி நடித்துள்ளனர். இவர்களுடன் கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா, விஜே பார்வதி, விஜே மகேஸ்வரி, சாணக்யன் மற்றும் ஜாவா சுந்தரேசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

எழுத்து, இயக்கம்: பிரவீன் சரவணன்,
தயாரிப்பு: பிரதீப் மகாதேவன்,
தமிழ்நாடு விநியோகஸ்தர்: சக்தி பிலிம் பேக்டரி, சக்திவேலன் பி,
பேனர்: தி மாபோகோஸ் கம்பெனி,
இசை: எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட்,
ஒளிப்பதிவு: கே.எஸ். விஷ்ணு ஸ்ரீ,
படத்தொகுப்பு:தினேஷ் பொன்ராஜ்

JEPPIAAR UNIVERSITY CELEBRATES THE ZENITH OF HUMAN ENDEAVOR: THE 9TH EDITION OF THE JEPPIAAR ICON AWARDS 2026

0

CHENNAI, March 6, 2026 — In a grand confluence of tradition, intellect, and contemporary brilliance, Jeppiaar University hosted its flagship event, the 9th Edition of the Jeppiaar Icon Awards, today at its sprawling auditorium.

The ceremony, which has become a landmark in the national cultural calendar, honors “Stalwarts” and “Legends”—personalities whose lives exemplify the transformative power of innovation, selfless sacrifice, and entrepreneurial grit.

The event was presided over by the visionaries behind the institution’s meteoric rise, Dr. Regeena J Murali, Chancellor of Jeppiaar University, and Mr. Murali Subramanian, President of Jeppiaar University. Together, they presented the prestigious honors to a curated assembly of distinguished personalities who have redefined the boundaries of their respective domains.

The 2026 cohort of awardees reflects the university’s commitment to multi-disciplinary greatness.

The honors were conferred upon:
Shri. V. M. Muralidharan (The Zenith Icon for Transformative Leadership): Recognized for his profound impact on the IT industry and his stewardship of women’s education.

Shri. Adityaram (The Humanitarian Icon): Honored for his unparalleled rise as a self-made real estate tycoon and his tireless commitment to social welfare.

Shri. B. Sivanthi Adityan Balasubramanian: Celebrated as the “Custodian of the People’s Voice” for his leadership of the Daily Thanthi Group.

Mrs. Simran Bagga: Accorded the “Evergreen Icon” status for her three-decade reign as a cinematic powerhouse.

Shri. P. Unnikrishnan: Honored for his dual mastery of Carnatic and Playback vocals.

Ms. Dhanya Rajendran: Recognized for her fearless leadership in independent digital journalism.

Shri. Alexander Babu: Celebrating the innovation of the “Musical Standup” genre.

Shri. Ashwath Marimuthu: Acknowledged for the record-breaking social and commercial success of the film Dragon.

Mr. Murali Narayanarao: Honored for his role in building a global legacy in the hospitality sector.

Addressing the press, Chancellor Dr. Regeena J Murali remarked, “The Jeppiaar Icon Awards are not merely a celebration of success, but a celebration of the values we want our students to inherit. These awardees are living embodiments of the perseverance we nurture within our campus.”

President Mr. Murali Subramanian added, “At Jeppiaar University, we believe in honoring those who have not just climbed the ladder of success but have also built bridges for others to cross. Today, we bridge the gap between classroom theory and legendary practice.”
Jeppiaar University took immense pride in honoring these distinguished personalities, whose work had enriched society, advanced industries, and elevated India’s global stature.

The 9th Edition of the Jeppiaar Icon Awards marked yet another historic milestone, recognizing those who dared to innovate, inspire, and lead.

ஜேப்பியார் பல்கலைக்கழகம் நடத்தும் மானுட சாதனைகளின் உச்சம்:
9-வது பதிப்பு ‘ஜேப்பியார் ஐகான் விருதுகள் 2026’ கொண்டாட்டம்
சென்னை, மார்ச் 6, 2026— மரபு, அறிவுத்திறன் மற்றும் நவீன காலத்தின் சிறப்புகளை எல்லாம் ஒன்றிணைக்கும் ஒரு மாபெரும் நிகழ்வாக, ஜேப்பியார் பல்கலைக்கழகத்தின் மிக முக்கிய விழாவான 9-வது பதிப்பு ‘ஜேப்பியார் ஐகான் விருதுகள்’ இன்று அதன் பிரம்மாண்டமான அரங்கில் நடைபெற்றது.

தேசிய கலாச்சார வரைபடத்தில் ஒரு மைல்கல்லாக மாறியுள்ள இந்த விழா, புதுமை, தன்னலமற்ற தியாகம் மற்றும் தொழில்முனைவோர் மன உறுதி ஆகியவற்றின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்திய “சான்றோர்களையும்” “சாதனையாளர்களையும்” கௌரவிக்கிறது.

பல்கலைக்கழகத்தின் அசுர வளர்ச்சிக்குக் காரணமான தொலைநோக்கு பார்வையாளர்களான ஜேப்பியார் பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் ரெஜினா ஜே முரளி மற்றும் ஜேப்பியார் பல்கலைக்கழகத் தலைவர் திரு. முரளி சுப்பிரமணியன் ஆகியோர் இந்த விழாவிற்குத் தலைமை தாங்கினர். தத்தமது துறைகளில் புதிய எல்லைகளை வகுத்த தலைச்சிறந்த ஆளுமைகளுக்கு அவர்கள் உயரிய விருதுகளை வழங்கி சிறப்பித்தனர்.

2026-ஆம் ஆண்டிற்கான விருது பெற்றவர்கள் பல்வேறு துறைகளில் நிகழ்த்திய சாதனைகளை இது பிரதிபலிக்கிறது.

விருது பெற்றவர்கள் விபரம்:
திரு. வி. எம். முரளிதரன் (மாற்றத்தை நோக்கிய தலைமைத்துவத்திற்கான ‘ஜெனித்’ ஐகான்): தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் பெண்கள் கல்வி மேம்பாட்டிற்கு அவர் ஆற்றிய ஆழமான பங்களிப்பிற்காக அங்கீகரிக்கப்பட்டார்.

திரு. ஆதித்யாராம் (மனிதநேய ஐகான்): சுயமாக முன்னேறிய ரியல் எஸ்டேட் ஜாம்பவான் என்ற அந்தஸ்தையும், சமூக நலனுக்கான அவரது அயராத அர்ப்பணிப்பையும் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

திரு. பி. சிவந்தி ஆதித்தன் பாலசுப்பிரமணியன்: தினத்தந்தி குழுமத்தின் தலைமைத்துவத்தின் மூலம் “மக்களின் குரலை பாதுகாப்பவர்” எனப் போற்றப்பட்டார்.

திருமதி. சிம்ரன் பக்கா: மூன்று தசாப்தங்களாகத் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருவதற்காக “எவர்கிரீன் ஐகான்” (Evergreen Icon) அந்தஸ்து வழங்கப்பட்டது.

திரு. பி. உன்னிகிருஷ்ணன்: கர்நாடக இசை மற்றும் பின்னணி இசை ஆகிய இரண்டிலும் அவர் கொண்டுள்ள அபார தேர்ச்சிக்காகக் கௌரவிக்கப்பட்டார்.

செல்வி. தன்யா ராஜேந்திரன்: சுதந்திரமான டிஜிட்டல் இதழியலில் அவர் காட்டிய அச்சமற்ற தலைமைத்துவத்திற்காக அங்கீகரிக்கப்பட்டார்.

திரு. அலெக்சாண்டர் பாபு: “மியூசிக்கல் ஸ்டாண்ட்-அப்” எனும் புதிய வகை நகைச்சுவை கலையை உருவாக்கியமைக்காகப் பாராட்டப்பட்டார்.

திரு. அஸ்வத் மாரிமுத்து: ‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் சமூக ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய சாதனை படைத்ததற்காகக் கௌரவிக்கப்பட்டார்.

திரு. முரளி நாராயணராவ்: விருந்தோம்பல் துறையில் உலகளாவிய நற்பெயரை உருவாக்கியதில் அவரது பங்கிற்காகக் கௌரவிக்கப்பட்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் ரெஜினா ஜே முரளி கூறுகையில், “ஜேப்பியார் ஐகான் விருதுகள் என்பது வெற்றியை மட்டும் கொண்டாடும் விழா அல்ல, இது எங்கள் மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்பும் விழுமியங்களைக் கொண்டாடும் விழா.

விருது பெற்ற இவர்கள், எங்கள் வளாகத்தில் நாங்கள் வளர்க்கும் விடாமுயற்சியின் வாழும் உதாரணங்கள்,” என்றார்.
பல்கலைக்கழகத் தலைவர் திரு. முரளி சுப்பிரமணியன் கூறுகையில், “வெற்றி ஏணியில் ஏறியவர்களை மட்டும் அல்லாமல், மற்றவர்கள் கடந்து செல்ல பாலம் அமைத்துக் கொடுத்தவர்களையும் கௌரவிப்பதில் ஜேப்பியார் பல்கலைக்கழகம் நம்பிக்கை கொள்கிறது.

இன்று, வகுப்பறை பாடங்களுக்கும் நிஜ உலகச் சாதனைகளுக்கும் இடையிலான இடைவெளியை நாங்கள் இந்த விருதுகளின் மூலம் இணைத்துள்ளோம்,” என்றார்.
சமூகத்தை வளப்படுத்திய, தொழில்துறையை மேம்படுத்திய மற்றும் இந்தியாவின் உலகளாவிய அந்தஸ்தை உயர்த்திய இந்தச் சிறந்த ஆளுமைகளைக் கௌரவிப்பதில் ஜேப்பியார் பல்கலைக்கழகம் பெருமிதம் கொள்கிறது.

9-வது பதிப்பு ஜேப்பியார் ஐகான் விருதுகள் 2026, புதுமை மற்றும் தலைமைத்துவத் திறனுடன் வழிநடத்துபவர்களை அங்கீகரிப்பதில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

“பாராட்டு விழா நடத்தக் கூட மின் தடையா ?” ; ‘சல்லியர்கள்’ பட விழாவில் வெகுண்டு எழுந்த சகாயம் ஐஏஎஸ் சில நிமிடங்களில் செய்த அதிரடி சம்பவம்

0

“அதீத நேர்மையும் ஆபத்தானது என்றாலும் அதற்காக கொள்கையை விட வேண்டாம்”..; ‘சல்லியர்கள்’ பட இயக்குநருக்கு சகாயம் ஐஏஎஸ் பாராட்டு

“சிரமத்தோடு வாழ்வதுதான் தமிழர் வாழ்வாக இருக்கிறது” ; ‘சல்லியர்கள்’ பட விழாவில் சகாயம் ஐஏஎஸ் வேதனை

‘சல்லியர்கள்’ படக்குழுவினருக்கு பாராட்டு விழா நடத்திய சகாயம் ஐஏஎஸ்

CW நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்த ‘சல்லியர்கள்’ படம் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாக முடியாத சூழலில் நேரடியாக ஒடிடி பிளஸ் தளத்தில் வெளியானது.

மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் டைரக்சனில் உருவான இப்படத்தில் சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். இன்னும் பல புதுமுகங்களும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

ஈழத்தில் நம் தமிழ் ராணுவத்தினர். குறிப்பாக மருத்துவர் அணி, போர் தக்குதலுக்கு ஆளான எதிரி வீரர்கள் மீது கூட எந்த அளவுக்கு கருணை காட்டி அவர்களது உயிரை காக்கவும் போராடினார்கள் என்கிற தமிழரின் அறத்தை சொல்லும் விதமாக உருவாகியிருந்த இந்தப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மூலமாக வெளியிட்டார்.

இந்தநிலையில் மக்கள் பாதை பேரியக்க தலைவரும் ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான திரு. சகாயம் அவர்களின் முன்னிலையில் ‘சல்லியர்கள்’ படக்குழுவினருக்கு இன்று பாராட்டு விழா நடைபெற்றது

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் வ.கௌதமன், தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகு, எழுத்தாளர் புகழேந்தி தங்கராஜ், கார்ட்டூனிஸ்ட் பாலா, மக்கள் பாதை பேரியக்கத்தை சேர்ந்த ராவணக் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில்

இயக்குநர் வ கௌதமன் பேசும்போது,

“பெரும் போராட்டத்திற்கு இடையே இந்த படத்தை தயாரித்தும் கூட ஒரு சுகப்பிரசவம் போல திரையரங்குகளுக்கு கொண்டு வர முடியாமல் கடைசி நேரத்தில் ஓடிடி தளத்தில் வெளியாக வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் உலகம் முழுக்க ஒரு அதிர்வை இந்தப்படம் ஏற்படுத்தியது. இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட முடியாத போதும் சரி, ஓடிடியில் வெளியிட்ட போதும் சரி, இதோ இப்போது இந்தக் கலைஞர்களுக்கான பாராட்டு விழாவை கூட நிம்மதியாக நடத்த முடியாது நிலை இருக்கிறதே, இது உலகத்தில் எந்த இனத்திற்கும் வராது. ஈழ மண்ணில் எத்தகைய வலிகளை தாங்கிக் கொண்டு எந்த விதமான வாழ்க்கையை வாழ்ந்தோம் என்கிற அனுபவங்களை ஒரு படமாக்கி அதைக்கூட மக்களுக்கு கொண்டு செல்ல முடியவில்லை என்பதுதான் கொடுமை.

இந்த படத்தில் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு கடைசி நேரத்தில் தான் தியேட்டர்கள் லிஸ்ட்டே கிடைத்திருக்கிறது. 28 தியேட்டர்கள் மட்டும்தான், அதிலும் காலையில ஒரு காட்சி மட்டும் தான் ஒதுக்கி இருந்தார்கள். அந்த சமயத்தில் அவர் அழைப்பின் பேரில் வந்து இந்த அவல நிலையை குரல் கொடுத்து உலகிற்கு எடுத்துச் சென்றோம். மறுநாள் சள்ளியர்கள் ஓடிடியில் வெளியானது. உலகத் தமிழர்கள் அனைவரும் பார்த்தார்கள். இந்த படத்தை முழுமையாக அனைவரிடமும் கொண்டு போய் சேர்த்ததாக சொல்ல முடியாது. படம் வெற்றியா என்றால் இல்லை, தோல்விதான்.. ஆனால் அது சல்லியர்களுக்கான தோல்வி அல்ல.. 12 கோடி தமிழர்களுக்கான தோல்வி என்பதை இந்த மானம் கெட்ட இனம் இனியாவது உள்வாங்க வேண்டும்.

எங்களுடைய தமிழர் வரலாற்றை எடுத்து எங்கள் தமிழ்நாட்டில் வெளியிட தானே அனுமதி கேட்டோம். ஆனால் இங்கே தமிழகத்தில் காலூன்றி திரையுலகில் வியாபாரம் செய்யும் வேறு மாநில நிறுவனங்கள் தமிழ்நாட்டை கொள்ளை அடிக்கும் கூடாரமாக மாற்றிக் கொண்டார்களே தவிர, அதனால் தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை. இதை இன்னும் எத்தனை காலத்திற்கு வேடிக்கை பார்ப்பது ?

எதிரி என்றால் அடித்து, ஒழித்து உரு தெரியாமல் ஆக்கு என்று தான் உலக நாடுகளில் சொல்லப்படுகிறது. தமிழினத்திற்கு மட்டும்தான் பகைவருக்கும் அருள்வாய் நன்னெஞ்சே என்கிற அந்த பண்பு இருக்கிறது அதைத்தான் ‘சல்லியர்கள்’ படத்தில் சொல்லி இருக்கிறார்கள். ஒரு மருத்துவர் அணி போரில் காயம்பட்டு கிடக்கும் எதிரியை கூட காப்பாற்றி அவனையும் வாழ வைத்து நாமும் எப்படி வாழ்வது என்கிற கருவைத்தான் இந்தப்படம் சொல்லியிருக்கிறது. அப்படிப்பட்ட மாவீரன் வாழ்ந்த தமிழர்களின் வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படத்திற்கு இங்கே தமிழகத்தில் திரையரங்குகள் கிடைக்கவில்லை. இங்கே உள்ள அரசாங்கம் அப்படி திரையரங்கு தர மறுத்தவர்களின் உரிமத்தை ரத்து செய்திருக்க வேண்டும்.. செய்தார்களா ? செய்யவில்லை. தமிழ் உணர்வு இருந்தால் நிச்சயம் அதை செய்திருப்பார்கள். அரசாங்கத்தை விடுங்கள்.. தமிழ் இனத்துக்கான தலைவர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள் கூட என்ன செய்தார்கள் ?. அவர்களிடமிருந்து 100 பேராக திரையரங்குகளை நோக்கி படையெடுத்திருந்தால் அந்த திரையரங்க உரிமையாளர் தியேட்டர் தரமாட்டேன் என்று சொல்லி இருப்பாரா ? இந்த தமிழ் இனத்திற்காக இருக்கிறேன் என்று சொல்கின்ற தலைவர்கள் என்ன செய்தார்கள் ? சந்தனக்காடு எடுத்தேன்.. அடுத்த முந்திரிக்காடு எடுத்து, இப்போது வன்னிக்காட்டிற்கு வந்திருக்கிறேன். வன்னிக்காட்டின் கதைகளை உலகம் பூராம் வெளியிட தான் போகிறேன். அப்படி வரும்போது அரசாங்கம் எதிர்த்தாலும் சரி.. திரையரங்கு ஆட்கள் எதிர்த்தாலும் சரி.. எதிர்ப்பவர்களுக்கு இங்கு இடம் இல்லை என்கிற நிலையை உருவாக்குவோம்” என்று பேசினார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது,

“இந்த நிகழ்வை ஐயா சகாயம் ஐஏஎஸ் முன்னிலையில் நடத்துவதில் பெருமையாக உணர்கிறேன். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தமிழ்செல்வன் படத்தில் விஜயகாந்த் கலெக்டராக நடித்திருப்பார். அந்த படத்தை பார்க்கும் போதெல்லாம் இந்த மாதிரி ஒரு மாவட்ட ஆட்சியரை பார்ப்போமா என்கிற ஏக்கம் விழுந்தது. ஆனால் நாம் வாழும் காலத்தில், நம் இனத்திலேயே அப்படி ஒரு பெருமை மிகு அடையாளமாக இருக்கின்ற சகாயம் ஐயா இந்த விழாவை நடத்துவதை ஆஸ்கர் விருது வாங்கியதற்கு சமமாக கருதுகிறேன்.

இந்த படத்தின் பத்திரிக்கையாளர் காட்சிக்கு ஏற்பாடு செய்து துவங்கிய அந்த நேரத்தில் தான் எனக்கு இந்த படத்திற்கான சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்ற தகவல் தெரியவந்தது. அப்போதே அந்த காட்சியை ரத்து செய்யலாமா என நினைத்தேன். ஆனால் மக்கள் பார்த்துவிட்டு முடிவு செய்யட்டும் என முடிவெடுத்தேன். அந்த சமயத்தில் தான் அண்ணன் கௌதமனுக்கு இந்த விஷயத்தை சொல்லி அழைத்தேன். அவர் அடுத்த பத்து நிமிடத்தில் அங்கே வந்து நின்றார். கார்ட்டூனிஸ்ட் பாலா மற்றும் ஏகலைவன் இருவரும் இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தீவிர முனைப்பு காட்டினார்கள். அமேசான் போன்ற நிறுவனங்கள் திரையரங்கில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களைத் தான், தங்களது தளத்தில் வெளியிடுவார்கள் சல்லியர்கள் படம் திரையரங்கில் ஒரு காட்சியில் மட்டும் வெளியானால் அது எப்படி வெற்றி படமாக மாறும் ? அதனால் அந்த சமயத்தில் எங்களுக்கு கிடைத்தது ஓடிடி பிளஸ் தளம் தான்.

இந்த படம் வெளியான பிறகு அண்ணன் சீமான், இயக்குநர் மு.களஞ்சியம், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தோழர் தியாகு, தமிழரசன், திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் இந்த படத்திற்கு ஆதரவாகவும் திரையரங்குகள் கிடைக்காததை எதிர்த்து கண்டனம் தெரிவித்தும் ஆதரவுக்கரம் நீட்டினார்கள். தமிழனாக பிறந்ததற்கு இந்த இடத்தில் தான் நான் பெருமைப்படுகிறேன். இந்தப் படம் வியாபார ரீதியாக எவ்வளவு சிக்கலை சந்திக்கும் என்று தெரிந்தே இந்த படத்தை தயாரிக்க நடிகர் கருணாஸ் முன் வந்தார். சினிமா பற்றி பெரிய அளவில் அறிந்திராத மக்கள் பாதை பேரியக்கத்தை சேர்ந்த ராவணக்குமார் 10 லட்சம் ரூபாய் கொடுத்து இந்த படத்தை துவங்கி வைத்தார். இதுநாள் வரை ஈழத்தமிழர்களுக்கான வரலாற்றை சொல்லும் படங்கள் எதுவும் எந்த ஒரு தளத்திலும் பார்வைக்கு கிடைக்காது. ஆனால் முதன் முறையாக நம்முடைய ‘சல்லியர்கள்’ படம் தான் எல்லா தளத்திலும் பார்க்க கிடைக்கிறது’. அதுவே நமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி/ இதைத்தொடர்ந்து நம்முடைய தமிழர் வரலாறு குறித்த படங்கள் அனைத்து ஓடிடி தளங்களிலும் வர ஆரம்பித்து விடும் என நம்புகிறேன். எந்த வகையில் சல்லியர்கள் படம் உலகத் தமிழர்கள் மத்தியில் சென்றடைந்ததில் எனக்கு மிகப்பெரிய பெருமை. சகாயம் ஐயா தலைமையில் இந்த பாராட்டுக்களை பெறுவது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாக நினைக்கிறேன்” என்று பேசினார்.

மக்கள் பாதை பேரியக்கத்தின் தலைவர் திரு சகாயம் ஐஏஎஸ் பேசும்போது,

“வெளிப்பட்ட ஆழமான அறத்தை துல்லியமாக வெளிப்படுத்திய சல்லியர்கள் படக்குழுவினருக்கு பாராட்டு விழா என்கிற அடிப்படையில் உணர்வுப்பூர்வமாக நடக்கின்ற மிக நல்ல நிகழ்வு இது. சல்லியர்கள் படக்குழுவினருக்கு மக்கள் பாதை பேரியக்க எதற்காக விழா நடத்த வேண்டும் என கேள்வி கேட்கலாம். ஐஏஎஸ் அலுவலருக்கு இது தேவையா என்று என்னிடம் பல பேர் கேட்டார்கள். ஒரு ஐஏஎஸ் அலுவலர் இதுபோன்ற இன விடுதலைப் போராட்ட வரலாற்றை பற்றி எல்லாம் பேச வேண்டுமா என்றெல்லாம் கேட்பார்கள். அடிப்படையில் நானும் ஒரு தமிழன்.. நானும் ஒரு மனிதன்.. எங்கெல்லாம் மானுடம் அவலத்திற்கு உள்ளாகிறதோ அங்கெல்லாம் குரல் கொடுக்க வேண்டும் என எண்ணுகின்ற ஒரு மனிதன். அது தமிழன் தான் உயர்ந்த மனிதனாக இருக்க முடியும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.

மிக ஆழமாக யோசித்துப் பார்த்தால் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஊற்றுக்கண்ணாக கடந்த எண்பதாவது ஆண்டு கால நிகழ்வுகளை எல்லாம் நாம் பார்க்க வேண்டி இருக்கிறது. 1988ல் சென்னை லயோலா கல்லூரியில் என்னுடைய முதுகலையை முடித்துவிட்டு, சென்னை சட்டக்கல்லூரியின் மாணவனாக இருக்கிறேன்.. இந்த காலகட்டம் ஈழ இன விடுதலைப் போராட்டம் மிகவும் நெருக்குதலுக்கு உள்ளான ஒரு காலகட்டம் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். அன்றைக்கு இந்திய அமைதிப்படை ஈழத்தில் நமது மக்களுக்கு எதிராக களம் அமைத்து காயப்படுத்திக் கொண்டிருந்த அந்த சமயத்தில் மாணவர்களாகிய நாங்கள் கொதித்துப் போய் போராட்டக் களத்திற்கு வந்தோம். ஆனால் நான் எந்த ஒரு அரசியல் இயக்கத்திலும் அல்லது சமூக இயக்கத்திலும் உறுப்பினராக இருந்தது கூட இல்லை. ஒரு தமிழ் சங்கத்தில் கூட உறுப்பினராக நான் இல்லை. அன்றைக்கு சட்டம் படிக்க வேண்டும், ஒரு வழக்கறிஞராக வேண்டும், இல்லை என்றால் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற எண்ணத்தில் படித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சாதாரண குக்கிராமத்தில் பிறந்த ஒரு எளிய விவசாயின் மகனாகப் பிறந்து தட்டுத்தடுமாறி தலைநகர் சென்னைக்கு கனவுகளோடு கிளம்பி வந்த ஒரு மாணவன் நான்.

ஐஏஎஸ் ஆகவேண்டும் என்பது என் முதற்கனவு அது கிடைக்கவில்லை என்றால் வழக்கறிஞராக வேண்டும் என நினைத்தேன். தமிழக அரசால் நடத்தப்பட்ட ஐஏஎஸ் பயிற்சி மையம் அண்ணா நகரில் இருந்தது. இந்த சமயத்தில் நான் ஒரு தொண்டு நிறுவனத்திலும் பணியாற்றிக் கொண்டு, சட்டக்கல்லூரியிலும் மாணவனாக இருந்து கொண்டே இந்த ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகளிலும் கலந்து கொண்டேன். அதேசமயம் அப்போது எனக்கு நேரமில்ன்மை காரணமாக பயிற்சி மையத்திற்கு பெரும்பாலும் போக மாட்டேன். அதனால் பத்து நாளைக்கு ஒரு முறை அந்த பயிற்சி கல்லூரிக்கு சென்று அங்கே அவர்கள் கொடுக்கும் குறிப்புகளை பெற்றுக்கொண்டு செல்வேன். அதனால் அந்த கல்லூரி முதல்வருக்கு என் பெயரை மனதில் நிற்கவில்லை அதனால் அவர் எனக்கு சமரசம் என்றே பெயர் வைத்து விட்டார். ஆனாலும் என்னுடைய சமூகப்பணிகளை தொடர வேண்டும் என்பதற்காக அப்போது அவரிடம் சின்னச்சின்ன பொய்களை சொல்லிவிட்டு சென்று விடுவேன். இந்த சமயத்தில் அங்கே படித்த 50 மாணவர்களில் மூன்று பேர் ஐஏஎஸ் முதல் நிலை தேர்வில் தேர்வானார்கள். அதில் நானும் ஒருவன். பிறகு நடந்த மெயின் தேர்வில் இரண்டு பேர் தேர்வாணர்கள்.. அதில் நானும் ஒருவன்.. பயிற்சி வகுப்புகளுக்கு செல்லாமலேயே இதெல்லாம் சாத்தியப்படுகின்ற குறுக்கு வழி இருக்கிறதா சார் என்று கேட்டு விடாதீர்கள்..

அடுத்ததாக இறுதியான நேர்முகத் தேர்வுக்கு செல்ல வேண்டிய காலகட்டம்.. அந்த சமயத்தில் தான் இந்திய அமைதிப்படை இலங்கையில் நடத்திய அநியாயங்களுக்கு எதிராக எங்களது சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒரு போராட்ட கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். கூட்டத்தில் என்னையும் கலந்து கொண்டு பேச அழைத்தார்கள்.. அதே கூட்டத்தில் தான் இன்னொரு கல்லூரி மாணவராக இருக்கக்கூடிய தொல் திருமாவளவன் கலந்து கொண்டு பேசுகிறார். முதல் நாள் இரவு முழுவதும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமா, இல்லை ஐஏஎஸ் பணி முக்கியமா என்று யோசித்து, விடியற்காலையில் எனக்கு என் தமிழ் மண் தான் முக்கியம் என முடிவெடுத்தேன். அதன்பிறகு அன்று நடந்த கூட்டத்தில் நான் பேசினேன். அதற்குப் பிறகு அந்த நேர்முகத் தேர்விற்கும் சென்றேன். அந்த தேர்வில் நான் ஐஏஎஸ் ஆக தேர்வு செய்யப்படவில்லை என்றாலும் கூட மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் பணிக்காக தேர்வு செய்யப்பட்டேன்.

இப்போது 12 லட்சம் பேர் ஐஏஎஸ் ஆரம்பநிலை தேர்வுக்காக விண்ணப்பித்திருக்கும் நிலையில், அன்றைய காலகட்டத்தில் எனக்கு ஐஏஎஸ் பணியா, தமிழர் விடுதலையா என்கிற நிலை வந்த போது தமிழர் விடுதலை தான் என முடிவு எடுத்தவன் நான். ஒரு ஐஏஎஸ் அதிகாரி தமிழ் விடுதலை உணர்வு பற்றி பேசக்கூடாது என்றெல்லாம் இல்லை. எனக்கு ஒரு மகன் பிறந்த போது கூட என் மாமனார் ஸ்டீபன் என பெயர் வைக்கும்படி கூறினார். ஆனால் என் இனத்தை பறைசாற்றும் விதமாக இருக்க வேண்டும் என நான் திலீபன் என பெயர் வைத்தேன். இந்த மொழி, அது எங்கள் உயிரோடும் உணர்வோடும் கலந்தது. அதனுடைய வெளிப்பாடாகத்தான் என் இனத்துடைய விடுதலைக் களத்தில் வெளிப்பட்ட மகத்தான அந்த அறத்தை, மிக துல்லியமாக தம்பி கிட்டு இங்கே வெளிப்படுத்தி இருக்கிறார்.

நான் 2009ல் கலெக்டர் ஆனேன்.. தமிழ்ச்செல்வன் படத்தில் வரும் கலெக்டர் போலவே இருக்கிறீர்கள் என தம்பி சுரேஷ் காமாட்சி போல பலபேர் என்னிடம் சொன்னார்கள். நான் என்னைப் பொருத்தவரை இயல்பாகவே இருக்கிறேன். ஒரு சாதாரண கிராமத்தில் இருந்து வந்தவன்.. விவசாயிகள் நிறைந்த அந்த கிராமத்தில் நான் படித்து வளர்ந்தபோது அனைத்து சாதி மக்களும் மிக அன்புக்குரியவர்களாக இருந்தார்கள்.. தாழத்தப்பட்ட மக்கள் என்று நாம் வகைப்படுத்துகிறோமே அவர்கள் தான் களங்கம் இல்லாத ஒரு அன்புக்குரியவர்களாக இருந்தார்கள். நான் துணை கலெக்டராக பொறுப்பு ஏற்றதும், “நீ அதிகாரத்திற்கு வந்தால் ஏழை மக்களுக்காக உன் அதிகாரத்தை பயன்படுத்து” என எழுதி வைத்தேன். அது என்னுடைய கிராமத்தில் நான் பார்த்து வளர்ந்த அத்தனை மக்களையும் மனதில் கொண்டு தான்.. அன்று நான் பொறுப்பேற்ற அந்த மாவட்டத்தில் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படவில்லை என்று என் மீது நடவடிக்கை எடுத்தார் அப்போதைய கலெக்டர். அந்த அறத்தை நான் என் தாய் தந்தையிடம் இருந்தும் இந்த மொழியிடம் இருந்தும் தான் கற்றுக் கொண்டேன். 2009 ஆம் ஆண்டில் நான் கலெக்டராக பதவி ஏற்றபோது எனக்கு மகிழ்ச்சி இல்லை. காரணம் அங்கே ஈழத்தில் எம் மக்கள் கடுமையான போராட்டத்தை சந்தித்துக் கொண்டிருந்தார்கள். இங்கே அந்த சமயத்தில் நான் தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பில் இருந்தேன்.

அந்த தேர்தல் சமயத்தில் ஒரு நிர்வாகிகள் கூட்டம் நடத்திய போது, திருச்சி சாலையில் உள்ள ஒரு கிடங்கு ஒன்று தீப்பற்றி எரிந்த தகவல் கிடைத்தது கூட்டத்தில் கலந்துகொண்ட தாசில்தாரையும் அதன் பிறகு ஆர்டிஓவையும் அடுத்தடுத்து அனுப்பி வைத்தேன் பின் தீவிரம் அதிகமானதால் நானே நேரில் களத்திற்கு சென்றேன். அங்கே உள்ளே சிக்கிக்கொண்டவர்களில் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகம் என்கிற செய்தி கிடைத்தது.= அந்த நேரத்தில் என்னை அறியாமலேயே தீயணைப்பு வீரர்களுடன் நானும் அந்த கிடங்கிற்குள் புகுந்து என்னால் முடிந்த அளவு ஒன்று இரண்டு நபர்களை என் கையால் தூக்கி வந்தேன். வெளியே இருந்த அதிகாரிகள் கூட நீங்கள் ஏன் சென்றீர்கள் என என்னை கடிந்து கொண்டார்கள். அவர்கள் எல்லாம் வெளி மாநிலத்திலிருந்து நம்மை நம்பி வந்தவர்கள்.. அவர்கள் காக்க வேண்டியது நம் கடமை என்று தான் அப்போது செயல்பட்டேன்.. அதன் பிறகு அதில் 16 பேர் இறந்தபோது, பீகாரிலிருந்து அவர்கள் உறவினர்களை வரவழைத்து இங்கேயே 5000 பொதுமக்கள் பேரணி நடத்தி அவர்களை மிக மரியாதையுடன் தகனம் செய்தோம். மக்களிடமிருந்து உதவி பணம் வசூலித்து அவர்களுக்கு கொடுத்து அனுப்பினோம். அரசுக்கும் அவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கச் சொல்லி பரிந்துரை செய்து எழுதினேன். ஆனால் அரசாங்கம் அவர்கள் நம்மூர்காரர்கள் இல்லை எனத் தர மறுத்துவிட்டது. ஆனால் மீண்டும் மீண்டும் எழுதி போராடி அதை அவர்களுக்கு பெற்றுத் தந்தேன். இதுதான் தமிழர் அறம். ஆனால் அதே 2009 ல் கடலுக்கு அப்பால் என்னுடைய மக்கள் ஆபத்தையும் பேரழிவையும் சந்தித்துக் கொண்டிருப்பதிலிருந்து அவர்களை காப்பாற்ற யாரும் இல்லையே என்று நான் நெஞ்சுருகி வருந்திய காலகட்டம் தான் நான் கலெக்டராக பொறுப்பேற்ற அந்த காலகட்டம். அது எனது மகிழ்ச்சியான காலம் அல்ல.

இப்படிப்பட்ட களத்தை, அந்தக் களத்தில் காட்டப்பட்ட அறத்தை, ஒரு மகத்தான படைப்பாக அற்புதமாக பதிவு செய்திருக்கிறார் மிகப்பெரிய ஆளுமையாக கலைஞராக வர இருக்கின்ற தம்பி கிட்டு. அற்புதமான அந்த கதை தேர்வும், கள தேர்வும் மிக அற்புதமாக இருக்கிறது. எனக்கும் கூட கடற்கரைக்கு அந்தப் பக்கம் சென்று பார்த்து விட வேண்டும் என்கிற ஆசை.. அந்த ஆசை எல்லாம் நிறைவேற்றுகின்ற வண்ணம் அந்தக் களத்திலே அந்த பனைமரத்து காடுகளுக்குள் அந்த பதுங்கு குழிகளுக்குள் நம் தமிழ்நாட்டு வெளிச்சம் எவ்வளவு உயர்வாக இருந்ததோ, அதை சிவகங்கை களத்திலேயே சிறப்பாக காட்டிய அன்புத்தம்பி கிட்டுவை நான் உள்ளார்ந்து வாழ்த்துகிறேன். தம்பி நீ ஒரு மகத்தான கலைஞராக, மகத்தான இயக்குநராக நீ வருவாய் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதீத நேர்மையும் கொஞ்சம் ஆபத்தானது என்பதை உணர்ந்தவன் என்கிற முறையில் சொல்கின்றேன், அதற்காக கொள்கையை விட வேண்டாம்..

இன்றைய நிகழ்வில் கூட மின் தடை ஏற்பட்டது.. ஒலிபெருக்கி தடை ஏற்பட்டது.. எங்கோ நடந்த அந்த ஒரு நிகழ்வுக்கு என் தம்பிகள் பொறுப்பல்ல.. நான்தான் பொறுப்பு.. அப்படிப்பட்ட ஒரு சிரமத்தோடு இதை நடத்துகிறோம்.. சிரமத்தோடு வாழ்வதுதான் தமிழர் வாழ்வாக இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்று ஏற்பட்ட தடையின் போது தான், இந்த படத்தை தம்பி சுரேஷ் காமாட்சி வெளியிடும்போது ஏற்பட்ட தடையை என்னால் உணர்வுபூர்வமாக புரிந்து கொள்ள முடிந்தது. அன்றைய சமயம் அவர் கொடுத்த அந்த பேட்டி என் மனதை தொட்டது. அன்பிற்குரிய அந்த மகத்தான கலைஞர்களை பாராட்ட வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதற்கு புள்ளியாக இருந்தது நமது தம்பி இராவணக்குமார். 10 லட்சம் என்பது அவருக்கு அதிகமான தொகை. தனது மனைவியின் நகைகளை எல்லாம் அடகு வைத்து இந்த படம் துவங்க முதல் புள்ளியாக இருந்திருக்கிறார் .அவருக்கும் இந்த படத்தை தயாரித்த கருணாஸ் ஆகியோருக்கும் நமது உள்ளார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். நாம் உள்ளார்ந்து பாராட்ட வேண்டும்.

இந்த தமிழ் மீது நிகரற்ற பற்றுக்கொண்ட தம்பிகள் அனைவரும் சொல்வார்கள் நாம் தேர்தல் அரசியலுக்கு முன்னெடுக்க வேண்டும் என்று.. தேர்தல் அரசியல் முடிவு எடுத்தால், நிச்சயமாக நான் சொல்கிறேன், மிக எளிதாக 5000 பேரை இங்கே வரவழைக்க முடியும் என்று எங்களுக்கு தெரியும். ஆனால் தேர்தலை தாண்டி தமிழர் அரசியலை, மக்கள் அரசியலை, கோட்பாடு அரசியலை முதலில் தொடங்குவோம் என்று சொன்னேன். தமிழர் தலைகுனியக் கூடாது என்ற அறத்தை சொன்ன இந்த படைப்பாளிகளை பாராட்டுவதற்காகத் தான் இங்கே நாம் அனைவரும் கூடியிருக்கிறோம். உலக வரலாற்றில் ஒரு மிகப்பெரும் நெருக்கடியான நேரத்தில் நாம் நிற்கிறோம்.. ஒரு பாராட்டிற்கு கூட மின் தடையை ஏற்படுத்தக் கூடியவர்கள், எவ்வளவு தகுதி குறைவாளர்களாக இருக்கிறார்கள் என நாம் பார்க்க வேண்டும்.. திருடுபவர்கள் ஆற்றல் உள்ளவர்களாக இருந்தால் அதை தடுக்கிற நாம் பேராற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்” என்று பேசினார்.

‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’ திரைப்பட விமர்சனம்

0

12 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற வினோதமான ஆசை கொண்ட நாயகன் பால்ராஜ், அதற்கு எந்த பெண்ணும் சம்மதிக்க மாட்டார்கள் என்று தெரிந்த பிறகு 6 குழந்தைகள் போதும் என்ற மனநிலைக்கு வருகிறார். அவரது 6 குழந்தை ஆசைக்கு சம்மதம் தெரிவித்ததால் காயத்ரி ரெமாவை மணக்கிறார். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகு காயத்ரி ரெமா, ஒரு குழந்தை போதும், அதற்கு மேல் குழந்தை வேண்டாம், என்ற முடிவுக்கு வர, பால்ராஜ் மட்டும் 6 குழந்தை ஆசையை நிறைவேற்றியே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால், கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.

இந்த நிலையில், மது பழக்கத்திற்கு அடிமையான கணவரால் தாம்பத்ய சுகம் இல்லாமல் தவிக்கும் சுவேதா ஸ்ரீக்கும், பால்ராஜுக்கும் இடையே நட்பு ஏற்படுகிறது. நாளடைவில் நட்பு கள்ளக்காதலாக மாற, கணவன், மனைவி மற்றும் கள்ளக்காதலி ஆகிய மூன்று பேருடைய வாழ்க்கையும் என்னவாகிறது, என்பது தான் படத்தின் மீதிக்கதை.

எழுதி இயக்கி, தயாரித்திருக்கும் பால்ராஜ், கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு பொறுத்தமானவராக இருப்பதோடு, அளவான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். மனைவியை கட்டி அணைக்க முயற்சிக்கும் போது, அவர் தள்ளிவிடும் காட்சிகளில் தன் ஏக்கம் மற்றும் ஏமாற்றத்தை சரியான முறையில் வெளிக்காட்டியிருப்பவர், மற்றொரு பெண்ணின் நட்பு கிடைத்த உடன் தன்னுள் ஏற்படும் மனமாற்றம் மற்றும் அவருடனான காதல் லீலைகள் என்று மனுஷன் படம் பார்ப்பவர்களுக்கு பொறாமை ஏற்படும் விதத்தில் வலம் வருகிறார்.

நாயகனின் மனைவியாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, ஒரு குழந்தையை பெற்று வளர்ப்பதே பெரும்பாடாக இருக்கும் இந்த காலக்கட்டத்தில் 6 குழந்தைகள் என்ற கணவரின் பேராசையை நிராகரிக்கும் காட்சிகளில், பெண்களின் மனதையும், அவர்களது வலியையும் பிரதிபலிக்கும் வகையில் நடித்திருக்கிறார்.

மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் சுவேதா ஸ்ரீ, பார்வையாளர்களின் கவனத்தை கட்டிப்போடும் விதமாக பயணித்திருக்கிறார். பார்த்ததும் கவனம் ஈர்க்கும் முகம், அப்பாவித்தனமான பேச்சு என்றாலும், அடப்பாவி…என்று சொல்லும் அளவிலான கதாபாத்திரத்தில் அமர்க்களமாக நடித்திருக்கும் சுவேதா ஸ்ரீ-க்காக இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம், என்று சொல்லும் அளவுக்கு அம்மணி வலம் வந்திருக்கிறார்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ரவி மரியா, தன் அனுபவம் வாய்ந்த நடிப்பின் மூலம் படத்திற்கு அடையாளமாக பயணித்திருப்பதோடு, பல இடங்களில் தனது வில்லத்தனம் மூலம் மிரட்டுவதோடு, சிரிக்கவும் வைக்கிறார்.

அம்பானி சங்கர், பசங்க சிவகுமார் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

உதயன் ஒளிப்பதிவு எளிமையாக இருந்தாலும், காட்சிகள் தரமாக படமாக்கப்பட்டிருக்கிறது.

விஜய் பிரபு இசையில் பாடல்கள், வசனங்கள் போல் ஒலித்திருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

கே.சங்கரின் படத்தொகுப்பு இயக்குநர் சொல்ல வந்த கருத்தை தெளிவாக சொல்லவில்லை என்றாலும், கதையில் இருக்கும் கள்ளக்காதல் விவகாரத்தை சுவாரஸ்யமாக சொல்லி படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் பால்ராஜ், தற்போதைய காலக்கட்டத்தில் நடக்கும் முக்கிய பிரச்சனையை கதைக்கருவாக எடுத்துக் கொண்டு அதை கமர்ஷியல் திரைப்படமாக கொடுத்திருக்கிறார். கதையில் கள்ளக்காதல் விவகாரம் முக்கிய பங்கு வகித்தாலும், அதை நேர்மையாகவும், திரைக்கதைக்கு சுவாரஸ்யம் தரக்கூடிய விதத்திலும் கையாண்டிருப்பவர், மக்களுக்கு நல்ல கருத்தையும் சொல்லியிருக்கிறார்.

மதுவுக்கு அடிமையானவர்களால் குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதையும், புரிதல் இல்லாத தம்பதியினரால் குடும்பம் எப்படி திசை மாறி பயணிக்கிறது, என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் பால்ராஜ், அதை சிலபல குறைகளோடு சொன்னாலும், சுவாரஸ்யமாக சொல்லி படத்தை ரசிக்க வைத்து விடுகிறார்.

Thadayam Web Series Review

0

Thadayam Web Series is a riveting 2026 Tamil crime thriller on ZEE5, directed by Navinkumar Palanivel and starring Samuthirakani as the resilient SI Adhiyamaan alongside Sshivada Nair’s commanding SI Lakshmi, masterfully unraveling a chilling mid-90s serial killer saga across the Andhra Pradesh-Tamil Nadu border through six taut episodes brimming with suspense, emotional depth, and triumphant investigative brilliance. The narrative captivates from the start with its clever setup of parallel killer tracks, haunting question-mark clues in blood, stolen wedding chains, and Adhiyamaan’s inspiring rise from departmental scorn to heroic breakthroughs, blending period authenticity, patriarchal challenges, and heartfelt human connections into an exhilarating procedural that celebrates justice and resilience without missing a beat. Samuthirakani shines with gritty determination and layered vulnerability, Sshivada radiates authority and warmth, supported by a stellar ensemble, while immersive sound design, atmospheric cinematography, and pulsating score create non-stop tension and joyous payoff in every twist-filled moment. Its bold premise, solid character arcs, and crowd-pleasing reveals deliver pure thrill and positivity, making it an absolute must-binge gem earning top praise for redefining Tamil OTT excellence with heart, smarts, and unforgettable highs.

Billroth Hospital Launches Advanced Cardiac & Pulmonary Specialty Services with New Heart Dysfunction Clinic and Pulmonary Embolism Referral Center

0
  • Unveils comprehensive integrated care programmes and gifts ₹20 lakhs to a heart transplant survivor, reinforcing its commitment to advanced medicine and patient-first philosophy

Chennai, February 28, 2026

Billroth Hospitals, one of the city’s leading multispecialty centres and a pioneer in advanced laparoscopic and laser procedures, marked a significant milestone with the launch announcement of its comprehensive Cardiac & Pulmonary Specialty Services, with a new Heart Dysfunction Clinic and Pulmonary Embolism Referral Center at The Leela Palace Chennai.

The newly introduced specialty programmes — including the Cardiac Transplant Programme, Cardiac Dysfunction Clinic & Cardiac Rehabilitation Centre, Pulmonary Hypertension Clinic, and Pulmonary Embolism Referral Centre — strengthen integrated heart–lung care, delivering seamless, high-precision, and patient-centric services under one roof. By integrating advanced technology, multidisciplinary clinical expertise, and coordinated treatment pathways, the hospital reinforces its commitment to comprehensive, compassionate and holistic healthcare.

The highlight of the event was a deeply moving moment when Dr. Rajesh Jeganathan, Chairman, Billroth Hospitals, presented a cheque of ₹20,00,000/- (Rupees Twenty Lakhs Only) to a successful Heart Transplant patient. The heartfelt gesture symbolized not only the life-saving impact of advanced cardiac care but also the institution’s unwavering commitment to supporting patients well beyond the surgery.

Cardiac Centre of Excellence, Emergency & Advanced Care Capabilities
The Cardiac Department, which commenced operations in 2003, has since evolved into a centre of excellence, consistently adopting advanced techniques and cutting-edge technologies to manage complex cardiac conditions. Building on a legacy of over 50,000+ Cath Lab procedures and 10,000+ CTVS surgeries, the hospital continues to set new standards in cardiac excellence. It further strengthens its emergency preparedness with 24×7 Advanced Cardiac Emergency Services at its Shenoy Nagar and R.A. Puram units, ensuring immediate expert intervention and round-the-clock critical care when every second counts.

The cardiac division houses three state-of-the-art Cath Labs equipped with advanced technologies such as IVUS (Intravascular Ultrasound), FFR (physiological lesion assessment), Rotablator (rotational atherectomy), and advanced EP study facilities, supported by comprehensive CTVS surgery capabilities for complex cardiac and vascular procedures. These cutting-edge systems enhance clinical precision, optimise patient outcomes, and enable the confident management of high-risk and complex cases.

About Billroth Hospital
Billroth Hospital was founded by the late Dr. V. Jeganathan on November 30, 1990, beginning as a modest 30-bed facility. Within six years, it expanded with an additional 70 beds, eventually growing into a 650-bed multi-specialty hospital. Guided by Dr. Jeganathan’s vision, the hospital remains committed to delivering quality, affordable healthcare to people from all walks of life. This mission is upheld by a dedicated team of skilled doctors, advanced medical technology and well-trained paramedical staff, all working together to ensure comprehensive care and support for every patient. Committed to innovation, precision, and compassionate healthcare, Billroth Hospitals continues to set new benchmarks in delivering world-class cardiac and pulmonary care to the community.

For more details, please visit: www.billrothhospitals.com

Fourth Floor Movie Review

0

Fourth Floor is a captivating 2026 Tamil psychological thriller directed by L.R. Sundarapandi, starring Aari Arjunan as the determined software engineer Dheeran who moves into a mysterious fourth-floor apartment in Chennai, where haunting visions and eerie encounters unravel a gripping web of his ex-lover’s disappearance, supernatural chills, and a brilliant conspiracy twist.​​

Storyline

Dheeran’s arrival sparks spine-tingling dreams of falls from heights, attic discoveries, and spectral clues that masterfully blend ghost story suspense with real estate scams, political intrigue, and hidden murders, building to exhilarating revelations that keep every moment electric and unpredictable.​

Performances

Aari Arjunan shines with controlled intensity and raw emotion, perfectly capturing fear and resolve, while Deepshika adds warm neighborly charm, Thalaivasal Vijay brings commanding gravitas, and the ensemble elevates the tension with authentic, heartfelt portrayals throughout.​​

Technical Aspects

Dharan Kumar’s pulsating score amplifies the spooky atmosphere, J. Lakshman’s cinematography crafts an eerie, polished look for the secluded complex, and the seamless fusion of visions, action, and drama creates a thrilling flow that immerses you completely.​

Strengths and Weaknesses

Outstanding suspense, innovative supernatural-political pivot, Aari’s powerhouse acting, and crowd-pleasing twists deliver non-stop excitement and clever messaging on corruption, making it a flawless thrill fest with pure positive energy in every frame.​

Verdict

An absolute triumph and must-watch masterpiece, earning top ratings for its bold vision, heart-racing pace, and joyous cinematic highs that redefine Tamil thrillers brilliantly.​​

Aazhi Movie Review

0

Aazhi is a mesmerizing 2026 Tamil survival thriller directed by Madhav Ramadasan, starring Sarathkumar as the fiercely protective arms smuggler Moorthi whose obsessive love for daughter Mukila (Devika Satheesh) ignites an intense oceanic showdown with her impoverished suitor Arul (Indrajith Jagajith), transforming a simple father-lover clash into a pulse-pounding maritime masterpiece of raw emotion and redemption. The minimalist brilliance shines through haunting silences, visceral physicality, and claustrophobic ship-bound tension that builds with industrial precision, letting coiled glances, brutal confrontations, and survival instincts speak louder than words for an immersive grip that celebrates complex paternal bonds and youthful resilience in every breathtaking wave. Sarathkumar commands with menacing subtlety and heartbreaking depth, Indrajith radiates scrappy determination, amplified by Resul Pookutty’s razor-sharp sound design, Anand N Nair’s moody seascapes, and William Francis’ throbbing score that elevate the duo’s tour-de-force efforts into cinematic gold without a wasted frame. Its refreshing restraint, psychological intrigue, and poignant payoff deliver non-stop thrills and heartfelt wisdom, earning stellar praise as an innovative triumph perfect for fans craving bold, dialogue-light intensity and emotional highs.

- Advertisement -

Recent Posts