- Advertisement -
Home Blog Page 35

Thaai Kizhavi Movie Review

0

Thaai Kizhavi is one of those rural dramas that tries to blend sentiment, social commentary, and raw village politics into a single emotional package. The film revolves around an elderly woman whose life becomes the emotional backbone of the story, exploring themes of family honor, sacrifice, and generational conflict. What stands out immediately is its rootedness — the dusty landscapes, small houses, temple gatherings, and everyday village tensions feel authentic and lived-in.

The central performance carries much of the film’s weight. The actress portraying the old mother delivers a grounded and heartfelt performance, expressing pain, resilience, and quiet strength mostly through subtle expressions rather than dramatic dialogue. Her character feels symbolic — representing not just a mother, but tradition and moral conscience in a rapidly changing rural society. The supporting cast does a decent job, though at times some characters slip into familiar stereotypes often seen in village-based Tamil dramas.

The emotional core works best in the quieter moments — scenes of reflection, strained conversations between family members, and the silent suffering of the elderly protagonist. However, the film occasionally leans too heavily into melodrama, stretching certain confrontations longer than necessary. A tighter screenplay could have elevated the overall impact. Some predictable plot turns may not surprise seasoned viewers of rural family dramas.

Technically, the cinematography beautifully captures the earthy tone of the setting, and the background score supports the emotional beats without overpowering them. The pacing, though, feels uneven in the middle portions where the narrative slightly drifts before regaining focus toward the climax.

Overall, Thaai Kizhavi is a sincere attempt at telling a story about motherhood, dignity, and rural family values. It may not reinvent the genre, but it offers heartfelt performances and emotional moments that can connect strongly with audiences who appreciate family-centric village dramas.

Gleneagles Hospital Chennai launches Sakhi – Comprehensive One-Stop Breast Care Clinic

0

~ Free mammogram screening was provided to the 10 non-affordable Individuals and Patients will also receive a 50% discount on mammograms and free consultations till March 31, 2026, marking the launch of Sakhi~

Chennai, 25 February 2026: Gleneagles Hospital Chennai, a part of Fortis Healthcare, today inaugurated Sakhi, a Comprehensive Breast Care Clinic; a dedicated centre designed to deliver integrated breast health services ranging from screening and diagnosis to advanced treatment and reconstruction. The clinic was inaugurated in the presence of Chief Guest Kalaimamani Ms Nalini, acclaimed Indian actress. Senior leadership present included Dr Balaji Ramani, Director, Gleneagles Institute of Oncology, Ms S Niranjani, Chief Operating Officer and Hospital Head, and Mr R Y Bharath Kanth Reddy, Chief Executive Officer, Chennai and Hyderabad Cluster, along with the multidisciplinary oncology team.

Sakhi has been conceptualised as a comprehensive, one stop breast clinic addressing the full spectrum of breast health, not only breast cancer but also benign breast conditions, screening, preventive care and post treatment rehabilitation. The centre brings together surgical oncology, radiation oncology, medical oncology and advanced diagnostics, under a single coordinated pathway to enable faster decision making and improved patient experience.

The Sakhi clinic will function across OPD hours with access to multidisciplinary oncology teams and state-of-the-art diagnostics, positioning it as a comprehensive destination for preventive, diagnostic and therapeutic breast care. As part of the launch initiative, the hospital is also conducting breast screening programmes for underserved communities, reinforcing the importance of awareness and early detection. To mark the launch of Sakhi, a Comprehensive Breast Care Clinic at Gleneagles Hospital Chennai, free mammogram screening was provided to the 10 non-affordable Individuals i and Patients will also receive a 50% discount on mammograms and free consultations till March 31, 2026.

The clinic is equipped with advanced diagnostic capabilities including 3D mammography, tomosynthesis and stereotactic biopsies that support early detection and accurate diagnosis. The care pathway is designed to enable streamlined evaluation, with select assessments and reports available within shorter timelines where clinically appropriate.

Breast conservation surgery, oncoplastic reconstruction and multidisciplinary treatment planning form a core focus of the clinic, enabling personalised care across disease stages while prioritising quality of life.

“Breast care today requires a multidisciplinary and personalised approach. With Sakhi, patients can move seamlessly from screening and diagnosis to treatment planning, breast conservation surgery and reconstruction within a coordinated care pathway. Our focus is on early detection, precision diagnostics and treatment approaches that preserve both outcomes and quality of life, said Dr Balaji Ramani, Director, Gleneagles Institute of Oncology.

“Breast cancer remains a major public health concern, with one in 28 Indian women at risk of developing the disease. Nearly 60 percent of cases in India are diagnosed at a later stage, while incidence is rising among younger urban women. With early detection, survival can exceed 90 percent, and Sakhi has been designed to enable timely screening, faster diagnosis and integrated breast care,” pointed out Ms S Niranjani, Chief Operating Officer and Hospital Head.

Mr R Y Bharath Kanth Reddy, Chief Executive Officer, Chennai and Hyderabad Cluster said, “Breast cancer continues to represent a significant and growing healthcare burden, with close to 200,000 new cases and nearly 100,000 deaths reported annually in India.”

“The launch of Sakhi reflects our focus on building specialised centres that respond to this need through integrated care models. By bringing screening, diagnostics and treatment together, we aim to improve early detection, treatment timelines and overall patient outcomes,” he added.

Mr Anil Vinayak, Group COO, Fortis Healthcare said, “The launch of the Sakhi Comprehensive Breast Care Clinic at Gleneagles Hospital Chennai embodies this approach — bringing together advanced technology, integrated multidisciplinary care, and compassionate support for women across every stage of their breast health journey. Our aim is to make high-quality, timely and personalised breast care more accessible, empowering women through awareness and early detection”

Dr. Sunitha Jayarani, Consultant Breast Oncologist, emphasized the one-day, one-stop nature of Sakhi, the comprehensive breast clinic. Dr. N.S. Vimaladittan, Clinical Lead in Surgical Oncology, elaborated on methods of breast conservation, Dr. Azmi Saundarya, Clinical Lead in Radiation Oncology, highlighted short-course, five-day radiation techniques. Dr. Arun Ramanan, Clinical Lead in Medical Oncology, discussed AI-based prognostic molecular testing, enabling chemotherapy-free treatment for select patients.

மலையாள நடன இயக்குனர் ராபின் இயக்குனராக அறிமுகமாகும் வருத்துப் போக்கு

0

பாக்ஸ் மூவிஸ் சார்பில் மது தயாரிப்பில் வின்சி பிரான்சிஸ் திரைக்கதையில் ராபின் இயக்கத்தில் உருவாகும் வருத்துப் போக்கு

இப்படத்தில் நாயகனாக சிபு நடிக்க நாயகியாக அனிஷா நடிக்கிறார், இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பணிக்கர்,நெல்சன் மற்றும் பலர் நடிக்கின்றனர்
இப்படத்திற்கு ஒளிப்பதிவு அம்ப்ரோஸ்,
வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் நடன இயக்குனர் ராபின்..

இப்படத்தைப் பற்றி இயக்குனர் ராபின் கூறுகையில்;

கதாநாயகன் சிபு தன் காதலியோடும் நண்பர்களோடும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான் திடீரென்று ஒரு நாள் அவனுக்கு தீராத நோய் ஒன்று இருப்பது தெரிய வருகிறது

இதனால் தான் விரைவில் இறந்து விடுவோம் என்ற அச்சத்தில், நண்பர்களையும் காதலையும் விட்டு விலகி மொரிசியஸ் செல்கிறான்..

நண்பன் காணாமல் போனதால் எங்கே என்று நண்பர்கள் தேட ஒரு வழியாக அவன் வெளிநாடு சென்றிருப்பது தெரிய வருகிறது நண்பர்களும் அவனது காதலியும் அவனைத் தேடி மொரிசியஸ் செல்கிறார்கள்

அங்கே நாயகனை சந்தித்தார்களா அவன் உயிருடன் மீண்டானா என்பதை நட்பும் காதலும் கலந்து சொல்லும் ஒரு உணர்வுபூர்வமான கதைதான் இப்படம் என்றவர்

மார்ச் இரண்டாம் வாரம் மொரிசியசில் முதற்கட்ட படப்பிடிப்பும்
அதனைத் தொடர்ந்து கேரளா மற்றும் பெங்களூரில் அடுத்தடுத்த படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்றார்..

Prasanth Varma’s JAI HANUMAN Starring Rishab Shetty, Produced by Mythri Movie Makers, Presented By T Series Launched In Traditional & Majestic Way At Hanuman’s Birth Place Anjanadri, Hampi

0

National Award-winning filmmaker Prasanth Varma, who delivered the true pan-Indian blockbuster HanuMan, is now gearing up for its highly anticipated sequel, Jai Hanuman, the next chapter in the expanding Prasanth Varma Cinematic Universe. The film will be mounted on a massive scale by the prestigious banner Mythri Movie Makers, with T-Series presenting it. National Award-winner Rishab Shetty steps into the lead role, portraying Lord Hanuman in what is expected to be a powerful, immersive, and transformative performance.

This prestigious collaboration of National Award-winning talent brings together some of the most influential names in Indian cinema, instantly making Jai Hanuman one of the most anticipated and crazy films in the country. Prasanth Varma is widely acclaimed for his bold and innovative storytelling that seamlessly blends contemporary narratives with mythology, while Mythri Movie Makers continues its streak of delivering blockbuster spectacles. Riding high on nationwide acclaim following the Kantara Chapter 1, Rishab Shetty’s casting has further amplified expectations.

The film was officially launched today in a traditional and majestic ceremony at Anjanadri Betta, Hampi, Vijayanagara—a sacred location believed to be the birthplace of Lord Hanuman. T-Series head Bhushan Kumar sounded the clapboard, while Anil Thadani rolled the camera for the inaugural shot, which was directed by HanuMan star Teja Sajja. In a symbolic gesture, Anil Thadani, Bhushan Kumar, Naveen Yerneni, and Ravi Shankar handed over the script to director Prasanth Varma. With pre-production already underway, the film’s regular shoot will commence soon.

The makers earlier unveiled Rishab Shetty as Lord Hanuman with a stunning first-look poster that captures the character’s spirit and divinity, while the actor undergoes a rigorous physical transformation to portray him authentically.

Jai Hanuman is designed as a high-octane action epic set in Kaliyug. The film highlights that Hanuman’s silence reflects purpose, not surrender, concealing a power destined to rise. Celebrating unshakeable devotion, loyalty, and timeless strength, Jai Hanuman stands as a tribute to an immortal spirit.

The film is produced by Naveen Yerneni and Y Ravi Shankar, mounted on a massive budget with top-tier technical standards, promising a cinematic experience of mythological grandeur and emotional depth.

The film boasts a top-tier technical team, with M.M. Keeravani composing the music, S. Thirunavukkarasu behind the lens as cinematographer, and Srinagendhra Thangala overseeing the production design.

Cast: Rishabh Shetty

Technical Crew:
Writer, Director: Prasanth Varma
Banner: Mythri Movie Makers
Producers: Naveen Yerneni and Y Ravi Shankar
Presents: T Series
DOP: S Thirunavukkarasu
Music Director: M.M. Keeravani
Production Designer: Srinagendhra Thangala
PRO: Vamsi-Shekar
Marketing: FirstShow

பிரசாந்த் வர்மா இயக்கத்தில், ரிஷப் ஷெட்டி நடிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி-சீரிஸ் வழங்கும் ’ஜெய் ஹனுமான்’ திரைப்படம், ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரியில் பாரம்பரிய பூஜையுடன் பிரம்மாண்டமாக துவங்கியது!

தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் பான் இந்திய அளவில் வெற்றி பெற்ற ‘ஹனுமேன்’ திரைப்படத்தின் சீக்வலாக உருவாகும் ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படம் இன்று பாரம்பரிய பூஜையுடன் பிரம்மாண்டமாக துவங்கியது. பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த கட்டமாக உருவாகும் இந்தப் படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க, டி- சீரிஸ் நிறுவனம் இப்படத்தை வழங்குகிறது. தேசிய விருது பெற்ற நடிகர் ரிஷப் ஷெட்டி இந்தப் படத்தில் கடவுள் ஹனுமான் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தேசிய விருது பெற்ற திறமையாளர்கள் இந்தப் படத்தில் ஒன்றிணைவது, ‘ஜெய் ஹனுமான்’ படம் மீதான எதிர்பார்ப்பை நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. சமகால நிகழ்வுகளை புராணங்களுடன் இணைத்து துணிச்சலாகவும் புதுமையாகவும் கதை சொல்வதில் தேர்ந்தவர் இயக்குநர் பிரசாந்த் வர்மா. அதுபோலவே, இந்தப் படத்தை தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து வருகிறது. ’காந்தாரா சாப்டர் 1’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரிஷப் ஷெட்டி அடுத்து என்ன படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இவை அனைத்தும் ‘ஜெய் ஹனுமான்’ படம் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.

கடவுள் ஹனுமான் பிறந்த புனித தலமாக நம்பப்படும் கர்நாடக மாநிலம் ஹம்பி, விஜயநகரில் உள்ள அஞ்சனாத்ரி பெட்டா மலைப்பகுதியில் இன்று பாரம்பரிய பூஜையுடன் படம் துவங்கப்பட்டது. டி-சீரிஸ் நிறுவனத் தலைவர் பூஷன் குமார் கிளாப் அடித்து துவக்கி வைத்தார். அனில் ததானி கேமராவை இயக்க, முதல் ஷாட்டை ’ஹனுமேன்’ படத்தின் ஹீரோ தேஜா சஜ்ஜா இயக்கினார். மேலும், அனில் ததானி, பூஷன் குமார், நவீன் யெர்னேனி மற்றும் ரவி ஷங்கர் ஆகியோர் இணைந்து திரைக்கதையை இயக்குநர் பிரசாந்த் வர்மாவிடம் கொடுத்தனர். படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வழக்கமான படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

கடவுள் ஹனுமானாக ரிஷப் ஷெட்டி இடம்பெற்றிருக்கும் முதல் பார்வை போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த கதாபாத்திரத்தில் சக்திவாய்ந்த, ஆழமான, ஆன்மிக அனுபவத்தை தரும் வகையில் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு தனது தோற்றத்தை கட்டமைத்துள்ளார் ரிஷப் ஷெட்டி.

‘ஜெய் ஹனுமான்’ கலியுகத்தை பின்னணியாகக் கொண்ட அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகிறது. ஹனுமானின் ’மௌனம் உன்னதமான நோக்கத்தை குறிக்கிறதே தவிர அது சரணாகதி அல்ல! எழுச்சி!!’ என்பதை படம் மையக்கருவாகக் கொண்டிருக்கிறது. பக்தி, நம்பிக்கை, சக்தி ஆகியவற்றை ‘ஜெய் ஹனுமான்’ படம் பிரதிபலிக்கும்.

தொழில்நுட்பக் குழு விவரம்:

எழுத்து, இயக்கம்: பிரசாந்த் வர்மா,
தயாரிப்பு நிறுவனம்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்,
தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி, ஒய். ரவி சங்கர்,
வழங்குவது: டி-சீரிஸ்,
ஒளிப்பதிவு: எஸ். திருநாவுக்கரசு,
இசை: எம்.எம். கீரவாணி,
கலை இயக்கம்: ஸ்ரீநாகேந்திர தங்கலா,
மக்கள் தொடர்பு: வம்சி-சேகர்,
மார்க்கெட்டிங்: ஃப்ர்ஸ்ட்ஷோ

Vision Cinema House proudly announces the successful completion of the first shooting schedule of its much-anticipated film Haiku. The schedule was wrapped smoothly and on time, marking a confident and promising beginning to the production journey.

0

The first phase featured pivotal performances by Aegan, Sridevi, Adrichi Arun, and Kalaivani Baskar, who brought emotional depth and strong screen presence to key sequences of the film.

Haiku is written and directed by Yuvaraj Chinnasamy, with additional screenplay by Hariharan Ram (director of Joe). The creative collaboration has shaped a screenplay that promises sensitivity, realism, and cinematic richness.

The team has expressed immense satisfaction with the footage from the first schedule, particularly praising the magical visual treatment crafted by cinematographer Priyesh Guruswamy. His work has beautifully captured the soul and mood of the film.

Haiku is produced by Dr. D. Arulanandhu and Mathewo Arulanandhu under the banner of Vision Cinema House. The producers expressed their happiness and pride over the quality of the footage and the collective effort of the team.

The next shooting schedule is set to resume soon in Chennai, where the team will continue filming crucial portions of the story.

With strong momentum and creative energy, Haiku is planned for a grand worldwide theatrical release in September 2026.

Vision Cinema House extends heartfelt gratitude to the entire cast, crew, partners, and well-wishers for their continued support and looks forward to sharing more exciting updates soon.

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது!

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனமான விஷன் சினிமா ஹவுஸ் பெருமையுடன் அறிவித்துள்ளது. திட்டமிட்ட காலத்திற்குள் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது படம் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த முதல் கட்ட படப்பிடிப்பில் நடிகர்கள் ஏகன், ஸ்ரீதேவி, அதிர்ச்சி அருண் மற்றும் கலைவாணி பாஸ்கர் ஆகியோர் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளனர். ‘ஹைக்கூ’ திரைப்படத்தை யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ளார். கூடுதல் திரைக்கதையை ’ஜோ’ திரைப்பட இயக்குநர் ஹரிஹரன் ராம் எழுதியுள்ளார். இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்திருப்பது நுணுக்கமான உணர்வுகளும் யதார்த்தமும் நிறைந்த செழுமையான திரைக்கதையை ரசிகர்களுக்கு தரும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

முதல்கட்ட படப்பிடிப்பில் படமாக்கப்பட்ட காட்சிகள் சிறப்பாக வந்துள்ளதாக படக்குழு திருப்தி தெரிவித்துள்ளது. குறிப்பாக ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமியின் காட்சியமைப்பு படத்தின் ஆன்மாவையும் உணர்வுகளையும் அழகாகப் பதிவு செய்துள்ளதாக படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

விஷன் சினிமா ஹவுஸ் பேனரின் கீழ் டாக்டர். டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் ’ஹைக்கூ’ திரைப்படத்தை தயாரிக்கின்றனர். படக்குழுவின் அர்ப்பணிப்பும் படத்தின் தரமும் சிறப்பாக வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்க உள்ளது. இதில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. ‘ஹைக்கூ’ திரைப்படம் இந்த வருடம் செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பயணத்தில் தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், பார்ட்னர்ஸ் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரின் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் விஷன் சினிமா ஹவுஸ், ’ஹைக்கூ’ படம் குறித்தான அடுத்தடுத்த தகவல்களை விரைவில் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறது.

From Tamil Nadu to Seoul: Netflix’s ‘Made In Korea’ Arrives March 12

0

Produced by Rise East Entertainment and helmed by Ra.Karthik, Made In Korea brings together Priyanka Mohan and South Korean actor Park Hye-Jin in a cross-cultural cinematic collaboration

Mumbai, 24 February 2026: Dreams often begin in the most unexpected places — in a childhood story, while idling away in a classroom, or in worlds far beyond home. For Shenba, it was no different. In the midst of her everyday routine in a small town in Tamil Nadu, she held on to a simple, wholehearted dream: one day, she would travel to South Korea. Join Shenba as she travels from Tamil Nadu to South Korea on an unforgettable, life-changing journey in Made in Korea, premiering March 12 only on Netflix.

Produced by Rise East Entertainment, written and directed by Ra.Karthik, Made in Korea follows Shenbagam, or Shenba, whose childhood fascination with Korean culture inspires her to experience it for herself. When she unexpectedly finds herself in Seoul, reality proves far more challenging than she imagined, setting her on a heartfelt path of resilience, self-discovery, and new connection.

Sharing his inspiration behind the film, Ra.Karthik said, “I am quite fascinated with the deep cultural connections and historical similarities between Korean and Tamil heritage. This curiosity inspired me to tell a story that felt personal and full of hope. Made In Korea is a slice-of-life film crafted with warmth, celebrating this unique cultural bond, and I’m thankful to Netflix for championing stories that transcend languages and bring global cultures closer together.”

Monika Shergill, Vice-President – Content, Netflix India, shares, “As we deepen our commitment to the South and continue building a distinctive slate of films and series, we remain focused on stories that are deeply rooted in local culture yet resonate far beyond borders. Made in Korea beautifully brings that vision to life. At its heart is a young girl from a small village in Tamil Nadu whose fascination with Korea shapes her dreams – a deeply human story of aspiration, identity and belonging. Created by director and writer Ra.Karthik and producer Sreenidhi Sagar, and led by Priyanka Mohan alongside acclaimed South Korean actor of Squid Game fame, Park Hye-Jin, the film celebrates a heartfelt cultural bridge between India and Korea. It is intimate, endearing and globally resonant – exactly the kind of cross-cultural storytelling Netflix is proud to champion.”

Leading the film is Priyanka Mohan, who brings Shenba’s emotional journey to life with sincerity and vulnerability. The film also features South Korean actors Park Hye-jin and No Ho-jin in pivotal roles, adding authenticity to its cross-cultural world.

Speaking about the role, Priyanka Mohan shared, “Shenba’s dream of Korea comes from a place of wonder and curiosity. I felt deeply connected to Shenba’s story from the first narration, and being part of this Netflix film makes the journey even more special.”

With its gentle exploration of cross-cultural connection, aspiration, and everyday courage, Made In Korea invites audiences into a warm, heartfelt story of growth, friendship, and finding one’s identity.

Made in Korea premieres March 12, exclusively on Netflix.

Title Information
DIRECTOR: Ra.Karthik
WRITER: Ra.Karthik
PRODUCER: Sreenidhi Sagar
PRODUCTION: Rise East Entertainment
KEY CAST: Priyanka Mohan, Park Hye-Jin

About Netflix:
Netflix is one of the world’s leading entertainment services offering TV series, films, games and live programming across a wide variety of genres and languages. Members can play, pause and resume watching as much as they want, anytime, anywhere, and can change their plans at any time.

தமிழ்நாட்டிலிருந்து சியோல் வரை: நெட்ஃபிலிக்ஸின் ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது!

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ரா.கார்த்திக் இயக்கத்தில் நடிகர்கள் பிரியங்கா மோகன் மற்றும் தென் கொரிய நடிகர் பார்க் ஹை-ஜின் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ’மேட் இன் கொரியா’ இரண்டு கலாச்சாராங்களை ஒன்றிணைக்கிறது.

மும்பை, 24 பிப்ரவரி 2026: குழந்தைப் பருவத்தில் கேட்ட கதைகள், வகுப்பறையில் அமர்ந்திருக்கும் தருணங்கள் அல்லது வீட்டைத் தாண்டிய தொலைதூர உலகங்களில் என எதிர்பாராத இடத்தில் இருந்துதான் கனவுகள் தொடங்குகின்றன. செண்பாவுக்கும் இது விதிவிலக்கல்ல! தமிழ்நாட்டின் ஒரு சிறிய ஊரில் தனது அன்றாட வாழ்க்கையை தாண்டி, ஒருநாள் தென் கொரியாவுக்கு பயணம் செய்ய வேண்டும் என்ற கனவு செண்பாவுக்கு இருக்கிறது. அந்த கனவு நனவாகும் வாழ்க்கைப் பயணத்தை சொல்லும் ‘மேட் இன் கொரியா’ நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வரும் மார்ச் 12 முதல் ப்ரீமியர் ஆகிறது.

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ரா.கார்த்திக் எழுதி இயக்கியுள்ள ‘மேட் இன் கொரியா’ செண்பா என்கிற செண்பகத்தின் கதையை சொல்கிறது. கொரிய கலாச்சாரத்தின் மீது சிறுவயது முதலே ஈர்ப்பு கொண்டவளான செண்பா அதை அனுபவித்து பார்க்க வேண்டும் என விரும்புகிறாள். சியோலில் எதிர்பாராத விதமாக அவளுக்கு அந்த அனுபவம் கிடைக்கிறது. ஆனால், அவள் கற்பனை செய்ததை விட யதார்த்தம் பல சவால்களை அவள் முன் நிறுத்துகிறது. அதைத்தாண்டி அவளின் சுயத்தை கண்டுபிடிக்கும் நெகிழ்ச்சியான இந்தப் பயணமே ‘மேட் இன் கொரியா’.

படம் குறித்து இயக்குநர் ரா. கார்த்திக் பகிர்ந்து கொண்டதாவது, “கொரிய மற்றும் தமிழ் கலாச்சாரங்களுக்கு இடையில் ஒரே மாதிரியாக உள்ள ஆழமான பல வரலாற்று ஒற்றுமைகள் என்னை ஈர்த்தன. அந்த ஆர்வமே என் மனதுக்கு நெருக்கமான இந்த நம்பிக்கையூட்டும் கதையை சொல்ல தூண்டியது. மொழிகளைத் தாண்டி உலக கலாச்சாரங்களை இணைக்கும் கதைகளுக்கு ஆதரவு அளிக்கும் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கு நன்றி” என்றார்.

நெட்ஃபிலிக்ஸ் இந்தியா கண்டெண்ட்டின் வைஸ் பிரசிடெண்ட் மோனிகா ஷெர்கில் பகிர்ந்து கொண்டதாவது, “தென்னிந்தியாவில் நெட்ஃபிலிக்ஸை மேலும் வலுப்படும் இந்த சூழலில், உள்ளூர் கலாச்சாரத்தில் வேரூன்றிய கதைகளை உலகளவில் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். கொரிய கலாச்சாரத்தின் மீது ஈர்ப்பு கொண்ட ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த ஒரு பெண்ணின் கனவு உலகத்தை ‘மேட் இன் கொரியா’ காட்டும். ரா. கார்த்திக் எழுதி, இயக்கி இருக்கும் இந்தப் படத்தை ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். பிரியங்கா மோகன் மற்றும் ’ஸ்க்விட் கேம்’ புகழ் தென் கொரிய நடிகர் பார்க் ஹை-ஜின் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், இந்த கதை இந்தியா மற்றும் கொரியாவுக்கு இடையிலான கலாச்சாரப் பாலமாக திகழ்கிறது. இந்தக் கதையை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் நெட்ஃபிலிக்ஸ் பெருமை கொள்கிறது” என்றார்.

செண்பாவின் உணர்வுப்பூர்வமான பயணத்தை தனது திறமையான நடிப்பில் பிரியங்கா மோகன் கொண்டு வந்துள்ளார். இந்தப் படத்தில் தென் கொரிய நடிகர்களான பார்க் ஹை-ஜின் மற்றும் நோ ஹோ-ஜின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தனது கதாபாத்திரம் குறித்து நடிகை பிரியங்கா மோகன் கூறுகையில், “கொரியாவைப் பற்றி செண்பாவின் கனவுகள் வியப்பும் ஆர்வமும் நிறைந்தது. இந்தக் கதையை முதலில் கேட்டபோதே மிகவும் பிடித்துவிட்டது. நெட்ஃபிலிக்ஸூடன் இணைந்திருப்பது இந்தப் பயணத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளது”.

கலாச்சாரங்களுக்கிடையேயான தொடர்பு, ஆர்வம் மற்றும் துணிச்சல் ஆகியவற்றுடன் ஒருவரின் உணர்வுப்பூர்வமான வளர்ச்சி, நட்பு மற்றும் சுயத்தை கண்டுபிடித்தல் ஆகியவற்றை இந்தக் கதை பேசுகிறது.

நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் ப்ரீமியர் ஆகிறது.

நடிகர்கள்: பிரியங்கா மோகன், பார்க் ஹை-ஜின்

தொழில்நுட்பக்குழு விவரம்:

எழுத்து, இயக்கம்: ரா.கார்த்திக்,
தயாரிப்பாளர்: ஸ்ரீநிதி சாகர்,
தயாரிப்பு: ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்

நெட்ஃபிலிக்ஸ் பற்றி:

நெட்ஃபிலிக்ஸ் உலகின் முன்னணி பொழுதுபோக்கு சேவைகளில் ஒன்றாகும். 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் 300 மில்லியனுக்கும் அதிகமான கட்டண சந்தாதாரர்களைக் கொண்டு பல்வேறு ஜானர்கள் மற்றும் மொழிகளில் தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு போன்றவற்றைக் கொடுத்து வருகிறது. சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம், இடைநிறுத்தலாம் மற்றும் மீண்டும் பார்க்கலாம். மேலும் எந்த நேரத்திலும் தங்கள் திட்டங்களை மாற்றலாம்.

Romeo Pictures Raahul to Release Meera Kathiravan’s ‘Habeebi’ Across Worldwide

0

Romeo Pictures Raahul, known for backing both blockbuster entertainers and compelling content-driven cinema, now lends his distinctive touch to yet another notable project. The reputed producer-distributor will be releasing the Tamil film ‘Habeebi’ across Worldwide.

Directed by critically acclaimed filmmaker Meera Kathiravan, Habeebi is positioned as a heartfelt narrative that portrays the life, culture, and emotional landscape of Tamil Muslims with authenticity and sensitivity. True to the meaning of its title: “My Beloved” – the film is described as a story rooted in love, human connection, and lived experiences.

Meera Kathiravan, celebrated for his socially resonant works such as Aval Peyar Tamilarasi and Vizhitthiru, brings a deeply personal vision to Habeebi. The film features a cast of fresh faces, with Kasturi Raja appearing in a pivotal role. Music is composed by Sam C.S., adding further depth to the film’s emotional fabric.

Speaking about the film and great news about Romeo Picture’s Midas-Touch, director Meera Kathiravan says, “ Habeebi is not merely a film, but an emotional reflection of a world I have closely observed and lived within. It is a story told with gratitude, honesty, and love. In a time where misunderstandings often shape narratives, I wanted to present life as it is, human, warm, and deeply rooted in affection. I feel so delighted that Romeo Pictures Raahul has shown a great interest in this film. His presence is going to add a beautiful Golden-touch, and am glad that the film is going to reach beyond our team’s imagination.”

Romeo Pictures Raahul says, “Cinema has the power to transcend boundaries and bring audiences closer to lived realities. Habibi is a film driven by sincerity, emotion, and meaningful storytelling. We are delighted to bring this beautiful and important work to audiences across Worldwide . Few films carry a deeply personal reflection while also leaving a lasting impact: for me, Habeebi is one such film, and I firmly believe audiences will embrace it. We are planning a comprehensive marketing strategy to ensure the film receives a strong and fitting release. Announcements regarding the trailer, audio launch, and theatrical release date will be made soon.”

It’s worth mentioning that the film had stolen the spotlights for one of its promising pre-release highlight of the recreation of the iconic voice of Nagore E.M. Hanifa through artificial intelligence. The song “Vallone”, rendered in the legendary singer’s recreated voice with lyrics by Yugabharathi, stands as both a technological and cultural tribute.

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடும் இயக்குநர் மீரா கதிரவனின் ‘ஹபீபி’ திரைப்படம்!

நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அதை வணிக ரீதியாகவும் வெற்றி படங்களாக தயாரித்து வரும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் அடுத்து நம்பிக்கைக்குரிய ஒரு படத்துடன் வந்திருக்கிறார். இயக்குநர் மீரா கதிரவன் இயக்கிய ‘ஹபீபி’ திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடவுள்ளதாக தயாரிப்பாளர்- விநியோகஸ்தர் ராகுல் அறிவித்துள்ளார்.

இயக்குநர் மீரா கதிரவன் இயக்கியுள்ள ‘ஹபீபி’ திரைப்படம் தமிழ் முஸ்லிம்களின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் உணர்வுகளை உண்மைக்கு நெருக்கமாக பதிவு செய்கிறது. உண்மையான அன்பு, உறவுகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களைக் கொண்ட இந்தப் படத்தின் தலைப்பின் அர்த்தம் ‘என் அன்பே’ என்பதாகும்.

‘அவள் பெயர் தமிழரசி’ மற்றும் ‘விழித்திரு’ போன்ற படங்களில் சமூக அக்கறையுள்ள கருத்துகள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மீரா கதிரவன் ‘ஹபீபி’ படத்தில் மீண்டும் அழுத்தமான கதைக்களத்தோடு வருகிறார். புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தில் கஸ்தூரி ராஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். உணர்வுப்பூர்வமான இந்த கதைக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

படம் குறித்து இயக்குநர் மீரா கதிரவன் பகிர்ந்து கொண்டதாவது, “’ஹபீபி’ வெறும் திரைப்படமாக மட்டுமல்லாது, நான் வாழ்ந்த நெருக்கமாக பார்த்த உலகத்தின் பிரதிபலிப்பாக இருக்கும். நன்றி, உண்மை மற்றும் அன்பின் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. தவறான புரிதல்கள் அதிகரிக்கும் இந்த காலத்தில் மனிதத்தன்மை மற்றும் பாசம் நிறைந்த வாழ்க்கையை அதன் இயல்பிலேயே பதிவு செய்ய விரும்பினேன். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்த படத்தில் ஆர்வம் காட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் உள்ளே வந்ததும் நாங்கள் கற்பனை செய்ததைவிட படம் பெரிய அளவில் வளர்ந்தது” என்றார்.

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் கூறுகையில், “மக்களின் வாழ்க்கையை உண்மைக்கு நெருக்கமாகக் காட்டும் சக்தி சினிமாவுக்கு உண்டு. அர்த்தமுள்ள கதையை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் சின்சியராக எடுக்கப்பட்ட படம்தான் ‘ஹபீபி’. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் இந்த முக்கியமான படைப்பை கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் நீண்டநாள் தாக்கத்தை ஏற்படுத்தும். ‘ஹபீபி’ அப்படியான ஒரு திரைப்படம். நிச்சயம் பார்வையாளர்களும் அதை உணர்வார்கள். படத்திற்கான வலுவான மார்க்கெட்டிங் திட்டங்கள் வைத்துள்ளோம். படத்தின் டிரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் திரையரங்க வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.

இப்படம் வெளியீட்டுக்கு முன்பே பெரும் கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, பாடலாசிரியர் யுகபாரதி எழுதிய ’வல்லோனே’ பாடல் மறைந்த புகழ்பெற்ற பாடகர் நாகூர் ஈ.எம். ஹனிபா அவர்களின் குரலை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் பாடவைத்தது பாராட்டை பெற்றது.

நவீன் இந்திய திரையுலகில் பெரிய இயக்குநராக உருவெடுப்பார் – ராஜுமுருகன்

0

இயக்குநருக்கும், எனக்கும் இதுதான் முதல் குறும்படம் – நடிகர் ராம்ஜி

முதல் குறும்படத்திற்கே தேசிய விருது கிடைத்து மகிழ்ச்சி – நடிகர் ராம்ஜி

இந்திய திரையுலகில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பிடத்தக்க நிறுவனங்களில் ஒன்றாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அறியப்படுகிறது. அர்த்தமுள்ள மற்றும் நல்ல கதையம்சம் சார்ந்த சினிமாவை ஆதரிப்பதில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பெயர் பெற்றது. இந்த மரபைத் தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனம் தற்போது பாராட்டப்பட்ட குறும்படமான “லிட்டில் விங்ஸ்” வழங்குகிறது.

தேசிய விருது பெற்ற “லிட்டில் விங்ஸ்”, திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது, இது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டு பார்வையாளர்களுக்காக வெளியிடப்படுகிறது. இதையொட்டி லிட்டில் விங்ஸ் குறும்படம் செய்தியாளர்களுக்கு திரையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து குறும்பட குழு செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில் இயக்குநர் நவீன், நடிகை மணிமேகலை, நடிகர் ராம்ஜி, இயக்குநர் ராஜூமுருகன், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி மற்றும் குழிவினர் கலந்து கொண்டனர்.

குறும்பட இயக்குநர் நவீன் பேசும் போது, “இந்த குறும்படத்தை எழுத தொடங்கும் போது இந்த இடத்திற்கு வருவதற்கு திட்டமிடவில்லை. ஆனால், குறும்படம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு செல்லும் என்ற கனவு இருந்தது, விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. எல்லா படமும் எழுத தொடங்கும் முன்பு ஒரு கேள்வி இருக்கும். அந்த கேள்விக்கு பதிலளிக்க முயற்சிக்கும் போது தான் கதை, திரைக்கதை அமைத்து படமாக முயற்சி செய்கிறோம். அடிப்படையில் இந்த கதை கொரோனா காலக்கட்டத்தில் தான் எழுதப்பட்டது.

கொரோனா காலக்கட்டத்தில் நிறைய துர்மரணங்கள் நிகழ்ந்த சமயத்தில், நம் ஆசைகளும் நம் மரணத்துடன் மரித்து விடுகிறது. திடீரென நம் மரணத்துடன் நம் ஆசையும் சேர்ந்து போய்விடுகிறது. உலகமும் அதோடு ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த கேள்வியை குறிப்பிடும் நோக்கத்தில் தான் இந்த கதை எழுதப்பட்டது. அவர் ஒரு சேவலை சாப்பிட ஆசைப்படுகிறாரே தவிர, அதில் இருக்கும் விஷயங்கள் இதுதான்.

எங்கள் ஊரில் கணவனால் துன்புறுத்தப்படும் பெண்களின் வாழ்க்கையில் தீர்வு இருக்காது. அது ஒரு தொடர் போல நீண்டு கொண்டே இருக்கும். அந்த மாதிரியான வீடுகளில் சிலர் குடித்துவிட்டு உயிரிழந்துவிடுவார்கள். அதன்பிறகு அந்த பெண்கள் சுதந்திரமாக இருப்பது நமக்கு தெரியும். அந்த சூழலில் ஒருவரது மரணம் இன்னொருத்தருக்கு விடுதலையை கொடுக்கிறது. இந்த இரு கேள்விகளை குறிப்பிடும் வகையில் தான் இந்த கதையை நான் எழுதினேன்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடர்ச்சியாக படித்துக் கொண்டு இருக்கும் போது, கந்தர்வன் எழுதிய கதை இதற்கு தொடக்கப் புள்ளியாக இருந்தது. இது தான் இந்தப் படம் ஆரம்பித்த விதம். இதன் கதையை எழுதி முடித்ததும், என் இயக்குநரிடம் காண்பித்தேன். நான் எழுதும் கதைகளை இயக்குநரிடம் காண்பிக்கும் வழக்கம் கொண்டிருந்தேன். என் முதல் சிறுகதை விகடனில் வெளிவர முக்கிய காரணமாக என் இயக்குநர் இருந்தார். அந்த வகையில், இந்த கதையை படித்ததும் அதனை செய்வதற்கு அவர் தயாராக இருந்தார். எனினும், இதனை செயல்படுத்துவதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் இருந்தன.

இதில் சேவல் இருக்கிறது, அதை காட்சிகளை கிராஃபிக்ஸ் செய்கிறோமா அல்லது உண்மையில் படமாக்குகிறோமா என்பது போன்ற சிக்கல்களை பொறுமையாக கடந்துவர நேரம் ஆகிவிட்டது. என் நண்பர் அசோக், திலானி ரவீந்தரன் என்ற தயாரிப்பாளர் கனடாவில் இருந்து திரைக்கதை பற்றிய போட்டி இருப்பதாக என்னிடம் தெரிவித்தார். நானும், இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதி அனுப்பிவிட்டேன். இந்தப் படத்தின் முதல் தயாரிப்பாளர் திலானி ரவீந்திரன் தான்.

அந்தப் போட்டி தென் கிழக்கு ஆசிய நாடுகளை உள்ளடக்கிய போட்டியாளர்களை கொண்டிருந்தது. அதில் என் திரைக்கதை முதல் பரிசை வென்றது. அதில் கிடைத்த தொகை, ராஜூமுருகன் சார் இணை தயாரிப்பு மூலம் தான் இந்தப் படம் எடுக்கப்பட்டது. எடுத்தப் பிறகு இந்தப் படம் ஒரு வருடம் முழுக்க சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டது. அதன்பிறகு, கேரளாவில் நடந்த திரைப்பட விழாவில் விருது வென்றது. அதன்பிறகு இந்தப் படத்திற்கு வெளிச்சம் கிடைத்தது. இதனால், நாங்களாக இந்தப் படத்தை வேறு எங்கும் அனுப்பவில்லை.

விருது வென்றதால் பல சர்வதேச திரைப்பட விழாக்கள் சார்பாக எங்களை தொடர்பு கொண்டு படத்தை அனுப்பக் கோரினர். இந்தப் படத்தை சரியாக கொண்டு சேர்க்க அதிக நேரம் ஆனது. தனித்து செயல்படும் போது, பெரிய நட்சத்திரங்கள் இன்றி எடுக்கும் போது பெரிய ஓ.டி.டி. தளங்களில் முயற்சி செய்தோம். அதற்கு நிறைய காலதாமதம் ஆனது. அதன்பிறகு இங்கு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்தப் படத்தை தாங்குவது மிகப்பெரிய விஷயம். இனி வரும் உதவி இயக்குநர்களுக்கு இதுவொரு புது வழியாக இருக்கும். ட்ரீம் வாரியர்ஸ் குழுவில் பிரகாஷ் சார் தொடங்கி அனைவருக்கும் நன்றி. விருது வாங்கும் முன்பே இந்தப் படத்தை பிரகாஷ் சாருக்கு பிடித்துவிட்டது. அதன்பிறகு பிரபு சார், குகன் சார், அலாவுதீன், கிருஷ்ணா என அனைவக்கும் நன்றி.

அதன்பிறகு மணிமேகலை அம்மா, காளிதாஸ் ஐயா என இருவரும் செட்டிற்கு வரும் முன்பே நடிப்பு பயிற்சி அளித்திருந்தோம். லைவ் ரெக்கார்டிங் என்பதால் எல்லாவற்றையும் முன்கூட்டியே தயார்ப்படுத்த வேண்டியிருந்தது. படப்பிடிப்பு தளத்தில் ஒரு விஷயத்தை கூட மாற்றவில்லை. கதையாக என்ன எழுதப்பட்டதோ, அதைத்தான் எடுத்தோம். இந்தப் படத்தில் சிற்பபாக நடித்த காளிதாஸ் தோழர், தற்போது உயிருடன் இல்லை. அவர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக வீதி நாடகங்கள் நடித்துக் கொண்டிருந்தார். தன் நடிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும் என அதிகம் நம்பியிருந்தார். இந்தப் படம் அவருக்கு அதை அமைத்துக்கொடுத்தது. கோவா, மும்பை என திரையிட்ட இடங்களில் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ராம்ஜியை நான் மெகந்தி சர்க்கஸ் படத்தில் கண்டெடுத்தேன். அவருக்கு மதுரை வட்டாரம் சிறப்பாக வரும். மதுரையில் இருந்து வந்துள்ள ராம்ஜி சாருக்கு நன்றி. தயாரிப்பு நிறுவனங்களான வியூஃபைன்டர், ராஜூமுருகன் சாரின் காம்ரேட் டாக்கீஸ் ஒத்துழைப்பு வழங்கினர். காம்ரேட் டாக்கீஸ் ஊடக ரீதியில் சென்றடையும், பலவிதங்களில் உதவியாக இருந்தனர். நான் உதவி இயக்குநர் என்பதால் கூடுதல் சிறப்பாக இருந்தது. உதவி இயக்குநர் என்பதால் தயாரிப்பாளராக இன்றி ராஜூமுருகன் சாரிடம் ஆலோசனைகள் கேட்க முடிந்தது. அவர் சொன்ன தவறுகளை சரி செய்ததால், இந்தப் படம் மேலும் சிறப்பாக மாறியது.

மாநகரம் படத்தின் எடிட் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அதை பார்த்த பிறகு, நான் உதவி இயக்குநர் என்பதாலும் அப்போது நான் ஜோக்கர் படத்தில் பணியாற்றி இருந்தேன். அந்த சமயத்தில் பிரபு சார் மாநகரம் படத்திற்காக பிரபு சார் வெற்றி விழா நடத்தினார். அந்த விழாவில் பிலோமின் ராஜை சந்தித்தேன். அதற்கு அடுத்தநாள் நான் அவரை அலுவலகம் சென்று பார்த்தேன். அதன்பிறகு அவர் நிறைய பெரிய படங்களில் பணியாற்றினார். எனினும், ஒரு குறும்படத்தில் பணியாற்றுகிறார் என்றால், அவருக்கு படங்களின் மேல் உள்ள காதல் தான் காரணம். முதல் சந்திப்பின் போது நானும் பிலோமின் சாரும் அதிகம் பேசவில்லை. அவர் படத்தின் கதையை மட்டும் கேட்டார், சில காட்சிகளை மட்டுமே பார்த்தார். பிறகு தனது குழுவினருடன் பணிகளை தொடங்கிவிட்டார். அவரது குழுவில் சந்தோஷ், சக்தி மிகவும் ஆதரவாக இருந்தனர். ஒவ்வொரு திரைப்பட விழாவிற்கு அனுப்பும் போதும், ஒவ்வொரு விதமாக அனுப்ப வேண்டும். அதன்பிறகு தணிக்கை, விலங்குகள் நலவாரியம், தேசிய விருதுகளுக்கு சமர்பிப்பது என ஒவ்வொரு நடைமுறையிலும் அவர்கள் உறுதுணையாக நின்றனர். இதற்காக வாழ்நாள் முழுக்க நான் பிலோமின் சாருக்கு கடமைப்பட்டுள்ளேன்.

கலை இயக்குநர் விஜய் பற்றி பேசியாக வேண்டும். படத்தில் வரும் சுவர், முட்டையில் இருக்கும் குஞ்சு உள்ளிட்ட சிறுசிறு விஷயங்களை மிக நுனுக்கமாக அவரே செய்தார். மிக சிறிய பட்ஜெட்டில் பல பொருட்களை வாங்கும் போது, எல்லா பணிகளையும் அவரே செய்தார். படத்தில் அவருக்கு உதவியாளர் இல்லை. இதனால், அவரே கலை இயக்குநர், உதவி கலை இயக்குநர் என எல்லா பொறுப்புகளிலும் தனி மனிதனாக உழைப்பைக் கொடுத்தார்.

இந்தப் படத்தின் லைவ் ரெக்கார்டிஸ்ட் ராகவ். இந்தப் படம் லைவ் சவுண்ட் முறையில் எடுக்கப்படுவதால், படத்தின் காட்சி மட்டுமின்றி அதற்கான ஓசையும் சரியாக பதிவாக வேண்டும். இதனால், பல முறை ரீடேக் செய்ய வேண்டியிருந்தது. மேலும், காட்சியின் ஒலி அமைப்பு சரியாக பதிவாகி இருக்கிறதா, காட்சியில் தேவையற்ற ஒலி ஏதேனும் பதிவாகி இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். அப்படி பதிவாகி இருந்தால், மீண்டும் படமாக்க வேண்டும். இந்தப் பணியை ராகவ் மிகச்சிறப்பாக செய்தார். இந்தப் படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் தயாநிதி பணியாற்றினார். ராஜூமுருகன் சார் மூலமாகத் தான் இந்தக் குழு அமைந்தது. சந்தோஷ் ஏ.ஆர். ரஹ்மான் சாரின் உதவியாளர். அவர் தற்போது இயக்குநர் ராமின் பறந்து போ படத்தில் பணியாற்றி இருக்கிறார். இந்தப் படத்திற்காக சிறிய பட்ஜெட்டில் சிறப்பாக இசை அமைத்துக் கொடுத்துள்ளார்.

ஒலி வடிவமைப்பாளர்களான சுரேன் மற்றும் கூத்தன் அவர்கள் இங்கு வரவில்லை, வேறொரு ரெக்கார்டிங்கில் உள்ளனர். கலரிஸ்ட் ரங்கா சார் இங்கு தான் இருக்கிறார். இவர் பல பெரிய படங்களில் பணியாற்றி வருகிறார். எங்கள் இயக்குநர் குக்கூ படத்திற்கும் அவர் தான் கலரிஸ்ட். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழு என இந்த மாதிரி அமைந்தால் தான் இதுபோன்ற படத்தை எடுக்க முடியும். இந்தப் படத்தில் எல்லாமே கூடி வந்தது. ஜோக்கர் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்படும்போது நான், இயக்குநருடன் திருவண்ணாமலையில் இருந்தேன். அந்த அறிவிப்பு வெளியான போது அந்த நாள் எப்படி இருந்தது என நியாபகம் இருக்கிறது. இதே பிரசாத் லேபில் தான் அதற்கும் பிரஸ்மீட் நடந்தது. அந்தப் படத்திற்கும் ட்ரீம் வாரியர்ஸ் ப்ரொடக்ஷன், தற்போது இந்தப் படத்திற்கும் ட்ரீம் வாரியக்ஸ் ப்ரொடக்ஷன் ரிலீஸ் செய்வதை ஒரு பேட்டர்னாக பார்க்கிறேன். எனது எதிர்கால படங்களுக்கம் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் கதவுகள் திறந்திருக்கும் என்று நம்புகிறேன். கனடாவில் இருக்கும் திலானியை நான் மிஸ் செய்யக்கூடாது. அவர்கள் தான் இந்த கதையை முதலில் தேர்வு செய்தார்கள். இந்த வீடியோவை பார்த்து அவர்கள் பெருமை கொள்வார்கள் என நினைக்கிறேன். வருகிற 27ஆம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. இப்படியொரு திரைப்படம் யூடியூபில் வெளியாகும் போது அதற்கான வியூஸ்கள் அதிகரிக்க, உங்களை போன்ற ஊடகத்தினர் மட்டுமே செய்ய முடியும். இதை நீங்கள் எடுத்து செல்வீர்கள் என்று நம்புகிறேன்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மருது. அவரின் முயற்சியை நீங்கள் காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். ஒவ்வொரு காட்சியையும் மிக நுட்பமாக பார்த்து பார்த்து பதிவு செய்தார். அவர் கணித ரீதியாக மிகச் சரியாக பணியாற்றியதே காட்சிகள் தரமாக வருவதற்கு காரணமாக அமைந்தது. பல பெரிய ஒளிப்பதிவாளர்கள், படத்தின் காட்சிகளை பார்த்த பிறகு, இதற்கு கிரேடிங் செய்யாதீர்கள் என்று கூறினர். மற்றொரு ஒளிப்பதிவாளரான மீனாட்சி சோமன் பற்றி கூற வேண்டும். மருது மற்றும் மீனாட்சி இருவரும் தனித்தனி கேமராவில் படமாக்கினர். எனினும், படத்தின் காட்சிகளுக்கு அதிக கிரேடிங் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. மருது தற்போது என்னுடன் இல்லை, அவருடனான கூட்டணி கதை எழுதியதில் இருந்து படம் நிறைவுபெறும் வரையில் நீண்டது. அதேபோல் தற்போது காளிதாஸ் தோழரும் தற்போது நம்முடன் இல்லை. ஆனால், இந்தப் படம் இருக்கப் போகிறது. இந்தப் படம் யூடியூப் இருக்கும் வரை இருக்கப் போகிறது. அவர்களின் நினைவாக இருக்கப் போகிறது. அவர்கள் இல்லை என்றாலும், இங்கு தான் இருக்கப் போகிறது. நன்றி,” என்றார்.

தொடர்ந்து பேசிய நடிகை மணிமேகலை, “எல்லாருக்கும் வணக்கம், இந்த குறும்படத்தை நான் பார்வையாளராக பார்க்கிறேன். உங்களுடன் சேர்ந்து தற்போது தான் இரண்டாவது முறையாக பார்க்கிறேன். காளிதாஸ் ஐயா இந்த கதாபாத்திரத்தில் சேவல் மீது ஒரு அபா. கஞ்சி சாதமே சாப்பிடுவோருக்கு, கறி சோறு சாப்பிடும் என்ற ஆசை இருக்கும். அந்த சேவலை எப்படியாவது அடிக்க வேண்டும் என நினைத்தார். கடைசியில் முடித்தார் ஆனால், அவரும் முடிந்துவிட்டார். கடைசியில் சனிக்கிழமை போனதால் அந்த சேவலை எடுத்து சென்றுவிடுவார்கள். அந்த ஆன்மா சேவலுடன் செல்லும் விஷயம் அது மனதை மிகவும் பாதிக்கிறது. அவரின் ஆன்மா கோழியை கொண்டு சென்ற நிம்மதி இருக்கிறது. இன்னொரு விஷயம் கோழி முட்டைக்குள் குஞ்சு இருப்பது முற்றிலும் செயற்கையாக செய்யப்பட்டது. அதற்கு கலை இயக்குநர் செய்த பணி மிகப்பெரியது. அந்தக் காட்சியை படமாக்க நான்கு நாட்கள் திட்டமிட்டிருந்தார்கள். எனினும், காட்சி, ஒலி என அனைத்தும் கச்சிதமாக பதிவு செய்ய ஆறு நாட்கள் ஆகிவிட்டது. அதன்பிறகு கோழி குஞ்சு கத்துவது, அதாவது வாழ்க்கையே போன பிறகு சந்தோஷம் வரும். அதை பார்வையாளராக பார்க்கும் போது நெகிழ்வாக இருக்கிறது. எனக்கு படத்தின் கதையை போனில் தான் சொன்னார். நிறைய சிரமப்பட்டு தான் இந்தப் படத்தில் பணியாற்றினார்கள். இந்தப் படத்தில் நடித்து இருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. நவீன் மிக்க நன்றி, பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி,” என்று தெரிவித்தார்.

அடுத்து பேசிய நடிகர் ராம்ஜி, “இயக்குநருக்கும், எனக்கும் இது முதல் குறும்படம். முன்னதாக சில பெரிய படங்களில் பணியாற்றி இருக்கிறேன். ஆனால், குறும்படத்தில் இவ்வளவு வேலைகள் இருப்பதை இந்தப் படத்தில் நடிக்கும் போது தான் உணர்ந்தேன். இந்தப் படத்தின் தலைப்பிற்கும் எனக்கும் சம்பந்தம் இருக்கிறது. படத்தின் தலைப்பு “லிட்டில் விங்ஸ்”, நானும் லிட்டில் தான். அது எனக்கு பிடித்து இருந்தது. ஆனால், அதை இயக்குநரிடம் நான் கூறவில்லை. எனது யூடியூப் சேனலின் பெயரும் லிட்டில் மேன் ஷோ என்றுதான் வைத்திருக்கிறேன். எல்லோரும் என்னை பார்த்தால் கிண்டல் தான் செய்வார்கள். எனது புனைபெயரை தான் அப்படி வைத்தேன். எல்லோரும் நான் குள்ளம் என்றுதான் கிண்டல் செய்வார்கள், அதையே நான் புனைபெயராக வைத்தேன். அதேபோல் சாரும் லிட்டில் விங்ஸ் என வைத்திருந்தது எனக்கு பிடித்திருந்தது. எனது முதல் குறும்படம், இயக்குநருக்கும் முதல் குறும்படம் தேசிய விருது வாங்கியது மகிழ்ச்சி. என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் பெரிய படத்தில் நடிக்கும் போது இருந்ததைவிட முதல் குறும்படம் தேசிய விருது வாங்கியது வீட்டில் உள்ளவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. இயக்குநர் நவீன் சார் மிக்க நன்றி. இயக்குநர் ராஜூமுருகன் மற்றும் இந்தப் படக்குழுவை சேர்ந்த அனைவரும் கடும் உழைப்பை கொடுத்தனர். பெரிய படத்தில் கூட நான் பயிற்சி எடுத்ததில்லை, ஆனால், இந்தப் படத்தில் அனைவரும் முன்கூட்டியே பயிற்சி எடுத்து அதன்பிறகு நடித்தோம். இங்கு எல்லாமே சவாலாக இருந்தது. படம் வெளியான பிறகு மேலும் வெற்றி பெறும் என்று நம்புகிறேன், அனைவருக்கும் நன்றி,” என்றார்.

கலை இயக்குநர் விஜய் பேசும் போது, “எல்லோருக்கும் வணக்கம், நான் இந்தப் படத்தில் நான்கு நாட்களுக்கு முன்பு தான் கமிட் ஆனேன். என் நண்பர் தீனா ராகவ் மூலமாக தான் இயக்குநரை சந்தித்தேன். இந்தப் படத்தில் அடைகாத்த கோழிக்குஞ்சியை உருவாக்குவது மட்டும் மிகவும் கடினமாக இருந்தது. திட்டமிட்டதை விட அதற்கு தேவைப்பட்ட இரத்தம் உள்ளிட்டவைகளை தயார்படுத்துவது சவாலாக இருந்தது. ரொம்ப நன்றி,” என்றார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி பேசும் போது, “வணக்கம், ட்ரீம் வாரியர்ஸ்-க்கு நன்றி, இயக்குநர் நவீன், ராஜூமுருகன் சார் மற்றும மேடையில் உள்ள அனைவருக்கும் நன்றி. இயக்குநர் நவீனை நான் ராஜூமுருகன் சார் மூலம் தான் சந்தித்தேன். ராஜூமுருகன் சாருடன் பணியாற்ற வேண்டும் என்று முயற்சித்தேன். அவர் முதலில் தனது உதவி இயக்குநர்களை சந்திக்க வைத்தார். அப்படி தான் நவீன் எனக்கு அறிமுகமானார். நவீன் எனக்கு திறமை மிக்க நல்ல நண்பர். முதலில் அவரை இயக்குநராக சந்தித்தேன், பிறகு நண்பர்களானோம். நான் அடிக்கடி அவரை சந்திக்க நினைப்பேன். அவர் படம், கதைகள் மற்றும் இசை பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்வார். நாங்கள் உரையாடல் மற்றும் திட்டமிடல்களில் ஈடுபடுவோம். அந்த மாதிரி தான் லிட்டில் விங்ஸ் தொடங்கியது. நான் இந்தப் படத்தில் பணியாற்ற தொடங்கும் போது, இதை குறும்படமாக பார்க்கவில்லை. என்னை நிரூபிக்க இதுவொரு வாய்ப்பாக இருக்கும் என்று வகையில்தான் பார்த்தேன். அதன்பிறகு நவீனுடன் பணியாற்ற தொடங்கினேன். இந்தப் படத்திற்காக நிறைய விஷயங்களை பரிசீலனை செய்தோம். லிட்டில் விங்ஸ்-இல் பணியாற்றிய ஒவ்வொருத்தரும், எனக்கு இசையமைக்க மிகவும் ஊக்கப்படுத்தினர். உண்மையில், அவர்களால் எனது வேலை இந்தப் படத்தில் குறைவாகவே இருந்தது. அனைவருக்கும் நன்றி, நவீன் விரைவில் இந்தியாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உருவெடுப்பார். அந்த நாளுக்காக காத்திருக்கேன்,” என்றார்.

படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் பேசும் போது, “எல்லோருக்கும் வணக்கம், நவீன் குறும்படம் செய்ய வேண்டும் என்று என்னை சந்தித்தார். நாளைய இயக்குநர் காலக்கட்டத்தில் நண்பர்கள் இணைந்து குறும்படம் எடுப்போம். குறைந்தபட்சம் ஒரு லட்சத்தில் குறும்படம் எடுத்துவிடுவோம். நவீனிடம் இந்தப் படத்தின் பட்ஜெட்டை கேட்டேன், அவர் ரூ. 30 லட்சம் என்றார். உடனே ஷாக் ஆனேன். நான் பெரி பட்ஜெட்டில் செய்த முதல் குறும்படம் இதுதான். அப்போது அவர், இல்லை இந்தப் படத்தை திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். நாளைய இயக்குநர் சமயத்தில் இதுபோன்ற திரைப்பட விழாக்கள் இல்லை, இதனால் அந்த நிகழ்ச்சிக்காக மட்டுமே எடுப்போம். இந்தப் படத்திற்கு வரும் போது, இயக்குநர் நவீன் இது குறும்படம் ஆனால் இதன் தரம் சற்று திரைப்படம் அளவுக்கு உயர்வாக இருக்க வேண்டும் என்றார். அப்போது அவரிடம் தயாரிப்பாளர் யாரென்று கேட்டேன் அவர் திலானி ரவீந்திரன் என்றார். அவருக்கு கோடி கும்பிடு போடுங்கள் என்றேன். வாழ்க்கையில் ரூ. 30 லட்சம் போட்டு குறும்படம் எடுக்கும் மனது கொண்டவர்கள் அவர் தான். எனக்கு தெரிந்து குறும்படத்திற்கு யாரும் அவ்வளவு தொகை கொடுத்ததில்லை. எனக்கு இந்தப் படத்தில் மற்றொரு சவால், லைவ் சவுண்ட். நான் அதற்கு முன்புவரை லைவ் சவுண்ட் செய்ததே இல்லை. இந்தப் படத்திற்கு லைவ் சவுண்ட் என்பதால் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இந்த கதையை படிக்கும் போது, என் கிராமங்கள் தான் நினைவுக்கு வந்தது. எங்கள் வீட்டில் கோழி வளர்த்தோம், அப்போது தினமும் மாலை 6 மணிக்கு கோழி கூண்டை அடைப்பது என் வேலை. என்றாவது அதை மறந்து போனால், அம்மாவும், அம்மாச்சியும் என்னை அடிப்பார்கள். அப்போதெல்லாம் வீட்டிற்கு மாமா, மச்சான் என உறவினர்கள் வந்தாலோ அல்லது பண்டிகை காலத்தில் மட்டும் தான் கோழி அடிப்பார்கள். மற்றப்படி அசைவம் சற்று குறைவாகவே இருக்கும். இந்த கதையை படிக்கும் போது எனக்கு அந்த ஞாபகங்கள் வந்தது. இதனாலேயே இந்த கதை எனக்கு மிகவும் பிடித்தது. இந்த குறும்படம் எனக்கு ஒரு பயிற்சியாகவே இருந்தது. திரைப்பட விழாக்களுக்கு இந்த குறும்படத்தை அனுப்பியது மறக்க முடியாக அனுபவமாக இருந்தது. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் இந்தப் படத்தை வழங்குவதாக சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தார்கள். இதற்காக ஒரு டீசர் செய்ய வேண்டும் என்றார். மிக்க மகிழ்ச்சி என்று கூறி செய்தேன். தற்போது ட்ரீம் வாரியர்ஸ் மூலம் இந்தப் படம் வெளியாவது மிக்க மகிழ்ச்சி, நன்றி வணக்கம்,” என்றார்.

இயக்குநர் ராஜூமுருகன் பேசும் போது, “எல்லோருக்கும் வணக்கம், நவீன் திரைப்படம் இந்த இடத்திற்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவும் ட்ரீம் வாரியர்ஸ் இணைந்திருப்பது, இயக்குநர் கூறியதை போலவே ஜோக்கர் படத்தின் போது ஏற்பட்ட உணர்வு தற்போதும் ஏற்படுகிறது. நவீனை என்னிடம் ேசர்த்துவிட்டது, பவா செல்லத்துரை சார். அவர் ஒருமுறை என்னை தொடர்புகொண்டு நவீன் என்றொரு பையன் இருக்கிறான். அவனை முக்கியமான இயக்குநரிடம் சேர்த்துவிட அதிக முயற்சித்தேன். அவன் உலகசினிமா பற்றி அதிகம் பேசியதால், ஒரு உறையில் ஒரு கத்தி தான் இருக்க வேண்டும் என்று கூறி இயக்குநர் வேண்டாம் என்று கூறிவிட்டார். இதனால் அவன் விரக்தியாக இருக்கிறான் என்றார். ரிஜெக்ட் ஆனவர்களை என்னிடம் தள்ளிவிடுகின்றீர்கள் என்று கூறி மறுத்துவிட்டேன். ஆனால், அவர் விடாமல் எங்கு செல்கிறாய் என்றார். நான் தருமபுரிக்கு படப்பிடிப்புக்கு செல்கிறேன் என்றேன். அவர் செல்லும் வழியில் திருவண்ணாமலையில் வந்து நவீனை லக்கேஜ் போல் எடுத்துச் செல்ல சொன்னார். செல்லும் வழியில் அழைத்து செல்லப்பட்டவர் தான் நவீன். அவருடன் பயணித்த சில வாரங்களில் அவர் இந்தியாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக வருவார் என்பதை புரிந்து கொண்டேன். தொடர்ந்து நிறைய பயணம், வாசிப்பு செய்பவர் நவீன். நிறைய படங்கள் பார்ப்பது, நிறைய உழைப்பை கொடுப்பவர் நவீன். தற்போது மணி சாரிடம் இருக்கிறான். அவன் எழுதும் எல்லாவற்றையும் என்னிடம் காண்பிப்பான். இந்த கதையை என்னிடம் கொடுத்தான். இதை படித்ததும், இது 20 நிமிடங்களாக இருந்தாலும், இது பேசும் உளவியல் மிகவும் பெரியதாக இருக்கிறது. இது பசி, ஆண், பெண் உறவு, நம் கலாச்சாரம் பற்றி பேசுகிறது. இதையெல்லாம் பேசுகிறது, நிச்சயம் இதை எடு என்று கூறினேன். அப்போது திலானியுடன் இணைந்து தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தது. காம்ரேட் டாக்கீஸில் நாங்கள் தொடர்ச்சியாக ஆவணப்படங்களை எடுத்து வருகிறோம். எங்கள் குழுவில் சிந்தன் தோழர் உள்பட பலர் பணியாற்றி வருகிறோம். சமீபத்தில் நாங்கள் எடுக்க வாச்சாத்தி ஆவணப்படம் அதிகம் பேசப்பட்டது. அந்த மாதிரி ஆவணப்படங்கள், குறும்படங்களை எடுத்து வருகிறோம். அதில் லிட்டில் விங்ஸ் எடுத்ததில் பெருமை அடைகிறோம். அதை பார்த்து ட்ரீம் வாரியர்ஸ் இதை வெளியிடுவதாக பிரகாஷ் சார் மற்றும் பிரபு சார் தெரிவித்தனர். ட்ரீம் வாரியர்ஸில் பிரகாஷ் சார் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர். அடிக்கடி நாங்கள் உரையாடும் போது, அவர் நிறைய கதைகளை படித்து இதை படமாக்கலாம் என்பார். நிறைய இலக்கியம் படிப்பவர் பிரகாஷ் சார். இந்த மாதிரியான தயாரிப்பாளர் அமைவது இந்திய சினிமாவில் மிகவும் அபூர்வம். தொடர்ச்சியாக இலக்கியம், வாழ்க்கைய சரியான பிணைப்பில் சினிமாவுக்கு கொண்டு வருவது பிரகாஷ் சார் மற்றும் பிரவு சாரிடம் இருக்கும் மிகமுக்கிய அம்சமாக பார்க்கிறேன். இந்தப் படத்தை எடுத்துக் கொள்வதாக அவர்கள் தெரிவித்ததும், நவீன் வாழ்க்கை தொடங்கும் என்று நினைத்தேன். ட்ரீம் வாரியர்ஸ் தொட்ட படைப்பாளிகள் அனைவரும் மிக முக்கிய இடத்திற்கு வந்துள்ளனர். அப்படிப்பட்ட விஷயத்தை தான் ட்ரீம் வாரியர்ஸ் தொடர்ந்து செய்வார்கள். ட்ரீம் வாரியர்ஸ்-க்கு மிக்க நன்றி. சந்தோஷ் இசை மிகவும் அற்புதம். சினிமாவில் உங்களுக்கு நிச்சயம் பெரிய இடம் உண்டு. இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் அற்புதமான நடிப்பை வழங்கினர். ஒளிப்பதிவாளர் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். பிலோமின், இவர் படைப்பை மட்டுமே பார்க்கிறார். இன்று இந்தியாவில் உருவாகும் பெரிய பட்ஜெட் படங்களில் பணியாற்றும் ஒருவர் இந்த குறும்படத்தில் தனது கவனத்தை செலுத்தி, புதிய படைப்பாளிகளுக்கான இடமாக அவரது அலுவலகம் இருக்கிறது. அவரது அலுவலகம் ஃபேக்டரி போல் இயங்கி வருகிறது. எந்த அறையில் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்பதே தெரியாது. நல்ல படைப்பாளிகளுக்கும், நடிகர்களுக்கும் எப்போதும் மேடையாக ட்ரீம் வாரியர்ஸ் இருக்கும் என நிச்சயம் நம்புகிறேன்,” என்றார்.

ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர். பிரபு பேசும் போது, “எல்லோருக்கும் வணக்கம், குறும்படம் என்று அழைத்து எல்லோரும் இவ்வளவு நேரம் பேசுகிறார்கள் என்று சோர்ந்து போயிருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த கதையை பொருத்தவரை தனிப்பட்ட முறையில் ஊர்களில் ஆடு, மாடு வளர்ப்பது வாழ்வியலின் அங்கமாகவே இருக்கும். நானும், பிரகாஷும் ஏழு கிலோமீட்டர் நடந்து சென்று சேவல் விற்று வந்த ஞாபகம் எனக்கு இருக்கிறது. எல்லார் வாழ்விலும் நாம் நிறைய விஷயங்களை கேள்விப்பட்டிருப்போம். பிரியாணியில் ஒரு பீஸ் இல்லையென நடந்த கலவரங்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த மாதிரி சாப்பாட்டில் அசைவம் மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. இந்த கதை சொல்லும் விஷயங்கள் சிலருக்கு சாதாரணமாக தெரியலாம், ஆனால் அதன் பின் இருக்கும் ஆழமான கருத்துக்கள் வாழ்க்கையில் முக்கியமான தருணங்களை நினைவுக்கு கொண்டுவருகிறது. ட்ரீம் வாரியர்ஸில் நாங்கள இதை கொண்டுவர காரணம், சினிமாவில் இன்று நிறைய விஷயங்கள் மாறியிருக்கிறது. நாங்கள், புது கலைஞர்கள் வரும் போது அவர்களின் தொடக்கம் குறும்படம் அல்லது இசை ஆல்பம் மூலம் தொடங்கும் போது நமக்கு நல்ல திறமைசாலிகளை அடையாளம் காணவும், அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அமைத்துக் கொடுக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது. இது வருவாய் அடிப்படையில் இன்றி புது திறமைசாலிகளை அடையாளம் காணும் தளமாக இதை பார்க்கிறோம். அந்த வகையில் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸில் நாங்கள் தனித்துவ இசை ஆல்பங்களுக்கு ஆதரவளிக்கிறோம். தற்போது லிட்டில் விங்ஸ் மூலம் குறும்படங்களுக்கும் ஆதரவளிக்க தொடங்கி இருக்கிறோம். எங்களின் அடுத்தடுத்து முயற்சிக்கு உங்களது ஆதரவு தேவை, உங்களுக்கு இந்த குறும்படம் பிடித்திருக்கும் என நம்புகிறேன். பெரிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள், கொண்டுவந்து கொடுத்த ராஜூமுருகன் அவர்களுக்கும் இதை எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்று திட்டமிட்ட ட்ரீம் வாரியர்ஸ் குழுவனர் அனைவருக்கும் நன்றி. நீங்கள் இதற்கு ஆதரவளித்து, இதன் மூலம் நிறைய திறமைசாலிகள் மற்றும் படைப்புகள் வெளியாகும் என நம்புகிறேன், நன்றி,” என்றார்.

‘தாய் கிழவி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

0

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘தாய் கிழவி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று நடைபெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் கலை, “நல்ல கதைகள் தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இயங்கி வருகிறது. இது எங்கள் தயாரிப்பில் ஒன்பதாவது படம். இந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் கதை மீது சிவகார்த்திகேயன் வைத்த நம்பிக்கையில் இருந்துதான் படம் தொடங்கியது. பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கிறோம். படத்தின் ரஃப் கட் பார்த்துவிட்டு எங்கள் அணியை சிவா பாராட்டினார். சிவகுமார் எவ்வளவு திறமையான இயக்குநர் என்பது இந்தப் படத்தின் மூலமும், அவருக்கு அடுத்து கிடைத்திருக்கும் வாய்ப்பை பார்க்கும்போதும் தெரியும். ராதிகா மேம் எங்களுக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. 27 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது. உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை”.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சரத்குமார் பேசியதாவது, “’தாய் கிழவி’ கதாபாத்திரத்தில் ராதிகா கலக்கி இருக்கிறார். நான் நடித்த ‘ஆழி’ படமும், ராதிகாவின் ‘தாய் கிழவி’ படமும் பிப்ரவரி 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. எனது மனைவி வெற்றி பெற்றால் நான் வெற்றி பெற்றது போல! ஊர்ப்பக்கம் தாய் கிழவி என்றால் அனைவரையும் அரவணைத்து கட்டிக்காப்பவரைதான் அப்படி கூப்பிடுவோம். அத்தகைய டைட்டில் ரோலில் நடிக்க உழைப்பு, அர்ப்பணிப்பு, தன் மீது நம்பிக்கை வேண்டும். திரையுலகில் 50 வருடங்கள் நெருங்குகின்ற ராதிகாவிற்கு நான் சொன்ன அனைத்தும் இருப்பதால்தான் இந்தப் படத்தில் தைரியமாக நடித்திருக்கிறார். ஒரு பெண் தனியாக வாழும்போது சந்திக்கின்ற சோதனையும் வேதனையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மிக நுட்பமாக இயக்குநர் சிவா இதில் பதிவு செய்திருக்கிறார். மிகப்பெரிய வெற்றிப் படத்தை தர காத்திருக்கும் சுதன், சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்”.

ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார், ”இது என்னுடைய முதல் மேடை. கனவு போல உள்ளது. வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ‘தாய் கிழவி’ படம் உங்கள் அனைவரையும் மகிழ்விக்கும்”.

எடிட்டர் சான் லோகேஷ், “இதுபோன்ற படம் கிடைப்பது அபூர்வம். சிறப்பாக வந்துள்ளது”.

கலை இயக்குநர் ராமு தங்கராஜ், “பெண்களை பற்றி அதிகமாக பேசியிருக்கும் ‘தாய் கிழவி’ மிக முக்கியமான படம். எங்களிடம் கதை சொன்னதை விட இயக்குநர் சிறப்பாகவே எடுத்திருக்கிறார். படத்தை தயாரித்திருக்கும் சுதன் மற்றும் சிவகார்த்திகேயன், திறமையாக நடித்திருக்கும் ராதிகா என அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

ஒப்பனைக் கலைஞர் வினீஷ், “என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சிவா மற்றும் தயாரிப்பாளர்கள் சுதன், சிவகார்த்திகேயனுக்கு நன்றி. படம் சிறப்பாக வந்திருக்கிறது”.

பாடலாசிரியர் கருமாத்தூர் மணிமாறன், “’தாய் கிழவி’ படத்தில் என் மனைவியை நினைத்து ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சிவா, இசையமைப்பாளர் நிவாஸ் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”.

பாடலாசிரியர் ஜெகன், “ஒரு கிழவி மரணப்படுக்கையில் இருக்கும்போது அவள் சீக்கிரம் சாக வேண்டும் என்ற சூழலில் வரும் பாடல். இதுபோன்ற சூழ்நிலைக்கு பாடல் எழுதும் வாய்ப்பு யாருக்கும் வந்திருக்காது என நினைக்கிறேன். இதற்கு நேரெதிராக இன்னொரு பாடல் எழுதும் வாய்ப்பும் கிடைத்தது. இரண்டு பாடல்களும் அருமையாக வந்திருக்கிறது”.
நடிகர் பாலசரவணன், “மகிழ்ச்சியான, எனக்கு தேவையான படம் இது. இயக்குநரை ‘என்னா மனுஷன்யா!’ என பாராட்டலாம். அந்தளவுக்கு மிகவும் பணிவானவர். இப்படி ஒரு சிறப்பான படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த அண்ணன் சிவகார்த்திகேயனுக்கு நன்றி. கதையை கேட்டு சிரித்தேன், அழுதேன். எனக்கு கிடைத்த செல்வம்தான் இந்த கதாபாத்திரம். ராதிகா மேம் நடிப்பை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தெளிவான அரசியல் பேசும் இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி”.

நடிகர் அருள்தாஸ், “இயக்குநர் சிவாவிடம் இருந்து கதை கேட்டபோது அவரிடம் இருந்து நான் அதை எதிர்பார்க்கவே இல்லை. பல உணர்வுப்பூர்வமான தருணங்கள் இதில் உண்டு. முழுக்க முழுக்க திருப்தியான, பெருமையான படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி. இந்தப் படத்திற்கு ஒத்துழைத்த ஊர்மக்கள், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. நிச்சயம் இந்தப் படத்திற்காக ராதிகா மேம் தேசிய விருது பெறுவார். எல்லா வயதினருக்கும் பிடித்த படமாக ‘தாய் கிழவி’ இருக்கும்”.

நடிகர் சிங்கம்புலி, “பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடித்த ‘மகாராஜா’ படம் மிகப்பெரிய ஹிட். அதுபோலவே, பேஷன் ஸ்டுடியோஸ், சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படமும் மிகப்பெரிய ஹிட் என்பதில் சந்தேகம் இல்லை. தீவிர ரஜினிகாந்த் ரசிகனான நான் இந்தப் படத்தில் கமல்ஹாசன் ரசிகனாக நடித்திருக்கிறேன். படம் பார்த்துவிட்டு கமல்ஹாசனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி” என்றார்.

நடிகர் இளவரசு, “’தாய் கிழவி’ படம் புதிய டிரெண்டை உருவாக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறையும் இதுபோன்ற படங்கள் எடுக்க முன்வரும். இதற்கு காலமும் சினிமாவும் துணை நிற்க வேண்டும். மிகச்சிறந்த நடிகை ராதிகா. அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்”.

நடிகர் முத்துக்குமார், “’கடைசி விவசாயி’ மணிகண்டனின் உதவி இயக்குநர்தான் சிவகுமார். ரொம்பவும் வலிமையானவர். நான் பிறந்த மண் சார்ந்து ஒரு கதாபாத்திரம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் எனக்குள் இருந்தது. அப்படியான ஒரு கதாபாத்திரமாக ‘தாய் கிழவி’ படத்தில் கிடைத்திருக்கிறது. பேஷன் ஸ்டுடியோஸ், சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருப்பது படத்தின் வெற்றியை உறுதி செய்திருக்கிறது. தாய் கிழவி கதாபாத்திரத்தில் ராதிகா சிறப்பாக நடித்திருக்கிறார். ‘கனா’, ‘கொட்டுக்காளி’ படங்களுக்கு பிறகு நிறைய விருதுகள் குவிக்கும் படமாக ‘தாய் கிழவி’ இருக்கும்”.

நடிகை ரேய்ச்சல், ”’கடைசி விவசாயி’ படத்தில் இருந்தே இயக்குநர் சிவாவை தெரியும். அவரின் வளர்ச்சி மகிழ்ச்சியாக இருக்கிறது. ’தாய் கிழவி’ படத்தில் ஒரு பெண்ணை ஹீரோவாக பார்ப்பது மகிழ்ச்சி. ராதிகா மேம் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பது சிறப்பு. அவரது மகள் சுருளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் இந்த கதாபாத்திரத்தை என்னுடன் பொருத்தி பார்த்துக் கொள்ள முடிந்தது. நன்றி”.

இயக்குநர் இரா. சரவணன், “எளிதில் கணிக்க முடியாதவர்கள்தான் இந்த மண்ணில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். சினிமாவிலும் பத்திரிகையிலும் பல வருடங்கள் இருந்திருக்கிறேன். என்னால் கணிக்க முடியாத ஒரு நபராக தம்பி சிவகார்த்திகேயன் இருக்கிறார். ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் திருஷ்டி சுற்றி போட்டாலும் பத்தாது. அந்தளவுக்கு சிறப்பான நடிப்பை இந்தப் படத்தில் நடிகை ராதிகா கொடுத்திருக்கிறார். ஹீரோக்கள் பின்னாடி ஓடும் தமிழ் சினிமா இனி நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கும் என நம்புகிறேன். சிவகார்த்திகேயன் ஏன் தயாரிக்க வேண்டும் என்ற விமர்சனங்களுக்கு பதிலடிதான் ‘தாய் கிழவி’ படம்” என்றார்.

தயாரிப்பாளர் ஏஜிஎஸ் ஐஸ்வர்யா கல்பாத்தி, “இந்த வருடத்தின் மிகச்சிறந்த படம் இது. நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டும். இயக்குநர் சிவா இப்படியான நல்ல படத்தில் அறிமுகமாவது மகிழ்ச்சி. ராதிகா மேம் சிறப்பாக நடித்துள்ளார். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா, “இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள் சிவா மற்றும் சுதன் இருவருக்கும் நன்றி. இயக்குநர் சிவா என் மனதுக்கு நெருக்கமானவர். நாங்கள் பேசுவதை விட படம் பார்த்துவிட்டு, வருகிற 27ஆம் தேதி நீங்கள் பேசுவீர்கள்” என்றார்.

இயக்குநர் அருண்ராஜா காமராஜ், “இந்தப் படத்தில் ராதிகா மேமை முதலில் பார்த்தபோது அடையாளமே தெரியவில்லை. பல காட்சிகள் உங்களை கலங்கடிக்கும். உங்களின் பல கேள்விகளுக்கு இந்தப் படத்தில் விடை இருக்கும். பெண்களை மையப்படுத்தி சொன்ன ‘கனா’ படத்தை விட 100 மடங்காக ’தாய் கிழவி’ படம் இருக்கும். சிறந்த படத்தில் நானும் பங்களித்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சி” என்றார்.

இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, “சின்ன ஊர்களில் இருந்து பெரிய கனவுகளோடு வரும் பலருக்கும் சிவா சார்தான் இன்ஸ்பிரேஷன். ரூரல் எண்டர்டெயினர் திரைப்படம் வந்து ரொம்ப நாள் ஆகிருச்சு. அதை ஸ்பேசை இயக்குநர் சிவா சரியாக பயன்படுத்தி இருக்கிறார். படம் பார்த்தபோது ராதிகா மேம் இன்னொரு லேடி கமல்ஹாசனாகதான் தெரிந்தார். நிச்சயம் படக்குழுவினருக்கு தேசிய விருது கிடைக்கும். குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக இது அமைய வாழ்த்துக்கள்”.

இயக்குநர் சிவகுமார் முருகேசன், “என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள் சுதன், சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி. ராதிகா மேம் முதலில் தயங்கினாலும் கதை மீது நம்பிக்கை வைத்து சின்சியராக நடித்துக் கொடுத்தார். என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த என் குழுவினருக்கு நன்றி. பசியும் பட்டினியும் ஒன்று போல தெரிந்தாலும் அதற்கு நடுவில் ஒரு கோடு இருக்கிறது. ’தாய் கிழவி’ எனும் ராஜ விருந்து கொடுத்ததோடு ‘சேயோன்’ எனும் நெல் கட்டையும் அடுத்து எனக்கு கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். நிச்சயம் நல்ல விளைச்சல் காட்டுவேன். நன்றி”.

நடிகர் சூரி, “இந்தப் படத்தின் காட்சிகள் அனைத்தையும் நாமும் எதிர்கொண்டிருப்போம். படம் முழுக்க நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்கள். ஒரு பெண் தனக்கான உரிமையை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என பன்ச் டயலாக் பேசாமல் காட்சிகள் மூலம் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். இந்தப் படம் பார்க்கும்போது என் அம்மா நியாபகம் வந்தது. யாருமே தவற விடக்கூடாத படம் இது. பெரிய விஷயத்தை அசால்டாக படத்தில் கொண்டு வந்திருக்கிறார் சிவா. நாற்பது வருடங்களுக்கு மேலான தனது அனுபவத்தை இந்தப் படத்தில் சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார் ராதிகா மேம். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ‘நான் நடிக்கிற படங்களில் எல்லாமும் திணிக்க முடியாது. ஆனால், நான் தயாரிக்கிற படங்கள் இந்த சமூகத்திற்கு தேவையானதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்’ என தம்பி சிவகார்த்திகேயன் சொல்வார். அதைத்தான் எல்லா படங்களிலும் செய்து வருகிறார். அவருக்கும் வாழ்த்துக்கள்”.

நடிகை ஸ்ரீபிரியா, “படத்தின் முன்னோட்டம் மட்டும்தான் பார்த்தேன். அதை பார்த்துவிட்டு ராதிகாவிடம் படத்தின் நிகழ்வுக்கு நான் வர வேண்டும் என்று கேட்டேன். ஏனெனில், என் ராதிகாவை பலரும் புகழ்ந்து பேசுவதை நான் கேட்க வேண்டும். இந்தப் படத்தில் ராதிகாவின் அப்பாவை பார்த்தேன். ராதிகாவின் அம்மா இருந்திருந்தால் இந்தப் படம் பார்த்து எவ்வளவு மகிழ்ந்திருப்பாரோ அதே சந்தோஷம் எனக்கும் இருக்கிறது. ராதிகாவின் நடிப்பை பார்த்து கமல் வியந்துபோய் பாராட்டினார். ராதிகாவுக்கு தேசிய அளவில் நடிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு. இந்தப் படம் அந்த குறையை நீக்கும் என நம்புகிறேன்”.

நடிகை ராதிகா, “எல்லோருடைய அன்பு, நம்பிக்கை, ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான் 48 வருடங்கள் கடந்தும் என்னை சினிமாவில் நிலைக்க வைத்திருக்கிறது. இத்தனை வருடங்களில் நல்ல நடிகராக மட்டுமில்லாமல் நல்ல மனிதனாகவும் சிவகார்த்திகேயன் வளர்ந்திருக்கிறார். சினிமாவிற்குள் வர உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். ஆனால், நீடித்து நிலைக்க உங்கள் உழைப்பு முக்கியம். என் சினிமா கரியரில் இன்னொரு திருப்புமுனை கொடுத்த சிவகார்த்திகேயன், சிவகுமார் இருவருக்கும் நன்றி. உண்மையில் இந்த கதை ரஜினிகாந்த் நடிக்க வேண்டியது. அவர் இந்த வேஷம் போட்டு நடிக்க மாட்டார். அதனால், இந்த கதாபாத்திரத்தை பெண்ணாக மாற்றி என்னை நடிக்க வைத்திருக்கிறார்கள். அப்படிதான் நான் இதை பார்க்கிறேன். 4 மணி நேரம் ஹெவியான மேக்கப் போட்டு நடிக்க எனக்கு இன்ஸ்பிரேஷன் கமல்ஹாசன்தான். ’உன்னை தாண்டி அந்த கதாபாத்திரம்தான் திரையில் தெரிய வேண்டும்’ என்று கமல் என்றோ சொன்னது என் மனதில் ஒட்டிக்கொண்டது. அதைத்தான் இதில் செய்திருக்கிறேன். அதிகம் பேசாமல் அமைதியாக இருக்கும் சிவகுமார் முருகேசனிடம் ஒரு ஃபயர் இருக்கிறது. அதை சிவகார்த்திகேயன் சரியாக கண்டுபிடித்திருக்கிறார். வலியை உணர்ந்த பெண் சொல்கிற கதைதான் ‘தாய் கிழவி’. பெண்களாகிய நம்மை பற்றி யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் உங்கள் இலக்கை நோக்கி பயணியுங்கள். எல்லா துறையில் இருக்கும் பெண்களும் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.

என்னை அறிமுகப்படுத்திய குருநாதர் பாரதிராஜா சார் ‘தாய் கிழவி’யாக நான் நடித்திருப்பதை அவரால் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு நிறைய இருக்கிறது. சீக்கிரம் அவர் உடல்நலன் தேறி வந்து இந்தப் படம் பார்க்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன். என்னை நடிகையாக்கிய என் அம்மா இந்தப் படத்தை பார்க்கவில்லையே என்ற வருத்தம் உண்டு. பெண் எம்.ஆர். ராதாவாக தான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். நான் சினிமாவிற்குள் வந்தபோது என்னை அவமானப்படுத்தியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் இன்று பதில் சொல்கிறேன். நான் எம்.ஆர். ராதா மகள் என்று! வாய்ப்பிற்கு நன்றி”.

நடிகர் சிவகார்த்திகேயன், “’தாய் கிழவி’ படக்குழுவினர் அனைவருக்கும் வணக்கம். அடுத்து தலைவர் படம் இயக்க இருக்கும் சிபிக்கும் வணக்கம். நாம் இருவரும் சேர்ந்து சுதனுடன் படம் செய்யவதாக இருந்தது. நீ மட்டும் இப்போது எஸ்கேப். சினிமாவில் சின்ன கதாபாத்திரத்தில் ஆரம்பித்து மக்கள் என்னை ஹீரோவாக ஏற்றுக்கொண்டார்கள். சினிமாவில் வெற்றி பார்த்து பின்பு என் குடும்பம் நன்றாக இருந்தது. இருந்தாலும் என்னுடைய நண்பர்களுக்கும் எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. என்னைவிட சினிமாவில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவன் அருண்ராஜா. அவர் சொன்னதுபோல, அவருக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ். கனவோடு திருச்சியில் இருந்து வந்தவர்கள் சேர்ந்து ‘கனா’ என்ற படத்தை எடுத்தோம். பின்பு ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘டாக்டர்’, ‘டான்’, ‘கொட்டுக்காளி’, ‘குரங்கு பெடல்’ என பல படங்கள் தயாரித்தோம். ’கொட்டுக்காளி’ படத்தின் வெற்றி எனக்கு நிறைவாக இருக்கிறது. ’தாய் கிழவி’ கதை கேட்டதுமே சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்.

’தாய் கிழவி’ பார்த்துவிட்டு இந்தப் படத்தில் நிறைய நட்சத்திரங்களை உருவாக்கி இருக்கிறீர்கள் என கமல் சார் சிவகுமாரிடம் சொன்னார். ’தாய் கிழவி’ கதாபாத்திரத்தில் நடிக்க ராதிகா மேம் தவிர வேறு ஆள் கிடையாது என்பதை படம் பார்த்துவிட்டு அனைவரும் சொல்வார்கள். ’சேயோன்’ படத்திற்கு அடுத்தும் மீண்டும் நான் சிவாவுடன் தான் படம் செய்ய இருக்கிறேன். எனக்கு பேரும் புகழும் கொடுத்த இந்தத் துறைக்கு நான் திரும்ப எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் படங்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறேனே தவிர யாருக்கும் போட்டியாகவோ யாரையும் தாண்டி வர வேண்டும் என்ற எண்ணத்திலோ இல்லை. நான் நடிக்கும் படங்களின் வெற்றி, தோல்விக்கு நானும் பொறுப்பு என்பதை உணர்ந்தே செயல்படுகிறேன்.

மக்கள் ஆரம்பத்தில் இருந்தே எனக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். ஆனால், இண்டஸ்ட்ரியில் இருக்கும் சிலர் தடை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அதையும் தாண்டி வர நான் ரெடி. ’தாய் கிழவி’ படத்தை வரும் 27ஆம் தேதி குடும்பத்தோடு சென்று திரையரங்குகளில் பாருங்கள். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்” என்றார்.

Actor-Producer A.L. Udhaya expresses heartfelt thanks to voters in the Producers Council election

0

Actor-Producer A.L. Udhaya has conveyed his sincere gratitude to all those who voted for him in the Tamil Film Producers Council elections, in which he contested as an independent candidate for the post of Vice President.

He also extended his warm congratulations to the team led by G.K.M. Tamil Kumaran, who emerged victorious in the election.

Speaking about this, Udhaya said: “In the just concluded Tamil Film Producers Council election, I contested independently for the post of Vice President without aligning with any team. I sincerely thank all the council members who did not see me only as an actor, but also recognised me as a producer and supported me with more than 230 votes. I am forever indebted to your love and support.

I will always stand in support of the growth of the Producers Council and the welfare of its members. I extend my heartfelt congratulations to the team led by Mr. G.K.M. Tamil Kumaran, who won the election. I believe the new office-bearers will take the necessary initiatives for the growth of the Tamil film industry.

Once again, I extend my congratulations to Mr. Tamil Kumaran, Mr. Radhakrishnan, Mr. Kathiresan, Mr. Subash Chandra Bose, Mr. R.K. Suresh, Mr. Kamalakannan, Mrs. Sujatha Vijayakumar and all the others. I am confident that many positive developments will take place for the Producers Council during their tenure.”

Regards,
A.L. Udhaya

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தனக்கு வாக்களித்தவர்களுக்கு நடிகர்-தயாரிப்பாளர் ஏ.எல். உதயா மனமார்ந்த நன்றி

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தனக்கு வாக்களித்தவர்களுக்கு நடிகர்-தயாரிப்பாளர் ஏ.எல். உதயா மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலில் வெற்றி பெற்ற ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையிலான அணியினருக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “நடந்து முடிந்துள்ள திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் எந்த அணியையும் சாராமல் துணைத் தலைவர் பதவிக்கு சுயேச்சையாக நான் போட்டியிட்டேன். என்னை ஒரு நடிகராக மட்டுமே பார்க்காமல் தயாரிப்பாளராகவும் அங்கீகரித்து 230 வாக்குகளுக்கு மேல் அளித்த சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் என்றும் நான் கடமைப் பட்டுள்ளேன்.

தயாரிப்பாளர்கள் சங்க வளர்ச்சிக்காகவும், உறுப்பினர்களின் நலனுக்காகவும் என்றும் நான் துணை நிற்பேன். தேர்தலில் வெற்றி பெற்ற ஜி.கே.எம். தமிழ்க்குமரன் அவர்கள் தலைமையிலான அணியினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய நிர்வாகிகள் தமிழ் திரையுலகின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என நான் நம்புகிறேன்.

வெற்றி பெற்ற தமிழ்க்குமரன் அவர்கள், ராதாகிருஷ்ணன் அவர்கள், கதிரேசன் அவர்கள், சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், ஆர். கே. சுரேஷ் அவர்கள், கமலக்கண்ணன் அவர்கள், சுஜாதா விஜயகுமார் அவர்கள் உள்ளிட்ட அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களின் காலத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நிறைய நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்,” என்றார்.

அன்புடன்,
ஏ.எல். உதயா

- Advertisement -

Recent Posts