- Advertisement -
Home Blog Page 37

மை டியர் டாலி படத்தின் வருமானத்தின் ஒரு பகுதியை புற்றுநோய் குழந்தைகளின் சிகிச்சைக்கு வழங்குவோம் – தயாரிப்பாளர் எம்.ஜே‌.சிவராமகிருஷ்ணா அறிவிப்பு

0

வி.ஜே.பப்பு மற்றும் அனுபமா இணைந்து நடித்துள்ள திரைப்படம் “மை டியர் டாலி”. அரவிந்த் ராஜ் எழுதி, இயக்கி இருக்கும் இந்தத் திரைப்படத்தை சிம்ம மூர்த்தி சினிமாஸ் சார்பில் ஜெயராமசந்திரன் மற்றும் சிவராமகிருஷ்ணா தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் கே.பி.ஒய். ராஜவேலு, சுதா, தாரா, கீர்த்தனா, ஆஷா, ராஜாமணி, பேபி தீக்ஷிதா, டொமினிக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

காதல் கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் மை டியர் டாலி திரைப்படம் உலகளவில் இன்று வெளியானது. இந்தப் படத்தில் இரத்த புற்றுநோய் பாதிப்பு குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்தப் படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளர் சிவராமகிருஷ்ணா படத்தின் வெளியீட்டை ஒட்டி புது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி மை டியர் டாலி திரைப்படத்தின் மொத்த வசூலில் ஒரு பகுதி இரத்த புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு வழங்குவதாக சிவராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார். இவரது இந்த அறிவிப்புக்கு திரைத்துறை கடந்து வரவேற்பும், பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. திரையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, படத்தின் வருவாயில் ஒருபங்கை புற்றுநோயை எதிர்த்து போராடும் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்வதாக தயாரிப்பாளர் சிவராமகிருஷ்ணா அறிவித்து இருப்பது மனிதம் மீதுள்ள நம்பிக்கையை பிரதிபலிப்பதோடு, மேலும் பலரை இப்படி செய்யவும் ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மை டியர் டாலி திரைப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை பாலாஜி கே சேகர் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சித்தார்த் மேற்கொண்டுள்ளார். எம். ஃபாஸில் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு நிர்வாக தயாரிப்பு பணிகளை ஆர்.திருமலை மேற்கொண்டுள்ளார்.

எம்.எம். ஸ்டூடியோஸ் தயாரிப்பில், வெற்றி நடிக்கும் “பிளாக் கோல்டு” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

0

எம்.எம். ஸ்டூடியோஸ் சார்பில் எம். மூர்த்தி தயாரிப்பில், “தீர்ப்புகள் விற்கப்படும்” மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தீரன் அருண்குமார் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
“எட்டு தோட்டாக்கள்”, “ஜீவி” படங்களின் நாயகன் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ள ஆக்சன் திரில்லர் திரைப்படமான “பிளாக் கோல்டு” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

ஒரு இளைஞனுக்கும், நிழல் உலக வணிக மாபியாக்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டமே இப்படத்தின் மையக்கரு. நம் வாழ்வில் சாதாரணமாக கடந்து செல்லும் ஒரு விசயம், எப்படி உலக அளவிலான வணிகமாக மாறியது என்பதை இதுவரை கண்டிராத புதுமையான கதைக்களத்தில் தயாராகி உள்ளது. அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தில் நாயகனாக வெற்றி நடிக்க, பிரியாலயா நாயகியாக நடித்துள்ளார். தயாரிப்பாளர் எம். மூர்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, லிவிங்ஸ்டன், துளசி, பிக்பாஸ் அபிராமி, A. வெங்கடேஷ், அருள் D. சங்கர், விஜய் டிவி ராமர்,ஜீவா ரவி, அஜித் விக்னேஷ், கராத்தே வெங்கடேஷ், ஜப்பான் குமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் முழு படப்பிடிப்பும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், விரைவில் படத்தின் டிரெய்லரும் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பக் குழு விவரங்கள்
தயாரிப்பு : எம். மூர்த்தி – எம்.எம். ஸ்டூடியோஸ்
எழுத்து இயக்கம் : தீரன் அருண்குமார்
ஒளிப்பதிவு : சந்தோஷ் குமார் வீராசாமி
இசை : கவாஸ்கர் அவிநாஷ்
பாடல் வரிகள் : மோகன் ராஜன்
எடிட்டிங் : தினேஷ்குமார்
ஆர்ட் : C.S. பாலசந்தர்
சண்டைப்பயிற்சி : “மெட்ரோ” மகேஷ்
தயாரிப்பு மேற்பார்வை : V.கலைசங்கர்
புரடக்சன் கண்ட்ரோலர் : M சிவக்குமார்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)

Red Giant Movies Brings Rajinikanth and Kamal Haasan Together After 47 Years for ‘KHxRK’

0

Indian cinema is set to witness a historic moment as two of its most iconic legends — Rajinikanth and Kamal Haasan — reunite after 47 years for a prestigious, once-in-a-lifetime cinematic collaboration, tentatively titled “KHxRK”

The two screen icons last worked together in the late 1970s, and their reunion marks one of the most significant events in contemporary Indian film history. Their coming together represents the convergence of two extraordinary legacies that have shaped generations of audiences across India and globally.

The project is being produced by Red Giant Movies, who have successfully brought these two cinematic giants together for this landmark collaboration. The production house has envisioned this film as a celebration of scale, legacy, and storytelling at its finest.

Sharing their thoughts, a spokesperson from Red Giant Movies said:

“Bringing together Rajinikanth sir and Kamal Haasan sir for this film is truly a dream come true for all of us at Red Giant Movies. We feel deeply honoured, grateful, and incredibly excited to facilitate this reunion after 47 years. This is a historic and emotional moment for Indian cinema, and we embark on this journey with immense gratitude and responsibility. We are committed to creating a cinematic experience that celebrates their legacy in the most powerful way.”

The film will be helmed by acclaimed director Nelson Dilipkumar, who delivered the blockbuster success Jailer and has established himself as one of the most dynamic commercial filmmakers in the country. Music for the film will be composed by Anirudh Ravichander, whose powerful soundscapes have consistently elevated large-scale cinematic experiences.

Further details regarding the film remain under wraps and will be announced in due course.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் 47 ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ‘KHxRK’

இந்திய திரையுலகம் மறக்க முடியாத வரலாற்று தருணத்தை காணத் தயாராகிறது. இந்திய சினிமாவின் இரு பெரும் நாயகர்கள் — ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் — 47 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரே படத்தில் இணைகின்றனர். தற்காலிகமாக “KHxRK” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மாபெரும் திரைப்படம், ரசிகர்களுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் சிறப்பான திரை அனுபவமாக அமையும்.

1970களின் இறுதியில் கடைசியாக இணைந்து நடித்த இந்த இரு திரை ஜாம்பவான்கள், தற்போது மீண்டும் இணைவது இந்திய திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. தலைமுறைகளை தாண்டி ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய இரண்டு அபாரமான கலைப் பயணங்கள், இத்திரைப்படத்தின் மூலம் ஒன்றாக சங்கமிக்கின்றன.

இந்த மாபெரும் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இந்த வரலாற்றுச் சந்திப்பை சாத்தியமாக்கியதில் பெருமை கொள்கின்ற தயாரிப்பு நிறுவனம், இந்தப் படத்தை அளவிலும், பாரம்பரியத்திலும், கதை சொல்லுதலிலும் உயர்ந்த தரத்தில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

“ரஜினிகாந்த் அவர்களையும் கமல்ஹாசன் அவர்களையும் 47 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே படத்தில் இணைப்பது எங்களுக்கெல்லாம் ஒரு கனவு நனவாகும் தருணம். இந்த வரலாற்று மற்றும் உணர்ச்சிமிகு தருணத்தை சாத்தியமாக்குவதில் எங்களுக்கு மிகுந்த பெருமையும் நன்றியும் உள்ளது. அவர்களின் அபாரமான பாரம்பரியத்தை சிறப்பிக்கும் வகையில் ஒரு வலுவான திரை அனுபவத்தை உருவாக்க எங்கள் முழு அர்ப்பணிப்புடன் இந்தப் பயணத்தை தொடங்குகிறோம்.”

இந்த திரைப்படத்தை ‘ஜெயிலர்’ வெற்றிப் படத்தை வழங்கிய புகழ்பெற்ற இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். படத்தின் இசையை இன்றைய தலைமுறையின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தர் அமைக்கிறார். அவரது இசை வடிவங்கள், பிரம்மாண்டமான திரைப்படங்களுக்கு தொடர்ந்து சிறப்பூட்டிவருகின்றன.

படம் குறித்த மேலும் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் ராஜகணபதி தயாரிப்பில் உருவாகியுள்ள ஏ படம் பிப்ரவரி 27 அன்று திரைக்கு வருகிறது…

0

பிப்ரவரி 27 வெளியாகும் ஏ படம்

ஏ படம் என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் தொல் திருமாவளவன்

மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் ராஜகணபதி தயாரிப்பில் கேஷ்லெஸ் ஷிவாகோ இயக்கத்தில் ஜோஸ் பிராங்கிளின் இசையில் சதீஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள திரைப்படம் ஏ படம்..

இப்படம் விவசாய புரட்சியையும், கார்ப்பரேட்டின் விவசாய மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறது என்ற மையக்கருத்தையும் மிக அழுத்தமாக பதிவு செய்துள்ள திரைப்படம்தான் இந்த ஏ படம்

இப்படத்தில் ராஜகணபதி கதையின் நாயகனாக நடித்துள்ளார் கதாநாயகியாக மேகா ஸ்ரீ இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் சந்திர போஸ், இயக்குனர் கேஷ்லெஸ் ஷிவாகோ, மஸ்காரா அஸ்மிதா, சுஷ்மிதா
ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஏலகிரி மற்றும் ஏற்காடு பகுதியில் நடைபெற்று முடிவடைந்துள்ளது…

இப்படத்தை பற்றி தயாரிப்பாளர் ராஜ கணபதி கூறுகையில்

நாங்கள் திரைப்படத்தை அழகாக எடுத்தோம் ஆனால் தணிக்கைச் சான்றிதழ் வாங்கும்போது தான் மிகவும் சிரமத்திற்கான சுமார் 45க்கும் மேற்பட்ட காட்சியில் வெட்டுகொடுத்தார்கள்.. இதனால் நாங்கள் சுமார் 18 மாதங்கள் கோர்ட் வாசலில் அலைந்து மிக சிரமப்பட்டு தணிக்கை சான்றிதழ் பெற்றோம்.
ஒரு வழியாக இப்போது படம் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி திரைக்கு வருகிறது..

இப்படத்தில் நான் அம்பேத்கர் வேடத்தில் நடித்துள்ளேன்..

இந்த சமுதாயத்தில் நிலவும் அவலங்களை அம்பேத்கர் பேசுவது போல் பேசி நடிப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது..

இதன் ஃபர்ஸ்ட் லுக்கை விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டது மேலும் எங்களுக்கு மகிழ்ச்சி எங்களுடைய நல்ல படத்தை
அனைவரும் திரையில் பார்த்து எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்றார்..

‘Jockey’ produced by PK7 Studios and directed by Dr. Pragabhal successfully enters 4th week

0

Audience and media praise ‘Jockey’, first film to revolve around the traditional cultural sport of goat fight (keda sandai) that takes place in Madurai

Following the success and critical acclaim of ‘Muddy’, the first film in India based on the challenging mud racing sport conducted in rainforests, director Dr. Pragabhal’s next film titled ‘Jockey’ hit the screens on January 23.

Produced and presented by PK7 Studios, ‘Jockey’ is set in Madurai and the first movie to revolve around the traditional cultural sport of goat fighting (keda sandai), capturing the essence of the land and the character of its people. Audience, press, media and critics have heaped laurels on the film.

‘Jockey’ has entered its fourth week of release and is continuing its successful theatrical run. Speaking about this, director Dr. Pragabal said, “In today’s times, a film crossing some days itself is a very big achievement. ‘Jockey’ has been running successfully and people from various sections are continuously appreciating it. My heartfelt thanks to Tamil audiences who always support quality cinema, as well as journalists, press, and media professionals.”

Yuvan Krishna and Ridhaan Krishnas, who starred in director Dr. Pragabhal’s maiden movie ‘Muddy’, play key roles, while Ammu Abhirami plays the female lead. Several popular actors have played important characters.

The film features music by Sakthi Balaji, cinematography by Udhayakumar, and editing by Srikanth. R.P. Bala worked as the Creative Producer. Production Controller: S. Sivakumar, Art Director: C. Udhayakumar, Audiography: M.R. Rajakrishnan, Stunt Choreography: Jackie Prabhu, Costumes: Joshua Maxwell J, Makeup: Pandiyarajan, Colorist: Ranga.

‘Jockey’, produced by PK7 Studios and directed by Dr. Pragabhal, starring Yuvan Krishna, Ridhaan Krishnas, and Ammu Abhirami in lead roles, is successfully running for four weeks.

பிகே7 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் டாக்டர் பிரகபல் இயக்கத்தில் வெளியான‌ ‘ஜாக்கி’ திரைப்படம் நான்காவது வாரமாக வெற்றிநடை போடுகிறது

ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளியுள்ள ‘ஜாக்கி’ மதுரையில் நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக கொண்டு உருவான முதல் படம் என இயக்குநர் பெருமிதம்

மழைக்காடுகளில் நடத்தப்படும் சவாலான மட் (Mud) ரேஸ் பந்தயத்தை மையமாக வைத்து இந்தியாவில் முதல் முறையாக உருவான ‘மட்டி’ திரைப்படத்தை வெற்றிகரமாக இயக்கி பாராட்டுகளைப் பெற்ற டாக்டர் பிரகபல் இயக்கத்தில் அடுத்து உருவான திரைப்படம் ‘ஜாக்கி’. கடந்த ஜனவரி 23ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஜாக்கி’ நான்கு வாரங்களாக வெற்றிநடை போட்டு வருகிறது.

பிகே7 ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கியுள்ள‌ ‘ஜாக்கி’, மதுரையை களமாகக் கொண்டு நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக கொண்டு உருவான முதல் படம் ஆகும். மண் மணத்துடனும் மண்ணின் மைந்தர்களின் குணத்துடனும் இப்படம் திகழ்கிறது.

ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுகளை ஜாக்கி அள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேசிய இயக்குநர் டாக்டர் பிரகபல், “இன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் சில தினங்களை கடப்பது மிகப்பெரிய விஷயம். ஆனால் ‘ஜாக்கி’ நான்கு வாரங்களாக‌ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள். தரமான படங்களை என்றும் ஆதரிக்கும் தமிழ் ரசிகர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி,” என்றார்.

‘ஜாக்கி’ திரைப்படத்தில் இயக்குநர் டாக்டர் பிரகபல்லின் முதல் படமான ‘மட்டி’ திரைப்படத்தில் நடித்த யுவான் கிருஷ்ணா மற்றும் ரிதான் கிருஷ்ணாஸ் முக்கிய வேடங்களில் நடிக்க, அம்மு அபிராமி கதை நாயகியாக நடித்துள்ளார். திரைப் பிரபலங்கள் முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு சக்தி பாலாஜி இசையமைக்க, உதயகுமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஸ்ரீகாந்த் மேற்கொண்டார். கிரியேட்டிவ் ப்ரொடியூசராக ஆர்.பி. பாலா பணிபுரிந்துள்ளார். புரொடக்ஷன் கன்ட்ரோலர்: எஸ். சிவகுமார், கலை இயக்குநர்: சி. உதயக்குமார், ஆடியோகிராபி: எம்.ஆர். ராஜாகிருஷ்ணன், சண்டை பயிற்சி: ஜாக்கி பிரபு, உடைகள்: ஜோசுவா மேக்ஸ்வெல் ஜே, ஒப்பனை: பாண்டியராஜன், கலரிஸ்ட்: ரங்கா.

பிகே7 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் டாக்டர் பிரகபல் இயக்கத்தில் யுவான் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி முதன்மை வேடங்களில் நடித்துள்ள ‘ஜாக்கி’ தொடர்ந்து நான்கு வாரங்களாக திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

Official Announcement of the Grand “Indian National Cinema Academy (INCA) Awards 2026”

0

The Indian National Cinema Academy is set to host the prestigious INCA Awards 2026 in Mumbai on April 15 and 16, bringing together actors, technicians, and talented professionals from 12 Indian film industries onto a single grand platform.

With the Producers Guild of India serving as the Chief Supporting Partner, INCA stands as a credible and respected academy platform in the Indian film industry.

Applications are now open for films released across India in the year 2025.

For more details, visit: www.inca.in
Last date for submission: March 1, 2026.

இந்திய திரைத்துறையின் பிரம்மாண்ட ‘இந்தியன் நேஷனல் சினிமா அகாடெமி (INCA) விருதுகள் 2026’ அதிகாரப்பூர்வ அறிக்கை!

12 இந்திய திரைத்துறையை சார்ந்த நடிகர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் இதர திறமையாளர்களை ஒரே மேடையில் ஒருங்கிணைக்கும் வகையில் இந்தியன் நேஷனல் சினிமா அகாடெமி தனது ’INCA விருதுகள் 2026’ விழாவை மும்பையில் வரும் ஏப்ரல் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடத்த உள்ளது.

இந்த விழாவிற்கு இந்திய தயாரிப்பாளர்கள் சங்கம் (Producers Guild of India) தலைமை ஆதரவாளராக இணைந்துள்ளதன் மூலம் நம்பகமான மற்றும் மதிப்புமிக்க அகாடமி தளமாக INCA திகழ்கிறது.

கடந்த 2025ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியான திரைப்படங்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு www.inca.in என்ற இணையதளத்தை பார்வையிடவும். விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 1, 2026.

HAS JIOHOTSTAR TAMIL BEEN HACKED? MEET THE ‘CULPRIT’ – LUCKY THE SUPERSTAR!

0

For the past week, fans of JioHotstar Tamil were left stunned as the platform’s Instagram handle appeared to be “hacked.” Posts looked different. Paw-prints showed up everywhere. The tone was mischievous. The culprit even confessed in a video.

But this wasn’t a cybercrime.
It was a canine takeover.
The hacker?
A four-legged superstar named Lucky.
What began as a surprise takeover video—where Lucky boldly revealed himself as the one behind the “hack”—quickly turned into one of the most talked-about digital stunts of the week. Every subsequent post on the handle carried Lucky’s unmistakable paw-print, sending fans into a frenzy of speculation.

The takeover featured:
A dramatic page takeover announcement video
A playful PSA about dog vaccination
A paw-stamped birthday wish for SK
The much-awaited first look poster of ‘Resort’
All weekly Hotstar Specials promos — Lucky-approved and paw-verified
Social media buzzed with chatter. Was it a hack? A marketing gimmick? Who—or what—was Lucky planning next?
Now, the mystery is officially revealed.

The takeover is part of the promotional campaign for “Lucky”, the upcoming family entertainer starring GV Prakash Kumar and Anaswara Rajan, with voice performances by Kovai Sarala, Mottai Rajendran, and Thambi Ramaiah.
And Lucky himself had something to say:
“Hack the system? I just walked across the keyboard and the internet went wild. If you think my Instagram takeover was chaotic, wait until you see what I do to GV Prakash in the movie.

Stay tuned—the alpha has arrived.” — Lucky
Just like the Instagram chaos, Lucky promises fun, mischief, heart, and high-energy entertainment for audiences of all ages.
The film will be streaming exclusively on JioHotstar from February 20th.

With this playful digital disruption, JioHotstar Tamil once again proves that storytelling doesn’t just happen on screen — sometimes, it hijacks your feed first.
Stay tuned. Lucky may still be watching. 🐾

Streaming Details
Title: Lucky
Streaming From: February 20
Platform: JioHotstar

About JioHotstar
JioHotstar is India’s leading premium streaming platform, offering an expansive collection of blockbuster movies, original series, live sports, and entertainment across multiple languages. With a mission to bring world-class storytelling to every screen, JioHotstar continues to redefine digital entertainment through innovation, inclusivity, and exceptional content.

ஜியோஹாட்ஸ்டார் தமிழ் முடக்கப்பட்டதா? ‘குற்றவாளி’ யார் தெரியுமா…’லக்கி’ தி சூப்பர் ஸ்டார்!

கடந்த ஒரு வாரமாக ஜியோஹாட்ஸ்டார் தமிழின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இன்ஸ்டாகிராம் பதிவுகள் வழக்கத்திற்கு மாறாக இருந்தன. எல்லா பதிவுகளிலும் குறும்பான நாயின் காலடி தடங்கள் பதிவாகி இருந்தன. இதற்கு காரணம் யார் என்று கேள்வி எழுந்தபோது குற்றவாளி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கும் ஒரு வீடியோ வெளியானது.

ஆனால் இது சைபர் குற்றம் கிடையாது. இது ஒரு டேக் ஓவர். அந்த ’ஹேக்கர்’ யார் தெரியுமா? நான்கு கால்கள் கொண்ட சூப்பர் ஸ்டார் ’லக்கி’ தான் அது! வீடியோவில் தான் ஹேக் செய்ததை லக்கி ஒப்புக்கொண்டதில் இருந்து இந்த வாரத்தில் அதிகம் பேசப்பட்ட வீடியோவாக இது மாறியது. தொடர்ந்து வெளியான அனைத்து பதிவுகளிலும் லக்கியின் குறும்பான காலடி பதிவுகள் இடம்பெற்றிருந்தது ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்படுத்தியது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தை அதிரடியாக முடக்கியது குறித்தான வீடியோ, நாய்களுக்கு தடுப்பூசி குறித்து பொது அறிவிப்பு, லக்கியின் காலடி சுவடுடன் எஸ்.கே.-வுக்கு பிறந்தநாள் வாழ்த்து, ’ரெசார்ட்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர், அனைத்து வாராந்திர ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் புரமோக்களை லக்கி ஒப்புதல் கொடுத்து தனது காலடி சுவட்டையும் அதில் பதித்தது போன்றவை லக்கியின் டேக் ஓவரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடம்பெற்றிருந்தவை ஆகும்.

உண்மையிலேயே இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டிருக்கிறதா அல்லது இது ஒரு மார்க்கெட்டிங் உத்தியா? அடுத்து லக்கி என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறது என பல்வேறு குழப்பங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்த கேள்விகளுக்கு இப்போது விடை கிடைத்துவிட்டது.

வெளியாகவிருக்கும் குடும்ப பொழுதுபோக்கு கதையான ’லக்கி’ திரைப்படத்தின் புரமோஷனின் ஒரு பகுதிதான் இந்த டேக் ஓவர். இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் அனஸ்வரா ராஜன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன் மற்றும் தம்பி ராமையா ஆகியோர் தங்கள் குரல் மூலம் நடித்துள்ளனர் (voice performances).

லக்கி இதுகுறித்து கூறியதாவது, “நான் சிஸ்டத்தை ஹேக் செஞ்சுட்டேனா? நான் கீபோர்ட்ல நடந்து போனதுதான் இப்படி வைரல் ஆகிருச்சு. இன்ஸ்டாகிராமை நான் டேக் ஓவர் செய்தது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்குன்னு நீங்க நினைச்சா, படத்துல ஜி.வி. பிரகாஷை என்னென்ன பண்ணப்போறேன்னு பார்க்க காத்திருங்க!”

இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட கலகலப்பையும் குறும்பையும் போலவே, ’லக்கி’ திரைப்படத்திலும் நகைச்சுவை, குறும்பு, உணர்வுப்பூர்வமான காட்சிகள் என அனைத்து வயதினருக்கும் ஏற்ற முழுமையான பொழுதுபோக்கு படமாக இது இருக்கும் என உறுதியளிக்கிறது.

பிப்ரவரி 20 முதல் பிரத்யேகமாக ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் ’லக்கி’ ஸ்ட்ரீம் ஆகும்.

இந்த விளையாட்டுத்தனமான டிஜிட்டல் ஹேக் மூலம், கதைசொல்லல் திரையில் மட்டுமல்ல, சில நேரங்களில் அது உங்கள் சமூகவலைதளங்களிலும் நடக்கலாம் என்பதை ஜியோஹாட்ஸ்டார் தமிழ் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. ‘லக்கி’யை நாளை முதல் காண தயாராகுங்கள்!

ஜியோஹாட்ஸ்டார் பற்றி:

ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. சிறப்பான கதைக்களங்கள், புதுமையான தொழில்நுட்பத்துடன் ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இசைஞானி இளையராஜா ஆசீர்வதித்துள்ள படம் ‘அந்தோனி’ : இயக்குநர் சீனு ராமசாமி பேச்சு!

0

இலங்கையின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில்
கயல் வின்சென்ட், டிஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன், ஷாமி நடித்துள்ளனர்.

சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் இயக்கி உள்ளனர்.ஒளிப்பதிவு ரிஷி செல்வம்,எடிட்டிங் சுரேஷ் ஏ பிரசாத் , கலை இயக்கம் கலா மோகன்.

தயாரிப்பு : கலைவளரி சகா. ரமணதாஸ், சுகந்தினி. இணைத் தயாரிப்பாளர்கள் : விஜய் பாலசிங்கம், ஸ்ரீஸ்கந்தராஜா, விக்கி.

மார்ச் மாதம் வெளியாக இருக்கும் இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

விழாவில் திருமதி அகிலா பாலுமகேந்திரா, இயக்குநர் சீனுராமசாமி, லெனின் பாரதி, ‘உலக சினிமா’ பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் இணைத்தயாரிப்பாளர் விக்கி பேசும்போது,

” இந்திய -இலங்கை கூட்டுத் தயாரிப்பில்1980 வரை பல படங்கள் வந்துள்ளன. போர் தொடங்குவதற்கு முன்பு கூட இதே சாலிகிராமத்தில் சிங்களப் படங்கள் கூட விழா நடத்தப்பட்டு வெளியாகி இருக்கின்றன.போர் தொடங்கிய பிறகு எந்த தமிழரின் நிறுவனமும் இந்தக் கூட்டுத் தயாரிப்பில் ஈடுபடவில்லை.டிஜிட்டல் காலத்திலாவது ஏதாவது செய்யலாமே என்கிற ஏக்கம் இருந்தது. ஜெனோசனும் சுகிர்தனும் இந்தப் பட முயற்சியில் வாய்ப்பைத் தேடிக் கொண்டு இருந்தார்கள். ரமணன் அவர்கள் தயாரிக்க வந்தார். பிறகு அவருடன் பலரும் சேர்ந்து தயாரிக்க முன்வந்தார்கள். போர் நினைவுக் கதைகளைப் படமாக எடுத்தது மாறி மறுவாழ்வுக் கதைகள் எடுக்கலாம் என்று,இயக்குநர்கள் விரும்பினார்கள். அப்படித்தான் இந்தப் படம் உருவாகி உள்ளது .பாலு மகேந்திரா சார் ஈழத்தில் எப்படியாவது ஒரு படம் எடுக்க வேண்டும் என்பதைக் கனவாக வைத்திருந்தார். அவரது அந்தக் கனவு நனவானதில் எனக்கு மகிழ்ச்சி. இது போரைத் தாண்டிய ஒரு கதை என்பது மகிழ்ச்சி.” என்றார்.

தயாரிப்பாளர் ரமணதாஸ் பேசும்போது,

” இலங்கை என்கிற நாட்டிலிருந்து உலகத் தரத்திற்கு ஒரு படம் கொடுக்க வேண்டும் என்பது நீண்ட காலம் ஏக்கமாக இருந்தது.சின்னச் சின்ன படைப்புகளைச் செய்து கொண்டிருந்தோம்.அன்புத் தம்பி சுகிர்தனின் கதையைக் கேட்ட போது அந்தப் படத்தை எடுத்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்தோம்.பல தமிழ் நாட்டு சினிமாவைப் பார்த்தே நாங்கள் வளர்ந்து வந்திருக்கிறோம். இப்படி ரத்தத்திலேயே கடத்தப்பட்ட சினிமா தான் தமிழ்நாட்டு சினிமா .உலக தரத்திற்கு ஒரு படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். தம்பி சுகிர்தன் ‘மழைக்கால இரவுகள்’ என்ற குறும்படத்தைக் காட்டினார். அதைப் பார்த்து இந்தப் படத்தைத் தயாரித்து இருக்கிறோம். ஈழத்திலிருந்து பெரும் பொருட் செலவிலே வருகிற படம் என்று இதைக் கூறலாம்.தமிழ்நாடு என்பது எங்கள் ரத்தத்தோடும் சதையோடும் கலந்து இருப்பதால் தமிழ்நாட்டு மக்கள் , எங்கள் கதைகளை எங்கள் ஜன்னல் வழியாகப் பார்க்காமல் வீட்டுக்குள் வந்து பார்க்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமாக இருக்கிறது. இப்படம் உங்களது சக உறவுகள் எப்படிப் புது இடத்தில் வாழ்கிறார்கள் என்பதைப் பார்ப்பதாகவே இருக்கும்.
இந்தப் படத்திற்கு
முதலீட்டாளர்களாகப் லண்டன்,சுவிஸ், பிரான்ஸ், நார்வே , இலங்கை போன்று பல்வேறு நாடுகளில் இருந்து எங்களுக்கு உதவி இருக்கிறார்கள்.இவ்வளவு பேர் சேர்ந்தா இந்தப் படத்தை எடுத்தீர்கள் என்று உங்களுக்கு வியப்பாக இருக்கும். போன வருடம் மார்ச் மாதம் 5 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம், இப்போது மூன்று மொழிகளில் தயாராகி இருக்கிறது.
இது பிரபஞ்சம் தந்திருக்கும் படம் .இதற்கு இளையராஜா அவர்கள் இசையமைத்திருப்பதற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்திற்கு அவரால்தான் இதற்கான இசையைக் கொடுக்க முடியும்.
ஆமாம் இளையராஜா அவர்கள் இதற்குள் வந்த பிறகு இது உலக சினிமாவிற்கான பயணத்தில் ஒரு கல் எடுத்து வைத்த உணர்வைத் தருகிறது .

இதில் தமிழகம் மட்டுமல்ல இலங்கை மட்டுமல்ல ஐரோப்பிய நாட்டுக் கலைஞர்களும் பங்கேற்று நடித்து இருக்கிறார்கள் .

அந்த அளவில் இது ஒரு பிரபஞ்சத்துக்கான படம் போல் அமைந்திருக்கிறது “என்றார்.

சிறப்பு விருந்தினராக வந்திருந்த இயக்குநர் சீனு ராமசாமி பேசும்போது,

” இந்த ‘அந்தோனி’ படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து நான் கண்கலங்கினேன் .

இந்த பட விழாவிற்காக என்னை அழைப்பதற்காக இந்த இளைஞர்கள் வந்து என்னிடம் பேசிய போது, எந்த ஊர் என்று கேட்டேன் இலங்கை என்றார்கள். அந்த ஒரே காரணத்திற்காகத் தான் இந்த விழாவிற்கு நான் வந்தேன். எனக்கு மற்றபடி இளையராஜா இசை என்பது மட்டும் தெரியும். தயாரிப்பாளர் யார் படத்தில் மற்றவர்கள் யார் என்று தெரியாது.

அழிக்கப்பட்ட ஒரு நாட்டிலிருந்து இரண்டு இளைஞர்கள் இப்போது படம் எடுப்பதற்காக வந்துள்ள, அந்த ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் நான் இங்கு வந்தேன்.

ட்ரெய்லரையும் பாடல்களையும் பார்த்தேன்.
இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்திருப்பது, அவர் இசை அமைத்தார் என்பதை விட அவர் ஆசிர்வதித்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.என் உள் ளுணர்வு அதைத்தான் கூறியது.இளையராஜா ஆசீர்வதித்த படம் என்றுதான் நான் இதைச் சொல்ல வேண்டும். இது ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஒரு நாடு சிதிலமடைந்த பிறகு, போர் முடிந்த பிறகு, அல்லது போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு எப்படி இருக்கும் ?வாழ்க்கை கேள்விக்குறியாகவே இருக்கும்.அந்த நாடு அழிவில் இருக்கும். போர் முடிவுக்குப் பிறகு அந்த நாட்டில் வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு தனியனின் இருப்பு எப்படி இருக்கும்? எல்லாமே கேள்விக்குறிதான். எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் எதற்காக வேண்டுமானாலும் கேள்வி கேட்பார் இன்றிக் கைது செய்யப்படலாம். அப்படி ஓர் அச்சம் எப்போதும் இருக்கும். அப்படிப்பட்ட மண்ணிலிருந்து வந்த இளைஞர்களின் நினைவுகளில் குண்டு விழுந்த சத்தம் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும். இதை யாரும் மறுக்க முடியுமா?
உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அதிகாரத்தின் மூலம் அடக்குமுறையைச் சந்தித்து வருகிற மக்களின் கலை வடிவமாகத்தான் அந்தோனியை நான் பார்க்கிறேன்.
அப்படிப்பட்ட நாட்டில் இருந்து இங்கு வந்திருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகள் மீது ஏன் இன்னும் தடையை நீக்கவில்லை? விடுதலைப் புலிகள் தான் இல்லை என்று தெரிந்து விட்டதே.
புலிகள் யாரும் உயிரோடு இல்லை என்ற பிறகும் ஏன் அந்தத் தடையை நீக்காமல் இருக்கிறார்கள்?நான் இதற்கு முன்பு சொன்னேன் அல்லவா? யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் அதற்காகத்தான்.அதனால்தான் நீக்காமல் இருக்கிறார்கள்.
நான் யாரோடும் உடன்பட்டோ முரண்பட்டோ இங்கே இதைப் பேசவில்லை.என்னுடைய கருத்தை நான் சொல்கிறேன்.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளரை நான் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.அந்தக் கடலையும் அந்த அலையையும் அந்த வாழ்க்கையையும் தத்ரூபமாக நம் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார்.

இந்தப் படத்தில் நடித்த கயல் வின்சென்ட் இனி அந்தோனி வின்சென்ட் என்று அழைக்கப்படுவார்.அந்த அளவிற்கு அவர் நடித்துள்ளார்.

நான் வின்சென்டிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.நீ இவ்வளவு சிறந்த நடிகன் என்று எனக்குத் தெரியாமல் போய்விட்டது.என்னை மன்னித்துவிடு. நான் சந்திக்க வேண்டும் என்று எனக்குத் தேவைப்படும் போது எங்காவது வெளிநாட்டில் இருப்பாய். நடிக்க வைக்க முடியாமல் போய்விட்டது .

வின்சென்ட் இதில் ஒரு முழுமையான நடிகனாக வெளிப்பட்டுள்ளார்.

நவயுக இலங்கை சினிமாவில் இருந்து ஒரு புது சக்தியாக வந்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். எல்லாம் நேர்த்தியாக இருக்கிறது.

இந்த அந்தோனியில் ஒரு தோணி இருக்கிறது. அதனால் கண்டிப்பாக கரை சேரும். எப்போது படம் பார்க்கப் போகிறோம் என்று ஆர்வமாக இருக்கிறது .

ஒரு திரைப்படம் என்பது மறப்பதற்கு அல்ல, நினைப்பதற்கு என்று உருவாகி உள்ளது .

எதையோ ஒன்றை மறைப்பதற்கு எதையோ ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பேசினாலும் காசு, பார்த்தாலும் காசு, தாகம் வந்து தண்ணீர் குடித்தாலும் காசு, கழிப்பறை சென்றாலும் காசு.
மனித வாழ்க்கையில் எல்லாமே பணம் சம்பந்தப்பட்டதாக ஆகிவிட்டது.

நீங்கள் பார்க்க வைக்கப்படுகிற உலகத்தில் இருக்கிறீர்கள்.
நீங்கள் கேட்க வைக்கப்படுகிற உலகத்தில் இருக்கிறீர்கள்.ஒட்டுமொத்த மனித வர்க்கத்தையே அபிப்ராயங்களை உருவாக்குவதும்,அபிப்ராயங்களை அழிப்பதும் , அதை வேடிக்கை பார்ப்பதும் என்று தான் வைத்திருக்கிறார்கள்.இதுதான் இன்றைய உலகம்.அப்படி இருக்கிற இன்றைய உலகத்தில் ஈழத்து மக்களின் வாழ்க்கையை உயிரோட்டமாக,போருக்குப் பின்னாலான வாழ்க்கையை அவர்களுக்குள் இருக்கும் பரிந்தவிப்பைக் காட்டுகிற இந்த ‘அந்தோனி’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடையும்.
எனக்கு ‘நீர்ப்பறவை’ கால கட்டம் நினைவுக்கு வந்தது.இந்தப் படத்தை ஊடகங்கள் சுமந்து கொண்டு போய் மக்களிடம் சேருங்கள். ஒவ்வொரு சிறிய படத்திற்கும் எழுத்தாளரும் பத்திரிகையாளரும் தான் துணை.வேறு யாருமே கிடையாது.தரமான படத்தை எடுத்திருக்கும் தயாரிப்பாளர் ரமணனுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே அம்மா அகிலா பாலு மகேந்திரா வந்து இருப்பது மகிழ்ச்சி.
அவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். அவர் இங்கே வந்திருப்பது பெருமை.
எனது ஒவ்வொரு படத்தையும் அவருக்குப் போட்டுக் காண்பிப்பேன். ஆனால் இடி முழக்கத்தை மட்டும் போட்டுக் காண்பிக்கவில்லை – அது கமர்சியலாக இருப்பதால் போட்டுக்காட்டவில்லை. விழாக்களுக்காக மட்டும் படம் எடுத்தால் நம் வாழ்க்கையில் விழா என்பதே இல்லாமல் போய்விடும். எனவே அதை கமர்சியலாக எடுத்துள்ளேன்”என்று கூறினார்.

இயக்குநர் லெனின் பாரதி பேசும்போது,

“இந்தக் கரையில் இருந்து கொண்டு அந்தக் கரையைப் பார்த்திருக்கிறோம். நாம் எடுக்கும் படங்களில் கடலின் இந்தக் கரையைத் தான் பார்த்து இருக்கிறோம். அந்தக் கரையைப் பார்க்கும் வகையில் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். தங்கள் மண் சார்ந்த படமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்து அதன் தாக்கத்தில் உருவாக்காமல் அவர்கள் தன்னிச்சையாக உருவாக்க வேண்டும். அப்படி ஒரு தன்னிச்சையான திரை உலகமாக இலங்கைத் தமிழ்த் திரையுலகம் உருவாக வேண்டும் .வளர வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர்களில் ஒருவரான
ஜெனோசன் ராஜேஷ்வர் பேசும்போது,

” நான் இங்கே இருப்பதை உணர்வு பூர்வமாக நினைக்கிறேன்.நான் பல ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இதே அரங்கில் கடைசி வரிசையில் நின்று கொண்டிருந்த அனுபவம் கொண்டவன் நான்.
தயாரிப்பாளர் முதலீடு செய்து உதவி கொண்டிருக்கிறார் என்றால் இந்த பிரபஞ்சம் கண்ணுக்குத் தெரியாமல் எவ்வளவோ உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறது.
சுகிர்தன் எடுத்த ‘மழைக்கால இரவுகள்’ குறும்படம் தயாரிப்பாளருக்குப் பிடித்துப் போய் இந்தப் படம் உருவாகி இருக்கிறது.இந்தப் படத்திற்காக பல அண்ணன்கள் தங்களை அறியாமலேயே உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.கேமராவை சொந்தமாக வாங்கிக் கொண்டு போய்தான் இலங்கையில் படப்பிடிப்பு நடத்தினோம். நாங்கள் நினைத்தபடியே படத்தை எடுத்திருக்கிறோம்.

வழக்கமான படமாக இல்லாமல் ஒரு நல்ல படத்தை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதை எடுத்திருக்கிறோம். இது ஒரு கடலோரக் காதல் காவியம்.
இது இலங்கை மண் சார்ந்த ஒரு காதல் கதை.அனைத்து சமூகத்தினரும் பார்க்க வேண்டும், ஆதரிக்க வேண்டும். அனைவரும் ஊக்கமளித்து வெற்றி பெற வைக்க வேண்டும்” என்றார்.

இன்னொரு இயக்குநர்
சுகிர்தன் கிறிஸ்துராஜா பேசும்போது,

“நல்ல மழை பெய்து எந்தன் காடு இங்கு கனிந்தது.நான் நினைத்த எண்ணம் கல்வெட்டாக வளர்ந்தது.கொம்புத்தேனை பார்த்து நின்றேன் கையில் வந்து விழுந்தது. கூட்டத்தோடு நின்ற என்னை கொஞ்சும் அன்னம் அழைத்தது,என்ற மாதிரியான நிகழ்வு எனக்கு.

ஒரு படத்தில் சொல்லி இருப்பார்கள் ‘காதலும் கடலும் எப்போது பார்த்தாலும் சலிக்காது’ என்று.எங்கள் ஊரில் உள்ள காதலையும் கடலையும் இந்தப் படத்தில் காட்டி இருக்கிறோம். இந்தப் படம் எப்படி ஒரு அனுபவமாக இருக்கும் என்றால்,

காசு செலவழித்து இலங்கை வரத் தேவையில்லை. இந்த படத்திற்கு ஒரு டிக்கெட் எடுங்கள் ,யாழ்ப்பாணம் நகரத்தில் இறங்கி அழகான கிராமத்தில் ஒரு பஸ்ஸில் போகும்போது இளையராஜா பாடல்களை கேட்டுக் கொண்டு காற்று வீசும் ஜன்னல் ஓரம் அமர்ந்து இருக்கும்போது ஏற்படும் உணர்வை இந்தப் படம் கொடுக்கும்’ என்றார்.

‘உலக சினிமா’ பாஸ்கரன் பேசும்போது,

” நான் உலகத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு படங்களைப் பார்ப்பவன். அதே உலகத் தரத்தோடு இந்த ‘அந்தோனி’ திரைப்படம் இருப்பதைப் பார்த்தேன்.
இந்த இயக்குநர்கள் இருவரும் கிருஷ்ணன் -பஞ்சு, தேவராஜ் – மோகன் போல வெற்றிகரமாக விளங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இந்தப் படத்தின் கதாநாயகன் வின்சென்ட் என் ராசாவின் மனசிலே ராஜ்கிரண் போல இருந்தார். கதாநாயகி உதிரிப்பூக்கள் அஸ்வினி போல ஒரு மோனாலிசா தன்மையுடன் இருந்தார்.இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

கதையின் நாயகனாக நடித்துள்ள ‘கயல்’ வின்சென்ட் பேசும்போது,

“நான் முதல் படமாக நடித்திருக்க வேண்டிய படம் ‘நீர்ப்பறவை’. அதில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதன் பிறகு என் குரு நாதர் பிரபு சாலமன் ‘கயல்’ படத்தில் அறிமுகப்படுத்தினார். இந்தப் படத்தில் கதாநாயகனாக இல்லாமல் கதை நாயகனாக நடித்திருக்கிறேன்.இது எனக்கு முக்கியமான படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இந்தப் படத்தின் நாயகி டிஜே பானு 50 லட்சம் ரூபாய் கொடுத்து தெலுங்குப் படத்தில் அழைத்தபோது அதை மறுத்துவிட்டு இங்கே வந்திருக்கிறார். அவர் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது” என்றார்.

இவ்விழாவில் ‘அந்தோனி’ படக் குழுவினரும் நண்பர்களும் கலந்து கொண்டனர்.

“மை லார்ட்” பட நன்றி அறிவிப்பு விழா !

0

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ ( My Lord) திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது

சமூக அக்கறை மிக்க ஒரு படைப்பாகவும், ரசிகர்களை ரசிக்க வைத்த படைப்பாகவும் பார்வையாளர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த இப்படம் திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இன்று படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வினில்…

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,

மறுபடியும் நன்றி சொல்ல வந்திருக்கிறேன் இம்முறை மை லார்ட் படத்திற்காக….
சில படங்கள்…நாம் ஒரு பணி எடுத்திருக்கிறோம் ,நாம் அதை நன்றாக செய்ய வேண்டும் என தோன்றும். ஒரு சில படங்கள் மட்டுமே இது வெறும் படம் கிடையாது ஒரு இசையமைப்பாளராகவும் சரி ஒரு மனிதனாகவும் இது நமக்கு ஒரு பெரிய பொறுப்பு… இதில் வேலையை மட்டும் முடித்தால் பத்தாது, இதை நாம் பதிவாகவும் அமைக்க வேண்டும் என்பது இரு பொறுப்புகள் ஆகிவிடும். எப்போதுமே ராஜூ முருகன் சார் எனக்கு பாட்டு எழுதும் போதோ இல்லை அவரோட படத்துக்கு நான் இசையமைக்கும்போதோ அந்தப் பொறுப்பை நான் உணர்ந்திருக்கிறேன்.

அவர் ஒரு ஸ்பெஷலான கிரியேட்டர், மை லார்ட் படத்துல ஒரு புதுவிதமான சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.

அவருக்கே உரித்தான பொலிட்டிக்கல் satire ஐ ரொம்ப ஜனரஞ்சகமாக எல்லோரும் ரசிக்கும்படி கொண்டு வந்தது சர்ப்ரைசிங்கா இருந்தது.மை லார்ட் படத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி.டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்குப் பிறகு இந்த படம் தொடர்ச்சியாக சசி சாருடன் வெற்றியில் பங்கேற்பது ஒரு ஸ்பெஷலான தருணமாய் உணர்கிறேன்.

அம்பேத் சாருடன் நேரில் சந்தித்து பேசியதை விட போனில் பேசியது தான் அதிகம்…
இந்தப் படம் சமூகத்துக்கு ஒரு நல்ல விஷயத்தை செய்யக்கூடிய படம் . இந்தப் படத்தை நான் எடுத்து பண்றேன்னு அவர் எடுத்த அந்த முயற்சி இன்று வெற்றி என்ற புள்ளியில் வந்து நின்றதற்கு அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சத்யராஜ் சாருக்கு மை லார்ட் படம் கண்டிப்பாக ஒரு மைல்கல்லாக இருக்கும் என நம்புகிறேன். சத்யராஜ் சார் மியூசிக் ல சில இன்புட்ஸ் கொடுத்தாரு. படங்களின் கலெக்ஷனை நாம் கம்பேர் பண்ணலாம் ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே காலத்தைத் தாண்டி மனதில் நிற்கும். அப்படிப்பட்ட ஒரு படமாக மை லார்ட் இருக்கும். இப்படத்தில் வேலை செய்த இசை கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.நல்ல படங்களுக்கு ஒரு பலமாக இருந்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ரொம்ப நன்றி

தயாரிப்பாளர் அம்பேத்குமார் பேசியதாவது..,

படம் வெளியாகி இவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் ‘தேங்க்ஸ் மீட் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்று சொல்லி, எனக்கு ஒரு பெரிய ஊக்கமும் ஆக்கமும் கொடுத்தவர் சசிகுமார் சார். இந்தப் படம் ரிலீஸுக்கு முன்னாலிருந்து இன்று வரைக்கும், ‘இந்த படத்தை மக்களிடம் எப்படியாவது கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்தோடு தொடர்ந்து உழைத்து வருகிற இந்த மாதிரியான ஹீரோவை, உண்மையிலேயே நான் இதுவரை பார்த்ததே கிடையாது. அப்படிப்பட்ட ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல; மனிதநேயமும், மனிதாபிமானமும் நிறைந்த ஒரு அற்புதமான மனிதர் சசிகுமார் சாருக்கு என்னோட மனப்பூர்வமான நன்றிகள். அதேபோல், இந்த படத்தின் இயக்குநர்—என்னோட அருமையான நண்பர் ராஜுமுருகன் சாருக்கும் என் நன்றி. இந்த படத்தைப் பற்றி முன்வந்து பேசின வார்த்தைகளில் மட்டும் இல்லாமல், உள்ளத்திலேயே மனிதநேயத்தை சுமந்து பேசின—அருமையான நண்பர் ஷான் ரோல்டன் அவர்களுக்கும் என் நன்றிகள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பத்திரிகை நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், ‘மை லார்ட்’ ஒரு நல்ல படம், சிறந்த படம், பிரியமான படம் என்று மக்களிடம் தொடர்ந்து கொண்டு போய் சேர்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பத்திரிகை நண்பர்களுக்கும் என்னோட அன்பும், மரியாதையும், வணக்கமும். இப்படம் எனக்கு ஜிப்ஸியை விட இந்தப் படம் எனக்கு வெற்றி படம்தான்.நான் திருப்தியாக இருக்கிறேன்.எங்களுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் ராஜுமுருகன் பேசியதாவது..,

இந்த படத்தை சரியாகப் புரிந்து கொண்டு, அது உங்களுக்குள் ஏற்படுத்திய பாதிப்புகளை தொடர்ந்து எங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

‘மை லார்ட்’ படத்தை தொடங்குவதற்கு முதன்மையான காரணமாக இருந்த அம்பேத்கர் சாருக்கு என் சிறப்பு நன்றிகள். ஷான் —தொடர்ந்து ஒரு வாத்தியார் மாதிரி, பல விஷயங்களை என்னோடு பகிர்ந்து கொண்டு, என்னுடைய இசை பயணத்திலும் தொடர்ந்து உறுதுணையாக இருந்து வருவதற்காக அவருக்கும் என் நன்றிகள். எடிட்டர் சத்யராஜ் சார், நீரவ் ஷா சார், இந்த படத்தில் வேலை பார்த்த அத்தனை பேருக்கும் என் மனப்பூர்வமான நன்றி.நான் சினிமாவுக்கு வந்ததிலிருந்து இன்றுவரை, இந்த உலகம் ரொம்ப மாறியிருக்கிறது. ஒரு படத்தை எழுதத் தொடங்கும் இடத்தில் ஒரு எழுத்தாளரின் வேலை ஆரம்பிக்கிறது. ஷூட்டிங் நேரத்தில் இயக்குநரின் வேலை வருகிறது. அதற்குப் பிறகு ரிலீஸ், போஸ்ட்-புரடக்சன் என்று தொடர்கிறது. ஆனால் இன்றைக்கு, படம் ரிலீஸான பிறகும்—ப்ரமோஷன் வரைக்கும்—நிறைய விஷயங்களை நாமே கவனிக்க வேண்டிய ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. ஒரு ரைட்டிங்குக்கு எவ்வளவு உழைப்போ, ஒரு படத்தை உருவாக்க எவ்வளவு உழைப்போ, அதே அளவு உழைப்பை இன்றைக்கு அந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவும் கொடுக்க வேண்டியிருக்கிறது.நான் அடிப்படையில் ஒரு ஜர்னலிஸ்டாக இருந்ததால், முன்பெல்லாம் ப்ரமோஷன், இன்டர்வியூஸ் இதிலெல்லாம் அதிக ஆர்வம் காட்டியதே இல்லை. ஆனால் இப்போ அது ஒரு பெரிய சவாலாக மாறியிருக்கிறது

ஒரு படத்துக்கு எப்படி முழு மனசோடு வேலை செய்கிறோம், அதே தீவிரத்தோடு ப்ரமோஷனுக்கும் வேலை பண்ண வேண்டிய ஒரு சூழல் இன்றைக்கு உருவாகியிருக்கிறது. இது நல்லதா, கெட்டதா என்ற விவாதத்தை தாண்டி—இந்த உலகம் மாறிக்கிட்டே இருக்கிறது என்பதையும், அதுக்கேற்ற மாதிரி நாமும் மாற வேண்டியிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

நாம் படத்தில் எதைப் பற்றி பேசினாலும், அந்த படத்தை எடுத்துக் கொண்டு போய் ஆடியன்ஸிடம் சேர்ப்பது ஒரு மிகப் பெரிய வேலை. அந்த இடத்தில் உறுதுணையாக நிற்பது ஊடகங்களான நீங்கள் தான்.உங்களுடைய பாசிட்டிவான அணுகுமுறை, பாசிட்டிவான வார்த்தைகள் எப்போதுமே எனக்கு பெரிய ஊக்கமாக இருந்திருக்கிறது. அதற்காக உங்களுக்கெல்லாம் என் மனப்பூர்வமான நன்றி. இந்த படைப்பில் எப்போதும் கூடவே இருந்து துணைநின்ற ஜேம்ஸ் சார், திங்க் மியூசிக் சந்தோஷ் சார்,இந்த படம் உருவாகுவதற்கு உறுதுணையாக இருந்த இரா. சரவணன் உட்பட அத்தனை நண்பர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்.

நடிகர் சசிக்குமார் பேசியதாவது..,

இந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததற்கு முதலில் உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றி.என்னுடைய நடிப்பை எல்லாருமே பாராட்டியதை கேட்கும்போது எனக்கு உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என்னோட நடிப்பும், சைத்ரா நடிப்பும், அதுக்கப்புறம் குருசசோமசுந்தரம் உள்ளிட்ட பல சிறிய சிறிய கேரக்டர்ஸும் — முதல் காட்சியிலிருந்தே பாராட்டப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

ஒரு நடிகராக, என்னை இன்னொரு விதமாக அழகாக மாற்றிக் காட்டியிருக்கிறார் ராஜுமுருகன். அதுக்காக அவருக்கு நான் மனதார நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

தயாரிப்பாளர் அம்பேத்குமார் சார், எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என சொல்லக்கூடிய அவரது மனது தான் பெரிய விஷயம். ராஜு முருகன் கொடுத்து வைத்தவர். ஒரு நல்ல இயக்குநரும், ஒரு நல்ல தயாரிப்பாளரும் எப்போதும் தோற்றுப் போகக் கூடாது. எப்போதும் ஜெயிக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம்.

முதல் நாள் கலெக்ஷனை பார்த்துவிட்டு எல்லோருக்கும் கொஞ்சம் பயம் வந்தது, ஆனால் எனக்கு தைரியமாக இருந்தது. ஏனென்றால் எல்லாருமே படம் நல்ல படம் எனச் சொன்னார்கள். அது கண்டிப்பா மக்களிடம் இன்னும் போய் சேரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அது நடந்துள்ளது எனக்கு மகிழ்ச்சி. ‘அயோத்தி’படத்தில் நான் பார்த்த அனுபவம் தான் எனக்கு இந்த தைரியத்தை கொடுத்தது. அந்தப்படமும் இரண்டாவது, மூன்றாவது வாரத்தில் தான் கலெக்ஷனை எடுத்தது. அதே மாதிரி இந்தப் படமும் கண்டிப்பாக எடுக்கும் என்ற நம்பிக்கை மக்கள்மேல் இருக்கிறது. இப்படம் போய் சேர வேண்டிய இடத்திற்கு கண்டிப்பா போய்ச் சேரும். படம் பார்த்து விஜய் டிவி ரிலீஸுக்கு அப்புறம் வாங்கியதும், ஓடிடியிலும் வாங்கியதும்—இதெல்லாமே ஒரு பெரிய வெற்றிதான். அதே போல சூர்யா சார் படம் பார்த்து, இந்த படத்தை ப்ரெசென்ட் பண்ணுறோம் என சொன்னதுக்கும், அவருக்கும் அவரோட டீமுக்கும் என் மனப்பூர்வமான நன்றி.
சந்தோஷ், ஜேம்ஸ்—ஆரம்பத்திலிருந்தே கூடவே நின்ற எல்லாருக்கும் நன்றி. ஷான் மியூசிக் படம் முடிந்தும் மனதுக்குள் நின்றது. சத்யராஜ் எடிட்டிங் நன்றாக இருந்தது. இறுதியாக, எங்களை வாழ்த்திய, எங்களை பாராட்டிய அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”

மை லார்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது

இப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனித்துள்ளார். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை எம். ஷெரீப்பும், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட்டும் அமைத்துள்ளனர்.

Toxic: Yash Stands Firm in a Bloody Battlefield in New Poster; Teaser Out Feb 20

0

The makers of Toxic: A Fairytale for Grown-ups have unveiled a new poster announcing that the film’s teaser will be released on February 20 at 9:35 AM. The stark visual offers an early indication of the film’s dark tone, suggesting a world shaped by violence and moral ambiguity. It features Yash as Raya at the centre of a blood-streaked blizzard, his face obscured as he drinks straight from a bottle, surrounded by the wreckage of unseen violence in an intoxicating universe.

The teaser announcement comes as Toxic continues to be the most awaited film in India, driven by a phased rollout of character reveals and controlled marketing beats. With limited narrative details disclosed so far, the campaign has encouraged audience speculation around the film’s visual language and character dynamics, positioning February 20 as the first opportunity for an intimate  glimpse into the film’s world. To maintain the impact of the narrative, the teaser will be released in a single language, allowing the film’s stark imagery and atmosphere to speak to the audiences.

Part of that anticipation stems from the film’s carefully unveiled ensemble. Kiara Advani appears as Nadia, framed as restrained and emotionally weighted; Huma Qureshi is introduced as Elizabeth, commanding and lethal; Nayanthara emerges as Ganga, a character whose arrival recalibrates the film’s power equations. Tara Sutaria plays Rebecca, presented as desirable yet unreadable, while Rukmini Vasanth steps in as Mellisa, exuding controlled authority. The final character reveal was Yash as Raya, whose declaration – “Daddy’s home…” doubles as both an arrival in the narrative and a statement on his return to theatres.

Written by Yash and Geetu Mohandas and directed by Geetu Mohandas, Toxic: A Fairytale for Grown-Ups has been simultaneously shot in Kannada and English, with dubbed versions in Hindi, Telugu, Tamil, Malayalam, and several other languages, underscoring the film’s global ambition.

The film boasts a brilliant technical lineup, with National Award-winning cinematographer Rajeev Ravi behind the lens, music composed by Ravi Basrur, editing by Ujwal Kulkarni, and production design by TP Abid. The action is mounted on a massive scale, choreographed by Hollywood action director JJ Perry, alongside National Award-winning action directors Anbariv and Kecha Khamphakdee.

Produced by Venkat K. Narayana and Yash under the banners of KVN Productions and Monster Mind Creations, Toxic is slated for a worldwide theatrical release on 19 March 2026, strategically coinciding with Eid, Ugadi, and Gudi Padwa.

ராயாவின் வருகை உறுதியானது : ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீட்டு தேதி போஸ்டருடன்  அறிவிப்பு

வன்முறையும் மர்மமும் நிறைந்த  உலகம் ‘டாக்ஸிக்’ டீசர் பிப்ரவரி 20 முதல்

‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’  படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் டீசர் பிப்ரவரி 20, காலை 9.35 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கும் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

தனித்துவமான போஸ்டர், படத்தின் தன்மையை வெளிப்படுத்தும் வகையில்  வன்முறையும் இருண்மையும் நிறைந்த உலகத்தை காட்டுகிறது. ரத்தம் கசிந்த பனிப்புயல் போன்ற சூழலில், நடுவில் ராயாவாக யாஷ் நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. முகம் தெளிவாக தெரியாத நிலையில், நேரடியாக பாட்டிலிலிருந்து குடிக்கும் அவர், இரத்தம் தோய்ந்த தரையில்,  கண்களுக்கு எட்டாத வன்முறையின் சிதைவுகளால் சூழப்பட்ட நிலையில், ஆபத்தான ஒரு பிரபஞ்சத்தில் நிற்பதாக அந்த போஸ்டர் காட்டுகிறது.

இந்த டீசர் அறிவிப்பு, “டாக்ஸிக்” திரைப்படம் இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக தொடர்ந்து இருப்பதற்கான மற்றொரு காரணமாக அமைந்துள்ளது. கதாபாத்திரங்களை ஒவ்வொரு கட்டமாக வெளியிடும் உத்தியும், திட்டமிட்ட மார்க்கெட்டிங் உத்திகளும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. இதுவரை கதையைப் பற்றிய விவரங்கள் மிகக் குறைவாகவே வெளியிடப்பட்டுள்ளதால், படத்தின் காட்சியமைப்பு மற்றும் கதாபாத்திரங்களின் உறவுகள் குறித்து ரசிகர்கள் யூகிக்கத் தொடங்கியுள்ளனர். பிப்ரவரி 20, இந்த உலகத்துக்குள் முதல் நெருக்கமான பார்வை கிடைக்கும் நாளாக பார்க்கப்படுகிறது. கதையின் தாக்கத்தை காக்கும் வகையில், டீசர் ஒரே மொழியில் வெளியிடப்படவுள்ளது.  இதனால் படத்தின் அழுத்தமான காட்சிகளும் சூழலும் தான் நேரடியாக ரசிகர்களிடம் பேசும்.

இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பின் ஒரு பகுதி, கவனமாக வெளியிடப்பட்ட நட்சத்திர பட்டாள அறிவிப்பிலிருந்து உருவானது.  கியாரா அத்வானி, உணர்ச்சி சுமை கொண்ட கதாப்பாத்திரத்தில், நாடியாவாக நடித்துள்ளார். ஹூமா குரேஷி, அதிகாரமும் அபாயமும் கலந்த எலிசபெத் கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். நயன்தாரா, கங்காவாக அதிகாரமிக்க கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  தாரா சுதாரியா, விரும்பத்தக்க மற்றும் புரிந்து கொள்ள முடியாத ரெபெக்காவாகவும், ருக்மிணி வசந்த் அதிகாரத்தை வெளிப்படுத்தும் மெலிசாவாகவும் நடித்துள்ளனர். இறுதியாக வெளியான கதாபாத்திர அறிமுகம் யாஷ். ராயாவாக, அவர் கூறும் “Daddy’s home…” என்ற வசனம், கதையில் அவரது வருகையையும், திரையரங்குகளுக்கு அவர் திரும்பி வருவதை அறிவிக்கும் ஒரு அறிவிப்பாகவும் அமைந்துள்ளது.

யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோர் இணைந்து எழுத, கீது மோகன் தாஸ் இயக்கிய ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இது படத்தின் உலகளாவிய லட்சியத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.

தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி- இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்- படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்ணி – தயாரிப்பு வடிவமைப்பாளர் T.P.அபித்- ஆகியோர் அடங்கிய ஒரு வலிமையான தொழில்நுட்பக் குழுவையும் இந்தப் படம் கொண்டுள்ளது. ஹாலிவுட் அதிரடி இயக்குநர் ஜே ஜே பெரி ( ஜான் விக்) (John Wick) –  தேசிய விருது பெற்ற அதிரடி சண்டை இயக்குநர்களான அன்பறிவ்-  கெச்சா காம்பக்‌டி   (Kecha Khamphakdee) ஆகியோரின் வடிவமைப்பில் அதிரடியான சண்டைக் காட்சிகள் பிரம்மாண்டமான அளவில் படமாக்கப்பட்டுள்ளன.

கே வி என் புரொடக்ஷன்ஸ் ( KVN Productions )மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் (Monster Mind Creations)ஆகிய நிறுவனங்களின் சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட ‘டாக்ஸிக்’ திரைப்படம் – ஈத், உகாதி, குடி பட்வா, ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து எதிர்வரும் மார்ச் மாதம் 19 , 2026 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

- Advertisement -

Recent Posts