- Advertisement -
Home Blog Page 39

FIRST SINGLE “AADINEY IRUPEN” FROM “HAPPY RAJ” LAUNCHED – A VIBRANT CELEBRATION OF YOUTH & ENERGY

0

The makers of Happy Raj have officially unveiled the film’s first single, “Aadiney Irupen,” a vibrant and high-energy dance number that perfectly captures the celebratory spirit of the film. Following the overwhelming response to the film’s promo and the successful completion of its shoot, the team now brings audiences a track that is set to become a youthful dance anthem.

Featuring G. V. Prakash Kumar and Sri Gouri Priya in a completely refreshing and stylish avatar, “Aadiney Irupen” showcases the lead pair in a lively and dynamic space. Their chemistry, energetic screen presence, and spontaneous dance moves add immense charm to the track.

Shot extensively across the bustling streets of Bangalore, the song visually captures the city’s urban pulse. With vibrant street aesthetics, trendy visuals, and celebratory frames, the sequence follows the lead pair exploring the city while breaking into energetic dance movements, giving the track a free-spirited and festive vibe.

Adding a distinctive flavour to the composition, “Aadiney Irupen” is both sung and written by Gana Vinoth, whose earthy and unique vocal style lends the song an authentic and fresh appeal. Music director Justin Prabhakaran steps into a completely peppy and dynamic soundscape with this number, exploring a different musical energy that elevates the overall mood and makes it instantly catchy.

Marking a significant milestone, Manichandra makes his debut as the main choreographer with this track. Having previously assisted renowned choreographers, he brings his own energetic and stylish approach to the song. The signature hook step introduced in “Aadiney Irupen” is already emerging as a standout element—extremely catchy, youthful, and visually engaging. His choreography perfectly complements the rhythm and amplifies the vibrant performances of the lead pair.

Produced by Jayavardhan under the banner of Beyond Pictures, Happy Raj marks the production house’s maiden venture. Directed by Maria Elanchezian, the film is envisioned as a wholesome feel-good entertainer rooted in optimism and light-hearted emotions.

G. V. Prakash Kumar plays the titular role of Happy Raj, bringing freshness and charm to the character, while Sri Gouri Priya adds warmth and emotional depth as the female lead. A major highlight of the film is the much-awaited return of Abbas to Tamil cinema after a long sabbatical, generating considerable excitement among fans.

The ensemble cast includes George Maryan, Prarthna, Adhirchi Arun, Madurai Muthu, Sofa Boy Rasool, and others in pivotal roles. The technical team comprises cinematographer Madhan Christopher, editor RK Selva, art director Kumar Gangappa, and costume designer Praveen Raja. The film is co-produced by Jaikanth Suresh,with Public Relations handled by Rekha.

With shooting successfully wrapped and post-production progressing steadily, Happy Raj is moving confidently into its next phase. With its catchy rhythm, youthful visuals, unique choreography, and vibrant performances, “Aadiney Irupen” sets the perfect tone for what promises to be a refreshing, feel-good cinematic experience.

“ஹேப்பி ராஜ்” படத்தின் முதல் சிங்கிள் “ஆடினே இருப்பேன்” வெளியீடு – இளமையான மற்றும் உற்சாகத்தின் வண்ணமயமான கொண்டாட்டம்!

Happy Raj திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் முதல் சிங்கிளான “ஆடினே இருப்பேன்” பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இளைஞர்களின் கொண்டாட்ட உணர்வை முழுமையாகப் பிரதிபலிக்கும் இந்த உற்சாகமான மற்றும் ஆற்றல் மிகுந்த நடனப் பாடல், படத்தின் மகிழ்ச்சியான தருணத்தை சிறப்பாக வெளிப்படுத்துகிறது. படத்தின் புரோமோவுக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பையும், படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததையும் தொடர்ந்து, இளைஞர்களின் நடன கீதமாக மாறவுள்ள ஒரு பாடலை இப்போது ரசிகர்களிடம் கொண்டு வந்துள்ளது படக்குழு.

G. V. பிரகாஷ் குமார் மற்றும் ஸ்ரீ கௌரி பிரியா ஆகியோர் புதுமையான மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தில் “ஆடினே இருப்பேன்” பாடலில் நடனமாடி உள்ளனர். உயிரோட்டமிக்க மற்றும் சுறுசுறுப்பான சூழலில் இவர்களின் நடன அசைவுகளை பார்க்கும் பொழுது அவர்களுக்குள்ளான கெமிஸ்ட்ரி, ஆற்றல்மிகு நடிப்பு மற்றும் அன்னிச்சையான நடன அசைவுகள் பாடலுக்கு தனித்துவமான கவர்ச்சியை அளிக்கின்றன.

பெங்களூரு நகரின் பரபரப்பான வீதிகளில் படமாக்கப்பட்ட இந்தப் பாடல், நகரத்தின் நவீன நகர வாழ்க்கையின் துடிப்பை காட்சிப்படுத்துகிறது. வண்ணமயமான தெருகளின் அழகியல், சமகால காட்சித்தொகுப்பு மற்றும் மனம் மகிழ்வான காட்சிகளுடன், கதாநாயகர்கள் நகரைச் சுற்றி உல்லாசமாகச் செல்லும் போதும் உற்சாகமான நடனத்தில் ஈடுபடும் தருணங்களும் பாடலுக்கு தனித்துவமான மற்றும் பண்டிகைக்கால கொண்டாட்ட மனநிலையை கொடுக்கின்றன.

இந்தப் பாடலுக்கு மேலும் சுவையைச் சேர்க்கும் வகையில், “ஆடினே இருப்பேன்” பாடலை கானா வினோத் எழுதி பாடியுள்ளார். அவரது ‘மண்ணின் மணமிக்க’ தனித்துவமான குரல் பாடலுக்கு இயல்பான மற்றும் புத்துணர்ச்சியான வசீகரத்தை அளிக்கிறது. இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இந்தப் பாடலின் மூலம் உற்சாகமும் துள்ளலும் நிறைந்த இசை உலகிற்குள் புதிய முயற்சியாக இறங்கியுள்ளார். அனைவரது மனநிலையையும் உயர்த்தி, உடனே மனதில் பதியும் விதமாக இந்த இசை வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு முக்கியமான நிகழ்வாக, இந்தப் பாடலின் மூலம் மணிசந்திரா முதன்மை நடன இயக்குநராக அறிமுகமாகிறார். முன்னணி நடன இயக்குநர்களிடம் உதவியாளராக பணியாற்றிய அனுபவத்துடன், அவர் தனது தனித்துவமான உற்சாகமான மற்றும் ஸ்டைலிஷ் அணுகுமுறையை இப்பாடலில் வெளிப்படுத்தியுள்ளார். “ஆடினே இருப்பேன்” பாடலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘சிக்னேச்சர் ஹுக் ஸ்டெப்’ ஏற்கனவே இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இசையின் தாளத்துடன் இயைந்த அவரது நடன வடிவமைப்பு, கதாநாயகர்களின் ஆற்றல்மிகு நடிப்பை ஒரு படி மேலும் உயர்த்துகிறது.

ஜெயவரதன் தயாரிப்பில், Beyond Pictures நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக “ஹேப்பி ராஜ்” உருவாகியுள்ளது. மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகயிருக்கும் இந்தத் திரைப்படம் நம்பிக்கை மற்றும் இலகுவான உணர்வுகளை மையமாகக் கொண்ட முழுமையான ஃபீல்-குட் என்டர்டெய்னராக வடிவமைக்கப்பட்டுள்ளது.

G. V. பிரகாஷ் குமார் ‘ஹேப்பி ராஜ்’ என்ற படத்தின் தலைப்பிறகு ஏற்றபடி கதாபாத்திரத்தில் புதுமையும் கவர்ச்சியும் கொண்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ; கதாநாயகியாக ஸ்ரீ கௌரி பிரியா உணர்ச்சி ஆழமும் இரக்கமும் கொண்டவராக நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அப்பாஸ் தமிழ் திரையுலகிற்கு திரும்புவது இப்படத்தின் முக்கிய அம்சமாகும்; இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

படத்தில் ஜார்ஜ் மரியான், பிரார்த்தனா, அதிர்ச்சி அருண், மதுரை முத்து, Sofa Boy ரசூல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர், எடிட்டர் RK செல்வா, கலை இயக்குநர் குமார் கங்காப்பா, ஆடை வடிவமைப்பாளர் பிரவீன் ராஜா ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் இணைந்துள்ளனர். இணைத் தயாரிப்பாளராக ஜெயகாந்த் சுரேஷ் செயல்படுகிறார்; மக்கள் தொடர்பு பணிகளை ரேகா PRO மேற்கொள்கிறார்.

படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்து, பின்னணி பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், “ஹேப்பி ராஜ்” தனது அடுத்த கட்டத்திற்குத் தன்னம்பிக்கையுடன் நகர்கிறது. கவர்ச்சியான இசை, இளமையை பிரதிபலிக்கும் காட்சிகள், தனித்துவமான நடன வடிவமைப்பு மற்றும் உற்சாகமான நடிப்புகள் ஆகியவற்றால் “ஆடினே இருப்பேன்” ஒரு புத்துணர்ச்சியான, மனநிறைவு தரும் திரையரங்க அனுபவத்திற்கான சரியான தொடக்கத்தை அமைத்துள்ளது.

அன்பான தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள்,மற்றும்

0

திரையுலக சொந்தங்களுக்கு நம்மில் ஒருவரான தயாரிப்பாளர், இயக்குனர்,பல படங்களை வெளியிட்ட பி.டி செல்வகுமாருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் மாநில வர்த்தக அணி துணை செயலாளராக பதவி வழங்கியுள்ளதை யொட்டி,

அவரை பாராட்டி கெளரவிக்கும் விழா இன்று நடைபெற்றது… இவ் விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமநாராயணன், துணை தலைவர் தமிழ் குமரன், விடியல் ராஜு, ராஜா, முருகன், சி வி குமார், விஷ்னு ஹாசன் நடிகர், ஏ எல் உதயா, நடிகர் விஜித், எம். எஸ். முருகராஜ், ஆகியோர் பி. டி. செல்வகுமார் அவர்களை பாராட்டி பேசினர்

நிகழ்வில் 10 ஏழைப் பெண்களுக்கு தொழில் செய்ய நலத்திட்ட உதவிகள் வழங்கியும்,
நடிகர் விஜய்யின் உதவியாளர் செல்வம் என்பவருக்கு 50000 நிதி உதவியும் படங்களில் பணிபுரிய வேலை வாய்ப்பு ஏற்படுத்தியும் கொடுத்திருக்கிறார். அதோடு
தமிழக அரசின் சிறந்த தயாரிப்பாளர் விருது பெற்ற தயாரிப்பாளர் சோழா கிரியேஷன்ஸ் பொன்னுரங்கம் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது…

தி.மு.கவில் மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பி.டி செல்வகுமார் அவர்களுக்கு திரையுலகம் பாராட்டு…

0

சினிமாவில் நடிகர் விஜய் யின் மேலாளராகவும் பல படங்களை வெளியிட்டு அசைக்க முடியாத இடத்தை பிடித்தவர் தற்போது முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார் அவருக்கு மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது அதற்காக திரையுலகத்தை சார்ந்த அனைவரும் பாராட்டி வருகின்றனர்

முரளி ராம நாராயணன் (தலைவர் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ) பேசியதாவது

தேனாண்டாள் பிலிம்ஸ் க்கும் எனது தந்தை ராம நாராயணனுக்கும் மிகவும் வேண்டியவர் பல படங்கள் வெளிவர கடினமாக உழைத்தவர் பி.டி செல்வகுமார். இவர் கடின உழைப்பாளி மட்டுமல்ல பொறுமையாக அன்பினால் எதையும் சாதிக்க கூடியவர். அவரை ஃபாலோ பண்ணு என்று விஜய்யிடம் கூறி யி ருக்கிறார் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர். விஜயின் வளர்ச்சிக்கு இவர் முக்கிய காரணம் என்று எனது தந்தையும் கருமாரி கந்தசாமியும் சொல்லுவார்கள்.. பல பிரச்சினைக்குரிய படங்களை இலகுவாக பேசி முடிப்பார்.. இவருக்கு தி.மு.கவில் பதவி வழங்கப்பட்டுள்ளது குறித்து மனமார பாராட்டுகிறேன்.

தமிழ்குமரன் – தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் சங்கத் துணைத் தலைவரும் லைக்கா நிறுவனத்தின் சி.இ.ஓ-மான தமிழ் குமரன் பேசும் போது

பி.டி செல்வகுமார் சாருடன் 15 ஆண்டுகால நட்பு எனக்கு உண்டு.. பெரிய வியூக வகுப்பாளர் விஜய் போன்ற ஒரு நடிகரை உச்சத்துக்கு கொண்டுவர போராடியவர் பொறுமையும் பணிவும் தான் அவரது பலம்.. நான் தயாரித்த என்றென்றும் புன்னகை படத்திற்கு ஜீவா கால்ஷீட் தந்து பல உதவிகளை செய்தவர் அவர் அசாத்திய திறமை சாதுர்யமும் பல படங்கள் வெளிவர உதவியது… அவர் கலப்பை மக்கள் இயக்கம் மூலம் அரசு பள்ளிகளுக்கு 25 கலையரங்கங்கள் வகுப்பறைகள் கட்டிக் கொடுத்தது மிகப்பெரிய விஷயம்.. இன்று அவருக்கு மாநில வர்த்தக அணி துணை தலைவர் பொறுப்பு தி.மு.க வழங்கியுள்ளது இன்னும் அவருடைய உழைப்புக்கும் நேர்மைக்கும் பல பதவிகள் வரவேண்டும்

சோழா பொன்னுரங்கம் – தயாரிப்பாளர் பிடி செல்வகுமார் சுறுசுறுப்பானவர் எந்த வேலையாக இருந்தாலும் முடியும் என்பர் அவரது பயணத்தில் எதுவும் நடக்க முடியாது என்று இல்லை பலருடைய வெற்றிக்கு ஏணியாக இருந்தவர்

நடிகர் உதயா –

பிடி செல்வகுமார் நல்ல பண்பாளர் சினிமாவில் பல பிரச்சினைகளை ஊதி பெரிதாக்கி விடுவார்கள் ஆனால் அத்தனையும் பொசுக்கி சாதிப்பவர் அவர் விஜய் மட்டுமல்ல பல திரைப்படங்கள் வெளிவர உதவியவர் இரும்புத்திரை திரைப்படம் வெளிவர போராடி வெளிக்கொண்டு வந்ததை நான் அறிவேன் அவருக்கு தி.மு.க வர்த்தக அணி துணைச் செயலாளர் பொறுப்பு கொடுத்தது சரியானதே இன்னும் பல அவரது சாதனைகள் தொடரனும்

விஜய் உதவியாளர் செல்வத்திற்கு ரூபாய் 50,000 உதவி செய்த பீ.டி செல்வகுமார்

செல்வம் பேசியதாவது – விஜய்க்கு டீ, ஜூஸ் சாப்பாடு கொடுத்து குடை பிடித்து உதவியாளராக இருந்தவர் செல்வம் இவர் தற்போது வேலை இழந்து ஆபரேஷன் செய்யப்பட்டு அவஸ்தைப்படுகிறார்.. அவரிடம் உதவிக்கு போராடிய போது தான் பி.டி செல்வகுமார் ஐம்பதாயிரம் வழங்கி உதவி புரிந்தார்…அதை அவரது மனைவி மகள் பெற்று கொண்டனர்.. இது காலத்தால் செய்த உதவி விஜய் அவர்கள் என்னை கைவிட்டு விட்டார் ஆனால் பிடி செல்வகுமார் உதவியுள்ளார் ஏற்கனவே நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி இறந்தபோது உதவினார் தாடி பாலாஜிக்கு உதவினார் வறுமையால் வாடும் பல நடிகர்களுக்கும் உதவியுள்ளார்…இன்று எனக்கும் உதவி மட்டும் இல்லாமல் படத்தில் வேலை பார்க்க வேலையும் வாங்கி தந்துள்ளார் மனித நேயம் சாகவில்லை பி.டி செல்வகுமார் ரூபத்தில் நடமாடிக் கொண்டிருக்கிறது எனக்கு அவர்தான் கடவுளாக தெரிகிறார் என்று கூறி முடித்தார்..

A R Rahman reacts to an African Kids’ Band dancing to Yethu from Moonwalk

0

The Yethu video song from the film Moonwalk has taken Instagram by storm, emerging as a dance sensation and rapidly going viral across the globe.

People from Africa, Japan, the USA, the UK, the UAE, France, Sweden, and several other countries have actively participated in the trend, sharing high-energy reels while staying true to the song’s essence.

The song has crossed 11 million views on YouTube in two weeks of release, with international reviewers reacting to it out of curiosity. Additionally, social media reels with Yethu have crossed 100 million views.

The trend, which began on January 27, continues to gain strength with no signs of slowing down. Extending beyond dancers, musicians and instrumental artists have also begun recreating the song’s beats.

A popular band in Africa – Hypers Kids Africa, did a dance recreation video on the Yethu Song. Adding further significance to this viral wave, legendary music composer A R Rahman commented on their video. “Thank you for the love. You guys are terrific”, A R Rahman posted. The kids’ band too replied back saying – “Happy to see your comment. We love you too”. This moment resonated strongly with fans and creators alike, reinforcing the cultural reach of the track.

A lot of accolades have been coming in for the way Prabhudeva has effortlessly cracked some of the most difficult steps of the song. His high-octane dance backed by A R Rahman’s thumping music, and the way the entire song has been shot have brought a lot of excitement to fans and viewers across the world.

As participation continues to grow, Yethu is evolving into a global dance anthem – celebrating rhythm, unity, and creative expression across borders.

Moonwalk திரைப்படத்தின் ‘Yethu’ பாடலுக்கு ஆப்பிரிக்கன குழந்தைகளின் இசைக்குழு நடமாடி வீடியோ பதிவிட்ட நிலையில் அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் கமெண்ட் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மூன்வாக் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஏத்து’ வீடியோ பாடல் இன்ஸ்டாகிராமை அதிர வைத்துள்ளது. இது ஒரு பெரிய நடன ட்ரெண்டாக மாறி, உலகம் முழுவதும் வேகமாக வைரலாகி வருகிறது.

ஆப்பிரிக்கா, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த ட்ரெண்டில் உற்சாகமாக கலந்து கொண்டு, பாடலின் உணர்வை காப்பாற்றியபடி அதிக ஆற்றலுடன் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருகின்றனர்.

Yethu பாடல் வெளியான இரண்டு வாரங்களிலேயே யூடியூபில் 11 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. மேலும், சர்வதேச விமர்சகர்கள் Yethu பாடலை பார்த்து ஆர்வத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது சமூக ஊடகங்களில் “Yethu” பாடலை கொண்டு செய்யப்பட்ட ரீல்கள் 100 மில்லியன் பார்வைகளை கடந்து படுவைரலாகி வருகிறது.

ஜனவரி 27ஆம் தேதி தொடங்கிய இந்த ட்ரெண்ட், இன்றளவும் சற்றும் குறையாமல் தொடர்ந்து வேகமெடுத்து வருகிறது. நடனக் கலைஞர்களைத் தாண்டி, இசைக்கலைஞர்கள் மற்றும் வாத்தியக்கலைஞர்களும் “Yethu” பாடலுக்கு ரீல்ஸ் செய்து அசத்தி வருகின்றனர்.

ஆப்பிரிக்காவின் பிரபலமான “Hypers Kids Africa” என்ற குழந்தைகள் இசைக்குழு “Yethu” பாடலுக்கு நடன ரீமேக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வைரல் அலைக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், புகழ்பெற்ற இசையமைப்பாளர் A R ரஹ்மான் அவர்களே அந்த வீடியோவில் “Thank you for the love. You guys are terrific” என கமெண்ட் செய்துள்ளார். அதற்கு பதிலளித்த குழந்தைகள் குழு, “Happy to see your comment. We love you too” என்று தெரிவித்துள்ளது. இந்த தருணம் ரசிகர்கள் மற்றும் இப்பாடலுக்கு மேலும் reels தயாரிப்பவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி, இப்பாடல் கலாச்சாரம் தாண்டி எல்லோராலும் கொண்டாடப்படுகிறது என்பதை உறுதிப்படுத்திருக்கிறது

“Yethu” பாடலில் நடனப்புயல் பிரபுதேவா மிகவும் கடினமான நடன அசைவுகளை எளிதாக ஆடி அசத்திய விதத்திற்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
A R Rahman அவர்களின் துள்ளலான இசையுடன் கூடிய பிரபுதேவாவின் அதிரடி நடனம், பாடலின் ஒளிப்பதிவு அமைப்பு — இவை அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இப்பாடல் உலகமெங்கும் வைரல் லிஸ்டில் இணைந்துள்ளது.

இப்பாடலின் மீது ஈர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ‘Yethu’ ஒரு உலகளாவிய நடன கீதமாக மாறி வருகிறது. தாளம், ஒற்றுமை மற்றும் எல்லைகளை தாண்டிய படைப்பாற்றலை கொண்டாடும் ஒரு திருவிழாவாக மாறியுள்ளது “Yethu” பாடல்.

“வித் லவ் ( With Love )” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!*

0

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் ( With Love )” திரைப்படம் கடந்த 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.

இன்றைய இளைஞர்களின் உலகத்தை காதலை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சகர்களிடமும் பாராட்டுக்களைக் குவித்தது.

அரங்கம் நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓட்டிக்கொண்டிருக்கும் நிலையில் படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

எடிட்டர் சுரேஷ் பேசியதாவது..,

இந்த திரைப்படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றி படக்குழுவுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.

பாடலாசிரியர் மோகன்ராஜன் பேசியதாவது..,

மகேஷ் ஐயாவோட பல படங்களாக இந்தப் பயணமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு படத்துக்கும், இது நல்ல படம் – ன்னு நீங்கள் நம்பினால், அதை முழு மனதோடு தூக்கிக்கொண்டு போய் ஒரு வெற்றிப் படமாக மாற்றுவதற்கு உங்களுக்குப் பெரிய பெரிய நன்றிகள். இப்படத்தில் தயாரிப்பாளராக சௌந்தர்யா மேம் எங்களுக்கு கிடைத்தது, ஒரு பெரிய வரம்னு தான் நினைக்கிறோம். உண்மையிலேயே, நான் நீண்ட நாளா மனசுக்குள்ள வைத்திருந்த ஆசை – ரஜினி சாரை நேரில் சந்திக்கணும்ன்னு. அதை மகேஷ் ஐயாவிடம் அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பேன். சௌந்தர்யா மேடமிடம் சொன்னேன். அது இப்படத்தில் நடந்தது மகிழ்ச்சி.

ரஜினி சாரை பார்க்கும் போது வைரமுத்து சார் போல எப்படியாவது ஒரு கவிதை சொல்லி, சாரை இம்ப்ரெஸ் பண்ணணும்னு நினைச்சேன். உண்மையிலேயே அந்த கவிதை அவருக்கு ரொம்ப பிடிச்சது. என்னோட வாழ்நாள் கனவு நிறைவேறிச்சு.

இந்த படத்தில் ஒர்க் பண்ணிய ஒவ்வொருத்தருக்கும் நான் மனசார நன்றி சொல்லணும். மதன் – அடுத்த படம் இன்னும் கவனமா பண்ணணும். அபி – இது உன்னோட முதல் படம். அது ஜெயிக்கணும்னு நானும் ஷான் ஐயாவும் அடிக்கடி பேசிக்கிட்டே இருப்போம். அது இப்போ நடந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி. அனஸ்வராவுக்கு வாழ்த்துக்கள் , கடைசியாக, இந்த படத்துக்காக உழைத்த எல்லாருக்கும் பெரிய நன்றி.

நடிகர் சரவணன் பேசியதாவது..,

இந்த படத்தில் நான் நடிக்கக் காரணமாக இருந்தது முதலில் இயக்குநர் மதன். அதே மாதிரி மகேஷ் சார், மேலும் இந்த படத்தின் முழு குழுவுக்கும் நான் மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறேன்.இந்த படத்தில் என்னோட கேரக்டர் உண்மையிலேயே ஒரு சின்ன கேரக்டர்தான். ஆனாலும் அந்த சின்ன கேரக்டரையும் அழகாக எழுதி, அதைப் பாராட்டி, நிறைய ஊடகங்களும் பத்திரிக்கையாளர்களும் மனசார எழுதியிருந்தார்கள். என்னைப் பாராட்டிய எல்லாருக்கும் நான் ரொம்ப ரொம்ப நன்றி சொல்லக் கடன்பட்டிருக்கிறேன். இந்த படம் இன்னும் நல்ல படியாக, இன்னும் அதிக மக்களைச் சேரும் வகையில் பயணிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் தயாரிப்பாளருக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.

நடிகை ஆனந்தி பேசியதாவது..

நான் இந்த படத்தைப் பற்றி பேசும்போது, ஒரு நடிகராக இல்லாமல், ஒரு ஆடியன்ஸாக பேசணும்னு ஆசைப்படுறேன். நேத்து நைட்டுதான் இந்த படம் பார்த்தேன். ஒரு நல்ல படத்தில் நானும் ஒருத்தராக இருப்பது மகிழ்ச்சி.
இன்றைய தலைமுறை பற்றி ஒரு தவறான எண்ணம் நம்மிடம் இருக்கிறது அதை மாற்றி வேறு பார்வையில் இப்படம் நம்மிடம் காட்டுகிறது.

இந்த படம் அந்த Human Nature-ஐ ரொம்ப அழகாக, ரொம்ப மென்மையாக சொல்லுகிறது. “There are no bad people.But we all do bad things sometimes.”

அது நம்ம எல்லாருக்கும் நடந்திருக்கலாம்.ஆனா அதே சமயம், நம்மளுக்குள்ள வளர வாய்ப்பு இருக்கிறது அப்படிங்கிற கருத்து இந்த படத்துல ரொம்ப அழகா ஒரு காதல் கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு படத்தில் ஒரு பங்காக இருந்தது மிகுந்த மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.

நடிகை காவ்யா பேசியதாவது..,

ஒரு புதுமுகமாக என்னை என் பெயர் சொல்லி பாராட்டிய அனைவருக்கும் நன்றி. என் கதாப்பாத்திரத்தை கொண்டாடிய ரசிகர்களுக்கு நன்றி. இப்படத்தில் பங்கு கொண்டது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் படக்குழுவுக்கு என் நன்றி.

நடிகர் சச்சின் பேசியதாவது..,,

இப்படத்தில் பங்கு கொண்டது மிக மகிழ்ச்சி. இந்த மொத்தக்குழுவுக்கும் என் நன்றி. அபி மற்றும் அனஸ்வராவுக்கு நன்றி. இந்தப்படத்தை பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சென்ற பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.

நடிகை அனஸ்வரா பேசியதாவது..,

இந்த படம் ரொம்ப ரொம்ப அன்போட உருவக்கிய படம். அந்த அன்பை ஆடியன்ஸ் அப்படியே ஏற்றுக்கிட்டது தான் எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய சந்தோஷம்.

“இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்காக மதனுக்கு மனப்பூர்வமான நன்றி. அபியுடன் பணியாற்றிய அனுபவம் மிகச் சிறப்பாக இருந்தது என தெரிவித்தார். அபியுடன் உள்ள கெமிஸ்ட்ரியை மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை மக்கள் ரசித்தது ரொம்ப மகிழ்ச்சி. சௌந்தர்யா மேடம், மகேஷ் அண்ணா, காவ்யா மற்றும் முழு நடிகர்–தொழில்நுட்ப குழுவினருக்கும் நன்றி.

இரண்டு நாட்களுக்கு முன் ரஜினி சாரை சந்தித்த தருணம் வாழ்வில் மறக்க முடியாதது. அவர் படம் பார்த்து சொன்ன ரெஸ்பான்ஸ் எங்களுக்கெல்லாம் ரொம்ப அர்த்தமுள்ளதா இருந்தது. எங்கள் படத்தை இவ்வளவு அன்போட ஏற்றுக்கொண்ட எல்லாருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,

இந்தப்படத்துக்கு பத்திரிக்கையாளர்கள் தந்த ஆதரவு மிகப்பெரியது. அபியை முதல் படம் செய்ய கஷ்டபட்ட காலத்திலிருந்து பார்க்கிறேன். அவனுடைய உழைப்பு 200 சதவீதம் இருந்தாலும் நீங்கள் அவனுக்கு முழு ஆதரவு தந்திருக்கிறீர்கள் நன்றி. அபி மிக அழகான மனது கொண்டவர் அவர் மாற மாட்டார் என நம்புகிறேன். எனது கூட்டாளி மோகன்ராஜனுடன் தொடர்ந்து படங்கள் செய்கிறேன் அவருக்கு என் நன்றி.

இயக்குநர் மதன் இந்தக்கதை சொன்ன போதே இது வெற்றிப்படம் என்பது தெரியும், கதை சொல்லும் போது தடுமாறினாலும் படத்தில் மிக அழகாக அதை நிறைவு செய்துவிட்டார். அனஸ்வரா கேரக்டரை எழுதிய விதமும், அதை எடுத்த விதமும் அத்தனை அழகாக இருந்தது. அனஸ்வராவுக்கு படத்தில் நான் கை தட்டினேன் அவர் அத்தனை அற்புதமாக நடித்திருந்தார்.

தயாரிப்பாளர் மகேஷ் அவர் தொட்டதெல்லாம் பொன்னாகிறது. அவரைப் பார்த்தால் என் பையன் தான் ஞாபகம் வரும். குழந்தை மனது கொண்டவர். கண்டிப்பாக இன்னும் 3 படங்கள் ஹிட் தந்துவிடுவார். எங்களுக்கு முழு ஆதரவு தந்ததற்காக நன்றி. சௌந்தர்யா மேம், அவர் மிகத்தெளிவான சிந்தனை கொண்டவர். அவரிடம் நிறைய திட்டமிடல் இருக்கும். அவர் இன்னும் நிறைய சாதிப்பார் அதைக் காண ஆவலாக இருக்கிறேன்.

படத்தில் உழைத்த அத்தனை நடிகர்கள் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.இந்தப்படத்தை ஏற்றுக்கொண்டு கொண்டாடிய மக்களுக்கு நன்றி.

இயக்குநர் மதன் பேசியதாவது..,

எல்லாருமே“இந்த படம் கண்டிப்பா ஒரு வெற்றி படம்” என சொன்னார்கள். அதே போல படம் வெற்றியடைந்தது உண்மையிலேயே எங்களுக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி.மகேஷ் சார், சௌந்தர்யா மேடம், இருவருக்கும் பெரிய நன்றி. அதே மாதிரி சரவணன் சார் டீம் உட்பட, இந்த படத்துக்காக உழைத்த எல்லாருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள். தூக்கமில்லாமல் இப்படத்திற்காக உழைத்த என் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி. படத்தை கொண்டாடிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் மகேஷ் பேசியதாவது..,

“நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை.”நீங்கள் எல்லாரும் இல்லாம இந்த டீமும் இல்லை. அதனால ரொம்ப சந்தோஷம். பிரஸ் ஷோ முடிந்த பிறகு,நீங்கள் தந்த பாராட்டுக்களில் இருந்து தான் இந்த படம் உண்மையிலேயே take off ஆனது. இப்படத்தை மக்கள் மனதளவில் நெருக்கமாக கொண்டாடுகிறார்கள்.

மதன் எனக்கு ரொம்ப நாளா தெரிஞ்ச பையன். லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி படங்களில் அவன் வேலை பற்றி எனக்கு தெரியும். இந்தக் கதை சொல்லும்போதே, “இந்த படம் ஹிட்” எனத் தோன்றியது. அவன் கண்டிப்பாக அனஸ்வரா வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தான். அனஸ்வரா நடிப்பை பார்த்த பிறகு அவர் எவ்வளவு பெரிய பலம் என்று புரிந்தது. அபி எனக்கு சொந்த தம்பி. அபியை நீங்கள் எல்லாரும் உங்கள் வீட்டுப் பையன் மாதிரி
பார்த்துக் கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். ஷான் தான் என் மூன்று படத்திற்கும் இசையமைப்பாளர். இதில் அனீஷா கேரக்டருக்கு அவரின் இசை அற்புதமாக இருந்தது. எங்கள் சின்ன டீமை பாராட்டி ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சூப்பர்ஸ்டாருக்கு நன்றி.

சௌந்தர்யா அக்காவுடனான உறவு 10 வருடங்களுக்கு மேலாக இருக்கிறது. அவர் எனக்கு எப்போதும் அக்கா தான். எங்களால் முடியாத பல விஷயங்களை ஒரு போன் கால்லஅவங்க முடிச்சு கொடுத்து விடுவார்கள்.அக்கா – ஒரு பெரிய சப்போர்ட். எங்கள் டீமின்தூண். அவருடன் இன்னும் நிறைய படம் செய்வேன். இந்தப்படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. படத்தை கொண்டாடிய உங்கள் அனைவருக்கும் பெரிய நன்றி.

தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசியதாவது..,

“ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மகிழ்ச்சி என்ற வார்த்தை கூட இந்த உணர்வுக்கு சரியாக இருக்காது”ப்ரீமியர் ஷோவில் அப்பா படம் பார்த்து தான் படத்தை அடுத்த கட்டதிற்கு எடுத்துச் சென்று விட்டார்.

“படம் முடிந்ததும், வீட்டிற்கு சென்றபோது அப்பா–அம்மா இருவரும் என்னை கட்டிப்பிடித்து சிரித்தார்கள். அப்போது தான் ‘இதுதான் சக்ஸஸ்’ என்று உணர்ந்தேன். அந்த அப்பாவின் சிரிப்பை நான் வாழ்க்கை முழுக்க மறக்க மாட்டேன். 16–18 ஆண்டுகளாக சினிமா பயணத்தில் இருந்தாலும், இந்த படத்தின் மூலமாக தான் ‘வெற்றி’ என்பதன் உண்மையான அர்த்தம் புரிந்தது இது தான் முதல் சக்சஸ் மீட்.

“அபி எனக்கு ஒரு பேபி பிரதர். அந்த மனதிலிருந்து வரும் சிரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இங்கே நீண்ட காலம் நிலைத்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று நம்பிக்கையுடன் கூறினார். அனஸ்வராவை எங்கே இருந்தீர்கள் இவ்வளவு நாள் என்று கேட்கத் தோன்றியது. இந்த படத்தில் அவர் மிக அழகாக நடித்துள்ளார். குறிப்பாக இறுதிக் காட்சியில் வரும் அமைதியும், மழையை பார்த்து அவர் சிரிக்கும் காட்சி எனக்கு மிகவும் பிடித்த தருணம்”

இயக்குநர் மதன் கதை சொன்னபோதே இது வெற்றி படம் என்ற நம்பிக்கை வந்தது. இரண்டாம் பாதியில் வரும் காட்சிகளும், இறுதியில் நான்கு கதாபாத்திரங்களும் ஒரே ஷாட்டில் சந்திக்கும் காட்சியும் முழுமையான டைர்கடர்ஸ் டச். அவரது அடுத்த படத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் அனீஷா பாத்திரத்திற்கு போட்டது பத்து நிமிடத்தில் உருவான இசை என்பது நம்ப முடியாத மாயை. அந்த மேஜிக் அவரால் மட்டுமே முடியும். பாடலாசிரியர் மோகன், எடிட்டர் சுரேஷ், பிரஷாந்த் உள்ளிட்ட தொழில்நுட்ப குழுவினருக்கு மனப்பூர்வமான நன்றி. இந்த படம் வெறும் ‘நல்ல படம்’ என்ற ஸ்டேட்டஸை தாண்டி, மக்கள் தங்கள் படமாக கொண்டாடுவது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி” அனைவருக்கும் நன்றி.

நடிகர் அபிஷன் ஜீவிந்த் பேசியதாவது..,

“ரஜினி சார் சொன்ன அந்த ஒரு வார்த்தை தான் என்னை ஹீரோவாக இந்த முடிவை எடுக்கவும், அதில் நம்பிக்கை வைக்கவும் காரணமாயிருந்தது. இப்போ அவரை மீட் பண்ணும்போது, ‘ஹீரோ ஆகிட்டீங்க’ன்னு அவர் திரும்ப சொன்னது… அந்த சர்கிள் கம்ப்ளீட் ஆன மாதிரி சந்தோஷமாக இருந்தது,”

நீங்கள் படத்தை அழகாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தீர்கள். நல்ல ரிவ்யூஸ், நல்ல வார்த்தைகள் – அதுதான் இந்த வெற்றிக்கு காரணம். அதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி.

“என்னை ஹீரோவாக நம்பி இந்த இடத்துல நிற்க வைத்ததுக்கு மதனுக்கு ரொம்ப பெரிய நன்றி. உன்னை இந்த மேடையில் பார்க்க பெருமையாக இருக்கிறது. இந்த பயணம் இன்னும் பெரியதாக இருக்கும் வாழ்த்துக்கள். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் குறித்து,“எப்போதும் எனக்கு கூடுதலாக வேலை செய்வார். ‘அபிக்காக இதை இன்னும் நல்லா பண்ணலாம்’ன்னு சொல்ற அந்த மனசு ரொம்ப ஸ்பெஷல். புகழை கூட அழகாக, ஈகோ இல்லாமல் கொடுக்கத் தெரிந்தவர், அவருக்கு நன்றி. பாடலாசிரியர் மோகன், எடிட்டர் சுரேஷ், ஸ்ரேயாஸ், தொழில்நுட்ப குழுவினர் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி. அனஸ்வரா எங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி ரொம்ப அழகாக ஒர்க் ஆனது. ஆடியன்ஸ் அதை ரொம்ப ரசிக்கிறார்கள். இந்த கூட்டணி அடுத்தும் தொடரும். காவியா, சச்சின், தேனி முருகன், சரவணன், ஆனந்தி உள்ளிட்ட நடிகர்கள் அனைவருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் மகேஷ் அண்ணா படம் ஹிட் ஆன பிறகும், ‘நான் எதாவது தவறு பண்ணினேனா ? ன்னு கேட்கும் அந்த மனசு எல்லாருக்கும் கிடைக்காது. அவர்கிட்ட பேச எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. அது தான் இந்த உறவின் அழகு,” அவருக்கு என் நன்றிகள்.

சௌந்தர்யா மேம் படம் வெளியான பிறகு“‘சக்ஸஸ் இப்படித்தான் இருக்குமா என்று அவர் சொன்ன அந்த வார்த்தை எனக்கு ரொம்ப சந்தோஷம் கொடுத்தது. மகேஷ் அண்ணா சௌந்தர்யா மேம் நான் மூன்று பேரும் இணைந்து அடுத்து ஒரு பெரிய படம் செய்கிறோம். இந்த படம் இன்றைக்கு மக்கள் மனசுக்குள்ள ஒரு இடத்தை பிடித்திருக்கிறது. அதுவே எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இந்த பயணத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் என் மனப்பூர்வமான நன்றி

Natural Star Nani, Srikanth Odela, Sudhakar Cherukuri, SLV Cinemas’ The Paradise Releasing Worldwide On August 21st

0

Natural Star Nani’s massive period action drama The Paradise, directed by Dasara fame Srikanth Odela and produced by Sudhakar Cherukuri under the SLV Cinemas banner, is fast shaping into one of the hottest Pan-Indian releases of the year. While the team is racing ahead with production in Hyderabad, the makers have now locked a highly strategic and advantage-packed release date.

The Paradise will arrive in cinemas on August 21st, as officially announced by the makers. This date thrusts The Paradise straight into a rare three-week festival wave. The first week gets a strong mid-week boost with Onam and Milad-un-Nabi, followed by Raksha Bandhan in the second weekend, and Janmashtami in the third. For a high-budget spectacle of this scale, this extended holiday stretch offers an exceptional runway at the box office. Nani, known for perfect planning and impeccable timing, once again proves his market acumen with this move.

Meanwhile, the team is currently shooting one of the film’s biggest highlights- Nani’s explosive introduction song, set on a gigantic set with hundreds of dancers. Rockstar Anirudh Ravichander has composed an intense, high-voltage mass number that matches Nani’s raw, energetic style. Choreographer Sudhan Master is crafting large-scale, dynamic visuals to turn the song into a complete crowd-pleaser.

The Paradise features a stellar cast including Mohan Babu, Raghav Juyal, and Sampoornesh Babu. With production nearing completion and the buzz intensifying, the newly revealed release-date poster showcasing Nani’s fierce Jedalu has further amplified excitement.

Ch Sai handles cinematography, Navin Nooli serves as editor, and Avinash Kolla leads production design. The movie will have a pan-world release in eight languages.

Cast: Nani, Mohan Babu, Raghav Juyal, Sampoornesh Babu

Technical Crew:
Writer, Director: Srikanth Odela
Producer: Sudhakar Cherukuri
Banner: SLV Cinemas
DOP: Ch Sai
Music: Anirudh Ravichander
Editing: Navin Nooli
Production Designer : Avinash Kolla
PRO: Sathish, S2 Media
Marketing: First Show

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – ஸ்ரீகாந்த் ஓடெலா – சுதாகர் செருகுரி – SLV சினிமாஸ் – கூட்டணியில் தயாராகும் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகிறது.

‘தசரா’ புகழ் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடெலா இயக்கிய ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தை SLV சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரித்திருக்கிறார். இந்த ஆண்டின் மிகவும் பிரபலமான பான் இந்திய திரைப்படங்களில் ஒன்றாக ‘தி பாரடைஸ்’ உருவாகி வருகிறது. படக் குழுவினர் ஹைதராபாத்தில் படத்தின் பணிகளில் வேகமாக முன்னேறி வரும் நிலையில்.. தயாரிப்பாளர்கள் நன்மைகள் அதிகம் தரும் வகையில் இப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர்.‌

அந்த வகையில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்த ‘தி பாரடைஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தின் வெளியீடு – மூன்று வார விழா கொண்டாட்ட அலைக்குள் அழைத்துச் செல்கிறது. முதல் வாரம் ஓணம் மற்றும் மிலாத் உன் நபி. அதைத்தொடர்ந்து இரண்டாவது வார இறுதியில் ரக்ஷா பந்தனும், மூன்றாவது வாரத்தில் ஜன்மாஷ்டமியும் என விழா காலங்கள் என்பதாலும்.. வாரத்தின் நடுப் பகுதியிலும் வலுவான உற்சாகத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அளவிலான அதிக பட்ஜெட் படத்திற்காக இந்த நீட்டிக்கப்பட்ட விடுமுறை காலம் என்பது..பாக்ஸ் ஆபீசில் எதிர்பார்ப்பை விட அதிகமான வசூலை அளிக்கும். சரியான திட்டமிடல் மற்றும் சரியான தருணங்களுக்கு பெயர் பெற்ற நானி இத்தகைய நடவடிக்கையின் மூலம் தனது சந்தை புத்திசாலித்தனத்தை மீண்டும் நிரூபிக்கிறார்.

இதற்கிடையே படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சங்களில் ஒன்றான நானியின் அட்டகாசமான அறிமுக பாடலை படக் குழுவினர் தற்போது படமாக்கி வருகின்றனர். நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களின் பங்களிப்புடன் ஒரு பிரம்மாண்டமான அரங்கில் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. ராக் ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் நானியின் துடிப்பான – உற்சாகமான பாணியுடன் பொருந்தக்கூடிய ஒரு மாஸான பாடலுக்கு இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை பெருங்கூட்டத்தினரை மகிழ்விக்கும் வகையில் நடன இயக்குநர் சுதன் மாஸ்டர் பெரிய அளவில் துடிப்பான நடன அசைவுகளுடன் வடிவமைத்து வருகிறார்.

‘தி பாரடைஸ்’ திரைப்படத்தில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானியுடன் மோகன் பாபு, ராகவ் ஜூயல், சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தயாரிப்பு பணிகள் நிறைவடையும் தருவாயில், பரபரப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், நானியின் கடுமையான ஜெடலுவை காண்பிக்கும் புதிய வெளியீட்டு தேதியுடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்த போஸ்டர் மேலும் உற்சாகத்தை அதிகரித்துள்ளது.

சி.சாய் ஒளிப்பதிவை கவனிக்கிறார். நவீன் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட எட்டு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.

நடிகர்கள் :
நானி ,மோகன் பாபு, ராகவ் ஜூயல், சம்பூர்ணேஷ் பாபு.

தொழில்நுட்பக் குழு :

எழுத்து & இயக்கம் : ஸ்ரீகாந்த் ஓடெலா
தயாரிப்பாளர் : சுதாகர் செருகுரி
தயாரிப்பு நிறுவனம் : SLV சினிமாஸ்
ஒளிப்பதிவு : சி. சாய்
இசை : அனிருத் ரவிச்சந்தர்
படத்தொகுப்பு : நவீன் நூலி
தயாரிப்பு வடிவமைப்பாளர் : அவினாஷ் கொல்லா
மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் ( S2 மீடியா )
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

பத்திரிகை வெளியீடுஇந்தியாவின் முதல் Visual-Only Station நெட்வொர்க் – Impressn அறிமுகம்

0

சென்னை, 9 பிப்ரவரி 2026:
நகரங்களில் ஆஃப்லைன் மார்க்கெட்டிங் தற்போது புதிய கட்டத்தை அடைந்து வருகிறது. மக்கள் தினமும் காணும் காட்சிகள் அவர்களின் நினைவில் இடம் பிடிக்கின்றன. இதை அடிப்படையாகக் கொண்டு, Impressn Visual-Only Station என்ற புதிய மார்க்கெட்டிங் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

Visual-Only Station என்றால் என்ன?
Visual-Only Station என்பது ஒலியில்லாமல், தொடர்ந்து காணப்படும் சிறிய LED திரை. மக்கள் அங்கு இருக்கும்போது இயற்கையாகக் கவனிக்கும் விதமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திரைகள் தகவல், பொழுதுபோக்கு மற்றும் குறைந்த அளவு விளம்பரங்களை இயக்குகின்றன.

Impressn-ன் பங்கு
Impressn Visual-Only Station ஐ இந்தியாவில் ஒருங்கிணைந்த நெட்வொர்க் வடிவத்தில் செயல்படுத்தும் முதல் நிறுவனம். ஒவ்வொரு திரையும் தனித்தனியாக இல்லாமல், ஒருங்கிணைந்த முறையில் இயக்கப்படும்.

Visual-Only Station களில் உள்ளடக்கம்:
70% தகவல் மற்றும் பொழுதுபோக்கு
30% விளம்பரங்கள்
இதனால் பார்வையாளர்கள் விளம்பரங்களால் சிரமப்படுவதில்லை, பிராண்டுகளுக்கு நினைவாற்றல் அதிகமாகும்.

திரைகள் எங்கே அமைக்கப்படுகின்றன?
மக்கள் காத்திருக்கும் அல்லது நேரம் செலவிடும் இடங்களில்:
டீ கடைகள் மற்றும் கஃபேக்கள்
ரீட்டெயில் கடைகள்
வணிக மையங்கள்
மக்கள் அடிக்கடி வருகை தரும் பொது இடங்கள்

Impressn-ன் தனிச்சிறப்பு
Visual-Only Station கள் ஒழுங்காக உள்ளடக்கம் காட்டி, மக்கள் தினசரி இயற்கையாக பார்க்கும் முறையில் செயல்படுகின்றன. இது விளம்பரங்களை நினைவில் நிறுத்த உதவுகிறது.

பிராண்டுகளுக்கு பயன்
நீண்ட நேரம் பார்வை ஈர்க்கும்
உள்ளூர் மக்களை இலக்கு செய்யும்
குறைந்த செலவில் விளம்பரம் செய்யும்
நல்ல நினைவாற்றல் ஏற்படும்

பல்வேறு துறைகளில் பயன்பாடு
நுகர்வோர் பிராண்டுகள்
ரியல் எஸ்டேட் திட்டங்கள்
மருத்துவமனைகள்
கல்வி நிறுவனங்கள்
ரீட்டெயில் கடைகள்
நிகழ்வுகள் மற்றும் உள்ளூர் அறிமுகங்கள்

எதிர்கால நோக்கு
Visual-Only Station கள் அமைதியாக, தினசரி சூழலில் இடம் பிடித்து, மக்கள் கவனத்தை ஈர்க்காமல் இருக்கின்றன. Impressn இந்தியாவில் இதன் நெட்வொர்க் விரிவாக்கத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

Impressn
இந்தியாவின் முதல் Visual-Only Station நெட்வொர்க்

ZEE5, அனுராக் காஷ்யப் இயக்கத்தில், மும்பையின் இருண்ட உலகைக் காட்டும் ‘கென்னடி’ பட டிரெய்லரை வெளியிட்டது !!

0

இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, புகழ்மிகு இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரில்லர் படமான ‘கென்னடி’ படத்தின் அதிரடியான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைக் குவித்த ‘கென்னடி’ திரைப்படம், பிப்ரவரி 20 அன்று ZEE5-ல் இந்தியப் பார்வையாளர்களுக்காக பிரத்தியேகமாக பிரீமியர் ஆகிறது.

‘கென்னடி’ மும்பையை மையமாகக் கொண்டு, நாயர் பாணியில் உருவான ஒரு அதிரடியான திரில்லர் கதை. முன்னாள் காவலராக இருந்து ஒப்பந்தக் கொலையாளியாக மாறிய கென்னடி உதய் ஷெட்டி (Rahul Bhat) என்பவரின் இரட்டை வாழ்க்கையைப் படம் பின்தொடர்கிறது. பகலில் டாக்சி டிரைவராகவும், மறைவில் ஊழல் போலீஸ் கமிஷனர் ரஷீத் கானுக்காக கொலை ஒப்பந்தங்களை நிறைவேற்றுபவராகவும் வாழும் கென்னடி, தனது மகன் இழப்பினால் உண்டான வலி மற்றும் அவருடைய சிதைந்து போன குடும்பத்தின் நினைவுகளால் துரத்தப்படுகிறார். கடந்த காலத்திலிருந்து தப்பிக்க முடியாத நகரத்தில், தன்னையே தேடும் அவரது பயணம் தான் இப்படத்தின் மையம்.

படத்தில் ராகுல் பட் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார், சன்னி லியோனே, மோஹித் தகல்கர், மேகா பர்மன், அமீர் தல்வி, அபிலாஷ் தாப்லியால், கரிஷ்மா மோடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் கென்னடியின் இருண்ட, பிளவுபட்ட உலகத்திற்குப் பல அடுக்குகளைச் சேர்க்கிறார்கள்.

கென்னடி டிரெய்லர், மௌனம், கோபம், உயிர்தப்புதல் ஆகிய உணர்வுகளால் நிரம்பிய கதையைக் சொல்கிறது. வெடிச்சிதறல்கள், மிரட்டல் வலையங்கள், அதிகார மையங்கள் எனும் அபாயகரமான சதியில் கென்னடி சிக்க வைக்கப்படும்போது, உண்மை, பழிவாங்கல், இறுதிக்கட்ட மீட்கும் முயற்சி என வன்முறையுடன் கூடிய தேடலுக்கு தள்ளப்படுகிறார். ஸ்டைலிஷ் ஆக்ஷன், அச்சமூட்டும் காட்சிகள், அனுராக் காஷ்யப்பின் முத்திரைமிக்க நாயர் கதையாக்கம் இவை அனைத்தும் இணைந்து, தனிமை, நீதி, சமரசமற்ற தேர்வுகளின் விலையை ஆராயும் உணர்ச்சிமிக்க திரையனுபவத்துக்கான மேடையை அமைக்கின்றன.

டிரெய்லர்: https://youtu.be/ZNZuX5zSHYw

படம் குறித்து அனுராக் காஷ்யப் கூறியதாவது..,
“‘கென்னடி’ நான் உருவாக்கிய மிகவும் தனித்துவமான படங்களில் ஒன்று. இந்த படத்தின் பயணம் மிக நீண்டது. ஆனால் திரைப்பட விழாக்களில் கிடைத்த ஒவ்வொரு கருத்துக்களும், நான் இந்த படத்தை உருவாக்கியதற்கான அர்த்தத்தைத் தந்தது. டிரெய்லர், வெளியில் வன்முறையுடன் இருந்தாலும் உள்ளே ஆழமாக காயமடைந்த ஒரு மனிதனின் உலகத்துக்குள் உங்களை அழைத்துச் செல்கிறது. எந்த சமரசமும் இன்றி, படத்தை அதன் மூல வடிவிலேயே ZEE5 பார்வையாளர்களிடம் கொண்டு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி.”

நடிகர் ராகுல் பட் கூறியதாவது..,
“கென்னடி பாத்திரத்தில் நடித்தது என்னையே மாற்றியது. கென்னடி தனிமையானவன், கோபமிக்கவன், பலவீனமானவன் எப்போதும் கடந்த காலத்திலிருந்து ஓடிக்கொண்டிருப்பவன். அவனின் மௌனத்திலும், கோபத்திலும் வாழ்வது மனதளவில் சோர்வூட்டினாலும், அந்த காதாப்பாத்திரம் எனக்கு மிகுந்த திருப்தியளித்தது. திரை விழா பார்வையாளர்கள் படத்தைக் கொண்டாடியது பெரும் நம்பிக்கையளித்தது. இப்போது இந்தியப் பார்வையாளர்கள் கென்னடியின் பயணத்தையும், வலியையும், அனுபவிப்பதைக் காண ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.”

சன்னி லியோன் கூறியதாவது..,

“‘கென்னடி’ படம் நடிகையாக என்னை முற்றிலும் வேறொரு உணர்ச்சி வெளிக்குள் தள்ளியது. சார்லி மர்மமும், நுட்பமும், வலிமையும் ஒருசேர கொண்டவள். அவளின் பயணத்தை ஆராய்வது சவாலானதும், நிறைவைத் தருவதுமான அனுபவம். அனுராக் காஷ்யப்புடன் பணியாற்றியது, உரையாடலை விட மௌனத்தை கொண்டாடக் கற்றுக்கொடுத்தது. இதுவரை அனுபவிக்காத விதங்களில் இந்த படம் எனக்கு பெரிய சவால்களைத் தந்தது. அதற்காக அனுராக் காஷ்யப்புக்கு நன்றி. பார்வையாளர்கள் இந்த இருண்ட, அழகான உலகத்தை அனுபவிப்பதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

20-ஆம் தேதி பிப்ரவரி முதல், ஒரு அதிரடியான திரில்லர் பயணம் ‘கென்னடி’ படத்தை ZEE5 ல் காணத் தயாராகுங்கள்.

ZEE5 பற்றி:
ZEE5 என்பது பாரதத்தின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும். ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தின் ஒரு பகுதியாக செயல்படும் ZEE5, பல மொழிகளில் கதைகளை சொல்லும் தளமாக விளங்குகிறது. 4,071+ திரைப்படங்கள், 1,800+ டிவி நிகழ்ச்சிகள், 422+ வெப் ஒரிஜினல்ஸ், 4,492+ இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரத்திற்கு மேற்பட்ட ஆன்-டிமாண்ட் உள்ளடக்கங்களை கொண்ட விரிவான நூலகத்தை இது வழங்குகிறது. 12 மொழிகளில் – இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம், ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி – தனிப்பயன் மற்றும் ஹைப்பர்-லோக்கல் சந்தா திட்டங்களுடன் உள்ளடக்கம் வழங்கப்படுகிறது.உலகளாவிய டெக் கூட்டாளிகளுடன் உருவாக்கப்பட்ட வலுவான டீப்-டெக் கட்டமைப்பு, பல சாதனங்கள் மற்றும் இயக்க முறைமைகளில் தடையற்ற பார்வை அனுபவத்தை ZEE5 வழங்க உதவுகிறது.

Facebook, Instagram, LinkedIn மற்றும் X-ல் ZEE5-ஐ பின்தொடருங்கள்.

Rockstar Anirudh Launches “Ambu Vitta Kirukki” – A Soulful Indie Love Anthem That Celebrates Memories, Emotions & Second Chances

0

The independent music space witnessed a special and heart-warming moment on February 13th, as Rockstar Anirudh Ravichander officially launched the indie music video “Ambu Vitta Kirukki”, giving wings to a passionate team of young and dedicated filmmakers.

Blending soulful music with emotionally rich visuals, Ambu Vitta Kirukki (AVK) is an “Ex-Love” album song that revisits memories of love, separation, and the lingering emotions that never truly fade. The song speaks to every heart that has loved, lost, and remembered.

The team expresses their heartfelt gratitude to Anirudh sir for believing in the project and presenting it to the world. His support has been a huge encouragement to the entire crew and marks a dream milestone for this independent venture.

A Visual & Musical Treat

Crafted with a cinematic approach, the music video beautifully balances raw emotions, poetic storytelling, and stylish choreography, offering audiences both an indie vibe and a theatrical visual experience.

With soothing melodies, meaningful lyrics, and expressive visuals, the song captures:

  • The nostalgia of past love
  • The pain of separation
  • The unexpected emotions when ex-lovers meet again

Every frame is designed to feel intimate, relatable, and visually aesthetic, making it a complete audio-visual experience.

Lead Cast That Brings the Emotion Alive

🌟 Suraj Kumar – A Powerful New Face to Watch

Leading the video is Suraj Kumar, whose energetic screen presence, expressive performance, and confident dance moves bring tremendous life to the song. His dedication and discipline reflect in every frame, making his performance both natural and impactful.

With charm, intensity, and strong body language, Suraj effortlessly carries the emotional core of the story. Ambu Vitta Kirukki marks a memorable and promising step in his artistic journey, positioning him as a fresh talent to look out for in Kollywood.

🤍 Dharshna Sripal – Grace Meets Emotion

Starring opposite him is Dharshna Sripal, who adds elegance, warmth, and depth to the narrative. Known for winning hearts through her performances, she brings authenticity and subtlety to her role, perfectly complementing the song’s emotional tone.

Together, the pair share a refreshing chemistry that elevates the storytelling.

A Vision Led by Passion – Vijay Kiran

The project is helmed by Vijay Kiran, who has taken charge as Director and Cinematographer.

With over a decade of industry experience and having worked alongside leading technicians in multiple feature films, Vijay Kiran brings strong technical expertise and a keen visual sense to the table. His decision to step into independent music stems from the creative freedom it offers — allowing storytelling through frames, light, and emotion.

For Ambu Vitta Kirukki, he has crafted each shot with a cinematic richness, ensuring the visuals match the emotional weight of the music. His dual responsibility as director and cinematographer has resulted in a cohesive and striking visual language throughout the video.

Young & Dynamic Technical Team

The song is powered by an energetic young team who brought their collective passion to life:

Music – Varun (young sensation delivering a fresh, Anirudh-inspired soundscape)

Lyrics – Priyesh

Choreography – Manoj

Editing – Ranjith Kumar

VFX & Post Production – Young creative talents

Color Grading – Premium cinematic finish

Their teamwork and dedication reflect clearly on screen, making AVK a complete and polished production.

A Dream Turned Reality

What began as a simple independent idea has now grown into a proud achievement with Rockstar Anirudh launching the song — a moment the team calls “beyond expectations.”

From uncertainty to celebration, Ambu Vitta Kirukki stands as a testament to belief, perseverance, and passion-driven filmmaking.

The team wholeheartedly thanks the media and audience for their continued love and support and looks forward to taking this musical journey to greater heights.

Ambu Vitta Kirukki – Now Out

A song for every heart that remembers love.
Feel it. Relive it. Cherish it.

ராக்ஸ்டார் Anirudh Ravichander வெளியிட்ட “Ambu Vitta Kirukki ( அம்பு விட்ட கிறுக்கி) ” – நினைவுகள், உணர்வுகள் மற்றும் மறுகாதலை கொண்டாடும் மனதை உருக்கும் இன்டி காதல் கீதம்

சுயாதீன இசை உலகம் பிப்ரவரி 13ஆம் தேதி ஒரு சிறப்பான, மனதை நெகிழச் செய்யும் தருணத்தை அடைந்துள்ளது. ராக்ஸ்டார் Anirudh Ravichander அதிகாரப்பூர்வமாக “Ambu Vitta Kirukki” எனும் இன்டி மியூசிக் வீடியோவை வெளியிட்டு, உற்சாகமும் அர்ப்பணிப்பும் கொண்ட இளம் படைப்பாளிகள் குழுவிற்கு மிகப்பெரிய உற்சாகத்தை வழங்கினார்.

மனதைத் தொடும் இசையையும் உணர்ச்சிகள் நிறைந்த காட்சிகளையும் இணைக்கும் “Ambu Vitta Kirukki ( அம்பு விட்ட கிறுக்கி)” (AVK) என்பது “Ex-Love” ஆல்பம் பாடலாகும். இது காதல், பிரிவு மற்றும் காலம் கடந்தும் அழியாத நினைவுகளை மீண்டும் உயிர்ப்பிக்கிறது. காதலித்து இழந்து, நினைவுகளில் வாழ்பவர்களின் இதயத்தோடு இந்தப் பாடல் உரையாடுகிறது.
இந்தத் திட்டத்தில் நம்பிக்கை வைத்து உலகிற்கு அறிமுகப்படுத்திய அனிருத் அவர்களுக்கு குழுவினர் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கின்றனர். அவரது ஆதரவு, முழுக் குழுவிற்கும் மிகப்பெரிய ஊக்கமாக அமைந்து, இந்த சுயாதீன முயற்சிக்கு கனவான ஒரு மைல்கல்லாக மாறியுள்ளது.

காட்சி & இசையின் இனிய விருந்து:

சினிமா பாணியில் வடிவமைக்கப்பட்ட இந்த மியூசிக் வீடியோ, இயல்பான உணர்வுகள், கவிதைத் தொனியிலான கதை சொல்லல் மற்றும் ஸ்டைலிஷ் நடன அமைப்புகளை சமநிலைப்படுத்துகிறது. இது பார்வையாளர்களுக்கு இன்டி ( தனி இசை) உணர்வையும், திரையரங்கு தரத்திலான காட்சிப் பரிமாணத்தையும் வழங்குகிறது.இனிமையான மெலடி, அர்த்தமுள்ள வரிகள் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகள் மூலம் பாடல் பதிவு செய்கிறது:

  • கடந்த காதலின் இனிய நினைவுகள்
  • பிரிவின் வலி
  • முன்னாள் காதலர்கள் மீண்டும் சந்திக்கும் போது எழும் எதிர்பாராத உணர்வுகள்

ஒவ்வொரு ஃப்ரேமும் நெருக்கமான, தொடர்புடைய மற்றும் கண்ணுக்கு இனிய அனுபவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சூரஜ் குமார் – கவனிக்க வேண்டிய புதிய திறமை

இந்த வீடியோவில் முன்னணி கதாபாத்திரமாக சூரஜ் குமார் நடிக்கிறார். அவரது உற்சாகமான திரைநிகழ்வு, உணர்வுபூர்வமான நடிப்பு மற்றும் தன்னம்பிக்கை நிறைந்த நடன அசைவுகள் பாடலுக்கு உயிரூட்டுகின்றன. ஒவ்வொரு காட்சியிலும் அவரது அர்ப்பணிப்பும் கட்டுப்பாடும் தெளிவாக பிரதிபலிக்கின்றன.
கவர்ச்சி, தீவிரம் மற்றும் வலுவான உடல் மொழியுடன் அவர் கதையின் உணர்ச்சி மையத்தை சுலபமாக தாங்கிச் செல்கிறார். “Ambu Vitta Kirukki” அவரது கலைப் பயணத்தில் நினைவுகூரத்தக்க தொடக்கமாக அமைந்து, கோலிவுட்டில் கவனிக்க வேண்டிய புதிய முகமாக அவரை நிலைநிறுத்துகிறது.

தர்ஷ்னா ஸ்ரீபால் – நளினமும் உணர்வும் இணையும் தருணம்

சூரஜ் குமாருக்கு ஜோடியாக தர்ஷ்னா ஸ்ரீபால் நடித்துள்ளார். நளினம், பாசம் மற்றும் ஆழம் கொண்ட அவரது நடிப்பு, கதைக்கு உயிரூட்டுகிறது. இயல்பான வெளிப்பாடு மற்றும் மென்மையான உணர்ச்சி வெளிப்பாடுகள் மூலம் பாடலின் உணர்ச்சி தாளத்தை அவர் அழகாக பூர்த்தி செய்கிறார்.
இருவரின் திரை முடியும் கதை சொல்லலை மேலும் உயர்த்துகிறது.

விஜய் கிரண் – காட்சிகளால் வழிநடத்தும் பார்வை

இந்தத் திட்டத்தை இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் கிரண் வழிநடத்துகிறார்.

ஒரு தசாப்தத்திற்கும் மேலான அனுபவம் கொண்ட அவர், பல திரைப்படங்களில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களுடன் பணியாற்றியுள்ளார். தொழில்நுட்ப நுணுக்கமும் காட்சித் தெளிவும் கொண்ட அவரது பார்வை, இந்த மியூசிக் வீடியோவில் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.

சுயாதீன இசைத் துறையில் கதை சொல்லும் சுதந்திரமே அவரை ஈர்த்தது. “Ambu Vitta Kirukki”யில் ஒவ்வொரு காட்சியும் இசையின் உணர்ச்சி பாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் சினிமாப் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான இரட்டை பொறுப்பை திறம்பட மேற்கொண்டதால், முழு வீடியோவும் ஒருங்கிணைந்த காட்சித் தன்மையை பெற்றுள்ளது.

இளம் மற்றும் துடிப்பான தொழில்நுட்பக் குழு
இந்தப் பாடலின் பின்னால் உற்சாகம் நிறைந்த இளம் குழுவின் கூட்டு முயற்சி உள்ளது:

இசை – வருண் (அனிருத் பாணியில் புதுமையான இசை வடிவமைப்பு)

பாடல்வரிகள் – பிரியேஷ்

நடன அமைப்பு – மனோஜ்

எடிட்டிங் – ரஞ்சித் குமார்

VFX & Post Production – இளம் படைப்பாற்றல் மிக்க குழு

கலர் கிரேடிங் – உயர்தர சினிமாப் பாணி நிற அமைப்பு

ஆகியவர்களின் ஒருங்கிணைந்த உழைப்பு திரையில் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.

கனவு நனவான தருணம்
ஒரு சாதாரண சுயாதீன யோசனையாக தொடங்கிய இந்த முயற்சி, இன்று ராக்ஸ்டார் Anirudh Ravichander வெளியீட்டால் பெருமைமிகு சாதனையாக மாறியுள்ளது.
“எதிர்பார்ப்புகளை மீறிய தருணம்” என்று குழுவினர் இதை விவரிக்கின்றனர்.

மகிழ்ச்சிகரமான ஆரம்பத்திலிருந்து கொண்டாட்ட தருணம் வரை, “Ambu Vitta Kirukki” நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் ஆர்வமிக்க படைப்புத் திறனின் சான்றாக திகழ்கிறது.
ஊடகங்களுக்கும் ரசிகர்களுக்கும் குழுவினர் மனமார்ந்த நன்றியை தெரிவித்து, இந்த இசைப் பயணத்தை மேலும் உயரங்களுக்கு கொண்டு செல்லத் தயாராக உள்ளனர்.

Ambu Vitta Kirukki – இப்போது வெளியாகியுள்ளது
காதலை நினைவுகூரும் ஒவ்வொரு இதயத்திற்குமான ஒரு பாடல்.
அதை உணருங்கள்.
மீண்டும் அனுபவியுங்கள்.
அன்போடு பாதுகாத்து வைத்திருங்கள்.

தனிநபர் ஸ்கேட்டிங் விளையாட்டில் சென்னையைச் சேர்ந்த 4 வயது சிறுவன் எம்.ஹம்தான் ஃபஸா நிகழ்த்திய உலக சாதனை!

0

சென்னையைச் சேர்ந்த 4 வயது சிறுவன் எம்.ஹம்தான் ஃபஸா (M.Hamdam Fazza) 8 கி மீ தூரத்தை 1 மணி நேரம் 4 நிமிடங்களில் துளியும் ஓய்வின்றி தொடர்ச்சியாக ஸ்கேட்டிங் மூலம் கடந்து உலக சாதனை நிகழ்த்தியிருக்கிறார். 

போதையில்லா உலகை உருவாக்குவோம் (SAY NO TO DRUG) என்பதை நோக்கமாக கொண்டு, சமூக விழிப்புணர்வு பிரச்சாரமாக பிப்ரவரி 14; 2026 அன்று சென்னை மெரீனா கடற்கரை செல்ஃபி பாயிண்ட்டில் நடந்த நிகழ்வில் மேற்குறிப்பிட்ட சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்த சாதனை ’இந்தியன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்’ (INDIA BOOK OF WORLD RECORDS) பட்டியலில் இடம்பிடித்தது.

அதையடுத்து சாதனை நிகழ்த்திய சிறுவனுக்கு அங்கீகார சான்றிதழை வழங்கிய ’இந்தியன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்’ அமைப்பின் எம்.டி.சதாம் ஹுசேன், சாதனை சிறுவனுக்கு வாழ்த்து தெரிவித்து அவருக்கு பயிற்சியளித்து வரும் BLACK TIGER Roller Skating Academy’யின் நிறுவனர் டோனா சதீஷையும், ஊக்கப்படுத்தும் சிறுவனின் பெற்றோரையும் பாராட்டினார். ”உலக வரலாற்றில் இத்தனை சிறுவயதில் இதுபோன்ற சாதனையை யாரும் செய்ததில்லை” என குறிப்பிட்ட அவர் ”இப்படியான சாதனையாளர்களை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும், சாதனையாளர்கள் உருவாக தேவையான வசதிகளை உருவாக்கிக்  கொடுக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

இரண்டு வருடங்கள் முன் இதே BLACK TIGER Roller Skating Academy’யில் பயிற்சி பெற்றவரான ஏ.ஜே.ரபியா சக்கியா தனிநபர் ஸ்கேட்டிங் விளையாட்டில் 44 கி.மீ தூரத்தை 1 மணி நேரம் 48 நிமிடங்களுக்குள் கடந்து புதிய உலக சாதனை படைத்திருந்தார். அவர் இன்றைய நிகழ்வில் கலந்துகொண்டு சிறுவன் ஹம்தான் ஃபஸாவை ஊக்குவித்தார்.

”எங்கள் பயிற்சி நிறுவனம் இரு உலக சாதனையாளர்களை உருவாக்கியுள்ளது. எங்களிடம் பயிற்சி பெற்று வருகிற மற்றவர்களும் அடுத்தடுத்து உலக சாதனை பட்டியலில் இணைவார்கள்” என்றார் BLACK TIGER Roller Skating Academy’யின் நிறுவனர் டோனா சதீஷ்.  

நிகழ்வில், ஸ்கேட்டிங் விளையாட்டில் வெவ்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் சாதனைச் சிறுவனின் பெற்றோர், சிறுவன் படிக்கும் பள்ளியின் தலைமையாசிரியர் சுகந்தி, உதவி பயிற்சியாளர் தனுஷ் உள்ளிடோர் கலந்து கொண்டனர். நிகழ்வை பலகுரல் கலைஞரும், நடிகருமான விஜய் டிவி மோசஸ் தொகுத்து வழங்கினார்.

குழந்தைப் பருவத்திலேயே மாபெரும் உலக சாதனை படைத்த சிறுவனுக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிகிறது.

Donasathish #raja #hamdanfassa #rabia #worldrecord #blacktigerrollerskatingacadmy

- Advertisement -

Recent Posts