- Advertisement -
Home Blog Page 42

Therincha Kadhalinga Movie Review

0

Therincha Kadhalinga is a recent Tamil romantic drama directed by M. Gajendran, produced by Agri Land Films with music by C.M. Mahendra, unfolding a tender village love story between a young man and a coming-of-age girl amid rural rituals, blending innocent attraction with emotional depth as it shifts from pastoral simplicity to urban complexities involving love, faith, spirituality, and inevitable tragedy. The narrative captures the bittersweet essence of youthful romance and belief, highlighted by poignant moments that resonate on Valentine’s vibes, though it struggles with unclear plotting and uneven transitions that dilute its heartfelt core. Reviews note its sincere emotional beats and rural authenticity as strengths, making it a soft, feel-good watch for romance fans, but pacing issues and lack of sharper focus hold it back from fuller impact, landing around average marks for its modest ambitions.

Pookie Movie Review

0

Pookie is a 2026 Tamil romantic drama directed by Ganesh Chandra, starring Ajay Dhishan as Kailash and RK Dhanusha as Aazhi, who play a couple of six years that dramatically breaks up publicly after a road rage incident fueled by petty bickering over nicknames like “Pookie.” The film then splits focus on their separate post-breakup coping mechanisms—Kailash dives into anime binges, biking fails, gym routines, and family realizations, while Aazhi battles stress-eating, shopping sprees, and a shady spiritual group—using trendy Gen Z habits and viral distractions to mask their lingering bond, underscored by Vijay Antony’s sharp music. Reviews highlight its stylish visuals, relatable vignettes on modern love’s fractures (like power dynamics in choices or headspace occupied by exes), and confident lead turns from Ajay and Dhanusha, but criticize thin character depth, uneven execution, jarring family subplots, moral preachiness, sudden music drops, and overreliance on surface-level references without emotional heart or insight. Overall, it’s a polished but underwhelming rom-com checklist for younger audiences, fair watch that prioritizes gimmicks over substance.

A Fatima Vijay Antony Company
Vijay Antony Film Corporation
Meera Vijay Antony Presents
“Pookie”

Cast & Crew Details

Cast:

Ajay Dhishan
R. K. Dhanusha
Pandiarajan
Sunil
Lakshmi Manchu
Indumathi Manigandan
Aaditya Kathir
Vivek Prasanna
Black Pandi
Bigg Boss Sathya
M. J. Shriram
Radha
Ashwin Ram
Shiyara Sharmi
Priyanka

Crew:

Production – A Fatima Vijay Antony Company – Vijay Antony Film Corporation – Meera Vijay Antony Presents
Director, DOP: Ganesh Chandra
Editor, Music: Vijay Antony
Story, Screenplay and Dialogues: Puthiya Parithi
Art Director: Pragatheeswaran Paneerselvam
Choreographer: Hari Kiran
Stunt Master: Prabhu Jacky
Costume Designer: Malavika Selvam
Hair & Makeup: Seeralan Mani
Publicity Designer: Dhani Aelay, Ramesh, Manoj Velmurugan (Vattal Studios)
PRO: Sathish (Tamil)

My Lord Movie Review

0

My Lord is a 2026 Tamil social satire directed by Raju Murugan, starring Sasikumar as Muthu Sirpi and Chaithra J Achar as his wife Sushila, tackling themes of exploitation, illegal kidney trafficking, poverty, and systemic corruption through a quirky, engaging narrative. The story follows the couple, declared dead on paper due to bureaucratic malice, as they fight to reclaim their identities amid debt traps from loan sharks, political interference, and a minister needing Muthu’s kidney, blending humanism, Vallalar-inspired optimism, and dark humor rather than heavy courtroom drama. Sasikumar delivers a committed, naive performance true to his style, supported by strong turns from Chaithra, Guru Somasundaram as a journalist, and Asha Sharath, with Sean Roldan’s understated score, Nirav Shah’s cinematography, and sharp dialogues elevating the technical craft.​

Reviews praise its thought-provoking message on kindness, dignity, and democracy’s erosion, with engaging family drama, biting satire on rich-poor divides, and a fresh take on ordinary struggles that keeps viewers hooked, its bold script and emotional core. However, it falters with a slow first half, overlong detours (hospital scenes, rituals), pacing issues that dilute the focus on the leads’ poignant love story, and a loud, unsubtle message at times. Overall, it’s a commendable, impactful watch for its relevance and heart, ideal for families seeking substance over spectacle, though sharper editing could have made it sharper.

 MY LORD CAST AND CREW

CAST

Sasi kumar – Muthu Sirpi
Chaithra J Achar – Suseela
Asha Sarath – Sujatha mohan
Guru Somasundaram –  Naa kathirvelan
Jaya Prakash – Judge
Gopi Nainar – Gopi                        
Vasumitra – Narsim

CREW

Writer, Director – Raju Murugan
Produced by : Jayanthi Ambethkumar
Presents By – Suriya (2D  Entertainment) ,Ambethkumar
Banners – Olympia Movies
Music – Sean Roldan
DOP  – Nirav Shah
Editor – Sathyaraj Natarajan
Art Director -Muni Paulraj
Stunt –   PC Stunts
Lyrics –  Yugabharathi, Raju murugan , Athipatti k.Mariyappan , Dinesh Rajendran
Publicity design – Viyaki
Stills – Suresh Durai
Costume Designer – D R Poornima
Pro – Yuvraaj

Chennai Brings the Global ECMO Community Together at SWAAC ELSO & ESOI Conference 2026

0

Chennai: Chennai emerged as a global hub for critical care medicine as it hosted the 12th Annual International South West Asia and Africa Chapter of the Extracorporeal Life Support Organisation (SWAAC ELSO) Conference, along with the 15th Annual National ECMO Society of India (ESOI) Conference, from February 7th and 8th, 2026, at Radisson Blu GRT.

The prestigious conference was organised by Dr K. Madhan Kumar, Director – ECMO & VAD, Senior
Consultant – Cardiothoracic, ECMO, VAD & Transplant Surgeon, and Dr Indira Jayakumar, Senior Consultant and Lead Paediatric Intensivist, along with Kauvery Hospital, and brought together some of the world’s leading experts in critical care, cardiothoracic surgery, cardiology, paediatrics, anaesthesiology, pulmonology, nursing, and perfusion technology.

Over 700 delegates from India and several other countries participated in the event, highlighting Chennai’s growing stature as a centre of excellence in advanced life-support medicine.

The conference focused on the expanding role of Extracorporeal Membrane Oxygenation (ECMO) in
managing patients with severe heart and lung failure. Over the past 15 years, ECMO has transformed intensive and emergency care, offering hope and improved survival in conditions once considered uniformly fatal.

This evolution was reflected in the conference sessions, where speakers shared real-world clinical experiences, emerging challenges, and evolving best practices in adult and paediatric ECMO care.
The scientific programme featured a strong blend of international and national faculty, including senior leaders from the global ELSO community. In addition to keynote lectures and panel discussions, participants engaged in hands-on workshops on ECMO cannulation, advanced VA and VV ECMO, ECPR, and paediatric ECMO, enabling practical, skill-based learning.

Speaking on the occasion, Dr K. Madhan Kumar said, “ECMO is no longer a last-resort therapy – it is
becoming an integral part of modern critical care. Our aim through this conference was to share knowledge, standardise practices, and empower healthcare professionals to deliver timely and effective ECMO support, especially in complex cardiac and pulmonary failures where all other modalities couldn’t help.” He added, “Hosting this international conference in Chennai reflects the city’s growing leadership in advanced critical care and transplant medicine.”

Dr Aravindan Selvaraj, Co-founder and Executive Director of Kauvery Hospital, remarked, “At Kauvery Hospital, we believe that world-class healthcare is built on strong clinical expertise, continuous learning, and global collaboration. Supporting and hosting this conference aligns with our vision of making advanced life-saving technologies accessible to patients across the region.” He further said, “We are proud of our ECMO team for their dedication and excellence. Conferences like this strengthen our healthcare ecosystem and ultimately benefit patients who need the most advanced critical care.”

SWAAC ELSO, in collaboration with ESOI, continues to play a vital role in promoting the safe and effective use of ECMO, including in resource-limited settings. The conference further advanced this mission by fostering collaboration, research, and knowledge-sharing across countries.

The SWAAC ELSO & ESOI Conference 2026 concluded on a high note, leaving participants with enhanced clinical insights, stronger professional networks, and a renewed commitment to improving survival and quality of life for critically ill patients worldwide.

SWAAC ELSO & ESOI மாநாடு 2026 இல், உலகளாவிய ECMO சமூகத்தை ஒன்றிணைத்தது சென்னை

பிப்ரவரி 7 மற்றும் 8, 2026 அன்று ரேடிசன் ப்ளூ ஜிஆர்டியில், 15 ஆவது வருடாந்திர தேசிய ECMO சொசைட்டி ஆஃப் இந்தியா (ESOI) மாநாட்டுடன், தென்மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா பிரிவின் எக்ஸ்ட்ரா கார்போரியல் லைஃப் சப்போர்ட் ஆர்கனைசேஷன் (South West Asia and Africa Chapter of the Extracorporeal Life Support Organisation (SWAAC ELSO) இன் 12வது வருடாந்திர சர்வதேச மாநாட்டை நடத்தியதன் மூலம், சென்னை ஒரு உலகளாவிய தீவிர மருத்துவத்திற்கான மையமாக உருவெடுத்தது.

இந்த மதிப்புமிக்க மாநாட்டை, ECMO & VAD இயக்குநரும், இருதய மார்பு பிரிவு மூத்த ஆலோசகரும், ECMO, VAD & மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் K. மதன் குமார் மற்றும் மூத்த ஆலோசகரும், குழந்தை மருத்துவ தீவிர சிகிச்சை நிபுணருமான மருத்துவர் இந்திரா ஜெயக்குமார் ஆகியோர் காவேரி மருத்துவமனையுடன் இணைந்து ஏற்பாடு செய்தனர். மேலும் இம்மாநாட்டில், தீவிர பராமரிப்பு, இருதய மார்பு பிரிவு அறுவை சிகிச்சை, இருதயவியல், குழந்தை மருத்துவம், மயக்கவியல், நுரையீரல், நர்சிங் மற்றும் ஊடுபாய்வு (perfusion) தொழில்நுட்பம் ஆகியவற்றிலுள்ள உலகின் முன்னணி நிபுணர்களை ஒன்றிணைத்தனர்.

இந்தியா மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, மேம்பட்ட உயிர்-பராமரிப்பு (life – support) மருத்துவத்தில் சிறந்து விளங்கும் மையமாக சென்னையின் வளர்ந்து வரும் வளர்ச்சியை எடுத்துக்காட்டினர்.

கடுமையான இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு நோயாளிகளை நிர்வகிப்பதில் எக்ஸ்ட்ரா கார்போரியல் மெம்பிரேன் ஆக்ஸிஜனேஷனின் (ECMO – Extracorporeal Membrane Oxygenation) விரிவடையும் பங்கை இந்த மாநாடு மையமாகக் கொண்டது. கடந்த 15 ஆண்டுகளில், தீவிர மற்றும் அவசர சிகிச்சையின் தன்மையை ECMO மாற்றியுள்ளது. ஒரு காலத்தில் ஆபத்தானதாகக் கருதப்பட்ட நோய் பாதிப்பு நிலைமைகளுக்கு, நம்பிக்கையையும் மேம்பட்ட குணமாகும் வாய்ப்பையும் வழங்குகிறது.

இத்துறையின் பரிணாம வளர்ச்சி, மாநாட்டு அமர்வு உரையாடல்களில் பிரதிபலித்தது. பேச்சாளர்கள், நிஜ உலக மருத்துவ அனுபவங்கள், வளர்ந்து வரும் சவால்கள் மற்றும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் ECMO பராமரிப்பில் வளர்ந்து வரும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொண்டனர். இந்த அறிவியல் நிகழ்ச்சியில் உலகளாவிய ELSO சமூகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் உட்பட சர்வதேச மற்றும் தேசிய ஆசிரியர்களின் வலுவான கலவை இடம்பெற்றது. முக்கிய சொற்பொழிவுகள் மற்றும் குழு விவாதங்களுக்கு மேலதிகமாக, ECMO கேனுலேஷன் (cannulation), மேம்பட்ட VA மற்றும் VV ECMO, ECPR மற்றும் குழந்தைநல ECMO பற்றிய பயிலரங்கில் பங்கேற்பாளர்கள் ஆர்வம் காட்டினர். இப்பயிலரங்குகள், செயல்முறை மற்றும் திறன் அடிப்படையிலான கற்றலை அளிக்கும் வகையில் அமைந்தன.

இந்த நிகழ்வில் பேசிய மருத்துவர் K. மதன் குமார், “ECMO, தற்போது ஒரு கடைசி முயற்சி சிகிச்சையாக இல்லாமல், நவீன தீவிர சிகிச்சையில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாறி வருகிறது. இந்த மாநாட்டின் மூலம் அறிவைப் பகிர்ந்து கொள்வது, நடைமுறைகளைத் தரப்படுத்துவது மற்றும் சரியான நேரத்தில் மற்றும் பயனுள்ள ECMO ஆதரவை வழங்க சுகாதார நிபுணர்களுக்கு அதிகாரமளிப்பது எங்கள் நோக்கமாகும். குறிப்பாக மற்ற அனைத்து முறைகளும் உதவ முடியாத சிக்கலான இதய மற்றும் நுரையீரல் செயலிழப்புகளின் பொழுது செயல்திறன்மிக்க ECMO பேருதவியாக இருக்கும்” என்றார். மேலும், “இந்த சர்வதேச மாநாட்டை சென்னையில் நடத்துவது, மேம்பட்ட தீவிர சிகிச்சை மற்றும் மாற்று மருத்துவத்தில் நகரத்தின் வளர்ந்து வரும் தலைமைத்துவத்தைப் பிரதிபலிக்கிறது” என்றார்.

காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ், “காவேரி மருத்துவமனை, உலகத்தரம் வாய்ந்த சுகாதாரப் பராமரிப்பு, வலுவான மருத்துவ நிபுணத்துவம், தொடர்ச்சியான கற்றல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். இந்த மாநாட்டை ஆதரிப்பதும் நடத்துவதும், பிராந்தியம் முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு மேம்பட்ட உயிர்காக்கும் தொழில்நுட்பங்களை அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான எங்கள் தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகிறது” என்றார். மேலும், “எங்கள் ECMO குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். இது போன்ற மாநாடுகள் நமது சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துகின்றன. மேலும் இறுதியில், மிகவும் மேம்பட்ட தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்குப் பயனளிக்கின்றன” என்றார்.

SWAAC ELSO, ESOI உடன் இணைந்து, வசதிகள் குறைவாக உள்ள சூழல்கள் உட்பட, ECMO இன் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள பயன்பாட்டை ஊக்குவிப்பதில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது. இம்மாநாட்டின் நோக்கம் பரந்துபட்டு, ஒருங்கிணைப்பையும், ஆராய்ச்சியையும் மற்றும் அறிவுப் பகிர்தலையும் நாடெங்கும் கொண்டு செல்வதில் கவனம் கொள்கிறது.

SWAAC ELSO & ESOI மாநாடு 2026 சிறப்பாக முடிவடைந்தது. பங்கேற்பாளர்களுக்கு மேம்பட்ட மருத்துவ நுண்ணறிவுகள், வலுவான தொழில்முறை கூட்டமைவுகள் மற்றும் உலகளவில் கடுமையாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளின் உயிர்வாழ்வு மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பை மாநாடு அளித்தன.

Maha Samprokshanam of Arulmigu Shri Kodhandaramar Temple to be held in a grand manner on February 8 near Chennai

0

The Maha Samprokshanam of Arulmigu Shri Kodhandaramar Temple, located at Pudhiya Erumaivetti Palayam in Tiruvallur District.near Chennai, will be conducted in a grand and auspicious manner on February 8 (Thai 25) between 9:00 a.m. and 10:30 a.m.

In this sacred spiritual ceremony,
Sri Sadagopa Ramanuja Periya Jeeyar Swamigal of Tirumala–Tirupati and
Sri Govinda Ramanuja Chinna Jeeyar Swamigal of Tirumala–Tirupati
will participate and offer Mangalasasana.

This temple functions under the administration of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Department, and for the past five generations, daily poojas and rituals are being performed in accordance with tradition by the descendants of the Tirumala Ananthapillai lineage.

Arrangements for the Maha Samprokshanam are being carried out by
Fit Person / Assistant Commissioner Thiru M. Sivagnanam, Hereditary Priest Thiru R. Venkata Krishnan,
Executive Officer Thiru M. Madhavan,
the Tirumala Ananthapillai lineage, and the village residents, among others.

Among the various avatars assumed by Shriman Narayana, the Shri Rama Avatar is regarded as supreme. Among the sacred temples where Lord Rama has manifested in Archavatara, Mahishasura Marthanam, known today as Erumaivetti Palayam, stands as a very ancient shrine of great significance and distinction.

Situated on a hill with 74 steps along the banks of the Kosasthalai River, this temple houses Shri Rama, who is seated with Mother Seetha on His left lap, manifesting as a Salagrama stone deity, along with Younger Brother Shri Lakshmana and Shri Hanuman.

This sacred site, with a history dating back nearly 2,000 years, was once a dense forest under the control of the demon Mahishan. At that time, Sage Karkkeya, seeking to protect the people from the demon’s atrocities, performed intense penance on this hill, praying to Shriman Narayana.

Heeding this plea for deliverance, during the period of exile, Lord Rama arrived at this place along with Mother Seetha.
When Seetha Devi went to bathe in the nearby river,
the demon Mahishan, enchanted by her beauty, attempted to violate her.
Distressed by this, the Divine Mother appealed to Lord Rama. To calm her, Rama seated her on His left thigh, embraced her, and relieved her fear.

At that time, Lord Rama, who appeared unarmed like a sage,
took a blade of darbha grass from His hand, snapped its tip, and hurled it.
That seemingly insignificant blade of grass, by the power of Rama’s will,
transformed into four great divine Sakthis and destroyed Mahishan.

As Mahishan was slain, the place came to be known as “Mahisha Marthanam”,
and in Tamil, “Erumaivetti Palayam.”

After subduing those divine energies that destroyed Mahishan, Lord Rama commanded them to remain stationed in the four directions of the forest
as guardian deities to protect the people.
Accordingly, even today, Angala Parameswari, Kattukai Kaathamma,
Ponniyamman, and Moukaalamman,
the four goddesses, continue to safeguard this village.

Witnessing this rare and divine form of Lord Rama, Sage Karkkeya humbly requested, “May You reside here and bless Your devotees.” As per the sage’s wish, Lord Rama manifested there along with His wife Seetha Devi, brother Lakshmana and Hanuman.

In later times, under the guidance of Sage Karkkeya, Chola King Vikrama Chola had the idols sculpted from the rare Salagrama stone brought from Nepal, and constructed this temple.

The Salagrama stone deity possesses immeasurable spiritual power.
It is believed that if one sincerely chants the name “Rama”even once at this sacred site,
it yields the merit equivalent to several lakh prayers.

A special form of worship that grants desired boons involves
adorning the Lord with blue garments and offering blue conch flowers
on three full moon days (Pournamis).

Devotees humbly request everyone to participate in this Maha Samprokshanam,
worship the glorious Shri Kodhandarama
and receive divine blessings and prosperity in this very birth.

சென்னைக்கு அருகில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் பிப்ரவரி 8 அன்று மிக சிறப்பாக நடைபெறவுள்ளது

சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டம் புதிய எருமைவெட்டிப் பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் பிப்ரவரி 8 (தை 25) அன்று காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிக சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்த ஆன்மிக வைபவத்தில் திருமலை திருப்பதி பெரிய கேள்வியப்பன் சடகோப ராமாநுஜ பெரிய ஜீயர் ஸ்வாமிகளும், திருமலை திருப்பதி சிறிய கேள்வியப்பன் கோவிந்த ராமாநுஜ சின்ன ஜீயர் ஸ்வாமிகளும் கலந்து கொண்டு மங்களாசாஸனம் செய்ய உள்ளார்கள்.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இத்திருக்கோயிலில் திருமலை அனந்தாண்பிள்ளை வம்சாவளியினரால் கடந்த ஐந்து தலைமுறைகளாக நித்ய பூஜைகள், உற்சவங்கள் முறைப்படி செய்யப்பட்டு வருகின்றன.

அருள்மிகு ஶ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் வைபவத்திற்கான ஏற்பாடுகளை தக்கார்/உதவி ஆணையர் திரு மு. சிவஞானம், பரம்பரை அர்ச்சகர் திரு ஆர். வேங்கடக்ருஷ்ணன், செயல் அலுவலர் திரு மா. மாதவன், திருமலை அனந்தாண்பிள்ளை வம்சாவளியினர், கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

ஸ்ரீமன் நாராயணன் எடுத்த அவதாரங்களில் ஶ்ரீராம அவதாரம் சிறந்ததாக போற்றப்படும் நிலையில், இராமபிரான் அர்ச்சாவதார திருக்கோலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் திருத்தலங்களில் மகிஷாசுரமர்த்தனம் என்னும் எருமைவெட்டிப் பாளையம் மிகவும் பழமையும் பெரும் சிறப்புகளும் நிறைந்த திருத்தலமாகும்.

கொசஸ்தலை ஆற்றங்கரையில் 74 படிகள் கொண்ட மலையில் அமைந்துள்ள இத்திருக்கோயிலில் ஸ்ரீ ராமபிரான் சீதாப்பிராட்டியாரை தமது இடது மடியில் கொண்டு வீற்றிருந்த திருக்கோலத்தில் சாளக்கிராம திருமேனியாய் இளவல் ஸ்ரீ லக்ஷ்மணன் மற்றும் சொல்லின் செல்வர் ஸ்ரீ ஹனுமனுடன் எழுந்தருளி உள்ளார்.

சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருத்தலம் முன்னொரு காலத்தில் அடர்ந்த வனமாய் மகிஷன் எனும் அரக்கனின் பிடியில் இருந்தது. அப்போது கார்க்கேய முனிவர் அசுரனின் தொல்லைகளில் இருந்து மக்களை காக்க இங்குள்ள மலை மீது ஶ்ரீமன் நாராயணனரை வேண்டி தவம் மேற்கொண்டார்.

விடுதலைக்கு செவி சாய்த்து வனவாசத்தின் போது ராமபிரான் சீதாதேவியுடன் இப்பகுதிக்கு எழுந்தருளினார்.
சீதாதேவி இளைப்பாறுவதற்காக அங்கிருந்த ஆற்றில் நீராடச் சென்றபோது,
அசுரன் மகிஷன் அவரின் அழகில் மயங்கி தீண்ட முற்பட்டான். இதனால் மனம் கலங்கிய அன்னையார் ராமபிரானிடம் முறையிட்டாள்.
தேவியின் நடுக்கத்தைத் தணிக்க, ராமர் அவளைத் தனது இடது தொடையில் அமர்த்தி, அவரை அணைத்து, அவளது பதற்றத்தை ஆற்றினார்.

அப்போது முனிவரைப் போல் ஆயுதமின்றி இருந்த ராமபிரான்,
கையில் இருந்த ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து அதன் நுனியைக் கிள்ளி எறிந்தார்.
அற்பமான அந்தப் புல், ராமரின் சங்கல்பத்தால் நான்கு மகாசக்திகளாக உருப்பெற்று
மகிஷனை வதம் செய்தது. மகிஷன் வதம் செய்யப்பட்டதால், இவ்விடம் ‘மகிஷ மர்த்தனம்’ என்றும்,
தமிழில் ‘எருமைவெட்டி பாளையம்’ என்றும் பெயர் பெற்றது.

மகிஷனை வதம் செய்த அந்த சக்திகளைச் சாந்தப்படுத்திய ராமர்,
அவர்களை அவ்வனத்தின் நான்கு திசைகளிலும் காவல் தெய்வங்களாக வீற்றிருந்து
மக்களைக் காக்குமாறு பணித்தார். அதன் படி இன்றும் அங்காள பரமேஸ்வரி, காட்டுகை காத்தம்மன்,
பொன்னியம்மன், மொளகாலம்மன் ஆகிய நான்கு தேவதைகள்
இக்கிராமத்தைக் காத்து வருகின்றனர்.

ராமரின் இந்த அபூர்வமான கோலத்தைக் கண்ட கார்க்கேய முனிவர்,
“இவ்விடத்தில் நீர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும்” என்று
விண்ணப்பம் செய்தார். முனிவரின் விருப்பப்படி, ராமர், சீதா தேவியுடனும், தனது தம்பி லக்ஷ்மணனுடனும், ஹனுமனுடனும் அங்கே காட்சியளித்தார்.

பிற்காலத்தில், கார்க்கேய முனிவரின் வழிகாட்டுதலின் படி,
சோழ மன்னர் விக்ரம சோழன், நேபாளத்திலிருந்து கொண்டு வரப்பட்ட
அபூர்வமான சாளக்கிராம கல்லினால் ஸ்வாமி சிலைகளை வடித்து, இக்கோவிலை நிர்மாணித்தார்.

சாளக்கிராமக் கல்லால் ஆன இந்தத் திருமேனிக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு.
இத்தலத்தில் நாம் ஒருமுறை ‘ராம’ நாமம் சொல்லி மனமுருகி வேண்டினால்,
அது பல லட்சம் முறை பிரார்த்தனை செய்ததற்கு இணையான பலனைத் தரும் என்பது
ஐதீகம். மூன்று பௌர்ணமிகளுக்கு ஸ்வாமிக்கு நீல வஸ்திரம் சாத்தி,
நீல சங்குப் புஷ்பம் கொண்டு பூஜிப்பது,
வேண்டிய வரம் தரும் சிறப்பு வழிபாடாகும். அத்தகைய மகிமை வாய்ந்த கோதண்டராமரை வழிபட்டு,
அனைவரும் இப்பிறவியில் நன்மைகளைப் பெற மஹா ஸம்ப்ரோக்ஷணம் வைபவத்தில் கலந்து கொள்ளுமாறு பக்தர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

ZEE5, அனுராக் காஷ்யப் இயக்கத்தில், மும்பையின் இருண்ட உலகைக் காட்டும் ‘கென்னடி’ பட டிரெய்லரை வெளியிட்டது !!

0

~ Kala Ghoda Art Festival-இல் சிறப்பு நிகழ்ச்சியுடன் இப்பட டிரெய்லர் வெளியிடப்பட்டது ~

இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, புகழ்மிகு இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரில்லர் படமான ‘கென்னடி’ படத்தின் அதிரடியான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைக் குவித்த ‘கென்னடி’ திரைப்படம், பிப்ரவரி 20 அன்று ZEE5-ல் இந்தியப் பார்வையாளர்களுக்காக பிரத்தியேகமாக பிரீமியர் ஆகிறது.

‘கென்னடி’ மும்பையை மையமாகக் கொண்டு, நாயர் பாணியில் உருவான ஒரு அதிரடியான திரில்லர் கதை. முன்னாள் காவலராக இருந்து ஒப்பந்தக் கொலையாளியாக மாறிய கென்னடி உதய் ஷெட்டி (Rahul Bhat) என்பவரின் இரட்டை வாழ்க்கையைப் படம் பின்தொடர்கிறது. பகலில் டாக்சி டிரைவராகவும், மறைவில் ஊழல் போலீஸ் கமிஷனர் ரஷீத் கானுக்காக கொலை ஒப்பந்தங்களை நிறைவேற்றுபவராகவும் வாழும் கென்னடி, தனது மகன் இழப்பினால் உண்டான வலி மற்றும் அவருடைய சிதைந்து போன குடும்பத்தின் நினைவுகளால் துரத்தப்படுகிறார். கடந்த காலத்திலிருந்து தப்பிக்க முடியாத நகரத்தில், தன்னையே தேடும் அவரது பயணம் தான் இப்படத்தின் மையம்.

படத்தில் ராகுல் பட் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார், சன்னி லியோனே, மோஹித் தகல்கர், மேகா பர்மன், அமீர் தல்வி, அபிலாஷ் தாப்லியால், கரிஷ்மா மோடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் கென்னடியின் இருண்ட, பிளவுபட்ட உலகத்திற்குப் பல அடுக்குகளைச் சேர்க்கிறார்கள்.

கென்னடி டிரெய்லர், மௌனம், கோபம், உயிர்தப்புதல் ஆகிய உணர்வுகளால் நிரம்பிய கதையைக் சொல்கிறது. வெடிச்சிதறல்கள், மிரட்டல் வலையங்கள், அதிகார மையங்கள் எனும் அபாயகரமான சதியில் கென்னடி சிக்க வைக்கப்படும்போது, உண்மை, பழிவாங்கல், இறுதிக்கட்ட மீட்கும் முயற்சி என வன்முறையுடன் கூடிய தேடலுக்கு தள்ளப்படுகிறார். ஸ்டைலிஷ் ஆக்ஷன், அச்சமூட்டும் காட்சிகள், அனுராக் காஷ்யப்பின் முத்திரைமிக்க நாயர் கதையாக்கம் இவை அனைத்தும் இணைந்து, தனிமை, நீதி, சமரசமற்ற தேர்வுகளின் விலையை ஆராயும் உணர்ச்சிமிக்க திரையனுபவத்துக்கான மேடையை அமைக்கின்றன.

டிரெய்லர்: https://youtu.be/ZNZuX5zSHYw

படம் குறித்து அனுராக் காஷ்யப் கூறியதாவது..,
“‘கென்னடி’ நான் உருவாக்கிய மிகவும் தனித்துவமான படங்களில் ஒன்று. இந்த படத்தின் பயணம் மிக நீண்டது. ஆனால் திரைப்பட விழாக்களில் கிடைத்த ஒவ்வொரு கருத்துக்களும், நான் இந்த படத்தை உருவாக்கியதற்கான அர்த்தத்தைத் தந்தது. டிரெய்லர், வெளியில் வன்முறையுடன் இருந்தாலும் உள்ளே ஆழமாக காயமடைந்த ஒரு மனிதனின் உலகத்துக்குள் உங்களை அழைத்துச் செல்கிறது. எந்த சமரசமும் இன்றி, படத்தை அதன் மூல வடிவிலேயே ZEE5 பார்வையாளர்களிடம் கொண்டு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி.”

நடிகர் ராகுல் பட் கூறியதாவது..,
“கென்னடி பாத்திரத்தில் நடித்தது என்னையே மாற்றியது. கென்னடி தனிமையானவன், கோபமிக்கவன், பலவீனமானவன் எப்போதும் கடந்த காலத்திலிருந்து ஓடிக்கொண்டிருப்பவன். அவனின் மௌனத்திலும், கோபத்திலும் வாழ்வது மனதளவில் சோர்வூட்டினாலும், அந்த காதாப்பாத்திரம் எனக்கு மிகுந்த திருப்தியளித்தது. திரை விழா பார்வையாளர்கள் படத்தைக் கொண்டாடியது பெரும் நம்பிக்கையளித்தது. இப்போது இந்தியப் பார்வையாளர்கள் கென்னடியின் பயணத்தையும், வலியையும், அனுபவிப்பதைக் காண ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.”

சன்னி லியோன் கூறியதாவது..,

“‘கென்னடி’ படம் நடிகையாக என்னை முற்றிலும் வேறொரு உணர்ச்சி வெளிக்குள் தள்ளியது. சார்லி மர்மமும், நுட்பமும், வலிமையும் ஒருசேர கொண்டவள். அவளின் பயணத்தை ஆராய்வது சவாலானதும், நிறைவைத் தருவதுமான அனுபவம். அனுராக் காஷ்யப்புடன் பணியாற்றியது, உரையாடலை விட மௌனத்தை கொண்டாடக் கற்றுக்கொடுத்தது. இதுவரை அனுபவிக்காத விதங்களில் இந்த படம் எனக்கு பெரிய சவால்களைத் தந்தது. அதற்காக அனுராக் காஷ்யப்புக்கு நன்றி. பார்வையாளர்கள் இந்த இருண்ட, அழகான உலகத்தை அனுபவிப்பதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

20-ஆம் தேதி பிப்ரவரி முதல், ஒரு அதிரடியான திரில்லர் பயணம் ‘கென்னடி’ படத்தை ZEE5 ல் காணத் தயாராகுங்கள்.

ZEE5 பற்றி:
ZEE5 என்பது பாரதத்தின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும். ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தின் ஒரு பகுதியாக செயல்படும் ZEE5, பல மொழிகளில் கதைகளை சொல்லும் தளமாக விளங்குகிறது. 4,071+ திரைப்படங்கள், 1,800+ டிவி நிகழ்ச்சிகள், 422+ வெப் ஒரிஜினல்ஸ், 4,492+ இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரத்திற்கு மேற்பட்ட ஆன்-டிமாண்ட் உள்ளடக்கங்களை கொண்ட விரிவான நூலகத்தை இது வழங்குகிறது. 12 மொழிகளில் – இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம், ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி – தனிப்பயன் மற்றும் ஹைப்பர்-லோக்கல் சந்தா திட்டங்களுடன் உள்ளடக்கம் வழங்கப்படுகிறது.உலகளாவிய டெக் கூட்டாளிகளுடன் உருவாக்கப்பட்ட வலுவான டீப்-டெக் கட்டமைப்பு, பல சாதனங்கள் மற்றும் இயக்க முறைமைகளில் தடையற்ற பார்வை அனுபவத்தை ZEE5 வழங்க உதவுகிறது.

Facebook, Instagram, LinkedIn மற்றும் X-ல் ZEE5-ஐ பின்தொடருங்கள்.

சரத்குமார் நடிக்கும் ‘ஆழி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

0

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘ஆழி ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

AazhiTrailer https://www.youtube.com/watch?v=bq5Gu1HktK0

மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆழி’ திரைப்படத்தில் சரத்குமார் , இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, ஸ்ரீ ஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்திருக்கிறார் ஆஸ்கார் விருது வென்ற ரசூல் பூக்குட்டி இப்படத்தின் ஒலி வடிவமைப்பினை மேற்கொண்டிருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 888 புரொடக்ஷன்ஸ் மற்றும் செல்லுலாய்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சஜித் கிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். இத்திரைப்படத்தை தமிழகம் முழுவதும் உத்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

பிப்ரவரி 27ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவரான ரவி கொட்டரக்கரா, இயக்குநர் உதய சங்கரன், விநியோகஸ்தர்கள் அப்பாஸ் ஏ. ஜெ, ஹரி உத்ரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ரவி கொட்டரக்கரா படத்தின் இசையை வெளியிட.. வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

விநியோகஸ்தர் ஹரி உத்ரா பேசுகையில், ”இன்றைய தேதியில் நல்ல படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு பல சவால்கள் இருக்கின்றன. நல்ல கன்டென்ட் கிடைப்பதும் பெரிய விஷயமாக இருக்கிறது. அந்த வகையில் ஆழி மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என நம்புகிறேன். நான் சின்ன வயதில் இருந்தே சரத்குமாரின் ரசிகர். அவருடைய படங்களை பார்த்து வளர்ந்திருக்கிறேன். அவர் நடித்த இந்த திரைப்படத்தை விநியோகம் செய்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன். குறைந்த பட்ஜெட்டிலான படங்கள் வெளியாவதிலும் அவற்றை விற்பனை செய்வதிலும் பெரும் போராட்டம் இருக்கிறது. தமிழ் திரையுலக நலனுக்காக போராடும் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து வியாபார வழிமுறையை முன்வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகை தாமரை செல்வி பேசுகையில், ”இது எனக்கு முதல் மேடை. இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. நான் மேடை நாடகத்தில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது சரத்குமாரை சந்தித்தேன். அதன் பிறகு இப்போது தான் அவரை சந்திக்கிறேன். அவருடைய படத்தில் நடித்திருக்கிறேன் என்பது சந்தோஷமாக இருக்கிறது. என்னை படபிடிப்பு தளத்தில் மலையாளத்தில் பேச வைத்த இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி,” என்றார்.

நடிகர் வையாபுரி பேசுகையில், ”சரத்குமாருடன் 2001ம் ஆண்டிற்கு முன்னர் நடித்துள்ளேன். அதன் பிறகு இப்போது தான் அவருடன் மீண்டும் இணைந்து நடித்திருக்கிறேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது.‌ இந்த படத்தில் அப்பா வேடத்தில் நடித்திருக்கிறேன். இந்த வேடத்தில் நடிப்பதற்காக இயக்குநர் என்னிடம் இரண்டு நாள் கால்ஷீட் கேட்டார். ஆனால் ஒரே நாளில் அனைத்து படப்பிடிப்பையும் நிறைவு செய்துவிட்டார். மலையாள இயக்குநர்கள் தமிழில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று என ஆசைப்படுகிறார்கள். அதற்காக இயக்குநர் உருவாக்கிய கதைதான் ‘ஆழி’ . இப்படம் பிப்ரவரி 27ம் தேதி அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகை தேவிகா சதீஷ் பேசுகையில், ”தமிழில் நான் நடிக்கும் மூன்றாவது படம் ‘ஆழி’. நான் இந்தப் படத்தில் சரத்குமாரின் மகளாக நடித்திருக்கிறேன். நான் சின்ன வயதில் இருந்தே சரத் குமார் சார் நடித்த படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். படத்தில் மட்டுமல்லாமல் படப்பிடிப்பு தளத்திலும் ஒரு அப்பாவை போல் அறிவுரை கூறி அன்பாக அக்கறையுடன் நடத்தினார். என்னுடைய ஆசிரியர்களுக்கும் இயக்குநர் மாதவ் ரமா தாஸ் இயக்கிய படங்கள் பிடிக்கும். இந்தப் படத்தில் ஆஸ்கார் விருதை வென்ற ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிசைனிங் செய்திருக்கிறார். அதனால் படத்தின் தரம் அனைவருக்கும் பிடிக்கும்.‌‌ படத்தின் பணியாற்றிய சக நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர் அனைவருக்கும் நன்றி,” என்றார்.

நடிகர் இந்திரஜித் ஜெகன் பேசுகையில், ” இப்படத்தில் வாய்ப்பளித்ததற்காக இயக்குநருக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் சரத்குமார் உடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. திரைக்கு முன்னாலும்… திரைக்குப் பின்னாலும்… அவர் என்னுடைய மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். குறிப்பாக படப்பிடிப்பு தளத்தில் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பதில் அவருடைய அர்ப்பணிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. பின்னணி இசையில் ரசூல் பூக்குட்டியின் பங்களிப்பு பிரம்மாண்டமானதாக இருக்கும். ஆழி படக்குழுவில் நானும் இடம் பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது,” என்றார்.

தயாரிப்பாளர் ரவி கொட்டாரக்கரா பேசுகையில், ”படத்தின் டைட்டில் ஆழி. ஆழி என்றால் கடல். உங்களில் யாருக்காவது கடலின் ஆழம் என்ன என தெரியுமா? தெரியாது. அதேபோலத்தான் என்னுடைய நண்பர் சரத்குமாரின் நடிப்பின் ஆழம். இன்னும் அவர் புதிதாய் நடித்துக் கொண்டே இருப்பார். அவர் முதலில் ஏற்று நடித்த கேரக்டர்கள் வேறு. வில்லன், ஹீரோ, லவ்வர் பாய், ஃபாதர்- ஃபேமிலி மேன் டு எவரிதிங். ஆனால் இதில் அவர் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார். இன்றைய இளம் கலைஞர்கள் அவரிடம் இருந்து ஏராளமான விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அவர் கதையைக் கேட்கும் போது அவரது கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கிக் கொள்வார். இதனை இன்றைய 85 சதவீத நடிகர்கள் செய்வதில்லை. அவர் இன்று வரை படித்துக் கொண்டிருக்கிறார் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பற்றியும் சிந்திக்கிறார். அண்மை காலமாக அவர் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்திலும் அவர் ஏற்று நடித்திருக்கும் கேரக்டர் வித்தியாசமானதாக இருக்கும். இதே போல் தான் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

கடல் அலையின் ஓசையை கேட்டிருப்பீர்கள். கடல் – ஆழியின் ஒலியை கேட்டிருக்கிறீர்களா? அதனை இந்த படத்தில் ரசூல் பூக்குட்டி கேட்க வைத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் இயக்குநர் மாதவ் ரமா தாசன் வித்தியாசமான திரைக்கதையில் கதையை சொல்லி இருக்கிறார்.

தயாரிப்பாளர் சஜித் கிருஷ்ணன் எனது தயாரிப்பில் வெளியான மலையாள படத்தை 26 ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் வெளியிட்ட விநியோகஸ்தர். சிறந்த அனுபவசாலி. அவர் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். அவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜூன் மாதத்திற்கு பிறகு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் கட்டிடம் திறக்கப்பட்டு செயல்பட தொடங்கும். அனைவரும் வருகை தாருங்கள். சினிமாவை மேலும் வளப்படுத்துவோம்,” என்றார்.

இயக்குநர் மாதவ் ரமா தாசன் பேசுகையில், “நான் தமிழில் இயக்கியிருக்கும் முதல் படம் இது. இதற்கு முன் மலையாளத்தில் ‘மேல் விலாசம்’, ‘அப்போதகேரி ‘, ‘இளையராஜா ‘ என மூன்று திரைப்படங்களை இயக்கியிருக்கிறேன். இதில் ‘இளையராஜா’ படத்தை தமிழில் உருவாக்க எண்ணினேன். தமிழில் படத்தை இயக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் விருப்பம். அதற்கான நேரம் இப்போது அமைந்து ஆழி உருவாகியுள்ளது. 70 சதவீதம் கடலில் நடைபெறும் இந்த கதைக்கு சவுண்ட் அவசியம். இதற்காக சர்வதேச அளவில் அனுபவம் உள்ள ரசூல் பூக்குட்டியிடம் கேட்டோம். அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு தற்போது வரை படத்தின் தரமான ஒலி அமைப்பிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்தில் நாய் ஒன்றும் நடித்திருக்கிறது. அதனுடைய ஒலிக்காக கஷ்டப்பட்டு உழைத்தார். நாயின் குரைப்பு ஒலியை துல்லியமாக பதிவு செய்யும்போது அவருடைய மைக் ஒன்றும் சேதமடைந்தது. அந்த அளவிற்கு நேர்த்தியாக உழைத்திருக்கிறார். இந்த படத்தில் நாயின் கதாபாத்திரமும், அதனுடைய ஒலி அமைப்பும் ரசிகர்களை கவரும். இந்தப் படத்தை பார்த்த பிறகு அனைவருக்கும் கடலுக்குள் நிஜமாகவே சென்று வந்த ஒரு உணர்வு ஏற்படும்.

இந்தக் கதையை முதலில் சரத்குமாரிடம் சொன்னேன். அவர்தான் அவருடைய கதாபாத்திரத்தில் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து நடிக்க ஒப்புக்கொண்டார். அவருடைய கேரக்டரில் நிறைய வேரியேஷன்ஸ் இருக்கிறது. படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கும் தருணத்தில் அதிகாலை 3 மணி அளவில் கூட என்னை தொடர்பு கொண்டு அவரது கதாபாத்திரம் குறித்த கேள்விகளை கேட்பார். அதற்கு நான் விளக்கம் அளிப்பேன். இந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்தின் மீது ஈடுபாடு காட்டி நடித்திருக்கிறார் சரத்குமார்.‌ இப்படத்தில் அவர் நெகட்டிவ் ஷேடிலும் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் நடித்த வையாபுரி, இந்திரஜித், தேவிகா மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நிகில் முருகனும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்,” என்றார்.

சவுண்ட் என்ஜீனியர் ரசூல் பூக்குட்டி பேசுகையில், ”சரத்குமார் நடித்த பல படங்களை என்னுடைய கல்லூரி காலங்களில் பார்த்து ரசித்து கொண்டாடி இருக்கிறேன். அவரை மீண்டும் இந்த படத்திற்காக திரையில் பார்த்தபோது அவர் அதே இளமையுடன் இருப்பதை பார்த்து வியந்து போனேன். இவர் எப்படி இளமைக் குன்றாமல், வயதே ஆகாமல் தோன்றுகிறார் என ஆச்சரியப்படுகிறேன். நடிகர், பாசமுள்ள தந்தை, நிறுவனத்தின் தலைவர் என அவர் எப்போதும் இயல்பாக சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டே இருக்கிறார். அவர் எதையும் ‘டேக் இட் ஈஸி’யாக எடுத்துக் கொள்கிறார். இதைத்தான் அபிஷேக் பச்சன், ஷாருக்கான், கமல்ஹாசன் ஆகியோரும் பின்பற்றுகிறார்கள்.
சரத்குமாரை பற்றி இந்திரஜித் குறிப்பிட்டது போல் அவரிடம் இருக்கும் ஒழுக்கத்தை இன்றைய இளம் தலைமுறையை சேர்ந்த கலைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். சரியான உணவு, உடற்பயிற்சி, அர்ப்பணிப்பு, உழைப்பு, மரியாதை, நேரம் தவறாமை, கேமரா முன்னால் நடிப்பு என ஒரு தவத்தை போல் தன்னுடைய பணியை செய்கிறார். அவர் இந்தப் படத்தில் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மூலம் கதையை வழி நடத்துகிறார்.

நான் இதுவரை வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு மனிதர்களிடத்தில் பழகி பணியாற்றி இருக்கிறேன். இந்தி சினிமாவிலும் பணியாற்றி இருக்கிறேன், தென்னிந்திய சினிமாவிலும் பணியாற்றியிருக்கிறேன். இரண்டிலும் உள்ள முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் தென்னிந்திய சினிமாவில் ஒவ்வொரு காட்சிக்கும் அக்கறை எடுத்துக் கொள்வார்கள். சினிமாவைப் பற்றி அக்கறையுடன் இருப்பார்கள். நான் இந்தப் படத்தை மூன்று முறை மிக்ஸ் செய்திருக்கிறேன். இது போன்ற துணிச்சலான அணுகுமுறை தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் , இயக்குதர்களுக்கும் தான் இருக்கிறது. இங்குள்ள தயாரிப்பாளர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் இயக்குநரை கொண்டாடுகிறார்கள். இயக்குநருக்கு ஆதரவு தருகிறார்கள்.

அத்துடன் இவர்கள்தான் மெயின் ஸ்ட்ரீம் ரசிகர்களின் மனநிலையை கணிக்கிறார்கள். தொழில்நுட்பம், கலை அழகு, கதை, கதாசிரியர், இயக்குநர், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் மீது நம்பிக்கை கொள்கிறார்கள். இந்த காரணத்தினால் தான் தமிழ் சினிமா, மலையாள சினிமா, மராத்தி சினிமா,.வங்காள சினிமா ஆகியவை வளர்ச்சி அடைந்து வருகின்றன. இதற்கு நானே மிகச் சிறந்த உதாரணம்.

இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகை தேவிகாவின் புன்னகை நன்றாக இருக்கிறது. படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்,” என்றார்.

நடிகர் சரத்குமார் பேசுகையில், ”இந்தப் படத்தின் இயக்குநர் மாதவ் ரமா தாசன் கதை சொல்ல வந்தார். அவர் வருவதற்கு முன் அவர் இயக்கத்தில் வெளியான ‘மேல் விலாசம்’ படத்தை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அவர் கதை முழுவதும் சொன்னார். அது வித்தியாசமான கதை . பெரும்பாலும் மீன்பிடி படகு ஒன்றில் நடைபெறும் கதை. பெரும்பாலும் கடல் தான் திரைக்கதையில் இருக்கிறது. இதை எப்படி நீங்கள் திரையில் காட்சிப்படுத்துவீர்கள் என கேட்டேன். அது குறித்து நாங்கள் முழுமையாக திட்டமிட்டிருக்கிறோம் என சொன்னவுடன் அதிலேயே அவருடைய அர்ப்பணிப்பு எனக்குத் தெரிந்தது. ஒரு மீன்பிடி கப்பல் அளவிற்கான கப்பல் ஒன்றை அரங்கத்திற்குள் உருவாக்கி, அதனை இயக்குவதற்காக ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தினார். அதனால் இந்த படத்தை நான் ஒரு வித்தியாசமான படமாக தான் பார்க்கிறேன்.

பல படங்கள் ஆடல், பாடல், பிரம்மாண்டம் என கமர்ஷியல் அம்சங்களுடன் இருக்கும். ஆனால் இதில் ஆடல் பாடல் போன்ற பிரம்மாண்டங்கள் இல்லை. ஆனால் கதை பிரம்மாண்டமானதாக இருக்கும்.

இன்றுள்ள ரசிகர்கள் பலவிதமான படங்களை பார்த்து ரசிக்கிறார்கள். செல்போனில் வெளியாகும் ஷார்ட்ஸ், ரீல்ஸ் இதிலெல்லாம் நடிக்கிறார்கள். இதனால் நடிகர்களுக்கு ரீல்சில் நடிப்பதா, ஷார்ட்ஸில் நடிப்பதா, வெப்சீரிஸில் நடிப்பதா, டெலிவிஷனில் நடிப்பதா, பெரிய ஸ்கிரீனில் நடிப்பதா என்ற குழப்பம் இருக்கிறது. ஆனால் இந்த வகையான குழப்பம் எந்த நடிகர்களுக்கும் தேவையில்லை. ஏனெனில் எதில் நடித்தாலும் நடிப்பு நடிப்புதான். அதனால் எதில் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஏந்த குழப்பமும் தேவையில்லை. காலத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப நாம் மாறிக்கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் மாற்றம் ஒன்றே மாறாதது.

மாதவ் ரமா தாஸின் வித்தியாசமான படம் என்று தான் இதை சொல்வேன். அதனால் இந்த படம் வெற்றி பெறும். இதற்கு ரசிகர்களும், ஊடகங்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.

இந்தப் படத்திற்கு என்னுடைய நண்பர் ரசூல் பூக்குட்டியின் பங்களிப்பு வலிமையானது என்றே சொல்லலாம். இது சவுண்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம். அவருடைய அர்ப்பணிப்பு உணர்விற்காக அவருக்கு மேலும் பல ஆஸ்கார் விருதுகள் கிடைக்க வேண்டும் என்ற வாழ்த்துகிறேன். இந்தப் படத்தில் பெல்ஜியம் மலினாய்ஸ் வகையை சேர்ந்த நாய் ஒன்று நடித்திருக்கிறது. நாயின் குரலை துல்லியமாக பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக இரண்டு நாள் அவரது குழுவினருடன் ரசூல் பணியாற்றினார். இந்தப் படத்தில் நாயுடனும் ஒரு சண்டைக் காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் சிறப்பானதாக இருக்கும்.

தயாரிப்பாளர் சஜித் கிருஷ்ணன், விநியோகஸ்தர் ஹரி உத்ரா, பாடலாசிரியர் நவீன், வையாபுரி, தாமரைச்செல்வி, தேவிகா சதீஷ், இந்திரஜித் ஜெகன், நடிகர் நிகில் முருகன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

இந்தப் படத்தின் கிளிம்ப்ஸை பார்க்கும் போது நான் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பது தெரியும். இன்று நெகட்டிவ் கேரக்டருக்கு தான் வரவேற்பு இருக்கிறது. இன்று கதாநாயகன் என்று சொன்னால் நல்லவனாக இருந்தால் மட்டும் கதாநாயகன் ஆக முடியாது. தப்பு செய்பவர்கள் தான் கதாநாயகன்.‌ புஷ்பா 2 படத்தில் ஹீரோ செம்மரம் கடத்துகிறார். ஆனால் அவர் தானே ஹீரோ. அதனால் இன்றைக்கு காலங்கள் மாறிவிட்டன. இன்றைக்கு வித்தியாசம் தேவைப்படுகிறது. வித்தியாசத்திற்கு தேவைப்படும் நெகடிவ் ஷேடு – தவறு என்றும் உணர்த்தப்படுகிறது. அதனால் தவறாமல் டிஸ்க்ளைமரும் இடம் பிடிக்கிறது.

என்னைப் பொறுத்தவரை இந்த படம் நல்ல கதை. சிறந்த இயக்குநர். மீன்பிடி படகிற்குள் இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையே நடைபெறும் உணர்வுபூர்வமான விஷயங்கள் தான் முக்கியமானது. ரசிகர்கள் அனைவரும் இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பாருங்கள். வித்தியாசமான அனுபவமாக இருக்கும்,” என்றார்.

Natural Star Nani’s Never-Before-Seen Intro Song Aaya Sher Shot In Style For The Paradise – Anirudh’s Electrifying Mass Banger

0

Natural Star Nani is turning up the heat on the sets of his ambitious film The Paradise, currently filming at a rapid speed in Hyderabad. Directed by Dasara fame Srikanth Odela and produced by Sudhakar Cherukuri under the SLV Cinemas banner, the period action drama is building massive hype with its latest update from the shoot floor.

The team has started filming for Nani’s explosive introduction song Aaya Sher on a colossal set, swarming with hundreds of dancers. Rockstar Anirudh Ravichander delivered an electrifying mass banger packed with grit and high-adrenaline vibes, perfectly tuned to Nani’s raw, uninhibited dance style.

Choreographer Sudhan Master, who recently worked for Vijay’s Jana Nayagan, brings sharp, dynamic formations and fierce visual flair to elevate the song into a goosebump-inducing spectacle. Nani’s trademark madness and dynamic moves promise to dominate the screen, marking this as one of the film’s biggest highlights.

Director Srikanth Odela is crafting The Paradise with prestigious attention to detail in every aspect of production. The film features Mohan Babu, Bollywood actor Raghav Juyal, and Sampoornesh Babu in prominent roles.

Ch Sai handles cinematography, Navin Nooli serves as editor, and Avinash Kolla leads production design. The movie is set for a pan-world release in eight languages.

Cast: Nani, Mohan Babu, Raghav Juyal, Sampoornesh Babu

Technical Crew:
Writer, Director: Srikanth Odela
Producer: Sudhakar Cherukuri
Banner: SLV Cinemas
DOP: Ch Sai
Music: Anirudh Ravichander
Editing: Navin Nooli
Production Designer : Avinash Kolla
PRO: Sathish S2 Media
Marketing: First Show

Mayilaa Nominated for NETPAC Award at IFFR 2026

0

Rotterdam, February 2026 — Mayilaa, directed by Semmalar Annam and produced by Newton Cinema, has been nominated for the NETPAC Award at the 2026 International Film Festival Rotterdam (IFFR), where the film had its world premiere earlier this month. The NETPAC Award, presented by the Network for the Promotion of Asian Cinema, recognizes outstanding Asian films that reflect creativity, cultural depth, and cinematic excellence.
The film presents an intimate and grounded portrayal of a young working woman’s journey toward dignity and independence, and received strong appreciation from festival audiences at its Rotterdam screening. The nomination marks an important milestone in the film’s international festival journey.
Mayilaa is presented by filmmaker Pa. Ranjith and produced by Newton Cinema, founded by Anto Chittilappally.
The film stars P. Melody Dorcas in the lead role, with V. Shudar Kodi playing a central supporting character. The technical crew includes cinematographer Vinoth Janakiraman, editor A. Sreekar Prasad, music composer Nandhan Kalaivanan, sound designer Anand Krishnamoorthi, and sync sound recordist Amrith Shankar.
Director Semmalar Annam said, “This NETPAC nomination is a meaningful recognition for our entire team. We made Mayilaa with deep care and honesty, and it is encouraging to see the film being acknowledged at IFFR.”
Anto Chittilappally, founder of Newton Cinema, said, “From the world premiere at Rotterdam to this nomination, the journey of Mayilaa has been very rewarding. It is a proud moment for us and for everyone who worked on the film.”
Filmmaker Pa. Ranjith, who presents the film, said, “Mayilaa is a socially rooted and emotionally sincere film. It is important that such voices reach international platforms, and this nomination is well deserved.”
In a joint note, the cast and crew shared, “We are grateful and encouraged by the NETPAC nomination. The response at the world premiere and this recognition mean a lot to all of us.”

Mayilaa will continue its festival run with further international screenings in the coming months.
About Newton Cinema
Newton Cinema is an international production house supporting meaningful storytelling.

Focusing on emerging filmmakers, it produces films that connect globally while reflecting local realities.

செம்மலர் அன்னம் இயக்கத்தில், நியூட்டன் சினிமா தயாரிப்பில் உருவான மயிலா, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா (IFFR) யில் NETPAC விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் தொடக்கத்தில் ரோட்டர்டாமில் உலக சினிமா திரையிடலைப் பெற்ற இந்தத் திரைப்படம், ஆசிய சினிமாவை மேம்படுத்தும் நெட்பேக் (Network for the Promotion of Asian Cinema – NETPAC) வழங்கும் இவ்விருதுக்குத் தேர்வாகியுள்ளது.

படைப்பாற்றல், பண்பாட்டு ஆழம் மற்றும் திரைப்படக் கலைச் சிறப்பை பிரதிபலிக்கும் சிறந்த ஆசிய திரைப்படங்களை NETPAC விருது கௌரவிக்கிறது.

ஒரு இளம் பணிபுரியும் பெண்ணின் மரியாதை மற்றும் சுயாதீனத்தை நோக்கிய பயணத்தை நெருக்கமாகவும் யதார்த்தமாகவும் சித்தரிக்கும் இந்தத் திரைப்படம், ரோட்டர்டாமில் நடைபெற்ற அதன் திரையிடலில், படம் பார்த்த பார்வையாளர்களிடமிருந்து பெரும் பாராட்டுகளை பெற்றது. இந்தப் பரிந்துரை, மயிலா திரைப்படத்தின் சர்வதேச திரைப்பட விழா பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.

மயிலா திரைப்படத்தை திரைப்படத் தயாரிப்பாளர் பா. ரஞ்சித் வழங்குகிறார். இதனை ஆன்டோ சிட்டிலப்பள்ளி நிறுவிய நியூட்டன் சினிமா தயாரித்துள்ளது.
முதன்மை கதாபாத்திரத்தில் பி. மெலடி டோர்கஸ் நடித்துள்ளார். முக்கிய துணை வேடத்தில் வி. சுடர் கோடி நடித்துள்ளார்.

தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் வினோத் ஜனகிராமன், தொகுப்பாளர் A. ஸ்ரீகர் பிரசாத், இசையமைப்பாளர் நந்தன் கலைவாணன், ஒலி வடிவமைப்பாளர் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி, சிங் சவுண்ட் பதிவாளர் அம்ரித் சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இயக்குநர் செம்மலர் அன்னம் கூறுகையில்,

“இந்த NETPAC பரிந்துரை எங்கள் முழுக் குழுவிற்கும் மிகவும் அர்த்தமுள்ள அங்கீகாரமாகும். மயிலா திரைப்படத்தை ஆழ்ந்த அக்கறையுடனும் நேர்மையுடனும் உருவாக்கினோம். IFFR போன்ற விழாவில் இப்படம் கவனிக்கப்படுவது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது,” என்றார்.

நியூட்டன் சினிமாவின் நிறுவனர் ஆன்டோ சிட்டிலப்பள்ளி கூறுகையில்,

“ரோட்டர்டாமில் நடைபெற்ற உலகத் திரையிடலிலிருந்து இப்பரிந்துரை வரை, மயிலாவின் பயணம் மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்துள்ளது. இது எங்களுக்கும், இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் பெருமை தரும் தருணம்,” என்றார்.

திரைப்படத்தை வழங்கிய பா. ரஞ்சித் கூறுகையில்,

“மயிலா சமூக வேரூன்றியதும் உணர்வுப்பூர்வமான நேர்மையையும் கொண்ட திரைப்படம். இத்தகைய குரல்கள் சர்வதேச மேடைகளை அடைவது முக்கியம். இந்தப் பரிந்துரை முற்றிலும் தகுதியானதே,” என்றார்.

கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு இணைந்து வெளியிட்ட அறிக்கையில்,

“NETPAC பரிந்துரைக்காக எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். உலகத் திரையிடலில் கிடைத்த வரவேற்பும், இந்த அங்கீகாரமும் எங்களுக்கு மிகுந்த ஊக்கமாக உள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மயிலா வரும் மாதங்களில் மேலும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு தனது பயணத்தைத் தொடரும்.

நியூட்டன் சினிமா பற்றி:

நியூட்டன் சினிமா என்பது அர்த்தமுள்ள கதைகளை ஆதரிக்கும் ஒரு சர்வதேச திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஆகும்.உயரும் திறமை கொண்ட புதிய திரைப்பட இயக்குநர்களை மையமாகக் கொண்டு, உள்ளூர் யதார்த்தங்களை பிரதிபலித்தபடியே உலகளாவிய பார்வையாளர்களுடன் தொடர்பு கொள்ளும் திரைப்படங்களை இது தயாரிக்கிறது.

ஆரி அர்ஜுனன் நடிக்கும் “4த் ஃப்ளோர்” டிரெய்லரை விஜய் சேதுபதி, ஆர்யா, பா ரஞ்சித், விஜய் ஆண்டனி வெளியிட்டனர்!

0

பிப்ரவரி இம்மாதம் 27ஆம் தேதி திரையில் ஆரி அர்ஜுனன் நடிக்கும் “4த் ஃப்ளோர்” !!

MANO CREATION சார்பில் தயாரிப்பாளர் A.ராஜா தயாரிப்பில், இயக்குநர் L R சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் மர்மங்கள் நிறைந்த பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள “4த் ஃப்ளோர்” திரைப்படம், வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லரை தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்களான விஜய் சேதுபதி, ஆர்யா, பா ரஞ்சித், விஜய் ஆண்டனி ஆகியோர் சமூக வலைத்தளம் வழியே இன்று வெளியிட்டனர்.

இன்று வெளியான டிரெய்லர் ஆரம்ப கட்டத்தில் ஒரு அபார்ட்மெண்டில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை காட்டுகிறது. ஹாரர் படம் என்று நினைக்கையில் அப்படியே தடம் மாறி, கொலைகளை அதன் விசாரணைகளைக் காட்டி ஒரு அசத்தலான திரில்லர் அனுபவமாக நிறைவு பெறுகிறது. கனவு, கொலைகள், விசாரணை என வெவ்வேறு பாதைகளில் கதை பயணிக்கிறது. ஒரு புதுமையான திரில்லர் அனுபவத்தை உறுதி செய்யும் இந்த டிரெய்லர், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

நடிகர் ஆரி அர்ஜுனன் நடித்த ஃபோர்த் ஃப்ளோர் திரைப்படம் அவருடைய நெடுஞ்சாலை, மாயா, ரெட்டைச் சுழி போன்ற குறிப்பிடத்தகுந்த வெற்றிப் படங்களின் வரிசையில் அமையும். மார்கன், மார்க் படங்களில் நடித்த தீப்ஷிகா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பவித்ரா, சுப்ரமணிய சிவா,தலைவாசல் விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த இந்த திரைப்படம் கனவுகளுக்கும் நிஜவாழ்க்கைக்கும் இடையே இணைக்கும் பாலமாக எழுதப்பட்டுள்ளது. தீர்க்கதரிசி என்ற திரைப்படத்தை பரபரப்பாக இயக்கியிருந்த எல். ஆர். சுந்தரபாண்டி அதே வேகத்தில் ஃபோர்த் ஃப்ளோர் படத்தை இயக்கியுள்ளார் என அதன் டிரைலரில் தெரிகிறது. தணிக்கை செய்யப்பட்ட இந்தபடம் யூ ஏ தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ளது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

முகம் சுளிக்க வைக்காத,காட்சிகளுடன் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் படமாக இந்தப்படம் இருக்கும், பிரச்சனைகள் எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கும் நாம் தான் கவனமாக இருக்கவேண்டும் என்ற கருத்தை அதன் திரைக்கதை போக்கிலேயே சொல்லியிருப்பதாக இயக்குநர் எல். ஆர். சுந்தரபாண்டி தெரிவித்தார்.

இப்படத்திற்கு “போடா போடி” படப்புகழ் இசையமைப்பாளர் தரண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார், “போடா போடி” வெண்ணிலா கபடி குழு” படங்களின் ஒளிப்பதிவாளர் J லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அநீதி, ஜெயில் மற்றும் மத்தகம் வெப் சீரிஸிற்கு கலை இயக்கம் செய்த சுரேஷ் கல்லேரி கலை இயக்கம் செய்துள்ளார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. செவன்த் ஸ்டுடியோ சார்பாக K.கண்ணன் இப்படத்தை தமிழ்நாடு தியேட்டர் வெளியீடு செய்கிறார். இப்படம் வரும் 27ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தொழில் நுட்ப குழு விபரம்
இயக்குநர்: L R சுந்தரபாண்டி
தயாரிப்பாளர்: A.ராஜா
நிர்வாக தயாரிப்பாளர்: சூரிய பிரகாஷ் P
ஒளிப்பதிவு : J லக்ஷ்மன்
இசையமைப்பாளர்: தரண் குமார்
பாடலாசிரியர் : கு கார்த்திக்
எடிட்டர்: ராம் சுதர்ஷன்
கலை: சுரேஷ் கல்லேரி
நடனம் : அபு சால்ஸ்
ஸ்டண்ட்: டேஞ்சர் மணி
மக்கள் தொடர்பு : A ராஜா

டிரெய்லர் லிங் – https://youtu.be/atMfYxlRH3U

- Advertisement -

Recent Posts