JioHotstar has officially announced the launch date of its upcoming Tamil direct OTT original film Hotstar Specials ‘Lucky’, with the release of a launch-date poster across its digital and social media platforms. The film is set to premiere on February 20, 2026, exclusively on JioHotstar.
Lucky was first introduced to audiences at the JioHotstar South Unbound event, where a teaser glimpse offered an early look into its unique world—hinting at the chaos that unfolds when a small, innocent puppy becomes the center of attention for powerful political forces. The newly released poster builds on this premise, setting the stage for a fun, chaotic, and emotionally driven family entertainer.
The film stars GV Prakash Kumar and Anaswara Rajan, with Devadarshini playing a pivotal role, and is directed by Uday Mahesh. Blending humour, political satire, action, and warmth, Lucky explores how innocence collides with authority, triggering events that spiral far beyond control.
With its fresh premise, engaging performances, and strong emotional core, Lucky promises to be a wholesome entertainer for families, young audiences, and pet lovers alike.
G V Prakash’s Movie Lucky Streaming in Tamil On February 20, 2026 In JioHotstar Platform.
About JioHotstar JioHotstar is India’s leading premium streaming platform, offering a wide range of blockbuster films, original series, live sports, and entertainment across multiple languages. With a strong focus on original storytelling and immersive digital experiences, JioHotstar continues to deliver compelling content to audiences across India.
ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லக்கி’ திரைப்படம் Hotstar Specials-ஆக, JioHotstar தளத்தில் பிப்ரவரி 20 அன்று வெளியாகிறது!
நேரடி ஓடிடி ஒரிஜினல் திரைப்படமான ‘லக்கி’, Hotstar Specials-ஆக பிப்ரவரி 20, 2026 அன்று, பிரத்யேகமாக JioHotstar-ல் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை JioHotstar வெளியிட்டுள்ளது. JioHotstar சவுத் அன்பவுண்ட் நிகழ்வில் முதன்முறையாக ‘லக்கி’ திரைப்படத்தின் தனித்துவமான உலகம் அறிமுகப்படுத்தப்பட்டது. பார்ப்பதற்கு அப்பாவியான நாய்க்குட்டி ஒன்று அரசியல் அதிகார மையங்களின் கவனத்தை ஈர்க்கும் போது உருவாகும் குழப்பங்கள்தான் மையக்கரு என்பதை ‘லக்கி’ டீசர் வெளிப்படுத்துகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர், நகைச்சுவை, குழப்பம் மற்றும் உணர்வுப்பூர்வமான குடும்ப பொழுதுபோக்கு படமாக ‘லக்கி’ இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
உதய் மகேஷ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் அனஸ்வரா ராஜன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க, இவர்களுடன் நடிகை தேவதர்ஷினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நகைச்சுவை, அரசியல், ஆக்ஷன் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான தருணங்களுடன் அப்பாவித்தனமும் அதிகாரமும் மோதும் போது கட்டுப்பாட்டை மீறி நடக்கும் சம்பவங்களை இந்தப் படம் பேசும்.
புதிய கதைக்களம், திறமையான நடிகர்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களுடன் குடும்பங்கள், இளைஞர்கள் மற்றும் செல்லப்பிராணி பிரியர்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் சிறந்த பொழுதுபோக்கு படமாக ‘லக்கி’ இருக்கும்.
பிப்ரவரி 20, 2026 அன்று JioHotstar தளத்தில் ‘லக்கி’ திரைப்படம் தமிழ் மொழியில் வெளியாகிறது.
JioHotstar பற்றி: JioHotstar இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. சிறப்பான கதைக்களங்கள், புதுமையான தொழில்நுட்பத்துடன் JioHotstar இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மருந்தில்லா மருத்துவத்தின் மகத்துவம் காப்போம் என்பதை நோக்கமாகக் கொண்டு அகவெளி அக்கு சிகிச்சையாளர்கள் சங்க மாநில மாநாடு இன்று விமர்சையாக தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும், அங்கு சக்தி பிலிம் பேக்டரி உரிமையாளர் சக்திவேலன் அக்கு தெரபிஸ்ட் அசோசியேஷனுக்கான யூடியூப் சேனலையும் தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் சக்தி பிலிம் பேக்டரி உரிமையாளர் சக்திவேலன் அக்கு சிகிச்சையாளர்கள் மாநில மாநாட்டை வாழ்த்தி பேசியதாவது, “அகவெளி பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த அன்பழகன் மற்றும் மனோகரன் அண்ணன்களுக்கு நன்றி. சமுதாயத்தை சீர்திருத்தும் பணியை தொடர்ந்து இங்கிருப்பவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அன்பழகன் மற்றும் மனோகரன் இருவரும் உறவினர்களாக இருந்து எனக்கு நண்பர்கள் போன்று நெருக்கமானவர்கள். இவர்கள் மூலம் ஏங்கல்ஸ் ராஜா அறிமுகம் கிடைத்தது. இவர் சமுதாயத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர். மருந்தில்லாத உணவு என்பதைத் தாண்டி, மருந்தில்லாத மருத்துவம் என்ற நிலைக்கு இன்று வந்திருக்கிறார். இதற்கு நம்முடன் இருப்பவர்களின் ஆதரவும் மிக முக்கியம். அக்குசிகிச்சையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அடுத்த நிலைக்கு வந்திருக்கிறார்கள். இந்திய அளவில் அகவெளி ஆலமரம் போல வளர்ந்து நிற்க வேண்டும். இதன் பெருமையை எட்டி நின்று என்னால் உணர முடிகிறது. இன்றைய தேதியில் நல்லது செய்வதுதான் கடினமான ஒன்று. அந்த தடைகளை தாண்டி இந்த இயக்கத்தை அடுத்தடுத்து எடுத்துச் செல்லுங்கள். மனிதனின் வலியை போக்குவதைவிட சிறந்த ஒன்று கிடையாது. அந்த இடத்தில் அக்கு இருப்பது மகிழ்ச்சி” என்றார்.
அக்கு பங்சர் சிகிச்சையாளர்கள் சங்க தலைவர் ஏங்கல்ஸ் ராஜா, “அக்கு சிகிச்சையாளர்கள் சங்கத்தினுடைய முதல் மாநில மாநாடு இது. நாற்பது நாட்களில் இதனை ஏற்பாடு செய்திருக்கிறோம். அறம்சார் வாழ்வே நலம் தரும் மருந்து என்பதே மாநாட்டின் நோக்கம். இந்த மாநாடு நம் அனைவருக்கும் தேவையானது. அக்குபங்சர் மருத்துவம் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் இருக்கிறது. அதை அனைவருக்கும் எடுத்து செல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அக்குபங்சர் அறிவியல்பூர்வமான தா என்ற கேள்வி பலரிடம் இருக்கிறது. நிச்சயமாக! உலகம் முழுவதும் இந்த சிகிச்சை முறை நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவும் 2017ல் இதை முழுமையான மருத்துவமுறையாக அங்கீகரித்திருக்கிறது. நமக்கு ஆதரவாக அரசியல் நிலைப்பாடுகளும் நம்மை சுற்றி இருக்கிறது. இந்த மருத்துவம் மக்களிடம் அதிகம் போய் சேரும்போது அதிகம் நன்மை கிடைக்கும்” என்றார்.
இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது, “மனித உடலில் ஏற்படுகிற வலியை நீக்குபவர்கள்தான் கடவுள். அவர்கள்தான் மருத்துவர்கள். தமிழ்நாட்டில் மட்டும்தான் மருத்துவர் ஆவது கடினம். ஏனெனில் வருகிறவர்கள் எல்லாருமே நோயாளிகள்தான். மருத்துவர்கள் சொல்வதை முழுதாக கேட்பதில்லை. மருந்தும் இல்லாமல், மந்திரமும் இல்லாமல் என் 75 வயது பாட்டியை அக்கு சிகிச்சை நடக்க வைத்தது. அப்போதிருந்து இதன் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு. மனிதனின் ஆசையை கட்டுப்படுத்த புத்தர் சொன்ன விஷயம் இந்த ஊசியாகக் கூட இருக்கலாம். சில மருத்துவத்தின் பின்விளைவுகளால் கிராமப்புற மக்கள் அவதிப்படுகிறார்கள். அவர்களை எல்லாம் இந்த சிகிச்சை சென்று சேர வேண்டும் என்பது என் கோரிக்கை. என்னை இந்த விழாவிற்கு அழைத்ததற்கு நன்றி” என்றார்.
இந்தப் படத்தை கே .ஆர். வினோத் இயக்கியுள்ளார். ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார்,இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார்,சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார்.லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார்.
நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில் முனிஷ்காந்த் நடிக்க,இயக்குநர் அனுமோகன் தருண், கெவின், கார்மேகம் சசி,அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர்.
வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த ‘ரெட் லேபில்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று பிரசாத் லேபில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனாக நடித்துள்ள லெனின் பேசும் போது,
“நான் எப்போதும் நேரம் தவறாமையைக் கடைப்பிடிப்பவன்.சினிமா விலும் அதைப் பின்பற்ற நினைத்தேன்.சரியான நேரத்தில் வந்ததால்தான் இந்த இயக்குநரையை தேர்வு செய்தேன்.எதையும் முறைப்படி செய்ய வேண்டும் என்பதை சினிமாவிலும் நான் தொடர விரும்பினேன். எந்த வேலையாக இருந்தாலும் நேர்மையாகச் செய்தால் போதும், நடப்பது நடக்கும். பலன் நல்லதாகவே இருக்கும். இந்தப் படத்திற்கு ஐந்து கதாநாயகிகளைப் பார்த்து ஆறாவதாகத்தான் அஸ்மின் வந்தார்.
இந்த ஒரே படத்தில் எனக்குப் பல அனுபவங்கள் கிடைத்தன படத்திற்குத் தலைப்பு பதிவு செய்வதே சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது. முதலில் ஒரு தலைப்பைப் பதிவு செய்தோம். கிடைத்தது,பிறகு அது காலாவதி ஆகிவிட்டது, இல்லை என்றார்கள்.அதைப் புதுப்பிக்க வேண்டும் என்கிற விஷயம் எனக்குத் தெரியாது. ஓர் ஆண்டுக்குள் புதுப்பிக்க வேண்டுமாம். பிலிம் சேம்பரில் தலைப்பு பதிவு செய்யும்போது நாம் ஒரு ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
பிலிம் சேம்பரில் கணினி மயமாக்கி இணைத்தால் மிகச் சுலபமாக இந்த வேலையைச் செய்ய முடியும். பல பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். ஆனால் யாரும் இதைச் செய்வதில்லை . நான் உங்களுக்கு உதவத் தயாராக இருக்கிறேன் அதுவும் இலவசமாக. பேப்பர் வேலை,அலைச்சல்கள் எதுவும் தேவையில்லை.எல்லாவற்றையுமே எளிமையாகச் செய்யலாம்.
நான் முதலில் நல்ல தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு தான் பிறகு நடிப்பவர்களைத் தேர்ந்தெடுத்தேன். நான் சரியாகத்தான் செய்திருக்கிறேன் என்பதற்கு எனது இசையமைப்பாளருக்கு கேரளாவில் விருது கிடைத்தது, எனது எடிட்டருக்கு தமிழ்நாடு அரசு விருது கிடைத்து இருக்கிறது என்பதிலேயே தெரிந்துவிடும். ஒரு படத்திற்கு நடிப்பதற்கு முக மதிப்பு உள்ளவர்கள் தேவைதான். இருந்தாலும் நல்ல தொழில்நுட்பக் கலைஞர்கள் தேவை. நான் பணம் சம்பாதிக்க என்று இங்கே வரவில்லை. சினிமா மீதுள்ள காதலால் இங்கே வந்திருக்கிறேன்.
முதலில் 2023-ல் கதை தேர்வானது, கதை பிடித்து விட்டது. ஆனால் எந்தப் படம் வந்தாலும் நமது படத்தில் உள்ள காட்சிகள் இருப்பது போல் தோன்றியது. அதனால் போன ஆண்டில் வந்த அனைத்து படங்களையும் பார்த்து விட்டேன். வாரம் எட்டு படம் வருகிறது. எல்லாவற்றிலும் நாங்கள் நினைத்தது வந்தது போலவே தோன்றும். இருந்தாலும் கதை வலுவாக இருந்ததால் தைரியமாக இருந்தோம்.
நான் படப்பிடிப்பில் கேட்கிற அளவுக்கெல்லாம் வசதிகள் செய்து கொடுக்க மாட்டேன்.ஒரு காட்சியில் 10 நாற்காலிகள் வேண்டுமென்றால் ஐந்து தான் கொடுப்பேன். இப்படித்தான் நான் தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டு மிச்சப்படுத்தினேன். இந்த சினிமாவில் எதற்கெடுத்தாலும் கமிஷன் என்கிற போக்கு இருக்கிறது. இது மிகவும் தவறானது. இதைப் பார்த்த போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.சினிமாவில் கமிஷன்கள் ஒழிக்கப்பட வேண்டும்.
ஒரு சினிமாவிற்கு இசையமைப்பாளரும் எடிட்டரும் முக்கியமானவர்கள்,அவர்கள் இருவரால்தான் ஒரு படத்தை நன்றாகக் கொண்டு வர முடியும். இசையமைப்பாளர் தெரிகிற அளவிற்கு எடிட்டர் வெளியே தெரிவதில்லை. இசையமைப்பாளர் அளவுக்கு எடிட்டர் கவனத்தில் வருவதில்லை. நான் நடித்த போது முதலில் இரண்டு நாள் சுமாராகத்தான் நடித்து இருந்தேன். எனக்கே சந்தேகம் இருந்தது .படத்தில் சில இடங்களில் தொய்வு இருந்தது.ஆனாலும் எல்லாவற்றையும் தோன்றாத அளவிற்கு சரி செய்து நன்றாகப் படத்தை தொகுத்துள்ளார் எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் அவருக்கு நன்றி.
படம் தொடங்கும்போதே பெப்ஸி பிரச்சினை வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து போன்கள் வந்து கொண்டே இருந்தன. ஆறாவது நாள் நாங்கள் படத்தை நிறுத்தி விடுவோம் என்றார்கள். படப்பிடிப்பை நிறுத்தி விடுவோம் என்றார்கள் .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.நாம் முதல் போட்டு படம் எடுக்கிறோம்.அவர்கள் என்ன நிறுத்துவது என்று நானே நிறுத்திவிட்டேன். ஆறாவது நாளே படப்பிடிப்பு நின்று விட்டது. பலருக்கும் இந்தப் படம் தொடருமா என்கிற சந்தேகம் வந்திருக்கும்.
இப்படி 2023 இல் கதை விவாதத்தில் தொடங்கி 2026 வெளியாகிற தேதி வரை ஏதாவது தடைகள், முரண்பாடுகள் இருந்து கொண்டே தான் இருந்தன. இருந்தாலும் இயக்குநரும் மற்றவர்களும் இணைந்து இந்தப் படத்தை முடித்து இருக்கிறோம்.
சினிமாவில் ஒரு தயாரிப்பாளர் செலவு செய்வது அனைத்தும் செலவுக் கணக்கில் தெரியுமா என்றால் தெரியாது .ஒரு படத்திற்கு 5 கோடி செலவு செய்கிறார்கள் என்றால் பத்திலிருந்து பதினைந்து சதவீதம் செலவில் வராது .கமிஷனாகப் போய் விடுகிறது. இப்படி நாலு ஷெட்யூலுக்கு நாலு யூனிட் மாற்றினேன். முதலில் ஒரு லட்சம் கேட்டார்கள், பிறகு 90 ஆயிரம் , பிறகு 80 ஆயிரம், 70 ஆயிரம் என்று மாறிக்கொண்டே போனது.இது எப்படி இடையில் அவ்வளவு கமிஷன் போகிறது. சம்பளம் வாங்குவது மட்டும் போதாதா? கமிஷன் ஏன் வாங்குகிறார்கள்? சினிமாவில் கமிஷனை ஒழிக்க வேண்டும்.
சங்கர் சார் லஞ்சத்தை ஒழிப்பதற்குப் படம் எடுத்தது மாதிரி இதையும் ஒழிக்கப் படமாக எடுக்க வேண்டும். இந்த கமிஷன் சினிமாவில் வெகு சகஜமாக இருக்கிறது .நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து படம் எடுக்க வந்தால் இடையில் உள்ளவர்கள் யாராவது சாப்பிட நினைக்கிறார்கள். நான் சம்பாதித்த காசுக்கு எனக்கு கணக்கு வேண்டும்.இதை நான் விடமாட்டேன். இன்னொரு அனுபவம். ஒரு குணச்சித்திர நடிகரை அணுகிய போது பெரிய சம்பளம் கேட்டார். அது அவரது விருப்பம் பரவாயில்லை.ஆனால் பயணப்படியாக கிலோமீட்டருக்கு இருபது ரூபாய் கேட்டார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏன் நான் கொடுக்க வேண்டும்? அதுபோல உதவியாளர்கள் சம்பளமும் ஒழிக்கப்பட வேண்டும். இப்படி எல்லாம் நிபந்தனை போட்டால் யாரும் வர மாட்டார்கள் .ஆனால் அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை .
இந்தப் படத்தில் நாங்கள் நியாயமாக உழைத்திருக்கிறோம்.ஏதாவது எடுத்து ஒப்பேற்றி விடலாம் என்று நாங்கள் நினைக்கவில்லை. அதனால் தான் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எங்கள் மீது நம்பிக்கை வைத்து எங்களை ஊக்கப்படுத்தி இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.
படத்தின் நாயகி அஸ்மின் பேசும்போது,
“இந்த ரெட் லேபில் படத்தின் அனுபவம் மறக்க முடியாது. இந்த படத்தின் மூலம் புதிய உறவுகள் கிடைத்தனர் .நான் வேறு ஒரு தொழிலில் இருந்து இங்கே வந்திருக்கிறேன். இருந்தாலும் இந்த படத்திற்குள் நான் வரக் காரணம் தயாரிப்பாளர் லெனினும் இயக்குநர் வினோத்தும் தான். இயக்குநர் என்னை நன்றாகப் படத்தில் வடிவமைத்திருக்கிறார். இசைஅமைப்பாளர் கைலாஷ் மேனன் இந்தப் படத்திற்குள் வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது .இந்தப் படத்தில் நாம் அறிமுகமானது பெரிய விஷயம். ஒரு குடும்பம் போல் என்னைக் கவனித்துக் கொண்டார்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.
படத்தின் கதாசிரியர் பொன். பார்த்திபன் பேசும் போது,
“இந்தப் படக்கதையைப் படமாக எடுக்கும் போது முதலில் எதெல்லாம் வேண்டாம் என்று முடிவு எடுத்து தவிர்க்க வேண்டியவற்றையெல்லாம் தவிர்த்தோம் .ஆனால் ஆதாரமாக இருக்கும் ஒருவரியை மட்டும் அதன் பொறியை அக்கினி குஞ்சு இருப்பது போல் அதன் தன்மை மாறாமல் பார்த்துக் கொண்டோம். 2023 இல் கதை விவாதமாகத் தொடங்கப்பட்டு 2026 வரை ஒவ்வொரு நாளும் மெருகேறி வருகிறது இந்தப் படம். முதல் காட்சிலிருந்து கதை தொடங்கிவிடும். ஒவ்வொரு காட்சிக்கும் சங்கிலி போலத் தொடர்பு இருக்குமாறு இந்தத் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.
பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசும்போது,
“இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்னோடு உரிமையாகப் பழகுபவர். எனக்கு ஒருமுறை பணத் தேவை இருந்த போது தயங்கிக் கொண்டு நான் அவரிடம் கேட்கவில்லை.அடுத்த வாரம் தாமதமாகத்தான் கிடைத்தது. அப்போது தயாரிப்பாளர் பேசும்போது மகிழ்ச்சியா என்றார் .ஒரு வாரத்துக்கு முன்பு கிடைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றேன். ஏன் கேட்டிருக்க வேண்டியதுதானே? ஏன் தயக்கம் உங்களுக்கு ? என்றார் .அந்த அளவுக்கு உரிமையோடு பழகுபவர். இந்த படத்தின் பாடல்கள் நன்றாக வந்துள்ளன” என்றார்.
படத்தின் கலை இயக்குநர் பிரகதீஸ்வரன் பேசும்போது,
“படங்களில சின்ன படம் பெரிய படம் என்றெல்லாம் இல்லை. எல்லா படமும் ஒன்றுதான். எது ஓடுகிறது அது பெரிய படம். எது ஓடும் என்று யாராலும் சொல்ல முடியாது .எனக்கு இந்தப் படத்தில் ஒரு சம்பளம் கொடுத்தார்கள் .அதை வெளியே சொல்ல முடியாது. ஆனால் பணத்துக்காக நான் இங்கே வரவில்லை. சினிமா மீதுள்ள காதலால் இங்கே வந்திருக்கிறேன். பணம் வளர வளர கிடைக்கும் “என்றார்.
இசை அமைப்பாளர் கைலாஷ் மேனன் பேசும்போது,
“இதுதான் எனக்குத் தமிழில் முதல் படம் .ஆனால் இங்கே முதலில் வந்தபோது எனக்குத் தயக்கம் இருந்தது .ஆனால் தயாரிப்பாளரும் இயக்குநரும் நன்றாக என்னைப் பார்த்துக் கொண்டார்கள் .அதனால் இந்தப் பயணம் சௌகரியமாக இருந்தது .ஒரு வகையில் மலையாளப் படங்களை விட எனக்கு இங்கே மிகவும் சௌகரியமாகவும் சுலபமாகவும் இருந்தது. இங்கே தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நல்ல மதிப்பளிக்கிறார்கள். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்த இயக்குநரும் தயாரிப்பாளரும் சினிமாவை நேசிப்பவர்களாக இருக்கிறார்கள். மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த இந்தப் படம் இப்போது வெளியாக இருக்கிறது மகிழ்ச்சி”என்றார்.
இயக்குநர் கே .ஆர் வினோத் பேசும் போது,
“நாங்கள் வளர்ந்து வரும் திரைப்படக் குழுவினர். வளர்ந்து வரும் நடிகர்களைக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம். அனைவருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் படம் யாரையும் நிச்சயமாக ஏமாற்றாது என்று நம்புகிறேன் “என்றார்.
படத்தில் நடித்துள்ள இயக்குநர் அனுமோகன் பேசும்போது,
“அப்போதெல்லாம் சினிமாவில் ஒரு வழிமுறையைப் பின்பற்றினார்கள் முதலில் கதாசிரியரைக் கொண்டு கதையைத் தேர்ந்தெடுப்பார்கள் . பிறகு திரைக்கதை ஆசிரியர் வசனம் என்று ஆள் தேர்ந்தெடுப்பார்கள்.அவர்களும் தயாரிப்பாளரும் இணைந்து இயக்குவது யார் என்று தேர்ந்தெடுப்பார்கள். பிறகு அவர்கள் இணைந்து அந்தக் கதைக்குரிய கதாநாயகன்,நடிகர்கள் யார் என்று தேர்ந்தெடுப்பார்கள்,அந்த வழியில் தான் இப்போது இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இப்போதெல்லாம் கதாநாயக நடிகர்கள் தான் கதையையும் படத்தின் காட்சிகளையும் முடிவு செய்கிறார்கள் .ஷாட் என்ன என்பது கூட அவர்கள் தான் முடிவு செய்கிறார்கள். அப்படி எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்து சுயநலமாக இருக்கிறார்கள். உங்கள் சுயநலத்தை விட்டு விடுங்கள்.
இந்தப் படத்தில் ரத்தினபுரி என்று பாடலில் வரி வருகிறது. அதுதான் எங்கள் சொந்த ஊர். அந்த ரத்தினபுரியில் தான் பல சினிமாக்காரர்கள் சுற்றி வந்திருக்கிறார்கள். அங்கேதான் சத்யராஜ், சுந்தர் சி, தயாரிப்பாளர் கே ஆர் ஜி, கே. கோபிநாத் எல்லாரும் சுற்றி இருக்கிறார்கள்.
சினிமா டிக்கெட்டுக்கு 120 ரூபாய் கொடுத்தால் அந்த பணத்தில் தான் 120 குடும்பங்கள் பிழைக்கின்றன. இந்தப் படத்தில் நான் ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.இந்தப் படத்திற்குப் பிறகு எனது பெயரே மாறிவிடும் ‘என்றார்.
படத்தை விநியோகம் செய்து வெளியிடும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் குகன் பேசும்போது,
“ஒரு படத்திற்கு ரசிகர்கள் எப்படி வருகிறார்கள் என்றால் முதலில் ரசிகர்கள் அதிகம் உள்ள கதாநாயகர்களுக்கு வரும் கூட்டம் பெரியது .அதைத் தவிர்க்க முடியாது. அது அல்லாத படங்களும் வரத்தான் செய்கின்றன. அப்படி சிறை, மெட்ராஸ் மேட்னி போன்ற படங்கள் ஓடின. இப்போது வரும் பார்வையாளர்கள் யார் என்றால் 15 முதல் 32 வயது வரை உள்ளவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் .அவர்கள் எதிர்பார்த்து எது அவர்களைத் தூண்டுகிறதோ அந்தக் கதைகள் ஓடுகின்றன. பிறகு தான் வாய் வழியாக பேசப்பட்டு மற்றவர்கள் உள்ளே நுழைகிறார்கள்.
முதல் 10 கதாநாயகர்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதையும் தாண்டி கதை உள்ள படங்கள் ஓடத்தான் செய்கின்றன. எனவே கதை என்பதை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அடுத்து பாடல்கள் முக்கியம். ரீ ரிலீஸ் படங்கள் எல்லாம் பாடல்களால்தான் பேசப்படுகின்றன .எனவே பாடல்களுக்கு ஓர் இடம் உள்ளது .
இன்று 8 கோடி பேர் இருக்கிறார்கள் என்றால் அதில் 10% பேர் என்றால் 80 லட்சம் பேர் படம் பார்க்க வர வேண்டும் .ஆனால் இது போன்ற புதுப் படங்களுக்கு இரண்டு முதல் ஐந்து லட்சம் பேர்கள் தான் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது .அது ஒரு சதவீதம் தான். அப்படி இருக்கும்போது நல்ல கதை உள்ள படங்கள் வெற்றி பெறுகின்றன. சினிமாவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று யோசிக்கும்போது, சினிமா டிக்கெட் மட்டுமல்ல பிற செலவையும் கணக்கில் கொள்ள வேண்டி உள்ளது. வெளியில் 30 ரூபாய் விற்கும் காபி உள்ளே 150 ரூபாய் விற்கிறார்கள்.
20 ரூபாய் பப்ஸ் உள்ளே 120 ரூபாய். பாப்கான் 700 ரூபாய் வரை விற்கிறார்கள்.படம் பார்க்க வருபவர்களுக்கு இது ஒரு பெரிய அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே நாம் கொடுக்கிற காசுக்கு சரியாக படம் உள்ளதா என்று பார்க்கிறார்கள். எனவே படத்திற்கு கதை முக்கியம்.இந்தப் படக் குழுவினரை வாழ்த்துகிறேன்” என்றார்.
விருதுகள் அறிவிக்கப்படும் ஒவ்வொரு முறையும், அதைப் பெறாதவர்கள் அல்லது தங்களுக்குப் பிடித்தவர்கள் பட்டியலில் இல்லாத காரணத்தால் அவர்கள்தான் அதிகம் விமர்சிப்பார்கள். இது புதிதல்ல.
இந்த முறை தமிழக அரசின் சினிமா விருதுகள் தேர்வு நேர்மையானது என்று நான் நம்புகிறேன். இந்த விருதுகள் தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கின்றன.
உதாரணத்திற்கு, நான் இயக்கிய ‘சேசிங்’ படத்திற்கு சிறந்த சண்டைக் காட்சிகள் பிரிவில் விருது கிடைத்திருக்கிறது. இந்தப் படம் YouTube-இல் இருக்கிறது. பார்த்துவிட்டு நீங்களே முடிவு செய்யுங்கள் – இந்த விருது தகுதியானதா இல்லையா என்று!
ASSI Trailer showcased in Chennai; Taapsee Pannu Headlines a Hard-Hitting Investigative Courtroom Drama
Chennai, February 2, 2026: The trailer of ASSI was showcased today in Chennai in the presence of actors Revathy and Kani Kusruti, two pivotal members of the film’s powerful ensemble cast. Inspired by harrowing real-life incidents that make headlines every day, ASSI confronts uncomfortable truths that society often chooses to ignore. Directed by acclaimed filmmaker Anubhav Sinha, the investigative courtroom drama is set for a worldwide theatrical release on 20th February 2026.
After generating intrigue with its striking motion poster, the makers T-Series and Benaras Media Works have exclusively released the trailer in theatres and are soon planning on for a digital launch. Headlined by Taapsee Pannu, ASSI promises an intense, fast-paced narrative that goes beyond the courtroom, questioning morality, accountability, and collective responsibility.
The film features a stellar ensemble cast including Kani Kusruti, Revathy, Manoj Pahwa, Kumud Mishra, and Mohammed Zeeshan Ayyub, with special appearances by Naseeruddin Shah, Supriya Pathak, and Seema Pahwa, adding further depth and gravitas to the narrative.
The trailer opens on a stark and unsettling note, introducing Taapsee Pannu as a relentless lawyer who refuses to bend in her pursuit of justice. At the emotional core of the story lies Kani Kusruti’s character, whose journey becomes the beating heart of the case. What unfolds is a sharp investigative race through the darker layers of society disturbing, compelling, and deeply relevant. More than just a legal battle, ASSI challenges viewers to reflect on the future we are shaping and the silences we continue to maintain.
Speaking about the film, director Anubhav Sinha shared,
“For me, a film must hit the core of the story. With ASSI, it felt like a loud thud exactly where it should. The story draws from everyday news , realities we often ignore. Taapsee is a natural for a story like this; you take her there and she delivers. With Bhushan Kumar backing ASSI, we knew we were striking the nail in the right corner.”
Actors Kani Kusruti and Revathi, while interacting with the media, spoke about how the film draws from real-life incidents backed by detailed research involving several victims. They emphasized that true change must begin within society, urging people to confront such incidents openly rather than suppressing them.
Hard-hitting and thought-provoking, the ASSI trailer leaves viewers questioning whether justice is truly served or merely declared. With justice itself on trial, Taapsee Pannu’s performance promises to leave a lasting impact long after the verdict is delivered.
Gulshan Kumar and T-Series present ASSI, a Benaras Media Works production, directed by Anubhav Sinha and produced by Bhushan Kumar, Krishan Kumar, and Anubhav Sinha. The film releases exclusively in theatres worldwide on 20th February 2026.
பேட்ட, பீஸ்ட் படங்களில் வெற்றி பாடல்களை எழுதி பிரபலமான பாடலாசிரியர் கு.கார்த்திக் வரிகளில் இசையமைப்பாளர் சுரேஷ்ஷர்மா இசையில் இயக்குநர் பரணிசெல்வம் இயக்கத்தில் KM என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்து விரைவில் வெளியாக இருக்கும் ஆல்பம் பாடல் தான் சீயானே, இப்பாடலில் நடிகர் வினோத் ராவணன் ஆகவும் நடிகை சோனியாதாஸ் சீதா ஆகவும் நடித்துள்ளனர் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கும் ரிஷ்விகா வின் நடிப்பு மனதை உருக வைத்துள்ளது, இப்பாடலில் நடித்துள்ள அத்தனை கலைஞர்களும் சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளதால் இப்பாடல் ஒரு படம் போல காட்சியளிக்கிறது, சாதி என்பது மறக்கப்படவில்லை மறைக்கப்பட்டு தான் இருக்கிறது என்பதை சமூக கருத்தோடு அடுத்த தலைமுறைக்கு சாதி என்பது அவசியமற்றது என்ற சிந்தனையில் உருவாகியுள்ளத இந்த பாடல் இம்மாதம் இறுதியில் வெளியாக உள்ளது.
Brand introduces 5-Year Replacement Guarantee – No Questions Asked, Live-Use Warranty Model and unveils premium shutter line ‘Fascia by DeX’ Chennai, Feb 1, 2026
Bringing together thoughtful design, real-life functionality and long-term accountability, Interiors by DeX inaugurated its flagship experience store at Perungudi, OMR, in the presence of actors Prajin, Sandra, and Director-Actor Karu Palaniappan.
The ceremony commenced with a traditional kuthuvilakku lighting and ribbon cutting, followed by a walkthrough of the studio that showcased DeX’s modular kitchens, wardrobes and complete home interior solutions designed around everyday living.
Envisioned as an experience centre rather than a conventional showroom, the space allows customers to see, touch and understand how each design performs in real-life usage.
Designing Homes for Living, Not Just Looking
At a time when most interior brands focus on finishes and trends, DeX has built its philosophy around practical usage and durability.
Setting a new benchmark in the industry, the company introduced:
5-Year No-Questions-Asked Replacement Guarantee – If something fails, it is replaced without debates or fine print.
10-Day Live-Use Snag Period – Customers live in their homes, test every unit, identify real-life issues, and only after corrections does the warranty begin.
Lifestyle driven complete customisation with DeX being the one stop solution for all interior needs.
The idea is simple: homes should work beautifully every day, not just on handover day.
Launch of ‘Fascia by DeX’
The event also marked the launch of Fascia by DeX, an exclusive premium shutter brand manufactured at DeX’s in-house PU booth facility in Chennai, ensuring better finish, quality control and long-term reliability.
What the Guests Said
Prajin & Sandra shared:
“We’ve visited many interior studios, but DeX stands out because of its honesty and accountability. The live-use warranty concept is very customer-centric. It shows the confidence they have in their work. It’s refreshing to see a brand think from a family’s real needs.”
Director-Actor Karu Palaniappan said:
“My association with DeX is personal. They have designed and executed the interiors of my own home, so I’ve experienced their work first-hand. What impressed me most is their attention to functionality and detail. Like cinema, even homes need thoughtful design where every element serves a purpose. DeX understands that balance between aesthetics and practicality beautifully.”
From the Founders
Founder – Vaishali Sampath said:
“We didn’t want to create just another interiors company. We wanted to build a brand that takes complete responsibility for what we deliver. Our replacement guarantee and live-use period come from one belief — accountability without excuses.”
Co-Founder – Nanda Kumaran added:
“Every family uses their home differently. So our designs are lifestyle-driven, not trend-driven. With Fascia by DeX, we’ve taken quality control in-house to ensure customers get lasting durability and premium finishes.”
With the launch of its flagship store at Perungudi, Interiors by DeX aims to redefine how Chennai experiences home interiors — combining intelligent design, reliability, and trust under one roof.
Usage first. Lifestyle always. Accountability without excuses.
சென்னை பெருங்குடியில் Interiors by DeX Flagship அனுபவ மையத்தை நடிகர்கள் பிரஜின், சாண்ட்ரா & இயக்குநர்-நடிகர் கரு. பழனியப்பன் திறந்து வைத்தனர். 5 ஆண்டு ‘கேள்வியே இல்லாத’ மாற்று உத்தரவாதம் அறிமுகம்.
நுணுக்கமான வடிவமைப்பு, அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பயன்பாடு மற்றும் நீண்டகால பொறுப்புணர்வு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில், Interiors by DeX தனது Flagship அனுபவ மையத்தை OMR, Perungudi-யில் நடிகர்கள் பிரஜின் சாண்ட்ரா மற்றும் இயக்குநர்-நடிகர் கரு பழனியப்பன் முன்னிலையில் திறந்து வைத்தது.
நிகழ்ச்சி பாரம்பரிய குத்துவிளக்கு ஏற்றுதல் மற்றும் ரிப்பன் வெட்டுதல் மூலம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஸ்டூடியோ சுற்றுப்பயணத்தில், DeX நிறுவனத்தின் நவீன சமையலறைகள்(Modular kitchen), அலமாரிகள் (வார்ட்ரோப்கள்) மற்றும் முழுமையான வீட்டு இன்டீரியர் தீர்வுகள் — தினசரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டவை ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன.
சாதாரண ஷோரூமுக்குப் பதிலாக ஒரு அனுபவ மையமாக உருவாக்கப்பட்ட இந்த இடம், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு வடிவமைப்பையும் நேரில் பார்த்து, தொட்டு, நிஜ வாழ்க்கை பயன்பாட்டில் அது எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் வடிவம் வைக்கப்படுவது வாழ்வதற்காக மட்டுமே.பார்ப்பதற்காக அல்ல;
இன்டீரியர் துறையில் பெரும்பாலான பிராண்டுகள் மேற்பரப்பு அலங்காரம் மற்றும் டிரெண்டுகளை முன்னிலைப்படுத்தும் இக்காலத்தில், அதிக செயல்திறன் மற்றும் நீடித்த தன்மை என்ற கொள்கையின் அடிப்படையில் DeX இதனை உருவாக்கியுள்ளது.
Interior துறையில் புதிய அளவுகோலை அமைக்கும் வகையில், DeX புதிய யுத்தியை அறிமுகப்படுத்தியது:
5 ஆண்டு ‘கேள்வியே இல்லாத’ மாற்று உத்தரவாதம் – ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், விவாதமோ சிறு எழுத்துகளோ இல்லாமல் நேரடியாக மாற்று வழங்கப்படும்.
10 நாள் Live-Use Snag Period – வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டில் வசித்து, ஒவ்வொரு யூனிட்டையும் பயன்படுத்தி, நிஜ வாழ்க்கையில் தோன்றும் குறைகளை சுட்டிக்காட்டலாம். அனைத்து திருத்தங்களும் செய்யப்பட்ட பிறகே உத்தரவாதம் ஆரம்பமாகும்.
லைஃப்ஸ்டைல் அடிப்படையிலான முழுமையான கஸ்டமைஸேஷன் – அனைத்து இன்டீரியர் தேவைகளுக்கும் DeX ஒரு ஒரே இடத் தீர்வாக செயல்படுகிறது. இதன் நோக்கம் மிக எளிமையானது: வீடு என்பது தினமும் வாழக்கூடிய அழகான இடம். அது வெறும் Hand Over ஆக மட்டும் இருந்துவிடக் கூடாது. ஒப்படைக்கும் நாளில் மட்டும் அழகாக அல்ல; தினமும் சிறப்பாக செயல்பட வேண்டும்.
‘Fascia by DeX’ வெளியீடு
இந்த நிகழ்வில், Fascia by DeX எனும் DeX-இன் பிரத்யேக பிரீமியம் ஷட்டர் பிராண்டும் வெளியிடப்பட்டது. சென்னை நகரில் உள்ள DeX-இன் சொந்த PU பூத் உற்பத்தி நிலையத்தில் தயாரிக்கப்படும் இந்த ஷட்டர்கள், மேம்பட்ட ஃபினிஷ், உயர்ந்த தரக் கட்டுப்பாடு மற்றும் நீண்டகால நம்பகத்தன்மையை உறுதி செய்கின்றன.
விருந்தினர்கள் கூறியது
Prajin & Sandra கூறியதாவது:
“பல இன்டீரியர் ஸ்டூடியோக்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் DeX-ஐ தனித்துவமாக தெரிவதற்குக் காரணம் அதன் நேர்மை மற்றும் பொறுப்புணர்வு. Live-use warranty என்ற கருத்து வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டது. தங்களின் பணியில் அவர்களுக்கு உள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது. குடும்பங்களின் நிஜத்தேவைகளை நினைத்து சிந்திக்கும் ஒரு பிராண்டை காண்பது மிகவும் புத்துணர்ச்சியாக உள்ளது.”
இயக்குநர்-நடிகர் கரு பழனியப்பன் கூறினார்:
“DeX-உடனான எனது தொடர்பு தனிப்பட்டது. என் சொந்த வீட்டின் இன்டீரியர்களை அவர்களே வடிவமைத்து செயல்படுத்தியுள்ளனர். அதனால் அவர்களின் பணியை நேரடியாக அனுபவித்திருக்கிறேன். செயல்திறன் மற்றும் சிறு விவரங்களுக்கான கவனம் தான் என்னை மிகவும் ஈர்த்தது. சினிமாவைப் போலவே, வீடுகளிலும் ஒவ்வொரு பொருட்களும் ஒரு நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். அழகும் பயன்பாடும் சமநிலையுடன் இருக்க வேண்டியதை DeX அழகாகப் புரிந்துள்ளது.”
நிறுவனர் கருத்துகள்
Founder – Vaishali Sampath கூறினார்:
“ ஏதோ ஒரு வழக்கமான இன்டீரியர் நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. நாங்கள் வழங்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் முழுப் பொறுப்பு ஏற்கும் ஒரு பிராண்டை உருவாக்க விரும்பினோம். எங்கள் replacement guarantee மற்றும் live-use period — ‘மன்னிப்புகள் இல்லாத பொறுப்புணர்வு’ என்ற ஒரே நம்பிக்கையிலிருந்து வந்தவை.”
Co-Founder – Nanda Kumaran கூறினார்:
“ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வீட்டை வெவ்வேறு விதமாக பயன்படுத்துகிறது. அதனால் எங்கள் வடிவமைப்புகள் டிரெண்ட் சார்ந்தவை அல்ல; லைஃப்ஸ்டைல் சார்ந்தவை. Fascia by DeX மூலம், தரக் கட்டுப்பாட்டை முழுமையாக எங்களிடமே வைத்துக்கொண்டு, நீடித்த தன்மையும் பிரீமியம் ஃபினிஷும் கொடுப்போம் என்று வாடிக்கையாளர்களுக்கு உறுதி செய்கிறோம்.”
பெருங்குடியில் தனது Flagship கடையை தொடங்கியதன் மூலம், Interiors by DeX புத்திசாலித்தனமான வடிவமைப்பு, நம்பகத்தன்மை மற்றும் விசுவாசம் ஆகியவற்றை ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைத்து சென்னை மக்களின் வீட்டு உள்துறை அனுபவத்தை மறுவரையறை செய்ய முனைகிறது.
’புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம் ஜப்பானில் வெளியான வெறும் 14 நாட்களிலேயே ரூ. 6.1 கோடி (¥105 மில்லியன்) வசூல் செய்துள்ளது. இந்திய நடிகர்களில் உலக அளவில் செல்வாக்கு பெற்றவர் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் என்பதை இந்த சாதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள தனித்துவமான நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வெளியிட்டு வரும் ஜப்பான், தற்போது நடிகர் அல்லு அர்ஜூனையும் அவரது ‘புஷ்பா2’ திரைப்படத்தையும் கொண்டாடி வருகிறது. ஜப்பான் திரைப்படங்களின் வழக்கத்திற்கு மாறாக ’புஷ்பா2’ திரைப்படம் 3 மணி 40 நிமிடங்கள் என்ற ரன்டைம் இருந்தபோதிலும், படம் அங்கு வெளியான 14 நாட்களிலேயே கிடைத்திருக்கும் வரவேற்பும் வசூலும் உலகளவில் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு அதிகரித்திருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தையும் ‘புஷ்பா2’ திரைப்படத்தின் புகழையும் காட்டுகிறது.
கடந்த சில ஆண்டுகளில், நடிகர் அல்லு அர்ஜுன் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த நடிகராக உருவெடுத்துள்ளார். அவரது திரைப்படங்கள் தொடர்ந்து சர்வதேச கவனத்தை ஈர்த்து, சமூக வலைதளங்களில் பேசுபொருளாகிறது. இதுமட்டுமல்லாது, வெளிநாடுகளில் இந்திய நடிகர்களுக்கான புதிய சாதனைகளையும் உருவாக்கி வருகிறது.
இந்தியாவிலிருந்து ஜப்பான் வரை மாஸ் வணிகத் திரைப்படங்கள் மூலம் கொண்டாடப்படும் சில இந்திய நடிகர்களில் ஒருவராக ‘புஷ்பா2’ திரைப்படம் வாயிலாக நடிகர் அல்லு அர்ஜுன் மாறியுள்ளார். மொழி மற்றும் கலாச்சார எல்லைகளை தாண்டியும் அவரால் ரசிகர்களுடன் இணைய முடிகிறது என்பதை இந்தத் திரைப்படம் நிரூபித்துள்ளது.
உலகளாவிய சினிமாவில் இந்திய நட்சத்திரங்கள் வருகை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அதில் முன்னிலையில் அல்லு அர்ஜூன் இருக்கிறார் என்பதைத்தான் ஜப்பானில் ‘புஷ்பா2’ படத்தின் வசூல் நிலவரமும் கொண்டாட்டமும் காண்பிக்கிறது என்று வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜப்பானில் ‘புஷ்பா2’ திரைப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த திரைப்படங்களுக்காக நடிகர் அல்லு அர்ஜூன் இந்தியாவின் பல முன்னணி இயக்குநர்களுடன் கைக்கோத்திருப்பது சர்வதேச அளவில் அவரை இன்னும் உயர்த்துவதுடன், ஒரு இந்திய நடிகருக்கான இதுவரை இல்லாத அளவிலான உலக அங்கீகாரத்திற்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
STR பிறந்தநாளைத் தொடர்ந்து அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான பிளாக்பஸ்டர் படமான சிலம்பாட்டம் திரைப்படம், வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது. முன்னணி வெளியீட்டு நிறுவனமான எல்மா பிக்சர்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
மறுவெளியீட்டை ஒட்டி படக்குழு மற்றும் திரை பிரபலங்கள் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.
இந்நிகழ்வினில்…
விநியோகஸ்தர் எல்மா பிக்சர்ஸ் எத்தில் ராஜ் பேசியதாவது.., ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தை அனைவரும் கொண்டாடுவீர்கள் என நம்புகிறேன் நன்றி.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் குகன் பேசியதாவது.., இந்தப்படத்தை மீண்டும் வெளியிடுவதாக வந்த தகவல் பெரும் உற்சாகத்தைத் தந்தது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது. இப்படத்தை விஜய் சாரும் அஜித் சாரும் பார்த்து பாராட்டியிருக்கிறார்கள். இப்படத்தில் பல சுவாரஸ்யமான விசயங்கள் உள்ளது. யுவன் இசையில் இப்படத்தில் ஐந்து பாடல்களுமே பிளாக்பஸ்டர். லக்ஷ்மி மூவி மேக்கர்ஸுக்கு பெரிய லாபம் தந்த படம். இப்படத்தை எல்மா பிக்சர்ஸ் உடன் இணைந்து வழங்குவது பெருமை. ரசிகர்களுக்கு இப்படம் பெரிய விருந்தாக இருக்கும்.
இயக்குநர் சரவணன் பேசியதாவது.., ”சிம்புவுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். சிம்புவுக்கு பின்னால் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நாம் ஒரு மாஸ் சீனை எழுதுவோம், அதை சிம்பு நடிப்பில் திரையரங்கில் பார்த்தது பிரமிப்பாக இருந்தது. சிம்பு என் குடும்பம் மாதிரி, அவருக்கு கொடுத்த வெற்றி நான் எனக்கே தந்துகொண்ட வெற்றி. அப்போது போலவே இப்போதும் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடுவார்கள். இந்நேரத்தில் இப்படத்தில் நடித்த சினேகா, பிரபு உட்பட அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை பிரமாண்டமாகத் தயாரித்தார்கள். படத்தை ரசிகர்கள் இப்போதும் கொண்டாடுவார்கள் நன்றி.”
இயக்குநர் Tராஜேந்தர் பேசியதாவது.., என் மகன் சிலம்பரசன் பிறந்த நாள் கொண்டாட்டத்தை, சிலம்பாட்டம் படத்தோடு கொண்டாடும் அனைவருக்கும் நன்றி. எல்மா பிக்சர்ஸ் எத்தில் ராஜ், ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் குகன் ஆகிய இருவருக்கும் என் நன்றி. இயக்குநர் சரவணன் காலம் கடந்து நிற்கும் அருமையான ஆக்சன் படத்தை தந்துள்ளார். நான் என் பையன் நடித்ததில் வியந்து பார்த்த காதல் படம், விண்ணைத் தாண்டி வருவாயா!, நானும் பல காதல் படங்களை எடுத்திருக்கிறேன். ஆனால் என்னையே வியக்க வைத்த படம், விண்ணைத் தாண்டி வருவாயா.
அதே போல ஆக்சன் படம் என்று எடுத்துக்கொண்டால், எத்தனையோ படங்கள் ரீரிலீஸ் ஆகிறது. ஆனால், மங்காத்தா மட்டும் தான் வெற்றி பெற்றது. ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஏன் வேறுபடங்களுக்கு கூட்டம் வரவில்ல.? அது போல இந்த சிலம்பாட்டமும் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும். இந்தப்படம் இந்த காலகட்டத்திற்கு ஏற்றாற் போல மீண்டும் டிஜிட்டல் செய்துள்ளார்கள். ஒவ்வொரு ஃப்ரேமும் அவ்வளவு கலர்ஃபுல்லாக இருக்கிறது. சரவணன் அடிப்படையில் கேமராமேன். அத்தனை அற்புதமாக எடுத்துள்ளார். இந்தப்படத்தில் நடித்த பிரபு, சந்தானம், சினேகா என எல்லோரும் அட்டகாசமாக நடித்துள்ளனர். என் உயிருள்ள உஷா படமும் ரீ ரிலிஸுக்கு தயாராகிவிட்டது. ஆனால், சிலம்பாட்டம் வருவதால் என் படத்தை தள்ளி வைத்துவிட்டேன். தம்பி, என் நண்பர் விஜய்யின் ஜனநாயகன் படம் வந்தாலும் தள்ளிப்போவேன் அது நான் தரும் மரியாதை. தமிழ் சினிமா ரீ-ரிலீஸில் என் பையனின் சிலம்பாட்டம் பெரிய வெற்றி பெற ஆண்டவனை வேண்டுகிறேன். அனைவருக்கும் நன்றி.
லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் கே.முரளிதரன், வி.சுவாமிநாதன், டி.எஸ்.ரங்கராஜன் தயாரிப்பில், 2008ஆம் ஆண்டு வெளியான போது நல்ல வசூலும், ரசிகர்கள் ஆதரவும் பெற்ற “சிலம்பாட்டம்”, காலப்போக்கில் சிம்புவின் கல்ட் படங்களில் ஒன்றாக மாறியது. இன்றைய டிஜிட்டல் காலத்திற்கு ஏற்ப, மேம்படுத்தப்பட்ட ஒலி–படத் தரத்தில், புத்தம் புது பொலிவுடன் இந்த படம் மீண்டும் திரைக்கு வரவிருப்பது STR ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
சிலம்பரசன் (STR) இந்தப் படத்தில் “தமிழரசன்” மற்றும் “விச்சு” என்ற இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடித்தது ரசிகர்களால் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக கிராமத்து பின்னணியில், சிலம்பக் கலையை அடிப்படையாகக் கொண்டு அமைந்த ஆக்ஷன் காட்சிகள், சிம்புவின் உடல் மொழி, டயலாக் டெலிவரி ஆகியவை படத்திற்கு தனி அடையாளம் கொடுத்தன.
இயக்குநர் S சரவணன் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவின் இசை பெரிய பலமாக அமைந்தது. “சிலம்பாட்டம்” டைட்டில் பாடல் முதல் மெலடி, குத்து பாடல்கள் வரை அனைத்தும் அப்போது ஹிட் லிஸ்டில் இருந்தன. சிம்புவுடன் இணைந்து சனுஷா, ஸ்நேகா ஆகியோர் நடித்திருந்தனர். வில்லன் கதாபாத்திரங்கள், உணர்ச்சிப் பூர்வமான அம்மா–மகன் சென்டிமெண்ட், கிராமத்து அரசியல் என பல அம்சங்கள் ரசிகர்களை கவர்ந்தது.
மாஸ் சிம்பு, ஆக்ஷன் சிம்பு, கிராமத்து சிம்பு — அனைத்தையும் ஒரே படத்தில் காண விரும்பும் ரசிகர்களுக்கு, “சிலம்பாட்டம்” ரீ-ரிலீஸ் ஒரு திருவிழா அனுபவமாக இருக்கும்.
இப்படம் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி மீண்டும் திரைக்கு வருகிறது.
Chatha Pacha (Dubbed) is a high-energy Tamil-dubbed Malayalam action-comedy that captures the wild, nostalgic thrill of backyard WWE dreams turning into real ring rivalries in Fort Kochi’s gritty streets. Arjun Ashokan and Roshan Mathew dominate as the brawling brothers channeling Kane and Undertaker vibes, delivering brotherly chaos, raw athleticism, and heartfelt underdog spirit that explodes in every choreographed clash.
Director Advaith Nayar nails the rowdy fun with a ragtag crew of ex-cons forming a wrestling club, blending laugh-out-loud antics, sweaty ring spectacles, and sibling redemption that feels like a loving tribute to childhood wrestling obsessions. Vishak Nair steals scenes as the smirking antagonist Cherian, adding complex menace amid colorful costumes and crowd-roaring moments that ignite theaters.
Crisp 89-minute pacing, immersive ringside visuals, and infectious energy make this vibrant entertainer a crowd-pleaser packed with theatrical cheers, proving a perfect dubbed treat for fans craving stylish brawls and feel-good triumphs.