Wednesday, June 17, 2026
- Advertisement -
Home Blog Page 5

ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

0

ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் மு. கி. சாம்பசிவம் தயாரிப்பில் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் நடிகர் பிரஜின் கதையின் நாயகனாக நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

‘அந்தரன்’ திரைப்படத்தில் பிரஜின், இவானா வருண், அனுபமா குமார், ஆதிரன் பத்மன், ‘அருவி’ பாலா, மு.கி. சாம்பசிவம், ரமேஷ் பாபு, அர்ஜுன் தேவ், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன், வி ஜே ராஜூ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹரி எஸ் ஆர் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை இக்னேசியஸ் அஸ்வின் மற்றும் சதீஷ் குரோசாவா மேற்கொள்ள கலை இயக்கத்தை சசிகுமார் கவனித்திருக்கிறார் பரபரப்பான கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மு.கி. சாம்பசிவம் தயாரிக்க சந்தோஷ் ராவணன் இயக்கியிருக்கிறார்.

வரும் 25ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினருடன் தயாரிப்பாளர் சி. வி. குமார், நடிகை சாண்ட்ரா, பிக் பாஸ் சபரி, ‘விக்கல்ஸ்’ விக்ரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நடிகர் ‘விக்கல்ஸ்’ விக்ரம் பேசுகையில், ”பிக் பாஸ் மூலமாகத்தான் இப்படத்தின் நாயகன் பிரஜின் நண்பரானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அதற்கு முன்-பின் என ஒரு புதிய வரலாறு உருவாகும். அதேபோல் நண்பர் பிரஜின் நடித்திருக்கும் ‘அந்தரன்’ படத்தின் மூலம் அந்தரனுக்கு முன், அந்தரனுக்கு பின் என பிரஜினின் முன்னேற்றம் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இருக்கும் என்று நம்புகிறேன்.

பிக் பாஸ் வீட்டில் அவர் தன்னுடைய திரையுலக பயணத்தில் நடைபெற்ற சம்பவங்களை விவரித்து கொண்டே இருப்பார். அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வாழ்த்துகிறேன்,” என்றார்

நடிகை இவானா வருண் பேசுகையில், ”இது என்னுடைய முதல் திரைப்படம். அதனாலயே இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். படப்பிடிப்பு தளத்தில் குழுவாக இணைந்து அனைவரும் வழங்கிய ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி. படப்பிடிப்பு அனுபவங்கள் மறக்க முடியாதது.

நாங்கள் கலைஞர்கள். உணர்வுகளை கதாபாத்திரங்களின் வழியாக வெளிப்படுத்துகிறோம். அதன் மூலமாக நாங்கள் அனைவரும் ரசிகர்களுடன் தொடர்பு கொள்கிறோம். இந்த படம் ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்த திரைப்படத்தை ஜூன் 25ஆம் தேதி அன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் சந்தோஷ் ராவணன் பேசுகையில், ”இந்த திரைப்படத்தின் கதையை தயாரிப்பாளர் சாம்பசிவத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினேன். அதனை படித்து இரண்டு நாட்களில் ‘கதை நன்றாக இருக்கிறது. ஆனால் இப்போது என்னால் தயாரிக்க இயலாது’ என்றார். அதன் பிறகு ஆறு மாதம் கழித்து மீண்டும் என்னை அழைத்து, ‘என்னுடைய நண்பர் ராஜேந்திர பிரசாத் வருகை தந்துள்ளார். அவருக்கு கதையை சொல்ல முடியுமா?’ எனக் கேட்டார். கதையை சொன்னேன் அவருக்கும் பிடித்திருந்தது. அவர் கொடுத்த பேராதரவின் காரணமாகத்தான் தயாரிப்பாளர் சாம்பசிவம் இப்படத்தின் பணிகளைத் தொடங்கினார். அதன் பிறகு நெருக்கடியான சூழல் ஏற்பட்டபோதும் எனக்கு கொடுத்த வாக்குறுதியின் காரணமாக படத்தின் பணிகளை நிறைவு செய்து, தற்போது வெளியிடுகிறார். இதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் இந்தப் படத்தில் அவர் சங்கர் எனும் கதாபாத்திரத்தில் நாயகியின் தந்தையாக நடித்திருக்கிறார். அவர்தான் கதாநாயகனாகவும், வில்லனாகவும் இருப்பார். அதற்கும் நன்றி.

நான் படப்பிடிப்பு தளத்தில் நாயகி உடன் பேசியதே இல்லை. ஏனெனில் அவர் பேசும் இந்தி எனக்கு தெரியாது. நான் பேசும் ஆங்கிலம் அவருக்கு புரியாது. இதனால் இந்தியும் ஆங்கிலமும் தெரிந்த ஒரு உதவியாளரை வைத்துக் கொண்டுதான் அவருடன் பணியாற்றினேன். ஆனால் திரையில் அவருடைய நடிப்பு ரசிக்கும் வகையில் இருக்கும்.

‘அந்தரன்’ என்றால் ஒரு ஹண்டர். ஹண்டர் என்றால் மறைந்திருந்து தாக்குபவன் என பொருள். நம்முடைய தினசரி வாழ்வில் பல விஷயங்களை கடந்து செல்கிறோம். ஆனால் அதன் மூலமாக ஏதேனும் மோசமான விளைவுகள் ஏற்பட்ட பிறகுதான் அதன் சீரியஸ்னஸை பார்க்கிறோம். அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை மையமாகக் கொண்டதுதான் ‘அந்தரன்’. அதைப் பற்றி இப்போது விரிவாக சொல்ல இயலாது. படம் பார்க்கும்போது ரசிகர்கள் அனைவரும் உணர்வார்கள்.

இந்த திரைப்படம் நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் ஒரு வழக்கினை தழுவியது. இந்த வழக்கு தொடர்பான எந்த விவரங்களையும் நான் இதுவரை தயாரிப்பாளரிடம் கூட பகிர்ந்து கொண்டதில்லை. படம் வெற்றி பெற்ற பிறகு இதைப்பற்றி சொல்கிறேன். ஆனால் நிச்சயமாக இந்த ‘அந்தரன்’ வழக்கமான படமாக இருக்காது என்பதை மட்டும் நான் உறுதியாக சொல்ல முடியும்.

‘போர் தொழில்’, ‘ராட்சசன்’, ‘தெகிடி’ ஆகிய திரைப்படங்களில் இருந்தது போன்ற ஒரு தனித்துவமான விஷயம் இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் இருக்கிறது. இது நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும்.

இந்தப் படத்தின் கதை திரில்லர் தான். ஆனால் அதனை ரொமான்டிக்காக சொல்லி இருக்கிறோம். ரொமான்டிக்கான சீன்கள் நிறைய இருக்கிறது. இது ஏன் என்பதற்கான காரணம் உச்சகட்ட காட்சியில் சொல்லியிருக்கிறோம்.

இந்தக் கதையை தயாரிப்பாளர் சி. வி. குமாரிடம் சொன்னேன். அவர்தான் இந்தக் கதையில் பல விஷயங்களை சேர்க்கலாம் என ஆலோசனை சொன்னதுடன் மட்டும் நிற்காமல் நிறைய நடிகர், நடிகைகளையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் பயன்படுத்திக் கொள் என பரிந்துரையும் செய்தார் . அவருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களுடைய முழுமையான பங்களிப்பை அர்ப்பணிப்புடன் வழங்கினர்,” என்றார்.

தயாரிப்பாளர் சி வி குமார் பேசுகையில், ”இப்படத்தின் தயாரிப்பாளர் சாம்பசிவம் என்னுடைய நெருங்கிய நண்பர். 2019ம் ஆண்டில் ‘அடவி’ என்றொரு திரைப்படத்தை தயாரித்தார். அந்தப் படத்தின் வெளியீட்டிற்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். அன்று முதல் இன்று வரை நல்லதொரு நட்பு நீடிக்கிறது.

அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் ‘மனிதர்கள்’ என்றொரு படத்தை தயாரித்தார். அந்த திரைப்படத்தை வணிக ரீதியில் வெளியிடுவதற்காக பார்வையிட சொன்னார். அந்தப் படத்தை பார்த்தேன். ஆனால் அது ஆர்ட் ஃபிலிம். இந்த திரைப்படத்தை சர்வதேச திரைப்பட விழாவிற்கு அனுப்பலாம். திரையரங்குகளில் வெளியிட வேண்டாம் என ஆலோசனை சொன்னேன். ஆனால் அவர் அந்தத் திரைப்படத்தையும் துணிச்சலுடன் திரையரங்குகளில் வெளியிட்டார்.

இயக்குநர் சந்தோஷ் இராவணன் எனக்கு மிகவும் தெரிந்தவர். கொரோனா காலகட்டத்திற்கு முன் என்னுடைய அலுவலகத்தில் பணியாற்றியவர். அதன் பிறகு தொடர்பில் இல்லை. பிறகு ஒருநாள் சாம்பசிவம் என்னை போனில் தொடர்பு கொண்டு, ‘உங்கள் அலுவலகத்தில் பணியாற்றிய சந்தோஷ் சொன்ன கதை நன்றாக இருக்கிறது’ என என்னிடம் சொன்னார். சந்தோஷ் திறமையானவர் தான், படத்தை தயாரிக்கலாம் என நம்பிக்கை கொடுத்தேன். அதன் பிறகு படத்தில் நடிக்கும் நடிகர்கள் தொடர்பான பரிந்துரையை கேட்டார்கள். நானும் வழங்கினேன்.

படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து ஃபர்ஸ்ட் லுக் வெளியிடும் முன் இயக்குநர் சந்தோஷ் என்னை சந்தித்து அதனை காண்பித்தார். அப்போது டைட்டில் ‘அந்தரன்’ என்று இருந்தது. அவரிடம் நீ வேறு ஒரு டைட்டில் தானே வைத்திருந்தாய். ஏன் மாற்றினாய் என்று கேட்டபோது, தயாரிப்பாளரின் தேர்வு என்று விளக்கம் அளித்தார். உடனே தயாரிப்பாளரிடம் ஏன் இந்தப் படத்திற்கு அந்தரன் என பெயர் வைத்திருக்கிறீர்கள் என கேட்டேன். பொதுவாக ஒரு திரைப்படத்திற்கு டைட்டில் வைத்தால் அது அனைவருக்கும் புரிய வேண்டும். ஒவ்வொருவருக்கும் டைட்டிலுக்காக விளக்கம் கொடுத்து கொண்டு இருக்க வேண்டாம் என்று சொன்னேன்.

அதற்கு அவர் குடும்பத்துடன் ஆலயத்திற்கு சென்று விருப்ப சீட்டை போட்டு தேர்ந்தெடுக்கும் போது அதில் ‘அந்தரன்’ என்று தான் வந்தது. இதனை என் மனைவி தான் தேர்வு செய்தார்கள். அதனால் அந்த டைட்டிலை மாற்ற இயலாது என்று அன்பாக சொன்னார். நான் உடனே சிரித்துக்கொண்டே சரி என்று சொல்லிவிட்டேன்..

இந்த திரைப்படத்தை நான் பார்த்து விட்டேன். நல்ல படம் .கதையின் போக்கை யாராலும் இறுதிவரை கணிக்க இயலாத அளவிற்கு சுவராசியமாக இயக்குநர் படத்தை உருவாக்கியிருக்கிறார்.

இந்தப் படம் ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படம் நன்றாக இருந்தால் ஊடகங்களும் , ரசிகர்களும் கொண்டாடுவார்கள். இதற்கு என்னுடைய நிறுவனத்திலிருந்து வெளியான படைப்புகளே சாட்சி. அந்த வகையில் இந்த படமும் நன்றாக இருக்கிறது. வெற்றி பெறும், வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் மு கி சாம்பசிவம் பேசுகையில், ”அடவி, மனிதர்கள் ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து அந்தரன் என்னுடைய மூன்றாவது திரைப்படம். படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.‌ தமிழ் சினிமாவின் யுனிவர்சிட்டி என போற்றப்படும் நண்பரும் , தயாரிப்பாளருமான சி வி குமார் மற்றும் விக்ரம், சபரி, சாண்ட்ரா ஆகிய சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி.

தயாரிப்பாளர் சி வி குமார் ‘சூது கவ்வும்’ படத்தினை தயாரித்துக் கொண்டிருந்தபோது என்னை சந்தித்து நல்லதொரு கதை இருக்கிறது தயாரிக்கிறீர்களா என கேட்டார். என்னிடம் பணம் இல்லை என்று சொன்னேன். பணத்தை யார் கேட்டார்கள், படத்தை தயாரிக்கிறாயா எனக் கேட்டார். சி வி குமாருக்கு நல்ல கதை கிடைத்தால் போதும். அதை படமாக உருவாக்குவார். அந்த அளவிற்கு அவர் திறமையானவர். தமிழ் திரையுலகில் ஏராளமான புதுமுகங்களை அவர் அறிமுகப்படுத்தி இருக்கிறார். ஒரு திரைப்படத்திற்கான கன்டென்ட் மற்றும் சரியான விஷயம் கிடைத்துவிட்டால் அவர் தயாரிப்பார். இந்தப் படம் உருவானதற்கும் அவர்தான் காரணம். அதனால் அவருக்கு சிறப்பு நன்றி.

இயக்குநர் கதையை சொன்னார், அது எனக்கு பிடித்திருந்தது. அப்போது என்னிடம் பணம் இல்லை என்று சொன்னேன். அதன் பிறகு எனக்கு ஒரு குழு அமைந்தது. நான் தயாரித்த இரண்டு திரைப்படங்களிலும் நல்லதொரு கன்டென்ட் இருந்தது. அதேபோல் இந்த திரைப்படத்திலும் சமூகத்துக்கு தேவையான ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறோம். அதனை ஒரு க்ரைம் திரில்லராக வழங்கியுள்ளோம். திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு உங்களின் ஆதரவை வழங்குவீர்கள் என நம்புகிறேன்.

புதியவர்கள் ஒன்றிணைந்து ஒரு நல்லதொரு திரைப்படத்தை உருவாக்கினால் அதற்கு விநியோகஸ்தர்களும், ஓடிடி உள்ளிட்ட வர்த்தகம் தொடர்பானவர்களும் ஆதரவை வழங்க வேண்டும் என இந்த தருணத்தில் ஒரு வேண்டுகோளாக முன்வைக்கிறேன். புதியவர்களின் திரைப்படத்தை ‘நட்சத்திரங்கள் இல்லாத திரைப்படம்’ என புறக்கணிக்க வேண்டாம். ஏனெனில் இன்றைய முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் கடந்த காலத்தில் புது முகங்கள் தான் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்,” என்றார்.

நடிகர் பிரஜின் பேசுகையில், ”இருபது ஆண்டு காலமாக ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை என் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி விடாதா என்ற எதிர்பார்ப்புடன் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும். ஏனெனில் தமிழ் ரசிகர்கள் நல்ல திரைப்படத்தை கொண்டாடுவார்கள்.

தயாரிப்பாளர் சாம்பசிவம் அவர்களின் மூன்றாவது திரைப்படம் இது. நல்ல கதை. நல்லதொரு கருத்தை தேர்வு செய்திருக்கிறார். இந்தப் படம் உங்களுக்கு வணிக ரீதியான வெற்றியை தர வேண்டும். தரும்.

நிறைய போராட்டங்களுக்கு இடையே நல்லதொரு படைப்பை மனதிற்கு நிறைவாக உருவாக்கியிருக்கிறோம். படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் இயக்குநர் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் பலர் சென்றுள்ளனர். பலரிடம் பழகி இருக்கிறேன். அதில் விக்ரம் மற்றும் சபரி ஆகியோர் என்னுடைய நெருங்கிய நண்பர்கள். நான் பிக் பாஸ் வீட்டில் விக்ரமுடன் தான் அதிகமாக சண்டை போட்டிருக்கிறேன். யாருடன் நீங்கள் அதிகமாக நெருங்குகிறீர்களோ, அவர்களுடன் தான் உங்களுக்கு சண்டை வரும். அந்த சண்டை மூலமாக வரும் நட்புதான், பிக் பாஸ் வீட்டிற்கு வெளியேயும் நீடிக்கும்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் கொடுக்கும் காசிற்கு தரமான படைப்பாக இருக்கும். அவர்கள் செலவிடும் விலை மதிக்க முடியாத நேரத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும் இந்த படம் இருக்கும்.

ஜூன் 25ம் தேதி ‘அந்தரன்’ திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும்,” என்றார்.

மத்திய அமைச்சர் திரு. எல். முருகனுடன் கவிஞரும் இயக்குநருமான சீனு ராமசாமி சந்திப்பு, தான் எழுதிய – ‘சினிமாவின் ஆன்மா’ நூலை 25 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க மத்திய அரசு ஆதரவு!

0

சென்னை:

கவிஞரும் பிரபல திரைப்பட இயக்குநருமான சீனு ராமசாமி அவர்கள், இன்று மதியம் மாண்புமிகு மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் திரு. எல். முருகன் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது, தான் எழுதிய ‘சினிமாவின் ஆன்மா (சிறார்கள் சினிமா ரசனைக் கல்வி)’ நூலின் சமகால சமூகத் தேவை குறித்து அமைச்சருடன் அவர் விரிவாகவும் ஆழமாகவும் விவாதித்தார்.

உலகக் குழந்தைகளின் சிறந்த திரைப்படங்கள் மற்றும் இந்தியாவில் எடுக்கப்பட்ட நேர்த்தியான, உலக சினிமா தரத்திலான மிகச் சிறந்த சிறார் திரைப்படங்களைத் தொகுத்து, சிறார்களின் சினிமா ரசனையை ஒரு முறையான வாழ்வியல் கல்வியாக மாற்றுவதே இந்நூலின் முக்கிய நோக்கமாகும்.

இச்சந்திப்பின் போது இக்கல்வியின் கட்டாயத் தேவை குறித்து இயக்குநர் சீனு ராமசாமி விளக்கிக் கூறுகையில்:
“ஒரு குழந்தை 8 வயது வருவதற்குள் உடல் ஆரோக்கியத்திற்காக 35 தடுப்பூசிகளுக்கு மேல் போடுகிறோம். அதுபோல, அவர்களின் மன ஆரோக்கியத்திற்கும் ரசனை வளர்ச்சிக்கும் இந்த சினிமா ரசனை கல்வி ஒரு முக்கியத் தடுப்பூசியாக இருக்கும். இது பிஞ்சு மனங்களிலே நஞ்சு கலக்காமல் தடுத்து, கிராமப்புற எளிய மாணவ, மாணவியர் அனைவருக்கும் அசல் சினிமாவை அறிந்து, தர்க்கபூர்வமான சிந்தனையாளர்களாக வளர வழிவகுக்கும். இந்த பரந்த பாரத தேசத்தின் குழந்தை மனங்களில் நல் உணர்வுகளை பிள்ளை பிராயத்திலேயே வளர்க்க சினிமா ரசனை கல்வி பெரிதும் உதவும்” என்றார்.

இயக்குநர் சீனு ராமசாமி தொகுத்துள்ள உலகத்தரம் வாய்ந்த சிறார் திரைப்படங்களின் விவரங்களையும், நூலின் உன்னத நோக்கத்தையும் மிகுந்த சிரத்தையோடு கேட்டு அறிந்த மாண்புமிகு அமைச்சர் திரு. எல். முருகன் அவர்கள் பெரிதும் மகிழ்ந்தார். “இத்தகைய முயற்சி இந்த நாட்டுக்கு மிக முக்கியமானது; இதன் மூலம் நம் நாட்டு குழந்தைகளுக்கு மிகப்பெரிய நன்மையை நாம் செய்வோம்” என்று பாராட்டிய அமைச்சர் அவர்கள், ஒட்டுமொத்த இந்தியக் குழந்தைகளும் பயனடையும் வகையில், இந்நூலை இந்தியாவின் முக்கிய 25 மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களையும், ஏற்பாடுகளையும் மத்திய அரசு சார்பில் செய்வதாக நெஞ்சார வாக்குறுதி அளித்து வாழ்த்தினார்.

மத்திய அரசின் இந்த மகத்தான அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, “சினிமா ரசனை கல்வி இந்தியா முழுக்கச் செல்வதற்கு, ஒட்டுமொத்த இந்தியக் குழந்தைகளின் கரங்களால் மாண்புமிகு அமைச்சரின் கரங்களைப் பற்றி நான் என் நன்றியைக் கூறினேன்” என இயக்குநர் சீனு ராமசாமி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

On-Campus Chaos Gets Bigger: Basil Joseph and Tovino Thomas’ Athiradi Streams on Sony LIV from 19th June

0

College life is where friendships are forged, rivalries are born, and every ordinary day has the potential to become an unforgettable story. From bunking lectures and pulling pranks to chasing dreams and creating memories that last a lifetime, there’s a certain magic that only campus life can offer. Bringing all that youthful energy, chaos, and nostalgia with a thrilling twist is the Malayalam blockbuster Athiradi. Streaming from 19th June on Sony LIV the movie is set against the vibrant backdrop of an engineering college, the film follows Samkutty (Basil Joseph), an enthusiastic student determined to revive the institution’s legendary “Arohan” fest—a celebration that was banned years ago following a tragic stampede. But what begins as a mission to restore lost glory soon turns into a rollercoaster of madness when Samkutty crosses paths with Sreekuttan Vellayani (Tovino Thomas), a local goon-turned-musician with a bruised ego.

As the countdown to the fest begins, friendships are tested, campus politics heat up, and an epic rivalry takes center stage. Packed with humour, heart, music, and mayhem, Athiradi is a celebration of everything we love about college life. Directed by debutant Arun Anirudhan, best known for scripting Minnal Murali, Athiradi follows Samkutty (Basil Joseph), a spirited college student determined to revive BCET College’s iconic cultural festival. His ambitious plans take an unexpected turn when he crosses paths with Sreekuttan Vellayani (Tovino Thomas), an eccentric goon-turned-musician whose arrival sparks a hilarious, high-energy rivalry.

Speaking about the film’s digital premiere, Basil Joseph said, “Sony LIV has been home to some of our most memorable journeys, so it’s incredibly special for us to bring Athiradi to the platform. The film celebrates the fun, friendships, chaos and emotions that make campus life unforgettable. We had a fantastic time creating this world, and I’m excited for audiences across the country to join in on the madness and entertainment when Athiradi premieres on Sony LIV.”

Tovino Thomas added,“Sreekuttan is one of the most entertaining characters I’ve had the chance to play. The film is packed with humour, energy and action, and I’m excited for audiences to discover—or revisit—its unique charm when it premieres on Sony LIV.”

The film also stars Darshana Rajendran, Riya Shibu, Zarin Shihab, Jeo Baby, Vishnu, and Shelvin in pivotal roles. Adding to the fun, Vineeth Sreenivasan and music composer Shaan Rahman make special appearances as fictionalised versions of themselves. Produced by Basil Joseph and Dr. Ananthu S, Athiradi blends comedy, action, romance, and emotion against the backdrop of a lively college festival, making for a thoroughly entertaining watch.

Link: https://www.instagram.com/p/DZM82cQMb7C/?igsh=a2N4NmZsbzRiN3Zj

Athiradi will stream exclusively on Sony LIV from 19th June in Malayalam, Telugu, Tamil, Kannada, and Hindi.

Mythri Movie Makers-Mass Maharaja Ravi Teja’a ‘Irumudi Kattu’ Visual Glimpse sweeps hearts with Emotions!

0

Actor Ravi Teja’s first-ever Bilingual Tamil-Telugu ‘Irumudi Kattu’ intertwines Father-Daughter Bonding, Spirituality and Redemption of Soul

Mythri Movie Makers, with every single project, continues to redefine cinematic experiences for Pan Indian audiences. The diverse flavours of storytelling, beautifully layered emotions, and captivating entertainment have enabled its productions to resonate from the heart of towns to far flung corners of the globe. The production house, headed by Naveen Yerneni and Y. Ravi Shankar, has consistently made headlines with every announcement and blockbuster success across various regional languages. From scoring brownie points with the Pushpa franchise to hitting the bull’s eye with Good Bad Ugly and Dude in the Tamil industry, they have several exciting projects lined up at different stages of production.

And now, they are arriving with a beautiful film titled ‘Irumudi Kattu’, centring around an emotionally powerful father daughter bonding. Besides, Ravi Teja, who attained Pan Indian appeal much before the formal term came into existence, has remained a favourite among both mass and family audiences. To everyone’s surprise, he sheds his larger than life avatar and steps into a role that instantly captivates with its recently launched visual glimpse. Within a short duration, the glimpse unveils three different shades of Ravi Teja: a doting father, an angry and violent man, and a father embracing spirituality towards Lord Ayyappan, honouring his daughter’s heartfelt plea to give up alcohol addiction. Significantly, this marks the first ever bilingual film of Mass Maharaja Ravi Teja, simultaneously made in Tamil and Telugu. With his fanbase remaining steady and strong for decades, his arrival in Tamil cinema has significantly heightened expectations surrounding this film.

Set against the spiritually enriching backdrop of Lord Ayyappa, Irumudi Kattu unfolds as an emotionally stirring family entertainer driven by relationships, personal transformations, and the emotional complexities of human life. Rather than relying on exaggerated storytelling, the film appears to embrace authenticity through deeply rooted characters, emotionally charged moments, and an engaging narrative that naturally intertwines faith, family values, and gripping dramatic elements. With emotions forming the heartbeat of its storytelling, Irumudi Kattu promises an experience that is expected to strike a meaningful chord with audiences, while its cultural rootedness and spiritual flavour add a refreshing uniqueness to the cinematic journey.

While the visual glimpse adds a poetic flavour, the title ‘Irumudi Kattu’ instantly offers a clear and evocative reflection of the film’s essence. Often, a film’s success begins with a title that perfectly resonates with its soul and theme, and this title beautifully captures the spirit of devotion and spirituality associated with Lord Ayyappa. More than merely symbolising faith, it subtly unfolds an emotional and transformative journey that is expected to strike a deep chord with audiences.

The ensemble star-cast of ‘Irumudi Kattu’ includes Priya Bhavani Shankar, Sai Kumar, Baby Nakshathra, Ajay Ghosh, Ramesh Indira, Swasika, Meesala Lakshman, Rajkumar Kasireddy, Ramana Bhargav, Kishore Kancherapalem, Karthik Adusumalli, Mahesh and others.

The film is produced by Naveen Yerneni and Y Ravi Shankar of Mythri Movie Makers and is presented by Gulshan Kumar, Bhushan Kumar & T-Series Films. The film is directed by Shiva Nirvana, who has handled story, screenplay and dialogues as well. G.V. Prakash Kumar has composed music and Vishnu Sharma has handled cinematography.

The others in the technical crew include Cherry (CEO), Dinesh Narasimhan (Chief Executive Producer), Sahi Suresh (Production Designing), Prawin Pudi (Editing), Naresh Babu P (Additional Screenplay), Suresh (Co-Director), Srinivas Raju (Makeup), Rajesh (Costume Designer), Yellow Tooths (Poster Designer), Suresh Chandra (PRO) and First Show (Marketing).

The film is scheduled for worldwide theatrical release in August 2026.

மைத்ரி மூவி மேக்கர்ஸ், மாஸ் மகாராஜா ரவி தேஜாவின் ‘இருமுடி கட்டு’ விஷுவல் கிளிம்ப்ஸ் ரசிகர்களின் இதயங்களை வென்றது!

நடிகர் ரவி தேஜாவின் முதல் தமிழ்–தெலுங்கு இருமொழிப் படம் ‘இருமுடி கட்டு’! தந்தை–மகள் பாசம், ஆன்மிகம் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ளது!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தனது ஒவ்வொரு படைப்பின் மூலமும் பான் இந்திய ரசிகர்களுக்கு பிரம்மாண்ட மற்றும் புதிய சினிமா அனுபவத்தை கொடுத்து வருகிறது. பல்வேறு கதைக்களங்கள், உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் பொழுதுபோக்கு என இந்நிறுவனம் தயாரிக்கும் படங்கள் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை சென்றடைந்துள்ளது.

நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தலைமையிலான இந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படங்களின் அறிவிப்பு மற்றும் வெற்றிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறது. ‘புஷ்பா’, ‘குட் பேட் அக்லி’ மற்றும் ‘டியூட்’ போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து, அடுத்தடுத்து பல படங்களை தயாரித்து வருகிறது.

தற்போது அப்பா,மகள் பாசத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான ‘இருமுடி கட்டு’ படத்தைத் தயாரித்துள்ளது. பான் இந்திய நட்சத்திரமாக உருவெடுத்ததற்கு முன்னரே அனைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பப்பட்ட ரவி தேஜா, இந்தப் படத்தில் தனது வழக்கமான மாஸ் அவதாரத்தை விட்டு விலகி, வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார் என்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான விஷுவல் கிளிம்ப்ஸ் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

மகளை உயிராக நேசிக்கும் அன்பான அப்பா, கோபம் நிறைந்த மனிதர், தனது மகளின் வேண்டுகோளுக்கிணங்க மது பழக்கத்தை கைவிட்டு பகவான் ஐயப்பனின் பாதையைத் தேர்ந்தெடுக்கும் ஆன்மிக மனிதர் என மூன்று விதமான ரவி தேஜாவை இந்த க்ளிப்ம்ஸில் காண முடிகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படம் மாஸ் மகாராஜா ரவி தேஜாவின் முதல் பைலிங்குவல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழிலும் ரவி தேஜாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் இருப்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

பகவான் ஐயப்பனின் ஆன்மிகப் பின்னணியில் உருவாகும் ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் உறவுகள், தனிமனித மாற்றங்கள் மற்றும் மனித வாழ்க்கையின் உணர்ச்சிமிக்க பரிமாணங்களை மையமாகக் கொண்ட குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. மிகைப்படுத்தப்பட்ட கதை சொல்லலைத் தவிர்த்து, உண்மைத்தன்மை மிக்க கதாபாத்திரங்கள், மனதைத் தொடும் தருணங்கள் மற்றும் ஈர்க்கக்கூடிய திரைக்கதை என இந்தப் படம் உருவாகியுள்ளது. உணர்வுகளே இதன் மையமாக இருப்பதால், ‘இருமுடி கட்டு’ ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதன் கலாச்சார வேர்களும் ஆன்மிக அம்சங்களும் இந்த திரைப்படப் பயணத்திற்கு தனித்துவமான அழகை சேர்க்கின்றன.

விஷுவல் கிளிம்ப்ஸ் மற்றும் ‘இருமுடி கட்டு’ என்ற தலைப்பும் படத்தின் மையக்கருவை தெளிவாக பிரதிபலிக்கிறது. ஒரு திரைப்படத்தின் வெற்றி அதன் தலைப்பிலிருந்தே தொடங்குகிறது என்பார்கள். அந்த வகையில், இந்தத் தலைப்பு பகவான் ஐயப்பனுடன் தொடர்புடைய பக்தி மற்றும் ஆன்மிக உணர்வை அழகாக வெளிப்படுத்துகிறது.

இது வெறும் பக்தியின் அடையாளமாக மட்டுமல்லாமல், ஒரு மனிதனின் உணர்வு மற்றும் ஆன்மிக மாற்றப் பயணத்தையும் குறிக்கிறது. இது ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என படக்குழு உறுதியளித்துள்ளது.

நடிகர்கள்: ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், சாய் குமார், பேபி நக்ஷத்ரா, அஜய் கோஷ், ரமேஷ் இந்திரா, ஸ்வாசிகா, மீசாலா லக்ஷ்மண், ராஜ்குமார் காசிரெட்டி, ரமணா பார்கவ், கிஷோர் காஞ்சரபாளம், கார்த்திக் அடுசுமல்லி, மகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

தயாரிப்பு நிறுவனம்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்,
தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர்,
வழங்குபவர்கள்: டி- சீரிஸ் குல்ஷன் குமார், பூஷன் குமார்,
கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம்: சிவா நிர்வாணா,
இசை: ஜிவி பிரகாஷ்குமார்,
ஒளிப்பதிவு: விஷ்ணு ஷர்மா,
தலைமை நிர்வாக அதிகாரி: செர்ரி,
தலைமை நிர்வாக தயாரிப்பாளர்: தினேஷ் நரசிம்மன்,
தயாரிப்பு வடிவமைப்பு: சாஹி சுரேஷ்,
படத்தொகுப்பு: பிரவீன் புடி,
கூடுதல் திரைக்கதை: நரேஷ் பாபு பி,
இணை இயக்குநர்: சுரேஷ்,
ஒப்பனை: ஸ்ரீனிவாஸ் ராஜூ,
ஆடை வடிவமைப்பு: ராஜேஷ்,
போஸ்டர் வடிவமைப்பு: யெல்லோ டூத்ஸ்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா,
மார்க்கெட்டிங்: ஃப்ர்ஸ்ட் ஷோ

‘இருமுடி கட்டு’ திரைப்படம் 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

UK Squad’s ‘Texas Tiger’ shooting wrapped up! Sony Music Acquires Audio Rights

0

Chennai, India: In a significant development for the upcoming film Texas Tiger, Sony Music has acquired the audio rights of the project, marking a major milestone in the film’s journey towards release.

The collaboration between one of the world’s leading music labels and the young creative team behind Texas Tiger underscores the industry’s growing confidence in the film’s content, music, and commercial potential. With Sony Music’s extensive global reach and strong promotional capabilities, the film is expected to connect with a wider audience and generate considerable excitement ahead of its theatrical release.

Expressing his happiness over sharing the couple of good news pertaining to the wrap up and music rights clasped by Sony Music, writer-director Selvah Kumar Thirumaran said:

“We are glad that our shooting has wrapped up. It’s an occasion of double-delight as Sony Music coming onboard for Texas Tiger is a matter of immense pride and encouragement for our entire team. Sony has been home to some of the most memorable soundtracks and iconic musical works, and for our film to be associated with such a prestigious global brand is truly special. This partnership is a strong validation of the effort, passion, and belief that our cast and crew have invested in the project. We are excited for audiences to experience the music and the world of Texas Tiger in the months ahead.”

Produced by UK Squad, Texas Tiger is written and directed by Selvah Kumar Thirumaran, whose previous directorial venture was Family Padam. The film stars Hridhu Haroon (Dude, Thugs, All We Imagine as Light) in the lead role, alongside Samyuktha Viswanathan and Rohini Molleti.

The film’s music is composed by Osho Venkat, while cinematography is handled by Manikandan.

Promising entertainment, emotion, and engaging storytelling, Texas Tiger is positioned as a wholesome theatrical entertainer designed to appeal to audiences across age groups.

More updates on the film, music, and release plans will be announced soon.

’டெக்சாஸ் டைகர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு…ஆடியோ உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக்!

சென்னை, இந்தியா: விரைவில் வெளியாகவுள்ள ‘டெக்சாஸ் டைகர்’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை உலகின் முன்னணி இசை நிறுவனங்களில் ஒன்றான சோனி மியூசிக் கைப்பற்றியுள்ளது. படத்தின் வெளியீட்டு பயணத்தில் இது முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

உலகளவில் இசைத் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் சோனி மியூசிக் மற்றும் ‘டெக்சாஸ் டைகர்’ படத்தின் இளம் குழுவினர் இணைந்துள்ளது இந்த படத்தின் உள்ளடக்கம், இசை மற்றும் வணிக ரீதியான வியாபாரம் என திரையுலகினர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சோனி மியூசிக்கின் உலகளாவிய விநியோகம் மற்றும் வலுவான புரோமோஷன்ஸ் மூலம், படம் அதிகளவில் ரசிகர்களை சென்றடையும் என்றும், திரையரங்கு வெளியீட்டிற்கு முன்னரே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும் என்றும் நம்பப்படுகிறது.

படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்தும் சோனி மியூசிக் இசை உரிமம் குறித்தும் படத்தின் இயக்குநர் செல்வகுமார் திருமாறன் கூறியதாவது, “படப்பிடிப்பு நிறைவடைந்தது மகிழ்ச்சி. இதோடு இரட்டிப்பு மகிழ்ச்சியாக ’டெக்சாஸ் டைகர்’ படத்துடன் சோனி மியூசிக் இணைந்திருப்பது எங்களுக்கு பெருமையான தருணம். இசை உலகில் மறக்க முடியாத பல இசைத் தொகுப்புகள் மற்றும் புகழ்பெற்ற படைப்புகளின் இல்லமாக சோனி மியூசிக் திகழ்கிறது. அத்தகைய மதிப்புமிக்க சர்வதேச நிறுவனத்துடன் எங்கள் படம் இணைந்திருப்பது மிகவும் சிறப்பான ஒன்று. எங்கள் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் இந்தப் படத்திற்காக செலுத்திய உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கைக்கு கிடைத்த அங்கீகாரமாக இந்த கூட்டணியை பார்க்கிறோம். வரும் மாதங்களில் ரசிகர்கள் டெக்சாஸ் டைகரின் இசையையும் அதன் உலகத்தையும் ரசிப்பதை பார்க்க மிகுந்த ஆவலுடன் இருக்கிறோம்” என்றார்.

பொழுதுபோக்கு, உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் விறுவிறுப்பான கதையம்சத்துடன் அனைத்து வயதினரையும் கவரும் வகையில் முழுமையான திரையரங்கு அனுபவமாக ‘டெக்சாஸ் டைகர்’ உருவாகி வருகிறது.

படத்தின் இசை, வெளியீட்டு விவரங்கள் மற்றும் பிற முக்கிய அறிவிப்புகள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

தயாரிப்பு நிறுவனம்: யுகே ஸ்குவாட்,
எழுத்து, இயக்கம்: ‘பேமிலி படம்’ புகழ் செல்வகுமார் திருமாறன்,
நடிகர்கள்: ஹிருது ஹரூன் (டியூட், தக்ஸ், ஆல் வி இமேஜின் அஸ் லைட்) சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் ரோகிணி மொல்லேட்டி

Kauvery Hospital, Vadapalani successfully treats complex persistent fistula through innovative multidisciplinary team approach

0

Chennai, June 04, 2026: In what is believed to be India’s first successful procedure of its kind and among the rarest interventions reported globally, doctors at Kauvery Hospital, Vadapalani successfully treated a rare and persistent colovaginal fistula, an abnormal connection between the colon and the vagina, in a 73-year-old woman using a cardiac occlusion device traditionally designed to close holes in the heart. The highly specialised minimally invasive procedure brought together the expertise of gastroenterology and interventional cardiology, offering a definitive solution to a patient with a recurrent condition that had failed to respond to multiple conventional treatments.

The patient had been suffering from persistent passage of fecal matter through the vaginal opening since 2018 due to the fistula. She also experienced recurrent urinary tract infections, continuous vaginal discomfort and irritation.

As part of her initial treatment, she underwent a colostomy – a surgical procedure in which a portion of the large intestine is diverted through an opening in the abdominal wall to allow stool to exit the body into an external bag. The affected portion of the lower large intestine too was removed. Subsequently, the patient developed a hernia at the colostomy site and underwent hernia repair surgery followed by re-anastomosis, a procedure to reconnect the previously separated sections of the intestine and restore normal bowel continuity. Despite undergoing multiple major surgeries, her symptoms persisted, and the fistula recurred.
The patient was admitted to Kauvery Hospital after multiple treatment attempts elsewhere had failed to provide a lasting resolution. One of the initial challenges was accurately identifying the fistulous tract. Extensive fibrosis, adhesions, and distortion of normal tissue planes caused by previous surgeries had made localisation of the abnormal communication extremely difficult. Through comprehensive evaluation and advanced endoscopic assessment, the gastroenterology team successfully identified fistulous communication, a critical step in planning definitive treatment.

Given the complexity of the condition and the limitations of conventional approaches for persistent fistulas, the gastroenterology team collaborated closely with the interventional cardiology team to develop an innovative treatment plan of adapting a cardiac occlusion device, typically used to close septal defects, or holes within the heart, to seal the abnormal connection between the colon and the vagina.

The approach required meticulous planning, exceptional precision, and seamless coordination between specialties, as the device had to be deployed in a completely different anatomical environment from its intended cardiac application. The procedure was successfully completed, and one week after the intervention, the patient is recovering well with significant improvement in symptoms and no immediate complications.

The multidisciplinary team was led by Dr. T.K. Anand, Senior Consultant – Medical Gastroenterologist and Interventional Endoscopist, and Prof. P. Manokar, Senior Interventional Cardiologist, Clinical Lead – Heart Failure and Transplant Program.

In his comments, Dr. T.K. Anand said, “This was an exceptionally challenging persistent fistula because multiple previous surgeries had significantly altered the anatomy. Chronic fistulas are often associated with extensive fibrosis and scarring, making accurate localisation of the tract extremely difficult. The patient had been living with this debilitating condition for several years, and our objective was not only to close the fistula but also to restore her comfort, dignity, and quality of life. Identifying the tract precisely was the key to achieving a successful outcome.”

Prof. P. Manokar, said, “Adapting a structural heart occlusion device for use outside the cardiac system is technically demanding and requires meticulous assessment of the tract, precise sizing, accurate positioning, and stable deployment. This approach highlights how innovations developed for cardiac interventions can be successfully applied to solve complex problems in other specialties when supported by multidisciplinary expertise and collaborative clinical thinking.”

Dr. Aravindan Selvaraj, Co-founder and Executive Director, Kauvery Group of Hospitals, commented, “This landmark procedure reflects Kauvery Hospital’s commitment to pushing the boundaries of patient care through innovation, collaboration, and clinical excellence. By bringing together expertise from gastroenterology, advanced endoscopy, and interventional cardiology, our teams were able to offer a life-changing solution to a patient who had exhausted conventional treatment options. Such achievements reinforce our ability to manage highly complex cases and expand treatment possibilities for patients with challenging conditions.”

SR PRODUCTIONS தயாரிப்பில்,   “அண்டர் – 18” (Under – 18) – பட பூஜை விழா  !!

0

மெட்ராஸ்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, SR PRODUCTIONS சார்பில் B. ஜெகதீஸ் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய  இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி இயக்கத்தில், கிச்சா சுதீப்,  ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில்    உருவாகும் புதிய திரைப்படமான “அண்டர் – 18” (Under – 18) படத்தின் பூஜை விழா,  படக்குழுவினருடன்  திரையுலகின் முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள இன்று இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

தயாரிப்பாளர் ஜெகதீஸ் பேசியதாவது..

SR PRODUCTIONS  சார்பில் இரண்டாவது படமான அண்டர் – 18  திரைப்படத்தின் பூஜைக்கு வருகை தந்த பத்திரிகையாளர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கங்கள்.

இந்தப் படத்தின் தொடக்கத்திற்கு முக்கிய காரணமாக இருந்தவர் என் நண்பர் சாய் பரத் தான் எனக்கு  இயக்குநரை அறிமுகப்படுத்தினார். கார்த்திக் பெருமாள் சாமி அவர்கள், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுடன் பொல்லாதவன் முதல் அரசன் வரை முதல் உதவி இயக்குநராகவும், இணை இயக்குநராகவும் பணியாற்றியவர். அதன்பிறகு விக்ராந்த் சார் இந்தப் படத்தில் இணைந்தார். அவர் வந்ததிலிருந்து இந்தப் படத்தை தனது தோள்களில் சுமந்து செல்லும் அளவுக்கு முழுமையாக ஈடுபட்டு, அனைத்து விஷயங்களிலும் பங்களித்து வருகிறார்.

மேலும் ஐஸ்வர்யா  ராஜேஷ் மேடம், கடந்த நான்கு ஆண்டுகளாக எனக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்து வருகிறார். இந்தப் படம் மூலமாக மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சுதீப் சார் இந்தப் படத்தில் இணைந்ததற்கு முக்கிய காரணம் விக்ராந்த் சார் தான். அவர் சார் சொன்ன ஒரு வார்த்தைக்காகவே அவர் கதையைக் கேட்க சம்மதித்தார். கதையைக் கேட்டவுடன், “உங்களுக்கு ஓகேவா?” என்று கேட்டார். நான் “ஓகே” என்றதும், “நான் இந்தப் படத்தை செய்கிறேன்” என்று உடனடியாக ஒப்புக்கொண்டார். இன்று அவர் இந்த விழாவில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மற்றொரு படத்தின் பணிகள் காரணமாக வர முடியாமல் போய்விட்டது. அடுத்த நிகழ்ச்சியில் கண்டிப்பாக அவர் கலந்து கொள்வார்.

இந்தப் படம் மக்களுக்கு புதுமையான அனுபவத்தை தரக்கூடிய, வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படமாக இருக்கும் என்று நம்புகிறேன். கண்டிப்பாக இது ஒரு வெற்றிப் படமாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அனைவருக்கும் நன்றி.

நடிகை ராதிகா பேசியதாவது..,

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அண்டர் – 18 படத்தின் தயாரிப்பாளர்கள் ஜெகதீஸ், இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி, நடிகர்கள் ஐஸ்வர்யா, விக்ராந்த், சுதீப் மற்றும் படக்குழுவில் உள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இன்று இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்ததற்கு முக்கிய காரணம் விக்ராந்த்தான். சிறு வயதிலிருந்தே அவரை எனக்குத் தெரியும். சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வமும், துடிப்பும் அவரிடம் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அந்த ஏக்கமும் உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அனைவருக்கும் என் வாழ்த்துகள். நன்றி.

நடிகர் சரத்குமார் பேசியதாவது…

“அண்டர் – 18” எனது வயதை வைத்து வைத்த தலைப்பாக இருக்குமோ என்று இயக்குநரிடம் நகைச்சுவையாக கேட்டேன். ஆனால் அவர் கூறிய கதையின் ஒற்றை வரி மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு திரைப்படத்தை முதலில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஊடகங்களும் பத்திரிகையாளர்களும்தான். இந்தப் படத்தையும் நீங்கள் மக்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்க வேண்டும்.

நடிகர் விக்ராந்தின் ஆர்வம், உழைப்பு மற்றும் சினிமா மீதான அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. எதிர்காலத்தில் அவர் மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ‘அண்டர் – 18’ படக்குழுவினருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

நடிகர் நட்டி  பேசியதாவது..,

முதலில் இந்த அண்டர் – 18… இல்லை, கூர்நோக்கு இல்லம் என்று சொல்லலாம். இதை எல்லாரும் கூர்ந்து நோக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

இயக்குநர் கார்த்திக் அவர்களுடன் பல வருடங்களாக பழக்கம். அவர் இயக்குநர் வெற்றிமாறன் சாருடன் பணியாற்றியவர். அதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுடைய சிந்தனை அலைவரிசையும் ஒன்றாக இருக்கும்.தம்பி விக்ராந்துடன் நான் இரண்டு, மூன்று படங்களில் நடித்திருக்கிறேன். முத்துக்கு முத்தாக படத்தில் நாங்கள் இருந்திருக்கிறோம். அந்த இடத்திலிருந்து இன்று வரை நல்ல உறவோடு இருந்து வருகிறோம்.

அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ். அவருடன் நான் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் பணியாற்றியிருக்கிறேன். மிகவும் திறமையான நடிகை. விக்ராந்த், உங்களுக்குத்தான் பெரிய ஜாக்பாட் கிடைத்திருக்கிறது. அவ்வளவு பிரமாதமான ஆர்டிஸ்ட் அவர். அவர் உங்களை தூக்கி சாப்பிட்டு விடுவார் ஜாக்கிரதையாக இருங்கள்.

ஜெகதீஸ் சார் இந்தப் படத்தின் தயாரிப்பாளர். அவருடைய முந்தைய படத்தில் நான் நடிக்க வேண்டியிருந்தது. சில காரணங்களால் அந்தப் படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை.

இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன். நன்றி.

தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது..,

இன்று இந்த விழாவில் கலந்து கொண்டு வாழ்த்த வந்துள்ள சரத்குமார் சார், ராதிகா மேம் மற்றும் மற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு படத்தின் புரமோஷனுக்கு இதுபோன்ற பிரபலங்கள் வந்து வாழ்த்துவது மிகப்பெரிய ஆதரவாக இருக்கும். அதற்காக அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

கார்த்திக் பற்றி சொல்ல வேண்டுமென்றால், பொல்லாதவன் உள்ளிட்ட இரண்டு, மூன்று படங்களில் அவருடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு உள்ளது. மிகவும் திறமையான இயக்குநர். இயக்குநர் வெற்றிமாறன் சாருடன் பயணிப்பது சாதாரண விஷயம் அல்ல. அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் ஒரு பெரிய அனுபவமும், கற்றலும் கிடைக்கும். அந்தப் பயணத்தில் கார்த்திக்கும் மிகப்பெரிய அனுபவம் கிடைத்திருக்கிறது.

வெற்றிமாறன் சார் படங்களில் பணியாற்றிய கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் ஒரு தனி அடையாளம் கிடைத்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் கார்த்திக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் அவர் ஒரு பெரிய வெற்றியைப் பெறுவார் என்று நம்புகிறேன்.

விக்ராந்த் மிகவும் நேர்மையான மற்றும் அர்ப்பணிப்புள்ள கலைஞர். ஒவ்வொரு படத்திற்கும் தனது உடல் மொழியையும், தோற்றத்தையும் மாற்றி முழு ஈடுபாட்டுடன் உழைத்து வருகிறார். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்று நம்புகிறேன். ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்கனவே பல சிறந்த கதாபாத்திரங்களில் நடித்தும், பல விருதுகளை வென்றும் இருக்கிறார். அவருக்கும் இந்தப் படம் மேலும் ஒரு முக்கியமான வெற்றியைத் தரும் என நினைக்கிறேன். படக்குழுவினர் அனைவருக்கும், குறிப்பாக தயாரிப்பாளர் ஜர்விஷ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.

தயாரிப்பாளர் RK சுரேஷ் பேசியதாவது..,

விக்ராந்த் மிகவும் நேர்மையான மற்றும் கடினமாக உழைக்கும் கலைஞர். பல ஆண்டுகளாக போராடி வந்த அவருக்கு தற்போது நல்ல நேரம் தொடங்கியுள்ளது. நல்ல கதைகளை தேர்வு செய்து தனது வளர்ச்சியை தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.

இன்று சினிமாவில் கதைகள்தான் வெற்றி பெறுகின்றன. அதுபோல அண்டர் – 18 திரைப்படமும் பெரிய வெற்றி பெற்று, 50 கோடி வசூலைத் தாண்ட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். இந்தக் கதையை நம்பி தயாரிக்கும் தைரியம் கொண்ட தயாரிப்பாளருக்கும், முழு படக்குழுவினருக்கும் எனது பாராட்டுகள். இயக்குநர் கார்த்திக், வெற்றிமாறன் பள்ளியில் இருந்து வந்தவர் என்பதால் அவரது திறமையும் இந்தப் படத்தில் நிச்சயம் வெளிப்படும். ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

நடிகை ஶ்ரீபிரியா பேசியதாவது..,

விக்ராந்த் அம்மாவை எனக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். நாங்கள் ஒன்றாக வளர்ந்தவர்கள். அவருடைய குடும்பத்தினருடனும் எனக்கு நீண்டகால நெருக்கம் உள்ளது. மிகவும் அமைதியான, திறமையான மனிதர் அவர். இந்த விழாவிற்கு விக்ராந்தின் அழைப்புக்காகவே தொலைதூரத்திலிருந்து வந்தேன். இங்கு வந்த பிறகுதான் இந்தப் படத்தின் மீதான கலைஞர்களின் அர்ப்பணிப்பையும், சிறப்பான ஏற்பாடுகளையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.

வாழ்க்கையில் எந்த நேரத்திலும் நல்ல வாய்ப்புகள் வரலாம். தற்போது விக்ராந்துக்கு அப்படிப்பட்ட நல்ல வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. அவரது குடும்பமும் அவருக்கு மிகப்பெரிய ஆதரவாக இருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு திறமையான நடிகை. அவருக்கும், முழு படக்குழுவினருக்கும் என் வாழ்த்துகள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். சினிமாவுக்கு முடிவே கிடையாது; கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து பயணிக்க வேண்டும். படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.

இயக்குநர் S R பிரபாகரன் பேசியதாவது…,

அண்டர் – 18 படத்தின் பூஜை விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சிக்கான முக்கிய காரணம் இயக்குநர் கார்த்திக் பெருமாள்சாமி. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு நண்பராக இருக்கும் அவர், சிறந்த சிந்தனை, அறிவு மற்றும் சினிமா மீதான அர்ப்பணிப்பு கொண்டவர். வெற்றிமாறன் சாருடன் நீண்ட காலம் பயணித்த அனுபவம் அவரை ஒரு சிறந்த இயக்குநராக உருவாக்கியுள்ளது. அவர் மிகப்பெரிய இயக்குநராக வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடிக்கும் அரிய நடிகைகளில் ஒருவர். நல்ல கதைகளுக்காக காத்திருந்து படங்களை தேர்வு செய்வது அவரது சிறப்பு. இந்தப் படம் அவருக்கு மேலும் ஒரு முக்கியமான வெற்றியைத் தரும்.

விக்ராந்த் தனது திறமையை மட்டுமே நம்பி பயணிக்கும் கலைஞர். எந்த பின்னணியையும் பயன்படுத்தாமல் தனது அடையாளத்தை உருவாக்கிக் கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. கதைகளை தேர்வு செய்வதிலும் அவர் காட்டும் நேர்த்தி தனித்துவமானது. இயக்குநர் கார்த்திக், விக்ராந்த், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் முழு படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். அண்டர் – 18 மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நன்றி.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் பேசியதாவது..,

இயக்குநர் கார்த்திக் பெருமாள்சாமிக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகள். அவரது திறமையும் உழைப்பும் இந்தப் படத்தை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. அண்டர் – 18 படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள். நன்றி.

நடிகர் தங்கதுரை பேசியதாவது..,

கார்த்திக் பெருமாள்சாமி எனக்கு நீண்டகால நண்பர். வெற்றிமாறன் சாரின் உதவி இயக்குநராக இருந்த காலத்திலிருந்தே அவரை அறிவேன். எப்போதும் மற்றவர்களின் படைப்புகளை பாராட்டும் நல்ல மனம் கொண்டவர். இந்தப் படத்தில் என்னையும் ஒரு நல்ல கதாபாத்திரத்திற்காக அழைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

விக்ராந்த் மிகவும் திறமையான, அர்ப்பணிப்புடன் உழைக்கும் கலைஞர். எப்போதும் பாஸிடிவாக இருப்பார். அவருடன் பணியாற்றுவது மகிழ்ச்சி. ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு சிறந்த நடிகை. அவருடன் இணைந்து நடிப்பதும் மகிழ்ச்சியான அனுபவம். இந்த விழாவில் கலந்து கொண்ட அனைத்து மூத்த கலைஞர்கள் மற்றும் நண்பர்களையும் சந்தித்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

அண்டர் – 18 படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்.நன்றி.

எழுத்தாளர் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் பேசியதாவது..,

அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.

இது எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான தருணம். கார்த்திக் என் பதினைந்து ஆண்டுகால நண்பர். அவர் ஒரு படம் இயக்க வேண்டும் என்பது எங்கள் நீண்டநாள் கனவு. அது இன்று நனவாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தக் கதையை கார்த்திக் ஏழு ஆண்டுகளுக்கு முன்பே எங்களிடம் கூறியிருந்தார். அப்போதே இது ஒரு சிறப்பான கதை என்று நாங்கள் நம்பினோம். அந்தக் கதையை இத்தனை ஆண்டுகள் மனதில் சுமந்து வந்து, இன்று தயாரிப்பாளர் ஜெகதீஸ், விக்ராந்த், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரின் ஒத்துழைப்புடன் படமாக்கியிருக்கிறார்.

சமூகத்திற்கு தேவையான ஒரு ஆழமான கருத்தை பேசும் இந்த திரைப்படம், இந்த ஆண்டின் முக்கிய வெற்றிப் படங்களில் ஒன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. கார்த்திக் மற்றும் முழு படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.நன்றி.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது..,

விழாவிற்கு வந்துள்ள பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நீண்ட நாட்களாக ஒரு நல்ல கதைக்காக காத்திருந்தேன். அந்தக் காத்திருப்புக்கு பதிலாக அண்டர் – 18 திரைப்படம் அமைந்துள்ளது. இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு ஒரு நல்ல படைப்பை வழங்க நாங்கள் அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் உழைப்போம்.

தயாரிப்பாளர் வெற்றி பெற்றால்தான் கலைஞர்கள், இயக்குநர்கள் மற்றும் சினிமா துறை முழுவதும் வளர்ச்சி அடையும். அதனால் இந்தப் பட தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய வெற்றியையும், நல்ல வசூலையும் பெற்றுத் தர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். கார்த்திக் மற்றும் முழு படக்குழுவினருடன் இணைந்து ஒரு சிறந்த படத்தை வழங்குவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.அனைவருக்கும் நன்றி.

நடிகர் விக்ராந்த் பேசியதாவது..,

எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இந்தப் படம் யாருக்காக வெற்றி பெறுகிறதோ இல்லையோ, தயாரிப்பாளருக்காக கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன். இன்றைய சூழலில் நல்ல தயாரிப்பாளர்களை சினிமா துறை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. தயாரிப்பாளருக்காகவும், இந்தப் படத்திற்காகவும் நாங்கள் அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் உழைப்போம் என்று உறுதியளிக்கிறோம்.

இயக்குநர் கார்த்திக் மிகவும் திறமையானவர். அவர் மிகப்பெரிய உயரத்தை அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். மேலும், ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்காக அழைத்த உடனே கதையை நம்பி இணைந்த சுதீப் சாருக்கு சிறப்பு நன்றி. அதேபோல் ராதிகா மேம், சரத் சார் மற்றும் இந்த விழாவிற்கு வந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் எங்களது நன்றிகள். உங்களது ஆதரவு எங்களுக்கு மிகவும் முக்கியம். நன்றி.

இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி பேசியதாவது..,

இந்தப் படம் இன்று இந்த நிலைக்கு வந்ததற்கு முதல் காரணம் சாய் பரத். அவர்தான் தயாரிப்பாளர் ஜெகதீஸ் சார், விக்ராந்த் சார் உள்ளிட்ட அனைவரையும் எனக்கு அறிமுகப்படுத்தினார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. அதேபோல், என் குரு இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவரிடமிருந்து கற்ற அனுபவம்தான் இன்று என்னை இந்த மேடையில் நிற்க வைத்திருக்கிறது.

இந்தக் கதையை நம்பி, வணிகக் கணக்குகளைப் பார்க்காமல் தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் ஜெகதீஸ் சாருக்கு என் நன்றி. அதேபோல், ஆரம்பம் முதல் உறுதுணையாக இருந்த விக்ராந்த் சாருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

கதையைக் கேட்டவுடன் நம்பிக்கை வைத்து இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ் மேடம், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட சுதீப் சார், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் சார், இசையமைப்பாளர் சாம் மற்றும் கலை இயக்குநர் ராஜா ஆகியோருக்கும் என் நன்றிகள். நான் இன்னும் அறிமுக இயக்குநர்தான். இந்தப் பயணத்தில் என்னை ஆதரித்து வரும் பத்திரிகை, ஊடக நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

என் அம்மாவின் நீண்ட நாள் கனவான “என் மகன் இயக்குநராக வேண்டும்” என்ற ஆசை இன்று நிறைவேறியுள்ளது. அதற்குக் காரணமான அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்திற்காக என்னுடைய முழு உழைப்பையும் கொடுப்பேன் என்று உறுதியளிக்கிறேன். நன்றி.

மெட்ராஸ்காரன் போன்ற தனித்துவமான படைப்பின் வெற்றிக்குப் பிறகு, SR PRODUCTIONS சார்பில், சமூகத்தின் அடித்தள உண்மைகளை பேசும் இன்னொரு முக்கியமான முயற்சியாக   “அண்டர் – 18” (Under – 18) உருவாகவுள்ளது. புதிய தலைமுறை பார்வையுடன், நிஜத்தன்மை மிக்க கதைக்களத்தை தேர்வு செய்துள்ள தயாரிப்பாளர் ஜெகதீஸ், தரமான உள்ளடக்கமுள்ள படங்களை தொடர்ந்து வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த படத்தை தயாரிக்கிறார்.

மருத்துவ கனவுகளோடு வாழும் ஒரு அப்பாவி இளைஞன்  எதிர்பாராத விதமாக ஒரு திட்டமிடப்பட்ட க்ரைம் நெட்வொர்க்கில் சிக்கிக்கொள்ள, அவனை மீட்க அவன் தந்தையும், தாயும் எடுக்கும் போராட்டமே “அண்டர் – 18” (Under – 18) படத்தின் மையக் கதை. குற்ற உலகின் கொடூர முகத்தையும், அதனால் பாதிக்கப்படும் ஒரு குடும்பத்தின் உணர்வுகளையும், எமோஷனல் டிராமாவாக இப்படம் சொல்லவுள்ளது.

இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி, தமிழகத்தின் அறியப்படாத க்ரைம் பின்னணிகளை நேரில் ஆய்வு செய்து, உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன் கூடிய ஒரு உணர்வுப்பூர்வமான கதையாக இந்த படத்தை அவர் உருவாக்கி வருகிறார். சமூக யதார்த்தமும், குடும்ப உணர்வுகளும் கலந்து உருவாகும் இந்த படைப்பு, ரசிகர்களை ஆழமாகத் தொடும் வகையில் உருவாகவுள்ளது.

இப்படத்தில் கிச்சா சுதீப், விக்ராந்த், ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றும் கிஷோர் சேத்தன் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணையவுள்ளனர்.

“Under – 18” படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. ஓசுர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. உண்மையான இடங்கள், நிஜமான சூழல் மற்றும் இயல்பான காட்சியமைப்பு ஆகியவற்றுடன் இப்படம் உருவாக இருப்பதாக படக்குழு தெரிவிக்கிறது.

தொழில்நுட்ப குழு

தயாரிப்பு : SR PRODUCTIONS

தயாரிப்பாளர் : ஜெகதீஸ்

இயக்கம் : கார்த்திக் பெருமாள் சாமி

ஒளிப்பதிவு (DOP) : வேல்ராஜ்

இசை : சாம் சி.எஸ்

பாடல்வரிகள் : இளங்கோ கிருஷ்ணன், கார்த்திக் நேத்தா

பப்ளிசிட்டி டிசைன் : V.M. சிவகுமார்

புரடக்சன் எக்ஸிக்யூட்டிவ் : வே.கி. துரைசாமி

எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் : விஷ்ணு சக்ரவர்த்தி,  அகல்யா வெங்கடேசன்

புரமோசன்ஸ் : யோகேஷ் கிருஷ்ணா

PRO – சதீஷ் (AIM)

மலையாள ZEE5, பேட்ரியாட் திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரை ஜூன் 5 அன்று அறிவித்துள்ளது

0

இந்தியா, 22 மே 2026: மலையாள ZEE5, புகழ்பெற்ற இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கிய பரபரப்பான அரசியல் திரில்லர் திரைப்படமான பேட்ரியாட் -ஐ ஜூன் 5 அன்று வெளியிடத் தயாராக உள்ளது. இப்படம் மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும்.

18 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள திரையுலகின் இரு மிகப்பெரிய நட்சத்திரங்களான மம்முட்டி மற்றும் மோகன்லாலை மீண்டும் ஒன்றிணைக்கும் இந்தப் படத்தில், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் மற்றும் குஞ்சாக்கோ போபன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

உளவு, அரசியல், தொழில்நுட்பம் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நாடக அம்சங்களை இணைக்கும் பேட்ரியாட், ரகசியமும் அதிகாரமும் நிறைந்த ஒரு அமைப்பில் கட்டுப்பாடற்ற கண்காணிப்பின் ஆபத்தான விளைவுகளை ஆராய்கிறது.

இந்தக் கதையின் மையத்தில், நாட்டைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு அதிநவீன அரசு கண்காணிப்பு திட்டத்தை உருவாக்க உதவிய மனிதர் ஒருவர் உள்ளார். ஆனால், அந்த அமைப்பு குற்றமற்ற குடிமக்களுக்கு எதிராக சூழ்ச்சி, மிரட்டல் மற்றும் கட்டுப்பாட்டின் மூலம் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதை அவர் கண்டறியும் போது, அவர் நம்பிய அனைத்தையும் கேள்வி கேட்கத் தள்ளப்படுகிறார்.

தான் உருவாக்க உதவிய அதே அமைப்புக்கு எதிராக அவர் திரும்பும் போது, பேட்ரியாட், தேசபக்திக்கும் துரோகத்திற்கும் இடையிலான மங்கலான கோட்டைப் பற்றி பேசுவதுடன், உண்மையை வெளிப்படுத்துவது ஒருவரை துரோகியா அல்லது உண்மையான தேசபக்தரா ஆக்குகிறது என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

இந்திய சமூக-அரசியல் பின்னணியில் அமைந்திருந்தாலும், கண்காணிப்பு மற்றும் தனியுரிமை குறித்த உலகளாவிய கவலைகளை மையமாகக் கொண்ட பேட்ரியாட், மிகப்பெரிய சதித் திட்டத்தை உணர்ச்சிப்பூர்வமான சினிமா அனுபவமாக மாற்றுகிறது.

மகேஷ் நாராயணனின் கூர்மையான கதை சொல்லலும், மம்முட்டி, மோகன்லால், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் மற்றும் குஞ்சாக்கோ போபன் ஆகியோரின் சக்திவாய்ந்த திரைநிகழ்வும் இணைந்து, இப்படம் தீவிரமான மற்றும் சிந்திக்க வைக்கும் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் ரேவதி, ராஜீவ் மேனன், தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் ஸரின் ஷிஹாப் உள்ளிட்ட பலரும் முக்கிய துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் மகேஷ் நாராயணன் கூறியதாவது:

“பேட்ரியாட் என்பது நாம் இன்று வாழும் காலத்தின் அச்சங்களை பிரதிபலிக்கும் ஒரு கதை. மக்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமே, பயமும் கட்டுப்பாடும் ஏற்படுத்தும் கருவியாக மாறும் உலகை இது பேசுகிறது. இந்தக் கதையில் என்னை அதிகமாக ஈர்த்தது அதன் மையத்தில் இருக்கும் உணர்ச்சிப்பூர்வமான மோதல் — ஒருகாலத்தில் முழுமையாக நம்பிய ஒன்றின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் ஒரு மனிதனின் பயணம். நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் பேட்ரியாட் திரைப்படத்தை மலையாள ZEE5-ல் அனுபவிப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.”

மம்முட்டி கூறியதாவது:

“பேட்ரியாட் திரைப்படத்தை வலுவானதாக மாற்றுவது, அதன் பிரம்மாண்ட அளவுக்கும் அரசியல் பதற்றத்திற்கும் அடியில், இது மனசாட்சி, பொறுப்பு மற்றும் தைரியம் பற்றிய மிகவும் ஆழமான மனிதக் கதையாக இருப்பதுதான். இந்தப் படம் கடினமான கேள்விகளை எழுப்புவதோடு உணர்ச்சிப்பூர்வமாகவும் நெருக்கமாகவும் இருக்கும். மலையாள ZEE5-ல் பார்வையாளர்கள் இதைப் பார்க்கவிருப்பதை நான் எதிர்பார்க்கிறேன்.”

மோகன்லால் கூறியதாவது:

“பேட்ரியாட் நாம் இன்று வாழும் உலகைப் பற்றி பேசுகிறது, அங்கு உண்மையும் அதிகாரமும் தொடர்ந்து மோதிக்கொண்டே இருக்கின்றன. சினிமாத்தன்மையும் ஆழமான பொருத்தத்தையும் கொண்ட ஒரு படத்தின் பகுதியாக இருப்பது மிகவும் உற்சாகமாக இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மம்முட்டியுடன் இப்படிப்பட்ட கதைக்காக மீண்டும் இணைந்தது இந்த அனுபவத்தை இன்னும் சிறப்பாக மாற்றியது.”

மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும் பேட்ரியாட் திரைப்படத்தை ஜூன் 5 முதல் மலையாள ZEE5-ல் தவறவிடாமல் பாருங்கள்!

ZEE5 பற்றி

ZEE5 என்பது இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும். இது கோடிக்கணக்கான பொழுதுபோக்கு ரசிகர்களுக்கான பன்மொழி கதை சொல்லும் தளமாக விளங்குகிறது. உலகளாவிய உள்ளடக்க சக்தியாக விளங்கும் ZEE Entertainment Enterprises Limited நிறுவனத்தின் ஒரு பகுதியாக ZEE5 செயல்படுகிறது.

வீடியோ-ஆன்-டிமாண்ட் தளங்களில் முன்னணி தேர்வாக விளங்கும் ZEE5, 4,071+ திரைப்படங்கள், 1,800+ டிவி நிகழ்ச்சிகள், 422+ வெப் ஒரிஜினல்கள், 4,492+ இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரங்களுக்கு மேற்பட்ட ஆன்-டிமாண்ட் உள்ளடக்கங்களைக் கொண்ட விரிவான நூலகத்தை வழங்குகிறது.

இந்த தளம் இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம், ஒடியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி உள்ளிட்ட 12 மொழிகளில் 7 தனிப்பயன் மற்றும் ஹைப்பர்-லோக்கல் சந்தா தொகுப்புகளை வழங்குகிறது. இதில் ஒரிஜினல் தொடர்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான உள்ளடக்கம், செய்திகள் மற்றும் Live TV ஆகியவை அடங்கும்.

உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் வலுவான டீப்-டெக் அமைப்பின் மூலம், ZEE5 பல்வேறு சாதனங்கள், சூழல்கள் மற்றும் இயக்க முறைமைகளில் இடையறாத அனுபவத்தை வழங்குகிறது.

Facebook, Instagram, LinkedIn மற்றும் X தளங்களில் ZEE5-ஐ பின்தொடருங்கள்.

“பரிமளா & கோ” பட பத்திரிகையாளர் சந்திப்பு !!

0

தமிழ் திரையுலகில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா திரைப்படம் “பரிமளா & கோ”.

“தலைவன் தலைவி” படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 12வது படைப்பாக, முற்றிலும் புதுமையான களத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ்.

விரைவில் இப்படம் திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்….,

ஜி.கே.எம். தமிழ்குமரன் பேசியதாவது..,
“பரிமளா அண்ட் கோ” பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வருகை தந்துள்ள அனைத்து கலைஞர்களையும் எங்களின் சார்பாக அன்புடன் வரவேற்கிறேன். இந்த படத்தைப் பற்றி சில வார்த்தைகள் பேச விரும்புகிறேன். நான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.

இந்த படத்தின் முழு பொறுப்பையும் நாங்கள் பாண்டிராஜ் சாரிடம் நம்பிக்கையுடன் ஒப்படைத்தோம். இந்த படத்தின் வெற்றிக்கான முக்கிய காரணம் அவர்தான். அவர் உழைப்பு, அர்ப்பணிப்பு உண்மையிலேயே அபாரமானது. சமீபத்தில் பின்னணி பணிகளை பார்த்தபோது, “எப்போது படம் எடுத்தீர்கள்?” என்று பலரும் கேட்கும்படி ஆச்சரியப்படும்படி அவ்வளவு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளார்.

இந்த மாதிரி உழைக்கும் இயக்குநரை பார்ப்பதே கடினம். இந்த படத்தில் பணியாற்றிய முழு குழுவும், ஒரு குடும்பம் போல இணைந்து உழைத்திருக்கிறது. அதனால் இந்த படம் மிகவும் அழகான படைப்பாக உருவாகியுள்ளது.

இந்த படம் நிச்சயமாக பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அனைவருக்கும் நன்றி.

நடிகர் செண்ட்ராயன் பேசியதாவது..,

இந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வந்துள்ள அனைத்து மீடியா நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. மேடையில் பெரிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், ஜெயராம் சார், ஊர்வசி அக்கா, ஹீரோயின், சாண்டி மாஸ்டர் போன்ற பல முக்கியமான கலைஞர்களுடன் நானும் உட்கார்ந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. “பரிமளா அண்ட் கோ” படத்தில் இயக்குநர் பாண்டிராஜ் சார் எனக்கு ஒரு அருமையான கதாபாத்திரத்தை கொடுத்துள்ளார். எப்படி நடிக்க வேண்டும், எப்படி அந்த காட்சியை அழகாக கொண்டு வர வேண்டும் என்று மிகவும் அன்பாகவும் பொறுமையாகவும் சொல்லிக் கொடுத்தார். அந்த அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியானது.

சில படங்கள் ஆண்களுக்கு பிடிக்கும், சில படங்கள் பெண்களுக்கு பிடிக்கும், சில படங்கள் குறிப்பிட்ட வயதினருக்கே பிடிக்கும். ஆனால் பாண்டிராஜ் சாரின் படங்கள் என்றால் குடும்பம் முழுவதும் சேர்ந்து பார்க்கும் படங்களாக இருக்கும். தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அண்ணன், தங்கை என குடும்பம் முழுவதும் ஒன்றாக அமர்ந்து ரசிக்கக்கூடிய அழகான குடும்ப திரைப்படம் தான் “பரிமளா அண்ட் கோ”.இந்த படம் அனைவரும் திரையரங்கில் குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய ஒரு சிறந்த படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் சார் மற்றும் தயாரிப்பாளர் சார் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இயக்குநர், நடிகர் ஆதித்யா பேசியதாவது..,
அனைவருக்கும் வணக்கம். இது உண்மையிலேயே ஒரு அருமையான டீம். பாண்டிராஜ் அண்ணா அடிக்கடி என் ஆபிஸுக்கு வருவார். நான் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் நேரங்களில் நாங்கள் சந்திப்போம். அந்த சந்திப்புகள் எப்போதும் அருமையான மாலையாக இருக்கும். அவர் மிகவும் எளிமையாகவும், அன்பாகவும் பழகும் மனிதர். இந்த படத்தில் நான் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஆனால் அதற்காக அண்ணாவிடம் நிறைய டேக்குகள் வாங்கியிருக்கிறேன். இருபது, இருபத்திரண்டு டேக்குகள் கூட போயிருக்கும். ஆனாலும் மிகவும் பொறுமையாக இருந்து, ஒரு நடிகருக்கு எப்படி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று அழகாக வழிகாட்டினார்.

கேமரா முன் நடிப்பது எளிதல்ல. இங்கே ஜெயராம் சார், ஊர்வசி மேடம் போன்ற பெரிய கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து நடிப்பது ஒரு பெரிய அனுபவம். அந்த அழுத்தம் எனக்கும் இருந்தது. அதனால்தான் இவ்வளவு டேக்குகள் எடுத்திருக்கலாம். ஆனால் அந்த அனுபவம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது. பாண்டிராஜ் அண்ணா எந்த படம் எடுத்தாலும் அது மக்களிடம் நிச்சயமாக சென்று சேரும். குடும்பம் முழுவதும் சேர்ந்து பார்க்கக்கூடிய படங்களை தான் அவர் எப்போதும் கொடுப்பார். அதேபோல் “பரிமளா அண்ட் கோ”வும் ஒரு அருமையான குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ளது.இந்த படம் பெரிய வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.

நடிகர் சஞ்சீவி பேசியதாவது..,
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.இந்த படத்தில் பணியாற்றிய எங்கள் இயக்குநர் பாண்டிராஜ் சார், தமிழ் குமரன் சார் மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

இந்த வாய்ப்பு எனக்கு மிகவும் முக்கியமானது. நான் பல வருடங்களாக பாண்டிராஜ் சாரை பின்தொடர்ந்து வந்தேன். ஆனால் சரியான நேரம் அமையவில்லை. அதன் பிறகு “மூடர் கூடம்” படத்தை சார் வெளியிட்டார். அதன் பின்னர் இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்காக ரொம்ப நன்றி சார்.

இந்த படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார்கள். அதற்கும் நன்றி. இந்த பெரிய மேடையில் எனக்கும் ஒரு இடம் கொடுத்து, இந்த வாய்ப்பை வழங்கிய பாண்டிராஜ் சார் மற்றும் தமிழ் குமரன் சாருக்கு மனமார்ந்த நன்றி.

நடிகர் ஹர்ஷத் பேசியதாவது..,

இப்போது வெயில் அதிகமாக இருக்கிறது. எல்லோரும் உடம்பை நன்றாக எல்லாரும் ஆரோக்கியமாக இருங்கள்.

“பரிமளா அண்ட் கோ” பாண்டிராஜ் சார் படத்தில் நடிப்பது எனக்கு முதல் அனுபவம். குறிப்பாக பாண்டிராஜ் சாருடன் பணியாற்றியது மிகவும் சந்தோஷமான விஷயம். அவருடைய உதவி இயக்குநர்கள், தொழில்நுட்ப குழு, கேமராமேன் என அனைவரும் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். எனக்கு பாண்டிராஜ் சார் பல வருடங்களாக தெரியும். அவருடைய படங்களை பார்த்து, ஒருநாள் அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். அந்த ஆசை இந்த படத்தின் மூலம் நிறைவேறியது. இந்த படத்தை பார்த்து என்னை நேரடியாக தேர்வு செய்து வாய்ப்பு கொடுத்தது அவர்தான்.அவருடன் வேலை செய்த அனுபவம் வேற மாதிரி. மிகவும் வேகமாகவும், அனுபவத்துடனும் வேலை செய்வார். அதுதான் அவருடைய சிறப்பு. இந்த வாய்ப்புக்காக பாண்டிராஜ் சாருக்கு மனமார்ந்த நன்றி.

நடிகை காயத்திரி பேசியதாவது..,

இந்த தருணம் எனக்கு ஒரு கனவு நனவானது போல இருக்கிறது. பாண்டிராஜ் சாரை சந்தித்ததிலிருந்து, டீசர் பார்த்தது வரை, இன்று இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் உங்களை எல்லாம் சந்திப்பது வரை — எல்லாமே ஒரு கனவு போலவே இருக்கிறது.

இங்கே வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த தருணம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது. என்ன சொல்ல வேண்டும் என்பதே தெரியவில்லை. ஏனெனில், பாண்டிராஜ் சாரின் படங்களை ஒரு ரசிகராக பார்த்து ரசித்து வளர்ந்திருக்கிறோம். அப்படிப்பட்ட ஒரு இயக்குநர் என்னை அழைத்து இந்த வாய்ப்பை கொடுத்தது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம்.இந்த படத்தின் முழு நடிகர்கள், உதவி இயக்குநர்கள் என அனைவரும் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

“பரிமளா அண்ட் கோ” இந்த மே மாதம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு சேர்க்கும் பொறுப்பு உங்களிடம் தான் இருக்கிறது என்று நம்புகிறேன்.இந்த வாய்ப்பு கிடைத்ததற்காக மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் என் நன்றி.

நடிகை அனந்திகா பேசியதாவது..,
“பரிமளா அண்ட் கோ” எனக்கு மிகவும் பிடித்த மனதுக்கு நெருக்கமான படம். இந்த படம் என் இதயத்தில் எப்போதும் ஒரு தனி இடம் பெறும். இந்த படத்தில் உள்ள பல கதாபாத்திரங்களுடன் சேர்ந்து பணியாற்றியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.

முதலில் பாண்டிராஜ் சாருக்கு என் மனமார்ந்த நன்றி. அவருடன் பணியாற்றுவது ஆரம்பத்தில் கொஞ்சம் பயமாக இருந்தது. அவர் அழைத்தபோது நான் இந்த படத்தில் நடிப்பேன் என்று கூட நினைக்கவில்லை. ஆனால் இன்று இந்த மேடையில் நம்முடைய படத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஜெயராம் சார், ஊர்வசி மேம், சஞ்சனா, சாண்டி மாஸ்டர் மற்றும் இந்த படத்தில் பணியாற்றிய அனைவருடனும் சேர்ந்து வேலை செய்தது ஒரு அருமையான அனுபவம்.

இந்த கதையில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தன்மையும் முக்கியத்துவமும் இருக்கிறது. இப்படிப்பட்ட வித்தியாசமான கதையின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். “பரிமளா அண்ட் கோ” படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரிக்க வேண்டும். இந்த படம் குடும்பம் முழுவதும் சேர்ந்து சிரித்து ரசிக்கக்கூடிய ஒரு அழகான திரைப்படமாக இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி.

நடிகை பூர்ணிமா ரவி பேசியதாவது..,

அனைவருக்கும் வணக்கம். இந்த படத்தில் நான் நடுவில் தான் இணைந்தேன். முதலில் என்னை தொடர்புகொண்ட ராம்கி சாருக்கு நன்றி. ஆனால் இந்த வாய்ப்பு எனக்கு கிடைக்க முக்கிய காரணம் associate director திவ்யா. இந்த கதாபாத்திரத்தை பற்றி மிகவும் பொறுமையாக விளக்கி, எனக்கு இருந்த சந்தேகங்களை நீக்கி, “நீ கண்டிப்பாக இதை செய்ய வேண்டும்” என்று நம்பிக்கை கொடுத்தவர் அவர்தான். அதற்காக ரொம்ப நன்றி திவ்யா.இந்த படத்தில் ஜெயராம் சார், ஊர்வசி மேம், மிஷ்கின் சார் போன்ற பெரிய கலைஞர்கள் இருப்பது தெரிந்தபோது நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். அவர்களுடன் எனக்கு நேரடி காம்பினேஷன் இல்லையென்றாலும், அவர்கள் இருக்கும் ஒரு புராஜக்டில் நானும் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது.

ஊர்வசி மேம் எனக்கு ஒரு பெரிய ரோல் மாடல். அவருடைய சமீபத்திய interviews எல்லாம் நான் அடிக்கடி பார்ப்பேன். அந்த மாதிரியான ஒரு நடிகையுடன் ஒரே படத்தில் இருப்பது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். ஜெயராம் சார் எனக்கு சிறுவயதிலிருந்தே மிகவும் பிடித்த நடிகர். குறிப்பாக “பஞ்ச தந்திரம்” காலத்திலிருந்தே அவருடைய கதாபாத்திரங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். இன்று அவருடன் ஒரே படத்தில் இருப்பது எனக்கு ஒரு ஸ்பெஷல் மூமெண்ட்.

இந்த படத்தின் இசையமைப்பாளர் பிராக்ஸன். திங்க் மியூசிக் சந்தோஷ் கண்டுபிடித்த திறமையான கலைஞர். சந்தோஷ் கண்டுபிடிக்கும் திறமைகள் எப்போதும் தனித்துவமானவை என்பதால், பிரக்ஸினும் ஒரு சிறப்பான திறமை கொண்டவர் என்று நான் நம்புகிறேன். இந்த படத்திற்கு அவர் மிகவும் அழகான பாடல்களை கொடுத்திருக்கிறார்.

இந்த படத்தில் சாண்டி மாஸ்டருடன் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. சாண்டி மாஸ்டர் எனக்கு மட்டும் அல்ல, நம்ம எல்லாருக்கும் மிகவும் ஸ்பெஷலானவர். நான் சிறு வயதில் இருந்தே அவரை டிவி நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன். அவர் எப்போதும் நம்ம வீட்டுக்கு அருகில் இருக்கும் நண்பர் போல, மிகவும் நெருக்கமாக பழகுவார். இந்தப்படத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன் பாண்டிராஜ் சாரின் வழக்கமான குடும்பங்கள் ரசிக்கும் படமாக இப்படம் இருக்கும் அனைவருக்கும் நன்றி.

நடிகர் சாண்டி மாஸ்டர் பேசியதாவது..,

அனைவருக்கும் வணக்கம்.“பரிமளா அண்ட் கோ” படத்தில் இரண்டு பெரிய லெஜண்ட்ஸான ஜெயராம் சார், ஊர்வசி மேடம் ஆகியோருடன் சேர்ந்து நடித்தது மிகப்பெரிய அனுபவம். அதோடு மிஷ்கின் சார் போன்ற தனித்துவமான கலைஞரும் இந்த படத்தில் இருப்பது இன்னும் ஸ்பெஷல். அவரை நான் “தலைவர்”ன்னு தான் சொல்லுவேன்.

இந்த படத்தில் எல்லாருடனும் combination scenes இருந்தது எனக்கு ரொம்ப ஜாலியாக இருந்தது. எல்லாரையும் கலாய்த்து, சிரிச்சு, ஒரு குடும்பமாக இந்த படம் உருவானது.

பாண்டிராஜ் சார் பற்றி சொல்லணும்னா, அவரோட ஸ்பீட் வேற லெவல். காலையிலே ஏழு மணிக்கு shot என்றால், ஆறரை மணிக்கே அடுத்த shot ready ஆகி இருக்கும். நாங்க இன்னும் மேக்கப் முடிக்காம இருக்கும்போதே, அவர் ஒரு shot முடிச்சு அடுத்த shotக்கு போயிருப்பார். அந்த அளவுக்கு அர்ப்பணிப்பு மற்றும் வேகம்.

பாண்டிராஜ் சார் படப்பிடிப்பில் எங்களுக்கு கொடுத்த சுதந்திரம் ரொம்ப ஸ்பெஷல். அதனால் சாப்பிட கூட நேரம் தெரியாமல் வேலை செய்திருக்கோம். ஆனாலும் அது கஷ்டமாக இல்ல, ரொம்ப ஜாலியான அனுபவமாக இருந்தது. மிஷ்கின் சார் உடனான தருணங்கள் கூட மறக்க முடியாதவை. இரவு நேரங்களில் அவருடைய office-க்கு போய் மியூசிக், புக்ஸ், சினிமா பற்றி பேசுவோம். அவர் கதைகள், அவர் பேசும் விஷயங்கள் எல்லாமே ஒரு பெரிய அனுபவம். இந்த படத்தில் மிஸ்டரி, காமெடி, ஃபன், எமோஷன் என எல்லாமே இருக்கும். பாண்டிராஜ் சார் இதுவரைக்கும் செய்யாத ஒரு புதிய ஜானரில் இந்த படம் இருக்கும். திருக்குமரன் சார் மிகவும் அன்பானவர் அவருக்கு என் நன்றி. “பரிமளா அண்ட் கோ” எல்லாரும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு கமர்ஷியல் திரைப்படம். குடும்பத்துடன் வந்து கண்டிப்பாக கொண்டாடுங்கள். நன்றி.|

நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது…

அனைவருக்கும் வணக்கம். முதலில் பாண்டிராஜ் சாருக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த படத்தை நான் எவ்வளவு மகிழ்ச்சியாக செய்து இருக்கிறேன் என்பது உங்களுக்கே தெரியும். தினமும் அதை நீங்கள் நேரில் பார்த்து ரசித்திருக்கிறீர்கள். இந்த அழகான நினைவுகளை எனக்கு கொடுத்ததற்கு மிகவும் நன்றி சார்.

தமிழ் சார், உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒவ்வொரு உரையாடலும் எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், அனைவரிடமும் கருத்து கேட்டு, எல்லோரையும் சமமாக மதித்து பேசும் உங்கள் பண்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இந்த படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், இந்த மேடையில் இருக்கும் நடிகர்களின் பெயர்களையே கேட்டதும் எந்த நடிகருக்கும் “நாமும் இந்த படத்தில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்” என்ற ஆசை வரும். அதே உணர்வு எனக்கும் ஏற்பட்டது. முதல் முறை பாண்டிராஜ் சாரை சந்தித்தபோதே “எப்படியாவது இந்த படம் அமைய வேண்டும்” என்று மனதார விரும்பினேன். எல்லாமே மிக வேகமாக நடந்தது. படப்பிடிப்பு கூட கண் மூடி திறப்பதற்குள் முடிந்துவிட்டது போல தோன்றுகிறது. இப்போதே அந்த படப்பிடிப்பு நாட்களை மிகவும் நினைத்து வருந்துகிறேன். தினமும் வீட்டிலிருந்து கிளம்பி “பரிமளா வீட்டிற்கு” போவது போலவே உணர்ந்தேன். படப்பிடிப்பு தளம் ஒரு குடும்பம் போல இருந்தது.

ஜெயராம் சார் மற்றும் ஊர்வசி மேம் இருவரும் படப்பிடிப்பு தளத்தில் இருந்தாலே மகிழ்ச்சி நிறைந்த சூழல் இருக்கும். எதற்கும் உடனே நகைச்சுவையான பதில்கள் வரும். காட்சி எடுத்துக் கொண்டிருக்கும்போதும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல், பல முறை நான் கதாபாத்திரத்திலிருந்து வெளியே வந்திருக்கிறேன். அது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. உங்கள் இருவரின் ஜோடிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். நானும் அதில் ஒரு சிறிய ரசிகை தான். உங்கள் பழைய காட்சிகளை சவுண்ட் இல்லாமல் போட்டாலும் வசனங்களை சொல்லும் அளவுக்கு நான் பல முறை பார்த்து ரசித்திருக்கிறேன். மிஷ்கின் சார் படப்பிடிப்பு தளத்தில் இருந்தாலே ஒரு தனி உற்சாகம் இருக்கும். அவருடனும், இங்கே இருக்கும் ஒவ்வொருவருடனும் சேர்ந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

நாங்கள் இந்த படத்தை எவ்வளவு மகிழ்ச்சியாக உருவாக்கினோமோ, அதே அளவுக்கு நீங்கள் அனைவரும் இந்த படத்தை ரசித்து ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகவும் முக்கியம். மிகவும் நன்றி.

நடிகை ஊர்வசி பேசியதாவது..,
அனைவருக்கும் வணக்கம். எல்லோரும் இந்த படத்தைப் பற்றி ஏற்கனவே நிறைய விஷயங்கள் சொல்லிவிட்டார்கள். இருந்தாலும், என்னைப் பொறுத்தவரை இந்த படம் மிகவும் சிறப்பான ஒன்று. ஒரு நடிகராக வாழ்க்கையில் சில சமயங்களில் மட்டுமே “இந்த கதைதான் உண்மையான ஹீரோ” என்று நம்பிக்கை தரும் கதைகள் அமையும். இந்த கதையை முதலில் கேட்ட தருணத்திலேயே அந்த நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது.

முழு திரைக்கதையையும் கேட்ட பிறகு, இன்னும் விரிவாக கேட்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அதற்குப் பிறகு இந்த படத்தின் மீது எனக்கு இன்னும் அதிகமான மகிழ்ச்சியும் நம்பிக்கையும் வந்தது. அதிலும் ஜெயராம் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரிந்தவுடன் நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். ஏனெனில், நாங்கள் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சேர்ந்து படம் செய்யவில்லை. கிட்டத்தட்ட இருபத்தைந்து படங்களுக்கு மேல் ஒன்றாக நடித்திருக்கிறோம். பல கதைகள் எங்களிடம் வந்திருக்கின்றன. சிலது எனக்கு பிடிக்கும், சிலது ஜெயராமுக்கு பிடிக்காது. ஆனால் இந்த கதை வந்தபோது இருவருக்கும் ஒரே நேரத்தில் பிடித்தது. காரணம், இது வெறும் சீரியஸான கதை மட்டும் இல்லை; உண்மையான வாழ்க்கை உணர்வுகளோடும், இயல்பான நகைச்சுவையோடும் சொல்லப்பட்ட கதை.

பாண்டிராஜ் உள்ளிருக்கும் எழுத்தாளருக்கு எனக்கு எப்போதுமே மிகுந்த மரியாதை உண்டு. “பசங்க” படத்திலிருந்து அவர் இயக்கிய பெரும்பாலான படங்களை பார்த்திருக்கிறேன். ஒரு கதையை வடிவமைப்பதில் அவர் மிகவும் நேரம் எடுத்துக்கொள்வார். ஆனால் படப்பிடிப்பில் அவர் வேகம் வேற லெவல். மலையாள சினிமாவில் குறைந்த நாட்களில் தரமான படங்கள் எடுப்பார்கள் என்று சொல்வார்கள். ஆனால் சமீபத்தில் நான் வேலை செய்த படங்களில் மிக வேகமாக முடிக்கப்பட்ட படம் இதுதான். எப்போது தொடங்கினார்கள், எப்போது முடித்தார்கள் என்று எனக்கே ஆச்சரியம். என்னால் சில நாட்களில் முழுமையாக ஒத்துழைக்க முடியாத சூழ்நிலைகளும் இருந்தன. மலையாளத்தில் தொடர்ந்து படங்கள் இருந்ததால் அங்கிருந்து இங்கே பயணம் செய்து கொண்டே இருக்க வேண்டியிருந்தது. ஆனாலும் எல்லாவற்றையும் சமாளித்து இந்த படத்தை செய்தோம். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பும் மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

ஒரு நல்ல கதை, நல்ல கதாபாத்திரங்கள் அமைந்துவிட்டால் நடிகர்களாக நாமும் அதில் improvisation செய்ய ஆர்வமாக இருப்போம். அதுதான் இந்த படத்திலும் நடந்தது. நாங்கள் இதற்கு முன் பல குடும்ப படங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் ஒரு காட்சியும் பழைய படங்களை நினைவூட்டும் மாதிரி இல்லை. ஒவ்வொரு காட்சியும் புதிதாகவே இருந்தது. அனந்திகா, சஞ்சனா ஆகியோருடன் பணியாற்றியது மிகவும் இயல்பான அனுபவமாக இருந்தது. இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு நாங்கள் எல்லோரும் நடிகர்கள் என்ற உணர்வே மறந்து, ஒரு குடும்பமாக மாறிவிட்டோம்.

மிஷ்கின் சார் ஒரு சிறந்த இயக்குநர் என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆனால் இந்த படத்தில் அவர் உள்ளிருக்கும் நடிகர், அதிலும் குறிப்பாக அவரது நகைச்சுவை டைமிங் என்னை ஆச்சரியப்படுத்தியது. அவருக்கும் எனக்கும் சேர்ந்த சில காட்சிகள் மிக அருமையாக வந்திருக்கின்றன. இந்த படத்தின் casting மிகச் சிறப்பு. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சரியான நடிகர்களை தேர்வு செய்ததில் பாண்டிராஜ் நூறு சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறார். டிரெய்லரில் ஒரு சிறிய பெண் கதாபாத்திரம் வரும். அவரை பார்த்தாலே அது தெரியும். சினிமாவின் மாயம் அப்படித்தான் — யார் எப்போது அறிமுகமாகி எவ்வளவு உயரம் செல்வார்கள் என்று சொல்ல முடியாது.

சாண்டி மாஸ்டரை “லோகா” படத்தில் பார்த்தபோதே நான் மிகவும் ரசித்தேன். என் மகள் அவருடைய பெரிய ரசிகை. இந்த படத்தில் அவருடன் சேர்ந்த காட்சிகள் மிகவும் சிறப்பாக வந்திருக்கின்றன. யோகி பாபுவும் இந்த படத்தில் வழக்கமான நகைச்சுவையைத் தாண்டி, உணர்ச்சிகளும் கலந்த வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தமிழ் குமரன் பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஒரு தயாரிப்பாளராக எந்த அழுத்தமும் எங்களுக்கு கொடுக்கவில்லை. எல்லாவற்றையும் அமைதியாக கவனித்துக் கொண்டார். ஒரு சிறிய நடுத்தர வீட்டில் தான் பெரும்பாலான படப்பிடிப்பு நடந்தது. அந்த வீட்டை முழுவதும் மூடி வைத்து பகல்-இரவு காட்சிகள் எடுத்தோம். ஆக்சிஜன் குறைவாக இருந்ததால் கிட்டத்தட்ட எல்லோருக்கும் வைரல் காய்ச்சல், இருமல் வந்தது. ஆனால் கதையின் மீது இருந்த ஆர்வத்தால் அதை எல்லாம் மறந்து வேலை செய்தோம்.

அசோசியேட் டைரக்டர்கள், குறிப்பாக திவ்யா, இந்த படத்திற்காக மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறார். ஒரே நேரத்தில் prompting, costume, continuity என்று அனைத்தையும் கவனித்தார். ஜெகனும் தனது வேலையைத் தாண்டி, பாண்டிராஜ் மீது இருந்த அன்பால் முழுமையாக உழைத்தார்.

நானும் ஜெயராமும் பல வருடங்களுக்குப் பிறகு சேர்ந்து நடித்திருக்கிறோம். இந்த காம்பினேசனுக்கு எங்களுக்கே ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். ஒரு நடிகராக நாம் நடிக்கும் ஒவ்வொரு படமும் நல்லபடியாக அமைய வேண்டும் என்று நினைத்தே வேலை செய்கிறோம். ஆனால் இந்த படம் சிறப்பாக இருப்பதற்குக் காரணம், இதில் இருக்கும் எழுத்தாளரின் உழைப்பு. எங்களால் முடிந்த அளவுக்கு அதை நேர்மையாக திரையில் கொண்டு வர முயற்சி செய்திருக்கிறோம். இப்போது ஒரு படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் உங்கள் போன்ற ஊடக நண்பர்களின் பங்கு மிகவும் முக்கியம். அதனால் உங்கள் முழு ஆதரவும் எங்களுக்கு தேவை. மிகவும் நன்றி.

நடிகர் ஜெயராம் பேசியதாவது..,

அனைவருக்கும் வணக்கம். பத்திரிகை நண்பர்கள், என் நண்பர்கள், அண்ணன், தம்பி, அக்கா, தங்கை அனைவருக்கும் என் அன்பான வணக்கம். இயக்குநர், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

இந்த படத்தைப் பற்றி ஏற்கனவே அனைவரும் நிறைய விஷயங்கள் பேசிவிட்டார்கள். நேரமும் ஆகிவிட்டதால் சுருக்கமாக பேச விரும்புகிறேன். இந்த படத்தின் ஆரம்ப கட்டத்திலேயே லைக்கா போன்ற பெரிய நிறுவனம் இந்த சிறிய படத்துடன் இணைந்தது மிகப்பெரிய விஷயம். அதன்பிறகு தமிழ் குமரன் சார் போன்ற தயாரிப்பாளர் இந்த படத்திற்குள் வந்தது, பாண்டிராஜ் சார் இயக்கம் ஏற்றது — இவை அனைத்தும் இந்த படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது.

அதோடு ஊர்வசி மேம், சஞ்சனா, அனந்திகா, யோகி பாபு, மிஷ்கின் சார், சிங்கம்புலி, சாண்டி மாஸ்டர் என பல சிறந்த கலைஞர்கள் இந்த படத்தில் இணைந்தனர். தொழில்நுட்பக் குழுவிலும் பிராக்ஸன் போன்ற இசையமைப்பாளர், பிரதீப் போன்ற எடிட்டர், ஜார்ஜ் போன்ற ஒளிப்பதிவாளர், திவ்யா போன்ற அசோசியேட் இயக்குநர் ஆகியோர் கிடைத்தது இந்த படத்தின் அதிர்ஷ்டம். இந்த அனைத்துக்கும் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் ஒரு விஷயம் மட்டும் சொல்ல வேண்டும் என்றால், இந்த படத்தின் உண்மையான ஹீரோ எங்களுடைய திரைக்கதை தான். முதன்முதலாக பாண்டிராஜ் சார் இந்த கதையை சொல்ல ஆரம்பித்தபோது, பாதி கதை கேட்கும் முன்பே இது ஒரு ஸ்பெஷலான படம் என்று எனக்கு தோன்றியது.

இந்த படத்தில் நடந்த எல்லா விஷயங்களும் மிகவும் பாஸிடிவாக அமைந்திருக்கிறது. இனிமே இந்த படத்தை மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்க வேண்டியது உங்கள் கைகளில் தான் இருக்கிறது. உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகவும் தேவை. மிக்க நன்றி.

இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது..,

அனைவருக்கும் வணக்கம். “சிறந்த நடிகர்கள்” என்று சொன்னால் என் மனதில் முதலில் தோன்றுபவர்கள் ஜெயராம் சார் மற்றும் ஊர்வசி அம்மா. அவர்களுடன் சேர்ந்து நடிப்பது எனக்கு ஒரு பெரிய கனவு. இருவரும் மிகுந்த புத்திசாலித்தனமும், ஆழமான உணர்வும் கொண்ட நடிகர்கள். அவர்களுடன் ஒரே காட்சியில் இருப்பதே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. முன்னதாக ஒரு படத்திற்காக ஜெயராம் சாரை ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தேன். நான் கதையை மிகவும் தீவிரமாகச் சொன்னேன். அவர் அமைதியாக முழுக்கக் கேட்டுவிட்டு சிரித்தபடி, “நான் செய்யலாம் தம்பி” என்றார். அந்த ஒரு வார்த்தையே எனக்கு பெரிய ஆச்சரியம் கொடுத்தது.

ஏன் அவர் பெரிய நடிகர் தெரியுமா? வாழ்க்கையில் “இல்லை” என்று சொல்ல வேண்டிய இடத்தில் அதைத் தெளிவாக சொல்லத் தெரிந்தவர். சினிமாவில் பலருக்கு அது முடியாது. எல்லாவற்றிற்கும் “சரி” என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பது ஒரு பெரிய குணம். ஜெயராம் சாரிடம் அந்த தெளிவு இருக்கிறது.

ஊர்வசி அம்மா பற்றி என்ன சொல்ல வேண்டும். நான் அவரை மிகவும் கவனித்து பார்த்திருக்கிறேன். ஒரு காட்சியை சொன்னாலே அதை அவர் தன்னுடைய அனுபவத்தாலும் உணர்ச்சியாலும் இன்னொரு உயரத்திற்கு கொண்டு செல்வார். அவருடைய நடிப்பில் ஒரு அதிசயமான இயல்பு இருக்கிறது. அதை கற்றுக்கொடுக்க முடியாது. “மைக்கேல் மதன காமராஜன்” படத்தில் கமல் சார் மற்றும் ஊர்வசி அம்மா நடித்த அந்த படிக்கட்டு காட்சி — இந்திய சினிமாவில் நடிப்பு என்றால் என்ன என்பதை எனக்கு புரிய வைத்த காட்சி அது. நான் அந்த காட்சியை நூற்றுக்கும் மேற்பட்ட முறை பார்த்திருக்கிறேன். ஒரு நடிகர் எப்படி நடிக்கிறார் என்பதை விட, எதிரில் இருப்பவர் அதற்கு எப்படி பதிலளிக்கிறார் என்பதுதான் உண்மையான நடிப்பு என்று நான் நம்புகிறேன். அந்த அளவுக்கு இயல்பான நடிப்பை ஊர்வசி அம்மா கொடுத்திருக்கிறார். நான் ஏன் சினிமாவுக்கு வந்தேன் என்று கேட்டால், அந்த மாதிரியான காட்சிகள்தான் காரணம் என்று சொல்லுவேன். அந்த அளவுக்கு பெரிய நடிகையுடன் வேலை செய்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு. இதற்காக நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.

பாண்டியராஜை நான் பன்னிரண்டு வருடங்களாக அறிவேன். ஆரம்பத்தில் நிகழ்ச்சிகளில் சந்திப்போம். மெதுவாக பழக ஆரம்பித்தோம். அவர் அலுவலகத்திற்கு சென்றால் நண்பர்களோடு உட்கார்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருப்போம். அந்த இடம் ஒரு குடும்பம் போல உணர்வு தரும். அவர் மிகவும் அன்பான மனிதர். எத்தனை இயக்குநர்கள் வந்தாலும் எல்லோரிடமும் ஒரே மாதிரி அன்பாக நடந்து கொள்வார். அந்த நட்புதான் இந்த படத்திற்கும் காரணம்.

தமிழ் சினிமாவில் மிகவும் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர். ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு தனி அடையாளம் இருக்கும். மணிரத்னம் சாரின் படங்களில் அழகான காட்சியமைப்புகள் இருக்கும். சேரன் படங்களில் மனிதநேயம் மற்றும் தர்மம் இருக்கும். தியாகராஜன் குமாரராஜாவின் படங்களில் வித்தியாசமான பைத்தியக்காரத் தனம் இருக்கும். அதுபோல பாண்டியராஜின் மிகப்பெரிய பலம் மொழி.

அவர் ஒரு வார்த்தையை ரசித்துவிட்டால் அதை உயிரோடு பிடித்து வைத்துக்கொள்வார். வட்டார மொழி, மனிதர்கள் பேசும் இயல்பான சொற்கள், அந்த மொழியின் நுணுக்கங்கள் — இவையெல்லாம் அவருக்குள் ஆழமாக பதிந்திருக்கின்றன. அவர் மனிதர்களை மட்டும் பார்க்கவில்லை; அவர்களுடைய மொழியையும் கவனிக்கிறார். அதனால்தான் அவர் படங்களில் உரையாடல்கள் மிகவும் இயல்பாக இருக்கும்.

ஒரு இயக்குநர் இருபது வருடங்களாக சினிமாவில் நிலைத்து நிற்கிறார் என்றால், அவர் ஏதோ ஒரு விஷயத்தில் அசாதாரண திறமை கொண்டவர் என்பதற்கே அது சாட்சி.

அப்படித்தான் பாண்டியராஜும். அவர் பெரிய கல்வி கற்றவரா என தெரியாது. ஆனால் மொழியை அவர் உயிரோடு உணர்கிறார். அதனால்தான் அவர் படங்களில் இருக்கும் உரையாடல்கள் மக்கள் மனதில் நேராக போய் சேர்கின்றன. அவருக்கு ஒரு பெரிய தெளிவு இருக்கிறது. “ஒரு தயாரிப்பாளர் எனக்கு பணம் கொடுக்கிறார்; நான் அவருக்கு வெற்றிப் படம் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில், இரண்டு மணி நேரம் பார்வையாளரை மகிழ்விக்க வேண்டும்” — இந்த இரண்டிலும் அவர் தெளிவாக இருக்கிறார். அதனால்தான் அவர் படங்கள் வணிக ரீதியாகவும், மக்களுக்கு நெருக்கமாகவும் இருக்கும்.

தமிழ் சினிமாவில் மிகவும் தெளிவாக சிந்திக்கும் இயக்குநர்களில் அவர் ஒருவர் என்று நான் நம்புகிறேன். அவர் ஒரு காட்சியை எடுக்கும்போது தேவையற்ற குழப்பமே இருக்காது. எது வேண்டும், எது வேண்டாம் என்று நேராகச் சொல்லிவிடுவார். அதனால் நடிகர்களுக்கும் வேலை மிகவும் எளிதாகிவிடும்.

அவர் மிகவும் கட்டுப்பாடுடன் வேலை செய்கிறார். காலையில் ஆறு மணிக்கே படப்பிடிப்பு தளத்தில் இருப்பார். எட்டு மணி நேரத்தில் எவ்வளவு வேலை செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துவிடுவார். பட்ஜெட்டிற்குள், திட்டமிட்ட நாட்களுக்குள் படத்தை முடிப்பதில் அவர் வல்லவர்.

இந்த படத்தில் என்னை நடிக்க அழைத்தபோது, முதலில் ஒரு கதையைச் சொல்ல வந்தார். அவர் கதை சொல்லும் விதமே வேற மாதிரி. கதையை சொல்லிக்கொண்டே நம்மை அதற்குள் இழுத்து விடுவார். ஒரு dark comedy கதையை அவர் சொல்லும்போது நான் சிரித்துக்கொண்டே கேட்டேன். உடனே “இது நன்றாக இருக்கும்” என்று நம்பிக்கை வந்தது.

இந்த படத்தில் நடித்த அந்த இரண்டு இளம் நடிகைகளும் மிகவும் திறமையானவர்கள். உடனுக்குடன் உணர்ச்சியைப் பிடித்து நடித்து விடுவார்கள். சாண்டி மாஸ்டரும் அதே மாதிரி. அளவில்லாத ஆற்றல்.

மொத்தத்தில், இந்த படப்பிடிப்பு மிகவும் சந்தோஷமாக இருந்தது. சிரிப்பு, நட்பு, அன்பு நிறைந்த அனுபவமாக இருந்தது. இந்த படம் மக்களை மகிழ்விக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் பாண்டிராஜ் பேசியதாவது..,

அனைவருக்கும் வணக்கம். “பரிமளா அண்ட் கோ” கதை மூன்று வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டது. ஆரம்பத்தில் இதற்கு “பரிமளா ஃபேமிலி” என்ற தலைப்பு வைத்திருந்தோம். பிறகு “டூரிஸ்ட் ஃபேமிலி” போன்ற தலைப்புகள் வந்ததால் மாற்றலாமா என்று யோசித்தோம். “ஸ்வீட் ஹோம்” என்று கூட ஒரு பெயர் வைத்திருந்தோம். இறுதியில் “பரிமளா அண்ட் கோ” என்று வைத்தால் எப்படி இருக்கும் என்று வீட்டில் மனைவி, பிள்ளைகளிடம் கேட்டேன். அவர்கள் இருவரும் இதற்கே ஓட்டு போட்டார்கள். அசிஸ்டண்ட்கள், தயாரிப்பாளர், நண்பர்கள் என எல்லோரிடமும் வாக்கெடுப்பு எடுத்தோம். பெரும்பாலானோர் இதையே தேர்வு செய்தார்கள்.

இந்த கதையை முதலில் தமிழ் குமரன் சாரிடம் சொன்னபோது, அவர் சிரித்த விதமே எனக்கு நம்பிக்கை கொடுத்தது. அவர் சாதாரணமாக மிகவும் அமைதியாக இருப்பார். ஆனால் கதை கேட்டு மனதார சிரித்தார். அங்கேயே “இந்த படம் கண்டிப்பாக மக்களிடம் வேலை செய்யும்” என்ற நம்பிக்கை வந்தது.

ஜெயராம் சார், ஊர்வசி மேம் இருவரும் இந்த கதைக்குள் வந்ததும், படம் பாதி வெற்றி அடைந்துவிட்டது என்று நினைத்தேன். அவர்கள் இருவரும் கதை கேட்டபோது தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தார்கள். ஜெயராம் சார் உடனே “இது கண்டிப்பாக பெரிய ஹிட் ஆகும்” என்றார். அந்த அளவுக்கு அனுபவம் உள்ள இரண்டு கலைஞர்கள் அப்படிச் சொன்னதும் எனக்கு இன்னும் நம்பிக்கை கிடைத்தது. மிஷ்கின் சாரிடம் கதை சொன்னபோதும், அவர் வழக்கம்போல் அமைதியாக இருந்தார். ஆனால் சிரித்துக்கொண்டே கேட்டார். அவர் சிரித்தால் அது ரசிகர்களுக்கும் கனெக்ட் ஆகும் என்று எனக்கு தெரியும். அங்கேயும் ஒரு நம்பிக்கை கிடைத்தது.

இந்த கதையில் இரண்டு பெண் கதாபாத்திரங்கள் மிகவும் முக்கியமானவை. வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தால் எப்போதும் சண்டை, சிரிப்பு, கலாட்டா நடந்து கொண்டே இருக்கும் இல்லையா? அந்த உணர்வை கொண்டு வரவே அந்த இரண்டு கதாபாத்திரங்களையும் உருவாக்கினோம். அதற்காக சஞ்சனா, அனந்திகா ஆகியோரை தேர்வு செய்தோம். அனந்திகாவின் reels-ஐ பார்த்தவுடனே அந்த energy பிடித்துவிட்டது. சஞ்சனாவிடம் கதை சொன்னபோது, ஆரம்பத்தில் உதவி இயக்குநர் மாதிரி சீரியஸாக கேட்டுக்கொண்டிருந்தார். பிறகு சிரிக்க ஆரம்பித்தார். அப்போதே இந்த படம் ஒர்க் ஆகும் என்று எனக்கு தோன்றியது.

ஜெயராம் சார், ஊர்வசி மேம் இருவருக்கும் நான் மிகவும் நன்றி சொல்ல வேண்டும். குறிப்பாக ஊர்வசி மேம் ஒரு பெரிய personal tragedy நடந்திருக்கும் நேரத்திலும், “ஷூட்டிங்கை நிறுத்த வேண்டாம், நான் வந்து முடித்துவிடுகிறேன்” என்று மறுநாளே வந்து நடித்தார்கள். அது எங்களுக்கு மிகப்பெரிய விஷயம். அந்த மனநிலையில் கூட அவர்கள் நகைச்சுவை காட்சிகளை அற்புதமாக செய்தார்கள். இன்று வரை அந்த காட்சிகள் பார்க்கும்போதும் நாங்கள் சிரிக்கிறோம்.

ஒரு இயக்குநருக்கு ஒரு கட்டத்திற்குப் பிறகு படம் போர் அடிக்க ஆரம்பிக்கும். Editing, dubbing, mixing என்று மீண்டும் மீண்டும் பார்த்தால் காமெடி கூட சிரிப்பாக இருக்காது. ஆனால் ஜெயராம் சார் – ஊர்வசி மேம் காம்பினேஷன் மட்டும் கடைசி வரை ஃப்ரெஷ்ஷாக இருந்தது. இந்த படத்தில் என் எனர்ஜிக்கு ஈடு கொடுத்தவர் சாண்டி மாஸ்டர். நான் எவ்வளவு எனர்ஜியாக இருப்பேனோ, அதைவிட அதிகமாக இருப்பார். காலையிலேயே முழு எனர்ஜியுடன் வந்துவிடுவார். அதேபோல் அந்த இரண்டு பெண்களும். எந்த நேரம் சொன்னாலும் “ஓகே சார்” என்று வந்து நிற்பார்கள். இந்த படத்தில் இருந்த ஒவ்வொருவரும் முழு மனதுடன் உழைத்திருக்கிறார்கள்.

அனந்திகா, சஞ்சனா “இவர்கள் உண்மையிலேயே அக்கா–தங்கச்சிகளா?” என்று கேட்டார்கள். அந்த அளவுக்கு இயல்பாக நடித்திருந்தார்கள். உண்மையான அக்கா–தங்கைகள் போலவே செட்டில் எப்போதும் சண்டை, கலாட்டா, அன்பு என இருந்துகொண்டே இருப்பார்கள்.

மிஷ்கின் சார் மற்றும் அவருடைய தம்பி இருவரையும் முதன்முறையாக ஒரே படத்தில் நடிக்க வைத்தது எனக்கு மிகவும் சந்தோஷம். அந்த அண்ணன்–தம்பி பாசம் ரொம்ப அழகாக இருந்தது. செண்ட்ராயன், பூர்ணிமா உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. குறிப்பாக பூர்ணிமாவை ஒரு நாள் முன்பு தான் அழைத்தோம். உடனே “நான் வருகிறேன்” என்று சொல்லி வந்து நடித்தார். அது எங்களுக்கு பெரிய உதவி.

மிஷ்கின் சாருக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. கடந்த சில நாட்களாக promotion-க்காக எல்லா இடங்களுக்கும் என்னுடன் வருகிறார். நான் போகும் இடமெல்லாம் அவர் பின்னாலேயே வருகிறார். “படத்துக்காக வர்றேன்” என்று சொல்வார். அது எனக்கு மிகப்பெரிய அன்பு. ஜெயராம் சாரும் இந்த படத்தை ஒரு பெரிய வெற்றிப்படமாக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் எப்போதும் படத்தைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பார். என் முழு குழுவும் அதே உற்சாகத்தோடு வேலை செய்தது. ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் — என் வேகத்துக்கு சரியாக பொருந்திய கேமராமேன். என் படங்களில் மிகவும் தரமான விஷுவல் கொண்ட படமாக இது இருக்கும் என்று நம்புகிறேன். இசையமைப்பாளர் பாக்ஸன் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார். திங்க் மியூசிக் சந்தோஷ் மணி அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவரிடம் மிகப்பெரிய எனர்ஜி இருக்கிறது. இன்னொரு அனிருத் மாதிரி ஒரு தனித்துவமான இசையமைப்பாளராக வருவார் என்று நம்புகிறேன்.

இறுதியாக, லைக்கா நிறுவனம் இந்த படத்துடன் இணைந்தது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. சுபாஸ்கரன் சார் லண்டனில் எங்களுக்கு மிகப்பெரிய விருந்தளித்தார். இந்த படத்தையும் மக்களுக்கு ஒரு பெரிய விருந்தாக கொடுக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருக்கிறது. சுபாஸ்கரன் சாருக்கும் தமிழ் குமரன் சாருக்கும் என் மனமார்ந்த நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இந்த படத்தின் கதை, ஒரு வித்தியாசமான குடும்பத்தைச் சுற்றி நகர்கிறது. அந்த குடும்பத்தில் உள்ள மனிதர்களின் தனித்துவமான குணாதிசயங்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் அபூர்வமான சம்பவங்கள் கதையின் மையமாக அமைந்துள்ளன. சென்னை நகரத்தைத் தொடக்கமாகக் கொண்டு கோயம்புத்தூர் மற்றும் பாலக்காடு வரை பயணிக்கும் இந்த கதை, திரில்லர் பாணியிலும் நகைச்சுவை கலந்த காட்சிகளாலும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜெயராம் மற்றும் ஊர்வசி முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடிக்க, இவர்களுடன், இளம் நடிகர் சந்தோஷ் சோபன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இணைந்துள்ளார். மற்றொரு காதல் ஜோடியாக சாண்டி, அனந்திகா சனில்குமார் இணைந்து நடித்துள்ளனர்.

மேலும், தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த யோகிபாபு தலைவன் தலைவி பட வெற்றிக்குப் பிறகு, இப்படத்தில் முக்கியமான முழுநீள கதாப்பாத்திரத்தில் மீண்டும் இணைந்துள்ளார். இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், முற்றிலும் மாறுபட்ட காவல் அதிகாரி வேடத்தில் இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் தோன்றுகிறார். மேலும்

வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் சிங்கம்புலி மற்றும் பக்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

“பரிமளா & கோ” திரைப்படம் Lyca Productions நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில், Tamilkumaran Productions Pvt Ltd மற்றும் Pasanga Productions இணைந்து தயாரிக்கின்றன. ஒளிப்பதிவை ஜார்ஜ் C. வில்லியம்ஸ் மேற்கொண்டுள்ள நிலையில், இசையமைப்பாளராக Foxn அறிமுகமாகியுள்ளார்.

திரில்லர் மற்றும் நகைச்சுவை கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள “பரிமளா & கோ”, ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தொழில் நுட்ப குழு விபரம்

தயாரிப்பு : Lyca Productions, Tamilkumaran Productions Pvt Ltd, Pasanga Productions

கதை, திரைக்கதை, இயக்கம் : பாண்டிராஜ்

ஒளிப்பதிவு : ஜார்ஜ் C. வில்லியம்ஸ் ISC

இசை : Foxn

எடிட்டர் : பிரதீப் E. ராகவ்

கலை இயக்குனர் : T. ராமலிங்கம்

ஸ்டண்ட் : கலாய் கிங்ஸன்

நடன அமைப்பு : சாண்டி, பாபா பாஸ்கர்

மியூசிக் சூப்பர்வைசர் : சந்தோஷ் குமார்

ஆடை வடிவமைப்பாளர் : பூர்ணிமா ராமசாமி

ஆடை : K. நடராஜ்

ஒலிப்பதிவு : M.R. ராஜாகிருஷ்ணன்

சவுண்ட் எஃபெக்ட்ஸ் : ஷ்ரேயஸ் பத், அருண் பிரசாத்

VFX தயாரிப்பு : B.R. வெங்கடேஷ்

DI : Knack Studios

கலரிஸ்ட் : பிரசாத் சோமசேகர்

விளம்பர வடிவமைப்பு : ADFX Studio

மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)

தயாரிப்பு மேற்பார்வை : ராமதாஸ் & விஜய் C

சப்டைட்டில்ஸ் : ரேக்ஸ்

“Tat Twam Assi” (2026) Begins Filming on an Auspicious Note!!

0

The shooting of “Tat Twam Assi” (2026), a grand film that blends spirituality, devotion, and action, commenced successfully yesterday (May 26). Produced by Tantra Films, the movie has been creating strong anticipation among audiences ever since its announcement.

The film’s pre-production work began on February 26, and within exactly three months, the team successfully completed all planning and preparations before commencing the shoot yesterday. Such precise execution is being viewed as a reflection of the dedication and commitment of the film’s crew.

At the launch ceremony, director Venkat Prabhu gave the inaugural clap, while director Ponram switched on the camera and conveyed his wishes to the team. The spiritually themed launch event marked a memorable beginning for the project.

The film is directed by Vishnu Sasi Shankar, best known for the Malayalam blockbuster Malikappuram. His experience in portraying emotionally engaging spiritual narratives is expected to be a major strength for “Tat Twam Assi.”

The movie stars Vaibhav and Meenakshi Govindarajan in the lead roles. They are joined by Aravind Akash, Aadukalam Naren, and several others in pivotal roles.

Centered around themes of devotion, faith, and spirituality, the film will also feature action-packed and emotional entertainment elements. The screenplay is said to be designed in a way that appeals to both family audiences and youngsters alike.

The film is produced by JK Saravana and JK Shatesh. Music is composed by Premgi Amaren, while cinematography is handled by Yuvan Selva. Editing is by Praveen KL, art direction by Surya Rajeevan, and stunt choreography by Sakthi Saravanan.

The film is written by Adithya Tangirala, Nanthakumar Thamichelvan, and Prithivi Adithya.

Meanwhile, another major project announced by Tantra Films, titled “Arya Kerala Varman,” is also being developed with a historical and spiritual backdrop.

According to reports, the makers are planning to release “Tat Twam Assi” during the Ayyappa Mandala season this year. With its blend of spirituality and mass commercial elements, the film is expected to receive a grand response from audiences.

“தத் த்வம் அஸி” (2026) படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது!!

ஆன்மீகம், பக்தி மற்றும் ஆக்சன் கலந்த பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகும் “தத் த்வம் அஸி” (2026) படத்தின் படப்பிடிப்பு நேற்று (மே 26) இனிதே துவங்கியுள்ளது. தந்த்ரா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படம், அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், சரியாக மூன்று மாதங்களுக்குள் அனைத்து திட்டமிடல்களும் நிறைவு செய்யப்பட்டு இன்று படப்பிடிப்பு துவங்கியுள்ளது. திரைப்பட உலகில் இத்தகைய துல்லியமான திட்டமிடல் படக்குழுவின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.

படப்பிடிப்பு துவக்க நிகழ்வில் இயக்குநர் வெங்கட் பிரபு கிளாப் அடிக்க, இயக்குநர் பொன்ராம் கேமராவை ஆன் செய்து படக்குழுவை வாழ்த்தினார். ஆன்மீக சூழலில் நடைபெற்ற இந்த தொடக்க விழா படக்குழுவிற்கு சிறப்பான தொடக்கமாக அமைந்தது.

மலையாளத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற “மாளிகப்புரம்” படத்தின் இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். ஆன்மீக கதைகளை உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தும் அவரது அனுபவம், “தத் த்வம் அஸி” திரைப்படத்திற்கு பெரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் வைபவ் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் அரவிந்த் ஆகாஷ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.

பக்தி, நம்பிக்கை மற்றும் ஆன்மீக உணர்வுகளை மையமாகக் கொண்டு, அதனுடன் ஆக்சன் மற்றும் உணர்ச்சி கலந்த பொழுதுபோக்கு அம்சங்களையும் சேர்த்து இந்த திரைப்படம் உருவாக்கப்படவுள்ளது. குடும்ப ரசிகர்களையும் இளைஞர்களையும் ஒருசேர கவரும் வகையில் இப்படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தை JK சரவணா மற்றும் JK சதீஷ் தயாரிக்கின்றனர். இசையை பிரேம் ஜி அமரன் அமைக்கிறார். ஒளிப்பதிவை யுவன் செல்வா கவனிக்க, படத்தொகுப்பை பிரவீன் KL மேற்கொள்கிறார். கலை இயக்குநராக சூர்யா ராஜிவன் பணியாற்றுகிறார். சண்டைக் காட்சிகளை சக்தி சரவணன் வடிவமைக்கிறார்.

எழுத்தாளர்களாக ஆதித்யா தங்கீராலா, நந்தகுமார் தமிழ்செல்வன் மற்றும் ப்ருத்வி ஆதித்யா இணைந்துள்ளனர்.

மேலும், தந்த்ரா ஃபிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ள மற்றொரு முக்கியமான திரைப்படமான “ஆர்ய கேரள வர்மன்” படமும் வரலாறு மற்றும் ஆன்மீக பின்னணியில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் ஐயப்ப மண்டல காலத்தை முன்னிட்டு “தத் த்வம் அஸி” திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்மீக உணர்வுகளுடன் மாஸ் அம்சங்களும் கலந்த இந்த படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Recent Posts