Tuesday, June 23, 2026
- Advertisement -
Home Blog Page 50

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஸ்வின் குமார் நடிக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2 மச் ‘படத்தின் வெற்றி விழா

0

கே ஜே பி டாக்கீஸ் சார்பில் தயாரிப்பாளர் கே. ஜே. பாலாமணி மார்பன் தயாரிப்பில் இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும் ‘ஹாட் ஸ்பாட் 2 ‘ மச் ‘ திரைப்படம் ஜனவரி 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதனால் உற்சாகமடைந்த படக்குழுவினர் வெற்றி விழாவை சென்னையில் ஒருங்கிணைத்தனர். இவ்விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த வெற்றி விழாவில் ஒளிப்பதிவாளர் ஜோசப் பால் பேசுகையில், ” அஸ்வின் குமாருடன் பணியாற்ற வேண்டும் என்ற போது முதலில் தயக்கம் இருந்தது. அதன் பிறகு பழகும் போது தான் அவருடைய அர்ப்பணிப்பு தெரிந்தது. படப்பிடிப்பு தளத்தில் அஸ்வின் குமார் வழங்கிய ஒத்துழைப்பு மறக்க முடியாதது. ஏழு மணிக்கு படப்பிடிப்பு என்றால் ஐந்தரை மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிடுவார். ஒரு நாள் தான் வருவார் என்று எதிர்பார்த்தால்.. ஒவ்வொரு நாளும் இதே போல் வந்தார். அவருடைய கடுமையான உழைப்பிற்கு முதலில் நான் நன்றி சொல்கிறேன்.

பவானி ஸ்ரீ யுடன் பணியாற்றும் போது ஒரு முறை கூட எனது பெயரை முழுவதுமாகவும், சரியாகவும் உச்சரித்ததில்லை.

பிரிகிடா இந்தப் படத்திற்காக நடித்த நாட்களை விட , இப்படத்தின் விளம்பர நிகழ்வுக்காக நிறைய நாட்கள் எங்களுடன் இணைந்து பயணித்திருக்கிறார்.

தயாரிப்பாளர் பாலாமணி மார்பன் நான் குறும்படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் காலகட்டத்திலேயே என்னை ஒளிப்பதிவாளராக பணியாற்ற செய்ய வேண்டும் என நினைத்தவர். இறுதியாக இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்திருக்கிறார்.

நாங்கள் பாதி தூரம் சென்ற பிறகு எங்களை கை தூக்கி ஆதரவளித்தவர் தயாரிப்பாளர் அனில்.

‘மங்காத்தா’வில் குறிப்பிடுவது போல் செந்தில் சார் இறுதியாக தான் வந்தார். வந்தவுடன் இப்படம் ஜனவரி 23 வெளியாகும் என்று சொன்னார். படம் வெளியானது. இப்படத்திற்கு வெற்றி விழா நடைபெறும் என்றார். அது தற்போது நடைபெறுகிறது.

கடைசியாக வந்த ஸ்டுடென்ட் போன்றவர் ராபின். அவுட் ஆஃப் சிலபஸில் இருந்து வந்து, அனைவரையும் வென்றுவிட்டார்.

விஜய் டிவி அமருக்கு நான் மிகப்பெரிய ரசிகன். படப்பிடிப்பு தளத்தில் அவர் பேசும் ஒவ்வொரு வசனங்களுக்கும் சிரித்துக் கொண்டே இருப்போம்.

இப்படி படக் குழுவினர் அனைவரும் மறக்க இயலாத அனுபவங்களை வழங்கியதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இந்த வெற்றி விழாவில் நடிகை சஞ்சனா திவாரி பேசுகையில், ” இந்த வெற்றி விழாவில் கலந்து கொண்டிருப்பதை மகிழ்ச்சியான தருணமாக கருதுகிறேன். ஹாட்ஸ்பாட் 2 மச் படத்தின் மீதும் அதில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் மீதும் ரசிகர்கள் அன்பு செலுத்துவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னுடைய கதாபாத்திரத்திற்கு எப்படி வரவேற்பு கிடைக்கும்? என்று பதட்டத்துடன் இருந்தேன். இதற்காக எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் ,தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடிகை பவானி ஸ்ரீ பேசுகையில், ” இந்தப் படத்திற்கு ஊடகங்களும், பத்திரிகைகளும் வழங்கிய பேராதரவு படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. இதற்குப் பின்னர் ரசிகர்களும் திரையரங்கத்திற்கு வருகை தந்து தங்களுடைய வாய் மொழியால் படத்தை பாராட்டி கொண்டாடினர். மூன்று கதைகளுக்கும் பெரும் ஆதரவும் , வரவேற்பும் கிடைத்தது. எல்லா தரப்பு ரசிகர்களும் இப்படத்துடன் தங்களை இணைத்துக் கொண்டனர். இது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்தப் படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து எங்களுக்கு சாதகமாக பல விசயங்கள் நடைபெற்றிருக்கிறது. தற்போது கூட திருச்சி- தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் சொல்லியிருக்கிறார். இதை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

நல்ல கன்டென்ட் இருந்தால் ரசிகர்கள் நிச்சயம் வரவேற்பு அளிப்பார்கள் என்பதற்கு இந்த படம் மீண்டும் ஒரு சாட்சியாகி, வெற்றி பெற்று இருக்கிறது இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

இது போன்றதொரு வாய்ப்பை வழங்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் , தயாரிப்பாளர்கள், இணைந்து பணியாற்றிய சக நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடிகை பிரிகிடா சகா பேசுகையில், ” இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகி இருக்கும் மிகப்பெரிய வெற்றி படம் இது. எங்கள் திரைப்படத்திற்கு எவ்வளவு பெரிய வரவேற்பும், வெற்றியும் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

இதன் மூலம் தற்போது லைக் மைண்டட் பீப்புள் நிறைய பேர் வருகிறார்கள் என தெரிகிறது. இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இதனால் இப்படத்தில் நானும் பங்களிப்பு செய்திருக்கிறேன் என்பதில் சந்தோஷம். இதற்காக இயக்குநருக்கு நன்றி. ஒரு வெற்றி பெற்ற படத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் இந்த மேடையில் வீற்றிருக்கும் அனைவருக்கும் உள்ள எண்ணமாக இருக்கும்.

இந்த படத்தில் என் கதாபாத்திரத்தை பற்றி இயக்குநர் சொன்னபோது மிகவும் வித்தியாசமானதாக இருக்கிறதே..! ஏற்று நடிக்கலாமா? என முதலில் தயங்கினேன். இந்தப் படத்தில் ஒரு வசனம் வரும். ‘நான் ஒரு லெஸ்பியன் என்று ‘.. இதனை பேசும்போது முதலில் ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் உணர்வு உணர்வு தான். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக இதைப்பற்றி யாரும் பேச மாட்டார்கள். சமூகத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு மதிப்பீடு இருக்கிறது. ஆனால் இது குறித்து என் கேரக்டர் பேசி இருக்கிறது என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

உடலுக்குள் நடைபெறும் மாற்றத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும்… என்பதெல்லாம் நல்ல விசயமாக இருந்தது. அதேபோல் தம்பி ராமையா பேசும் வசனங்களும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இருந்தது.

இதெல்லாம் சமூகத்தில் நடைபெறும் விசயங்கள் தான். ஆனால் இதனை யாரும் பேச மாட்டார்கள். இயக்குநர் விக்னேஷ் கார்த்தி இது தொடர்பாக பார்ட் 1 எடுத்து, பார்ட் டூவும் எடுத்திருக்கிறார். இவை வெற்றி பெற்றிருக்கிறது என்றால்… ரசிகர்களின் விசாலமான மனதும் ஒரு காரணம். இதனை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தப் படத்திற்குப் பிறகு.. நான் இனி நடிக்கப் போகும் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான நம்பிக்கையை எனக்குள் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் உருவாக்கியிருக்கிறார்.

உண்மையான லவ் கிடைக்காதா? என ஏங்கிக் கொண்டிருக்கும் 90ஸ் கிட்ஸ்களுக்கு இப்படத்தில் வரும் காதல் கதை மிகவும் பிடிக்கும். இதுவரை இந்தப் படத்தை பார்க்காதவர்கள் உடனடியாக திரையரங்கத்திற்கு சென்று படத்தைப் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகர் அஸ்வின் குமார் பேசுகையில், ” இறைவனுக்கு நன்றி. கடவுள் பல ரூபங்களில் வந்து என்னை பல தருணங்களில் காப்பாற்றி இருக்கிறார். நிறைய வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறார். நான் இந்த பிரபஞ்சத்தை முழுமையாக நம்புகிறேன். அவர்களில் ஒருவராக எனது நண்பராக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கை நான் பார்க்கிறேன்.

அவர் என்னை சந்தித்து இந்த படத்தில் இந்த கதையை நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் சொன்னார். அவரிடம் நான் ஏராளமான சந்தேகங்களை கேட்டுக் கொண்டே இருப்பேன். அவர் ஒவ்வொரு சந்தேகத்திற்கும் பொறுமையாக எனக்கு புரியும்படி விளக்கம் அளிப்பார். இந்தப் படத்தில் என்னுடைய அறிமுகக் காட்சியும் அவருடைய ஐடியா தான். நான் இயக்குநரை முழுமையாக நம்பி ஒப்படைத்து விட்டேன். இதற்காக அவருக்கு என்னுடைய முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மிகச்சிறந்த திறமைசாலி.

இந்தப் படத்தின் வெற்றி என்னுடைய ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது. இதற்காக நான் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படக் குழுவில் பணியாற்றிய அனைவரும் பாசிட்டிவ் எனர்ஜி கொண்டவர்கள். அவர்களால்தான் இந்த வெற்றி சாத்தியமாகி, இன்று நாங்கள் வெற்றி விழாவில் மகிழ்ச்சியுடன் ஒன்றிணைந்திருக்கிறோம். இதற்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்திற்காக தயாரிப்பாளர் பேசிய சம்பளத்தை முழுமையாக வழங்கி விட்டார். நடிகராக தயாரிப்பாளர் வழங்கும் ஊதியம் என்பது எங்களுக்கு முக்கியமானது. அதற்காக தயாரிப்பாளருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்

தயாரிப்பாளர் – நடிகர் கே.ஜே. பாலாமணி மார்பன் பேசுகையில், ” படம் வெளியாகி ஆறாவது நாளில் வெற்றி விழா கொண்டாடும் அளவிற்கு இப்படத்தை மக்கள் திரையரங்குகளில் பார்த்து கொண்டாடுகிறார்கள். வரவேற்றிருக்கிறார்கள். இதற்கு ஊடகங்களும், விமர்சனங்களும் எங்களுக்கு பேராதரவை அளித்ததுடன் ரசிகர்களை திரையரங்கிற்கு அழைத்து வந்தது. இதனால் படத்தை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் இப்படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்திருந்தாலும் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.‌ படம் வெளியான நான்கு நாட்களில் சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் 90 சதவீதத்திற்கும் மேலான பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு வருகை தந்திருந்தனர். தமிழகத்தின் தென்பகுதிகளில் 70 சதவீதத்திற்கும் மேலான பார்வையாளர்கள் திரையரங்குக்கு வருகை தந்திருந்தனர்.

அத்துடன் நாங்கள் இப்படத்திற்கான வரவேற்பு மெதுவாக நடைபெற்று அதன் பிறகு விரிவடையும் என எதிர்பார்த்தோம். ஆனால் படம் வெளியான இரண்டாவது நாளே அனைத்து திரையரங்குகளிலும் பார்வையாளர்கள் நிரம்பி வழிந்தனர்.

படம் வெளியான பிறகு நாங்கள் 15 திரையரங்குகளுக்கு ரசிகர்களின் வரவேற்பை காண சென்று இருந்தோம். அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் ரசனையும் , வரவேற்பும் ஒரே மாதிரியானதாக இருந்தது. இதன் மூலம் இப்படத்தை மக்கள் கொண்டாடுகிறார்கள் என்பதை நேரில் கண்டு மகிழ்ச்சி அடைந்தோம்.

இப்படத்தின் வெற்றிக்காக வழி விட்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அவர்களுக்கு இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கள் திரைப்படம் கிட்டத்தட்ட 200 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதனை சாத்தியப்படுத்திய விநியோகஸ்தர் ‘பைவ் ஸ்டார்’ செந்தில் மற்றும் அவரது குழுவினருக்கு எங்கள் நிறுவனத்தின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு அந்தப் படம் மட்டும் காரணம் அல்ல அந்தப் படம் வெளியாகும் சூழலும் ஒரு முக்கிய காரணம். இருப்பினும் இந்தப் படத்தின் வசூலைக் கடந்து படம் வெற்றி பெற்றதற்காக ரசிகர்களின் வரவேற்பினை பெற்றதற்காக குடும்பம் குடும்பமாக நண்பர்களுடன் அனைவரும் இணைந்து திரையரங்கத்திற்கு இந்தப் படத்தை பார்க்க வருகிறார்கள் என்றால்.. அதற்கு இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தன்னுடைய பங்களிப்பை 100 சதவீதம் வழங்கியிருக்கிறார் என்பதை நான் பெருமிதத்துடன் சொல்கிறேன். இதற்காக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தை இதுவரை பார்க்காதவர்கள் விரைவில் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து எங்களுக்கு தொடர் ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் ” என்றார்.

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசுகையில், ” ஹாட்ஸ்பாட் டூ மச் படம் வெளியாகி இன்றுடன் ஆறு நாள் ஆகிறது. அதற்குள் ஏன் சக்சஸ் மீட்? என கேட்டார்கள். ஹாட்ஸ்பாட் படத்தின் முதல் பாகம் குறைவான திரையரங்குகளில் வெளியாகி, ஐந்து வாரங்கள் வெற்றிகரமாக ஓடியது. பெரும் வரவேற்பும் இருந்தது. ஹாட்ஸ்பாட் படத்தின் முதல் பாகத்தின் ஒட்டுமொத்த வசூல் எவ்வளவோ.. அதைவிட இரண்டு மடங்கு இப்படம் வெளியான நான்கு நாளில் வசூலித்திருக்கிறது. அந்த வகையில் இந்தப் படம் எங்களுக்கு வெற்றி தான். அதனால் தான் இந்தப் படத்திற்கு ஆறாவது நாளில் நம்பிக்கையுடன் வெற்றி விழாவை ஒருங்கிணைத்திருக்கிறோம். இந்த வெற்றிக்கு காரணமான ரசிகர்கள்- ஊடகங்கள் – விநியோகஸ்தர்கள்- திரையரங்கு உரிமையாளர்கள் – உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படத்தில் என்னுடன் பணியாற்றிய படத்தொகுப்பாளர் – ஒளிப்பதிவாளர்கள்- கலை இயக்குநர் – இசையமைப்பாளர் – தயாரிப்பு நிர்வாகி – நடிகர்கள் ராபின், அஸ்வின் குமார், ஆதித்யா பாஸ்கர் ரக்சன், பிரியா பவானி சங்கர், ஆதித்யா கதிர், பவானி ஸ்ரீ, பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி மற்றும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய எல்லா திரைப்படங்களிலும் முதல் நன்றி ‘குறிஞ்சி’ என்பவருக்கு இருக்கும். இவர்தான் 2013 ஆம் ஆண்டில் எனக்கு இரண்டு லட்ச ரூபாயை கொடுத்து ‘முதல் கனவே’ எனும் என்னுடைய முதல் குறும்படத்தை தயாரித்தவர். அவர் கொடுத்த ஊக்கம் தான் இன்று ஹாட்ஸ்பாட் டூ மச் வரை தொடர்கிறது. அவருக்கு நன்றி தெரிவிப்பது என்னுடைய அனைத்து படங்களிலும் தொடரும்.

இப்படத்தின் விமர்சனங்களில் நாங்கள் இரண்டு குறிப்பிட்ட நட்சத்திரங்களின் ரசிகர்களைத்தான் சுட்டிக் காட்டி இருக்கிறோம் என்று இடம்பெற்று இருந்தது. இது தவறு. பொதுவாகவே ரசிகர்களைப் பற்றிய பார்வை தான் இது. அதனை இரண்டு நட்சத்திரங்களின் வழியாக சொன்னால் நன்றாக இருக்கும் .. எளிதாக புரியும் என்பதாகத்தான் விவரித்து இருக்கிறோம்.

டோனி ரசிகர்கள் கோலியை வசைபாடுவதும், கோலியின் ரசிகர்கள் தோனியை வசை பாடுவதும் இணையத்தில் தொடர்கிறது. ஒரு இசை அமைப்பாளரின் ரசிகர்கள் மற்றொரு இசையமைப்பாளரை விமர்சிக்கிறார்கள். இவை அனைத்தையும் ஒன்றிணைத்து தான் நாங்கள் ரசிகர்களின் கோணத்தில் அவர்களுடைய உணர்வாக பேசி இருக்கிறோமே தவிர.. குறிப்பிட்ட இரண்டு நட்சத்திரங்களின் ரசிகர்களை பற்றி நாங்கள் ஒருபோதும் எங்கும் குறிப்பிடவில்லை.

அதே சமயத்தில் தம்பி ராமையா பேசும் வசனங்கள் தொடர்பாகவும் இணையத்தில் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் விமர்சனங்கள் இடம் பிடித்திருக்கிறது. ஒரு படம் பிடித்திருக்கிறது என்பதும் ஒரு படம் பிடிக்கவில்லை என்பதும் படத்தை பார்த்த ஒவ்வொரு ரசிகர்களின் தனிப்பட்ட கருத்து. இதை நாங்கள் மதிக்கிறோம். வரவேற்கிறோம். ஆனால் பெண்ணியவாதிகள் சிலர் தங்களின் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் இவர்கள் இந்த திரைப்படத்தை முழுமையாக பார்க்காமல்.. இணையத்தில் வெளியான துண்டு காணொளிகளை மட்டும் பார்வையிட்டு சில சூடோ ஃபெமினிஸ்ட்டுகள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள். இது தவறு. அவர்கள் இந்தப் படத்தை முழுமையாக பார்த்துவிட்டு தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு படைப்பை பற்றிய விமர்சனங்களை முன் வைப்பதற்கு எப்படி பார்வையாளர்களுக்கு முழு உரிமை இருக்கிறதோ… அதே போல் ஒரு படைப்பை எப்படி வழங்கிட வேண்டும் என்பதில் படைப்பாளனாகிய எனக்கும் முழு உரிமை உள்ளது.

நான் என்னுடைய மனசாட்சிக்கு உட்பட்டு எனக்குத் தெரிந்த வகையில் நிறைய மக்களுடன் விவாதித்து அதனை எப்படி குழப்பம் இல்லாமல் தெளிவாக மக்களுக்கு வழங்கிட இயலும் என்பதையும் எப்படி சமூக பொறுப்புடன் இதனை சொல்ல வேண்டும் என்பதையும் மனதில் வைத்து தான் இந்த படைப்பை உருவாக்கி இருக்கிறேன். ஒரு படைப்பாளனாக ஒரு படைப்பை உருவாக்குவதற்கு எனக்கு முழு சுதந்திரமும், உரிமையும் உண்டு என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்” என்றார்.

ஹாட் ஸ்பாட் 2 மச் ‘ படத்தில் அஸ்வின் குமார், பிரியா பவானி சங்கர், எம். எஸ். பாஸ்கர்,‌ தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர் , ரக்சன், பவானி ஸ்ரீ , பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி, ‘ஆதித்யா’ கதிர், விஜய் டிவி அமர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவி – ஜோசப் பால் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்திருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாரான இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களுடைய பேரன்பினையும் பேராதரவையும் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள்.

லெட்சுமி ராமகிருஷ்ணனின் “உண்மைவெல்லும் சீசன் 2”

0

லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் “உண்மைவெல்லும்” நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் திங்கள் முதல்வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு கலைஞர்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

சமூகத்தின் அவலங்கள், எளிய மக்களின் குமுறல்கள், அவர்கள் அனுபவிக்கின்ற கொடுமைகள் எனஅனைவராலும் பேச முடியாத அல்லது பேச தயங்குகின்றபல்வேறு விஷயங்களை தெளிவான கண்ணோட்டத்துடன்அலசி அதன் உண்மைத் தன்மையை வெளிக் கொண்டுவரும் வகையில் இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.

DAC Developers Appoints A.R. Rahman as its Brand Ambassador

0
  • Launches Around 1,000 Homes across five Chennai locations in the Presence of the Global Music Icon

Chennai, 28 January, 2026

DAC Developers, a fast-growing construction company known for quality construction and customer-centric development, announced today (28 Jan.), legendary composer and global music icon A.R. Rahman as its brand ambassador. The announcement coincided with the launch of around 1,000 new homes, across five locations in the city, Kattupakkam in Porur, Sunguvarchatram on Chennai – Bangalore Highway, Kumananchavadi near Porur Ramachandra, Sholinganallur and Siruseri on OMR at a special event attended by Maestro himself.

The association marks a significant milestone as the company strengthens its positioning as a modern, trustworthy, and globally inspired brand, reaffirming its commitment to innovation, integrity, and world-class living standards.

Speaking about the partnership, S. Sathish Kumar, Managing Director, DAC Developers, said, “We are truly delighted and honoured to welcome A.R. Rahman as part of the DAC family, where we don’t just build structures, but create spaces that inspire life. Celebrated globally for his creativity, precision, and excellence, he embodies the values we stand for – innovation, integrity, and timeless appeal. His journey of global recognition rooted in Indian values closely aligns with our commitment to delivering world-class developments with enduring value.”

Expressing his thoughts on the association, A.R. Rahman said: “The home is where all our dreams are born and live. I’m very happy to begin a beautiful new partnership with DAC Developers, one of South India’s most-promising real estate brands. Like how we create music from the heart, in DAC, I have found a team that creates beautiful homes, with love. I trust DAC Developers to build homes that are filled with harmony and happiness”.

This collaboration will feature A.R. Rahman as the face of DAC Developers’ upcoming campaigns across digital, print, outdoor, and television platforms. The initiative is designed to reinforce the company’s reputation among aspiring homeowners and investors seeking reliability, design excellence, and future-ready living spaces, while also underscoring DAC Developers’ commitment to scaling new heights by partnering with revered personalities who inspire trust and global admiration.

About DAC Developers:
DAC Developers, established in 2014, is a Chennai-based leading construction company with over a decade of experience in creating quality homes that enhance lifestyles. Committed to providing essential luxuries at affordable prices, DAC Developers are known for their aesthetics, amenities, and accessibility to essential facilities, where each project is uniquely designed to meet homebuyers’ needs, offering convenience and comfort. With a focus on transparency, customer trust, and superior construction standards, the company has been redefining urban living experiences with over 110 plus projects, 45 lakhs plus square feet construction, 3000 and counting happy home owners till date.

‘ ராக் ஸ்டார் ‘அனிரூத் வெளியிட்ட ‘ராவடி’ படத்தின் டைட்டில் – ஃபர்ஸ்ட் லுக் & கேரக்டர் கிளிம்ப்ஸ்

0

நடிகர்கள் பஸில் ஜோசப் – L.K. அக்ஷய் குமார் ஆகிய இருவரின் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் நேரடியாக உருவாகி வரும் ‘ ராவடி ‘ எனும் திரைப்படம் மலையாளத்திலும் அதே பெயரில் தயாராகி வருவதுடன், இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ராவடி’ எனும் திரைப்படத்தில் L. K . அக்ஷய் குமார், ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA , ஷாரீக் ஹாஸன், நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இவர்களுடன் மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பஸில் ஜோசப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை P. S. ஹரிஹரன் கவனிக்கிறார். பிரியா ஆடை வடிவமைப்பாளராகவும், K. அருண் மற்றும் மணிகண்டன் ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். காமெடி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தில் L. K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராகியிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டைட்டில் – ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கேரக்டர் கிளிம்ப்ஸை இசையமைப்பாளர் ‘ராக் ஸ்டார்’ அனிருத் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதில் நடிகர்கள் பஸில் ஜோசப் – L.K. அக்ஷய் குமார்- ஜாபர் – நோபல்- அருணாசலம் – ஆகியோரின் தோற்றங்களும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால்.. ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருக்கிறது. மேலும் இப்படம்- எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.

Seven Screen Studio S.S. Lalit Kumar presents “Raawadi” starring Basil Joseph & L.K. Akshay Kumar Title, First Look and Character Glimpse unveiled!

Rockstar Anirudh Ravichander unveils the Title, First Look and Character Glimpse of Raawadi

“Raawadi” starring Basil Joseph and L.K. Akshay Kumar in the lead roles, produced by S.S. Lalit Kumar of Seven Screen Studio, is simultaneously made in Tamil and Malayalam with the same title. The production team has announced that the film’s shooting is briskly progressing as planned.

Raawadi, marking the directorial debut of Vignesh Vadivel, features a powerhouse ensemble star-cast including L. K. Akshay Kumar, John Vijay, Sathyan, Jaffer Sadiq, Noble K. James, Arunachaleswaran P.A., Shariq Hassan, and actress Aishwarya Sharma, among others. Adding further star value, leading Malayalam actor Basil Joseph plays a pivotal role in the film.

The cinematography is handled by Leon Britto, and music is composed by Jen Martin. Editing is being done by Barath Vikraman, and art direction is overseen by P. S. Hariharan. Priya serves as the costume designer, with K. Arun and Manikandan as executive producers. L. K. Vishnu Kumar is associated with the project as the co-producer. Raawadi is being made as a full-fledged comedy entertainer.

While the film’s shooting is progressing at a brisk pace, the title, first look and character glimpse have been launched by Rockstar Anirudh Ravichander on his social media page and conveyed his wishes to the entire team.

Showcasing the distinctive looks of Basil Joseph, L.K. Akshay Kumar, Jaffer Sadiq, Noble K. James, and Arunachaleswaran, have ignited massive excitement among fans. The film is gearing up for a summer release!

Link : https://youtu.be/XFkH5Z-ZtCk

“Ranabali” – Vijay Deverakonda and Rashmika Mandanna, directed by Rahul Sankrityan,Stunning Glimpse unveiled, Grand Release on Sept 11th

0

The makers have revealed an exciting glimpse from “VD 14”, which stars Vijay Deverakonda and Rashmika Mandanna in the lead roles and is being directed by Rahul Sankrityan under the prestigious banner of Mythri Movie Makers. Today, on the occasion of Republic Day, makers announced the film’s title along with the release date. Ranabali releasing worldwide on September 11th, 2026.

Before introducing the “Cursed Land” and its legendary hero, makers showcase the Britishers rule on India through intense visuals and a powerful narrative. Rahul Sankrityan’s narration sheds light on the suffering inflicted by the British, especially in regions deliberately turned into drought zones under officials like Sir Richard Temple.

The glimpse talks about a genocide worse than Hitler’s Holocaust and the massive economic exploitation of India, revelations that are bound to strike an emotional chord with audiences. Vijay Deverakonda essays the role of Ranabaali, delivering a fierce and commanding presence, in a new look with a stunning transformation.

Rashmika Mandanna plays as Jayamma. Arnold Vosloo, best known for The Mummy, plays the antagonist Sir Theodore Hector. One standout moment showing Vijay riding a horse while dragging a British officer along railway tracks has greatly amplified the film’s buzz.

“Ranabali” is being produced on a grand scale by Naveen Yerneni and Y. Ravi Shankar, with T-Series presenting the film. The movie is set against a British-era backdrop and will be made as a period action drama. Set in the 19th century, the film is based on real historical events that took place between 1854 and 1878, and is being mounted as a massive pan-India project.

Ranabali is inspired by real incidents from the 1850s that never found space in mainstream history books. Based on Real incidents in the time period of 1850-1900, incidents the British strategically misrepresented in History and characters they maligned as Savages and Rebels. This is not a biopic, and not a textbook retelling. Ranabali is a cinematic reconstruction of an era built from multiple real accounts, oral histories, and suppressed records.

After successful films like Dear Comrade and Kushi, this marks the third collaboration between Vijay Deverakonda and Mythri Movie Makers. Following the super hit Taxiwaala, Vijay Deverakonda and Rahul Sankrityan are once again teaming up for this film. After Geetha Govindam and Dear Comrade, “Ranabali” will be the third film in which Rashmika Mandanna and Vijay Deverakonda appear together as a pair.

Cast
Vijay Deverakonda, Rashmika Mandanna, Arnold Vosloo and others

MYTHRI MOVIE MAKERS PRODUCTION

Gulshan Kumar, Bhushan Kumar & T-Series Films
Present

A Rahul Sankrityan Film

Producers:
Naveen Yerneni & Ravi Shankar

Co-Producers:
Anurag Parvathaneni
Shiv Chanana

President (T-Series):
Neeraj Kalyan

CEO:
Cherry

Music:
Ajay–Atul

Director of Photography:
Nirav Shah

Writer:
Pramod Tammineni

Production Designer:
Shivam Rao Nagasani

Editor:
Karthika Srinivas R

Chief Executive Producer:
R. Chandrasekhar

Executive Producer:
Chembolu Sai Aditya

Choreography Director:
Kruti Mahesh

Costume Designer:
Archana Rao

Art Director:
Vithal Kosanam

VFX Supervisor:
Sunil Raju Chinta

Action Choreographers:
Yannick Ben
Andy Long Nguyen
Rabin Subbu

Sound Designer:
Raghunath Kemisetty

Publicity Designer:
Kabilan Chelliah

PROs:
Telugu – GSK Media
Hindi – Spice
Tamil – Suresh Chandra
Kannada – Harish Arasu
Malayalam – Athira

Marketing:
First Show

நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில், ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ரணபலி’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு! பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்தப் படம் செப்டம்பர் 11 அன்று வெளியாகிறது!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும், இதுநாள் வரை ‘VD 14’ என அறியப்பட்ட திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு ’ரணபலி’ என இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது.

சபிக்கப்பட்ட நிலத்தையும் அதன் கதாநாயகனையும் அறிமுகப்படுத்துவதற்கு முன், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் கொடுமைகளை தீவிரமான காட்சிகளுடனும் வலுவான கதை சொல்லலுடனும் படத்தின் கிளிம்ப்ஸில் காண முடிகிறது. குறிப்பாக, சர் ரிச்சர்ட் டெம்பிள் போன்ற அதிகாரிகளின் கீழ் திட்டமிட்டு வறட்சியாக மாற்றப்பட்ட பகுதிகளில் மக்களுக்குச் செய்யப்பட்ட கொடுமைகள் மனதை உருக்கும் வகையில் சொல்லப்பட்டுள்ளன.

ஹிட்லரின் இனப்படுகொலையை விட மோசமான கொலைகள், இந்தியாவின் பொருளாதார சுரண்டல் போன்ற வரலாற்று உண்மைகளை உணர்வுப்பூர்வமாகவும் வலுவாகவும் இந்த கிளிம்ப்ஸ் காட்டுகிறது. வலிமையான மற்றும் அதிரடியான புது தோற்றத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா ’ரணபலி’ கதாபாத்திரத்தில் ரசிகர்களை ஈர்க்க உள்ளார்.

ராஷ்மிகா மந்தனா ’ஜெயம்மா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘தி மம்மி’ படத்தின் மூலம் பிரபலமான அர்னால்ட் வோஸ்லூ, சர் தியோடோர் ஹெக்டர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். குறிப்பாக, நடிகர் விஜய் தேவரகொண்டா ரயில் பாதையில் ஒரு பிரிட்டிஷ் அதிகாரியை குதிரையில் இழுத்துச் செல்லும் காட்சி படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரிக்கும் ’ரணபலி’ திரைப்படத்தை டி-சீரிஸ் வழங்குகிறது. பிரிட்டிஷ் காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் பீரியட் ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகியுள்ளது. 19ஆம் நூற்றாண்டு பின்னணியில் உருவான இந்த கதை 1854 முதல் 1878 வரை நடந்த உண்மையான வரலாற்று சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, பிரம்மாண்டமான பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது.

‘ரணபலி’ திரைப்படம் 1850களில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த சம்பவங்களை நீங்கள் வரலாற்று புத்தகங்களில் காண முடியாது. 1850–1900 காலகட்டத்தில் நிகழ்ந்த பல உண்மைச் சம்பவங்கள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் திட்டமிட்டு வரலாற்றில் தவறாக சித்தரிக்கப்பட்டது. அந்த சம்பவங்கள் மற்றும் தவறாக பழிசுமத்தப்பட்ட மனிதர்கள் ஆகியவற்றை இந்தப் படம் பேசும். இது ஒரு வாழ்க்கை வரலாற்றுப் படம் அல்ல. பாடநூலில் இடம்பெற்ற வரலாற்றை மீண்டும் சொல்லும் முயற்சியும் அல்ல. பல உண்மைச் சான்றுகள், வாய்மொழி வரலாறுகள் மற்றும் காலப்போக்கில் ஒடுக்கப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு மறைக்கப்பட்ட காலத்தை சினிமா வடிவில் மீள் உருவாக்கம் செய்வது தான் ‘ரணபலி’.

‘டியர் காம்ரேட்’, ‘குஷி’ ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு விஜய் தேவரகொண்டா மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இது. ’டாக்ஸிவாலா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் தேவரகொண்டா மற்றும் இயக்குநர் ராகுல் சங்க்ரித்யன் இணையும் இரண்டாவது படம். மேலும், ‘கீத கோவிந்தம்’ மற்றும் ‘டியர் காம்ரேட்’ படங்களுக்குப் பிறகு விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் ஜோடி சேரும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள்: விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா, அர்னால்ட் வோஸ்லூ மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு விவரம்:
தயாரிப்பு நிறுவனம்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்,
வழங்குபவர்கள்: குல்ஷன் குமார், பூஷன் குமார் மற்றும் டி-சீரிஸ் ஃபிலிம்ஸ்,
இயக்கம்: ராகுல் சங்க்ரித்யன்,
தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி மற்றும் ரவி சங்கர்,
இணை தயாரிப்பாளர்கள்: அனுராக் பர்வதநேனி, ஷிவ் சனானா,
டி-சீரிஸ் தலைவர்: நீரஜ் கல்யாண்,
தலைமை செயல் அதிகாரி: செர்ரி,
இசை: அஜய்–அதுல்,
ஒளிப்பதிவு: நீரவ் ஷா,
எழுத்து: பிரமோத் தம்மினேனி,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: சிவம் ராவ் நாகசானி,
படத்தொகுப்பு: கார்த்திகா ஸ்ரீநிவாஸ் ஆர்,
தலைமை நிர்வாக தயாரிப்பாளர்: ஆர். சந்திரசேகர்,
நிர்வாக தயாரிப்பாளர்: கெம்போலு சாய் ஆதித்யா,
நடன அமைப்பு: க்ருதி மகேஷ்,
ஆடை வடிவமைப்பு: அர்ச்சனா ராவ்,
கலை இயக்கம்: விதல் கோசனம்,
விஎஃப்எக்ஸ் மேற்பார்வை: சுனில் ராஜு சிந்தா,
சண்டை அமைப்பு: யானிக் பென், ஆண்டி லாங் நுயென், ராபின் சுப்பு,
ஒலி வடிவமைப்பு: ரகுநாத் கெமிசெட்டி,
பப்ளிசிட்டி டிசைனர்: கபிலன் செல்லையா,
மக்கள் தொடர்பு: தெலுங்கு – ஜிஎஸ்கே மீடியா,
இந்தி – ஸ்பைஸ்,
தமிழ் – சுரேஷ் சந்திரா,
கன்னடம் – ஹரிஷ் அரசு,
மலையாளம் – ஆதிரா
மார்க்கெட்டிங்: ஃப்ர்ஸ்ட் ஷோ

VOWELS – An Atlas of Love Unveiled Today with Title Look*

0

A never-before five stories of deepest emotions of love all set to enthrall the cinephiles.

Love begins with sound. With breath. With a vowel.

VOWELS – An Atlas of Love charts love’s wild spectrum: from fantasy to crime, romance to desire, emotion to obsession. This vibrant screen journey explores different domains of love: tender yet dangerous, sacrificial yet murderous, enchanting in its duality.

The creators have unveiled the film’s title look today (January 26, 2026), inviting audiences to enter the terrains of diversified forms of love.

Vowels are the foundation of language: they carry tone, rhythm, and emotion, giving words their shape and life. VOWELS explores love through five distinct stories, each anchored in a vowel, each expressing a different emotional state:

A – Attraction: Love at first sight. Raw, youthful, impulsive.

E – Emotion: Deep bonding. Sacrifice, longing, separation.

I – Intimacy: Physical and emotional closeness. Desire, obsession, vulnerability.

O – Obsession: Dark love. Crime, possessiveness, thriller undertones.

U – Unconditional: Pure love beyond logic. Fantasy, spiritual, eternal devotion.

Structured as an Atlas rather than linear narrative, each story exists as its own emotional territory, complete and self-contained. Together, they form a shared map of love as lived language—intimacy, desire, loss, devotion, becoming. Not to be followed, but navigated. Spare in structure, rich in feeling. These stories are masterfully directed by Dhilip Kumar, Sangeethnath, Hemanth Kumar, Santhosh Ravi, and Jagan Rajendran.

Bringing this terrain alive is an ensemble star-cast including Yugi Sethu, Chinni Jayanth, Samyuktha Vishwanathan, Raj Ayyappa, Deepak Paramesh, Nandu (Telugu fame), Bharath Bopanna, Sharath Ravi, Vijayashree, Kajal Choudhary, Sidhu Kumaresan, Vijyetha Vashist, Peter K, Akshitha Bopaiah, Bharath Mylari, Hemanth Kumar, Dharshini, Priyanka Chandrashekar, and Arul Kumar.

Produced by Raju Sheregar, the film features Keerthan Poojaary and Sandeep Alluri capturing every nuance through cinematography, Saravana Subramaniam composing the emotional pulse, Harish Komme editing with precision, and M K Madhi crafting atmospheric worlds.

Five vowels. Five stories. One terrain.

தயாரிப்பாளர் ராஜு ஷெரேகர் வழங்கும் ‘VOWELS – An Atlas of Love’ திரைப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் டைட்டில் இன்று வெளியிடப்பட்டது!

இதுவரை நாம் உணர்ந்திடாத ஆழமான, ஐந்து காதல் கதைகள் ரசிகர்களை மெய்மறக்க செய்ய வருகிறது. உயிரில் இருந்தும், உணர்வில் இருந்தும், சுவாசத்தில் இருந்தும் பிறப்பதுதான் காதல்! அதுதான் ’Vowels’.

‘VOWELS – An Atlas of Love’ திரைப்படம் காதலின் பல பரிமாணங்களை பேசும் தனித்துவமான திரைப்படமாக உருவாகியுள்ளது. கற்பனையிலிருந்து குற்றம் வரை, காதலில் இருந்து ஆசை வரை, உணர்வுகளில் இருந்து அதற்கு அடிபணிவது வரை என இனிமை-ஆபத்து, தியாகம்-கொடூரம், மாயை-இருள் ஆகிய காதலின் இருபக்கங்களை இந்த திரைப்படம் பேசும்.

திரைப்படத்தின் டைட்டில் லுக் இன்று (ஜனவரி 26, 2026) வெளியிடப்பட்டுள்ளது. ஒலி, ஓசை, உணர்வு ஆகியவற்றின் மூலம் வார்த்தைகளுக்கு உயிரூட்டும் உயிரெழுத்துகளே மொழியின் அடிநாதம். அதுபோல், ’VOWELS’ திரைப்படம் ஐந்து தனித்துவமான கதைகள் மூலம் காதலை வெளிப்படுத்தும். ஒவ்வொரு கதையும் ஒரு உயிரெழுத்தை மையமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட உணர்வை பிரதிபலிக்கும்.

A – Attraction (ஈர்ப்பு): முதல் பார்வையிலேயே காதல்- உண்மை, இளமை, கட்டுப்பாடற்ற உணர்வு.
E – Emotion (உணர்ச்சி): ஆழமான பிணைப்பு- தியாகம், ஏக்கம், பிரிவு.
I – Intimacy (நெருக்கம்): உடல் மற்றும் மன நெருக்கம்- ஆசை, பற்றுதல், பலவீனம்.
O – Obsession (பிடிவாதம்): இருண்ட காதல்- குற்றம், தனக்கு மட்டுமே என்ற உணர்வு, த்ரில்லர்.
U – Unconditional (நிபந்தனையற்ற காதல்): கட்டுபாடுகளற்ற தூய காதல்- கற்பனை, ஆன்மீகம், அர்ப்பணிப்பு.

ஒரு வரைபடம் போல இந்தத் திரைப்படத்தின் ஒவ்வொரு கதையும் தனித்துவமான உணர்வுகளை பேசும். நெருக்கம், ஆசை, இழப்பு, அர்ப்பணிப்பு, மாற்றம் என அனைத்து உணர்வுகளும் இணைந்து காதலை அழகான மொழியாக சித்தரிக்கிறது. இந்த ஐந்து கதைகளையும் திலிப் குமார், சங்கீத்நாத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

நடிகர்கள்: யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஷ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ், நந்து (தெலுங்கு புகழ்), பரத் போபண்ணா, ஷரத் ரவி, விஜயஸ்ரீ, காஜல் சௌத்ரி, சித்து குமரேசன், விஜ்யேதா வசிஸ்ட், பீட்டர் கே, அக்ஷிதா போபையா, பரத் மைலாரி, ஹேமந்த் குமார், தர்ஷினி, பிரியங்கா சந்திரசேகர் மற்றும் அருள் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழு:
தயாரிப்பாளர்: ராஜு ஷெரேகர்,
ஒளிப்பதிவு: கீர்த்தன் பூஜாரி மற்றும் சந்தீப் அல்லூரி,
இசை: சரவண சுப்பிரமணியம்,
படத்தொகுப்பு: ஹரிஷ் கொம்மே,
கலை இயக்கம்: எம். கே. மதி.

ஐந்து உயிரெழுத்துகள்! ஐந்து கதைகள்!! ஒரே காதல் உலகம்!!!

“Draupathi 2 resurrects Tamil Nadu’s forgotten legacy” – Director Mohan G

0

Director Mohan G, the visionary architect behind the groundbreaking Draupathi, returns with his ambitious historical epic Draupathi 2. Renowned for his fearless storytelling and meticulous attention to historical detail, Mohan G has once again assembled Tamil cinema’s finest talents to resurrect the glory of the 14th-century Hoysala dynasty. With the film hitting screens tomorrow (January 15) during the joyous Pongal festivities, the director shares the extraordinary journey of creating this masterpiece, which he believes will serve as an eye-opening revelation for audiences, a cinematic chronicle that illuminates Tamil Nadu’s rich yet forgotten legacy.

Mohan G reflects saying, “Draupathi 2 resurrects the 14th-century Hoysala dynasty with unflinching historical accuracy. Richard Rishi as King Veera Simha Kadavarayan embodies imperial authority. A Ghibran’s score thunders with royal majesty, Philip K Sundar’s frames capture dynastic grandeur. Rakshana Induchoodan brings fierce elegance, Natty Natraj delivers raw intensity. Draupathi 2 chronicles Tamil valor through the rise and fall of an empire, from Netaji Productions, this is Tamil cinema’s boldest historical epic.”

Draupathi 2, directed by Mohan G and produced by Sola Shakkaravarthi under Netaji Productions, features Richard Rishi alongside Rakshana Induchoodan, Natty Natraj, Vela Ramamoorthy, and a stellar ensemble. With A Ghibran’s evocative musical score, Philip K Sundar’s breathtaking cinematography, and the technical mastery of S Kamal (art), Action Sandhosh, and editor Devaraj, the film promises an electrifying cinematic experience.

“திரௌபதி 2 தமிழ்நாட்டின் மறக்கப்பட்ட பாரம்பரியத்தை மீண்டும் உயிர்ப்பிக்கிறது” – இயக்குநர் மோகன் ஜி!

‘திரௌபதி’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மோகன் ஜி, தற்போது மிகப் பெரும் வரலாற்றுக் காவியமான ‘திரௌபதி 2’ உடன் மீண்டும் திரையரங்குகளுக்கு வருகிறார். துணிச்சலான கதை சொல்லல் மற்றும் வரலாற்று நுணுக்கங்களில் மிகுந்த கவனம் செலுத்தும் இயக்குநராக அறியப்படும் மோகன் ஜி, 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹோய்சால பேரரச வம்சத்தின் மகத்துவத்தை மீண்டும் உயிர்ப்பிக்க தமிழ் சினிமாவின் சிறந்த கலைஞர்களை ஒருங்கிணைத்துள்ளார். ஜனவரி 23 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாகவும், தமிழ்நாட்டின் செழுமையான ஆனால் மறைக்கப்பட்ட பாரம்பரியத்தை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு வரலாற்று சினிமா ஆவணமாகவும் இருக்கும் என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

படம் குறித்து மேலும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, “’திரௌபதி 2’ திரைப்படம் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹோய்சால பேரரச வம்சத்தின் வரலாற்றை எந்த சமரசமும் இல்லாமல், துல்லியமான வரலாற்று உண்மைகளுடன் மீண்டும் உயிர்ப்பிக்கிறது. மன்னர் வீர சிம்ம கடவராயனாக ரிச்சர்ட் ரிஷி திரையில் பேரரசருக்கே உரிய கம்பீரமும் அதிகாரமும் நிறைந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசை பேரரசர்களின் ஆன்மாவை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஒளிப்பதிவாளர் பிலிப் கே. சுந்தரின் ஒளிப்பதிவு அரச கம்பீரத்தை அழகாகப் பதிவு செய்கிறது. ஆக்‌ஷன் சந்தோஷ் அமைத்த போர் காட்சிகள் வரலாற்று காவியங்களுக்கு இணையானவை. ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ் தீவிரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு பேரரசின் எழுச்சி- வீழ்ச்சி மூலம் தமிழ் வீரத்தின் வரலாற்றை பதிவு செய்யும் தமிழ் சினிமாவின் மிகத் துணிச்சலான வரலாற்று திரைப்படத்தை நேதாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது” என்றார்.

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், நேதாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சோலா சக்கரவர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷியுடன் ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழு:

இசை: ஜிப்ரான்,
ஒளிப்பதிவு: பிலிப் கே. சுந்தர்,
கலை இயக்குநர்: எஸ். கமல்,
சண்டைப் பயிற்சி: ஆக்‌ஷன் சந்தோஷ்,
படத்தொகுப்பு: எடிட்டர் தேவராஜ்

“ஆகாசம்லோ ஒக்க தாரா” (Aakasamlo Oka Tara) படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!

0

துல்கர் சல்மான் நடித்துவரும் “ஆகாசம்லோ ஒக்க தாரா” திரைப்பட உலகிலிருந்து நடிகை ஸ்ருதி ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளார்.

Geetha Arts & Swapna Cinema வழங்க, சந்தீப் குன்னம் ( Sandeep Gunnam) , ரம்யா குன்னம் (Ramya Gunnam) தயாரிப்பில் உருவாகும் இந்த படம், 2026 கோடைக்காலத்தில் பான்-இந்தியா அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது

தொடர்ச்சியான பிளாக்பஸ்டர் வெற்றிகளாலும், பான்-இந்தியா அளவிலான புகழாலும் உச்சத்தில் இருக்கும் நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான், அடுத்ததாக “ஆகாசம்லோ ஒக்க தாரா” படத்தில் நடித்து வருகிறார் . புதுமையான கதை சொல்லல் மற்றும் தனித்துவமான காட்சி அமைப்புகளுடன், பல வெற்றிப்படங்களைத் தந்து, புகழ் பெற்ற பவன் சடினேனி ( Pavan Sadineni ) இப்படத்தை இயக்குகிறார் . புகழ்பெற்ற Geetha Arts மற்றும் Swapna Cinema வழங்கும் இந்த திரைப்படத்தை, சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் தயாரிக்கின்றனர். புதுமுக நடிகை சாத்விகா வீரவள்ளி துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதற்கு முன்பு வெளியான புரமோக்கள், ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், படக்குழு ரசிகர்களுக்கு ஒரு இனிய ஆச்சரியத்தை வழங்கியுள்ளது. சமீப காலமாக தேர்ந்தெடுத்த படைப்புகளில் மட்டுமே நடிக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் கண்ணாடியுடன், கீழ்நோக்கி பதிந்த தீவிரமான பார்வையுடன், இயல்பான தோற்றத்தில் இருக்கிறார் —அது அவரின் கதாபாத்திரத்தின் தீவிரத்தைக் காட்டுகிறது. அவரது உதட்டில் இருக்கும் சிகரெட்டும், மேலெழும் புகையும், அந்த கதாபாத்திரத்தில் உள்ள உணர்ச்சி ஆழத்தையும் சொல்லப்படாத கதைகளையும் சுட்டிக்காட்டுகிறது.

இந்த திரைப்படத்தின் கதையோட்டத்தில் ஸ்ருதி ஹாசனின் கதாபாத்திரம் ,கதையின் திருப்புமுனையாக முக்கிய பங்கு வகிக்கவுள்ளது. அவர் இப்படத்தில் இணைந்துள்ளது, கதையை ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லும். அவரது தோற்றமே, இந்த டிராமாவுக்கு புதிய பரிமாணத்தையும் கனத்தையும் சேர்க்கும் சக்தியாக அவரை நிலைநிறுத்துகிறது.

இந்த திரைப்படத்தின் இசையமைப்பை ஜி.வி. பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார். ஒளிப்பதிவை சுஜித் சாரங், தயாரிப்பு வடிவமைப்பை ஸ்வேதா சாபு சிரில் கவனிக்கின்றனர்.

தற்போது தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் இந்தப் படம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி மற்றும் மலையாள மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாக தயாராகி வருகிறது.

நடிகர்கள்: துல்கர் சல்மான், சாத்விகா வீரவள்ளி, ஸ்ருதி ஹாசன் மற்றும் பலர்

தொழில்நுட்ப குழு:
இயக்கம்: பவன் சடினேனி
கதை: கங்கராஜு குன்னம்
தயாரிப்பாளர்கள்: சந்தீப் குன்னம், ரம்யா குன்னம்
வழங்குபவர்கள்: Geetha Arts, Swapna Cinema
இசை: GV பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: சுஜித் சாரங் (Sujith Sarang)
தயாரிப்பு வடிவமைப்பு: ஸ்வேதா சாபு சிரில்

Introducing Shruti Haasan from the world of Dulquer Salmaan’s Aakasamlo Oka Tara; Presented By Geetha Arts & Swapna Cinema, Produced By Sandeep Gunnam, Ramya Gunnam, Pan-India theatrical release in summer 2026

The versatile star Dulquer Salmaan, who is currently riding high on consecutive blockbusters and Pan-India stardom, is now gearing up with another promising drama, Aakasamlo Oka Tara. The film is directed by Pavan Sadineni, known for his inventive storytelling and distinct visual style. Presented by the prestigious Geetha Arts and Swapna Cinema, the project is produced by Sandeep Gunnam and Ramya Gunnam. Newcomer Satvika Veeravalli plays the female lead opposite Dulquer. The previously released promos have already heightened anticipation for this engaging drama.

Meanwhile, the makers have sprung a pleasant surprise. Shruti Haasan, who has become highly selective of late, has come on board for a crucial role. Extending birthday wishes, the makers have unveiled her first look. She sports an intense, unvarnished look, with glasses framing a steady, downward gaze that reflects quiet intensity. The cigarette at her lips and the drifting smoke add a gritty layer to her character, hinting at emotional depth and unspoken stories.

Shruti Haasan’s character is going to play a decisive role in the film’s narrative arc, with her entry steering the story into a new phase. Her mere appearance positions her as a force who brings sharp dimension and weight to the drama.

The film promises strong technical quality, with GV Prakash Kumar scoring the music, Sujith Sarang handling cinematography and Shwetha Sabu Cyril overseeing production design.

Currently in its final phase of production, Aakasamlo Oka Tara is slated for a Pan-India release in Telugu, Tamil, Hindi, and Malayalam in summer 2026.

Cast: Dulquer Salmaan, Satvika Veeravalli, Shruti Haasan and others

Technical Team:
Director: Pavan Sadineni
Writer: Gangaraju Gunnam
Producers: Sandeep Gunnam, Ramya Gunnam
Presented by – Geetha Arts, Swapna Cinema
Music: GV Prakash
DOP: Sujith Sarang
Production Designer: Shwetha Sabu Cyril

Director A.R. Murugadoss Launches Aparshakti Khurana’s Powerful Look from“ROOT – Running Out of Time”

0

The makers of ROOT – Running Out of Time unveiled a striking new look of Aparshakti Khurana, officially launched by acclaimed filmmaker A.R. Murugadoss on January 26 through his social media platform.

Marking his Tamil cinema debut, Aparshakti Khurana essays a pivotal character steeped in mystery, menace, and raw instinct. The newly released visual offers a compelling glimpse into a persona that doesn’t merely appear on screen, but makes an intimidating arrival—setting the tone for the film’s darker narrative layers.

He was not just a man — he was a myth that refused to die.
Born from shadows and driven by instinct, his silence spoke louder than words.
Mystery followed him, fear preceded him, and chaos bent to his will.
You didn’t understand him — you felt him.
This character wasn’t introduced… he arrived.
The hunt began.

The look received an encouraging response across social media, with audiences and cinema enthusiasts praising the intensity and striking transformation showcased in the reveal.

Aparshakti Khurana is well known for his impactful supporting performances in acclaimed films such as Dangal, Stree, Pati Patni Aur Woh, and Stree 2, and for his widely appreciated starring role in the drama series Jubilee. His entry into Tamil cinema with ROOT – Running Out of Time has significantly heightened curiosity and expectations surrounding his character.

Earlier, the first look of the film featuring Gautham Ram Karthik in the lead was launched by Superstar Rajinikanth on January 1, garnering widespread attention and creating strong buzz around the project.

Written and directed by Sooriyaprathap S, ROOT – Running Out of Time is a sci-fi crime thriller produced by Shaik Mujeeb, RajaRajan Gnanasambandam, Sanjai Shankar, and Dhanishtan Fernando under the Verus Productions banner. The film promises a gripping blend of edge-of-the-seat thrills and emotionally charged storytelling.

The cast includes Gautham Ram Karthik, Aparshakti Khurana, Narain, Bhavya Trikha, Y. Gee. Mahendra, Pavni Reddy, Linga, RJ Anandhi, and others in key roles.

Shot extensively across Chennai and multiple locations, the film has completed its shoot and is currently in the post-production phase.

Technical Crew:

Cinematography – Arjun Raja

Editing – John Abraham

Music – Aran Ray

CEO – Dr. D. Alice Angel

Action Choreography – Miracle Michael

Production Designer – Jagan Nandhagopal

VFX – Santhakumar (Hocus Pocus Studios)

Costume Design – Deepthi RJ

Production Controller – Dhanalingam

DI – Prasad Studios

Colorist – Ranga

Sound Designer – Anand Ramachandran

Publicity Designer – Dinesh Ashok

Public Relations – Rekha

Digital Promotions – Digitally Powerful

The launch by A.R. Murugadoss marks yet another significant milestone for ROOT – Running Out of Time, further elevating expectations and anticipation surrounding the film.

“ROOT – Running Out of Time” திரைப்படத்தில் அபர்ஷக்தி குரானாவின் அட்டகாசமான லுக்கை இயக்குநர் A.R. முருகதாஸ் வெளியிட்டார்

“ROOT – Running Out of Time” படக்குழு, நடிகர் அபர்ஷக்தி குரானாவின் கண்கவர் புதிய தோற்றத்தை வெளியிட்டுள்ளது. இந்த லுக்கை புகழ்பெற்ற இயக்குநர் A.R. முருகதாஸ், ஜனவரி 26 அன்று தனது சமூக ஊடக தளத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாகும் அபர்ஷக்தி குரானா, மர்மம், அச்சுறுத்தல் மற்றும் இயல்பான உள்ளுணர்வு ஆகியவற்றால் நிரம்பிய முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வெளியிடப்பட்டுள்ள இந்தப் புதிய காட்சி, திரையில் தோன்றுவதைக் காட்டிலும், பயமுறுத்தும் தன்மையை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தை மட்டுமே வெளிப்படுத்துகிறது; இதன் மூலம் படத்தின் இருண்ட கதை அடுக்குகளுக்கான சாயலை இது உருவாக்குகிறது.

அவன் வெறும் மனிதன் அல்ல — மரணத்தை மறுக்கும் ஒரு புராணம்.
நிழல்களில் பிறந்து, உள்ளுணர்வால் இயக்கப்பட்டவன்.
அவனது மௌனம், சொற்களைவிட அதிகமாகப் பேசுகிறது.
மர்மம் அவனைத் தொடர்ந்து வந்தது;
அச்சம் அவனை முன்கூட்டியே அறிவித்தது;
குழப்பம் அவனது கட்டுப்பாட்டில் வளைந்தது.
அவனை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை — உணர்ந்தீர்கள்.
இந்தக் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்படவில்லை… அதுவாக வந்தது.
வேட்டை தொடங்கியது.

இந்த லுக் சமூக ஊடகங்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ரசிகர்களும் சினிமா ஆர்வலர்களும், இதில் வெளிப்பட்ட தீவிரமும் மாற்றமும் குறிப்பிடத்தக்கதாக இருப்பதாக பாராட்டினர்.

தங்கல், ஸ்த்ரீ, பதி பத்னி அவுர் வோ, ஸ்த்ரீ 2 போன்ற பாராட்டப்பட்ட திரைப்படங்களில் தனது அழுத்தமான துணை வேடங்களாலும், ஜூபிலி என்ற Web தொடரில் முதன்மை நடிப்பாலும் பரவலாக அறியப்படும் அபர்ஷக்தி குரானா, ROOT – Running Out of Time மூலம் அவர் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைப்பது, அவரது கதாபாத்திரம் குறித்த ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் பெரிதும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு, படத்தின் முதல் லுக்—நாயகனாக கௌதம் ராம் கார்த்திக் இடம்பெற்ற தோற்றம்—ஜனவரி 1 அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களால் வெளியிடப்பட்டு, பெரும் கவனத்தையும் வலுவான வரவேற்பையும்யு பெற்றது.

சூரியபிரதாப் S எழுதி இயக்கியுள்ள ROOT – Running Out of Time ஒரு அறிவியல்-கிரைம் திரில்லர் திரைப்படமாகும். வெரஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் ஷேக் முஜீப், ராஜராஜன் ஞானசம்பந்தம், சஞ்சய் ஷங்கர் மற்றும் தனிஷ்டன் பெர்னாண்டோ ஆகியோர் தயாரித்துள்ளனர். பரபரப்பான திரில்லும், உணர்ச்சி மிகுந்த கதை சொல்லலும் இணைந்த ஒரு பிடிப்பான அனுபவத்தை காண்பதற்கு படம் உறுதி அளிக்கிறது.

மேலும் இந்தப் படத்தில் கௌதம் ராம் கார்த்திக், அபர்ஷக்தி குரானா, நரேன், பவ்யா திரிகா, Y.G. மகேந்திரா, பாவ்னி ரெட்டி, லிங்கா, RJ ஆனந்தி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் விரிவாக படமாக்கப்பட்ட இந்தத் திரைப்படம், தற்போது முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்து, போஸ்ட்-புரொடக்ஷன் பணிகளில் உள்ளது.

தொழில்நுட்ப குழு:

ஒளிப்பதிவு – அர்ஜுன் ராஜா

தொகுப்பு – ஜான் அபிரகாம்

இசை – அரன் ரே

CEO – டாக்டர் டி. அலிஸ் ஏஞ்சல்

சண்டை வடிவமைப்பு – மிராக்கிள் மைக்கேல்

கலை இயக்கம் – ஜகன் நந்தகோபால்

VFX – சாந்தகுமார் (ஹோகஸ் போகஸ் ஸ்டூடியோஸ்)

உடை வடிவமைப்பு – தீப்தி RJ

பிரொடக்ஷன் கண்ட்ரோலர் – தனலிங்கம்

DI – பிரசாத் ஸ்டூடியோஸ்

நிறமமைப்பு – ரங்கா

ஒலி வடிவமைப்பு – ஆனந்த் ராமச்சந்திரன்

Publicity வடிவமைப்பு – தினேஷ் அசோக்

மக்கள் தொடர்பு – ரேகா

டிஜிட்டல் விளம்பரம் – Digitally Powerful

A.R. முருகதாஸ் அவர்களால் நிகழ்த்தப்பட்ட இந்த வெளியீடு, ROOT – Running Out of Time படத்திற்கு மேலும் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்து, படத்திற்கான எதிர்பார்ப்பையும் ஆவலையும் அதிகரித்துள்ளது.

இயக்குநர் – நடிகர் லோகேஷ் கனகராஜ் பத்திரிக்கையாளர் சந்திப்பு

0

அல்லு அர்ஜுன் படத்தின் பணிகளை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக கைதி 2 படத்தின் பணிகளை தொடங்க உள்ளேன்’ என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் – தன்னுடைய எதிர்கால திட்டங்கள் குறித்தும், தற்போது பணியாற்றி வரும் பணிகள் குறித்தும், தன் மீது சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையிலும் சென்னையில் பத்திரிக்கையாளர் – ஊடகவியலாளர்களை சந்தித்தார்.

அதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், ” ஒவ்வொரு திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு ஊடகங்களை ஏதேனும் ஒரு வகையில் சந்திப்பது என்னுடைய வழக்கம். ‘கூலி’ படத்திற்குப் பிறகு… ஊடகங்களை சந்தித்து பேச வேண்டும் என நினைத்து, தற்போது தான் உங்களை சந்திக்கிறேன்.

சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி வெளியாகும் செய்திகளுக்கு என்னுடைய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்பதற்காகவும் உங்களை சந்திக்கிறேன்.

‘கூலி’ திரைப்படம் 35 நாட்கள் திரையரங்குகளில் ஓடி உள்ளது. இதற்காக முதலில் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வசூல் பற்றி நான் பேச விரும்பவில்லை. இது லாபகரமான படம் என்று தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் எங்களிடம் தெரிவித்து விட்டது. ஆயிரம் விமர்சனங்களை கடந்து அந்த திரைப்படம் 35 நாட்கள் ஓடியதற்கும்… வசூலித்ததற்கும்… ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.‌

சமூக வலைதளங்களில் வெளியான இப்படத்தை பற்றிய விமர்சனம் என்னை யோசிக்க வைத்தது. என்னிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்… இப்படி கதை சொல்வதை தான் விரும்புகிறார்கள்… என பல விசயங்களை நானும் அதிலிருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். இதனை என்னுடைய அடுத்தடுத்த படங்களில் இடம்பெறச் செய்து, எதிர்மறை விமர்சனங்கள் அல்லாத படைப்புகளை அளிப்பதற்கு முயற்சி செய்வேன்.

‘கூலி’ திரைப்படம் வெளியாகும் நேரத்தில் ரஜினிகாந்த் சாரையும், கமல்ஹாசன் சாரையும் சந்தித்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறோம்’ என்றார்கள். அது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு. கிட்டத்தட்ட 46 வருடங்கள் கழித்து இருவரும் ஒன்றிணைந்து நடிக்கிறார்கள் என்றால்… அது மிகப்பெரிய வாய்ப்பு. அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தை என்னை இயக்கச் சொன்னதே.. எனக்கு பெரிய விசயமாக இருந்தது.

அந்த சூழலில் ‘கைதி 2’ என்பதுதான் என்னுடைய திட்டமாக இருந்தது. அதன் பிறகு இதன் தயாரிப்பு நிறுவனத்திடம் இதைப்பற்றி எடுத்துச் சொல்லி.. இது போன்ற வாய்ப்பு மீண்டும் கிடைக்காது என்பதையும் சொல்லி… அந்த படத்தை நிறைவு செய்துவிட்டு வருகிறேன் என்று கேட்டுக் கொண்டேன். அதன் பிறகு ஒன்றரை மாதங்கள் இருவருக்காகவும் சின்சியராக கதை எழுதினேன்.‌ இருவரையும் வைத்து ஒரு படத்தை உருவாக்க நினைத்தேன். அதன் பிறகு அவர்கள் இருவரையும் தனித்தனியாக நேரில் சந்தித்து கதையையும் விவரித்தேன். கதையைக் கேட்டு இருவரும் வியப்படைந்தார்கள். ஆனால் இருவரும் தொடர்ந்து ஆக்சன் படங்களில் தான் நடித்துக் கொண்டே இருந்தனர். தற்போது நடித்து வரும் ‘ஜெயிலர் 2 ‘ மற்றும் அன்பறீவ் இயக்கத்தில் உருவாகும் கமல்ஹாசனின் படம் வரை ஹெவியான ஆக்சன் படங்கள்தான். அதனால் இருவரும் ஆக்ஷன் இல்லாமல் மென்மையான திரைக்கதையாக இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினர்.‌ இதை அவர்கள் இருவரும் என்னிடமும் தெரிவித்தனர். அத்தகைய ஸ்டைலில் எனக்கு படத்தை இயக்கத் தெரியாது. இதை அவர்களிடம் தெரிவித்துவிட்டு விலகி விட்டேன்.‌

நான் எப்போது திரும்பி வருவேன் என்று தெரியாததால், ‘கைதி 2’ படத்திற்கான கால்ஷீட்டை நடிகர் கார்த்தி மற்றொரு இயக்குநருக்கு வழங்கி விட்டார்.‌ இதுதான் நடந்தது.

இதற்கிடையில் கிடைத்த நேரத்தில்… ஆறு ஆண்டுகளுக்கு முன் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்குவதற்கு முன் பணம் வாங்கியிருந்தேன். அந்த கமிட்மெண்ட்டை கிளியர் செய்து விடலாம் என்று இருந்தபோது… எனக்கு மூன்று ஆண்டுகளாக அல்லு அர்ஜுனுடன் தொடர்பு இருந்தது. நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றவும் பேச்சு வார்த்தை நடத்தி இருந்தோம். எல்லாம் கூடி வந்ததால்… மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்காக அல்லு அர்ஜுன் நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறேன்.

இதற்கு இடையில் ஊதியத்தை அதிகமாக கேட்டதால் தான் ‘கைதி 2’ படத்தின் பணிகள் நடைபெறவில்லை என செய்தி வெளியானது. இது முற்றிலும் தவறு. ஒரு இயக்குநருக்கான சம்பளம் என்பது தயாரிப்பாளரும், சந்தையும் தான் தீர்மானிக்கிறது. நான் எவ்வளவு கேட்டாலும் மார்க்கெட்டில் எனக்கு என்ன மதிப்போ.. அதற்கு ஏற்ற வகையில் தான் எனக்கு சம்பளம் தருவார்கள்.

கடந்த வாரம் ‘கைதி 2 ‘படத்தின் தயாரிப்பாளரையும், மற்றவர்களையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி விட்டேன். என்னுடைய அடுத்த திரைப்படம் ‘கைதி 2’ வாகத்தான் இருக்கும்.

இதற்கிடையில் LCU நிறைவு பெற்றது என செய்திகள் வெளியானது. LCU என நான் பெயர் வைக்கவில்லை. ரசிகர்கள் தான் ஏற்படுத்தினர். நான் அதை பின்தொடர்கிறேன். இதை நான் மட்டும் முடிவு செய்து, இனி LCU வில் படம் வராது என்று சொல்ல முடியாது. ‘கைதி 2’, ‘விக்ரம் 2’, ‘ரோலக்ஸ்’ இதெல்லாம் என்னுடைய கமிட்மெண்ட். இது எல்லாம் உருவாக்காமல் என்னால் போக முடியாது. அதனால் LCU தொடர்கிறது. அல்லு அர்ஜுன் படம் வெளியான பிறகு இவை மீண்டும் திறக்கப்படும். எங்களுடைய தயாரிப்பில் உருவாகும் ‘பென்ஸ்’ எனும் படமும் LCU வை சார்ந்தது தான்.

நானும், அமீர் கானும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவதாக இருந்தது. அந்த பேச்சுவார்த்தை தற்போதும் தொடர்கிறது. அவருக்கும் நிறைய திட்டமிட்ட பணிகள் இருக்கிறது. அதனால் இருவரும் நாளடைவில் இணைந்து பணியாற்றுவோம்.‌” என்றார்.

அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் பத்திரிக்கையாளர்களும், ஊடகவியலாளர்களும் கேட்ட அனைத்து கேள்விக்கும் பதிலளித்தார்.

- Advertisement -

Recent Posts