Tuesday, June 23, 2026
- Advertisement -
Home Blog Page 52

ஜி.வி. பிரகாஷ் குரலில் சிவனின் மகிமை போற்றும் – திருவாசகத்தின் முதல் பாடல் வெளியானது !!

0

தமிழ் ஆன்மிக இலக்கிய உலகின் உச்ச சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படும் திருவாசகம், இப்போது சமகால இசை வடிவில் புதிய உயிர் பெற்றுள்ளது. இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஜி.வி. பிரகாஷ் குமார் குரலும் இசையும் இணைந்து உருவான திருவாசகத்தின் முதல் பாடல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி, ஆன்மிக இசை ரசிகர்களிடையே ஆழ்ந்த மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பாடலின் ஒரு பகுதியை, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஜி.வி. பிரகாஷ் இசை நிகழ்ச்சியாக வழங்கியபோது, அந்த மேடை முழுவதும் ஒரு தெய்வீக அமைதி சூழ்ந்ததாக பேசப்பட்டது. அந்த ஒரே நிகழ்விலேயே, திருவாசக இசை முயற்சியின் ஆழமும் ஆன்மிக வலிமையும் வெளிப்பட்டது.

ஜி.வி. பிரகாஷின் YouTube சேனலில் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ள இந்த முதல் பாடல், சிவனின் மகிமையை போற்றும் சொற்களாலும், திருவாசகத்தின் ஆத்மார்த்தமான பக்தி உணர்வாலும் நிரம்பியுள்ளது. ஆதியும் அந்தமும் இல்லாத சிவன், கருணை வடிவமாகவும், ருத்ர ரூபமாகவும், யோகி வடிவமாகவும் தோன்றும் பல்வேறு நிலைகளை இசை வழியாகக் காட்சிப்படுத்துகிறது. அந்த வரிகளில் ஒலிக்கும் சிவபக்தி, ஜி.வி. பிரகாஷின் குரலால் இன்னும் ஆழமாக மனதிற்குள் இறங்குகிறது. அவரது குரலில் இருக்கும் வலிமை, பக்தி, பணிவு – அனைத்தும் சேர்ந்து, திருவாசகத்தின் தத்துவத்தை இசையின் உன்னத அனுபவமாக மாற்றுகிறது.

திரைப்பட இசை உலகில் தனித்த அடையாளம் பதித்த ஜி.வி. பிரகாஷ், பாரம்பரியமும் நவீனமும் இணையும் இசை பற்றிய தேடல் கொண்டவர். அந்த தேடலின் ஒரு முக்கியமான கட்டமாகவே இந்த திருவாசக இசை முயற்சி பார்க்கப்படுகிறது. பாரம்பரிய ஆன்மிக இலக்கியத்தை இன்றைய தலைமுறைக்கு எளிதாகக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன், இசை வடிவமைப்பில் நவீன ஒலியமைப்பையும், பாரம்பரிய பக்தி சுவையையும் நுட்பமாக இணைத்துள்ளார்.

திருவாசகத்தை முழுமையான இசை ஆல்பமாக உருவாக்குவது ஜி.வி. பிரகாஷின் நீண்ட நாள் கனவு. அதன் முதல் படியாக வெளியாகியுள்ள இந்தப் பாடல், அந்த கனவு சரியான பாதையில் தொடங்கியிருப்பதை உறுதிப்படுத்துகிறது. சிவனின் பல வடிவங்களையும், மனித மனத்தின் தவிப்பையும், இறைவனிடம் நம்மை சரணடைய வைக்கும் இசை அனுபவமாக மாற்றியுள்ள இந்த முயற்சி, தமிழ் ஆன்மிக இசையில் ஒரு முக்கியமான அடையாளமாக நிலைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஜி.வி. பிரகாஷ் குரலில், சிவனின் மகிமையை ஒலிக்கும் இந்த திருவாசகத்தின் முதல் பாடல், கேட்பவரை ஒரு தெய்வீக பயணத்துக்கே அழைத்துச் செல்கிறது.

பாடலின் லிங்க் – https://youtu.be/VopbJrlnmJc

A Historic Moment for Indian Cinema; Mammootty – Mohanlal – Mahesh Narayanan Film “Patriot” to Hit Theatres on April 23

0

The release date poster of “Patriot”, a film poised to create new history in Malayalam cinema, has been unveiled. The poster announcing the release date of this mega venture was released on social media by more than forty prominent stars. Directed by Mahesh Narayanan and featuring the legendary actors Mammootty and Mohanlal in the lead roles, this multi-starrer film will have a worldwide theatrical release on April 23, 2026.

The Telugu, Tamil, and Hindi posters of the film were unveiled by Vijay Deverakonda, Atlee, and Karan Johar respectively. In Malayalam, the release date poster was shared by nearly forty actors including Dulquer Salman, Prithviraj Sukumaran, Tovino Thomas, Asif Ali, Unni Mukundan, Basil Joseph, Jayasurya, Sunny Wayne, Naslen, Nazriya Nazim, Keerthy Suresh, Kalyani Priyadarshan, and many others.

Recently, character posters featuring Mammootty and Mohanlal—who play the central roles—along with Nayanthara, Fahadh Faasil, Kunchacko Boban, and Rajeev Menon were also released. These posters carried the striking tagline:

The film is produced by Anto Joseph Film Company and Kichappu Films, jointly by Anto Joseph and K. G. Anilkumar. Co-production is handled by C. R. Salim and Subhash George Manuel under the banners C. R. Salim Productions and Blue Tigers London. Executive producers are C. V. Sarathi and Rajesh Krishna.

Reuniting Mammootty and Mohanlal after 17 years, Patriot is being made on the biggest budget ever for a Malayalam film. The movie was completed earlier this year after more than a year of filming across over ten schedules in multiple countries. After Twenty:20, this is another film that brings together almost all major stars of Malayalam cinema.

Apart from Mammootty, Mohanlal, Nayanthara, Fahadh Faasil, Kunchacko Boban, and Rajeev Menon, the ensemble cast also includes Revathi, Jinu Joseph, Danish Husain, Shaheen Siddique, Sanal Aman, Darshana Rajendran, Serene Shihab, and noted theatre artist and filmmaker Prakash Belawadi (known for Madras Cafe and Pathaan).

Following Take Off and Malik, director Mahesh Narayanan presents Patriot as an international-scale spy thriller with expansive canvas and cutting-edge technical excellence. The film currently holds the distinction of being the Malayalam movie shot in the highest number of countries. Locations include India, Sri Lanka, the UK, Azerbaijan, and the UAE. Filming began in Sri Lanka in November 2024, with Indian schedules shot across major cities like Delhi, Mumbai, Hyderabad, and Kochi.

The title teaser of Patriot, released earlier, garnered massive audience attention and hinted that powerful action sequences featuring Mammootty and Mohanlal would be major highlights. The teaser also showcased the two legends in all their grandeur, promising a film with unprecedented technical finesse for Malayalam cinema. The screenplay has been written by director Mahesh Narayanan himself.

Music for the film is composed by trendsetting Malayalam music director *
Sushin Shyam, while cinematography is handled by Manush Nandan, known for his work on major Bollywood projects. Editing is done by Mahesh Narayanan along with Rahul Radhakrishnan. Truth Global Films serves as the overseas partner.

Technical Crew:

  • Cinematography: Manush Nandan
  • Music: Sushin Shyam
  • Editing: Mahesh Narayanan, Rahul Radhakrishnan
  • Production Designers: Shaji Naduvil, Jibin Jacob
  • Audiography: Vishnu Govind
  • Production Controller: Dixon Poduthas
  • Line Producers: Sunil Singh, Niroop Pinto, Justin Boban, Jeswin Boban
  • Sync Sound: Vaishakh P. V.
  • Makeup: Ranjith Ambadi
  • Lyrics: Anwar Ali
  • Action: Dileep Subbarayan, Stunt Silva, Mafia Sasi, Riyaz Habeeb
  • Costume Design: Dhanya Balakrishnan
  • Choreography: Shobi Paulraj
  • Chief Associate Director: Linu Antony
  • Associate Director: Phantom Praveen
  • Stills: Naveen Murali
  • VFX: Firefly, Egg White, Ident VFX Lab
  • DI Colorist: Aashirvaad Hadkar
  • Publicity Design: Aesthetic Kunjamma
  • Digital PR: Vishnu Sugathan
  • PRO: Yuvraaj

The film will be distributed by Ann Mega Media.

இந்திய சினிமாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் !!  மம்மூட்டி – மோகன்லால் – மகேஷ் நாராயணன் இணையும் “பேட்ரியாட்” ( “Patriot” )  திரைப்படம்

ஏப்ரல் 23, 2026 அன்று திரையரங்குளில் வெளியாகிறது !!

இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை உருவாக்கத் தயாராக இருக்கும் “பேட்ரியாட்” -படத்தின் அதிகாரப்பூர்வ  வெளியீட்டு தேதி அட்டகாசமன போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டமான படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கும் போஸ்டரை, 40-க்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். மகேஷ் நாராயணன் இயக்கத்தில், மம்மூட்டி மற்றும் மோகன்லால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த மல்டி-ஸ்டாரர் திரைப்படம், 2026 ஏப்ரல் 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இத்திரைப்படத்தின் தமிழ் போஸ்டரை அட்லீயும், தெலுங்கு போஸ்டரை விஜய் தேவரகொண்டாவும் , ஹிந்தி போஸ்டரை கரண் ஜோர்ரும் வெளியிட்டனர். மலையாளத்தில், துல்கர் சல்மான், பிரித்விராஜ் சுகுமாரன், டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, உன்னி முகுந்தன், பாசில் ஜோசப், ஜெயசூர்யா, சன்னி வேய்ன், நஸ்லென், நஸ்ரியா நசீம், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட முன்னணி நடிகர்கள் வெளியீட்டு தேதி போஸ்டரை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில், இப்படத்திலிருந்து முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருடன் நயன்தாரா, ஃபஹத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன் மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோரின் கதாபாத்திர போஸ்டர்களும் வெளியிடப்பட்டன. 

இந்த திரைப்படத்தை Anto Joseph Film Company மற்றும் Kichappu Films சார்பில், அன்டோ ஜோசப் மற்றும் K. G. அனில்குமார் தயாரித்துள்ளனர். இணைத் தயாரிப்பாளர்களாக C. R. Salim Productions மற்றும் Blue Tigers London நிறுவனங்களின் கீழ் C. R. சலீம் மற்றும் சுபாஷ் ஜார்ஜ் மானுவல் செயல்பட்டுள்ளனர். நிர்வாகத் தயாரிப்பாளர்கள்: C. V. சாரதி மற்றும் ராஜேஷ் கிருஷ்ணா.

17 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி மற்றும் மோகன்லால் மீண்டும் இணையும் இந்த படம், மலையாள சினிமாவின் இதுவரை இல்லாத மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. ஒரு வருடத்துக்கும் மேலாக, 10-க்கும் மேற்பட்ட கட்டங்களாக பல நாடுகளில் நடைபெற்ற படப்பிடிப்புக்குப் பிறகு, இந்த ஆண்டு தொடக்கத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. Twenty:20 திரைப்படத்திற்குப் பிறகு, மலையாள சினிமாவின் பெரும்பாலான முன்னணி நட்சத்திரங்களை ஒன்றிணைக்கும் மற்றொரு படமாக  இப்படம் அமைந்துள்ளது.

மம்மூட்டி, மோகன்லால், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன், ராஜீவ் மேனன் ஆகியோருடன், ரேவதி, ஜினு ஜோசப், டானிஷ் ஹுசைன், ஷஹீன் சித்திக், சனல் அமன், தர்ஷனா ராஜேந்திரன், செரீன் ஷிஹாப் மற்றும் Madras Cafe, Pathaan ஆகிய படங்களின் மூலம் பிரபலமான நாடகக் கலைஞரும் இயக்குநருமான பிரகாஷ் பெலவாடியும் நடிகர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Take Off மற்றும் Malik படங்களுக்குப் பிறகு, இயக்குநர் மகேஷ் நாராயணன் “பேட்ரியாட்” திரைப்படத்தை சர்வதேச அளவிலான ஸ்பை திரில்லர் (Spy Thriller) படமாக, விரிந்த களத்துடன் மற்றும் நவீன தொழில்நுட்ப தரத்துடன் உருவாக்கியுள்ளார். அதிகமான நாடுகளில் படமாக்கப்பட்ட மலையாள திரைப்படம் என்ற பெருமையையும் இந்த படம் பெற்றுள்ளது. இந்தியா, இலங்கை,The  UK, அசர்பைஜான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)  ஆகிய நாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்றுள்ளது. 2024 நவம்பரில் இலங்கையில் தொடங்கிய படப்பிடிப்பு, இந்தியாவில் டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொச்சி போன்ற முக்கிய நகரங்களில் நடைபெற்றது.

முன்னதாக வெளியான “பேட்ரியாட்” திரைப்படத்தின் டைட்டில் டீசர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மம்மூட்டி மற்றும் மோகன்லால் நடித்துள்ள சக்திவாய்ந்த அதிரடி காட்சிகள் படத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என்பதை டீசர் சுட்டிக்காட்டியது. இரு ஆளுமைகளையும் முழு கம்பீரத்துடன் காட்டிய அந்த டீசர், மலையாள சினிமாவிற்கு இதுவரை இல்லாத தொழில்நுட்ப சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்தி இப்படம் சிறப்பான அனுபவமாக இருக்குமென உறுதி அளித்தது. இந்த திரைப்படத்தின் திரைக்கதையையும் இயக்குநர் மகேஷ் நாராயணன் தானே எழுதியுள்ளார்.

திரைப்படத்தின் இசையமைப்பை, முன்னணி மலையாள இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் செய்துள்ளார். ஒளிப்பதிவை, முக்கிய பாலிவுட் படங்களில் பணியாற்றிய மனுஷ் நந்தன் மேற்கொண்டுள்ளார். எடிட்டிங் பணியை மகேஷ் நாராயணன் மற்றும் ராகுல் ராதாகிருஷ்ணன் செய்துள்ளனர். வெளிநாடுகளில் படத்தை விநியோகிக்கும் பொறுப்பை Truth Global Films மேற்கொள்கிறது.

தொழில்நுட்ப குழு:

ஒளிப்பதிவு: மனுஷ் நந்தன்

இசை: சுஷின் ஷியாம்

எடிட்டிங்: மகேஷ் நாராயணன், ராகுல் ராதாகிருஷ்ணன்

கலை இயக்கம்: ஷாஜி நடுவில், ஜிபின் ஜேக்கப்

ஒலி: விஷ்ணு கோவிந்த்

தயாரிப்பு கட்டுப்பாடு: டிக்சன் போடுதாஸ்

லைன் புரொட்யூசர்கள்: சுனில் சிங், நிரூப் பின்டோ, ஜஸ்டின் போபன், ஜெஸ்வின் போபன்

சிங் சவுண்ட்: வைஷாக் P. V.

மேக்கப்: ரஞ்சித் அம்பாடி

பாடல் வரிகள்: அன்வர் அலி

ஆக்ஷன்: திலீப் சுப்பராயன், ஸ்டண்ட் சில்வா, மாஃபியா சசி, ரியாஸ் ஹபீப்

உடை வடிவமைப்பு: தன்யா பாலகிருஷ்ணன்

நடன அமைப்பு: ஷோபி பவுல்ராஜ்

முதன்மை துணை இயக்குநர்: லினு ஆண்டனி

துணை இயக்குநர்: பேண்டம் பிரவீண்

ஸ்டில்ஸ்: நவீன் முரளி

VFX: Firefly, Egg White, Ident VFX Lab

DI கலரிஸ்ட்: ஆஷிர்வாத் ஹட்கர்

விளம்பர வடிவமைப்பு: Aesthetic குஞ்சம்மா

டிஜிட்டல் PR: விஷ்ணு சுகதன்

மக்கள் தொடர்பு : யுவராஜ்

இந்த திரைப்படத்தை Ann Mega Media நிறுவனம் விநியோகிக்கிறது

‘ ராக் ஸ்டார் ‘அனிரூத் வெளியிட்ட ‘ராவடி’ படத்தின் டைட்டில் – ஃபர்ஸ்ட் லுக் & கேரக்டர் கிளிம்ப்ஸ்

0

நடிகர்கள் பஸில் ஜோசப் – L.K. அக்ஷய் குமார் ஆகிய இருவரின் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் நேரடியாக உருவாகி வரும் ‘ ராவடி ‘ எனும் திரைப்படம் மலையாளத்திலும் அதே பெயரில் தயாராகி வருவதுடன், இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ராவடி’ எனும் திரைப்படத்தில் L. K . அக்ஷய் குமார், ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA , ஷாரீக் ஹாஸன், நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இவர்களுடன் மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பஸில் ஜோசப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை P. S. ஹரிஹரன் கவனிக்கிறார். பிரியா ஆடை வடிவமைப்பாளராகவும், K. அருண் மற்றும் மணிகண்டன் ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். காமெடி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தில் L. K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராகியிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டைட்டில் – ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கேரக்டர் கிளிம்ப்ஸை இசையமைப்பாளர் ‘ராக் ஸ்டார்’ அனிருத் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதில் நடிகர்கள் பஸில் ஜோசப் – L.K. அக்ஷய் குமார்- ஜாபர் – நோபல்- அருணாசலம் – ஆகியோரின் தோற்றங்களும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால்.. ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருக்கிறது. மேலும் இப்படம்- எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.

Link : https://youtu.be/XFkH5Z-ZtCk

Seven Screen Studio S.S. Lalit Kumar presents “Raawadi” starring Basil Joseph & L.K. Akshay Kumar Title, First Look and Character Glimpse unveiled!

Rockstar Anirudh Ravichander unveils the Title, First Look and Character Glimpse of Raawadi

“Raawadi” starring Basil Joseph and L.K. Akshay Kumar in the lead roles, produced by S.S. Lalit Kumar of Seven Screen Studio, is simultaneously made in Tamil and Malayalam with the same title. The production team has announced that the film’s shooting is briskly progressing as planned.

Raawadi, marking the directorial debut of Vignesh Vadivel, features a powerhouse ensemble star-cast including L. K. Akshay Kumar, John Vijay, Sathyan, Jaffer Sadiq, Noble K. James, Arunachaleswaran P.A., Shariq Hassan, and actress Aishwarya Sharma, among others. Adding further star value, leading Malayalam actor Basil Joseph plays a pivotal role in the film.

The cinematography is handled by Leon Britto, and music is composed by Jen Martin. Editing is being done by Barath Vikraman, and art direction is overseen by P. S. Hariharan. Priya serves as the costume designer, with K. Arun and Manikandan as executive producers. L. K. Vishnu Kumar is associated with the project as the co-producer. Raawadi is being made as a full-fledged comedy entertainer.

While the film’s shooting is progressing at a brisk pace, the title, first look and character glimpse have been launched by Rockstar Anirudh Ravichander on his social media page and conveyed his wishes to the entire team.

Showcasing the distinctive looks of Basil Joseph, L.K. Akshay Kumar, Jaffer Sadiq, Noble K. James, and Arunachaleswaran, have ignited massive excitement among fans. The film is gearing up for a summer release!

Link : https://youtu.be/XFkH5Z-ZtCk

West Bengal to Confer Governor’s Award of Excellence on legendary Telugu Actor Shri Mohan Babu

0

Kolkata / Hyderabad, January 2026:
In a moment of historic significance for Telugu cinema and the Telugu-speaking community worldwide, Mohan Babu, one of Indian cinema’s most respected and accomplished actors, will be conferred with the Governor’s Award of Excellence by the Government of West Bengal.

The honour will be presented at a ceremonial function at Lok Bhavan, Kolkata, on Republic Day, January 26, 2026, in the august presence of the Hon’ble Governor of West Bengal and distinguished guests, followed by the traditional At Home reception .

This recognition marks a historic first—the first time the state of West Bengal has conferred an Award of Excellence on a Telugu actor, underscoring the growing national recognition of Telugu cinema’s cultural and artistic contribution to Indian cinema.

The award also coincides with a remarkable milestone in Shri Mohan Babu’s life and career: 50 years of unparalleled contribution to cinema. From his humble beginnings to becoming one of the most influential figures in Indian film history, his journey stands as a testament to discipline, perseverance, and artistic integrity.

Over five decades, Shri Mohan Babu has enriched Indian cinema through a vast and diverse body of work—across genres, languages, and platforms—earning acclaim as an actor, producer, educationist, and cultural ambassador. Beyond the screen, his contributions to education and social upliftment have left a lasting impact, shaping generations beyond cinema.

This honour is not merely a personal accolade but a moment of pride for Telugu people everywhere, reaffirming the stature of Telugu cinema on the national stage and celebrating its deep-rooted cultural legacy within the Indian cinematic landscape.

The conferment by West Bengal—a state with a profound artistic and cinematic heritage of its own—symbolizes the spirit of unity in diversity that defines Indian culture and cinema.

As India celebrates its Republic Day, this recognition stands as a powerful reminder that excellence in art transcends language, geography, and region—belonging to the nation as a whole.

ஆரி அர்ஜுனன் நடிக்கும் “ஃபோர்த் ஃப்ளோர்” திரைப்படம் அடுத்த மாதம் திரைக்குவருகிறது !!

0

MANO CREATION சார்பில் தயாரிப்பாளர் A.ராஜா தயாரிப்பில், இயக்குநர் L R சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள “ஃபோர்த் ஃப்ளோர்” திரைப்படம், வரும் பிப்ரவரி மாதம் இறுதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சென்னையின் மையப்பகுதி ஒன்றில், ஒரு குடியிருப்பில் நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், ஆச்சரியப்பட வைக்கும் திருப்பங்களுடன், இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவத்தை தரும் வகையில், இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் L R சுந்தரபாண்டி. சைக்காலஜிகள் திரில்லராக உருவாகியுள்ள இந்த திரைப்படம், கனவுகளுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பினை எதார்த்தமாக சொல்லுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் நாயகனாக நடிகர் ஆரி அர்ஜுனன் நடிக்கிறார், தீப்ஷிகா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பவித்ரா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

“போடா போடி” படப்புகழ் இசையமைப்பாளர் தரண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார், “போடா போடி” வெண்ணிலா கபடி குழு” படங்களின் ஒளிப்பதிவாளர் J லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அநீதி, ஜெயில் மற்றும் மத்தகம் வெப் சீரிஸிற்கு கலை இயக்கம் செய்த சுரேஷ் கல்லேரி கலை இயக்கம் செய்கிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து, விரைவில் இசை மற்றும் டிரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறன்றனர். செவன்த் ஸ்டுடியோ சார்பாக K.கண்ணன் இப்படத்தை தமிழ்நாடு தியேட்டர் வெளியீடு செய்கிறார். இப்படம் வரும் பிப்ரவரி மாத இறுதியில் திரைக்கு வருகிறது.

தொழில் நுட்ப குழு விபரம்
இயக்குநர்: L R சுந்தரபாண்டி
தயாரிப்பாளர்: A.ராஜா
நிர்வாக தயாரிப்பாளர்: சூரிய பிரகாஷ் P
ஒளிப்பதிவு : J லக்ஷ்மன்
இசையமைப்பாளர்: தரண் குமார்
பாடலாசிரியர் : கு கார்த்திக்
எடிட்டர்: ராம் சுதர்ஷன்
கலை: சுரேஷ் கல்லேரி
நடனம் : அபு சால்ஸ்
ஸ்டண்ட்: டேஞ்சர் மணி
மக்கள் தொடர்பு : A ராஜா

Aari Arjunan starrer 4th Floor Set for February Release”

Aari Arjunan’s 4th Floor, right from its time of announcement has been creating huge waves of expectations.

Produced by A. Raja under Mano Creation, and directed by L.R. Sundarapandi, the thrilling film “4th Floor” features Aari Arjunan in the lead role. This unique thriller, set in an extraordinary milieu, is slated for release in late February across cinemas. The story unfolds amid electrifying events in a residential building in central Chennai.

Director L.R. Sundarapandi has crafted a screenplay brimming with anticipation, astonishing twists, and an unprecedented thriller experience. As a psychological thriller, the film authentically explores the intricate connection between dreams and reality.

The shooting has been completed in Chennai and its surrounding areas.Aari Arjunan plays the protagonist, with Deepshika as the female lead. They are joined by Pavithra, director Subramania Siva, Thalivasal Vijay, and Adithya Kathir in key roles.

Music composer Dharan of Poda Podi fame scores the soundtrack, while cinematography is handled by J. Lakshman, who cranked camera for movies like Poda Podi, Vennila Kabadi Kuzhu.

Art direction is by Suresh Kalleri, known for Aneedhi, Jail, and Mathagam web series.

Post-production is progressing rapidly, and the team is planning to release the music and trailer shortly.

4th Floor arrives in theatres by the end of February.

Technical Crew

Director: L.R. Sundarapandi
Producer: A. Raja
Executive Producer: Surya Prakash P
Cinematography: J. Lakshman
Music Composer: Dharan Kumar
Lyricist: Ku. Karthik
Editor: Ram Sudarshan
Art: Suresh Kalleri
Choreography: Abu Salz
Stunts: Danger Mani
PRO: A. Raja

‘ஜனநாயகன்’ பிரச்சினையில் உண்மை வெளியே தெரிய வேண்டும்:இயக்குநர் பேரரசு பேச்சு!

0

சத்தியத்தின் சக்தியை மையமாக வைத்து ‘ப்ராமிஸ்’என்றொரு படம் உருவாகி இருக்கிறது.
இப்படத்தில்
கதாநாயகனாக நடித்து அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார் .நாயகியாக நதியா நடித்துள்ளார்.
சங்கமித்ரன் ப்ரொடக்ஷன்,அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. N.நாகராஜ் தயாரித்துள்ளார்.

இந்த ‘ப்ராமிஸ்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன்,தயாரிப்பாளர் சங்க (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம்,நடிகர் காதல் சுகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

விழாவுக்குப் படக் குழுவினர் அனைவரும் தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்திருந்தார்கள்.

அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள தயாரிப்பாளர் N.நாகராஜன் அனைவரையும் வரவேற்றார். அவர் பேசும்போது,

“இந்த இயக்குநரை 2023இல் வேலூரில் சந்தித்தேன். அவர் ஒரு கதையைச் சொன்னார். நீங்கள் தான் தயாரிப்பாளர் என்றார். எனக்கு உடனே ஒன்றும் சொல்ல முடியவில்லை. யோசித்துச் சொல்கிறேன் என்றேன். ஆறு மாதம் போனது. இதை என் மனைவியிடம் கூறிய போது செய்யலாம் என்றார். 2024ஆகஸ்ட் 15 இல் படம் பூஜை போடப்பட்டது. அப்படியே படக்குழு உருவாகி இந்தப் படத்தை முடித்து விட்டோம். இயக்குநர் நல்ல திறமைசாலி, உழைப்பாளி . அவரைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது.தலைப்பு ஆங்கிலத்தில் இருந்தாலும் படத்தில் வசனங்கள், பாடல்கள் எல்லாம் முடிந்தவரை தமிழில் இருக்க வேண்டும் நினைத்தோம். வேறு வழியில்லாமல்தான் தலைப்பை ’ப்ராமிஸ்’ என ஆங்கிலத்தில் வைத்தோம். இப்போது படம் முடிந்து வெளியிடுவதற்குத் தயாராக இருக்கிறது. மக்களை நோக்கித் தேர்வு எழுதுவது போல் ஒரு மன நிலையில் இருக்கிறோம். இந்தப் படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். முடிவு மக்கள் கையில் இருக்கிறது. இந்தப் படத்திற்காக அனைவரும் நன்றாக உழைத்தார்கள், ஒத்துழைப்பு கொடுத்தார்கள் .அதை மறக்க முடியாது .தங்கள் சொந்தப் படம் போல் நினைத்து வேலை பார்த்தார்கள். அனைவருக்கும் நன்றி” என்றார்.

பாடலாசிரியர் பாலா பேசும்போது,

“இப்போது வருகிற படங்களில் நல்ல பாட்டு இல்லை என்கிற குறை , வருத்தம் இருக்கிறது. உண்மை என்னவென்றால் அதற்கான நல்ல பாடலாசிரியர்களும் இசை அமைப்பாளர்களும் இருக்கிறார்கள். ஆனால் அதற்கான களங்கள் குறைந்து வருகின்றன. நல்ல வாய்ப்பு கொடுத்தால் நல்ல பாடல்கள் வரும். திரைப்படங்களில் பாடல்களை ஸ்பீட் பிரேக்கர் என்று சொல்கிற போக்கு இருக்கிறது.பாடல்கள் ஸ்பீடு பிரேக்கர் அல்ல, அவை படங்களுக்கு மைலேஜ் என்றுதான் சொல்ல வேண்டும்.

‘குணா’ படத்தின் பாடல் காலம் கடந்தும் ரசிக்கப்படுகிறது.அது ஓர் அடையாளமாக இருக்கிறது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தில் இடம்பெற்ற பாடல் ஓர் அடையாளமாக மாறி இருக்கிறது.இப்படிப் பாடல் ஒரு படத்தைக் கொண்டு செல்வதற்கு உதவியாக இருக்கும்.இந்தப் படத்தில் பாடல் எழுதியது நல்ல அனுபவம்” என்றார்.

எடிட்டர் ஸ்ரீராம் விக்னேஷ் பேசும் போது,

” இந்தப் படத்தின் ட்ரெய்லரில் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்தது போல் ஒரு விஷயத்தை மறைத்து இருக்கிறோம். படத்தில் உள்ளதெல்லாம் ட்ரெய்லரில் வரவில்லை.படம் பார்க்கும்போது அது தெரியும்” என்றார்.

இயக்குநர் அருண்குமார் சேகரன் பேசும்போது,

“எங்களுக்கு எந்தப் பின்புலமும் இல்லை,இந்தப் படத்தில் பெரிய நட்சத்திரங்களோ பிரமாதமான பட்ஜெட்டோ கிடையாது .எங்களைத் தூக்கி விடுவதற்கு ஆட்கள் இல்லை. அப்படி இருக்கும்போது இங்கே பேரரசு, கே ராஜன் போன்றவர்கள் தான் ஆதரவாக இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு மக்களுக்குச் சினிமா மிகவும் பிடிக்கும்.நன்றாக இருந்தால் சினிமாவைக் கொண்டாடுவார்கள். நன்றாக இல்லை என்றால் விமர்சனமும் பலமாக செய்வார்கள். நான் ஊடகத்தில் 2015 – லிருந்து 21 வரை வேலை பார்த்தேன். பிறகு ஒரு பைலட் பிலிம் எடுத்தேன். நண்பர்கள் ஆதரவாக இருந்தனர். ‘வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்’ என்ற அந்த ஒரு மணி நேரப் படத்தை எடுத்து எங்கள் பகுதியில் எல்இடியில் திரையிட்டேன் .அதிலிருந்து நகர்ந்து இந்தப் படத்தின் தயாரிப்பாளரைச் சந்தித்து இந்த நிலைக்கு வந்து நிற்கிறேன்.
வாய்ப்பு கேட்டு எங்கே போனாலும் அனுபவம் வேண்டும், அனுபவம் வேண்டும் என்று கேட்டார்கள்.அந்த நிலையில் இவர் என்னை நம்பினார்.அதுமட்டுமல்ல இந்தப்படம் உருவாகும் போது
என்னை ஒவ்வொரு கட்டத்திலும் கைப்பிடித்து அழைத்துச் சென்ற இந்தத் தயாரிப்பாளரை மறக்க முடியாது. இந்தப் படத்துக்கு உயிரோட்டமாக சரவண தீபனின் இசை இருக்கிறது. இந்தப் படத்தின் முதல் பாதிக்குத்தான் ட்ரெய்லர் வெளியிட்டுள்ளோம்.சுவாரஸ்யம் போய்விடும் என்று இரண்டாம் பாதியைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. படம் பார்ப்பவர்களுக்கு அது தெரியும்.

இதை விளம்பரப்படுத்துவதற்கு ஹெச். வினோத் சாரின் உதவியைக் கேட்டோம் .உதவுவதாகச் சொன்னார். அவருக்கு நன்றி.ஆனால் அவரோ ’ஜனநாயகன் ’ பிரச்சினையில் இருக்கும் போது நாங்கள் எப்படிக் கேட்பது?அதனால் அவரை வைத்து எதுவும் செய்ய முடியவில்லை.இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட இயக்குநர் சேரன் சார், மற்றும் நட்டி சாருக்கு நன்றி.

நாங்கள் அதிக ஆட்கள் இல்லாமல் 12 பேர் மட்டும் கொண்ட குழுவாக இருந்து பல வேலைகளையும் செய்தோம்.இந்தப் படத்தை எடுத்து முடித்து இருக்கிறோம். ஒரு கட்டத்தில் இந்தப் படம் நிறுத்தப்பட்டு விடுமோ என்கிற பயம் இருந்தது. அந்த கஷ்டமான காலத்தில் அப்போது கதாநாயகி நதியா கைகொடுத்து உதவினார் .அதை மறக்க முடியாது. இப்படிப் பலரும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து இருக்கிறார்கள். அனைவருக்கும் நன்றி” என்றார்

இசையமைப்பாளர் சரவண தீபன் பேசும்போது,

” இது எனக்கு முதல் படம் முடிந்தவரை செய்திருக்கிறேன். அனைவரும் ஆதரவு தர வேண்டும்” என்றார்.

நடிகர் காதல் சுகுமார் பேசும்போது ,
”நான் திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதைப்பற்றி இங்கே குறிப்பிட்ட போது ,
எனக்கே திடுக்கென்று இருந்தது .சினிமாவில் நான் சாதிக்கவில்லை என்றாலும் சினிமாவில் இவ்வளவு நாள் இருப்பதே ஒரு சாதனைதான் .இந்த படக்குழுவினரை வாழ்த்துகிறேன் ” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது,

“சத்தியம் என்ற வார்த்தைக்கு ஒரு மதிப்பு உள்ளது. ஒரு காலத்தில் சத்தியம் செய்து விட்டால் அதைப் பெரிதாக நினைப்பார்கள். அது இப்போது மாறி வருகிறது .சிலர் அப்படி நடந்து கொள்வதில்லை.அவர்களைப் பார்த்து அப்போது சொல்வார்கள் ’சத்தியம் அவனுக்குச் சர்க்கரைப் பொங்கல்’ என்பார்கள்.

நான் படிக்கும்போது புத்தகத்தின் மீது சத்தியம் பண்ணச் சொல்வார்கள் .தவறாகச் சத்தியம் செய்தால் படிப்பு வராது என்று பயந்தார்கள். கணவன் மனைவிக்குள் சண்டை வந்தால் குழந்தை மீது சத்தியம் பண்ணச் செல்வார்கள்.இன்று சத்தியத்துக்கு யாரும் பயப்படுவதில்லை .அதனால் தான் இந்த இந்த நாட்டில் இவ்வளவு வன்முறைகள், அநியாயங்கள் நடக்கின்றன. நாடு மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தில் இயக்குநர்தான் கதாநாயகன். ஆனால் இங்கே கதாநாயகி வரவில்லை.
இங்கே ஒரு படம் ஆரம்பிக்கும் போதே கதாநாயகன் ,கதாநாயகியிடம் பட விழாக்களுக்கு வருவேன் என்று படத்தின் மீது சத்தியம் வாங்க வேண்டும்.

நீண்ட நாள் கழித்துதான் இப்படிப் பார்க்கிறோம் இங்கே திரையிடப்பட்ட மூன்று பாடல்களுமே ஈர்ப்பாக உள்ளன. பாடல்களும் சரி, வரிகளும் சரி நன்றாக உள்ளன.சில இசை கொண்டாட வைக்கும் ; சில இசை இதயத்துக்கு நெருக்கமாக இருக்கும் .அப்படி இதயத்திற்குப் பாலமாக இருக்கும் படி இந்தப் பாடல்களும் இசையும் இருந்தது. இசையமைப்பாளர், பாடலாசிரியருக்கு வாழ்த்துக்கள்.

ட்ரெய்லர் பார்க்கும்போது கதை இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.இந்தப் படத்தில் கதாநாயகன் கதாநாயகி தலையில் அடிக்கடி அடித்துச் சத்தியம் செய்வதைப் பார்க்கும் போது ஏதோ கதையில் இருக்கிறது என்று தான் சொல்லத் தோன்றுகிறது.அதிக சத்தியம் செய்பவன் ஆபத்தானவன். படத்தில் செய்யும் சத்தியங்களைப் பார்க்கும்போது கதை விறுவிறுப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

’முந்தானை முடிச்சு’ படத்தில் பாக்யராஜ் மீது ஊர்வசி ஒரு பழி செல்லும்போது குழந்தையைத் தாண்டச் சொல்வார் .ஊர்வசியும் பொய் சத்தியம் செய்து தாண்டி விடுவார், அதற்குப் பிறகுதான் படத்தின் கதையே ஆரம்பிக்கும். அது போல் இதிலும் சத்தியத்திற்குப் பிறகு வரும் சத்திய சோதனை இருக்கும் என்று நினைக்கிறேன்.

சின்ன திரைப்படங்கள் என்றாலே நல்ல கதைதான் முக்கியம்.பெரிய நடிகர்களோ பெரிய செலவுகளோ இல்லாத பட்சத்தில்நல்ல கதையை நம்பித்தான் படம் எடுக்க வேண்டும். நல்ல கதை, வித்தியாசமான கதை இருந்தால் தான் அது சிறந்த படம்.கமர்சியல் படம் என்பது வேறு சிறந்த படம் என்பது வேறு.வணிகத்திற்குத் தேவையான கதை, வாழ்க்கைக்குத் தேவையான கதை என்று இரண்டு உண்டு.’ப்ராமிஸ்’ திரைப்படம் வாழ்க்கைக்குத் தேவையான கதை என்று நினைக்கிறேன்.

மக்கள் சின்ன படங்களைப் பார்க்க வருவதற்குப் பயப்படுகிறார்கள் அதற்குக் காரணம் சில சின்ன படங்கள்தான்.அனுபவம் இல்லாதவர்கள் படம் எடுக்கிறார்கள்.அது பார்க்கும் படியாக இருப்பதில்லை. ஆனால் இந்தப் படம் ஒரு நம்பிக்கையைத் தருகிறது.எந்தப் படம் வந்தாலும் இது ஓடும் என்கிற நம்பிக்கையைத் தருகிறது .அந்த அளவிற்குக் கதை உள்ளது.

இன்று ரீரிலீஸ் படங்களுக்கு உள்ள வரவேற்பு ,நேரடிப் படங்களுக்கு இல்லாமல் இருக்கிறது.’படையப்பா’ ரீரிலீஸ் வந்தது; ஓடியது. இப்போது ‘மங்காத்தா ‘ வந்திருக்கிறது.நாலு நாட்களுக்குத் திரையரங்குகள் நிரம்பிவிட்டன.அதனால் புதிய நேரடிப் படங்கள் திணறுகின்றன.இப்போது ‘திரௌபதி 2 ‘வந்திருக்கிறது. நல்ல விதமாகவே அதைப்பற்றிப் பேசுகிறார்கள் .ஆனால் வசூலில் திணறுகிறது.

இது பற்றி மோகன் ஜி தைரியமாகப் பேசுகிறார். ‘மங்காத்தா’ வை விட ‘திரௌபதி 2’ வசூல் குறைந்துவிட்டது என்கிறார்.அவரது தைரியத்தைப் பாராட்ட வேண்டும். ‘மங்காத்தா’ அளவிற்கு தன் படத்திற்கு வசூல் இல்லை என்று தைரியமாகச் சொல்கிறார் யாருக்கு அந்தத் தைரியம் வரும்?படம் வெளியான இரண்டாவது நாளே சக்சஸ் மீட் வைக்கிறார்கள்.
ஆனால் மோகன் ஜி மங்காத்தாவுடன் வந்தது தவறு, தன் படத்திற்கு வசூல் இல்லை என்று வெளிப்படையாகச் சொல்கிறார் .அவரது தைரியத்தைப் பாராட்ட வேண்டும். அதுவும் மூன்றாவது நாளில் பேட்டி கொடுக்கிறார் என்றால் அவரது தைரியத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

பொய்யாக என் படம் வெற்றி, இரண்டாவது நாள் வசூல், மூன்றாம் நாள் வசூல் என்றெல்லாம் அவர் சொல்லவில்லை. ஓபன் ஸ்டேட்மெண்டாக வெளிப்படையாகக் கூறுகிறார். ஆனால் மக்களிடம் படம் நன்றாக இருக்கிறது என்று பேச்சு இருக்கிறது.ஒரு சின்ன பட்ஜெட்டில் படம் இவ்வளவு பிரமாதமாக இருக்கிறதே என்று பேசிக்கொள்கிறார்கள்.

ஏனென்றால் மக்கள் சின்ன படங்களுக்கு வருவதற்குத் தயங்குகிறார்கள்.
அதைவிட ஏற்கெனவே வெற்றியடைந்த ’மங்காத்தா’விற்குச் செல்கிறார்கள்.
சின்ன படத்தைப் பார்ப்பதற்குப் பயத்தைத் தமிழ் திரையுலகில் யார் கொடுத்தது?

எப்போதும் கே. ராஜன் சார் தயாரிப்பாளர்கள் பற்றிப் பேசிக் கொண்டே இருப்பார்.
’எஜமான்’, ’மன்னன்’, ’தெறி’ போன்ற ரஜினி, விஜய் படங்கள் ரீ ரிலீஸுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன. சின்ன படங்கள் வரும்போது ரீரிலீஸ் வந்தால் எழும் பிரச்சினைகளுக்கு வழி காண வேண்டும். அதற்குரிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வர வேண்டும். ஏற்கெனவே ‘மங்காத்தா’ ஓடிய படம் தான். அது மறுபடியும் ஓடினாலும் ஓடவிட்டாலும் பிரச்சினை இல்லை.அது ஏற்கெனவே வெற்றிப் படம் தான். ’படையப்பா’ ஓடா விட்டால் ரஜினி மார்க்கெட் ஒன்றும் ஆகாது. ’மங்காத்தா’ ஓடாவிடாவிட்டால் அஜித்துக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை.ஆனால் நேரடிப் படங்களுக்கு வெளியீடு என்பது பெரிய வாழ்க்கைப் பிரச்சினை.இன்னும் ரஜினி படங்கள், விஜய் படங்கள் வெளியாகத் தயாராக இருக்கின்றன.ரீரிலீஸ் என்பது அவர்களுக்கு ஃபேண்டஸி .நேரடிப் படம் வெளியீடு என்பது இவர்களுக்கு வாழ்வாதாரம்.

சினிமாவில் இருந்து கொண்டு நாம் கவலைப்பட வேண்டிய இன்னொரு விஷயம் ’ஜனநாயகன்’.ஒரு படம் சென்சார் பிரச்சினையில் இத்தனை நாள் இழுத்துக் கொண்டிருப்பது என்பதைக் கேள்விப்பட்டிருக்கவே முடியாது. எல்லாவற்றையும் விட்டு விடுங்கள் அது ஒரு படம்.ஒரு படம் என்கிறபோது சென்சார் என்ன செய்ய வேண்டும்? வன்முறை என்றாலோ ஆபாசமாகஇருக்கிறது என்றாலோ அனுமதிக்க மாட்டார்கள். வெட்டச் சொல்வார்கள். அவை கூடுதலாக இருந்தால் ‘ஏ: சான்றிதழ் கொடுப்பார்கள்., கொடுத்து ரிலீஸ் பண்ணிக் கொள்ளுங்கள் என்பார்கள். இவ்வளவு தானே விஷயம்? கட் பண்ணச் சொன்னால் கட் பண்ண முடியாது என்று சொன்னால்தான் பிரச்சினை .இதில் என்ன பிரச்சினை? நீதிமன்றம் வரை சென்றிருக்கிறது.ஒரு திரைப்படம் சென்சருக்குப் போய் ஏன் இத்தனை நாள் வெளியிடப்படாமல் இருக்கிறது? மத்திய அரசுக்கும் சென்சாருக்கும் நான் ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன் .

மத்திய அரசுக்கு ஆயிரம் கோடிக்கு மேலாக இங்கிருந்து சினிமா வரிப் பணம் உங்களுக்கு வருகிறது,இது டிக்கெட்டில் இருந்து மட்டுமே வருகிறது. நடிகர்கள்,நடிகைகள் 200 கோடியில் இருந்து 50 கோடி என்று வாங்குகிறார்கள். அதிலிருந்து சம்பளத்திலிருந்து இன்னொரு ஆயிரம் கோடிக்கு மேல் உங்களுக்கு வரிப்பணம் வருகிறது.இப்படி.அந்தப் பணத்திலிருந்து தான் சென்சார் போர்டுக்கு சம்பளம் கொடுக்கிறீர்கள்.அதைத் தயவு செய்து மனதில் வையுங்கள்.ஒரு திரைப்பட வெளியீடு ஒரு மாதம் தாண்டியும் முடிவுக்கு வரவில்லை என்றால் என்ன அர்த்தம்? மத்திய அரசும் தணிக்கைத் துறையும் யோசிக்க வேண்டும்.

இது ஏதோ ’ஜனநாயகன்’ படத்திற்கும் விஜய் படத்திற்கும் இருக்கின்ற பிரச்சினை தான் என்று மற்றவர்கள் சும்மா இருக்கக் கூடாது .நாளை நமக்கும் வரும். எனவே இதற்குக் குரல் கொடுக்க வேண்டும். ’ஜனநாயகன்’ விஷயம் நீதிமன்றம் சென்றிருக்கிறது .அங்கே சென்றால் வெளிப்படைத் தன்மை வேண்டும் அல்லவா? ’ஜனநாயகன்’ படத்தைத் தணிக்கை செய்து விரைவில் வெளிவர வேண்டும். காத்திருக்கிறோம் .நன்றி வணக்கம்” என்றார்.

தயாரிப்பாளர் (கில்டு) சங்கத் தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது ,

“நான் வர்மக்கலை கற்றுக் கொள்ளும் போது எங்கள் வாத்தியார் என்னிடம் என் ஆள்காட்டி விரலில் பிளேடால் கீறி,’ இது சத்தியம் என் உயிருக்கு ஆபத்து என்று வந்தால் மட்டுமே இதைப் பயன்படுத்துவேன்’ என்று வெற்றிலையில் எழுதி சத்தியம் வாங்கினார்.அதற்கு இன்று வரை பயந்து கொண்டிருக்கிறேன். பயன்படுத்துவதற்கும் பயம், சொல்லிக் கொடுப்பதற்கும் பயம்.
சத்தியம் என்ற வார்த்தைக்கு உள்ள பலம் பிராமிஸுக்குக் கிடையாது. அம்மா என்ற வார்த்தைக்குள்ள பலம் மம்மிக்குக் கிடையாது.

‘ ப்ராமிஸ்’ படத்தின் சில காட்சிகளைப் பார்த்தேன் நன்றாக உள்ளது.படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்”என்று கூறி வாழ்த்தினார்.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசும்போது,

‘இங்கே விழாவில் தயாரிப்பாளர் ஆரம்பத்தில் பேசும்போது அனைவருக்கும் நன்றி கூறினார். ஒத்துழைப்பு கொடுத்தவர்களுக்கும் கொடுக்காதவர்களுக்கும் நன்றி என்று ஒருவரையும் விடாமல் நன்றி கூறினார். அதுதான் தமிழ்ப் பண்பாடு. அதேபோல இங்கே குத்துவிளக்கேற்றினார்கள்.இருள் விலக வேண்டும் ஒளி பெருக வேண்டும் என்பதன் அடையாளமாகத்தான் விளக்கேற்றுகிறார்கள். அதுவும் தமிழ்ப் பண்பாடு தான். அப்படிப் பண்பாட்டை மறக்காமல் வந்திருந்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.அப்படி ஒரு அற்புதமான தயாரிப்பாளர், இயக்குநர் இங்கே வந்திருக்கிறார்கள்.நல்ல ஒரு திருப்தியான படத்தின் ட்ரெய்லரையும் பாடல்களையும் பார்த்தோம். அருமையான பாடல்களைப் போட்டுக் காட்டினார்கள், பாடல்கள், காட்சிகள், எடிட்டிங் எல்லாமே நன்றாக உள்ளது என்று அனைவரும் சொன்னார்கள். ஆனாலும் படம் வெற்றி பெற வேண்டும்.உண்மையாக வாழ்த்த வேண்டும் என்று தான் நாங்கள் வந்திருக்கிறோம். அதற்காகவே அவர்களை வாழ்த்துகிறேன்.இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் . நிச்சயம் இந்தத் தயாரிப்பாளர் அடுத்த படம் எடுப்பார். எடுத்தால் சினிமாவுக்கு லாபம் ; தொழிலாளர்களுக்கு லாபம்.

தமிழ் சினிமாவில் பழிவாங்குவதற்கு என்றே சில காரியங்கள் நடக்கின்றன.
’ஜனநாயகன்’ படம் .அதன் கதாநாயகன் பெரிய கதாநாயகன். அவர் சாதாரணமாக நடித்து இருந்தால் ,இந்தப் பிரச்சினை வந்திருக்காது அவர் ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்து நான் தான் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவேன் என்று அடம் பிடித்தார் அல்லவா? அதில் பிடித்தது பிரச்சினை. யாருமே எடுத்ததுமே நானே முதலமைச்சர் ஆவேன் என்று சொன்ன வரலாறு கிடையாது.கட்சி ஆரம்பிக்கலாம் தவறில்லை, தேர்தலில் நின்று மக்களிடம் பிரச்சாரம் செய்து ஓட்டு வாங்கி மக்கள் பெருவாரியான எம்எல்ஏக்களைத் தேர்ந்தெடுத்துப் பெரும்பான்மை வந்து அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால்,முதல்வர் ஆகலாம். எடுத்தவுடனேயே நான் முதலமைச்சராகவேன் என்று யாரும் சொன்னதில்லை.அப்புறம் ஐம்பது அறுபது ஆண்டுகளாக கட்சி நடத்துபவர்கள் என்ன ஆவார்கள்? அதில் யாருக்கோ ஒருவருக்கு காழ்ப்புணர்ச்சி வந்துவிட்டது.கூட்டணிக்குக் கூப்பிட்டுப் பார்த்தார்கள் .இல்லை, நான் தனியே தான் நிற்பேன் என்றார். தனியேதானே நாங்கள் ஜனநாயகனைப் பார்த்துக் கொள்கிறோம் என்று பிரச்சினை செய்கிறார்கள்.

யார் என்ன என்பதைப் பற்றி நான் சொல்லவில்லை. ஒரு படம் எடுத்து முடித்தாகி விட்டது. கதாநாயகனுக்கு மட்டும் 250 கோடி மீதி 100 கோடி ரூபாய் படம் எடுக்கும் செலவு .இப்படி படம் முடிந்துவிட்டது.ஒரு தயாரிப்பாளர் செலவுகளைச் செய்துவிட்டார். இப்போது கஷ்டம் யாருக்கு?தயாரிப்பாளருக்குத்தான். கதாநாயகன் சம்பளத்தை வாங்கிக் கொண்டு சென்று விட்டார்.கதாநாயகன் படம் வரவில்லை என்று வருத்தப்படுவார்; பணம்வரவில்லை என்று வருத்தப்படுவாரா? பணம் வாங்கிவிட்டார்.எப்போதோ கொடுத்து விட்டார்கள். அதனால் அவருக்கு எந்த சிரமமும் இல்லை.ஆனால் பணம் போட்ட தயாரிப்பாளர் நிறுத்தப்படுகிறார். அதில் எந்த நியாயமும் இல்லை. இப்படிப் பழிவாங்குவதற்கு நியாயமே இல்லை . இது பழிவாங்குதல் ஒன்றுதான். இதில் பணம் போட்ட முதலாளி அவஸ்தைப்படுகிறார்.
டிசம்பர் 19 படம் பாக்கிறார்கள்.டிசம்பர் 22 இல் சர்டிபிகேட் கொடுக்கப்பட வேண்டும் என்றால் சில கட் கொடுக்கிறார்கள்.சர்டிபிகேட் 24 ஆம் தேதி வரும் என்று நம்பினால் வரவில்லை. பதிலே இல்லை. சென்சார் போர்டு பதில் சொல்லவில்லை. நீதிமன்றம் சென்றால்,பதிலே இல்லை.இது ஒரு அரசியல் பழிவாங்குதல் இல்லையா?

நாளையே அவர் இந்தக் கட்சியுடன் கூட்டணி என்று சொல்லட்டும் நாளை சாயந்திரம் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு சர்டிபிகேட் போய்விடும் .இதெல்லாம் அரசியல் விளையாட்டுகள். இது தவறு. இதற்கு யாரும் குரல் கொடுக்கவில்லை .ஏனென்றால் அவர்களுக்குக் கஷ்டம் வரும்போது அவர் யாருக்கும் குரல் கொடுத்ததில்லை. அதனால் அவருக்கும் யாரும் கொடுக்கவில்லை. எல்லாரும் அவரைக் கைவிட்டு விட்டார்கள் . தயாரிப்பாளர் காப்பாற்றப்பட வேண்டும் இதைக் கண்டித்து மாநில அரசின் மீது குறை சொல்வதில் அர்த்தமே இல்லை. முதலமைச்சர் கூட இப்படி செய்யக்கூடாது என்று ட்விட்டரில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.இதற்கு மத்திய அரசுதான் காரணம்.

எந்த அரசாங்கம் இருந்தாலும் ஜனநாயகனின் பிரச்சினையை முடித்து நீதிமன்றப் பிரச்சினையை முடித்து படத்தை வெளியிட்டு, தயாரிப்பாளர் காப்பாற்றப்பட வேண்டும் .அதான் என்னுடைய நோக்கம். அவர் அடுத்த படம் தயாரித்து ஆயிரக்கணக்கான பேருக்கு வேலைகொடுக்க வேண்டும். ’ஜனநாயகன் ’ படம் விரைவில் வரவேண்டும். உங்கள் அரசியலுக்காக சினிமாவைப் பழி வாங்காதீர்கள்.

சத்தியமாகச் சொல்கிறேன் இந்த ‘ப்ராமிஸ்’ படம் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. படக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.

விழாவில் ‘ப்ராமிஸ்’ படக்குழுவினருடன் வேலூர் பகுதியில் இருந்து திரளாக வந்திருந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

முக்கிய கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் “காதல் கதை சொல்லவா”

0

ஜெயராம், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி – நகுல் நடிக்கும் ” காதல் கதை சொல்லவா ” பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகிறது.

முக்கிய கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் “காதல் கதை சொல்லவா”

பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகும் ” காதல் கதை சொல்லவா “

பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் பட நிறுவனம் சார்பில் ஆகாஷ் அமையா ஜெயின் மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் ” காதல் கதை சொல்லவா”

இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் நகுல் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.

ஆத்மிகா, ரித்திக்கா சென் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் ரமேஷ் திலக் நடித்துள்ளார்.

வசனம் – கண்மணி ராஜா
ஷாஜன் களத்தில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
M. ஜெயச்சந்திரன் மற்றும் சரத் இருவரும் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.
கண்மணி ராஜா, முத்தமிழ், கவிதாரவி, K. பார்த்திபன் ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.
C. பிரசன்னா, சுஜித், பிரவின்.G மூவரும் நடனம் அமைத்துள்ளனர்.
எடிட்டிங் – ஜீவன்
கலை இயக்கம் – சிவா யாதவ்
ஸ்டண்ட் – T. ரமேஷ்
தயாரிப்பு நிறுவனம்- பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட்
தயாரிப்பாளர் – ஆகாஷ் அமையா ஜெயின்.

கதை எழுதி திரைக்கதையமைத்து இயக்கியுள்ளார் – சனில்

மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் நேரடியாக உருவாக்கப்பட்ட என்பது குறிப்பிடத்தக்கது.

படம் பற்றி இயக்குனர் பகிர்ந்தவை…

மூன்று கோணங்களில் நடக்கும் வித்தியாசமான காதல் கதை இது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இதுவரை நடித்திராத புதிய பரிணாமத்தில் இந்த படத்தில் வருகிறார்.

“காதல் கதை சொல்ல வா” – மனித உணர்வுகள், நம்பிக்கை, காதல், தியாகம், மற்றும் மனிதநேயத்தின் வலிமையை சொல்கின்ற மனதை நெகிழ வைக்கும் படமாக இருக்கும்.

படம் பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாககிறது.

கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட “கற்றது சமையல்”

0

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் – வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் “கற்றது சமையல்”நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மண் மனம் மாறாமல் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் காடு, மேடு என வித்தியாசமான இடங்களை தேர்வு செய்து கிராமத்து சமையலை மிக்ஸி, கிரைண்டர் போன்ற எந்த வித நவீன உபகரணங்களும் இன்றி, இயற்கையாகவே கிடைக்கும் பொருட்களை வைத்து முழுக்க முழுக்க கிராமத்து பாணியில், கைப்பக்குவத்திலேயே சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவை சமைப்பதே இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.

இதுவரை நாம் அறிந்திராத பல சுவையான பாரம்பரிய உணவு வகைகளை, அதன் இயற்கை மனம் மற்றும் ருசியுடன் சமைப்பதுடன், தினமும் ஒரு வித்தியாசமான சமையலை நம் கண் முன்னே விருந்தளிக்கும் விதமாக “கற்றது சமையல்” நிகழ்ச்சி உருவாகி வருகிறது.

கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவரும், திமுக’வில் தன்னை இணைத்துகொண்டு அரசியல் களத்தில் கால் பதித்துள்ளவரும், நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளருமான பி டி செல்வகுமார் அவர்களுக்கு திரையுலகம் சார்பில் கடந்த 23.1.2026 அன்று சென்னை வடபழனி பரணி ஸ்டுடியோவில் பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

0

திரைப்படத்துறையில் மக்கள் தொடர்பாளராக பணியாற்றிய காலத்தில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவர துணையாக இருந்தவர் என்பதற்காகவும், கலப்பை மக்கள் இயக்கத்தின் மூலமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 அரசுப்பள்ளிகளுக்கு கலையரங்கம், வகுப்பறைகள் கட்டித் தந்ததற்காகவும் இந்த பாராட்டு விழாவுக்கு ஏற்பாடாகியிருந்தது.

நிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் மு அப்பாவு, திரைப்பட இயக்குநரும் நடிகருமான கே பாக்யராஜ், இயக்குநர் விக்ரமன், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், நடிகர் எஸ் வி சேகர், நடிகை தேவயானி, படத் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பி டி செல்வகுமாருக்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்தினார்கள்.

நிகழ்வில் அப்பாவு அவர்கள் பேசியபோது, ”என்னுடைய உறவினர் தம்பி பி டி செல்வகுமார் கலையுலகில் கண்ணியத்துடனும், நேர்மையுடனும், ஒழுக்கத்துடனும் பயணிக்கிறார். அதற்காக பாராட்டுகிறேன். பி டி செல்வகுமார் கடந்த பல வருடங்களாக கன்னியாகுமரி பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நடத்துகிறார். 3006 பெண்கள், 3006 பானைகளில் பிரமாண்டமாக சமத்துவ பொங்கல் வைப்பார்கள். பிரமாண்டமாக நடக்கும் அந்த நிகழ்வுக்கு நான் போய் வந்ததுண்டு.

அதேபோல, காமராஜரைப் போல கல்விப் பணியிலும் அவரது ஈடுபாடு அதிகம். கன்னியாகுமரியில் வெள்ளாளன்விளை, பொட்டல்விளை, மணக்குடி, இலந்தையடிவிளை, கோவளம் என்று பல ஊர்களில் பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகள், நிரந்தர கலையரங்கங்கள் கட்டிக் கொடுத்திருக்கிறார். மயிலாடி என்று ஒரு ஊர் உண்டு. அங்குள்ள பள்ளியில் ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் மெக்காலே பிரபு மூலம் மெக்காலே கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளியில்கூட பி டி செல்வகுமார் கட்டடங்கள் கட்டிக் கொடுத்திருக்கிறார். நல்ல எண்ணம் இருந்தால் மட்டுமே அதையெல்லாம் செய்ய முடியும். சமூகத் தொண்டோடு, அரசியலில் திமுகவின் அறிவாலயத்தை நாடி வந்திருக்கிறார். அவர் காலம் முழுக்க சுய மரியாதையுடன் நடத்தப்பட்டு மக்கள் தொண்டாற்றுவார். அவரது மக்கள் பணி தொடர வாழ்த்துகள்” என்றார்.

இயக்குநர் கே பாக்யராஜ் பேசியபோது, ”பி டி செல்வகுமாருக்கு இரண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்று இத்தனை காலம் பத்திரிகைத்துறை, சினிமா துறையில் நல்லவிதமாக சேவை செய்திருக்கிறார்; நல்ல பெயரெடுத்திருக்கிறார். அதற்காக முதல் வாழ்த்து. அரசியலில் அடியெடுத்து வைத்ததற்காக இரண்டாவது வாழ்த்து. இரண்டு நாள் முன் என்னை பார்க்க வந்தார். எனக்கு சிறிய மோதிரத்தை போட்டு விட்டார். அத்தோடு சிறிய விழா இருக்கு. வரணும்னு கேட்டுக்கிட்டார். இங்கு வந்து பார்த்தால் பெரிய அரசியல் விழாவாக இருக்கிறது.

உதவி செய்வதற்கு பொருளாதாரம்தான் இருக்கணும்னு அவசியமில்லை. மனசு இருந்தா போதும். அந்த மனசு பி டி செல்வகுமாருக்கு இருக்கு. அவர் செய்த கல்விப் பணிகள் பத்தியெல்லாம் கேள்விப்பட்டிருக்கேன். அவரோட தொண்டு தொடர வாழ்த்துகள்!” என்றார்.

இயக்குநர் பி டி செல்வகுமாரை ”30 வருசத்துக்கு மேலா தெரியும். பத்திரிகையாளர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்னு பல அவதாரங்கள் எடுத்திருக்கார். நாட்டாமை படத்துல நடிச்சிருக்கார். அதனாலேயோ என்னவோ அவரே நாட்டாமையா மாறி பஞ்சாயத்து செய்து ரிலீஸ் பண்ண முடியாம பிரச்சனைகள்ல சிக்கியிருந்த ஏகப்பட்ட படங்களை ரிலீஸ் பண்ண உதவி பண்ணிருக்காரு. அவரோட கலப்பை மக்கள் இயக்கத்தோட பணிகள் பத்தி எனக்கு தெரியும். அவரு சினிமாவுல தளபதி விஜய்கூட இருந்தாரு. அரசியல்ல தளபதி ஸ்டாலின் அவர்களோட இருக்காரு. சினிமாவுல, சமூக சேவைகள்ல சாதிச்சது மாதிரி அரசியல்லயும் அவர் பெரியளவுல சாதிக்கணும்னு வாழ்த்தறேன்” என்றார்.

நடிகர் எஸ் வி சேகர் பேசியபோது, ”பி டி செல்வகுமார் நல்ல விஷயங்களை தொடர்ந்து செய்கிறார். நல்ல விஷயங்களை செய்கிறவர்கள் நல்லபடியாக அரோக்கியமாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். நல்ல விஷயம் செய்றேன்னு கிளம்புறவங்கள்ல சிலர் ஏழாயிரம் ரூபா தையல் மெஷின் கொடுக்கிறேன்னு சொல்லிட்டு 40ஆயிரம் ரூபாய்க்கு போஸ்டரெல்லாம் அடிச்சு நிகழ்ச்சி நடத்துவாங்க. ஆனா, பி டி செல்வகுமார்கிட்டே 40 ஆயிரம் இருந்தா அந்த மொத்த பணத்துக்கும் உதவி பண்ணலாம்னு நினைப்பார். அப்படிப்பட்டவர் நல்லபடியா இருக்கணும், சேவை தொடரணும்னு வாழ்த்துகிறேன்” என்றார்.

பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் பேசியபோது, ‘ஒத்ததறி வான்உயிர் வாழ்வான்மற் றையான் செத்தாருள் வைக்கப் படும்’ என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி, பி டி செல்வகுமாரின் சமூகப் பணிகளைப் பாராட்டி, அப்படியான பணிகளை அவரது மனைவியின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் செய்திருக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டி அவரையும் பாராட்டி வாழ்த்தினார்.

”பிறந்தோம் வாழ்ந்தோம் செத்தோம் என்றில்லாமல் நம்மால் முடிந்தவரை ஏழை எளிய மக்களுக்கு, காமராஜர் வழியில் கல்விக்கு உதவி செய்ய வேண்டுமென நினைத்தே என்னை சமூக சேவைகளில் ஈடுபடுத்திக் கொண்டேன். கஷ்டபட்டுத்தான் எதையுமே செய்கிறேன். சரியான உழைப்புக்கு பலன் கிடைக்காமல் போகாது என நம்புகிறேன்” என தனது துவக்கவுரையில் குறிப்பிட்ட பி டி செல்வகுமார் தனது பத்திரிகை பணியின் ஆரம்பகாலம், திரையுலப் பணியில் கிடைத்த அனுபவம் என பலவற்றை சுருக்கமாக விவரித்தார். நிகழ்வுக்கு வந்திருந்தவர்களுக்கும் தனக்குமான பழக்கம், நெருக்கத்தை எடுத்துச் சொல்லி வரவேற்று, வந்தவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.

பாய்ஸ் படத்தில் நடிக்கும் போது சினிமா தொழில் மீது, கலை மீது எனக்குக் காதல் வந்தது: பட விழாவில் நடிகர் நகுல் பேச்சு!

0

பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில் ஜெயராம்,விஜய் சேதுபதி, நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் நடிப்பில் சனில் இயக்கியுள்ள திரைப்படம் காதல் கதை சொல்லவா.இப்படத்திற்கு ஷரத் இசையமைத்துள்ளார் . ஷாஜன் களத்தில் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் டிரைலர் மட்டும் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர்கள் கே எஸ் அதியமான், மனோஜ் குமார், ராஜ்கபூர் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இயக்குநர் கே.எஸ் அதியமான் பேசும்போது,

“தம்பி நகுலின் ஒரு துடிப்பானநடிப்பை இந்தப் படத்தில் பார்ப்பீர்கள். ஆகாஷ் மும்மையில் பெரிய தயாரிப்பாளர் .இந்தப் படத்தை வெளியிடுவதற்காக வந்துள்ளார்.இயக்குநர் சனில் என் தம்பி மாதிரியானவர். நான் இசை அமைப்பாளர் ஷரத்தின் விசிறி என்றே சொல்ல வேண்டும்.

பல திறமைசாலிகள் சரியான நேர்கோட்டு பாதை கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருந்தார்கள். அனைவரும் ஒன்று சேர்ந்து இப்போது இணைந்துள்ளார்கள்.கடவுள் இவ்வளவுதூரம் இந்த படத்தைக் கொண்டு வந்துள்ளார்.படம் வெற்றி பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.படத்தின் கதை உண்மை கலந்து, சுவாரசியமாக இருக்கும். அனைவருக்கும் பிடிக்கும் .இப்போது உணர்ச்சிகரமாக இருக்கிறது. இந்தப் படம் வெளிவந்து வெற்றி பெற வேண்டும். மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.” என்றார்.

இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் பேசும்போது,

“இப்போது எவ்வளவோ ஏஐ தொழில் நுட்பங்கள் வந்துள்ளன. ஆனால் எந்த தொழில்நுட்பத்தையும் இலகுவாகக் கையாளர் தெரிந்தவர் இந்த இசையமைப்பாளர் ஷரத் .அவரால் இந்த தொழில்நுட்பம் இல்லாமலும் அருமையான இசையைக் கொடுக்க முடியும்.

நாட்டில் இசையில் உள்ள நான்கு திறமைசாலிகளில் அவரும் ஒருவர்.அந்த அளவுக்கு இசையில் ஞானம் உள்ளவர்.அவரால் எந்த இசையையும் அசலாகக் கொடுக்க முடியும்.அவர் என் நண்பர் என்பதில் மகிழ்ச்சி” என்றார்.

இசையமைப்பாளர் ஷரத் பேசும்போது ,

“ஏற்கெனவே நான் தமிழில் ஜூன் 6, 180 போன்ற படங்களில் பணியாற்றி இருக்கிறேன். இந்தப் படம் வெளியாகுமா என்கிற கேள்விக்குறி இருந்தது. இப்போது எல்லாம் கூடி வந்திருக்கிறது. இது ஒரு கனவு மாதிரி இருக்கிறது. இது கடவுளின் விருப்பம் என்று தான் நினைக்கிறேன். ஏனென்றால் ஒரு திரைப்படம் உருவாக்குவதை விட அது வெளிவரும்போது தான் அது முழுமை பெறுகிறது. தமிழ்த் திரை உலகில் உள்ள எம் எஸ் விஸ்வநாதன் இளையராஜா போன்றவர்களின் இசையைக் கேட்டு நான் வளர்ந்தவன் நான். மலையாளத்தில் இசையமைக்கும் போது கூட தமிழில்தான் டம்மி வரிகளை எழுதிக் கொள்வேன்.அப்படி ஒரு இனிமையான மொழி தமிழ் .எனக்கு தமிழ் மொழி மீது அன்பு பற்று பாசம் மதிப்பு மரியாதை உண்டு.

நான் இங்கே ஒரு படம் இசையமைத்தேன்.மெட்டு போட்டு பாடல்கள் வரிகள் எல்லாம் எழுதி சித்ரா, மனோ பாடினார்கள்.ஒலிப்பதிவும் செய்யப்பட்டு விட்டது.

அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மிகவும் நல்லவர் எப்போதும் பளபளவென்று ஜிப்பா போட்டிருப்பார். நான் எந்த இசைக் கருவியைத் தொட்டாலும், இசைத்தாலும் உடனே அவர் அற்புதம் என்று எனக்கு ஒரு உம்மா கொடுப்பார் அடுத்த கருவியைத் தொட்டால் இன்னொரு உம்மா கொடுப்பார்.இப்படி அவர் பல முத்தங்கள் கொடுத்தார். ஆனால் எல்லாம் முடிந்து சம்பளம் என்று வருகிறபோது அவர் ஆளைக் காணவில்லை .ஓடிப்போனவர் வரவே இல்லை. எனக்கு அப்படி ஒரு ஏமாற்றம் .அவர் எங்கிருக்கிறார் அவரைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது.நான் சாக முன்பு அவரைப் பார்த்துவிட வேண்டும் எனக்கு ஆஸ்கார் அவார்டு வாங்க வேண்டும் என்றோ ரஜினி சார் படத்தில் இசையமைக்க வேண்டும் என்றோ ஆசை இல்லை. அவரை எப்படியாவது பார்த்து விட வேண்டும்.

நான் 180 திரைப்படத்திற்கு இசையமைத்தது மறக்க முடியாது.அந்தப் படத்தின் இயக்குநர் ஜெயேந்திரா சாதாரணமாகத் திருப்தி அடைய மாட்டார். அந்த படத்தில் நான் 180 மெட்டுகள் போட்டிருப்பேன். அந்த அனுபவம் மறக்க முடியாது.

நான் இளையராஜா சாருடைய விசிறி இல்லை. புரப்பல்லர் என்றே சொல்ல வேண்டும் .அவர் இசையில் எல்லாம் பாட முடியுமா என்று நான் நினைப்பேன் .அது ஒரு கனவு போல இருந்தது. ஆனாலும் அது ஒரு நாள் நடந்தது. ‘தாரை தப்பட்டை ‘படத்தில் ‘என் உள்ளம் கோயில் அங்கே உண்டு தெய்வம்’என்ற பாடலைப் பாடினேன்.
ஒரு நாள் நண்பர்கள் அழைத்த போது பிரசாத் ஸ்டுடியோ சென்றேன் அங்கே எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.வேறு வேறு அறையில் இருந்து பாடினால் அவருக்கு பிடிக்கவில்லை என்றால் அப்படியே ஓடிவிடலாம். ஆனால் அவர் கண்ணெதிரே நின்று பாட வேண்டும் எனக்குப் பயமாக இருந்தது.இரண்டு முறை வாசித்துக் காட்டிப் பாட வைத்தார். பாடலைக் கேட்ட பிறகு இரண்டு முறை ஓட விட்டுப் பார்த்தார்.எனக்குப் பதற்றம்.அருகில் அழைத்து என் கன்னத்தைத் தடவினார்.இதுவரை நீ எங்கே இருந்தாய் என்றார் .அது மட்டுமல்ல என்னை அழைத்து ஒரு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.அது என் வீட்டில் இன்னும் இருக்கிறது. மறுநாள் அழைத்தார் .இசைக்கு எந்த விலையும் இல்லை பணம் கொடுக்க முடியாது தெரியுமா? என்றார். ஆமாம் அவரது இசையில் பாடியதற்குப் பணம் வாங்க முடியாது. வேறு ஏதாவது கொடுத்தால் வாங்கிக் கொள்கிறேன் ,அடி கொடுத்தால் கூட சரி என்றேன். அவர் என் கையை விரித்து ஒன்று கொடுத்தார். அது ஒரு மோதிரம் அதுவும் நவரத்தின மோதிரம். எனக்கு அதைவிட வேறென்ன விருது வேண்டும்? ஆஸ்கார் விருதுகள் கிடைத்தது போல ஒரு மகிழ்ச்சியில் இருந்தேன். ஓ…என்று அழுதுவிட்டேன். என் குடும்பத்தில் உள்ள அனைவரும் இறந்தால் கூட அப்படி அழுது இருக்க மாட்டேன் அப்படி ஒரு அழுகை.அப்படியெல்லாம் அனுபவம் உள்ளது.
இங்கே வந்திருக்கும் என் நண்பன் ரமேஷ் விநாயகம் நல்ல திறமைசாலி. அவருக்கும் பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்” என்றார்.

இயக்குநர் சனில் பேசும்போது,

” மலையாளத்திலன் தாய் தமிழ் மொழி .தமிழ்நாட்டில் இங்கே பேசுவதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.தமிழில் தமிழகத்தில் ஒரு படம் இயக்குவது என்பது எனது ஒரு கனவாக இருந்தது. மலையாளிகளின் கனவு தேசமாக தமிழ்நாடு இருக்கிறது.எனது சிறுவயதில் நான் உதவியாளராக இருந்தபோது இங்கே பிரசாத் லேப் வந்து ஃபிலிம் எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறேன். மீண்டும் இங்கே என் படத்திற்காக வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழ்ப் படம் இயக்குவது என்பது எனக்கு ஒரு கனவாக இருந்தது .திரையுலகில் வெற்றி தோல்வி முக்கியமல்ல. ஒரு திரைப்படம் எடுக்கும் போது மனது நிறைய வேண்டும். இங்கே இத்தனைப் பேரை சேர்த்து வைத்திருப்பது சினிமா தான் .கே. எஸ்.அதியமான் எனக்கு காட்ஃபாதர் மாதிரி. இங்கே மலையாளம் தமிழ் என்ற மொழி முக்கியமில்லை. திறமை தான் முக்கியம் .தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அவரது முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டும்” என்றார்.

இயக்குநர் மனோஜ் குமார் பேசும்போது,

” இங்கே இருக்கிற நடிகர் நகுலைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர் ஆடும் ஆட்டத்தைப் பார்த்துப் பொறாமையாக இருக்கிறது. அவரது வயது என்ன என்று கேட்க வேண்டும் போல் இருக்கிறது .அவர் ஆட்டத்தைப் பார்த்து பலரும் அவரைக் காதலிப்பார்கள். அந்த கூட்டத்தை குறைக்க வேண்டும் என்று எனக்குப் பொறாமையாக இருக்கிறது .

படத்தின் பாடல் காட்சிகளை பார்த்தேன்.உதட்ட அசைவுக்கு இடமில்லாமல் பின்னணியில் பாடல் காட்சிகளை உருவாக்கி எடுத்து இருக்கிறார்கள் .காட்சிகள் நன்றாக இருக்கின்றன .ஒரு இயக்குநர் என்பவர்க்குள் அனைத்து தொழில்நுட்ப கலைஞரும் இருக்கிறான். அப்படி எல்லாம் எல்லாவிதமான திறமைகளும் இருந்தால் தான் இப்படி எடுக்க முடியும் .நல்ல படம் கொடுத்தால் நிச்சயம் மக்கள் பார்ப்பார்கள் ,பாராட்டுவார்கள்.சமீப காலமாக சிறிய படங்கள் வெற்றி பெறுவது இதைத்தான் கூறுகிறது” என்றார்.

இயக்குநர் ராஜ்கபூர் பேசும்போது,

” இந்தப் படத்தின் டிரைலரை பார்த்தேன் .மிகவும் நன்றாக இருக்கிறது .இது போல் பார்த்து நீண்ட நாள் ஆகிறது. துப்பாக்கி சத்தம் என்றுதான் படங்கள் வருகின்றன .அந்த வகையில் இந்தப் படத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது .ஸ்ரீதர் சார் படத்தை பார்க்கிற உணர்வைத் தருகிறது.அப்படி ஒரு நல்ல படத்தை எடுத்திருக்கிறார்கள். நகுல் இந்தப் படத்திற்குப் பிறகு நல்ல ஆட்டம் போடுவார். இந்த ஆண்டு நகுல் ஆண்டாக இருக்கும் என்று நினைக்கிறேன். இன்னொரு காதல் கோட்டை போல் இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.

கதாநாயகி நடிகை ரித்திகா சென் பேசும்போது,

” எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி.படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம் “என்றார்.

கூல் சுரேஷ் வருகிற போதே கையில் விசிலோடு வந்தார்.மேடை ஏறி விசில் அடித்துக் கொண்டே பேசினார் .

“இந்த விசிலைப் பார்த்து யாரும் ஏதாவது நினைக்க வேண்டாம்
அண்ணன் விஜய் அவர்கள் கட்சிக்கு விசில் சின்னத்தை கொடுத்திருக்கிறார்கள். மகிழ்ச்சி வாழ்த்துகிறேன். நான் இளமையாக ஸ்மார்ட் ஆக இருப்பதாகச் சொன்னார்கள் இதற்கெல்லாம் காரணம் நகுல்தான்.அவரைப் பார்த்து . அவரது தூண்டுதலில் தான் நான் இப்படி இருக்கிறேன். நான் அலப்பறை செய்வதாகவும் கூறினார்கள் .அதற்கும் நகுல் தான் காரணம் .

என் முதல் படம் காதல் அழிவதில்லை. என்னை அய்யா டி ஆர் அறிமுகப்படுத்தினார். அதே போல் இந்த படமும் வெற்றி பெறும்”என்றார்.

நடிகர் நகுல் பேசும் போது,
“காதல் கதை சொல்லவும் என்கிற இந்தப் படத்தின் தலைப்பை பார்க்கும் போதே எனக்கு பிடித்திருக்கிறது. காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை. காதல் பற்றி ஏதாவது தத்துவார்த்தமாகப் பேச வேண்டும்
என்று யோசித்துக் கொண்டே வந்தேன்.
பாய்ஸ் படத்தில் நடிக்கும் போது சினிமா தொழில் மீது, கலை மீது எனக்குக் காதல் வந்தது.
அதை நினைத்துப் பார்க்கும்போது எனது லவ் அதிகமாகிறது. முதலில் அம்மா என்னை நேசித்தார்கள். என்னை சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அவர்கள் கனவு கண்டார்கள். அம்மாவின் நேசத்தை நினைத்துக் கொள்கிறேன்.என் உடலின் மீது ஒரு காதல் வந்தது அதற்குப் பிறகு உடற்கட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்தேன்.அதேபோல் எனது திருமணம் குழந்தை என்று காதலுக்கு அர்த்தம் வந்தது.காதல் என்பது வாழ்க்கையின் அடிப்படையான ஒன்று.
இங்கே இத்தனை பேர் ஒன்று சேர்ந்து இருப்பதற்கும் காதல் தான் காரணம்.
இந்தப் படத்திற்கு நான் வருவதற்கு காரணம் அதியமான் அண்ணன் அவர்கள் தான்.நான் சென்னைக்கு வருவதற்கே அவர்தான் காரணம்.அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர்.அவர் எப்போது என்னை அழைத்தாலும் ஹலோ ஹாய் என்று சொல்ல மாட்டார். தம்பி என்று தான் கூப்பிடுவார் .எப்படிடா இருக்குற ரொம்ப நாளாச்சு? என்பார் .அவர் மூலம் தான் இந்த வாய்ப்பு வந்தது. நல்ல வித்தியாசமான கதை.

வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். நான் மாசிலாமணி படத்தில் பேச வேண்டிய ஒரு வசனம் இருக்கும். “எது எப்போது நடக்குமோ அது அப்போது நடக்கும்” அதுதான் எனது வாழ்க்கையில நடக்கிறது. இந்தப் படத்தில் வித்தியாசமான கதை உள்ளது. இதில் வித்தியாசமான பாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன்.இங்கே எல்லோருக்கும் ஒரு காதல் கதை இருக்கிறது .இந்தக் கதையை அனைவரும் தொடர்பு படுத்திப் பார்த்துக் கொள்ள முடியும்.அனைவரும் நன்றாக உழைத்திருக்கிறோம். அருமையான இந்த படக் குழுவிற்கு நன்றி. 15 நாள் தான் இதில் பணியாற்றினேன். ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவம் வித்தியாசமான அனுபவம் .அனைவருக்கும் நன்றி”என்றார்.

நிகழ்ச்சியில் பாடல்களை எழுதியுள்ள கண்மணி ராஜா முகமது, முத்தமிழ், கவிதா ரவி, பார்த்திபன் ,தயாரிப்பாளர் பத்ரகாளி பிலிம்ஸ் வெங்கட்ராவ், கன்னட நடிகர் ரஞ்சித் குமார், தயாரிப்பாளர்கள் ராஜேந்திரகுமார் ,வேலாயுதம், படத்தை தயாரித்திருக்கும் ஆகாஷ் அமையா ஜெயின் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

- Advertisement -

Recent Posts