Tuesday, June 23, 2026
- Advertisement -
Home Blog Page 56

விஸ்வராகம் – சுமதி ராம் வழங்கும், மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதனுக்கான இதயப்பூர்வ இசை அஞ்சலி !!

0

“விஸ்வராகம்” என்பது தென்னிந்திய இசை வரலாற்றில் காலத்தால் அழியாத மெல்லிசைகளால் பல தலைமுறைகளை ஆட்கொண்ட M. S. Viswanathan (எம். எஸ். விஸ்வநாதன்) அவர்களுக்குச் செலுத்தப்படும் ஒரு ஆன்மார்த்தமான இசைத் துதியாகும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த இசை யாத்திரை, தமிழர்களின் பாரம்பரியமும் குடும்ப உறவுகளும் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாளான தைப்பொங்கல் – 2026 ஜனவரி 14 அன்று ஒரு முழுமையான ஆல்பமாக வெளியிடப்பட்டது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, கவிஞரும் பன்முகக் கலைஞருமான சுமதி ராம், அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்து தனது கவிதைத் தொகுப்பை மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களிடம் சமர்ப்பித்தார். அந்த சந்திப்பு, ஒரு சாதாரண நிகழ்வாக இல்லாமல், ஒரு வாழ்நாள் இசைப் பயணத்தின் தொடக்கமாக மாறியது. அந்த ஜாம்பவான் விதைத்த இசை விதை, இன்று இசையின் மீதான தூய காதலாக மலர்ந்து ‘விஸ்வராகம்’ என்ற ஆல்பமாக உருவெடுத்துள்ளது. இது MSV – சுமதி ராம் கூட்டுப்பணியின் சின்னமாகவும், அவரது ஒப்பற்ற கலைப் பாரம்பரியத்தைக் கொண்டாடும் சமர்ப்பணமாகவும் திகழ்கிறது.

தற்போது, கவிதாயினி சுமதிராம் விஸ்வதுளசியின் கதையை தமிழ் கலாச்சார அம்சங்களுடன் காவிய சாயலில் ஆங்கில நாவலாக உருவாக்கும் முயற்சியில் உள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்ற “லஜ்ஜாவதி” என்ற ஆங்கில இசைத் திரைப்படத்தையும், ஒரு முக்கியமான அமெரிக்க நிகழ்வை மையமாகக் கொண்டு ஆவணப்படத்தையும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இத்திரைப்படத்தில் தயாரிப்பு நிர்வாகியாக சுமதி ராம் செயல்படுவது குறிப்பிடத்தக்கது .

ஆங்கில இலக்கியம் பயின்ற சுமதி ராமின் 22 தமிழ் கவிதைகள், எம். எஸ். விஸ்வநாதன் அவர்களால் இசைக்கோவைகளாக மாற்றப்பட்டுள்ளன. இது வெறும் இசை முயற்சி அல்ல – ஒரு குருவிற்கான மரியாதை, ஒரு மாணவியின் நன்றிக்கடன், இந்திய இசை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்.

எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள், தனது நீண்ட இசைப் பயணத்தில் ஒரு பெண் பாடலாசிரியருடன் இணைந்து பணியாற்றிய முதல் தருணம் இதுவாகும். இது இசைத்துறையில் பெண்களுக்கான ஒரு முக்கியமான முன்னேற்றமாக அமைந்தது.

விஸ்வராகம் – பகுதி 1 (Part I) பாடல்கள்

Audioverse Music (ஆடியோவெர்ஸ் மியூசிக்) லேபிள் மூலம் வெளியிடப்படும் இந்த ஆல்பத்தின் முதல் பகுதியில் இடம்பெறும் பாடல்கள்:

வீணா பிட் –
ராஜேஷ் வைத்யா & எம். எஸ். விஸ்வநாதன்

ஓம்… காற்றைப் போல –
ஹரிஹரன்,
சங்கர் மகாதேவன்,
உன்னிகிருஷ்ணன்,
ஸ்ரீநிவாஸ்,
அனந்த நாராயணன்,
பாம்பே ஜெயஸ்ரீ,
சுஜாதா,
ஹரிணி,
கல்பனா

மனசு கொஞ்சம் –
எம். எஸ். விஸ்வநாதன் & பாம்பே ஜெயஸ்ரீ

விஸ்வராகம் –
எஸ். பி. பாலசுப்பிரமணியம்

பகுதி 2 – இன்னொரு இசை அஞ்சலி

இதனைத் தொடர்ந்து, எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் வாணி ஜெயராம் ஆகியோருக்கான சமர்ப்பண ஆல்பம் – பகுதி 2 வெளியாகவுள்ளது.
மீதமுள்ள பாடல்கள் மாதந்தோறும் ஒவ்வொன்றாக வெளியிடப்பட உள்ளன.

சுமதி ராம் – ஒரு பன்முகக் கலைஞர்

சுமதி ராமின் இயக்கத்தில் வெளியான ‘விஸ்வ துளசி’ திரைப்படம், தமிழ் சினிமாவின் ஒரு உன்னத படைப்பாக இன்றும் போற்றப்படுகிறது. இந்தப்படத்தின் இசை படைப்பிற்காக ரெமி விருதை, இசையமைப்பாளர்கள் எம் எஸ் விஸ்வநாதன் மற்றும் இளையராஜா பெற்றது சிறப்பிற்குரியது.
தற்போது அவர், சென்னையைச் சேர்ந்த இசையமைப்பாளருடன் இணைந்து மேற்கத்திய மற்றும் பாரம்பரிய இசை கலந்த புதிய ஆல்பத்தை உருவாக்கி வருகிறார்.

மேலும், ‘காந்தி – கருணை மந்திரங்கள்’ (GANDHI – Mantras of Compassion) ஆல்பத்தின் இணைத் தயாரிப்பாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
இளையராஜா, மூன்று முறை கிராமி விருது பெற்ற ரிக்கி கேஜ் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்தி ஆகியோருடன் பணியாற்றிய அனுபவம், அவரது கலைப் பயணத்தின் உயரத்தை வெளிப்படுத்துகிறது.

2028 ஜூன் 14 அன்று, எம். எஸ். விஸ்வநாதன் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா சென்னையில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.
அதே நாளில், மலைவாழ் மக்களுக்காக ‘எம். எஸ். வி. மருத்துவமனை’ திறந்து வைக்கப்பட்டது.

இந்த முயற்சியின் பின்னணியைக் கொண்ட ‘ஜெவி’ (GEVI) திரைப்படம், 2026 ஆஸ்கார் விருதுப் போட்டியில் இடம்பெற்றிருப்பதும், இந்த படத்தில் சுமதிராம் தயாரிப்பு நிர்வாகியாகவும் இருப்பதுவும் குறிப்பிடத்தக்கது.

ஒரு இசை நன்றி – ஒரு அன்பின் வெளிப்பாடு ‘விஸ்வராகம்’ ஒரு ஆல்பம் மட்டுமல்ல. இது ஒரு மகா இசை அரசருக்கான நன்றிக் கடன், ஒரு மாணவியின் அன்பின் வெளிப்பாடு, ஒரு இசை யுகத்திற்கு செலுத்தப்படும் மரியாதை. ஒரு கவிதாயினியின் ஆழ்ந்த மரியாதையும் கலைப்பணிவும் இதில் வெளிப்படுகின்றன.

ஆச்சார்ய தேவோ பவ!
குரு தேவோ பவ!

ஜப்பானிய தற்காப்புக் கலைகளில் வரலாற்று உலக அங்கீகாரத்தைப் பெற்ற திரு. பவன் கல்யாண்…

0

திரு. பவன் கல்யாண் பன்முகத் திறமை கொண்டவர். ஒரு நடிகராக மட்டுமல்லாமல், எழுத்தாளர், இயக்குனர், ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளர், நடன இயக்குனர் மற்றும் பாடகர் என பல துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அரசியலிலும் தனது முத்திரையைப் பதித்து, ஆந்திராவின் துணை முதல்வர் பதவியை வகித்து வருகிறார். மேலும், ஒரு பொதுத் தலைவராக மதிக்கப்படுகிறார்.

தற்காப்புக் கலைகளிலும் தேர்ச்சி பெற்ற திரு. பவன் கல்யாண் ஓர் அரிய சாதனையைப் படைத்துள்ளார். பண்டைய ஜப்பானிய வாள்வீச்சுக் கலையான ‘கென்ஜுட்சு’வில் அதிகாரப்பூர்வமாக நுழைவதன் மூலம் அவர் பெரும் சர்வதேச மரியாதையைப் பெற்றுள்ளார். இந்த அரிய உலகத்தரம் வாய்ந்த அங்கீகாரம், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அவரது ஒழுக்கமான பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் தற்காப்புக் கலைகளுக்கான அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.

திரு. பவன் கல்யாணின் தற்காப்புக் கலைப் பயணம் அவர் திரைப்படங்கள் மற்றும் அரசியலில் நுழைவதற்கு முன்பே தொடங்கியது. கராத்தே மற்றும் தொடர்புடைய தற்காப்புக் கலைகளில் மிகுந்த ஆர்வமுள்ள திரு. பவன் கல்யாண், சென்னையில் வசித்த காலத்தில் கடுமையான பயிற்சி மற்றும் தொடர்ச்சியான பயிற்சி மூலம் தொழில்நுட்ப ரீதியாகவும் தத்துவ ரீதியாகவும் ஒரு வலுவான அடித்தளத்தை வளர்த்துக் கொண்டார். காலப்போக்கில், அவர் தன்னுடைய உடற் பயிற்சிக்கு மட்டுமல்லாமல், ஜப்பானிய சாமுராய்களின் தற்காப்பு மரபுகளை ஆழமாகப் படித்து ஆராய்ச்சி செய்து, மிகுந்த அர்ப்பணிப்புடன் அவற்றைப் பின்பற்றினார்.

தற்காப்புக் கலைகள் பற்றிய அவரது புரிதல் திரைப்பட வடிவத்திலும் பிரதிபலித்தது. அவர் இந்த தற்காப்புக் கலைகளை “அக்கட அம்மாயி இக்கட அப்பாயி”, “தம்முடு”, குஷி, “அன்னவரம்”, “ஓஜி” போன்ற படங்கள் மூலம் திரையில் வெளிப்படுத்தினார், அவை பரவலான அங்கீகாரத்தையும் புகழையும் பெற்றுத் தந்தன.

தற்காப்புக் கலைகளுக்கான அவரது தொடர்ச்சியான மற்றும் நீண்டகால அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் சர்வதேச அமைப்புகள், திரு. பவன் கல்யாணுக்கு பல மதிப்புமிக்க கௌரவங்களை வழங்கியுள்ளன. பாரம்பரிய ஜப்பானிய தற்காப்புக் கலைகளில் மிகவும் மதிக்கப்படும் அமைப்புகளில் ஒன்றான ‘சோகோ புடோ கன்ரி கை’யின் “Fifth don” (ஐந்தாவது டான்) விருதை அவருக்கு வழங்கியுள்ளது. ‘சோக் முரமட்சு சென்செய்’-ன் கீழ் ‘டகேடா ஷிங்கன் குலத்தில்’ அனுமதிக்கப்பட்ட, ஜப்பானுக்கு வெளியே உள்ள முதல் தெலுங்கு நபர் என்ற பெருமையையும் பெற்றார். இது ஜப்பானுக்கு வெளியே அரிதாக வழங்கப்படும் ஒரு கௌரவமாகும்.

கூடுதலாக, கோல்டன் டிராகன்ஸ் அமைப்பால் “தற்காப்புக் கலைகளின் புலி” என்ற புகழ்பெற்ற பட்டத்தையும் அவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது.

மேம்பட்ட பயிற்சியின் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற புடோ நிபுணர் ஹன்ஷி பேராசிரியர் டாக்டர் சித்திக் மஹ்முடியின் கீழ் பயிற்சி பெற்றார் பவன் கல்யாண். அவர் இந்தியாவில் ஜப்பானிய தற்காப்புக் கலைகளில் முன்னணி நிபுணர்களில் ஒருவர்.

அவரது வழிகாட்டுதலின் கீழ், பவன் கல்யாண் ‘கென்டோ’வில் விரிவான பயிற்சி பெற்றார், உயர் மட்ட தொழில்நுட்பத் திறனையும் ஆழமான தத்துவ புரிதலையும் பெற்றார்.

இந்த மைல்கல் திரு. பவன் கல்யாணுக்கு சர்வதேச அரங்கில் சினிமா, கிளாசிக்கல் தற்காப்புக் கலைகள் மற்றும் போர் தத்துவத்தை ஒருங்கிணைக்க முடிந்த சில இந்திய பிரபலங்களில் ஒருவராக, ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

தற்காப்புக் கலை பயிற்சியாளர்கள் மற்றும் ரசிகர்களின் பார்வையில், திரு. பவன் கல்யாணின் கென்ஜுட்சுவில் நுழைவது வெறும் மரியாதை மட்டுமல்ல, இது ஒழுக்கம், பணிவு மற்றும் தொடர்ச்சியான கற்றல் போன்ற மதிப்புகளால் நிரப்பப்பட்ட வாழ்நாள் பயணத்தின் பிரதிபலிப்பாகும். இந்த மதிப்புகள் தற்காப்புக் கலைகளுடன் மட்டுமல்ல, திரு. பவன் கல்யாணின் தனிப்பட்ட சித்தாந்தங்களுடனும் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளன.

பிரபல ஒளிப்பதிவாளர் செழியனின் ‘தி ஃபிலிம் ஸ்கூல்’ திரைப்பட பயிற்சி பள்ளியில் பயின்றவர்கள் உருவாக்கும் 34 திரைப்படங்கள் ஒரே நாளில் தொடங்கப்படுகின்றன

0

பி சி ஸ்ரீராம், ரவிவர்மன், பி லெனின், ஶ்ரீகர் பிரசாத், எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியின் தலைவர் டிராட்ஸ்கி மருது உள்ளிட்ட திரையுலக முன்னணியினர் முன்னிலையில் சென்னையில் ஜனவரி 24 அன்று தொடக்க விழா நடைபெறுகிறது

முன்னணி ஒளிப்பதிவாளரும் உலக சினிமாவை தமிழில் அறிமுகப்படுத்தி ஆவணப்படுத்தியவருமான செழியன், ‘கல்லூரி’ ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘பரதேசி’ உள்ளிட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக முத்திரை பதித்ததோடு மட்டுமில்லாமல் ‘டூ லெட்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் பாராட்டுகளை குவித்தார்.

எளிமையான கதையை திறமையாக படமாக்கும் அவரது நேர்த்தியை கண்டு வியந்த பலர், திரைப்படம் உருவாக்கும் உத்திகளையும் வித்தைகளையும் ஆர்வமுள்ளவர்களுக்கு அவர் கற்றுத் தர வேண்டும் என்று கோரியதன் விளைவாக ‘தி ஃபிலிம் ஸ்கூல்’ என்ற பள்ளியை செழியன் தொடங்கினார்.

மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், வெளிநாட்டவர் என பலரும் இப்பள்ளியில் சேர விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களில் எண்பது பேரை தேர்ந்தெடுத்து கதை, திரைக்கதை உருவாக்கம், ஒளிப்பதிவு நுணுக்கங்கள், படத்தொகுப்பு என திரைப்பட உருவாக்கத்தின் அனைத்து துறைகளிலும் செழியன் அவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

‘தி ஃபிலிம் ஸ்கூல்’ பள்ளியில் கற்றுத் தேர்ந்த மாணவர்கள் திரைப்படங்களை உருவாக்க தற்போது தயாராகிவிட்டனர். இவர்கள் இயக்கவுள்ள.34 திரைப்படங்கள் திரையுலக முன்னணியினர் முன்னிலையில் ஒரே நாளில் சென்னையில் ஜனவரி 24 அன்று நடைபெறும் விழாவில் தொடங்கப்பட உள்ளன.

ஒளிப்பதிவாளர்கள் பி சி ஸ்ரீராம், ரவிவர்மன்; படத்தொகுப்பாளர்கள் பி லெனின், ஶ்ரீகர் பிரசாத்; இயக்குநர்கள் கே ஹரிஹரன், பிரசன்னா விதானகே; மற்றும் தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியின் தலைவர் டிராட்ஸ்கி மருது உள்ளிட்ட பிரபலங்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த செழியன், “தி ஃபிலிம் ஸ்கூல் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் முழுநீள திரைப்படங்களை இயக்கும் அளவிற்கு தயாராகி இருப்பது பெருமைமிகு தருணம். ஒரே சமயத்தில் 34 திரைப்படங்கள் தொடங்கப்படுவது என்பது எளிதான விஷயமல்ல. இதைக் கேள்விப்பட்ட திரையுலக முன்னணியினர் எங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்ததோடு எனது அழைப்பை ஏற்று தொடக்க விழாவில் கலந்து கொள்ள சம்மதித்து உள்ளனர். அனைவருக்கும் மனமார்ந்த நன்றி,” என்று கூறினார்.

தி ஃபிலிம் ஸ்கூல் குறித்த மேலும் விவரங்களை https://thefilmschool.in/ எனும் இணையதளத்தை பார்வையிட்டு அறிந்து கொள்ளலாம்.

*

34 films by students of renowned cinematographer Chezhiyan’s ‘The Film School’ to be launched on a single day

Launch event to be held in Chennai on January 24 in the presence of leading film personalities including P.C. Sreeram, Ravi Varman, B. Lenin, Sreekar Prasad and MGR Film Institute Chairman Trotsky Marudhu

Chezhiyan, a leading cinematographer and a filmmaker known for introducing and documenting international cinema in Tamil, has made a strong mark as a cinematographer with films such as ‘Kalloori’, ‘Thenmerku Paruvakaatru’, and ‘Paradesi’. In addition to this, he earned critical acclaim as a director with the film ‘To Let’.

Many who admired his finesse in visually presenting simple stories felt that the techniques and craft of filmmaking should be taught by him to aspiring filmmakers. As a result of this demand, Chezhiyan founded a training institute called The Film School.

While applications to join the school were received from people belonging to various professions—including doctors, engineers, lawyers, and even foreign nationals—eighty were selected from among them. Chezhiyan personally trained these students in all departments of filmmaking, including story and screenplay development, cinematography techniques, and editing.

The students who have successfully completed their training at The Film School are now ready to make movies. A total of 34 feature films to be directed by these students will be launched on a single day at a ceremony to be held in Chennai on January 24, in the presence of leading personalities from the film industry.

Cinematographers P.C. Sreeram and Ravi Varman; editors B. Lenin and Sreekar Prasad; directors K. Hariharan and Prasanna Vithanage; and prominent figures including Trotsky Marudhu, the chairman of the Tamil Nadu Government MGR Film Institute, are expected to attend this event.

Expressing his happiness about this, Chezhiyan said, “It is a moment of great pride that those trained at The Film School are now ready to direct full-length feature films. Launching 34 movies at the same time is not an easy task. Leading members of the film industry, upon hearing about this, conveyed their wishes to us and have also accepted my invitation to attend the launch event. My heartfelt thanks to everyone.”

More details about The Film School.can be found by visiting: https://thefilmschool.in/

ஜி.வி. பிரகாஷ் குரலில் பிரதமர் மோடி ரசித்த திருவாசகம் முதல் பாடல், ஜனவரி 22ல் வெளியாகிறது !!

0

தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் மகத்தான படைப்பான திருவாசகம். அதன் முதல் பாடல், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் அவர்களால் வரும் ஜனவரி 22 ஆம் தேதி அவரது அதிகாரப்பூர்வ YouTube சேனலில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் பாடலின் ஒரு பகுதியை, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் முன்னிலையில் அவர் இசை நிகழ்ச்சியாக அரங்கேற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

பொங்கல் விழாவின் ஆன்மிகமும் தமிழ்ச் சுவையும் கலந்த அந்த காலை நேரம்,  தமிழ் உணர்வோடு ஒலித்த திருவாசக இசை நிகழ்ச்சியால், தனித்துவம் பெற்றது. பிரதமர் மோடி நேரில் அமர்ந்து இந்த இசையை ரசித்தது, நிகழ்வின் பெருமையை மேலும் உயர்த்தியது. ஜி.வி. பிரகாஷின் குரலும் இசையும், திருவாசகத்தின் ஆழ்ந்த பக்தி உணர்வை சமகால இசை மொழியில் வெளிப்படுத்தியது மெய்சிலிர்க்க வைத்தது.

நவீன இசையில்  பாரம்பரியத்தின் அம்சத்தை இணைப்பதில் தேர்ச்சி பெற்றவர் ஜி.வி. பிரகாஷ். திரைப்பட இசை, தனிப்பாடல்கள், சர்வதேச மேடைகள் என பல தளங்களில் தனது தனித்த குரலை பதித்துள்ள அவர், திருவாசக முயற்சியின் மூலம் தமிழ் ஆன்மிக இசைக்கு புதிய அடையாளம் அளிக்க முனைந்துள்ளார்.

திருவாசகத்தை முழுமையான இசை ஆல்பமாக உருவாக்க வேண்டும் என்பது ஜி.வி. பிரகாஷின் நீண்ட நாள் கனவு. அந்த கனவின் முதல் படியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு இசையமைத்து, அவற்றை உலகிற்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பாரம்பரிய ஆன்மிகப் பாடல்களை இன்றைய தலைமுறைக்கும் எளிதாக உணரச் செய்யும் வகையில், இசை வடிவமைப்பில் புதிய அணுகுமுறையை அவர் கையாண்டுள்ளார்.

இந்த முயற்சியின் தொடக்கமாக, மோடி முன்னிலையில் பாடப்பட்ட திருவாசகத்தின் முதல் பாடல் வரும் ஜனவரி 22 அன்று ஜி.வி. பிரகாஷ் தனது YouTube சேனலில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளார். பிரதமர் மோடி அவர்களின் பாராட்டைப் பெற்றுள்ள இந்தப் பாடல், ஆன்மிக இசை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

G.V. Prakash Kumar to Unveil First Thiruvasagam Song on January 22! A Divine Rendition That Captivated Prime Minister Narendra Modi

Thiruvasagam, one of Tamil literature’s most exalted spiritual masterpieces, comes alive in music through acclaimed composer G.V. Prakash Kumar. The first song from this timeless work—composed and rendered by him—will premiere on January 22 via his official YouTube channel. A poignant preview recently enthralled audiences, including the Hon’ble Prime Minister of India, Shri Narendra Modi, during Pongal celebrations in New Delhi.

The event’s spiritual aura, steeped in Tamil cultural richness, soared with Thiruvasagam’s celestial echoes. Prime Minister Modi’s rapt attention elevated the moment, as G.V. Prakash Kumar’s soul-stirring vocals and innovative composition revived the text’s devotional fervor in a fresh, contemporary idiom.

Celebrated for fusing tradition with modern flair, G.V. Prakash has forged a singular path across film scores, indie projects, and global stages. This Thiruvasagam endeavor breathes new life into Tamil devotional music, inviting a worldwide audience to its profound depths.

Long envisioning a full musical album of Thiruvasagam, he now materialises this dream step by step, selecting verses, reimagining them for today’s ears while safeguarding their sacred essence. His approach bridges generations, making ancient wisdom emotionally resonant and accessible.

This inaugural track, already blessed with acclaim from the nation’s highest office, drops January 22 on G.V. Prakash Kumar’s YouTube channel, sparking eager anticipation among spiritual music lovers and the global Tamil diaspora.

சசிகுமார் நடிக்கும் ‘ மை லார்ட்’ படத்தின் டிரெய்லர்  வெளியீடு

0

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ எனும் திரைப்படத்தின் டிரெய்லர்  வெளியிடப்பட்டிருக்கிறது.

முன்னணி இயக்குநரான ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘மை லார்ட் ‘ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத,  ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை  எம். ஷெரீப்பும், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட்டும் அமைக்கிறார்கள்.  உணர்வு பூர்வமான படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். இதனை அம்பேத்குமார் வழங்குகிறார் .

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் ‘ மை லார்ட் ‘ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகனான சசிகுமார் பேசும் வசனங்களும், விளிம்பு நிலை மக்களுக்கான ஜனநாயக உரிமைகளும் சிறுநீரக திருட்டு தொடர்பான காட்சி அமைப்புகளும் ரசிகர்களை கவனத்தை‌ ஈர்த்திருக்கிறது.  அரசியல் ஆதிக்கத்தில் சிக்கி இருக்கும் எளிய மனிதர்களின் வாழ்வியலை உணர்வு பூர்வமாக விவரிப்பதால் இந்த முன்னோட்டம் அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

தேசிய விருதினை வென்ற படைப்பாளியான ராஜு முருகன் –  தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வரும் சசிகுமார் ஆகிய இருவரும் முதன்முறையாக ‘மை லார்ட்’ படத்தில் ஒன்றிணைந்திருப்பதாலும்…  டிரெய்லர் இடம் பிடித்திருக்கும் உணர்வுபூர்வமான காட்சிகளாலும் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பும் எகிறி இருக்கிறது.

Link – https://www.youtube.com/watch?v=KR05JMlq8K8

S.தாணு அவர்களுக்கு “HOTSPOT 2” படக்குழு சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்

0

Hotspot 2much தயாரிப்பாளர் திரு பாலமணி மர்பன்- புதிய இயக்குநர்கள், நல்ல படைப்புகள் மற்றும் வளரும் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், ஆதரவு அளிக்கும் வகையிலும் “தெறி” திரைப்பட வெளியீட்டை ஒத்தி வைத்ததற்கு, திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு அவர்களுக்கு “HOTSPOT 2” படக்குழு சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்

பொங்கல் கொண்டாட்டத்துடன் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘அறுவடை’ படக்குழு!

0

இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த ‘அறுவடை’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக எம்.கார்த்திகேசன் நடிக்க, அவருடன் கதாநாயகியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார் .மேலும் ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர் நடிக்கிறார்கள். ஆனந்த், ஒளிப்பதிவு -ரகு ஸ்ரவண் குமார், இசை , படத்தொகுப்பு – கே .கே . விக்னேஷ். பாடல்கள் – கார்த்திக் நேத்தா, கார்த்திகேசன், கானா சக்தி. கிராமியப் பின்னணியிலான கமர்சியல் படமாக உருவாகும் இந்தத் திரைப்படத்தை எம் கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் இயக்குநர் எம். கார்த்திகேசன் தயாரிக்கிறார்.

கிராமப்புற மக்களின் வாழ்வியல் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் உருவாகும் ‘அறுவடை’ படத்தின் சார்பில் கோயம்புத்தூரில் பொங்கல் விழா கொண்டாடிப் படப்பிடிப்பை முடித்துள்ளனர்.

அறுவடைத் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் திருநாளில் பொங்கல் விழா கொண்டாடி ‘அறுவடை’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,

” ஒரு சாதாரண மனிதனின் வீட்டில் நடைபெறும் ஒரு சிறிய பிரச்சினை, மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து சமூகத்தை எப்படி சீரழிக்கிறது என்பதை விவரிக்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்ற ஒரு தத்துவத்தை மையப்படுத்தி இப்படத்திற்கு ‘அறுவடை’ என பெயரிட்டிருக்கிறோம். விரைவில் படத்தை வெளியிட உள்ளோம் ” என்றார்.

The portal, vvvsi.in, will directly connect job-seeking youth and job-providing companies on one platform without any fee!

0

Seeking to expand the services of his Vallalar Employment Service Mission, which is credited with having helped over 2.17 lakh youth secure direct employment in the private sector absolutely free of cost, actor Vijay Sethupathi inaugurated a job portal for the mission in Madurai today.

The portal, vvvsi.in, will directly connect job-seeking youth and job-providing companies on one platform without any fee!

கவின் – பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சாண்டி மாஸ்டர்

0

திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில், கவின் – பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படத்தில் சாண்டி மாஸ்டர் இணைந்துள்ளார். இப்படத்தில் சாண்டி மாஸ்டர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், படக்குழு ஒரு அட்டகாசமான போஸ்டர் மற்றும் அறிவிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து உருவான கவின் – சாண்டி மாஸ்டர் கூட்டணிக்கு ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களிடையே அபாரமான வரவேற்பு இருந்து வருகிறது. அவர்களுடைய இயல்பான நட்பு, கலகலப்பான உரையாடல்கள், ஜாலியான கெமிஸ்ட்ரி ஆகியவை ரசிகர்களை எப்போதும் உற்சாகப்படுத்தி வந்தது. அந்த வெற்றிகரமான கூட்டணி மீண்டும் ஒரே படத்தில் இணைந்திருப்பது, ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியையும் பெரும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.

கவினும் சாண்டி மாஸ்டரும் மாடர்ன் கெட்டப்பில், வாயில் வெடியை வைத்தபடி “Boys Are Back” என அறிவிக்கும் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, அறிவிப்பு வீடியோவும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. கலகலப்பான ஒரு ஆபிஸ் சூழலில் அனைத்தும் கலைந்து கிடக்கும் நிலையில், கேமரா மெதுவாக சுழன்று பின்னே நாற்காலியில் அமர்ந்த நிலையில் பிரியங்கா மோகன் அறிமுகமாக, இறுதியாக போஸ்டரில் காணப்பட்ட அதே லுக்கில் கவின் – சாண்டி மாஸ்டர் கூட்டணியுடன் வீடியோ நிறைவடைகிறது.

இந்த அசத்தலான அறிவிப்பு வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகமாக பகிர்ந்து, பாராட்டி வருகிறார்கள்.

இத்திரைப்படத்திற்கு ஓஃப்ரோ (OFRO) இசையமைக்கிறார். ஃபேண்டஸி – ரொமான்டிக் – காமெடி ஜானரில் உருவாகும் இந்த திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்வரூப் ரெட்டி தயாரிக்கிறார்.

இப்படம் தொடர்பான மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கவின் – பிரியங்கா மோகன் ஜோடி முதன்முறையாக இணைந்திருப்பதே ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது சாண்டி மாஸ்டரும் இணைந்திருப்பது இப்படத்தின் மீது எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. கண்டிப்பாக ரசிகர்களை உற்சாகப்படுத்தும் கலகலப்பான எண்டர்டெயினராக இப்படம் இருக்கும்

‘கான் சிட்டி’ (Con City)– பட டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக்கை  வெளியிட்ட லோகேஷ் கனகராஜ் !!

0

தமிழ் சினிமாவில் புதுமையான கதைக்களங்களுடன் ரசிகர்களை கவரும் படைப்புகள் தொடர்ந்து உருவாகி வரும் நிலையில், முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகும் இந்த ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்

இப்படத்தில் முன்னணி இளம் நட்சத்திர நடிகர் அர்ஜூன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென், நகைச்சுவை நடிகர் யோகிபாபு  ஆகியோருடன் வடிவுக்கரசி மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் ஆகிய இருவரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படம், Power House Pictures நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கி வருகிறார். 

‘கான் சிட்டி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்த்தவுடன் புன்னகை வரவைக்கும் அதே நேரம்,  ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் எமோஷனல் பக்கத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.  நகரப் பின்னணியில், ஆபிஸ் பேக்குடன் அர்ஜூன் தாஸ் அவரைச் சுற்றி ஹேண்ட் பேக்குடன் அன்னா பென்,  பயணப்பெட்டி பையுடன் யோகிபாபு மற்றும் வடிவுக்கரசி ஆகியோருடன் வீல் சேரில் ஒரு வெற்றிக் கோப்பையுடன் குழந்தை அகிலன் என,  முற்றிலும் வித்தியாசனான  இந்த போஸ்டர்,  படத்தின் கதைக்களம் என்னவாக இருக்கும் எனும் ஆவலைத் தூண்டுகிறது. கான் சிட்டி எனும் தலைப்பு இது முழுமையான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் படம் என்பதை உணர்த்துகிறது.

இதுவரை படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், மங்களூர், சென்னை, மும்பை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

புதுமையான டைட்டில் & ஃபர்ஸ்ட்லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.

தமிழில் தொடர்ந்து வெற்றிப்படங்களைத் தந்து வரும்  இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்  இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பதும் ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

தொழில்நுட்ப குழு

எழுத்து & இயக்கம்: ஹரிஷ் துரைராஜ்
தயாரிப்பு: பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்
ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்
எடிட்டிங்: அருள் மோசஸ்
இசை: ஷான் ரோல்டன்
கலை இயக்கம்: ராஜ் கமல்
உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்
ஸ்டண்ட்: ஆக்ஷன் சந்தோஷ்
மக்கள் தொடர்பு: யுவராஜ்

- Advertisement -

Recent Posts