
‘அயோத்தி’ பட இயக்குனரை பாராட்டிய மன்சூர் அலிகானின் “சரக்கு” படக் குழுவினர்!
மன்சூர் அலிகான் தயாரித்து, கதாநாயகனாக நடித்துவரும் படம் “சரக்கு”.

நடிகர் மன்சூர் அலிகான் கூறுகையில்… சரக்கு படத்தின் படப்பிடிப்பில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்ததால், சற்று தாமதமாக அயோத்தி படத்தை குடும்பத்தோடு பார்த்தேன். உலகமே கொண்டாடப் படவேண்டிய படம் அயோத்தி! திறமை வாய்ந்த நடிகரான சசிகுமாரை வைத்து, மூர்த்தி இயக்கியிருந்தார். தமிழ் நாட்டினர், தமிழர்கள் எவ்வளவு மனிதநேயம் மிக்கவர்கள் என்பதை நெஞ்சை தொடும் வகையில், இயக்குனர் மூர்த்தி எடுத்திருந்தார்.
அயோத்தி இயக்குனர் மூர்த்தியை, எங்களது சரக்கு படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து, நடிகர் நடிகைகள், ‘சரக்கு’ பட இயக்குனர் ஜெயக்குமார் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பாராட்டினோம்! தொடர்ந்து மக்கள் கொண்டாடும் வகையில், நல்ல கருத்தாழம் மிக்க படங்கள் எடுப்பதற்கு, படக் குழுவினரோடு வாழ்த்தினேன் என்றார் மன்சூர் அலிகான்!
Lyca Productions Subaskaran acquires Arun Vijay’s “Achcham Enbathu Illayea – MISSION CHAPTER 1”

Lyca Productions Subaskaran has acquired the rights of Arun Vijay’s upcoming film ‘Achcham Enbathu Illayea’, produced by M. Rajashekar & S Swathi, and directed by Vijay, and will be releasing it worldwide.

The Midas-touch of Lyca Productions Subaskaran has significantly added value to the good films. The production house has strived to produce and distribute films with unique stories, and promising content, thereby successfully adding huge success to such projects. Arun Vijay’s ‘Achcham Enbathu Illayea’ is the latest one to join the league, produced by M. Rajashekar & S Swathi.

Lyca Productions watched the film and felt that it has a substantial value that will impress audiences from all walks of life. Furthermore, the film’s content has the potential to appeal to the interests of audiences beyond regional boundaries, and hence, Lyca Productions release the film in four different languages.

The official announcement about the film’s trailer, audio, and worldwide theatrical release will be out soon.
Director Vijay has completed shooting this film in 70 days across Chennai and London. Amy Jackson is returning onscreen after a long hiatus with this movie. Nimisha Sajayan, one of the most promising and praiseworthy actresses in the Malayalam film industry is also a part of this star cast.
The film is produced by M. Rajashekar & S Swathi and is co-produced by Vamsi, Prasad Kotha, and Jeevan.
Cast
Arun Vijay, Amy Jackson, Nimisha Sajayan, Abi Haasan, Bharath Bopanna, Baby Iyal, Viraaj S, Jason Shah and others.
Technical Crew
Direction – Vijay
Head of Lyca Productions – G.K.M. Tamil Kumaran
Produced by Subaskaran
Produced by – M. Rajashekar and S. Swathi
Co-Produced by Surya Vamsi Prasad Kotha- Jeevan Kotha
Music: G.V. Prakash Kumar
Script & Screenplay – A Mahadev
Dialogues – Vijay
Cinematography – Sandeep K Vijay
Editing – Anthony
Stunt – Stunt Silva
Art Director – Saravanan Vasanth
Costume Designer – Ruchi Munoth
Makeup – Pattanam Rasheed
Executive Producer – V Ganesh
Production Controller – K Mani Varma
Executive Producers (UK) – Sivakumar, Siva Saravanan
Production Executive – Manoj Kumar K
Costumer – Modepalli Ramana
Sound Design – MR Rajakrishnan
VFX – D Note
Stills –R S Raja
Promotion & Strategies – Shiyam Jack
PRO – Suresh Chandra, Rekha D’One
Publicity Designer – Prathool NT
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன், இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘அச்சம் என்பது இல்லையே’ – மிஷன் சாப்டர் 1 படத்தின் உரிமத்தை பெற்றுள்ளார்
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன், இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் அருண் விஜய்யின் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் உரிமையை பெற்று, உலகம் முழுவதும் வெளியிட உள்ளார். படத்தினை எம். ராஜசேகர் & எஸ்.சுவாதி தயாரித்துள்ளனர்.
சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் எப்போதும் நல்ல படங்களுக்கு மதிப்பு தரக்கூடியது. தனித்துவமான கதைகள் மற்றும் நம்பிக்கைக்குரிய உள்ளடக்கம் கொண்ட திரைப்படங்களைத் தயாரித்து வெற்றிகரமாக விநியோகித்து வருகிறது. இதன் மூலம் இதுபோன்ற திட்டங்களுக்கு பிரம்மாண்டமான வெற்றியை சேர்க்கிறது. லைகா புரொடக்ஷனின் இந்த லீக்கின் சமீபத்திய வரவாக எம். ராஜசேகர் & எஸ் சுவாதி தயாரிப்பில், நடிகர் அருண் விஜய்யின் ‘அச்சம் என்பது இல்லையே’ திரைப்படம் இணைந்துள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தைப் பார்த்தப் பிறகு, அனைத்துத் தரப்பிலான பார்வையாளர்களையும் கவரும் அம்சங்களைக் கொண்டுள்ளது என்பதை உணர்ந்துள்ளது. மொழிகளைத் தாண்டி, அனைத்து தரப்பினருக்கும் போய் சேரும் வகையிலான கதையம்சத்தைக் கொண்டுள்ளதால், நான்கு வெவ்வேறு மொழிகளில் இந்தப் படத்தை வெளியிட லைகா முடிவு செய்துள்ளது. படத்தின் ட்ரைய்லர், ஆடியோ மற்றும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
பாராட்டும்படியான படைப்புகளை சரியானத் திட்டமிடலுடன் கொடுக்கக்கூடிய இயக்குநர் விஜய்யின் திறமை, அவரைத் தயாரிப்பாளர்களுக்கு பிடித்தமான இயக்குநராக மாற்றி இருக்கிறது. 70 நாட்களில் அவர் சென்னை மற்றும் லண்டனில் இதன் படப்பிடிப்பை முடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ஏமி ஜாக்சன் இந்தப் படத்தின் மூலம் திரைக்கு வருகிறார். மலையாளத் திரையுலகில் தனது நடிப்புத் திறனுக்கு பல பாராட்டுகளைப் பெற்ற நடிகை நிமிஷா சஜயனும் இந்தப் படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை எம். ராஜசேகர் & எஸ் சுவாதி தயாரித்துள்ளனர் மற்றும் வம்சி, பிரசாத் கோதா மற்றும் ஜீவன் இணைந்து தயாரித்துள்ளனர்.
நடிகர்கள்:
அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபண்ணா, பேபி இயல், விராஜ் எஸ், ஜேசன் ஷா மற்றும் பலர்.
தொழில்நுட்பக்குழு விவரம்:
இயக்கம்: விஜய்,
லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர்: ஜி.கே.எம். தமிழ் குமரன்,
தயாரிப்பு: சுபாஸ்கரன், எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி,
இணைத்தயாரிப்பு: சூர்யா வம்சி பிரசாத் கோதா- ஜீவன் கோத்தா,
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்,
கதை & திரைக்கதை: ஏ.மகாதேவ்,
வசனம்: விஜய்,
ஒளிப்பதிவு: சந்தீப் கே விஜய்,
எடிட்டிங்: அந்தோணி,
ஸ்டண்ட்: ஸ்டண்ட் சில்வா,
கலை இயக்குநர்: சரவணன் வசந்த்,
ஆடை வடிவமைப்பாளர்: ருச்சி முனோத்,
ஒப்பனை: பட்டணம் ரஷீத்,
நிர்வாகத் தயாரிப்பாளர்: வி கணேஷ்,
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: கே மணி வர்மா,
நிர்வாகத் தயாரிப்பாளர்கள் (யுகே): சிவகுமார், சிவ சரவணன்,
தயாரிப்பு நிர்வாகி – மனோஜ் குமார் கே,
ஆடை வடிவமைப்பாளர்: மொடப்பள்ளி ரமணா,
ஒலி வடிவமைப்பு: எம்.ஆர்.ராஜகிருஷ்ணன்,
VFX – D நோட்,
ஸ்டில்ஸ்: ஆர் எஸ் ராஜா,
Promotion & Strategies: ஷியாம் ஜாக்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன்,
விளம்பர வடிவமைப்பாளர் – பிரதூல் என்.டி
சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக, ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் இப்படம் கொண்டாடப்பட்டது.

தயாரிப்பாளர் போனி கபூர் வழங்க, ZEE STUDIOS & BAYVIEW PROJECTS உடன் ROMEO PICTURES இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”. சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக, ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் இப்படம் கொண்டாடப்பட்டது.

இப்படத்திற்காக தமிழரசன் பச்சமுத்து எழுதிய வசனங்கள் படத்தின் வெற்றிக்கு பெரும் பாலமாக இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஆனந்த விகடன் விருதுகள் விழாவில் சிறந்த வசனத்திற்கான ஆனந்த விகடன் விருதை வென்றார் தமிழரசன் பச்சமுத்து.
இந்த நிகழ்வை கொண்டாடும் விதமாக தற்போது இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் “லேபிள்” வெப் சீரிஸின் படப்பிடிப்பில் படக்குழுவனருடன் தனது மகிழ்ச்சியை தமிழரசன் பச்சமுத்து பகிர்ந்து கொண்டார்.
“Anirudh’s sweet gesture to young fan who sang Leo Theme Song!”
Rockstar Anirudh who is currently touring in America for his musical concert ‘Once upon a time’ came across a sweet fanboy who impressed him with his performance. Following the first show in Washington DC, the crew performed their next in New Jersey on Saturday. During the course, Anirudh interacted with a lot of fans and clicked pictures with them as well. One such event took place in New Jersey, where a young boy sang the theme song of Leo in full enthusiasm and was lauded by the people around. Anirudh, who was mightily impressed with the fan’s singing skills, rewarded him with a goggle he was wearing.
Team Rockstar will be performing in Dallas, Atlanta, Seattle and Oakland in the upcoming days before winding up the musical tour on April 15th, 2023. On the work front, Anirudh has Jailer, Leo, Jawan, Indian 2, Thalaivar 170, NTR 30 in the pipeline.
லியோ தீம் பாடலை பாடிய ரசிகருக்கு அனிருத் கொடுத்த இன்ப அதிர்ச்சி பரிசு
தற்போது அமெரிக்காவில் தன்னுடைய ‘ஒன்ஸ் அப்பான் எ டைம்’ ( Once upon a time ) இசை நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணத்தில் இருக்கின்ற, தன்னுடைய திறமையான பங்களிப்பால் அனைவரையும் ஈர்த்த ராக் ஸ்டார் அனிருத், தானே ஒரு இனிமையான ரசிகனாகவும் மாறிய நிகழ்வும் நடந்துள்ளது. .
வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற முதல் நிகழ்ச்சியை தொடர்ந்து சனிக்கிழமை நியூஜெர்சியில் தங்களது அடுத்த நிகழ்ச்சியை ராக்ஸ்டார் குழுவினர் நடத்தி முடித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியின்போது ரசிகர்கள் பல பேருடன் கலந்துரையாடிய அனிருத் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
இந்த நிகழ்வின்போது ரசிகர் ஒருவர் லியோ படத்தின் தீம் பாடலை முழு உற்சாகத்துள்ளலுடன் பாடி அனைவைரையும் ஈர்த்ததும், கூடியிருந்தவர்கள் அதற்கு ஆர்ப்பரித்து வரவேற்பு அளித்ததுமான ஒரு நிகழ்ச்சியாக நியூஜெர்சியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி இடம் பிடித்தது. அந்த ரசிகனின் பாடும் திறமையை கண்டு பிரமித்துப்போன அனிருத், தான் அணிந்திருந்த கூலிங்கிளாஸையே அவருக்கு பரிசாக அளித்து அந்த இளைஞனை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
2023 ஏப்ரல் 15ஆம் தேதியில் இந்த இசை சுற்றுப்பயணத்தை முடிப்பதற்கு முன்பாக, வரும் நாட்களில் டல்லாஸ், அட்லாண்டா, சியாட்டில் மற்றும் ஆக்லாந்து ஆகிய இடங்களில் ராக்ஸ்டார் டீம் இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.
அனிருத்தின் இசையமைப்பில் தற்போது ஜெயிலர், லியோ, ஜவான், இந்தியன் 2, தலைவர் 170 மற்றும் என் டி ஆர் 30 ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.
DREAM WARRIOR ANNOUNCES ITS 2ND TELUGU PRODUCTION ‘RAINBOW’ FEATURING RASHMIKA MANDANNA IN THE LEAD

Producers SR Prakash Babu and SR Prabhu of Dream Warrior Pictures are proud to announce the launch of their latest production, ‘Rainbow’, a breezy romantic fantasy featuring Rashmika in the lead.
Since its inception, Dream Warrior Pictures is a production company, known for its distinctive storylines and quality production values. With movies like Joker, Dheeran Adhigaram Ondru, Aruvi and Kaithi the company has been making exceptional hits time and again.

With Rashmika Mandanna in the lead role, ‘Rainbow’ promises to be a unique cinematic experience for audiences of all ages. Debutant Shantharuban is incharge of the direction. Dev Mohan, Rao Ramesh are also part of the cast. KM. Bhaskaran weilds the camera while Justin Prabhakaran will score the music, both of which will surely be among the movie’s highlights. National award winning Production designer Banglan is incharge of the production design.
“We are delighted to be producing ‘Rainbow,’ a movie that we believe will capture the hearts of audiences of all ages, across the country. Audience have never failed to support our inspiring ideas so far. Hence we are confident that with the talented cast and crew and quirky plot, ‘Rainbow’ too will surely be lapped up by them” said SR Prabhu of Dream Warrior Pictures.

” ‘Rainbow’ will be a one of kind romantic fantasy story in Indian cinema. You will see Rashmika’s most matured performance yet. The movie will tug your heart strings at the same time enthrall you with its inventive storytelling” says the director Shantharuban
Rashmika, the protagonist said, “For the first time I am playing as the protagonist where the story is shot in the girls perspective. I am so so excited to bring this character alive for all of you. Rainbow is definitely such a movie that will both entertain and excite you.. the journey of the audience with the girl is going to be a crazy ride so bucket up all, this is going to be a fun ride.”
‘Rainbow’ has commenced production with a formal pooja today and the shooting will kick off from April 7, 2023.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் ‘ரெயின்போ’ – பிரதான கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா
எஸ். ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக தனது அடுத்த தயாரிப்பு ‘ரெயின்போ’ திரைப்படத்தை அறிவித்துள்ளது. நடிகை ரஷ்மிகா மந்தனா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க, ஃபேண்டஸி கலந்த காதல் திரைப்படமாக உருவாகவுள்ளது.
தங்களின் முதல் படைப்பிலிருந்தே, தனித்துவமான கதைககளன்களுடன், தரமான திரைப்படங்களைத் தொடர்ந்து தயாரித்து வருகிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம். ‘ஜோக்கர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’, ‘கைதி’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தொடர்ந்து தங்களின் முத்திரையைப் பதித்து வரும் ட்ரீம் வாரியர், தங்களின் அடுத்த தயாரிப்பாக ராஷ்மிகா நடிப்பில் ‘ரெயின்போ’ படத்தை அறிவித்துள்ளது.
சாந்தரூபன் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தில் தேவ் மோகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, கே எம் பாஸ்கரன் ஒளிப்பதிவை கவனிக்கவுள்ளார். தயாரிப்பு வடிவமைப்பாளாராக தேசிய விருது பெற்ற பங்களான் பொறுப்பேற்றுள்ளார்.
“வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு படைப்பாக ‘ரெயின்போ’ இருக்கும் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. எங்களின் ஒவ்வொரு திரைப்படத்துக்கும் ஏகோபித்த வரவேற்பையும், வாழ்த்தையும் தந்து வரும் ரசிகர்கள், ‘ரெயின்போ’வையும் அதே அளவு ரசிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம். படத்தின் அற்புதமான நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இதைச் சாத்தியமாக்குவார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ். ஆர். பிரபு
படத்தின் அறிமுக இயக்குநர் சாந்தரூபன் பேசுகையில், “இதுவரை இந்திய சினிமா பார்த்திராத ஒரு காதல் ஃபேண்டஸி கதையாக ‘ரெயின்போ’ இருக்கும். ராஷ்மிகாவின் வேறொரு பரிமாண நடிப்பை நீங்கள் திரையில் பார்ப்பீர்கள். புதுமையான கதைக்களன் கண்டிப்பாகப் படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் ஆச்சரியப்படுத்தும்” என்று கூறியுள்ளார்.
நடிகை ரஷ்மிகா பேசுகையில், “ஒரு பெண் கதாபாத்திரத்தின் பார்வையில் சொல்லப்படும் கதையில் முதல் முறையாகப் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்த கதாபாத்திரத்துக்குத் திரையில் உயிர் கொடுக்க ஆவலாக இருக்கிறேன். உங்களை பொழுதுபோக்கும், ஆச்சரியப்படுத்தும் ஒரு படமாக ரெயின்போ இருக்கும். அந்தப் பெண் கதாபாத்திரத்துடனான ரசிகர்களின் பயணம் உற்சாகமானதாக இருக்கப் போகிறது. அதற்குத் தயாராகுங்கள்” என்று கூறியுள்ளார்.
இன்று பூஜையுடன் ‘ரெயின்போ’ படத்தின் தயாரிப்பு தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு ஏப்ரல் 7 அன்று ஆரம்பமாகிறது.
Good Luck Preview Theater – A Heritage Emblem of Tamil Cinema with 40-yr old History re-emerges with new name of ‘Good Luck Studios’

Director Hari and Pritha Hari have launched Good Luck Studios, dedicated for the Recording, Dubbing and Editing. The inaugural event witnessed presence of eminent personalities from politics and film industry.

Actor Suriya, Thiru. M. Appavu MLA (Speaker, Tamil Nadu Legislative Assembly), Honourable Thiru. Anitha R.Radhakrishnan MLA (Minister of Fisheries, Fisherman Welfare, and Animal Husbandry), Honourable Thiru. P.K. Sekar Babu MLA (Minister of Hindu Religious and Charitable Endowments), Honourable Thiru. T. Mano Thangaraj MLA (Minister of Information Technology and Digital Services), Director Hari’s father Gopalakrishnan, Father-in-law and actor Vijayakumar, Riya Hari and Sridevi Vijayakumar lighted the traditional Kuthuvizhakku. With the blessings of Thiru M. Appavu (Speaker, Tamil Nadu Legislative Assembly), actor Suriya cut the ribbon and inaugurated the studio.
Director S.P. Muthuraman, R.V. Udhayakumar, Senthilnathan, Producer Rajashekar Karpura Sundara Pandian, S.R.Prabhu, Mohan Natarajan, M.S.Murugaraj, Karthik Santhanam,Actor Rahman, Actor Rajesh, Actress Nikki Galrani, Editor, Antony, Cinematographer Gopinath, Sugumar, Sridhar, Actor Thalaivasal Vijay, O.A.K. Sundar, Sridevi Vijayakumar, and many others graced the occasion.
Director Hari and Pritha Hari welcomed the guests and special invitees.
Good Luck Preview Theater owned by Veteran actor Vijayakumar owns a 40-yr old Reputable History in the film industry. It has been considered as an important emblem of Tamil Film industry, which is celebrated by many film lovers.
Good Luck Preview Theater is illustrious for having the presence of Tamil Nadu’s Honourable Chief Ministers – Thiru MGR, Thiru Karunanidhi, Tmt V.N. Janaki, Selvi Jayalalitha, and present Chief Minister Thiru M.K. Stalin watching movies there. This popular brand name ‘Good Luck Theater’ is now renamed ‘Good Luck Studios’ and has re-emerged at Saligramam.
நடிகர் சூர்யா துவங்கி வைத்த, இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரியின் புதிய ஸ்டூடியோ, ‘குட்லக் ஸ்டூடியோஸ்’ !!

40 வருட பாரம்பரிய குட்லக் ப்ரிவியுவ் திரையரங்கம், குட்லக் ஸ்டூடியோஸ் எனும் பெயரில் மீண்டும் உதயமானது !!
இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரி துவங்கியுள்ள புதிய ஸ்டூடியோ, ‘குட்லக் ஸ்டூடியோஸ்’ !!

திரைத்துறை பணிகளான ரெக்கார்டிங், டப்பிங், எடிட்டிங் பணிகளை நவீன வசதிகளுடன் திறம்பட செய்யும் புதிய குட்லக் ஸ்டூடியோவை இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரி துவங்கியுள்ளனர். தமிழின் பெரும் அரசியல் ஆளுமைகள் கலந்துகொண்ட இவ்விழாவில் நடிகர் சூர்யா, தமிழ் நாடு சட்டப்பேரவை தலைவர்
மாண்புமிகு எம்.அப்பாவு எம்.எல் .ஏ
தமிழக அமைச்சர்கள் மாண்புமிகு
அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் mla,
மாண்புமிகு பி.கே.சேகர் பாபு mla,
மாண்புமிகு டி.மனோ தங்கராஜ் mla, டைரக்டர் ஹரி தந்தை கோபாலகிருஷ்ணன், ஹரியின் மாமனார் நடிகர் விஜயகுமார், ரிய ஹரி, ஶ்ரீதேவி விஜயகுமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றினார்கள். புதிய ஸ்டூடியோவை தமிழ் நாடு சட்டப்பேரவை தலைவர் மாண்புமிகு எம். அப்பாவு எம்.எல்.ஏ தலைமையில் நடிகர் சூர்யா ரிப்பன் கட் செய்து துவக்கி வைத்தார்.

மற்றும்
டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், ஆர்.வி.உதயகுமார், செந்தில்நாதன், தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன், எஸ்.ஆர்.பிரபு, மோகன் நடராஜன், எம்.எஸ். முருகராஜ், கார்த்திக் சந்தாணம், எடிட்டர் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் கோபிநாத், சுகுமார், ஶ்ரீதர்,
நடிகர் தலைவாசல் விஜய், நடிகை நிக்கி கல்ராணி, இயக்குனர் கார்த்திக் ராஜா, இயக்குனர் அலெஸ் பாண்டியன், நடிகர் சௌந்தர்ராஜா, நடிகர் ராஜேஷ், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், ஓ.ஏ.கே.சுந்தர், ஶ்ரீதேவி விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வந்தவர்களை டைரக்டர் ஹரி, ப்ரிதா ஹரி வரவேற்றனர்.

முன்னணி நடிகர் விஜயகுமார் அவர்களுக்கு சொந்தமான குட்லக் ப்ரிவியுவ் திரையரங்கம் 40 வருட பாரம்பரியம் கொண்டது. இந்த திரையரங்கம் சென்னையில் ஒரு முக்கிய அடையாளமாக, பல திரை ரசிகர்களின் வாழ்வில் நினைவலைகளின் சின்னமாக விளங்கிய இடமாகும். குட்லக் ப்ரிவியுவ் திரையரங்கில் தமிழ்நாட்டின் முதல்வர்களாக இருந்த திரு எம் ஜி ஆர், திரு கருணாநிதி, செல்வி ஜெயலலிதா, திருமதி ஜானகி ஆகியோருடன் தற்போதைய முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களும் திரைப்படம் பார்த்து ரசித்த பெருமை இந்த திரையரங்கிற்கு உள்ளது. மிகவும் புகழ்மிகு அரங்கமாக இருந்த இந்த திரையரங்கம் தான்
இபொழுது ‘குட்லக் ஸ்டூடியோஸ்’ எனும் பெயரில் சாலிகிராமத்தில் மீண்டும் உதயமாகிறது. இதனை முன்னணி இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரி துவக்கியுள்ளனர்.
Filmmaker Bala’s directorial Arun Vijay starrer “Vanangaan’ First Schedule Shoot wrapped up
The makers of Director Bala’s upcoming film ‘Vanangaan’ starring Arun Vijay in the lead role, are delighted to announce that the team has completed shooting the first schedule. The first leg of filming commenced last month in Kanyakumari, and the crew has wrapped shooting major scenes during this schedule. The next leg of shooting will start on April 17 at Thiruvannamalai.
While Arun Vijay plays the lead character, Roshini Prakash, performs the female lead character. Samuthirakani performs a pivotal role in this movie, which features popular actors from the industry as well. GV Prakash is composing the music and Kaviperarasu Vairamuthu is penning the lyrics. R.B. Gurudev is handling cinematography and Silva is choreographing action sequences for this film.
இயக்குநர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது
இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வணங்கான்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்து விட்டதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கடந்த மாதம் கன்னியாகுமரியில் தொடங்கியது. மேலும் இந்த முதல் ஷெட்யூலில் படக்குழு முக்கிய காட்சிகளை படமாக்கியுள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்குகிறது.
அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். பிரபல நடிகர்கள் பலர் நடிக்கும் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, சில்வா இந்த படத்திற்கு ஆக்ஷன் காட்சிகளைக் கையாண்டுள்ளார்.
யாரும் செல்லாத இடம் எங்கும் சொல்லப்படாத மக்கள் பற்றிய கதைதான் ‘கன்னி’.
படப்பிடிப்பின் போதே அற்புதங்கள் நிகழ்ந்தன:’கன்னி’ பட இயக்குநர்!

“கன்னி” படத்தில் மண்ணின் பெருமை, தொன்மை, பாரம்பரியம் ஆன்மீகம். அமானுஷ்யம், மர்மம், திகில் இயக்குனர் பெருமிதம்.
யாரும் செல்லத் தயங்கும் இடங்களில், யாரும் படப்பிடிப்பு நடத்தத் திணறும் இடங்களில் தேடித் தேடி, படப்பிடிப்பு நடத்தி ஒரு படம் உருவாகி இருக்கிறது. அந்தப் படம் தான் ‘கன்னி’.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மாயோன் சிவா தொரப்பாடி. சன் லைஃப் கிரியேஷன்ஸ் சார்பில் எம். செல்வராஜ் தயாரித்துள்ளார்.அஷ்வினி சந்திரசேகர் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார். மணிமாறன், தாரா கிரீஸ் ,அறிமுகம் -ராம் பரதன் மற்றும் ஏராளமான புது முகங்கள், மண்ணின் மைந்தர்கள் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு ராஜ்குமார் , இசை செபாஸ்டியன் சதீஷ் , பாடல்கள் உமாதேவி ,கலை சக்திவேல் மோகன், சண்டைப் பயிற்சி ரமேஷ் பாபு,எடிட்டிங்- சாம் RDX.

திரைப்பட முயற்சிகளில் ஒரு நல்ல படைப்புக்கான கதை எப்போது மலரும் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அதைத் தேடி திரியும் தருணங்களில் அகப்படாமல் போக்கு காட்டும்.வேறொரு பயணத்தில் எதிர்பாராமல் வந்து முகம் காட்டும். அப்படி வேறொரு படத்திற்காக படப்பிடிப்பிடங்களைப் பார்க்க போனபோது வேறொரு சிந்தனை தோன்றி அது ‘கன்னி’ படமாக எடுக்கப்பட்டு முடிந்துள்ளது.
‘கன்னி’ படத்தின் உருவாக்க முயற்சிகள் , படப்பிடிப்பு அனுபவம் குறித்தும் இயக்குநர் மாயோன் சிவா தொரப்பாடியிடம் கேட்ட போது,
“கன்னி” படத்தின் படப்பிடிப்பு அனுபவம் என்று கேட்டால், படத்திற்காக லொகேஷன் தேடினோம். எப்படி என்றால் மண் சாலையாக இருக்க வேண்டும், நாகரீக மாற்றங்கள் எதுவும் அங்கே இருக்கக் கூடாது, வண்டி வாகனங்கள், மின் கம்பங்கள், செல்போன் டவர்கள் எதுவும் இல்லாத இடமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இடத்தைத் தேடி அலைந்து கொண்டிருந்தோம். அப்படி இருக்கும்போது என் நண்பர்தான் ஓர் இடத்துக்கு அழைத்துக் கொண்டு போனார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் சுற்றுப்புறத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை தாலுகாவில் உள்ள ஒரு சிற்றூர். புல்லஹள்ளி
ஆலஹள்ளி என்கிற ஊர். அந்த ஊரைப் பார்த்தபோது எனக்கு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது.ஒரு காலத்தில் நன்றாக வாழ்ந்த மக்கள் இப்போது பெரும்பாலும் அந்த ஊரை விட்டு வெளியேறி விட்டார்கள்.
அந்த ஊரில் பள்ளி இல்லை, கல்வியில்லை. யாரும் திருமணம் செய்து கொள்ள பெண் தருவதில்லை. எனவே எல்லாரும் வெளியூர் சென்று விட்டார்கள். நாலு குடும்பங்கள் தான் உள்ளன. குடும்ப உறுப்பினர்கள் இருப்பார்கள்.சில நூறு ஆடு மாடுகள் உள்ளன.அப்படிப்பட்ட ஊரை தேடிப் பிடித்து தான் நாங்கள் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம். படப்பிடிப்பு நடத்திய போது அந்த ஊரின் காய்ந்த செம்மை படர்ந்த வறண்ட முகத்தையும் டிசம்பர் பருவத்தில் பனிக்காலத்தில் பனி சூழ்ந்த வெண் புகை படிந்து மூடிய முகத்தையும் நாங்கள் பார்த்தோம். ஒரே ஊரின் இரு வேறுபட்ட தரிசனங்கள் எங்களை ஆச்சரியப்படுத்தின
இந்த ஊருக்கு ஒரு பத்து முறை சென்று தான் மனதளவில் நாங்கள் பழகிக் கொண்டோம். தயாரிப்பாளரிடம் அந்தப் பகுதியைக் காட்டிய போது மேலே ஏறுவதற்கு பல சிரமங்கள் இருந்தாலும், வண்டி வாகனங்கள் இல்லாமல் செல்வதற்கு சிரமப்பட்டாலும் உடனே ஒப்புக்கொண்டார். அவருக்கு சினிமா மீதுள்ள காதலால்தான் இது நடந்தது.
நாங்கள் அந்தப் பகுதியில் படப்பிடிப்பு என்று செல்லும் போது அக்கம் பக்கம் உள்ளவர்கள் வனவிலங்குகள் தொல்லைகள் அதிகம், ஆபத்து அதிகம் என்று அச்சமூட்டினார்கள்.
ஆனால் இயற்கையின் ஒத்துழைப்பால் , பிரபஞ்ச சக்தியின் ஆதரவால் நாங்கள் பாதுகாப்பாகப் படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டோம்.அந்தப் படப்பிடிப்பிற்காக பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களும் சரி நடித்தவர்களும் சரி எங்களுக்குக் கொடுத்து ஒத்துழைப்பை மறக்க முடியாது.
அதை அவர்கள் ஒரு வேலையாகச் செய்யாமல் விருப்பமாகச் செய்தார்கள். அதனால் தான் இது சாத்தியப்பட்டது.
அந்த ஊரில் தண்ணீரே கிடைக்காது என்றார்கள். ஆனால் எங்களுக்கு கிணறு கிடைத்தது. அதில் கைக்கெட்டும் தூரத்தில் தண்ணீர் பிடிக்கும் அளவிற்கு தண்ணீரும் இருந்தது. அருகிலேயே ஒரு குடமும் இருந்தது .இது ஒரு அதிசயம்.அதில் தான் நாங்கள் குடித்ததும் குளித்ததும்.அதேபோல் நாங்கள் இருள் சூழ்ந்த இடங்களில் சந்தித்த மனிதர்கள் அமானுஷ்யமாக எங்களுக்கு தெரிந்தது. ஏனென்றால் அப்படிப்பட்டவர்கள் அந்த ஊரில் இல்லை என்றார்கள். இப்படி நிறைய அற்புதங்கள் நிகழ்ந்தன.இந்தப் படத்தைப் பொறுத்தவரை அமானுஷ்யமும் கனவும் நினைவும் புனைவும் கலந்த அனுபவம்.
இந்தப் படத்தின் கதை என்ன என்றால்,ஒரு நடு இரவில் ஒன்றரை வயதுக் கைக்குழந்தையுடன் கையில் லாந்தர் விளக்குடன் இளம் பெண் ஒருத்தி இருட்டில் மலையேறுகிறாள். மலைப் பாதையில் செல்கிறாள். வழியில் தென்படுபவர்கள் அச்சமூட்டுகிறார்கள்.தன் மாமாவை பார்க்க வேண்டும் என்று அவள் சொல்கிறாள். வேண்டாம் என்று பலரும் தடுக்கிறார்கள். இருந்தும் தைரியமாக மேலே சென்று அந்த ஊரை அடைகிறாள். அங்கும் அவளுக்கு பாதுகாப்பு இல்லாததால் மீண்டும் திரும்புகிறாள். அவள் யார்?அது அவளது குழந்தை இல்லை. அப்படி என்றால் அது யார்? அவளுக்கு நேர்ந்தது என்ன? அவளை ஏன் மற்றவர்கள் தடுக்கிறார்கள்? அவளை துரத்தி வரும் ஆபத்து என்ன?அவளுடைய எதிரிகள் யார்? அவர் சந்தித்த அமானுஷ்ய அனுபவங்கள் என்ன? என்பதுதான் இந்த ‘கன்னி’ படத்தின் கதை.இந்தக் கதையைப் பல்வேறு உணர்வுகளின் குவியலாக கூறி இருக்கிறோம்.
இந்தப் பிரபஞ்சம் நம்முடன் எப்போதுமே உரையாடிக் கொண்டிருக்கிறது. அதன் மொழியைத்தான் யாரும் கண்டு கொள்வதில்லை. அது நமக்குப் புரிவதில்லை.புரிந்து கொண்டவர்கள் சுகமான வாழ்க்கை வாழ்கிறார்கள்.அப்படி இந்தப் பிரபஞ்சத்தின் மொழியைத் தெரிந்து கொண்டவர்கள் தான் நமது மூதாதையர்கள்.எப்போதும் இந்தப் பிரபஞ்சம் நமக்கு சொல்வதை யாரும் காது கொடுத்துக் கேட்பதில்லை. கண் திறந்து பார்ப்பதில்லை.அதனால்தான் நமக்கு இவ்வளவு அழிவுகளும் கெட்ட விளைவுகளும் ஏற்படுகின்றன. ஆனால் அந்தக் கிராமத்தில் அந்த மண்ணின் வேர்களாக இருக்கும் மக்கள் , மண்ணோடு கலந்துவிட்ட மக்கள் அந்த பிரபஞ்சத்தின் மொழியை அறிவார்கள்.
அதைப் புரிந்து கொண்டு வாழ்பவர்கள்.புரியாததன் பாதிப்பு என்ன என்பதைப் பற்றி எல்லாம் இந்தப் படத்தில் கூறி இருக்கிறோம் .இந்தப் படம் நமது பண்பாடு , தொன்மை வேரோடு வேரடி மண்ணாகக் கலந்துள்ள கலாச்சாரம் நமது மருத்துவ, பாரம்பரியப் பெருமை என அனைத்தையும் பேசி இருக்கிறது.அதற்கான பாதையில் செல்லும் கதையில் நிகழும் அமானுஷ்ய சம்பவங்கள் பற்றியும் சொல்கிறது.இப்படம் நமது மண்ணின் பெருமை, தொன்மை, பாரம்பரியம் ஆன்மீகம். அமானுஷ்யம், மர்மம், திகில் அனைத்தும் கலந்த கலவையாக நிச்சயமாக இருக்கும்.” என்கிறார்.














