Wednesday, June 24, 2026
- Advertisement -
Home Blog Page 64

THALAIVAR173 – இயக்குநர் அறிவிப்பு

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும், பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படமான ‘#THALAIVAR173’ படத்தினை இயக்கும் இயக்குநரை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் (RKFI) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் (RKFI) நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் தயாரிக்கும், இந்த திரைப்படத்தை இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப குழுவினர் மற்றும் தயாரிப்பு பணிகள் குறித்த கூடுதல் தகவல்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.

THALAIVAR173 திரைப்படம் 2027 ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் அன்று பிரம்மாண்டமான வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

#THALAIVAR173 DIRECTOR ANNOUNCEMENT

03, January 2026

RaajKamal Films International officially announces the director of #Thalaivar173, the much-awaited film starring Superstar Rajinikanth. Produced by Kamal Haasan and R. Mahendran under the banner of RaajKamal Films International, the film will be directed by Cibi Chakaravarthi, with music composed by Anirudh.

Filming is set to begin shortly, and further details regarding the cast, technical crew, and production schedule will be announced in due course.

Thalaivar173 is all set for a festive, grand theatrical release in Pongal 2027.

RS Infotainment’s ‘Mandaadi’ Gears Up for a Grand Summer 2026 Theatrical Release

0

RS Infotainment’s much-anticipated production Mandaadi is all set for a grand theatrical release in Summer 2026. Strategically positioned for the peak festive and holiday season, the film aims to deliver a large-scale cinematic experience designed for theatrical audiences.

Marking a significant milestone in Soori’s career, Mandaadi stands as the biggest and most ambitious project he has undertaken to date. The film presents him in a powerful, performance-driven role, backed by a strong narrative and an intense physical transformation. This project marks a defining phase in his journey, showcasing him in a scale and space not seen before.

One of the film’s major strengths lies in Soori’s extraordinary physical commitment. The actor has personally performed all high-risk action sequences set in the sea, without the use of body doubles. For the extensive sailboat racing portions, he underwent rigorous training and hands-on preparation over several months, mastering the physical and technical demands of the sport. This dedication adds authenticity and emotional weight to the film, significantly enhancing its realism and cinematic impact.

Mandaadi is being positioned as a true pan-Indian release, slated to hit screens in Tamil, Telugu, and Hindi. With its universal theme, rooted emotions, and large-scale storytelling, the film aims to connect with audiences across regions and languages.

A major highlight of the film is its sailboat racing sequences, which form the core visual and emotional backbone of the narrative. Designed as a high-adrenaline cinematic experience, these sequences promise a never-before-seen spectacle for Indian audiences. The scale, intensity, and technical finesse of these portions are expected to drive strong word-of-mouth and repeat theatrical viewership.

To achieve this vision, the makers collaborated with international action specialists and employed advanced filming technologies and global-standard sports camera equipment. These elements contribute to a level of realism and visual sophistication rarely attempted in Indian cinema.

The action design has been helmed by renowned stunt choreographer Peter Hein, who worked on the project for nearly 60 days. The extensive effort reflects the film’s commitment to grounded, emotionally rooted action rather than stylized spectacle. The overall production has been mounted on a substantial budget of approximately ₹75 crores, clearly visible in its scale, technical finesse, and visual ambition.
The film boasts a strong technical backbone with music composed by G.V. Prakash Kumar, whose score is expected to elevate both the emotional and dramatic layers of the narrative. Cinematography is handled by S.R. Kathir ISC, known for his realistic and visually striking frames. Production design is led by D.R.K. Kiran, while editing is managed by Pradeep E. Ragav to ensure a tight and engaging narrative flow. Action choreography is by Peter Hein, sound design by Prathap, and visual effects are overseen by R. Harihara Suthan.

The extended technical and creative team includes:

Co-Producer: V. Manikandan

Costume Design: Dinesh Manoharan

Dance Choreography: Azar

Additional Writing: R. Mohanavasanthan & Thiral Sankar

Makeup: N. Sakthivel

Costumer: Nagu

DI: Clement

Publicity Stills: Kabilan

Still Photographer: G. Anand Kumar

Publicity Design: Aesthetic Kunjamma

Production Executive: S.P. Chokkalingam

Executive Producer: G. Magesh

PRO: Rekha

RS இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் ‘மண்டாடி’ – 2026 கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக வெளியாகவிருக்கிறது!
RS இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘மண்டாடி’, பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள இப்படம் 2026 ஆம் ஆண்டு கோடை விடுமுறையைக் குறிவைத்து வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. நடிகர் சூரியின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக ‘மண்டாடி’ படம் இருக்கும். இதுவரை அவர் நடித்த படங்களில் இதுவே பெரும் பொருட்செலவும், மிகுந்த சவால்களும் கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கதைக்காக சூரி தனது உடல் தோற்றத்தாலும் மெனக்கெட்டு பல மாற்றங்களை செய்திருக்கிறார். நடிகர் சூரியை முற்றிலும் புதிய பரிமாணத்தில் இந்த படம் காட்டும். இந்த படத்தின் மிக முக்கியமான பலம் சூரியின் அபாரமான தோற்றம் தான். கதையாக கடல் சார்ந்த ஆக்‌ஷன் அதிரடி காட்சிகள், ஆபத்தான சண்டைக் காட்சிகள் நிறைந்த படம். குறிப்பாக, படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் படகுப்பந்தய (sailboat racing) காட்சிகளுக்காக, பல மாதங்கள் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார் சூரி.
‘மண்டாடி’ படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக உள்ள பான்-இந்தியத் திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படம் மொழிகளைக் கடந்து அதிகம் உணர்வுகளால் பேசக்கூடிய படமாக அனைத்து மொழி ரசிகர்களையும் கவரும்.
படத்தின் மையமான காட்சி படகுப்பந்தய காட்சிகளே. அதிவேகமும், பதற்றமும் நிறைந்த இந்த காட்சிகள், இதுவரை காணாத ஒரு புதிய திரை அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தக் காட்சிகள் தத்ரூபமாகவும், எதார்த்தமாகவும் திரையில் கொண்டுவர, சர்வதேச ஆக்ஷன் நிபுணர்களுடன் இணைந்து படக்குழு பணியாற்றியுள்ளது. உலக தரத்திலான விளையாட்டு கேமராக்கள் மற்றும் நவீன படப்பிடிப்பு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
படத்தின் ஆக்ஷன் வடிவமைப்பை பிரபல ஸ்டண்ட் கோரியோகிராபர் பீட்டர் ஹெய்ன் மேற்கொண்டுள்ளார். சுமார் 60 நாட்கள் அவர் இந்த படத்திற்காக பணியாற்றியுள்ளார். சுமார் ₹75 கோடி செலவில் உருவாகியுள்ள இந்த படம், சூரியின் நடிப்பில் முதல் பிரம்மாண்டப் படமாக இருக்கும்.
தொழில்நுட்ப ரீதியாகவும் ‘மண்டாடி’ ஒரு வலுவான குழுமை கொண்டுள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசை, ஒளிப்பதிவை S.R. கதிர் ISC கவனிக்கிறார். கலை இயக்கம் D.R.K. கீரன், எடிட்டிங் பிரதீப் E. ராகவ் மேற்கொள்கிறார். ஒலிப்பதிவு பிரதாப், விஷுவல் எஃபெக்ட்ஸ் R. ஹரிஹர சுதன் தலைமையில் நடைபெறுகிறது.
படத்தின் தொழில்நுட்ப குழு:
இணை தயாரிப்பாளர்: V. மணிகண்டன்
உடை வடிவமைப்பு: தினேஷ் மனோஹரன்
நடன அமைப்பு: ஆசார்
இணை எழுத்து: R. மோகனவாசந்தன் & திரள் சங்கர்
மேக்கப்: N. சக்திவேல்
காஸ்ட்யூமர்: நாகு
DI: கிளெமெண்ட்
பப்ளிசிட்டி ஸ்டில்ஸ்: கபிலன்
ஸ்டில் புகைப்படக் கலைஞர்: G. ஆனந்த் குமார்
பப்ளிசிட்டி டிசைன்: Aesthetic Kunjamma
பிரொடக்ஷன் எக்ஸிக்யூட்டிவ்: S.P. சொக்கலிங்கம்
எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசர்: G. மகேஷ்
PRO: ரேகா

Director Vetrimaran Launches the First Look of ‘Lakshmikanthan Kolai Vazhkku’

0

The much-anticipated first look of Lakshmikanthan Kolai Vazhkku was officially launched by acclaimed filmmaker Vetrimaran, marking a significant milestone for the team.

The cast and crew of the film met Director Vetrimaran and presented him with the first look, along with select visuals from the film. After watching the clips, he appreciated the efforts, conviction, and sincerity of the entire team and extended his heartfelt wishes for the film’s success. The team expressed their gratitude to him for graciously launching the first look and encouraging the project.

Lakshmikanthan Kolai Vazhkku is directed by Dayal Padmanabhan, known for his rooted and impactful storytelling. The film is produced by K.V. Sabareesh under the banner of 2M Cinemas, with Dayal Padmanabhan also serving as co-producer under D Pictures.

The ensemble cast includes Vetri, Rangaraj Pandey, Brigida, Lizzie Antony, Saravanan, Lollu Sabha Maaran, Loka Kannan, Narmatha, Kavitha Bharathi, Kaniya Bharathi, Aruvi Madhan along with Suba. Veerapandiyan.

Periyarist Suba. Veerapandiyan in an important role, adding strong ideological depth to the narrative.

Technical Team:

Story & Direction: Dayal Padmanabhan

Screenplay & Dialogues: Kavitha Bharathi & Dayal Padmanabhan

Cinematography: M.V. Paneerselvam

Editing: V. Boopathi

Music & Background Score: Darbuka Siva

Production Design: Anbu

Makeup: Kuppusamy

Costume Design: Ramesh

Production Executive: Mariyappan & Kuttykrishnan

Public Relations: Rekha

Currently progressing at a brisk pace in and around Chennai, Lakshmikanthan Kolai Vazhkku is shaping up to be a powerful and socially relevant cinematic experience.

We Thank Director Vetrimaran, for graciously launching the first look and for your valuable encouragement to the entire team.

பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் திரைப்படம் ‘லட்சுமிகாந்தன் கொலை வாழ்க்கு’ . படத்தின் முதல் பார்வை (First Look) இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இது படக்குழுவினருக்கு மிக முக்கிய தருணமாக மாறியிருக்கிறது.
படத்தின் நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களை நேரில் சந்தித்து, படத்தின் முதல் பார்வை போஸ்டரையும், படத்திலிருந்து சில காட்சிகளையும் அவருக்கு காண்பித்தனர். காட்சிகளை பார்த்து படக்குழுவின் உழைப்பை பாராட்டினார். மேலும், இப்படம் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு படத்திற்கு ஆதரவு தெரிவித்த வெற்றிமாறனுக்கு படக்குழுவினர் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

‘லட்சுமிகாந்தன் கொலை வாழ்க்கு’ திரைப்படத்தை, சமூக கதைகள் உருவாக்குவதில் தீர்ந்தவரான இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கியுள்ளார். இப்படத்தை 2 எம் சினிமாஸ் சார்பில் K.V. சபரீஷ் தயாரிக்க, டி பிக்சர்ஸ் சார்பில் தயாள் பத்மநாபன் இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார்.

இப்படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிசி ஆண்டனி, சரவணன், லொள்ளு சபா மாறன், லோகா கண்ணன், நர்மதா, கவிதா பாரதி, கனியா பாரதி, அருவி மதன், சுபா. வீரபாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரியாரியவாதி சுபா. வீரபாண்டியன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது, கதைக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது.

தொழில்நுட்பக் குழு:
கதை & இயக்கம் : தயாள் பத்மநாபன் திரைக்கதை & வசனம் : கவிதா பாரதி, தயாள் பத்மநாபன் ஒளிப்பதிவு : எம்.வி. பனீர்செல்வம் தொகுப்பு : வி. பூபதி
இசை & பின்னணி இசை : தர்புகா சிவா
கலை இயக்கம் : அன்பு
மேக்கப் : குப்புசாமி
உடை வடிவமைப்பு : ரமேஷ் தயாரிப்பு நிர்வாகம் : மாரியப்பன், குட்டிகிருஷ்ணன்
மக்கள் தொடர்பு : ரேகா

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் ‘லட்சுமிகாந்தன் கொலை வாழ்க்கு’, படம் சமூக அக்கறை கொண்ட திரைப்படமாக உருவாகி வருகிறது.

முதல் பார்வையை வெளியிட்டு, படக்குழுவுக்கு ஆதரவு அளித்த இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு, ‘லட்சுமிகாந்தன் கொலை வாழ்க்கு’ படக்குழு சார்பாக இதயம் கனிந்த நன்றிகள்.

A R Rahman Celebrates His Birthday with the Moonwalk Team

0

Fans of A R Rahman and Prabhudeva were in a celebratory mood, overjoyed by the exciting updates surrounding Moonwalk. In a historic first, the musical maestro has sung all five tracks of the Moonwalk album and is also making his acting debut in this feature film.

The much-awaited grand audio launch event of the feature film Moonwalk, held yesterday (Jan 4), turned into a musical night to remember. The evening featured electrifying live performances by A R Rahman and Prabhudeva, along with several dance and singing tribute performances that enthralled the massive audience.

Director Manoj NS thanked the entire cast and crew for making the film truly memorable and expressed his confidence that Moonwalk will bring immense joy and happiness to audiences in theatres.

The excitement reached its peak when A R Rahman made his first appearance on stage and immediately went on to live perform all five Moonwalk songs, back-to-back, sending fans into a frenzy and transforming the evening into a true celebration of music.

India’s Michael Jackson, Prabhudeva, was seen as ever-energetic and high-spirited as he delivered a spectacular 10-minute dance tribute to A R Rahman, performing to all five Moonwalk songs. His passion, precision, and unmatched energy proved that time has not diminished his magic, leaving the audience wanting more. He also danced along his co-stars Yogi Babu, Aju Varghese, Arjun Asokan, Satz, and choreographer Sekhar, making the night even more vibrant and electrifying.

Actor Yogi Babu shared his excitement about portraying 16 different roles in the film, calling it one of the most important characters that drives the story forward. Fans are already thrilled by the three looks released so far, with more exciting getups set to be revealed in the coming days.

Actors Aju Varghese and Arjun Asokan impressed the crowd with their fluent Tamil speeches, expressing their joy at being part of this special comeback film alongside Prabhudeva and A R Rahman. Arjun Asokan’s Moonwalk dance step received special applause from the audience.

Actors Satz, Nishma, Sushmitha, Deepa Akka, Dr. Jacob, and Ramkumar also shared their experiences of working in the film and expressed their happiness for their respective roles.

Prominent personalities including Actor Raghava Lawrence, Producer Kalaipuli S. Thanu, Producer Ishari K. Ganesh, and Director Mysskin attended the event and conveyed their best wishes for the film’s success.

Singing and dance tribute performances by Sivamani, Baba Baskar, Sanvee Meghna, Uthara Unnikrishnan, Parvathi Meenakshi, V Unbeatables, Keshavi Chetri, Baba Jackson, KMJ Simson, JR Prabhudeva Chakri, Noble Master, Johny Master, Ashok Raja Master, and Sridhar Master added immense entertainment value to the grand event.

The evening concluded on a high note as Prabhudeva brought A R Rahman back on stage, getting the maestro to shake a leg to the iconic ‘Mukkala’, followed by a grand cake-cutting ceremony* celebrating A R Rahman’s birthday, along with the entire cast and crew of Moonwalk and an audience of over 10,000 fans.

The audience was overjoyed to experience all five Moonwalk songs performed live, and the official tracks will be released online one by one in the coming days. With promotions now set to go into full swing, Moonwalk is gearing up for its grand theatrical release in May 2026.

“மூன்வாக்” படக்குழுவுடன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் கொண்டாட்டம் !!

ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரபுதேவா ரசிகர்கள், “மூன்வாக்” திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களால் மிகுந்த மகிழ்ச்சியும் கொண்டாட்டத்துடனும் உள்ளனர்.

வரலாற்றில் முதல் முறையாக, இசை மாமேதை ஏ.ஆர்.ரஹ்மான், மூன்வாக் ஆல்பத்தில் உள்ள ஐந்து பாடல்களையும் தானே பாடியிருப்பதுடன், இந்த திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகிறார்.

நேற்று (ஜனவரி 4) நடைபெற்ற, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “மூன்வாக்” திரைப்படத்தின் மாபெரும் ஆடியோ வெளியீட்டு விழா, மறக்க முடியாத இசை இரவாக மாறியது.

அந்த மாலையில், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரபுதேவா ஆகியோரின் அசத்தலான நிகழ்ச்சிகளுடன், பல நடன மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றது, ரசிகர் கூட்டத்தை பெரிதும் உற்சாகப்படுத்தியது.

இயக்குநர் மனோஜ் NS, இத்திரைப்படத்தை உண்மையிலேயே நினைவில் நிற்கும் ஒன்றாக உருவாக்க உதவிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், மூன்வாக் திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு பேரானந்தமும் மகிழ்ச்சியும் தரும் என தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் முதல் முறையாக தோன்றிய தருணத்தில் உற்சாகம் உச்சத்தை எட்டியது. உடனடியாக அவர், “மூன்வாக்” திரைப்படத்தின் ஐந்து பாடல்களையும் தொடர்ச்சியாக நேரடியாகப் பாடி, ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தி, அந்த மாலையை உண்மையான இசை கொண்டாட்டமாக மாற்றினார்.

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபுதேவா, எப்போதும் போல ஆற்றலுடனும் உற்சாகத்துடனும், மூன்வாக் திரைப்படத்தின் ஐந்து பாடல்களுக்கும் ஆடி, பிரமாண்டமான 10 நிமிட நடன அஞ்சலியை, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அர்ப்பணித்து, வழங்கினார்.

அவரது ஆர்வம், துல்லியம் மற்றும் ஒப்பற்ற ஆற்றல், காலம் அவரது மேஜிக்கை குறைக்கவில்லை என்பதை நிரூபித்ததுடன், ரசிகர்களை மேலும் மேலும் அவரது நடனத்தைக் காணும் ஆவலைத் தூண்டியது.

அவர் தனது இணை நடிகர்களான யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ் மற்றும் நடன இயக்குநர் சேகர் ஆகியோருடன் இணைந்து மேடையில் நடனமாடி, அந்த இரவை மேலும் கலகலப்பாகவும் உற்சாகமாகவும் மாற்றினார்.

நடிகர் யோகி பாபு, இந்த திரைப்படத்தில் 16 விதமான வேடங்களில் நடித்திருப்பதாக தெரிவித்து, இது கதையை முன்னெடுத்து செல்லும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறினார். இதுவரை வெளியிடப்பட்ட மூன்று தோற்றங்களே ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ள நிலையில், வரும் நாட்களில் மேலும் பல வேடங்கள் வெளிவரும் என தெரிவித்தார்.

நடிகர்கள் அஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன், தங்களின் சரளமான தமிழ் பேச்சுகளால் பார்வையாளர்களை கவர்ந்தனர். பிரபுதேவா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இணைந்து நடித்த இந்த சிறப்பு திரைப்படத்தின் ஒரு பகுதியாக தாங்கள் இருப்பது மகிழ்ச்சி எனத் தெரிவித்தனர். அர்ஜுன் அசோகனின் ‘மூன்வாக் நடன’ அசைவிற்கு பார்வையாளர்களிடமிருந்து சிறப்பு கைதட்டல் கிடைத்தது.

நடிகர்கள் சாட்ஸ், நிஷ்மா, சுஷ்மிதா, தீபா அக்கா, டாக்டர் ஜேக்கப் மற்றும் ராம்குமார் ஆகியோரும், இந்த திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, தங்களுக்குக் கிடைத்த கதாபாத்திரங்களுக்கு மகிழ்ச்சி தெரிவித்தனர்.

நடிகர் ராகவா லாரன்ஸ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர் ஐசரி.K.கணேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பல முக்கிய திரை பிரபலங்கள் விழாவில் கலந்துகொண்டு, திரைப்படத்திற்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

சிவமணி, பாபா பாஸ்கர், சான்வீ மேக்னா, உத்தரா உன்னிகிருஷ்ணன், பார்வதி மீனாட்சி, வி அன்பீடபிள்ஸ், KTV சேத்ரி, பாபா ஜாக்சன், KMJ சிம்சன், J.R. பிரபுதேவா சக்ரி, நோபல் மாஸ்டர், ஜானி மாஸ்டர், அசோக் ராஜா மாஸ்டர் மற்றும் ஸ்ரீதர் மாஸ்டர் ஆகியோரின் பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகள் விழாவிற்கு பெரும் கலைச்சுவையையும் மகிழ்ச்சியையும் சேர்த்தன.

இறுதியாக, பிரபுதேவா, ஏ.ஆர்.ரஹ்மானை மீண்டும் மேடைக்கு அழைத்து, புகழ்பெற்ற “முக்காலா” பாடலுக்கு அவரை நடனமாட வைத்தார். அதன் பின்னர், மூன்வாக் திரைப்படத்தின் முழு குழுவினரும், 10,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களும் இணைந்து, ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாளை கொண்டாடும் பிரம்மாண்ட கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மூன்வாக் திரைப்படத்தின் ஐந்து பாடல்களையும் நேரடியாக அனுபவித்த ரசிகர்கள் பேரானந்தத்தில் திளைத்தனர். அதிகாரப்பூர்வ பாடல்கள் வரும் நாட்களில் ஒவ்வொன்றாக இணையத்தில் வெளியிடப்பட உள்ளன. விளம்பர பணிகள் முழு வேகத்தில் தொடங்கவுள்ள நிலையில், மூன்வாக் திரைப்படம் 2026 மே மாதத்தில் பிரம்மாண்ட திரையரங்க வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

புத்தர் பற்றி இப்படத்தில் சொல்லியிருக்கும் விசயம் கண்டிப்பாக பெரிதாக பேசப்படும். – தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு ” பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை ரக்‌ஷிதா…!!!”

0

99/66 ” தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு ” பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற பட நிறுவனம் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி தயாரித்திருக்கும் படம் ” 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு “.

இந்தப் படத்தில் சபரி, ரோகித் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ரக்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா இருவரும் நடித்துள்ளனர். மற்றும் பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், பி.எல்.தேனப்பன், ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரும் இயக்குநருமான எம்.எஸ்.மூர்த்தி நடித்துள்ளார்.

இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிரம்மாண்ட அரங்கில், படக்குழுவினருடன், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் ஆளுமைகள், திரை ஆளுமைகள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

மேலும் இவ்விழாவில் மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் இரண்டாவது தயாரிப்பாக உருவாகும் “ஹஸ்கி ஹவுஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வினில்

கலைப்புலி தாணு பேசியதாவது..,
99/66 பிரம்மாண்டமான படைப்பு. இயக்குநர் எந்த நேரத்திலும் வியாபார சிந்தனையுடன் இருப்பதால் தான் இவ்வளவு பெரிய படைப்பு தந்துள்ளார். நான் முதன் முதலில் தயாரிப்பாளராக திகில் படம் தான் ஆரம்பித்தேன், தம்பி மூர்த்தியும் அதைத்தான் செய்துள்ளார். இப்படம் படக்குழுவுக்கு பெரிய வெற்றியை பெற்றுத்தரும். மூர்த்திக்கும் அவரது துணைவிக்கும் என் வாழ்த்துக்கள்

மாண்புமிகு வள்ளிநாயகம் பேசியதாவது..,
தம்பி மூர்த்தி அவர்களின் திரைப்பட சேவை இன்று துவங்கியுள்ளது. பிள்ளையார் வைத்து அழகாக பாடலை எடுத்திள்ளார். உலகமெங்கும் அவர் படம் ஒளிபரப்பாகும், இன்று நாம் சந்திரனுக்கு செல்கிறோமே அந்த சந்திரனும் சூரியனும் வாழ்த்தி மகிழ்வார்கள். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறட்டும். மூர்த்தி மிகப்பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள். படக்குழு வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது..,
ஒரே மேடையில் மூன்று விழாவை நடத்துவது இங்கு தான் பார்க்கிறேன். நாயகி ரக்‌ஷிதா ரசிகன் நான். தயாரிப்பாளர் பில்டிங் கட்டுகிற வேலையை விட்டுவிட்டு, சினிமாவுக்குள் வந்து கலக்குகிறார். விளம்பர படம் எடுக்க வந்து, இப்போது கதை கேட்டு படம் செய்கிறார். இவர் என்னையும், பேரரசையும் மீண்டும் இயக்க வைக்கிறேன் என சொல்லியிருக்கிறார். அவர் மூன்றாவது படத்திற்கு இங்கேயே பூஜை போட்டுவிட்டார். பாடலும் டிரெய்லரும் அட்டகாசமாக உள்ளது. நடிப்பு ராட்சசி ரக்‌ஷிதா கலக்கியிருக்கிறார். படக்குழு அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் படம் பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

திரு ஞானசம்பந்தம் பேசியதாவது…
இந்த விழா அழைப்பிதழே மிக வித்தியாசமாக இருக்கிறது. ஒரு பக்கம் கருப்பண்ண சாமி அரிவாளுடன் இருக்க, இன்னொரு பக்கம் புத்தர் முகம் இருக்கிறது. இது எல்லாமும் சேர்ந்து, மிக வித்தியாசமனா படைப்பாக இப்படம் இருக்கும். இயக்குநர் மூர்த்தி மற்றும் படக்குழு அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

இயக்குநர் பேரரசு பேசியதாவது..,
ஒரே மேடையில் மூன்று விழா நடத்துவது இங்கு தான் பார்க்கிறேன். தயாரிப்பாளர் தாணுவையே மிஞ்சிவிட்டார் மூர்த்தி வாழ்த்துக்கள். ஆர் வி உதயகுமார் இயக்குநர் சங்க தலைவரா? இல்லை ரக்‌ஷிதா ரசிகர் மன்ற தலைவரா எனத் தெரியவில்லை. அந்தளவு தீவிர ரசிகராக இருக்கிறார். ரக்‌ஷிதா எந்த கதாப்பாத்திரம் தந்தாலும் அப்படியே மாறிவிடுகிறார். அவருக்கு வாழ்த்துக்கள். பேய்ப்படம் என நினைத்தால் பாடல் எல்லாம் பக்திப்படம் போல உள்ளது. பிள்ளையார் பாடல், கருப்பண்ண சாமி பாடல், புத்தர் பாடல் எல்லாம் பயங்கர என்ர்ஜியாக உள்ளது. அமைதிக்கான கடவுள் புத்தர் அவர் பற்றி தமிழ் சினிமாவில் வரவில்லை. இப்படத்தில் வந்துள்ளது மகிழ்ச்சி. மூர்த்தி அவர்களின் தன்னம்பிக்கைக்கும் உழைப்பிற்கும் இப்படம் பெரிய வெற்றி பெறட்டும். நன்றி.

இயக்குநர் அகத்தியன் பேசியதாவது..,
டிரெய்லர் பார்த்தேன் மிக நன்றாக இருந்தது. இங்கு படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் தனித்தனியாக புரமோ ஒளிபரப்பியது மகிழ்ச்சியாக இருந்தது. எந்த புதுப்படத்திலும் அதை செய்ய மாட்டார்கள். இயக்குநர், தயாரிப்பாளர் மூர்த்திக்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

நடிகை ரக்‌ஷிதா பேசியதாவது..,
உங்கள் ஆதரவு எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. எல்லோரும் என் ரசிகர் மன்ற தலைவர் என சொல்லிக்கொள்வது மிகப்பெரிய மகிழ்ச்சி. எனக்கு ஷீட்டிங்கின் போது சின்னப்படம் என நினைத்தேன் இங்கு விழா பிரம்மாண்டமாக நடப்பதைப் பார்த்தால் மிகப்பெரிய படமாக தெரிகிறது. மூர்த்தி சார் எல்லோரையும் மிக நன்றாக பார்த்துக் கொள்வார். புத்தர் பற்றி இப்படத்தில் சொல்லியிருக்கும் விசயம் கண்டிப்பாக பெரிதாக பேசப்படும். பட ஷீட்டிங் மிக ஜாலியாக இருக்கும். மூர்த்தி சார் மிக நன்றாக படத்தை எடுத்துள்ளார். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.

இயக்குநர் தயாரிப்பாளர் மூர்த்தி பேசியதாவது..,
நான் சினிமாவுக்கு புதியவன் எனக்கு தெரிந்ததை என் அறிவை வைத்து, மிக எளிமையாக இப்படத்தை எடுத்துள்ளேன். படம் பற்றி நீங்கள் தான் சொல்ல வேண்டும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.

அரசு அனுமதி பெற்று தாய்லாந்து, பர்மா, இலங்கை போன்ற பகுதிகளில் புத்த மடலாயத்தின் உள்ளேயே சென்று ஐநூறு புத்த பிக்குகளின் மத்தியில் பாடல்களையும் – சில காட்சிகளையும் பிரம்மாண்டமான முறையில் படக்குழு படமாக்கியுள்ளது.

மற்றும் படத்தில் AI-CG – காட்சிகள் நவீன தொழில் நுட்பத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக வடிமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்திற்கு சேவிலோ ராஜா
ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை மீனாட்சி சுந்தரம் கையாள, ஜெயமுருகன் கலை இயக்கத்தைச் செய்துள்ளார். நடன இயக்குநர்களாக ஸ்ரீதர் -ஆனந்த் இருவரும் பணியாற்றியுள்ளனர்.
பயர் கார்த்திக் பரபரப்பான சண்டைக்காட்சிகளை உருவாக்கியுள்ளார்.
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்.
தயாரிப்பு நிறுவனம் – மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்.
கதை,திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்துத் தயாரித்து இயக்கியுள்ளார் எம்.எஸ். மூர்த்தி.

The biopic portrays the inspiring life of Velu Nachiyar, the fearless queen of Sivagangai

0

The biopic portrays the inspiring life of Velu Nachiyar, the fearless queen of Sivagangai and one of India’s earliest women freedom fighters. After her husband Muthuvaduganatha Thevar is killed by the British East India Company, Velu Nachiyar rises from exile to lead a determined resistance. Trained in warfare and strategy, she forges alliances with Hyder Ali and Tipu Sultan, builds a powerful women’s army, and plans a historic counterattack. The film highlights her courage, leadership, and the iconic act of Kuyili, the first female suicide bomber, leading to the recapture of Sivagangai. The story celebrates Velu Nachiyar as a symbol of valor, sacrifice, and women’s empowerment in India’s freedom struggle.

இந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம், சிவகங்கை அரசியாகவும் இந்தியாவின் முதல் பெண்சுதந்திரப் போராளிகளில் ஒருவராகவும் திகழ்ந்த வீரமங்கை வேலுநாச்சியாரின் வீரமான வாழ்க்கையைப் பதிவு செய்கிறது. அவரது கணவர் முத்துவடுகநாத தேவர், ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் கொல்லப்பட்ட பிறகு, வேலுநாச்சியார் துன்பத்துக்கு அடங்காமல் எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்குகிறார். போர்க்கலை, ஆயுதப் பயிற்சி மற்றும் அரசியல் தந்திரங்களில் தேர்ச்சி பெற்ற அவர், ஹைதர் அலி மற்றும் டிப்பு சுல்தானுடன் கூட்டணி அமைத்து, பெண்களால் உருவான சக்திவாய்ந்த படையை உருவாக்குகிறார். குயிலி என்ற வீரமங்கை மேற்கொண்ட தியாகச் செயல் மூலம் சிவகங்கையை மீட்டெடுக்கும் வரலாற்றுச் சம்பவம் திரைப்படத்தின் முக்கிய அம்சமாகும். இந்தக் கதை, தைரியம், தியாகம், தலைமைத் திறன் மற்றும் பெண்சாதிகானத்தின் அடையாளமாக வேலுநாச்சியாரை உயர்த்திக் காட்டுகிறது.

‘Spirit’ Director Sandeep Reddy Vanga Launches the Title and First-Look Poster of K. Kranthi Madhav’s Dil Diya – A Naked Truth, a New Box-Office Grammar for Summer 2026

0

Dil Diya – A Naked Truth has formally stepped into the spotlight with the release of its title and first-look poster, marking the first public move for the upcoming feature. The reveal, carried out by Spirit director Sandeep Reddy Vanga, has sparked early interest across industry circles, setting the stage for the film’s rollout. Produced by Poorna Naidu under the Sreeyas Chitra – A Poorna Naidu Production banner and written and directed by K. Kranthi Madhav, the film positions itself as a contemporary drama rooted in emotional conflict and personal relationships.

https://twitter.com/i/status/2007338072154013783

For K. Kranthi Madhav, Dil Diya – A Naked Truth continues a body of work defined by emotional sensitivity and narrative restraint. Over the years, he has earned recognition for telling stories that engage deeply with human vulnerability rather than surface-level drama. Films such as Onamalu, Malli Malli Idi Rani Roju, and World Famous Lover reflected his interest in love, moral dilemmas, emotional breakdown, and inner conflict. With Dil Diya – A Naked Truth, he returns to similar emotional terrain, this time through a more direct and contemporary lens shaped by obsession, failure, intimacy, and self-worth.

The film stars Chaitanya Rao Madadi, Ira, Sakhee, and Jessy in the lead roles, supported by Mani Chandana, Pramodini, and Veera Shankar in key supporting parts. The casting reflects the film’s grounded narrative approach, favouring performances that feel organic and lived-in. Rather than leaning on heightened drama, the storytelling allows emotion to emerge naturally through character interaction and consequence.

The first-look poster offers a restrained but telling glimpse into the film’s emotional world. Minimal in design and free from visual excess, the imagery hints at vulnerability, contradiction, and inner turbulence. Instead of spelling out its themes, the poster suggests an inward-looking narrative driven by personal truth. This visual language aligns closely with Kranthi Madhav’s filmmaking sensibility, where emotional clarity and honesty take precedence over stylised spectacle.

Produced by Poorna Naidu with Srikanth V serving as co-producer, Dil Diya – A Naked Truth is backed by a strong and experienced technical team. P.G. Vinda handles cinematography, expected to bring an intimate yet cinematic visual texture. Music is composed by Phani Kalyan, while editing is by Ra-Sha (Ravi – Shashank). Chinna oversees production design, Dhani Aelay handles publicity designs, Star Circle manages digital marketing, and publicity is led by S.K. Naidu along with Phani Kandukuri (Beyond Media).

Positioned as a youthful love story with emotional depth, Dil Diya – A Naked Truth aims to present an honest and unfiltered portrayal of modern relationships. Moving beyond idealised romance, the film engages directly with emotional complexity and personal consequence, seeking to redefine intimacy within contemporary Telugu Cinéma.

With a clear director-led vision, strong creative backing, and early momentum following its title and first-look reveal, Dil Diya – A Naked Truth is being positioned as a new box-office grammar, set to arrive in theatres in Summer 2026.

A Cinematic Leap of Faith: Zee Studios’ Prestigious Gandhi Talks with A.R. Rahman’s Music Set to Release on 30th January 2026

0

Zee Studios has announced the release date of its most ambitious and unconventional cinematic offering, Gandhi Talks, slated to hit theatres on 30th January 2026. Designed as a rare silent film in modern Indian cinema, Gandhi Talks stands as a bold creative leap where silence becomes the strongest form of storytelling.

At a time when cinema is often defined by scale and sound, Gandhi Talks chooses restraint, emotion, and stillness to communicate its message. The film brings together an extraordinary ensemble featuring Vijay Sethupathi, Arvind Swamy, Aditi Rao Hydari, and Siddharth Jadhav, all of whom have consciously stepped into a form of storytelling that relies purely on performance and expression.

For actors like Vijay Sethupathi and Arvind Swamy, the decision to headline a silent film reflects their unwavering belief in craft-driven cinema. Known for consistently choosing roles that challenge convention, their involvement underlines the film’s artistic integrity. Aditi Rao Hydari and Siddharth Jadhav further enrich the narrative with deeply nuanced, expression-led performances embracing vulnerability and emotion without the support of dialogue.

Adding an exceptional layer to the film is A.R. Rahman’s music, which becomes the emotional voice of Gandhi Talks. In the absence of spoken words, Rahman’s score acts as the narrator, guiding the audience through the film’s emotional landscape. His music transforms silence into a powerful, immersive experience elevating the film to a global, festival-ready canvas.

Speaking about the vision behind the film, director Kishore Belekar shared,
“Gandhi Talks is a film about trusting silence. As Indian cinema marks over a century of storytelling, we wanted to return to the medium’s most elemental form pure performance and emotion. The actors embraced that vulnerability completely, and A.R. Rahman’s score became the film’s voice. With Zee Studios’, Meera Chopra’s support, we were able to make a bold, honest piece of cinema.”

With Gandhi Talks, Zee Studios once again reinforces its commitment to supporting path breaking, prestigious storytelling films that challenge cinematic norms and expand the language of Indian cinema.

Set to release on 30th January 2026, Gandhi Talks promises to be a cinematic experience that speaks volumes without saying a word.

திரையில் ஒரு துணிச்சலான சினிமா முயற்சி:
Zee Studios வழங்கும் “காந்தி டாக்ஸ்” ( ‘Gandhi Talks’ ) – விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி நடிப்பில் A.R. ரஹ்மான் இசையில் 30 ஜனவரி 2026 அன்று வெளியாகிறது !!*

Zee Studios ரசிகர்களால் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் வழக்கத்திற்கு மாறான திரைப் படைப்பான “காந்தி டாக்ஸ்” திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் வரும் 30 ஜனவரி 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நவீன இந்திய சினிமாவில் அரிதாகக் காணப்படும் ஒரு மௌனத் திரைப்படமாக வடிவமைக்கப்பட்டுள்ள “காந்தி டாக்ஸ்”, வசனங்கள் ஏதுமின்றி, மௌனமே கதையை சொல்லும், மிக வலுவான ஒரு துணிச்சலான படைப்பாக உருவாகியுள்ளது.

சினிமா பெரும்பாலும் பிரமாண்டம் மற்றும் ஒலியால் உருவாக்கப்படும் இக்காலகட்டத்தில், “காந்தி டாக்ஸ்” அதிலிருந்து மாறுபட்டு, உணர்ச்சி மற்றும் அமைதியைத் தனது மொழியாக தேர்ந்தெடுத்துள்ளது. இந்தப் படம், தனது கருத்தை வெளிப்படுத்த சத்தமின்றி, உணர்வோடு, நிசப்தமாக பேசுகிறது.

இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகிய அபூர்வமான நடிகர் குழு ஒன்றிணைந்துள்ளது. இவர்கள் அனைவரும் உரையாடல்களில்லாமல், முழுமையாக நடிப்பும் வெளிப்பாடும் மட்டுமே சார்ந்த கதையாடலை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

விஜய் சேதுபதி மற்றும் அரவிந்த் சுவாமி போன்ற நடிகர்களுக்கு, ஒரு மௌன திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பது, கலைநேர்மையையும் நடிப்பின் மீது கொண்ட ஆழ்ந்த நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. வழக்கத்திற்கு மாறான, சவாலான கதாபாத்திரங்களைத் தொடர்ந்து தேர்ந்தெடுப்பதற்காக அறியப்படும் இவர்களின் பங்கேற்பு, இந்த படத்தின் கலைத் தன்மையை உறுதிப்படுத்துகிறது. அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ், உரையாடல் இல்லாத நிலையிலும், மிக நுணுக்கமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நடிப்பின் மூலம், கதைக்கு மேலும் ஆழம் சேர்த்துள்ளார்கள்.

இந்த படத்திற்கு பெரும் பலம் சேர்த்து, பின்னணியில் உழைத்திருப்பது A.R. ரஹ்மான் அவர்களின் இசை. காந்தி டாக்ஸ் படத்தில், பேசப்படாத வார்த்தைகளுக்குப் பதிலாக, ரஹ்மான் அவர்களின் இசையே உணர்ச்சிகளின் குரலாக மாறுகிறது. உரையாடல்கள் இல்லாத இந்த உலகில், அவரது பின்னணி இசைதான் கதையாசிரியராக மாறி, பார்வையாளர்களை உணர்ச்சிப் பயணத்திற்குள் அழைத்துச் செல்கிறது. இந்த இசை, மௌனத்தை ஒரு வலுவான, ஆழமான அனுபவமாக மாற்றி, திரைப்படத்தை சர்வதேச தரம் கொண்ட, திரைப்பட விழாக்களுக்கு ஏற்ற படைப்பாக உயர்த்துகிறது.

திரைப்படத்தினைப் பற்றி இயக்குநர் கிஷோர் பெலேகர் கூறியதாவது:
“காந்தி டாக்ஸ்” என்பது மௌனத்தின் மீது வைத்த நம்பிக்கை. இந்திய சினிமா நூற்றாண்டை கடந்த இந்த வேளையில், அதன் அடிப்படை வடிவமான தூய நடிப்பும் உணர்ச்சியும் கொண்ட கதை சொல்லலுக்குத் திரும்ப விரும்பினோம். நடிகர்கள் அந்த வெளிப்படைத்தன்மையை முழுமையாக ஏற்றுக்கொண்டனர். A.R. ரஹ்மான் அவர்களின் இசையே இந்த படத்தின் குரலாக மாறியது. Zee Studios மற்றும் மீரா சோப்ராவின் ஆதரவுடன், நாங்கள் ஒரு துணிச்சலான, நேர்மையான சினிமாவை உருவாக்க முடிந்தது.”

“காந்தி டாக்ஸ்” மூலம், சினிமாவின் மரபுகளை சவாலுக்கு உட்படுத்தும், புதிய கதை மொழிகளை உருவாக்கும், மதிப்புமிக்க படைப்புகளை ஆதரிக்கும் தனது உறுதியை Zee Studios மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

30 ஜனவரி 2026 அன்று வெளியாகும் “காந்தி டாக்ஸ்”, ஒரு வார்த்தையும் பேசாமல், உணர்வுகளுடன் பேசும் ஒரு அபூர்வமான சினிமா அனுபவமாக இருக்கும்.

பிகே7 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் டாக்டர் பிரகபல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜாக்கி’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு

0

யுவான் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி முதன்மை வேடங்களில் நடித்துள்ள ‘ஜாக்கி’, மதுரையில் நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக கொண்டுள்ளது

மழைக்காடுகளில் நடத்தப்படும் சவாலான மட் (Mud) ரேஸ் பந்தயத்தை மையமாக வைத்து இந்தியாவில் முதல் முறையாக உருவான ‘மட்டி’ திரைப்படத்தை வெற்றிகரமாக இயக்கி பாராட்டுகளைப் பெற்ற டாக்டர் பிரகபல் இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜாக்கி’.

பிகே7 ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் ‘ஜாக்கி’, மதுரையை களமாகக் கொண்டு நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக கொண்டு மண் மணத்துடனும் மண்ணின் மைந்தர்களின் குணத்துடனும் உருவாகியுள்ளது.

‘ஜாக்கி’ திரைப்படத்தில் இயக்குநர் டாக்டர் பிரகபல்லின் முதல் படமான ‘மட்டி’ திரைப்படத்தில் நடித்த யுவான் கிருஷ்ணா மற்றும் ரிதான் கிருஷ்ணாஸ் கதை நாயகர்களாக நடிக்க, அம்மு அபிராமி கதை நாயகியாக நடித்துள்ளார். திரைப் பிரபலங்கள் முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர்.

‘ஜாக்கி’ திரைப்படத்தின் விறுவிறுப்பான டீசர் சென்னை முகப்பேர் கிழக்கு வேலம்மாள் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை (ஜனவரி 3) மாலை நடைபெற்ற 13ம் ஆண்டு வீதி விருது விழாவில் வெளியிடப்பட்டது. டீசரை கண்ட பார்வையாளர்கள் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இத்திரைப்படத்திற்கு சக்தி பாலாஜி இசையமைக்க, உதயகுமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார். கிரியேட்டிவ் ப்ரொடியூசராக ஆர்.பி. பாலா பணிபுரிந்துள்ளார். புரொடக்ஷன் கன்ட்ரோலர்: எஸ். சிவகுமார், கலை இயக்குநர்: சி. உதயக்குமார், ஆடியோகிராபி: எம்.ஆர். ராஜாகிருஷ்ணன், சண்டை பயிற்சி: ஜாக்கி பிரபு, உடைகள்: ஜோசுவா மேக்ஸ்வெல் ஜே, ஒப்பனை: பாண்டியராஜன், கலரிஸ்ட்: ரங்கா.

பிகே7 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் டாக்டர் பிரகபல் இயக்கத்தில் யுவான் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி முதன்மை வேடங்களில் நடித்துள்ள ‘ஜாக்கி’ விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.

*

Teaser of ‘Jockey’ produced by PK7 Studios and directed by Dr. Pragabhal unveiled in style

‘Jockey’, starring Yuvan Krishna, Ridhaan Krishnas, and Ammu Abhirami in lead roles, is centered around the traditional cultural sport of goat fight (keda sandai) that takes place in Madurai

Following the success and critical acclaim of ‘Muddy’, the first film in India based on the challenging mud racing sport conducted in rainforests, director Dr. Pragabhal is gearing up with next film titled ‘Jockey’.

Produced and presented by PK7 Studios, ‘Jockey’ is set in Madurai and revolves around the traditional cultural sport of goat fighting (keda sandai), capturing the essence of the land and the character of its people.

Yuvan Krishna and Ridhaan Krishnas, who starred in director Dr. Pragabhal’s maiden movie ‘Muddy’, play the protagonists, while Ammu Abhirami plays the female lead. Several popular actors have played important characters.

The exciting teaser of ‘Jockey’ was released on Saturday (January 3) evening at the 13th Annual Veethi Virudhu event held at Velammal Higher Secondary School, Mogappair East, Chennai. The audience who watched the teaser congratulated the film crew.

The film features music by Sakthi Balaji, cinematography by Udhayakumar, and editing by Srikanth. R.P. Bala worked as the Creative Producer. Production Controller: S. Sivakumar, Art Director: C. Udhayakumar, Audiography: M.R. Rajakrishnan, Stunt Choreography: Jackie Prabhu, Costumes: Joshua Maxwell J, Makeup: Pandiyarajan, Colorist: Ranga.

‘Jockey’, produced by PK7 Studios and directed by Dr. Pragabhal, starring Yuvan Krishna, Ridhaan Krishnas, and Ammu Abhirami in lead roles, will be released in theatres soon.

”பராசக்தி” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

0

Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் “பராசக்தி”.

1960 களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் தமிழின் பெருமை சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் 2026 பொங்கல் வெளியீடாக ஜனவரி 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை வெளியிடுகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் (சாய் ராம் கல்லூரி) கல்லூரியில், படக்குழுவினர் கலந்துகொள்ள, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில்…,

நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது..

பராசக்தி என்ற பெயரே மிகுந்த வலிமை கொண்டது. அந்த பெயருக்கு ஏற்றபடி, இந்த படமும் அதே அளவு தாக்கத்தை ஏற்படுத்தும். 1960-களுக்குள் டைம் டிராவல் செய்து பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் படம் இது. மாணவர்கள் எப்போதுமே சக்திவாய்ந்தவர்கள் அவர்கள் எந்த அளவுக்கு வலிமை கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதை இந்த படம் அழுத்தமாக காட்டுகிறது. படத்தின் உள்ளடக்கம் குறித்து பல கருத்துகள் வெளிவருகின்றன. ஆனால் பலரின் தியாகங்களை நாம் நேர்மறையாகவும் மரியாதையுடனும் பதிவு செய்திருக்கிறோம்.

கொட்டுகாளி படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சிக்கு சுதா மேம் வந்திருந்தார். அப்போது அவர் எனக்கு ஒரு கதையைச் சொன்னார். அது ஒரு காதல் கதை. நான் ஏதோ பெரிய விஷயம் எதிர்பார்த்திருந்தேன். அச்சமயம் அவர் சொன்ன ஒரே ஒரு வரி தான் என்னை ஆச்சரியப்பட வைத்தது. அதற்கு மேல் சொல்ல மாட்டேன்.
பின்னர் அவர் ஸ்கிரிப்ட் புத்தகத்தை கொடுத்து படிக்கச் சொன்னார். உடனே என் மேனேஜரிடம், இந்த படத்தை நான் கண்டிப்பா பண்ணுறேன் இன்று இரவே ஸ்கிரிப்ட்டை படிச்சு முடிச்சுடுவேன்னு சொன்னேன். ஸ்கிரிப்ட் திறந்ததும் அது ஆங்கிலத்தில் இருப்பதை பார்த்து, மீண்டும் கால் செய்து இதுக்கு கொஞ்சம் நேரம் தேவைப்படும்னு சொல்ல வேண்டியதாகிவிட்டது. அடுத்த நாள், ஸ்கிரிப்ட்டை முழுசா படிச்ச மாதிரி நடிச்சுட்டு போயிருந்தேன்.

சுதா மேம் ரொம்ப ஸ்ட்ரிக்ட் அப்படின்னு எல்லாரும் எனக்கு நிறைய பில்ட் அப் கொடுத்திருந்தாங்க. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போன பிறகுதான் தெரிஞ்சது, அவர் சீன்களையே ஆங்கிலத்தில் தான் விளக்குவார். அதுவும் ஷேக்ஸ்பியர் ஆங்கிலம் மாதிரி! அதை நான் சரியாக ஃபாலோ பண்ண முடியல.
ஒரு கட்டத்தில் அவர் என்னிடம் வந்து பேசினார். அப்போது தான், எனக்கு ஆங்கிலம் தான் பிரச்சனை, இப்போ நான் கௌதம் மேனன் சார் கூட வாழ்ற மாதிரி உணர்றேன்னு சொன்னேன். அதை கேட்டதும், அந்த நாளிலிருந்து அவர் சீன்களை முழுக்க முழுக்க தமிழிலேயே விளக்க ஆரம்பிச்சார். அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். அதில் மிக முக்கியமானது கடுமையான உழைப்பு மற்றும் முழுமையான அர்ப்பணிப்பு.

ரவி சார் உங்களை பார்த்ததும் என் கல்லூரி நாட்கள் நினைவுக்கு வந்துச்சு. நான் கல்லூரியில் படிக்கும்போது உங்கள் படங்களை தொடர்ந்து பார்த்தவன். குறிப்பாக எம். குமரன் S/O மகாலட்சுமி படத்தில் உங்கள் உடை, ஸ்டைல் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒருநாள் சுதா மேம் வந்து, இந்த படத்தில் நடிக்க ரவி சார் ஓகே சொல்லிட்டாங்க ன்னு சொன்னாங்க.
உடனே நான் தலைவர் மோடுக்கு போயிட்டு, எது ஜெயம் ரவி ஆ? ன்னு ரியாக்ட் பண்ணிட்டேன். சந்தோஷப்பட வேண்டிய விஷயம் தான், ஆனாலும் அதே நேரத்தில் ஒரு பெரிய ஆச்சரியமும் இருந்துச்சு. தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சுவாமி எவ்வளவு சக்திவாய்ந்த வில்லனாக இருந்தாரோ, அதே மாதிரி பராசக்தியில் ரவி சார் ஒரு மிகப் பவர்ஃபுல் வில்லன் கதாபாத்திரத்தில் வருகிறார். திரையில் உங்களோடு நெருக்கமாக நடிக்கக் கிடைத்த ஒவ்வொரு நாளையும் நான் மனதார ரசித்தேன்.

ஜனவரி ஒன்பதாம் தேதி நடைபெறும் ஜனநாயகனை தியேட்டருக்கு செலிப்ரேட் பண்ணுங்கள். 33 வருடம் திரைத்துறையில் என்டர்டைன் பண்ணவர். கடைசி படம் என்று சொல்லி இருக்கிறார் ஆகவே ஜனவரி ஒன்பதாம் தேதி அதனை நாம் கொண்டாட வேண்டும்.

அடுத்த நாள் ஜனவரி 10ஆம் தேதி நம்ம படத்திற்கு வாங்க பராசக்தியை கொண்டாடுங்கள். இந்த பொங்கல் கோலிவுட்டுக்கு அமேசிங்கான பொங்கல்.
அனைவருக்கும் தெரியும் அவரவர்கள் படத்தை அவரவர் சூப்பராக கொண்டாடுவார்கள்.

இன்னும் தெளிவாக சொல்கிறேன் யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் என்னைப் பொறுத்தவரை இந்த பொங்கல் அண்ணன் தம்பி பொங்கல்.

இயக்குனர் மணிரத்தினம்..பேசியது..,

சுதா என்னிடம் ஆயுத எழுத்து, யுவா என ரெண்டு படங்களில் வேலை செய்தார். அந்தப் படங்கள்ல அவங்க கண்டினியூட்டி இன்சார்ஜ்.
எப்போதும் கையில ஒரு கேமரா இருக்கும். நிறைய ஆர்ட்டிஸ்ட், நிறைய ஹீரோக்கள், நிறைய ஹீரோயின்கள்கூட வேலை பார்த்தாங்க. ஆனால் ஒரு ஆர்ட்டிஸ்ட் கூட சுதாகிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது. ஷூட்டிங் முடிஞ்சு வெளிய போனால்கூட சுதாவைத் தாண்டித்தான் போக முடியும். கண்டினியூட்டி தவறுகளைப் பார்த்துவிட்டுத்தான் விடுவாங்க. அப்போதே சுதாவைப் பார்த்து பயப்படாத ஆர்ட்டிஸ்ட்டே கிடையாது. அப்போவே அப்படின்னா, இப்போது சொல்லவே வேண்டாம். சிவகார்த்திகேயன் ஸ்கிரிப்ட்ஸ்லாம் ரொம்ப சரியாகத் தேர்ந்தெடுக்கிறார். Wishing you a very very best என்றதும் சிவகார்த்திகேயன் எழுந்து நின்று நன்றி தெரிவித்தார்.

நடிகை ஶ்ரீலீலா.. பேசியது..,

இப்படத்தில் எனக்கு கிடைத்த இந்த மாதிரியான கதாபாத்திரத்திற்காகத்தான் நான் காத்துக்கொண்டிருந்தேன். சுதா கொங்கரா மேடம் மிக வலிமையான இயக்குநர். படபிடிப்பு தளத்தில் இயக்குனர் சுதா கொங்கரா எனக்கு அம்மா மாதிரி இருந்தார்கள். ரவி மோகன் ஆன் ஸ்க்ரீன் ஆஃப் ஸ்க்ரீனுக்கும் சம்பந்தமில்லை அவ்வளவு இனிமையானவர். சிவகார்த்திகேயனும் மிகவும் இனிமையானவர் அவருடன் இணைந்து நடித்தது நல்ல அனுபவம். தமிழ் சினிமாவில் வேலை பார்க்க வேண்டும் என்பது ஆசை. இந்த படத்தை பார்த்து நீங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும்.

இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் பேசியது..,

எனது பயணத்தில் துணை நின்ற அனைவருக்கும் நன்றி. முதல் படம் கொடுத்த வசந்த பாலனுக்கும், 100வது படம் கொடுத்த சுதாவுக்கும் நன்றி. எனக்கு முதல் தேசிய விருதை வாங்கிக் கொடுத்த சுதாவுக்கும் நன்றிக் கடனாகவே பராசக்தி படத்தை அவருக்காக செய்தோம். இந்த படத்தில் ஒரு முக்கியமான விஷயம் ஒன்றை ஒளித்து வைத்து வைத்துள்ளோம். அதை பொத்தி பொத்தி பாதுகாத்து வருகிறோம். இந்த படம் நிச்சயம் உங்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும். நீண்ட காத்திருப்புக்கு பின்னரே எனக்கு தேசிய விருது கிடைத்தது. வெயில், ஆயிரத்தில் ஒருவன், அசுரன் என பல படங்களில் தேசிய விருது தவறிதாக பலர் கேட்டார்கள். கடைசியில் சுதா கொங்கராவின் சூரரைப்போற்று படத்தில் எனக்கு தேசிய விருது கிடைத்தது. ஒரு சகோதரியின் மூலம் தேசிய விருது கிடைத்ததாக பெருமை கொள்கிறேன்.

இயக்குனர் சுதா கொங்கரா பேசியது..,

நம் வாழ்வில் இது முடியாது என சொல்லும்போது மட்டும்தான் அதை செய்து காண்பிக்க வேண்டும் என எனது குருநாதர் மணிரத்னம் சொல்லிக் கொடுத்துள்ளார். பராசக்தியை உருவாக்க முடியாது என நினைத்தபோது, அதை செய்து காண்பிக்க வேண்டும் என தோன்றியது. பராசக்தியை உருவாக்க எனக்கு துணை நின்ற பராசக்திகளுக்கு நன்றி. பராசக்தியை பற்றி இனி நான் பேச விரும்பவில்லை. பராசக்தியை பார்த்து நீங்கள் தான் பேச வேண்டும். நீங்கள் பேசுவது எனது பேச்சாக இருக்க வேண்டும்.
இந்த பொங்கலுக்கு வெளியாகும் இரு படங்களும் ஹிட் ஆக வேண்டும் சினிமாவை ரசிகர்களாகிய நீங்கள் தான் வாழவைக்க வேண்டும்.அது உங்கள் கையில் தான் உள்ளது.

நடிகர் அதர்வா பேசியது..,

பராசக்தி மிகப்பெரிய அனுபவம்.
படபிடிப்பு தளத்தில் அமைக்கப்பட்ட சின்ன சின்ன பொருட்கள் அனைத்துமே அழகாக இருக்கும். குறிப்பாக ஒரு விளக்கு எனக்கு மிகவும் பிடித்திருந்தது அதை ஆட்டைய போட வேண்டும் என்று நினைத்து ஒரு நாள் எடுத்தும் விட்டேன். ஆனால் படபிடிப்பு தளத்தில் விளக்கை திருடிய அதர்வா என்று சொல்லிவிடுவார்கள் என்று மீண்டும் வைத்து விட்டேன். ஜி வி பாடல்கள் எல்லாமே எனக்கு பிடிக்கும். இப்படத்தின் பாடல்கள் உங்களுக்கும் பிடிக்கும். நான் இருக்கும் இடத்தையும் என்னை சுற்றியிருக்கும் இடத்தையும் சந்தோசமாக வைத்திருப்பேன். அதை ரவி மோகனிடமிருந்து தான் கற்று கொண்டேன். சிவகார்த்திகேயனை சந்திக்கும் பொழுது ஒரு நடிகராக தான் சந்தித்தேன். அதன் பிறகு தான் நெருங்கின் பழகினோம். சிலரின் வளர்ச்சியை பார்க்கும் பொழுது தான் நம் மனதுக்கு நெருக்கமாக இருக்கும். அப்படி பார்த்தவர் தான் சிவகார்த்திகேயன். அவர் ஐம்பதாவது படம் நூறாவது படம் என எத்தனை படங்கள் பண்ணினாலும் முதலில் கை தட்டுவது நானாக தான் இருப்பேன். பராசக்தி படம் வெளியாகும் போது அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் என்று நம்புகிறேன். சுதாவின் கல்ட் ஃபிலிம் ஆக இப்படம் இருக்கும்
(2/2)

நடிகர் ரவி மோகன் பேசியது..,

நான் நாயகனாக நடிக்கும் இசை வெளியீட்டு விழாவில் பேசுவது கொஞ்சம் கூச்சமாக இருக்கும். ஆனால் எஸ்கே படத்தில் பேசுவது அப்படி இல்லை. பலரின் கடின உழைப்பாளி உருவாக்கப்பட்ட தங்கம் பராசக்தி இந்த வருடத்தின் மிக சிறந்த படமாக பராசக்தி வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

சிவகார்த்திகேயன் எதுவுமே இல்லாமல் இது போன்ற மேடைகளில் ஆரம்பித்து தற்போது இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் என்றால் இவர் அனைத்துக்கும் தகுதியானவர்.
அவர் இன்னும் பெரிய மேடை ஏறி பேச வேண்டும் அதற்க்கு நீங்கள்(ரசிகர்கள்) கூடவே இருக்க வேண்டும்.

பொதுவாக பல நல்ல ஆண்கள் இருக்கும் இடத்தில் ஒரு பெண் பாதுகாப்பாக உணர்வார்கள் என்று சொல்வார்கள். ஆனால் முதல் முறையாக ஒரு பெண் (சுதா கொங்கரா) இருக்கும் இடத்தில் நான் பாதுகாப்பாக உணர்ந்தேன். எந்த தடைகள் வந்தாலும் தனி ஆளாக நின்று எதிர்கொள்வது என்பது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கப் போகிறது. இந்த தீயை (பராசக்தி) நிறைய பேர் அணைக்க வெளியில் முயற்சி செய்தார்கள். இந்த தீ ஆபத்தான தீயில்லை கடவுள் முன்பு ஏற்றப்படுகின்ற அகல்விளக்கு.

பராசக்தியில் ஏன் வில்லனாக பண்ணுகிறீர்கள் என்று நிறைய கேட்டார்கள். எனக்கு ரெண்டே காரணம் தான் இருந்தது ஒன்று சுதாவின் கதை மற்றொன்று சுதா. ஆனால் இந்த முடிவு குறித்து தற்போது நினைத்துப்பார்க்கையில் எந்த கவலையும் இல்லை மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. என்னை இத்தனை நாட்களாக ஹீரோவாக பார்த்தீர்கள் இனிமேல் என்னை வில்லனாக பார்ப்பீர்கள். இப்படி தான் ஜாலியாக பேசுவேன்.

இந்தப் படம் சுயமரியாதையை காப்பாற்றுகின்ற படம். நானும் என்னுடைய வாழ்க்கையில் என்னுடைய சுயமரியாதையை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்திருக்கிறேன். முதுகில் அடிப்பவர்களை பற்றி எனக்கு கவலை கிடையாது. கண்ணுக்கு தெரிபவர்களைப் பற்றிதான் எனக்கு கவலை. அனைவருக்கும் ஒரு அண்ணனாக சொல்கிறேன் சுயமரியாதையை மட்டும் இழக்கக்கூடாது. இதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டால் நல்ல மனிதனாக இந்த உலகத்தில் வாழ முடியும். இப்படத்தை எல்லோரும் கொண்டாடுங்கள் நன்றி.

“பராசக்தி” திரைப்படம் பொங்கல் கொண்டாட்டமாக வரும் ஜனவரி 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

- Advertisement -

Recent Posts