Thursday, June 25, 2026
- Advertisement -
Home Blog Page 68

மீண்டும் கன்னட சினிமாவில் பிரியங்கா மோகன் – “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” பட ஃபர்ஸ்ட்லுக் வெளியானது !!

0

கன்னட சினிமாவின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பிரியங்கா மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு பிரம்மாண்ட படைப்பில் இணைந்துள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் இவர், தற்போது “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” என்ற வித்தியாசமான தலைப்பைக் கொண்ட கன்னட படத்தின் மூலம், சாண்டல்வுட்டிலும் கலக்கவுள்ளார்.

இப்படத்தில் பிரியங்கா மோகன் ஏற்கும் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Vaishak J Films தயாரிப்பில், ஹேமந்த் M ராவ் இயக்கதில், கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமார், இளம் நட்சத்திர நடிகர் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்கும் இப்படம், 70 களின் காலகட்டத்தை மையப்படுத்தி, பிரம்மாண்டமான ரெட்ரோ ஸ்டைல் ஃபேண்டஸி படமாக உருவாகி வருகிறது.

தனது அறிமுகப்படமான 2016ல் வெளியான ஒந்த் கதே ஹெல்லா Ondh Kathe Hella படத்தைத் தொடர்ந்து, நீண்ட காலமாக கன்னட படத்தில் தோன்றாமல் இருந்த பிரியங்கா மோகன் தற்போது பெரும் ஆளுமைகள் இணையும் பிரம்மாண்ட படத்தில் இணைந்துள்ளார். இதுவரை காதல், குடும்ப உணர்வுகள், கமர்ஷியல் எண்டர்டெய்னர் போன்ற கதைகளில் நடித்து வந்த பிரியங்கா மோகன், இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட, வலுவான கதாபாத்திரத்தில் தோன்றவிருக்கிறார் என்பதே முக்கிய சிறப்பு.

‘666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்’ என்ற தலைப்பே, இப்படம் ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும் என்பதைக் குறிப்பதாக அமைந்துள்ளது.

இன்று வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இது வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் அல்ல” என்பதைக் கூறாமல் கூறுகிறது. பிரியங்கா மோகன் அழகான பார்பி டால் போல வெண்மை நிற தொப்பி, கருப்பு நிற கையுறை உடன், ரெட்ரோ லுக்கில் அசத்துகிறார்“.

தமிழ், தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து வெற்றிப்படங்களைத் தந்து வரும், பிரியங்கா மோகன் இப்போது கன்னடத்திலும் நடிக்க ஆரம்பித்திருப்பது, அவரது நடிப்பு பயணத்தில் ஒரு முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது. மொழி எல்லைகளை தாண்டி, கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அவரது தேர்வுகள், அவரை பான்-இந்திய நடிகையாக மாற்றும் பாதையில் கூட்டிச் செல்கின்றன.

‘666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்’ படம் குறித்து முழு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் நேற்று ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தப் படம், கன்னட சினிமாவில் பிரியங்கா மோகனுக்கு ஒரு புதிய அடையாளத்தையும், தனித்துவமான மைல்கல்லையும் உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை

Nayanthara’s first look as Ganga unveiled from Yash’s Toxic: A Fairytale for Grown-Ups

0

As Yash’s Toxic: A Fairytale for Grown-Ups inches closer to its highly anticipated theatrical release on 19th March 2026, the makers continue to peel back layers of its dark, immersive world. Adding to the rising anticipation, the team has now unveiled a striking new poster revealing Nayanthara as Ganga. Stunning, lethal, and formidable, the first look positions Nayanthara as a defining force within the universe of Rocking Star Yash’s most ambitious project yet.

Known for her star power, emotional depth and versatility, Nayanthara has built a legacy as one of India’s iconic actresses. With Toxic, she steps into darker territory – one that amplifies her innate presence while revealing a version of her that feels startlingly new.

Nayanthara’s portrayal of Ganga is visually breathtaking, radiating a fearlessness that matches the film’s massive scale. She commands the frame with a striking composure, wielding a gun with a practiced authority that feels both elegant and dangerous. Set against the opulence of a grand casino entrance, the lavish, high-stakes setting frames Ganga as a woman who owns the room and calls her own shots.

Speaking about casting Nayanthara as Ganga, director Geetu Mohandas said, “We all know Nayan as a celebrated star with a commanding screen presence, and a remarkable career spanning two decades but in Toxic, audiences will witness a talent that had been quietly waiting to explode. I wanted to portray Nayan in a way that she’s never been showcased before. But as the shoot progressed I began to see how closely her own personality echoed the soul of the character. It wasn’t imitation, it was alignment.The depth, the honesty, the restraint, and the emotional clarity she brought were not performances layered on top of the character,they were qualities she already possessed. I found my Ganga, so brilliantly performed by her, and even more unexpectedly, I found a dear friend.”

After redefining box-office history with KGF: Chapter 2, Rocking Star Yash returns to the big screen with Toxic: A Fairytale for Grown-Ups, a project that has been generating extraordinary anticipation across industries. With each reveal, the film continues to signal a bold departure from convention. Earlier, Kiara Advani ignited a firestorm of anticipation with her unveil as Nadia—ethereal yet melancholy, whose elegance and glamour barely conceal the scars. Following Kiara’s first look, Huma Qureshi’s dramatic reveal as the enigmatic Elizabeth deepened the mystery, leaving audiences intrigued with her never-seen-before old-world, Gothic glamour.

Written by Yash and Geetu Mohandas and directed by Geetu Mohandas, Toxic: A Fairytale for Grown-Ups has been filmed simultaneously in Kannada and English, with dubbed versions planned in Hindi, Telugu, Tamil, Malayalam, and several other languages—underscoring its global ambition. The film boasts a formidable technical team, including National Award winner Rajeev Ravi as cinematographer, Ravi Basrur on music, Ujwal Kulkarni on editing, and TP Abid as production designer. High-octane action is choreographed by Hollywood action director JJ Perry (John Wick) alongside National Award-winning duo Anbariv and Kecha Khamphakdee. Produced by Venkat K. Narayana and Yash under KVN Productions and Monster Mind Creations, Toxic is slated for a grand theatrical release on the long festive weekend of 19th March 2026, coinciding with Eid, Ugadi, and Gudi Padwa.

யாஷ் நடிக்கும் மிகப்பிரம்மாண்ட படைப்பான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழு அதன் இருண்ட மர்மமான உலகத்தின் இன்னொரு முக்கிய அத்தியாயத்தை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது. அதில் முக்கியமாக, நயன்தாரா நடித்துள்ள ‘கங்கா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி பெரும் கவனம் பெற்றுள்ளது. அதிரடி, அழகு, ஆற்றல் என அனைத்தையும் ஒருங்கே தாங்கிய இந்த தோற்றம், யாஷின் கனவுப் படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய சக்தியாக இருப்பதை உறுதி செய்கிறது.

தனித்துவமான நடிப்பு திறமை, உணர்வுப்பூர்வ வெளிப்பாடு மற்றும் வலுவான திரை ஆளுமை கொண்ட நடிகையாக நீண்ட காலமாக கோலோச்சி வரும் நயன்தாரா, டாக்ஸிக் படத்தில் இதுவரை தோன்றாத ஒரு புதிய பாத்திரத்தில் தோன்றுகிறார். இருள் நிறைந்த இந்த உலகத்தில், அவரது இருப்பே ஒரு வலுவான அடையாளமாக திகழ்கிறது.

கங்கா என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா, அச்சமற்ற துணிச்சலுடனும், கம்பீரமான அமைதியுடனும் திரையில் தோன்றுகிறார். கையில் துப்பாக்கியுடன், செழுமையான கேசினோ ( grand casino) பின்னணியில் நின்று கொண்டு, அந்த இடத்தையே கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் காட்டுகிறார். அழகும் ஆபத்தும் கலந்த அந்த தோற்றம், கதாபாத்திரத்தின் ஆழத்தையும் மர்மத்தையும் வலுவாக வெளிப்படுத்துகிறது.

இந்தக் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) கூறுகையில்,

“நயன்தாராவை ஒரு சிறந்த நட்சத்திரமாகவும், வலிமையான திரைபட முன்னணி ஆளுமையாகவும் அனைவரும் அறிவோம். ஆனால் டாக்ஸிக் படத்தில், இதுவரை நாம் காணாத ஒரு பரிமாணத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவர் திரையில் நடிக்கவில்லை; அந்தக் கதாபாத்திரமாகவே மாறினார். அவரின் ஆழம், நேர்மை, உணர்ச்சி எல்லாமும் அந்த கதாப்பாத்திரத்தின் இயல்பாகவே இருந்தது. அந்த தருணத்தில்தான் எனக்கு உண்மையான ‘கங்கா’ கிடைத்தார். அதைவிட அழகானது, அந்த பயணத்தில் ஒரு நெருங்கிய நண்பரையும் நான் பெற்றேன்,” என தெரிவித்துள்ளார்.

KGF: Chapter 2 மூலம் இந்திய சினிமாவின் வரலாற்றை மாற்றிய யாஷ், ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, மூலம் மீண்டும் ஒரு புதிய உயரத்தை நோக்கி பயணிக்கிறார். இந்த படம், தனது தனித்துவமான காட்சியமைப்பு மற்றும் கருப்பொருளால் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. முன்னதாக, கியாரா அத்வானி நடித்த ‘நாடியா’ (Nadia) கதாபாத்திரம் வெளியானபோது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, ஹூமா குரேஷியின் ( Huma Qureshi’s ) மர்மமான ‘எலிசபெத்’ தோற்றம், பழமையான கோத்திக் அழகுடன் கூடிய புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தியது.

யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து கதை எழுதி, கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள Toxic: A Fairytale for Grown-Ups திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது. பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட உள்ளது. ஒளிப்பதிவை தேசிய விருது பெற்ற ராஜீவ் ரவி மேற்கொள்ள, இசையமைப்பை ரவி பஸ்ரூர் செய்துள்ளார். படத்தொகுப்பில் உஜ்வல் குல்கர்னி, கலை இயக்கத்தில் டி.பி. அபித் பணியாற்றியுள்ளனர். ஆக்‌ஷன் காட்சிகளை ஹாலிவுட் புகழ் ஜே.ஜே. பெர்ரி (John Wick) உடன் இணைந்து அனுபவம் வாய்ந்த அன்பறிவ் மற்றும் கெச்சா காம்பக்‌டி அமைத்துள்ளனர்.

யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து கதையை எழுதியுள்ள இந்தப் படம், கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்கத்தில் உருவாகியுள்ளது. ஆங்கிலம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

தேசிய விருது பெற்ற ராஜீவ் ரவி ஒளிப்பதிவையும், ரவி பஸ்ரூர் இசையையும், உஜ்வல் குல்கர்ணி எடிட்டிங்கையும், T.P.அபித் புரொடக்ஷன் டிசைன் கவனிக்கின்றனர். ஆக்‌ஷன் காட்சிகளை ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் J.J. பெரி (John Wick) உடன் இணைந்து இணைந்து அனுபவம் வாய்ந்த அன்பறிவ் மற்றும் கெச்சா காம்பக்‌டி (Kecha Khamphakdee)அமைத்துள்ளனர்.

வெங்கட் K. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்களின் சார்பில் தயாரிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, வரவிருக்கும் மார்ச் 19, 2026, ஈத், உகாதி, குடி பட்வா ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து, திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

பத்திரிகையாளர்களை செண்டை மேளத்துடன் வரவேற்று சிறப்புக்காட்சியை திரையிட்ட ‘ தி பெட்’ படக்குழு

0

வெத்து வேட்டு, பரிவர்த்தனை ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் எஸ்..மணிபாரதி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘தி பெட்’. இப்படத்தினை ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பாக வி.விஜயகுமார் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்ஷன் கே,.கந்தசாமி, கே.கணேசன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், சிருஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மற்றும் ஜான் விஜய், ப்ளாக் பாண்டி, பப்பு, தேவி பிரியா, திவ்யா ஸ்ரீதர், விக்ரம் ஆனந்த் என முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்..

வரும் ஜனவரி-2ஆம் தேதி உலகமெங்கும் ‘தி பெட்’ திரைப்படம் வெளியாக உள்ளது.

இதனையடுத்து இந்த படத்திற்கான பத்திரிகையாளர் சிறப்புக்காட்சி நேற்று திரையிடப்பட்டது. படம் பார்க்க வருகை தந்த பத்திரிகையாளர்கள் அனைவரையும் செண்டை மேளம் முழங்க வரவேற்பு கொடுத்த ‘தி பெட்’ படக்குழுவினர், மேலும் ஒவ்வொருவருக்கும் வெள்ளை நிற பூத்துண்டு சால்வை அணிவித்து புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு வரவேற்புடன் பத்திரிகையாளர்களை வரவேற்று ஒரு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது இதுதான் முதன்முறை.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்

படத்தில் அம்மாவாக நடித்துள்ள நடிகை திவ்யா ஸ்ரீதர் பேசும்போது,

“நான் கேரளாவைச் சேர்ந்த பெண். தி பெட் படத்தின் மூலம் தான் முதன்முதலாக தமிழ் திரை உலகில் அடி எடுத்து வைத்துள்ளேன். இது கொஞ்சம் சவாலான, துணிச்சலான கதாபாத்திரம்தான். இப்படி ஒரு கதாபாத்திரத்திற்கு என்னை தேர்ந்தெடுத்ததற்காக நன்றி. நிச்சயம் என்னுடைய கதாபாத்திரம் ரசிகர்களைப் பேச வைக்கும்” என்று கூறினார்.

நடிகர் ப்ளாக் பாண்டி பேசும் போது,

“இயக்குநர் மணிபாரதியுடன் எனக்கு இது இரண்டாவது படம். நான் இதுவரை நண்பர்கள் கதாபாத்திரத்தில் நிறைய நடித்திருக்கிறேன். ஆனால் இந்த படம் எனக்கு புதிதாக இருந்தது. ஒரு பெட் பாயிண்ட் ஆஃப் வியூவில் இருந்து இந்தக் கதையை இயக்குநர் சொல்லி இருக்கிறார். இயக்குநர் மணிபாரதியைப் பொருத்தவரை எப்போதுமே யுவுக்கும் ஏவுக்கும் நடுவில் இருக்கும் (யு/ஏ) படமாகவே எடுப்பார்.

இசையமைப்பாளர் தாஜ்நூர் சிறந்த இசையைக் கொடுத்து இருக்கிறார்” என்று பேசினார்.

இசையமைப்பாளர் தாஜ்நூர் பேசும்போது,

“ஆரம்பத்தில் இந்த படம் திரில்லர் ஜானர் என்றுதான் சொன்னார்கள். ஆனால் படத்தில் ஒரு பெட் கதை சொல்வது போல அவர்கள் உருவாக்கி இருந்த விதம் மிகச் சிறப்பாக இருந்தது” என்று கூறினார்.

இயக்குநர் மணிபாரதி பேசும்போது,

“படத்தின் நாயகன் ஸ்ரீகாந்த் தனது குடும்பத்தினருடன் விடுமுறைக்காக வெளியூர் சென்று இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவரால் இயலவில்லை. நாயகி சிருஷ்டி டாங்கேவை நாங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இரண்டு முறை அழைப்பு விடுத்தும் ஏனோ அவர் வரவில்லை.

இத்தனைக்கும் அவருக்கு முழு சம்பளமும் செட்டில் செய்து விட்டோம். ஒருவேளை சம்பள பாக்கி வைத்திருந்தால் வந்திருப்பாரோ என்னவோ ?

தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடிய ஒரு குறிப்பிடத்தக்க ஐந்து நடிகைகள் இருக்கிறார்கள்.

அவர்களை இந்த படத்தில் உள்ள அம்மா கதாபாத்திரத்தில் பயன்படுத்த முடியாது. அழைத்தாலும் அவர்கள் நடிக்க வரமாட்டார்கள்.. அப்படி சில நடிகைகளிடம் இந்த கதாபாத்திரத்தை சொன்னபோது அவர்கள் மறுத்துவிட்டார்கள். அதனால் தான் அதற்கு கேரளா சென்று ஒரு புதிய முகத்தை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தோம். இவர் இனி கொஞ்ச காலத்துக்கு தமிழ் சினிமாவில் புதிய அம்மாவாக வலம் வருவார்.

படத்தில் ஐடி இளைஞர்களைத் தவறாகக் காட்டவில்லை. இதேபோல இன்னும் பல துறைகளிலும் இளைஞர்கள் ஜாலி என்கிற பெயரில் இப்படி கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அப்படி சென்றால் இறுதியில் அவர்கள் நிலை என்னவாகும் என்பதை தான் ஒரு எச்சரிக்கையாக சொல்லி இருக்கிறோம். ஒரு போலீஸ் அதிகாரியின் படுக்கை அறைக் காட்சியை காட்டுவது கூட, ஒரு போலீஸ்காரனை தேடி எந்த நேரத்தில் எல்லாம் வேலை வரும், அதனால் அவரது குடும்பத்தில் எந்தவிதமான பாதிப்பு இருக்கும் என்பதை சொல்வதற்காகத் தான் அந்த காட்சியை வைத்தோம். அதில் கூட ஒரு டான்ஸ் மாஸ்டரை மனைவியாக நடிக்க வைத்தோம். டான்ஸ் ஆடுபவர் என்றால் அதற்கு மட்டுமே அவரை பயன்படுத்த வேண்டுமா என்ன ? இத்தனைக்கும் என் முதல் படத்தில் அவர் நடனமாடியவர்தான். இந்த படத்தில் கதாபாத்திரமாக நடிக்க வைத்தேன்” என்று கூறினார்.

இதன் தொழில்நுட்பக் கலைஞர்களாக கே.கோகுல் ஒளிப்பதிவு செய்ய, தாஜ்நூர் இசையமைக்க, யுகபாரதி பாடல்கள் எழுத, ஜே.பி எடிட்டிங் செய்ய, பழனிவேல் கலை இயக்கம் செய்ய, இவர்களோடு ஏ.வி பழனிசாமி தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றி உள்ளார்..

மக்கள் தொடர்பு ; A.ஜான்

‘தி ராஜா சாப்’ – பிரம்மாண்ட முன்னோட்ட விழா !!

0

“டார்லிங் ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு வழங்கவே ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தை உருவாக்கினோம். இந்த படத்தின் கிளைமாக்ஸை பார்த்த பிறகு, மாருதியின் எழுத்துத் திறமையின் ரசிகனாக நான் மாறிவிட்டேன். இந்த சங்கராந்தியில் வெளியாகும் அனைத்து படங்களுடனும் சேர்ந்து, ‘தி ராஜா சாப்’வும் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும்.” – ரெபல் ஸ்டார் பிரபாஸ்

ரெபல் ஸ்டார் பிரபாஸ் நடித்துள்ள மிகப் பிரம்மாண்ட படமான ‘தி ராஜா சாப்’ (The Raja Saab) படத்தின் பிரம்மாண்ட முன்னோட்ட விழா, நேற்று ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் படம் குறித்து தங்கள் அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டனர்.

ரெபல் ஸ்டார் பிரபாஸ் நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் ‘தி ராஜா சாப்’. இந்த படத்தை இயக்குநர் மாருதி, ஹாரர்–காமெடி வகையில் ஒரு எவர்கிரீன் படமாக உருவாக்கியுள்ளார். தயாரிப்பாளர்கள் டி.ஜி. விஷ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர் மிகப் பெரிய அளவில் இந்த படத்தைத் தயாரித்துள்ளனர். மாளவிகா மோகனன், நித்தி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். சங்கராந்தி பண்டிகையை இரட்டிப்பு கொண்டாட்டமாக மாற்றும் வகையில், ‘தி ராஜா சாப்’ ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகர் மகேஷ் அச்சந்தா கூறியதாவது :

“2026 ஆம் ஆண்டில் நான் நடித்து வெளியாகும் முதல் படம் ‘தி ராஜா சாப்’. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய மாருதி அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்.
பிரபாஸ் அண்ணா எனக்கு ஒரு டி-ஷர்ட் பரிசாகக் கொடுத்தார். அந்த ஒரு விஷயமே எனக்கு பெரிய சந்தோஷம். அவருக்கும், பீப்பிள் மீடியா ஃபாக்டரிக்கும் நான் என்றும் கடமைப்பட்டவன். இந்த நிகழ்ச்சிக்காக வந்த ரசிகர்களின் கூட்டத்தைப் பார்த்தால், பிரபாஸின் ரசிகர் கூட்டம் எவ்வளவு பெரியது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.”

பாடலாசிரியர் கஸர்லா ஷ்யாம் கூறியதாவது :

“பிரபாஸ் சாருக்காக நான் முதல் முறையாக ஒரு பாடலை எழுதியிருக்கிறேன். அந்த பாடல் விரைவில் ஒரு சர்ப்ரைஸாக வெளிவரும். மூன்று கதாநாயகிகளுடன் பிரபாஸ் நடனமாடும் பாடலை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். நானும் அவர்களுடன் சேர்ந்து காத்திருக்கிறேன்.”

நடிகை ஜரீனா வாஹப் கூறியதாவது :

“நான் கடந்த 40 ஆண்டுகளாகத் திரைப்படத் துறையில் இருக்கிறேன். ‘தி ராஜா சாப்’ போன்ற ஒரு நல்ல படத்தில் தெலுங்கில் நடிக்க வாய்ப்பு வழங்கிய பீப்பிள் மீடியா ஃபாக்டரிக்கும், மாருதி காருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த படத்தில் முழு குழுவும் எனக்கு முழுமையான ஆதரவை வழங்கினார்கள். இந்த படத்தில் பிரபாஸ் உடன் எனக்கு பல காட்சிகள் உள்ளன. நான் பல நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். ஆனால் பிரபாஸ் போல நல்ல மனம் கொண்ட மனிதரை நான் இதுவரை பார்த்ததே இல்லை. இந்த படத்தில் அவருடன் நடித்தது எனக்கு மிகப்பெரிய பெருமை.”

நடிகர் ரோஹித் கூறியதாவது :

“நான் பாலிவுட்டிலிருந்து வந்தவன். இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு அருகே ஒரு யூ-டர்ன் எடுக்கவே எனக்கு ஒரு மணி நேரம் பிடித்தது. இதுவரை இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டத்தை நான் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. ரெபல் ரசிகர்களுக்கு எனது வணக்கம். பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ படத்தில் நடிப்பது என்னைப் போன்ற நடிகர்களின் வாழ்க்கைக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும்.”

நடிகர் சப்தகிரி கூறியதாவது :

“நான் பிரபாஸ் அண்ணாவுடன் ‘சாலார்’ படத்தில் நடித்தேன். அந்த படத்தின் இடைவேளை காட்சியைப் பார்த்த உடனே, ‘இந்த படம் 2000 கோடி வசூல் செய்யும்’ என்று சொன்னேன் — அது உண்மையாகவே நடந்தது. இப்போது தயாரிப்பாளரின் போனில் ‘தி ராஜா சாப்’ படத்தின் டிரெய்லரைப் பார்த்தேன். அது வேறு லெவலில் இருக்கிறது. இந்த படமும் நிச்சயமாக 2000 கோடி வசூல் செய்யும். மாருதி சார், நாமெல்லாம் பார்க்க ஆசைப்பட்ட அந்த பழைய ஸ்டைல் பிரபாஸ் அண்ணாவை இந்த படத்தில் காட்டியிருக்கிறார். கையில் பூ வைத்துக் கொண்டு, ரொமான்டிக் தோற்றத்தில் அவர் தோன்றுவது — இனிமேல் பல வருடங்கள் இப்படிப் பார்க்க முடியாத ஒன்று. ஏனெனில் அவர் இப்போது ஆக்ஷன் படங்கள் மட்டுமே செய்து வருகிறார். இந்த படத்தில் நம்மெல்லாரையும் விட பிரபாஸ் அண்ணாதான் அதிகமாகச் சிரிக்க வைப்பார்.
உங்களைப் போல நானும் பிரபாஸ் அண்ணாவைப் பார்க்கத்தான் இன்று இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்.”

வட இந்திய விநியோகஸ்தர் அனில் தடானி கூறியதாவது:

“‘தி ராஜா சாப்’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்காக மாருதி அவர்களுக்கும், விஷ்வ பிரசாத் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். பிரபாஸ் எனக்கு ஒரு சகோதரர் போன்றவர். அவர் உங்கள் அனைவரின் அன்பிற்கும் முழுமையாக தகுதியானவர். இவ்வளவு பெரிய அளவில் பிரபாஸ் ரசிகர்கள் திரண்டிருப்பதைப் பார்க்கும் போது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.”

நடிகர் VTV கணேஷ் கூறியதாவது:

“இன்று நான் இந்த மேடையில் நிற்பதற்குக் காரணம் நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் நெல்சன் தான். அவர்கள் எனக்கு அளித்த வாய்ப்பினால், ‘பீஸ்ட்’ படத்தில் நான் பேசிய ‘யாருடா நீ இவ்வளவு டாலண்ட்டா இருக்க?’ என்ற வசனம் மிகப் பெரிய அளவில் பிரபலமானது. அந்த ஒரே வசனம் எனக்கு மிகப் பெரிய அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. சப்தகிரி அடிக்கடி என்னிடம் சொல்வார் – ‘நீ பல படங்களில் நடித்திருந்தாலும், அந்த ஒரு டயலாக் தந்த புகழ் வேறு எதுவும் தரவில்லை’ என்று.

‘தி ராஜா சாப்’ படத்தில் நான் 55 நாட்கள் வேலை செய்தேன். பிரபாஸ் காருடன் நடித்த அனுபவம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்.”

கிரியேட்டிவ் புரொட்யூசர் எஸ்.கே.என் கூறியதாவது:

“‘தி ராஜா சாப்’ படத்திற்கான தயாரிப்புப் பணிகள் 2021 ஆம் ஆண்டிலேயே தொடங்கியது. இந்தப் படத்தை முடிவு செய்த பிறகு, மாருதி இயக்கிய ஒரு படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அந்த நேரத்தில் மாருதி, பிரபாஸ் வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்து வெளியே வந்த பிறகு அவர் என்னிடம் சொன்ன ஒரே விஷயம் —
‘என் வாழ்க்கையின் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகள் முழுக்க “ராஜா சாப்” பற்றித்தான் நான் யோசிக்கப் போகிறேன்’ என்றார். அதற்கு நான், ‘என்ன நடந்தது?’ என்று கேட்டேன். அப்போது அவர் சொன்னது — ‘அந்த படம் வெற்றி பெறவில்லை என்றால் அதில் என் தவறு என்ன? நாம் ஒரு படம் உருவாக்கப் போகிறோம்; அதில் கவனம் செலுத்துவோம்’ என்று பிரபாஸ் கூறியதாகச் சொன்னார்.

பிரபாஸ் ஒருபோதும் சொன்னதை மாற்றிப் பேசுபவர் இல்லை. இந்த படத்திற்காக நான் செய்தது எதுவும் பெரிய விஷயம் அல்ல; அது ஒரு அணில் செய்த உதவி மாத்திரம். பிரபாஸ் எப்போதும் எந்தக் கள்ளம் கபடமும் இல்லாத மனிதர். அவருக்கு சினிமா தான் வாழ்க்கை.

யூரோப்பில் படப்பிடிப்பு நடந்தபோது, அவர் முழு குழுவுக்காக ஒரு வில்லாவை எடுத்துக் கொண்டு, தனிப்பட்ட சமையல்காரரை வைத்து, அனைவருக்கும் தெலுங்கு உணவு ஏற்பாடு செய்தார். அப்படிப்பட்ட நல்ல மனிதரைப் பற்றி நாம் பேசாமல் இருக்க முடியுமா?

இந்த சங்கராந்திக்கு, நாங்கள் ஒரு 3 மணி 10 நிமிடங்கள் கொண்ட மாஸ் எண்டர்டெய்னரை திரையரங்குகளில் பார்க்கப் போகிறோம். ஒவ்வொரு சங்கராந்திக்கும் நாம் சேவலுக்கு பந்தயம் கட்டுவோம்; இந்த முறை டைனோசருக்கு பந்தயம் கட்டப் போகிறோம். இந்த பண்டிகையை நாம் அனைவரும் சேர்ந்து கொண்டாடப் போகிறோம்.”

நடிகை ரித்தி குமார் கூறியதாவது:

“‘தி ராஜா சாப்’ ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படம். பிரபாஸ் எங்களுக்கெல்லாம் டார்லிங் தான். இந்தப் படத்தில் அவரை மாருதி சார், அவர் உண்மையிலேயே எப்படியோ அதே மாதிரி காட்டியிருக்கிறார். இந்தப் படத்தில் பிரபாஸ் அவர்களின் அனைத்து நல்ல பண்புகளையும் நீங்கள் பார்க்க முடியும். இந்த படத்தைப் பார்த்த பிறகு அவரை இன்னும் அதிகமாக விரும்புவீர்கள். ஜனவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘தி ராஜா சாப்’ படத்தை அனைவரும் ரசித்துப் பாருங்கள்.”

நடிகை மாளவிகா மோகனன் கூறியதாவது:

“தெலுங்கு திரையுலகின் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் இருக்கிறது. பிரபாஸ் போல ஒரு பான்-இந்தியா நட்சத்திரத்துடன், ‘தி ராஜா சாப்’ போன்ற ஒரு பிரம்மாண்டமான படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகுவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. ரசிகர்களுக்கு பிரபாஸ் ஒரு ‘ரெபல் ஸ்டார்’, ‘ரெபல் கடவுள்’. ஆனால் எங்களுக்கெல்லாம் அவர் ‘ராஜா சாப்’. நல்ல மனம் கொண்ட ஒரு உண்மையான நட்சத்திரம் அவர்.

இந்த படத்தில் நான் ‘பைரவி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். பொதுவாக கதாநாயகிகளுக்குக் காதல் காட்சிகள், பாடல்கள் மட்டுமே கிடைக்கும். ஆனால் இந்த படத்தில் மாருதி சார் எனக்குக் காதல், காமெடி, ஆக்ஷன் என அனைத்தையும் செய்யும் வாய்ப்பை அளித்தார். பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் எல்லா அம்சங்களும் நிறைந்த படமாக ‘தி ராஜா சாப்’ இருக்கும். அனைவரும் திரையரங்குகளில் இந்த படத்தைக் கண்டிப்பாக ரசிப்பீர்கள்.”

கவின் – ஆண்ட்ரியா ஜெரெமையா நடித்த ‘மாஸ்க்’ திரைப்படம், ஜனவரி 9 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது !!

0

முன்னணி ஓடிடி தளமான ZEE5, கவின் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா நடிப்பில், சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற, ஆக்சன்-திரில்லர் திரைப்படமான ‘மாஸ்க்’-ஐ ஜனவரி 9, 2026 முதல் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இப்படத்தை புதுமுக இயக்குநர் விகர்னன் அசோக் எழுதி இயக்கியுள்ளார். தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி வழங்கியுள்ளது.

மாஸ்க் ஒரு பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம். பணம் மற்றும் லாபமே வாழ்க்கை என நினைக்கும் தனியார் டிடெக்டிவான வேலு (கவின்) என்பவனை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. ஒரு குற்ற சம்பவத்தில் அவனது வாழ்க்கை, மர்மமான முகமூடி அணிந்த கும்பல், நற்பணிகளின் பெயரில் செயல்படும் சக்திவாய்ந்த அமைப்புகள் மற்றும் பல அரசியல்வாதிகளின் வாழ்க்கையை புரட்டிப் போடக்கூடிய ரகசியங்களுடன் மோதும் போது முற்றிலும் தலைகீழாக மாறுகிறது. விசாரணை தீவிரமடையும் போது, வேலு குற்றத்தின் உண்மையை மட்டுமல்ல, தனது செயல்களின் விலையையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான்.

படம் குறித்து நடிகர் கவின் கூறுகையில்,
“மாஸ்க் ஏற்கனவே திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது ZEE5 மூலம் இன்னும் பெரிய ரசிகர்கள் வட்டத்தை அடையப் போவதில் மகிழ்ச்சி. வேலு பல அடுக்குகளைக் கொண்ட வித்தியாசமான கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தின் ஆழத்தை அதிகமானோர் ரசிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.

இயக்குநர், தயாரிப்பாளர் வெற்றிமாறன் கூறுகையில்..,
“இந்த படம் பேசும் கருக்கள் காலத்தை கடந்தவை. மாஸ்க் இப்போது ZEE5-ல் வெளியாகும் நிலையில், முதன் முறையாக இதை அனுபவிக்கும் புதிய பார்வையாளர்களிடம் சென்று சேரும் வாய்ப்பு கிடைப்பது மகிழ்ச்சி”.

இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
ஒளிப்பதிவு – ஆர்.டி. ராஜசேகர்
படத்தொகுப்பு – ஆர். ராமர்.

ஆக்ஷன், சஸ்பென்ஸ் மற்றும் ஆழமான கதை சொல்லலுடன், மாஸ்க் திரில்லர் ரசிகர்களுக்கு ஒரு அசத்தலான அனுபவத்தை வழங்கும் படமாக உருவாகியுள்ளது.

‘மாஸ்க்’ – ஜனவரி 9, 2026 முதல் ZEE5 தளத்தில், தமிழில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

புதிய அரசியல் ஆன்மீகபடமாக”அலப்பறை”

0

உலக அரசியலை கற்றுத் தேர்ந்த இளைஞன் ஒருவன் தன் காதலியுடன் சந்தோஷமாக இருக்கிறான்.ஆனால் எதிர்பாராத விதமாக தன் நண்பன் மூலம் அரசியலில் நுழைகிறான்.விதியோ அவனை ஒரு ஆன்மீகத் தலைவனாக மாற்றி விட்டது. முடிவில் அவன் தன் காதலின் நிலை என்ன? தன் அரசியலின் பார்வை என்ன?அல்லது ஆன்மீகவாதியாக தொடர்ந்தானா? என்பதே கதைகளம் என்கிறார் இயக்குனர்.

சி.எஸ்.கே சினிமா தயாரிக்கும் இப்படத்தை சி.எஸ் காளிதாசன் இயக்கியிருக்கிறார்.

கதையின் நாயகனாக அசோக்குமார் நடித்துள்ளார். இவர் முருகா, புடிச்சிருக்கு, கோழி கூவுது,பெஸ்டி, பிரியமுடன் பிரியா போன்ற தமிழ் படங்களைத் தொடர்ந்து தெலுங்கு கன்னட படங்களில் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக பிரபல இயக்குனரும் நடிகருமான “யார்” கண்ணனின் மகள் சாயாதேவி நடித்திருக்கிறார்.

பி.எல் தேனப்பன்,
‘யார்”கண்ணன், “நமோ”நாராயணன்,
அன்வர் அலிகான், கோதண்டம்,
வலைப் பேச்சு ஜெ.பிஸ்மி,தம்பிசிவன்,
ஹரிநாத், ரதியா ஹரி,ஆலந்தூர் பிரவீன்குமார் மற்றும்
வேல்குமார் ஆகியோர் கதையின் பாத்திரங்களாக தோன்றியுள்ளனர்.

ஒளிப்பதிவு-
ஹரிகாந்த்

இசை-அபி ஜோஜோ
பின்னணி இசை –
சபேஷ் – முரளி
பாடல்கள்-நிகரன்

படத்தொகுப்பு-
கே.தணிகாசலம்
கலை- மணிவர்மா
நடனம் – ராதிகா
சண்டை பயிற்சி-
ஆக்ஷன் பிரகாஷ்

மக்கள் தொடர்பு- வெங்கட்
தயாரிப்பு மேற்பார்வை-
தேனி சங்கர்

தயாரிப்பு-
சி.எஸ்.கே.சினிமா

வசனம் – ஜி.வி.பாலா

கதை திரைக்கதை இயக்கம்-
சி.எஸ்.காளிதாசன்

படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகளும் ஒரு பாடலும் இடம்பெற்றுள்ளது

தேவலோக சுந்தரி மயக்கும் ராஜதந்திரி…, டும்மாங்கோலி சரக்கடிச்சா ஜாலி…எனும் துள்ளலிசை பாடல் கேட்கத்தூண்டும் பாடலாக உள்ளது.

இதன் நிறைவு கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது

A R Rahman to make his debut as an actor in the movie ‘Moonwalk’

0

Behindwoods Productions, the makers of Moonwalk, featuring Prabhudeva and A R Rahman have unveiled the 14 crazy character posters from the film, significantly adding to the growing anticipation around the project.

What makes Moonwalk truly stand out is that the film marks several major firsts, particularly for A R Rahman. For the first time in his legendary career, A R Rahman has sung all the 5 songs in the film ‘Moonwalk’, bringing a unified musical voice to the soundtrack. More notably, Moonwalk also marks A R Rahman’s much-awaited acting debut, where the Oscar-winning composer will be seen playing A R Rahman, not the music director but a fictional “angry young film director” in a role that is expected to add a unique meta-layer to the narrative.

Talking about this unique feat, Director Manoj NS revealed: “It was a wonderful experience shooting the song ‘Mayile’ with Prabhudeva sir and A. R. Rahman sir. The song has turned out well and is sure to be a feast for movie lovers in theatres. Prabhudeva sir has given one of his best dance performances for this song, and I sincerely thank choreographer Sekhar Master for making it truly special.

A. R. Rahman sir appears throughout the song, adding a cute charm and a very special vibe to it. When I later presented an extended role to him after the song, A. R. Rahman sir graciously accepted it. This will be a surprise scene for movie lovers, and I thoroughly enjoyed directing A. R. Rahman sir in his first-ever movie scene. I am deeply grateful to him for supporting our project Moonwalk wholeheartedly right from day one. The entire set was so happy seeing ARR Sir having fun as an actor. It will be a scene which people will not expect”

Equally exciting is Prabhudeva’s presence in a multifaceted avatar. Widely celebrated as one of Indian cinema’s most influential performers, choreographers, and filmmakers, Prabhudeva will be seen in the role of ‘Babootty’, a young film choreographer. His role is said to blend performance and humour making it one of the most intriguing characters in the film.

Adding to the film’s appeal, Yogi Babu, earlier announced in dual roles named ‘Kavarimaan Narayanan’ and ‘Aattukkaal Azhagu Rasa’, surprises audiences once again by appearing in a third role called ‘Dubai Mathew’, further reinforcing the film’s quirky and experimental tone. “There is a surprise about Yogi Babu sir’s role which we will be revealing in the audio launch”, added Manoj NS, the director, with a lot of excitement.

The ensemble cast also includes Aju Varghese as ‘Lord Djokovic’, Arjun Ashokan as ‘Luna’, Satz as ‘Jasmine’, Sushmitha as ‘Silk’, Nishma as ‘Nagma’, Swaminathan as ‘Periya Pannai’, Redin Kingsley as ‘Kannu Kutty’, Rajendran as ‘Mallikarjun’, Deepa Akka as Karpoorazhagi’, Santhosh Jacob as ‘Thavasi’ and Ramkumar as ‘Raj Babbar’. “We were blessed to have some of the best talents in acting be part of Moonwalk. Hopefully people will enjoy seeing these talented actors in theatre”, notes Manoj NS.

With iconic talents like Prabhudeva and A R Rahman coming together in never-before-seen capacities, Moonwalk has shaped up as a film packed with novelty and surprises, leaving audiences eagerly waiting to see what other exciting surprises the director Manoj NS have in store as the film gears up for the grand Audio launch on January 4th, Sunday evening at the Sathyabama University. The full-length comedy feature film is planned to be released worldwide in theatres in May 2026.

பிரபல நிறுவனமான Behindwoods Productions தயாரிக்கும் ‘மூன்வாக்’ (Moonwalk) திரைப்படத்தின் 14 கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பிரபுதேவா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் பல்வேறு வகைகளில் புதுமைகளை கொண்டு வரவுள்ளது.

“மூன்வாக்” படத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், இசை உலகின் ஜாம்பவான் ஏ.ஆர். ரஹ்மான் முதன்முறையாக நடிகராக இந்தப் படத்தில் தோன்றுகிறார் என்பதுதான். மேலும், இந்த படத்தின் ஐந்து பாடல்களையும் அவரே பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் என்ற தன் வழக்கமான அடையாளத்தைத் தாண்டி, “ஒரு கோபமான இளம் திரைப்பட இயக்குநர்” என்ற கதாபாத்திரத்தில் அவர் தோன்றுவது ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியமாக இருக்கும்.

இதுகுறித்து இயக்குநர் மனோஜ் NS கூறியதாவது..,
“‘மயிலே’ பாடலின் படப்பிடிப்பு பிரபுதேவா சார் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் சார் உடன் இணைந்து நடந்தது ஒரு மறக்க முடியாத அனுபவம். அந்தப் பாடல் திரையில் மிக அழகாக உருவாகியுள்ளது. பிரபுதேவா சார் இதில் தன் சிறந்த நடனங்களில் ஒன்றை வழங்கியிருக்கிறார். கொரியோகிராஃபர் சேகர் மாஸ்டருக்கு என் மனமார்ந்த நன்றி.

ஏ.ஆர், ரகுமான் சார் இந்த பாடல் முழுவதும் வருகிறார். அவரது இருப்பு, பாடலுக்கு கூடுதல் அழகையும் சுவாரஸ்யத்தையும் தந்துள்ளது. அந்த பாடலுக்கு பிறகு ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்குமாறு சொன்ன போது , அவர் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். இது படத்தை காணும் ரசிகர்களுக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸாக இருக்கும். அவரை முதல் முதலாக நடிகராக இயக்கிய அனுபவம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. படம் தொடங்கிய முதல் நாள் முதல் அவர் தந்த ஆதரவும் ஊக்கமும் மிகப்பெரிது. அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். செட்டில் அவர் நடிகராக ரசித்துக் கலந்து கொண்ட தருணங்கள் எங்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியது.” திரையில் இதை காணும் ரசிகர்களுக்கும் இது எதிர்பாராத அனுபவமாக இருக்கும்.

அதே போல் பிரபுதேவா கதாப்பாத்திரமும் இப்படத்தில் மிகச்சிறப்பு மிக்கதாக இருக்கும். இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடனக் கலைஞர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குநர்களில் ஒருவராக போற்றப்படும் பிரபுதேவா, இந்தப் படத்தில் ‘பாபூட்டி’ என்ற இளம் திரைப்பட நடன இயக்குநராக நடித்துள்ளார். நடனம், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளை ஒருங்கே வெளிப்படுத்தும் இந்தக் கதாபாத்திரம், படத்தின் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் கவனம் ஈர்க்கும் அம்சங்களில் ஒன்றாக இருக்கும்.

மேலும், யோகி பாபு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ‘கவரிமான் நாராயணன்’ மற்றும் ‘ஆட்டுக்கால் அழகு ராசா’ என்ற இரண்டு கதாபாத்திரங்களுடன், மூன்றாவது கதாபாத்திரமாக ‘துபாய் மேத்யூ’ என்ற வேடத்திலும் தோன்றுகிறார். இது படத்தின் விசித்திரமான மற்றும் வித்தியாசமான அம்சமாக ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும். மேலும் “யோகி பாபு சாரின் கதாபாத்திரம் தொடர்பான ஒரு பெரிய சர்ப்ரைஸ் ஆடியோ வெளியீட்டில் அறிவிக்கப்படும்” என இயக்குநர் மனோஜ் தெரிவித்தார்.

இப்படத்தில் அஜு வர்கீஸ் (‘லார்ட் ஜோகோவிச்’), அர்ஜுன் அசோகன் (‘லூனா’), சாட்ச் (‘ஜாஸ்மின்’), சுஷ்மிதா (‘சில்க்’), நிஷ்மா (‘நக்மா’), ஸ்வாமிநாதன் (‘பெரிய பண்ணை’), ரெடின் கிங்ஸ்லி (‘கண்ணு குட்டி’), ராஜேந்திரன் (‘மல்லிகார்ஜுன்’), தீபா அக்கா (‘கற்பூரழகி’), சந்தோஷ் ஜேக்கப் (‘தவசி’) மற்றும் ராம்குமார் (‘ராஜ் பப்பர்’) ஆகிய வேடங்களில் நடித்துள்ளனர். “இத்தனை திறமையான கலைஞர்கள் அனைவரும் ஒரே படத்தில் இணைந்திருப்பது பெரும் ஆசீர்வாதம். ரசிகர்கள் இந்த திரைப்படத்தை நிச்சயம் ரசிப்பார்கள்” என இயக்குநர் மனோஜ் தெரிவித்துள்ளார்.

பிரபுதேவா – ஏ.ஆர். ரஹ்மான் போன்ற மாபெரும் கலைஞர்கள் ஒரே படத்தில் இணைவது மட்டுமல்லாமல், புதுமையான கதை சொல்லலுடன் “மூன்வாக்” ஒரு வித்தியாசமான திரைப்பட அனுபவத்தை வழங்கவுள்ளது. இயக்குநர் மனோஜ் NS இன்னும் என்னென்ன ஆச்சரியங்களை ரசிகர்களுக்காக வைத்திருக்கிறார் என்ற ஆவலைத்தூண்டியுள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 4-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

இந்த முழுநீள நகைச்சுவை திரைப்படம் 2026 மே மாதத்தில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

திருத்தணி சம்பவத்திற்குதற்போதைய சினிமாவும் காரணம்!—இயக்குனர் பேரரசு!

0

நாட்டில் நடக்கும்
தொடர் வன்முறைக்கு
அரசாங்கத்தையும்,
அரசியல்வாதிகளையும்,
காவல் துறையையும்
சமூக அவலங்களையும் மட்டும்
குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
இதற்கு சினிமாவும் பொறுப்பேற்க வேண்டும்! சில சினிமாக்களும் இதுக்கு காரணம் என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்!
எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர், ரஜினிகாந்த் (பழைய படங்கள்) விஜயகாந்த் போன்ற பல ஆக்சன் ஹீரோக்களின் படங்கள் வந்திருக்கிறது. அப்போதெல்லாம் இப்படி வன்முறையான சண்டைக் காட்சிகள் இருந்ததில்லை!
கம்பராமாயணம் படமாக்கப்பட்டிருக்கிறது, மகாபாரதம் படமாக்கப்பட்டிருக்கிறது. இதில் வரும் யுத்த களத்தில் ஆயிரக்கணக்கான பேர் மோதிக் கொண்டாலும், பலியானாலும் எதிலுமே முகம் சுழிக்கும் வன்முறை தெரிந்ததில்லை!
கலிங்கத்துப் போரைவிடவா சண்டை இருந்துவிடப் போகிறது?
ராணுவ சண்டை காட்சிகள் நிறைந்து எத்தனை படம் வந்திருக்கிறது? அதில் எங்கே வன்முறை கண்டோம்? தற்பொழுதைய சில திரைப்படங்களில் வன்முறை! வன்முறை!! வன்முறை!!!
திரைப்படங்களுக்கு குழந்தைகளை அழைத்துப் போகவே பயமாக இருக்கிறது!
வன்முறையை தூண்டும் படங்களும், நாட்டில் ஒற்றுமை குழைக்கும் படங்களும்,
பிரிவினையை தூண்டும் படங்களும், ஆபாச வசனங்களை அள்ளித் தெளிக்கும் படங்களும்,
படம் முழுக்க குடித்துக் கோண்டே இருக்கும் காட்சிகளும், கதாநாயகர்களே போதைப்பொருள் கடத்துவதும்
நாட்டில் வன்முறைக் கலாச்சாரம் அதிகரிப்பதற்கு காரணமாகின்றன என்பது ஒத்துக் கொள்ள வேண்டிய உண்மை!
சமூகத்தின் மீது அரசாங்கத்திற்கு எந்த அளவிற்கு அக்கறை இருக்கிறதோ! அதே அளவு திரைப்பட இயக்குனர்களுக்கும், முக்கியமாக அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகர்களுக்கும் வேண்டும்!
வன்முறை இல்லாத சண்டை காட்சிகள் அமைப்பதே
சினிமாவுக்கு ஆரோக்கியம்!
சமூகத்திற்கும் ஆரோக்கியம்!

—இயக்குனர் பேரரசு

PRO_Govindaraj

@GovindarajPro

“After Vijayashanti, I am the one who has played a full-length action heroine” – Cynthia Lourde

0

Produced by Cynthia Production House, starring Cynthia Lourde, and written and directed by debutant filmmaker Dinesh Deena, the film “Anali” had its trailer launch and press meet held in Chennai. During the event, actress and producer Cynthia Lourde interacted with the media and shared insights about the film Anali and her journey in cinema.

Speaking at the press meet, Cynthia Lourde said:

“After Varnashramam and Dinasari, Anali is my third production venture. In this film, I have also played the lead role. However, this is not a conventional heroine character—it is something quite unique.

In the 1990s, Vijayashanthi ma’am played action roles in Tamil cinema. But Anali is the first time I have portrayed a full-length action heroine. I performed even the most dangerous stunt sequences—scenes that male heroes themselves hesitate to do—without using a body double. I took huge risks and worked extremely hard for the action sequences.

This film does not have a hero. Instead, it has multiple villains. Shakthi Vasu, son of veteran filmmaker P. Vasu, plays the main antagonist and makes his re-entry into Tamil cinema after nearly 15 years through Anali. Popular Bollywood actor Kabir Duhan Singh plays another villain. Malayalam actor Abhishek appears in an important role. Along with them, actors Ilango Kumaravel, Iniya, Jayasurya, Matthew Varghese, Ashok Pandian, Jensen Diwakar, Vinoth Sagar, Baby Shimali, and Siva have also played key roles.

Nowadays, many films lack a strong story. But the story narrated by director Dinesh Deena is a beautifully crafted one. The film moves at a gripping pace till the very last scene and will keep the audience engaged throughout. It is impossible to predict the climax until the end.

For the first time in Indian cinema history, we erected a massive set in a yard with 10,000 containers, and shot the film entirely on that set for 30 days.

Every film teaches me something new. Through this film, I learned what to do and what not to do. Entering cinema and succeeding without any background is extremely difficult. As a producer, I have been honest. I paid everyone their agreed remuneration on time, including daily allowances during the shoot. Many assumed that since I came from abroad, I would pay any amount asked. But as a producer, I am strict—in that sense, I am completely local.

Anali will be released on January 2. Red Giant Movies will distribute the film across Tamil Nadu. Even if films like Jananaayagan and Parasakthi release the following week, my film will surely continue to run successfully in theatres during the Pongal season.

I will act alongside Thalapathy Vijay, and he will definitely act in a film produced by me. Many say he has quit cinema, but I firmly believe—and I say this confidently—that within two years, Vijay will return to films, and you will witness it.”

Technical Crew

Production House: Cynthia Production House

Producer: Cynthia Lourde

Director: Dinesh Deena

Stunt Choreographer: Kalaimamani Super Subbarayan

Cinematography: Ramalingam

Music Director: DC (Deepan Chakravarthy)

Art Director: Thamu MFA

Editor: Jegan Chakravarthy

Dance Choreographer: Vignesh

Lyricists: Kapilan, A.Pa.Raja, Yazin Sherrif

Playback Singers: Saindhavi, Deepan, Yazin Sherrif, Vikram, Sibi

விஜயசாந்திக்கு பின் நான் தான் முழுநீள ஆக்‌ஷன் ஹீரோயினாக நடித்திருக்கிறேன் – சிந்தியா லூர்டே

சிந்தியா ப்ரொடக்‌ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குனர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “அனலி”. இந்த படத்தின் ட்ரைலர் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது நாயகி மற்றும் தயாரிப்பாளரான சிந்தியா லூர்டே பத்திரிக்கையாளர்களை சந்தித்து அனலி படத்தைப் பற்றியும், தனது சினிமா அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

இந்த சந்திப்பில் சிந்தியா லூர்டே பேசும்போது, “வர்ணாஷ்ரமம், தினசரி படங்களுக்கு பிறகு ‘அனலி’ என்னுடைய மூன்றாவது தயாரிப்பு. இந்த படத்தில் நானே நாயகியாகவும் நடித்திருக்கிறேன். ஆனால் இதில் வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் இல்லை. இது கொஞ்சம் தனித்துவமான இருக்கும்.

90களில் தமிழ் சினிமாவில் விஜயசாந்தி மேடம் ஆக்‌ஷன் படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இந்த படத்தில் முதன் முறையாக ஒரு முழுநீள ஆக்‌ஷன் ஹீரோயினாக நான் நடித்திருக்கிறேன். நாயகர்களே நடிக்க தயங்கும் காட்சிகளிலும் டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து நானே நடித்திருக்கிறேன். ஆக்‌ஷன் காட்சிகளில் எல்லாமே ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன்.

இந்த படத்தில் ஹீரோ என்று யாரும் கிடையாது. நிறைய வில்லன்கள் இருக்கிறார்கள். பி.வாசு சார் மகன் சக்தி வாசு தான் இந்த படத்தின் மெயின் வில்லன். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அனலி படம் மூலம் ரீ-எண்ட்ரி ஆகிறார். பிரபல பாலிவுட் நடிகர் கபிர் துஹான் சிங் இன்னொரு வில்லனாக நடித்திருக்கிறார். மலையாள நடிகர் அபிஷேக் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளங்கோ குமரவேல், இனியா, ஜெயசூர்யா, மேத்யூ வர்கீஸ், அசோக் பாண்டியன், ஜென்சன் திவாகர், வினோத் சாகர், பேபி ஷிமாலி, சிவா என பல பிரபல நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.

இப்போது வரும் படங்களில் கதையே இருப்பதில்லை. ஆனால் இயக்குனர் தினேஷ் தீனா சொன்ன கதை ஒரு நல்ல அழகான கதை. கடைசி காட்சி வரை விறுவிறுப்பாக் செல்லும், இறுதி காட்சி வரை உங்களை அமர வைக்கும். இறுதி வரை உங்களால் கதையை கணிக்கவே முடியாது.

இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக பத்தாயிரம் கண்டெயினர்கள் கொண்ட யார்டில் மிக பிரமாண்டமான செட் அமைத்து 30 நாட்கள் அந்த செட்டிலேயே படம் பிடித்திருக்கிறோம்.

ஒவ்வொரு படத்திலும் நிறைய கற்றுக் கொள்கிறேன். இந்த படத்திலும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என கற்றுக் கொண்டேன். சினிமாவில் எந்த பின்புலமும் இன்றி வந்து சாதிப்பது கஷ்டம். ஒரு தயாரிப்பாளராக நான் நேர்மையாக இருக்கிறேன். எல்லோருக்கும் பேசியபடி சம்பளத்தை தந்திருக்கிறேன். ஷூட்டிங்கிலும் தினசரி பேட்டா முதற்கொண்டு அன்றைக்கே தந்திருக்கிறேன். நான் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறேன், எவ்வளவு சம்பளம் கேட்டாலும் தருவேன் என நினைத்தார்கள். ஆனால் தயாரிப்பாளராக நான் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். அந்த விஷயத்துல நான் பக்கா லோக்கல்.

அனலி ஜனவரி 2ஆம் தேதி வெளியாகிறது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் படத்தை தமிழகம் முழுக்க வெளியிடுகிறது. அடுத்த வாரமே ஜனநாயகன், பராசக்தி படங்கள் ரிலீஸ் ஆனாலும் என்னுடைய படமும் நிச்சயம் பொங்கல் சீசனிலும் தியேட்டர்களில் ஓடும்.

தளபதி விஜய் உடன் இணைந்து நடிப்பேன். என் தயாரிப்பில் அவர் நிச்சயம் நடிப்பார். அவர் சினிமாவை விட்டு போய் விட்டார் என சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன், நிச்சயம் 2 வருடத்திற்குள் அவர் சினிமாவில் மீண்டும் நடிக்க வருவார், அதை நீங்கள் பார்ப்பீர்கள்” என்றார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:

தயாரிப்பு நிறுவனம் – சிந்தியா ப்ரொடக்‌ஷன் ஹவுஸ்

தயாரிப்பாளர் – சிந்தியா லூர்டே

டைரக்டர் – தினேஷ் தீனா

சண்டைப்பயிற்சி – ‘கலை மாமணி’ சூப்பர் சுப்பராயன்

ஒளிப்பதிவு – ராமலிங்கம்

இசை – DC (தீபன் சக்கரவர்த்தி)

கலை இயக்குனர் – தாமு MFA

எடிட்டர் – ஜெகன் சக்கரவர்த்தி

நடன இயக்குனர் – விக்னேஷ்

பாடலாசிரியர்கள் – கபிலன், அ.பா.ராஜா, யாசின் ஷெரிஃப்

பாடகர்கள் – சைந்தவி, தீபன், யாசின் ஷெரிஃப், விக்ரம், சிபி

Avatar: Fire and Ash Emerges as the Biggest Hollywood Film of 2025 in India, Dominates Christmas Holiday Season

0

James Cameron’s Avatar: Fire and Ash has firmly established itself as the biggest Hollywood release of 2025 in India, delivering an extraordinary box office performance and reaffirming the franchise’s unmatched appeal with Indian audiences.

Over Christmas Day, the film continued its phenomenal run, outperforming all new releases and maintaining a commanding lead at the box office gearing for a promising second weekend. The sustained momentum highlights not just a strong opening, but exceptional word of mouth across markets.

During the Christmas holiday season, Avatar: Fire and Ash has emerged as the number one choice for family audiences, drawing audiences across age groups to cinemas and reinforcing its status as the ultimate festive big-screen spectacle.

So far, the film has grossed over ₹130 crore at the Indian box office, a milestone that underscores its massive reach, scale and emotional connect with audiences nationwide.

With its continued dominance and holiday seasons pull, Avatar: Fire and Ash stands tall as a defining cinematic success of the year, setting new benchmarks for Hollywood releases in India.

இந்தியாவில் வெளியான மிகப்பெரிய ஹாலிவுட் திரைப்படமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ 2025 ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் அதிகளவிலான ரசிகர்களை ஈர்த்து வருகிறது!

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் இந்தியாவில் 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஹாலிவுட் வெளியீடாக மட்டுமில்லாமல், பாக்ஸ் ஆஃபிஸிலும் நல்ல வசூலைப் பெற்று இந்திய ரசிகர்கள் மத்தியில் மீண்டும் தனது இருப்பை தக்க வைத்துள்ளது.

கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி பல படங்கள் வெளிவந்தாலும் அதை எல்லாம் தாண்டி, ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் சாதனை படைத்தது மட்டுமல்லாது, இரண்டாவது வார இறுதிக்குள்ளும் வெற்றிகரமாக நுழைந்துள்ளது.

கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் திரையரங்குகளுக்கு சென்று பார்க்க ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் குடும்ப பார்வையாளர்களின் முதல் தேர்வாக உள்ளது. மேலும், பிரம்மாண்டமான சினிமா அனுபவத்தை இந்தத் திரைப்படம் அனைத்து வயதினருக்கும் கொடுக்கிறது எனவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் உணர்வுப்பூர்வமாக கனெக்ட் ஆன இந்தப் படம் இதுவரை, இந்திய பாக்ஸ் ஆஃபிஸில் ரூ. 130 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

விடுமுறை காலத்தில் திரையரங்குகளுக்கு அதிகளவிலான ரசிகர்களை ஈர்த்து வரும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் இந்த ஆண்டில் இந்தியாவில் ஹாலிவுட் திரைப்பட வெளியீடுகளுக்கு புதிய அளவுகோலை அமைத்துள்ளது.

- Advertisement -

Recent Posts