Thursday, June 25, 2026
- Advertisement -
Home Blog Page 74

Megastar Mammootty Visits the Location of Dulquer Salmaan’s Film ‘I Am Game’

0

Megastar Mammootty paid a visit to the location of “I Am Game”, the film starring Dulquer Salmaan. Mammootty arrived at the set of the film, which is currently under shoot, interacted with director Nahas Hidayath, action choreographers Anbariv Masters, Mysskin, Kayadu Lohar, Samyuktha Vishwanathan and spent some time on the set. Pictures of Mammootty from the set have also surfaced. Directed by Nahas Hidayath, the film is produced by Dulquer Salmaan and Jom Varghese under the banner of Wayfarer Films. The screenplay is written by Sajeer Baba, Ismail Abubacker, and Bilal Moidu, while the dialogues are penned by Adarsh Sukumaran and Shahabas Rasheed.

Earlier, Dulquer Salmaan’s first-look poster from the film had been released. The actor is presented in a stylish, mass look that has excited fans and cinema lovers alike. Posters of other key characters from the film had also been released earlier. “I Am Game” marks Nahas Hidayath’s next directorial venture after the superhit “RDX”. The film is one of the most awaited projects among Malayalam cinema audiences today.

This big-budget action thriller is being made as Dulquer Salmaan’s 40th film. Antony Varghese, Tamil actor-director Mysskin, Kayadu Lohar, Kathir, Parth Tiwari, and Tamil actress Samyuktha Viswanathan are also playing pivotal roles in the film. Action choreography for “I Am Game” is handled by Anbariv Masters, who have previously worked on pan-Indian films such as Kabali, the KGF series, Kaithi, Vikram, Leo, and Salaar. After the action hit RDX, this film also marks Anbariv team’s reunion with Nahas Hidayath.

Line Producer – Bibin Perumbilly, Cinematography – Jimshi Khalid, Music – Jakes Bejoy, Editing – Chaman Chacko, Production Head – Sujoy James, Devadevan, Production Designer – Ajayan Chalissery, Makeup – Ronex Xavier, Costume – Masher Hamsa, Production Controller – Deepak Parameswaran, Associate Director – Rohith Chandrasekhar. Lyrics – Manu Manjith, Vinayak Sasikumar, VFX – Taufeeq – Eggwhite, Poster Design – Ten Point, Sound Design – Sync Cinema, Sound Mix – Kannan Ganapath, Stills – SBK, Marketting Head – Vijith Vishwanathan , Pro – Yuvraaj

துல்கர் சல்மான் நடித்து வரும் ‘ஐ அம் கேம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தை மெகாஸ்டார் மம்மூட்டி நேரில் பார்வையிட்டார். தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் லொகேஷனுக்கு வந்த மம்மூட்டி, இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath) , ஆக்ஷன் கோரியோகிராஃபர்கள் அன்பறிவ் மாஸ்டர்ஸ், நடிகர்கள் மிஷ்கின், கயாடு லோஹர், சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடி அவர்களை உற்சாகப்படுத்தினார்.  படப்பிடிப்பு தளத்தில் இருந்து மம்மூட்டி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

‘RDX’ படத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட்டுக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத்தின் அடுத்த முயற்சியாக உருவாகும் இந்த படத்தை, துல்கர் சல்மானும், ஜோம் வர்கீஸும் Wayfarer Films  சார்பில்  பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தின் கதையை சஜீர் பாபா, இஸ்மாயில் அபூபக்கர், பிலால் மொய்து எழுத, வசனங்களை – ஆதர்ஷ் சுகுமாரன், ஷஹபாஸ் ரசீத் ஆகியோர் எழுதுகின்றனர்.

இதற்கு முன்பு ஸ்டைலிஷ் மற்றும் மாஸ் தோற்றத்தில் துல்கர் சல்மான் அறிமுகமான, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் உயர்ந்தது. முக்கிய கதாபாத்திரங்களின் போஸ்டர்களும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

மலையாள சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஐ அம் கேம்’, துல்கர் சல்மானின் 40-வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆண்டனி வர்கீஸ், தமிழ் நடிகர்-இயக்குநர் மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி, தமிழ் நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த பிக்பட்ஜெட் ஆக்ஷன் த்ரில்லரின் சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்ஸ் வடிவமைக்கிறார்கள். கபாலி, KGF தொடர், கைதி, விக்ரம், லியோ, சலார் போன்ற பான்-இந்தியா படங்களில் பணியாற்றிய அனுபவம் இவர்களுக்கு உண்டு. ‘RDX’க்கு பிறகு, நஹாஸ் ஹிதாயத்துடன் அன்பறிவ் குழு மீண்டும் இணையும் படமாகவும் இது அமைந்துள்ளது.

தொழில் நுட்ப குழு விவரம்

லைன் புரடியூசர் – பிபின் பெரும்பில்லி
ஒளிப்பதிவு – ஜிம்ஷி காலித்
இசை – ஜேக்ஸ் பெஜாய்
படத்தொகுப்பு – சமன் சாக்கோ
தயாரிப்பு வடிவமைப்பாளர் – அஜயன் சல்லிசேரி
ஒப்பனை – ரோனெக்ஸ் சேவியர்
ஆடை – மாஷர் ஹம்சா
புரொடக்ஷன் கன்ட்ரோலர் – தீபக் பரமேஸ்வரன்
இணை இயக்குநர் – ரோஹித் சந்திரசேகர்,
பாடல் வரிகள் – மனு மஞ்சித் , விநாயக் சசிகுமார்
VFX –  . தௌஃபீக் (எக்வொயிட்) (Taufeeq – Eggwhite)  
போஸ்டர் டிசைன் – டென் பாயிண்ட்
சவுண்ட் டிசைன் – சிங்க் சினிமா
சவுண்ட் மிக்ஸிங் – கண்ணன் கணபத்
ஸ்டில்ஸ் – எஸ்.பி.கே மார்க்கெட்டிங் ஹெட் – விஜித் விஸ்வநாதன்
மக்கள் தொடர்பு – யுவராஜ்

“ரேஜ்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

0

இயக்கி புரொடக்சன்ஸ் சார்பில், அனாமிகா ரவிந்திரநாத், அபிஷேக் ரவிந்திரநாத் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவனேசன் இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் லவ் டிராமா பின்னணியில், ரிவெஞ்ச் திரில்லராக உருவாகி வரும் திரைப்படமான “ரேஜ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.

சென்னையில் வாடகை கார் ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரு இளைஞன் வாழ்வில் நடக்கும் ஒரு எதிர்பாராத சம்பவம், அவன் வாழ்க்கையையே மாற்றுவது தான் இப்படத்தின் மையம். மாறுபட்ட களத்தில், காதல் கதையுடன், பழிவாங்கும் பின்னணியில் அசத்தலான திரில்லராக இப்படத்தை இயக்கியுள்ளார் சிவனேசன்.

நாயகன் ஷான் அடிப்பட்டு இரத்தம் வழியும் முகத்துடன், ஆக்ரோசம் பொங்க பார்ப்பதாக வெளியாகியிருக்கும் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தில் புதுமுகங்களான ஷான் நாயகனாகவும், ஷெர்லி பபித்ரா நாயகியாகவும் நடித்துள்ளனர். பவன் ஜினோ தாமஸ், ஆர்யன், பிரதோஷ், விக்ரம் ஆனந்த் ஆகியோர் வில்லன் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் முன்னணி நடிகர்களான சரவணன், முனிஷ்காந்த், ராமசந்திரன், மணிகண்டன், அஜித் கோஷி, காயத்ரி ரெமா, கிச்சா ரவி, காலா பீம்ஜி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

அனைத்து ரசிகர்களும் கொண்டாடும் வகையில் கமர்ஷியல் திரில்லராக உருவாகியுள்ள இப்படம், சென்னை, கேரளா, பொள்ளாச்சி ஆகிய ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில்நுட்பக் குழு விபரம்

தயாரிப்பு – இயக்கி புரொடக்சன்ஸ் சார்பில், அனாமிகா ரவிந்திரநாத், அபிஷேக் ரவிந்திரநாத்
இயக்குநர் – சிவனேசன்
ஒளிப்பதிவு- M.S.நவீன்குமார்.
இசை – விபீன் R
எடிட்டிங் – பிரேம் B
கலை இயக்கம் – நீலகண்டன்
ஸ்டன்ட் – யுனிவர்ஸ் ராஜேஸ்.
பாடல்கள் – மதன் கார்க்கி, விவேக், திருமாலி, அபிலாஷ் பிரிட்டோ.
பாடியவர்கள் – GV பிரகாஷ், கார்த்திக், சைந்தவி, மாளவிகா சுந்தர், திருமாலி.

SS Rajamouli on watching Avatar: Fire and Ash, “I was like a child in the theatre” as James Cameron expresses his desire to visit Rajamouli’s film set!

0

A deep dive into Avatar: Fire and Ash and the art of filmmaking through the eyes of two cinematic ICONS – James Cameron and SS Rajamouli

A global cinematic moment was created when filmmaking titans James Cameron and SS Rajamouli came together to discuss the world’s biggest franchise, Avatar and its upcoming instalment, Avatar: Fire and Ash.

The two visionary directors spoke candidly about the nuances of large scale storytelling, their individual creative processes and the shared nervousness that accompanies the release of a film of such magnitude. Their conversation offered a rare insight into the mindset of filmmakers who continue to redefine the boundaries of cinema on a global stage.

Reflecting on his experience of watching Avatar: Fire and Ash, SS Rajamouli described feeling “like a child in the theatre”, praising James Cameron’s ability to continuously evolve cinematic spectacle while keeping emotion at the heart of storytelling. SS Rajamouli even shared that Avatar ran for a year in IMAX in Hyderabad. The filmmaker highlighted how the Avatar franchise remains a benchmark for immersive, big screen experiences.

James Cameron too expressed his admiration for SS Rajamouli’s cinematic vision and shared his desire to visit the Indian auteur’s film set.

Avatar: Fire and Ash from 20th Century Studios releases in India on 19 December in 6 languages English, Hindi, Tamil, Telugu, Malayalam, and Kannada.

‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தை பார்த்த இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி திரையரங்கில் தான் ஒரு குழந்தையாக மாறி குதூகலித்ததாக கூறினார்!

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனும் ராஜமௌலியின் ஃபிலிம் செட் பார்வையிட விருப்பம் தெரிவித்துள்ளார்!

சினிமாவின் போக்கை மாற்றிய முக்கிய ஜாம்பவான்களான ஜேம்ஸ் கேமரூன் மற்றும் எஸ்.எஸ். ராஜமெளலி ஆகிய இருவரின் பார்வையில் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் பற்றிய கலந்துரையாடல்.

உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு மிகப்பிடித்த இயக்குநர்களான ஜேம்ஸ் கேமரூன் மற்றும் எஸ்.எஸ். ராஜமெளலி இருவரும் இணைந்து ‘அவதார்’ திரைப்படத்தின் அடுத்து வெளிவரவிருக்கும் பாகமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ பற்றி கலந்துரையாடினர்.

கதைசொல்லலின் நுணுக்கங்கள், தனிப்பட்ட படைப்பாற்றல் திறன் மற்றும் பட வெளியீட்டின்போது ஏற்படும் பதற்றம் ஆகியவை குறித்து இரண்டு இயக்குநர்களும் வெளிப்படையாக உரையாடினர். உலகளாவிய அரங்கில் சினிமாவின் எல்லைகளை மறுவரையறை செய்யும் இரண்டு அற்புதமான இயக்குநர்களின் மனநிலையை புரிந்து கொள்ள இந்த உரையாடல் உதவியது.

காட்சிகளின் பிரம்மாண்டத்தை இன்னும் விரிவாக்கி உணர்வுப்பூர்வமான கதை சொல்லலில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தை பார்த்த அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டபோது திரையரங்கில் தான் ஒரு குழந்தையைப் போல குதூகலித்ததாக எஸ்.எஸ். ராஜமெளலி கூறினார். ஹைதராபாத்தில் உள்ள ஐமாக்ஸில் ’அவதார்’ திரைப்படம் ஒரு வருடம் ஓடியது என்ற நினைவுகளை பகிர்ந்த எஸ்.எஸ். ராஜமௌலி, பெரிய திரை அனுபவங்களுக்கு ’அவதார்’ திரைப்படம் ஒரு மைல்கல் என்றும் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனை பாராட்டினார்.

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனும் எஸ்.எஸ். ராஜமௌலியின் சினிமா பார்வையைப் பாராட்டியதோடு இந்திய படங்களின் ஃபிலிம் செட்டை பார்வையிடும் தனது விருப்பத்தைப் பகிர்ந்து கொண்டார்.

‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தை 20த் செஞ்சுரி ஸ்டுடியோஸ் டிசம்பர் 19 அன்று இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஆறு மொழிகளில் வெளியிடுகிறது.

Frame and Fame Awards Curtain Raiser: Honouring Cinema with Credibility

0

Veteran journalist, producer, director, and actor Mr. Chithra Lakshmanan, a stalwart of Tamil cinema with over five decades of experience, has announced the launch of the Frame and Fame Awards under his acclaimed YouTube platform, Touring Talkies. The awards are jointly organised by veteran PROs Mr. Singaravelu, Mr. Riaz K. Ahmed, and Ms. Paras Riyaz as partners.

Addressing the media in Chennai, Mr. Chithra Lakshmanan stated that Frame & Fame was conceived as a meaningful tribute to the film fraternity, emphasising that true recognition and applause hold greater value than commercial success, and that the awards seek to restore dignity and credibility to film honours.

The FRAME & FAME Awards will be held on January 25, 2026, at Kamarajar Arangam, Chennai, celebrating outstanding achievers across the Indian film industry.

Renowned filmmaker Mr. K. Bhagyaraj will serve as Chairman of the Jury, with Ms. Khushbu Sundar, Mr. Ilavarasu, Mr. Murali Ramasamy, Mr. T. Siva, Mr. R. K. Selvamani, and Mr. R. V. Udayakumar as jury members. The awards will be presented in 50 categories, covering artistes, technicians, and creative professionals, along with select special honours to be announced shortly.

Jury members T. Siva, R.V Udayakumar, K. Bhagyaraj, and R. K. Selvamani, unveiled the trophy and lauded the organisers’ integrity and unwavering commitment to cinema, expressing confidence that Frame and Fame will soon emerge as one of the most respected film honours in the country.

Jointly presented by Mr. A. C. Shanmugam, Mr. Ishari K Ganesh, and Mr. Kannan Ravi (Dubai), FRAME & FAME Awards aims to set a new benchmark in film awards through its focus on fairness, credibility, and a sincere celebration of talent.

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகரான திரு. சித்ரா லட்சுமணன் அவர்களால் தொடங்கப்பட்ட ஒரு யூடியூப் சேனல் டூரிங் டாக்கீஸ். தமிழ் திரைப்பட வரலாற்றை டிஜிட்டல் ஆவணமாகப் பாதுகாப்பது, அதே நேரத்தில் வதந்தி மற்றும் சர்ச்சைகளைத் தவிர்த்து, சினிமாவைப் பற்றிய ஆழமான, அர்த்தமுள்ள மற்றும் ஆய்வுத் தன்மையுடைய உரையாடல்களை வழங்குவது இந்த சேனலின் பிரதான நோக்கமாகும். இந்த சேனலில் பல தசாப்தங்களாக தமிழ் திரைப்படத் துறையில் நேரடியாகச் செயல்பட்ட அனுபவத்தின் மூலம், திரு. சித்ரா லட்சுமணன் அவர்கள் உண்மைத்தன்மை கொண்ட தகவல்களையும் ஆழமான பார்வைகளையும் பகிர்ந்து வருகிறார். மற்ற எங்கும் பதிவு செய்யப்படாத பல அரிய நினைவுகள், அனுபவங்கள் மற்றும் நிகழ்வுகள் இந்த சேனலின் மூலம் ஆவணப்படுத்தப்படுகின்றன. பரபரப்பையும் ஊகங்களையும் தவிர்த்து, சினிமாவின் கலை, பண்பாடு, பணிமுறைகள் மற்றும் சமூகப் பங்களிப்பு குறித்து மட்டுமே டூரிங் டாக்கீஸ் பேசுகிறது.

ஃப்ரேம் & ஃபேம் (FRAME & FAME) – திரைப்பட விருது விழா

இத்தகைய பண்பாட்டு மற்றும் வரலாற்றுச் சிறப்புகளை கொண்ட டூரிங் டாக்கீஸ் சார்பில், 2025 ஆம் ஆண்டிற்கான இந்திய திரைப்படத் துறையின் சிறந்த சாதனையாளர்களை கௌரவிக்கும் “ஃப்ரேம் & ஃபேம் (FRAME & FAME)” விருது வழங்கும் விழா 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த விருது விழா தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

சித்ரா லட்சுமணன் அவர்கள் பேசும்போது, இந்த விழாவிற்கு வந்துள்ள அனைவருக்கும் வணக்கம். ஒரு பத்திரிக்கை தொடர்பாளராக இருந்து தான், நான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். டூரிங் டாக்கீஸ் சேனலில் சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமில்லாமல், தோல்வியடைந்தவர்கள் பற்றியும் நாம் பேசியுள்ளோம். சினிமாவை பற்றிய புரிதல் அனைவருக்கும் வர வேண்டும் என்று தான் அந்த ஒரு முடிவை எடுத்தோம். நாம் திரையுலகில் இருக்கிறோம், அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டது தான் ஃப்ரேம் & ஃபேம் (FRAME & FAME) – திரைப்பட விருது விழா. எந்த ஒரு கலைஞர்களுக்கும் கோடி கோடியாய் சம்பாதித்தாலும், மேடையில் வாங்கும் கைதட்டல்கள் அதற்கு ஈடாகாது. இந்த விருது வழங்கும் விழாவிற்கு கே. பாக்யராஜ் அவர்கள், தேர்வுக் குழுவின் தலைவராக செயல்பட, திருமதி குஷ்பூ சுந்தர், திரு. இளவரசு, திரு. முரளி ராமசாமி, திரு. டி. சிவா, திரு. ஆர். கே. செல்வமணி, திரு. ஆர். பி. உதயகுமார் ஆகியோர் விருதுக்குரியவர்களை தேர்ந்தெடுக்கின்ற குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

பத்திரிக்கை தொடர்பாளர் தொடங்கி, இயக்குனர் கதாநாயகன், கதாநாயகி என 50 கேட்டகிரியில் விருதுகள் வழங்கப்பட உள்ளது. வழக்கமாக கொடுக்கப்படும் விருதுகள் மட்டும் இல்லாமல் ஸ்பெஷல் ஆக சில விருதுகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது, அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். விருது வழங்கும் விழா என்பது மிகப்பெரிய வேலை. நீண்ட நாட்களாக இது தொடர்பாக யோசித்துக் கொண்டிருந்தேன். இப்போது தான் அது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி 25ஆம் தேதி காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது. நன்றி வணக்கம்.

மூத்த பத்திரிகையாளர் மக்கள் குரல் ராம்ஜி அவர்கள் பேசும் போது, அனைவருக்கும் வணக்கம். சித்ரா லட்சுமணன் அவர்களிடம் பிடித்த விஷயம் காயப்படுத்தாத பேனா எதையும் நியாயப்படுத்தும். பன்மையான பத்திரிக்கையாளர்களில் இவரும் ஒருவர். இனி வரும் ஆண்டுகளில் ஃப்ரேம் & ஃபேம் (FRAME & FAME) விருது பெற்றுக் கொண்டேன் என்று அனைவரும் பெருமை கொள்வார்கள். டூரிங் டாக்கீஸ் எப்படி வெற்றி பெற்றதோ அதே போல இந்த விருது விழாவும் வெற்றி பெறும் நன்றி.

அம்மா கிரியேஷன்ஸ் T சிவா அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். ஒரு காலத்தில் நான் சந்திக்க வேண்டும் என்று காத்திருந்த ஒரு நபர் சித்ரா லட்சுமணன் அவர்கள். அவரை பார்த்து பல விஷயங்களை கற்று கொண்டவன் நான். நான் ஒரு இயக்குனராக வேண்டும் என்று சென்னை வந்தவன். ஆனால் சித்ரா லட்சுமணன் போன்றவர்களை பார்த்து தான் தயாரிப்பாளராக மாறினேன். அவரிடம் உள்ள விடாமுயற்சியை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். மிகப்பெரிய உயரங்களையும், தாழ்வுகளையும் பார்த்துக் கொண்டு வந்துள்ளார். டூரிங் டாக்கீஸ் சேனல் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கவர்ந்துள்ளது. இது அவரது உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. அவருடைய விருது விழாவில் 100% உழைப்பை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்கு ஊடக நண்பர்களின் ஒத்துழைப்பும் அவசியம். நன்றி

இயக்குனர் RV உதயகுமார் அவர்கள் பேசும்போது, சித்ரா லட்சுமணன் எதையும் சரியாக திட்டமிட்டு செய்வார். அவருடைய திரை உலக பயணம் என்பது ஒரு நீண்ட கால பயணம், சாதாரணமாக வந்து வடவில்லை. அவர் தயாரித்த ஒவ்வொரு படங்களும் சிறந்தவை. எந்த ஒரு பொறுப்பிலும் தன்னுடைய முழு உழைப்பை கொடுப்பவர் சித்ரா அண்ணன். எதை செய்தாலும் சிறப்பாக செய்யக்கூடியவர். யாரையும் புண்படுத்தாமல் பேசும் உண்மையான youtube சேனல் என்றால் அது டூரிங் டாக்கீஸ் தான். தற்போது ஃப்ரேம் & ஃபேம் (FRAME & FAME) – திரைப்பட விருது விழாவை தொடங்கியுள்ளனர். இன்று விருதுக்கு உண்டான மரியாதை போய்விட்டது. விருதுகள் வியாபாரம் ஆகிவிட்டது. யார் விழாவிற்கு வந்தாலும் அவர்களுக்கு ஒரு விருது வழங்கப்படுகிறது. உலகளவில் ஃப்ரேம் & ஃபேம் (FRAME & FAME) – திரைப்பட விருது வாங்குவது பெருமைப்படும் விதத்தில் இந்த விருதை கொண்டு செல்ல வேண்டும். நாங்கள் அனைவரும் உங்களுடன் உறுதுணையாக இருப்போம். இதனை ஒரு மகிழ்ச்சியான பயணமாக எடுத்துக் கொண்டுள்ளோம். வெற்றியடைய வாழ்த்துக்கள்.

இயக்குனர் கே பாக்யராஜ் அவர்கள் பேசும்போது, பத்திரிகை நண்பர்களுக்கு வணக்கம். எப்போதும் கற்றுக் கொள்வதற்கு வயதில்லை. நல்ல பத்திரிகையாளர் என்ற முறையில் சித்ரா லட்சுமணன் அவர்களை ஆரம்ப காலத்தில் இருந்து தெரியும். இந்த காலத்தில் விளம்பரம் என்பது கண்டிப்பாக தேவை. ஃப்ரேம் & ஃபேம் (FRAME & FAME) என்பது ஒரு நல்ல பெயர். விருது வழங்கும் விழாவில் நடுவராக இருக்கும்போது ரெக்கமண்டேசன் அதிகமாக வரும். மனசாட்சியை தூக்கி வைத்துவிட்டு, நியாயமாக இதனை செய்யும் போது நிறைய பேரிடம் திட்டு வாங்க வேண்டி வரும். இந்த விருது வழங்கும் விழாவை நியாயமான முறையில் சரியான முறையில் வழங்குவார்கள். வரும் காலங்களில் சித்ரா லட்சுமணன் அவர்களின் ஃப்ரேம் & ஃபேம் (FRAME & FAME) விருது வாங்குவது மரியாதையான விஷயமாக இருக்கும். நன்றி வணக்கம்.

ஆர்கே செல்வமணி அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். கடந்த மாதம் சித்ரா லட்சுமணன் அவர்கள் இந்த விருது விழாவை பற்றி என்னிடம் பேசியிருந்தார். தற்போது விருது விழாக்கள் மிகவும் குறைந்துள்ளது. OTT வந்த பிறகு தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்தும் விருது விழாக்கள் குறைந்துவிட்டது. விருது வழங்கும் விழாக்கள் கலைஞர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாக இருந்து வந்தது. அவர்கள் விருது வாங்கவில்லை என்றாலும், அவர்களின் நண்பர்கள் விருது வாங்கும் போது தீபாவளி போன்ற ஒரு மகிழ்ச்சி இருக்கும். கோவிட் காலத்திற்கு பிறகு இது போன்ற விழாக்கள் இல்லாமலே போய்விட்டது. சித்ரா லட்சுமணன் அவர்களை 40 வருடமாக தெரியும். உதவி இயக்குனர், இயக்குனர் என தொடர்ந்து அவருடன் பயணம் செய்திருக்கிறேன். சித்திர லட்சுமணன் அவர்கள் எதை செய்தாலும் அதில் குவாலிட்டி இருக்கும். எல்லா மனிதர்களையும் சமமாக நடத்துவார். எந்த வேலை எடுத்தாலும் அதில் சரியாக இருப்பார். ஃப்ரேம் & ஃபேம் (FRAME & FAME) – திரைப்பட விருது விழாவில் எங்களின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும். இந்த விருது விழா அவருக்கு ஒரு அடையாளமாக இருக்கும். நன்றி

விழா அமைப்புக் குழு

திரு. ஏ.சி. சண்முகம், திரு. ஐசரி கணேஷ், திரு. கண்ணன் ரவி (துபாய்) ஆகியோர் இணைந்து வழங்கும் இந்த பிரம்மாண்டமான விருது விழாவை, பல ஆண்டுகளாக விருது விழாக்களை வெற்றிகரமாக நடத்தி வரும் அனுபவமிக்க பத்திரிகைத் தொடர்பாளர்களான திரு. சிங்கார வேலு, திரு. ரியாஸ் கே. அஹமத், செல்வி. பாரஸ் ரியாஸ் ஆகியோர் அமைப்பாளர்களாக ஒருங்கிணைக்கின்றனர்.

நடிகை ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2much படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

0

நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2much படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், படத்தில் நடித்திருக்கும் ஏனைய நடிகர், நடிகைகளின் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வித்தியாசமான மற்றும் கவனம் ஈர்க்கும் காணொலி வடிவிலும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹாட் ஸ்பாட் 2much எனும் திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், எம். எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, அஸ்வின் குமார், ஆதித்யா பாஸ்கர், ரக்சன், பவானி ஸ்ரீ, பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி, ‘ஆதித்யா’ கதிர், விஜய் டிவி அமர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவி – ஜோசப் பால் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை யூ. முத்தையன் மேற்கொள்ள கலை இயக்கத்தை சண்முகம் கவனித்திருக்கிறார். ஜனரஞ்சகமான ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை KJB டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளரும், நடிகருமான K.J. பாலமணிமார்பன் தயாரித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை நடிகர் விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் (Vishnu Vishal Studios) வழங்குகிறது.‌

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”ஹாட் ஸ்பாட் படத்தின் முதல் பாகம் ஆந்தாலஜி படமாக நான்கு கதைகள் இடம் பிடித்தது. ஹாட் ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகத்தில் மூன்று கதைகள் உள்ளது. முதல் பாகத்தில் ஒரு இயக்குநர் தயாரிப்பாளரிடம் கதை சொல்வது போல் இருக்கும். அது இந்தப் படத்திலும் தொடர்கிறது. ஆனால் இதில் மூன்று வெவ்வேறான கதைகளை எதிர்பாராத மற்றும் சுவராசியமான திருப்பங்களுடன் விவரித்திருக்கிறோம்.
இந்த திரைப்படத்திலும் இயக்குநராக நடித்திருக்கிறேன். ஹாட் ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகம் அனைவரும் ரசிக்கும் வகையிலான ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் பொழுதுபோக்கு அம்சங்களும், சமூகத்திற்கு தேவையான கருத்துகளும் சமமாக இடம் பிடித்திருக்கிறது” என்றார்.

படத்தைப் பற்றி தயாரிப்பாளரும், நடிகருமான K.J. பாலமணிமார்பன் பேசுகையில், ” ஹாட் ஸ்பாட் படத்தின் முதல் பாகத்தின் முன்னோட்டம் வெளியானதும் படத்தைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் படம் வெளியானதும் அவை படத்தின் வெற்றிக்கு சாதகமான அம்சங்களாக மாறியது. அத்துடன் ஹாட்ஸ்பாட் படத்தின் முதல் பாகம் பெரியவர்களுக்கான படமாக அமைந்திருந்தது. ஆனால் ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகம் வெகு ஜனரஞ்சகமாகவும் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் குறிப்பாக ஜென் ஜீ தலைமுறையினர் குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து ரசிக்கும் படமாக உருவாகி இருக்கிறது. முதல் பாகத்தில் பேசப்பட்ட சமூகத்திற்கு அவசியமான கருத்துக்கள் இந்த இரண்டாம் பாகத்திலும் விவரிக்கப்பட்டிருந்தாலும் அவை ஜாலியாக சொல்லப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தை விட நட்சத்திர நடிகர்களின் பங்களிப்பிலும் , திரைக்கதையிலும் இரண்டு மடங்கு அதிகம். இதன் காரணமாகவே ‘ஹாட் ஸ்பாட் 2much’ படத்தை விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்குகிறது. ‘ஹாட் ஸ்பாட் படத்தின் முதல் பாகத்தை பார்த்துவிட்டு பாராட்டிய விஷ்ணு விஷால், இரண்டாம் பாகத்தின் கதையை முழுவதுமாக கேட்டுவிட்டு அதைவிட சிறப்பாக இருக்கிறது என்றும், இதனை எங்களுடைய நிறுவனம் வழங்கும்’ என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்” என்றார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அறிமுக காணொலி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்.. இப்படத்தின் பாடல்கள், டீசர், ட்ரெய்லர் , வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

‘பாட்ஷா ‘- ‘பறந்து போ’- ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ – படங்களுக்கு வழங்கப்பட்ட 7 ஸ்டார் விருது 2025

0

தமிழ் திரையுலகில் முதன் முதலாக வெள்ளித்திரை -சின்னத்திரை- டிஜிட்டல் திரை- ஆகிய திரையுலகில் வெளியான தரமிக்க படைப்புகளையும் , கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில், 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் ஆட் ஃபிலிம் ஏஜென்சி நிறுவனத்தின் உரிமையாளர் – தலைமை நிர்வாக அதிகாரி ராஜ் ஈஸ்வர் மற்றும் ரோகிணி சினிமாஸ் ஆகியோர் இணைந்து சாதனை படைத்த வெற்றியாளர்களுக்கு ‘ 7 ஸ்டார் அவார்ட்ஸ் 2025 ‘ எனும் விருதினை வழங்கி கௌரவிக்க தீர்மானித்தனர். இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான கலை விழாவில் தமிழ் திரையுலகத்தை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த விருது வழங்கும் நிகழ்வில் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த இயக்குநர் – சிறந்த ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட வழக்கமான விருதுடன் ரீ ரிலிஸ் அவார்ட்- பெஸ்ட் ஸ்டோரிடெல்லர் அவார்ட் – பெஸ்ட் ட்ரெண்ட் செட்டர் தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் அவார்ட் – பிளாக் பஸ்டர் மூவி அவார்ட்- ஐகானிக் காமெடியன் ஆஃப் தமிழ் சினிமா – டிரிபியுட் அவார்ட் ஆகிய பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்பட்டது. அத்துடன் தொலைக்காட்சி – இணைய தொடர் – ஆகியவற்றிலும் சிறந்து விளங்கும் படைப்புகளுக்கும், கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து டிஜிட்டல் துறையில் தாக்கத்தை ஏற்படுத்திய பிரபலங்களுக்கும் பிரத்யேக விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ரசிகர்களின் உற்சாகமான பங்களிப்புடன் நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்வில் இயக்குநர்கள் சுரேஷ் கிருஷ்ணா- விக்னேஷ் சிவன்- ராம் -அஸ்வத் மாரிமுத்து- அபிஷன் ஜீவந்த் – நடிகர்கள் சௌந்தர்ராஜா, மகாநதி சங்கர் – ஹர்ஷத் கான்- டி டி எஃப் வாசன் – இந்திரஜா ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பெஸ்ட் ரீ ரிலீஸ் ஆடியன்ஸ் ஃபேவரைட் 7 ஸ்டார் அவார்ட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பாட்ஷா’ படத்தை இயக்கிய இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிற்கு வழங்கப்பட்டது.

விருதை பெற்றுக் கொண்டு இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பேசுகையில், ” வாழ்க்கையில் ஒரே ஒரு சூப்பர் ஹிட் படத்தை இயக்குவதே பெரிய விசயம். ஆனால் ‘அண்ணாமலை’, ‘வீரா’, ‘பாட்ஷா’, ‘சத்யா’, ‘இந்திரன் சந்திரன்’, ‘ஆள வந்தான்’ என என்னுடைய பட்டியலில் இருக்கும் போது ரசிகர்களின் பேரன்பு அதிகம்.

‘பாட்ஷா’ படத்தை பற்றி அன்றே பாடலில் குறிப்பிட்டிருக்கிறோம். ‘ஒரே ஒரு சூரியன் தான்.. ஒரே ஒரு சந்திரன் தான்… ஒரே ஒரு பாட்ஷா தான்… ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்… ‘. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 75 வயதாகும் போது சினிமாவில் 50 வது ஆண்டை நிறைவு செய்திருக்கிறார் .அவருடைய திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் ‘பாட்ஷா’. இந்த திரைப்படத்தை மறு வெளியீடு செய்த போது 1995 ஆம் ஆண்டில் ‘பாட்ஷா’ முதன்முதலாக வெளியான போது திரையரங்கத்தில் எப்படி வரவேற்பு இருந்ததோ… அதேபோல் இப்போதும் இருந்தது.

பாட்ஷா படத்தின் முதல் பாதி முழுவதும் மாணிக்கமாக நடிக்கும் காட்சிகளை முழுவதுமாக படமாக்கி விட்டோம். ஆனால் பாட்ஷா என்றொரு கதாபாத்திரம் இருக்கிறது. முதல் பாதியில் பாட்ஷா என்ற ஒரு கதாபாத்திரத்தை குறித்த எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தோம்.

இரண்டாம் பாதியில் ஹைதராபாத்தில் முதல் காட்சி பாட்ஷா கெட்டப்பில் படமாக்க பட வேண்டும். அந்த நாள் என்னால் மறக்கவே முடியாது. கோல் கொண்டா பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் அனைவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்காக காத்துக் கொண்டிருந்தோம். சொன்ன நேரத்திற்கு சரியாக வரும் பழக்கம் கொண்ட ரஜினிகாந்த் படப்பிடிப்பு வருவது தாமதமானதால் அவரை சந்திப்பதற்காக நான் அவர் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு சென்றேன். பாட்ஷா கதாபாத்திரத்திற்கான மேக்கப் செய்து கொண்டு அறையின் வெளிச்சத்தை குறைத்துக் கொண்டு ஒரு நாற்காலியில் அமைதியாக உட்கார்ந்து இருந்தார். நான் அவரை பார்த்து வணக்கம் சொன்ன போதும் அதனை கண்டும் காணாமல் அமைதியாக இருந்தார். அங்கும் இங்குமாக நடந்தார். பிறகு கோட் அணிந்தார். அதன் பிறகும் அங்கும் இங்குமாக நடந்து கொண்டே இருந்தார். கழுத்திற்கு ஒரு மஃப்ளரை அணிந்து கொண்டார். அப்போது ஒப்பனைக் கலைஞர் சுந்தரமூர்த்தி ரிம் இல்லாத ஒரு கண்ணாடியை கொடுத்து அணிந்து பார்க்க சொன்னார். அதை அணிந்த பிறகு அங்கும் இங்கும் நடந்து பார்த்து விட்டு ஒரு ஸ்டைலை செய்து பார்த்தார். பத்து நிமிடமாக இந்த முயற்சியும் , பயிற்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு என்னை பார்த்து ‘ஓகே ‘என அவருடைய ஸ்டைலில் கேட்டார். அந்தத் தருணம் தான் பாட்ஷா உதித்தார்.

இடைவேளை காட்சிக்கு முன்னர் ரஜினிகாந்த் எல்லாரையும் அடித்துப் போட்டுவிட்டு ‘ஒருவாட்டி சொன்னா நூறு வாட்டி சொன்ன மாதிரி..’ என டயலாக் இருந்தது. ஆனால் அதனை சொல்லும் போது ஏதோ இடையூறாக இருப்பதாக ஃபீல் செய்தார். அந்தக் காட்சி படமாக்கும் முன்னர் சூப்பர் ஸ்டார் என்னை அழைத்து ஒரு வாட்டி என்பது பெட்டரா? அல்லது ஒரு தடவை என்பது பெட்டரா? என கேட்டார். அப்புறம் யாரிடமும் சொல்லாதீர்கள். காத்திருங்கள் என சொல்லிவிட்டார். காட்சி படமாக்கும் போது ‘ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி ..’ என தனக்கே உரிய ஸ்டைலில் அந்த டயலாக்கை பேசினார். அந்தக் காட்சி ஓகே ஆனவுடன் படக்குழுவினர் அனைவரும் அவருக்கு அருகே வந்து பாராட்டு தெரிவித்தனர். படப்பிடிப்பில் இருந்த ஊழியர் ஒருவர் இதை டயலாக்கை சொன்னவுடன் இந்த டயலாக் ஹிட்டாகி விடும் என்பது உறுதியானது. இது சாதாரண டயலாக் தான். ஆனால் சூப்பர் ஸ்டார் சொல்லும்போது அதன் மதிப்பே தனி.

அண்ணாமலை படத்தின் ரீ ரிலீஸ் விரைவில் நடைபெறும். ஆனால் அண்ணாமலை படம் அமெரிக்கா பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் ரீ ரிலீஸ் ஆகிவிட்டது.

‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’, ‘வீரா’ ஆகிய படங்களில் பணியாற்றிய அனுபவத்தை வைத்து நான் ‘பாட்ஷாவும் நானும்’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டு இருக்கிறேன். புத்தகத்தை வாங்கி படித்து ரசித்து மகிழுங்கள். ” என்றார்.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் – தயாரிப்பாளர் – பாடலாசிரியர் – நடிகர் – தொழில் முனைவோர் – என ஏழு பிரிவில் தனித்துவமாக திகழும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு 7 ஸ்டார் விருது வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜென் ஜீ ஆடியன்ஸின் பெஸ்ட் ட்ரெண்ட் செட்டர் ஆஃப் தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் 2025 எனும் 7 ஸ்டார் விருதை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பெற்றார்.

விருதினை பெற்றுக் கொண்ட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசுகையில், ” டிராகன் – ஜென் ஜீ படம் அல்ல. 90′ ஸ் கிட்ஸ்களுக்கான படம். அதை இந்த தலைமுறையினரும் ரசிக்கும் வகையில் கொடுத்திருக்கிறோம். படத்தில் அப்பா சென்டிமென்ட் அம்மா சென்டிமென்ட் இருக்கும். எல்லா தரப்பு ரசிகர்களையும் சென்றடைந்ததாக நான் உறுதியாக நம்புகிறேன். இந்த விருதை ரோகிணி சினிமாஸ் – செவன் ஸ்கிரீன் என்டர்டைன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கியதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி பெறுவதை தான் அனைத்து இயக்குநர்களும் விரும்புவார்கள். அதுதான் இயக்குநரின் கனவாகவும் இருக்கும். திரையரங்குகளில் தான் ரசிகர்களின் கைதட்டல் இயக்குநர்களுக்கு உத்வேகம் அளிக்கும் ” என்றார்.

2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த இயக்குநருமான விருதை டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநரான அபிஷன் ஜீவந்திற்கு 7 ஸ்டார் விருது வழங்கப்பட்டது.

இயக்குநர் அபிஷன் ஜீவந்த் பேசுகையில், ” மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்திற்கு மக்கள் பெரும் ஆதரவை வழங்கினார்கள். படப்பிடிப்பு நடைபெறும் போது நடிகை சிம்ரன் எப்போதும் தான் ஒரு சீனியர் ஆர்டிஸ்ட் என்பதை வெளிப்படுத்த மாட்டார்கள். அவர்களுக்கு நிறைய விசயங்கள் தெரியும் என்றாலும், அந்த காட்சியின் போது இயக்குநரான நான் என்ன சொல்கிறேனோ.. அதை மட்டுமே கேட்டு நடிப்பார்கள். அவர்களின் அந்த அன்பும் எளிமையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் இடம்பெற்ற எம் எஸ் பாஸ்கரின் கதாபாத்திரம் நான் என்னுடைய வாழ்க்கையில் சந்தித்த நபரின் பிரதிபலிப்புதான். எல்லா திரைப்படங்களும் நம்முடைய அனுபவத்திலிருந்து தான் உதிக்கும். இது என்னுடைய அடுத்தடுத்த படங்களிலும் தொடரும்” என்றார்.

2025 ஆம் ஆண்டில் சிறந்த அறிமுக நடிகருக்கான 7 ஸ்டார் ரைசிங் ஸ்டார் விருது ‘ஐ பி எல்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான ‘ரேசிங் ஸ்டார்’ டி டி எஃப் வாசனுக்கு வழங்கப்பட்டது.

விருதைப் பெற்றுக் கொண்டு நடிகர் டி டி எஃப் வாசன் பேசுகையில்,” என்னை நடிகராக அங்கீகரித்து ஏற்றுக்கொண்டு தொடர்ந்து அன்பு செலுத்தும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சினிமாவில் 2026 ஆம் ஆண்டில் என்னைத்தான் எனக்கு போட்டியாக கருதுகிறேன். 2026 ஆம் ஆண்டில் என்னிடமிருந்து நிறைய எதிர்பார்க்கலாம்” என்றார்.

இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவின் ஐகானிக் காமெடியன் ஆஃப் தமிழ் சினிமா எனும் விருது மறைந்த நடிகர் ரோபோ சங்கருக்கு வழங்கப்பட்டது அவர் சார்பில் அவருடைய குடும்பத்தினர் இந்த விருதை பெற்றுக்கொண்டனர். இந்த விருதை நடிகர் சௌந்தர்ராஜா வழங்கினார்.

திருமதி பிரியங்கா ரோபோ சங்கர் பேசுகையில், ” என் கண்களில் வழிவது ஆனந்தக் கண்ணீர் தான். மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்காகத்தான் நம்மை அழைக்கிறார்கள் என அவர் அடிக்கடி எங்களிடம் சொல்வார். நான் அவருடன் இருந்த காலங்களை விட சௌந்தர் ராஜா மற்றும் சுட்டி அரவிந்துடன் இருந்த காலங்கள் தான் அதிகம்.

எங்களுடைய காதலுக்கு சௌந்தர்ராஜா தான் இறக்கை இல்லாத பறவையாக தூது சென்றவர். எங்கள் காதலுக்கு சுட்டி அரவிந்த் தான் விளம்பரதாரர். அவருடைய தயவில்தான் நான் என்னுடைய காதலருடன் போனில் பேச முடியும். அதனால் இவர்கள் இருவரும் தான் எங்களுடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆயுள் முழுவதும் இவர்கள் எங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

2025 ஆம் ஆண்டு மோஸ்ட் இம்பேக்ட்ஃபுல் ஸ்டோரிடெல்லர் 7 ஸ்டார் அவார்ட் எனும் விருது ‘பறந்து போ ‘ எனும் திரைப்படத்திற்காக இயக்குநர் ராமுக்கு வழங்கப்பட்டது.

இது தொடர்பாக இயக்குநர் ராம் பேசுகையில், ” லக்கி பாய் விக்கி உடன் இருப்பது மகிழ்ச்சி. ரோகிணி சினிமாஸ் எனும் திரையரங்கத்தினர் விருது வழங்குகிறார்கள். பொதுவாக திரையரங்கத்திற்கு தான் நாங்கள் விருதுகளை வழங்கி இருக்கிறோம். முதன்முதலாக திரையரங்கம் சார்பில் கலைஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் முதல் முறையாக இந்த விருதினை வழங்குகிறது. இளம் தலைமுறையினர் ஒன்று சேர்ந்து இதனை தொடங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு ஊக்கமளித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக இங்கு வந்தேன். ‘பறந்து போ’ திரைப்படத்திற்காக கிடைக்கும் முதல் விருது இது. நன்றி ” என்றார்.

இயக்குநர் ராமிற்கு விருது வழங்கிய தொழிலதிபர் காளீஸ்வரன் பேசுகையில், ” என்னுடைய மகள்கள் இயக்குநர் ராமின் ரசிகைகள். என் உடல் நலம் சரியில்லை என்றாலும் ராமிற்கு விருது வழங்க வேண்டும் என்பதற்காக இந்த விழாவில் கலந்து கொண்டேன்.

நான் வாசிக்க தொடங்கிய கால கட்டத்திலிருந்து நான் நேசித்த பெரிய மனிதர்கள் பலர் உள்ளனர். ஆனால் வயதான பிறகு நான் நேசிக்கும் முக்கியமான நபர் இயக்குநர் ராம். இவர் நலிந்து போன நாட்டுப்புற கலைகளுக்கு உயிர் கொடுக்கும் கலைஞர்களின் வாரிசுகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். மலைப்பகுதிகளில் கல்வியை இடைநிறுத்தம் செய்த குழந்தைகளை கண்டுபிடித்து ஒருங்கிணைப்பதில் பெரும் சவால் இருந்தது. ஆனால் ராம் இயக்கத்தில் வெளியான ‘பறந்து போ’ படத்தைப் பார்த்த பிறகு அந்தப் பணி எளிதாகிவிட்டது” என குறிப்பிட்டார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசுகையில், ” இயக்குநர் ராம் என்னுடைய பத்தாண்டு கால நண்பர் மட்டுமல்ல என்னுடைய வழிகாட்டியும் கூட. அவருடைய அலுவலகத்தில் தான் நான் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் திரைக்கதையை எழுதினேன். அந்த படம் அவருடைய அலுவலகத்தில் தான் தயாரானது.

அவர் உருவாக்கிய படத்திலேயே பதட்டமே இல்லாமல் பார்த்து ரசித்த படம் தான் ‘பறந்து போ’. இந்தப் படத்திற்கு இதுதான் முதல் விருது என்றாலும் தொடர்ந்து பல விருதுகளை இந்தப் படத்திற்காக கிடைக்கும். ” என்றார்.

2025 ஆம் ஆண்டின் பெஸ்ட் சென்சேஷனல் சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட் 7 ஸ்டார் விருது நடிகர் ஹர்ஷத் கானுக்கு வழங்கப்பட்டது.

விருதைப் பெற்ற நடிகர் ஹர்ஷத் கான் பேசுகையில், ” இந்த வருஷம் குட்டி டிராகன் எனும் மிகப்பெரிய விருதை கதாபாத்திரமாக கொடுத்தது எங்கள் இயக்குநர் அஸ்வத் தான். இந்த வருஷம் அவர் கையால் ஏதேனும் விருதினை வாங்கிட வேண்டும் என விரும்பினேன். இது அவருக்கு இன்னும் தெரியாது. இருந்தாலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் 7 ஸ்டார் விருதினை வாங்கியிருக்கிறேன். இதுவும் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது நன்றி” என்றார்.

இவர்களுடன் விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியான ‘ஹார்ட் பீட்’ வெப் சீரிஸ், ‘பிக் பாஸ் 8 ‘என பல்வேறு சின்னத்திரை – டிஜிட்டல் திரை நட்சத்திரங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் 7 ஸ்டார் விருது வழங்கப்பட்டது.

அத்துடன் ரோகிணி சினிமாஸ் நிறுவனம் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்பட்ட குறும்படத்திற்கான போட்டிப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த குறும்படத்திற்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

பொழுதுபோக்கு துறையில் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நிகழ்ச்சிகளுக்கும், கலைஞர்களுக்கும் விருது வழங்கும் வகையில் இந்த 7 ஸ்டார் விருது வழங்கும் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றதால் கலைத்துறையினரின் கவனத்தை கவர்ந்தது.

யார் தீயசக்தி? பொதுவெளியில் பேச ஒத்தையா வரேன்! நீங்க தயாரா மிஸ்டர் விஜய்!

0

–மன்சூர் அலிகான் சரமாரியாக கேள்வி!!

பாஜக தீயசக்தி.
2014 இல் இருந்து E.V.M. வச்சு பதவியவிட்டு இறங்காம, பாசிச ஆட்சி நடத்துறாங்களே கண்ணுக்கு தெரியலையா விஜய்!
இல்ல, எஜமான விசுவாசமா?

நீட்’ட யாரு கொண்டு வந்தா? தீய சக்தி பாஜாக இல்லயா விஜய்?

100 நாள் வேலை திட்டத்துல இருந்து மகாத்மா காந்தி பெயரை ஒழித்து, நிதியும் ஒதுக்காம களவாணித்தனம் செய்யுற பிஜேபி தீய சக்தி இல்லயா விஜய்?
திருப்பரங்குன்றத்துல கலவரத்தை ஏற்படுத்தி, தமிழ்நாட்ட கபளீகரம் பண்ணி ரத்த ஆறு ஓட வைக்க நினைத்த பிஜேபி தீய சக்தி இல்லையா? பாதுகாத்த தி.மு.க அரசு உன் கண்ணுக்கு தீய சக்தியா விஜய்?

எல்லாப் பொதுத்துறையையும் வித்து ஏப்பம் விட்டுட்டு, இந்தியாவுக்குன்னு சொந்தமா ஒரு ஏர்லைன்ஸ் கூட இல்லாத நாடா, மக்கள பிச்சை காரங்களா தொங்கவிட்டுட்ட பிஜேபி தீய சக்தியா தெரியலயா விஜய்?

ஒரு சாமியாரால நடத்தப்படுற இண்டிகோ 1000 பிளைட் திடீர்னு கேன்சல் செய்யப்பட்டு, பயணிகள் லட்சக்கணக்கா அவதிப்பட்டு, உலகமே இந்தியாவை காறி துப்புச்சே, அப்ப பிஜேபி ஒரு தீய சக்தியா தெரியலயா மிஸ்டர் விஜய்?

S.I.R. அமுல் படுத்தி E.V.M மூலம், அயோக்கியத் தனம் பண்ணி, பீகார், மஹாராஷ்டிரா, ஹரியானா என்று தேர்தல் ஆணையரை அவங்க வீட்டு வேலைக்காரனா மாத்தி, அதுக்குனே, சட்டம் திருத்தம் செஞ்சு, மொள்ளமாறித்தனம் செஞ்சு, டெல்லியில உட்காந்து அம்பேத்கர், பெரியார் சிலைகள கூட உடைக்கனும்னு துடிக்கிற தீயசக்தி பிஜேபி’ன்னு உங்க அறிவுக்கு படலயா திருமிகு விஜய் அவர்களே!

இது மாதிரி 100 கேள்விகள் இருக்கு பொது வெளியில பேச நான். ஒத்தையா வாரேன் நீங்கள் தயாரா விஜய்?

நீங்க மனப்பாடம் பண்ணி. காச்சு மூச்சுண்ணு கத்தினாலும் நீங்க M.G.R அல்ல, அண்ணா அல்ல. சுயமா பிஜேபி’யால இறக்கி விடப்படாம சுயமா சார்ட்டட் Flight, Y பாதுகாப்பு, G பாதுகாப்பு இல்லாம மக்கள் தான் எனக்கு பாதுகாப்புன்னு வாங்க . தோள் கொடுப்பான் தோழன். பாவம். பச்சை புள்ளைங்க நிலா வ புடிக்க ஆசை படக்கூடாது. நீங்க நெறய படம் நடிக்கனும்! ‘ஜனநாயகன்’ சத்தியமா உங்க கடைசி படம் இல்ல. என்னா, உங்க முதல் படத்துல நடிச்ச நான் அது நடிக்கல . நான் நடிச்சிருந்தாத்தான் அது கடைசி படம். உங்களுக்கு நிறைய ரசிகை, ரசிகர்கள் இருக்காங்க… அவங்க நீங்க நல்லா டான்ஸ் ஆடி நடிக்கறதத்தான் விரும்புவாங்க! வாங்க சீமான் ஒரு பக்கம், நெஞ்சு வெடிக்க கத்தறது பத்தாதுண்ணு நீங்க வேற நெஞ்சு… புடைக்க உதரவிதானத்துல இருந்து கத்தாதீங்க! நிறைய டைரக்டர்களுக்கு உங்க கால் சீட் தேவைப்படுது. பிஜேபியையும், மதவாதத்தையும் ஒழிக்க முதல்ல வாங்க! தூய சக்தி தமிழக மக்கள் தான். அவங்க முடிவு. அதிரடியா இருக்கும் பெண்கள் பாதுகாப்பு நிதிஷ் குமார். C.M. பர்தாவ தூக்கி பாத்தானே! அங்க கேக்க மாட்ட?
சட்டம் ஒழுங்குனா என்ன விலைன்னு கேக்குதே மோடி அரசு. அங்க உங்க Flight ல ஒருக்கா போய் பாத்துட்டு வாங்க என் அன்புத் தம்பி விஜய் அவர்களே! 250 நாட்டுக்கு நம்ம Sorry Sorry உங்க பிரதமர் மோடி போனாரே அது அதானி etc கம்பெனிக்கு வியாபார ஒப்பந்தம் போடத்தான்கிறது கூட தெரியாத நல்ல சக்தியா அப்பாவியா இருக்காதப்பா விஜய்!

நன்றி! அடுத்த படத்துல சந்திப்போம். அதுலயாவது நான் கேட்ட மாதிரி
அந்த Heroin கூட… ரேப் சீன் குடுப்பா. ப்ளீஸ் பா! மத்தபடி நீங்களே டூயட் பாடிக்கங்க! உங்க ரசிகர்கள் சார்பா தான் சத்தியமா கொப்புறான சத்தியமா இந்த வேண்டுகோள். என்னா நீங்க நடிக்காட்டி உங்க ரசிகர்கள் செத்து போயிருவாங்க! அவ்வளவு உயிர் உம் மேல வச்சுருக்காங்க. என் பசங்களும் தான். என் ஜூலை ஹா பொண்ணு உங்களோட ஃபேன். லியோ ல எடுத்த Still கூட யாரும் இதுவரைக்கும் அனுப்பலயாம். அது கூட அனுப்ப முடியலயான்னு கேக்குறாங்க. சரி உடம்ப பாத்துக்குங்க. என்னா, நான் இங்க Fit. அங்க நீங்க கத்தி மாதிரி இருக்கனும். நன்றி.

நாளைய தீர்ப்பு …..
பிஜேபி கையில!

Lenovo India Enables Businesses in Chennai with Smarter AI

0

Demonstrating its end-to-end B2B stack including devices, services and solutions for India’s Enterprise Transformation

CHENNAI, INDIA, December 18 2025 – Lenovo, the global technology leader, today showcased its full-stack enterprise AI portfolio in Chennai, reaffirming its commitment to enabling Smarter AI for All. With a focus on simplifying adoption and accelerating transformation, Lenovo’s integrated offerings are designed to help organizations modernize operations, optimize IT, and scale AI with confidence.

Supporting Tamil Nadu’s Tech Acceleration

Chennai continues to lead India’s enterprise-tech landscape as the country’s SaaS Capital, backed by a strong engineering workforce and more than fifty successful SaaS companies. Tamil Nadu as one of India’s top software exporters and the second-largest data centre market with nineteen operational facilities, the city is set to contribute about 25 percent of upcoming national capacity. Chennai also hosts over 250 Global Capability Centres, expected to rise to 450 to 460 by 2030, highlighting its growing global relevance. With this strong momentum in innovation and enterprise demand, Chennai remains a strategic market where Lenovo’s full-stack AI and digital solutions can help organizations scale with confidence.

Enabling Smarter and Secure AI Adoption

Enterprises across India continue to express strong intent to adopt AI, but many are challenged by deployment complexity and scaling constraints. Lenovo’s portfolio has been designed to simplify this journey while ensuring performance, security and flexibility across environments.

Future-Ready Enterprises Enabled by Lenovo Services
The Chennai showcase featured Lenovo’s complete enterprise AI Portfolio, including:

  • Infrastructure Solutions: Servers, storage, edge, and high-performance computing (HPC)
  • Software-Defined Infrastructure & Services: TruScale for scalable infrastructure, Digital Workplace Solutions (DWS), Device as a Service (DaaS), and Premier Support Plus
  • AI-Powered IT Tools: Lenovo Device Intelligence Plus and Care of One for predictive support and intelligent, personalized user experiences
  • Sustainable Solutions: Lenovo’s portfolio also supports sustainability goals through innovations such as Lenovo Intelligent Sustainability Solutions Advisor (L.I.S.S.A.) for emissions tracking and Neptune Liquid Cooling 2.0 for efficient operations without sacrificing energy efficiency
  • Security Solutions: ThinkShield XDR for endpoint detection and response and Cyber Resiliency as-a-Service, developed with Microsoft
    Accelerating AI Maturity with Hybrid Architecture
    Chennai’s diverse economy spanning SaaS, IT services, automotive manufacturing, data centres and global engineering hubs requires flexible and secure AI architectures. Lenovo’s hybrid AI model supports this shift by allowing organizations to train models in cloud or hybrid environments and run inference at the edge while maintaining control, compliance and high performance.

“Tamil Nadu is witnessing strong momentum in AI adoption and enterprise technology investment, and customers are looking for solutions that can scale quickly and securely.” said S.K. Venkataraghavan, Director, Solutions and Services Group, Lenovo India. “Lenovo’s full-stack AI portfolio helps enterprises convert intent into real outcomes with the right mix of infrastructure, services and intelligent tools. Our hybrid AI architecture brings edge, cloud and on-prem systems together to support faster insights, stronger compliance and more efficient operations. Chennai’s growing SaaS, data centre and GCC ecosystems make it a key market for this next phase of enterprise transformation.”

Lenovo’s hybrid AI architecture supports every stage of AI maturity by enabling organizations to train models in hybrid or multi-cloud environments and run inference at the edge while maintaining robust security and performance.

As Tamil Nadu accelerates its AI journey, Lenovo remains committed to helping businesses build smarter and more resilient operations across the entire technology stack, from devices to the edge to the cloud.

About Lenovo
Lenovo is a US$69 billion revenue global technology powerhouse, ranked #196 in the Fortune Global 500, and serving millions of customers every day in 180 markets. Focused on a bold vision to deliver Smarter Technology for All, Lenovo has built on its success as the world’s largest PC company with a full-stack portfolio of AI-enabled, AI-ready, and AI-optimized devices (PCs, workstations, smartphones, tablets), infrastructure (server, storage, edge, high performance computing and software defined infrastructure), software, solutions, and services. Lenovo’s continued investment in world-changing innovation is building a more equitable, trustworthy, and smarter future for everyone, everywhere. Lenovo is listed on the Hong Kong stock exchange under Lenovo Group Limited (HKSE: 992) (ADR: LNVGY). To find out more visit https://www.lenovo.com, and read about the latest news via our StoryHub.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில்”தேனாண்டாள் “

0

முரளி இராம நாராயணன் அவர்களின் தலைமையிலான

” ராம நாராயணன்
‘ அணி சார்பாக
தலைவர் பதவிக்கு “தேனாண்டாள்” என்.இராமசாமி (எ) முரளி இராம நாராயணன் அவர்கள் ,இன்று மனு தாக்கல் செய்தார், அவருடன் அவரது அணியினரும் மனு தாக்கல் செய்தனர் .

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக மாறி உள்ளது மகா சேனா.

0

மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில், நடிகர் விமலின் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் உருவான மகா சேனா திரைப்படம் 12.12.2025 அன்று உலகெங்கும் வெளியானது. இயற்கையையும் தெய்வத்தையும் வணங்கும் ஒரு மனித குலம், அதை அழிக்க நினைக்கும் இன்னொரு கூட்டம் என்று ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் காடு சார்ந்த ஆக்சன் திரில்லர் படமான மகாசேனா திரைப்படம், திரையிட்ட திரையரங்குகளி லெல்லாம் குடும்பங்களின் பேராதரவுடன் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 264 திரையரங்குகளில் மகா சேனா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நடிகர் விமல் நடித்து வெளியான ஒரு படம், இத்தனை திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல் முறை.

மேலும் குலதெய்வ வழிபாடு, சமத்துவம், மனிதம் ஆகிய பல கருத்துக்களை முனைப்பில் வைத்து திரைக்கதையாக தொடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ஸ்ருஸ்டி டாங்கே, யோகி பாபு, ஜான் விஜய் உட்பட அனைத்து நடிகர்களும் மிகப்பெரிய உயிரோட்டத்தை கொடுத்துள்ளனர். குலதெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தி சொல்லும் இந்தக் கதையின் அடி நாதத்தை, படம் பார்க்க வரும் குடும்பத்தினரும் குறிப்பாக பெண்களும் கொண்டாடித் தீர்க்ககின்றனர்.

ஆக மொத்தத்தில் மகா சேனா திரைப்படம் மக்களின் பேராதரவுடன் மகத்தான வெற்றியுடன் வீர நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

நடிகர்கள் :

விமல் – செங்குட்டுவன்
சிருஷ்டி டாங்கே – பொம்மி
யோகிபாபு – சுருளி
ஜான் விஜய் – பிரதாப்
கபீர் துஹான் சிங் – கிங் ஆப் காட்ஸ்
மஹிமா குப்தா – கங்கா
விஜய் சேயோன் – இடும்பன்
அல்ஃப்ரெட் ஜோஸ் – காமராஜ்
சுபாங்கி ஜா – மைத்திலி
சிவகிருஷ்ணா – காளி
இலக்கியா – அல்லி

திரைப்படக்குழு :

எழுத்து & இயக்கம் – தினேஷ் கலைச்செல்வன்
ஒளிப்பதிவாளர் – மனாஸ் பாபு D R
இசை – A.பிரவீன் குமார்
பின்னணி இசை – உதய் பிரகாஷ் U P R
கலை இயக்குனர் – V S தினேஷ் குமார்
படத்தொகுப்பாளர் – நாகூரான் ராமச்சந்திரன்
சண்டைக்காட்சி – ராம்குமார்
பாடல் வரிகள் – தினேஷ் கலைச்செல்வன்,
பாபு வசிகர்மன்
உடை – ஹேமா
ஒப்பனை – ஆர்.கே
நடன இயக்குனர் – அமீர்
ஒலி வடிவமைப்பு – ராஜு ஆல்பர்ட்
விளம்பர வடிவமைப்பாளர் – தினேஷ் அசோக்
வண்ணக்கலைஞர் – ஜான் ஸ்ரீராம்
விஷுவல் எஃபெக்ட்ஸ் – வெற்றிச்செல்வன்
லிரிக்கல் வீடியோ – வீடியோ ப்ரொடக்ஷன்

மக்கள் தொடர்பு – ரேகா

தொழில்நுட்ப கலைஞர்கள் :

பவித்ரன் ஜாக்
பாபு வசிகர்மன்
மார்க் ஜெரோ
ஹரிகரன் R
கார்த்திக் செல்வராஜ்
கோகுல் சின்னசாமி
வசந்த்
R முகமது யூசப்
அமிர்தவர்ஷினி

தயாரிப்பு ஒருங்கிணைப்பு :

ரமேஷ் துரைக்கண்ணு
தினேஷ்குமார் வேல்முருகன்
சீயான் நவீன்

டிஜிட்டல் & புரோமோஷன்ஸ் :

டிஜிட்டல் பார்ட்னர் : புக் மை ஷோ, பேடிஎம்,
டிஸ்ட்ரிக்ட்
டிஜிட்டல் புரோமோஷன்ஸ் : அஹமத் அஸ்ஜாத்
கிரியேட்டிவ் புரோமோஷன்ஸ் : தேர்ட் ஐ மீடியா

நிர்வாக தயாரிப்பாளர் :

ராணி ஹென்ரி சாமுவேல்
தயாரிப்பு – மருதம் புரொடக்ஷன்ஸ்

- Advertisement -

Recent Posts