Thursday, June 25, 2026
- Advertisement -
Home Blog Page 78

ஆர்ஜின் ஸ்டுடியோஸ் – ஆதித்யா பாஸ்கர்- கௌரி கிஷன் – கூட்டணியில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 1’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

0

தேசிய விருது பெற்ற நடிகர் எம். எஸ். பாஸ்கரின் வாரிசும், ’96’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, பிரபலமான இளம் நட்சத்திரங்கள் ஆதித்யா பாஸ்கர் – கௌரி கிஷன் ஆகியோர் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 1’ எனும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள பெயரிடப்படாத திரைப்படத்தில் ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், சரஸ்வதி மேனன், கே. பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, டிஎஸ்ஆர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எல். ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்திருக்கிறார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர்ஜின் ஸ்டுடியோஸ் ( Origin Studios) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணதாசன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் , விரைவில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” உண்மை சம்பவத்தை தழுவி தற்போதைய ஜென் ஜீ தலைமுறையினர் ரசிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இதில் ’96’ படத்திற்கு பிறகு மீண்டும் ஆதித்யா பாஸ்கர்- கௌரி கிஷன் ஜோடி திரையில் மேஜிக் செய்திருக்கிறார்கள். இது அனைத்து ரசிகர்களையும் கவரும்” என்றார்.

Indian Cinema Gets Its Most Awaited Platform: Launch of INDIAN FILM MARKET

0

We are delighted to announce the official launch of INDIAN FILM MARKET, a breakthrough platform created to serve as the ultimate one-stop solution for the Indian film industry. For decades, the industry has awaited a unified ecosystem that supports filmmakers at every stage—from script to screen and beyond. INDIAN FILM MARKET is here to fulfill that need.

This visionary platform is the brainchild of Mr. Kannan (Founder, INDIAN FILM MARKET), a seasoned industry leader with 28 years of experience across film production, distribution, exhibition, and senior leadership roles in prominent media and entertainment companies. With a deep understanding of the industry’s challenges and opportunities, Mr. Kannan has embarked on a mission to transform filmmaking in India into a truly profit-driven business model.

Content is king in cinema, and selecting the right cast to elevate that content is equally essential. Through our platform, we are committed to delivering strong, market-ready content to producers—ensuring that film production becomes a 100% profitable venture. We are equally dedicated to introducing fresh talent across all crafts of Indian cinema, enriching the industry with new creative voices.

INDIAN FILM MARKET provides end-to-end support for emerging and established producers, including script selection and creative consultation, budgeting and project planning, complete execution support across production, marketing strategies and campaign management, and comprehensive rights sales including theatrical, audio, OTT, digital and all other ancillary rights.

In addition, INDIAN FILM MARKET has established a dedicated Writer’s Room that will support emerging writers to professionally develop screenplays, facilitate the sale of their content, and further enable the creation of films based on their work. This initiative aims to consistently introduce new voices, ideas, and creative talent into Indian cinema.

To strengthen Indian cinema’s global presence, we have already partnered with 20 international groups from different countries, giving our projects access to world-class shooting locations and government-backed subsidies. As part of our global vision, we also organize international film festivals to showcase Indian films in foreign markets, while also acquiring the rights of foreign films for distribution across India. These efforts foster cultural exchange, broaden distribution opportunities, and expand India’s cinematic footprint across global markets.

Additionally, INDIAN FILM MARKET will host annual awards to recognize and uplift emerging talent across the film industry. These awards will offer a prestigious platform for new filmmakers, actors, and technicians to gain visibility and establish credibility.

At the heart of our mission is a commitment to discovering and nurturing fresh talent—from actors to technicians across every department of filmmaking. We aim to create meaningful opportunities and build a strong, future-ready creative force for Indian cinema.

We warmly welcome new producers, storytellers, and creative minds to join us. Together, we can make every film a profitable venture while elevating the global reputation and pride of Indian cinema.

INDIAN FILM MARKET — Shaping the Future of Indian Cinema.

https://indianfilmmarket.in

இந்திய திரைப்படத் துறையின் முழுமையான தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் புரட்சிகரமான புதிய தளமாக INDIAN FILM MARKET தளம் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

பல தசாப்தங்களாக, படைப்பிலிருந்து திரைக்கு அதைத்தாண்டி திரைப்படத் துறைக்கு ஆதரவாக ஒருங்கிணைந்த ஒரு சூழலை உருவாக்க வேண்டிய அவசியம் இருந்து வந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் தான் INDIAN FILM MARKET தளம் உருவாகியுள்ளது.

இந்த முன்னோடியான முயற்சியின் தலைமைச் சிந்தனையாளர் மிஸ்டர் கண்ணன் (Founder, Indian Film Market) தயாரிப்பு, விநியோகம், திரையரங்க மேலாண்மை, மேலும் முன்னணி மீடியா நிறுவனங்களில் 28 ஆண்டுகால தலைமைப் பொறுப்புகளில் அனுபவம் பெற்றவர். இந்திய திரைப்படத் துறையின் சவால்களையும், அதில் உள்ள வாய்ப்புகளையும் ஆழமாகப் புரிந்தவர் என்பதால், “படத்தை முழுமையாக லாபமளிக்கும் ஒரு தொழில்முறை வணிக மாடலாக மாற்ற வேண்டும்” என்ற நோக்கத்துடன் இந்த தளத்தை உருவாக்கியுள்ளார்.

சினிமாவில் கண்டெண்ட் தான் ராஜா. அந்த கண்டெண்டை உயர்த்த, சரியான நடிகர்கள் மற்றும் சரியான தொழில்நுட்பக் குழுவை தேர்வு செய்வதும் மிகவும் முக்கியம். எங்கள் தளத்தின் மூலம், தயாரிப்பாளர்களுக்கு வலுவான, சந்தைத் தரமான கதைகளையும், தயாரிப்புக்கான தொழில்நுட்ப குழுவையும் வழங்கி, ஒவ்வொரு திரைப்படமும் 100% லாபகரமானதாக அமைய எங்கள் குழு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. அதே நேரத்தில், இந்திய சினிமாவின் ஒவ்வொரு துறையிலும் புதிய திறமைகளை அறிமுகப்படுத்துவதே எங்கள் முக்கிய குறிக்கோள் என அவர் தெரிவித்துள்ளார்.

INDIAN FILM MARKET வழங்கும் முழுமையான சேவைகள்:
• கதை தேர்வு & திரைப்பட படைப்புக்கான ஆலோசனை
• பட்ஜெட்டிங் & திட்டமிடல்
• தயாரிப்பில் A–Z வரை படைப்பை நிறைவேற்றுவதற்கான உதவிகள்
• மார்க்கெட்டிங் திட்டம் & புரமோசன் மேற்பார்வை திட்டங்கள்.
• ரைட்டர்ஸ் ரூம் மூலம் புதிய படைப்பாளிகளுக்கான உதவிகள்.
• தியேட்டர், ஆடியோ, OTT, டிஜிட்டல் உள்ளிட்ட அனைத்து உரிமைகள் விற்பனை

மேலும் அவர் கூறுகையில்

இந்திய சினிமாவை உலகளவில் வளர்க்க, ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளில் உள்ள குழுக்களுடன் நாங்கள் இணைந்துள்ளோம். இதன் மூலம் உலகம் முழுவதும் மிக உயர்ந்த தரத்திலான படப்பிடிப்பு தளங்களும், அரசாங்க மானியங்களும் படைப்பாளிகளுக்கு பெற்றுத் தருவோம் . மேலும், இந்திய படங்களை உலக சந்தைகளில் அறிமுகப்படுத்த சர்வதேச திரைப்பட விழாக்களையும் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதேபோல், வெளிநாட்டு படங்களின் உரிமைகளைக் கொண்டு வந்து இந்தியாவில் விநியோகிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இம்முயற்சிகள் கலாசார பரிமாற்றத்தையும், பரந்த விநியோக வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன.

ஒவ்வொரு ஆண்டும், வளர்ந்து வரும் புதிய திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் INDIAN FILM MARKET விருதுகள் வழங்கப்படும். இதன் மூலம் இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைத்து துறைகளிலும் புதியவர்களுக்கு மிகப்பெரிய மேடை அமையும்.

நடிகர்கள் முதல் அனைத்து தொழில்நுட்பத் துறைகளிலும் புதிய திறமைகளை கண்டறிந்து வளர்ப்பதில் எங்கள் அர்ப்பணிப்பு உறுதியானது. இளம் படைப்பாளர்களுக்கு பொருத்தமான வாய்ப்புகளை உருவாக்கி, இந்திய திரைப்பட உலகிற்கு வலுவான, எதிர்காலத்திற்கு படைப்பாற்றலில் சிறந்த சமூகத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.

புதிய இளம் படைப்பாளிகளுக்கு, “ரைட்டர்ஸ் ரூம்” உருவாக்கி அதன் மூலம் திரைக்கதை உருவாக்குவதற்கான உதவிகளும், அதை விற்பனை செய்வதற்கும் அதை திரைப்படமாக்குவதற்கான உதவிகளும் வழங்கப்படும்.

புதிய தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

ஒவ்வொரு படமும் லாபகரமானதாக மாறும் எதிர்காலத்தையும், இந்திய சினிமாவின் உலகளாவிய பெருமையையும் நாம் இணைந்து உருவாக்கலாம்.

INDIAN FILM MARKET — இந்திய சினிமாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய சக்தி.

https://indianfilmmarket.in

நடிகர் தாடி பாலாஜிக்கு மருத்துவ உதவியாக 1 லட்சம் வழங்கிய கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி செல்வகுமார்

0

சமீபத்திய மழையில் நினைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி செல்வகுமார், அடுத்ததாக குடல் பிரச்சனையால் மருத்துவ சிகிச்சை பெறும் தாடி பாலாஜிக்கு ஒரு லட்சம் உதவி. கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி செல்வகுமார் வழங்கினார்!!
விஜய் அஜித்துடன் பல படங்களில் நடித்தவர் தாடி பாலாஜி. விஜய் டிவியிலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புகழ் பெற்றவர். குடல் பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் தாடி பாலாஜியின் மருத்துவ சிகிச்சைக்கு புலி பட தயாரிப்பாளர், கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி செல்வகுமார் மருத்துவ செலவிற்காக 1 லட்சம் நிதி உதவி வழங்கினார். இதை திரையுலகினரும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

எம் எஸ் பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும் ‘ கிராண்ட் பாதர் ‘ ( GRAND FATHER) பட படப்பிடிப்பு நிறைவடைந்தது !!

0

குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம் எஸ் பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும்’ கிராண்ட் பாதர் ‘ ( GRAND FATHER) ஃபேண்டஸி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.

ஃபேன்டஸி, ஸ்டைலிஷ் ஆக்ஷன், உணர்ச்சி பூர்வமான டிராமா, திகில் நிறைந்த ஹாரர் காட்சிகள், அசத்தலான காமெடி என எல்லாம் சேர்ந்து, ஒரு முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னர் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.

நடிகரான ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் ‘ கிராண்ட் ஃபாதர்’ ( GRAND FATHER) எனும் திரைப்படத்தில் எம். எஸ். பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன், தெலுங்கு நடிகர் சுனில், ஸ்மீகா ,அருள் தாஸ் , முனீஸ்காந்த் ,ஸ்ரீநாத் ,சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , மைம் கோபி, ஹரீஷ் பேரடி, மெட்ராஸ் ரமா , பிபின் குமார் அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பல முன்னணி நடசத்திரங்கள் இணைந்து நடித்துள்ளார்கள்.

மேலும் இப்படத்தில் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான முன்னணி நட்சத்திர நடிகர்கள் இருவர் சர்ப்ரைஸ் கேமியோ செய்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரி சுற்று வட்டார பகுதிகளில், ஒரே கட்டமாக 45 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தை அறிவித்த வேகத்தில், குறுகிய காலகட்டத்தில் முழு படப்பிடிப்பையும் முடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது படக்குழு.

ஒளிப்பதிவாளர் சந்தானம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். திவாகர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை பிரேம் மேற்கொண்டுள்ளார்.‌ ஷிஜூ அலெக்ஸ் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

குட்டி ஸ்டோரீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி பெரும் பொருட்செலவில் மிக தரமான ஒரு படைப்பாக இப்படத்தை தயாரித்து வருகிறார். மெட்ரோ முரளி மற்றும் மெட்ரோ கிரி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.

இயக்குநர் பிராங்க்ஸ்டர் ராகுல் தனது எளிமையான, அனைவரும் கொண்டாடும் பிராங் வீடியோக்கள் மூலம் மக்களின் மனதை வென்றுள்ளார். அந்த வீடியோவைப் போலவே அதே நேர்மையும் உண்மையும் கொண்டு உருவாக்கப்படும் அவரது முதல் படம் “ கிராண்ட் பாதர் “ படமும் பார்வையாளர்களுடன் ஆழமாக இணைந்து, பலரது இதயங்களில் ஒரு தனித்த இடத்தைப் பெறும்.

இளம் தயாரிப்பாளரான புவனேஷ் சின்னசாமி, இளம் இயக்குநர் பிராங்க்ஸ்டர் ராகுல் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளது. டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்து தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்..

ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் & ஜீ ஸ்குவாட் இணைந்து தயாரிக்கும்’ 29 ‘படத்தின் டைட்டில் லுக் வெளியீட்டு விழா

0

நடிகர் விது கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ’29’ என பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில் லுக் மற்றும் ப்ரோமோ வீடியோ வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ’29’ எனும் திரைப்படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, அனு ஸ்ரீ வேகன், ஸ்ரேயாஸ் பாத்திமா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சதீஷ்குமார் கவனிக்க பிரவீன் ராஜா ஆடை வடிவமைப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.
ரொமாண்டிக் ஜானரிலான இந்த திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திகேயன் எஸ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் இப்படத்தின் டைட்டில் லுக் மற்றும் ப்ரோமோ வீடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தயாரிப்பாளர் கார்த்திகேயன் எஸ், இயக்குநர் ரத்ன குமார், ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், படத்தொகுப்பாளர் சதீஷ்குமார், ஆடை வடிவமைப்பாளர் பிரவீன் ராஜா, நடன இயக்குநர் மாஸ்டர் ஷெரிஃப், இணை தயாரிப்பாளர் பிரதீப் குமார் பூபதி, நடிகர் விது, நடிகைகள் ப்ரீத்தி அஸ்ராணி, அனு ஸ்ரீ  வேகன், ஸ்ரேயாஸ் ஃபாத்திமா மற்றும் ஆர். ஜே. அமுதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகை ப்ரீத்தி அஸ்ராணி பேசுகையில், ” நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் எனக்கு சிறப்பானது தான். அதிலும் இந்த ’29 ‘ என் மனதிற்கு நெருக்கமான திரைப்படம். அத்துடன் என்னுடைய கனவு நனவான தருணம் இது. நான் தமிழில் முதல் படத்தில் நடிக்கும் போதே ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் நிறுவனத்தில் பணியாற்றினால் குடும்பத்தில் இருப்பது போன்ற உணர்வு கிடைக்கும் என்பார்கள். அதனால் அந்த நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது இன்று நிறைவேறி இருக்கிறது. அவர்களது குடும்பத்தில் நானும் ஒருத்தியாக இணைந்து இருக்கிறேன். இந்த கதை மீது கார்த்திக் சுப்புராஜ் மற்றும் கார்த்திகேயன் சார் ஆகியோர் வைத்த நம்பிக்கைதான் எங்களுக்கெல்லாம் பணியாற்றுவதற்கான வாய்ப்பை உருவாக்கியது.

இயக்குநர் என்னை சந்தித்து கதையை சொன்னவுடன் மகிழ்ச்சியுடன் நடிக்க ஒப்புக்கொண்டேன். என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை அளித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

படப்பிடிப்பு தளத்தில் காட்சிகளை எப்படி நாங்கள் உணர்ந்து நடித்திருக்கிறோமோ.. அது பார்வையாளர்களாகிய நீங்களும் உணர்வீர்கள் என நம்புகிறோம்.

இந்தப் படத்திற்கான ப்ரோமோ வீடியோவில்.. நீங்கள் யார்?  என்ற கேள்வியை உங்களுக்குள் நீங்களாக ஆழமாக கேட்டு கொள்ளும் வகையில் இருக்கிறது. இது ரசிகர்களுக்கும் பொருந்தும் என எதிர்பார்க்கிறோம். படத்தைப் பற்றி வரும் நிகழ்வில் அதிகமாக பகிர்ந்து கொள்கிறேன். நன்றி”’ என்றார்.

நடிகர் விது பேசுகையில், ” இந்தப் படம் எனக்குள் நான் யார்? என்று கண்டுபிடிப்பதற்கான தூண்டுதலாக இருந்தது. இந்தப் படத்தில் சத்யா எனும் கதாபாத்திரமாக என்னை பார்த்து, தேர்வு செய்து, நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் ரத்ன குமாருக்கு நன்றி. தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தான் என்னை கைப்பிடித்து திரை உலகத்திற்கு அழைத்து வந்தார். இன்று இந்த மேடையில் நிற்பதற்கும் அவரே காரணம். அதனால் அவருக்கும் நன்றி.

இந்தப் படத்திற்காக உருவாக்கப்பட்ட இரண்டு பாடல்களையும் கேட்டு இருக்கிறேன். இரண்டும் அற்புதமாக இருக்கிறது. இதற்காக இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுக்கு நன்றி. அவருடைய குரலை கேட்கும் போதெல்லாம் இசைஞானியின் குரலை கேட்பது போல் இருக்கும். இதனை அவரிடமே தெரிவித்திருக்கிறேன். அவருடைய குரலில் இருக்கும் ஒரு எமோஷன் எனக்கு மிகவும் பிடிக்கும்.

இந்தப் படத்தின் மூலம் ஒளிப்பதிவு சம்பந்தமான நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன்.

29 என்றவுடன் அந்த வயதில் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு வகையான எண்ணங்கள் ஏற்படும். அவை அனைத்தும் இந்த படத்தில் பிரதிபலிக்கும். அதனால் இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில், ” தயாரிப்பாளர் கார்த்திகேயனை ‘டூரிஸ்ட் ஃபேமிலி ‘ படத்தின் வெற்றி விழா நிகழ்வின் போது சந்தித்தேன். அவர் என்னை தொடர்பு கொண்டு, இந்த படத்தின் கதை நன்றாக இருக்கிறது. நீங்கள் பணியாற்றுங்கள் என கேட்டுக்கொண்டார்.‌  இயக்குநர் ரத்ன குமாரை ‘லவ்வர்’ படத்தின் ப்ரீவ்யூ காட்சியை காண அழைப்பு விடுத்தேன்.  மணிகண்டனை வாழ்த்திட வாருங்கள் எனவும் கேட்டுக் கொண்டேன். ஏனெனில் ரத்ன குமாரை எனக்கு பிடிக்கும். அவருடைய சமூக வலைதள பதிவுகளில் அவருடைய ஆளுமையும்,  தெரிந்தது. எதையும் எதிர்கொள்ள கூடிய தைரியமும் அவரிடம் இருந்தது. அதுவும் எனக்கு பிடித்தது.

கலைஞர்களுக்கு தைரியம் மிகவும் முக்கியம். கலைஞர்களைப் பற்றி வெவ்வேறு கருத்துக்கள் இருந்தாலும் அதனை எதிர்கொள்ளும் போது தைரியம் வேண்டும்.

இந்தப் படத்தில் அவர் என்ன கதையைச் சொன்னாரோ.. அதுதான் இசை வடிவமாக உருவாகி இருக்கிறது.‌

இந்தப் படத்திற்காக இரண்டு பாடல்களை உருவாக்கி விட்டோம். ஏனைய பாடல்களும் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆல்பமாக இந்த படத்தின் பாடல்கள் சிறப்பாக இருக்கும்” என்றார்.

தயாரிப்பாளர் கார்த்திகேயன் எஸ் பேசுகையில், ” எனக்கு இது மிகவும் உணர்வுபூர்வமான தருணம். இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் விதுவை மூன்று வயதிலிருந்து எனக்குத் தெரியும். எனக்கு இருக்கும் ஒரே சகோதரர் அவர்தான். அவர் இந்த மேடையில் ஹீரோவாக அமர்ந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது.

ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனமும் ஜீ ஸ்குவாட் நிறுவனமும் இணைந்து தயாரித்த படத்தின் மூலம் அறிமுகமாகும் விது நல்ல நடிகனாக உயர்வார் என நம்பிக்கை வந்துவிட்டது.

ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் என்ற எங்களது தயாரிப்பு நிறுவனம் 2017 ஆம் ஆண்டில் தொடங்கும் போது முதல் படமாக ‘மேயாத மான்’ எனும் படத்தை தயாரித்தோம். அதனை இயக்கியவர் ரத்ன குமார். இன்று வரை நாங்கள் பெருமிதமாக சொல்லிக் கொள்ளும் படங்களில் மேயாத மான் படமும் ஒன்று.

அதன் பிறகு நாங்கள் 17 படங்களை தயாரித்திருக்கிறோம். ஆனால் அவருடன் நாங்கள் மீண்டும் இணைந்து பணியாற்ற முடியவில்லை. அவர் படங்களை இயக்கிய பிறகு கதாசிரியராகவே மாறிவிட்டார்.  

இந்தப் படத்தின் கதையை சில ஆண்டுகளுக்கு முன் அவர் சொல்ல கேட்டிருக்கிறேன். கேட்கும் போதே மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன் அவரிடம் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் தான் வைத்தேன். இந்த கதையை எங்களுடைய நிறுவனம் தான் தயாரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்து விட்டது . இன்னும் நான்கு நாட்கள் படப்பிடிப்பு தான் மீதம் உள்ளது. அதையும் விரைவில் நிறைவு செய்து விடுவோம்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டனிடம் அறிமுகமாகி பழகத் தொடங்கினேன். அவர் பாரம்பரிய இசை குடும்பத்தை சார்ந்தவர் என்று தெரிந்தவுடன் மேலும் நெருக்கமானேன். இசைக்கலைஞர் என்பதை விட அவர் ஒரு நல்ல மனிதர்.

இந்தப் படத்தை நாங்கள் லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறோம். லோகேஷ் கனகராஜ் படப்பிடிப்பில் இருப்பதால் அவருக்கு பதிலாக அவருடைய கல்லூரி கால நண்பரும், அந்த நிறுவனத்தின் இணை தயாரிப்பாளருமான பிரதீப் இங்கு வருகை தந்திருக்கிறார். அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் முதன்முதலாக ஆந்தாலஜி  பாணியிலான திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட முயற்சி செய்தபோது அதில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘களம்’ எனும் குறும் படமும்,  ரத்னகுமார் இயக்கிய ‘மது’ எனும் குறும் படமும் இடம்பெற்றது. அந்த காலகட்டத்தில் கார்த்திக் சுப்புராஜ் – லோகேஷ் கனகராஜ்-  நலன் குமாரசாமி-  அல்போன்ஸ் புத்திரன்-  விஜய் சேதுபதி-  பாபி சிம்ஹா – சந்தோஷ் நாராயணன்-  ஆகியோர் ஒரு குழுவாகவும், நண்பர்களாகவும் தான் இருந்தோம். இன்று வரை ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து ஆதரித்து வருகிறார்கள்.‌

ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் ஒரு படத்தை வழங்குகிறது என்றால் அதற்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவாகி இருக்கிறது. அதனை நாங்கள் தொடர்ந்து தக்க வைப்பதற்காக தரமான படைப்புகளை வழங்கி வருகிறோம். இதற்காக இயக்குநர்களான கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் ரத்ன குமார் பேசுகையில், ”  29 வயதிலிருந்து 30 ஆவது வயதை தொட்டால் ஜாதகம் ரிஜெக்ட் ஆகும் . அப்ளிகேஷன் ரிஜெக்ட் ஆகும். இப்போதெல்லாம் இளைஞர்கள் படம் பண்ண வந்து விட்டார்கள் என்று சொல்லி ஸ்கிரிப்டுகள் ரிஜெக்ட் ஆகும்.

நான் ‘மது’ எனும் பெயரில் குறும்பட ஒன்றை இயக்கினேன். அந்த கதையை தான் ‘ மேயாதமான்’ எனும் திரைப்படமாக ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது. என்னை இயக்குநராகவும் அறிமுகப்படுத்தியது.

சமூக வலைதளங்களில் என்னுடைய புகைப்படத்தை பதிவிட்ட போது சிலர் என்னை மதன் கௌரி என கருதினர்.
திரையுலகில் எழுத்தாளராக கதாசிரியராக பணியாற்றிய போது சந்திக்கும் நபர்கள் என்னிடம் விஜய் சேதுபதி பற்றியும், கார்த்திக் சுப்புராஜ் பற்றியும், லோகேஷ் கனகராஜ் பற்றியும் தான் விசாரிப்பார்கள். அப்போது எனக்குள் நான் யார்? என்ற கேள்வி எழுந்தது.

என்னுடைய 29 வது வயதில் லோகேஷ் எனும் நண்பன் கிடைத்தான். இந்தப் படத்திற்கு ஏன் 29 என பெயரிட்டேன் என்றால் அந்த வயது தான் முக்கியமானது.‌ என்னுடைய வாழ்க்கையில் எனக்கு அந்த வயதில்தான் பகிர்ந்து கொள்ள இயலாத எதிர்மறை எண்ணம் ஏற்பட்டது.‌ அந்தத் தருணத்தில் படத்தொகுப்பாளர் சதீஷ்குமார் தான் ‘உங்களை நீங்கள் உள்ளுக்குள் தேடுங்கள் அல்லது புறத்தில் தேடுங்கள்’ என்று சொல்லி, சபரிமலைக்கு மாலை போட்டு யாத்திரை சென்று வாருங்கள் என அறிவுறுத்தினார்.

என்னைப் பொறுத்தவரை உடல் தான் கடவுள். மனசு தான் தெய்வம் என்ற கொள்கை உடையவன்.‌ சபரிமலை யாத்திரை செல்லும்போது வாழ்க்கை ஏற்றம் இறக்கங்களைக் கொண்டது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.

‘மேயாத மான்’ படத்தில் பணியாற்றியவர்களுடன் மீண்டும் இந்த படத்தில் இணைந்து இருக்கிறேன். மேயாத மான் ரொமான்டிக் காமெடி படம் என்றால் .. இந்த’ 29′ படமும் வித்தியாசமான கேரக்டருடன் கூடிய ரொமாண்டிக் படம் தான்.

என் நண்பன் லோகேஷ் கனகராஜ் தற்போது அவர் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிற்காக குற்றாலத்தில் முகாமிட்டிருக்கிறார். அதனால் இதில் கலந்து கொள்ள முடியவில்லை. அவருடைய நண்பரான பிரதீப் இங்கு வருகை தந்திருக்கிறார்.

நடிகை ப்ரீத்தி அஸ்ரானியிடம் இப்படத்தின் கதையை சொன்னேன். முழுவதுமாக கேட்டுவிட்டு எனக்கு சில இடங்களில் நெருடல் இருக்கிறது. அதில் நடிப்பதற்கு மனம் ஒப்பவில்லை என்றார். அவரை நேரில் சந்தித்து சமாதானப்படுத்துவதற்காக விளக்கம் அளித்தேன். ஆனாலும் அவருடைய முடிவில் அவர் உறுதியாக இருந்தார். அதுதான் இந்த கதையை ஒரு பெண்ணால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால்.. நாம் ஏன் வற்புறுத்த வேண்டும் என நினைத்தேன்.  அவர்கள் மறுத்ததால் திரைக்கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தினேன். அதன் பிறகு படத்தின் தோற்றமே மாறிவிட்டது. இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படத்தின் நாயகனான விது ஒரு வளர்ந்த குழந்தை. அவர் ‘ஜிகர்தண்டா 2’ படத்தில் நடித்திருக்கிறார். ‘ ரெட்ரோ’ படத்திலும் நடித்திருக்கிறார். இந்த இரண்டு படத்திலும் அவருடைய முகம் தெளிவாக இருக்காது. இந்த படத்தில் தான் அவருடைய முழு உருவத்தையும் ஸ்டைலாக காட்சிப்படுத்தி இருக்கிறோம்.

நாம் அன்றாடம் பார்க்கும் பக்கத்து வீட்டு பையனின் கதை தான் இது. ஆனால் மற்றவர்கள் பார்க்க இயலாத கோணத்தில் உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படம் தனுஷ் நடித்த விஐபி படம் போல் இருக்க வேண்டும் என்று நினைத்து எழுதி இருக்கிறேன் ”என்றார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், ” ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் ‘மேயாத மான்’ முதல் படம். அதைத்தொடர்ந்து இதுவரை 17 படங்களை தயாரித்திருக்கிறோம். இருந்தாலும் எங்களுடைய மேயாத மான் முதல் படம் என்பதாலும், அதனை தயாரிக்கும் போது எங்களுக்கு கிடைத்த அனுபவம் பொக்கிஷமானது. அந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் எங்கள் நிறுவனத்திற்கு எப்போதும் சிறப்பானவர்தான்.

ரத்ன குமார் சிறந்த எழுத்தாளர்- கதாசிரியர்- இயக்குநர். அவர் பேசும் பல விசயங்களில் எனக்கு முரண்பாடு இருந்தாலும்.. அவருடன் சகோதர உறவு உண்டு.

இந்தப் படத்தின் கதையை மேயாத மான் படத்தை முடித்த பிறகு எங்களிடம் சொன்னார். இந்தக் கதையை நடிகர் தனுஷிடம் சொன்னோம். அவரும் கேட்டு மிகச் சிறப்பாக இருக்கிறது. ஆனால் இந்தக் கதையில் என்னால் நடிக்க முடியாது. நான் இப்போது ஆக்சன் திரைப்படங்களில் நடித்து வருகிறேன் . வேறு யாராவது இளம் வயதினர் நடித்தால் நன்றாக இருக்கும் என்றார்.

இந்தக் கதை தனுஷிடம் சொல்லப்பட்டதால் இதனை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்றால் நடிப்புத் திறன் கொண்ட நடிகரும், நடிகையும் இருந்தால்தான் பொருத்தமானதாக இருக்கும் என்றேன். இதற்காகவே சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாகி விட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் ரத்னகுமார் விதுவை ஆடிஷன் செய்து அவரை தேர்ந்தெடுத்தார். டபுள் எக்ஸ் படத்திற்கு முன் விது தான் ஹீரோ என்றால் நான் ஒப்புக் கொண்டிருக்க மாட்டேன். ஆனால் ‘ஜிகர்தண்டா 2’,  ‘ ரெட்ரோ ‘ படத்தில் நடித்ததற்கு பிறகு தன்னை நடிகனாக வெளிப்படுத்துவதற்கு கடினமாக உழைத்து தகுதிப்படுத்திக்கொண்டான்.
அவனது ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும் பார்த்துதான் இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு சரி என்று ஒப்புக்கொண்டேன்.

ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அந்த கதாபாத்திரத்தை பற்றி சிந்திக்க வேண்டும். அதற்கான உடல் மொழியை வெளிப்படுத்துவதற்காக முயற்சிக்க வேண்டும்.. என்பதெல்லாம் அவருக்கு  தெரிந்திருந்தது. இதனை நான் ‘ரெட்ரோ ‘ படத்தில் நடிக்கும் போது அவரிடம் ஏற்பட்டிருந்த மாற்றத்தை தெரிந்து கொண்டேன்.

இந்தப் படத்தில் விதுவும், ப்ரீத்தி அஸ்ரானியும் நன்றாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் தொடர்பான 20 நிமிட காட்சியை பார்த்து விட்டேன். நன்றாக இருக்கிறது.

இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருப்பதில் பெருமிதம் அடைகிறேன்” என்றார்.

இதனிடையே இந்த விழாவில் இடம்பெற்ற ’29’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவிர்த்து, கைகளால் வரைந்து நேர்த்தியாக உருவாக்கப்பட்டது என்பதும், இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தங்களுடைய 29 வது வயதில் நடைபெற்ற சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் என்பதும்  கவனிக்கத்தக்கது.

கருநாட சக்ரவர்த்தி சிவராஜ்குமாரின் “45: த மூவி” டிரைலர் டிசம்பர் 15 அன்று வெளியாகிறது!

0

சுரஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் மிகப் பெரிய படைப்பு “45: த மூவி” — கருநாட சக்ரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, பிரபல விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற நடிகர்-இயக்குனர் ராஜ் பி. ஷெட்டி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர்-இயக்குனர் அர்ஜுன் ஜன்யா இயக்கி இசையமைக்கும் இந்த படம் டிசம்பர் 25 ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையிட தயாராகியுள்ளது. ஏற்கனவே வெளியான போஸ்டர், டீசர், கிளிம்ப்ஸ் ஆகியவை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

கன்னடத் திரைப்பட வரலாற்றில் அண்மையில் உருவான மிகத் துணிச்சலான மற்றும் புதுமை நிறைந்த முயற்சிகளில் ஒன்றாக “45: த மூவி” — கதை உலகத்தையும், புதுமையான திரைக்கதை வடிவத்தையும் டிரைலர் வெளியீட்டின் வாயிலாக முழுமையாக அறிமுகப்படுத்த உள்ளது. டிசம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் டிரைலர் குறித்து ரசிகர்களிடையே தேசிய அளவில் கூட பெரும் ஆவல் நிலவி வருகிறது.

சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி. ஷெட்டி ஆகியோரின் புதுமையான லுக்குகளை மையப்படுத்திய அறிவிப்பு போஸ்டர் — படத்தின் மர்மத்தையும் ஆர்வத்தையும் பலமடங்கு கூட்டுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மிகப்பெரிய ரிலீஸிற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

முன்னணி ஸ்டண்ட் இயக்குநர்களான டாக்டர் கே. ரவி வெர்மா, ஜாலி பாஸ்டியன், டிஃப்பரண்ட் டேனி சேதன் டி’சூசா ஆகியோர் வடிவமைத்த அதிரடி காட்சிகள், சத்யா ஹெக்டேவின் கவர்ச்சியான ஒளிப்பதிவு, கே.எம். பிரகாஷின் துல்லியமான எடிட்டிங் ஆகியவை படத்தின் தரத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கின்றன. அனில் குமார் எழுதிய வசனங்களும் ஜானி பாஷா அமைத்துள்ள ஆற்றல்மிக்க நடனக் காட்சிகளும் படத்திற்கு கூடுதல் வலிமையைக் கூட்டுகின்றன.

நடிகர்கள்
சிவ ராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி. ஷெட்டி மற்றும் பலர்

தொழில்நுட்ப குழு
தயாரிப்பு நிறுவனம்: சுரஜ் புரொடக்ஷன்
தயாரிப்பாளர்கள்: திருமதி உமா ரமேஷ் ரெட்டி, எம். ரமேஷ் ரெட்டி
கதை, இசையமைப்பு & இயக்கம்: அர்ஜுன் ஜன்யா
ஒளிப்பதிவு: சத்யா ஹெக்டே
எடிட்டர்: கே.எம். பிரகாஷ்
சண்டை பயிற்சி : டாக்டர் கே. ரவி வெர்மா, ஜாலி பாஸ்டியன், டிஃப்பரண்ட் டேனி சேதன் டி’சூசா
நடன இயக்குனர்: ஜானி பாஷா
வசனம் : அனில் குமார்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)

ASNA CREATIONS நிறுவனம் சார்பில் சையத் தமீன் தயாரிப்பில், சந்தோஷ் ரயான் இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், இன்வஸ்டிகேசன் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி”.

0

விரைவில் திரைக்குவரவுள்ள நிலையில், இப்ப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்

தயாரிப்பாளர் சையத் தமீன் பேசியதாவது..,
இங்கு என்னை வாழ்த்த வந்துள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. வஞ்சிக்கப்பட்ட தோழிக்கு நீதி வேண்டி போராடும் பெண்ணின் கதை தான் இது. இது உண்மையில் நடந்த கதை. இந்த கதையில் வரும் வில்லனுக்கு, 2017 ஆம் ஆண்டு பூந்தமல்லி கோர்டில் தண்டனை வழங்கப்பட்டது, உண்மையில் நடந்ததை வைத்து தான் படம் எடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் என்பவர் எல்லா பிஸினஸ் போல பொருளை தயாரித்து சந்தைக்கு கொண்டு வருகிறார், ஆனால் இடையில் உள்ளவர்கள் தான் சம்பாதிக்கிறார்கள், தயாரிப்பாளருக்கு இறுதியில் தான் என்ன கிடைக்கிறது என்பதே தெரிய வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். படம் பார்த்து உங்கள் ஆதரவைத் தந்து புதிய தயாரிப்பாளரை வாழ வையுங்கள். அனைவருக்கும் நன்றி

கலை இயக்குநர் பாலாஜி பேசியதாவது..,
இயக்குநர், தயாரிப்பாளர் இருவருக்கும் நன்றி. இயக்குநர் முதல் படம் போல் இல்லாமல், மிக அருமையாக இப்படத்தை இயக்கியுள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி

ஒளிப்பதிவாளர் வீரமணி பேசியதாவது..,
இந்தப்படத்தின் கதையை தயாரிப்பாளர் சொல்லிவிட்டார். இப்படத்தை கொச்சின் சென்னையில் இரவு பகலாக ஷீட் பண்ணினோம். இரண்டு டோனில் இரண்டு கலர் பேட்டரினில் ஷீட் செய்துள்ளோம். படம் மிக நன்றாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் கௌதம் வின்செண்ட் பேசியதாவது..,
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என் ஊர் கேரளா ஆனால் நான் படித்தது, வேலை பார்ப்பது சென்னையில் தான், இந்தப்படத்தில் 3 பாடல்கள் உள்ளது. மூன்றும் அருமையாக வந்துள்ளது. என் மனைவி தான் இரண்டு பாடல்களில் பெண் குரலுக்கு பாடியுள்ளார். நாங்கள் எல்லோரும் புதியவர்கள் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர் சினான் பேசியதாவது..,
இயக்குநர் சந்தோஷுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி. எனக்கு இது பெரிய வாய்ப்பு, எனக்கு கொடுத்த கேரக்டரை நன்றாக செய்துள்ளேன் என நம்புகிறேன், அனைவரும் படம் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர் பிட்டு தாமஸ் பேசியதாவது..,
நான் கேரளா தான் தமிழ் பேச கற்றுக்கொண்டிருக்கிறேன். இந்த வாய்ப்பு எனது கனவு நனவானது போல இருக்கிறது. எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி. படக்குழு அனைவருக்கும் நன்றி. இப்படத்தின் இரண்டு பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். பாக்யராஜ் சார் இருக்கும் மேடையில் இருப்பது பெருமை. இது க்ரைம் திரில்லர் நல்ல படம், இது என் இரண்டாவது தமிழ்படம். நானே டப்பிங் செய்துள்ளேன் படம் பார்த்து ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகை ஆஷிகா அசோகன் பேசியதாவது..,
கடவுளுக்கு நன்றி. பாக்யராஜ் சார் போன்ற ஆளுமையுடன் இந்த மேடையை பகிர்ந்துகொள்வது மகிழ்ச்சி. இந்தப்படம் சமூகத்தில் நடந்து கொண்டிருக்கிற, நடக்கிற ஒரு முக்கியமான விசயத்தை படத்தில் பேசியுள்ளார்கள். படம் முழுக்க என்னுடன் உழைத்த அனைவருக்கும் நன்றொ. படத்திற்கு ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகை ஐஸ்வர்யா பேசியதாவது..,
இரண்டு வருடமாக இந்த மேடைக்காக காத்துக்கொண்டிருந்தேன். இந்த வாய்ப்பை தந்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப்படத்தில் சமூகத்திற்கு மிக அவசியமான விசயத்தை பேசியுள்ளோம். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் சந்தோஷ் ரயான் பேசியதாவது..,
இந்த படத்தை தயாரித்த சையத் தமீன் அவர்களுக்கு நன்றி. இப்படத்திற்கு முழு ஆதரவைத் தந்த லால் தேவ் சகாயம் சாருக்கு நன்றி. சரவணன் மசூத் இருவருக்கும் நன்றி. ஆஷிகா அசோகன் மிக முக்கியமான பாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார். இன்னொரு ஹீரோயின் ஐஸ்வர்யா எப்போது சார் படம் வரும் எனக்கேட்டுக் கொண்டே இருந்தார். சூப்பராக நடித்துள்ளார். வில்லன் நடிகர் சினான் மிக நன்றாக நடித்துள்ளார். கௌதம் எனக்காக பல கஷ்டங்களை பொறுத்துக்கொண்டு அருமையான இசையைத் தந்துள்ளார். சந்தீப் மிக நன்றாக எடிட் செய்துள்ளார். ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி, இது நம் நாட்டில் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது நம் தனிமனித ஒழுக்கத்தால் தான் மாறும், அதை இந்தப்படம் அழுத்தமாக பேசும். பெண் பிள்ளைகள் பாதுகாப்பு பற்றி பேசியுள்ளோம். எங்களைப் போன்ற புதியவர்களின் முயற்சிக்கு ஆதரவு தந்து தியேட்டரில் படம் பாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர், நடிகர் JSK சதீஷ் பேசியதாவது..,
இந்த விழா மிக சரியாக நடக்கிறது. படக்குழு மிகத் தெளிவாக எல்லாவற்றையும் செய்கிறார்கள். இப்படத்தை தயாரித்த சையத் அவர்களுக்கு வாழ்த்துக்கள். பிஸினஸ் பற்றி தெரிந்து, துணிந்து நல்ல படத்தை எடுத்துள்ளார். படம் நான் பார்த்து விட்டேன், இயக்குநர் சந்தோஷ் முதல் படம் போல் இல்லாமல் அருமையாக எடுத்துள்ளார். மியூசிக் எடிட்டிங் எல்லாம் நன்றாக உள்ளது. நடித்த அனைவருமே மிக அற்புதமான நடிப்பை தந்துள்ளார்கள். இது போன்ற புதிய படத்தின் விழாவிற்கு வருகை தந்து ஆதரவு தரும் பாக்யராஜ் சாருக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நன்றி. இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது..,
தயாரிப்பாளர் சதீஷ் படம் பார்த்ததாக சொன்னார். அவர் சமீபத்தில் செய்த படம் இந்திக்கு ரீமேக் ஆகிறது. இப்போதெல்லாம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்தால் தான் ரீமேக் செய்கிறார்கள். அவர் படம் பார்த்து நன்றாக இருப்பதாக சொல்வது படத்திற்கு கிடைத்துள்ள பெரிய பாராட்டு. தயாரிப்பாளர் சையத், இயக்குநர் சந்தோஷ், மற்றும் படக்குழுவிற்கு என் வாழ்த்துக்கள். சந்தோஷ் என்னை அழைக்கும் போது, படத்தின் அவுட்லைன் சொன்னார், யாரிடமும் உதவியாளராக இல்லாமல் இருந்தாலும், மிகத் தெளிவாக கதை சொன்னார். அதிலேயே அவர் திறமை தெரிந்தது. இங்கு தயாரிப்பாளர் கதை சொன்னது இன்னும் அருமையாக இருந்தது. க்ரைம் சப்ஜெக்ட் எனக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட், நான் அதிகம் கரைம் ஆக்சன் படங்கள் தான் பார்ப்பேன். முதல் படத்திலேயே சந்தோஷ் அருமையாக இதை எடுத்துள்ளார். இந்தப்படம் யார் நடித்திருக்கிறார் என்பதை விட, என்ன மாதிரி கதையை எடுத்திருக்கிறார்கள் என்பது தான் முக்கியம். நானும் இப்படம் பார்க்க ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறேன். இப்போதெல்லாம் ஆடியன்ஸ் ரிவ்யூ வந்த பிறகு நன்றாக இருந்தால், படத்திற்கு போகலாம் என நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். எனவே பத்திரிக்கையாளர்கள் இம்மாதிரி சின்ன படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் தந்து ஆதரவு தாருங்கள் நன்றி.

ஒரு மருத்துவ கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட நிலையில், அவளது கொலைக்கான காரணத்தைத் தேடி அலைகிறாள் அவளது தோழி. கொலையின் பின்னணியையும், அந்த கொலைக்கான நியாயத்தை கண்டுபிடித்தாளா? கொலையை செய்தது யார்? அதன் பின்னால் உள்ள மர்மம் என்ன?, என்பது தான் இப்படத்தின் மையம்.

உண்மை சம்பவங்களை மையமாக வைத்து, இன்வஸ்டிகேசன் திரில்லர் மற்றும் கோர்ட் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. வித்தியாசமான களத்தில், அனைவரையும் கவரும் கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் சந்தோஷ் ரயான்.

இப்படத்தில் ஆஷிகா அசோகன் முதன்மைப்பாத்திரத்தில் நடித்துள்ளார். முக்கிய பாத்திரத்தில் சாண்ட்ரா அனில் நடித்துள்ளார். இவர்களுடன் ஐஸ்வர்யா, சினான், பிட்டு தாமஸ், ரேகா, ஹரீஷ் பேராடி, நிழல்கள் ரவி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூர், சென்னை, மற்றும் கொச்சின் ஆகிய இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

விரைவில் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில்நுட்ப குழு

இயக்கம் – சந்தோஷ் ரயான்
தயாரிப்பு – சையத் தமீன்
ஒளிப்பதிவு – வீரமணி
எடிட்டிங் – சந்தீப் நந்தகுமார்
இசை – கௌதம் வின்செண்ட்
கலை இயக்கம்- பாலாஜி
உடை வடிவமைப்பு – ஆன்சி ஹெர்மன்
மேக்கப் – சுதீஷ் வன்னப்புரம்
மக்கள் தொடர்பு – A ராஜா

கலைஞர் டிவியில் சனிக்கிழமைதோறும் இரவு 8.30 மணிக்கு “லிட்டில் சூப்பர் ஹீரோஸ்”

0

இளம் திறமையாளர்களுக்காக கலைஞர்தொலைக்காட்சியில் சனிக்கிழமைதோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட நிகழ்ச்சி”லிட்டில் சூப்பர் ஹீரோஸ்”.

வீட்டில் சுட்டித்தனம் செய்யும் குழந்தைகளின் அசாத்தியதிறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் விதமாகஉருவாகியிருக்கும் இந்த நிகழ்ச்சியின் மூலம், பலதரப்பட்ட மற்றும் வித்தியாசமான திறமைகள்உலகறியப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியை தமிழ் சினிமாவில் முன்னணி காமெடிநடிகராக இருக்கும் கருணாகரன் தொகுத்து வழங்குகிறார்.

The New Horlicks: Classic Taste, Superfoods Power with Nutrimax technologyIntroduces a Zero Added Sugar variant

0

~Powered by NutriMax technology to improve nutrient absorption and enhance Horlicks’ clinically proven benefits of helping children grow Taller, Stronger, with Better Cognitive Abilities and Improved Immunity.
~Same great taste of Horlicks, made with Superfoods blends of malted barley, almonds, oats and millets to support everyday nutrition
~Also available in a Zero Added Sugar variant, using Smart Sweetness technology to retain Horlicks’ rich taste without added sugar or artificial sweeteners.

National, 11 December 2025: Hindustan Unilever Limited (HUL) today unveiled the new Horlicks with a blend of Superfoods and proprietary NutriMax technology that helps in better nutrient absorption and enhances nutritional benefits.
The all-new Horlicks is formulated with a blend of superfoods, malted barley, millets, oats, and almonds, ingredients known for their rich nutrient profiles and ability to support everyday nutrition. This upgrade retains the classic taste loved by generations while introducing advanced science to enhance its nutritional impact.
At the heart of this innovation is HUL’s proprietary NutriMax technology. This specialized process helps unlock multigrain goodness by reducing natural anti-nutrients like phytates, that hinder absorption of nutrients like Iron and zinc. By improving ingredient processing, NutriMax increases both soluble and insoluble fiber, supporting better gut health and maximizing the body’s ability to absorb essential minerals. Horlicks Superfoods delivers wholesome nutrition with soluble dietary fiber, antioxidants, essential micronutrients, and protein that helps support immunity. Clinically shown to reduce sick days by up to 30%, it is also proven to promote taller growth, stronger bones, and cognitive ability in children.
The new Horlicks is also available in a Zero Added Sugar variant with same great taste. This uses Smart Sweetness technology to naturally enhance sweetness perception from malted barley, ensuring a pleasant taste without added sugar or artificial sweeteners.
Rajneet Kohli, Executive Director of Foods and Refreshment, Hindustan Unilever, said “Modern lifestyles marked by busy schedules and changing food habits have widened the gap between what people need nutritionally and what they actually consume. In line with the changing needs of today’s consumers, we have launched the new Horlicks making it more purposeful, nutrition-forward and backed by science. This marks a significant step in our journey to transform trusted brands for a new era of everyday nourishment.”
Dr. Sujatha Jayaraman, Head R&D Foods and Beverages, South Asia, Unilever, said “With the all-new Horlicks, we have reimagined a loved product to deliver modern nutrition while retaining the familiarity consumers cherish. With the NutriMax technology, we were able to incorporate Superfoods blends of malted barley, almonds, oats and millets to create a formulation rooted in scientific advancement and high nutritional value. This breakthrough reflects our commitment to delivering accessible, high-quality nutrition options that align with contemporary expectations.”

The event in Chennai brought together popular television star Alya Manasa, celebrated presenter Archana Chandhoke, renowned nutritionists Dr. Dharini Krishnan, Sheryl S. Salis, Executive Director of Foods and Refreshment Rajneet Kohli, and Head of R&D Foods and Beverages Dr. Sujatha Jayaraman from HUL. More than 50 influencers and content creators from Tamil Nadu and Kerala attended, alongside media guests, and experienced a series of Interactive zones that showcased the science behind Horlicks and Horlicks-based preparations including Horlicks Ice Cream, Horlicks Barfi, Filter Coffee Horlicks Cold Brew, Kulukki Shake and Horlicks Mysore Pak. Guests also engaged with health and nutrition experts during an insightful panel discussion. Horlicks now with Superfoods, is available in various pack sizes in Classic Malt flavour across retail stores & online platforms in TN and Kerela. Also available as a Zero Added Sugar variant in a jar in select channels.

About Hindustan Unilever Limited (HUL)
Hindustan Unilever Limited (HUL) is India’s largest Fast-Moving Consumer Goods company, with its products touching the lives of nine out of ten households in the country. HUL works to create a better future every day.
For more information, visit our website: https://www.hul.co.in/

சர்க்கரை சேர்க்கப்படாத ஒரு வகையை அறிமுகப்படுத்துகிறது

~ஊட்டச்சத்து கிரகிப்பை மேம்படுத்தவும், ஹார்லிக்ஸின் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட நன்மைகளை மேம்படுத்தவும் நியூட்ரிமேக்ஸ் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது, இது குழந்தைகள் உயரமாகவும், வலிமையாகவும், சிறந்த அறிவாற்றல் திறன்கள் மற்றும் மேம்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியுடன் வளர உதவுகிறது.

~அன்றாட ஊட்டச்சத்தை ஆதரிக்க சூப்பர்ஃபுட்ஸ் மால்ட் பார்லி, பாதாம், ஓட்ஸ் மற்றும் தினை ஆகியவற்றின் கலவையுடன் தயாரிக்கப்பட்ட ஹார்லிக்ஸின் அதே சிறந்த சுவை.

~சர்க்கரை அல்லது செயற்கை இனிப்புகள் சேர்க்காமல் ஹார்லிக்ஸின் செழுமையான சுவையைத் தக்கவைக்க ஸ்மார்ட் ஸ்வீட்னஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஜீரோ அட் சுகர் வகையிலும் கிடைக்கிறது.

தேசிய அளவில், 11 டிசம்பர் 2025 : ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (HUL) இன்று சூப்பர்ஃபுட்ஸ் மற்றும் தனியுரிம நியூட்ரிமேக்ஸ் தொழில்நுட்பத்தின் கலவையுடன் புதிய ஹார்லிக்ஸை வெளியிட்டது, இது சிறந்த ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கு உதவுகிறது மற்றும் ஊட்டச்சத்து நன்மைகளை மேம்படுத்துகிறது.
புத்தம் புதிய ஹார்லிக்ஸ், சூப்பர்ஃபுட்ஸ், மால்ட் பார்லி, தினை, ஓட்ஸ் மற்றும் பாதாம் ஆகியவற்றின் கலவையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, அவை அவற்றின் வளமான ஊட்டச்சத்து சுயவிவரங்கள் மற்றும் அன்றாட ஊட்டச்சத்தை ஆதரிக்கும் திறனுக்காக அறியப்படுகின்றன. இந்த மேம்படுத்தல், அதன் ஊட்டச்சத்து தாக்கத்தை மேம்படுத்த மேம்பட்ட அறிவியலை அறிமுகப்படுத்தும் அதே வேளையில், தலைமுறைகளால் விரும்பப்படும் உன்னதமான சுவையைத் தக்க வைத்துக் கொள்கிறது.
இந்த கண்டுபிடிப்பின் மையத்தில் HUL இன் தனியுரிம நியூட்ரிமேக்ஸ் தொழில்நுட்பம் உள்ளது. இந்த சிறப்பு செயல்முறை, இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைத் தடுக்கும் பைட்டேட்டுகள் போன்ற இயற்கையான ஆன்டி-நியூட்ரியண்ட்களைக் குறைப்பதன் மூலம் மல்டிகிரைன் நன்மைகளைத் திறக்க உதவுகிறது. மூலப்பொருள் செயலாக்கத்தை மேம்படுத்துவதன் மூலம், நியூட்ரிமேக்ஸ் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்டையும் அதிகரிக்கிறது, சிறந்த குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது மற்றும் அத்தியாவசிய தாதுக்களை உறிஞ்சும் உடலின் திறனை அதிகரிக்கிறது. ஹார்லிக்ஸ் சூப்பர்ஃபுட்ஸ் கரையக்கூடிய உணவு நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள், அத்தியாவசிய நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்க உதவும் புரதத்துடன் ஆரோக்கியமான ஊட்டச்சத்தை வழங்குகிறது. மருத்துவ ரீதியாக நோய்வாய்ப்பட்ட நாட்களை 30% வரை குறைப்பதாகக் காட்டப்பட்டுள்ளது, இது குழந்தைகளில் உயரமான வளர்ச்சி, வலுவான எலும்புகள் மற்றும் அறிவாற்றல் திறனை ஊக்குவிப்பதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
புதிய ஹார்லிக்ஸ் அதே சிறந்த சுவையுடன் ஜீரோ ஆட்டு சுகர் வகையிலும் கிடைக்கிறது. இது மால்ட் பார்லியில் இருந்து இயற்கையாகவே இனிப்பு உணர்வை மேம்படுத்த ஸ்மார்ட் ஸ்வீட்னஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது, இது சர்க்கரை அல்லது செயற்கை இனிப்புகள் சேர்க்கப்படாமல் இனிமையான சுவையை உறுதி செய்கிறது.
ஹிந்துஸ்தான் யூனிலீவரின் உணவு மற்றும் புத்துணர்ச்சி பிரிவின் நிர்வாக இயக்குனர் ராஜ்னீத் கோஹ்லி அவர்கள், “பணிமிகுதியான அட்டவணைகள் மற்றும் மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களால் குறிக்கப்பட்ட நவீன வாழ்க்கை முறை, மக்களுக்கு ஊட்டச்சத்து தேவைக்கும் அவர்கள் உண்மையில் உட்கொள்வதற்கும் இடையிலான இடைவெளியை விரிவுபடுத்தியுள்ளது. இன்றைய நுகர்வோரின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப, புதிய ஹார்லிக்ஸை அறிமுகப்படுத்தியுள்ளோம், இது மிகவும் நோக்கமாகவும், ஊட்டச்சத்துக்கு முன்னுரிமையாகவும், அறிவியலால் ஆதரிக்கப்பட்டதாகவும் உள்ளது. தினசரி ஊட்டச்சத்தின் புதிய சகாப்தத்திற்காக நம்பகமான பிராண்டுகளை மாற்றுவதற்கான எங்கள் பயணத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது” என்று கூறினார்.
யூனிலீவரின் தெற்காசியாவின் உணவு மற்றும் பானங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் தலைவர் டாக்டர் சுஜாதா ஜெயராமன் அவர்கள், “புதிய ஹார்லிக்ஸ் மூலம், நுகர்வோர் விரும்பும் பரிச்சயத்தைத் தக்கவைத்துக்கொண்டு, நவீன ஊட்டச்சத்தை வழங்குவதற்காக ஒரு பிரியமான தயாரிப்பை நாங்கள் மறுகற்பனை செய்துள்ளோம். நியூட்ரிமேக்ஸ் தொழில்நுட்பத்தின் மூலம், அறிவியல் முன்னேற்றம் மற்றும் உயர் ஊட்டச்சத்து மதிப்பில் வேரூன்றிய ஒரு சூத்திரத்தை உருவாக்க, மால்ட் பார்லி, பாதாம், ஓட்ஸ் மற்றும் தினை ஆகியவற்றின் சூப்பர்ஃபுட்ஸ் கலவைகளை இணைக்க முடிந்தது. இந்த முன்னேற்றம் சமகால எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப்போகும் அணுகக்கூடிய, உயர்தர ஊட்டச்சத்து விருப்பங்களை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது” என்று கூறினார்.

சென்னையில் நடந்த நிகழ்வில் பிரபல தொலைக்காட்சி நட்சத்திரம் ஆல்யா மானசா, பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா சந்தோக், புகழ்பெற்ற ஊட்டச்சத்து நிபுணர்கள் டாக்டர். தாரிணி கிருஷ்ணன், ஷெரில் எஸ். சாலிஸ், உணவு மற்றும் புத்துணர்ச்சி நிர்வாக இயக்குனர் ராஜ்னீத் கோஹ்லி, மற்றும் HUL இன் R&D உணவுகள் மற்றும் பானங்களின் தலைவர் டாக்டர். சுஜாதா ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட செல்வாக்குநர்கள் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்கள் ஊடக விருந்தினர்களுடன் கலந்து கொண்டனர், மேலும் ஹார்லிக்ஸ் மற்றும் ஹார்லிக்ஸ் அடிப்படையிலான தயாரிப்புகளுக்குப் பின்னால் உள்ள அறிவியலை வெளிப்படுத்தும் தொடர்ச்சியான ஊடாடும் மண்டலங்களை அனுபவித்தனர், இதில் ஹார்லிக்ஸ் ஐஸ்கிரீம், ஹார்லிக்ஸ் பார்ஃபி, ஃபில்டர் காபி ஹார்லிக்ஸ் கோல்ட் ப்ரூ, குலுக்கி ஷேக் மற்றும் ஹார்லிக்ஸ் மைசூர் பாக் ஆகியவை அடங்கும். விருந்தினர்கள் ஒரு நுண்ணறிவு குழு விவாதத்தின் போது உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களுடன் ஈடுபட்டனர். சூப்பர்ஃபுட்ஸுடன் ஹார்லிக்ஸ் இப்போது தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் ஆன்லைன் தளங்களில் கிளாசிக் மால்ட் சுவையில் பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சேனல்களில் ஜீரோ ஆட்டட் சர்க்கரை மாறுபாடாக ஜாடியிலும் கிடைக்கிறது.

இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (HUL) பற்றி

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (HUL) இந்தியாவின் மிகப்பெரிய வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் நிறுவனமாகும், அதன் தயாரிப்புகள் நாட்டில் உள்ள பத்தில் ஒன்பது வீடுகளின் வாழ்க்கையைத் தொடுகின்றன. HUL ஒவ்வொரு நாளும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க பாடுபடுகிறது.

மேலும் தகவலுக்கு, எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும்: https://www.hul.co.in/

Behindwoods Productions Unveils 5 Songs’ Posters of ‘Moonwalk’ – A Historic First: AR Rahman Sings All Five Songs in the Album

0

Link: https://www.youtube.com/watch?v=IwGXuGtQL4A

Behindwoods Productions proudly announces the official launch of the five songs’ posters of the feature film Moonwalk, the much-awaited full-length comedy entertainer that brings together AR Rahman and Prabhudeva after 27 years, produced and directed by Behindwoods – Founder & CEO – Mr. Manoj Nirmala Sreedharan.

Speaking at the event, Director Manoj shared the vision behind the songs and the film: “Moonwalk is a full-length comedy film. Our idea is simple – to make theatres the happiest place for families for the 2.5 hours. With Rahman sir’s music and Prabhu sir’s dance, we wanted families to enjoy it to the fullest.

The album of Moonwalk is built entirely around the concept of ‘happiness’, with each song exploring a distinct flavour of joy through dance, visuals, and emotions. ‘Yethu’ – A Celebration of Happiness, ‘Macarena’ – A Celebration of Friendship, ‘Mayile’ – A Celebration of Hard Work, ‘Tinga’ – A Celebration of Love & ‘Jiger’ – A Celebration of Life are the names of the five songs composed by AR Rahman and performed by Prabhu Deva in uniquely crafted dance sequences.

We have created VFX Worlds for 2 songs – ‘Mayile’ and ‘Jiger’ which will be an unique experience, but please do not expect Director Shankar sir level CG, but we have tried our best within our budget. Most importantly Prabhu sir has rehearsed 15 days for Yethu and Macarena, whereas he rehearsed for 30 days for the song Mayile, which will be one of its kind experience to the fans hopefully.

In a rare and emotional milestone, AR Rahman sir has sung all five songs in the album — something unprecedented in his career. The scratch versions sung by Rahman sir carried a happiness that no other voice could replicate. I have nothing against any singers, but for 4 months I kept telling him, sir, you are a symbol of happiness and a symbol of inspiration. When you sing, that happiness multiplies threefolds. He finally agreed, and that’s how all five songs were sung by him in this album for the very first time. A big thanks to him.

AR Rahman: “Working with Prabhu Deva again is an absolute joy. The only difference between the Prabhudeva of the old days and now is just a little bit of grey hair, but his energy is exactly the same. Watching him dance still gives me an incredible boost of excitement. I’ve never seen a legendary choreographer rehearse for an entire month for a single song — that kind of dedication is truly inspiring.

As a composer, it is my responsibility to choose the right singer for each song, but Manoj calmly refused to accept my reasons, he was convinced that I should sing every track myself. When he insisted the same thing for all five songs, I finally decided, ‘Alright—just for this one film, I will sing all of them.’ It was the love I saw on Manoj’s face, and his passion to bring back the same energy of my earlier collaborations with Prabhudeva, that made me say ‘Yes’. I agreed even without listening to the story.”

Prabhudeva: “Rahman sir’s music has always energized me, from the very beginning of my career. I’m extremely excited for audiences to experience Moonwalk and the happiness it brings.”

A Grand Musical Journey begins, with the release of these five songs’ posters, Moonwalk sets the stage for one of the most awaited soundtracks of 2026. The film is scheduled for a Summer 2026 theatrical release.

Behindwoods புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தியாவின் இரண்டு ஐகானிக் நாயகர்களான ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் திரைப்படம் ‘மூன்வாக்’, Behindwoods Founder & CEO திரு. மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இப்படத்தினை தயாரித்து இயக்குகிறார்.

தன் நீண்ட திரை வாழ்க்கையில் முதல் முறையாக, இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களையும் அவரே பாடியுள்ளார். ஒரு படத்தின் முழு ஆல்பத்தையும் அவரே முதன்முறை பாடியிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்திலும், உற்சாகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

‘ஏத்து’, ‘மெகரினா’, ‘மயிலே’, ‘டிங்கா’, ‘ஜிகர்’ என இந்த படத்தில் ஐந்து பாடல்களை அறிவித்த படக்குழு ஒவ்வொரு பாடல்களும், ஒவ்வொரு விதத்தில், ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தை படைக்கும் வகையில் உருவாகியுள்ளது. படத்தின் அறிவிப்பு முதல் பல புதுமைகளால் அசத்தி வரும் படக்குழு இந்த படத்தின் பாடல்களின் அறிவிப்பிலும் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மூன்வாக் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் கூறுகையில்: “மியூசிக்கில் ஏ. ஆர். ரஹ்மான் சார் , டான்ஸில் பிரபுதேவா சார் இருவரும் இந்தியாவின் தலைசிறந்த திறமைசாலிகள். சிறு வயதில் நான் ரசித்த ஜென்டில்மேன், காதலன் போன்ற படங்களின் அனுபவத்தை மீண்டும் திரைக்கு கொண்டுவர வேண்டும் என நினைத்தேன். இந்த தலைமுறை ரசிகர்களுக்குத் அந்த அனுபவத்தை மீண்டும் தர வேண்டும் என்ற முயற்சி தான், ‘மூன்வாக்’ திரைப்படமாக உருவானது. இதில் இசைக்கும் நடனத்திற்கு குறைவே இருக்காது. 3 வருடங்களாக உருவாக்கிய இந்த திரைப்படம் 2026 கோடையில் வெளியாகவுள்ளது. இது முழுமையான காமெடி கொண்டாட்டமான படம். திரையரங்குக்கு வரக்கூடிய குடும்ப ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதே இதன் நோக்கம்.

இப்படத்தில் ‘ஏத்து’, ‘மெகரினா’, ‘மயிலே’, ‘டிங்கா’, ‘ஜிகர்’ என மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளது. ஒவ்வொரு பாடலும் நட்பு, உழைப்பு, சந்தோஷம் மற்றும் வாழ்க்கையைக் கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டது. நானும் ரஹ்மான் சார் -ம் பேசும்பொழுது இந்த ஐந்து பாடல்களும் மக்களுக்கு சந்தோசத்தை மட்டும் கொடுக்கவேண்டும் என எண்ணினோம். முதலில் இந்தியாவின் ஒரு பெரிய பாடகரைப் பாட வைத்து அந்த பாடலை பதிவு செய்தார். ஆனால், இது ரஹ்மான் சாருக்காகவும், பிரபுதேவா சாருக்காகவும் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட படம். அதில் அவர் குரலைத் தவிர யாரையும் என்னால் யோசிக்க முடியவில்லை. அவரது குரலே மக்களுக்கு முழுமையான உற்சாகத்தை கொடுக்க கூடியது. நான் விடாமல் நான்கு மாதங்கள் முயற்சித்து நீங்கள் தான் பாட வேண்டும் எனக் கேட்டு கொண்டே இருந்தேன். இறுதியில், இந்த ஐந்து பாடல்களையும் ஏ. ஆர். ரஹ்மான் சார் தான் பாடியுள்ளார்.” அவருக்கு நன்றி என்றார்.

பிரபுதேவா மாஸ்டர் இருப்பதால் நடனத்திற்கு முழு மரியாதையும் முக்கியத்துவமும் அளித்து உழைத்து இருக்கிறோம். பிரபுதேவா சார் இந்த படத்தில் ஒவ்வொரு பாடலுக்கும் இரண்டு வாரம் ரிகர்சல் செய்துள்ளார். ‘மயிலே’ பாடலுக்கு மட்டும் ஒரு மாதம் ரிகர்சல் செய்தார். முழு அர்ப்பணிப்போடு உழைத்திருக்கிறார். ‘மயிலே’ பாடலுக்காக ஒரு முழு உலகத்தை CG-யில் உருவாக்கி இருக்கிறோம். ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் உண்டு, அவர்கள் விரும்பும் வகையில் இருக்கும் என நம்புகிறோம்”

இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் கூறுகையில்: “பிரபுதேவாவுடன் மீண்டும் பணிபுரிவது மகிழ்ச்சி. அப்போதைய பிரபுதேவாவுக்கும், இப்போதைய பிரபுதேவாவுக்கும் ஒரே வித்தியாசம் ‘கொஞ்சம் நரைச்ச முடி மட்டும் தான்’ என நகைச்சுவையாகக் கூறினார். பிரபுதேவாவின் எனர்ஜி அப்படியே உள்ளது. அவர் ஆடுவதைப் பார்க்கும்போது, இன்னும் அதிக உற்சாகத்தை கொடுக்கிறது. ஒரு மிகப்பெரிய நடன இயக்குனர் ஒரு பாடலுக்காக ஒரு மாத காலம் ஒத்திகை மேற்கொண்டதை இதுவரை கண்டதில்லை. அந்த அதீத அர்ப்பணிப்பு இன்னும் ஊக்கமளிக்கிறது.

இசையமைப்பாளராக, ஒரு பாடலுக்கான சரியான பாடகரை தேர்வுச்செய்யும் கடமை எனக்கு இருக்கிறது. மனோஜ் என் பரிந்துரைகளை ஒப்புக்கொள்ளாமல், ஒவ்வொரு பாடலுக்கும் இந்த பாடலை நான் தான் பாட வேண்டும் என உறுதியாக இருந்தார். இறுதியில் எல்லா பாடல்களுக்கும் அதே கூற, நானும் இந்த ஒரு படத்துக்கு மட்டும் எல்லா பாடல்களையும் பாடிவிடலாம் என முடிவுசெய்துவிட்டேன். மனோஜின் முகத்தில் தெரிந்த அன்பும், பிரபுதேவாவுடன் என் கூட்டணியை அதே எனர்ஜியுடன் திரையில் மீண்டும் கொண்டுவருவேன் என்ற மனோஜின் ஆர்வம் மற்றும் உற்சாகத்திற்காகவே இந்த திரைப்படத்திற்கு சரி என்று சொல்லிவிட்டேன். கதை கூட நான் கேட்கவில்லை.”

நடனப்புயல் பிரபுதேவா கூறுகையில், “என் திரை பயண தொடக்கத்திலிருந்தே ரஹ்மான் சாரின் இசை எனக்கு எப்போதும் உற்சாகத்தை அளித்துள்ளது. ரசிகர்கள் மூன்வாக் படத்தை ரசித்து மகிழ்வதை காண, நான் மிக ஆர்வமாக உள்ளேன்”.

ஒரு தரமான குடும்ப பொழுதுபோக்காக உருவாகும் மூன்வாக், உலக தர நடன அமைப்புகள், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளை அழகாக இணைத்து, இந்திய அளவில் இசை, நடனம் மற்றும் காமெடியின் கொண்டாட்டமாக அடுத்து வருடம் 2026 கோடை விடுமுறை வெளியீட்டுக்கு உருவாகி வருகிறது.

- Advertisement -

Recent Posts