- Advertisement -
Home Blog Page 8

“ஈரம் காயாத கதைகள்” புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு நான் ஏன் வந்தேன்?- இயக்குநர் அமீர் விளக்கம்

0

பாடலாசிரியரும் நடிகருமான மு. ஜெகன் கவிராஜ் எழுதிய ‘ஈரம் காயாத கதைகள்’ சிறுகதைகள் தொகுப்பின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநரும் நடிகருமான அமீர், நூலினை வெளியிட, ஜெகன் கவிராஜின் பெற்றோரான திரு. முத்தையா – திருமதி லலிதா இணை பெற்றுக் கொண்டனர்.

இவ்விழாவில் பேசிய கிராம நிர்வாக அதிகாரி அன்னலட்சுமி, “ஜெகன் அண்ணாவும் நானும் ஒரே ஊர். அவரிடம் நிறைய நல்ல விஷயம் இருக்கு. அதில் குறிப்பிட்டுச் சொல்லணும் என்றால், அவரது வாசிப்புப் பழக்கம். ஒருநாளைக்கு இத்தனை பக்கங்கள் படிக்கணும் எனத் திட்டமிட்டுப் படிப்பவர். அவர் பள்ளிப்படிப்பு படிக்கலை என அவரளித்த பேட்டிகளில் ஆதங்கப்படுடிருப்பார். ஆனால் அவர் மனிதர்களின் வாழ்க்கையைப் படித்துள்ளார். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளை, எங்க ஊர் தாத்தா, பாட்டிகள் வாய்மொழியாகச் சொன்ன விஷயங்களைக் கொண்டுதான் எழுதியுள்ளார். ஜெகன் அண்ணாவின் கதைகளைப் படித்த பின் தான், எங்க ஊர் மனிதர்களைப் பற்றி வேறொரு பார்வையில் பார்க்க ஆரம்பிக்கிறேன். அவருக்குள் நிறைய கதைகள் ஒளிஞ்சிருக்கு. அடுத்து வரும் புத்தகத்தில் அக்கதைகள் வரணும். அதற்கு காலமும் கதையுமும் ஆசிர்வதிக்கணும்” என்றார்.

எழுத்தாளரின் ஊரைச் சேர்ந்த செந்தில்குமார் IRS பேசுகையில், “எங்கள் கிராமம், கிராமத்தைச் சுற்றி வாழ்ந்த மனிதர்களின் சிறந்த கதைகளின் வெளிப்பாடாக உள்ளது ‘ஈரம் காயாத கதைகள்’. இந்த அளவுக்குக் கிராமங்களை ஊள்வாங்கிக் கொண்டு எழுதிய கிரா, தோப்பில் முகமது மீரான் போன்றவர்களின் இயல்பான நடை ஜெகனுக்கு வாய்ச்சதில் ஆச்சரியம் ஏற்பட்டது. எங்கள் நட்பு, நாங்கள் யாரெனத் தெரியும் முன்பே தொடங்கிவிட்டது. ஏனெனில் எங்கப்பாக்கள் இருவரும் கிளாஸ்மேட்கள். அதனால் எங்க நட்பு சிறுவயதிலேயே தொடங்கினாலும் பல்வேறு திசைகளில் மீண்டும் சந்திக்கும்போது, முப்பதுகளைக் கடந்துவிட்டோம். எழுத்தில் வெற்றியை விடத் தோல்வி அதிகம். கடினமான மனவலியும், பொருளாதாரச் சுமையும் தரக்கூடியது. ஜெகன் இந்தத் துறையைத் அவர் தேர்ந்தெடுக்கும்போது, அது மிகப் பெரிய சவாலாக இருக்குமென நினைச்சேன். ஆனா சில வருடங்களிலேயே மிகப் பெரிய சாதனையை நிகழ்த்திக் காட்டினார். அதுவும் மல்டி-டைமன்ஷலில் தடத்தைப் பதித்துள்ளார். பாடல் எழுதுவதாகட்டும், நடிப்பதாகட்டும், புத்தகம் எழுதுவதாகட்டும், எங்கள் ஊருக்கே பெருமையான விஷயம்.

எப்பொழுதும், இந்த மாதிரியான சூழலில் இருந்து வந்தவர்கள் எப்படியிருப்பார்கள் என்றால், சமுதாயத்தின் மீது கோபம் கொண்டவர்களாக இருப்பார்கள். எப்படின்னா, பணக்காரர்கள் எல்லாம் கெட்டவங்க, அரசியல்வாதிங்க எல்லாம் கெட்டவங்க என்ற வெளிப்பாடு வரும். தங்களுக்கு என்று ஒரு ஐடென்ட்டியை உருவாக்க முயற்சி செய்வாங்க. மத ரீதியாகவோ, சாதிய ரீதியாகவோ, இல்ல இனம், மொழி ரீதியாகவோ அடையாளத்தை உருவாக்கி, அதன் பின் ஒளிஞ்சுக்கிட்டு எழுதுறதுக்கோ, வாழுறதுக்கோ முயற்சி செய்வாங்க. ஆனா ஜெகன் எதிர்கொண்ட வலிகள் அனைத்தும் அவரைப் புது மனிதராக உருவாக்கியுள்ளது.

எந்த ஒரு விஷயத்தையும் அவர் இன்சைடர் (Insider) ஆகப் பார்க்கும் விதம் ஆச்சரியமாக இருந்தது. நேரில் பழகித் தெரிந்து கொண்டதை விட, அவரது கதைகள் மூலமாகத்தான் அவரைத் தெரிந்து கொண்டேன். எடிக் வியூ (Etic view), எமிக் வியூ (Emic view) என சோஷியல் ஸ்டடிஸ்ல சொல்வாங்க. எடிக் வியூ என்றால், அனைவருமே தூரமாக இருந்துதான் ஒரு சொசைட்டியைப் பார்ப்போம். எல்லா எழுத்தாளர்க்கும் ஈஸியா வரக் கூடியது. ஆனா அந்த சொசைட்டியாக மாறி, அதன் இயல்புகளைப் பற்றி எழுதுவது இவருக்கு அருமையாக வந்துள்ளது. இந்தப் புத்தகத்தில் அது வெளிப்பட்டுள்ளது.

ஈரானியத் திரைப்படங்களில் உள்ள ஆழம் இந்தப் புத்தக்கத்தில் உள்ளது. ஒவ்வொரு கதையுமே கி.ரா.வையும், தோப்பில் முகமது மீரானையும்தான் ஞாபகப்படுத்தியது. ஏன்னா தோப்பில் முகமது மீரான் கதைகளைப் படித்தவர்களுக்குத் தெரியும், முஸ்லீம் சமூகத்தை வெளியில் இருந்து எக்ஸ்ட்ரீமாகப் பார்க்கும் போக்கில் இருந்து மாறுபட்டு, உள்ளிருந்து இயல்பாக எழுதியிருப்பார். ஜெகன், எங்க மக்களைப் பற்றி க்ளோரிஃபை (Glorify) பண்ணாமல் மிக இயல்பாக எழுதியிருந்தார். இப்படி மேலும் கதைகள் எழுதவும், வெற்றிகளைக் குவிக்கவும் நண்பனுக்கு வாழ்த்துகள்” என்றார்.

கவிதா பாரதி பேசுகையில், “என்னுடைய சிறு வயதில் நான் ஒரு கவிதைப் புத்தகம் போட்டேன். 1200 பிரதிகளில் 1000 புத்தகத்தை இலவசமாகக் கொடுத்தோம். 200 புத்தகம் பத்திரிகைகளுக்கு விமர்சனத்துக்காகக் கொடுத்தேன். ஒன்றிலும் விமர்சனம் வரலை. ஆயிரம் புத்தகங்களில், இருநூறு நான் கொடுத்தேன், எண்ணூறு புத்தகங்கள் என் அப்பா கொடுத்திருப்பார். எங்கப்பா தினம் பத்துப் புத்தகங்களைப் பையில் போட்டுக் கொண்டு, சைக்கிளில் வச்சுக்கிட்டுப் போற இடத்திலெல்லாம், ‘என் பையன் புத்தகம் எழுதியிருக்கான்’ என நண்பர்களுக்கும் தெரிஞ்சவர்களுக்கும் கொடுப்பார். செய்தி என்னவென்றால், எங்கப்பாவிற்குப் படிக்கத் தெரியாது. ஒரு படிக்கத் தெரியாத அப்பாவிற்கு, ஒரு மகன் புத்தகம் எழுதியிருக்கிறான் என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயமாக இருந்தது. இந்த மேடையில், எழுத்தாளரின் தந்தையையும் தாயையும் அழைத்துப் புத்தகத்தைக் கொடுத்ததை விட சிறப்பான எந்தப் பெருமையும் இருக்கவேண்டிய அவசியமில்லை என்று நான் கருதுகிறேன்.

வட்டார வழக்கைப் பேசுவதென்பது கேலிக்குரியதாக இருக்கிறது. ஒவ்வொரு அம்மாவுக்கும் ஒரு சமையல் கைவண்ணம் உண்டு. ரசம் என்பது புளியையும் தக்காளியையும் கரைச்சு வைப்பதுதான். ஆனால் ஒவ்வொரு அம்மாவின் ரசத்திற்கும் ஒரு சுவையுண்டு. ஆனால் நண்பர்களே ஆச்சி மசாலாவும், சக்தி மசாலாவும் அம்மாகளின் சுவையை எல்லாம் கொன்றுவிட்டன என்பதுதான் சோகம். அப்படித்தான் வட்டார வழக்கு இல்லாமல் போனது ஒரு மொழியினுடைய மிகப் பெரிய இழப்பு. இன்று, தமிழில் பேசினாலோ, எழுதினாலோ நீங்க ஒரு பூமர். தமிழை ஆங்கிலத்தில் எழுதவேண்டும். A m m a தான் இன்றிருக்கக் கூடிய ஜென் ஸீ மொழி. இத்தகைய சூழல் நிலவும் தருணத்தில், தம்பி தனது வட்டார மொழியில் கதைகளை எழுதியிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய வரவேற்புக்குரிய செயல்.

இந்தச் சிறுகதைத் தொகுப்பு, ஒரு நாவலைப் போல் ஒன்றின் தொடர்ச்சியாக எல்லாக் கதாபாத்திரங்களும் ஏதோ ஒன்றின் தொடர்புடையதாகத்தான் இதிலுள்ள ஒன்பது கதைகளும் அமைந்திருக்கின்றன. இந்தக் கதைகள் சிறப்பானவை என்பதற்கு நான் உத்திரவாதம் அளிக்கின்றேன். எழுத்தாளனுக்கு மெய்யறிவு, முழுமையறிவு, அந்த அறிவு, இந்த அறிவு இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள். எழுத்தாளனுக்கு அதெல்லாம் தேவையில்லை என நான் நினைக்கிறேன். எழுத்தாளனுக்கு ஒரு சமூக நோக்கம், பொறுப்புணர்வு, நேர்மை, உண்மை இருக்கவேண்டும். அந்த கிராஃப்ட், தொழில்நுட்பம் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். எதற்காக எழுதுகிறான், அதில் எதைச் சொல்கிறான் என்பதுதான் எழுத்தாளனைப் பாராட்டுவதற்குரிய அடிப்படை. அவ்வகையில் ஜெகன் தான் பார்த்த செய்திகளை, நீதிகளை, அநீதிகளை இதில் பதிவு செய்திருக்கிறார். ஜெகன் ஒரு நல்ல இயக்குநர் ஆவதற்கான அனைத்துச் சான்றுகளும் இப்புத்தகத்தில் இருக்கின்றன. அனைவரும் இதை வாங்கிப் படிக்கவேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்” என்றார்.

இயக்குநர் சுப்பிரமணியா சிவா, “கவிதா பாரதி சொன்ன அப்பா கதை எவ்ளோ அற்புதமான கதை! எனக்கு எங்கம்மா ஞாபகம் வந்துடுச்சு. எங்கம்மாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. எங்கம்மா எப்பவும் ஒரு வெத்தலைப்பாக்கு பை வச்சிருப்பாங்க. அதுல எப்பவும் ஒரு பென்சில் வச்சிருப்பாங்க. அவங்களுக்கு 86 வயசாகுது. எனக்குத் தெரிஞ்சு இருபது, முப்பது வருஷமா பென்சில் வச்சிருக்காங்க. வெத்திலையை மாத்தும் பொழுதெல்லாம் பென்சிலைப் பத்திரமா எடுத்து பையில் திரும்ப வச்சுப்பாங்க. ‘ஏன் நீ பென்சில வச்சிருக்க?’ என ஒருநாள் கேட்டேன். ‘யப்பா, யாராச்சும் எழுதக் கேட்பாங்க இல்ல!’ என அதுக்கு அவங்க பதில் சொன்னாங்க. ‘ஏம்மா இதுவரைக்கும் எழுத யாராச்சும் கேட்டிருக்காங்களா?’ எனக் கேட்டாங்க. ‘இதுவரைக்கும் கேட்கலைப்பா’ எனச் சொன்னாங்க. அதுதான் அந்த பென்சலின் கதை. எனக்கு என்ன ஆர்வம்ன்னா, அந்தப் பென்சிலை எழுதக் கேட்கப் போகிற அந்த மனிதன் யார் அப்படிங்கிறது தான் என்னோட கேள்விய இன்னும் இருந்துட்டிருக்கு. அது ஏன் அப்படின்னு இன்னும் என்னால் புரிஞ்சுக்கவே முடில.

இதற்கு முன் ‘எழுதப்படாத முகங்கள்’ என்றொரு புத்தகம் போட்டிருக்கிறார். இப்போ ‘ஈரம் காயாத கதைகள்’. நான் முதலில், யாருக்கு சமர்ப்பணம் என்பதையும், என்னுரையையும் வாழ்த்துரையையும் படிப்பேன். என்னுரையில், தனது அம்மாவை உடனிருந்து பார்த்துக் கொண்ட சுமதி மயினி பற்றி எழுதும் போது, ‘எங்கம்ம சாப்பிட்ட ஒவ்வொரு பருக்கையிலும் சுமதி மயினி பேரிருக்கும்’ எனச் சொல்றார். நீங்க எந்த நேரத்தில் சிறந்தவர்களைக் கண்டுபிடிக்க முடியுமென்றால், உடம்பு சரியில்லாத பொழுது கூட இருந்து பார்த்துபவர்களைத்தான் முக்கியமான நண்பனாகப் பார்க்க முடியும். மேலும் ஜெகன் கவிராஜ், எழுதறதுக்கு கரம் போதும், எழுத வைக்கிற வரம் என்று தன் மனைவியையும் பிள்ளைகளையும் சொல்கிறார். ஒரு முன்னுரையிலேயே, ஜெகனின் மனிதநேயமும் நன்றியுணர்வும் வெளிப்படுகிறது.

இந்நூலை சிறுகதை என்று என்னால் சொல்லமுடியவில்லை. ஜெகன் சந்தித்த மனிதர்கள் பற்றிய தொகுப்பு தான் இப்புத்தகம். சிறுகதையை விட, தான் சந்தித்த மனிதரிடம் இருக்கும்கதையை எழுதுபவனை உலகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளனாக மதிக்கிறேன். கதை என்பது கற்பனையில் வருவது. ஆனால் இன்னொரு மனிதனிடம் இருக்கும் அனுபவம், அவன் இறந்துவிட்டால் அவனோட போய்விடும். எழுதப் படிக்கத் தெரியாத என் அப்பாம்மாவிடம் இருக்கும் கதைகளை நான் உள்வாங்கிக்கணும் அல்லது எழுதணும். அப்ப இன்னொரு சாமானிய மனிதனிடம் இருக்கும் கதைகளை அனுபவங்களை உள்வாங்கி எவன் படைப்பாகத் தருகிறானோ அவன் இந்தச் சமுதாயத்துக்கு மிக முக்கியமானவன். அப்படியொரு புத்தகம்தான் ஜெகன் கவிராஜின் இந்த ஈரம் காயாத கதைகள் எனும் புத்தகம். ஜெகன் கவிராஜ் இதில் எதையும் மிகைப்படுத்திச் சொல்லாமல், மிக எளிமையாக வட்டார வழக்கில் சொல்லியுள்ளார். ஜெகன் இது போல் நிறைய புத்தகங்கள் எழுதவேண்டும்” என்றார்.

நிவாஸ் கே.பிரசன்னா பேசுகையில், “என் சொந்த ஊர் திருநெல்வேலிதான். ஜெகன் கவிராஜ் எனக்கு எப்படிப் பழக்கம்ன்னா, ‘மை டியர் சிஸ்டர்’ எனும் பத்திற்கு நான் மியூசிக் பண்ணேன். அப்படத்தில் அவர் நடிச்சுட்டு இருந்தார். அந்தப் படத்தின் இயக்குநர் பிரபு ஜெயராம், ‘ஜெகன்னு ஒருத்தர் இருக்கிறார். நல்லா எழுதுவார்’ எனச் சொன்னார். மியூசிக் டைரக்டர்ஸ் நாங்க எப்பவும் ஒரு பாடலாசிரியரோடு கம்ஃபர்ட் ஜோன் எதிர்பார்ப்போம். டக்குன்னு புதுசா ஒருத்தங்களிடம் மாறும்போது ஒரு சின்ன தயக்கம் இருக்கும். அதனால் நான் கொஞ்சம் தயங்கினேன். ‘இல்ல, நீங்க ட்ரை பண்ணிப் பாருங்க’ என்றார் பிரபு ஜெயராம். ‘அப்படியா!’ என ஃபோனில் ஜெகனுக்கு ஒரு சந்தம் கொடுத்தேன். அடுத்த பத்து நிமிடங்களில் முழுப் பாடல் எழுதிக் கொடுத்துட்டார். அப்படித்தான் எங்களுக்குள் பழக்கம் ஆரம்பித்து. பின் நிறையப் பேச ஆரம்பிச்சோம். ஆன்மிகம் பேசுவோம். அவரிடம் ஒரு நகைச்சுவைத்தன்மை இருக்கும். ஜெகனிடம் ஒரு ரிதம் இருப்பது தெரிய வந்தது. எல்லா கிரியேட்டர்ஸ்க்கும் ஒரு ரிதம் இருக்கு. கம்போசர்ஸா எனக்கொரு சைலன்ஸ் தேவை; ரைட்டர்ஸா அவங்க ஒரு பிளான்க் பேப்பர்ல இருந்து ஆரம்பிப்பாங்க. எல்லா கிரியேட்டர்ஸ்க்கும் சோர்ஸ் ஒன்னுதான். அந்த ரிதம் எங்களைக் கனெக்ட் பண்ணுச்சு. தொடர்ந்து பாடல்கள் எழுத ஆரம்பிச்சோம். ஒவ்வொன்றும் நன்றாக வந்தது. தாய்க்கிழவி வரை எங்க ஜர்னி வந்து. இப்ப அடுத்தது ‘மக்கள் காவலன்’ படத்திலும் பாடல் எழுதிட்டிருக்கிறார். எங்க ஜர்னி ரொம்ப நல்லா வரும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

எப்பவும் அவரிடம் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி இருக்கும். அந்த எனர்ஜிதான் ஆர்ட்டாக மாறுகிறது என நம்புகிறேன். இந்தத் தொகுப்பில், ‘அப்பா தீபாவளி’ எனும் கதை படிச்சேன். எளிமையான மனிதர்கள் பற்றிய கதை என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எளிமையாக உள்ளவர்களோடு பழகினால் நம்ம மைண்ட் பயங்கரமா ரெஃப்ரெஷ் ஆகும். ஜெகன் கவிராஜ் அந்த மாதிரியான ஒருத்தர். அவரிடம் எப்ப பேசினாலும், புது விஷயங்களுக்கு ஓப்பனா இருப்பார். ஜெகன் மென்மேலும் வளர்வார். அவருக்கு வாழ்த்துகள்” என்றார்.

மு. ஜெகன் கவிராஜ் ஏற்புரை வழங்கி பேசும்போது, “என்னைக் கொண்டாடுறதுக்கு, என்னைப் பற்றிப் பேசுறதுக்கு, என்னை ரசிக்கிறதுக்கு யாருமே இருக்கமாட்டாங்க போல என மறைந்து விட்ட தேவதாஸ் அய்யாவிடம் 2014 இல் மிகத் துயரமான காலகட்டத்தில் வருத்தப்பட்டுப் பேசினேன். அப்பொழுது, அய்யா வைகுண்டரின் அகில திரட்டிலுள்ள, ‘காட்சி உனது கண் முன்னே காணும் மகனே கலங்காதே!’ எனச் சொல்லி ஆறுதல்படுத்தினார். ‘நீ என்னென்ன காட்சியெல்லாம் கற்பனை பண்ணி வச்சிருக்கியோ, அந்தக் காட்சிகளை எல்லாம் அய்யா தோன்ற வைப்பார்’ எனச் சொன்னார். இந்தக் காட்சியைச் சாத்தியப்படுத்திய அனைவருக்கும் ரொம்ப நன்றி.

எல்லோரும் என்னைப் பற்றிச் சொல்லும்போது, ‘நல்ல பையன் பாசிட்டிவா தான் பேசுவான்’ எனச் சொன்னாங்க. எல்லார் வீட்டிலும் அம்மா வளர்ப்புன்னு சொல்வாங்க. நாங்க எல்லாம் எங்க அக்கா வளர்ப்பு. ‘இந்தப் பிள்ள என்ன இவ்ளோ கருப்பா இருக்கு!’ என நாங்க எந்தப் பிள்ளையாவது கிண்டல் பண்ணா, ‘ஏலே, அக்காளும் கருப்பாதான்ல இருக்கேன். அப்ப அக்காள ஒருத்தவங்க சொல்வாங்க இல்ல. அப்ப நீங்க அக்காளைப் பத்தி நினைக்கணும்’ என அக்கா எங்களுக்குச் சொல்வாங்க. நாம எந்த ஒரு பிள்ளையைத் தப்பா பேசும்பொழுது அக்காவை நினைக்கணும்னு ஸ்கூலுக்குப் போகும்பொழுது சொல்வாங்க. அதனால் எங்க எல்லாம் தவறுதலான ஒரு சூழல் வரும்போது, நாங்க அக்காவை நினைச்சுப்போம். நாங்க அம்மாவோட வார்ப்பு, அக்காவோட வளர்ப்பு. அந்த அக்கா இன்று, என் புத்தக வெளியீட்டு விழாவிற்குத் தொகுத்துரை வழங்குவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு.

‘மிகவும் கஷ்டத்தில் ஒருவன் என்னிடம் வந்தால் நான் என்ன செய்யவேண்டும்?’ என நபிகள் நாயகத்திடம் ஒருத்தன் கேட்கிறான். ‘நீ பணம் கொடு’ என்கிறார் நபிகள். ‘பணம் என்னிடம் இல்லையென்றால்?’ என்று கேட்கிறான். ‘சோறு கொடு’ என்கிறார் நபிகள். ‘சோறு இல்லைன்னா?’ என மீண்டும் கேட்கிறான். ‘தண்ணி கொடு’ என்கிறார் நபிகள். ‘தண்ணியும் இல்லைன்னா?’ எனக் கேட்டதற்கு, ‘நாலு நல்ல வார்த்தைகளையாவது கொடு’ என்கிறார் நபிகள். இந்த உலகத்தில் நாலு நல்ல வார்த்தைகள் கூட தர்மம் தான் என நபிகள் சொல்கிறார். இது மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துவிட்டது. அய்யா வைகுண்டரும், ‘செவ்வென்ற பேச்சு செப்பியிரு என்மகனே’ எனச் சொல்கிறார். ‘சிறந்த பேச்சைப் பேசு. என்ன நடந்துவிடப் போகுது வாழ்க்கையில்? நீ நெகட்டிவா பேசி என்னாயிடப் போகுது? சும்மா நாலு நல்ல வார்த்தை பேசு’ என அய்யா வழியில் நிறைய நல்ல மனிதர்கள் சொல்லிக் கொடுத்ததாலோ என்னவோ கதையில் எதிர்மறை பாத்திரங்களைப் படைக்க மனம் வரமாட்டேங்குது. நல்லது நினைச்சால் நிச்சயம் நல்லது நடக்கும் என்பது உண்மை.

அமீர் சாரோட ஒரு படத்தில் நடிச்சிருக்கேன். அதில் அவருக்காக ஒரு பாட்டு எழுதியிருக்கேன். அதுல ஒரு வரி, ‘பொய்ய கூட்டிச் சொன்னதில்ல, கையக் கட்டி நின்னதில்ல’ என வரும். அது அமீர் சாருக்கு நூறு சதவிகிதம் பொருந்தும். மனதில் தோன்றுவதை வாயில் மறைக்கவே தெரியாத மிகச் சிறந்த மனிதர். இந்த இடத்துல ஒரு விஷயத்தைப் பதிவு பண்ண நினைக்கின்றேன்.

இன்றைய முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் அண்ணன், இன்னிக்கு அவர் அடைஞ்சிருக்கும் உயரம் நடக்குமா, நடக்காதா என்ற ஒரு மாதிரி கருத்துக் கணிப்பு இருக்கும்போது, அமீர் சார் ஒரு பத்திரிகையில் ஒரு வார்த்தை சொல்றார். ‘புரட்சித்தலைவர் எம்ஜியாருக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒரு கூர்மையான வாள் வந்திருக்கு. அது நல்லது செய்யுமா, என்ன செய்யப் போகுதுன்னு யாருக்கும் தெரியாது’ எனச் சொன்னார். அனைவரும் அமீர் சாரை விமர்சனம் செய்தனர். ‘என்னப்பா உங்க ஆள் இப்படிச் சொல்றார்?’ எனக் கேட்டாங்க. ‘சொல்லியிருக்கார் பாருங்க’ என பதில் சொன்னேன். அவர் சொன்னது உண்மையாகிடுச்சு.

ஒரு கலைஞனின் வளர்ச்சியையும், ஒரு அரசியல் தலைவரோட வளர்ச்சியையும் கணிக்கக் கூடிய ஆற்றல் அமீர் சாருக்கு உண்டு. அவர் ஒரு சில விஷயத்தைக் கணிச்சா அது மாறவே மாறாது. நிவாஸ் K. பிரசன்னா பெரிய ஹீரோவார் எனக் கணிச்சிருக்கார். அது நடக்கும்னு நான் நம்புறேன். எனக்கு ஆசை என்னென்னா நிவாஸ் K.பிரசன்னா நடிச்சாலும், அந்தப் படத்தில் எனக்குப் பாடல் எழுத வாய்ப்புக் கொடுப்பார். நிவாஸ் K. பிரசன்னா சாரைச் சந்தித்த பின் என் வாழ்வில் என்னென்ன நடக்கிறது என்பது என் குடும்பத்தினருக்கு நன்றாகத் தெரியும். எனக்கொரு மிகப்பெரிய பாக்கியத்தை அவர் கொடுத்தார். தாய்க்கிழவி மேடைக்கு முன், ஒரு பாட்டுக்குப் பத்தாயிரம், பதினஞ்சாயிரம் என வந்ததென்றால், அதற்குப் பின், ‘ஒரு பாட்டுக்கு எவ்ளோ சம்பளம் வாங்குறீங்க?’ எனக் கேட்கிறாங்க. இந்த வார்த்தையைக் கேட்க எத்தனை வருஷம் ஆகியிருக்கு! அதற்குக் காரணம் நிவாஸ் சார்தான். அவருக்கு மனமார்ந்த நன்றி. அனைவருக்கும் அன்பும் நன்றியும்” என்றார்.

நிறைவாக இயக்குநரும் நடிகருமான அமீர் பேசுகையில் , “தாரே ஜமீன் பர் படத்தில் வரும் சிறுவனின் இன்னொரு வெர்ஷன் தான் நான். புத்தகத்தைப் பார்த்தாலே ஒரு பதற்றம் வரும். இந்த மேடைக்கு வரக் காரணம் புத்தகம் அல்ல. அந்தப் புத்தகத்தை எழுதிய நபர்தான் காரணம். ஏன் அவருக்காக நான் வருகிறேன் என்றால், உடன்பிறந்த சகோதரி தொகுத்து வழங்கப் புத்தகத்தைப் பெற்றோர் இருவரும் வாங்கிக் கொள்ளும் பாக்கியம் இருக்கு இல்லையா, ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் வெற்றி அடைஞ்சுட்டான் என்கிற தருணம் அது. தன்னை இந்தச் சமூகம் ஒத்துக் கொண்டதுன்னு சொல்ற இடம் இருக்கில்லையா, அதைத் தன் குடும்பத்தார்க்கு உணர்த்தும் இடமிருக்கில்லையா, இந்த மாதிரி யார் விழா எடுத்தாலும் அந்த விழாவிற்குப் போவது என் வழக்கம். காரணம் எனக்கு இப்படியொரு விழா நடக்கவே இல்லை. நான் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகின்றது. என்னுடைய எந்தப் படத்திற்கும் வெற்றி விழா நடந்ததில்லை. என் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு என் குடும்பத்தினர் வந்ததில்லை. அதனால் தான் யாராவது தன் உறவுகளோடு, ஒரு ஆளாகியிருக்கிறேன் என நிற்கும்பொழுது பக்கத்தில் நிற்க வேண்டியது என் கடமைன்னு நினைக்கிறேன். இதை விட பெரிய வெற்றி என்ன ஒரு மனிதன் அடைந்து விட முடியும்? ஜெகன் கவிராஜின் பெற்றோர் சென்னைக்கு வந்து முதல் முறையாக இப்படியொரு அரங்கில் மகனைப் பார்க்கிறார்கள் என்றால், இதுதான் ஒரு மனிதன் அடைந்த உயரம்.

திருநெல்வேலி பக்கத்தில் பூலாங்குளம் எனும் கிராமத்தில், டீக்கடையும் விவசாயமும் பார்த்த பெற்றோர்கள் ஆறாவதோடு படிப்பை நிறுத்தி பீடி பிடித்துக் கொண்டிருந்த ஜெகன், ஏதோ ஒரு மில்லில் போய் வேலை பார்க்க, பதினாறு வயசில் இப்படியிருந்தா கெட்டுப் போயிடுவான்னு உறவினர்கள் சேர்ந்து காஞ்சிபுரத்துக்கு அனுப்பி வைக்கிறாங்க. காஞ்சிபுரத்தில் காயிலாங்கடை வியாபாரத்திலும், பின் கேரளாவுக்குப் போய் மண்ணு சுமக்கிற வேலை பார்த்திருக்கார். திருச்சியில தெரு தெருவாகப் போய் பாத்திர வியாபாரம் பார்க்கிறார். பழைய புத்தகக் கடையில் எடைக்குப் புத்தகம் போடுவாங்க இல்ல, அதுல வர்ற புத்தகங்களைப் படிச்சு ஏற்பட்ட வாசிப்புப் பழக்கம் தான் இவரை இங்க கொண்டு வந்து உட்கார வச்சிருக்கு. அதன் பின், ஏக இறைவனை வழிபடும் முற்போக்கான சிந்தனையும், இடதுசாரி சிந்தனையும் கொண்ட அய்யா வழில நுழைகிறார். சென்னைக்கு வந்து வெற்றிவேந்தன் ஆஃபீஸ்ல வேலை செய்து, அவங்க கம்பெனி எடுத்த நாகேஷ் திரையரங்கம் படத்தில் கடைசி அசிஸ்டென்ட்டாகச் சேர்ந்து, அந்த கம்பெனியிலேயே கேஷியராக வேலை பார்த்து, அதன் பின் பாட்டெழுதி, அப்புறம் மீடியாவிற்குள் வந்து, அப்புறம் ‘ஜீரக பிரியாணி’ பாடல், தாய்க்கிழவி படத்தில் பாட்டெழுதி, இப்போ நான் நடிச்சிட்டிருக்கிற படத்துக்குப் பாட்டு எழுதி, ஒரு புத்தகம் எழுதி சென்னையில் பெரிய வெளியீட்டு விழா நடத்துறார். இந்த மாதிரியான ஆட்களைச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்த வேண்டிய பொறுப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். ஜெகனின் சிந்தனைக்கும், எண்ணத்துக்கும், அவர் சந்தித்த மனிதர்களையும், அவரது வட்டாரக் கதைகளையும் புத்தகமாகக் கொண்டு வந்ததற்கு அவருக்கு வாழ்த்துகளும் நன்றியும்” என்றார்.

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

0

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட கிராமத்து விளையாட்டு திரைப்படமான ‘பெத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’, ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கிராமத்து விளையாட்டு பின்னணியுடன் ஆக்ஷன், உணர்வுகள் மற்றும் வெற்றிக்கான போராட்டத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பான்-இந்தியா அளவில் உருவாகியுள்ள ‘பெத்தி’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு தலைமையிலான படக்குழு நாடு முழுவதும் தீவிரமான புரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற சந்திப்பில், படக்குழுவினர் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்கள் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில்… ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு பேசியதாவது..,

“நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. சேது, வாரணம் ஆயிரம், எந்திரன் போன்ற படங்கள் எனது திரைப்பயணத்தில் முக்கிய மைல்கற்களாக அமைந்தது போல, பெத்தி திரைப்படமும் எனக்கு மிகவும் முக்கியமான படமாக இருக்கும்.

இயக்குநர் புச்சி பாபு இந்தப் படத்திற்காக அற்புதமான திரைக்கதையை எழுதியிருக்கிறார். ஒரு திரைப்படம் காகிதத்தில் எழுதப்படலாம். ஆனால் அதற்கு உயிர் கொடுப்பது இசை, காட்சியமைப்பு மற்றும் சிறந்த நடிப்புதான். பெத்தி படத்தில் இவை அனைத்தும் மிகச் சிறப்பாக ஒன்றிணைந்துள்ளன. இந்தப் படம் நிச்சயமாக ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இது வெறும் படம் பார்த்து வெளியே வரும் அனுபவமாக இருக்காது. திரையரங்கில் முழுமையாக மூழ்கடிக்கும் அனுபவமாக இருக்கும். அதே நேரத்தில், படத்தில் ஒரு வலுவான கருத்தும் இருக்கிறது. படம் முடிந்து வெளியே வந்த பிறகும் அதன் தாக்கம் நீண்ட நாட்கள் உங்கள் மனதில் இருக்கும்.

சிவராஜ் குமார் சார் இந்தப் படத்தில் அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஒரு குரு என்ற கதாபாத்திரத்திற்கு அவர் அளித்திருக்கும் வலிமை மிகவும் சிறப்பானது. திவ்யேந்துவும் தனது அனுபவத்தையும் திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் நடிப்பை படம்பிடிக்கும்போது சரியான கோணத்தைத் தேர்வு செய்யவே கேமரா தேடியது என்று சொல்லலாம்.

இந்தப் படத்தின் வெற்றிக்காக எனது உதவி இயக்குநர்கள் முதல் ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் தங்களது முழு பங்களிப்பையும் வழங்கியுள்ளனர்.

ராம் சரண் பற்றி குறிப்பாக சொல்ல வேண்டும். இந்தப் படத்திற்காக அவர் முழுமையாக தன்னை அர்ப்பணித்திருக்கிறார். ஒரு தோற்றத்திலிருந்து மற்றொரு தோற்றத்திற்கு மாறுவது என்பது வெறும் உடை மாற்றம் அல்ல. முழுமையான உடல் மாற்றம். கிரிக்கெட் வீரராகத் தோன்ற வேண்டிய கட்டத்தில் இருந்து, பின்னர் மண்ணின் மணம் வீசும் ஒரு கிராமத்து இளைஞனாகவும், அதன் பிறகு உடற்கட்டுடன் கூடிய வேறொரு பரிமாணத்திலும் அவர் தன்னை மாற்றிக் கொண்டார். அதற்காக தினமும் பல மணி நேரங்கள் கடுமையாக பயிற்சி செய்து உழைத்தார். இன்று அனைவரும் அவரது தோற்றத்தைப் பாராட்டுகிறார்கள் என்றால், அதன் பின்னால் மிகப்பெரிய அர்ப்பணிப்பும் ஒழுக்கமும் இருக்கிறது. பின்னர் கதையின் மற்றொரு கட்டத்தில் அவரது வாழ்க்கை கீழிறங்கும் தருணங்களிலும், அதற்கேற்றவாறு தனது தோற்றத்தையும் நடிப்பையும் முழுமையாக மாற்றியுள்ளார். இது ராம் சரணின் மிகச் சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு விளையாட்டையும் கற்றுக்கொண்டு, அதற்கான ஒழுக்கத்தைப் பின்பற்றி அவர் இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார்.

மேலும், இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் எங்களுடன் மீண்டும் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி. எந்திரன் படத்திற்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. அவரது இசையும் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும்.இந்தப் படத்தை அனைவரும் திரையரங்கில் கண்டு ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.

நடிகர் திவ்யேந்து சர்மா பேசியதாவது..,

“இங்கு இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக, பெத்தி திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நான் அறிமுகமாக இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.

ஒரு நடிகராக என் கம்ஃபர்ட் ஜோனை விட்டு வெளியே வந்து, புதிதாக ஏதாவது முயற்சி செய்வதற்கான அருமையான வாய்ப்பாக இந்த படம் அமைந்தது. ஒவ்வொரு கலைஞரும் தங்களிடம் இருக்கும் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பை கனவு காண்பார்கள். அந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய படம் தான் பெத்தி.

இந்த பயணம் இயக்குநர் புச்சி பாபு சாருடன் தொடங்கியது. அவர் ஒரு சிறந்த மனிதர், சிறந்த இயக்குநர், அதைவிட சிறந்த நண்பர். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கும், கதாபாத்திரத்தை என் பாணியில் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை அளித்ததற்கும் அவருக்கு மனமார்ந்த நன்றி. அவருடன் பணியாற்றியது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது.

ராம் சரண் சார், உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. முதல் நாளிலிருந்தே நீங்கள் காட்டிய அன்பும் அரவணைப்பும் என்னை மிகவும் சுதந்திரமாக உணர வைத்தது. அந்த நினைவுகளை நான் எப்போதும் மனதில் வைத்திருப்பேன். ஒரு அற்புதமான மனிதராகவும், இணை நடிகராகவும் இருந்ததற்கு நன்றி.

இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் குறித்து என்ன சொல்வது? நீங்கள் ஒரு ஜாம்பவான். நீங்கள் இடம்பெற்றுள்ள ஒரு படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகப்பெரிய கௌரவம். என் பெயர் உங்கள் பெயருடன் இணைக்கப்படுவது கூட பெருமையான விஷயமாக கருதுகிறேன்.

மேலும், சிவராஜ்குமார் சாரின் முன்னிலையில் நிற்பதே எனக்கு பெருமையாக இருக்கிறது. அவருடன் காட்சிகளில் இணைந்து நடிக்கவில்லை என்றாலும், அவரது சாதனைகள் மற்றும் ஆளுமை குறித்து நன்கு அறிந்திருக்கிறேன். அவரின் முன்னிலையில் இருப்பது கூட ஒரு கௌரவம்.

ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு சார் எனக்கு மிகவும் பிடித்தவர். இதை நான் பல பேட்டிகளிலும் கூறியிருக்கிறேன். ஒரு நடிகராக எனக்கு அவர் கொடுத்த நம்பிக்கையும், சுதந்திரமும் அளவிட முடியாதவை. இவ்வளவு அனுபவம் மிக்க ஒளிப்பதிவாளர் ஒருவருடன் இவ்வளவு எளிதாக பணியாற்ற முடியும் என்று நான் நினைத்ததே இல்லை.

நான் ஏதாவது புதிதாக செய்ய விரும்பினால், அதை எப்படி இன்னும் சிறப்பாக காட்சிப்படுத்தலாம் என்று அவர் யோசிப்பார். ‘இதை இப்படிப் படம்பிடிப்போம், இன்னொரு க்ளோஸ் ஷாட் எடுப்போம்’ என்று அவர் கொடுத்த ஒத்துழைப்பு எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. அந்த அனுபவம் எப்போதும் எனக்கு மறக்க முடியாததாக இருக்கும்.

இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். அனைவருக்கும் நன்றி.”

இயக்குநர் புச்சி பாபு பேசியதாவது..,

எனக்கு சென்னை என்றால் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் எனக்கு மிகவும் பிடித்த பல கலைஞர்கள் இங்குதான் இருக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் சார், ரத்னவேலு சார், தேவி ஸ்ரீ பிரசாத் சார் என நான் மதிக்கும் பலர் சென்னையில் இருக்கிறார்கள். சென்னை என்பது வெறும் ஒரு நகரம் அல்ல, இங்கே சினிமாவே வாழ்கிறது. மக்கள் சினிமாவை நேசிக்கிறார்கள், சினிமா கலைஞர்களை மதிக்கிறார்கள்.

எனக்கு பிடித்த மூத்த ஆளுமைகள் அனைவரும் சென்னை பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள். அப்போது எனக்கு அதன் மகத்துவம் முழுமையாகப் புரியவில்லை. ஆனால் இப்போது இங்கு வரும்போதெல்லாம் ஒரு புனிதமான இடத்திற்குச் செல்வது போன்ற உணர்வு வருகிறது.

எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி சாரும் இங்கே இருக்கிறார். என்னுடைய முதல் திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். எப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பதற்கும், சென்னை வரும்போதெல்லாம் அன்புடன் வரவேற்பதற்கும் அவருக்கு நன்றி.

பெத்தி பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது மிகவும் உணர்வுப்பூர்வமான படம். பார்வையாளர்களை முழுமையாக ஈர்த்துக் கொள்ளும் ஒரு அனுபவமாக இருக்கும். குறிப்பாக இரண்டாம் பாதியில் ராம் சரண் சார் கொடுத்திருக்கும் நடிப்பு மற்றும் அர்ப்பணிப்பை பார்த்தால் யாராலும் எளிதில் மறக்க முடியாது.

கடந்த சில நாட்களாக நான் சென்னையில் இருந்து படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறேன். அதே நேரத்தில் ஹைதராபாத்திலும் சிறப்புக் காட்சிகள் நடக்கின்றன. படம் பார்த்த அனைவரும் தொலைபேசியில் அழைத்து பாராட்டி வருகிறார்கள். ‘மிகச் சிறந்த படம்’, ‘மிக அழகாக உருவாக்கியிருக்கிறீர்கள்’ என்று கூறுகிறார்கள். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்தப் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் ராம் சரண் சார் தான். பெத்தி என்றாலே எனக்கு ராம் சரண் தான் நினைவுக்கு வருகிறார். அவர் இந்தக் கதாபாத்திரத்திற்காக கொடுத்த உழைப்பு அளவிட முடியாதது. என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கியதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி.

திவ்யேந்து சாரின் நடிப்பைப் பார்த்தபோது, விஜய் சேதுபதி சாரை நினைவுபடுத்தியது. சிறிய சிறிய விஷயங்களில்கூட அவர் காட்டிய நுணுக்கமான நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. இந்தப் படத்தில் இணைந்ததற்காக அவருக்கு நன்றி.

இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் பற்றி பேச வேண்டுமென்றால், அவரைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். சிறுவயதிலிருந்தே அவருடைய இசைக்கு நான் மிகப்பெரிய ரசிகன். ஒருநாள் அவருடன் சேர்ந்து பணியாற்றுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. ஆனால் இன்று அது நனவாகியுள்ளது. இந்தப் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் அற்புதமாக வந்துள்ளன.

ரத்னவேலு சார் இந்தப் படத்தை உலகத் தரத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார். நான் எழுதிய ஒவ்வொரு காட்சிக்கும் அவர் உயிர் கொடுத்துள்ளார். அவரது ஒளிப்பதிவு இல்லாமல் இந்தப் படம் இப்படியாக உருவாகியிருக்காது.

மேலும், சிவராஜ்குமார் சார் இந்தப் படத்தில் ஒரு உண்மையான குருவாகத் தோன்றுகிறார். குரு-சிஷ்யன் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்தப் படம் அழகாக வெளிப்படுத்துகிறது. அந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் அளித்திருக்கும் மதிப்பும், கம்பீரமும் படத்தின் முக்கிய பலமாக இருக்கும்.

இந்தப் படத்தை ரசிகர்கள் அனைவரும் திரையரங்கில் பார்த்து கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.”

நடிகர் சிவராஜ்குமார் பேசியதாவது..,

முதலில் இயக்குநர் புச்சி பாபுவுக்கு நன்றி. இந்தப் படத்தில் குரு கதாபாத்திரம் பற்றி அவர் என்னிடம் கூறியபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதைவிட, ராம் சரணுடன் இணைந்து நடிக்கப் போகிறேன் என்ற செய்தி எனக்கு இன்னும் மகிழ்ச்சியை அளித்தது.

ராம் சரணையும், அவருடைய குடும்பத்தையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மீது எனக்கு எப்போதும் ஒரு தனிப்பட்ட அன்பும் மரியாதையும் இருக்கிறது. அதனால் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உடனே வந்தது. புச்சி பாபு கதையைச் சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. உடனே ஒப்புக்கொண்டேன்.

ஆனால் அதன் பிறகு எனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. சிகிச்சைக்காக நான் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் இந்தப் படம் என்னால் செய்ய முடியாமல் போய்விடுமோ என்று நினைத்தேன். ஆனால் படக்குழுவினர் எனக்காக காத்திருந்தார்கள். அது என்னை மிகவும் நெகிழச் செய்தது. அதற்காக அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

இசைப்புயல் A. R. ரஹ்மான் சாரை நான் நீண்ட காலமாக அறிவேன். அவர் பின்னணி கலைஞராக இருந்த காலத்திலிருந்தே எனக்கு தெரியும். பின்னர் இசையமைப்பாளராக அவர் இசையை முற்றிலும் புதிய பரிமாணத்தில் கொண்டு சென்றார். பல சிறந்த இசையமைப்பாளர்கள் இருந்தாலும், ரஹ்மான் சார் தனித்துவமான பாணியில் தனி அடையாளத்தை உருவாக்கினார். ஆஸ்கார் விருதை வென்றது இந்திய இசைக்கே பெருமை சேர்த்த தருணம். அவருடைய இசையில் நான் நடித்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

ரத்னவேலு சாருடன் பணியாற்றிய அனுபவமும் சிறப்பானது. படப்பிடிப்பு தளத்தில் அவருடன் தமிழில் பேசிக்கொண்டே இருப்பேன். அவர் காட்டிய அன்பும், மரியாதையும், அர்ப்பணிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. எங்களுக்குள் ஒரு சிறப்பு இணைப்பு உருவானது.

தயாரிப்பாளர் மற்றும் முழு படக்குழுவும் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தைப் பார்த்தால் எங்களுக்குள் இருந்த உறவும், ஒற்றுமையும் உங்களுக்குப் புரியும்.

ராம் சரண் சாரின் உழைப்பைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இந்தக் கதாபாத்திரத்திற்காக அவர் தனது உடலை மாற்றிக்கொண்ட விதம், எடுத்துக்கொண்ட முயற்சி, அர்ப்பணிப்பு அனைத்தும் அசாதாரணமானவை. அவரது நடிப்பும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.

இந்தப் படத்தை அனைவரும் விரும்புவார்கள் என்று நம்புகிறேன். பெத்தி படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். ஜூன் 4-ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. நீங்கள் எவ்வளவு ஆவலுடன் காத்திருக்கிறீர்களோ, நானும் அதே அளவு ஆவலுடன் காத்திருக்கிறேன்.நன்றி. வணக்கம்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பேசியதாவது..,

சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு ராம் சரண் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது ஒரு விஷயம் எனக்கு மிகவும் தோன்றியது. ஒரு மிகப் பெரிய ஆலமரமான சிரஞ்சீவி சாரின் மகனாக இருந்து, அதே உயரத்தை எட்ட முடியுமா என்று பலர் கேள்வி எழுப்பியிருக்கலாம். ஆனால் ராம் சரண் அதையும் தாண்டி தன்னுடைய தனித்துவமான இடத்தை உருவாக்கியிருக்கிறார். அவர் இன்னொரு ஆலமரமாக வளர்ந்திருக்கிறார். அப்போது என் மகனும் அங்கே இருந்தான். நான் அவனிடம், ‘நீ என்னைவிட பெரியவனாக வரலாம்’ என்று சொன்னேன். அதற்கான உதாரணமாக ராம் சரணைச் சுட்டிக்காட்டினேன். இளம் தலைமுறைக்கு இப்படிப்பட்ட உதாரணங்கள் மிகவும் முக்கியம்.

ஒரு நாள் சுகுமார் சார் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்கள். அதன்பிறகு புச்சி பாபுவை அறிமுகப்படுத்தினார்கள். அவர் இந்தக் கதையைப் பற்றி பேசினார். அந்த நேரத்தில் நான் பரிசோதனை முயற்சிகள் நிறைந்த படங்களிலும், வித்தியாசமான படைப்புகளிலும் அதிக கவனம் செலுத்தி வந்தேன். ஆனால் பெத்தி போன்ற ஒரு திரைப்படம் வந்தபோது அதில் இருக்கும் ஆற்றலும், அர்ப்பணிப்பும் என்னை ஈர்த்தது.

இந்த மாதிரியான பெரிய வர்த்தகப் படங்களில் நடிகர்கள் தங்கள் உயிரையே கொடுத்து உழைக்கிறார்கள். நடிப்பிலும், நடனத்திலும், ஒவ்வொரு காட்சியிலும் மிகப்பெரிய அர்ப்பணிப்பு இருக்கிறது. மேலும் இப்படங்கள் பல மொழிகளில் வெளியாகி உலகம் முழுவதும் சென்று சேர்கின்றன. அதனால் அனைவரின் உழைப்பும் மிகப் பெரிய அளவில் மக்களை சென்றடைகிறது.

ராம் சரண் இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட்டிருக்கிறார். ஒவ்வொரு ஃபிரேமிலும் அவரது உழைப்பு தெரியும். இசையும் காலத்திற்கு ஏற்ப தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. ரோஜா காலத்திலிருந்து இன்று வரை இசை மற்றும் திரைப்படத் துறையில் ஏற்பட்ட மாற்றங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். பலர் என்னிடம் இருந்து ஊக்கமடைந்திருக்கலாம். ஆனால் நானும் பலரிடமிருந்து ஊக்கமடைந்திருக்கிறேன்.

தெலுங்குத் திரைப்படத் துறையில் M. M. கீரவாணி, தேவி ஸ்ரீபிரசாத் , தமன் போன்ற திறமையான இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். தெலுங்கு சினிமா கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. அவர்கள் மிகவும் லட்சியத்துடன் செயல்படுகிறார்கள். திரைப்படத் தயாரிப்பின் தரத்தையும் தொடர்ந்து உயர்த்தி வருகிறார்கள். அந்தத் துறையின் ஒரு பகுதியாக இருப்பதில் எனக்கு பெருமை. பெத்தி படத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்கு முதல் படம் செய்வது போன்ற புதிய உற்சாகத்தை அளித்தது.

இன்றுக் காலைதான் இந்தப் படத்தின் பின்னணி இசைப் பணிகளை முடித்தோம். முடிந்த பிறகும் ‘இதை இன்னும் சிறப்பாக செய்ய முடியுமா?’, ‘இன்னும் ஏதாவது சேர்க்க வேண்டுமா?’ என்ற ஆர்வம் எங்களுக்குள் இருந்தது. அந்த உற்சாகமே இந்தப் படத்தின் சிறப்பு. சிவராஜ்குமார் சாருக்கும், படக்குழுவில் உள்ள அனைவருக்கும் என் நன்றி. இந்தப் படத்தை உருவாக்கிய அனுபவத்தை நாங்கள் அனைவரும் மிகவும் ரசித்தோம். நீங்கள் அனைவரும் இந்தப் படத்தை விரும்புவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.”

நடிகர் ராம் சரண் பேசியதாவது..,

“சென்னை பத்திரிகை நண்பர்களுக்கு வணக்கம். உண்மையாகச் சொன்னால், சில நேரங்களில் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் போய்விடும். இப்போதும் அந்த மாதிரியான ஒரு தருணத்தில்தான் நான் இருக்கிறேன். சென்னை வந்தாலே எனக்கு எப்போதும் இப்படியான உணர்வு ஏற்படும்.

முதலில், இந்த மேடையில் இத்தனை ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். அவர்களின் முன்னிலையில் என்ன பேசுவது என்ற எண்ணமே வருகிறது. இருந்தாலும் இங்கு வந்திருக்கும் அனைவருக்கும், குறிப்பாக சென்னை மற்றும் தமிழ்நாடு ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

சென்னை எனக்கு எப்போதும் ஒரு சிறப்பான இடம். நான் பிறந்து வளர்ந்த நகரம் இது. அதனால் ஆர்.ஆர்.ஆர்., மகதீரா அல்லது வேறு எந்தப் படமாக இருந்தாலும், சென்னைக்கு வந்து புரமோஷன் செய்யும் போது வீட்டிற்கு வந்த உணர்வே கிடைக்கிறது. மேலும், என் அம்மாவும் இங்கு பிறந்தவர். அதனால் சென்னை எனக்கு என் தாயின் ஊர் என்ற பாசமான உணர்வை அளிக்கிறது.

பெத்தி திரைப்படம் குறித்து படக்குழுவினர் அனைவரும் ஏற்கனவே பேசிவிட்டார்கள். இந்தப் படத்தை முடிக்க எங்களுக்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆனது. அதில் 285 நாட்களுக்கும் மேலாக நாங்கள் உழைத்தோம். ஆனால் எங்களைவிட அதிகமாக உழைத்தவர் இயக்குநர் புச்சி பாபு. கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக அவர் இந்தப் படத்திற்காக உழைத்திருக்கிறார்.

நாங்கள் கஷ்டப்பட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் இப்படிப்பட்ட சிறந்த கலைஞர்கள் ஒரு படத்தில் இருக்கும்போது அந்தப் பயணம் கஷ்டமாகத் தோன்றாது. இந்தக் கதையை எங்களிடம் கொண்டு வந்த சுகுமார் சாருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் இந்தப் படத்தின் மையத் தூண். நாங்கள் அனைவரும் ஒரு வீட்டைத் தாங்கும் தூண்கள் என்றால், அதன் நடுவில் இருக்கும் மிகப்பெரிய ஆதாரத் தூண் அவர் தான். கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக அதிகாலை வரை விழித்திருந்து பின்னணி இசைப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். அவரது அர்ப்பணிப்பு எங்களுக்கு எல்லாம் மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறது.

சிவராஜ்குமார் சார் திரையில் தோன்றினாலே ஒரு தீப்பொறி போல ஆற்றல் உருவாகும். ஜெயிலர் படத்தில் அவருடைய கதாபாத்திரத்தை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். காரில் பயணம் செய்யும்போதுகூட அந்த காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்ப்பேன். குறிப்பாக அவர் மெதுவாக நடந்து வரும் காட்சியும், பீடி பிடிக்கும் அந்த ஸ்டைலும் இன்று ஒரு ஐகானிக் தருணமாக மாறியுள்ளது. அவரது கண்களே ஆயிரம் வார்த்தைகள் பேசும்.

ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு சார் பற்றி என்ன சொல்வது? அவருடன் நான் நான்கு திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறேன். இரண்டு படங்களை நான் தயாரித்தபோதும் அவர் உடன் இருந்தார். அவர் ஒரு உண்மையான ஜாம்பவான். எந்திரன் படத்தில் அவர் உருவாக்கிய காட்சிகள், குறிப்பாக பிரம்மாண்ட பாடல் காட்சிகள், என்னை மிகவும் கவர்ந்தவை. ‘அந்த மாதிரியான ஒரு காட்சியை எனக்கும் கொடுங்கள் சார்’ என்று நான் எப்போதும் அவரிடம் கேட்பேன்.

ரஜினி சார், கமல் சார், ஷங்கர் சார் போன்ற மகத்தான கலைஞர்களுடன் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருக்கிறது. ஆனால் அந்த அனுபவத்தின் பெருமையை அவர் ஒருபோதும் வெளிக்காட்ட மாட்டார். அதுவே அவரது சிறப்பு.

என்னைப்போலவே திவ்யேந்து இந்தப் படத்தில் மிகப்பெரிய உழைப்பை தந்துள்ளார் அவரது காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

இந்தப் படத்தை நான் வெறும் ஒரு நடிகராக செய்யவில்லை. மனதார காதலித்து செய்தேன். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்ததும், என் நண்பர்களிடமும், அம்மாவிடமும், அந்த நாள் ஷூட்டிங் அனுபவங்களைப் பற்றியே தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பேன். ‘போதும், நிறுத்து… நாள் முழுவதும் இதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாய்’ என்று அவர்கள் சொல்லும் அளவுக்கு பெத்தி படம் என் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.

என் வீட்டில் எப்போதும் ஒரு விஷயம் சொல்வார்கள். ‘ஒரு படத்தைப் பற்றி நீ வீட்டிற்கு வந்த பிறகும் தொடர்ந்து பேசினால், அந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும்’ என்று. ஆர்.ஆர்.ஆர்., ரங்கஸ்தலம், மகதீரா போன்ற படங்களைப் பற்றியும் நான் அப்படித்தான் பேசினேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பெத்தி படத்தைப் பற்றியே வீட்டில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். அதுவே இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்பதற்கான என் நம்பிக்கை. குடும்பத்தோடு, குறிப்பாக குழந்தைகளோடு வந்து பார்க்க வேண்டிய படம் இது. மிகவும் ஊக்கமளிக்கும், மனதைத் தொடும் திரைப்படமாக இருக்கும்.

என் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் ஒரு படத்தை இயக்குநர் புச்சி பாபுவும், சுகுமார் சாரும் எனக்கு கொடுத்திருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இறுதியாக, முதல்வர் விஜய் அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உச்சநிலையிலிருந்த ஒரு திரைப்பட வாழ்க்கையையும், மிகப் பெரிய நட்சத்திர அந்தஸ்தையும் விட்டு விட்டு பொதுச் சேவைக்காக வந்திருப்பது பாராட்டத்தக்க விஷயம். திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒருவராக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவருக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் என் வாழ்த்துகள்.

இந்தப் படம் எங்கள் அனைவரின் உழைப்பு . ஜூன் 4-ஆம் தேதி ரசிகர்கள் திரையரங்கில் இந்த அனுபவத்தை கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.”

ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு மற்றும் திவ்யேந்து சர்மா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சென்னை பத்திரிகையாளர் சந்திப்பும் ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் உயர்த்தியுள்ளது.

ஏற்கனவே ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், சமீபத்தில் வெளியான டிரெய்லர், ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை வலுவாக வெளிப்படுத்தி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

இப்படம் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு மற்றும் அவரது குழு, இந்தியா முழுவதும் தீவிரமான புரமோஷன் திட்டங்களை மேற்கொண்டு, படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.

நடிகர்கள் :
மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா

தொழில்நுட்பக் குழு :
இயக்கம், திரைக்கதை: புச்சி பாபு சனா
வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ்
தயாரிப்பு நிறுவனம்: விருத்தி சினிமாஸ்
தயாரிப்பாளர்: வெங்கட சதீஷ் கிலாரு
இணை தயாரிப்பாளர்: ஈஷான் சக்சேனா
இசை: A.R. ரஹ்மான்
ஒளிப்பதிவு: R. ரத்னவேலு
தயாரிப்பு வடிவமைப்பாளர் : அவினாஷ் கொல்லா
படத்தொகுப்பு: நவீன் நூலி
நிர்வாக தயாரிப்பாளர்: V.Y. பிரவீன் குமார்
மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ
மக்கள் தொடர்பு : யுவராஜ்

தயாள் பத்மநாபனின் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு!

0

மாநில அரசின் விருது பெற்ற இயக்குநரான தயாள் பத்மநாபன், பல மொழிகளில் கதைக்கான உள்ளடக்கத்தை மையப்படுத்தப்பட்ட தரமான திரைப்படங்களை வழங்கி வருபவர். அவரது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ ஜூன் 25 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

2M சினிமாஸ் மற்றும் D பிக்சர்ஸ் நிறுவனங்களின் சார்பில் கே.வி. ஷபரீஷ் தயாரித்துள்ள இப்படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சாகா, மாறன், சரவணன், லிஸ்ஸி ஆண்டனி, லோகன் கண்ணன், நர்மதா, அருவி மதன், கன்யா பாரதி, கவிதா பாரதி மற்றும் சுப்பிரமணியம் சிவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பிரம்மாண்டமான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை நகரில் படக்குழுவினரின் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வின் சிறப்பாக, படத்தின் காட்சிசார் சுருக்கமும் (Visual Synopsis), கதாபாத்திர அறிமுகமும் ஊடகங்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இது படத்தின் உலகத்தையும் கதாபாத்திரங்களையும் பற்றிய சுவாரஸ்யமான முன்னோட்டத்தை வழங்கியதுடன், ஜூன் 25, 2026 அன்று நடைபெறவுள்ள திரையரங்கு வெளியீட்டிற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியது.

நிகழ்ச்சியில் பேசப்பட்ட முக்கிய கருத்துகளின் தொகுப்பு பின்வருமாறு:

நடிகரும் எழுத்தாளருமான கவிதா பாரதி:

“தயாள் பத்மநாபன் கர்நாடகாவில் தொடர்ந்து தரமான மற்றும் துணிச்சலான படைப்புகளை வழங்கும் இயக்குநராக கொண்டாடப்படுகிறார். அவரது மூன்றாவது தமிழ் திரைப்படமான ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஆரம்பத்தில் அவர் என்னைத் தொடர்புகொண்டு திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதுமாறு கேட்டார். இந்தப் படம் எங்கள் அனைவருக்கும் மிகவும் சிறப்பானது. பார்வையாளர்களுக்கும் இது வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன்.”

ஒளிப்பதிவாளர் எம்.வி. பன்னீர்செல்வம்:

“எழுத்து வலுவாக இருக்கும் போது திரைப்படமும் ஆழமாக மாறுகிறது. தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களது சிறந்த பங்களிப்பை வழங்க முடிகிறது. ‘கொன்றால் பாவம்’ படத்தின் அசல் பதிப்பைப் பார்த்த பிறகே தயாளுடன் எனது நட்பு தொடங்கியது. பல இயக்குநர்கள் வளர்ச்சியுடன் தங்களது படைப்புகளின் அளவை பெரிதாக்க முயல்வார்கள். ஆனால் தயாள் தனது கலைநோக்கில் உறுதியாக இருக்கிறார். மிகைப்படுத்தல்களைத் தவிர்த்து ஒவ்வொரு துறையையும் திட்டமிட்டு அணுகுகிறார். திரைக்கதை கட்டத்திலேயே ஒளிப்பதிவாளரை இணைக்கும் இயக்குநர்கள் அரிது. குழுவின் மீதான அவரது மரியாதை அபாரமானது. இப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு காட்சிவிருந்தாக (Visual Treat) இருக்கும்.”

இசையமைப்பாளர் தர்புகா சிவா:

“பல படங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தாலும், சில படங்களே நம்மை சிந்திக்க வைக்கின்றன. எல்லா படங்களும் முடிந்தபின் பெருமிதத்தை தராது. ஆனால் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ எனக்கு மிகுந்த திருப்தியையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. ஹுக் ஸ்டெப்ஸ், டிரெண்டிங் ஃபார்முலாக்கள், வைரல் அம்சங்கள் பற்றி எங்களிடம் பேச்சே இல்லை. திரைக்கதை கேட்டதை மட்டுமே செய்ய வேண்டும் என்பதில் தயாள் சார் நேர்மையாக இருந்தார்.”

நடிகர் வெற்றி:

“தயாள் சார் போல இவ்வளவு திட்டமிடலுடன் செயல்படும் இயக்குநரை நான் பார்த்ததில்லை. ‘கொன்றால் பாவம்’ பார்த்த பிறகு அவருடன் பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது இப்போது நனவாகியுள்ளது. படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. முழு குழுவிற்கும் எனது நன்றி.”

நடிகர் சரவணன்:

“இது தயாள் சாரின் மூன்றாவது தமிழ் படம் என்றாலும், அவர் கன்னடத்தில் ஏற்கனவே 18 படங்களை இயக்கியுள்ளார். அவர் மேலும் பல தமிழ் படங்களை இயக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவரது திட்டமிடல் அனைவரும் தெளிவாகவும் அமைதியாகவும் வேலை செய்ய உதவியது. இந்தப் படம் பார்வையாளர்களுக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருக்கும்.”

நடிகை பிரிகிடா சாகா:

“இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தயாள் சார் ஒரு சிறந்த இயக்குநர் மட்டுமல்ல, அருமையான மனிதரும் கூட. படப்பிடிப்பில் அனைவரையும் குடும்பத்தினராக கவனித்தார். எனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரம் மிகவும் நெருக்கமானது. முதல் காட்சியிலேயே என் பாட்டியின் ஆன்மாவுடன் இணைந்த உணர்வு ஏற்பட்டது. அந்த உணர்வை முழுப் படத்திலும் தக்கவைத்தேன். இந்த அனுபவம் எனக்கு என்றும் நினைவாக இருக்கும்.”

நடிகர் அருவி மதன்:

“சிறிய பட்ஜெட் படங்களுக்கு வலுவான உள்ளடக்கம் இருந்தால் அவை நிச்சயம் வெற்றி பெறும். என் ‘நூடுல்ஸ்’ படத்தின் மூலம் இதை அனுபவித்தேன். தயாள் சார் அதே பாதையில் பயணிக்கிறார். படப்பிடிப்பு தொடங்கும் முன்பே சம்பளம் வழங்கப்பட்டது என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்ட படம் வணிக ரீதியாகவும் வெற்றி பெறும்.”

நடிகை லிஸ்ஸி ஆண்டனி:

“இந்தப் படத்தில் நான் சூடாமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். பொதுவாக நடிகர்களுக்கு, தாங்கள் செலுத்திய உழைப்பிற்கு இறுதி வெளியீடு நியாயம் செய்யுமா என்ற சந்தேகம் இருக்கும். ஆனால் தயாள் சார் இயக்கும் படங்களில் அத்தகைய கவலை தேவையில்லை. அவரது தெளிவான கலைநோக்கும் திட்டமிடலும் நடிகர்களின் நடிப்பை உயர்த்திக் காட்டும்.”

நடிகரும் இயக்குநருமான சுப்பிரமணியம் சிவா:

“தயாள் மிகுந்த தெளிவுடைய மனிதர். அவர் வீடு கட்டினாலும், திருடர்கள் எளிதில் உள்ளே வருவதற்கே ஒரு தனி வழியை திட்டமிட்டு வைத்திருப்பார் என்று நகைச்சுவையாக சொல்வேன். அந்த அளவுக்கு அவரது திட்டமிடல் அசாதாரணமானது. தனுஷிடம் நான் கண்ட தெளிவை இப்போது தயாளிடமும் பார்க்கிறேன். வணிக மற்றும் மாற்று சினிமாவுக்கிடையேயான இடைவெளியை இந்தப் படம் அழகாக இணைக்கிறது.”

நடிகர் ஆரவ்:

“ஒரு கொலைக்காக குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமா என்ற முக்கியமான கேள்வியை இந்தப் படம் எழுப்புகிறது. தயாள் பத்மநாபன் மிகத் திறமையான இயக்குநர். குறுகிய காலத்தில் திட்டமிட்டு தரமான படைப்புகளை உருவாக்கும் அவரது திறனை நான் எப்போதும் பாராட்டியுள்ளேன். அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்தப் படம் ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும்.”

இயக்குநர் தயாள் பத்மநாபன்:

“எங்கள் தயாரிப்பாளர் ஷபரீஷ் தற்போது மொரீஷியஸில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். ரங்கராஜ் பாண்டேவும் அவருடன் இருக்கிறார். அதனால் இருவரும் இன்று வர முடியவில்லை.

இது என் 22வது திரைப்படமும், மூன்றாவது தமிழ் படமும் ஆகும். இந்தப் படத்தைப் பற்றிய சில முக்கிய தகவல்களை நாங்கள் திட்டமிட்டு மறைத்துள்ளோம். அவை வெளியீட்டுக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படுத்தப்படும்.
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம், 1972-ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மரண தண்டனைக் கைதியின் வாழ்க்கையில் ஒரு இரவை மையமாகக் கொண்டு, அவன் கடந்தகாலத்தை மீள்பார்க்கும் கதையாக இது அமைந்துள்ளது.

கன்னடத் துறையில் பணியாற்றியதால் என் தமிழ் பேசும் திறன் சற்று குறைந்துவிட்டது. இந்தப் படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களை சிறப்பாக வடிவமைத்த கவிதா பாரதி சாருக்கு நான் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன்.
என் நடிகர்கள் அனைவரும் தங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் இந்தப் படத்திற்காக அர்ப்பணித்துள்ளனர். தொழில்நுட்பக் கலைஞர்கள் நான் கொடுத்த அழுத்தத்தையும் பொறுமையுடன் ஏற்றுக்கொண்டனர்.

பிரிகிடாவுக்கு இப்படத்தில் அழகான கதாபாத்திரம் உள்ளது. வெற்றி மற்றும் ரங்கராஜ் பாண்டே இருவருக்கும் கதையில் சமமான முக்கியத்துவம் உள்ளது. குறிப்பாக சரவணன் சார், இந்தப் படத்தின் மீது கொண்ட அன்பினால் தனது சம்பளத்தைக் குறைத்ததோடு, கிளைமாக்ஸ் காட்சிக்காக கூடுதலாக ஒரு நாள் படப்பிடிப்பையும் வழங்கினார்.

படப்பிடிப்பு முடிந்த நாளில், திட்டமிட்டதை விட இரண்டு நாட்கள் முன்னதாகவே வேலை முடிந்ததால், ரங்கராஜ் பாண்டே தனது சம்பளத்தில் இருந்து ரூ.2 லட்சத்தைத் திருப்பிக் கொடுத்தார். இந்த முழு பயணத்திலும் குழுவின் ஆதரவு அளவிட முடியாதது. அவர்களுடன் பணியாற்றியதில் நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்.”

இதனைத் தொடர்ந்து, படக்குழுவினர் ஊடகங்களுடன் கலந்துரையாடி, திரைப்படம், கதாபாத்திரங்கள் மற்றும் உருவாக்க அனுபவங்கள் குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். பிரத்யேக காட்சிசார் சுருக்கமும் கதாபாத்திர அறிமுகமும் ஊடகங்களின் பாராட்டைப் பெற்ற நிலையில், ஜூன் 25 அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Dayal Padmanabhan’s “Lakshmikanthan Kolai Vazhakku Press Meet”

State Government Award winning filmmaker Dayal Padmanabhan, known for his compelling and content driven storytelling across languages, is gearing up for the release of his much anticipated Tamil film ‘Lakshmikanthan Kolai Vazhakku’, slated to hit screens on June 25. Produced by KV Shabarreesh under the banners 2M Cinemas and D Pictures, the film features an ensemble cast including Vetri, Rangaraj Pandey, Brigida Saga, Maaran, Saravanan, Lizzie Antony, Logan Kannan, Narmadha, Aruvi Madhan, Kanya Bharathy, Kavitha Bharathy, and Subramaniam Siva in pivotal roles.

A grand press meet of ‘Lakshmikanthan Kolai Vazhakku’ was held in Chennai in the presence of the cast and crew. Adding to the excitement, an exclusive visual synopsis and character introduction of the film was specially screened for the media and press fraternity, offering an intriguing glimpse into the film’s world and characters, while significantly heightening expectations for its theatrical release scheduled for June 25, 2026.

Here are excerpts from the event.

Actor Writer Kavitha Bharathi said, “This is truly a proud moment for me, as Dayal Padmanabhan is celebrated across Karnataka for his consistently ambitious body of work. Now, his third outing in Tamil, ‘Lakshmikanthan Kolai Vazhakku’, has created even greater expectations. Initially, Dayal called me and asked me to handle the screenplay and dialogues for this film. LKV is a special movie for all of us who have been part of it, and I strongly believe it will offer a unique experience for audiences as well.”

Cinematographer M.V. Paneerselvam said, “A film becomes more engrossing when the writing is strong. In fact, it becomes easier for technicians to bring out their best work. My friendship with Dayal blossomed after I was awestruck by his debut film, the original version of ‘Kondraal Paavam’. The uniqueness about Dayal is that while many filmmakers tend to expand and elevate their canvas and scale as they grow, he remains deeply committed to his vision. He does not indulge in exaggerations, but instead approaches every department with meticulous planning. Not many filmmakers involve cinematographers in the script process, but Dayal does. His respect for the entire team is phenomenal. I have witnessed such conviction and determination only after K. Balachander sir. I am glad to have worked with this wonderful team, and I believe this film will be a visual treat for audiences.”

Music Director Darbuka Siva said, “As technicians, we often get opportunities to work on several projects, but only a few make us pause, reflect, and ask ourselves what the true takeaway is. Not every film leaves me with pride after completion, but LKV has given me immense satisfaction and happiness for being a part of it. We never had conversations about hook steps, trending formulas, or viral elements. Dayal sir had a sincere approach towards the film and never wanted anything beyond what the script genuinely demanded.”

Actor Vetri said, “I have never come across a filmmaker as meticulously planned as Dayal sir. One day, I received a call from the producer asking me to meet him. After watching ‘Kondraal Paavam’, I sincerely wished to collaborate with Dayal sir, and I am glad this opportunity happened. The film has shaped up beautifully, and I thank everyone in the team for their tremendous support. Thank you all.”

Actor Saravanan said, “Many may perceive ‘Lakshmikanthan Kolai Vazhakku’ as Dayal sir’s third outing as a filmmaker, but he has already directed 18 films in the Kannada industry. I truly wish to see him flourish further and make many more films in Tamil cinema. I hope he goes on to create more than 50 films in his career. His planning was so inspiring that it allowed everyone on set to work with clarity and peace of mind. I thank the entire team for this wonderful opportunity. ‘Lakshmikanthan Kolai Vazhakku’ will certainly be a special film for audiences. Thank you all.”

Actress Brigida Saga said, “I am extremely happy to be a part of this film. Everyone here has already spoken so highly about the director that I hardly know what more to add. He is truly a masterclass filmmaker. More than being an exceptional director, he is an incredible human being. He made me feel extremely comfortable on the sets and cared for everyone in a very fatherly manner. His planning and execution are phenomenal. Personally, this film is very close to my heart. When I got this opportunity, my very first scene involved carrying my children and waiting for my husband’s character. I instantly connected with the soul of my grandmother while performing that scene. Throughout the film, I carried the same emotional connection, which made this project deeply special to me. I am a workaholic, and every time I am part of a soulful film, it becomes a memorable takeaway. This film has given me one such experience. My co star Vetri is a wonderful and sweet person, a dedicated and genuine artiste. I sincerely thank the entire team for this beautiful opportunity.”

Actor Aruvi Madhan said, “Usually, when a small budget film is backed by strong content, it is bound to yield good results. I experienced this through my directorial venture ‘Noodles’, which turned out profitably. I am happy to see Dayal sir working in the same space. One of the biggest surprises for me was receiving my remuneration in advance, even before shooting commenced. When a film is made with proper planning and execution, it naturally leads to strong commercial results. Dayal Padmanabhan sir has done a commendable job with this film, and I am eagerly looking forward to its release. Thank you all for the support.”

Actress Lizie Antony said, “I have played the role of Soodamani in this film. Usually, artistes tend to have a small sense of doubt while putting in their complete involvement and effort into a project. There is always a lingering feeling of whether the final output will justify their hard work. However, when it comes to a Dayal Padmanabhan sir project, actors need not worry about such things. He is an extremely well planned filmmaker with a crystal clear vision, assuring every artiste that their performances will be elevated beautifully through his presentation. ‘Lakshmikanthan Kolai Vazhakku’ will definitely appeal to audiences across all sections. Thank you all.”

Actor Director Subramaniam Siva said, “Dayal is a man of immense clarity. Even if he were constructing a house, he would probably have a special direction for thieves to easily walk through and complete their burglary. I say this humorously, of course. Such is the level of his planning. I have witnessed this kind of clarity in Dhanush, and now I see the same in Dayal. ‘Lakshmikanthan Kolai Vazhakku’ is a film that beautifully bridges the gap between commercial and offbeat cinema. He initially planned to complete the film in 20 days, and eventually accomplished it with remarkable execution.”

Actor Aarav said, “‘Lakshmikanthan Kolai Vazhakku’ deals with a crucial question of whether a criminal deserves the death sentence for murder. Dayal Padmanabhan is a wonderful filmmaker who consistently creates films with meticulous planning and manages to complete them within a short span of time. I have always admired his directorial proficiency. Every filmmaker desires to communicate a belief or message, directly or indirectly, and Dayal sir does it effortlessly. I often ask him why he does not make films with bigger stars, but he remains so genuine and focused on creating content driven cinema with proper planning. This movie is going to be a special experience for audiences from all walks of life.”

Director Dayal Padmanabhan said, “My producer Sabareesan is currently busy shooting for his next film in Mauritius, and Rangaraj Pandey is accompanying him as well. This is the reason both of them could not be present today. This is my 22nd film and my third Tamil film. As a team, we have intentionally concealed certain details about the movie, which will be revealed during the post release press meet. This film is based on real life incidents and is set against the backdrop of 1972, revolving around a night in the life of a prisoner on death row, revisiting his past. After stepping into the Kannada industry, my fluency in Tamil became slightly shaky, and I must sincerely thank Kavitha Bharathi sir for making the screenplay and dialogues look so promising. I thank all my actors, who have given their heart and soul to this project. My technicians have been extremely patient despite the pressure I placed on them. Brigida has a beautiful character in this film, and both Vetri sir and Rangaraj sir have equal prominence in the narrative. I especially want to mention Saravanan sir, who reduced his remuneration and even gave us an additional shooting day for the climax simply because he felt deeply connected to the project. On the day of wrap, Rangaraj Pandey returned Rs.2 lakh from his remuneration, stating that we had completed the shoot two days ahead of schedule. The entire team has been incredibly supportive throughout this journey, and I feel truly blessed to have worked with them.”

Following the speeches, the cast and crew members engaged in an interactive Q and A session with the press and media fraternity, sharing further insights about the film, characters, and the making process. The event concluded on an enthusiastic note, with the media appreciating the exclusive visual synopsis and character introduction screening, while anticipation continues to build for ‘Lakshmikanthan Kolai Vazhakku’, which is slated for a worldwide theatrical release on June 25.

Ego Raman Movie Review

0

🎬 A Rare Non-Comic Role That Shines

Ego Raman, released posthumously after Robo Shankar’s passing, gives the beloved comedian a rare serious, non-comic role — and he delivers one of the finest performances of his career. Trading laughter for menace, Robo Shankar plays Sundararaman, a school headmaster whose obsession with image curdles into cold, controlling behavior. His ability to convey threat through silence and subtle expressions is genuinely unsettling.

The film captures Coimbatore district’s village aesthetics beautifully, with cinematography that preserves rural charm without artificial gloss. The slow-burn pacing lets scenes breathe rather than rushing, creating space for genuine emotional moments to connect. The background score quietly earns its place without overpowering the narrative.

What makes this performance special is how Robo Shankar trusts the material — saying little and letting “menace pool in the silences”. His expressions, body language, and dialogue delivery make Raman feel like a real person rather than a caricature. While he occasionally pushes into overstatement, staying clear of comedy works entirely in the film’s favor.

The core story explores a compelling teacher-student ego clash set against emotional rural drama involving a dog’s death and bike-related conflict. Arivu (Ciby Chandran), a mild-mannered TNPSC aspirant, reunites with his image-obsessed former teacher, and their bond curdles into quiet psychological warfare. The film avoids the cringe that genre compromises often invite.

Ego Raman proves Robo Shankar was much more than a comedian — a versatile actor capable of carrying a sparse drama almost entirely on mood. Though the film is slow and has limited plot points, Robo Shankar’s performance stands as a powerful swan song that deserves recognition.

Karan Dayanidhi Maran Launches Tamil Nadu’s First Micro-drama Platform, KadhaiShorts

0
  • Alongside KadhaiShorts, KadhaiClub, a category-first ecosystem focused on creating the next generation of entertainment professionals and storytellers for vertical filmmaking was also launched.
  • With over 100 original content in production, the platform debuts with a specially curated line up of hyperlocal micro-dramas across six intriguing genres.
  • Starting with Tamil originals, the platform will soon expand into hyperlocal original storytelling across Telugu, Kannada, Hindi, Malayalam and Bengali.
  • Launches as affordable and flexible pay-per-series model at just Rs. 20 to make premium entertainment accessible to a wider audience.

Chennai, 28th May 2026: Karan Dayanidhi Maran today announced the launch of KadhaiShorts, Tamil Nadu’s first micro drama platform, marking Maran Group’s entry into the new-gen entertainment. Rooted in showcasing hyperlocal and culturally relevant stories, the platform aims to bring vertical storytelling to the Tamil audience, worldwide, packaged into snackable two-minute episodic content. With 100+ originals in production, the platform currently houses a specially curated lineup of Tamil “Kutti Series” spread across six intriguing genres and plans to launch shows across Telugu, Kannada, Hindi, Malayalam and Bengali, by end of this financial year.

As part of its launch strategy, the platform has introduced a pay-per-series pricing model starting at Rs. 20, aimed at making hyperlocal digital entertainment affordable and easily accessible for viewers across demographics.

Globally, micro-drama is emerging as one of the fastest-growing entertainment categories, driven by mobile-only consumption patterns and rising demand for high-frequency, short-duration content formats. In India, audience behaviour is rapidly shifting toward mobile-native entertainment consumption, creating opportunities for structured episodic formats designed for shorter attention windows without compromising emotional continuity and engagement.

KadhaiShorts also differentiates itself through hyperlocal storytelling rooted in native culture, emotions, language and everyday experiences. Spanning multiple genres and audience segments, the launch slate places a strong emphasis on hyperlocal and culturally rooted narratives shaped by native language, emotions, and everyday experiences, while also aiming to take Tamil micro-drama storytelling to wider Indian and global Tamil audiences.

South India has already witnessed one major entertainment consumption revolution through television serial culture and high-frequency audience engagement shaped over decades. Positioned as “Kutti Serials”, KadhaiShorts adapts the emotional continuity and habitual engagement of television serial culture into a mobile-only entertainment format built for current-generation viewing habits. Led by

Karan Dayanidhi Maran under Maran Group, KadhaiShorts represents the next phase of this evolution through mobile-first entertainment and personalized content consumption.

Commenting on the launch, Mr. Karan Dayanidhi Maran, Vice Chairman – Maran Group & Founder – KadhaiShorts said, “Audience behaviour has already changed. The entertainment industry is now catching up to that shift. We see micro-drama not as a passing trend, but as the next major entertainment format built for mobile-only consumption. With KadhaiShorts, we are not entering this space to participate. We are entering it to lead. We are ruthless about standards, ruthless about originals, and ruthless about building long-term cultural impact.”

The platform will release 10 new vertical micro-dramas every month through cinematically produced two-minute episodic storytelling designed for continuous mobile engagement, combining emotional depth with contemporary viewing habits.

Mr. Sabarish Venkat, CEO, KadhaiShorts added, “India already has almost a Billion Smart phone users, and audience behaviour is rapidly shifting toward high-frequency, mobile-only entertainment consumption. Television built shared viewing behaviour across households. Mobile-only entertainment is now building personalized viewing behaviour across individuals. We believe audiences are not moving away from emotional engagement, but toward formats that fit more naturally into everyday life. KadhaiShorts is built around that behavioural shift while retaining strong emotional continuity and culturally rooted narratives.”

As part of its long-term micro drama ecosystem vision, KadhaiShorts has introduced KadhaiClub, the industry-first platform designed to democratize access to opportunities, learning and participation within the emerging mobile-only entertainment category. The initiative already has over 12,000 members and focuses on enabling aspiring writers, actors, editors, cinematographers, directors, and creators to understand and participate in next-generation vertical entertainment formats. KadhaiClub also aims to bridge the gap between traditional horizontal filmmaking practices and the evolving grammar of vertical entertainment storytelling.

By March 2027, KadhaiShorts aims to onboard over 200 professionals and create more than 4,000 opportunities across creative and production functions. The platform is also expected to support over 10,000 indirect livelihoods across allied entertainment and service sectors.

In addition to platform monetization through flexible micro-transactions, KadhaiShorts is also exploring storytelling-led brand integration models where brands become part of narrative environments rather than interrupting audience experience through conventional advertising.

கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) –

 மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்

தெளிவான திட்டமிடலுடன் ஒரே வருடத்தில் 100க்கும் மேற்பட்ட ஒரிஜினல் வெர்டிக்கல் மைக்ரோ டிராமாக்கள் வெளியிட்டு, அதை மக்கள் வெறும் ரூ. 20 செலுத்தி கண்டுகளிக்கும் வசதியை ஏற்படுத்துவது மற்றும் இந்தப் புதிய தலைமுறைக் கதையாடலுக்கான எழுத்துத் திறனையும், வெர்டிக்கலுக்கான பிரத்யேக தொழில்நுட்ப வல்லமையையும் வளர்க்கும் “கதை கிளப்”, என வேகமாக வளர்ந்து வரும் மொபைல் பொழுதுபோக்கு துறையில் நுழைகிறது கதைஷார்ட்ஸ்

சென்னை, மே 28, 2026: வேகமாக மாறிவரும் பொழுதுபோக்குத் தேவைகளை கருத்தில் கொண்டு, கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) எனும் தமிழ் நாட்டின் முதல் – ஒரிஜினல் வெர்டிக்கல் மைக்ரோ-டிராமா தளத்தை  கரண் தயாநிதி மாறன் இன்று அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் அடுத்த தலைமுறைக்கான மொபைல் பொழுதுபோக்கு உலகில் தனது புதிய பயணத்தை அவர் தொடங்கியுள்ளார்.

குட்டி சீரிஸ் என்ற பெயரில் மொபைல் பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு நிமிட சினிமா தரத்திலான தொழில்நுட்ப வல்லமையுடன் உருவான எபிசோடுகளைக் கொண்ட கதைகளை கதைஷாட்ஸ் அறிமுகப்படுத்துகிறது. தொடக்கத்தில் தமிழில் மட்டும் கவனம் செலுத்தவுள்ள கதை ஷார்ட்ஸ், அடுத்த ஒரு வருடத்தில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மொழிகளிலும் தனது சேவைகளை அந்த நிலத்தின் தன்மையுடன் உருவாகும் ஒரிஜினல் படைப்புகளுடன் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. 

உள்ளூர் வட்டார வழக்கு, கலாச்சார இயல்பு, நுட்பமான உணர்வுகள் மற்றும் அன்றாட வாழ்க்கை அனுபவங்களை மையமாகக் கொண்ட கதைகளின் மூலம் கட்டமைக்கப்பட்ட மைக்ரோ டிராமாக்கள் வாயிலாக பொழுதுபோக்குத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதே கதைஷார்ட்ஸின் நோக்கமாகும். முதல் ஆண்டிலேயே 100-க்கும் மேற்பட்ட ஒரிஜினல் மைக்ரோ டிராமாக்களை உருவாக்க இந்த தளம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து பேசிய கதைஷார்ட்ஸ் நிறுவனர் கரண் தயாநிதி மாறன், “பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகள் மாறிவரும் சூழ்நிலையில், அவர்களது விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் மைக்ரோ டிராமாவுக்கான பிரத்யேக தளத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறோம்.

கதைஷார்ட்ஸ் இந்த துறையில் முன்னணி வகிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு,” என்றார்.

கதைஷார்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சபரிஷ் வெங்கட் கூறுகையில், “சிறந்த தனிப்பட்ட பொழுதுபோக்கு அனுபவங்களுக்கான அதிகரித்து வரும் தேவையை மையமாகக் கொண்டு இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. உணர்ச்சிப்பூர்வமான, கலாச்சார ஆழமிக்க கதைகளை சிறந்த தொழில்நுட்பத்தில் வழங்குவதே எங்கள் நோக்கம்,” என்று தெரிவித்தார்.

பார்வையாளர்கள் வெறும் இருபது ரூபாய் செலுத்தி கதைஷார்ட்ஸ்  செயலியில் மைக்ரோ டிராமாக்களை கண்டு களிக்கலாம். வெர்டிக்கல் வடிவ பொழுதுபோக்கு துறைக்கான அடுத்த தலைமுறை திறமைகளை உருவாக்கும் நோக்கில், கதைகிளப் எனும் புதிய முன்னெடுப்பையும் கதைஷார்ட்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

12,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஏற்கனவே இணைந்துள்ள நிலையில், எழுத்தாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், படத்தொகுப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் படைப்பாளிகள் உள்ளிட்டோருக்கு மைக்ரோ-டிராமா சூழலியல் வாய்ப்புகளை வழங்குவதற்காக இது தொடங்கப்பட்டுள்ளது.

2027 மார்ச் மாதத்திற்குள் 4,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குவது கதைஷார்ட்ஸின் இலக்காகும். மேலும், கதைசொல்லலுடன் இயல்பாக இணையும் பிராண்ட் இன்டக்ரேஷன் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகளுக்கான வணிக மேம்பாட்டுக்கான மார்க்கெட்டிங் மாடல்களையும் செயல்படுத்த இத்தளம் திட்டமிட்டுள்ளது.

Warrant Web Series Review

0

Warrant charges through its eight‑episode run as a gritty, socially conscious Tamil crime thriller that slowly but surely finds its rhythm and leaves a strong impression by the final stretch. The series orbits Prasanth Pandiyaraj’s “Kottai,” a timid, looked‑down‑on constable stuck doing the dirtiest, most thankless job at the station—warrant duty—only to harden into a far more ruthless, morally complicated officer as the story unfolds. What starts as a slow‑burn character study gradually sharpens into a tense, grounded procedural that doesn’t rely on big hero speeches but on the quiet corrosion of a man who keeps getting pushed beyond his limits by the system, his seniors, and the people he’s supposed to serve.

The writing takes its time to establish the constable’s world: the ridicule, the humiliating failures, and the painful effort to prove himself, and that patient build‑up makes his later transformation feel earned rather than abrupt. When the series finally leans into its more intense episodes, the storytelling, tension, and performances all click, with the climax packing enough emotional and moral weight to make the earlier sluggish stretches feel worthwhile in hindsight. The tone is raw and realistic, often foregrounding the contradictions inside the police force and the way small, everyday abuses of power slowly reshape a person’s conscience.

Warrant isn’t consistently explosive in every episode, but as a character‑driven, socially aware police drama it stands out for its restraint, believable performances, and the way it trusts viewers to sit with discomfort rather than rushing to resolution. For fans of Tamil crime thrillers that invest in psychology as much as in action, it’s a solid, absorbing watch that finishes stronger than it starts—landing neatly in the 4/5 range as a thoughtful, watchable addition to the Tamil OTT lineup on Zee Tamil OTT.

‘Warrant’

A Tamil ZEE5 Originals

Cast
Prasanth Pandiyaraj
Balaji Sakthivel
Kaali Venkat
Arul Doss
Namritha MV
Arul Jothi
Chaya Devi
Hello Kandasamy
Meena
Kousalya
Vaiyapuri

Crew
Created By – Prasanth Pandiyaraj
Story, Screenplay & Written By – Prasanth Pandiyaraj & Vignesh Natarajan
Directed By – Vignesh Natarajan
Produced By – Prasanth Pandiyaraj, P Vishal, P M Aadheesvar
Production Houses – Sivan Pictures, S Studios
Background Score – Sam CS
Cinematographer – Ashok Kumar
Editor – R Ramar

A grand tribute event was organized by the students of Chennais Amirta International Institute of Hotel Management to honour Hon’ble Chief Minister Shri. S. Joseph Vijay, in the presence of actor Mr. Sanjeev a close friend of the Chief Minister and Mr. R. Boominaathan -Chairman of Chennais Amirta Group of Institutions.

0

The event was held at the Chennais Amirta International Aviation College, Royapettah, Chennai, where students showcased the inspiring journey of Shri. S. Joseph Vijay — from his film career to his political journey — through artistic sculptures carved entirely from vegetables and fruits.

The exhibition was inaugurated by actor Mr. Sanjeev, and Mr. R. Boominaathan ,Chairman of Chennais Amirta Group of Institutions. A total of 69 sculptures were created, representing milestones from Vijay’s debut film Naalaiya Theerpu to Jananayagan. The sculptures were meticulously crafted by the students of Chennais Amirta International Institute of Hotel Management over a period of 10 days, reflecting exceptional creativity, dedication, and teamwork.

Actor Mr. Sanjeev, while visiting the exhibition, highly appreciated the students for their remarkable artistic talent and hard work. He also congratulated Mr. Boominaathan for continuously creating platforms that encourage and showcase student talent while contributing significantly to skill-based education.

Speaking at the event, Mr. Boominaathan stated that Chennais Amirta Group of Institutions has been making notable contributions in the fields of hotel management, aviation, and allied sectors by preparing students for successful careers in leading national and international organizations. He added that the institution takes pride in organizing such innovative programs that highlight students’ creativity and practical skills.

The event not only celebrated the achievements and journey of Hon’ble Chief Minister Shri. S. Joseph Vijay but also served as a proud platform to showcase the extraordinary talents of Chennais Amirta students.

சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்களின் கைவண்ணத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை கௌரவப்படுத்தும் பிரமாண்ட நிகழ்ச்சி நடிகர் சஞ்சீவ் மற்றும் சென்னைஸ் அமிர்தா கல்விக்குழும நிறுவனர் பூமிநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள, சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் பயிற்சி மையத்தில், முதலமைச்சர் விஜய்யின் திரைப்பயணம் முதல் அரசியல் பயணம் வரையிலான நிகழ்வுகளை சித்தரிக்கும் வகையில், சென்னைஸ் அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் காய்கறி மற்றும் பழங்களில் திரு. ச. ஜோசப் விஜய்யின் உருவங்களை சிற்பமாக செதுக்கி அசத்தியுள்ளனர்.

இந்நிகழ்ச்சி சென்னைஸ் அமிர்தா கல்விக்குழுமங்களின் நிறுவன தலைவர் திரு. பூமிநாதன் மற்றும் முதலமைச்சரின் நண்பரும் நடிகருமான சஞ்சீவ் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு. திரு. ச.ஜோசப் விஜய் அவர்களை கெளரவிக்கும் விதமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அவர் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமான நாளைய தீர்ப்பு திரைப்படம் முதல் ஜனநாயகன் திரைப்படம் வரையிலான 69 சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த சிற்பங்களை சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் 10 நாட்களாக கடின உழைப்பில் உருவாக்கி உள்ளனர். இந்த சிற்பங்களைப் பார்வையிட்டு ரசித்த, நடிகர் சஞ்சீவ் இவற்றை உருவாக்கிய மாணவர்களை வெகுவாக பாராட்டினார். மேலும் பல்வேறு முயற்சிகள் மூலம் மாணவர்களின் எதிர்காலத்திற்கு வலுவான அடித்தளம் அமைத்து கல்விச்சேவை வழங்கிவரும் சென்னைஸ் அமிர்தா கல்விக்குழுமங்களின் நிறுவனர் திரு. பூமிநாதன் அவர்களுக்கும் வாழ்த்துகள் தெரிவித்தார்.

சென்னைஸ் அமிர்தா கல்விக்குழும நிறுவனர் திரு. பூமிநாதன் உரையாற்றுகையில், ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் ஏவியேஷன் துறையில் மிகச்சிறப்பான பங்களிப்பை வழங்கி, சர்வதேச அளவில் பெருநிறுவனங்களில் மாணவர்களை கொண்டு சேர்ப்பதில் தங்கள் நிறுவனம் சமரசம் இன்றி செயல்படுவதாக தெரிவித்தார். மேலும் இது போன்று மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தி கவனம் பெறச் செய்யும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவதில் பெருமை கொள்வதாகவும் அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சி முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை பெருமைப் படுத்தியதோடு, சென்னைஸ் அமிர்தா மாணவர்களின் திறமைகளையும் வெளிப்படுத்தியது.

Director Seenu Ramasamy Makes a Special Appeal to Tamil Nadu Chief Minister Joseph Vijay!

0

Writer and filmmaker Seenu Ramasamy, known for his contributions across multiple creative domains, recently released a video making a heartfelt appeal to Chief Minister Vijay regarding his latest book, “Cinemavin Aanma’ (Cinema Appreciation Education and a Few More Essays), published by Sandhiya Publications.

In the video, he states, “I have written a book titled “Cinemavin Aanma” (Cinema Appreciation Education and a Few More Essays), published by Sandhiya Publications. When I speak about cinema appreciation education, I mean this: in schools, children are taught various disciplines such as sports and painting under co-curricular studies… Yet, not everyone grows up to become athletes or artists. We already have systems in place to introduce children to fine arts, but there are no structured classes to help them develop a meaningful understanding of cinema, something that is deeply embedded in the cultural fabric of our society.

The children of today’s contemporary generation of children spend most of their time with mobile phones. It is our responsibility to help them identify and understand what meaningful cinema truly is. In my deep conviction, cinema appreciation, I believe cinema appreciation is essential as ‘Nutritious Meal’ (Sathunavu Thittam) for children. Parents, teachers, and society collectively have a responsibility to introduce children to quality cinema from an early age and nurture both appreciation and understanding through meaningful films.

Through this book, I have screened films for children from diverse backgrounds and documented my experiences. If you ask whether this is a book meant for children, the answer is no. Rather, it is a guide on how cinema appreciation education can be introduced to students from Classes 1 to 5.

This is a book for primary school teachers, cinema students, young people who love cinema, and truly, a book that deserves a place in every household. I am not saying this simply because I wrote it, I have been engaged in this effort for nearly 15 years.

Just as we teach children how to read, write, paint, and play, I personally feel that it’s a need of hour to impart a knowledge on what kind of films they should watch. I sincerely hope this book reaches everyone. I would like to place a request before the newly formed Joseph Vijay government to bring cinema appreciation education to schools across Tamil Nadu. Just as schools have dedicated laboratories, I request the establishment of home theatre facilities in schools from primary level to Class 12, where films that enrich students’ understanding, taste, and perspective can be screened. Cinema must be embraced as a form of education. The Soul of Cinema is a book that everyone should read.”

டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் சார்பில்திரு கிளாடி ஜெராடு அவர்கள் தயாரிப்பில், “உறவுகள்” என்ற தலைப்பில் “உயிரிணையே” இசைஆல்பம் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது

0

இயக்குனர், பாடலாசிரியர் திரு கங்கை அமரன் இசையமைப்பாளர் சதா சுதர்சனம், கண்ணன்,
தவசீலிதன்ராஜ், சகோ கணேசன், தயாரிப்பாளர் ரவிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்…

இவ்விழாவில்
திரு கங்கை அமரன் அவர்கள் பேசியதாவது…

தயாரிப்பாளர் கிளாடி ஜெராடு அவர்களைப் பற்றி பேசும் பொழுது…அவரின் நல்ல எண்ணம் தான் இப்படத்தின் தொகுப்பு என்றும்… அருமையான சமூக உறவுகளை..ஏஐ தொழில்நுட்பத்துடன் நடிகர்களை நடிக்க வைத்து ஒரு கதையினை கொடுத்துள்ளார்..எங்கள் அண்ணா இசைஞானி யின் வாசிப்பில் தான் நாங்கள் பல பேர் வளர்ந்திருக்கோம்…எங்கள் குழந்தைகளை அண்ணனிடம் தான் சாரீரம் கற்று கொள்ள அனுப்புவோம்… அப்படிப்பட்ட குருக்களு டன் வளர்ந்த பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது.. இந்த காலத்து குழந்தைகளுக்கு கிடைத்துள்ளதா?இல்லையா? என்பது தெரியவில்லை… முன்பெல்லாம் ஒரு பாடலை தொடரலை யாக பாடுவோம்… இப்பொழுது ஒவ்வொரு வரிகளாக பாடுகின்றோம்..AI இல் பீட் (feed) பண்ணி பாடுகின்றோம்… அதற்கு நாம் எப்படி நம்மளை பெருமைபடுத்தி கொள்வது?…உண்மை யை சொல்ல வேண்டுமென்றால் Ai தொழில்நுட்பம் நம்மளை கெடுத்துக் கொண்டிருக்கின்றது என்பதை நான் உறுதியாக சொல்கிறேன். அதை நம்பி நம் வேலை செய்தோமானால் பிற்காலத்தில் மூளை வேலை செய்யாது… ஒரு தீம் ஐ AI இல் கொடு த்துவிட்டால், அதுவே பாட்டெழுதிவிடுகிறது…. இதில் எப்படி நம்ம பேரை போட்டுக் கொள்வது.. எதற்கு சொல்கிறேன் என்றால் வருங்கால குழந்தைகள் தன்னால் சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும், எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.. வருங்கால குழந்தைகள் தன்னிடம் இருக்கின்ற சுயரூபங்களை வெளியில் கொண்டு வர வேண்டும் என்பது என் மனமார்ந்த ஆசை.. 50 வருட வாழ்க்கையை இசைத்துறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எங்களை நேசித்து அழைத்துச் செல்லுங்கள்… கனவோ நினைவோ இசையே எங்கள் மூச்சு… என்று கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்

’ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

0

நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்‌ஷன்ஸ் & ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

நடிகர் பார்த்திபன் பேசியதாவது, “‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்ற அழகான வசனமே இந்தப் படம் எப்படியானது என்பதை உணர்த்துகிறது. எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாதது அன்பு. நாங்கள் அனைவரும் இங்கு வந்திருப்பது மீரா கதிரவன் மீது வைத்திருக்கும் அன்பு தான். நல்ல படங்களை நல்ல இடத்திற்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று ஆர்வமுடையவர் இயக்குநர் ராம். அவர்தான் ‘ஹபீபி’ திரைப்படத்தை என்னை கட்டாயம் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். காசு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி நல்ல கதைகளை கொடுக்க வேண்டும் என்று யோசிக்கும் வெகு சிலரில் மீரா கதிரவனும் ஒருவர். மிக இயல்பாக படமெடுப்பவர். இன்று தயாரிப்பாளர் ராஜன் தற்கொலை செய்து கொண்டார் என்பதை கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன். தயாரிப்பாளர் தேனப்பனிடம் கேட்டபோது அவருக்கு வசதி வாய்ப்புகள் குறைவில்லை. ஆனால், தனிமையில் இருப்பார் என்று சொன்னார். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேலே நம்மிடம் அன்பாக பேச ஒருவர் தேவை. அப்படி நம் எல்லோரிடமும் அன்பு செலுத்தும் படமாக ‘ஹபீபி’ இருக்கும். தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். எனக்கு ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் கிடைக்க காரணமானவர் கஸ்தூரி ராஜா. இயல்பான நடிப்பை இந்த படத்தில் கொடுத்திருக்கிறார். இந்த தருணத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன். தனி மனிதருடைய நம்பிக்கை தான் ஜெயித்து இந்த பதவியில் அவரை அமர வைத்திருக்கிறது. நிச்ச்யம் சினிமாவுக்கு அவர் நல்லது செய்வார். மீரா கதிரவனுக்கும் படத்திற்கும் வாழ்த்துக்கள் “.

நடிகர் சமுத்திரக்கனி, ” இப்படியான படம் எடுத்து வெளிக்கொண்டு வருவது என்பது சாதாரண விஷயம் அல்ல. இத்தனை பேர் இங்கு கூடி இருப்பது மீரா கதிரவனுக்காக தான். இந்த படம் அவருக்கு வெற்றி தேடி தரட்டும். படம் நிச்சயம் உணர்வுபூர்வமானதாக இருக்கும். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் அமைந்திருக்கிறது. நிச்சயமாக பாருங்கள்”.

இயக்குநர் மகிழ் திருமேனி, “‘ஹபீபி’ திரைப்படத்தை நான் பார்த்து விட்டேன். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். இன்றைய ட்ரெண்ட், சமூக சூழ்நிலைக்கு ஏற்ப என திரைத்துறையில் காலத்திற்கு ஏற்றவாறு ஓட வேண்டிய கட்டாயமும் நெருக்கடியும் உள்ளது. ஆனால், வேறு சில படங்கள் உள்ளது. அவை நம் வாழ்க்கைக்கு மிக நெருக்கமானவை. அப்படியான படம் தான் ‘ஹபீபி’. இதை என் நண்பர் மீரா கதிரவன் எழுதியிருக்கிறார் என்பது பெருமை. வாழ்வாதாரத்திற்காக நாடு விட்டு நாடு செல்லும் ஆண்கள், அவர்களை பிரிந்து தவிக்கும் குடும்பத்தினர், இயந்திரமயமாக்கல் காரணமாக தொழில் பாதிக்கும் கைத்தறி நெசவாளர்கள், கூட்டுக் குடும்ப சிதைவு என பல விஷயங்கள் இதில் பேசப்பட்டு இருக்கிறது. தமிழ் சமூகத்தினருக்கான படம் இது. ஒரு காலக்கட்டத்தை, வாழ்வியலை, பண்பாட்டை இந்தப் படம் ஆவணப்படுத்தியிருக்கிறது. தன் சார்ந்த முடிவுகளை தானே முடிவெடுக்கும் ஹிஜாப் அணிந்த தற்சார்பு பெண்ணின் கதாபாத்திரம் இந்தப் படத்தில் உண்டு. மீரா கதிரவன், தாமிரா, லெனின் பாரதி போன்றோர் தொடர்ந்து படங்கள் எடுக்கும் வாய்ப்பை தமிழ் சினிமா உருவாக்கி தர வேண்டும் கஸ்தூரி ராஜா அவர்களிடம் நான் உதவியாளராக பணியாற்றேன். அவருடன் பணிபுரிந்த காலம் என் வாழ்வின் பொக்கிஷம். ராகுல் இந்த படத்தை வெளியிடுவது இதன் மிகப்பெரிய பலம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

இயக்குநர் கணேஷ் கே பாபு, ” முதல் படத்திற்கு பிறகு இரண்டாவது படம் இயக்கும் நம் மீது அதிக அழுத்தம் இருக்கும். அப்படி இருக்கும் பொழுது இந்த படத்தின் டிரைய்லர் பார்க்கும் பொழுது வியப்பாக இருந்தது. நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்று தம்மை வருத்திக் கொண்டிருக்கும் இயக்குநர்கள் இருக்கும் இந்த மேடையில் நானும் இருப்பது மகிழ்ச்சி. இன்றைய சூழலில் ‘ஹபீபி’ திரைப்படம் வெளியாக வேண்டிய அவசியம் உள்ளது. இஸ்லாமிய சமூகத்திற்கான படங்கள் தமிழில் அதிகம் வருவதில்லை. இந்தப் படம் பார்க்கும்போது தொடர்புபடுத்தி கொள்ள முடிகிறது. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

இயக்குநர் ஹரிஹரன் ராம், “நான் பார்த்து ரசித்த இயக்குநர்களுடன் இந்த மேடையில் இருப்பது சந்தோஷம். மாளவிகாவுக்கு உண்மையிலேயே இதுதான் அறிமுகப்படம். மீரா கதிரவன் படங்களுக்கு நான் ரசிகன். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்”.

இயக்குநர் தினகரன் சிவலிங்கம், “மீரா கதிரவன் தோழருக்கு வாழ்த்துக்கள். என் குடும்பமும் கைத்தறி தொழில் சம்பந்தப்பட்டது தான். அந்த வாழ்க்கையை இந்த படம் நுணுக்கமாக காட்டி இருக்கிறது. அடுத்தடுத்து வரும் இயக்குநர்கள் தங்கள் வாழ்க்கையை, பின்புலத்தை எந்த மனத்தடையும் இல்லாமல் காட்டுவதற்கு இந்த படம் உத்வேகம் கொடுத்திருக்கிறது. கமர்ஷியலாகவும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும். மிக முக்கியமான படம் இது”.

இயக்குநர் அவிநாஷ், ” இந்தப் படத்தை ஸ்பெஷல் ஷோவில் பார்த்த பொழுது ஈரானிய படத்தில் தமிழ் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். என்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. எந்த பின்புலமும் இல்லாமல் புதியவர்களை இந்த படத்தில் இயக்குநர் நடிக்க வைத்திருப்பது சிறப்பு. நிச்சயம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்”.

இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி, “தமிழில் இஸ்லாமிய சகோதரர்களை பற்றிய இந்த படம் சிறப்பாக வந்துள்ளது. திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாவது முக்கியம். இயக்குநர் மீரா கதிரவனுக்கும் படக்கிழுவினருக்கும் வாழ்த்துக்கள்”.

தயாரிப்பாளர் தேனப்பன், “இந்த படம் பார்த்த அனைவரும் சிறப்பாக வந்துள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள். நிச்சயம் அந்த நம்பிக்கையை இயக்குநர் மீரா கதிரவன் காப்பாற்றுவார். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்”.

இயக்குநர் சேரன், “இந்த படம் பார்த்து விட்டேன். இதில் நானும் ஒரு கதாபாத்திரமாக தான் உணர்ந்தேன். இப்படியான நல்ல படம் எடுக்க தான் ஒவ்வொரு இயக்குநரும் சென்னையை நோக்கி வரவேண்டும். படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் சிறப்பாக உழைத்திருக்கும் இயக்குநர் மீரா கதிரவனுக்கு வாழ்த்துக்கள். இந்தப் படமே ஒரு நாவல் போல உள்ளது. அடுத்த காட்சி என்ன என்பதை யாராலும் கணிக்க முடியாது. வாழ்வியலை, சமூக மாற்றத்தை காட்டியிருக்கும் இந்த மாதிரியான திரைப்படங்கள் தான் நம்மை ஒழுங்குபடுத்தும், உணர வைக்கும். தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். விமர்சகர்கள் அனைவரும் நியாயமான விமர்சனம் கொடுக்க வேண்டும். வாழ்த்துக்கள்”.

இயக்குநர் ஜகாரியா முகமது, “நிறைய தமிழ் படங்களை நான் பார்த்திருக்கிறேன். இது போன்ற படங்கள் வருவது மகிழ்ச்சி. நான் பார்த்து வியந்த பல இயக்குநர்களோடு இந்த மேடையில் இருப்பது பெருமையான தருணம். கேரள திரையரங்குகளிலும் இந்த படம் வெளியாக வேண்டும். நிச்சயமாக எங்கள் ஆதரவு உண்டு. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்”.

இயக்குநர் சுசீந்திரன், ” எனக்கு இஸ்லாமிய நண்பர்கள் கிடையாது. ‘ஹபீபி’ படத்தில் காட்டியுள்ள வாழ்வியலை பார்க்கும் பொழுது பிரம்மிப்பாக இருந்தது. மீரா கதிரவனுக்கும், கஸ்தூரிராஜா அவர்களுக்கும் படக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள். அனைத்து சமூகத்தினருக்கும் ஏற்ற படமாக இது வந்துள்ளது. வாழ்த்துக்கள்”.

இயக்குநர் லீனா மணிமேகலை, “மீரா கதிரவனின் பலவருட உழைப்பு தற்போது நனவாவதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படம் வீரியமான பண்பாட்டு அசைவு. இது தமிழ் சினிமாவில் நடக்க பல வருடங்கள் ஆகி இருக்கிறது. இது ஒரு இஸ்லாமிய படம் என்பதை விட மூன்று தலைமுறை பெண்களை பற்றிய படம் என சொல்லலாம். அதில் எனக்கு மனநிறைவு. பொருளாதார ரீதியாகவும் இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்”.

இயக்குநர் வெற்றிமாறன், “‘ஹபீபி’ எனக்கும் முக்கியமான படம். இஸ்லாமிய சமூகத்தினரின் வாழ்வியல், கனவுகள், இழப்புகள், வலிகளை பேசுகிறது. பீரியட் படமாக இருந்தாலும் இப்போதும் பொருத்தி பார்க்க முடிகிறது. அனைத்து நடிகர்களும் கதையில் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்”.

நடிகர் நாசர், “‘ஹபீபி’ படம் பார்த்த பாதிப்பில் இருந்து இன்னும் வெளிவரவில்லை. எல்லோருக்கும் பிடித்த கதையாக இது இருக்கும்”.

இயக்குநர் துரை, “இந்த படத்திற்காக இத்தனை பேர் ஒன்று கூடி இருப்பது மகிழ்ச்சி. இஸ்லாமியர்களுடைய வாழ்க்கையை இத்தனை நுணுக்கமாக எந்த படமும் காட்டியது இல்லை. இந்த படத்தை நல்லபடியாக கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. சாம் சி எஸ் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்”.

தவெக எம்எல்ஏ முஸ்தபா, “இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். 2007 ஆம் ஆண்டிற்கு பிறகு நான் படங்கள் பார்க்கவில்லை. ஆனால், ‘ஹபீபி’ நிச்சயம் பார்ப்பேன். முதல்வர் விஜய்யும் நிச்சயம் பார்ப்பார்”.

பாடகர் சத்யன், “இயக்குநர் மீரா கதிரவனின் அவள் பெயர் தமிழரசி படம் எனக்கு மிகவும் பிடிக்கும். படத்தின் போஸ்டரே படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்பதை சொல்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்”.

இயக்குநர் பாண்டிராஜ், “நானும் மீராவும் தங்கர்பச்சான் சாரிடம் வேலை பார்த்தோம். அதனால், நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இந்தப் படம் கமர்ஷியலாகவும் வெற்றி பெற வேண்டும்”.

இயக்குநர் அமீர், ” பொதுவாக இஸ்லாமிய சமூகம் திரைப்படங்களை ஒதுக்கி வைக்கும். அப்படியான ஒரு சமூகத்தை பற்றிய படமாக இது வந்திருக்கிறது என்பதை தாண்டி அந்த சமூகத்தை சேர்ந்தவர்களும் நிறைய பேர் இன்று இந்த விழாவில் பங்கெடுத்திருக்கிறார்கள். ஹபீபி என்றால் அன்பு, காதல் என்று அர்த்தம். அப்படியான வாழ்க்கையை வாழ்ந்தவர்களால்தான் இந்தப் படத்தை எடுக்க முடியும். இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த படம் என இதை சுருக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. தமிழ் சமூகம் எடுக்க மறந்த ஒரு சமூகத்தை சேர்ந்த படம். இந்திய அரசியலில் இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் தான். ‘வாழை’ திரைப்படத்திற்கு அடுது நான் இத்தனை இயக்குநர்களை சந்தித்திருப்பது இங்குதான். இஸ்லாமிய சமூகத்திற்கான படம் இது என்பதைத் தாண்டி இது தமிழ் சமூகத்திற்கான படம். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் “.

இயக்குநர் மிஷ்கின், ” இது இஸ்லாமியர்கள் படம் என்று சுருக்குவதில் எனக்கு விருப்பம் இல்லை. எது நல்ல படம், எது கமர்ஷியல் படம், எது பார்க்க வேண்டிய படம் என்ற கேள்வி எனக்கு உண்டு. கருப்பு படம் இப்போது வெளியாகி ஹிட் ஆனது. மகிழ்ச்சி! ‘ஹபீபி’ ஹிட் ஆக வேண்டிய படம். நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல காதல் படம் பார்த்து அழுதேன். இந்தப் படத்தை மீரா கதிரவன் தனது தாய் தந்தைக்காக எடுத்திருக்கிறார். யார் என்று தெரியாதவனை நேசிப்பது தான் கருணை. அதை இந்த படம் சொல்லிக் கொடுத்தது. கஸ்தூரி ராஜா சார் தனுஷைவிட மூன்று மடங்கு நன்றாக நடித்திருக்கிறார். தேர்ந்தெடுத்து பார்க்க வேண்டிய படம் இது. அனைத்து கடவுள்களும் இந்தப் படத்தை லேசாக்கி தரட்டும்”.

இயக்குநர் கஸ்தூரி ராஜா, “மீரா கதிரவன் மீது எனக்கு அளவு கடந்த அன்பு உண்டு. அவரை போல ஒரு இயக்குநரை உழைப்பாளியை படைப்பாளியை பார்த்து விடலாம். ஆனால், அவரை போன்ற ஒரு மனிதரை பார்ப்பது அரிது. நான் இதுவரை நடித்ததில்லை. ஆனால் என் மீது மீரா கதிரவன் நம்பிக்கை வைத்தார். நான் ஆயிரம் சதவீதம் இந்து. அப்படி இருந்த என்னை இஸ்லாமியராக மீரா கதிரவன் கதை மாற்றியது. இந்த நிகழ்வு எனக்கு மறுபிறவி போலதான். இந்த படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. ஏனெனில் என்னை நான் இன்னும் ஒரு நடிகனாக அங்கீகரிக்கவில்லை. அதனால் திரையரங்குகளுக்கு சென்று மக்களோடு மக்களாக தான் பார்க்க வேண்டும். இந்த படம் மீரா கதிரவனின் போராட்டத்திற்கு நல்ல விளைச்சல் கொடுக்கும். என் கரியாரில் நான் உயிருள்ளவரை சினிமாவில் இருப்பேன் என்ற நம்பிக்கையை இந்தப் படம் கொடுத்துள்ளது. மண்ணில் பிறந்த அனைவருக்கும் மனிதன் என்ற பெயரே உண்மை. மற்றதெல்லாம் பொய்”.

இயக்குநர் ரஞ்சித், “நம் சமூகத்திற்கு பல முகங்கள் உண்டு. ஆனால், யாரைப் பற்றியும் நம் சரியாக புரிந்து கொள்வதில்லை. இங்கு பெரும்பான்மையாக இருப்பவர்களைப் பற்றி நிறைய படங்கள் வந்திருக்கிறது. இலக்கியங்கள் மூலமாகவும் மலையாள சினிமா மூலமாகவும் இஸ்லாமியர்களின் வாழ்க்கை பற்றி ஓரளவுக்கு தெரிந்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் இது முக்கியமான படம். தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்”.

நடிகர் ஈஷா, ” விழாவிற்கு வந்திருக்கும் அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி. வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநர் மீரா கதிரவனுக்கும் நன்றி. என் அப்பா மீதான மரியாதையை கஸ்தூரிராஜா சார் மீதும் வைத்திருக்கிறேன். படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை”.

நடிகை மாளவிகா மனோஜ், “தமிழில் எனக்கு இதுதான் முதல் படம். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

இசையமைப்பாளர் சாம் சி எஸ், “வன்முறை நிறைந்த படங்களுக்கு இடையில் மனதை மயிலிறகால் வருடும் இந்த கதைக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. நானும் மீராவும் நிறைய சண்டை போட்டிருக்கிறோம். ஆனால், இப்போது இருவரும் நல்ல நண்பர்கள். இந்தப் படத்துக்கு பணிபுரிய வாய்ப்பு கொடுத்ததற்கு மீரா கதிரவனுக்கு நன்றி. படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். கஸ்தூரி ராஜாவின் நடிப்பிறகு பெரிய விருது காத்திருக்கிறது”

இயக்குநர் ராம், “பல இஸ்லாமிய பெயர்களை ஒரே தமிழ் படத்தில் நீங்கள் பார்க்க இருப்பது இதுதான் முதல்முறை என நினைக்கிறேன். பச்சைத் தாயத்து இல்லாத, கசாப்பு கடைக்க போகாத, பிரியாணி செய்வது போல காட்டாத ஒரு முஸ்லிம் படம் இது. இஸ்லாமிய சமூகத்தினரை பற்றி நாம் கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பத்தை எல்லாம் மாற்றக்கூடிய படம்தான் இது. தமிழில் வெளியாக இருக்கும் முதல் அசல் தமிழ் இஸ்லாமிய சினிமா இது. படம் வெற்றியடைய துவா செய்கிறேன்”

இயக்குநர் மீரா கதிரவன், “படத்தில் உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. படத்தில் கஸ்தூரி ராஜா சார் நடித்திருக்கிறார் என்று சொன்னதும் பலரும் கேட்டது இஸ்லாமியர்களின் என்றால் சிவப்பாக தானே இருப்பார்கள் என்று. இதுபோன்ற பல பிம்பங்களை இந்த படம் மாற்றும். இந்தப் படத்தை நான் இயக்கவில்லை. அதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறேன். அதைப் போல இந்த படத்திற்கு இன்னொருவரும் முக்கியமானவர். சினிமாவிற்கு வந்து என் உண்மையான பெயரை மாற்றி மீரா கதிரவன் என வைத்தபோது பல கேள்விகள் எழுந்தது. என் தாயின் பெயர் தான் மீரா. தமிழ் அடையாளம் வேண்டும் என்பதால் கதிரவன் என வைத்தேன். அக்ரஹாரத்தில் ஐயங்கார் ஒருவர் முகமது யூசுப் கதைக்காக வீடு கொடுத்தார். மதம், சாதியை கடந்து அன்பும் மனிதமும் தான் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. அப்படியான அன்பை பேசக்கூடிய படம்தான் ‘ஹபீபி’. இந்தப் படம்தான் என்னை இயக்கியது. கஸ்தூரி ராஜா சார் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படம் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்”.

- Advertisement -

Recent Posts