- Advertisement -
Home Blog Page 80

ஜியோ ஹாட்ஸ்டார் சவுத் அன்பாண்ட் நிகழ்வில் திரு.கமல் ஹாசன் அவர்கள் பேசியது..

0

வணக்கம்,

இந்த மேடையை நமது தமிழக துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் திரு எம். பி. சாமிநாதன் ஆகியோருடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். அத்துடன் ஜியோ ஸ்டாரின் பொழுதுபோக்கு பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு கெவின் வாஸ், ஜியோ ஸ்டாரின் பொழுதுபோக்கு பிரிவின் (தெற்கு) தலைவர் திரு. கிருஷ்ணன் குட்டி, ஜியோ ஸ்டாரின் மார்க்கெட்டிங் மற்றும் SVOD தலைவர் திரு சுஷாந்த் ஸ்ரீ ராம் , ஜியோ ஸ்டார் தமிழ் – நிர்வாக துணைத்தலைவர் திரு ஆர். பாலச்சந்திரன் மற்றும் தொழில்துறையின் புகழ்பெற்ற உறுப்பினர்களுக்கும், என்னுடைய நண்பர்களான மோகன்லால் – நாகார்ஜுனா – விஜய் சேதுபதி – ஆகியோருக்கும் எனது வணக்கங்கள்.‌

இந்தியாவின் ஊடக மற்றும் பொழுதுபோக்கு துறை சாதாரணமாக வளர்ச்சி அடையவில்லை. அது மாற்றத்தை கண்டு கொண்டிருக்கும் ஒரு முக்கியமான தருணத்தில் நாம் இங்கு ஒன்று கூடி இருக்கிறோம். முதல்முறையாக இந்த மாற்றம் ஒரு சாதனத்தினாலோ அல்லது வடிவமைப்பினாலோ ஏற்பட்டதல்ல. மாறாக இந்த மாற்றம் பார்வையாளர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இன்று, கதைகள்- உண்மையிலேயே திரை -அஞ்ஞானவாதமாக திகழ்கிறது. அவை பார்வையாளர்களுடன் பயணிக்கின்றன. அதனால் பார்வையாளர்களே தளமாகிவிட்டனர். இது நிகழும் போது ஊடகத்திற்கும், செய்திக்கும் இடையிலான உறவு என்றென்றும் மாற்றம் பெறுகிறது. கதைகள் என்பது எந்த திரைக்கும் சொந்தமானவை அல்ல. அவை எப்போதும் கேட்பவருடன் பயணிக்கின்றன. அத்துடன் அவை மக்களுக்கு சொந்தமானவை. திரைகள் அவற்றை பின்பற்றுகின்றன.

டெக்டோனிக் என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் இந்த மாற்றம்- ஜியோ ஸ்டாரின் முன் மாதிரியான முயற்சியை தமிழ்நாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக ஆக்குகிறது. இது அதன் லட்சியத்திற்காக மட்டுமல்ல… வாய்ப்பிற்கும், கட்டமைப்பிற்கும் திறவுகோலாகவும் உள்ளது. இந்த புதிய உலகில் ஒவ்வொரு தமிழ் படைப்பாளி – தயாரிப்பாளர் மற்றும் கதை சொல்லியும்… ஒவ்வொரு இந்தியரையும் …. ஒவ்வொரு திரையிலும்…. ஒவ்வொரு நாளும்…. அடைய இயலும்.

பிராந்தியம் என்பது இன்று புதிய தேசியமாகவும்… இனம் புதிய சர்வதேசமாகவும் மாறி வருகிறது. மதுரை – மலப்புரம் – மாண்டியா அல்லது மசிலிபட்டினத்தில் பிறந்த கதைகள் இனி பிராந்திய சினிமா அல்ல. அவை தேசிய கலாச்சார நிகழ்வுகள்.

‘ காந்தாரா’ போன்ற கடலோர கர்நாடகாவின் நாட்டுப்புற கதைகளில் வேரூன்றிய ஒரு திரைப்படம் – முழு நாட்டையும் ஆக்கிரமிக்க முடிகிறது.

ஒரு சாதாரண மனிதன் அசாதாரணமான சக்தியை விஞ்சும் த்ரிஷ்யம் போன்ற ஒரு மலையாள மர்மம்- அனைத்து எல்லைகளையும் எளிதாக கடக்கிறது.

‘பாகுபலி’ அல்லது ‘புஷ்பா’ போன்ற ஒரு தெலுங்கு கதை – மும்பையில் இருந்து மலேசியா வரை அன்றாட பேச்சு வழக்கு ஆகிறது.

மேலும் தமிழ்நாட்டில் இருந்து விக்ரமின் இடைவிடாத மனித வேட்டை அல்லது அமரனின் மென்மையான தைரியம் – உண்மையில் பயணிப்பது பட்ஜெட்டால் அல்ல. ஆனால் நேர்மை மற்றும் வேரூன்றிய மக்களின் மனங்களை எதிரொலிக்கும் கதைகள் என்பதை காட்டுகிறது.

இந்த வெற்றிகள் ஒரு எளிய உண்மையை உறுதிப்படுத்துகின்றன. நம்பகத்தன்மை என்பது ஒருபோதும் பணமதிப்பிழக்கச் செய்ய முடியாத ஒரு நாணயம்.‌

இயல், இசை, நாடகம் மற்றும் சேர நாட்டின் கூத்தம்பலம் ஆகியவற்றின் தொடர்ச்சியின் மூலம் தமிழ்நாடு பல நூற்றாண்டுகளாக இந்த உண்மையில் வாழ்ந்து வருகிறது. அங்கு இலக்கியம், இசை, நாடகம் ஆகியவை ஒரே கலாச்சாரத்தின் இதயத் துடிப்பில் இணைகின்றன.‌ இன்றைய படைப்பாளிகள் புதிய கருவிகளை பயன்படுத்தலாம். ஆனால் உள்ளுணர்வு அப்படியேதான் உள்ளது. உங்கள் கதையை சொல்வதில் தைரியமாக இருக்க வேண்டும்.

இது சாதாரண இந்திய நிகழ்வு அல்ல. ஸ்க்விட் கேம் போன்ற எண்பது மில்லியன் மக்களால் பேசப்படும் பிராந்திய பேச்சு வழக்கிலான ஒரு கொரியன் தொடர் – உலகம் முழுவதும் பில்லியன் கணக்கானவர்களை சென்றடைந்தது. தென்னிந்திய மொழியில் 275 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பேசுவது அதன் உள்ளடக்கத்தின் ஆற்றலை விட மிகப் பெரியது.

ஆனால் கதை சொல்லல் என்பது திறமையால் மட்டும் செழிக்க முடியாது. படைப்பாற்றல் பொருளாதாரம் அதன் சுற்றுச்சூழல் அமைப்புகளான – படைப்பாளிகள்- தொழில்நுட்ப வல்லுநர்கள் -தளங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோரின் சீரமைப்புடன் ஒன்றாக நகரும் போது மட்டுமே செழித்து வளர முடியும்.

அதனால் தான் தலைமை என்பது முக்கியமானது. ஸ்ரீ கெவின் வாஸ் ‘சவுத் அன்பாண்ட்’க்கான நோக்கத்தை இங்கு தெளிவாக வழங்கியுள்ளார். தென்னகத்தை ஒரு சந்தையாக அல்ல.. மாறாக ஒரு படைப்பு சார்ந்த ஈர்ப்பு மையமாக வழி நடத்துகிறார். திரு. சுஷாந்த் ஸ்ரீ ராம் மற்றும் திரு. கிருஷ்ணன் குட்டி ஆகியோர் தளம் சார்ந்த உத்தியிலான இந்த கண்ணோட்டத்தை நிலை நிறுத்த உதவியுள்ளனர். இது பிராந்திய படைப்பாளர்களுக்கான உண்மையான வாய்ப்புகளை விரிவு படுத்தும்.

கொள்கை ரீதியாக நமது மரியாதைக்குரிய துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின், நமது மரியாதைக்குரிய முதல்வர் திரு. மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வையால் திறமை மேம்பாடு -பயிற்சி மற்றும் நீண்ட கால படைப்பு சார்ந்த உள்கட்டமைப்பிற்கு ஆதரவளிப்பது இந்தத் துறைக்காக பகிரப்பட்ட எதிர்காலத்தை வழங்குவதை உறுதி செய்கிறது.

இந்த தலைமையின் கீழ் தமிழ்நாடு அரசுக்கும், ஜியோ ஸ்டாருக்கும் இடையே இன்று கையெழுத்திடப்பட்ட ‘சவுத் அன்பாண்ட்’ எனும் திட்டத்திற்கான புரிந்துணர்வு கடிதம் ஒரு முழக்கம் அல்ல, மாறாக தெற்கின் கதை சொல்லலுக்கான 12,000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான உறுதிப்படுத்தப்பட்ட உடன்பாடாகும். இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு மட்டும் நான்காயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.‌

இந்த எதிர்காலத் திட்டத்தை நாம் கட்டமைக்கும் போது இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகளில் முன்னோடி ஊடக ஆய்வுத் திட்டங்களில் ஜியோவை கூட்டாளி ஆக்குமாறு நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எழுத்து – ஒளிப்பதிவு – ஒலியமைப்பு – படத்தொகுப்பு – அனிமேஷன் மற்றும் வி எஃப் எக்ஸ் ஆகியவற்றில் கட்டமைக்கப்பட்ட பயிற்சியை விதைக்க முடிந்தால் உள்ளடக்கத்தை மட்டும் அல்ல தொழில் சார்ந்த வாழ்க்கையையும் உருவாக்குவோம். நமது இளைஞர்கள் தங்களது திறமைகளுடன் பொருந்தக்கூடிய பாதைகளுக்கு தகுதியானவர்கள். அதை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் நாம் மேம்படுத்த வேண்டும். உண்மையிலேயே செயல்பாட்டின் திறன் மேம்பாடு என்பது இதுதான்.

எனவே பெண்களே! தாய்மார்களே! இந்தியாவின் ஊடக மற்றும் பொழுதுபோக்கு துறை இன்று எந்த நிலையில் உள்ளது..?

  • வரம்பற்ற ஆர்வமுள்ள இளம் பார்வையாளர்கள்….
  • வரலாறு காணாத வேகத்தில் விரிவடையும் டிஜிட்டல் பிரபஞ்சம்…
  • தேசிய அளவிலான ரசனையை வடிவமைக்கும் ஒரு பிராந்திய இயக்கம்.

” தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்தில் ஏராளமான திறமைசாலிகளை வழிநடத்தவும் இவை உறுதி கொண்டுள்ளது.

  • புதிய எண்ணங்களால் இந்தியாவிலிருந்து சர்வதேச அளவிலான சந்தையை நோக்கிய நகர்வு

இத்தனை அம்சங்கள் இடம் பிடித்திருப்பதால் ஒரு கதை சொல்லியாக இருப்பதற்கு இதைவிட சிறந்த நேரம் இருந்ததில்லை.

மேலும் இந்தத் தருணத்தை நாம் கைப்பற்றவில்லை என்றால்.. இதைப் போன்ற மற்றொரு நேரத்தை நாம் ஒருபோதும் பார்க்க முடியாது. எனவே இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையை நூறு பில்லியன் டாலர் மதிப்புக் கொண்ட சந்தையாக – எதிர்காலத்தை நோக்கி எடுத்துச் செல்வோம் என தைரியமாக உறுதி அளிப்போம். அவ்வாறு செய்வதன் மூலம் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான தமிழ்நாட்டின் தொலைநோக்குப் பயணத்தை வலுப்படுத்துவோம். நாம் அப்போது கனவு கண்டது.. அதை நாம் இப்போது செயல்படுத்தும் நேரம்.

இன்று இங்கு கூடியுள்ள ஒவ்வொரு படைப்பாளி- தயாரிப்பாளர் மற்றும் அதற்கான கனவு காண்பவர்களுக்கு நான் இதை சொல்ல விரும்புகிறேன்.‌ தடைகள் இல்லை. கருவிகள் உங்கள் கைகளில் உள்ளன. அனுமதி பொருத்தமற்றது. தைரியம் தான் வேறுபடுத்துகிறது. தமிழ்நாடு படைப்பாற்றல் மிக்க துணிச்சலுடன் வழி நடத்தட்டும்.‌ மொழி, ஒலி, நடிப்பை ஒன்றிணைத்து உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் கதைகளாக மாற்றுவோம்.

புதியதொரு துறையை உருவாக்குவோம். அங்கு கூட்டு ஒத்துழைப்பு பயத்தை மாற்றும்.

சூத்திரத்தை பரிசோதனை மாற்றும்.

வரம்புகளை கற்பனை மாற்றும்.

நம்மை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. தளம் தயாராக உள்ளது. பார்வையாளர்களும் காத்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டிற்காக… இந்தியாவிற்காக… உலகத்திற்காக… தைரியமாக- நேர்மையாக- அச்சமின்றி- உருவாக்குவோம்.

நன்றி.

யோகிபாபு – விஜய் விஷ்வா – சாக்ஷி அகர்வால் நடிப்பில் நாளை வெளியாகும் ‘சாரா

0

நாளை டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ள “சாரா” திரைப்படத்தில் வளர்ந்து வரும் நடிகரும் சமூக ஆர்வலருமான விஜய் விஷ்வாவும், பிரபல நகைச்சுவை நட்சத்திரம் யோகிபாபுவும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். செல்லக்குட்டி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சாக்ஷி அகர்வால், தங்கதுரை, அம்பிகா, மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படம் நாளை திரைக்கு வருகிறது.

இப்படத்தின் பூஜை விழா சென்னையில் இசையமைப்பாளர் “இசைஞானி” இலையராஜா அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

படம் வெளியாவதை முன்னிட்டு நடிகரும் சமூக ஆர்வலருமான விஜய் விஷ்வா மதுரையில் உள்ள ஒரு குழந்தைகள் இல்லத்தில் ‘சாரா’ படத்தின் டிரெய்லரை திரையிட்டு குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார். இத்துடன், அங்கு நடிகர் நெப்போலியனின் பிறந்தநாளை உணவு வழங்கி கொண்டாடினர்.

அத்துடன், சமீபத்தில் மரணமடைந்த மறைந்த நடிகர் ரோபோ சங்கர் அவர்களுக்கு அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தினர்.

மேலும், விஜய் விஷ்வா நடிப்பில் உருவாகியுள்ள அவரது அடுத்த திரைப்படமான “பிரம முகூர்த்தம்” விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

ZEE5 அடுத்த அதிரடி சீரிஸ் – ‘ஹார்டிலே பேட்டரி’ டிசம்பர் 16 முதல் தமிழில் ஸ்ட்ரீமிங் ஆகிறது!

0

தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக, விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமாவான ‘ஹார்டிலே பேட்டரி’ என்ற புதிய ஓரிஜினல் சீரிஸை ZEE5 வழங்குகிறது. நவீன காதலை புதிய கோணத்தில் ஆராய்கிறது—தர்க்கத்துக்கும் உணர்வுக்கும் இடையிலான எல்லைகளைத் தொட்டுப் பார்க்கும் இந்த சீரிஸை சதாசிவம் செந்தில் ராஜன் எழுதி இயக்கியுள்ளார்.குரு லக்ஷ்மன் ‘சித்’ ஆகவும், பாதினி குமார் ‘சோஃபியா’வாகவும் நடித்துள்ளனர்.

Link – https://www.youtube.com/watch?v=vTEzXB8cyGs

‘ஹார்டிலே பேட்டரி’ சோஃபியா என்ற புத்திசாலி விஞ்ஞான ஆர்வலர் பற்றிய கதை. காதல் என்பது உயிரியல் மற்றும் வேதியியல் கலவையே தவிர வேறெதுவுமில்லை என்று எப்போதும் நம்புகிறவள். தனது பெற்றோர் உட்படப் பலர் அனுபவித்த தோல்வியுற்ற உறவுகளைப் பார்த்த பிறகு, காதலில் இருக்கும் குழப்பத்தை நீக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறாள்.தனது 16 வயதில், காதலின் உண்மைத்தன்மையை அறிவியல் ரீதியாக அளவிடும் ஒரு கருவியை உருவாக்க வேண்டும் என்ற கனவை ஆரம்பிக்கிறாள்.
24-வயதில், அந்த கனவை நனவாக்குகிறாள் —ஆனால் அப்போது அவள் சந்திப்பது சித் என்ற காமிக் ரைட்டரை. சோஃபியாவின் கண்டுபிடிப்பு முற்றிலும் அர்த்தமற்றது என்று நினைக்கும் மனிதன் அவன். அறிவியல் இதயத்தைப் புரிந்துகொள்ள முடியுமா? காதலின் மொழியை அறிவியல் மொழிபெயர்க்க முடியுமா? என்பதைக் கேட்கும் ஒரு இனிமையான, சுவாரஸ்யமான பயணம் இதுவாகும்.

நடிகர் குரு லக்ஷ்மன் கூறியதாவது..,
“சித் கதாப்பாத்திரம் உணர்வுகள், உள்ளுணர்வு, காதலின் மாயாஜாலம் போன்றவற்றில் ஆழமான நம்பிக்கை கொண்ட இளைஞன். இந்த கதாபாத்திரம் எனக்குள் உள்ள நகைச்சுவையும் நெகிழ்வையும் வெளிக்கொணர உதவியது. ‘ஹார்டிலி பேட்டரி’ ஒரு சாதாரண காதல் கதை அல்ல; மனது உண்மையில் என்ன விரும்புகிறது என்பதை ஆராயும் ஒரு பயணம். ரசிகர்கள் இதைப் பார்த்து ரசிப்பதைக் காண ஆவலாக இருக்கிறேன்.”

பாதினி குமார் கூறியதாவது..,
“சோஃபியா ஒரு அற்புதமான கதாபாத்திரம்—தன்னம்பிக்கை மிக்க, புத்திசாலி, காதலை அறிவியலால் புரிந்துகொள்ளலாம் என்று நம்பும் பெண். ஆனால் அவளின் உள்ளுக்குள் உணர்வுகளுக்குள் சிக்கித் தவிப்பவள். இந்த கதாபாத்திரத்தை நடித்தது சவாலானதாகவும் நிறைவானதாகவும் இருந்தது.”

ZEE5 தமிழ் மற்றும் மலையாளம் பிசினஸ் ஹெட் மற்றும் SVP மார்க்கெட்டிங் சவுத் லாய்டு சி சேவியர் கூறியதாவது..,
‘ஹார்டிலே பேட்டரி’ அறிவியல் மற்றும் உணர்வுகளுக்கு இடையேயான மோதலையும் ஒற்றுமையையும் அழகாகப் படம் பிடித்துள்ளது. புதிய கதைக்களங்களையும் உணர்ச்சிமிக்க காட்சிப்படுத்தல்களையும் தமிழ் ரசிகர்கள் எப்போதும் வரவேற்றுள்ளனர். இந்த சீரிஸில் இருக்கும் புதுமையும், உணர்வுகளும் ஒருங்கிணைந்து, இதயத்தைத் தொடும் ஒரு அனுபவத்தை வழங்கும்.”

டிசம்பர் 16 முதல் ZEE5-ல் ‘ஹார்டிலே பேட்டரி’ சீரிஸை ரசிக்கத் தவறாதீர்கள்!

எமோசனல் ஃபேமிலி டிராமா மொய் விருந்து ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

0

SK Films International சார்பில் S. கமலகண்ணன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் C R மணிகண்டன் இயக்கத்தில், ஒரு அழகான ஃபேமிலி எமோசனல் டிராமாவாக உருவாகியுள்ள ‘மொய் விருந்து’ படத்தின் அசத்தலான டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் சில கிராமங்களில் இன்றும் நடைமுறையில் இருக்கும் பாரம்பரியமான மொய் விருந்து எனும் பழக்கம் தான் இந்தப்படத்தின் மையம். மஞ்சப்பை, கடம்பன், மைடியர் பூதம் படங்களில் பணியாற்றிய C R மணிகண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

படத்தின் தலைப்பு குறித்து இயக்குநர் C R மணிகண்டன் கூறுகையில்..,

நான் பேராவூரணி எனும் ஊருக்கு சென்றபோது, ‘மொய்விருந்து’ நடப்பதை பார்த்தேன். கோடிக்கணக்கில் மொய் வரும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு குடும்பம் மூன்று வருடத்திற்கு ஒரு முறை தான் மொய் விருந்து நடத்த முடியும். ஏனென்றால், அந்த 3 வருடத்தில் அவர்கள் வாங்கிய மொய்ப்பணத்தை திருப்பி செய்ய வேண்டும். அப்படி சரியாக செய்பவர்களுக்கே அதிக மொய் வரும். இந்த பழக்கம் மூலம் ஊரே ஒழுக்கமாக இருக்கும் அனைவருக்கும் உதவி கிடைக்கும். இது எனக்கு பெரிய ஆச்சரியம் தந்தது, இதை மையமாக வைத்து உருவாக்கியது தான் இந்தப்படம், அதனால் தான் இந்தப்படத்திற்கு ‘மொய் விருந்து’ என்று தலைப்பு வைத்துள்ளோம், இது அனைவருக்கும் பிடிக்கும்படியான எளிமையான அழகான ஃபேமிலி டிராமா என்றார்.

பாலுமகேந்திராவின் “வீடு” படப்புகழ் ‘ஊர்வசி’ அர்ச்சனா இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் டிவி புகழ் ரக்‌ஷன் மற்றும் ஆயிஷா நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் அபர்ணதி, தீபா சங்கர், சுஜாதா, மானஸ்வி கொட்டாச்சி, அருள்தாஸ், நாமோ நாராயணன், கஜராஜ், தங்கதுரை, லொள்ளு சபா மாறன், கிச்சா ரவி, முருகானந்தம் மற்றும் கொட்டச்சி உட்பட பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் முழு படப்பிடிப்பும் கொடைக்கானலின் பண்ணைக்காடு பகுதியில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருக்கிறார். M.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிகட்ட போஸ்ட் புரொடக்சன் பணிகள், பரபரப்பாக நடந்து வருகிறது.
விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில்நுட்பக் குழு விபரம்

தயாரிப்பு நிறுவனம் – SK Films International
தயாரிப்பாளர் – S. கமலகண்ணன்
கிரியேட்டிவ் புரடியூசர் – விஜய் பாரதி. K
கதை, திரைக்கதை & இயக்கம் – CR. மணிகண்டன்
இசை – டி. இமான்
ஒளிப்பதிவு – M. சுகுமார்
எடிட்டர் – புவன்
கலை இயக்கம் – A.R. மோகன்
பாடல் வரிகள் – மோகன்ராஜன், ஏகாதசி, அருண்பாரதி, கருமாத்தூர் மணிமாறன்
நடன இயக்கம் – ஸ்ரீதர், ரகு தாபா, லீலாவதி.
ஸ்டண்ட் – கலை கிங்சன்
PRO – சதீஷ் (AIM)

தென்னிந்திய திரைத்துறையில் 4,000 கோடி ரூபாய் முதலீடு – தமிழ்நாடு அரசுடன் JioHotstar ஒப்பந்தம்!

0

தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு, JioHotstar அடுத்த ஐந்து ஆண்டுகளில் ₹4,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு கடிதத்தில் இன்று கையெழுத்திட்டது. சென்னையில் நடத்தப்பட்ட இந்த பிரம்மாண்ட நிகழ்வில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம பூஷன் கமல்ஹாசன், தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், மோகன்லால், நாகார்ஜுனா, விஜய் சேதுபதி, மற்றும் தென்னிந்திய திரை உலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். JiohotStar-ன் SVOD மற்றும் தலைமை மார்கெட்டிங் அதிகாரி சுஷாந்த் ஸ்ரீராம் மற்றும் JiohotStar தெற்கு பொழுதுபோக்கு கிளஸ்டர் தலைவர் கிருஷ்ணன் குட்டி உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த கூட்டாண்மை தமிழ்நாட்டின் படைப்பு, தயாரிப்பு சூழலமைப்பை விரிவுப்படுத்தி, தென்னிந்திய படைப்பாளிகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரு முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.

இந்த சர்வதேச முதலீட்டு வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்தார். “JioHotstar-உடன் மேற்கொள்ளப்படும் இந்தக் கூட்டாண்மை 1,000 நேரடி வேலைகளும் 15,000 மறைமுக வேலைகளும் உருவாக்கும். சினிமாவுடன் இணைந்து வலுவான பொருளாதாரத்தை கட்டமைப்பதில் அரசு தொடர்ந்து செயல்படுகிறது,” என அவர் தெரிவித்தார்.
நிகழ்வில் JioHotstar-ன் தென்னிந்திய பொழுதுபோக்கு பிரிவிற்கான 25 புதிய தலைப்புகள் வெளியிடப்பட்டன. இதில் பிரபல தொடர்களின் புதிய சீசன்கள், ஒரிஜினல் கதைகள், பெரும் நட்சத்திரங்கள் கொண்ட தயாரிப்புகள், ரியாலிட்டி ஷோக்கள் என பல நிகழ்ச்சிகள் இடம்பெறும். கேரளா கிரைம் ஃபைல்ஸ் S3, சேவ் தி டைகர்ஸ் S3, குட் வைஃப் S2 போன்ற பிரபல தொடர்கள் 2026 JioHotStar சிறப்பாக வரவிருக்கின்றன. கசின்ஸ் அண்ட் கல்யாணம்ஸ், லிங்கம், விக்ரம் ஆன் டியூட்டி, ROSLIN போன்ற புதிய அசல் படைப்புகளும் அறிவிக்கப்பட்டன. விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான், நிவின் பாலி நடிக்கும் பார்மா, இந்தி தொடரான ஆர்யாவின் தென்னிந்திய வடிவான ‘விஷாகா’ உள்ளிட்ட பல படைப்புகளும் அடுத்த வருடம் வரவிருக்கின்றன. மேலும் பிக் பாஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகும் நிலையில் ‘ரோடீஸ்’ தெலுங்கில் முதல் முறையாக அறிமுகமாகிறது.

“இனி இந்திய மொழிகளில் எடுக்கப்படும் படங்கள் அந்தந்த மொழி அடிப்படையில் இல்லாமல், இந்திய படங்களாக வெளியாகும். காந்தாரா, த்ரிஷ்யம், போன்ற படங்கள் அதற்கு சான்று,” என கமல்ஹாசன் உரையாற்றினார். “தெற்கு என்றுமே படைப்பாற்றல் மையம்,” என கிருஷ்ணன் குட்டியும் குறிப்பிட்டார். மோகன்லால், நாகார்ஜுனா, தனுஷ், சிவகார்த்திகேயன், நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை ஒரே தளத்தில் கொண்டுவரும் இந்த முயற்சி இந்திய பொழுதுபோக்கை மறுவரையறை செய்யும் என JioHotstar நம்பிக்கை தெரிவித்துள்ளது.

₹4,000 கோடி முதலீட்டுடன் தமிழ் மாநிலத்துடன் தொடங்கிய இந்த கூட்டாண்மை, தென்னிந்திய திரைப்படத்துறைக்கும் அதன் படைப்பாளிகளுக்கும் புதிய வாய்ப்புகளையும், உலகளாவிய விரிவாக்கத்தையும் தருமென எதிர்பார்க்கப்படுகிறது.

Link – https://www.instagram.com/reel/DSC3VbKjI-g/?igsh=Z3c4M2ZicHV5OTM0

Producers express confidence as Angammal expands theatrical release driven by strong early reception

0

Angammal, scheduled for its release this Friday (December 5), With the early press and preview shows completed, Angammal has already begun its journey with heartfelt appreciation from critics and audiences alike. The overwhelmingly positive response has resulted in the film expanding its theatrical footprint, now releasing in 90 plus screens. The producers of Angammal share their thoughts on this proud milestone and the film’s emotional resonance.

Producer Kaarthekeyen S says, “We believed in Angammal from day one, a film that speaks softly yet stays with you long after. Watching the audience embrace its honesty has been deeply fulfilling. The entire team, especially Geetha Kailasam and Saran Sakthi, has delivered performances that standout for their sincerity and emotional depth. The growing demand from theatres only confirms what we always felt, stories rooted in truth always find their way to the audience. My heartiest thanks to Director Vipin for such an amazing piece of work.”

Producer Firoz Rahim says, “This film celebrates motherhood, dignity, and the quiet heroism of ordinary women, themes that are rarely told with such purity. The crew worked with extraordinary passion, whether it was capturing sync-sound in challenging live environments or shaping visually arresting frames. Each preview show has reinforced our pride, Angammal is a film that touches hearts, provokes thought, and encourages conversations. We are grateful for this beautiful reception. With the entire team being a lovely support, I take this opportunity to the entire villagers, who were so supportive during the entire filming. Without their support and presence, Angammal would not have achieved its life.”

Producer & Cinematographer Anjoy Samuel says, “For us, cinema becomes meaningful when emotion and craft travel together, and Angammal stands strongly on that foundation. Every actor delivered their performance with utmost dedication, making the visual storytelling truly alive. To see theatres increasing shows based on early reactions is a reward for the entire crew’s hard work. We are delighted that audiences are connecting with the authenticity we strived to achieve.”

Stone Bench Films presents Angammal, in association with Njoy Films & Firo Movie Station. The film is screenplay and direction by Vipin Radhakrishnan, adapted from a story by Perumal Murugan, featuring Geetha Kailasam, Saran Sakthi, Barani, Mulyarasi, Tendrel Raghunathan, and Vinodhananth, with cinematography by Anjoy Samuel and music & original background score by Mohammed Maqbool Mansoor. It is produced by Kaarthekeyen S, Firoz Rahim, and Anjoy Samuel, and co-produced by Shamsudeen Khalid and Anu Abraham.

‘அங்கம்மாள்’ படத்தின் முன்னோட்ட காட்சிகளில் கிடைத்த வரவேற்பைப் போல திரையரங்குகளிலும் இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்!

இந்த வாரம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) அன்று வெளியாக இருக்கும் ‘அங்கம்மாள்’ திரைப்படத்தின் பிரிவியூ ஷோ சமீபத்தில் திரையிடப்பட்ட நிலையில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நேர்மறையான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இதன் காரணமாக நாளை 90-க்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியாகிறது. இந்தப் பெருமைமிகு தருணத்தைப் பற்றி தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் எஸ். கார்த்திகேயன் கூறுகையில், “’அங்கம்மாள்’ திரைப்படத்தை முதல் நாளில் இருந்தே நாங்கள் நம்பினோம். சொல்ல வந்த விஷயத்தை ‘அங்கம்மாள்’ மென்மையாகப் பேசினாலும் நீண்ட காலத்திற்கு இந்தக் கதை பற்றி பார்வையாளர்கள் பேசுவார்கள். கதையின் நேர்மையை புரிந்து கொண்டு பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்வதைப் பார்ப்பது மிகவும் நிறைவாக இருக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவும், குறிப்பாக கீதா கைலாசம் மற்றும் சரண் சக்தி இருவரும் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ’அங்கம்மாள்’ திரைப்படத்தின் மீது நாங்கள் வைத்த நம்பிக்கை இப்போது அதிகரித்திருக்கும் திரையரங்குகள் எண்ணிக்கையிலும் பிரதிபலித்திருக்கிறது. நேர்மையான கதைகள் பார்வையாளர்களை சென்றடையும் என்பதற்கு ‘அங்கம்மாள்’ திரைப்படம் சமீபத்திய உதாரணம். இந்த அற்புதமான படைப்பினை கொடுத்த இயக்குநர் விபினுக்கு நன்றி”.

தயாரிப்பாளர் ஃபிரோஸ் ரஹிம் கூறுகையில், “இந்தப் படம் தாய்மை, கண்ணியம் மற்றும் சாதாரண பெண்களின் அமைதியான வீரத்தை கொண்டாடுகிறது. இதுபோன்ற கதைகள் அரிதாகவே சொல்லப்படும். சிங்க்-சவுண்ட் பதிவு மற்றும் ஒளிப்பதிவு படக்குழுவினருக்கு சவாலான விஷயம் என்பதை மறுக்க முடியாது. அந்த சவாலை ஒட்டுமொத்த படக்குழுவினரும் ஆர்வத்துடன் எடுத்து செய்தனர். பிரீமியர் ஷோவில் கிடைத்த பாராட்டுகள் எங்களின் உழைப்பை பெருமைப்படுத்தியது. இந்தத் தருணத்தில், படப்பிடிப்பின் போது எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்த ஒட்டுமொத்த கிராமத்தினருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் ‘அங்கம்மாள்’ இல்லை” என்றார்.

தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளருமான அஞ்சாய் சாமுவேல் கூறுகையில், “உணர்வுகளும் கலையும் ஒருசேர பயணிக்கும்போது சினிமா அர்த்தமுள்ளதாகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு உருவானதுதான் ’அங்கம்மாள்’ திரைப்படம். பெரும்பாலும் காட்சிகள் மூலம் கதை சொல்லப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஒவ்வொரு நடிகரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்துள்ளனர். பிரிமீயர் ஷோவில் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஒட்டுமொத்த குழுவினரின் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கிறேன். இந்தக் கதை மீது நாங்கள் என்ன நம்பிக்கை வைத்தோமோ பார்வையாளர்களும் அதே நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி” என்றார்.

நஜாய் பிலிம்ஸ் & ஃபிரோ மூவி ஸ்டேஷனுடன் இணைந்து, ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ’அங்கம்மாள்’ திரைப்படத்தை வழங்குகிறது.

நடிகர்கள்: நடிகை கீதா கைலாசத்துடன் சரண் சக்தி, நாடோடிகள் புகழ் பரணி, முல்லையரசி, தென்றல் ரகுநாதன் மற்றும் வினோத் ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

திரைக்கதை, இயக்கம்: விபின் ராதாகிருஷ்ணன்,
மூலக்கதை: எழுத்தாளர் பெருமாள் முருகன்,
தயாரிப்பாளர்கள்: கார்த்திகேயன் எஸ், ஃபிரோஸ் ரஹிம் மற்றும் அஞ்சாய் சாமுவேல்,
இணைத்தயாரிப்பு: ஷம்சுதீன் காலித் மற்றும் அனு ஆபிரகாம்,
ஒளிப்பதிவு: அஞ்சாய் சாமுவேல்,
இசை மற்றும் பின்னணி இசை: முகமது மக்பூல் மன்சூர்

Fueled by heart, craft, and a father’s savings — ‘Stephen’ rises from a 40-minute short to a global psychological thriller, premiering Dec 5th on Netflix

0

In a twist from the usual crime playbook, Stephen starts where most thrillers end: the killer confesses. Premiering on Netflix on December 5th, Stephen is a simmering
psychological thriller written and directed by debut filmmaker Mithun Balaji. Starring Gomathi
Shankar, with Michael Thangadurai and Smruthi Venkat in key roles, the film explores hidden motives, murder, and unresolved trauma with a pace full of twists. Originally a 40-minute short film, it evolved into a feature after over one-and-a-half years of writing and research, shaped by their obsession with documentaries and real psychological cases.

As the narrative grew, so did the scale of its ambition. What began as a modest idea evolved into a feature project defined by discipline, restraint, and emotional honesty. Backed by a budget provided by Mithun’s father, Mithun had the space to steer the film entirely as its writer, director, and
producer. Gomathi’s performance carries the rawness of someone who helped build the character
from the ground up, giving Stephen its unsettling emotional core.
Speaking of the film, director, Mithun Balaji said, “Stephen grew far beyond what we first
imagined. A small short film slowly became a story that demanded more thought, more research, and more courage.

We chose a name that feels familiar across cultures because the film speaks to
universal emotions. My father stepped in and funded this film from his savings so we could chase this dream which meant I had to step into every role the film demanded – directing, writing, producing, and editing. For our entire team to see it premiere on Netflix on December 5 feels like the
moment this entire journey was meant for.


Adding to that actor and co-writer, Gomathi Shankar, said, “Being part of Stephen right from the writing table gave me a deeper connection to the character than I’ve ever had before. The world we were creating was fragile, unsettling, and emotional, and stepping into it as an actor was both
demanding and rewarding. We didn’t have extravagant resources, so every scene relied on sincerity
and collaboration. Knowing that this film, which began so modestly, is now arriving on Netflix for audiences everywhere feels truly fulfilling.”


As Stephen arrives on Netflix on December 5- a small story that grew into a tense, atmospheric thriller. Instead of chasing shadows, Stephen invites you to sit with the uncomfortable truth that the
“why” is often far more haunting than the “who”.
WATCH STEPHEN EXCLUSIVELY ON NETFLIX FROM DEC 5TH

இதயத் தூண்டுதல், கைவினை நுணுக்கம், அப்பாவின் சேமிப்பு — இதைக் கொண்டு 40 நிமிட குறும்படமாகத் தொடங்கிய ‘STEPHEN’, இப்போது உலகளாவிய மனோவியல் திரில்லராக உயர்ந்து, டிசம்பர் 5 முதல் Netflix-ல் ப்ரீமியர் ஆகிறது

வழக்கமான த்ரில்லர் கதைகளில் இருந்து சற்று மாறுபட்டு, த்ரில்லர் கதைகள் முடியும் இடத்தில் இருந்து தொடங்கும் ‘ஸ்டீபன்’ டிசம்பர் 5 ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ப்ரீமியர் ஆகிறது. உளவியல் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தக் கதையை அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ளார். கோமதி சங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க அவருடன் மைக்கேல் தங்கதுரை மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மறைமுக நோக்கங்கள், கொலைகள் மற்றும் தீர்க்கப்படாத மர்மங்கள் என கதை முழுக்கவே திருப்பங்கள் நிறைந்திருக்கும். 40 நிமிட குறும்படமாக இருந்த இந்த கதை, ஒரு வருட ஆராய்ச்சி மற்றும் திரைக்கதையாக்கத்திற்கு பின்பு திரைப்படமானது.

குறும்படமாக இருந்த கதையை முழு திரைக்கதையாக மாற்ற தேவையான ஒழுக்கம், நேர்மை மற்றும் உழைப்பு என அனைத்தையும் படக்குழு வழங்கியது. இயக்குநர் மிதுனின் தந்தை கதைக்கு தேவையான பட்ஜெட் வழங்கி ஆதரவு கொடுக்க கதையின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக மிதுன் கதை மீது முழு கவனம் செலுத்தினார். ’ஸ்டீபன்’ கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை கோமதி சங்கர் அட்டகாசமாக திரையில் பிரதிபலித்துள்ளார்.

படம் குறித்து இயக்குநர் மிதுன் பாலாஜி பகிர்ந்து கொண்டதாவது, “நாங்கள் ஸ்டீபன் கதாபாத்திரத்தை முதலில் கற்பனை செய்ததற்கும் அப்பால் கதை வளர்ந்தது. சிறிய குறும்படமாக ஆரம்பித்த இந்தக் கதை பலகட்ட ஆய்வு, சிந்தனை மற்றும் தைரியத்திற்கு பிறகு முழு திரைக்கதையானது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்தக் கதையை தங்களுடன் தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் ‘ஸ்டீபன்’ என அனைவருக்கும் பரிச்சயமான பெயரைத் தேர்வு செய்தோம். இந்தப் படம் நல்லபடியாக வரவேண்டும் என்பதற்காக என்னுடைய அப்பா அவரது சேமிப்பில் இருந்து இந்தப் படத்திற்கு நிதி கொடுத்தார். அந்தப் பொறுப்போடு சேர்த்து இயக்கம், எழுத்து, தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு என பல பணிகளை இந்தப் படத்தில் செய்திருக்கிறேன். நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி ‘ஸ்டீபன்’ படத்தைப் பார்க்க ரசிகர்களுடன் சேர்ந்து நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.

நடிகர் மற்றும் இணை எழுத்தாளரான கோமதி சங்கர் கூறுகையில், “’ஸ்டீபன்’ கதையை எழுதுவதில் நானும் பங்களித்திருப்பதால் அந்தக் கதபாத்திரத்துடன் என்னால் ஆழமாக தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. நாங்கள் உருவாக்கிய இந்தக் கதை உலகம் பரபரப்பானதாகவும் அமைதியற்றதாகவும், உணர்ச்சிவசப்பட்டதாகவும் இருந்தது. அதனால், ஒரு நடிகனாக இந்தக் கதையில் நடித்திருப்பது எனக்கு சவாலான விஷயம்தான். படத்தில் ஒவ்வொரு காட்சியையும் நேர்மையுடன் எடுத்திருக்கிறோம். நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் நிச்சயம் பார்வையாளர்களுக்கு ‘ஸ்டீபன்’ திருப்தியான உணர்வை தரும்” என்றார்.

உளவியல் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள ‘ஸ்டீபன்’ யார் என்பதற்கு பதிலாக ஏன் என்று உங்களை யோசிக்க வைக்கும்.

டிசம்பர் 5 ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘ஸ்டீபன்’ பிரத்யேகமாக ப்ரீமியர் ஆகிறது.

‘வல்லவன்’ திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய கவிஞர் கருணாகரன் பல்வேறு தடைகளை தாண்டி இன்று பல படங்களுக்கு பாடல்களை எழுதி வருகிறார்.

0

போராடும் குணம் மட்டுமே வெற்றியை சாத்தியமாக்கி தோல்விகளை களையச் செய்கிறது: கவிஞர் கருணாகரன்

சமீபத்தில் வெளியான ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ மற்றும் ‘கிணறு’ உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் எழுதிய பாடல்கள் பாராட்டுகளை பெற்ற நிலையில் தற்போது விஷால் நடிக்கும் ‘மகுடம்’ மற்றும் ‘லைப் டுடே’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கும் முன்னணி இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் மற்றும் ஜி வி பிரகாஷ் இசையமைக்கும் படங்களுக்கும் இவர் பாடல்களை எழுதி வருகிறார்.

தனது பயணத்தை பற்றி பேசிய கவிஞர் கருணாகரன், “எனது கலை உலக பயணம் போராட்டம் நிறைந்தது. மாற்றுத்திறனாளி இவர் என்ன எழுதுவார் என்று பல பேரின் கண்கள் என்னை நோக்கி கேள்வி எழுப்பிடும். அவர்களின் வார்த்தை மழுப்பலான பதில்களை கொடுக்கும். இவற்றைத் தாண்டி என் மீது பலர் வைத்த நம்பிக்கையும் நான் என் மீது கொண்ட தன்னம்பிக்கையும் எனக்கு இந்த இடத்தை உருவாக்கி கொடுத்துள்ளது. இறைவனையும் கண்ணதாசனையும் வழிகாட்டிகளாக கொண்டு எனது முயற்சி, தேடல், திறமை மூலம் திரைத்துறைக்கு வந்தவன் நான். கவிஞர் வாலி எனக்கு மிகப்பெரும் உந்து சக்தி. என்னை நேசிக்கும் இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு நான் நன்றி கடன் பட்டுள்ளேன்.

விஷால் இயக்கி நடிக்கும் ‘மகுடம்’ படத்தில் பாடல் எழுதிய வருகிறேன். அவரது விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தில் நானும் ஒரு ஆஸ்தான பாடலாசிரியர் என்ற இடத்தை எனக்கு கொடுத்த விஷால் சார் அவர்களுக்கு எனது நன்றிகள். இயக்குநரின் பாடல் ஆசிரியராக, இசையமைப்பாளரின் பாடல் ஆசிரியராக, தயாரிப்பாளரின் பாடல் ஆசிரியராக, நடிகரின் பாடல் ஆசிரியராக, மக்கள் ரசிக்கும் பாடல் ஆசிரியராக. ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சமாக இருந்தால் மட்டுமே இங்கு தடம் பதிக்க முடியும். இவற்றை நான் முழுமையாக பூர்த்தி செய்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,” என்றார்.

அவரது சமீபத்திய பாடல்கள் குறித்து பேசிய கவிஞர் கருணாகரன், “இந்த ஆண்டு வெளியான ‘பீனிக்ஸ்’ படத்தில் ஒரு அருமையான பாடலை இசையமைப்பாளர் சாம் சி எஸ் கொடுத்தார். விஜய் சேதுபதிக்கு ‘மாமனிதன்’ திரைப்படத்தில் எழுதியதும் அவரது மகன் சூர்யா சேதுபதிக்கு ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் எழுதியதும் மறக்க முடியாத அனுபவம்.

இமான் இசையில் ‘சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ்’ படத்தில் ஒரு காதல் பாடல் எழுதினேன். ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் நான் எழுதிய பாடலை தேனிசைத் தென்றல் தேவா மற்றும் நடிகர் ஜெய் பாடியது மிக்க மகிழ்ச்சி. மேலும், ஒரு மலையாள படத்தில் இடம்பெறும் தமிழ் பாடலை நான் எழுதியிருக்கிறேன். தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கு தமிழில் பாடல் மற்றும் வசனம் எழுதி வருகிறேன் என் தமிழாலும் இறைவன் கருணையாலும் திரை உலகைச் சார்ந்த படைப்பாளிகளின் ஆதரவினாலும் ரசிகர்களின் விருப்பத்தாலும் எனது பாதையின் பயணத்தில் வெற்றியின் முகத்தினை காண்கிறேன்.

அதற்கு இந்த பிரபஞ்சத்திற்கு எனது நன்றிகளை கூறுகிறேன்,” என்று தெரிவித்தார்.

My journey continues with Kannadasan’s personality and Vaali’s youthfulness as my strengths: Lyricist Karunakaran speaks with pride

Only passion and perseverance can make victory possible and wipe away failures,” says lyricist Karunakaran

Having begun his cinematic journey with the film ‘Vallavan’, lyricist Karunakaran has overcome numerous hurdles to become a poet whose songs now feature in several films.

Following the appreciation received for his recent works in films such as ‘Nirvagam Poruppalla’ and ‘Kinaru’, he is currently penning lyrics for ‘Magudam’ starring Vishal, as well as ‘Life Today’ and other movies. He is also writing for leading composers including Yuvan Shankar Raja, Anirudh, and G.V. Prakash.

Speaking about his journey, Karunakaran said: “My journey in the world of cinema has been filled with struggle. Many looked at me—because I am differently abled—and wondered what I could possibly write. Their words often carried a tone of dismissal. Yet, overcoming all that, the faith many placed in me and the confidence I held in myself brought me to where I am today.

With God and Kannadasan as my guiding lights, and with my own efforts, passion, and talent, I entered the film industry. Lyricist Vaali has been a tremendous source of inspiration. I am indebted to the directors, composers, actors, and producers who have supported and loved my work.

I am writing a song for ‘Magudam’, directed by and starring Vishal. My heartfelt thanks to Vishal sir for giving me the place of an in-house lyricist in his Vishal Film Factory banner. To succeed in this industry, one must be the lyricist a director wants, a composer wants, a producer wants, an actor wants, and one whom the audience loves— like a five-faced Rudraksha. I believe I can fully live up to that expectation.”

Speaking about his recent works, Karunakaran added: “In this year’s film ‘Phoenix’, composer Sam C.S. gave me a wonderful song to write. Writing for Vijay Sethupathi in ‘Maamanithan’ and later writing for his son Surya Sethupathi in ‘Phoenix’ are experiences I will never forget.

I wrote a love song for ‘Chennai City Gangsters’ in D. Imman’s music. In ‘Nirvagam Poruppalla’, the songs I wrote to the music of Srikanth Deva were sung by Thenisai Thendral Deva and actor Jai, which made me very happy. I have also written a Tamil song for a Malayalam film. I continue to write Tamil lyrics and dialogues for films being made in Telugu, Kannada, Malayalam, and Hindi.

Through my Tamil skills, God’s grace, the support of film personalities, and the love of audiences, I have started tasting success along my path. For that, I express my gratitude to this universe.”

Behindwoods Productions Unveils 5 Songs’ Posters of ‘Moonwalk’ – A Historic First: AR Rahman Sings All Five Songs in the Album

0

Link: https://www.youtube.com/watch?v=IwGXuGtQL4A

Behindwoods Productions proudly announces the official launch of the five songs’ posters of the feature film Moonwalk, the much-awaited full-length comedy entertainer that brings together AR Rahman and Prabhudeva after 27 years, produced and directed by Behindwoods – Founder & CEO – Mr. Manoj Nirmala Sreedharan.

Speaking at the event, Director Manoj shared the vision behind the songs and the film: “Moonwalk is a full-length comedy film. Our idea is simple – to make theatres the happiest place for families for the 2.5 hours. With Rahman sir’s music and Prabhu sir’s dance, we wanted families to enjoy it to the fullest.

The album of Moonwalk is built entirely around the concept of ‘happiness’, with each song exploring a distinct flavour of joy through dance, visuals, and emotions. ‘Yethu’ – A Celebration of Happiness, ‘Macarena’ – A Celebration of Friendship, ‘Mayile’ – A Celebration of Hard Work, ‘Tinga’ – A Celebration of Love & ‘Jiger’ – A Celebration of Life are the names of the five songs composed by AR Rahman and performed by Prabhu Deva in uniquely crafted dance sequences.

We have created VFX Worlds for 2 songs – ‘Mayile’ and ‘Jiger’ which will be an unique experience, but please do not expect Director Shankar sir level CG, but we have tried our best within our budget. Most importantly Prabhu sir has rehearsed 15 days for Yethu and Macarena, whereas he rehearsed for 30 days for the song Mayile, which will be one of its kind experience to the fans hopefully.

In a rare and emotional milestone, AR Rahman sir has sung all five songs in the album — something unprecedented in his career. The scratch versions sung by Rahman sir carried a happiness that no other voice could replicate. I have nothing against any singers, but for 4 months I kept telling him, sir, you are a symbol of happiness and a symbol of inspiration. When you sing, that happiness multiplies threefolds. He finally agreed, and that’s how all five songs were sung by him in this album for the very first time. A big thanks to him.

AR Rahman: “Working with Prabhu Deva again is an absolute joy. The only difference between the Prabhudeva of the old days and now is just a little bit of grey hair, but his energy is exactly the same. Watching him dance still gives me an incredible boost of excitement. I’ve never seen a legendary choreographer rehearse for an entire month for a single song — that kind of dedication is truly inspiring.

As a composer, it is my responsibility to choose the right singer for each song, but Manoj calmly refused to accept my reasons, he was convinced that I should sing every track myself. When he insisted the same thing for all five songs, I finally decided, ‘Alright—just for this one film, I will sing all of them.’ It was the love I saw on Manoj’s face, and his passion to bring back the same energy of my earlier collaborations with Prabhudeva, that made me say ‘Yes’. I agreed even without listening to the story.”

Prabhudeva: “Rahman sir’s music has always energized me, from the very beginning of my career. I’m extremely excited for audiences to experience Moonwalk and the happiness it brings.”

A Grand Musical Journey begins, with the release of these five songs’ posters, Moonwalk sets the stage for one of the most awaited soundtracks of 2026. The film is scheduled for a Summer 2026 theatrical release.

Behindwoods புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘மூன்வாக்’ படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் !!

Link: https://www.youtube.com/watch?v=IwGXuGtQL4A

Behindwoods புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தியாவின் இரண்டு ஐகானிக் நாயகர்களான ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் திரைப்படம் ‘மூன்வாக்’, Behindwoods Founder & CEO திரு. மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இப்படத்தினை தயாரித்து இயக்குகிறார்.

தன் நீண்ட திரை வாழ்க்கையில் முதல் முறையாக, இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களையும் அவரே பாடியுள்ளார். ஒரு படத்தின் முழு ஆல்பத்தையும் அவரே முதன்முறை பாடியிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்திலும், உற்சாகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

‘ஏத்து’, ‘மெகரினா’, ‘மயிலே’, ‘டிங்கா’, ‘ஜிகர்’ என இந்த படத்தில் ஐந்து பாடல்களை அறிவித்த படக்குழு ஒவ்வொரு பாடல்களும், ஒவ்வொரு விதத்தில், ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தை படைக்கும் வகையில் உருவாகியுள்ளது. படத்தின் அறிவிப்பு முதல் பல புதுமைகளால் அசத்தி வரும் படக்குழு இந்த படத்தின் பாடல்களின் அறிவிப்பிலும் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மூன்வாக் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் கூறுகையில்: “மியூசிக்கில் ஏ. ஆர். ரஹ்மான் சார் , டான்ஸில் பிரபுதேவா சார் இருவரும் இந்தியாவின் தலைசிறந்த திறமைசாலிகள். சிறு வயதில் நான் ரசித்த ஜென்டில்மேன், காதலன் போன்ற படங்களின் அனுபவத்தை மீண்டும் திரைக்கு கொண்டுவர வேண்டும் என நினைத்தேன். இந்த தலைமுறை ரசிகர்களுக்குத் அந்த அனுபவத்தை மீண்டும் தர வேண்டும் என்ற முயற்சி தான், ‘மூன்வாக்’ திரைப்படமாக உருவானது. இதில் இசைக்கும் நடனத்திற்கு குறைவே இருக்காது. 3 வருடங்களாக உருவாக்கிய இந்த திரைப்படம் 2026 கோடையில் வெளியாகவுள்ளது. இது முழுமையான காமெடி கொண்டாட்டமான படம். திரையரங்குக்கு வரக்கூடிய குடும்ப ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதே இதன் நோக்கம்.

இப்படத்தில் ‘ஏத்து’, ‘மெகரினா’, ‘மயிலே’, ‘டிங்கா’, ‘ஜிகர்’ என மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளது. ஒவ்வொரு பாடலும் நட்பு, உழைப்பு, சந்தோஷம் மற்றும் வாழ்க்கையைக் கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டது. நானும் ரஹ்மான் சார் -ம் பேசும்பொழுது இந்த ஐந்து பாடல்களும் மக்களுக்கு சந்தோசத்தை மட்டும் கொடுக்கவேண்டும் என எண்ணினோம். முதலில் இந்தியாவின் ஒரு பெரிய பாடகரைப் பாட வைத்து அந்த பாடலை பதிவு செய்தார். ஆனால், இது ரஹ்மான் சாருக்காகவும், பிரபுதேவா சாருக்காகவும் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட படம். அதில் அவர் குரலைத் தவிர யாரையும் என்னால் யோசிக்க முடியவில்லை. அவரது குரலே மக்களுக்கு முழுமையான உற்சாகத்தை கொடுக்க கூடியது. நான் விடாமல் நான்கு மாதங்கள் முயற்சித்து நீங்கள் தான் பாட வேண்டும் எனக் கேட்டு கொண்டே இருந்தேன். இறுதியில், இந்த ஐந்து பாடல்களையும் ஏ. ஆர். ரஹ்மான் சார் தான் பாடியுள்ளார்.” அவருக்கு நன்றி என்றார்.

பிரபுதேவா மாஸ்டர் இருப்பதால் நடனத்திற்கு முழு மரியாதையும் முக்கியத்துவமும் அளித்து உழைத்து இருக்கிறோம். பிரபுதேவா சார் இந்த படத்தில் ஒவ்வொரு பாடலுக்கும் இரண்டு வாரம் ரிகர்சல் செய்துள்ளார். ‘மயிலே’ பாடலுக்கு மட்டும் ஒரு மாதம் ரிகர்சல் செய்தார். முழு அர்ப்பணிப்போடு உழைத்திருக்கிறார். ‘மயிலே’ பாடலுக்காக ஒரு முழு உலகத்தை CG-யில் உருவாக்கி இருக்கிறோம். ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் உண்டு, அவர்கள் விரும்பும் வகையில் இருக்கும் என நம்புகிறோம்”

இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் கூறுகையில்: “பிரபுதேவாவுடன் மீண்டும் பணிபுரிவது மகிழ்ச்சி. அப்போதைய பிரபுதேவாவுக்கும், இப்போதைய பிரபுதேவாவுக்கும் ஒரே வித்தியாசம் ‘கொஞ்சம் நரைச்ச முடி மட்டும் தான்’ என நகைச்சுவையாகக் கூறினார். பிரபுதேவாவின் எனர்ஜி அப்படியே உள்ளது. அவர் ஆடுவதைப் பார்க்கும்போது, இன்னும் அதிக உற்சாகத்தை கொடுக்கிறது. ஒரு மிகப்பெரிய நடன இயக்குனர் ஒரு பாடலுக்காக ஒரு மாத காலம் ஒத்திகை மேற்கொண்டதை இதுவரை கண்டதில்லை. அந்த அதீத அர்ப்பணிப்பு இன்னும் ஊக்கமளிக்கிறது.

இசையமைப்பாளராக, ஒரு பாடலுக்கான சரியான பாடகரை தேர்வுச்செய்யும் கடமை எனக்கு இருக்கிறது. மனோஜ் என் பரிந்துரைகளை ஒப்புக்கொள்ளாமல், ஒவ்வொரு பாடலுக்கும் இந்த பாடலை நான் தான் பாட வேண்டும் என உறுதியாக இருந்தார். இறுதியில் எல்லா பாடல்களுக்கும் அதே கூற, நானும் இந்த ஒரு படத்துக்கு மட்டும் எல்லா பாடல்களையும் பாடிவிடலாம் என முடிவுசெய்துவிட்டேன். மனோஜின் முகத்தில் தெரிந்த அன்பும், பிரபுதேவாவுடன் என் கூட்டணியை அதே எனர்ஜியுடன் திரையில் மீண்டும் கொண்டுவருவேன் என்ற மனோஜின் ஆர்வம் மற்றும் உற்சாகத்திற்காகவே இந்த திரைப்படத்திற்கு சரி என்று சொல்லிவிட்டேன். கதை கூட நான் கேட்கவில்லை.”

நடனப்புயல் பிரபுதேவா கூறுகையில், “என் திரை பயண தொடக்கத்திலிருந்தே ரஹ்மான் சாரின் இசை எனக்கு எப்போதும் உற்சாகத்தை அளித்துள்ளது. ரசிகர்கள் மூன்வாக் படத்தை ரசித்து மகிழ்வதை காண, நான் மிக ஆர்வமாக உள்ளேன்”.

ஒரு தரமான குடும்ப பொழுதுபோக்காக உருவாகும் மூன்வாக், உலக தர நடன அமைப்புகள், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளை அழகாக இணைத்து, இந்திய அளவில் இசை, நடனம் மற்றும் காமெடியின் கொண்டாட்டமாக அடுத்து வருடம் 2026 கோடை விடுமுறை வெளியீட்டுக்கு உருவாகி வருகிறது.

GV Prakash Kumar-Sri Gouri Priya starrer “Happy Raj” Title Announcement

0

Producer Jaivarda of Beyond Pictures has embarked on his journey in the Tamil film industry with the motive of spearheading with entertainers meant for universal audiences. With a wide array of projects in the pipeline, which will have their official announcements soon, the production house had recently launched its “Production No.1” starring GV Prakash Kumar in the lead role, directed by Maria Elanchezian. Now they have officially announced the film’s title as ‘Happy Raj’.

Director Maria Elanchezian shares his vision behind the title stating, “The title Happy Raj emerges from a simple yet profound ambition, to create a high-spirited celebration of joy in cinema. We have witnessed audiences erupt with energy for adrenaline-filled, mass entertainers. But in today’s world, one overwhelmed by social media, unfiltered negativity, and the tragic rise of real-life despair, I felt an earnest need to craft a film that stands as an antidote to the gloom.

My protagonist is christened ‘Happy’ for a reason. His very name serves as a constant reminder of the emotion that binds this narrative. In fact, you may hear the word ‘Happy’ echoed throughout the film more than a hundred times, not as mere repetition, but as a rhythmic mantra of optimism. At its heart, this is a film built on the foundations of happiness, pure, unadulterated happiness, while still embracing life’s full spectrum of emotions. Happy Raj aims to be a luminous, uplifting experience; a tailor-made offering for audiences who crave warmth, smiles, and the comforting assurance that happiness still holds power in our lives. This is a film for those who walk into a cinema seeking not just entertainment, but inner sunshine.”

While GV Prakash Kumar and Sri Gouri Priya are playing the lead characters, the evergreen handsome actor Abbas is making his comeback in the Tamil film industry after a long sabbatical gap with this film. The others in the star-cat include George Mariyam, Prarthna, Adhirchi Arun, Madurai Muthu, Sofa Boy Rasool and many others, performing pivotal roles.

The film is written an directed by Maria Elanchezian and is co-produced by Jaikanth Suresh. Madhan Christopher is the cinematographer and Justin Prabhakaran is the music composer. RK Selva is handling editing works, and Kumar Gangappa is overseeing art works. Praveen Raja is taking care of costume designing. Rekha is handling the Public Relations works.

ஜி.வி. பிரகாஷ் குமார் – ஸ்ரீ கவுரி பிரியா நடிக்கும் “ஹேப்பி ராஜ் ( Happy Raj)” படத்தின் தலைப்பு அறிவிப்பு

Beyond Pictures தயாரிப்பாளர் ஜெய்வர்தா, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஜனரஞ்சகமான படைப்புகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ் திரைப்படத் துறையில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். பல்வேறு திட்டங்கள் தற்போது தயாரிப்பில் உள்ளன; அவற்றின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். இதற்கிடையில், சமீபத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும், மரியா இளஞ்செழியன் இயக்கும் “ப்ரொடக்ஷன் நம்பர் 1” படத்தை அறிமுகப்படுத்தினர். இப்போது அந்த படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக “ஹேப்பி ராஜ்” என அறிவித்துள்ளனர்.

இயக்குனர் மரியா இளஞ்செழியன் தலைப்பின் பின்னணி குறித்து கூறும்போது,
“ஹேப்பி ராஜ்” என்ற தலைப்பு ஒரு எளிய ஆனால் ஆழமான சிந்தனையில் இருந்து உருவானது — சினிமாவை மகிழ்ச்சியின் கொண்டாட்டமாக மாற்ற வேண்டும் என்ற விருப்பம். ஆக்ஷன் நிறைந்த மாஸ் என்டர்டெயினர்களுக்கு ரசிகர்கள் உற்சாகமாகக் குரல் கொடுப்பதை நாம் தினந்தோறும் காண்கிறோம். ஆனால், சமூக வலைதளங்களில் உலாவும் வடிகட்டப்படாத எதிர்மறை உணர்வுகளால், நம் இயல்பு வாழ்க்கையில் அதிகரித்து வரும் மனக்குழப்பங்கள் ஆகியவற்றால் சூழப்பட்ட இன்றைய உலகில், அந்த இருளைப் போக்கி வெளிச்சத்தைத் தருவதற்கான ஒரு சினிமா தேவையென நான் உணர்ந்தேன்.

என் நாயகனுக்கு ‘ஹேப்பி’ என்று பெயர் வைக்கப்பட்டதற்குக் காரணம் இருக்கிறது. அந்த பெயர் கதையின் மைய உணர்வை எப்போதும் நினைவூட்டும் ஒரு குறியீடு ஆகும். முழுக் கதையிலும் ‘ஹேப்பி’ என்ற வார்த்தை நூற்றுக்கும் மேற்பட்ட முறை ஒலிக்கும்; அது வெறும் சொல் அல்ல, நம்பிக்கையூட்டும் ஒரு தாள லயம் சேர்ந்த மந்திரம் போன்றது.

இந்தக் கதை அடிப்படையில் தூய மற்றும் உண்மையான மகிழ்ச்சியை மையக் கருவாகக் கொண்டது; அதே சமயம் வாழ்க்கையின் பல்வேறு உணர்வுகளையும் தொடுகிறது. “ஹேப்பி ராஜ்” படம் மகிழ்ச்சியான மற்றும் ஊக்கமளிக்கும் ஒரு அனுபவமாக அமையும்; மனதை நிம்மதியாக்கும். கோபம், புன்னகை, மகிழ்ச்சி அனைத்தும் நம் கையில் தான் உள்ளது என்பதை உணர்த்தும். வாழ்க்கையில் நம்பிக்கையுடன் போராடுபவர்களுக்கான ஒரு படைப்பு. திரையரங்கில் வரும் காட்சிகள் அனைத்தையும், நமக் கானது, நம் வாழ்க்கைக்கானது என்ற உள்ளார்ந்த ஒளியை பார்வையாளர்களுக்குக் கடத்தும் ஒரு சினிமா இது.” என தெரிவித்தார்.

ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஸ்ரீ கவுரி பிரியா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வருகிறார் அழகிய நடிகர் அப்பாஸ். மேலும் ஜார்ஜ் மரியம், ப்ரார்த்தனா, அதிர்ச்சி அருண், மதுரை முத்து, சோஃபா பாய் ரசூல் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை மரியா இளஞ்செழியன் எழுதி இயக்குகிறார்; ஜெய்காந்த் சுரேஷ் இணைத் தயாரிப்பாளராக உள்ளார். மதன் கிரிஸ்டோபர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ஆர்.கே. செல்வா எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார்; குமார் கங்கப்பா கலை இயக்கத்தைப் பார்கிறார். உடை வடிவமைப்பைப் பிரவீன் ராஜா கவனிக்கிறார். மக்கள் தொடர்பு பணிகளை ரேகா மேற்கொள்கிறார்.

- Advertisement -

Recent Posts