- Advertisement -
Home Blog Page 88

தாஷமக்கான் டைட்டில் புரமோ & டைட்டில் வெளியீடு…!!!

0

IDAA Productions மற்றும் Think Studios சார்பில் இயக்குநர் வினீத் வரபிரசாத் இணைந்து தயாரிக்க, இளம் நட்சத்திர நடிகர் ஹரீஷ் கல்யாண், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், வட சென்னையின் பின்னணியில், ராப் இசைக் கலையை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் “தாஷமக்கான்”.

மாபெரும் வெற்றி பெற்ற லிஃப்ட் படம் மூலம் இயக்குநர் வினீத் வரபிரசாத், சென்னையின் மற்றொரு முகத்தைக் காட்டும் வகையில், மாறுபட்ட களத்தில் புதுமையான அனுபவமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார். ஹரீஷ் கல்யாண் இப்படத்தில் ராப் இசைக் கலைஞராக நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதி கட்ட post production பணிகள் நடந்து வருகிறது, இப்படத்தின் டைட்டில் புரமோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை, பத்திரிக்கையாளர்களிடம் அறிமுகப்படுத்தும் விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில் படத்தின் டைட்டில் புரமோ வீடியோ, பத்திரிக்கையாளர்களுக்குப் பிரத்தியேகமாக, திரையிடப்பட்டது. பின்னர் படக்குழுவினர் படம் குறித்த தகவல்களைப் பத்திரிக்கை ஊடக நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில்..,

நடிகர் ஹரீஷ் கல்யாண் பேசியதாவது..,
முதல் முறை நான் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அறிமுகத்திற்கு இப்படி ஒரு விழா. தாஷமக்கான் குழுவிற்கு என் நன்றி. தாஷமக்கான் பற்றி நாம் கேள்விப்பற்றிருபோம், தமிழ்நாட்டிற்கு கறி சப்ளை செய்யும் இடம் தான் தாஷமக்கான். நான் இப்படத்தில் ராப்பராக நடித்துள்ளேன். தமிழில் ராப் இசைக்கு பெரிய வரலாறு உள்ளது. பலர் இதற்கு முன் ராப் இசையில் கலக்கியுள்ளனர். இண்டி மியூசிக்கிலும் பலர் கலக்கி வருகின்றனர். எனக்கு அவர்கள் எல்லோரும் தான் இன்ஸ்பிரேஷன். என்னுடன் நடித்த ராப்பர்ஸ் அனைவருக்கும் நன்றி. இந்த மாதிரி திறமையாளர்களை அடையாளப்படுத்திய இயக்குநருக்கு நன்றி. இசை இந்தப்படத்தில் மிக முக்கியம். பிரிட்டோ கலக்கியுள்ளார். ராப், பேட்டில் இசை, ரொமான்ஸ் என பல ஜானரில் பாடல்கள் உள்ளது. சூப்பராக இசையமைத்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்கு நான் செட்டாவேனா எனச் சந்தேகம் இருந்தது. இயக்குநர் எல்லோருமே தயங்கினார்கள் என்றார், அப்போதே நாம் செய்ய வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். எல்லோருமே பெரும் உழைப்பைத் தந்துள்ளனர். மதன் லப்பர் பந்துவிற்கு பிறகு என்னுடன் மீண்டும் இணைந்துள்ளார். அவருக்கு நன்றி. அமீர் நடிகராக வந்து, ஒரு பாடல் கொரியோகிராஃபும் செய்துள்ளார். அவருக்கு இந்தப்படம் திருப்புமுனையாக இருக்கும். ஸ்டண்ட் மிகச்சிறப்பாக செய்து தந்த ஓம் பிரகாஷ் மாஸ்டர், தினேஷ் சுப்பராயன் மாஸ்டர் இருவருக்கும் நன்றி. சுனில் சார், சத்யராஜ் சார் இருவரும் முக்கியமான ரோல் செய்துள்ளனர். இருவருக்கும் நன்றி. ஃப்ரீத்தி நன்றாக நடித்துள்ளார். இந்தப்படம் கண்டிப்பாக உங்களுக்கு புது அனுபவம் தரும். இப்படத்தை மக்களிடம் கொண்டு சேருங்கள் நன்றி.

இயக்குநர் வினீத் வரபிரசாத் பேசியதாவது..,
டைட்டில் புரமோவிற்கு பலரை அழைக்கத் திட்டமிட்டோம் இறுதியாகப் பத்திரிக்கை நண்பர்கள் முன்பு அறிமுகம் செய்யலாம் என முடிவு செய்த போதே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. முதல் படத்தில் எனக்கு இந்த மேடை கிடைக்கவில்லை, ஏன் என்பதை ஆராய்வதை விட்டுவிட்டு, நமக்கான மேடையை நாமே உருவாக்கலாம் என ஆரம்பித்தது தான் இந்தப்படம். இந்தப்படத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நடிகர்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள். 8 க்கும் மேற்பட்ட ராப் கலைஞர்கள் அடையாளப்பட்டுள்ளார்கள். ஹரீஷ் இப்படத்தில் ராப்பராக நடித்துள்ளார். அவர் ஒத்துக்கொண்டதே எனக்கு ஆச்சரியம் தான். நிறைய பேர் தயங்கிய ரோல் இது. அவர் வந்ததே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. இசை சம்பந்தமான படம், நிறைய விவாதித்து, அலைந்து தேடி, இப்படத்தில் ராப் இசையைக் கொண்டுவந்துள்ளோம். எனக்குத் தெரிந்த சென்னையை, அதன் வாழ்க்கையை இப்படத்தில் கொண்டுவந்துள்ளோம். இப்படத்தில் உழைத்த அனைத்து உதவியாளர்கள், கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. அமீர் அவர் நடித்த ரோலுக்கு முதலில் வேறு வேறு நபர்களை அறிமுகம் செய்து கொண்டிருந்தார், நம்ம படத்திற்கு இவர் வேலை பார்க்கிறாரே எனக் கடைசியில் அவரையே நடிக்க வைத்துவிட்டோம். அவர் மிகச்சிறந்த கலைஞர். அவருக்கு இந்தப்படம் முக்கியமானதாக இருக்கும். இந்தப்படம் எல்லோருக்கும் பெரிய வெற்றியைத் தரட்டும் நன்றி.

நடிகை மேகா ராஜன் பேசியதாவது..,
எனக்கு இந்தப்படத்தில் அற்புதமான ரோல் தந்த இயக்குநர் வினீத்திற்கு நன்றி. டைரக்சன் டீம், கேமரா டீம், ஆர்ட் டீம் என எல்லோரும் மிகக் கச்சிதமாக இணைந்து வேலை செய்தார்கள். சத்யராஜ் சாருடனும், சுனில் சாருடனும் நடித்தது மகிழ்ச்சி. ஹரீஷ் உடன் நடித்தது மிகுந்த மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.

ஸ்டண்ட் இயக்குநர் ஓம் பிரகாஷ் பேசியதாவது..,
தாஷமக்கான் வட சென்னையின் மைய பகுதியாக இருக்கும் ஒரு ஏரிவை இயக்குநர் அந்த இடத்தை பலமுறை சுற்றிக்காட்டினார், க்ளைமாக்ஸ் ஃபைடில் 1000 பேர் கலந்துகொள்ளும் ஒரு ஃபைட், அதை சிங்கிள் ஷாட்டில் எடுத்தோம். சிங்கிள் ஷாட் எடுக்கும் போது நிறைய ஒத்துழைப்பு தந்து அசத்தினார் ஹரீஷ். சிங்கிள் ஷாட் அவ்வளவு பெரிய ஃபைட் சீன் எடுக்கக் காரணம் இயக்குநர் வினீத் தான். அவர் ஒரு மினி ராஜமௌலி மாதிரி தான். படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி. இந்த வாய்ப்பைத் தந்த இயக்குநருக்கு நன்றி.

எடிட்டர் மதன் பேசியதாவது..,
2019 வரை வெறும் டிரெய்லர்கள் தான் செய்து கொண்டிருந்தேன். நண்பர் ரஞ்சித் மூலம் வினீத் அறிமுகமானார். அவரை சந்தித்த 10 நிமிடத்தில் லிஃப்ட் பட வாய்ப்பை தந்தார். அவர் தந்த வாய்ப்பு தான் தமிழ் சினிமாவில் எனக்கு வாழ்க்கை தந்தது. இப்படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கிறது. மிகக்கடினமாக உழைத்துள்ளார். ஹரீஷ் உடன் லப்பர் பந்து படத்திற்குப் பிறகு இணைந்துள்ளேன். இப்படத்திற்காக முழுதாக உடலை மாற்றியுள்ளார். இந்தப்படம் அவருக்கு மிகப்பெரும் திருப்புமுனையாக இருக்கும். ஹீரோயினும் நன்றாகச் செய்துள்ளார். எல்லோருமே மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார்கள். என்னை நம்பியதற்கு வினீத்திற்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.

கலை இயக்குநர் மணிமொழியன் ராமதுரை பேசியதாவது..,
நண்பர்கள் மூலம் தான் இந்தப்பட வாய்ப்பு கிடைத்தது. படத்திற்குள் நிறைய செட் போட்டுள்ளோம். ஹரீஷ் பயங்கரமாக உழைத்துள்ளார். எல்லோருமே நன்றாக செய்துள்ளார்கள், படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

உடை வடிவமைப்பாளர் ரிதேஷ் செல்வராஜ் பேசியதாவது..,
இயக்குநரைச் சந்தித்தேன். இயக்குநர் எனக்கு வாய்ப்பு தர மாட்டார் எனத்தான் நினைத்தேன். என்னை நம்பி வாய்ப்பு தந்ததற்கு நன்றி. என்னால் முடிந்த அளவு உழைத்துள்ளேன். ஹரீஷ் சாரை இதுவரை பார்த்த மாதுரி இருக்கக் கூடாது என காஸ்ட்யூம் செய்துள்ளோம். உங்களுக்குப் பிடிக்கும் நன்றி.

இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கேல் பேசியதாவது..,
என்னை நம்பிய இயக்குநர் வினீத்திற்கு நன்றி. ஹரீஷ் கல்யாணுக்கு நன்றி. ஹரீஷ் வந்தபிறகு தான் இந்தப்படம் மாறியது. அண்ணாநகரில் இளைஞர்கள் ராப் செய்துகொண்டிருந்ததை வீடியோ எடுத்து வந்து இது போல செய்யலாம் என்றார். அந்த ராப் கலைஞர்களுடன் வேலை பார்த்தது எனக்கு புது அனுபவமாக இருந்தது. அமீர் இப்படத்தில் சிறப்பாகச் செய்துள்ளார். எல்லா காட்சியிலும் நிறையக் கூட்டம் இருக்கும். இவ்வளவு பேரை வைத்து எடுப்பது எவ்வளவு கஷ்டம் எனத் தோன்றும். படத்தில் நிறைய ஆச்சரியங்கள் இருக்கிறது. அனைவருக்கும் நன்றி.

நடன இயக்குநர் அமீர் பேசியதாவது..,
இயக்குநர் வினீத் அனைவருக்கும் நன்றி. என் பயணம் பற்றி எல்லோருக்கும் தெரியும். இந்த புராஜக்ட் கிடைக்க முக்கிய காரணமாக இருந்த உதய் அவர்களுக்கு நன்றி. இந்தப்படத்தில் வேறொருவரை அறிமுகம் செய்யத் தான் இயக்குநரைச் சந்தித்தேன், அவர் என்னை நம்பி வாய்ப்பு தந்தார். அவர் கொடுத்த பவுண்ட் படித்த பிறகு, இதைவிட ஒரு பெரிய வாய்ப்பு கிடைக்காது எனத் தோன்றியது. எனக்கு கோரியோகிராஃபர் ஆக ஆசை, ராஜுசுந்தரம் மாஸ்டர் பாபா பாஸ்கர் மாஸ்டர் பெயருக்கு அடுத்து, அமீர் என்ற பெயர் இருப்பது எனக்குப் பெருமை. ஹரீஷ் கல்யாண் சாருடன் நடித்துள்ளேன், நடன இயக்கமும் செய்துள்ளேன் என்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. இப்படத்தில் இளைஞர்களுக்குப் பிடித்த ஒரு பாடலை செய்துள்ளேன். எனக்குத் தந்த ஒத்துழைப்புக்கு நன்றி. இந்தப்படத்தில் நீங்கள் எதிர்பாராதது நிறைய இருக்கும். இந்தப்படம் எனக்கு மிக முக்கியமான படமாக இருக்கும். இந்தப்படம் அனைவருக்கும் வெற்றிப்படமாக இருக்க வேண்டும் நன்றி.

தொழில் நுட்ப கலைஞர்கள்

இயக்குநர் : வினீத் வரபிரசாத்
இசையமைப்பாளர்: பிரிட்டோ மைக்கேல்
ஒளிப்பதிவாளர் : கார்த்திக் அசோகன்
எடிட்டர்: G. மதன்
சவுண்ட் டிசைன்: தபாஸ் நாயக்
நடன அமைப்பாளர்கள்: ராஜு சுந்தரம், பாபா பாஸ்கர், அமீர்
ஸ்டண்ட் (ஆக்ஷன்): ஓம் பிரகாஷ், தினேஷ் சுப்பராயன்
கலை இயக்குநர் : மணிமொழியன் ராமதுரை
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர்: உதயகுமார் பாலாஜி
உடை வடிவமைப்பாளர் : ரிதேஷ் செல்வராஜ்
பப்ளிசிட்டி டிசைனர்: தினேஷ் அஷோக்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)

Title Promo – https://youtu.be/0fs_1ampVWw

தனது குடும்பத்துடன் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!

0

சென்னை, 19 நவம்பர் 2025:

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19.11.2025) தனது பிறந்தநாளை சமூகப் பொறுப்பு உணர்வோடு அர்த்தமுள்ள வகையில் கொண்டாடினார்.

அவர், ‘உதவும் கரங்கள்’ ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் இணைந்து, தனது குடும்பத்துடன் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு உரையாடியதுடன், அங்குள்ள முதியோர்களின் தினசரி செயல்கள் குறித்து கேட்டறிந்து, அவர்களின் தேவைகள் மற்றும் சவால்கள் பற்றியும் கவனம் செலுத்தினார்.

இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில், அருண் விஜய் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் சேர்ந்து உணவு உட்கொண்டு ஒரு நினைவிடத்தக்க நேரத்தை பகிர்ந்துகொண்டார். சமூக நலத்திற்கான தனது பற்றும், மனிதநேயத்தை மையமாக கொண்ட செயல்பாடுகளும் வெளிப்படுத்திய இந்த பிறந்தநாள் கொண்டாட்டம், அவரது வாழ்க்கையில் ஒரு சிறப்பான தருணமாக அமைந்தது.

MATTER Strengthens Its Nationwide Footprint with Chennai Launch, To Set Up its First Experience Hub in Tamil Nadu giving riders access to MATTER AERA – India’s First Geared Electric Motorbike

0

Chennai, 14th November 2025 – Chennai doesn’t just move, it endures, evolves, and powers ahead. Known for its engineering prowess and deep-rooted connection with automobiles, the city has long been at the heart of India’s mobility story. Today, that legacy takes a new turn with the launch of the AERA 5000+, India’s first geared electric motorbike. The launch marks a major moment for MATTER, the electric mobility powerhouse behind the AERA. The company now brings its flagship motorbike to Tamil Nadu’s capital Chennai.

Designed and built entirely in India, the AERA introduces HyperShift, a 4-speed manual gearbox developed specifically for electric motorbikes. It brings back the joy of shifting gears, something riders have always loved while delivering the quiet power, smooth torque, and efficiency of an electric.

Priced at an introductory ₹1,93,826 (ex-showroom), the AERA is open for bookings at www.matter.in. The launch comes as Chennai gears up for the year-end travel season, when road trips, weekend getaways, and city rides pick up pace across the coast.

“Chennai has always been a city that understands performance, from its automotive heritage to its everyday commuters who know their machines well,AERA represents a shift from adoption to evolution in India’s EV story. For Chennai, it’s more than just an electric bike; it’s the meeting point of engineering, endurance, and emotion. With our indigenous gearbox, liquid-cooled powertrain, and connected intelligence, we’re delivering an experience designed for riders who love control as much as comfort.” said Arun Pratap Singh, Founder & Group COO, MATTER.

“Tamil Nadu is already a manufacturing powerhouse, now it’s time to make it an EV powerhouse too.. It is a proud moment to bring MATTER’s revolutionary experience to Chennai. The city is ready for a new chapter in sustainable mobility and with the AERA, we are offering something that blends performance, innovation, and sustainability like never before. To bring the AERA experience closer to the city’s riders, customers can visit the Experience Centre at Perumbakkamadded Mrs. Aruna Das, Dealer Principal, MATTER Experience Hub, Chennai

The AERA 5000+ is also India’s first electric bike to come with a Lifetime Battery Warranty, ensuring peace of mind for riders whether they’re gliding through Mount Road, cruising on the ECR, or navigating weekday traffic.

MATTER’s in-house approach from designing the powertrain and battery to building the gearbox and software gives it complete control over quality and performance. Built for Indian roads, weather, and riding habits, the AERA is designed to handle every condition thrown its way.

MATTER AERA – Shift. Twist. Thrill.

With Chennai now joining the AERA journey, MATTER continues to redefine how India rides, where electric meets gears and technology meets control. Now, it’s Chennai’s turn to take the shift forward.

For queries walk into the Matter Motors Experience Hub located at  Plot No – 24 &25, Sholingannallur Main Road, Santi Nagar Layout, Perumbakkam, Chennai, Tamilnadu – 600100

Key Features of the AERA 5000+:

  • HyperShift gearbox – 4-speed manual transmission with 3 ride modes for total control
  • Liquid-cooled powertrain – Keeps the motor performing smoothly in Chennai’s heat and humidity
  • Smart 7” touchscreen dashboard – Navigation, music, ride data, and wireless OTA updates
  • 5kWh battery pack – Certified range of up to 172 km, IP67-rated for dust and water protection
  • 5amp Charging – Charge anywhere with a hassle-free on-board charger and gain access to more than 1lakh+ charging points.
  • Fast acceleration – 0 to 40 km/h in under 2.8 seconds
  • Safety and comfort – Dual disc brakes with ABS, dual suspension, and park assist
  • MATTERVerse mobile app – Live tracking, remote lock/unlock, and ride history
  • Smart key – Keyless start and unlock
  • Low cost of ownership – Just 25 paise per kilometre, saving up to ₹1 lakh over three years of daily riding.

About MATTER

MATTER Motor Works, an electric mobility startup founded in January 2019 in Ahmedabad, is redefining the future of mobility with its “Innovate in India” approach. Committed to building an independent EV ecosystem, MATTER explores every facet of electric mobility to drive India towards a sustainable future. Its flagship product, AERA, World’s first manufactured geared electric motorbike, has been recognized as the “Editors’ Choice Electric Motorcycle of the Year” by Top Gear India, alongside prestigious accolades like “EV Bike of the Year 2025” by ACKO Drive and “Innovation Startup of the Year” at the Outlook Business Spotlight Awards.

Powered by a team of over 600 innovators, MATTER is at the forefront of cleaner mobility through in-house technology and groundbreaking innovations. With over 350 patent filings and 75 granted patents, spanning powertrain, liquid cooling, battery management, gearbox technology, charging infrastructure, and manufacturing automation, MATTER is shaping the evolution of India’s EV landscape—driving the nation towards energy independence.

KALAIGNAR TV – GOWRI SERIAL

0

கனகாவின் ரீ-என்ட்ரி – சூடுபிடிக்கும் “கௌரி” சீரியல் கதைக்களம்

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தெய்வீக மெகாத்தொடர் “கெளரி”. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த தொடரில் தற்போது, துர்காவுக்கு எதிராக சூழ்ச்சிகளை நிகழ்த்தி வரும் ஆவுடையப்பன் குடும்பம் துர்காவை கொல்ல திட்டமிடுகிறது.

இந்த இக்கட்டான சூழலில், மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் கடப்பா கனகா. முன்பு, துர்கா சிகிச்சையில் இருக்கும் போது, துர்காவாக ஆவுடையப்பனின் குடும்பத்தை ஆட்டி படைத்த கனகா, மீண்டும் வந்திருப்பது விறுவிறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதால் தொடர் இனி பரபரப்பாக நகரும்.

அழகு மூவி மேக்கர்ஸ் உருவாக்கும் “பூங்கா”

0

ஒரு பூங்காவில் கதையை உருவாக்கி, பூங்காவில் நடக்கும் சம்பவங்களை திரைக்கதை ஆக்கி, அங்கு நடப்பவர்களை நடிக்க வைத்து, அதற்கு “பூங்கா” என்றே தலைப்பு வைத்து, நவம்பர் 28’ம் தேதி திரைப்படத்தை ஜனரஞ்சகமாக வெளியிடுகிறார் இயக்குனர் கே.பி.தனசேகர்!

அழகு மூவி மேக்கர்ஸ் உருவாக்கும் “பூங்கா”

‘பூங்கா’ என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல். பலதரப்பட்ட மக்கள் ஒன்று கூடும் சங்கமம். சொர்க்கம் ஆகாயத்தில் இருக்கிறது என்பார்கள், பூங்கா மண்மீது உள்ள சொர்க்கம் என்கிறார் இயக்குனர் கே.பி.தனசேகர்.

ஒரு நாலு பசங்க பிரச்சனைகளோடு பூங்கா வருகிறார்கள். அங்கு அவர்களின் பிரச்சனை தீர்ந்ததா என்பதுதான் கதை.

கதாநாயகனாக கௌசிக் நடிக்கிறார். கதாநாயகியாக ஆரா நடிக்கிறார். இவர்களுடன் சசி தயா, பிரணா, பாலசுப்பிரமணியம், பூங்கா ராமு, திண்டுக்கல் மணிகண்டன், நோயல் ரெஜி, மேஜிக் சரவணகுமார், ஸ்மூல் ராஜா, சாய் ஜேபி, வரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் கே.பி.தனசேகர். ஒளிப்பதிவு ஆர்.ஹெச்.அசோக், இசை அகமது விக்கி, எடிட்டிங் முகன் வேல், கலை குணசேகர், சண்டை பயிற்சி எஸ்.ஆர். ஹரி முருகன், நடனம் சுரேஷ் சித், பிஆர்ஓ கோவிந்தராஜ். தயாரிப்பு கே.பி.தனசேகர், பூங்கா ஆர்.ராமு லட்சுமி, கீதாஞ்சலி லெனினிய செல்வன் மூவரும் இணைந்து தயாரத்து உள்ளனர்.

“பூங்கா” நவம்பர் 28’ம் தேதி, மண் மீது சொர்க்கமாக வெளியாகிறது!

Poonga #Movie

November28 #Release

KP_Tanasekar

Mansoor_AliKhan

BalaSekaran

Perarasu

Java_Sundaresan

Jaguar_Thangam

R_Ramu_Lakshmi

Geethanjali_Leniniya_Selvan

Kaushik #Aara

Sasi_Dhaya

Magic_SaravanaKumar

Dindigul_Manikandan

PRO_Govindaraj

தமிழ் – தெலுங்கு மொழிகளில் மீண்டும் வெற்றிகொடி கட்டும் என். லிங்குசாமி !

0

பத்திரிகையாளராக இருந்து படைப்பாளி ஆனவர் லிங்குசாமி, முதல் படத்திலேயே (ஆனந்தம்) மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியை இயக்கியவர். இரண்டாவது படத்தில் (ரன்) சாக்லெட் பாய் மாதவனை ஆக்ஷன் ஹீரோவாக உயர்த்தியவர், மூன்றாவது படத்தில் (ஜி) அஜீத்தை அதகளம் பண்ண வைத்தவர், நான்காவது படத்தில் (சண்டக்கோழி) விஷால் என்கிற துடிப்பான இளைஞரை சினிமாவிற்கு அடையாளம் காட்டியவர்.

பருத்தி வீரனில் கருப்பு கிராமத்து இளைஞனாக அறியப்பட்ட கார்த்தியை நோக்கி அதே மாதிரியான முரட்டு கிராமத்து கேரக்டர்கள் படையெடுத்தபோது அழகான ஆக்ஷன் ஹீரோவாக்கி, ‘பையா ‘மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர். இப்படி ஒவ்வொரு படமும் லிங்குசாமியின் பெயரை சினிமா சரித்திரம் பதிவு செய்து கொண்டது.

இப்போது லிங்குசாமியின் அடுத்த ரவுண்ட் ஆரம்பமாகி இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு பிறகு பையாவின் தெலுங்கு வெர்சனான ‘ஆவரா’ நேற்று ரீ லீசானது. ஆவராவை தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

இதுபற்றி கார்த்தி டுவிட்டரில் “ஆவரா எப்போதுமே எனக்கு ஸ்பெஷலான படம். அந்த காதலும், இசையும் எப்போதும் என்னுடனேயே இருக்கிறது. மீண்டும் அந்த படத்தை பெரிய திரையில் பார்த்து எனது நினைவுகளை மீட்டுக் கொண்டுவர ஆவலாக இருக்கிறது. படத்தை வெளியிடும் விநியோகஸ்தர்களுக்கு நன்றி” என்று கூறியிருக்கிறார்.

ஆம்… உண்மையில் ‘பையா’ கார்த்தியின் சினிமா வாழ்க்கையின் சிறப்பான பாதையை போட்டுக் கொடுத்த படம்.

இதை அடுத்து லிங்குசாமியின் ‘அஞ்சான்’ மறு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

ஆம் இந்தியாவிலேயே முதன் முறையாக மறு எடிட் செய்து வெளியாகும் படம் இது. சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலான நீளத்தை குறைத்து, காட்சிகளை மாற்றி அமைத்து, ரி-சென்சார் செய்து
‘அஞ்சான்’ வெளிவர இருக்கிறது. அதற்காக அவரும், அவரது டீமும் கடுமையாக உழைத்து வருகிறார்கள். அஞ்சான் மறு வெளியீடு தமிழ் சினிமா சரித்திரத்தில் முக்கிய நிகழ்வாக மாற இருக்கிறது.

இப்படத்தை நடிகர் சிவகுமார், 2டி எண்டர்டெயின்மெண்ட் ராஜ்சேகர் கற்பூரசுந்தர பாண்டியன், திருப்பதி பிரதர்ஸ் என்.சுபாஷ் சந்திரபோஸ், டைரக்டர்கள் சரண், பிருந்தா சாரதி, பன்னீர் செல்வம், லோகு, மணி பாரதி, சந்தோஷ், தயாரிப்பாளர் ஹெச்.வேணு, ஜி.ஆர்.வெங்கடேஷ், எடிட்டர் ஆண்டனி இவர்களுடன் சூர்யா ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்ள் 70 பேர்கள் ஸ்பெஷ்ல் ஷோவில் பார்த்து ரசித்தனர். அத்தைனை பேரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இப் படம் வருகிற 28ம் தேதி திரைக்கு வருகிறது. ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் .

சினிமாவை நேசிக்கும், நல்ல சினிமாவை மக்களுக்கு தர நினைக்கும், லிங்குசாமியின் அடுத்த ரவுண்ட் ஆரம்பமாகி இருக்கிறது.

The Majestic & Mighty Queen’s Chapter Opens, Nayanthara Comes On Board For Nandamuri Balakrishna, Gopichand Malineni, Venkata Satish Kilaru, Vriddhi Cinemas’ Historical Epic #NBK111

0

God of the Masses, Nandamuri Balakrishna, who is basking in the glory of consecutive blockbusters, is all set to collaborate once again with blockbuster maker Gopichand Malineni. Following the sensational success of Veera Simha Reddy, the duo reunites for their much-anticipated historical epic, #NBK111. The film will be produced by Venkata Satish Kilaru, currently backing the ambitious pan-India project Peddi, under the prestigious Vriddhi Cinemas banner on a grand scale.

The majestic and mighty queen’s chapter now opens. The gorgeous Nayanthara joins the project as the leading lady opposite Balakrishna in this high-budget cinematic spectacle. Her role will be pivotal to the narrative. This marks the fourth collaboration between Balakrishna and Nayanthara after Simha, Jai Simha, and Sri Rama Rajyam, making it a delightful treat for audiences eager to see this successful on-screen pair once again. The announcement was made today, on the occasion of Nayanthara’s birthday.

The majestic announcement video showcases the ambitious scale, vibrant visual spectacle and sets the stage for the film perfectly.

The grandeur of the film is hinted by director Gopichand Malineni in a prominent way while introducing Nayanthara on the horse. The magnificent visual experience that the makers are promising with the film in another level and never-seen-before scale.

For the very first time, director Gopichand Malineni steps into the realm of historical drama, bringing his signature mass appeal to a grand new genre. Renowned for delivering commercial blockbusters, he is now crafting a monumental narrative that will present Nandamuri Balakrishna in a never-before-seen avatar. Set against a rich historical backdrop, the film promises an intense blend of emotion and action, amplified by spectacular visuals and larger-than-life storytelling.

The remaining cast and crew details will be revealed soon.

Cast : Nandamuri Balakrishna, Nayanthara

Technical Crew:

Writer, Director: Gopichand Malineni
Producer: Venkata Satish Kilaru
Banner: Vriddhi Cinemas
PRO: Yuvraaj

link : https://www.youtube.com/watch?v=T7K-xLuUpls

நந்தமூரி பாலகிருஷ்ணாவின் #NBK111 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார் !!

அதிரடியான தொடர் ப்ளாக்பஸ்டர் வெற்றிகளால் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற காட் ஆஃப் த மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தற்போது மீண்டும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் கோபிசந்த் மலினேனியுடன் கைகோர்க்கிறார். வீரசிம்ஹாரெட்டி பட வெற்றிக்குப் பிறகு, இவர்களின் கூட்டணியில் மீண்டும் ஒரு புதிய படமான, #NBK111 வரலாற்றுச் பின்னணியில் மாபெரும் படைப்பாக உருவாகிறது. இந்த படத்தை, பான்–இந்திய அளவிலான “பெத்தி” எனும் படத்தை தயாரித்து வரும் வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் சார்பில் மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார்.

இப்போது படம் ஒரு புதிய அத்தியாயத்துக்குள் நுழைந்துள்ளது — மகத்தான, வலிமையான ராணியின் அத்தியாயம் துவங்கியுள்ளது.

அழகும், கம்பீரமும் கலந்த நயன்தாரா, இந்த மாபெரும் வரலாற்றுப் படத்தில் பாலகிருஷ்ணாவின் ஜோடியாக, கதாநாயகியாக இணைந்துள்ளார். படத்தின் கதையில் முக்கியத்துவமிக்க, சக்திவாய்ந்த கதாபாத்திரத்தை அவர் ஏற்கிறார். சிம்ஹா, ஜெய் சிம்ஹ , ஸ்ரீ ராம ராஜ்யம் ஆகிய மூன்று படங்களுக்கு பிறகு, பாலகிருஷ்ணா–நயன்தாரா ஜோடி நான்காவது முறையாக இணைவதால், ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த அறிவிப்பு நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டது.

அறிவிப்பு வீடியோவே பிரமிப்பை தருவதாக கண்களை கவரும் காட்சி அமைப்புடன்,படத்தின் பெருமையை உணர்த்துகிறது.

இப்பபடம் பற்றிய மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஈடுசெய்யும் வகையில், குதிரையில் வரலாற்று ராணியாக நயன்தாராவை அறிமுகப்படுத்தி, இயக்குநர் கோபிச்சந்து மலினேனி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

முதல் முறையாக வரலாற்று படத்தில் களம் இறங்கும் இயக்குநர் கோபிசந்த் மலினேனி, தன் மாஸ் ஸ்டைலை இந்த பிரம்மாண்ட படைப்பிலும் வழங்கவுள்ளார். பெரும்பாலும் கமர்ஷியல் ப்ளாக்பஸ்டர்கள் வழங்கும் இவர், இம்முறை பாலகிருஷ்ணாவை இதுவரை காணாத புதிய கதாப்பாத்திரத்தில் வடிவமைக்கிறார். வரலாற்று பின்னணியில் எமோசனும் ஆக்சனும் கலந்த மிகப்பெரும் அனுபவத்தை, பிரம்மாண்ட காட்சிகளுடன் வழங்கப் போகிறது இந்த படம்.

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.

நடிகர்கள்:
நந்தமூரி பாலகிருஷ்ணா
நயன்தாரா

தொழில்நுட்ப கலைஞர்கள்:

எழுத்து, இயக்கம்: கோபிசந்த் மலினேனி
தயாரிப்பு: வெங்கட சதீஷ் கிலாரு
வழங்குபவர்: விருத்தி சினிமாஸ்
மக்கள் தொடர்பு – யுவராஜ்

Gevi, a powerful Tamil-language action drama film, produced by ARTUPTRIANGLES FILM KAMPANY ,An official contender for the 2026 oscars

0

Directed by Tamil Dhayalan, Gevi tells the story of Mandharai and Malaiyan, a couple fighting for justice and survival in a rural village near Kodaikanal. The film explores themes of love, resistance, and the community’s struggle against adversity.

The film features an impressive cast, including
Sheela & Jacquline Lydia, and Aadhavan M, and has received praise for its raw storytelling and authentic performances.

Film Details

Release Date :July 18, 2025

Gevi has received positive reviews from critics and audiences alike, with many praising its unique storyline and strong performances

The 98th Academy Awards will take place on March 2, 2026, in Hollywood

ஆர்ட்அப்டிரையாங்கில்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் வெளியான, தமிழ் மொழி திரைப்படமான ‘கெவி’ 98வது( ஆஸ்கார் ) அகாடமி விருதுகளுக்கான பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது!

தமிழ் தயாளன் இயக்கத்தில் வெளியான ‘கெவி’ திரைப்படம் கொடைக்கானல் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் நீதி மற்றும் தங்கள் வாழ்விற்காகப் போராடும் தம்பதியினரான மந்தாரை மற்றும் மலையன் ஆகியோரின் கதையைச் சொல்கிறது. இந்தப் படம் காதல், எதிர்ப்பு மற்றும் துன்பங்களுக்கு எதிரான சமூகத்தின் போராட்டத்தை மையமாகக் கொண்டது.

ஜூலை 18, 2025 அன்று வெளியான இந்தப் படத்தில் ஷீலா, ஜாக்குலின் லிடியா, மற்றும் ஆதவன். எம் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் அதன் கதைசொல்லல் மற்றும் நடிகர்களின் திறமையான நடிப்பிற்காகவும் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடம் இருந்து நேர்மறையான பாராட்டுகளைப் பெற்றது.

Witness Most Compelling Devotional Track Of The Year- The Thaandavam From God Of Masses Nandamuri Balakrishna, Blockbuster Maker Boyapati Sreenu, S Thaman’s #BB4 Akhanda 2: Thandavam Unleashed

0

God Of Masses Nandamuri Balakrishna and blockbuster maker Boyapati Sreenu’s most-awaited devotionally packed action extravaganza Akhanda 2: Thaandavam, mounted on a grand scale by Raam Achanta and Gopichand Achanta under the 14 Reels Plus banner, and presented by M Tejaswini Nandamuri, has music scored by S Thaman. The promo of the first single ‘The Thaandavam’ garnered superb response. Yesterday, the full song was unveiled during an event at PVR Mall in Juhu, Mumbai.

S Thaman, who has become synonymous with NBK’s high-voltage soundtracks, returns with another thunderous devotional banger. The song showcases Balakrishna in his most ferocious Aghora avatar yet, performing a fiery Shiva Thaandavam in a massive temple arena, surrounded by chanting Aghoras. The divine intensity in every frame pairs perfectly with Thaman’s trademark percussion-heavy score, turning the visuals into a spiritual spectacle.

Shankar Mahadevan and Kailash Kher lend their powerful voices to the track, while lyricist Kalyan Chakravarthy captures the raw, cosmic force of Lord Shiva through evocative writing. The song delivers sheer goosebumps and hints at becoming the most compelling devotional number of the year.

Akhanda 2 features Samyuktha as the leading lady, Aadhi Pinisetty in a crucial and commanding role, and Harshali Malhotra in an emotionally significant character. The film boasts top-tier technical craftsmanship, with visuals by C. Ramprasad and Santoshh D. Detakae, crisp editing by Tammiraju, and grand production design led by A. S. Prakash.

With Balakrishna’s intense presence, Boyapati’s unmatched mass presentation, and Thaman’s spine-tingling score, Akhanda 2: Thaandavam is gearing up to be a monumental cinematic and devotional experience.

The movie is gearing up for release on December 5th.

Cast : God Of Masses Nandamuri Balakrishna, Samyuktha, Aadhi Pinisetty, Harshali Malhotra

Technical Crew:

Writer, Director: Boyapati Sreenu
Producers: Raam Achanta, Gopi Achanta
Banner: 14 Reels Plus
Presents: M Tejaswini Nandamuri
Music: Thaman S
DOP: C Ramprasad, Santoshh D Detakae
Ex-Producer: Koti Paruchuri
Art: AS Prakash
Editor: Tammiraju
Fights: Ram-Lakshman
PRO: Yuvraaj
Marketing: First Show

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் பிளாக்பஸ்டர் மேக்கர் போயபாடி ஶ்ரீனு  நான்காவது முறையாக  இணைய, மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள பிரம்மாண்டமான பக்தி-ஆக்‌ஷன்  திரைப்படம் “அகண்டா 2: தாண்டவம்”.   இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இப்படத்தை 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா ,  ஆகியோர் தயாரிக்க, M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்குகிறார்.  எஸ்.தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் சிங்கிள் ‘தி தாண்டவம்’ ப்ரோமோவுக்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது.நேற்று முழு பாடலும் மும்பை ஜூஹுவிலுள்ள PVR மாலில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் வெளியிடப்பட்டது.

இசையமைப்பாளர் எஸ். தமன், நந்தமூரி பாலகிருஷ்ணாவிற்கு பிரத்தியேகமான அதிரடி மாஸ் பி.ஜி.எம் கள் வழங்குவதில் புகழ்பெற்றவர், இப்போது மீண்டும் வலிமையான பக்தி மணக்கும் அதிரடிப் பாடலைத் தந்துள்ளார். ஆரண்ய அகோரா அவதாரத்தில் பாலகிருஷ்ணா, பெரிய கோவில் அரங்கில் அகோரர்களின் ஓம் உச்சரிப்புகளின் நடுவே தெய்வீகமான சிவ தாண்டவத்தை ஆடும் காட்சிகள் – தமன் அமைத்த அதிரடி தாளங்களுடன் இணைந்து ஒரு ஆழ்ந்த ஆன்மிக அனுபவத்தை உருவாக்குகின்றன.

கல்யாண் சக்ரவர்த்தி சிவ பெருமானின் பிரபஞ்ச ஆற்றலை வார்த்தைகளால் உயிர்ப்பிக்க, பாடகர்கள் ஷங்கர் மகாதேவன் மற்றும் கைலாஷ் கேர் ஆகியோரின் அற்புதமான குரலில் பாடலை பாடியுள்ளார். பாடல் முழுவதும் சிலிர்க்க வைக்கும் தருணங்களால் நிறைந்துள்ளது, இந்த ஆண்டின் மிக வலுவான பக்திப்பாடலாக இப்பாடல் இருக்கும்.

படத்தில் சம்யுக்தா நாயகியாக நடிக்க, ஆதி பினிசெட்டி வலிமையான எதிர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், ஹர்ஷாலி மால்ஹோத்ரா முக்கியமான வேடத்தில் தோன்றுகிறார்.

ஒளிப்பதிவு பணிகளை – C. ராம்பிரசாத், சந்தோஷ் D டெடாகே செய்துள்ளனர். எடிட்டிங் பணிகளை தம்மிராஜு மற்றும் கலை இயக்கத்தை A. S. பிரகாஷ் செய்துள்ளனர்.

பாலகிருஷ்ணாவின் அதிரடி தோற்றம், போயபட்டி ஸ்ரீனுவின் மாஸ் பிரசன்டேஷன் தமனின் அட்டாசமான  இசை என பலத்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் “அகண்டா 2: தாண்டவம்”, ரசிகர்கள் கொண்டாடும் ஆன்மிக அதிரடி மாஸ் அனுபவமாக இருக்கும்

இந்த படம் டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிப்பு :

நந்தமூரி பாலகிருஷ்ணா
சம்யுக்தா
ஆதிப் பினிசெட்டி
ஹர்ஷாலி மால்ஹோத்ரா

தொழில்நுட்பக் குழு :

எழுத்து, இயக்கம் :  போயபாடி ஶ்ரீனு
தயாரிப்பாளர்கள் :  ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா
பேனர் : 14 ரீல்ஸ் ப்ளஸ்
வழங்குபவர் : M. தேஜஸ்வினி நந்தமூரி
இசை : S. தமன்
ஒளிப்பதிவு : C. ராம்பிரசாத், சந்தோஷ் D டெடாகே
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் : கோடி பருச்சுரி
கலை : A.S. பிரகாஷ்
எடிட்டிங் : தம்மிராஜு
சண்டை அமைப்பு : ராம் – லக்ஷ்மன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

ZEE5 அடுத்த அதிரடி படைப்பு, “ரேகை” சீரிஸ் நவம்பர் 28-ல் ஸ்ட்ரீமாகிறது!!

0

~ புகழ்பெற்ற கிரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ் குமார் நாவலின் மையக்கதையிலிருந்து ஈர்க்கப்பட்ட இந்த தனித்துவமான தமிழ் சீரிஸை, தினகரன் M உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார். இந்த சீரிஸில், பாலஹாசன், பவித்ரா ஜனனி மற்றும் வினோதினி வைத்தியநாதன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ~

இந்தியாவின் முன்னணி தேசீய ஓடிடித் தளமான ZEE5, தன் அடுத்த அதிரடி சீரிஸ் மூலம், உண்மை கண்முன்னே இருந்தும், நாம் கண்டுபிடிக்க முடியாத, ஒரு இருண்ட உலகிற்குள் பயணிக்கும் வகையிலான, புதிய அனுபவத்தைத் தரும் படைப்பை, ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது. ஒவ்வொரு தடயமும் மேலும் குழப்பத்திற்குள் இழுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள, ஏழு எபிசோடுகள் கொண்ட கிரைம் திரில்லர் ‘ரேகை’ சீரிஸ் நவம்பர் 28 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது.

இந்த சீரிஸ், பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் உருவாக்கிய குற்றக்கதை உலகின் கருவை எடுத்து கொண்டாலும், ‘ரேகை’ முழுமையாக தினகரன் M உருவாக்கி – எழுதி – இயக்கிய ஒரிஜினல் படைப்பாகும். ராஜேஷ் குமார் உலகின் கதைகளின் தளங்களில் ஆழமாகச் சென்று, சைக்கலாஜிகலாக ஒரு புதிய தீவிரத்தை அவர் இந்தக் கதைக்கு வழங்கியுள்ளார்.

லிங்க் – https://www.youtube.com/watch?v=ybTJcRA5sg4

உயிருடன் இருப்பவர்கள் மரணமடைந்ததாக பதிவு செய்யப்பட்டால், அதை எப்படி விசாரிப்பது?

S.I. வெற்றி (பாலஹாசன்) மற்றும் காவலர் சந்தியா (பவித்ரா ஜனனி) சாதாரணமாக விசாரிக்க துவங்கும் ஒரு குற்ற சம்பவம், விரைவில் மிக தீவிரமான விசாரணையாக மாறுகிறது. ஐஸ் டிரக் ஓட்டுநர் ஓட்டிக்கொண்டிருக்கும்போது ஏற்பட்ட விபத்தில் இறந்துவிடுகிறார். ஆனால், ஐஸ்க்கட்டிகளுக்குள் வெற்றி ஒரு துண்டிக்கப்பட்ட கையை கண்டுபிடிக்கிறார்.
அங்கேயிருந்து தொடங்கும் வெற்றியின் தேடல், மருத்துவ பரிசோதனைகள், இரகசிய வலைப்பின்னல்கள், பயமுறுத்தும் உண்மைகள் ஆகியவற்றின் சுழலில் அவரை இழுத்துக்கொள்கிறது. ஒவ்வொரு தேடலும் அதன் பதிலும் இன்னும் மூர்க்கமான கதவுகளைத் திறக்க, வேட்டையாடுபவர் – வேட்டையாடப்படுபவர் என்ற கோடு, கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்குகிறது.

இந்த சீரிஸை S.S Group Production சார்பில் S. சிங்காரவேலன் தயாரித்துள்ளார். இந்த சீரிஸில், பாலஹாசன், பவித்ரா ஜனனி, போபலன் பிரகதேஷ், வினோதினி வைத்யநாதன், ஸ்ரீராம் எம், அஞ்சலி ராவ், இந்திரஜித் E. ஆகியோர் நடித்துள்ளனர்

எழுத்தாளர் ராஜேஷ் குமார் கூறியதாவது..,
“ஒவ்வொரு குற்றக்கதையும் முதலில் மனித மனதில் தான் பிறக்கிறது. ‘ரேகை’யில் என்னை ஈர்த்தது – சாதாரணமாகத் தோன்றும் ஒரு சிறு ஐடியா எவ்வாறு சமூகத்தின் இருண்ட மூலைகளுக்கு இழுத்துச் செல்கிறது என்பதே. என் உலகிலிருந்து ஒரு ஐடியாவை புதிய படைப்பாளர் எடுத்து, முற்றிலும் புதிதாக ஒரு படைப்பை உருவாக்கும்போது, அந்தக்கதை இன்னும் உயிர்ப்புடம் இருக்கிறது என்பதற்கான சான்று இந்த சீரிஸ்.”

எழுத்தாளர் / இயக்குநர் தினகரன் M கூறியதாவது..,
“நம் கண்ணுக்குத் தெரியாமல் நடக்கும் ஒரு வன்முறையைக் குறித்து இந்தத் சீரிஸ் பேசுகிறது. போலீஸ் புகாராக கூட மாறாத அந்த வன்முறை, பலர் வாழ்க்கையைச் சிதைக்கிறது. அந்த அசௌகரியத்தையும், யாரை நம்புவது என்ற குழப்பத்தையும் பார்வையாளர்கள் உணர வேண்டும் என்பதே என் நோக்கம். ராஜேஷ் குமார் சார் கருவிலிருந்து தொடங்கியதாக இருந்தாலும், இந்த கிரைம் உலகின் சம்பவங்கள் எனக்கு மிகவும் நெருக்கமானவையாக இருந்தன. அதை பார்வையாளர்களும் உணர்வார்கள்”

முன்னணி நடிகர் பாலஹாசன்..,
“வெற்றி கதாப்பாத்திரம் எப்போதும் பதில்களைத் தேடி அலையும் ஒரு மனிதன். ஆனால் அவன் கண்டுபிடிக்கும் உண்மைகள் அவனையே பயமுறுத்துகின்றன. அந்த பயத்தை வெளிப்படுத்தாமல் உள்ளே வைத்துக்கொண்டு நடிப்பது சவாலானது. ‘ரேகை’ எனக்கு மனித உணர்வுகளின் பலவீனத்தை சுமந்து பார்க்கும், அவற்றை ஆராய்ந்து பார்க்கும் வாய்ப்பை வழங்கியது.”

ZEE5 தமிழ் மற்றும் மலையாளம் – வணிகத் தலைவர் & SVP South Marketing – லாய்டு C சேவியர் கூறியதாவது..,
“‘ரேகை’ ஒரு திரில்லர் மட்டுமல்ல, நம் பூர்வீகக் கதைகள் ஏன் முக்கியம் என்பதற்கான நினைவூட்டல். இது மர்மத்தின் பின்னால் இருக்கும் மௌனங்களை வெளியில் கொண்டுவருகிறது. மனிதர்களைக் காக்க வேண்டிய அமைப்புகள், சில சமயம் அவர்களை பகடையாக பயன்படுத்தும் உண்மையைத் தட்டி எழுப்புகிறது. சாதாரண மக்களின் வாழ்க்கை எவ்வாறு பெரிய சக்திகளிடம் சிக்கிக்கொள்ளுகிறது என்பதை இந்தத் சீரிஸ், மிக நிஜமாக காட்டுகிறது. உண்மை, நேர்மை, எமோசன் மூன்றும் கலந்த கதைகளைத் தருவதே எங்களின் முக்கிய நோக்கம். ‘ரேகை’ சீரிஸ் அதைத் துல்லியமாக பிரதிபலிக்கிறது.”

ஒருமுறை நீங்கள் ‘ரேகை’யின் சதுரங்கத்தில் சிக்கிக்கொண்டால், அதில் குற்றம் உங்களை பயமுறுத்தாது — குற்றத்திற்குப் பின்னால் இருக்கும் உண்மை தான் மிகப்பெரிய பயத்தைத் தரும்.

‘ரேகை’ ZEE5-இல் நவம்பர் 28 முதல்!

- Advertisement -

Recent Posts