- Advertisement -
Home Blog Page 90

நடிகர் விவேக் பிறந்தநாளை முன்னிட்டு பி டி செல்வகுமாரின் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி… ஏராளமான பெண்களுக்கும் காமெடி நடிகர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கி அசத்தல்!

0

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த ‘புலி’ படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். அந்த வகையில் சினிமா மூலம் சமூக அக்கறை கருத்துக்களை எடுத்துச் சொன்ன ஜனங்களின் கலைஞன் விவேக் பிறந்த நாளை முன்னிட்டு இளம் விதவைகள் உருவாவதை தடுப்பதை நோக்கமாக கொண்ட நிகழ்ச்சிக்கு கலப்பை மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.

சென்னை விருகம்பாக்கம் ஏவி எம் பார்க் வளாகத்தில் நடந்த இந்த நிகழ்வில் ஏராளமான பெண்கள் பங்கேற்ற போதைக்கு எதிரான வாசகங்களை உரக்கச் சொன்னபடி விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. நலிந்த காமெடி நடிகர்களுக்கும் நூற்றுக்கணக்கான பெண்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசிய பி டி செல்வகுமார், ”ஒரு நலத்திட்ட நிகழ்ச்சி நடத்துறோம்னா நாலு பேருக்கு நோட் புக், பென்சில் கொடுக்கிறதோட நிறுத்திக்கலாம்னு யோசிக்கிற ஆள் இல்லை. செய்றதை கொஞ்சம் விரிவா, சமூக அக்கறையோட செய்யணும்னுதான் முடிவெடுப்பேன். அப்படித்தான் கன்னியாகுமரியில பல அரசுப் பள்ளிகளுக்கு கலையரங்கம் கட்டிக் கொடுத்தோம்; வகுப்பறை கட்டிக் கொடுத்தோம். எங்களோட சமூகப் பணிகள் பற்றி நாங்க சொல்லணும்னு இல்லை. கல்வெட்டுக்கள் சொல்லும். அந்த வகையில சினிமா மூலமா மூட நம்பிக்கை கருத்துக்களை எடுத்துச் சொன்ன அண்ணன் விவேக் அவர்களோட பிறந்தநாள்ல இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செஞ்சோம்

ஒரு பெண் பத்திரிகையாளர், ராஜேஸ்வரின்னு பேரு. அவங்க நான் கட்டிக் கொடுத்த கலையரங்குகள், வகுப்பறைகள், விளையாட்டுத் திடல்கள் பற்றியெல்லாம் எடுத்துக்காட்டி, அது மாதிரி வேறு யாராச்சும் செய்திருக்காங்களான்னு கூகுள்ல பார்த்தா இந்திய அளவிலேயே யாரும் இல்லைன்னு சொல்லி பெருமைப்படுத்தியிருக்காங்க. அந்தளவுக்கு எங்களோட சேவைகள் பரந்து விரிஞ்சிருக்கு.

எனக்கு பத்து வீடு இருக்குன்னு ஒருவர் சொல்லியிருக்கார். அப்படியே இருந்தாத்தான் என்ன? சின்ன வீடு வெச்சிருந்தாதான் தப்பு. எனக்கு 10 வீடு இருக்குனு நிரூபிச்சிட்டா 8 வீடடை அவர் பேர்ல எழுதி வைக்கிறேன். பேசணும்னா யாரு வேணாலும் என்ன வேணாலும் பேசலாம். ஆனா, உழைச்சாத்தான் எதையும் அடைய முடியும்.

நான் எஸ் ஏ சந்திரசேகர் சார்கிட்டேயும் விஜய் சார்கிட்டேயும் பல வருடம் வேலை பார்த்திருக்கேன்னு பலருக்கும் தெரியும். 200 படங்களுக்கு பி ஆர் ஓ’வா வேலை பார்த்திருக்கேன். 122 படங்களை ரிலீஸ் டிஸ்ட்ரிபியூட்டரா இருந்து ரீலீஸ் பண்ணிருக்கேன். நான் தயாரிச்சு விஜய் நடிச்ச ‘புலி’ படத்தை ரிலீஸ் செய்ய விடாம தடுக்கிறதுக்காக ரெய்டு வர வெச்சாங்க. என்னை ஹவுஸ் அரஸ்ட் பண்ணாங்க. என்கிட்டே அன்னிக்கு வெறும் 2000 ரூபாய்தான் இருந்துச்சு. அப்படியான நெருக்கடிகளையும் சந்திச்சிருக்கேன்.

பல நாள் துக்கமில்லாம உழைச்சிருக்கேன். இப்போகூட எனக்கு ஆபரேசன் நடந்துச்சு. மூணு மாசம் ரெஸ்ட் எடுக்கணும்னு சொன்னதையும் தாண்டித்தான் இந்த நிகழ்ச்சியை நடத்தறேன். நான் திடுதிப்னு வளரல. எல்லாத்துக்கும் பின்னாடி கடுமையான உழைப்பு இருக்கு. 

என்னை விஜய் சார்க்கிட்டேயிருந்து பிரிக்கிறதுக்காக ஒரு நபர் எல்லா விஷயத்தையும் பண்ணார். அந்த சகுனி, துரோகி இப்போவும் விஜய்கிட்டே இருக்கார். விஜய் நான் வளர்த்த மரம்; நான் தண்ணி ஊத்தி வளர்த்திருக்கேன். அவரு இன்னும் நல்லா வளரணும். அதுக்கு சகுனிகளை, துரோகிகளை விலக்கிவெச்சுட்டு கூட நல்லவர்களை கூட வெச்சிக்கணும். அப்போதான் விஜய் இன்னும் நல்லா வளர முடியும்” என்றார்.

நிகழ்வில் பத்திரிகையாளர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி வருவது பற்றி கேட்டதற்கு, ”அவர் அப்படி பேசி வருவது உண்மைதான். அவரது பேச்சால் தொண்டர்கள் பலியாகிவிடக் கூடாது. விஜய் அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்” என்றார். பத்திரிகையாளர்களால் அரசியல் சார்ந்த பல கேள்விகள் கேட்கப்பட, பி டி செல்வகுமார் காரசாரமாக பதிலளித்தார்.

நடிகர் விவேக்கின் சமூக சேவைகளில் மரக்கன்று நடுவது முதன்மையானதாக இருந்தது. அதை நினைவுகூறும் விதமாக இன்று நடந்த நிகழ்வில் பலருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

மூத்த திரைப்பட பத்திரிகையாளர் மீரான் பி டி செல்வகுமாரின் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றியும் அவர் செய்துவரும் மக்கள் நலப்பணிகள் பற்றியும் நடக்கவிருக்கும் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கத்தையும் எடுத்துச் சொல்லி நிகழ்வை துவங்கி வைத்தார்.

கலப்பை மக்கள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வி கே வெங்கடேஷ் தனது துவக்க உரையில், கலப்பை மக்கள் இயக்கம் கஜா புயலின்போது, கொரோனோ பாதிப்பின்போது ஏழை எளிய மக்களுக்கு செய்த உதவிகள், கன்னியாகுமரியில் அரசுப் பள்ளிகளுக்கு வகுப்பறைகளும் கலையரங்குகள் கட்டிக் கொடுத்த பணிகள் பற்றி விரிவாக எடுத்துரைத்து, இனி சென்னையிலும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வது தொடரும் என்றார். ‘உங்கள் குடும்பத்திலோ, உங்களுக்கு தெரிந்தவர்களின் குடும்பத்தில் யாரேனும் போதைக்கு அடிமையானவர்கள் இருந்தால் அவர்களைப் பற்றி தெரியப்படுத்தினால் மறு வாழ்வு மையங்கள் மூலம் சிகிச்சையளித்து மீட்டெடுக்கும் நற்பணியை முன்னெடுத்துச் செய்வோம்’ என்றும் குறிப்பிட்டார்.

நிகழ்வில் காமெடி நடிகர்கள் பாவா லெஷ்மணன், அம்பானி சங்கர், சின்ராசு, ஜெய்கணேஷ், ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளைப் பெற்றனர்.

கலப்பை மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரான ராஜ்குமார், விருகம்பாக்கம் பகுதி நிர்வாகி திவாகர் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஒரு படம் இயக்குவது என்பது மிகப்பெரிய கஷ்ட்டம் – ‘சேரநாட்டு யானைதந்தம்’ இயக்குநர் பூலோகம் ரவி உருக்கம்

0

லத்திகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சசிகுமார் பாலா தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்கள் ‘டிரம்ப் கார்டு’ மற்றும் ‘சேரநாட்டு யானைதந்தம்’.

வெளிநாட்டில் படிக்க செல்லும் இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், வெளிநாட்டுக்கு படிக்க செல்ல விரும்புகிறவர்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய விசயங்களையும் மையமாக வைத்து உருவாகும் ‘டிரம்ப் கார்டு’ படத்தை ஜியோ ராஜகோபால் இயக்குகிறார். காதல் கதையாக உருவாகும் ‘சேரநாட்டு யானைதந்தம்’ படத்தை பூலோகம் ரவி இயக்குகிறார். இந்த இரண்டு படங்களுக்கும் எஸ்.பார்த்திபன் ஒளிப்பதிவு செய்ய, கணேஷ் குமார்.டி படத்தொகுப்பு செய்கிறார்.

‘டிரம்ப் கார்டு’ படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் பிலாக் பாண்டி நடிக்கிறார். இவருடன் ஜி.எம்.குமார், இ.வி.கணேஷ் பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ‘சேரநாட்டு யானைதந்தம்’ படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

இப்படங்களின் அறிமுக விழா நவம்பர் 15 ஆம் தேதி, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் விஜயமுரளி, இயக்குநர் ஆர்.அரவிந்தராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றார்கள்.

நிகழ்வில் நடிகரும் இயக்குநருமான இ.வி.கணேஷ் பாபு பேசுகையில், “ஒரே தயாரிப்பாளரின், ஒரே நிறுவனத்தின் இரண்டு திரைப்படங்களின் அறிமுக விழா இது. லத்திகா புரொடக்‌ஷன்ஸ் சசிகுமார் பாலா தயாரிப்பில் இரண்டு திரைப்படங்கள், ஒன்று ’டிரம்ப் கார்டு’. இதை ஜோ ராஜகோபால் இயக்குகிறார். மற்றொரு படம் பூலோகம் ரவி இயக்கும் ’சேரநாட்டு யானைதந்தம்’. இந்த இரண்டு இயக்குநர்களும் மிகப்பெரிய ஆளுமைகள். இந்த இரண்டு படங்களின் அறிமுக விழாவுக்கு வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களான இயக்குநர் பேரரசு சார், தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி, இயக்குநர் ஆர்.அரவிந்தராஜ் ஆகியோருக்கு நன்றி.

’டிரம்ப் கார்டு’ திரைப்படத்தில் நானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். முதன்மை கதாபாத்திரத்தில் பாண்டி நடித்திருக்கிறார். நிறை இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க ஆசைப்படுகிறார்கள், அந்த ஆசையால் பெரிய நடைமுறை சிக்கல்களை அனுபவிக்கிறார்கள். கோடி கோடியாக பணம் வைத்திருப்பவர்கள் கூட வெளிநாட்டில் படிக்க ஆசைப்பட்டு, அதற்கான சரியான வழி தெரியாமல் தடுமாறுவதும், பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வதையும் ‘டிரம்ப் கார்டு’ சொல்கிறது. வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு பகுதி நேர வேலை நேர்மையாக கொடுக்கப்படுகிறதா ?, அவர்களுக்கு ஊதியம் சரியாக கொடுக்கப்படுகிறதா ? என்பதையும், வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான ஒரு விழிப்புணர்வு படமாகவும் இந்த படம் இருக்கும்.

‘பஞ்ச தந்திரம்’ உள்ளிட்ட பல பெரிய தமிழ்ப் படங்கள் மற்றும் இந்திய படங்களுக்கு பல்வேறு ஏற்பாடுகளை வெளிநாட்டில் செய்து கொடுத்திருப்பவர் ராஜகோபால் சார். அவருக்கு தெரியாத பிரபலங்களே இல்லை. அடுத்தடுத்த நிகழ்வில், அந்த பிரபலங்கள் பங்கேற்பார்கள்.

’சேரநாட்டு யானைதந்தம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் பூலோகம் ரவி, இயக்குநர் செந்தமிழனிடம் பணியாற்றியவர். ஷங்கர் சாரிடம் பணியாற்றிய செந்தமிழனிடம் பல வருடங்களாக பயணித்து பல அனுபவங்களை பெற்றிருக்கிறார். சசிகுமார் பாலா வெளிநாட்டில் இருந்து வந்து தயாரிக்கிறார். அவருக்கு சினிமா பற்றி சில சந்தேகங்கள், பயம் இருக்கிறது, அதை போக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு. அவர்கள் ஒரு படத்தை தொடங்கும் போது அதை சரியான முறையில் முழுமையாக முடித்து திரைக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அதற்கு முன்பாகவே சில தவறான மனிதர்களால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது. அந்த சூழலில் இருந்து அவரை மீட்டு அவர் நினைத்தது போல் படத்தை முடிக்க நாம் ஒத்துழைக்க வேண்டும்.

ஒரு படம் தயாரித்து அதன் மூலம் லாபம் சம்பாதிக்க வேண்டும், அல்லது போட்ட முதலீட்டை திரும்ப பெற வேண்டும் என்று கூட நினைக்கவில்லை. தயாரிக்கும் படங்கள் சரியான முறையில் முடிவடைந்து திரைக்கு வந்தாலே போதும், என்று தான் நினைக்கிறார்கள். அது நடக்க நாம் ஒத்துழைக்க வேண்டும்.

இரண்டு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய கூடிய பார்த்திபன், மூத்த கலைஞர், அசோக் குமாரிடம் பணியாற்றியவர். இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு மூன்றாவதாக இவர்கள் தயாரிக்கும் படத்தை பார்த்திபன் இயக்குகிறார். அதற்கு ’தேங்காய் சீனிவாசன்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார். முழுக்க முழுக்க காமெடி பட்மாக உருவாக உள்ளது.

குறுகிய காலக்கட்டத்தில் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த பி.ஆர்.ஓ கார்த்திக்குக்கு படக்குழு சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

தயாரிப்பாளர் விஜயமுரளி பேசுகையில், “ஒரே சமயத்தில் இரண்டு படங்கள் எடுக்கிறார்கள், இதை உங்கள் படம் போல் நினைத்து ஊடகத்தினர் சவாலாக எடுத்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இதில் பெரிய நடிகர், நடிகைகள் இல்லை. பெரிய படங்களை பொறுத்தவரை ஒரு புகைப்படத்தை வைத்தே விளம்பரம் செய்யலாம். ஆனால், இதுபோன்ற படங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பது பெரிய சவால், அதை ஊடகத்தினர் செய்ய வேண்டும், என்று கேட்டுக் கொள்கிறேன். தலைப்பு மிக சிறப்பாக இருக்கிறது. தினமும் செய்தியாக வரும் தலைப்பு. இந்த இயக்குநருக்கு வாழ்த்துகள், பெரிய வெற்றியடைய வேண்டும், வாழ்த்துகள்.” என்றார்.

இயக்குநர் ஆர்.அரவிந்தராஜ் பேசுகையில், “படக்குழுவினருக்கு வணக்கம், எங்கு சென்றாலும் நான் தமிழை மறக்க மாட்டேன் என்பது போல், தன் தாய்மொழிக்காகவும், தாய்நாட்டுக்காகவும் வெளிநாட்டில் இருந்து வந்து தமிழ்ப் படங்கள் தயாரிக்கும் சசிக்கு என் வாழ்த்துகள். ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் தயாரிப்பது கூடுதல் சிறப்பு. இரண்டு படங்களின் இயக்குநர்களும் சிறப்பானவர்கள். தலைப்பும் கவனம் ஈர்க்கும் வகையில் இருக்கிறது. இதன் போஸ்டரை பார்க்கும் போதே படத்தில் ஏதோ விசயம் இருப்பது தெரிய வருகிறது. இதில் ஏதோ உலக அரசியல் பேசுகிறார்கள் என்பது புரிகிறது. அரசியல் படம் பண்ணும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நான் ஒரு படம் இயக்கி விட்டு இன்னமும், நீதிமன்றம், வழக்கு என்று பயணித்துக் கொண்டு இருக்கிறேன். அதிலும் உலக அரசியலைப் பற்றி பேசும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

சேரநாட்டு யானைதந்தம் இயக்குநர் பூலோகம் ரவி சிறப்பாக பண்ணியிருப்பார், அவரை எனக்கு நன்றாக தெரியும். இந்த இரண்டு படங்களும் சிறப்பாக வர வேண்டும், அதே போல் படத்தை வெளியிடும் போது சரியான நேரத்தில் வெளியிட வேண்டும், அது தான் இப்போது மிக முக்கியமானதாக இருக்கிறது. இரண்டு படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், “தயாரிப்பாளர் சசி அவர்கள் இன்று இரண்டு படங்களை அறிவித்துள்ளார். இன்று ஒரு படம் அறிவிப்பதே சவலாக இருக்கிறது. இது அவரது நம்பிக்கை, சினிமா மீதான காதல். இரண்டு படங்களின் தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது. ஒன்று டிரம்ப் கார்டு, டிரம்ப் நம்மை வம்புக்கு இழுத்தது போல், அவரை நாம் வம்புக்கு இழுக்கிறோமா என்று படம் வெளியாகும் போது தான் தெரியும். மற்றொன்று சேரநாட்டு யானைதந்தம். இந்த தலைப்பே யோசிக்க வேண்டியது. இது முழுக்க முழுக்க காதல் கதை. இது சேர நாடு, டிரம்ப் கார்டு அயல் நாடு, இரண்டு நாடுகளை வைத்து எழுதியிருக்கிறார்கள்.

டிரம்ப் கார்டு என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே தேவைப்படுகிற விசயம், முன்பெல்லாம் இங்கு படித்துவிட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு போவது போதையாக இருந்தது, இப்போது வெளிநாட்டில் படிப்பதே போதையாகிவிட்டது. இது நல்லதா ஆபத்தானதா என்று யோசித்தால், இது ஆபத்து தான். உங்களுக்கு உலகளவில் அனைத்து நாடுகளிலும், விரும்புகிற ஆட்கள் இந்தியர்கள், அவர்கள் அறிவாளிகள். ஏழு எட்டு ஆண்டுகளாக வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்ற ஆசை மாணவர்களிடம் அதிகரித்திருக்கிறது. அதற்கு முன்பு இந்தியாவில் படித்தவர்களை தான் வெளிநாட்டுக்கு வேலைக்கு அழைப்பார்கள். இன்று படிக்க செல்கிறார்கள், அதில் உள்ள சிக்கல்கள் என்ன என்று இயக்குநர் படத்தில் விரிவாக சொல்லியிருப்பார், என்று நினைக்கிறேன்.

ஒரு காலத்தில் துபாய்க்கு வேலைக்காக இந்தியர்களை தான் அதிகமாக அழைத்தார்கள். அங்கு அனைத்து வேலைகளுக்கும் நம் ஆட்கள் தான் பயன்படுத்தினார்கள். ஆனால், இப்போது இந்தியர்களை துரத்துகிறார்கள், காரணம் அவர்களுக்கான வேலைகள் முடிந்து விட்டது. இனி இந்தியவர்கள் தேவையில்லை என்று நினைக்கிறார்கள். சாலைகள் போடுவது உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக பயன்படுத்தப்பட்ட இந்தியர்கள், அத்தகைய பணிகள் முடிந்த உடன், விரட்டப்படுகிறார்கள். அமெரிக்காவிலும் தற்போது அதே நிலை தான் ஏற்பட்டுள்ளது. எனவே, அம்மா – அப்பா என்று குடும்பத்துடன் வாழ்வது தான் வாழ்க்கை. வெளிநாட்டில் இருப்பவர்கள், வேலை செய்பவர்கள் தங்களை ஒரு அனாதையாக நினைக்கிறார்கள்.

குழந்தைகளை பிளே ஸ்கூலில் சேர்க்கிறார்கள், எந்த வயதில், அப்பா – அம்மா அரவணைப்பு இருக்க வேண்டுமோ அந்த வயதில் அவர்களை பிளே ஸ்கூலில் சேர்க்கிறார்கள். அதேபோல், எந்த வயதில் பிள்ளைகள் அப்பா – அம்மாவுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமோ அந்த வயதில் அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி விடுகிறோம். பெற்றோருக்கு உறுதுணையாக இல்லாதவர்கள் பிள்ளைகளே இல்லை.

’சேரநாட்டு யானைதந்தம், வித்தியாசமான காதல் கதையாக இருக்கும். கதை பற்றி இயக்குநர் விரிவாக சொல்லவில்லை. ஆனால், கதையில் ஏதோ விசயம் இருக்கும் என்பது தெரிகிறது. பூலோகம் ரவி நல்ல விசயம் வைத்திருப்பார் என்று தெரிகிறது. இரண்டு படங்களும் பெரிய வெற்றி பெற வேண்டும், வாழ்த்துகள்.” என்றார்.

தயாரிப்பாளர் சசிகுமார் பாலா பேசுகையில், “குறுகிய காலத்தில் இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த பி.ஆர்.ஓ கார்த்திக் அவர்களுக்கு நன்றி. நான் கனடாவில் இருந்து வந்திருப்பதாக சொல்கிறார்கள், நான் இலங்கை நாட்டை சேர்ந்தவன், இலங்கை மலையக தமிழன். கனடா சென்று, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளை செய்திருக்கிறேன். இதற்கு முன்பு நான் ஒரு படத்தில் தயாரிப்பாளராக அறிமுகமானேன், அப்படத்தின் இயக்குநர் சுதாகரன் அண்னாவுக்கு நன்றி. அதன் மூலமாக ராஜகோபால் சார் அறிமுகம் கிடைத்து பிறகு பூலோகம் ரவியின் அறிமுகம் கிடைத்து, அவர்களிடம் கதை கேட்டு, வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற முயற்சியில் இந்த இரண்டு படங்களை ஆரம்பித்திருக்கிறோம். இந்த இரண்டு படங்களும் மக்களுக்கான கமர்ஷியல் படங்களாக மட்டும் இன்றி, ஒரு விழிப்புணர்வு படங்களாக இருக்கும், நன்றி.” என்றார்.

இயக்குநர் ஜியோ ராஜகோபால் பேசுகையில், “பெருமைக்காகவோ, பெயருக்காகவோ இங்கு நான் வரவில்லை, ஒரு திரைப்படம் தயாரிக்க வேண்டும், இயக்குநர் பேரரசு போல் ஒரு இயக்குநராக வேண்டும் என்பது தான் என் ஆசை. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து படிக்க செல்லும் மாணவர்கள், தங்களது பெற்றோர்கள் செலவில் செல்கிறார்கள். ஆனால், அவர்களுக்கான பண தேவைக்காக அங்கு வேலை செய்கிறார்கள். அப்போது அங்கிருக்கும் காய்ககறி உள்ளிட்ட கடைகளை நடத்தும், நமது மக்களில் சிலர் அவர்களை அடிமைப்போல் நடத்துகிறார்கள். படிக்க வரும் போது நேர் வழியாக வர வேண்டும், டிரம்ப் கார்டு என்பது அது தான். டிரம்ப் என்ன சொல்கிறார், நேர் வழியாக வாருங்கள், கல்லத்தனமாக வந்தால் நீங்ட்கள் உங்கள் வாழ்க்கையை இழக்க நேரிம், என்கிறார். அதை தான் டிரம்ப் கார்டு படமும் சொல்கிறது. அதேபோல், மொழி, ஜாதி கடந்து மக்கள் வாழும் நாடு கனடா, அங்கு அனைவருக்கும் சம உரிமை வழங்கப்படுகீறது. அதுபோல் உலகத்தின் அனைத்து நாடுகளில் இருந்து வரும் மாணவர்களுக்கும், இந்திய மாணவர்களுக்கும் அதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுக்க வேண்டும். வல்லரசாக வேண்டும் என்ற பேரரசுவின் ஆசைப்படி, இந்தியா கல்வி மற்றும் செல்வத்தில் திளைத்து மேல் நாடுகள் போல் வளர்ந்து, மாணவர்கள் வெளிநாடு செல்லாமல் இங்கேயே படிப்பை முடித்து, இந்த நாட்டுக்குள்ளேயே பணிகளை செய்து, ஆற்றலை வழங்க வவேண்டும் என்பது தான் எங்கள் ஆசை, நன்றி” என்றார்.

இயக்குநர் பூலோகம் ரவி பேசுகையில், “எனக்கு இந்த வாய்ப்பளித்த சசி சார் மற்றும் ராஜகோபால் சாருக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் அம்மா பெயர் பூலோகம் அதனால் நான் பூலோகம் ரவி என்று பெயர் வைத்திருக்கிறேன். நான் பூலோகம் படத்தில் பணியாற்றவில்லை. அந்த படம் வெளியான பிறகு அதன் இயக்குநர் நான் தான் என்று நினைத்தார்கள், அது நான் இல்லை, என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். பல நாள் ஆசை திருநாளாச்சு…., அதற்கு காரணம் ராஜகோபால் சார், சசி சார் தான், அவர்கள் தான் என் கடவுள்கள், என்று கூறி தயாரிப்பாளர் காலி விழுந்தார்.

தொடர்ந்து பேசியவர், “எவ்வளவு வலி, கஷ்ட்டங்கள் இருந்தது, ஒரு படம் பண்ணுவது மிகவும் கஷ்ட்டம், அது எனக்கு கிடைத்தது இவர்களால் தான். வெளிநாட்டில் இருந்து வரும் தயாரிப்பாளர்கள் பலர், பத்து படங்கள் தயாரிப்போம், என்று அறிவிப்பார்கள். ஆனால், ஒன்று, இரண்டு படங்களோடு சென்று விடுவார்கள். ஆனால், சசி சார், தொடர்ந்து பல படங்களை தயாரிப்பார், பத்து படங்களுக்கு மேலாக படங்கள் தயாரிப்பார், என்று நான் சொல்கிறேன். காரணம், ‘சேரநாட்டு யானைதந்தம்’ மிகப்பெரிய ஹிட்டாகும். அதில் அவர் பணம் சம்பாதிப்பார், அதன் மூலம் அவர் அடுத்த படம் பண்ணுவார், என்னைப் போல் பல இயக்குநர்களை உருவாக்குவார். நன்றி.” என்றார்.

நடிகர் பிளாக் பாண்டி பேசுகையில், “டிரம்ப் கார்டு படத்தில் நான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இப்படி ஒரு கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்த ஜியோ ராஜகோபால் சார், சசி சாருக்கு நன்றி. எங்கள் படக்குழுவினருக்கு நன்றி, உங்களுடன் பயணிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. உதவும் மனிதம் என்ற என்னுடைய அறக்கட்டளை சார்பில் இலங்கையை சேர்ந்த நான்கு மாணவிகளை, அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் படிக்க வைத்திருக்கிறோம். இதுவரை சுமார் 70-க்கும் மேற்பட்டவர்களை நாங்கள் படிக்க வைத்திருக்கிறோம். சசி சாரும், ராஜகோபால் சாரும் இலங்கை தான். மலையகம் மக்கள் அங்கு மிகவும் கஷ்ட்டத்தில் தான் இருக்கிறார்கள். அவர்கள் இன்னமும் அங்கு அடிமைகளாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவங்க பிள்ளைகள் படிப்புக்காக ஏங்குகிறார்கள். என்னிடம் பல பேர் கேட்டார்கள், இங்கே செய்யாமல் ஏன் இலங்கைக்கு செய்கிறாய், என்று. எனக்கு அதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது, அதனால் செய்கிறேன். இங்கு தான் செய்ய வேண்டும் அல்ல, கஷ்ட்டப்படுகிறவர்கள் எங்கிருந்தாலும் செய்யலாம். எனக்கு அப்படி ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்த அன்னை வேளாங்கண்ணி கல்லூரி சேர்மன் தேவானந்த் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 20 சீட் கொடுத்தார், இந்த முறை நான்கு தான் கிடைத்தது. அடுத்த முறை 20 சீட் கொடுப்பதாக சொல்லியிருக்கிறார். கல்விக்கு நிகர் எதுவும் இல்லை. படிப்பு தான் ஒரு மனிதன் உயர்வுக்கு முதல்படி. நான் பத்தாம் வகுப்பு பெயிலானவன், அதனால் என் தங்கையை பொறியியல் படிக்க வைத்தேன். படிப்பு இல்லை என்றால் வாழ்க்கையில் பிடிப்பில் இல்லாமல், ஒருவித தோல்வி பயத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. எனவே கல்வி தொடர்பான எந்த விசயமாக இருந்தாலும் எனக்கு ஒரு ஏக்கம், ஆதங்கம் இருந்துக்கொண்டே இருக்கும். சமூகத்தில் இருந்து எடுக்கிறோம், சம்பாதிக்கிறோம், எனவே சமூகத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என்று அனைவரும் நினைப்பது உண்டு.

இன்று எங்களை போன்ற கலைஞர்களை வாழ வைப்பது சிறு படங்கள் தான், சினிமா உலகம் வாழ்வது சிறு பட தயாரிப்பாளர்களால் தான். நான் விஜய் அண்ணாவோ அல்லது அஜித் சாரோ கிடையாது. ஒரு படம் ஓடவில்லை என்றால் அனைவருக்கும் விளக்கம் கொடுக்க முடியாது. ஒவ்வொரு படைப்புக்காகவும் நாம் உணர்வுப்பூர்வமாக உழைத்திருப்போம், ஆனால் அது சரியாக போகவில்லை என்றால் அதற்கு நாம் பொறுப்பல்ல, சூழல் தான் பொறுப்பு. இங்கு குறைகள் நிறைய இருக்கு, ஆனால் அதை நிறையாக பார்க்க வேண்டும். இன்று இங்கு மைக் இல்லை, சரியான அரங்கம் இல்லை என்பது உண்மை தான், ஆனால் குறுகிய காலக்கட்டத்தில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது ஒரு பெரிய விசயம் தானே, அதை செய்த பி.ஆர்.ஓ கார்த்திக் சாருக்கு நன்றி. இந்த உலகத்தில் குறை இல்லாமல் எதுவும் இல்லை, பிளஸ் மைனஸ் இருக்க தான் செய்யும், நாம் தான் அனைத்தையும் பாசிட்டிவாக பார்க்க வேண்டும்.

டிரம்ப் கார்டு தலைப்பை பார்த்த உடன் கொஞ்சம் பயமாக தான் இருந்தது. அமெரிக்கா போனால் எதாவது பிரச்சனை வருமா ? என்று யோசித்தேன். ஆனால், அப்படி இல்லாமல் டிரம்ப் சொல்வது சரியானது, என்று சொல்வது தான் இந்த படம். இதில் நான் ஒரு மாணவனாக நடிக்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த எனது உறவுகளுக்கு நன்றி. ஒரு படம் உருவாக வேண்டும், அதை சரியான முறையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று உழைக்கும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. இது அறிமுக நிகழ்ச்சி தான். அடுத்தடுத்த நிகழ்வில் படம் பற்றிய பல விசயங்களை சொல்வோம். நன்றி.” என்றார்.

ஒளிப்பதிவாளர் எஸ்.பார்த்திபன் பேசுகையில், “இரண்டு படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறேன். இரண்டும் வெவ்வேறு வண்ணங்கள். ஒரு படம் வெளிநாடு, மற்றொரு படம் கிராமம், இரண்டுமே வித்தியாசமாக இருக்கும். இரண்டு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துவிட்டு, படம் இயக்குவது என்பது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு, எனக்கு கிடைத்திறுக்கிறது. அதற்கு சசி சாருக்கும், ராஜகோபால் சாருக்கும் நன்றி. எனது முதல் படம் காமெடி படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன், அதன்படி தான் முதல் படத்தை இயக்க இருக்கிறேன். என்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு உழைத்திருக்கிறேன், இயக்குநர்களுடன் இணைந்து பயணித்திருக்கிறேன். இந்த இரண்டு படங்களும், நான் இயக்கும் படமும் என்று மூன்று படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நன்றி.” என்றார்.

படத்தொகுப்பாளர் கணேஷ் குமார்.டி பேசுகையில், “இரண்டு படங்களுக்கும் படத்தொகுப்பாளராக என்னை தேர்வு செய்த, ராஜகோபால் சார் மற்றும் சசி சாருக்கு நன்றி. இந்த படத்தின் காட்சிகளை பார்த்த போதே படம் எப்படி வரப்போகிறது என்று எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. முழுமையாக படத்தொகுப்பு செய்துவிட்டு, படம் எப்படி வந்திருக்கிறது, என்று அடுத்த சந்திப்பில் சொல்கிறேன். நன்றி.” என்றார்.

தலைப்பு மூலமாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இரண்டு படங்களின் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படம் பற்றிய மேலும் பல தகவல்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பற்றி படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர்.

Wonderla Chennai to Open on December 2: A New Era of Entertainment for Tamil Nadu

0

India’s first Bolliger & Mabillard (B&M) Inverted Coaster ‘Tanjora’, and a unique elevated Sky Rail to debut in Chennai, marking Wonderla’s presence in Tamil Nadu

Chennai, 18 November 2025: Wonderla Holidays, India’s largest amusement park chain, today announced the launch of Wonderla Chennai, its fifth and most ambitious park project, marking a futuristic milestone in India’s family entertainment landscape. Spanning across 64.30 acres (of which 37 acres are currently developed) along Chennai’s scenic Old Mahabalipuram Road and built with an investment of over INR 611 crores, Wonderla Chennai represents a bold new chapter, blending a fusion of futuristic innovation and ancient Tamil architecture. The park will be officially inaugurated on 1st December 2025 by Chief Minister M.K. Stalin along with other chief dignitaries, and will open to the public on 2nd December 2025.

The announcement was made at a press conference attended by Arun K. Chittilappilly (Executive Chairman & Managing Director), Dheeran Choudhary (COO), Ajikrishnan A G(VP-Engineering) and Vyshakh Ravindran (Park Head – Chennai).

Wonderla Chennai features 43 world-class rides across high thrill, family, kids, and water categories,  built to entertain up to 6,500 visitors daily. Tickets for Wonderla Chennai start at a base price of ₹1,489, with a 10% discount available for online bookings and a 20% concession for college students presenting a valid ID, along with other curated offers for groups and seasons.

Speaking on the launch, Arun K Chittilappilly, Executive Chairman and Managing DirectorWonderla Holidays said, “Wonderla Chennai is the culmination of a decade-long dream, made possible through the continued support and encouragement of the Government of Tamil Nadu. We’ve created what we believe is India’s most advanced and immersive amusement park. We wanted Wonderla Chennai to truly belong to the people of Tamil Nadu, to reflect their creativity, culture, and warmth. Every corner of the park tells that story, from its temple-inspired design to its authentic local flavours.  This launch not only marks our presence across all of South India, but also reflects our deep appreciation for Tamil Nadu’s progressive vision for tourism and infrastructure. We look forward to welcoming families and adventure seekers from across the country”


Photo Caption (left to right) – Vyshakh Ravindran, Park Head-Chennai, Wonderla Holidays Ltd; Dheeran Choudhary, COO,  Wonderla Holidays Ltd; Arun K Chittilappilly, Executive Chairman and Managing Director, Wonderla Holidays Ltd.; Ajikrishnan AG, VP -Engineering, Wonderla Holidays Ltd.

சென்னை வொண்டர்லா டிசம்பர் 2 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது : தமிழ்நாட்டில் பொழுதுபோக்கிற்கான ஒரு புதிய சகாப்தம்

இந்தியாவின் முதல் பொலிகர் & மாபில்லார்ட் (B&M) இன்வெர்ட்டட் கோஸ்டர் ‘தஞ்சோரா’ மற்றும் தமிழ்நாட்டில் வொண்டர்லாவின் இருப்பைக் குறிக்கும் வகையில் சென்னையில் அறிமுகமாகும் தனித்துவமான உயர்த்தப்பட்ட ஸ்கை ரெயில் ஆகியவை இடம்பெற்றுள்ளன

சென்னை, 18 நவம்பர் 2025 : இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்கா சங்கிலியான
வொண்டர்லா ஹாலிடேஸ், வொண்டர்லா சென்னையை இன்று தொடங்குவதாக
அறிவித்துள்ளது, இது இந்தியாவின் குடும்ப பொழுதுபோக்கு நிலப்பரப்பில் ஒரு
எதிர்காலத்திய மைல்கல்லைக் குறிக்கிறது. சென்னையின் அழகிய பழைய மகாபலிபுரம்
சாலையில் 64.30 ஏக்கர் பரப்பளவில் (இதில் 37 ஏக்கர் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது) 611
கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டில் கட்டப்பட்டுள்ள வொண்டர்லா சென்னை,
எதிர்கால புதுமை மற்றும் பண்டைய தமிழ் கட்டிடக்கலை ஆகியவற்றின் கலவையைக் கலந்து
ஒரு துணிச்சலான புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. இந்த பூங்காவை 2025 டிசம்பர் 1ஆம்
தேதி அதிகாரப்பூர்வமாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்ற முக்கிய பிரமுகர்களுடன்
இணைந்து திறந்து வைக்கிறார். இந்த பூங்கா 2025 டிசம்பர் 2 ஆம் தேதி பொதுமக்களுக்கு
திறக்கப்படும்

அருண் K.சிட்டிலப்பிள்ளி (செயல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்), தீரன் சவுத்ரி (COO),
அஜிகிருஷ்ணன் A G (VP -பொறியியல்) மற்றும் வைஷாக் ரவீந்திரன் (பூங்கா தலைவர் –
சென்னை) ஆகியோர் கலந்து கொண்ட செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு
வெளியிடப்பட்டது.

வொண்டர்லா சென்னையில் 43 உலகத் தரம் வாய்ந்த சவாரிகள் உள்ளன, இதில் உயர் த்ரில்,
குடும்பம், குழந்தைகள் மற்றும் நீர் விளையாட்டுகள் என்ற பிரிவுகளில் உள்ளன, இவை
தினமும் 6,500 பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன.
வொண்டர்லா சென்னைக்கான டிக்கெட்டுகள் ரூ.1,489 அடிப்படை விலையில்
தொடங்குகின்றன, ஆன்லைன் முன்பதிவுகளுக்கு 10% தள்ளுபடியும், ஒரிஜினல் கல்லூரி
ஐடியை காண்பிக்கும் மாணவர்களுக்கு மட்டும் 20% சலுகையும், குழுக்கள் மற்றும்
பருவக்காலங்களுக்கு ஏற்ப பிற தேர்ந்தெடுக்கப்பட்ட சலுகைகளும் உள்ளன.

இந்த அறிமுக நிகழ்வில் பேசிய வொண்டர்லா ஹாலிடேஸின் நிர்வாகத் தலைவரும் நிர்வாக
இயக்குநருமான அருண் K சிட்டிலப்பிள்ளி, “வொண்டர்லா சென்னை என்பது ஒரு தசாப்த
கால கனவின் உச்சக்கட்டமாகும், இது தமிழக அரசின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும்
ஊக்கத்தால் சாத்தியமானது. இந்தியாவின் மிகவும் மேம்பட்ட மற்றும் ஆழமான
பொழுதுபோக்கு பூங்கா என்று நாங்கள் நம்புவதை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
வொண்டர்லா சென்னை உண்மையிலேயே தமிழ்நாட்டு மக்களுக்குச் சொந்தமானது,
அவர்களின் படைப்பாற்றல், கலாச்சாரம் மற்றும் அரவணைப்பை பிரதிபலிக்க வேண்டும்
என்று நாங்கள் விரும்பினோம். தமிழ்நாட்டின் கோயில் சார்ந்த வடிவமைப்பு முதல் அதன் உண்மையான உள்ளூர் சுவைகள் வரை பூங்காவின் ஒவ்வொரு மூலையிலும் அந்தக்
கதையைச் சொல்கிறது, இந்த அறிமுகம் தென்னிந்தியா முழுவதும் எங்கள் இருப்பைக்
குறிப்பது மட்டுமல்லாமல், சுற்றுலா மற்றும் உள்கட்டமைப்புக்கான தமிழ்நாட்டின்
முற்போக்கான பார்வைக்கு எங்கள் ஆழ்ந்த பாராட்டுகளையும் பிரதிபலிக்கிறது. நாடு
முழுவதிலுமிருந்து வரும் குடும்பங்கள் மற்றும் சாகச விரும்பிகளை வரவேற்க நாங்கள்
எதிர்நோக்குகிறோம்” என்று கூறினார்.

“வொண்டர்லா ஹாலிடேஸின் தலைமை இயக்க அதிகாரி தீரன் சவுத்ரி அவர்கள்,
“வொண்டர்லா சென்னையைத் திறப்பதன் மூலம், வொண்டர்லாவின் பாதுகாப்பு, புதுமை
மற்றும் செயல்பாட்டு பாரம்பரியத்தை தொடர்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். சவாரி
செயல்பாடுகள் மற்றும் விருந்தினர் சேவைகள் முதல் சுகாதாரம் மற்றும் விருந்தினர் கூட்ட
மேலாண்மை வரை பூங்காவின் ஒவ்வொரு அம்சமும் ஒரு தடையற்ற அனுபவத்தை வழங்க
துல்லியமாக திட்டமிடப்பட்டுள்ளது. சவாரிகள் மற்றும் ஈர்ப்புகளுக்கு அப்பால், வொண்டர்லா
சென்னை கொண்டாட்டத்திற்கான ஒரு இடமாகவும், பண்டிகைகள், மற்றும் மகிழ்ச்சியின்
பகிரப்பட்ட தருணங்களைக் குறிக்க குடும்பங்களும், சமூகஅமைப்புகளும் ஒன்றிணையும்
இடமாகவும் மாற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். சிந்தனையுடன்
வடிவமைக்கப்பட்ட மதிப்புமிக்க சலுகைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பருவகால நிகழ்வுகள்
மற்றும் அணுகக்கூடிய விலை நிர்ணயம் மூலம், உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்குகளை
தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் நாட்காட்டியின் ஒரு பகுதியாக மாற்றுவதே எங்கள்
குறிக்கோள்” என்று கூறினார்.

சென்னைக்காக உருவாக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த சவாரிகள்.
இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய பொலிகர் & மாபில்லார்ட் (B&M) இன்வெர்ட்டட்
கோஸ்டர் தஞ்சோரா:
பல சுழற்சிகள், ஜீரோ-ஜி ரோல்கள் மற்றும் தரையற்ற உள்ளமைவு ஆகியவற்றைக் கொண்ட
சுவிஸ் பொறியியலில் உருவாக்கப்பட்ட தலைசிறந்த படைப்பு, பறப்பதன் உண்மையான
உணர்வை வழங்குகிறது.

ஸ்பின் மில்:
செங்குத்து சுழல்கள், பல-அச்சு இயக்கம் மற்றும் 4.5G விசைகளை இணைக்கும் 50 மீட்டர்
உயரத்தில் இந்தியாவின் மிக உயரமான ஸ்பின்னிங் த்ரில் சவாரி.

ஸ்கை ரயில்:
பூங்காவிலிருந்து 12 மீட்டர் உயரத்தில் 540 மீட்டர் நீள மோனோ ரயில், வைக்கிங் பாணியால்
ஈர்க்கப்பட்ட தங்க கோண்டோலாக்களிலிருந்து பரந்த காட்சிகளை வழங்குகிறது.

வடிவமைப்பு கலாச்சாரத்தை சந்திக்கிறது
இள்ளலூர் கிராமத்தில் அமைந்துள்ள வொண்டர்லா சென்னையின் வடிவமைப்பு,
பார்வையாளர்களை “காலம் மற்றும் இடம் வழியாக ஒரு விண்வெளி பயணத்திற்கு”
அழைத்துச் செல்கிறது – கல்லில் செதுக்கப்பட்ட பாரம்பரிய வழிகளிலிருந்து நவீனகால சவாரி
மண்டலங்களுக்கு மாறுகிறது.

➢ காலநிலைக்கு ஏற்ப பல நிழல் மண்டலங்கள், இயற்கை காற்றோட்டம் மற்றும் பூர்வீக
நிலத்தோற்றம் ஆகியவற்றுடன் உள்ளது.
➢ தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கல் மற்றும் கிரானைட் போன்ற
உள்ளூரில் இருந்து பெறப்பட்ட பொருட்கள்.

சவாரிகளுக்கு அப்பால் – உணவு, நிகழ்ச்சிகள் மற்றும் சில்லறை விற்பனைச் சலுகைகள்.

வொண்டர்லா சென்னை, தமிழ்நாட்டின் வளமான சமையல் பன்முகத்தன்மையை 8
கருப்பொருள் உணவு அரங்குகள் (1,384 இருக்கைகள்) மூலம் கொண்டாடுகிறது,
ஒவ்வொன்றும் திண்டுக்கல் பிரியாணி, செட்டிநாடு சிக்கன் மற்றும் சென்னை பாணி கடல்
உணவு போன்ற பிராந்திய சிறப்புகளை வழங்குகிறது – சர்வதேச விருப்பங்களுடன்.
விருந்தினர்கள் பஃபேக்கள், எ லா கார்டே டைனிங், நேரடி சமையல் கவுண்டர்கள் மற்றும்
கியோஸ்க்குகளின் கலவையை அனுபவிக்கலாம். வொண்டர்லாவின் “மேக்-ரெடி-டிஸ்கார்ட்”
தத்துவத்தின் மூலம் சுகாதாரம் மற்றும் புத்துணர்ச்சி உறுதி செய்யப்படுகிறது, ஒவ்வொரு
உணவும் ஒரே நாளில் புதிதாக தயாரிக்கப்பட்டு பரிமாறப்படுவதை உறுதி செய்கிறது.

தமிழ் சினிமாவால் ஈர்க்கப்பட்ட பொருட்கள் மற்றும் உள்ளூர் கைவினைஞர்களுடன்
இணைந்து தஞ்சாவூர் மற்றும் மரப்பாச்சி பொம்மைகளை உருவாக்கி, பிராந்திய கைவினை
மரபுகளை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விருந்தினர் வசதிகளில் தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கான விசாலமான உடை
மாற்றும் அறைகள் மற்றும் லாக்கர் அறைகள், எல்லா நேரங்களிலும் பணியாளர்களைக்
கொண்ட முதலுதவி மற்றும் துணை மருத்துவ நிலையங்கள், 1500 இருக்கைகள் கொண்ட
பல்நோக்கு மாநாட்டு மண்டபம், 8500 சதுர அடி பரப்பளவு கொண்ட திறந்தவெளி நிகழ்வு
இடம், பெருநிறுவனக் கூட்டங்கள், கொண்டாட்டங்கள் மற்றும் சமூக நிகழ்வுகளுக்கு ஏற்றது.
இந்தப் பூங்காவில் பிரத்யேக குழந்தை பராமரிப்பு/ குழந்தைகள் நட்பார்ந்த மண்டலங்கள்
மற்றும் தடையற்ற பாதைகள் உள்ளன. ஒவ்வொரு விருந்தினருக்கும் அணுகல், பாதுகாப்பு
மற்றும் வசதியை உறுதி செய்கிறது.

பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம்
1,000க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டம் தமிழக அரசின் தொழில்துறை வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுப்
பணியகத்தால் எளிதாக்கப்பட்டது, இது சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு
உள்கட்டமைப்பிற்கான மாநிலத்தின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

➢ 3.75 கோடி லிட்டர் மழைநீர் சேகரிப்பு தொட்டி
➢ 1,000 கிலோவாட் சூரிய மின்சக்தி நிறுவல் (கட்டம் 2)
➢ 32,000 சதுர மீட்டர் பசுமைப் போர்வை மற்றும் 1,000+ பூர்வீக மரங்கள்
➢ EN 13814, IS 3328, மற்றும் IS 10500 தரநிலைகளுக்கு இணங்கும் நீர் மற்றும் சவாரி
அமைப்புகள்

தமிழ்நாட்டில் நுழைவதன் மூலம், வொண்டர்லா பொழுதுபோக்கு மற்றும் ஓய்வுநேரத்
துறையில் அதன் தலைமையை வலுப்படுத்துகிறது, தென்னிந்தியா முழுவதும் அதன் இருப்பை
ஆழப்படுத்துகிறது மற்றும் நாட்டின் துடிப்பான சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு
நிலப்பரப்பில் வலுவான தேசிய தடம் பதிக்க வழி வகுக்கிறது.

–முடிவுகள்–

வொண்டர்லா பார்வையாளர்கள் தங்கள் நுழைவுச் சீட்டுகளை
https://bookings.wonderla.com/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய ஊக்குவிக்கிறது.
ஆன்லைன் போர்டல் மூலம் முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் அல்லது
வாடிக்கையாளர்கள் பூங்கா கவுண்டர்களில் இருந்து நேரடியாக டிக்கெட்டுகளை வாங்கலாம்
அல்லது சென்னை பூங்காவை தொடர்பு கொள்ளலாம் -: 044-35024222, 044-35024300.

About Wonderla Holidays Ltd.
Wonderla Holidays Limited is India’s largest and premier amusement park operator, offering
world-class entertainment experiences across its amusement parks and premium resorts.
The company operates four top-tier amusement parks in Kochi, Bengaluru, Hyderabad, and
Bhubaneswar, alongside the acclaimed Wonderla Resort and the newly-introduced, The Isle
by Wonderla, a premium waterside retreat in Bengaluru. Known for its thrilling attractions,
including custom-designed rides from leading international suppliers, Wonderla continues to
set the benchmark in family entertainment. In addition to its parks, Wonderla offers serene,
immersive experiences through its resorts, blending leisure and entertainment in one
seamless destination. Since its inception in 2000, over 46 million guests have enjoyed
Wonderla parks, solidifying its position as India’s most-visited amusement park chain, while
its resorts continue to redefine luxury leisure and hospitality.

For further details, visit www.wonderla.com , or mail [email protected]

கிஷோர் – TTF வாசன் இணைந்து மிரட்டும் ‘IPL (இந்தியன் பீனல் லா)’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

0

ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G. R. மதன் குமார் தயாரிப்பில் கருணாநிதி இயக்கத்தில் கிஷோர் – TTF வாசன், அபிராமி, குஷிதா ஆகியோரின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘IPL (இந்தியன் பீனல் லா)’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

‘IPL -இந்தியன் பீனல் லா’ திரைப்படத்தில் கிஷோர், TTF வாசன், குஷிதா, அபிராமி, சிங்கம் புலி, ஹரிஷ் பெராடி, ‘ஆடுகளம்’ நரேன், ஜான் விஜய், போஸ் வெங்கட், திலீபன், ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். S. பிச்சு மணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் G.R. மதன் குமார் தயாரித்திருக்கிறார்.

இம்மாதம் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் முத்திரை பதித்த இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஆர். கே. செல்வமணி, ஆர். வி. உதயகுமார், பேரரசு ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் மதன் குமார் பேசுகையில், ”இந்த விழாவிற்கு வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.

இந்தப் படத்தின் ஹீரோ வாசன், அவரது ஒரு முகத்தை காண்பித்து நன்றாக நடித்திருக்கிறார். அவரைப் பற்றி பேசுவதற்கு பல அத்தியாயங்கள் உள்ளது. அவருக்கு இன்னும் பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதற்கும் என் வாழ்த்துகள்.

இயக்குநர் கருணாநிதி என் நெருங்கிய நண்பர். எங்கள் இருவருக்கும் இடையே 25 ஆண்டு கால நட்பு இருக்கிறது. ஒரு நாள் என்னை சந்தித்து யதார்த்தமாக இப்படத்தின் கதையை சொன்னார். இது உண்மை கதை. எல்லோருடைய வாழ்விலும் நடைபெற்று இருக்கக்கூடும். பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் இது போன்ற சம்பவங்களை எதிர்கொண்டு அதிலிருந்து பிறகு மெல்ல மெல்ல மீண்டு வந்திருப்பார்கள். நாட்டில் நடைபெறுகிற ஒரு விஷயம் தான் . அதனை இப்படத்தின் முன்னோட்டத்திலேயே நீங்கள் பார்த்திருக்கலாம். இந்தப் படத்தை அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த படத்தை தமிழகம் முழுவதும் எங்கள் நிறுவனமே வெளியிடுகிறது.

இதற்கெல்லாம் தொடக்க புள்ளி என ஒன்று இருக்கிறது. அவர்தான் என்னுடைய இனிய நண்பர் மார்ட்டின் சுரேஷ். கொரோனா காலகட்டத்தின் போது அதிகார வர்க்கத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டவர். இவர் சொன்ன சம்பவங்களை தழுவி தான் இப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் கருணாநிதி எழுதி, சிறப்பான படத்தை உருவாக்கி இருக்கிறார்,” என்றார்.

பாடலாசிரியர் கு. கார்த்திக் பேசுகையில், ”இப்படத்திற்காக என்னைத் தொடர்பு கொண்டு, ‘ஐபிஎல்’ என்றொரு படம்,
இது போன்றதொரு சூழல், கவித்துவமான பாடல் வரிகள் வேண்டும் என இசையமைப்பாளரும், இயக்குநரும் கேட்டுக் கொண்டனர். இந்தப் படத்தில் ‘யாவளோ..’ எனத் தொடங்கும் பாடலை எழுதியிருக்கிறேன்.

இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி என்னிடம் பேசும் போது ஒரு மெட்டின் அடிப்படை அமைப்பை அனுப்பி, இதற்கு பாடல் வரிகள் எழுத வேண்டும் என கேட்டார். நாங்கள் இருவரும் நேரில் சந்தித்துக் கொள்ளாமல் வாட்ஸப் மூலமாகவே உரையாடினோம். எனக்கு முதலில் முழு திருப்தி கிடைக்கவில்லை. அதன் பிறகு இசையமைப்பாளர், ‘முயற்சி செய்து பார்ப்போம். நன்றாக வரும்’ என்றார். அதன் பிறகு இசையை இணைத்து, கோர்த்து முழுமையான பாடலாக வழங்கும் போது, அதில் ஒரு ஃபீல் இருந்ததை உணர்ந்தேன், மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அத்துடன் அந்த பாடலுக்கு பொருத்தமான பாடகர், பாடகியையும் தேர்வு செய்திருந்தார். அந்தப் பாடலை சின்மயி பாடியிருந்தார்கள். சிவம் மகாதேவனும் தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இது போன்ற வெற்றி பாடலை வழங்கிய இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்திக்கு வாழ்த்துகள். மிகுந்த உயரத்திற்கு செல்வார் என்று நம்புகிறேன்,” என்றார்.

இயக்குநர் ஆர். கே. செல்வமணி பேசுகையில், ”இப்படத்தின் இயக்குநர் கருணாநிதி என்னுடைய நண்பர். இயக்குநர் சங்கத்தில் எங்களுடன் இணைந்து பணியாற்றுபவர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இப்படத்தின் பணியில் ஈடுபட்டிருந்தார். படப்பிடிப்பு நடைபெறும் தருணங்களில் என்னை சந்தித்து, ‘இன்னென்ன பிரச்சனை’ என்று ஒவ்வொரு பிரச்சனையையும் பட்டியலிடுவார். அனைத்து பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைப்பேன். இந்த மேடையில் இயக்குநரையும், தயாரிப்பாளரையும் ஒன்றாக சந்தோஷமாக இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். இசை மற்றும் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளரும், இயக்குநரும் நண்பர்களாக இருக்கிறார்களே, இதுவே இப்படத்தின் வெற்றி. ஏனெனில் பல இயக்குநர்கள் என்னிடம் இசை வெளியீட்டு விழாவிற்கு தயாரிப்பாளர் எனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று புகார் தெரிவிப்பார்கள்.
ஆனால் தயாரிப்பாளர் படத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார். அத்துடன் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுவேன் என்று சொல்லி இருக்கிறார். இந்த படத்தின் மீது இயக்குநர் வைத்திருக்கும் நம்பிக்கையை விட அதிகமாக தயாரிப்பாளர் வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. இதனால் தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அஸ்வின் பாடகர்களையும், பாடகிகளையும் வரவழைத்து பாடல்களை பாட வைத்தது தான் உண்மையிலேயே இந்த படத்தை சிறப்பாக விளம்பரப்படுத்தும் நிகழ்வு. இது அனைவரையும் சென்றடையும்.‌ படத்தின் பணியில் மட்டும் பங்கெடுக்காமல் படத்தினை விளம்பரப்படுத்துவதற்கும் ஒத்துழைப்பு வழங்கியதற்காக அனைத்து இசைக்கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தின் பாடல்களை பாடல்கள் திரையிடும்போது நாயகன் டிடிஎஃப் வாசன் என்னிடம் என்னை மெருகேற்றிக் கொள்ள இன்னும் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டார். அவரிடம் எதையும் கற்றுக் கொள்ளாதே. நீ இப்போது எப்படி இருக்கிறாயோ, அப்படியே இரு. அனைவருடனும் நட்பாக இரு. ஹீரோ ஆனதுக்கு பிறகு மாறி விடாதே. இயல்பாக இருந்தால் போதும். மற்றவை அனைத்தும் தானாக நடக்கும். வாய்ப்புகள் வரும் போதும், வாய்ப்புகள் வழங்கும் போதும் தயாரிப்பாளர்களிடம் எவ்வளவு தூரம் நீங்கள் நட்பாக இருக்கிறீர்களோ, அதுவே உங்களை காப்பாற்றும். மேடையில் எப்போது நீங்கள் பேசினாலும் உங்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் பெயரை குறிப்பிட தவறாதீர்கள். அது தயாரிப்பாளருக்கான சிறந்த மரியாதையாக இருக்கும். அவருக்கு நீங்கள் மேடையில் நன்றி தெரிவிக்கும் போது ,அவருடைய வாழ்த்து உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

கலைஞர்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் ஏற்படாமல் சுமுகமாக இயங்க வேண்டும். ஏனெனில் கலைஞர்கள் மக்களின் சொத்து,” என்றார்.

இயக்குநர் ஆர். வி. உதயகுமார் பேசுகையில், ”இவ்விழாவில் கலந்து கொண்டிருக்கும் நடிகை அபிராமியை மட்டும் என்னால் மறக்க இயலாது. நான் இணைந்து பணியாற்ற விரும்பிய நடிகை. அவருடைய சிரிப்பு சிறப்பானது. அழகானது. என்னுடைய இயக்கத்தில் ‘உலகை விலை பேச வா’ எனும் படத்தில் கார்த்திக் சாரும், அபிராமியும் நடிப்பதாக இருந்தது. அப்படத்தின் பணிகள் பிறகு நடைபெறவில்லை.

எங்க ஊரிலிருந்து ஒரு பையன் தாறுமாறாக பைக் ஓட்டிக்கொண்டு கண்ட இடங்களில் ஓட்டி வழக்குகளை வாங்கியவன். ஒரே ரகளையாக திரிந்த பையன். இங்கு வந்து அமைதியாக நடித்து நாயகனாக மாறி இருக்கிறார். திடீரென்று அவர் ஹீரோவாகி இருப்பது எனக்கு சந்தோஷம் தான். உன்னால் இந்த திரையுலகம் மேம்பட வேண்டும் என வாழ்த்துகிறேன். நன்றாக வளர வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன். தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருக்கிறார். இப்படியே இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இந்த திரைப்பட குழுவினரை பார்த்தவுடன் தான் சினிமா ஆரோக்கியமாய் இருக்கிறது என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஏனெனில் இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் படத்தின் மீது இருக்கும் நம்பிக்கையின் காரணமாக தமிழகம் முழுவதும் படத்தை அவரே வெளியிடுகிறார். இதை நான் வரவேற்கிறேன்.

கே .பாக்யராஜ் – பாரதிராஜா வரிசையில் பலர் வந்தாலும் இன்றும் அவர்களைப் பற்றி நாம் பேசுகிறோம் என்றால், அவர்களுடைய கிரியேஷன் தான் காரணம். அவர்களுடைய எதார்த்தமான வாழ்வியல் வெளிப்பாடுதான் காரணம். அந்த வகையில் ‘ஐபிஎல்’ கூட எதார்த்தமான வாழ்வியல் வெளிப்பாடாக இருக்கும் என நம்புகிறேன்.

கருணாநிதியை போன்ற திறமையான இயக்குநர்கள் ஏராளமானவர்கள் எங்களுடைய இயக்குநர் சங்கத்தில் உள்ளனர். அவர்களுக்கும் தயாரிப்பாளர் வாய்ப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என அவரிடம் கோரிக்கையும் வைக்கிறேன்.

சினிமாவில் தயாரிப்பாளர்கள் முதல் கடைநிலை தொழிலாளி வரை ஒற்றுமையாக இருந்தால்தான் வெற்றி பெற முடியும். இப்படத்தில் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். அதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

பாடலாசிரியர் மோகன் ராஜ் பேசுகையில், ”இந்தப் படத்தில் நானும் ஒரு பாடலை எழுதி இருக்கிறேன்.‌ இப்படத்தின் இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி எனக்கு மெட்டை அனுப்பி வைத்து விட்டார். அதன் பிறகு நான் அவருடைய இசை சார்ந்த பணிகளை பார்வையிட்ட போது அவர் கமர்ஷியலாக பணியாற்றுபவர், ஆனால் என்னுடைய பாடல் கதை சார்ந்து இருக்கிறது. நான் எப்படி அவருடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என நினைத்தேன். அதன் பிறகு இயக்குநருடன் உரையாடினேன். அப்போதுதான் இசையமைப்பாளருக்கு அவருடைய தேவை என்ன என்பதில் ஒரு தெளிவு உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன்.

இந்தப் படத்தில் ‘காத்தோடு போகுமா..’ எனத் தொடங்கும் ஒரு பாடலை எழுதியிருக்கிறேன். இந்தப் பாடலின் சரணத்தில் ‘வெட்டவெளி எங்கேயும் காத்து வழித்துணை ஆகுமே .. விழி அறியா தோழனாக தொட்டுத் தொட்டுப் பேசுமே…’ என்ற பாடல் வரிகளும், ‘நதி மீது வீசும் கல்லால் காயம் ஆகாதே.. அதை வாங்கி உள்ளே வைக்கும் தேங்கி நிற்காதே…’ போன்ற வரிகளை என்னுடைய இளமைக் காலத்தில் என் சொந்த கிராமத்தில் இயற்கையுடன் இணைந்து பெற்ற அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இந்த வரிகள் இடம் பெற்றதற்கு இசையமைப்பாளரும், இயக்குநரும் தான் காரணம். அவர்கள் இருவரும் வரிகளை நேசிப்பவர்கள்.‌

நான் பாடலாசிரியர் ஆர்.வி. உதயகுமாரின் ரசிகன். ‘பொன்னுமணி’ படத்தில் ‘நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா தெரியுமா…’ அந்த வரிகளுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். அந்த வரிகள் சாதாரணமாக தெரிந்தாலும், அதை எழுத வேண்டும் என்ற யோசனை என்னை வியப்பில் ஆழ்த்தியது,” என்றார்.

நடிகர் போஸ் வெங்கட் பேசுகையில், ”நான் சினிமாவை கற்றுக் கொண்டிருக்கும்போது, இன்னும் கூடுதலாக கற்றுக் கொடுத்த படம் ‘ஐபிஎல்’. இந்த படத்தின் இயக்குநரின் பெயர். எனக்கு மிகவும் பிடித்தமான பெயர். என் அப்பா என்னை ஊட்டி ஊட்டி வளர்த்த பெயர். அவர் பெயர் கருணாநிதி. பெயருக்கு ஏற்றார் போல் இந்த படத்தில் ஒரு அருமையான அரசியலை சொல்லி இருக்கிறார்.

இந்தப் படத்தின் கதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் என் நண்பர் சுரேஷ் என்னிடம் சொன்னார். கதையை முழுவதும் கேட்டுவிட்டு, இது சீக்கிரம் திரைப்படமாகும். அதற்கு ஏற்ற கதை என்று அவரிடம் சொன்னேன். அதன் பிறகு இயக்குநர் கருணாநிதி இந்த கதையை என்னை சந்தித்து சொன்னார் அவருடன் சுரேஷையும் பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது.

திடீரென்று நம் வாழ்க்கையில் சில தம்பிகள் குறுக்கிடுவார்கள். அது போல் குறுக்கிட்டவர் தான் இப்படத்தின் தயாரிப்பாளர் மதன் குமார். நான் ஒரு சிக்கலில் இருந்தபோது கேட்காமலேயே கணிசமாக பணம் வழங்கி என்னை அந்தப் பிரச்சனையில் இருந்து மீட்டவர் மதன்குமார். இந்தக் காலத்தில் நேரில் சென்று காலில் விழுந்தாலும் பண உதவி என்பது கிடைப்பது கஷ்டம். அது போன்ற தருணத்தில் மதன்குமாரின் செயல் என்னை ஆச்சரியப்படுத்தியது. அவருடைய இந்த நல்ல உள்ளத்திற்காகவே இந்த படம் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்,” என்றார்.

நடிகை குஷிதா பேசுகையில், ”எனக்கு தமிழ் மொழி தெரியாது. கற்றுக் கொண்டு வருகிறேன். நான் நடித்த ‘ஐபிஎல்’ தமிழ் திரைப்படம் நவம்பர் 28ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வந்து பார்க்க வேண்டும். இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்,” என்றார்.

நடிகர் டி டி எஃப் வாசன் பேசுகையில், ”இந்த படத்திற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இது என்னுடைய முதல் படம். நிச்சயமாக நிறைய தவறுகளை செய்திருப்பேன். படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு உங்களுடைய நேர்மையான விமர்சனங்களை வெளியிடுங்கள். நீங்கள் குறிப்பிடும் என்னுடைய குறைகளை நான் திருத்திக் கொள்கிறேன்.

நான் நான் கூச்ச சுபாவம் உள்ள பையன், இதை சொன்னால் யாரும் நம்ப மறுக்கிறார்கள். இந்தப் படத்தின் பாடலுக்காக நடனம் ஆடும் போது நடன இயக்குநருக்கு என்னுடைய கூச்ச சுபாவம் தெரியும். எனக்கு ஆட வேண்டும் என்ற விருப்பம் உண்டு . ஆனால் ஆடத்தெரியாது. இருந்தாலும் இப்படத்தில் நடனமாடி இருக்கிறேன். அதற்காக நடன இயக்குநருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.‌

படப்பிடிப்பு தளத்தில் சக நடிகையான குஷிதா முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார். அதிலும் குறிப்பாக முத்த காட்சியில் சௌகரியமான பங்களிப்பை அளித்தார்.

இயக்குநருக்கு முதலில் கர்ணன் – அதன் பிறகு கருணாகரன்- இறுதியாக அவருடைய அசல் பெயரான கருணாநிதியையே டைட்டிலில் இடம் பெற வைத்திருக்கிறார்.

படத்தில் என்னுடன் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படத்தின் டீசர் வெளியான தருணங்களில் இருந்து நான் என் சைடு ப்ரோமோஷனை தொடங்கி விட்டேன். என்னுடைய முதல் படம். என்னை நம்பி ரிஸ்க் எடுத்திருக்கும் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் ஏதாவது நல்லது நடந்திட வேண்டும் என்ற நோக்கத்தில் புரமோட் செய்து கொண்டு வருகிறேன். அனைவரும் இப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்த படத்தின் இரண்டாம் பகுதியில் என்னை நானே திரையில் பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது. அந்த அளவிற்கு இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி மேஜிக் செய்திருந்தார்.

உண்மை சம்பவத்தை தழுவி, அது சற்று கற்பனையை கலந்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம். சமூகத்தில் எவ்வளவு அநியாயங்கள் நடைபெறுகிறது என்பதை மக்களுக்கு சொல்லி இருக்கிறோம். செய்தித்தாள்களில் இது போன்ற சம்பவங்களை பார்வையிடுகிறோம், எளிதாக கடந்து சென்று விடுகிறோம். அந்த செய்திக்கு பின்னால் எந்த அளவு உண்மை இருக்கிறது. எந்த அளவிற்கு அரசியல் பலமும், பண பலமும் மிக்கவர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்த படம் எடுத்துச் சொல்கிறது.
நவம்பர் 28ம் தேதி உங்கள் வீட்டுப் பிள்ளை வாசனின் முதல் படம் ‘ஐபிஎல்’ வெளியாகிறது. அனைவரும் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகை அபிராமி பேசுகையில், ”எங்களது ‘ஐபிஎல்’ படத்தை வாழ்த்த வந்த விருந்தினர்களுக்கு நன்றி. முதல் பட தயாரிப்பாளர், முதல் பட இயக்குநர், என்ற பாகுபாடு இல்லாமல் இங்கு வாழ்த்த வருகை தந்த அனைவருக்கும் நன்றி. கடினமாக உழைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். நாளிதழில் வெளியான செய்தியை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது. இருந்தாலும் அனைவராலும் எளிதில் தொடர்பு படுத்திக்கொள்ளக்கூடிய நிறைய விஷயங்கள் இதில் உள்ளது. குடும்பத்தின் கதை உள்ளது, அழகான காதல் கதை உள்ளது, சஸ்பென்ஸ் உள்ளது, சண்டை காட்சி இருக்கிறது. வாசன் பைக்கிலேயே சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும் இப்படத்தில் உள்ளது. இந்தப் படத்தை அனைவரும் திரையரங்குகளில் வந்து பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகர் கிஷோர் பேசுகையில், ”சினிமா மக்களின் மீடியம். அதற்கு மிகப்பெரிய உதாரணம் இங்கு மேடையில் வீற்றிருக்கும் இயக்குநர் கே. பாக்யராஜ். மக்களுக்காக மக்களுடைய கதைகளை எடுத்து அதன் மூலமாக நிறைய கேள்விகளை உண்டாக்கி தீர்வினை கண்டவர். தற்போது காலம் மாறி இருக்கிறது. சினிமா கிட்டத்தட்ட சிஸ்டத்தின் அடிமையாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து இதுபோன்ற மக்களின் குரலாக ஒலிக்கும், கேள்வி கேட்கும் படங்கள் வெளியாவது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த வகையிலான ஒரு படமாக ‘ஐபிஎல்’ இருக்கிறது. அதில் நானும் ஒரு பங்காக இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. இதற்காக தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும், உடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படக்குழுவின் துணிச்சலுக்கு மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என நம்புகிறேன்,” என்றார் .

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ”கோயம்புத்தூரில் பீளமேடு பக்கத்தில் பாரதிபுரம் என்ற பகுதியில் நாங்கள் இருந்தோம் .அங்கிருந்து சித்தா புதூர் எனும் புது ஏரியாவிற்கு குடிபெயர்ந்தோம். அந்த ஊருக்கு செல்லும் வழியில் கேரம் கிளப் என்ற ஒரு விளையாட்டு கூடம் இருந்தது. எனக்கு கேரம் என்றால் மிகவும் பிடிக்கும். அந்த கிளப்பில் கேரம் விளையாடினேன். புது நபர் என்பதால் என்னுடன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் எதிர்த்து விளையாடினார்கள். நான் நன்றாக விளையாடுவேன். அதனால் தினமும் வெற்றி பெற்றுக் கொண்டே வந்தேன். அங்குள்ளவர்கள் ‘ச்சே! இந்த நேரத்தில் நம்மாள் இல்லையே..!’ என வருத்தப்பட்டனர். இது தினமும் தொடர்ந்தது. எனக்கும் அந்த நபர் யார், என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், அவருடன் விளையாட வேண்டும் என்ற ஆசையும் அதிகரித்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமையை தேர்வு செய்து எங்கள் இருவரையும் கேரம் விளையாட வைத்தனர். அவர் அறிமுகமான பிறகு அவரும் நானும் ஆடத்தொடங்கினோம். அவருடைய ஸ்டைல் என்ன என்று தெரிந்து கொள்வதற்காக நான் சற்று பொறுமையாக விளையாடினேன். அவர் தொடர்ந்து நன்றாக விளையாட அந்த ஏரியாவில் உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அவரை தொடர்ந்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தனர். அவருடைய பலவீனத்தை தெரிந்து கொண்டேன். அதன் பிறகு நான் என் திறமையை வெளிப்படுத்தினேன்.‌ அப்போது அவர் லேசாக வியப்படைந்து என்னை பார்த்தார். கூட்டத்தில் உள்ளவர்கள் அவர் தோல்வியை சந்தித்து விடுவாரோ என்ற பதற்றம் அடைந்தனர், சற்று உணர்ச்சிவசப்பட்டனர். அந்த நேரத்தில் நான் சற்று யோசிக்கத் தொடங்கினேன். அத்துடன் என் ஆட்டத்தின் வேகத்தையும் குறைத்துக் கொண்டேன். கூட்டத்தில் உள்ளவர்கள் அவரை ஹீரோவாக பார்க்கிறார்கள். அதனால் அவர் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினேன். பிறகு மெதுவாக விளையாடத் தொடங்க ஆட்டத்தில் அவர் வெற்றி பெற்றார். ஆட்டம் நிறைவடைந்த பிறகு அவரை பாராட்டினேன். அதற்கு நான் உங்களை வெற்றி பெறவில்லை. நீங்கள் தான் எனக்கு விட்டுக் கொடுத்தீர்கள். அதற்கு ரொம்ப நன்றி என்று சொன்னார்.‌ அன்றிலிருந்து எனக்கு அவர் தோழனாகி, சிறந்த நண்பன் ஆகி விட்டார். அதன் பிறகு நான் சினிமாவுக்கு வந்து விட்டேன். அவர் தொடர்ந்து குறைந்த சம்பளத்தில் மில்லில் வேலை பார்த்து வந்தார். அதன் பிறகு அவரை சினிமாவுக்கு அழைத்து வந்தேன். அவர்தான் எனது நண்பரான பழனிச்சாமி. ‘இன்று போய் நாளை வா’ திரைப்படத்தில் இந்தி வாத்தியராக நடித்த பழனிச்சாமி. ‘தீனா’, ‘ரெட்டை ஜடை வயசு’, ‘ஆயுத பூஜை’ என மூன்று படங்களை தயாரித்த தயாரிப்பாளராகவும் உயர்ந்தார். இதை நான் இங்கு ஏன் பகிர்ந்து கொள்கிறேன் என்றால் நட்பு என்பது எப்போதும் உயர்வானது. அதை சம்பாதித்தால் வேறு எதையும் நீங்கள் சம்பாதிக்க வேண்டியதில்லை. இங்கு நான் அவரை அழைத்து வந்து தயாரிப்பாளராக்கினேன். ஆனால் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தன் நண்பனை அழைத்து வந்து இயக்குநராக்கி இருக்கிறார். இவர்களுடைய நட்பு என்னை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இதற்காக தயாரிப்பாளருக்கு நான் பிரத்யேகமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் கருணாநிதி வெற்றிமாறனின் உதவியாளர் என சொன்னார்கள். அவருடைய நம்பிக்கை வெற்றி பெறும்.‌ அவருக்கு என்னுடைய பாராட்டுகள்.‌

நடிகை ரேவதி முதன்முதலில் என்னுடைய ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில் நடிப்பதற்காகத்தான் வந்தார்கள். அவருடைய வயது கதாபாத்திரத்துக்கு பொருத்தமானதாக இல்லை. அதனால் சிறிது காலம் காத்திருங்கள் என்று சொன்னேன்.‌ இந்த இடைவெளியில் எங்கள் இயக்குநர் பாரதிராஜா, ‘மண்வாசனை’ படத்தில் ரேவதியை அறிமுகப்படுத்திவிட்டார்.‌ அடுத்த படத்தில் நடிகை ரஞ்சனியை அறிமுகப்படுத்துவதற்காக போட்டோ ஷுட் நடத்தி காத்திருக்க சொன்னேன். அதற்குள் எங்கள் இயக்குநர் பாரதிராஜா ‘முதல் மரியாதை’ படத்தில் அவரை அறிமுகப்படுத்திவிட்டார். ‘அந்த ஏழு நாட்கள்’ படத்தில் நடித்த நடிகை அம்பிகாவை அவருடைய தங்கை ராதா தான் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது அவரிடம் அடுத்த படம் ‘தூறல் நின்னு போச்சு’ கிராமத்து சப்ஜெக்ட் அதில் அறிமுகப்படுத்துகிறேன் என்று சொன்னேன். இதற்குள் எங்கள் இயக்குநர் அம்பிகாவையும் நடிக்க வைத்தார். இப்படி நடிகைகளை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு தவறி தவறிக் கொண்டே இருந்தது. ஆனால் அனைவரும் சிறப்பான உயரத்திற்கு சென்றார்கள். ஏனெனில் எங்களுடைய இயக்குநரின் ஆசி அப்படி.‌

அதனால் அபிராமி கதாநாயகியாக நடித்ததை விட, கதையின் நாயகியாக நடிக்கும் போது அவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது. இப்போதுதான் அவர் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

ஹீரோ வாசன் யூடியூப் பிரபலம் என்பதால் அவர்முதல் படத்திலேயே நன்றாக நடனம் ஆடி இருக்கிறார் அவருக்கு ஏற்கனவே ரசிகர்கள் இருப்பதால் இந்த படம் வெற்றி பெறும்.

இந்தப் படத்தின் கதை உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்பட்டிருக்கிறது என்று இயக்குநர் சொன்னார். இது போன்ற கதைகளை மக்கள் எளிதாக அடையாளம் கண்டு, அதனுடன் தொடர்பு படுத்திக் கொள்வார்கள். அதனால் வெற்றியும் கிடைக்கும். இதனால் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலும் எழுந்து இருக்கிறது. அதனால் படம் நிச்சயமாக வெற்றி பெறும். வெற்றி விழாவில் அனைவரையும் சந்திக்கிறேன்,” என்றார்.

இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி பேசுகையில், ”இந்தப் படம் இசையமைப்பாளரிடம் வந்த போது அந்தப் படத்தில் நடித்த கதாபாத்திரங்களாகவே நடித்திருந்தார்கள். திரையில் அப்படித்தான் தோன்றினார்கள். அதற்குத்தான் நாங்கள் இசை அமைத்திருக்கிறோம். அதிலும் குறிப்பாக இப்படத்தின் நாயகன் வாசன் தோன்றும் 15 நிமிட சேசிங் காட்சி இருக்கிறது. அது நிச்சயமாக அற்புதமான திரையரங்க அனுபவத்தை அனைவருக்கும் வழங்கும். இதற்காக அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று இந்த படத்தை பார்க்க வேண்டும்.‌

இந்தப் படத்தில் வாய்ப்பளித்ததற்காக தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும், பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் கருணாநிதி பேசுகையில், ”ஐபிஎல்- இந்தியன் பீனல் லா- இந்திய தண்டனை சட்டம். சாதாரண மனிதன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது அதிகார பலமும், பண பலமும் மிக்கவர்கள் தங்களுக்கு ஒரு பிரச்சனை வந்தால், அந்த பிரச்சனையை சாதாரண மனிதன் மேல் திணித்து விட்டு எப்படி தப்பித்துக் கொள்கிறார்கள்… இதன் மூலம் சாதாரண மனிதார்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதற்காக இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்.

பத்திரிகைகளில் கொலைகள், விபத்து என நிறைய செய்திகள் வெளியாகும். இவை உண்மையான கொலைகளா, உண்மையான விபத்து தானா என்பது யாருக்கும் தெரியாது. அதற்கு பின்னணி குறித்து விசாரித்து பார்த்தால்தான் உண்மை தெரியவரும். அதன் பின்னால் சதிகள் இருப்பதை தெரிந்து கொள்ள முடியும். ஆனால் நாம் அதை எளிதாக கடந்து சென்று விடுவோம்.‌

இது போன்றதொரு செய்தியைத் தான் ‘ஐபிஎல்’ படத்தில் நாங்கள் விரிவாக பேசியிருக்கிறோம். அனைவரும் இந்த படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

Sherif Master Launches ‘SherifMoves.com’ – A Free Dance Education Platform for Students

0

Chennai, 16th November 2025:
Renowned choreographer Sherif Master, founder of Sherif Dance Company (SDC), has launched SherifMoves.com, a free dance-training initiative aimed at supporting children with talent and interest in dance.

Sherif Master, known for his extensive work in Tamil cinema, popular dance reality shows, and for training thousands of students across Tamil Nadu, has spent over two decades identifying, mentoring, and shaping young dance talent. SherifMoves.com was created with the objective of offering structured dance education to students who may not otherwise have access to professional training due to financial or social limitations.

As part of the initiative, children will receive free dance training every year, with the goal of nurturing future dancers, performers, and choreographers. The platform aims to create long-term opportunities by providing students with professional guidance, discipline, and industry-relevant exposure.

The website was launched yesterday by Agaram Jayashree, who has been actively involved in supporting youth and education-based initiatives. Several artists from the Tamil film industry extended their support to this noble cause, including:

Actor Ravi Mohan

Actress Keneeshaa

Director Ponram

Director Karthik Yogi

Actor Karunakaran

The launch event took place yesterday during the SDC Annual Day Celebration 2025, the flagship event conducted by Sherif Dance Company. This year’s theme, “Dance with Purpose,” focused on performances that highlighted messages of awareness, community care, and social responsibility.

The event featured impactful student performances, the official unveiling of SherifMoves.com, and an interactive session with guests and the media.

Theme-based performances by SDC students included:

  1. Pollution
  2. Beauty
  3. Good Touch – Bad Touch
  4. Police – Our Saviour

நடன இயக்குனர் ஷெரிப் மாஸ்டர் அறிமுகப்படுத்திய ‘SherifMoves.com’ – பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவச நடனக் கல்வி வழங்கும் புதிய தளம்

சென்னை, 16 நவம்பர் 2025:
Sherif Dance Company (SDC) நிறுவனர் மற்றும் பிரபல நடன இயக்குனர் ஷெரிப் மாஸ்டர், திறமை மற்றும் ஆர்வம் கொண்ட பொருளாதாரத்தில் பின் தங்கிய குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட இலவச நடன பயிற்சி தளம் ‘SherifMoves.com’–ஐ நேற்று அறிமுகப்படுத்தினார்.

தமிழ் திரைப்படத் துறையிலும், பல டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும், மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பயிற்சி வழங்கியும் பெயர் பெற்றவர் ஷெரிப் மாஸ்டர். கடந்த இருபது ஆண்டுகளாக இளம் நடன திறமைகளை கண்டுபிடித்து, வழிகாட்டி, மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறார். பொருளாதார காரணங்களால் பயிற்சி பெற முடியாத மாணவர்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட நடனக் கல்வி வழங்கும் நோக்கத்துடன் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியின் மூலம், குழந்தைகளுக்கு வருடந்தோறும் இலவச நடனப் பயிற்சி வழங்கப்படும். எதிர்கால நடனக் கலைஞர்கள், நடன இயக்குநர்கள் திறமைகளை உருவாக்கும் நோக்கத்துடன், தொழில்முறை வழிகாட்டல் துறையைச் சார்ந்த அனுபவங்களை வழங்குவது இந்த தளத்தின் குறிக்கோள்.

இத்தளத்தை நேற்று அகரம் ஜெயஸ்ரீ அவர்கள் அறிமுகப்படுத்தினார். பொருளாதாரத்தில் பின் தங்கிய இளைஞர்கள் கல்வியை ஆதரிக்கிறது மற்றும் பல கல்வி முயற்சிகளில் தொடர்ந்து செயல்பட்டு வரும் அவர், இத்திட்டத்திற்கு தனது ஆதரவை வழங்கினார். இதுகுறித்து தமிழ் திரைப்படத் துறையின் பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்:

நடிகர் ரவி மோகன்

பாடகி கினீஷா

இயக்குநர் பொன்ராம்

இயக்குநர் கார்த்திக் யோகி

நடிகர் கருணாகரன்

இந்த அறிமுகம் SDC ஆண்டு விழா 2025 நிகழ்வின்போது நடைபெற்றது. “Dance with Purpose” என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு மாணவர்கள் சமூக பொறுப்பு, விழிப்புணர்வு, மற்றும் மனிதநேயத்தை மையமாகக் கொண்ட நடன நிகழ்ச்சிகளை ஆற்றினர்.

நிகழ்ச்சியில் மாணவர்களின் தீம் அடிப்படையிலான நடனங்கள், SherifMoves.com தள அறிமுகம், விருந்தினர்கள் மற்றும் ஊடகங்களுடன் கலந்துரையாடல் ஆகியவை இடம்பெற்றன.

SDC மாணவர்கள் நடத்திய தீம் அடிப்படையிலான நிகழ்ச்சிகள்:

  1. POLLUTION
  2. BEAUTY
  3. GOOD TOUCH BAD TOUCH
  4. போலீஸ் – நம்மை காக்கும் காவலர்

”Magudam / Makutam” – Vishal’s Magnum Opus Wraps with a Grand 17-Days Climax Shoot!

0

And, it’s a wrap for the intense, extensive and monumental climax schedule of Vishal’s magnum opus, Magudam / Makutam a cinema spectacle that unfolded over 17 consecutive days of rigorous shoot of 6pm to 6 am (12 hours) filming.
The epic sequence resonating much like a war featuring hundreds of stunt artists and totality of 800 crew members including top computer graphics team and technicians stands as a testament to the film’s scale, ambition, and artistry.
Crafted with meticulous detail, it brings together raw emotion, visual grandeur, and breathtaking action.
Marking Vishal’s directorial debut, Magudam / Makutam is more than just a film — it’s a creative odyssey that blurs the lines between performance and direction.
Renowned action choreographer Dhilip Subbarayan has designed stunts of staggering intensity, close to reality, elevating the action to international standards.
Speaking about the wrap, the team describes the 17-day schedule as a journey of hardwork personified, endurance, pure passion, and unrelenting vision, reflecting the film’s spirit, majestic, intense, and emotionally resonant.
Produced under the prestigious Super Good Films banner, Magudam / Makutam now enters post-production. Being Vishal’s official directorial debut, this film is poised to be one of the grandest cinematic experiences of 2026, the bilingual epic promises to be a complete package of commercial storytelling.

“மகுடம்” – நடிகர் விஷால் அவர்களின் மாபெரும் படைப்பு:

17நாட்கள் இடைவிடாத கிளைமாக்ஸ் படப்பிடிப்புடன் இந்த இரண்டாவது கட்ட படப்பிடிப்பு பிரம்மாண்டமாக முடிவடைந்தது.

‘மகுடம்’ திரைப்படம் பிரம்மாண்டமாக, 17 நாட்கள் தொடர்ந்து மாலை 6 மணி முதல் காலை 6மணி வரை 12மணி நேரம் நடைபெற்ற அதிரடியான கிளைமாக்ஸ் படப்பிடிப்பை இன்று வெற்றிகரமாக முடித்துள்ளது.

சண்டை காட்சிகள் மிக பிரம்மாண்டமாக படமாக்கப்பட்ட இந்த இரண்டாவது கட்ட படப்பிடிப்பில், நடிகர், நடிகைகள், நூற்றுக்கணக்கான ஸ்டண்ட், நடன கலைஞர்கள், கணினி கிராபிக்ஸ் வல்லுனர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் நிறைந்த இப்படத்தின் காட்சி பிரமாண்டமாகவும், மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட இந்த கிளைமாக்ஸ், காட்சியமைப்பின் வலிமையான, உணர்ச்சியின் ஆழம், அதிரடி காட்சிகளின் எழுச்சி ஆகியவற்றை இணைத்து, படம் முழுவதும் ஒரு தனித்துவமான அனுபவத்தை உருவாக்கியிருக்கிறோம்.

நடிகர் விஷால் இயக்குநராகும் முதல் முயற்சியான மகுடம், ஒரு சாதாரணப்படம் அல்லாமல், சினிமா படைப்பை நேசிக்கும் ஒருவரின் உன்னத பயணம். நடிப்பு, இயக்கம் இவைகளில் ஒரு புதிய அனுபவத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

பிரபல ஸ்டண்ட் இயக்குநர் திலீப் சுப்பராயன், நடன இயக்குனர் அசார் ஆகியோர்கள் நிஜத்தன்மை நிரம்பிய, அதிரடி காட்சிகளை வடிவமைத்தும், படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளார்கள்.

படக்குழுவினர்கள் இந்த 17நாட்கள் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு குறித்து பேசும் போது..

“ஒவ்வொரு நாளும் கடின உழைப்பு, பொறுமை, ஆர்வம், தளராத உறுதி ஆகியவற்றின் கலவையாக இருந்தது, இப்படத்தின் மையக் கருத்தான வீரமும் உணர்ச்சியும் இந்த படப்பிடிப்பில் முழுமையாகப் பிரதிபலித்தது..” என்கின்றனர்.

“சூப்பர் குட் ஃபிலிம்ஸ்” நிறுவனம் தயாரிக்கும் மகுடம், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம், 2026-இல் வெளியாகும் மக்களின் மனதில் மிகப்பெரிய வெற்றி பெறும்.

Avalidam Sol 2nd Single From Tere Ishk Mein

0

The Magic of A. R. Rahman Returns with ‘Avalidam Sol’: The Heartbeat of Aanand L Rai’s Tere Ishk Mein, Backed by Bhushan Kumar

After the first track ‘O Kadhale’ from Aanand L Rai’s ‘Tere Ishk Mein’, backed by Bhushan Kumar, captured hearts and continues to dominate music charts, the makers T-Series and Colour Yellow have now unveiled the film’s second song, ‘Avalidam Sol’. Composed by the legendary A. R. Rahman, this latest song deepens the film’s emotional landscape, offering another chapter of its intense love story through music that hits straight to the heart.

With heartfelt lyrics by Mashook Rahman and vocals by A. R. Ameen and Jonita Gandhi, the song feels both timeless and intensely personal in Rahman’s inimitable style. The song also shares new intense glimpses featuring Dhanush and Kriti Sanon, offering poignant moments of the film’s evolving love story, highlighting Mukti’s (Kriti Sanon) emotional journey and deepening the emotional connection between the two leads.

Music maestro A. R. Rahman shared the inspiration behind the melody, “This next song, Avalidam Sol, was inspired from when we travelled to Himachal and witnessed the reflection of the mountains in the Ganges. Everything around inspired the creation of the melody, inspiring our teams Aanand L Rai, Irshad Kamil, Himanshu and it evolved into something which is just the bare minimum of just the piano, strings and a newfound voice of Nitesh. I hope people enjoy it and feel the same way we felt creating it.”

Speaking about the song, master storyteller and Director-Producer Aanand L Rai said, “Music is the strongest form of magic… and I’ve had the privilege to watch the greatest magician create it up close the one and only A. R. Rahman. Avalidam Sol is another gem, straight from our hearts.”

Visionary Producer Bhushan Kumar added, Avalidam Sol brings out the unspoken emotions that lie at the heart of Tere Ishk Mein. It’s a song about love that is constant; one that is raw, real and deeply human. With A. R. Rahman’s soulful composition, Mashook Rahman’s heartfelt lyrics and A. R. Ameen’s voice complimented by Aanand L Rai’s impeccable storytelling and directed visuals that capture the vulnerability of the two characters with such honesty, this track beautifully carries forward the film’s emotional core.”

The combination of Rahman’s music, Himanshu’s powerful dialogues, and Aanand L Rai’s stirring visuals continues to build anticipation with every new release, promising one of the most soulful cinematic and musical experiences of the year.

Gulshan Kumar, T-Series, and Colour Yellow present ‘Tere Ishk Mein’, produced by Aanand L Rai and Himanshu Sharma, produced by Bhushan Kumar and Krishan Kumar. The film directed by Aanand L Rai and written by Himanshu Sharma and Neeraj Yadav, is an A.R. Rahman musical with lyrics by Irshad Kamil. Starring Dhanush and Kriti Sanon, the film is scheduled to release worldwide in Hindi, Tamil and Telugu on 28th November 2025.

பூஷன் குமார் தயாரிப்பில், ஆனந்த் L ராய் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மே’ படத்தில் இருந்து AR ரஹ்மானின் மேஜிக்கில் ‘அவளிடம் சொல்’ பாடல் வெளியாகி உள்ளது!

தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடிப்பில் உருவாகி உள்ள தேரே இஷ்க் மே படம் நவம்பர் 28, 2025 அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாகிறது.

ஆனந்த் L ராய் இயக்கத்தில், பூஷன் குமார் தயாரிப்பில் உருவாகும் ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘ஓ காதலே’ ஏற்கனவே ரசிகர்களின் இதயங்களை கவர்ந்து, பல்வேறு இசை தளங்களை ஆட்கொண்ட நிலையில், இப்போது T-சீரீஸ் மற்றும் கலர் யெல்லோ புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ள இரண்டாவது பாடல் ‘அவளிடம் சொல்’ ரசிகர்களின் உணர்ச்சிகளை மேலும் ஆழமாக தொடுகிறது.

இந்த பாடல் இசை வித்தகன் AR ரஹ்மான் இசையில் உருவாகி உள்ளது. இதன் உணர்ச்சி நிறைந்த வரிகளை மஷூக் ரஹ்மான் எழுதியுள்ளார். AR அமீன் மற்றும் ஜொனிதா காந்தி ஆகியோரின் குரல் சேர்க்கையுடன், ரஹ்மானின் தனித்துவமான பாணியில் இதயம் தொடும் இசை வெளிப்படுகிறது. பாடலுடன் சேர்த்து வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் இருவரின் தீவிரமான காதல் காட்சிகளை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக க்ரிதி சனோன் நடித்துள்ள முக்தி என்ற கதாபாத்திரத்தின் உணர்ச்சி பயணத்தை மிக அழகாக வெளிப்படுத்துகிறது.

இசை வித்தகன் AR ரஹ்மான் கூறியதாவது, “இந்த பாடல், ‘அவளிடம் சொல்’, ஹிமாச்சலுக்கு சென்றபோது கங்கை நதியில் பிரதிபலிக்கும் மலைகளை பார்த்து கிடைத்த ஒரு உணர்வில் இருந்து பிறந்தது. அந்த இயற்கையின் அமைதியிலிருந்து, பியானோ, ஸ்ட்ரிங்ஸ் மற்றும் புதிய குரல் நிதேஷ் ஆகியோருடன் ஒரு எளிமையான ஆன்மீகமான இசை உருவானது. இதை நாம் உருவாக்கியபோது உணர்ந்ததை மக்கள் கேட்டும் உணர வேண்டும் என்று நம்புகிறேன்.”

இயக்குனர் ஆனந்த் L ராய் கூறியதாவது, “இசை என்பது மிக வலிமையான மாயம்… அந்த மாயத்தை நேரில் உருவாக்கும் அற்புதமான மந்திரவாதி AR ரஹ்மான். அவருடன் பணிபுரிவது எனக்கு சிறப்பாக இருந்தது. ‘அவளிடம் சொல்’ நமது இதயத்திலிருந்து வந்த மற்றொரு ரத்தினம்.”

தயாரிப்பாளர் பூஷன் குமார் கூறியதாவது,  “‘அவளிடம் சொல்’ என்பது ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தின் இதயத்திலுள்ள சொல்லப்படாத உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. அது உண்மையான காதலை பற்றியது. பசுமையானது, இயல்பானது, மனிதனின் உணர்வுகளைத் தொட்டது. AR ரஹ்மானின் ஆன்மீக இசை, மஷூக் ரஹ்மானின் வரிகள், அமீனின் இனிய குரல் மற்றும் ஆனந்த் L ராயின் உணர்ச்சிமிக்க காட்சிகளுடன் சேர்ந்து, இந்த பாடல் படத்தின் உணர்ச்சி மையத்தை அழகாக எடுத்துக்காட்டுகிறது.”

AR. ரஹ்மானின் இசை, ஹிமான்ஷுவின் வலிமையான வரிகள் மற்றும் ஆனந்த் L ராயின் உணர்ச்சிகரமான காட்சிகள் இணைந்து, ஒவ்வொரு வெளியீட்டிலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்துகின்றன. இது ஆண்டின் மிகவும் ஆன்மீகமான சினிமா மற்றும் இசை அனுபவங்களில் ஒன்றாக இருக்கும் என்று உறுதியாகிறது.

குல்ஷன் குமார், T-சீரிஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனங்கள் வழங்கும் ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தை ஆனந்த் L ராய் மற்றும் ஹிமான்ஷு ஷர்மா தயாரிக்க, பூஷன் குமார் மற்றும் கிருஷண் குமார் இணைந்து தயாரித்துள்ளனர். ஹிமான்ஷு ஷர்மா மற்றும் நீரஜ் யாதவ் எழுதிய திரைக்கதையுடன் ஆனந்த் L ராய் இயக்கியுள்ள இப்படம், AR ரஹ்மான் இசையமைப்பில், ஈர்ஷாத் காமில் பாடல் வரிகளுடன் உருவாகியுள்ளது. தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வரும் நவம்பர் 28, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா மற்றும் அண்ணாமலை படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் அடுத்த படம் அனந்தா!

0

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அனந்தா. வலியை அமைதியாக மாற்றும் நம்பிக்கையை மையமாகக கொண்ட ஐந்து ஆழமான, மனதை நெகிழ வைக்கும் கதைகளை இப்படம் வழங்குகிறது. பா. விஜய் வசனம் மற்றும் பாடல்களை எழுத, தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ளார். இப்படம் ஒவ்வொரு மனித வாழ்விலும் வழிகாட்டும் கண்ணுக்கு தெரியாத அருளை படம்பிடித்து காட்டுகிறது.

ஜெகபதி பாபு, சுஹாசினி மணிரத்னம், ஒய். ஜி. மகேந்திரன், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், ஸ்ரீ ரஞ்சனி, அபிராமி வெங்கடாசலம் மற்றும் பலர் நடித்துள்ள அனந்தா ஒரு வழக்கமான பக்தி படம் அல்ல..! இது வாழ்க்கை, அன்பு மற்றும் இறைவனின் காணமுடியாத கிருபையை கொண்டாடும் ஒரு திரைக்காவியம்.

யதார்த்தம், உணர்ச்சி மற்றும் தெய்வீக ஆற்றல் ஆகியவற்றை கலந்து, இப்படம் ஐந்து இதயப்பூர்வமான கதைகளின் வழியாக விரிகிறது. மீண்டும் எழும் ஒரு நடன கலைஞர், இழப்பில் கருணையை கண்டறியும் ஒரு மனிதன், ஒரு அற்புதத்தை காணும் தாய், இயற்கையின் அமைதியில் நம்பிக்கையை கண்டறியும் ஒரு வெளிநாட்டவர் மற்றும் கண்ணுக்கு தெரியாத அருளால் காப்பாற்றப்படும் ஒரு தொழிலதிபர்.

இந்த கதைகள் ஒன்றோடொன்று பின்னி பிணையும்போது, தெய்வீகம் என்பது கோவில்களிலோ அல்லது அற்புதங்களிலோ மட்டும் அடங்கிவிடுவதில்லை.. அது நம்பிக்கை, இரக்கம் மற்றும் சரணாகதியின் ஒவ்வொரு செயலிலும் அமைதியாக வாழ்கிறது என்பதை அனந்தா படம் வெளிப்படுத்துகிறது. இப்படத்தின் தமிழ் உலகளாவிய விநியோக உரிமையை AP International நிறுவனம் பெற்றுள்ளது. சத்ய சாயி பாபாவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, இப்படம் 2025 நவம்பர் 23 முதல் டிஜிட்டல் தளத்தில் வெளியாகவுள்ளது.

நடிகர்கள்
ஜெகபதி பாபு
சுஹாசினி மணிரத்னம்
Y Gee மகேந்திரன்
தலைவாசல் விஜய்
நிழல்கள் ரவி
ஸ்ரீ ரஞ்சனி
அபிராமி வெங்கடாசலம்

தொழில்நுட்பக் குழுவினர்
எழுத்து & இயக்கம்: சுரேஷ் கிருஷ்ணா
தயாரிப்பாளர்: கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி
வசனம் & பாடல்கள்: பா. விஜய்
இசை: தேவா
ஒளிப்பதிவு: சஞ்சய் BL
படத்தொகுப்பு: S. ரிச்சர்ட்
தயாரிப்பு வடிவமைப்பு: வாசுதேவன்
நடன அமைப்பு: கலா
ஆடை வடிவமைப்பு: தட்ஷா தயாள்
விளம்பர வடிவமைப்பு: டிசைன் பாயிண்ட்ஸ்
நிர்வாகத் தயாரிப்பாளர்கள்: கவின் கிருஷ்ண ராஜ், சிதம்பரம் மணிவண்ணன்
மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்

From the director of Baasha and Annamalai comes a film that transcends cinema — Anantha

Directed by Suresh Krissna and produced by Girish Krishnamurthy, Anantha presents five deeply moving stories where faith transforms pain into peace. With dialogues and lyrics by Pa. Vijay and music by Thennisai Thendral Deva, the film captures the invisible grace that guides every human life.

Featuring Jagapathi Babu, Suhasini Mani Ratnam, YGee Mahendra, Nizhalgal Ravi, Thalaivasal Vijay, Sri Ranjani, Abhirami Venkatachalam and others, Anantha is not a traditional devotional film — it’s a cinematic celebration of life, love, and the unseen hand of the Divine.

Blending realism, emotion, and divine mystery, the film unfolds through five heartfelt tales — a dancer who rises again, a man who discovers mercy in loss, a mother who witnesses a miracle, a foreigner who finds faith in nature’s calm, and a businessman saved by unseen grace.

As these stories intertwine, Anantha reveals that divinity isn’t confined to temples or miracles — it lives quietly in every act of faith, compassion, and surrender. AP International have acquired the worldwide distribution of the film in Tamil. Commemorating the 100th birth anniversary of Satya Sai Baba, the film is all set to release on a digital platform from November 23rd, 2025.

CAST
Jagapathi Babu
Suhasini Mani Ratnam
Y Gee Mahendra
Thalaivasal Vijay
Nizhalgal Ravi
Sri Ranjani
Abhirami Venkatachalam

CREW
Writted & directed by: Suresh Krissna
Produced by: Girish Krishnamurthy
Dialogues & Lyrics: Pa Vijay
Music: Deva
Cinematography: Sanjay BL
Editing: S Richard
Production Design: Vasudevan
Choreography: Kala
Costumes: Dhatsha Dayal
Publicity Designs: Design Points
Executive Producers: Kavin Krishna Raj, Chidambaram Manivannan
PRO: Riaz K Ahmed, Paras Riyaz

Actor Regena Cassandrra & Chaitanya MRSK Invite PTR to Democratic Sangha’s Changemakers Awards

0

Actor and philanthropist Regena Cassandrra & Chaitanya MRSK (founders of Democratic Sangha) invited Tamil Nadu Minister Palanivel Thiaga Rajan (PTR) to the upcoming Democratic Sangha Annual Forum, where the organisation will host its prestigious Changemakers Awards. The forum, known for convening policymakers, civic leaders, scholars and global changemakers, serves as a vital space to reflect on the evolving state of democracy. This year’s gathering will spotlight high-level discussions on inclusive governance, civic renewal and the challenges confronting democratic movements worldwide. Regena and Chaitanya feel having PTR participate in the forum will be a huge value add as his views on governance and public finance have often sparked meaningful debate. The event’s highlight, the Annual Changemaker Awards will honour individuals and organizations whose courage and commitment have strengthened their communities. With its focus on collaboration and compassion, the forum aims to inspire collective action for a more just democratic future.

அமைச்சர் பிடிஆருக்கு அழைப்பு விடுத்த ரெஜினா மற்றும் சைதன்யா!

டெமாக்ரடிக் சங்காவின் ‘சேஞ்ச்மேக்கர்ஸ் விருதுகள்’ விழா: அமைச்சர் பிடிஆருக்கு அழைப்பு விடுத்த நடிகை ரெஜினா கசாண்ட்ரா மற்றும் சைதன்யா MRSK!

‘டெமாக்ரடிக் சங்கா’ அமைப்பின் நிறுவனர்களான நடிகையும், சமூக ஆர்வலருமான ரெஜினா கசாண்ட்ரா மற்றும் சைதன்யா MRSK, தமிழக அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் அவர்களை தங்கள் அமைப்பின் ஆண்டு விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த விழாவில் மதிப்புமிக்க ‘சேஞ்ச்மேக்கர்ஸ் விருதுகள்’ வழங்கப்படும்.

கொள்கை வகுப்பாளர்கள், அரசியல் தலைவர்கள், அறிஞர்கள் மற்றும் உலகளாவிய மாற்றத்தை உருவாக்குபவர்களை ஒன்றிணைக்கும் இந்த அரங்கம், ஜனநாயகத்தின் தற்போதைய நிலையை விவாதிக்கும் ஒரு முக்கிய தளமாக விளங்குகிறது. இந்த ஆண்டு நடைபெறும் கூட்டத்தில், அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி மறை, புதிய நடைமுறைகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஜனநாயக இயக்கங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து உயர்மட்ட விவாதங்கள் நடைபெறும்.

ஆட்சி முறை மற்றும் பொது நிதி குறித்த அமைச்சர் PTR அவர்களின் கருத்துக்கள் பலமுறை அர்த்தமுள்ள விவாதங்களை தூண்டியுள்ளதால், இந்த மன்றத்தில் அவர் பங்கேற்பது நிகழ்வுக்கு பெரும் மதிப்பை சேர்க்கும் என ரெஜினா மற்றும் சைதன்யா கருதுகின்றனர்.

இந்த நிகழ்வின் முக்கிய அம்சமான ‘வருடாந்திர சேஞ்ச்மேக்கர்ஸ் விருதுகள்’, தங்கள் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பால் சமூகங்களை வலுப்படுத்திய தனிநபர்களையும், அமைப்புகளையும் கௌரவிக்கும். ஒத்துழைப்பு மற்றும் கருணையை மையமாக கொண்டு, மேலும் நியாயமான ஜனநாயக எதிர்காலத்திற்கான கூட்டு நடவடிக்கையை ஊக்குவிப்பதே இந்த மன்றத்தின் முக்கிய நோக்கமாகும்.

THE INTENSE WORLD OF AANAND L RAI’S TERE ISHK MEIN SOARS SKY HIGH WITH THE LAUNCH OF ITS HIGH-VOLTAGE TRAILER, BACKED BY BHUSHAN KUMAR

0

~ The year’s most powerful love story, Tere Ishk Mein, continues to build anticipation as the makers unveil an explosive new trailer.

~ Tere Ishk Mein is set to release on 28 November in Hindi, Tamil and Telugu.

YouTube Link: https://youtu.be/9AJsFRNJGZ8?si=gF9zxUOOgGDM5G-2

LOVE RISES TO LEGENDARY HEIGHTS.

The wait is finally over. After the strong reception to its teaser and soulful music, the makers of Tere Ishk Mein, Aanand L Rai and Bhushan Kumar, have unveiled the official trailer of one of the year’s most awaited films. Starring Dhanush and Kriti Sanon, the trailer dives deeper into the raw, emotional and unpredictable world of Shankar and Mukti, a love story that pushes against reason, time and destiny.

The new visuals offer a gripping look at the film’s core themes of love, loss and redemption, revealing darker, more layered shades of the narrative that the teaser and songs only hinted at. Aanand L Rai’s distinctive storytelling style, paired with the emotional depth of Himanshu Sharma and Neeraj Yadav’s writing, sets the stage for a powerful cinematic journey.

At the heart of this world is A. R. Rahman’s recently launched soundtrack, which has already struck an emotional chord with audiences, setting the stage for the film’s release.

Gulshan Kumar, T-Series, and Colour Yellow present ‘Tere Ishk Mein’, produced by Aanand L Rai and Himanshu Sharma, produced by Bhushan Kumar and Krishan Kumar. The film directed by Aanand L Rai and written by Himanshu Sharma and Neeraj Yadav, is an A.R. Rahman musical with lyrics by Irshad Kamil. Starring Dhanush and Kriti Sanon, the film is scheduled to release worldwide in Hindi, Tamil and Telugu on 28th November 2025.

https://youtu.be/9AJsFRNJGZ8?si=gF9zxUOOgGDM5G-2

தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடிக்கும் தேரே இஷ்க் மே படத்தின் டிரைலர் வெளியானது!

பூஷன் குமார் தயாரிப்பில், ஆனந்த் L ராய்-ன் கைவண்ணத்தில் உருவாகும் ‘தேரே இஷ்க் மே’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த காதல் கதையான ‘தேரே இஷ்க் மே’ ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்து உள்ளது.

‘தேரே இஷ்க் மே’ இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் நவம்பர் 28 அன்று வெளியாக உள்ளது. காதல் ஒரு காவியமாக உயர்கிறது.

ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது. டீஸர் மற்றும் மனதை வருடும் இசையின் வலுவான வரவேற்புக்கு பிறகு, ‘தேரே இஷ்க் மே’ படத்தின் இயக்குனர் ஆனந்த் L ராய் மற்றும் தயாரிப்பாளர் பூஷன் குமார், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடிப்பில், இந்த டிரெய்லர் சங்கர் மற்றும் முக்தியின் யதார்த்தமான, உணர்ச்சிப்பூர்வமான மற்றும் கணிக்க முடியாத உலகத்திற்குள் ஆழமாக அழைத்து செல்கிறது. இது காரணம், காலம் மற்றும் விதியை மீறிய ஒரு காதல் கதை.

இந்த புதிய காட்சிகள், காதல், இழப்பு மற்றும் மீட்பு போன்ற படத்தின் முக்கிய கருப்பொருள்களை பற்றிய ஒரு அழுத்தமான பார்வையை வழங்குகின்றன. டீஸர் மற்றும் பாடல்கள் சுட்டிக்காட்டியதை விட இருண்ட, மேலும் ஆழமான கதைக்களத்தை இது வெளிப்படுத்துகிறது. ஆனந்த் L ராயின் தனித்துவமான கதைசொல்லும் பாணி, ஹிமான்ஷு ஷர்மா மற்றும் நீரஜ் யாதவின் எழுத்தின் உணர்ச்சிப்பூர்வமான ஆழத்துடன் இணைந்து, ஒரு சக்திவாய்ந்த சினிமா பயணத்திற்கு களம் அமைக்கிறது.

இந்த உலகின் இதயத்தில் AR ரஹ்மானின் இசை உள்ளது. இது ஏற்கனவே ரசிகர்களிடையே ஒரு உணர்வுப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி, படத்தின் வெளியீட்டிற்கான மேடையை அமைத்துள்ளது.

குல்ஷன் குமார், T-சீரிஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனங்கள் வழங்கும் ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தை ஆனந்த் L ராய் மற்றும் ஹிமான்ஷு ஷர்மா தயாரிக்க, பூஷன் குமார் மற்றும் கிருஷண் குமார் இணைந்து தயாரித்துள்ளனர். ஹிமான்ஷு ஷர்மா மற்றும் நீரஜ் யாதவ் எழுதிய திரைக்கதையுடன் ஆனந்த் L ராய் இயக்கியுள்ள இப்படம், AR ரஹ்மான் இசையமைப்பில், ஈர்ஷாத் காமில் பாடல் வரிகளுடன் உருவாகியுள்ளது. தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வரும் நவம்பர் 28, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

- Advertisement -

Recent Posts