“கொன்றால் பாவம்” திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் தயாள் பத்மநாபன். விழுப்புரத்தைச் சேர்ந்த தமிழரான இவர், கன்னடத்தில் 19 படங்களையும், தெலுங்கில் ஒரு படத்தையும், தமிழில் கொன்றால் பாவம், மாருதிநகர் காவல்நிலையம் (ஆஹா ஒரிஜினல்) ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். பழம்பெரும் கன்னட நாடகமொன்றைத் தழுவி, இவர் 2018-ஆம் ஆண்டு தயாரித்து-கதை, திரைக்கதை எழுதி இயக்கிய கன்னட படம் “ஆ கராள ராத்திரி”. பின்னர் இதனை “அனகனகா ஒ அதித்தி” என்ற பெயரில் தெலுங்கிலும், “கொன்றால் பாவம்” என்ற பெயரில் தமிழிலும் இயக்கினார். 2018-ம் ஆண்டுக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதுக்காக, “ஆ கராள ராத்திரி”. சிறந்த படம், சிறந்த இயக்குநர் ஆகிய பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டது. பரிசீலனைப்பட்டியலில் கே.ஜி.எப்-1 போன்ற படங்களும் இருந்தன. 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், கோவிட் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விருது வழங்கும் விழா, நவம்பர் 3-ம் தேதி மைசூர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. கர்நாடக முதலமைச்சர் திரு.சித்தராமையா வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். அந்த விழாவில், சிறந்த இயக்குநருக்கான விருதையும், தயாரிப்பாளர் என்ற முறையில் சிறந்த படத்திற்கான விருதையும் தயாள் பத்மநாபன் பெற்றுக்கொண்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர், கர்நாடக அரசின் திரைப்பட விருது பெறுவது பெருமைக்குரிய செய்தியாகும். ஏற்கனவே இவர் 2014-ஆம் ஆண்டு, கர்நாடக அரசின் சிறந்த படம், சிறந்த இயக்குநருக்கான திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.
இவர் தற்போது லட்சுமிகாந்தன் கொலை வழக்கு என்னும் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
தயாள் பத்மநாபன் தன்னுடைய திரை பயணத்தின் அனுபவங்களைப் பற்றி கூறியதாவது :
விழுப்புரம் மாவட்டத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தேன். மத்திய அரசு வேலைக்காக பெங்களூரு சென்றேன். பின்பு சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தால் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக அங்கேயே உருவானேன். கன்னடம் எழுத படிக்க தெரியாமலேயே 19 படங்களை இயக்கியிருக்கிறேன். கன்னடத்தில் தொழில் முறை வாசகர்களைக் கொண்டு இலக்கியங்களை படித்தேன். இதன் மூலம் இரண்டு மாநில விருதுகள் அதிலும், இலக்கியத்திற்காக விருது வாங்கியதில் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.
அது மட்டுமில்லாமல், அரசியல் சார்ந்து தான் மாநில அளவில் வேறுபட்டு இருக்கிறோம் கலை என்ற விஷயத்தில் அனைவரும் ஒன்றுபட்டு இருக்கிறோம் என்பதற்கு சினிமா ஒரு சிறந்த உதாரணம். மேலும், நான் 37 ஆண்டுகளாக கர்நாடகாவில் வசித்து வருகிறேன். இதுவரை கன்னடம் – தமிழ் என்ற வேற்றுமையை நான் எங்கும் பார்த்ததில்லை.
சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்திற்காக மாநில விருது கொடுத்து என்னை கௌரவித்த கர்நாடக முதலமைச்சர் திரு.சித்தராமையா அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.
எனது தாய் மொழியான தமிழிலும் பல விருதுகள் வாங்க வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம் என்றார்.
Marudham Productions Announces Its Next Grand Venture — A Jungle Action–Thriller Rooted in Nature, Spirituality, and Forest Mythology
After the success of its 2023 crime thriller Raakadhaan, Marudham Productions is all set to take audiences on a spectacular new journey with its next ambitious film titled “MAHASENHA.”
The title and first look of the film were launched on social media by Actor Soori, Director Vijay Milton, instantly capturing the attention of cinema lovers and generating widespread excitement online. The first look poster, with its striking forest imagery and spiritual undertones, hints at a mystical and emotionally charged adventure.
About the Film
Written and directed by Dhinesh Kalaiselvan, MAHASENHA blends Nature, Spirituality, and Mythology into an enthralling Jungle Action–Thriller. The film explores the eternal conflict between divine natural forces and human greed, told through a story set deep within the forests of Gudalur, Wayanad, Kollimalai and Ooty.
The film is designed as a visually rich cinematic experience, combining real forest landscapes, stunning CGI artistry, and a deeply emotional human narrative. With 90% of the film shot in authentic forest locations, MAHASENHA promises breathtaking visuals, a grand festival climax sequence, and a musical landscape that merges tribal rhythms with devotional melodies.
Adding to its appeal, the film features four original songs composed by A. Praveen kumar and S.N. Arunagiri, with vocals by Vaikom Vijayalakshmi, V.M. Mahalingam, V.V. Prasanna, and Priyanka NK. The combination of sound, visuals, and storytelling aims to transport audiences into a world where spirituality and adventure meet.
Cast
The film features Vemal, Srushti Dange, Yogi Babu, Mahima Gupta, John Vijay, Kabir Duhan Singh, Alfred Jose, Ilakkiya, and Vijay Siyon in pivotal roles, along with Sena the Elephant, who plays a significant and symbolic part in the story.
Production Management: Rani, Ramesh, Dinesh Velmurugan
DI: John Sriram
VFX: i-Mate Media
Audiography: Balaji, Raju
Posters: Dinesh Ashok
Public Relations: Rekha
Director’s Note
Speaking about the project, Director Dhinesh Kalaiselvan said:
Mahasenha is not just a film about the jungle — it’s a story about faith, power, and the harmony between man and nature. I wanted to explore how greed disturbs this divine balance, and how spirituality restores it. Every frame of this film reflects our respect for nature and the belief that divinity exists in every living being. The forest itself is a character — alive, emotional, and powerful.
About the Production
With MAHASENHA, Marudham Productions continues its commitment to delivering high-quality, content-driven cinema that resonates with audiences. Following the success of Raakadhaan, the banner now steps into a new cinematic universe filled with spiritual depth, thrilling adventure, and emotional storytelling.
MAHASENHA promises to be a captivating visual and spiritual experience — an unforgettable journey that carries the fragrance of the mountains, the rhythm of the forest, and the pulse of belief.
நடிகர் சூரி, இயக்குனர் விஜய் மில்டன் இணைந்து வெளியிட்ட “மகாசேனா” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்;
மருதம் புரொடக்ஷன்ஸ் புதிய படைப்பு இயற்கை, ஆன்மீகம் மற்றும் காடு புராணத்தை மையமாகக் கொண்ட அதிரடி திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு;
2023ஆம் ஆண்டில் வெளியான க்ரைம் திரில்லர் “இராக்கதன்” படத்தின் வெற்றிக்கு பின், மருதம் புரொடக்ஷன்ஸ் தனது அடுத்த மிகப்பெரிய முயற்சியாக “மகாசேனா” என்ற புதிய படத்தை அறிவித்துள்ளது.
இந்த படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக்கும் நடிகர் சூரி மற்றும் இயக்குனர் விஜய் மில்டன் ஆகியோரால் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டன. காடு மற்றும் ஆன்மீக நிழல்களில் உருவான இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
படம் பற்றி,
இயக்குனர் தினேஷ் கலைசெல்வன் எழுதி இயக்கும் மகாசேனா படம், இயற்கை, ஆன்மீகம் மற்றும் புராணக் கூறுகளை இணைக்கும் ஒரு காடு சார்ந்த ஆக்சன்-திரில்லர் ஆகும்.
மனித பேராசைக்கும், தெய்வீக இயற்கை சக்திகளுக்கும் இடையிலான நிலையான மோதலை, குடலூர், வயநாடு, கொல்லிமலை, ஊட்டி ஆகிய இடங்களில் கதையாக அமைக்கப்பட்டுள்ளது.
படத்தின் 90% பகுதி உண்மையான காட்டு பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட காட்சியமைப்புடன் கூடிய இந்த படம், திருவிழா காட்சிகளை மையமாகக் கொண்ட கிளைமாக்ஸ், பழங்குடி இசையையும் பக்தி இசையையும் இணைக்கும் புது இசை அனுபவத்தையும் தருகிறது.
படத்திற்காக இசையமைத்துள்ளவர்கள் ஏ. பிரவீன் குமார் மற்றும் எஸ்.என். அருணகிரி. பாடகர்கள் — வைகோம் விஜயலட்சுமி, வி.எம். மஹாலிங்கம், வி.வி. பிரசன்னா, பிரியங்கா என்.கே. படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு பாடலும் காடின் உயிரோட்டத்தையும், ஆன்மீக பிணைப்பையும் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த படத்தில் விமல், ஸ்ருஷ்டி டாங்கே, யோகி பாபு, மஹிமா குப்தா, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், ஆல்ஃப்ரெட் ஜோஸ், இளக்கியா, விஜய் சியோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மேலும், படத்தின் முக்கியமும் குறியீடாகவும் யானை சேனா முக்கியமான வேடத்தில் நடிக்கிறது.
இயக்குனர் தினேஷ் கலைசெல்வன் கூறுகையில்,
“மஹாசேனஹா ஒரு காடு பற்றிய கதை மட்டும் அல்ல — அது மனிதன், இயற்கை, தெய்வீகம் ஆகியவற்றின் இடையிலான நம்பிக்கையையும் ஒற்றுமையையும் பற்றி பேசும் படம். பேராசை இந்த தெய்வீக சமநிலையை குலைக்கிறது. ஆன்மீகம் அதைக் காப்பாற்றுகிறது. ஒவ்வொரு ஃப்ரேமும் இயற்கைக்கான மரியாதையையும், உயிரின் தெய்வீகத்தையும் பிரதிபலிக்கிறது. இந்தக் காடு தானே ஒரு கதாபாத்திரமாக உயிருடன், உணர்வுடன், ஆற்றலுடன் உள்ளது.
மருதம் புரொடக்ஷன்ஸ் தனது முந்தய படைப்பு “இராக்கதன்” போலவே, மகாசேனாவிலும் வலிமையான, காட்சியளவில் பிரம்மாண்டமான ஒரு திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்க இருக்கிறது. ஆன்மீகம், அதிரடி, உணர்ச்சி என இந்த மூன்றையும் இணைத்து உருவாகும் மகாசேனா படம், மலைகளின் மணமும், காடுகளின் தாளமும், நம்பிக்கையின் துடிப்பும் கொண்ட ஒரு மறக்கமுடியாத திரைப்பட அனுபவமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறோம்.
தொழில்நுட்ப குழு விவரம்
கதை, திரைக்கதை & இயக்கம்: தினேஷ் கலைசெல்வன் தயாரிப்பு: டாக்டர் செல்வராஜு இணை தயாரிப்பு : ராணி ஹென்றி சாமுவேல் இசை: ஏ. பிரவீன் குமார், எஸ்.என். அருணகிரி பின்னணி இசை: உதய பிரகாஷ் (UPR) ஒளிப்பதிவு: D.R. மனஸ் பாபு எடிட்டிங்: நாகூரன் ராமசந்திரன் ஸ்டண்ட்: ராம் குமார் நடன அமைப்பு: தஸ்தா, அமீர் பாடல் : தினேஷ் கலைசெல்வன் கலை இயக்கம் : V.S. தினேஷ் குமார் தயாரிப்பு மேலாண்மை: ராணி, ரமேஷ், தினேஷ் வெல்முருகன் DI: ஜான் ஸ்ரீராம் VFX: i-Mate மீடியா ஆடியோகிராபி: பாலாஜி, ராஜு போஸ்டர் வடிவமைப்பு: தினேஷ் அஷோக் P.R.O. : ரேகா
“Enn Vaanam Neeye” is a heartfelt lyrical music video that celebrates the unspoken, tender, and powerful essence of a mother’s love. The song captures an emotion — a reflection of the countless, quiet blessings that mothers bring into our lives.
Core :
“Enn Vaanam Neeye is an excerpt/emotion from a few tiny things amongst the gigantic blessings mothers generally are. There are such incredible renditions and dedications to Mothers through music so far, and we just wanted to add a drop to that ocean.”
Dedicated to every mother, the song simply says —
“Amma, this is for you ♥️.
Composed and Sung by: Keneeshaa Lyrics by: Ravi Mohan Music Production: Yanchan Produced by: Ravi Mohan Studios Creative Director: Karthik Yogi Creative Producer: Balachandran G
A special highlight of this soulful creation is actor Ravi Mohan’s debut as a lyricist, marking a new and meaningful journey in his artistic path. Known for his impactful performances on screen, Ravi Mohan now steps into the world of words with a deeply personal and emotional tribute.
Quote from Composer & Singer – Keneeshaa
“This song came from a very pure place in my heart. While composing and singing ‘Enn Vaanam Neeye,’ I kept thinking of my mother — and how mothers become the sky that shelters us, even when we don’t realise it. It’s not just a song; it’s an emotion we all carry. I hope every listener feels their mother’s warmth through this melody.”
Quote from Lyricist – Ravi Mohan
“Writing for the first time felt like opening a very emotional part of myself. ‘Enn Vaanam Neeye’ is inspired by the everyday magic mothers create — those small, unnoticed moments that make life beautiful. I wanted to express that love and gratitude in the simplest, most honest words possible. This song is my heartfelt tribute to all mothers, especially mine.”
The lyrical video of “Enn Vaanam Neeye” is now live on all major platforms, inviting audiences to experience a moving blend of melody, love, and memory.
இதயத்தை தொட்டுவரும் பாடல் வீடியோ “என் வானம் நீயே” இன்று வெளியீடு;
“என் வானம் நீயே” பாடல் ஒரு தாயின் அன்பின் ஆழத்தையும், சொலப்படாத உணர்ச்சிகளையும் கொண்டாடும் ஒரு பாடல். இது வெறும் ஒரு இசை அல்ல, ஒரு உணர்ச்சி.
ஒவ்வொரு தாயும் நம் வாழ்க்கையில் ஊற்றும் அந்த அமைதியான ஆசீர்வாதங்களின் பிரதிபலிப்பு “என் வானம் நீயே”.
பாடலின் கரு பற்றி,
“என் வானம் நீயே என்பது ஒரு தாய் நமக்குக் கொடுக்கும் பேராசீர்வாதங்களில் ஒரு சிறிய துளி.
தாய்மார்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல அழகான பாடல்கள் இதுவரை வந்துள்ளன, அவற்றில் நாங்களும் ஒரு துளி சேர்க்க விரும்பினோம்.”
இந்தப் பாடல் ஒவ்வொரு தாய்க்கும் அர்ப்பணிப்பு,
“அம்மா, இது உனக்காக ♥️”
மனதை நெகிழவைக்கும் இசை படைப்பின் சிறப்பு அம்சமாக, நடிகர் ரவி மோகன் முதன்முறையாக பாடலாசிரியராக அறிமுகமாகிறார். திரையில் தனது உணர்வூட்டும் நடிப்புகளால் அறியப்பட்ட அவர், இப்போது சொற்களின் உலகில் தனது தனிப்பட்ட உணர்வுகளால் நிரம்பிய ஒரு புதிய கலைப் பயணத்தை தொடங்குகிறார்.
இசையமைப்பாளர் மற்றும் பாடகி கேனீஷா கூறுகையில்,
“இந்தப் பாடல் என் இதயத்திலிருந்து வந்தது. ‘என் வானம் நீயே’ உருவாக்கும் போது என் தாயை நினைத்துக்கொண்டே இருந்தேன். தாய்மார்கள் எப்படியெல்லாம் நம்மை வானம் போல காத்துக் கொள்கிறார்கள் என்பதைக் குறித்தே இந்த பாடலை அமைத்துள்ளோம். இது வெறும் ஒரு இசை அல்ல, நம்மில் ஒவ்வொருவருக்கும் உள்ள ஒரு உணர்ச்சி.
இந்த மெலடியை கேட்பவர் ஒவ்வொருவரும் தங்களது தாயின் அன்பையும் அர்ப்பணிப்பையும் உணருவார்கள் என்று நம்புகிறேன், என்றார்”.
பாடலாசிரியர் ரவி மோகன் கூறுகையில்,
முதல் முறையாக எழுதுவது என்பது எனது மனத்தின் மிக ஆழமான பகுதியைத் திறந்தது போல இருந்தது. ‘என் வானம் நீயே’ என் தாயிடமிருந்து வந்த சிறிய அதிசயங்களின் பிரதிபலிப்பு. அன்றாட வாழ்வின் அன்பான, கவனிக்கப்படாத தருணங்கள் வாழ்க்கையை எவ்வளவு அழகாக்குகின்றன என்பதைக் குறித்த பாடல். அந்த நன்றி, அந்த பாசத்தை மிக நேர்மையான, எளிமையான சொற்களில் வெளிப்படுத்தவேண்டுமென்றே இதை எழுதினேன். இது எல்லா தாய்மார்களுக்கும், குறிப்பாக என் தாய்க்கும் எனது இதயபூர்வமான வணக்கமாக சமர்ப்பிக்கிறேன்.
“என் வானம் நீயே” பாடல் வீடியோ இன்று முதல் அனைத்து முக்கியமான இசை தளங்களிலும் வெளியாகியுள்ளது. அன்பு, நினைவுகள், மற்றும் மெலடிகளின் கலவையாகிய இந்த பாடல், கேட்பவர் ஒவ்வொருவரையும் உணர்ச்சியால் நிறைந்த ஒரு நெகிழ்ச்சியான பயணத்தில் அழைத்துச் செல்லும், என்றார்.
Verus Productions, the makers of Gautham Ram Karthik’s upcoming film ROOT – Running Out of Time, have officially announced the completion of the film’s shooting on October 30th.
The film, a Sci-Fi Crime Thriller by genre, has kept film enthusiasts, trade, and industry circles abuzz with its excellent production values and seamless planning and execution.
ROOT – Running Out of Time, written and directed by Sooriyaprathap S, marks the Tamil cinema debut of Bollywood actor Aparshakti Khurana. Bhavya Trikha plays the female lead, while Y. Gee. Mahendran portrays a pivotal role. The ensemble cast also includes Pavni Reddy, Linga, RJ Anandhi, and several others.
The film features a fascinating sci-fi concept built around an emotionally engaging theme. It has been shot extensively across Chennai and other key locations.
Director Sooriyaprathap S said,
We’ve officially wrapped ROOT! The making of this film has been an unforgettable journey, we’ve poured our hearts and hard work into creating a memorable experience for the audience, and we can’t wait to share it with you all.
A big thanks to our hero Gautham Ram Karthik, his energy, dedication, and commitment made this journey truly special. I’m deeply grateful to my producers, our wonderful cast and crew for their immense support and encouragement, and to Bollywood star Aparshakti Khurana, whose presence and involvement have been a great strength to the film.
We’re truly excited as we move into post-production, and can’t wait to bring ROOT to you soon!
The technical crew of ROOT includes Arjun Raja (Cinematography), John Abraham (Editing), Vithushanan (Music), Dr. D. Alice Angel (CEO), Miracle Michael (Action Choreography), Santhakumar of Hocus Pocus Studios (VFX),Dinesh (Art Director), Deepthi RJ (Costume Design), Dhanalingam (Production Controller), and Rekha (Public Relations).
Verus Productions தயாரிப்பில், கெளதம் ராம் கார்த்திக் நடித்துவரும் “ROOT – Running Out of Time” திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 30, அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது.
Sci-Fi க்ரைம் த்ரில்லரான இப்படம், சிறந்த தயாரிப்பு நிர்வாகத்தால், திரைத்துறை மற்றும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
“ROOT – Running Out of Time” படத்தை சூரியபிரதாப் S எழுதி இயக்கியுள்ளார். இதன் மூலம் பாலிவுட் நடிகர் அபர்ஷக்தி குரானா தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். படத்தில் பாவ்யா த்ரிகா நாயகியாக நடித்துள்ளார். மேலும், Y.Gee. மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாவ்னி ரெட்டி, லிங்கா, RJ ஆனந்தி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இணைந்துள்ளனர்.
உணர்ச்சிமிகுந்த கதாபாத்திரங்களோடு, அறிவியலையும் மனித உணர்வுகளையும் இணைக்கும் தனித்துவமான கருத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பல முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டது.
இயக்குநர் சூரியபிரதாப் கூறியதாவது,
“ROOT படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துவிட்டது. இந்தப் படம் எங்களுக்கு மறக்க முடியாத ஒரு பயணம். எங்கள் உழைப்பையும், அர்ப்பணிப்பையும், முழுமையாக கொடுத்து ஒரு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை உருவாக்கியுள்ளோம். அதை விரைவில் பார்வையாளர்களுடன் பகிர்வதற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.
எங்கள் ஹீரோ கெளதம் ராம் கார்த்திக் அவர்களுக்கு என் இதயபூர்வ நன்றி. அவரின் ஆற்றல், அர்ப்பணிப்பு, உழைப்பு அனைத்தும் இந்தப் பயணத்தை சிறப்பாக மாற்றியது. இந்த திரைப்பட உருவாக்கத்திற்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்களுக்கும், பக்கபலமாக இருந்த நடிகர்கள்,தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றிகள், மேலும் பாலிவுட் நட்சத்திரம் அபார்ஷக்தி குரானா அவர்களின் பங்களிப்பு இந்தப் படத்தின் முக்கிய பலமாக இருந்தது. அவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைப்பெற்று வருகிறது. விரைவில் ROOT ரசிகர்களைச் சந்திக்க வருகிறது.”
தொழில்நுட்பக் குழு:
ஒளிப்பதிவு: அர்ஜுன் ராஜா படத் தொகுப்பு: ஜான் அபிரகாம் இசை: விதூஷனன் தலைமை நிர்வாக அதிகாரி: Dr. ஆலிஸ் ஏஞ்சல் தயாரிப்பு வடிவமைப்பு: தினேஷ் ஆக்ஷன் இயக்கம்: மிரக்கிள் மைக்கேல் ஆடை வடிவமைப்பு: தீப்தி ஆர்.ஜே VFX : சாந்தகுமார் (Hocus Pocus Studios) தயாரிப்பு மேலாளர்: தனலிங்கம் PRO: ரேகா
எம்.பி.என் மூவிஸ் சார்பில் இப்படத்தை எம்.பி நக்கீரன் தயாரிப்பில் ஜீவாபாரதி இயக்கி வருகிறார்.
எம்.பி நக்கீரன்,லிபியா ஸ்ரீ ஆகியோர் கதாநாயகன் நாயகியாக நடிக்க நிஷாந்த், ஜீவாபாரதி, கோவை டாக்டர்.கே.கண்ணன், ரங்கராஜ் சுப்பையா, செந்தில் தங்கவேல் ரமேஷ் ராதா,ஆர்.பிரபு, ஜெ.கணேஷ் குமார், செந்தில் குமரன் மற்றும் இனியன் ஆகியோர் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு & இசை யு.எம் ஸ்டீவன் சதீஷ்
படத்தொகுப்பு – அஸ்வின் உமாபதி நடனம் – மேகலா மாதேஸ்வரன், அருண்
இணை தயாரிப்பு – கோவை டாக்டர்.கே.கண்ணன்
தயாரிப்பு – எம்.பி நக்கீரன்
கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இயக்கம் – ஜீவாபாரதி
இதன் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள பாலக்காடு அட்டப்பாடி ஆகிய இடங்களில் இடைவிடாது நடைபெற்று வருகிறது
கதாநாயகன் நாயகியை மீட்ட படக்குழுவினர்
கேரளாவில் உள்ள அட்டப்பாடி மலைப்பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் கதாநாயகன் நாயகி பேசிக் கொண்டிருப்பதாக காட்சி அமைப்பு. இயக்குனர் காட்சியை விளக்கி கூறி பின் ஆக்ஷன் என்றதும் கதாநாயகி லிபியா ஸ்ரீ மலைக்ககுன்றின் 100 அடி பள்ளத்தாக்கில் சறுக்கிக் கொண்டே விழுந்து விட்டார். உடனே பதட்டம் அடைந்த நாயகன் நக்கீரன் தானும் சறுக்கிக்கொண்டே இறங்கி காப்பாற்ற முயன்றார. ஆனால் இருவரும் கீழே மாட்டிக் கொண்டு மேலே வர முடியாமல் தவித்தனர். படக்குழுவினரும் திகைத்தனர். உடனடியாக பக்கத்தில் உள்ள மலை கிராமத்தில் மிகப்பெரிய கயிறு வரவழைக்கப்பட்டு பள்ளத்தில் கயிறை இறக்கி இருவரையும் ஒருவர் ஒருவராக மேலே கொண்டு வந்து சேர்த்தனர்.புல்கள் நிறைந்த பகுதியாக இருந்ததால் இருவருக்கும் சிறிய காயத்துடன் தப்பித்தனர். எனினும் நாயகி லிபியாஸ்ரீ அச்சத்தில் மயக்கம் அடைந்தார்.அவருக்கு முதலுதவி சிகிரிச்சை அளிக்கப்பட்டு, ஓய்வு எடுத்தபின் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ’வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்.
ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வதை நோக்கமாக கொண்ட அந்த அமைப்பின் 10-வது ஆண்டு துவக்க விழா 3.11.2025 அன்று மதியம் சென்னை தி நகர் சோஷியல் கிளப்பில் நடைபெற்றது.
நிகழ்வில் ஆட்டோ ஓட்டும் அனுபவமுள்ள ஏழைப் பெண்கள் 10 பேருக்கு ஆட்டோக்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பங்கேற்று பயனாளிகளுக்கு ஆட்டோக்களை வழங்கிப் பேசிய பி டி செல்வகுமார், ”பத்திரிகையாளராக இருந்து, நடிகர் விஜய்க்கு பி ஆர் ஓ’வாக இருந்து, அவரது வளர்ச்சிக்காக 27 வருடங்கள் உழைத்து, சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறேன்.
பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம் என்பதோடு நின்று விடக் கூடாது என்பதை மனதில் கொண்டு சமூக சேவைகளை முன்னெடுத்துச் செய்வதற்காக கலப்பை மக்கள் இயக்கம் தொடங்கினோம். தொடங்கியபோது இவரால் என்ன செய்துவிட முடியும் என்றெல்லாம் கேலி கிண்டல் செய்தவர்கள் உண்டு. அப்படியான பேச்சுக்களையெல்லாம் கடந்து 10-வது வருடத்திற்கு வந்துள்ளோம். 10 பேருக்கு ஆட்டோக்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
எங்களுடைய உதவித் திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கு, குறிப்பாக மலையோர, பழங்குடி கிராம மக்களுக்கு சென்று சேரும்படி பார்த்துக் கொள்கிறோம்.
கொரோனா காலகட்டத்தில் ஒரு வருடகாலம் தொடர்ச்சியாக நாங்கள் செய்த உதவிகளைப் பாராட்டி, எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சியில் எனக்கு ‘மனிதநேயச் செம்மல் விருது’ தந்தார்கள்.அதன்பிறகு, நெல்லை மாவட்ட சுற்று வட்டாரத்தில், மலைக் கிராமங்களில் 30-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகள், கலையரங்குகள் கட்டிக் கொடுத்துள்ளோம். அந்த சேவையைப் பாராட்டி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களும் சபாநாயகர் அப்பாவு அவர்களும் எனக்கு ‘சிறந்த கல்வி சேவையாளர் விருது’ வழங்கி ஊக்கப்படுத்தினார்கள்.
இதோ இப்போது 10-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். அந்த நிகழ்வை சிறப்பாக நடத்த முடிவெடுத்து பெண்களின் உழைப்புக்கு மதிப்பளித்து ஏழை எளிய ஆட்டோ ஓட்டுநர் பெண்கள் 10 பேருக்கு ஆட்டோக்கள் வழங்குவதென தீர்மானித்து செயல்படுத்தியிருக்கிறோம்.
நேற்று தமிழ்நாடு சி எம் தலைமையேற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு சென்று வந்துள்ளேன் என்றால், அந்தளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் அது சாதரணமாக நடந்துவிட வில்லை.
சவால்கள், அவமானங்கள் என எல்லாவற்றையும் கடந்துதான், வியர்வையும் ரத்தமும் சிந்தி இந்த இடத்திற்கு வந்துள்ளோம். எதுவுமே சும்மா வந்து விடாது. ஒவ்வொரு செயல்பாட்டுக்கு பின்னேயும் கடுமையாக உழைத்திருக்கிறேன். பெரியளவில் போராட்டங்களைச் சந்தித்திருக்கிறேன். இனியும் சவால்களைச் சந்திக்க, மக்கள் நலனுக்காக எதையெல்லாம் செய்ய முடியுமோ அவற்றைச் செய்யத் தயராக இருக்கிறேன். இந்த எங்களின் சமூக சேவை பணிகள் வரும் நாட்களில் இன்னும் சிறப்பாக தொடரும்.
எப்படி பெரிய பெரிய நடிகர் நடிகைகள் பற்றிய செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கிறீர்களோ, அதேபோல் சாமானியர்களான எங்களைப் போன்றோரின் சமூக சேவை பணிகள் பற்றி மக்களிடம் பத்திரிகையாளர்கள் கொண்டு சேர்த்து ஆதரவளிக்க கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
அதையடுத்து பத்திரிகையாளர்கள், ‘நடிகர் விஜய்யின் கட்சியோடு கூட்டணி வைப்பீர்களா?’ என்று கேட்டபோது ”காலச் சுழல் கூடி வந்தால் இணைந்து செயல்படலாம். விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” என்றார்.
கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் பற்றி கேட்டதற்கு, ”விஜய் இனிவரும் நாட்களில் தனக்கான கூட்டத்தை கட்டுப்படுத்த, நெறிப்படுத்த அரசியல் அனுபவம் வாய்ந்த இரண்டாம் கட்டத் தலைவர்களை தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். கூட்டங்களுக்கு சரியான நேரத்துக்கு போவது உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
எஸ் ஐ ஆர் (Special Intensive Revision – SIR) பற்றிய கேள்விக்கு, ”தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அவசர அவசரமாக மத்திய அரசு எஸ் ஐ ஆர் நடைமுறைப்படுத்துவது தவறானது” என்றார்.
நிகழ்வின் தொடக்கத்தில் வரவேற்புரை வழங்கிய கலப்பை மக்கள் இயக்கத்தின் துணைத் தலைவர் நந்தகுமார், ”ஏழை எளிய மக்களுக்கு இயன்றதை செய்வோம்’ என்ற குறிக்கோளுடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் மூலம் கஜா புயல் பாதிப்பின்போது 6 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் செய்தோம். கொரோனா பாதிப்பு காலகட்டத்தில் பல்வேறு இடங்களில் உதவிகள் செய்தோம். மற்ற அரசியல் கட்சிகள் யாருக்கெல்லாம் ஓட்டுரிமை இருக்கிறதோ அவர்களுக்கு உதவிகள் செய்தார்கள். நாங்கள் இந்தியாவில் ஓட்டுரிமையில்லாத பர்மா அகதிகளுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளைச் செய்தோம். பெண் ஆட்டோ ஓட்டுநர்கள், திருநங்கைகள் என பலருக்கும் எங்களுடைய உதவிகள் போய்ச் சேர்ந்தது.
ஏழை எளிய மக்களுக்குத் தேவையான செவித்திறன் மேம்பாட்டுக் கருவிகள், மூக்குக் கண்ணாடிகள் வழங்குவது, மரக்கன்றுகள் வ்ழங்குவது, ஆட்டுக் குட்டிகள் வழங்குவது என பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம். எந்த உதவிகளாக இருந்தாலும் ஏழை எளிய மக்கள், மலைவாழ் மக்கள், பழங்குடி மக்கள் பயன் பெறுவதை நோக்கமாக கொண்டு செயலாற்றுகிறோம். எங்களின் செயல்பாடுகளை தெரிந்துகொண்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் எங்களை மூன்று முறை அழைத்து அங்கீகரித்துள்ளார்.
நேற்றைய (2.11.2025) தினம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடந்த, மத்திய அரசு நடைமுறைப்படுத்தவிருக்கிற எஸ் ஐ ஆர் (Special Intensive Revision – SIR) செயல்திட்ட எதிர்ப்புக் கூட்டத்திலும் கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் பி டி செல்வகுமார் அவர்கள் கலந்து கொண்டு தனது கருத்துக்களை முன் வைத்தார்.
பி டி செல்வகுமார், நடிகர் விஜய்யின் வளர்ச்சிக்கு மட்டும் துணை நின்றவர் அல்ல; விஜய் சேதுபதி நடித்த ‘தென்மேற்குப் பருவக் காற்று’ பட வெளியீட்டில் பிரச்சனை வந்தபோது, அதை தீர்க்க உதவி செய்து அவரது வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டவர்” என்றார்.
ஆட்டோக்களைப் பெற்றுக் கொண்டவர்கள் சார்பாக ஒரு பெண்மணி, கொரோனா காலத்திலிருந்து இப்போது வரை பி டி செல்வகுமாரின் கலப்பை மக்கள் இயக்கம் தங்களுக்கு செய்து வருகிற உதவிகளைக் குறிப்பிட்டு, ஆட்டோக்கள் வழங்கி ஊக்குவித்ததற்காக நன்றி தெரிவித்ததோடு நிகழ்வு நிறைவுக்கு வந்தது.
இலங்கையிலிருந்து வாழ்வாதாரத்தை தேடி நமது மண்ணை நம்பி வரும் ஒரு குடும்பத்திற்கு இங்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வு காண்பது மாதிரி சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் படம் ஐயம்.
செந்தில் ஆண்டவர் மூவிஸ் சார்பில் ஈஸ்வரன் விஜயன் தயாரிப்பில் ந.வசந்த் இயக்கி வருகிறார்.
பாலாஜி,ரெய்னா கரட் ஆகியோர்கதாநாயகன் நாயகியாக அறிமுகம் ஆகிறார்கள்.
போஸ் வெங்கட், கானா உலகநாதன், ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தீபா சங்கர் ,கே.பி.ஒய் வினோத், மிப்பு,ரஞ்சன், விஜய் கணேஷ்,கிரேன் மனோகர்,யாசர், சுப்ரமணி, டி.என்.ஏ விஜயலட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு – -கமலக்கண்ணன்
இசை -கார்த்திக் பாடல்கள் – கானா உலகநாதன், லிகரன், ந.வசந்த்
படத்தொகுப்பு – சயான் சண்டை பயிற்சி – நாக் அவுட் நந்தா கலை- வேலு
மக்கள் தொடர்பு – வெங்கட் தயாரிப்பு மேற்பார்வை – குமார்
தயாரிப்பு – ஈஸ்வரன் விஜயன்
கதை திரைக்கதை வசனம் இயக்கம் – ந.வசந்த்
இதன் படப்பிடிப்பு பெங்களூர், ஒசூர் தூத்துக்குடி, ராமேஸ்வரம், சென்னை ஆகிய இடங்களில் 40 நாட்களாக நடைபெற்று இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கி வருகிறது.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற “மில்லர்” திரைப்படத்தின் தொடக்க விழாவில், பிரபல இலங்கைத் தமிழ் கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின், கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் முன்னிலையில் கவிதை ஆற்றிய சிறப்பை பெற்றார்.
IBC நிறுவனரும் முன்னணி தொழில் அதிபருமான திரு. பாஸ்கரன் கந்தையா அவர்கள் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தின் தொடக்க நிகழ்வு, அண்மையில் யாழ் வலம்புரி ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் தென்னிந்திய திரைப்படத் துறையின் முக்கிய பிரமுகர்களான இயக்குநர் பாண்டிராஜ், “மஹாராஜா” இயக்குநர் நித்திலன், நடிகர் ரஞ்சித், நடிகர் & இயக்குநர் சிங்கம்புலி, தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இலங்கைத் தமிழ் திரைப்படத் துறை, ஊடகத் துறை மற்றும் கலையுலகின் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் தனது கவிதையை ஆற்றிய பொத்துவில் அஸ்மின், “வைரமுத்து என் தாய்” என்ற மகுடத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு சமர்ப்பித்த வாழ்த்துக் கவிதை, பார்வையாளர்களின் மிகுந்த பாராட்டைப் பெற்றது.
இந்நிகழ்வை குறித்து பேசும்போது பொத்துவில் அஸ்மின் தெரிவித்தாவது.
“கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை நேரில் காண வேண்டும் என்பது பலரின் கனவு. ஆனால் அவர்முன் நின்று கவிதை பாடும் பாக்கியம் — நான் பெற்ற வரம் என்பேன்.
எனது சிறிய வயதில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை முதன் முதலாக நான் புத்தகங்கள், ஊடகங்கள் வழியேதான் சந்தித்தேன். அவரின் ‘இதுவரை நான்’ என்ற சுயசரிதை என் வாழ்வையும் இலக்கியப் பாதையையும் வடிவமைத்த முக்கிய நூல். அதன் பிறகு, 2013-ல் வெளிவந்த ‘பாம்புகள் குளிக்கும் நதி’ என்ற எனது கவிதைத் தொகுப்பிற்கு அவர் வழங்கிய வாழ்த்துரை எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம்.
கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு அவர் தொகுத்த ‘கலைஞர் 100 – கவிதைகள்100 ’ நூலில் என் ‘திருக்குவளை சூரியன்’ என்ற கவிதை இடம்பெற்றுள்ளது.
நான் நேசித்த மாபெரும் கவிஞரின் முன்னிலையில், அவரை பற்றிய கவிதையைப் பாடும் பாக்கியம் கிடைத்தது — இது என் இலக்கிய வாழ்வின் உச்ச அங்கீகாரம். இலங்கையில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் பல இளம் கவிஞர்கள் கூட இதுவொரு கனவு மாதிரியான வாய்ப்பு என்பதை நான் நன்றாக அறிவேன்.”
விழாவை ஏற்பாடு செய்து இந்த அரிய கலைச் சந்திப்பை உருவாக்கிய IBC நிறுவனரும் தொழில் அதிபருமான திரு. கந்தையா பாஸ்கரன் அவர்களுக்கு என் மனம் நிறைந்ந நன்றிகள்” என அவர் தெரிவித்தார்.
‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ மற்றும் ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. பி. ஜெகன் உண்மை சம்பவத்தை தழுவி எழுதி இயக்கும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ எனும் திரைப்படத்தில் அவர் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் விஜய் வர்மா, சங்கீதா கல்யாண், பிச்சைக்காரன் மூர்த்தி, தியா, ரஞ்சித் வேலாயுதன், வெற்றிவேல் ராஜா, திண்டுக்கல் அலெக்ஸ், உறியடி ஷங்கர் மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.
தேசிய விருது பெற்ற எம் எஸ் பாஸ்கர் முக்கியமான பாத்திரத்தில் தோன்றியிருக்கிறார்.
இப்படத்தை பற்றி இயக்குனர் கே பி ஜெகன் கூறியதாவது :
ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தில் மூன்று கதைகள் ஓர் நேர்கோட்டில் பயணிப்பது தான் திரைக்கதையின் சுவாரஸ்யம். ஒவ்வொரு கதை களத்திற்கும், ஒரு பாடல் என்ற விதத்தில் மூன்று பாடல்களும், மூன்று கதைகளையும் இணைக்கும் இடத்தில் நான்காவதாக ஒரு பாடலும் இடம் பெறுகிறது. பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் முக்கியத்துவம் நிறைந்த படமாக இது இருக்கும்.
பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்ற போட்டியாளரில் ஒருவரான விஜய் வர்மா இப்படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சங்கீதா கல்யாண் நடிக்கிறார். இவர் வடம் படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிக்கிறார். மூன்று கதைகளில் ஒரு கதையில் இவர்கள் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு, திருச்செந்தூர், தூத்துக்குடி, மணப்பாடு மற்றும் குலசேகரப்பட்டணம் ஆகிய இடங்களில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது. இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நவம்பர் மாதத்தில் நிறைவு பெறும்.
மாயாண்டி குடும்பத்தார் என்ற காலத்தால் அழியாத சிறந்த படத்தை தயாரித்த யுனைடெட் நிறுவனம், தனது இரண்டாவது படைப்பாக இப்படத்தை பெருமையுடன் தயாரிக்கிறது.
மேலும், ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு நிறுவனம் – யுனைடெட் ஆர்ட்ஸ் தயாரிப்பு – எஸ். கே. செல்வகுமார் B. E., எழுத்து & இயக்கம் – கே. பி. ஜெகன் ஒளிப்பதிவு (DOP) – சுகசெல்வம் இசையமைப்பாளர் – ஸ்ரீகாந்த் தேவா படத்தொகுப்பு – மணிகண்டன் சிவகுமார் கலை இயக்கம் – வீரசமர். பாடல் வரிகள் – கார்த்திக் நேத்தா, திரை வண்ணன், சக்தி (USA) நடன அமைப்பாளர் – ரிஷி உடை வடிவமைப்பாளர் – கே. நடராஜ் தயாரிப்பு நிர்வாகி – பாஸ்கர் தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் – ராமதாஸ் நிர்வாக தயாரிப்பாளர் – சாமுவேல் சிவராஜ் மக்கள் தொடர்பு – யுவராஜ்
டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்கும், இயக்குநர் பிரபு சாலமனின் – கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் பொத்தி பொத்தி உன்ன வச்சு பாடல் வெளியீடு.
டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில், இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “கும்கி 2” படத்திலிருந்து, “பொத்தி பொத்தி உன்ன வச்சு” எனும் முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற படம் “கும்கி”. 13 வருடங்களைக் கடந்தும், இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் அப்படத்தின் மையத்தை வைத்து, இயக்குநர் பிரபு சாலமன் மீண்டும் கும்கி 2 படத்தை உருவாக்கி வருகிறார்.
ஒரு இளைஞன் மற்றும் ஓர் அற்புதமான யானை இடையேயான தூய்மையான, நிபந்தனையற்ற நட்பைப் பற்றியும், அன்பை பற்றியும் இப்படம் பேசுகிறது.
இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா மென்மையான மெலடி இசை மற்றும் மயக்கும் குரலில், பாடலாசிரியர் மோகன் ராஜின் அற்புத வரிகளில், நேற்று வெளியான “பொத்தி பொத்தி உன்ன வச்சு” பாடல், ஒரு சிறுவனுக்கும் யானைக்குமான உறவை, அன்பை, அழகாக வெளிப்படுத்துகிறது.
ஒளிப்பதிவாளர் எம். சுகுமார் அவர்களின் கண்களை குளுமையாக்கும் காட்சிகளும், நிவாஸ் கே பிரசன்னாவின் சொக்க வைக்கும் இசை, யானையோடு விளையாடும் சிறுவனின் கள்ளம் கபடமற்ற அன்பு, இயற்கை எழில் கொஞ்சும் காடு என, இப்பாடல் பார்த்தவுடன் மனதை பறிக்கிறது. வெளியான வேகத்தில் இப்பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்படத்தில் மதி எனும் அறிமுக நடிகர் நாயகனாக நடித்துள்ளார். காட்டிலும், யானையுடனும் வெகு துணிச்சலாக நடித்து முதல் படத்திலேயே கவர்ந்திழுக்கிறார். அவருடன் இப்படத்தில் ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஹரீஷ் பெரடி, ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.
டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில் உருவாகும் கும்கி 2, திரைப்படம் ரசிகர்களையும் புதிய தலைமுறையையும் கவரும் நோக்கில் விரைவில் திரைக்க்கு வரவுள்ளது.
தொழில்நுட்பக் குழு:
இயக்கம் – பிரபு சாலமன் தயாரிப்பாளர்கள் – டாக்டர் ஜெயந்திலால் காடா, தவல் காடா இசை – நிவாஸ் கே. பிரசன்னா ஒளிப்பதிவு – எம். சுகுமார் எடிட்டிங் – புவன் கலை இயக்கம் – விஜய் தென்னரசு சண்டை அமைப்பு – ஸ்டண்ட் சிவா ஆடை அலங்காரம் – வி.பி. செந்தில் அழகன் தயாரிப்பு நிர்வாகம் – ஜே. பிரபாகர் ஸ்டில்ஸ் – சிவா புரமோஷன் – சினிமாபையன் மக்கள் தொடர்பு – யுவராஜ்
Link – https://www.youtube.com/watch?v=hqUBThejZk8