Saturday, June 27, 2026
- Advertisement -
Home Blog Page 99

Predator: Badlands Earns Rave First Reactions; Critics Call It “Big on action and wildly entertaining adventure”

0

The hunt has officially begun, and audiences are roaring their approval.

Early reactions to Dan Trachtenberg’s Predator: Badlands are flooding social media following its first screening in the UK, and the verdict is overwhelmingly positive. Critics are calling the latest entry in the iconic franchise a thrilling reinvention filled with heart, humor, and jaw-dropping action.

Dan Trachtenberg, who revitalized the series with 2022’s Prey, is being praised once again for delivering a fresh and cinematic take on the Predator universe. The critics also hailed the film as “all killer, no filler — a cosmic buddy road movie that totally works” and “a confident, wildly entertaining sci-fi adventure that expands the Predator mythos in the best way.”

Others applauded how Badlands deepens the lore of the Yautja, the legendary alien hunters, while still delivering edge-of-your-seat excitement. The chemistry between stars Dimitrius Schuster-Koloamatangi and Elle Fanning is being highlighted as one of the film’s biggest strengths, with their unlikely partnership bringing both humor and heart to the high-stakes story.

Predator: Badlands releases in Indian theatres on 7th November, 2025 in English, Hindi, Tamil, and Telugu.

“அதிரடியான மற்றும் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட அட்வென்ச்சர் ” என பிரிடேட்டர்: பேட்லேட்ண்ஸ் திரைப்படத்தை விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்!

டான் டிராக்டன்பெர்க்கின் ‘பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ திரைப்படம் இங்கிலாந்தில் முதன் முதலாக திரையிடப்பட்டது. படத்தை பார்த்த பார்வையாளர்களும் விமர்சகர்களும் படம் குறித்து தங்கள் உற்சாகத்தையும் நேர்மறை விமர்சனங்களையும் பகிர்ந்து வருகின்றனர். புகழ்பெற்ற இந்த ஃபிரான்சைஸின் சமீபத்திய வரவான இந்தப் படத்தில் எமோஷன், நகைச்சுவை மற்றும் அதிரடி ஆக்‌ஷன் நிறைந்துள்ளது என்ற பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

2022 ஆம் ஆண்டு வெளியான ‘ப்ரே’ (Prey) திரைப்படத்தின் மூலம் இந்தத் தொடருக்கு புத்துயிர் அளித்த டான் டிராக்டன்பெர்க், பிரிடேட்டர் பிரபஞ்சத்தின் புதிய சினிமா பார்வையை வழங்கியதற்காக மீண்டும் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். விமர்சகர்கள் இந்த படத்தை, “பிரிடேட்டர் நம்பிக்கைகளை சிறந்த முறையில், விரிவாக எடுத்துரைக்கும் பொழுதுபோக்கு அறிவியல் புனைகதை சாகசம்” என்று பாராட்டுகின்றனர்.

புகழ்பெற்ற வேற்றுகிரக வேட்டைக்காரர்களான Yautja- வின் கதையை விறுவிறுப்பாக சொல்லியதன் மூலம் பேட்லேண்ட்ஸ் பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்துள்ளது. நடிகர்கள் டிமிட்ரியஸ் சுஸ்டெர்- கோலோமடாங்கி மற்றும் எல்லி ஆகியோருக்கு இடையிலான கெமிஸ்ட்ரியும் நகைச்சுவையும் உணர்வுப்பூர்வமான தருணங்களும் படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று.

‘பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ இந்திய திரையரங்குகளில் நவம்பர் 7, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

From the Heart of Iconic author Perumal Murugan on his short story ‘Kodithuni’ adapted as ‘Angammal’ Movie

0

Stone bench films presents in association with njoy films and Firo movie station are all set to enthrall cinema lovers with a beautiful film titled ‘Angammal’. The film is produced by Karthikeyan S, Firoz Rahim and Anjoy Samuel.

Renowned author Perumal Murugan, whose short story “Kodithuni” has been transformed as the feature film “Angammal”, reflected thoughtfully on the adaptation. When asked about the writer’s involvement in the process of adapting his short story into full length feature film, he says, “The story is mine, yet my involvement concludes with the granting of adaptation rights. Thereafter, it becomes the director’s artistic prerogative to interpret and realise it. The cinematic version departs in several respects, notably in its climax and the portrayal of the female protagonist. The narrative, originally suited to a brief twenty-five-minute film, has been elegantly expanded into a full-length feature. The director has rendered it with remarkable grace and depth.”

Drawn from Perumal Murugan’s acclaimed short story Kodithuni, this cinematic reimagining unfolds with quiet intensity and emotional restraint. At its heart is Geetha Kailasam, whose performance anchors the film with rare authenticity, complemented by finely measured turns from Saran, Bharani, Mullaiyarasi, and Thendral Raghunathan.A joint production of NJOY Films and Firo Movie Station, the film’s visual and aural language bears the distinct signature of Anjoy Samuel’s meditative cinematography and Mohammed Maqbool Mansoor’s evocative music. Together, they shape a work that is as much a mood as it is a narrative.

“Angammal” affirms Stone Bench Films’ curatorial commitment to voices that challenge convention and celebrate truth in storytelling. With this work, Vipin Radhakrishnan, already distinguished for Ave Maria, emerges as a filmmaker of uncommon sensitivity, capable of transforming stillness into cinema and silence into meaning.

புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘அங்கம்மாள்’!

ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம், என்ஜாய் பிலிம்ஸ் மற்றும் ஃபிரோ மூவி ஸ்டேஷன் ஆகியவற்றுடன் இணைந்து, ‘அங்கம்மாள்’ படத்தை வெளியிடுகின்றனர். இந்தப் படத்தை எஸ். கார்த்திகேயன், பிரோஸ் ரஹீம் மற்றும் அஞ்சோய் சாமுவேல் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்ற சிறுகதையின் தழுவலே ‘அங்கம்மாள்’ திரைப்படம். இதுபற்றி பெருமாள் முருகன் பகிர்ந்து கொண்டதாவது, “இந்தப் படத்தின் கதை என்னுடையது என்றாலும் இதற்கான தழுவல் உரிமையை கொடுத்ததோடு என் பங்கு முடிந்துவிட்டது. இதன் பிறகு, இந்தக் கதையை முழுமையாகப் புரிந்து கொண்டு படமாகக் கொண்டு வந்ததில்தான் இயக்குநரின் திறமை உள்ளது. சிறுகதை சினிமாவாக மாறும்போது அதில் பல விஷயங்கள் மாறலாம். குறிப்பாக இந்தக் கதையில் கிளைமாக்ஸ் மற்றும் பெண் கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்துவதை சொல்லலாம். 25 நிமிடங்கள் நீளம் கொண்டு குறும்படத்திற்கான கதையை முழுநீள படமாக நேர்த்தியுடனும் ஆழத்துடனும் இயக்குநர் மாற்றியிருக்கிறார்” என்றார்.

பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ சிறுகதை தீவிரத்துடனும் ஆழமான உணர்வுகளுடனும் படமாக்கப்பட்டுள்ளது. முதன்மை கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்திருக்கிறார். இவருடன் சரண், பரணி, முல்லையரசி மற்றும் தென்றல் ரகுநாதன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்திற்கு அஞ்சோய் சாமுவேலின் ஒளிப்பதிவும் முகமது மக்பூல் மன்சூரின் இசையும் படத்திற்கு பெரும்பலம் சேர்த்துள்ளது.

திரைத்துறையில் நல்ல படங்களை வழங்குவதில் பெயர் பெற்ற நிறுவனமான ஸ்டோன் பென்ச் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை வழங்குகிறது. தனது முதல் படமான ‘Ave Maria’ மூலம் பாராட்டப்பட்ட விபின் ராதாகிருஷ்ணன் இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

“RAGE OF KAANTHA”: A Tamil-Telugu Rap Anthem Igniting the Spirit of Oneness

0

The teaser trends online, reflecting the unstoppable buzz and emotional connection with fans.

“RAGE OF KAANTHA”, the fierce and fiery title track from the upcoming cinematic powerhouse KAANTHA, is introducing a whole new energy, and vibe in the music world today.
More than a song, it is an anthem forged in fire, an intense, character driven composition that fuses Tamil and Telugu into a single intense rap-style track, echoing the spirit of oneness across cultures, languages, and emotions.
The teaser for the song announcement took the internet by storm, trending on Twitter just 32 minutes after its release – proof of the excitement and emotional bond fans already feel with KAANTHA.
The lyrical video of “RAGE OF KAANTHA” which is releasing today, is a sonic embodiment of rebellion, grit, and ambition. The rap-driven verses roar in Tamil and Telugu, seamlessly interwoven to reflect both the duality and harmony of India’s diverse identity.
Composed by Jhanu Chanthar the music is not just bilingual, it is bi-souled. The track pulses with the heartbeat of two languages, yet speaks one emotion: rage against the obstacles, and the fire of self-belief.
It’s pulsating beats, blended with powerful guitars and lyrical mastery by infusing vintage elements in an exciting new format is an indication of what we can expect from the film as well.

Created by the makers of KAANTHA, this anthem sets the tone for the film, a period drama thriller starring Dulquer Salmaan, Samuthirakani, and Bhagyashri Borse.
Directed by Selvamani Selvaraj, the film hits cinemas worldwide on 14th November 2025. KAANTHA is produced by Rana Daggubati, Dulquer Salmaan, Prashanth Potluri, and Jom Varghese under the production banner Spirit Media and Wayfarer Films.

ஒற்றுமையை வலியுறுத்தும் ‘RAGE OF KAANTHA’ தமிழ்-தெலுங்கு ராப் பாடல் டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று இணையத்தில் டிரெண்டாகியுள்ளது!

வெளிவர இருக்கும் ‘காந்தா’ திரைப்படத்தின் டைட்டில் டிராக்கான ‘RAGE OF KAANTHA’ புதிய எனர்ஜியையும் அதிர்வையும் இசை உலகில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது வெறும் பாடல் என்று கடந்து செல்ல முடியாத அளவுக்கு தீவிரமான, கதாபாத்திரத்தால் இயக்கப்படும் இசையமைப்பு, கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் உணர்ச்சிகளைக் கடந்து ஒற்றுமையை எதிரொலிக்கும் வகையில் தமிழ்- தெலுங்கில் ராப்-ஸ்டைல் டிராக்காக வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இந்தப் பாடலின் டீசர் வெளியான 32 நிமிடங்களிலேயே டிவிட்டரில் டிரெண்ட் ஆனது.

இன்று வெளியாகும் ‘RAGE OF KAANTHA’ பாடல் வரிகள் கிளர்ச்சி, மன உறுதி மற்றும் லட்சியத்தை பிரதிபலிப்பதாக இருக்கும். மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் பாடலில் ராப் இசையுடன் கூடிய வசனங்கள் தமிழ் மற்றும் தெலுங்கில் இடம்பெறும்.

ஜானு சந்தாரின் இசை இருமொழிகளுக்கானது மட்டுமல்ல, இருமொழி ரசிகர்களின் மனங்களையும் உள்ளடக்கியது. ஒன்று உணர்வையும் மற்றொன்று தடைகளுக்கு எதிரான கோபம் மற்றும் தன்னம்பிக்கையின் நெருப்பாக இருக்கும். அதிரும் இசை, பவர்ஃபுல் கிட்டார்ஸ் மற்றும் புதிய வடிவத்தில் பழங்கால இசை என இந்தப் புதுமையை பாடலில் மட்டுமல்லாது படத்திலும் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

துல்கர் சல்மான், சமுத்திரக்கனி பாக்கியஸ்ரீ போர்ஸ் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த பீரியட் டிராமா த்ரில்லர் கதையான ‘காந்தா’வின் தன்மைக்கும் பிரதிபலிக்கும் ஆன்தமாக, வெளியாகும் இந்தப் பாடல் இருக்கும்.

செல்வமணி செல்வராஜ் இயக்கிய ‘காந்தா’ திரைப்படம் இந்த வருடம் நவம்பர் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியோர் ‘காந்தா’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

நடிகர் கௌஷிக் ராம் நடிக்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா

0

ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் கௌஷிக் ஸ்ரீ ராம், பிரதீபா நடிப்பில் மிஸ்டர் டெல்டா கிரியேசன்ஸ் வழங்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் எஸ்.ஆர். பிரபாகரன், விஜய் ஸ்ரீ, மைக்கேல் கே. ராஜா, ‘பிக்பாஸ்’ பிரபலங்கள் விஷ்ணு, சிபி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அறிமுக இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தில் கௌஷிக் ராம், பிரதீபா, சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், டி எஸ் ஆர், ‘சில்மிஷம்’ சிவா, ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரஹத் முனியசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். கிராமத்து காதல் கதையாக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரித்திருக்கிறார். மிஸ்டர் டெல்டா கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் கார்த்திக் வீரப்பன் இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

நவம்பர் 7ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இயக்குநர்கள் எஸ். ஆர். பிரபாகரன், விஜய் ஸ்ரீ, மைக்கேல் கே. ராஜா ஆகியோர் படத்தின் இசையை வெளியிட, படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி பேசுகையில், ”இப்படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் புதியவர்கள் என்பதால் அனுபவம் புதிதாக இருந்தது. தரமான படைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இணை தயாரிப்பாளர் கார்த்திக் வீரப்பன் பேசுகையில், “தமிழ் திரை உலகில் சமீபகாலமாக கிராமிய பின்னணியிலான காதல் கதைகள் வெளியாவது குறைவாக இருந்தது. அந்த குறையை கிறிஸ்டினா கதிர்வேலன் போக்கும் என நம்புகிறோம். இந்தப் படத்தின் கதை நம் வீட்டில் இயல்பாக நடக்கும் சம்பவங்களைப் போல் இருக்கும். ஆனால் வலி நிறைந்த யதார்த்தமானதாக இருக்கும். இதனை அடுத்த தலைமுறையினருக்கு எப்படி சொல்லப்பட வேண்டும் என்பதை இயக்குநர் அழகாக சொல்லி இருக்கிறார். இந்த திரைப்படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

ஒளிப்பதிவாளர் பிரஹத் முனியசாமி பேசுகையில், ”இயக்குநர் அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் வெளியான குறும்படம் ஒன்றில் ஆறாண்டுகளுக்கு முன் பணியாற்றினேன். அதற்காக அவரிடம் இருந்து முதல்முறையாக 1500 ரூபாயை சம்பளமாக பெற்றுக் கொண்டேன். அப்போது நான் படம் இயக்கினால் நீங்கள்தான் ஒளிப்பதிவாளர் என வாக்குறுதி அளித்தார். அதன் பிறகு இரண்டு ஆண்டு காலம் கழித்து அவருடன் பயணித்து ஏராளமான லொகேஷன்களை பார்வையிட்டோம். மூன்று ஆண்டுகள் வரை இந்த பணி தொடர்ந்தது. அங்கு சென்று இந்தந்த காட்சிகளை இந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம் என விவாதித்தோம். படப்பிடிப்பில் சந்தோஷமாக பணியாற்றினோம். உச்சகட்ட காட்சியை படமாக்கும் போது எங்களுக்கும் எமோஷனலாக இருந்தது. படம் சிறப்பாக வந்திருப்பதாக நம்புகிறோம். இந்தப் படத்திற்காக இசையமைப்பாளர் ரகுநந்தன் அற்புதமாக பணியாற்றியிருக்கிறார்,” என்றார்.

இயக்குநர் மைக்கேல் கே. ராஜா பேசுகையில், ”சின்ன சின்ன படங்களை இயக்கி தான் எண்பது சதவீதத்திற்கும் அதிகமான இயக்குநர்கள் இங்கு வெற்றி பெற்று இருக்கிறார்கள். படத்தின் பாடல் காட்சிகள், முன்னோட்டத்தை பார்த்தவரை அனைத்து நடிகர்களும், நடிகைகளும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். படத்தின் நாயகனான கௌஷிக் ராம் நேரில் பார்க்கும்போது ஸ்மார்ட் ஆக இருக்கிறார். இவர் எப்படி அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்க முடியும் என்று தோன்றியது. ஆனால் திரையில் அவர் அற்புதமாக நடித்திருக்கிறார். அவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. வாழ்த்துக்கள். நாயகி பிரதீபாவும் நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கும் என் வாழ்த்துக்கள். படத்தின் இயக்குநரின் பெயர் அலெக்ஸ் பாண்டியன். அந்த பெயரிலேயே கம்பீரம் இருக்கிறது. படமும் அதே அளவு இருக்கும் என்று நம்புகிறோம். பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. அதிலும் உருமி.. பாடல் நல்லதொரு அதிர்வை ஏற்படுத்தியது. படம் வெற்றி பெற படத்தில் பணியாற்றிய படக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்,” என்றார்.

இயக்குநர் விஜய் ஸ்ரீ பேசுகையில், ”கிறிஸ்டினா கதிர்வேலன் படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து எனக்கு எல்லா விஷயங்களும் தெரியும். காரணம் இயக்குநர் அலெக்ஸ் பாண்டியன் என்னுடைய உதவியாளர். ‘பவுடர்’ படத்தில் அவர் என்னுடன் பணியாற்றும்போது தான் ஒளிப்பதிவாளர் பிரஹத் முனியசாமி அறிமுகமானார். அவர் நான் இயக்கிய ‘ஹரா’ படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். படத்திற்கு ஹீரோவாக ஒரு புதுமுகம் வேண்டும் என்று தேடிய போது ‘ஹரா’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்த கௌஷிக் ராம் தேர்வானார்.

படத்தை உருவாக்கும் போது நிறைய சவால்கள் இருக்கும். அதனை இயக்குநர் அலெக்ஸ் எதிர்கொண்டார். இதற்கு அவரது பெயரில் இருக்கும் பாண்டியன் என்ற ஒரு நண்பர் உதவி புரிந்தார். அவர் தான் அலெக்ஸை இந்த மேடையில் அமர வைத்திருக்கிறார். அதனால் அலெக்ஸ் பாண்டியன் இருவரையும் வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன்,” என்றார்.

‘பிக்பாஸ்’ பிரபலம் நடிகர் சிபி பேசுகையில், ”இந்தப் படத்தின் பாடல்களையும், முன்னோட்டத்தையும் பார்க்கும்போது இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘காதல்’ படத்தை பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வு உண்டாகிறது. ஏனென்று தெரியவில்லை, அந்தப் படத்தை பார்க்கும் போதும் இதே போன்றதொரு ஃபீல் இருந்தது. இந்தப் படத்திற்கு இசை மிகப் பெரிய பலம். ரகுநந்தன் அற்புதமாக பாடல்களை வழங்கி இருக்கிறார். பின்னணி இசையும் நன்றாக வழங்கி இருப்பார். காதல் திரைப்படம் எப்படி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோ, அதேபோல் இந்த திரைப்படமும் பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.

நடிகர் விஷ்ணு பேசுகையில், ”இந்தப் படத்தை சின்னப் படம் என்று சொன்னார்கள். இந்த கதையை இயக்குநர் எத்தனையோ தயாரிப்பாளரிடம் சொல்லி, அவர்களால் நிராகரிக்கப்பட்டு இறுதியாக இந்த தயாரிப்பாளர் தயாரிக்க ஒப்புக் கொண்டிருப்பார். அதனால் முதலில் தயாரிப்பாளருக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும். அந்த வகையில் இயக்குநருக்கு தயாரிப்பாளர் வாய்ப்பை வழங்கியிருக்கிறார். இந்த படம் நன்றாக இருக்கிறது. திரையரங்கில் நன்றாக ஓடக்கூடும் என்றும் தெரிகிறது. படக்குழுவினர் அனைவரும் உற்சாகத்துடன் உள்ளனர். படத்தின் நாயகியான பிரதிபாவின் ரீல்ஸ்களை பார்த்திருக்கிறேன். அதில் அவர்கள் எனர்ஜியுடன் நடனம் ஆடியிருப்பார்கள். அவர் ராப்பும் பாடியிருப்பார். மிகுந்த திறமைசாலி. அவர் திரைப்படத்தில் நடிகையாக நடிப்பார் என்று எதிர்பார்த்து இருந்தேன். அது இன்று நடந்தேறி இருக்கிறது. அவருக்கும் என் வாழ்த்துக்கள்.

கதையின் நாயகனான கௌஷிக் ராமிக்கும் என் வாழ்த்துக்கள். நன்றாக நடித்திருக்கிறார். ஹீரோ வெள்ளையாக இருக்கிறாரே, இவர் எப்படி இந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்று என்னிடம் கேட்டனர். இதே விமர்சனத்தை நானும் எதிர்கொண்டேன். வெள்ளையாக பிறந்தது எங்களுடைய தப்பா? அதே தருணத்தில் சிலர் பார்த்தவுடன் ஸ்மார்ட்டாக இருக்கிறாய் என்றும் சொல்வார்கள். வெள்ளையாக இருப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கு அவர் எவ்வளவு தூரம் நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார் என்பதை மட்டும் பார்த்து ரசிக்க வேண்டும்.

இசையமைப்பாளர் ரகுநந்தன் அளவற்ற நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவருடன் பழகியவர்களுக்கு இது தெரியும். அவருடைய ‘ட்ரேட்மார்க்’ சிரிப்பு தனித்துவமானது. அவர் இயக்குநர்களுக்கு பிரியமான இசையமைப்பாளர். இயக்குநர்கள் எதை கேட்கிறார்களோ, அதை தரக்கூடிய திறமை மிக்கவர்.

இந்த திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகளும், காட்சிகளும் கிடைக்க வேண்டும் என இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்,” என்றார்.

இசையமைப்பாளர் ரகுநந்தன் பேசுகையில், ”என்னிடம் இசையமைப்பதற்காக வரும் படங்கள் அனைத்தும் படப்பிடிப்பு நிறைவு செய்த பிறகு தான் வருகின்றன. கிறிஸ்டினா கதிர்வேலன் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகு தான் படத்தை காண்பித்தார்கள். படத்தில் நிறைய வேரியேஷன்ஸ் இருந்தது. ஒரு கிராமத்தில் தொடங்கி, கல்லூரியில் பயணித்து, அதன் பிறகு வேறு ஒரு ஜோடி திரைக்கதையில் அறிமுகம் ஆகிறார்கள். இப்படி இருந்ததால் இதற்கு பின்னணி இசை தாமதமாகும் என இயக்குநரிடம் தெரிவித்திருந்தேன். இயக்குநரோ முதலில் பாடலை உருவாக்கி விடலாம் என்றார்.‌ நிறைய மாண்டேஜ் காட்சிகளை படமாக்கி இருந்தார். அதை வைத்து காதல் பாட்டை முதலில் உருவாக்கினோம். அந்த வகையில் ‘செல்லாட்டி..’ என்ற பாடலை உருவாக்கினோம். அந்தப் பாடலுக்காக ஒரே ஒரு டியூன் மட்டும் தான் அமைத்தேன். இயக்குநர் அதைக் கேட்டு விட்டு ஓகே சொன்னார். அவர் பாடல்கள் அனைத்தும் எனர்ஜிட்டிக்காக இருக்க வேண்டும். எங்கும் போர் அடிக்கக் கூடாது என்ற அவரது விருப்பத்தை தெரிவித்தார். அதே போல் எல்லா பாடல்களையும் ஒரே ஒரு டியூனில் ஓகே சொன்னார். இப்படத்திற்கான பின்னணி இசை எனக்கு சவாலாக இருந்தது. ‘தென்மேற்கு பருவக்காற்று ‘ படத்தைப் போலவே இதிலும் சவாலாக பணியாற்றினேன். அதிலும் குறிப்பாக உச்சகட்ட காட்சியில் இயக்குநரின் மெனக்கடல் வியக்க வைத்தது. இதை நீங்கள் படம் பார்க்கும்போது உணர்வீர்கள். இந்த படத்தின் ஒலி அமைப்பு தொடர்பாக நான் கூறிய பல ஆலோசனைகளை இயக்குநர் ஏற்றுக்கொண்டார்.

இந்த படம் நிறைய விஷயங்களை பேசுகிறது. இளைய தலைமுறையினருக்கு நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கிறது. உச்சகட்ட காட்சியை பார்த்துவிட்டு நீங்களே அது தொடர்பாக பேசுவீர்கள். இந்தப் படத்தில் மிகப்பெரிய அளவில் கருணை இருக்கிறது. ‘அயோத்தி’ படத்தைப் பற்றி இதே மேடையில் தான் சிலாகித்து பாராட்டினேன். இதற்கும் ஊடகங்கள் பேராதரவு தெரிவிக்க வேண்டும்.

நான் படத்தை பார்க்கும் போது நடிகர்கள் எங்கேயும் செயற்கையாக நடித்திருக்கிறார்களா என்பதைத்தான் உன்னிப்பாக கவனிப்பேன். இந்தப் படத்தில் நடிகர், நடிகைகள் அனைவரும் மிக இயல்பாக நடித்திருந்தார்கள். அதனால் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்,” என்றார்.

நடிகை பிரதீபா பேசுகையில், ” கிறிஸ்டினா கதாபாத்திரத்திற்காக என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக இயக்குநருக்கு நன்றி. ‘நீர்ப்பறவைசி படத்திலிருந்து நான் இசையமைப்பாளர் ரகுநந்தனின் ரசிகை. அவருடன் இந்த படத்தில் இணைந்து பணியாற்றியது பெருமிதமாக இருக்கிறது.

கிராமிய பின்னணியிலான கல்லூரி காதல் கதையாக உருவாகி இருக்கிறது. இந்தப் படம் ‘பருத்திவீரன்’, ‘மைனா’ படங்கள் ஏற்படுத்திய பாதிப்பை போல் ரசிகர்களுக்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். படத்தில் இயக்குநர் ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார். அதாவது இந்த படம் பார்க்கிற அனைத்து
ஆண்களுக்கும் ஒரு கேள்வியாக அந்தக் கருத்து தோன்றும். அதற்குரிய விடை என்ன என்பது உங்களுக்கு மட்டும் தான் தெரியும். நவம்பர் 7ம் தேதி அன்று படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் பார்த்து ஆதரவு தர வேண்டும்,” என்றார்.

நடிகர் கௌஷிக் ராம் பேசுகையில், ”இந்த படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பளித்த இயக்குநருக்கும் அதற்கு காரணமாக இருந்த நிகில் முருகனுக்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் சுவாரசியமானதாக இருந்தது.‌ கும்பகோணத்தில் தங்கி அங்குள்ள மக்களுடன் பழகி இப்படத்தில் நடித்தேன். எனக்கு சொந்த ஊர் மயிலாடுதுறை தான். ஆனால் கும்பகோணத்திற்கு பயணித்ததில்லை. அங்குள்ள மக்களின் பாசமும், அன்பும் என்னை வியக்க வைத்தது.

இந்த படத்தில் லேயர் லேயராக பணியாற்றி இருக்கிறோம்.‌ இது கிராமத்து காதல் கதை. அதிலும் ஒன் சைட் லவ் ஸ்டோரி. ஒரு காதலன் தன் காதலை சொல்வதற்கு எப்படி தவிக்கிறான், எப்படி அதனை தனக்குள்ளேயே வைத்துக் கொள்கிறான். இதனை இந்த படத்தில் இயக்குநர் காட்சிப்படுத்தியிருக்கிறார். அத்துடன் சமூகத்திற்கு தேவையான பல விஷயங்களையும் இயக்குநர் சொல்லி இருக்கிறார். அதனால் இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

இந்தப் படத்தில் எந்த சினிமா பின்புலமும் இல்லாத புதிய இளம் திறமைசாலிகள் பணியாற்றிருக்கிறார்கள். இதை நான் மிகப்பெரிய விஷயமாக பார்க்கிறேன். 2019ம் ஆண்டிலிருந்து நான் வாய்ப்புகளை தேடிக் கொண்டிருக்கிறேன். இந்தப் படத்தின் மூலம் பல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்,” என்றார்.

இயக்குநர் S J N அலெக்ஸ் பாண்டியன் பேசுகையில், ”கிறிஸ்டினா கதிர்வேலன் என்ற பெயர் வைத்து விட்டு படத்தின் பணிகள் தொடங்கி இதுவரையிலான பயணம் என்பது விமானத்தின் மேற்கூரை பகுதியில் அமர்ந்து பயணிப்பது போன்றதொரு பயணமாக எனக்கு இருந்தது. இரண்டு ஆண்டு காலம் இதற்காக உழைத்திருக்கிறோம். இத்தனைக்கும் தயாரிப்பாளர்கள் தங்கமானவர்கள்.

தயாரிப்பாளர் பிரபாகர் ஸ்தபதி உலக புகழ்பெற்ற ஸ்தபதி. அவருக்கும் இந்த துறைக்கும் தொடர்பே இல்லை. அவரை இத்துறைக்கு அழைத்து வந்திருக்கிறோம். ஒவ்வொரு முறை அவர்களின் வீட்டிற்கு செல்லும் போது அவர்களின் விருந்தோம்பல் பண்பு எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அவர்கள் எங்களை கொண்டாடுவார்கள்.

தயாரிப்பாளர் என்னிடம் பணத்தை கொடுத்து விட்டு என்ன ஏது என்று கூட கேட்க மாட்டார். அதேபோல் இணை தயாரிப்பாளர் கார்த்திக் வீரப்பனும் பிரச்சனை என்று அவரிடம் செல்லும்போது எல்லாம் அவரும் பணம் கொடுத்து உதவினார்.‌ இருந்தாலும் இந்த திரைப்படத்தை உருவாக்கி இந்த நிலைக்கு எடுத்து வருவதற்கு எனக்கு இரண்டு ஆண்டுகள் ஆனது. ஏனெனில் தமிழ் சினிமா அத்தகைய நிலையில் தான் இன்று இருக்கிறது.

புதுமுகமாக இருக்கும் கௌஷிக் ராமை தேர்வு செய்தேன்.‌ அவரும் எங்களுக்கு எல்லா வகையிலும் முழு ஒத்துழைப்பை வழங்கினார்.‌

பிரதீபா அவர்களிடம் கதையை சொன்ன போது கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏராளமான கேள்விகளை கேட்டார். அத்துடன் சம்பளம் எனக்கு முக்கியமில்லை. கதை நன்றாக இருக்கிறது நடிக்கிறேன் என ஒப்புக்கொண்டார். அவரிடம் ஏராளமான திறமைகள் கொட்டி கிடக்கிறது. அவரும் எதிர்காலத்தில் மிகப்பெரும் கதாநாயகியாக வருவார்கள். அவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒளிப்பதிவாளர் பிரஹத் முனியசாமி நான் பார்க்கும் போது அவருக்கு 15,16 வயது தான் இருக்கும். அப்போதே அவர் 40 குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். நான் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுதுதல் குறித்த பயிற்சி பெற்றேன். என்னுடைய திட்டமே தாமதமாக இயக்குநராக வேண்டும் என்பதுதான்.

இப்படத்தின் இருபது நிமிட காட்சிகளை செல்போனில் தான் எனது நண்பரும், இப்படத்தின் இணை தயாரிப்பாளருமான கார்த்திக் வீரப்பனிடம் காண்பித்தேன். அதை பார்த்துவிட்டு எமோஷனலாகி இப்படத்திற்கு தற்போது வரை ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்திற்காக மதுரையில் நடைபெற்ற விளம்பரப்படுத்தும் நிகழ்வை மிக சிறப்பாக நடத்திக் காட்டினார். தொடர்ந்து நேரு கல்லூரியிலும் பிரம்மாண்டமான விளம்பரப்படுத்தும் நிகழ்வை நடத்திக் காட்டினார். அவருடைய உழைப்பு சாதாரணமானது இல்லை. அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

நான் இந்தப் படத்திற்கான திரைக்கதையை எழுதி முடித்தவுடன் நான் எழுதிய முதல் தொழில்நுட்பக் கலைஞரின் பெயர் என். ஆர். ரகுநந்தன். நான் ‘நீர்ப்பறவை’ எனும் படத்தை பார்த்தேன். அந்தப் படத்தின் பின்னணி இசையை பார்த்தவுடன் இவர் தான் என் முதல் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். இந்தப் படத்தில் அவருடைய அற்புதமான திறமையை பார்க்கலாம். அதிலும் 25 நிமிடம் கொண்ட உச்சகட்ட காட்சியில் அவருடைய பின்னணி இசை நிச்சயமாக பேசப்படும்.‌ அந்த வகையில் இது சின்ன படம் அல்ல. பெரிய படம்தான். ஒலி அமைப்புக்காக அவர் நிறைய உழைத்திருக்கிறார். அத்துடன் இந்தப் படத்திற்கான வியாபாரத்திலும் அவர் தன்னுடைய பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.

என்னுடைய குருநாதர் விஜய் ஸ்ரீ. நான் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றாலும் கிடைத்த இடைவெளியில் அவரின் அறிமுகம் கிடைத்து அவருடன் பவுடர் படத்தில் உதவியாளராக பணியாற்றினேன். ‘பவுடர்’, ‘ஹரா’ ஆகிய இரண்டு படத்தின் வெளியீட்டின் போதும் அவருடன் இருந்தேன். அதனால் படத்தை வெளியிடுவதற்கான திரையரங்க ஒருங்கிணைப்பு விசயத்தைப் பற்றிய வழிமுறையை தெரிந்து கொண்டேன். அதனால் இந்த திரைப்படம் தமிழகத்தில் அதிக அளவில் நல்லபடியான திரையரங்குகளில் வெளியாகிறது. அத்துடன் கேரளாவில் 20 திரையரங்குகளில் வெளியாகிறது. கர்நாடகாவிலும் இப்படத்தை வெளியிடுவதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கான வாய்ப்புகளை என் ஆர் ரகுநந்தன் உருவாக்கி தந்தார். எந்த ஒரு சின்ன படத்திற்கும் இத்தகைய வரவேற்பு இருக்காது. அதனால் இது சின்ன படம் இல்லை பெரிய படம்தான்.‌ இதற்கு ஊடகங்களும் ஆதரவு தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன் பேசுகையில், ”கிறிஸ்டினா கதிர்வேலன் அழகான தலைப்பு. இது நான் இயக்கிய இது கதிர்வேலன் காதல் என்ற படத்தை நினைவு படுத்தியது. இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கும், இயக்கிய இயக்குநருக்கும் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் ஸ்தபதி என்றார்கள். சிற்பி நல்ல கதையை தான் தேர்ந்தெடுத்து இருப்பார். அதனால் இந்த படம் மிகச்சிறந்த படமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

இசையமைப்பாளர் என் ஆர் ரகுநந்தன் இசையில் வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘சுந்தரபாண்டியன்’ ஆகிய படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஆல்பமாக வெற்றி பெற்றவை. சமீபத்தில் ‘அயோத்தி’ படத்தில் கூட ‘காற்று ஒரு பட்டம் போல..’ பாடலை வெற்றி பெற வைத்தார். இந்தப் பாடலை அண்மையில் கேட்டேன். உடனே தொடர்பு கொண்டு ஒரு மணி நேரம் அந்தப் பாடலைப் பற்றி அவருடன் பேசினேன்.‌ மிகுந்த இசைஞானம் உள்ளவர்களால் தான் இது போன்ற பாடல்களை உருவாக்க முடியும். அவருக்குள்ள திறமைக்கு அவர் செல்ல வேண்டிய உயரம் இன்னும் அதிகம். இந்தப் படத்தில் இடம்பெற்ற திருவிழா பாடல் சிறப்பாக இருக்கிறது.

இந்தப் படத்தின் தலைப்பை பார்த்தவுடன் ஒரு கிறிஸ்தவ பெண்ணிற்கும், ஒரு இந்து பையனுக்கும் இடையே ஏற்பட்ட காதலாக தோன்றுகிறது. பொதுவாக ஒரு எழுத்தாளர் கதையை எழுதும்போது சமூகம் சார்ந்து சாதி சார்ந்து மதம் சார்ந்து கதை எழுதும்போது சாதாரண கதையை எழுதுவதை விட கூடுதல் பொறுப்புணர்வுடன் எழுத வேண்டி இருக்கும்.

காதலைப் பற்றி எழுதும் தருணத்தில் காதலர்களின் பெற்றோர்களை பற்றி எழுத தவறி விடுவோம். எங்கு கைத்தட்டல்கள் கிடைக்குமோ அதைத்தான் எழுதுவோம்.‌ அதே தருணத்தில் சமூகம் சார்ந்து மதம் சார்ந்து சாதி சார்ந்து கதை எழுதும் போது ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல் சமமாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அப்படித்தான் இந்த படத்தின் கதை இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் பிடித்த நியாயமான தீர்வும் இதில் இருந்தால் நிச்சயமாக வெற்றிப்படமாக இருக்கும்.‌ இந்த மேடையில் படத்தில் இடம்பெறும் உச்சகட்ட காட்சியை பற்றி பேசும்போது எமோஷனலாக பேசினார்கள். இது படம் பார்க்கும் ரசிகர்களையும் பாதிக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இந்த படம் பெரிய வெற்றியை பெற வாழ்த்துக்கள்,” என்றார்.

அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி! ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும்  ‘டாக்ஸிக்(Toxic): எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் -அப்ஸ்’ (A Fairy Tale for Grown-Ups)— முதலில் அறிவித்தபடியே மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது !

0

அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் அதிரடி-டிராமா திரைப்படமான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, முதலில் அறிவித்தபடியே. 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக, அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. படத்தின் வெளியீடு தாமதமாகும் என பரவிய வதந்திகளுக்குப் பின்னர், திரைப்பட வர்த்தக நிபுணர் தரண் ஆதர்ஷ் தயாரிப்புக் குழுவிடம் உறுதிப்படுத்திக் கொண்டு,  சமூக வலைதளத்தில் தெளிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தற்போது ‘டாக்ஸிக்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 2026 ஜனவரியில் படத்தின் முழு அளவிலான புரமோசன் பணிகள் துவங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான KVN Productions, சமூக வலைதளத்தில் “140 நாட்கள் மட்டுமே மீதமிருக்கிறது…
His Untamed Presence,
Is Your Existential Crisis.

ToxicTheMovie — உலகளாவிய வெளியீடு 19-03-2026” என்று பதிவிட்டு வெளியீட்டு தேதியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

படம் வெளியாகும் தேதி முக்கியமான பண்டிகை காலமாகும் — குடி பாட்வா(Gudi Padwa), உகாதி (Ugadi) மற்றும் பல பிராந்திய புத்தாண்டு கொண்டாட்டங்களுடன், அதனைத் தொடர்ந்து ஈத்  பண்டிகையும் வருவதால், பாக்ஸ் ஆபிஸில் நான்கு நாள் நீண்ட பண்டிகை வாய்ப்பு உருவாகியுள்ளது. KGF-க்குப் பிறகு யாஷ் மீண்டும் திரைக்கு வருவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை பல மடங்கு ஏற்படுத்தியுள்ளது.
கீத்து மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்கத்தில் உருவாகும் இப்படம் ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது.வெங்கட் K. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்களின் சார்பில் தயாரிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, வரவிருக்கும் பண்டிகை சீசனில் தேசிய மற்றும் உலகளாவிய அளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கத் தயாராகி வருகிறது.

Rumours silenced! Rocking Star Yash’s Toxic: A Fairy Tale for Grown-Ups to hit theatres on March 19, 2026 as originally announced

All rumors put to rest, Rocking Star Yash’s action-drama extravaganza Toxic: A Fairy Tale for Grown-Ups will release in theatres worldwide on March 19, 2026, exactly as originally announced. Amid a wave of chatter suggesting a postponement, film trade analyst Taran Adarsh reached out to the makers to verify the situation and then took to social media to issue a clear, categorical update confirming that there is no delay.

Following this confirmation, one of the film’s production banners, KVN Productions, reinforced the release plan by sharing a countdown post on social media: “140 days to go…
His Untamed Presence,
Is Your Existential Crisis.

ToxicTheMovie releases worldwide on 19-03-2026.”

The release date lands in the heart of a major festive frame, coinciding with Gudi Padwa, Ugadi, and regional New Year celebrations, followed closely by Eid, creating a high-impact four-day celebration window at the box office. With Yash returning to the big screen after KGF, the anticipation around Toxic has only intensified. Directed by Geetu Mohandas, the film has been shot simultaneously in English and Kannada, and will also release in Tamil, Telugu, Hindi, Malayalam, and more.

Jointly produced by Venkat K. Narayana and Yash under KVN Productions and Monster Mind Creations, Toxic: A Fairy Tale for Grown-Ups is set to ignite the festive frame with a nationwide and global release.

LOKAH CHAPTER 1: CHANDRA NOW STREAMING EXCLUSIVELY ON JIOHOTSTAR IN FIVE LANGUAGES

0

JioHotstar proudly announces that Lokah Chapter 1: Chandra, the record-breaking Malayalam cinematic phenomenon, is now streaming exclusively on the platform in Malayalam, Tamil, Telugu, Kannada, and Hindi.

A monumental success in theatres, Lokah Chapter 1: Chandra has redefined the scale and storytelling potential of Malayalam cinema, becoming the highest-grossing Malayalam film in history and crossing the ₹300 crore mark worldwide. The film’s extraordinary box-office run and global recognition have made it one of the most celebrated Indian releases of 2025.

Directed and written by Dominic Arun, the film stars Kalyani Priyadarshan in a career-defining performance as Chandra, supported by Naslen, Anju Kurian, Chandu Kumar, and Sandy in key roles. Adding to the film’s grandeur are memorable cameo appearances by Dulquer Salmaan, Tovino Thomas, and Soubin Shahir, bringing together some of the most dynamic talents in Malayalam cinema.

The visual brilliance of Lokah Chapter 1: Chandra is captured by Nimish Ravi, with precise editing by Chaman Chakko and a powerful, immersive musical score by Jakes Bejoy. The film is produced by Dulquer Salmaan under the Wayfarer Films banner, marking yet another milestone in the studio’s journey of creating bold, imaginative cinema with universal appeal.

Blending elements of mythology, fantasy, and deeply human emotion, Lokah Chapter 1: Chandra transports audiences into a world where courage, destiny, and sacrifice converge. Following its unprecedented theatrical triumph, the digital premiere on JioHotstar allows viewers across India and the world to experience this cinematic spectacle in five languages — in the highest streaming quality.

With this milestone release, JioHotstar continues its commitment to bringing exceptional, pan-Indian storytelling to diverse audiences, reinforcing its position as the country’s most trusted and inclusive entertainment platform.

Streaming Details:
Now Streaming: October 2025
Available Languages: Malayalam | Tamil | Telugu | Kannada | Hindi
Platform: JioHotstar

About JioHotstar
JioHotstar is India’s leading premium streaming platform, offering an expansive collection of blockbuster movies, original series, live sports, and entertainment across multiple languages. With a mission to bring world-class storytelling to every screen, JioHotstar continues to redefine the digital entertainment experience through innovation, inclusivity, and exceptional content.

‘லோகா சாப்டர்1: சந்திரா’ திரைப்படம் பிரத்யேகமாக ஜியோஹாட்ஸ்டாரில் ஐந்து மொழிகளில் தற்போது ஸ்ட்ரீம் ஆகிறது!

மலையாள சினிமாவில் ரெக்கார்ட் பிரேக்கிங் வெற்றி பெற்ற ‘லோகா சாப்டர்1: சந்திரா’ திரைப்படம் தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது என்பதை ஜியோஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது.

திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்ற இந்தத் திரைப்ப்டம் மலையாள சினிமாவின் பிரம்மாண்ட கதை சொல்லல் முறையை மறுவரையறை செய்தது. மேலும், மலையாள சினிமா ஒன்று உலகளவில் ரூ. 300 கோடிக்கும் அதிக வசூல் செய்தது என்ற வரலாற்று சாதனையையும் இந்தத் திரைப்படம் படைத்துள்ளது. பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றி மற்றும் உலகளவில் கவனம் ஈர்த்தது மட்டுமல்லாது 2025 ஆம் ஆண்டில் அதிகம் கொண்டாடப்பட்ட இந்திய படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

டொமினிக் அருண் இயக்கி எழுதிய இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் சந்திராவாக மாறுபட்ட நடிப்பைக் கொடுத்துள்ளார். அவருடன் நஸ்லென், அஞ்சு குரியன், சந்து குமார் மற்றும் சாண்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தில் துல்கர் சல்மான், டொவினோ தாமஸ் மற்றும் சௌபின் சாஹிர் ஆகியோரின் மறக்கமுடியாத சிறப்பு தோற்றங்கள் படத்தின் பிரம்மாண்டத்தை மேலும் அதிகமாக்கியது.

இந்தப் படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்க, சம்மன் சாக்கோ படத்தொகுப்பை கையாண்டிருக்கிறார். படத்திற்கு இசை ஜேக்ஸ் பிஜோய். நடிகர் துல்கர் சல்மானின் வேஃபேரர் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

புராணம், கற்பனை மற்றும் ஆழமான மனித உணர்வுகளை பேசும் ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ திரைப்படம் பார்வையாளர்களுக்கு தைரியம், விதி மற்றும் தியாகம் போன்றவற்றையும் இதில் சொல்கிறது. திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஜியோஹாட்ஸ்டாரின் டிஜிட்டல் பிரீமியர் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை இணைக்கும் வகையில் ஐந்து மொழிகளில் மிக உயர்ந்த தரத்தில் ஒளிபரப்புகிறது.

வித்தியாசமான, பான் இந்தியா கதை சொல்லலை பலதரப்பட்ட பார்வையாளர்களுக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இயங்கி வரும் ஜியோஹாட்ஸ்டார் ‘லோகோ சாப்டர்1: சந்திரா’ படத்தை ஸ்ட்ரீம் செய்வதன் மூலம் இதனை மீண்டும் நிரூபித்துள்ளது.

ஸ்ட்ரீமிங் விவரம்:

ஜியோஹாட்ஸ்டாரில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தற்போது (அக்டோபர் 2025) ஸ்ட்ரீம் ஆகிறது.

ஜியோஹாட்ஸ்டார் பற்றி:

ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. நல்ல கதையம்சம், புதுமையான தொழில்நுட்பம் மற்றும் அர்ப்பணிப்புடன், ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் நடிகர் மன்சூர் அலிகான்!

0

சென்னை, பையனூர் பிலிம் சிட்டி அருகில் 80′ ஆண்டுகள் பழமைவாய்ந்த மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழாவில், ஊர் தலைவர் முத்துக்குமார், கவுன்சிலர், மற்றும் ஊர் பொதுமக்கள் அன்பு அழைப்பை ஏற்று, இன்று காலை நடைபெற்ற கும்பாபிஷேகம் விழாவில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்துக் கொண்டார். அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது!

மர்மம் மற்றும் திகில் நிறைந்த “கிஷ்கிந்தாபுரி”, 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து, ஜீ5 தளத்தின் வெற்றி திரைப்பட வரிசையில் இணைந்துள்ளது.

0

இந்தியாவின் முன்னணி OTT தளமான ZEE5, கிஷ்கிந்தாபுரி திரைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டது. கௌசிக் பெகல்லபாட்டி இயக்கத்தில், சைன்ஸ்கிரீன்ஸ் சார்பில் சாகு கருப்பதி தயாரித்த இந்த படத்தில் பெல்லம் கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ், அனுபமா பரமேஸ்வரன், மகரந்த் தேஷ்பாண்டே மற்றும் தனிக்கெல்லா பரணி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தெலுங்கு மொழியில் அக்டோபர் 17 அன்று ZEE5-இல் வெளியானது, மற்றும் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, இப்போது திரைப்படம் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகியுள்ளது. தற்போது இந்த திரைப்படம் ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது.

இந்த கதை, ஆமானுஷ்ய சுற்றுலாவுக்காக ஒரு பழமையான வானொலி நிலையத்திற்கு சென்ற குழுவைத் தொடர்ந்து உருவாகிறது. அவர்கள் தெரியாமலே ஒரு நின்றுபோன ஆவியை எழுப்பிவிடுகிறார்கள். ஆர்வத்துடன் தொடங்கிய பயணம், விரைவில் ஒரு திரில்லிங்கான அனுபவமாக மாறுகிறது. குழுவினர் அங்கு சிக்கிக்கொண்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத்தில் “கிஷ்கிந்தாபுரி” – ZEE5-இல் மட்டுமே ஸ்ட்ரீமிங் ஆகிறது!

நடிகை சிம்ரன் வெளியிட்ட ‘ரெட் லேபிள் ‘ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

0

கோயம்புத்தூர் பின்னணியில் ஒரு கல்லூரியில் நடக்கும் கொலையும் கொலை சார்ந்த சம்பவங்களும் கொண்ட மர்மமான கதை ‘ரெட் லேபிள்’ என்கிற திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தை கே .ஆர். வினோத் இயக்கியுள்ளார். ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார். இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார்,முழுக்க முழுக்க இதன் படப்பிடிப்பு கோயம்புத்தூர் நகரில் நடைபெற்றுள்ளது.

சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு செய்துள்ளார் லாரன்ஸ் கிஷோர்.

நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில், முனிஷ்காந்த் நடித்துள்ளார்.

‘ரெட் லேபிள்’ தலைப்பு ” இந்த பெயரைச் சொன்னதுமே டீ வகையின் பெயர் என்றோ,மது வகையின் பெயர் என்றோதான் நினைக்கலாம். ஆனால் இரண்டும் அல்ல.ரெட் என்பது புரட்சியையும் லேபிள் என்பது அடையாளத்தையும் குறிக்கும். அவ்வகையில் அடையாளத்தைத் தேடும் பல மனிதர்களின் கதையாகவும்
இந்தப் படம் இருக்கும்.

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ளார்.பொதுவாகவே சிம்ரன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர் அல்ல.

புதிய படக் குழுவினரை ஊக்குவிக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் முதல் முறையாக சிம்ரன் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 கொண்டாடும், ஆங்கில ஆந்தம் பாடலை பாடியுள்ளார் ஆண்ட்ரியா ஜெரேமியா !!

0

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025ற்கான அதிகாரப்பூர்வ கீதமான “ப்ரிங் இட் ஹோம் (Bring It Home)” பாடலின் ஆங்கில பதிப்பை புகழ்பெற்ற இந்திய பின்னணிப் பாடகி, நடிகை மற்றும் கலைஞர் ஆண்ட்ரியா ஜெரேமியா பாடியுள்ளார். வலிமையான குரல், உணர்ச்சிபூர்வமான நடிப்பு மற்றும் பன்மொழி இசை திறமைக்காக பெயர் பெற்ற ஆண்ட்ரியா, இந்த உலகளாவிய கீதத்துக்கு தனது குரல் மூலம், தனித்துவமான ஆன்மீகத் தொனி, உற்சாகம் மற்றும் நவீன மெருகை வழங்கியுள்ளார்.

பெரும் ஆற்றல், அசத்தும் ராகம் மற்றும் உணர்ச்சி கலந்த இந்த “ப்ரிங் இட் ஹோம்” பாடல், உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை ஒருமுகப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளின் தைரியம், ஆர்வம் மற்றும் விடாமுயற்சியை கொண்டாடுகிறது. பாடலை நகுல் அபயங்கர் (Nakul Abhyankar) இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை ஆண்ட்ரியா ஜெரேமியா மற்றும் நஸீப் முகம்மது எழுதியுள்ளனர். ஆங்கில வரிகளுடன் இணைந்த “தரிகிட்ட தரிகிட்ட தரிகிட்ட தோம்” ( Tarikita Tarikita Tarikita Dhom ) என்ற இந்திய பாணி ஹுக் மற்றும் “தக் தக், வீ ப்ரிங் இட் ஹோம்” (Dhak Dhak, we bring it home) என்ற உருக்கமான பல்லவி இவை அனைத்தும் விளையாட்டின் இதயத் துடிப்பையும், வீராங்கனைகளின் உறுதியையும் பிரதிபலிக்கின்றன.

ஆண்ட்ரியாவின் துடிப்பான குரல் மற்றும் நவீன பாப்-ராக் பாணி, இந்த பாடலுக்கு உலகளாவிய அழகை அளிக்கின்றன, அதேசமயம் இந்திய வேர்களும் வலுவாக இணைந்திருக்கின்றன. அவரது குரலில் கிரிக்கெட்டின் உறுதியும் அழகும் வெளிப்படுகின்றன — விளையாட்டரங்கிலும் அதற்குப் பின்னாலுமான கோடிக்கணக்கான ரசிகர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கின்றன. வெற்றி, நோக்கம் மற்றும் கனவுகளை நனவாக்கும் முயற்சியை கொண்டாடும் பாடல் வரிகள், ஆண்ட்ரியாவின் நுணுக்கமான குரல் ஆற்றலால் மேலும் அழகாகியுள்ளது.

இந்த பாடலின் வெளியீடு விளையாட்டு உலகில் ஒரு முக்கியமான கொண்டாட்டக் கணமாக அமைந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), 2025 செப்டம்பர் 30 அன்று “ப்ரிங் இட் ஹோம்” பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. நவம்பர் 2, 2025 அன்று நடைபெறவுள்ள மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான தயாரிப்பில் இது ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த கீதம் போட்டிக்கும், மேலும் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் மரபுக்கும் உலகளாவிய அங்கீகாரத்திற்கும் கௌரவம் சேர்க்கிறது.

இந்த பாடலை பாடியது குறித்து ஆண்ட்ரியா ஜெரேமியா கூறும்போது..,
“இது ஒரு பாடல் மட்டுமல்ல — பெரிய கனவு காணும், கடினமாகப் போராடும், வெற்றியை வீட்டுக்கு கொண்டு வரும் ஒவ்வொரு பெண்ணிற்குமான கொண்டாட்டம்.” என்றார்.

“ப்ரிங் இட் ஹோம்” பாடல் இப்போது கிரிக்கெட்டின் கீதமாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

Andrea Jeremiah Voices the English Anthem for ICC Women’s Cricket World Cup 2025

The English version of the official ICC Women’s Cricket World Cup 2025 anthem, “Bring It Home”, is sung by acclaimed Indian playback singer, actor, and performer Andrea Jeremiah. Known for her powerful voice, expressive performances, and multilingual artistry, Andrea brings her signature blend of soul, strength, and sophistication to this global anthem.

A high-energy fusion of rhythm, melody, and emotion, “Bring It Home” aims to unite cricket fans across continents, celebrating the courage, passion, and perseverance of women cricketers worldwide. The song is composed by Nakul Abhyankar and the lyrics written by Andrea Jeremiah and Nazeef Mohammed, with catchy English verses and a signature Indian hook — “Tarikita Tarikita Tarikita Dhom” — paired with the pulsating refrain “Dhak Dhak, we bring it home”, the song mirrors the heartbeat of the game and the spirit of the women who redefine it.

Andrea’s vibrant vocal delivery and contemporary pop-rock tonality lend the song a universal appeal while keeping its roots distinctly Indian. Her dynamic voice captures both the grit and grace of the sport, echoing the emotions of millions who cheer from the stands and beyond. The lyrics, which celebrate determination, teamwork, and the dream to win against all odds, are elevated by Andrea’s nuanced performance — a powerful anthem of unity and pride.

The song’s release marks a moment of musical and sporting celebration. The International Cricket Council (ICC) officially launched “Bring It Home” on September 30, 2025, as part of the build-up to the much-anticipated Women’s Cricket World Cup finals, set to take place on November 2, 2025. The anthem stands as a tribute not only to the tournament but to the growing legacy and global recognition of women’s cricket.

Speaking about her involvement, Andrea Jeremiah shared her excitement about lending her voice to a project that represents empowerment and inclusion:

“It’s more than just a song — it’s a celebration of every woman who dares to dream big, to fight hard, and to bring it home.”

- Advertisement -

Recent Posts